04-06-2005, 04:32 PM
GPS - Global Positioning System
"
GPS - Global Positioning System.
இதை பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வருடங்களுக்கு முன் நான் பாரிஸ் சென்ற போது எனக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகமானது. எப்படி என்று சொல்வதற்கு முன் GPS எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம். நம் முன்னோர்கள் இடங்களை குறிக்க பெரிய நினைவு சின்னங்கள், வரைபடங்கள், நட்சத்திரங்களின் அமைப்பு போன்றவற்றை அடையாளமாக உபயோகித்தார்கள்.
இன்று 4000 ரூபாய்க்கு ஒரு GPS சாதனம் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக சொல்லும்.
<img src='http://img101.exs.cx/img101/2014/gps27satellite9la.jpg' border='0' alt='user posted image'>
(Photo courtesy U.S. Department of Defense)
(Artist's concept of the GPS satellite constellation )
GPS என்று நாம் கூறுவது பெரும்பாலும் GPS ரிசீவரையே குறிக்கிறது. 27 (அதில் மூன்று ஸ்டெப்னிகள்) செயற்கைகோள்களை கொண்டு அமைக்கபட்டுள்ளது. அமெரிக்க ரானுவத்தால் ராணுவத்திற்கு உருவாக்கப்பட்ட இது தற்போது எல்லோருக்கும் பயன்படும் விதமாக இருக்கிறது.
சுமார் 2000 கிலோ எடை உள்ள இச்செயற்கைகோள்கள் பூமியை 12,000 மையில் வேகத்தில் சுற்றுகின்றது. அதாவது பூமியை ஒரு நாளைக்கு இரண்டு முறை வலம் வருகிறது. பூமியில் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் தலைக்கு மேல் குறைந்தபட்சம் நான்கு செயற்கைகோள்கள் தெரியும்படி அதை அமைத்திருக்கிறார்கள்.
<img src='http://img198.exs.cx/img198/430/gpssatellite9wt.jpg' border='0' alt='user posted image'>
(Photo courtesy U.S. Army A GPS satellite)
GPS ரிசீவர் வேலை என்னவென்றால் இந்த நான்கு செயர்கைகோள்களை எங்கே என்றும் அதன் இடைப்பட்ட தூரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறோம் என்று கண்டுபிடிக்கிறது. இந்த உத்திக்கு பெயர் - Trilateration. ஒரு சின்ன உதாரணம் கொண்டு இதை பார்க்கலாம்.
நீங்கள் சென்னைக்கு புதிது. ஷாப்பிங் போய் எங்கோ துலைந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பக்கத்தில் இருக்கும் ஒரு சென்னை வாசியிடம்
"சார் நான் எங்கே இருக்கிறேன் ?" என்று கேட்கிறீர்கள்
"கஸ்மாலம், நீ கோடம்பாக்கம் லிபர்ட்டி டாக்கீஸிலிருந்து மூணு கிமீ தூரத்தில இருக்கே" என்று நக்கலாக பதிலலிக்கிறார். ( "A" - கோடம்பாக்கம் லிபர்ட்டி டாக்கீஸை குறிக்கிறது).
இந்த தகவலை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?. கோடம்பாக்கம் மூன்று கிமீ சுற்றளவில் நீங்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்காலாம் அல்லவா ?
( பார்க்க நீல நிற குறியீடுகள் )
<img src='http://img198.exs.cx/img198/7002/chennaigps19zl.jpg' border='0' alt='user posted image'>
பக்கத்தில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் கேட்கிறீர்கள்.
"நான் எங்கே இருக்கிறேன் ?" என்று
அவளும் சளைத்தவள் அல்ல,
"ம்ம். இங்கிருந்து தேனாம்பேட்டை சன் டிவி அலுவலகம் முன்று கிமீ" என்று பதில் அளிக்கிறாள்.
<img src='http://img198.exs.cx/img198/6992/chennaigps26kd.jpg' border='0' alt='user posted image'>
(B-தேனாம்பேட்டை சன் டிவி அலுவலகத்தை குறிக்கிறது).
