Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 623 online users.
» 0 Member(s) | 619 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,650
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  நீங்கள் இருக்குமிடத்தை அறிய GPS
Posted by: KULAKADDAN - 04-06-2005, 04:32 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (4)

GPS - Global Positioning System
"
GPS - Global Positioning System.
இதை பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வருடங்களுக்கு முன் நான் பாரிஸ் சென்ற போது எனக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகமானது. எப்படி என்று சொல்வதற்கு முன் GPS எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம். நம் முன்னோர்கள் இடங்களை குறிக்க பெரிய நினைவு சின்னங்கள், வரைபடங்கள், நட்சத்திரங்களின் அமைப்பு போன்றவற்றை அடையாளமாக உபயோகித்தார்கள்.

இன்று 4000 ரூபாய்க்கு ஒரு GPS சாதனம் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக சொல்லும்.
<img src='http://img101.exs.cx/img101/2014/gps27satellite9la.jpg' border='0' alt='user posted image'>

(Photo courtesy U.S. Department of Defense)
(Artist's concept of the GPS satellite constellation )

GPS என்று நாம் கூறுவது பெரும்பாலும் GPS ரிசீவரையே குறிக்கிறது. 27 (அதில் மூன்று ஸ்டெப்னிகள்) செயற்கைகோள்களை கொண்டு அமைக்கபட்டுள்ளது. அமெரிக்க ரானுவத்தால் ராணுவத்திற்கு உருவாக்கப்பட்ட இது தற்போது எல்லோருக்கும் பயன்படும் விதமாக இருக்கிறது.

சுமார் 2000 கிலோ எடை உள்ள இச்செயற்கைகோள்கள் பூமியை 12,000 மையில் வேகத்தில் சுற்றுகின்றது. அதாவது பூமியை ஒரு நாளைக்கு இரண்டு முறை வலம் வருகிறது. பூமியில் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் தலைக்கு மேல் குறைந்தபட்சம் நான்கு செயற்கைகோள்கள் தெரியும்படி அதை அமைத்திருக்கிறார்கள்.


<img src='http://img198.exs.cx/img198/430/gpssatellite9wt.jpg' border='0' alt='user posted image'>
(Photo courtesy U.S. Army A GPS satellite)
GPS ரிசீவர் வேலை என்னவென்றால் இந்த நான்கு செயர்கைகோள்களை எங்கே என்றும் அதன் இடைப்பட்ட தூரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறோம் என்று கண்டுபிடிக்கிறது. இந்த உத்திக்கு பெயர் - Trilateration. ஒரு சின்ன உதாரணம் கொண்டு இதை பார்க்கலாம்.


நீங்கள் சென்னைக்கு புதிது. ஷாப்பிங் போய் எங்கோ துலைந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பக்கத்தில் இருக்கும் ஒரு சென்னை வாசியிடம்
"சார் நான் எங்கே இருக்கிறேன் ?" என்று கேட்கிறீர்கள்
"கஸ்மாலம், நீ கோடம்பாக்கம் லிபர்ட்டி டாக்கீஸிலிருந்து மூணு கிமீ தூரத்தில இருக்கே" என்று நக்கலாக பதிலலிக்கிறார். ( "A" - கோடம்பாக்கம் லிபர்ட்டி டாக்கீஸை குறிக்கிறது).
இந்த தகவலை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?. கோடம்பாக்கம் மூன்று கிமீ சுற்றளவில் நீங்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்காலாம் அல்லவா ?
( பார்க்க நீல நிற குறியீடுகள் )
<img src='http://img198.exs.cx/img198/7002/chennaigps19zl.jpg' border='0' alt='user posted image'>

பக்கத்தில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் கேட்கிறீர்கள்.
"நான் எங்கே இருக்கிறேன் ?" என்று
அவளும் சளைத்தவள் அல்ல,
"ம்ம். இங்கிருந்து தேனாம்பேட்டை சன் டிவி அலுவலகம் முன்று கிமீ" என்று பதில் அளிக்கிறாள்.
<img src='http://img198.exs.cx/img198/6992/chennaigps26kd.jpg' border='0' alt='user posted image'>
(B-தேனாம்பேட்டை சன் டிவி அலுவலகத்தை குறிக்கிறது).
இப்போது நீங்கள் மேப்பில் இரண்டு வட்டங்களை போடுகிறீர்கள். அதன் intersection இரண்டு இடங்களில் இருப்பதால் இந்த இரண்டு இடங்களில் நிங்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம்.

