| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 618 online users. » 0 Member(s) | 614 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,454
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,290
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,650
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,682
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,267
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,548
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,762
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| பிரிட்டிஷ் விமானப்படைக்கு விமானம் வாங்கிக்கொடுத்த ஈழத்தவர். |
|
Posted by: ஊமை - 05-11-2005, 12:46 PM - Forum: புலம்
- Replies (7)
|
 |
11 மே 2005 தி.தவபாலன்
இலங்கையை ஆண்ட பிரிட்டிஷ் றோயல் விமானப் படைக்கு ஈழத்தமிழன் வாங்கிக்கொடுத்த தாக்குதல் விமானம். இது உங்களுக்கு அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கலாம். அந்த விமானம் இன்றும் அரும்பொருட் காட்சியகத்தில் இருக்கிறது. விமானத்தின் பெயர் என்ன தெரியுமா? 'யாழ்ப்பாணம்" ஆங்கிலத்தில் ஜப்னா என்ற பெயரைக்கொண்டதாக அது பயன்படுத்தப்பட்டது. விமானங்களுக்கு குறியீட்டுப்பெயர்தான் அந்த விமானத்துக்கு 'துயககயெ' விமானம் வாங்கிக் கொடுக்கப்பட்டது. 1950 களுக்குப்பின்ää என்றால் அதிர்ச்சி தரும் தகவல்தான். ஆனால் இது நடந்தது 1915இல்ää முதல் உலகப்போர்க் காலத்தில்ää முதல் விமானம் ரைட் சகோதர்களால் தயாரித்து பறக்கவிடப்பட்ட 14 ஆண்டுகளில் ஈழத்தமிழன் ஒரு விமானத்தை இராணுவ தேவைக்காக வாங்கிக் கொடுக்கும் வல்லமையுடன் இருந்தான் என்பது இங்கு முக்கிய செய்தியாக உள்ளது. முதலாம் உலகப்போர் காலத்தில் தம்மைக் காத்துக் கொள்வதற்காக தமிழன் இந்த விமானத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறான். அந்த விமானம் வாங்கிக் கொடுக்கப்பட்ட கதையைப்பார்ப்பம்.
இந்த விமானத்தை வாங்கிக் கொடுத்தவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்பது உங்களுக்கு அடுத்த அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது. ஈழத்தமிழர்களின் முதல் புலப்பெயர்வு பொருளாதாரத்தை ஈட்டுவதற்கானது. அதற்கான புலப்பெயர்வு சிங்கப்பூரை உள்ளடக்கிய மலேசியாவிற்கு 1980களின் பிற்பகுதியில் நடந்தது. ஏராளமான ஈழத்தமிழர்கள் குறிப்பாக படித்தவர்களாக இலங்கையில் இருந்த யாழ்ப்பாணத்தவர்கள் பொருளாதாரத்துக்காக இந்தப்புலப் பெயர்வை மேற்கொண்டவர். 1867இல் யாழ்ப்பாணத்தமிழர்கள் மலேசியா நோக்கிய புலப்பெயர்வை மேற்கொண்டனர். மலேசியாவில் தேயிலை இறப்பர் தோட்டங்களில் மேலதிகாரிகளாக இவர்களின் பணி ஆரம்பமானது. மலாயன் பென்சனியர் என்ற பெயரில் யாழ்ப்பாணத்திலிருந்தர்களை அறியலாம். இந்த புலப்பெயர்வு காலத்தில் இலங்கையை ஆண்டது பிரிட்டிஷ் அரசு. அதனுடைய றோயல் ஆமிää றோயல்நேவிää றோயல் எயார்போர்ஸ் என்ற பெயரில்தான் இலங்கையில் படைகள் இருந்தன.