இப்போது நீங்கள் மேப்பில் இரண்டு வட்டங்களை போடுகிறீர்கள். அதன் intersection இரண்டு இடங்களில் இருப்பதால் இந்த இரண்டு இடங்களில் நிங்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம்.
<img src='http://img198.exs.cx/img198/9759/chennaigps36eh.jpg' border='0' alt='user posted image'>
சரி, சென்னைவாசிகளே கொஞ்சம் வில்லங்கமானவர்கள் என்று ஒரு ஆட்டோ டிரைவரிடம்
"இங்கிருந்து மாம்பலம் அயோத்தியா மண்டபம் எவ்வளவு தூரம்பா ?" என்று கேட்கிறீர்கள்.
"3 கிமீ, ஆட்டோவில் குந்து சாமி வீட்டாண்ட விட்டுறேன்" என்று கூறுகிறார்.
(C- அயோத்தியா மண்டபத்தை குறிக்கிறது)
இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். முன்றாம் வட்டத்தை போடுங்கள் அவ்வளவுதான். இந்த மூன்று வட்டங்களும் சேரும் இடம்தான் நீங்கள் இருக்கும் இடம். நீங்கள் தி.நகரில், பனகல் பார்க்கில் இருக்கிறீர்கள்.
( சென்னை மேப் உதவி : http://www.mapsofindia.com/ )
ஆக நீங்கள் வைத்துள்ள GPS சாதனம் இடத்தை கண்டுபிடிக்க அதற்கு இரண்டு தகவல்கள் தேவை படுகிறது
1. தன் தலைக்கு மேல் குறைந்த பட்சம் மூன்று செயற்கைகோள்கள்
2. சாதனத்திற்கும் செயற்கைகோள்களுக்கும் உள்ள தூரம்.
இந்த இரண்டு தகவல்களுமே செயற்கைகோள்களிலிருந்து வரும் ரேடியோ அலைகளை அலசி கண்டுபிடிக்கிறது. ரேடியோ அலைகள் ஒளியின் வேகத்தில் செல்ல கூடியவை (ஒரு வினாடிக்கு 186,000 மையில்கள் செல்லகூடியவை). செயற்கைகோள்கள் Pseudo Random Number என்பதை அனுப்பிக்கொண்டே இருக்கும். நம் கையில் உள்ள GPS சாதனம் தனக்கு வந்து சேரும் தகவல் எவ்வளவு நேரத்தில் வந்தது என்று கணக்கிட்டு செயற்கைகோள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கணக்கிடும்.
( மேலும் விபரங்களுக்கு Googleலை நாடுங்கள் ).
சரி என் பாரிஸ் அனுபவத்திற்கு வருகிறேன்.
பாரிஸில் என் அலுவலகத்தில் எனக்கு ஒரு ஹோட்டல் புக் செய்திருந்தார்கள். அது எங்கே என்று எனக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. டாக்ஸி டிரைவரிடம் அந்த ஹோட்டல் முகவரி அச்சிடப்பட்ட காகிதத்தை கொடுத்தேன். அவருக்கும் அந்த ஹோட்டல் எங்குள்ளது என்று தெரியவில்லை.
<img src='http://img198.exs.cx/img198/7148/gpscar5ig.jpg' border='0' alt='user posted image'>
அப்போது காரின் ஸ்டீரியோ பக்கத்தில் ஒரு பட்டனை தட்டினார், ஒரு மிகச் சிறிய கீபோர்ட் வெளியே வந்தது, அதில் அந்த ஹோட்டலின் முகவரியை உள்ளிட்டார். கார் ஸ்டீரியோ மேல் இருக்கும் திரையில் ஒரு மேப் தெரிந்தது. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் சாரி உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள், எந்த வழியாக போகவேண்டும் என்று சில நொடியிகளில் வரைபடத்தில் தெரிந்தது. புறப்பிட்ட பின் இந்த வழியாக போனால் இவ்வளவு நேரம் மிச்சமாகும், இடையில் எவ்வளவு சிக்னல்கள், வேகத்தடை என்று பல விஷயங்களை சொன்னது. டிரைவரிடம் காரை நிறுத்த சொல்லி முன் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டேன். நாங்கள் போகும் வேகத்தை வைத்து, இன்னும் எவ்வளவு நேரத்தில் போகலாம் என்று கணக்கிட்டு கூறியது.
