Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 667 online users.
» 0 Member(s) | 663 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,455
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,292
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,660
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,763
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  சிறு கவிதை
Posted by: victorp - 04-13-2005, 12:15 AM - Forum: கவிதை/பாடல் - Replies (12)

கள அங்கத்தவர்களுக்கு
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஓர் சிறு கவிதை

உமையவளும் சிவனிடத்தில் சரி பாதியன்றோ!
என் இனியவளே உனக்கன்றி எனில் மீதியுண்டோ?
வரங்கொடுக்கும் முருகனுக்கும் வலம் ஒன்று இடம் ஒன்று
என் கரம் பிடிக்கும் தகுதி உனக்கன்றி எவர்க்குண்டு?

அன்புடன் விக்ரர்P

Print this item

  நீங்கள் உங்கள் விருப்பப்படி சமைத்துக்கொள்ள
Posted by: வியாசன் - 04-12-2005, 08:10 PM - Forum: சமையல் - Replies (13)

நீங்கள் உங்கள் விருப்பப்படி சமைத்துக்கொள்ள ஒரு இணையத்தின் இணைப்பு

http://www.arusuvai.com/

Print this item

  மருத்து நீர்
Posted by: நேசன் - 04-12-2005, 05:40 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (26)

ஏன் மருத்து நீர் வைத்து நீராடுகிறர்கள்,
யாராவது சொல்வீர்களா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Print this item

  யா/ உடுத்துறை மகாவித்தியாலத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற இரு ம
Posted by: iruvizhi - 04-12-2005, 01:37 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

கடந்தவாரம் வெளியாகிய ஜி.சீ.ஈ பரீட்சை முடிவுகளின் படி யா/ உடுத்துறை மகாவித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தர வகுப்பினை தொடர தகுதியினை பெற்றுள்ள இரண்டு மாணவர்கள் சுனாமி பேரலையின் சீற்றத்திற்கு உள்ளாகி உயிரிழந்துவிட்டனர். இவர்களில் வன்னியசிங்கம் நிவோஸ் என்ற மாணவன் 4ஏ. 3பி. 2சீ பெறுபேற்றையும். நாகதம்பி ராதிக என்ற மாணவி 2பி. 3சீ. 3எஸ் என்ற பெறு பேற்றையும் பெற்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பரீட்சை முடிந்த 2 நாள்களின் பின்னர் இடம்பெற்ற ஆழிப்பேரலையின் அனர்த்தம். அவர்கள் தாம் எழுதிய பரீட்சையின் முடிவுகளை அறிந்துகொள்ள முடியாத கொடூர நிலையை ஏற்படுத்திவிட்டது என சம்பந்தப்பட்ட பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.
Cry

நன்றி உதயன் நாளிதள்

Print this item

  தெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி
Posted by: KULAKADDAN - 04-12-2005, 12:54 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

தெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி

இந்த வார - 16 ஏப்ரல் 2005 தேதியிட்ட - தெஹெல்காவில் நிருபர் வி.கே.சஷிகுமார் புலிகள் பகுதியில் மூன்று வாரம் தங்கியிருந்து ஒரு நான்கு பக்க ரிப்போர்ட் எழுதியிருக்கிறார். அத்துடன் S.P.தமிழ்ச்செல்வன், தமிழ்க் கவி ஆகியோருடன் பேட்டிகள். தமிழ்க் கவி என்ற பெண் வே.பிரபாகரனின் speech writer என்று குறிப்பிடுகிறார்.

இந்த ரிப்போர்ட்டில் புது விஷயம் எதுவும் இல்லை. ஆனால் இந்திய மக்களுக்கு இது புது விஷயம். புலிகள் சார்புநிலை உள்ள ஒரு ரிப்போர்ட் இந்திய mainstream பத்திரிகையில் வருவது இதுவே முதல் தடவை.

சார்புநிலை என்று சொல்வதைக் காட்டிலும் புலிகள் பகுதியில் உள்ள இயல்புநிலையைக் காண்பித்துள்ளது என்பதுதான் சரியானதாக இருக்கும். 'தி ஹிந்து' மட்டும்தான் அவ்வப்போதாவது இலங்கை விவகாரத்தைப் பற்றி எழுதி வருகிறது. ஆனால் அது முழுவதுமாக புலி எதிர்ப்பு நிலையாகவும், இட்டுக்கட்டிய செய்திகளாகவுமே இருந்து வருகிறது.