<img src='http://img198.exs.cx/img198/9759/chennaigps36eh.jpg' border='0' alt='user posted image'>



சரி, சென்னைவாசிகளே கொஞ்சம் வில்லங்கமானவர்கள் என்று ஒரு ஆட்டோ டிரைவரிடம்
"இங்கிருந்து மாம்பலம் அயோத்தியா மண்டபம் எவ்வளவு தூரம்பா ?" என்று கேட்கிறீர்கள்.
"3 கிமீ, ஆட்டோவில் குந்து சாமி வீட்டாண்ட விட்டுறேன்" என்று கூறுகிறார்.
(C- அயோத்தியா மண்டபத்தை குறிக்கிறது)

இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். முன்றாம் வட்டத்தை போடுங்கள் அவ்வளவுதான். இந்த மூன்று வட்டங்களும் சேரும் இடம்தான் நீங்கள் இருக்கும் இடம். நீங்கள் தி.நகரில், பனகல் பார்க்கில் இருக்கிறீர்கள்.
( சென்னை மேப் உதவி : http://www.mapsofindia.com/ )





ஆக நீங்கள் வைத்துள்ள GPS சாதனம் இடத்தை கண்டுபிடிக்க அதற்கு இரண்டு தகவல்கள் தேவை படுகிறது
1. தன் தலைக்கு மேல் குறைந்த பட்சம் மூன்று செயற்கைகோள்கள்
2. சாதனத்திற்கும் செயற்கைகோள்களுக்கும் உள்ள தூரம்.

இந்த இரண்டு தகவல்களுமே செயற்கைகோள்களிலிருந்து வரும் ரேடியோ அலைகளை அலசி கண்டுபிடிக்கிறது. ரேடியோ அலைகள் ஒளியின் வேகத்தில் செல்ல கூடியவை (ஒரு வினாடிக்கு 186,000 மையில்கள் செல்லகூடியவை). செயற்கைகோள்கள் Pseudo Random Number என்பதை அனுப்பிக்கொண்டே இருக்கும். நம் கையில் உள்ள GPS சாதனம் தனக்கு வந்து சேரும் தகவல் எவ்வளவு நேரத்தில் வந்தது என்று கணக்கிட்டு செயற்கைகோள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கணக்கிடும்.

( மேலும் விபரங்களுக்கு Googleலை நாடுங்கள் ).
சரி என் பாரிஸ் அனுபவத்திற்கு வருகிறேன்.

பாரிஸில் என் அலுவலகத்தில் எனக்கு ஒரு ஹோட்டல் புக் செய்திருந்தார்கள். அது எங்கே என்று எனக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. டாக்ஸி டிரைவரிடம் அந்த ஹோட்டல் முகவரி அச்சிடப்பட்ட காகிதத்தை கொடுத்தேன். அவருக்கும் அந்த ஹோட்டல் எங்குள்ளது என்று தெரியவில்லை.
<img src='http://img198.exs.cx/img198/7148/gpscar5ig.jpg' border='0' alt='user posted image'>
அப்போது காரின் ஸ்டீரியோ பக்கத்தில் ஒரு பட்டனை தட்டினார், ஒரு மிகச் சிறிய கீபோர்ட் வெளியே வந்தது, அதில் அந்த ஹோட்டலின் முகவரியை உள்ளிட்டார். கார் ஸ்டீரியோ மேல் இருக்கும் திரையில் ஒரு மேப் தெரிந்தது. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் சாரி உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள், எந்த வழியாக போகவேண்டும் என்று சில நொடியிகளில் வரைபடத்தில் தெரிந்தது. புறப்பிட்ட பின் இந்த வழியாக போனால் இவ்வளவு நேரம் மிச்சமாகும், இடையில் எவ்வளவு சிக்னல்கள், வேகத்தடை என்று பல விஷயங்களை சொன்னது. டிரைவரிடம் காரை நிறுத்த சொல்லி முன் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டேன். நாங்கள் போகும் வேகத்தை வைத்து, இன்னும் எவ்வளவு நேரத்தில் போகலாம் என்று கணக்கிட்டு கூறியது.

இந்திய கார்களில் இன்னும் கொஞ்ச நாட்களில் வந்துவிடும் என்று சொல்கிறார்கள். தமிழ் பேர் வைக்க சொல்லி ரோட்டில் அரசியல் கலாட்டா, கண்ணமாபேட்டை சவ ஊர்வலம் போன்றவற்றை உங்களுக்கு எச்சரிக்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.

தற்போது செல் போனில் GPS போல் ஒன்று வருவதை சிலர் கவனித்திரிபீர்கள். இதற்கு "Cell Display Information" என்று பேர். உங்கள் செல் போன் எந்த டவர் பக்கத்தில் உள்ளது என்று சொல்லு உத்தி. இந்த தகவலை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த ஏரியாவில் இருக்கிறீர்கள் என்று சொல்லும்.

போன வாரம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு S13 கம்பார்ட்மெண்டில் ஏறினேன்.என் பக்கத்தில் இருந்த பெண்
"சார் my friend is in S2, if you dont mind can you exchange the seat" என்றாள்.
ஒரு பெண்ணிடம் முடியாது என்று எப்படி சொல்வது?
"ok, with pleasure" என்று டிக்கேட்டை வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது என் செல் போனில் "Chennai Central" என்று காட்டியது. S13க்கும், S2க்கும் நடுவில் முதல் வகுப்பு, AC-2Tier, AC-3Tier என்று ஏகப்பட்ட பெட்டிகள். ஒரு வழியாக S2வில் ஏறி உட்கார்ந்து செல் போனை பார்த்தேன் அதில் "Sowkarpet" என்றது. அவ்வளவு தூரம். S1னில் பெங்களூர் என்று காண்பித்தால் கூட ஆச்சிரியபடுவதிற்கில்லை.