இந்திய கார்களில் இன்னும் கொஞ்ச நாட்களில் வந்துவிடும் என்று சொல்கிறார்கள். தமிழ் பேர் வைக்க சொல்லி ரோட்டில் அரசியல் கலாட்டா, கண்ணமாபேட்டை சவ ஊர்வலம் போன்றவற்றை உங்களுக்கு எச்சரிக்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.
தற்போது செல் போனில் GPS போல் ஒன்று வருவதை சிலர் கவனித்திரிபீர்கள். இதற்கு "Cell Display Information" என்று பேர். உங்கள் செல் போன் எந்த டவர் பக்கத்தில் உள்ளது என்று சொல்லு உத்தி. இந்த தகவலை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த ஏரியாவில் இருக்கிறீர்கள் என்று சொல்லும்.
போன வாரம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு S13 கம்பார்ட்மெண்டில் ஏறினேன்.என் பக்கத்தில் இருந்த பெண்
"சார் my friend is in S2, if you dont mind can you exchange the seat" என்றாள்.
ஒரு பெண்ணிடம் முடியாது என்று எப்படி சொல்வது?
"ok, with pleasure" என்று டிக்கேட்டை வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது என் செல் போனில் "Chennai Central" என்று காட்டியது. S13க்கும், S2க்கும் நடுவில் முதல் வகுப்பு, AC-2Tier, AC-3Tier என்று ஏகப்பட்ட பெட்டிகள். ஒரு வழியாக S2வில் ஏறி உட்கார்ந்து செல் போனை பார்த்தேன் அதில் "Sowkarpet" என்றது. அவ்வளவு தூரம். S1னில் பெங்களூர் என்று காண்பித்தால் கூட ஆச்சிரியபடுவதிற்கில்லை.
"நன்றியுடன்
தேசிகன்
http://desikann.blogspot.com/2005/04/gps-g...ing-system.html
"
GPS - Global Positioning System.
இதை பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வருடங்களுக்கு முன் நான் பாரிஸ் சென்ற போது எனக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகமானது. எப்படி என்று சொல்வதற்கு முன் GPS எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம். நம் முன்னோர்கள் இடங்களை குறிக்க பெரிய நினைவு சின்னங்கள், வரைபடங்கள், நட்சத்திரங்களின் அமைப்பு போன்றவற்றை அடையாளமாக உபயோகித்தார்கள்.
இன்று 4000 ரூபாய்க்கு ஒரு GPS சாதனம் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக சொல்லும்.
<img src='http://img101.exs.cx/img101/2014/gps27satellite9la.jpg' border='0' alt='user posted image'>
(Photo courtesy U.S. Department of Defense)
(Artist's concept of the GPS satellite constellation )
GPS என்று நாம் கூறுவது பெரும்பாலும் GPS ரிசீவரையே குறிக்கிறது. 27 (அதில் மூன்று ஸ்டெப்னிகள்) செயற்கைகோள்களை கொண்டு அமைக்கபட்டுள்ளது. அமெரிக்க ரானுவத்தால் ராணுவத்திற்கு உருவாக்கப்பட்ட இது தற்போது எல்லோருக்கும் பயன்படும் விதமாக இருக்கிறது.
சுமார் 2000 கிலோ எடை உள்ள இச்செயற்கைகோள்கள் பூமியை 12,000 மையில் வேகத்தில் சுற்றுகின்றது. அதாவது பூமியை ஒரு நாளைக்கு இரண்டு முறை வலம் வருகிறது. பூமியில் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் தலைக்கு மேல் குறைந்தபட்சம் நான்கு செயற்கைகோள்கள் தெரியும்படி அதை அமைத்திருக்கிறார்கள்.