ஆனால் சஷிகுமாரின் செய்தி விளக்கமாகச் சொல்வது இதுதான்:

<b>* புலிகள் ஏற்கெனவே ஒரு தேசியத்தை அடைந்து விட்டார்கள் - a state within a state, a nation of their own.

* புலிகளின் தேசத்தை சுனாமிக்குப் பிறகு சர்வதேச அரசுகளும் ஓரளவுக்கு அங்கீகரித்துவிட்டன. இல்லாவிட்டால் புலிகளைச் சேர்க்காமல் நிவாரணப் பணி என்றால் காசு கொடுக்க மாட்டோம் என்று பல நாடுகள் அறிவித்துள்ளன. இது புலிகளுக்கு, முக்கியமாக பிரபாகரனுக்கு, புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது.

* சுனாமி அழிவு ஏற்பட்ட 20 நிமிடங்களுக்குள்ளாக ஈழப்பகுதியின் சிவில் அரசமைப்பு புணர்வாழ்வுக்கான வேலைகளில் ஈடுபட்டது. இதிலிருந்து புலிகள் வெறும் பயங்கரவாத அமைப்பல்ல, மக்கள் நலனை முன்வைக்கும் முழுமையான அரசமைப்பு என்று புலனாகிறது (என்று தமிழ்ச்செல்வன் சொல்கிறார், அதை சஷிகுமார் ஆமோதிக்கிறார்.)

* ஈழத்தில் நடைபெறும் நீதிமன்றம். 1993-ல் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றம் இப்பொழுது முழுதானதோர் அமைப்பாக விளங்குகிறது. சிவில், கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் இந்திய நீதிமன்ற முறைப்படி நடக்கின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு இடங்களில் உயர் நீதிமன்றங்கள் உள்ளன.

* முழுமையான உள்நாட்டுக் காவல்துறை.

* குடியேறல் துறை. ஈழப்பகுதிக்குச் செல்பவர்கள் பாஸ்போர்ட் தனியாக பரிசோதிக்கப்படுகிறது. ஈழத்திலிருந்து இலங்கை அரசுப் பகுதிகளுக்குச் செல்வதும், வருவதும் கண்காணிக்கப்படுகிறது.

* ஆனாலும் பல அத்தியாவசியப் பொருள்களுக்காக கொழும்பு அரசைத்தான் ஈழ மக்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.</b>

புலிகள் இந்தியா உறவு பற்றி சிறு பத்தி வருகிறது. அதிலிருந்து நேரடி மேற்கோள்:

<i>The LTTE claims that it has witnessed a phenomenal rise in grassroots support for its cause in Tamil Nadu through the growth of caste parties.

The party leaders in Tamil Nadu, who the LTTE claims to be in contact are -- Tamil Nationalist Movement president P.Nedumaran; MDMK general secretary Vaiko; PMK leader S.Ramadoss, who has the support of the Vanniyars who form a sizeable chunk of the middle class in the state and dalit leader R.Thirumavalavan.

But the LTTE is extremely careful of the way it positions the growing political support as it does not want India to feel threatened by Tamil expansionism.</i>

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக புலிகள் இந்திய அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் இந்தப் பத்தி சொல்கிறது.

இந்த நீண்ட கட்டுரையை முடிக்கும் முன் ஆசிரியர் சொல்வது இதுதான்:

இங்குள்ள புலிகள் தலைமையிடம் பேசும்போது, அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்காகக் காத்திருக்காமல், புலிகள் தாமாகவே சுதந்தரத்தை பிரகடனம் செய்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அவர்களே ஈழத்தை அங்கீகரித்தது போலாகும். ஆனால் இந்த முடிவை எதிர்த்து புலிகள் மீது போர் தொடுத்தால், அது பிரபாகரனுக்கு வசதியாகப் போகும். பிரபாகரன் இலங்கை அரசுதான் அமைதிக்கு எதிராகப் போரை ஆரம்பித்தது என்று அவர்கள் மீது கையைக் காண்பித்து விடலாம். மேலும் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை அமைதியை ஆதரித்து அமைதி இருந்தால்தான் இலங்கை அரசுக்கு நிதியுதவி செய்வோம் என்ற கொள்கையில் இருக்கும்போது, புலிகள் மீது படையெடுப்பது இலங்கை அரசுக்கு முடியாத செயலாக இருக்கும்.