"நன்றியுடன்
தேசிகன்
http://desikann.blogspot.com/2005/04/gps-g...ing-system.html

Print this item

  காதலா காதலா
Posted by: Malalai - 04-06-2005, 03:41 PM - Forum: கவிதை/பாடல் - Replies (39)

காதல் தீயின் தீண்டலை
தாங்காத மலரிவள்
துவண்டு விழுந்து
துடி துடிக்கையில்
தூக்கி நிறுத்தியவனே
தூர செல்வது ஏனோ?

காதலை உன்னிடம்
கையேந்தி யாசிக்க
என்னிடம் துளியளவும்
எண்ணம் இல்லை..!

மலரின் மையத்தில்
மலர்ந்தவன் உன்னை
மறைத்து வைத்தேன்
மனதுக்குள்..!
மங்காத உன் நினைவுகள்
மடியாது என்றென்றும்..!

உந்தன் பார்வையின்
பரிணாமங்களே
எந்தன் கவியாகி
உருப்பெறுகிறதே..!
காலமெல்லாம்
காணவேண்டும்
உன் கண்களை
காவியங்கள்
நாம் படைக்க..!

சூரியனின் வரவிற்காய்
காத்திருக்கும்
சூரியகாந்தியாக
பாத்திருக்கிறேன்
உன் வருகைக்காய்

நீ பதிக்கும் சுவடுக்காய்
பார்த்த விழி பூத்திருக்கிறேன்
பாரா முகம் ஏனோ?
பாவியிவள் பதறுகிறாள்
பஞ்சணையில் தூக்கமா உனக்கு?

தூக்கம் தொலைந்தது எனக்கு
முட்டிமோதும் உன் நினைவால்...!
தொலைந்த தூக்கத்தை
தேடவில்லை நான்..!
அவசியம் இல்லை
அதற்கு - ஏன்னென்றால்
உனக்குள்ளே பத்திரமாய்
உன் இதயத்தில்
மலர்ந்திருக்கிறேன் - நீ
மாலையிடும்
மணநாளை எண்ணி - இனி
சாவித்திரியாக
சத்தியவான் உன்னுடன்
வாழ்வதற்கு...!

Print this item

  ¾¢ÉìÌÃø 9ÅÐ «¸¨Å¢ø..
Posted by: selvanNL - 04-06-2005, 02:15 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (5)

<b>தினக்குரல் இன்று அதன் ஒன்பதாவது அகவையில் காலடி வைக்கிறது. கடந்து வந்த 8 வருடங்களிலும் சமுதாயத்தின் நலன்களுக்காகவும் நலமார்ந்த இதழியலின் மேம்பாட்டுக்காகவும் தினக்குரல் செய்திருக்கும் பங்களிப்புகÙ측¸ ¾Á¢ú Áì¸Ç¡¸¢Â ¿¡í¸û ¿ýÈ¢ ¸¼ý ÜÈ §ÅñÎõ.

ÒÄõ ¦ÀÂ÷ó¾ ¿¡Î¸Ç¢ø ź¢ìÌõ Áì¸ÙìÌ þ¨ÉÂò¾Çõ °¼¡¸ ¾ÉÐ §º¨Å¨Â Å¢Š¾Ã¢ò¾¢ÕìÌõ ¾¢ÉìÌÃÖìÌ ¿¡õ ¿ýȢ츼ý ÜȧÅñÎõ.</b>

-----------------------------------------------------------------------

<b>¾¢ÉìÌÃÖìÌõ ¾ÉÐ ¿Î¿¢¨Ä ¾ÅÈ¡¾ «Ãº¢Âø ¸ðΨø¨Ç ¾óЦ¸¡ñÊÕìÌõ ¬º¢Ã¢Â÷¸ÙìÌõ ÌÈ¢ôÀ¡¸ Å¢ÐÃý «Å÷¸ÙìÌõ «Å÷¸Ç¢ý §º¨Å¨Â ¦¾¡¼Ã ±ÉÐ ÁÉÁ¡÷ó¾ Å¡úòÐì¸û</b> :!:

Print this item

  மொனாக்கோ இளவரசர் மரணமானார்
Posted by: Vaanampaadi - 04-06-2005, 11:57 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (4)

<img src='http://newsimg.bbc.co.uk/nol/shared/img/nav/v3_banners/v3_ifs_banner_rb.gif' border='0' alt='user posted image'>
<b>Monaco's Prince Rainier dies, 81</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41000000/jpg/_41000497_rainierap203b.jpg' border='0' alt='user posted image'>
Rainier had been in poor health for several years
Monaco's Prince Rainier has died at the age of 81, after spending several weeks in hospital.
The prince, who had ruled the tiny Mediterranean principality since 1949, died at 0635 (0435 GMT), the royal palace said.

Europe's longest-reigning monarch, he had been suffering from heart, kidney and lung problems.

He will be succeeded by his 47-year-old son, Prince Albert, who took over his father's royal duties last week.

Prince Albert was at his father's side when he died, the Reuters news agency reported.

Doctors called him a little before 0600 to tell him that the end was near, the palace said.

Affluent haven

Rainier suffered several bouts of bronchitis and had several operations in recent years.