<img src='http://img198.exs.cx/img198/430/gpssatellite9wt.jpg' border='0' alt='user posted image'>
(Photo courtesy U.S. Army A GPS satellite)
GPS ரிசீவர் வேலை என்னவென்றால் இந்த நான்கு செயர்கைகோள்களை எங்கே என்றும் அதன் இடைப்பட்ட தூரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்க வேண்டும். இதை வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறோம் என்று கண்டுபிடிக்கிறது. இந்த உத்திக்கு பெயர் - Trilateration. ஒரு சின்ன உதாரணம் கொண்டு இதை பார்க்கலாம்.
நீங்கள் சென்னைக்கு புதிது. ஷாப்பிங் போய் எங்கோ துலைந்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பக்கத்தில் இருக்கும் ஒரு சென்னை வாசியிடம்
"சார் நான் எங்கே இருக்கிறேன் ?" என்று கேட்கிறீர்கள்
"கஸ்மாலம், நீ கோடம்பாக்கம் லிபர்ட்டி டாக்கீஸிலிருந்து மூணு கிமீ தூரத்தில இருக்கே" என்று நக்கலாக பதிலலிக்கிறார். ( "A" - கோடம்பாக்கம் லிபர்ட்டி டாக்கீஸை குறிக்கிறது).
இந்த தகவலை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?. கோடம்பாக்கம் மூன்று கிமீ சுற்றளவில் நீங்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்காலாம் அல்லவா ?
( பார்க்க நீல நிற குறியீடுகள் )
<img src='http://img198.exs.cx/img198/7002/chennaigps19zl.jpg' border='0' alt='user posted image'>
பக்கத்தில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் கேட்கிறீர்கள்.
"நான் எங்கே இருக்கிறேன் ?" என்று
அவளும் சளைத்தவள் அல்ல,
"ம்ம். இங்கிருந்து தேனாம்பேட்டை சன் டிவி அலுவலகம் முன்று கிமீ" என்று பதில் அளிக்கிறாள்.
<img src='http://img198.exs.cx/img198/6992/chennaigps26kd.jpg' border='0' alt='user posted image'>
(B-தேனாம்பேட்டை சன் டிவி அலுவலகத்தை குறிக்கிறது).
இப்போது நீங்கள் மேப்பில் இரண்டு வட்டங்களை போடுகிறீர்கள். அதன் intersection இரண்டு இடங்களில் இருப்பதால் இந்த இரண்டு இடங்களில் நிங்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம்.
<img src='http://img198.exs.cx/img198/9759/chennaigps36eh.jpg' border='0' alt='user posted image'>
சரி, சென்னைவாசிகளே கொஞ்சம் வில்லங்கமானவர்கள் என்று ஒரு ஆட்டோ டிரைவரிடம்
"இங்கிருந்து மாம்பலம் அயோத்தியா மண்டபம் எவ்வளவு தூரம்பா ?" என்று கேட்கிறீர்கள்.
"3 கிமீ, ஆட்டோவில் குந்து சாமி வீட்டாண்ட விட்டுறேன்" என்று கூறுகிறார்.
(C- அயோத்தியா மண்டபத்தை குறிக்கிறது)
இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். முன்றாம் வட்டத்தை போடுங்கள் அவ்வளவுதான். இந்த மூன்று வட்டங்களும் சேரும் இடம்தான் நீங்கள் இருக்கும் இடம். நீங்கள் தி.நகரில், பனகல் பார்க்கில் இருக்கிறீர்கள்.
( சென்னை மேப் உதவி : http://www.mapsofindia.com/ )
ஆக நீங்கள் வைத்துள்ள GPS சாதனம் இடத்தை கண்டுபிடிக்க அதற்கு இரண்டு தகவல்கள் தேவை படுகிறது
1. தன் தலைக்கு மேல் குறைந்த பட்சம் மூன்று செயற்கைகோள்கள்
2. சாதனத்திற்கும் செயற்கைகோள்களுக்கும் உள்ள தூரம்.
இந்த இரண்டு தகவல்களுமே செயற்கைகோள்களிலிருந்து வரும் ரேடியோ அலைகளை அலசி கண்டுபிடிக்கிறது. ரேடியோ அலைகள் ஒளியின் வேகத்தில் செல்ல கூடியவை (ஒரு வினாடிக்கு 186,000 மையில்கள் செல்லகூடியவை). செயற்கைகோள்கள் Pseudo Random Number என்பதை அனுப்பிக்கொண்டே இருக்கும். நம் கையில் உள்ள GPS சாதனம் தனக்கு வந்து சேரும் தகவல் எவ்வளவு நேரத்தில் வந்தது என்று கணக்கிட்டு செயற்கைகோள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கணக்கிடும்.