ஆக சந்திரிகா எந்த முடிவை எடுத்தாலும் அது புலிகளுக்கு வசதியாகவே இருக்கும். இலங்கையில் ஓர் அரசியல் சூறாவளி நிகழவிருக்கிறது. ஆனால் புலிகளுக்கு இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை.

http://www.tehelka.com/story_main11.asp?fi...iger_rising.asp

நன்றி
http://thoughtsintamil.blogspot.com/2005/0...og-post_12.html

Print this item

  :: இதய மாற்று சிகிச்சை ::
Posted by: Kurumpan - 04-11-2005, 09:41 PM - Forum: கவிதை/பாடல் - Replies (13)

வணக்கமுங்கோ!
என்ன... எல்லாரும் ஜோரா இருக்றீங்களா?
சரி.. சரி.. ரைம் வேஸ்ட் பண்ணாம... கவிதையை கேட்டுட்டு கருத்து எழுதுங்கோ.
கருத்து எழுதாதவங்களை... டங்ஸ்ட ஆக்கள் பின்னால கவனிப்பாங்கள்.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

http://www.yarl.com/forum/music_page.php?song_id=40

Print this item

  சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
Posted by: kuruvikal - 04-11-2005, 01:14 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (59)

<img src='http://img39.echo.cx/img39/5157/tamilnewyear3tz.jpg' border='0' alt='user posted image'>

[size=16]<b>கள உறவுகள் அனைவருக்கும் குருவிகளின் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!</b>

Print this item

  Microsoft எச்சரிக்கை
Posted by: kuruvikal - 04-11-2005, 12:41 PM - Forum: இணையம் - Replies (1)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41012000/jpg/_41012283_fakems-microsoft203.jpg' border='0' alt='user posted image'>

மின்னஞ்சல் மூலம் "Urgent Windows Update" மற்றும் "Important Windows Update" என்று தலைப்பிடப்பட்டு அனுப்பப்படும் போலியான Microsoft security update குறித்த தகவல்கள் குறித்து அவதானமாக இருக்கும்படி மைக்குராசொவ்ற் அறியத்தந்துள்ளது...!


<b>Warning over fake Windows update</b>

Users are being warned to watch out for a fake Microsoft security update.

Circulating as an e-mail the fake message points people at a bogus website that claims to host critical security updates.

But anyone downloading from the site will get a virus installed that opens a backdoor into their computer the program's creators can exploit.

Security firms and Microsoft urged users to ensure they visit legitimate sites when downloading updates

http://news.bbc.co.uk/1/hi/technology/4425165.stm

Print this item

  ஆபிஸில் ஃபிலிம் காண்பிப்பது எப்படி?
Posted by: Vaanampaadi - 04-11-2005, 01:52 AM - Forum: நகைச்சுவை - Replies (7)