He was taken to hospital on 7 March with a lung infection, and moved into intensive care on 22 March.

Rainier's reign made headlines in 1956, when he married the US Hollywood star Grace Kelly, who brought a new glamour to Monaco.

It helped the prince turn the principality into an affluent and stylish haven for the rich and famous.

Grace Kelly died car-crash in 1982. They had three children: Caroline, Albert and Stephanie.

Print this item

  இப்பிடியும் பாக்கலாம் தானே?
Posted by: tamilini - 04-06-2005, 11:47 AM - Forum: புலம் - Replies (20)

இப்பிடியும் பாக்கலாம் தானே?

கறுப்பி புலிக்கு எதிரானவ, போராட்டத்துக்கு எதிரானவ, தேசியவிடுதலையில அக்கறை இல்லாதவ எண்டு சிலர் பல இடங்களில துள்ளிக் குதிக்கிறத பாத்துக்கொண்டுதான் வாறன். கறுப்பிக்கு விதம் விதமாச் சாப்பிட வேணும். அனேகமா கனடாவில இருக்கிற எல்லா நாட்டு ரெஸ்ரோறண்டுக்கும் போய் ஒரு பிடி பிடிச்சிருக்கிறன். விதம் விதமா உடுப்புப் போட விருப்பம். கனடாவில என்னென்ன சௌபாய்க்கியங்கள் எல்லாம் இருக்கோ ஒரு ரவுண்டு போய் வர விருப்பம். வாழ்க்கை வாழத்தானே. இப்பிடிச் சுயநலமா உலாவிக்கொண்டிருக்கிற கறுப்பி பொங்கி எழு தமிழா ஈழம் எமது கையில் எண்டு கவிதையும், கட்டுரையும் எழுதினால் யாராவது பின்னால நிண்டு ஓங்கி உதைய மாட்டீனம் எண்டு என்ன நிச்சயம்.
கறுப்பிக்கு(ம்) மனச்சாட்சி இருக்கு. அந்த வெய்யிலுக்க கல்லு, முள்ளுப் பத்தைக்க எப்ப வெடிவெடிக்கும், உடல் சிதறும், தலை விழும் எண்டு தெரியாமலும் பெத்த அம்மாவை அப்பாவைச் சகோதரங்களை இனிப் பாப்பனா எண்டும் தெரியாமல் தலைமைக்கும், கடமைக்கும், உத்தரவுகளுக்கும் தலைவணங்கித் துவக்குத் தூக்கிற எங்கட இளைஞர்களையும், யுவதிகளையும் பற்றி ஏதாவது கருத்துச் சொல்ல கறுப்பிக்கு என்ன அருகதை இருக்குச் சொல்லுங்கோ. உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு கையில காசிருந்ததால பிளேன் ஏறி இப்ப பிளானா வாழுற கறுப்பிக்கு என்ன யோக்கியதை இருக்கு போராட்டதைப் பற்றிக் கதைக்க. மனச்சாட்சி உறுத்துததால அப்ப அப்ப கொஞ்சம் காசை போரால பாதிக்கப்பட்ட யாருக்காவது கொடுத்து கறுப்பி தன்ர மனச்சாட்சிக்குத் தீனி போட்டுக் கொண்டு இருக்கிறா. அப்பதான குற்றஉணர்வு இல்லாமல் படங்களுக்கும் கலைநிகழ்சிகளுக்கும் போய் வரலாம்..

ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் பிளேன் ஏறி வந்து முற்று முழுதான லௌகீக வாழ்க்கை வாழந்து தொலைக்கிற எங்கட தேசியபற்றுக்காறரிலும் விட கறுப்பி எவ்வளவோ மேல். லௌகீகத்தில் திளைத்த படியே வீரவசனங்கள எழுதிக் குவித்தும் குரல் உயத்திக் கத்தியும் ரீல் விடுகிற ரகம் இல்லக் கறுப்பி. சுயநலம் துலைந்தால் நிச்சயம் தளத்தில நிக்க வேணும். இல்லாட்டிக் கம்மெண்டு இருக்க வேணும். நல்லாத் திண்டு கொழுத்து எல்லா டாம்பீகங்களையும் அனுபவிச்சுக் கொண்டு யாருக்குப் படம் காட்ட வீரவசனமா எழுதித் துலைக்கிறியள். பேசாமல் தளத்தில போய் அந்தப் பிள்ளைகளுக்குத் தோள் குடுங்கோவன்.

ஐயோ ஐயோ ஐயோ.. அப்ப ஆர் காசு சேக்கிற பொறுப்பை ஏற்கிறது. வெளிநாட்டு உதவிய ஆர் பெற்றுக்குடுக்கிறது எண்டு கறுப்பியக் கவிக்கப் பாக்கிறீங்களாக்கும். கறுப்பி போல எத்தினை சுயநலவாதிகள் புலம்பெயர்ந்து வாழீனம் அவையளிட்ட அந்தப் பொறுப்பைக் குடுங்கோவன் (என்ன நம்பிக்கை இல்லையே- கறுப்பி கொஞ்சம் உருவினா என்ன? கண்டுகொள்ளாதேங்கோ) ஒரு குடும்பத்தில எத்தின பேர் இருப்பீங்கள் ஒருத்தர் இஞ்ச இருந்து உதவலாம் மற்றாக்கள் தளத்தில போய் நிண்டு எங்கள ஆட்டிப்படைக்கிற ஆராஜக அரசாங்கத்தை ஒளிக்கலாமே..