( மேலும் விபரங்களுக்கு Googleலை நாடுங்கள் ).
சரி என் பாரிஸ் அனுபவத்திற்கு வருகிறேன்.
பாரிஸில் என் அலுவலகத்தில் எனக்கு ஒரு ஹோட்டல் புக் செய்திருந்தார்கள். அது எங்கே என்று எனக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. டாக்ஸி டிரைவரிடம் அந்த ஹோட்டல் முகவரி அச்சிடப்பட்ட காகிதத்தை கொடுத்தேன். அவருக்கும் அந்த ஹோட்டல் எங்குள்ளது என்று தெரியவில்லை.
<img src='http://img198.exs.cx/img198/7148/gpscar5ig.jpg' border='0' alt='user posted image'>
அப்போது காரின் ஸ்டீரியோ பக்கத்தில் ஒரு பட்டனை தட்டினார், ஒரு மிகச் சிறிய கீபோர்ட் வெளியே வந்தது, அதில் அந்த ஹோட்டலின் முகவரியை உள்ளிட்டார். கார் ஸ்டீரியோ மேல் இருக்கும் திரையில் ஒரு மேப் தெரிந்தது. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் சாரி உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள், எந்த வழியாக போகவேண்டும் என்று சில நொடியிகளில் வரைபடத்தில் தெரிந்தது. புறப்பிட்ட பின் இந்த வழியாக போனால் இவ்வளவு நேரம் மிச்சமாகும், இடையில் எவ்வளவு சிக்னல்கள், வேகத்தடை என்று பல விஷயங்களை சொன்னது. டிரைவரிடம் காரை நிறுத்த சொல்லி முன் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டேன். நாங்கள் போகும் வேகத்தை வைத்து, இன்னும் எவ்வளவு நேரத்தில் போகலாம் என்று கணக்கிட்டு கூறியது.
இந்திய கார்களில் இன்னும் கொஞ்ச நாட்களில் வந்துவிடும் என்று சொல்கிறார்கள். தமிழ் பேர் வைக்க சொல்லி ரோட்டில் அரசியல் கலாட்டா, கண்ணமாபேட்டை சவ ஊர்வலம் போன்றவற்றை உங்களுக்கு எச்சரிக்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.
தற்போது செல் போனில் GPS போல் ஒன்று வருவதை சிலர் கவனித்திரிபீர்கள். இதற்கு "Cell Display Information" என்று பேர். உங்கள் செல் போன் எந்த டவர் பக்கத்தில் உள்ளது என்று சொல்லு உத்தி. இந்த தகவலை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த ஏரியாவில் இருக்கிறீர்கள் என்று சொல்லும்.
போன வாரம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு S13 கம்பார்ட்மெண்டில் ஏறினேன்.என் பக்கத்தில் இருந்த பெண்
"சார் my friend is in S2, if you dont mind can you exchange the seat" என்றாள்.
ஒரு பெண்ணிடம் முடியாது என்று எப்படி சொல்வது?
"ok, with pleasure" என்று டிக்கேட்டை வாங்கிக்கொண்டு சென்றேன். அப்போது என் செல் போனில் "Chennai Central" என்று காட்டியது. S13க்கும், S2க்கும் நடுவில் முதல் வகுப்பு, AC-2Tier, AC-3Tier என்று ஏகப்பட்ட பெட்டிகள். ஒரு வழியாக S2வில் ஏறி உட்கார்ந்து செல் போனை பார்த்தேன் அதில் "Sowkarpet" என்றது. அவ்வளவு தூரம். S1னில் பெங்களூர் என்று காண்பித்தால் கூட ஆச்சிரியபடுவதிற்கில்லை.
"நன்றியுடன்
தேசிகன்
http://desikann.blogspot.com/2005/04/gps-g...ing-system.html
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