ஆபிஸில் ஃபிலிம் காண்பிப்பது எப்படி?
கவர்ன்மெண்ட் ஆபிஸில் ஃபைலை பாக்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸிலும் ஃபைலை பாக்குறான்.கவர்மெண்ட் ஆபிஸில உட்கார்ந்து உட்கார்ந்து பெஞ்சை தேய்க்கிறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இ-மெயிலை தட்டி தட்டி கீ-போர்டை தேய்கிறான். கவர்ன்மெண்ட் ஆபிஸில் மக்களிடம் பணத்தை புடுங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் மானிட்டர் முன்னாடி உட்கார்ந்து தலை மயிரை புடுங்கி(க்கி)றான்(கீ போர்டை தலைகீழாக வைத்து தட்டி பார்த்தாலே தெரியும் எத்தனை தலை மயிரை புடுங்கியிருக்கிறான்னு...).கவர்ன்மெண்ட் ஆபிஸில் தூங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இண்டர்நெட் பாக்குறான். ஆக மொத்தம் கூட்டி கழிச்சி பார்த்த கவர்ன்மெண்ட் ஆபிஸூம் சாஃப்ட்வேர் ஆபிஸூம் ஒன்னு தான்.
"மச்சி, எவ்வளவு வேலை செய்யுறோங்கிறது முக்கியமில்லை, எவ்வளவு திறமையா வேலை செய்கிறோங்கிறது தான் முக்கியம்" என்று சொல்லவோ "மச்சி, எவ்வளோ வேலை செய்யுகிறோங்கிறது முக்கியமில்ல, எப்படி செய்கிறோங்கிறது தான் முக்கியம்" என்று சொல்லவோ நான் ஒன்றும் ஆபிஸ் வாழ்க்கையை பழம் தின்று கொட்டை போட்டவனில்லை. அதற்கு பதில் நான் இப்படி சொல்வேன். எப்படி :

" எவ்வளோ வேலை செஞ்சோங்கிறது முக்கியமில்ல, எவ்வளோ ஃபிலிம் காமிச்சோங்கிறது தான் முக்கியம்"

எப்படி தான் ஃபிலிம் காண்பிப்பது....

1) கையில் எப்போதுமே எதாவது டாக்குமெண்டையோ இல்லது கம்பெனி பைலையோ தூக்கிட்டு அலைவது அப்படியே நீங்கள் கம்பெனிக்கு மாஞ்சி மாஞ்சி வேலைப்பார்ப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும். வெறும் கையோடு உங்க பாஸ் ஆபிஸின் முன் நடந்து சென்றால் அவர் நீங்கள் தம் அடிக்கவோ இல்ல கேண்டீனுக்கோ போகிறார் என்று நினைத்துக் கொள்வார். தவறி அன்றைய நியூஸ் பேப்பரைக் கொண்டு அலையாதீர்கள். அப்படி அலைந்தால் நீங்கள் டாய்லெட்டை நோக்கி செல்வதாக உங்கள் பாஸ் நினைத்துக் கொள்வார்.ஆகவே டாக்குமெண்ட் அல்லது கம்பெனி லோகோ போட்ட பைல் நல்ல அபிப்ராயத்துக்கு 100% உத்திரவாதம்.

2) முகத்தை எப்போதுமே சீரியஸாக வைத்துக் கொண்டு கணனி முன் உட்கார்ந்து வலைப்பதிவோ, சி.என்.எனோ, அல்லது ஆனந்த விகடனோ, தமிழ்மணமோ படித்துக் கொண்டிருங்கள். மறந்தும் புன் சிரிப்பை கொண்டு முகத்தில் கொண்டு வந்துவிடாதீர்கள். Alt+TAB எப்போதும் உங்கள் கைவசம் இருக்கட்டும். பாஸ் வந்தால் டக்கென்று பக்கத்தில் உள்ள excel, word சாஃப்ட்வேருக்கு தாவிவிடுங்கள்.

3) உங்கள் அலுவலக மேஜையை எப்போதும் குப்பையாக வைத்திருப்பதால் நீங்கள் நிறைய வேலை பார்க்கிறீர்கள் என்ற தோரனையை ஏற்படுத்தும். பிரிண்ட் அவுட்டை எக்கசக்கமாக எடுத்து தள்ளி மேஜை நிறைய நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்

4) பாஸ் உங்களை பார்க்கும் போது எல்லாம் நீங்கள் பொறுமையற்றவராக, ஏதோ பிரச்சனையில் சிக்கி தவிப்பது போல் பாவலா காட்டுங்கள். தலையை சொரியுங்கள். உஸ் உஸ் என்று சத்தம் போடுங்கள். மெதுவான குரலில் ஏதாவது முணுமுணுங்கள். பாஸ் காதுக்கு உங்கள் குரல் எட்டுமானால் மெதுவாக 'shit' என்று அடிக்கடி கூறுங்கள். உங்கள் ப்ரோகிராமோ இல்லை உங்கள் schedule-ஓ உதைக்கிறது என்று அதற்கு பொருள்படும்.