அட திடீரெண்டு "ஃபரனைட் 911" திரைப்படத்தின்ர கடைசிக் காட்சி மனதில ரீலா ஓடுது. "மைக்கல் மோர்" அதுதான் அந்தப்படத்தின்ர இயக்குனர் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிட்ட நேராப் போய் உங்கட பிள்ளைகள ஆமியில சேக்கிறதுக்கு விண்ணப்பத்த நிரப்பித்தாங்கோ எண்டு கேக்க அவையள் துண்டக்காணம் துணியக் காணம் எண்டெல்லோ ஓடீனம். பின்ன என்ன சேத்து வைச்ச காசில பிள்ளைகள கேம்பிறிச்சுக்கும், கார்வேட் யூனிவேர்சிட்டிக்கும் அனுப்பிப் படிப்பிச்சு டாம்பீக வாழ்க்கையை பரம்பரை பரம்பரையாகத் தொடருவீனமா? இல்லாட்ட அப்பாவிப் போராளிகளோட தங்கட பிள்ளைகளையும் விட்டு அந்தக் கொடூரத்தை தங்கட பிள்ளைகள் அனுபவிக்க வைச்சு ஐயோ பெத்த மனசு பத்தியெல்லே எரியுது.. அவையின்ர பிள்ளைகள மட்டும்தான் தாய் பெத்ததாம் அப்பாவி போராளிகளைப் பெத்தது உணர்வற்ற இயந்திரமாம். (புஸ்சின்ர பெட்டைகளைப் பாத்தாலே தெரியுதே)

எப்ப புலம்பெயர்ந்தியளோ அப்பவே பேசாமல் கம்மெண்டு இருந்திட்டால் நல்லது. உண்மையிலையே உணர்சியால கொந்தளிச்சா வீட்டில ஒருத்தரை மட்டும் உதவிக்கு எண்டு இஞ்ச விட்டிட்டு மற்றாக்கள் தளத்துக்குப் போறது மேல். அதவிட்டிட்டு எத்தின மணித்தியாளங்களை புளொக்கிள விரையம் செய்யிறியள் அங்கை எங்கட பிள்ளைகள் செத்து மடியுதுகள். இந்த காதிலபூச்சுத்துற வேலைய விட்டிட்டு ரீல் விடுறாக்கள் உங்கட சொத்துப் பத்தை வித்திட்டு சொந்தங்களோட போய் தளத்தில இறங்கினால் எப்பவோ ஈழம் கிடைச்சிருக்கும். சத்தியமாச் சொல்லுறன். யாரோ ரெத்தம் சிந்தி, உடல் சிதற, உயிர் இழந்து, எடுத்த ஈழத்தை லௌகீக வாழ்க்கை வாழ்ற மானம் கெட்டு பிளேன் ஏறி வந்த கறுப்பி ஒருநாளும் சொந்தம் கொண்டாட மாட்டாள். அந்த எங்கட மாங்கொட்டைத் தீவில இருந்து கிடைக்கிற குட்டி ஈழம் ரெத்தம் சிந்தின அந்த அப்பாவிகளுக்கு மட்டும் தான் சொந்தம்.

இவ என்னைத்தான் சொல்லுறா எண்டு தலையச் சொறியாதேங்கோ. தொப்பி அளவா இருந்தா ஆரும் போட்டுக் கொள்ளலாம்

கறுப்பி

Print this item

  :: நட்புக்காலம் ::
Posted by: Kurumpan - 04-06-2005, 03:01 AM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

வணக்கமுங்கோ!!!!

புதுசா கவிதை கேப்பமா??? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
http://www.yarl.com/forum/music_page.php?song_id=33

Print this item

  GMail மின்னஞ்சலில் infinity+1 storage
Posted by: spyder12uk - 04-06-2005, 01:31 AM - Forum: கணினி - Replies (3)

GMail infinity+1 storage and Google Gulp

ஏப்ரல் 1 ஆம் தேதி கூகிள் வழங்கும் ஜிமெயிலுக்கு முதல் பிறந்தநாள். GMail மின்னஞ்சலில் infinity+1 storage வழங்க இருக்கிறார்கள். infinity+1 என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் அதை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளார்கள். இங்கே காண்க.

https://www.google.com/accounts/ServiceLogi...%26zy%3Dl&hl=en

Print this item

  உன்னை நினைத்து நினைத்து,,,,,
Posted by: sunthar - 04-06-2005, 12:43 AM - Forum: கவிதை/பாடல் - Replies (28)

பாதி இரவுகளிலும்
பனிப்போர்வையிலும்
உன் நினைவுகள் நெருப்பை மூட்டும்
உன் விழிக்கரங்கள்
என்னுள் புகுந்து
என் நரம்புகளை மீட்டும்

எந்த செடியில் மலர்ந்தாய் நீ
வாடாமல் என்னை வாட்டும்
வித்தை எங்கு கற்றாய்

உன்னாø ஈர்ப்பு விசை
இழந்து தவிக்கிறேன்
உனக்கு பாதைகள் போட
மலர்கள் குவிக்குறேன்

உன்னை நினைத்து நினைத்து
நெஞ்சம் சரிகிறது

என்னுள் நிரம்பியிருக்கும் நீ
என்விழிகள் வழியே
மட்டும் சிந்துகிறாய்
கண்ணீராய் ,,,,,,,,,

Print this item

  இராணுவ தளபதியின் திடீர் இடமாற்றத்தின் பின்னணி என்ன?
Posted by: Nada - 04-05-2005, 10:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

கிழக்குப் பிராந்திய இராணுவ தளபதியின் திடீர் இடமாற்றத்தின் பின்னணி என்ன?