முதலாம் உலப்போர் தொடங்கிய காலத்தில் பிரிட்டிஷ் நாடுகள் மீதான தாக்குதல் அபாயம் அதிகமாக இருந்தது. அந்தவேளையில் பிரிட்டிஸின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் பிரிட்டிஷ் படைகளை பலப்படுத்தின. அப்போது மலேசியாவிலிருந்து பணக்காரர்கள் பிரிட்டிஷ்படைக்கு விமானங்களை வாங்கிக் கொடுத்த வண்ணமிருந்தனர். இதன் ஒருகட்டமாக அங்கிருந்த ஈழத்தமிழர்கள் பிரிட்டிஷ் படைகளுக்கு தம்மாலான முழு ஒத்துழைப்புகளையும் கொடுத்தனர். பிரிட்டிஷ் வான் படைக்கு மலேசியர்கள் விமானங்களை வாங்கிக் கொடுக்க தமிழருக்கும் அந்த யோசனை நல்லதாகப் பட்டது. அவுஸ்திரேலியாவிலிருந்து பிரிட்டிஷ் படைகளுக்கு 94 போர் விமானங்கள் தேவை என கோரல் விடப்பட்டபோது அதில் 53 விமானங்கள் மலேசியர்களால் வாங்கிக் கொடுக்கப்பட்டன. 7 விமானங்கள் மலேசியாவின் பணக்காரர்களான ஜோகூர் சுல்தான்ää கெதா சுல்தான் ஆகியோரால் வாங்கிக் கொடுக்கப்பட்டன. இதனைப்பார்த்த தமிழர்கள் தாமும் முயன்றனர். இது கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியின் ஆட்டம் கானக் கருதிவிட வேண்டாம்.
மலேசியாவின் யாழ்ப்பாணத் தமிழர்களின் முக்கியமானவர்களில் ஒருவரான மல்லாகத்தை சேர்ந்த எம்.சுப்பிரமணியம் என்பவர் விமானக்கொள்வனவிற்கான ஏற்பாட்டில் முன்னோடியாக செயற்படத் தொடங்கினார். இவர் நில அளவைத் திணைக்களத்தில் பணியாற்றியவர். யாழ்ப்பாணத் தமிழர்களால் தாக்குதல் விமானம் வாங்கிக் கொடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். இவரின் முயற்சிக்கு மலேசியா பினாங்கில் வாழ்ந்த மற்றொரு யாழ்ப்பாணத்தவரான பிரௌன்.எம்.சித்திரவேலு என்பவர் ஊக்கமளித்தார். இவர்களின் பிரசாரத்தால் இவர்களின் அணி பலமடையத்தொடங்கியது. ஆர்.தம்பிப்பிள்ளை டொக்டர் ஈ.ரி.மக்.இன்ரையர்ää எம்.சுப்பிரமணியம்ää டபிள்யு.எவ். விஜயரட்ணம் செல்லப்பாää வி.எம்.கனகரட்ணம்ää சுப்பிரமணியம்ää சண்முகம்ää மற்றும் பல யாழ்ப்பாணத்தமிழர்கள் 1915 யூலை 19இல் விமானக் கொள்வனவிற்காக விக்டோரியா நிறுவன மண்டபத்தில் ஒன்று திரண்டனர். அது முதல் கூட்டம். பைற்றர் பிளேன் பன்ட் என்று பெயரிடப்பட்டு நிதி திரட்ட அதில் முடிவானது. சகல யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் முழுமையாக பிரசாரம் செய்து நிதியை திரட்ட முடிவானது.