5) எந்த காலத்திலும் பாஸ் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் நீங்கள் கிளம்பி விடாதீர்கள். இருக்கவே இருக்கு தமிழ்மணம் படிங்க... பின்னூட்டம் விடுங்க. நல்ல டைம் பாஸ். ஒரு வேளை நீங்கள் கட்டாயம் பாஸ் இருக்கும் போதே வெளியேற வேண்டுமென்றால் உங்கள் ஆபிஸ் பேக்கை(office bag) உங்கள் மேஜையிலேயே பாஸ் கண்ணில் படும்படு விட்டுவிட்டு செல்லுங்கள். அது நீங்கள் இன்னும் ஆபிஸில் இருக்கிறீர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும்.மறுநாள் பாஸ் ஆபிஸிற்கு வரும் முன் நீங்கள் வந்து விடுங்கள். இல்லையேல் குட்டு வெளிப்பட்டுவிடும்.

6) நல்ல பெரிய பெரிய கம்பியூட்டர் புத்தகங்களை உங்கள் மேஜை குப்பைகளுக்கு இடையில் திறந்து வைத்து அவ்வப்ப்போது அதில் ஏதோ தேடுவது போல பாவ்லா காட்டுங்கள். புத்தகத்தை எப்போதும் மூட வேண்டாம். நீங்கள் ப்ராஜக்ட் மேனஜராகயிருந்தால் கிளையண்ட் requirement, functional specification போன்ற தடிமனான பைலை உங்கள் முன் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். MS-project schedule உங்கள் முன் இருந்தால் மிகச் சேமம்.

7) வலைப்பதிவில் யாரோ இந்த ஃபிலிமை போட்டிருந்தார்கள். அதை தொகுக்கும் பொருட்டு இங்கே கொடுக்கிறேன். எனக்கு தெரிந்து நிறைய பேர் க்யூபிக்களில் அலங்கார கண்ணாடியை வைத்திருப்பார்கள். என் அலுவலகத்தில் ஒரு காரின் சைடு கண்ணாடியே அழகாக வைத்திருந்தார். அதன் பயன் மிக எளிது. பாஸ் மெதுவாக பூனையாக உங்கள் பின்னால் வந்து பார்க்கும் முன்னர் தூரத்திலிருந்தே அந்த கண்ணாடியில் பார்த்துவிடலாம். அதற்கேற்ப அரெஞ்மெண்ட் செய்துக் கொள்ளலாம்.

ஆயிரக்கணக்கான ஃபிலிம் காட்டும் முறைகளில் சிலவற்றை தொகுத்து உங்களுக்கு தந்திருக்கிறேன். இதை பயன்படுத்தி உங்கள் extra curricular activities -ஐ கூட்டிக் கொள்வது உங்கள் திறமை.

Print this item

  தமிழ் ஈழ வானொலி பெண் அறிவிப்பாளர் புகழாரம் -
Posted by: Vaanampaadi - 04-11-2005, 01:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

உலகப் பெண்களுக்கு முன்மாதிரி சோனியா - தமிழ் ஈழ வானொலி பெண் அறிவிப்பாளர் புகழாரம் - ராஜீவ் படுகொலையை அரசியல் ஆக்காதவர்

யாழ்ப்பாணம், ஏப். 10- ராஜீவ் படுகொலையை அரசியலாக்காத சோனியாகாந்தி உலகப் பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக தமிழ் ஈழ வானொலியில் பெண் அறிவிப்பாளர் புகழ்ந்து பேசினார்.