விசாரணைகளிலிருந்து பாதுகாக்கவா? புலிகள் அச்சுறுத்தல் காரணமாகவா?

கிழக்குப் பிராந்திய இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன இராணுவ தலைமையகத்திற்கு இடமாற்றஞ் செய்யப்பட்டுள்ளார். வெலிக்கந்தைக்கு அப்பால் தீவுச்சேனை கிராமத்தில் கருணா குழுவினரின் முகாமிருந்தது அம்பலத்திற்கு வந்ததையடுத்து இவர் அவசர அவசரமாக இடமாற்றஞ் செய்யப்பட்டுள்ளார். எனினும்ää இவரது இந்த இடமாற்றத்திற்கு மேலும் பல காரணங்களிருப்பதாகவே கருதப்படுகிறது.

கிழக்குப் பிராந்திய இராணுவ தலைமையகம் மின்னேரியாவிலுள்ளது. பொலநறுவை மாவட்டத்திலுள்ள இப்பிரதேத்திலிருக்கும் 23 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன இருந்தார். கருணாவின் கிளர்ச்சியை தொடர்ந்து கருணாவுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவித்தன.

கருணா கொழும்பில் இராணுவத்தினரின் பூரண பாதுகாப்பிலிருந்த போது கருணாவை இவர் அடிக்கடி சந்தித்ததாகக் கூட தகவல்கள் வெளியாகின. இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்ää தற்போது கிழக்கில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுடன் ஏதோவொரு விதத்தில் தொடர்புபட்டவரென்பது புலிகளுக்கு நன்கு தெரியும்.

கருணா குழுவினருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர் ஆதரவளித்து வந்ததை அரசு தரப்பும் நன்கறியும். புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் இவரது பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

வெலிக்கந்தையிலுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு முகாமே இந்த நிழல் யுத்தத்தின் மையத் தளமென புலிகள் ஆரம்பத்திலேயே இனங்கண்டு விட்டனர். இந்த நிலையிலேயே கருணா குழுவினரின் செயற்பாடும் வெலிக்கந்தையையும் அதன் சுற்றுப்புறங்களையும் மையமாகக் கொண்டு செயற்படää இராணுவத்தினருக்கும் கருணா குழுவினருக்குமிடையிலான தொடர்புகள் அம்பலத்திற்கு வந்தன.

புலிகளுக்கெதிரான தாக்குதல்களின் போதெல்லாம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தொடர்புகள் குறித்து புலிகள் கடும் குற்றச்சாட்டை சுமத்தியதுடன் தங்களுக்கெதிரான நிழல் யுத்தத்தில் இராணுவத்தினரின் தொடர்புகள் குறித்து ஆதாரங்களுடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் முறைப்பாடு செய்து வந்தனர்.

கருணாவின் கிளர்ச்சியைத் தொடர்ந்து கருணா குழுவின் செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரந்துபட்டுக் காணப்பட்ட போது புலிகளின் அதிரடித் தாக்குதல்கள் பலவற்றில் கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் பலர் கொல்லப்பட்டதுடன் அந்தக் குழுவின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிடவேää கருணா குழுவின் செயற்பாடு மட்டக்களப்பில் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் மட்டுநகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் புலிகள் மீது பரவலாகத் தாக்குதல் நடைபெற்றது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தங்கள் அரசியல் நடவடிக்கைக்காகச் செல்லும் புலிகளின் போக்குவரத்துக்கள் குறித்த பூரண விபரங்களை இராணுவச் சோதனை நிலையங்களிலிருந்து பெற்றே கருணா குழுவினர் தங்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதாக புலிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி வந்தனர்.

கருணா குழுவினர் பலர் அடுத்தடுத்து கொல்லப்பட எஞ்சியவர்களை பாதுகாக்க வேண்டியதொரு தேவை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு ஏற்பட்டது. அதேநேரம்ää எஞ்சியிருந்தவர்களை பயன்படுத்தி புலிகள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டிய தேவையுமிருந்தது.


இந்த நிலையில் மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதியில் இவர்களது நடமாட்டமும் நடவடிக்கையும் பெருமளவில் குறைந்த அதேநேரம் மட்டக்களப்பு நகரில் இவர்களது தாக்குதல்கள் அவ்வப்போது இடம்பெற்றன. எனினும்ää பின்னர் அதனையும் புலிகள் கட்டுப்படுத்தியதுடன் வேறு தமிழ்க் குழுக்களைச் சேர்ந்த இராணுவ உளவாளிகளையும் அடுத்தடுத்து இலக்கு வைக்கää இவர்களது எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டதுடன் இவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்த வேண்டிய கட்டாய தேவையும் ஏற்பட்டது.

இந்நேரத்தில் தான் வெலிக்கந்தையிலுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தை அண்டிய பகுதிகளில் வைத்து இவர்களை இயங்க வைக்க இராணுவ புலனாய்வுப் பிரிவு தீர்மானித்ததாக புலிகள் குற்றஞ்சாட்டினர்.

இதற்கேற்ப அப்பகுதிகளில் படை முகாம்களுக்கு சற்று அப்பால் தமிழ்ää முஸ்லிம்ää சிங்களக் கிராமங்களுக்குள் பலத்த பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டு இவர்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவு இயக்கி வந்தது. இவர்களும் பொலநறுவை - மட்டக்களப்பு எல்லையோரத்தில் செயற்பட்டு அவ்வப்போது புலிகள் மீதான தாக்குதலை நடத்தி வரும் அதேநேரம் கருணா குழு பற்றி சிங்களää ஆங்கில ஊடகங்களும் அரச ஊடகங்களும் பெரிதளவில் செய்திகளை வெளியிட்டு கருணா குழு பற்றி சிங்கள மக்கள் மத்தியில் மாயை ஒன்றை தோற்றுவித்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு முன்னர் பொறுப்பாகவிருந்த கப்டன் பண்டார என்பவரே தற்போது வெலிக்கந்தையில் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாகவுள்ளார். இவரே கருணா குழுவை இயக்கி வருவதாக பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

இதேபோன்றே அம்பாறை மாவட்டத்தில்ää அப்பகுதிக்கான இராணுவ புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கப்டன் கருணாரத்ன புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தின் பின்னணியிலிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தனவின் ஆசியுடன் இவர்கள் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால்ää இவர்களை புலிகளும் இலக்கு வைக்கக் காத்திருக்கின்றனர். தங்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் ஆதரவுடனேயே நடப்பதையும் புலிகள் பல தடவைகள் சுட்டிக்காட்டியுமுள்ளனர்.

கௌசல்யனின் படுகொலை மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்தனர். வெலிக்கந்தை பிள்ளையாரடியில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் மூலம் வெலிக்கந்தை பகுதியில் கருணா குழுவினர் இருப்பது உறுதியாகி விட்டதையும் புலிகள் சுட்டிக் காட்டினர். ஆனாலும்ää இது குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கின்றது.

கருணா குழுவில் எஞ்சியிருப்பவர்களில் முக்கியமானவர்களான மங்களன்ää இனியபாரதிää ஜெயம்ää மார்க்கன்ää பிள்ளையான்ää சின்னத்தம்பிää றியசீலன் ஆகியோரைப் பயன்படுத்தியே இராணுவ புலனாய்வுப் பிரிவு புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தை தொடர்கிறது. மார்க்கன் கடந்த வருட பிற்பகுதியில் கொழும்பில் வெள்ளவத்தையில் இடம்பெற்ற தாக்குதலிலும் மங்களன் அண்மையில் தீவுச்சேனையில் இடம்பெற்ற தாக்குதலிலும் படுகாயமடைந்தனர்.

தீவுச்சேனையில் கருணா குழுவின் முகாமில் 12 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் காவல் கடவையிலிருப்பதன் மூலம்ää சிறுவர்களையாவது தங்கள் குழுவில் சேர்த்துவிட இவர்கள் முயல்வது தெரிகிறது. இதை விட இந்த ஏழு பேரும் கிழக்கில் வேறு வேறு பகுதிகளிலிருந்தே செயற்படுகின்றனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே இவர்களது வேலையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம்ää வெலிக்கந்தைக்கு அருகே தீவுச்சேனையில் கருணா குழுவின் முகாமிருப்பது அம்பலத்திற்கு வந்ததால் அரசுக்கும் படைத் தரப்பிற்கும் நெருக்கடி ஏற்பட்ட போதிலும் புலிகள் கூறுவது போல் அக் குழுவில் ஒரு சிலர் தான் எஞ்சியிருக்கிறார்களென்பது பொய் முகாம் அமைத்து அதன் பாதுகாப்புக்கு காவலரண்கள் அமைத்து பெருமெடுப்பில் செயற்படக் கூடிய வல்லமையுடன் கருணா குழு இருப்பதாக வெளியுலகுக்கு காட்டுவதில் தாங்கள் வெற்றியடைந்து விட்டதாகவே படைத்தரப்பு கருதுகிறது.

கடந்த வாரம் மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்குமிடையே செங்கலடியிலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தூரத்தில்ää புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வீரயன்ää வெளிக்குளம் பகுதியில் ஊடுருவியவர்கள் இரவு நேரத்தில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் இரு அப்பாவிகள் உயிரிழந்தனர். இதேபோன்றதொரு தாக்குதல் அன்றைய தினம் செங்கலடிக்கு அப்பாலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நிகழ்ந்துள்ளது.