விடுதலைப்புலிகள் நடத்தும் தமிழ்ஈழ வானொலியில் செய்தி அறிவிப்பாளராக பணிபுரிபவர் தமிழ் கவி. இவர் ஒரு எழுத்தாளரும் கூட. இவரது எழுத்துக்கள் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. இவர் தெகல்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது„-

கடந்த 1958 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் வெறியாட்டம் ஆடிய போது எனக்கு வயது 8. எங்கள் கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் யாழ்ப்பானத்திற்கு அகதிகளாக சென்றோம். அப்போது நாங்கள் தங்கியிருந்த முகாமிற்கு பூவாயி என்ற 12 வயது பெண்ணை கொண்டு வந்தார்கள். அவள் உடலில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது. அவளை சிங்கள ராணுவத்தினர் கற்பழித்து விட்டனர் என பின்னர் என்பாட்டி என்னிடம் தெரிவித்தாள். பூவாயி நிலைமை எனக்கு வந்துவிடக்கூடாது எனக் கருதிய என் குடும்பத்தினர் என்னை பள்ளிக்கூடம் அனுப்ப மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பின்னாளில் இதை அடிப்படையாக வைத்து -இனி வானம் வெளுத்திடும் என்ற கதை எழுதினேன். அதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. எங்கள் தலைவர் என்னை நேரில் அழைத்து பரிசு வழங்கினார். பிரபாகரனுக்கு புத்தகம் படிப்பதில் நல்ல ஆர்வம் உண்டு. அவரது தாயிடமிருந்து அந்தப்பழக்கம் வந்ததாக அவர் குறிப்பிடுவார்.

கல்கி,குமுதம், ஆனந்த விகடன் போன்ற புத்தகங்களை அவர் விரும்பிப் படிப்பார். கல்கியில் 1950 ஆம் ஆண்டுகளில் தங்க சுரங்கம் என்ற சிறுவர் தொடர் கதை வந்தது. அதில் பிரபாகரன் என்ற கதாபாத்திரம் வரும். அதனை வைத்து தான் அவருக்கு பிரபாகரன் என்ற பெயரை அவரது தாயார் வைத்ததாக கூறுவார். ஈழத் தமிழர்களுக்கான தனி தாய் நாடு நிச்சயம் உருவாகும். அமெரிக்க போன்ற நாடுகளும் தற்போது இலங்கையின் வடபகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. சமீபத்தில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனும் சுனாமி நிவாரணப் பணிகளில் இலங்கை அரசை விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்ப்பட கேட்டுக்கொண்டார்.

தமிழ் ஈழத்தில் பெண்கள் நம்பிக்கை உடையவர்களாகவும் உறுதியானவர்களாகவும் உள்ளனர். யுத்தத்தில் ஆண்களை பறிகொடுத்த குடும்பங்கள் பல. இதனால் பெண்களே குடும்பத் தலைவிகளாக இருந்து குடும்பத்தை வழி நடத்தி செல்ல வேண்டிய கட்டாயம். இதனால் ஈழப் பெண்கள் நெஞ்சுரம் பெற்றவர்களாக மாறி வருகிறார்கள். எங்களது போராட்டத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இது குறித்து எமது தலைவர்கள் தற்போது அதிகம் பேசி வருகிறார்கள். இந்திராகாந்தி காலத்தில் இந்திய ராணுவம் எங்களுக்கு பயிற்சி அளித்தது. எம்.ஜி.ஆரும் எங்களுக்கு முழு உதவி செய்தார். இடையில் இந்திய அரசின் கொள்கைகள் மாறிப்போய்விட்டது. இந்தியாவின் உதவிஇன்றி இலங்கை இனப்பிரச்சனைக்கு முடிவு வராது. சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தவராக இருக்கலாம். ஆனால் அவர் சந்திரிகா , ஸ்ரீமாவோ,பெனசிர் மற்றும் கலிதா போல் அரசியலால் பாதிக்கப்பட்டவர். அவரது கணவர் மற்றும் குழந்தைகள் பிறந்த தேசத்திற்காக போராடி வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்றும் பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளார். எங்களது போராட்டத்தில் அவர் குறுக்கீடு செய்ததில்லை. அவரது கணவர் படுகொலையையும் அரசியலாக்க வில்லை. இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற அவரது கணவரின் கனவை சோனியா நனவாக்க முயல்வதை நான் பாராட்டுகிறேன். எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து காங்கிரஸ் கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருக்க அவர் பாடுபட்டு வருகிறார். உலக பெண்களுக்கு அவர் ஒரு முன் மாதிரியாக இருக்கிறார்.

இவ்வாறு கூறினார்.

தினகரன்

Print this item