வாகனமொன்றில் வந்து கொண்டிருந்த இரு புலி உறுப்பினர்களைää மற்றொரு வாகனத்தில் வந்து வழி மறித்தோர் வெட்டிக் கொலை செய்து விட்டு தாங்கள் வந்த வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். மேஜர் குறளமுதன்ää லெப்.இசைமாறன் ஆகியோர் இதில் உயிரிழந்தனர். இவ்விரு தாக்குதலையும் ஒரே நாளில் இராணுவ விசேட படையணியே மேற்கொண்டதாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கருணா குழுவினர் புலிகளின் பகுதிக்குள் புகுந்து நடத்திய தாக்குதல்களில் பல புலிகள் கொல்லப்பட்டதாக மறுநாள் சிங்களää ஆங்கில ஊடகங்கள் தெரிவித்தன. வெலிக்கந்தைப் பகுதியுடன் கருணா குழுவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்டு வந்த போதுää கருணா குழு மட்டக்களப்பில் புலிகளின் பகுதிக்குள்ளும் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் வல்லமை படைத்தது என்பதை காண்பிக்கவே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தச் சு10ழ்நிலையிலேயே கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது இடத்திற்கு பிரிகேடியர் திஸ்ஸ ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். கப்டன் பண்டார மற்றும் கப்டன் கருணாரட்ன ஆகியோருக்கும் இடமாற்றம் வழங்குமாறு வலியுறுத்தப்பட்ட போதும் மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன மட்டுமே இடமாற்றஞ் செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக் காலங்களில் கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன சாட்சியமளிக்க வேண்டிய சு10ழ்நிலை ஏற்பட்டதால் அவர் திடீர் இடமாற்றஞ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் சாட்சியமளிக்கச் சென்றால் ää தீவுச்சேனை முகாம் குறித்த விடயம் மேலும் அம்பலமாகிவிடலாமென்பதுடன் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் கருணா குழுவிற்குமிடையிலான தொடர்பும் அம்பலமாகிவிடலாமெனவும் கருதப்படுகிறது.

ஆனாலும்ää தன்னைக் கொல்ல புலிகள் முயல்வதாக மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தன கூறியிருந்தார். பொலனறுவையில் புகையிரத நிலையமொன்றில் அண்மையில் கிளேமோர் குண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிளேமோர்ää இவரை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டதாகவும் இராணுவ தரப்பில் கூறப்பட்டதும் இவ்வாறானதொரு சு10ழ்நிலையிலேயே இவரது பாதுகாப்பு கருதி இவர் இடமாற்றஞ் செய்யப்பட்டதாக படைத்தரப்பில் கூறப்படுகிறது.

கிழக்கில் தினமும் கொலைகளும் துப்பாக்கிச் சு10ட்டுச் சம்பவங்களும் தொடர்கையில் அங்கு புலிகள் தங்கள் பிடியை இறுக்கி வருகின்றனர். தங்கள் நிர்வாகச் செயற்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் முழு அளவில் விஸ்தரித்து வருகின்றனர். அதுபோல் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் புலிகளின் நிழல் நிர்வாகம் நன்கு செயற்படத் தொடங்கிவிட்டது.

கருணா குழுவினரின் இன்றைய இலக்கெல்லாம் கிழக்கில் சுமுக நிலையை குழப்புவதேயாகும். இராணுவப் புலனாய்வுப் பிரிவு இவர்களைப் பயன்படுத்தி இதனைச் செய்ய முயல்கிறது. கருணா எங்கிருக்கின்றாரெனத் தெரியாத நிலையில் எஞ்சிய ஆறுபேரும்ää தங்களுடன் இருக்கும் சிலரைப் பயன்படுத்தி புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்துகின்றனர். ஆனால்ää இவற்றையும் விரைவில் கட்டுப்படுத்தி விட முடியுமென புலிகள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளின் புலனாய்வுத்துறை முழு அளவில் செயற்படுவது படையினருக்கு நன்கு தெரியும். கருணா குழுவினரதும் ஏனைய தமிழ்க் குழுவினரதும் பெரும்பாலான செயற்பாட்டை புலிகள் நன்கு அவதானித்தே வருகின்றனர். ஒரு புறம் தங்களுக்கெதிரான நிழல் யுத்தத்தை முறியடிக்க முனைப்புடன் செயற்படும் புலிகள்ää மறுபுறம் தங்கள் பிடியை மேலும் இறுக்க இப் பகுதியில் நிழல் நிர்வாகத்தையும் விஸ்தரித்து வருகின்றனர்.
வாiயெமரசயட.உழஅ

Print this item

  இணைய உதவிகள்
Posted by: thamilvanan - 04-05-2005, 06:36 PM - Forum: இணையம் - Replies (40)

இணையப்பக்கங்களை சேமித்தல்

சில இணையப்பக்கங்களை சேமிக்கும்போது அதனை சேமிக்க( save பண்ண )முடியாமலுள்ளது. பெரும்பாலும் டைனமிக் எழுத்துரு பயன்படுத்தப்டும் இணையப்பக்கங்களிலேதான் நான் இப்பிரச்சனை எதிர்கொள்கிறேன்.

ஏதாவது தீர்வுகள்??????.

Print this item