அதன்பின் பினாங்க்கில் நகர மண்டபத்தில் மண்டபம் நிறைந்த தமிழர்கள் திரள நிதி திரட்டல் கூட்டம் நடைபெற்றது. இது டொக்ரர் ஜசக் தம்பிஜயா தலைமையில் நடைபெற்றது. இதில் பிரௌன்.எம்.சித்திவேலு ஆயிரம் மலேசிய டொர்களை விமானக்கொள்வனவு நிதிக்கு வழங்கினார். தொடர்ந்து நிதி குவிந்தது. அன்று 14500 டொலர்கள் வழங்கப்பட்டது. இது பிரிட்டிஷ் போர் அலுவலகத்தில் முதல் கட்டுத்தொகையாக வழங்கப்பட்டது. மிகுதி 4800 டொலர்கள் அடுத்த கட்டமாக திரட்டப்பட்டு வழங்கப்பட்டது. அந்த நிதியில் அப்போது 2250 பிரிட்டிஷ் ஸ்டேர்லிங் பவுணில் தாக்குதல் விமானம் 1915 டிசம்பர் 22இல் கொள்வனவானது. அதற்கு துயுகுகுNயு (யாழ்ப்பாணம்) எனப் பெயரிடப்பட்டு றோயல் விமானப்படையில் இணைக்கப்பட்டது.
இந்த விமானக் கையளிப்பு தொடர்பில் பிரிட்டிஷின் கொலனிகளின் செயலாளர் அன்ட்ரு போனர் லோவிற்கு விமான அதிகாரி எப்.ஜி.ஏ.பட்லர் அனுப்பிய கடிதத்தில் யாழ்ப்பாணத் தமிழர்களின் தாய்மண் பற்றின் வெளிப்படையாக இந்த விமானக்கொள்வனவு அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழரை அடிமை கொண்ட பிரிட்டிஷ் படைகளுக்கு விமானம் வாங்கிக் கொடுத்தது சரியா என்ற வாதம் எழலாம்.... இங்கு பிரிட்டிஷை விட பலமான எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தான் இது மேற்கொள்ளப்படுகிறது. இது அன்றைய நிலைமை. இங்கு எமக்கு முக்கியமானதாக தெரிவது விமானம் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆண்டுகளில் ஒரு தாக்குதல் விமானத்தை வாங்கிக் கொடுக்கும் பலம் ஈழத்தமிழனிடம் இருந்தது என்பதை இன்று சொல்வதாகும். அன்றை விட ஈழத்தமிழனின் புலம்பெயர்பலம் மிக அதிகம். இன்று வலுவான அதே தேவை தமிழனுக்கு இருக்கிறது. மலேசியாவில் உள்ள சிங்களவர் தமிழர் விமானம் வாங்கிக் கொடுத்ததைப் பார்த்து தாமும் விமானம் வாங்க முயன்றும் தோற்றனர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பிரசுரிப்பு: நிதர்சனம் இணையம் www.nitharsanam.com
|
|
|
| விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்தவர்கள் |
|
Posted by: eelapirean - 05-10-2005, 08:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் சம்மதித்தது - வட.கிழக்கு மாகாண ஆளுனர்
ஜ மட்டக்களப்பு நிருபர் ஸ ஜ செவ்வாய்க்கிழமைää 10 மே 2005ää 22:21 ஈழம் ஸ
விடுதலைப் புலிகள் உள்நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. இந் நிலையில் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் உள்ளடங்கிய பொதுக்கட்டமைப்பை எதிர்ப்பது நியாயமானது அல்ல என வட கிழக்கு மாகாண ஆளுனர் ரிரோன் பெர்னான்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ஜே.வி.பி. ஆயுதம் தரித்த அமைப்பாக செயல்பட்டு தற்போது ஜனாநாயக வழிக்கு வந்துள்ளதை சுட்டிக் காட்டும் அவர்ää
இதனை ஜே.வி.பி. யினர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்று தான் நம்பவதாகவும் கூறுகின்றார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்
விடுதலைப் புலிகளை பிரதான ஜனநாயக வழிக்கு கொண்டு வர ஜே.வி.பி தலைமை வகிக்க வேண்டும். ஒரு காலத்தில் ஜே.வி.பி. ஆயுதம் தரித்த அமைப்பாக செயல்பட்டவர்கள். இன்று அந்த நிலை மாறியுள்ளது. இப்படியிருக்கும் பொழுது ஜே.வி.பி.யினர் இவ் விடயத்தை மிகவும் முக்கிய விடயமாக கருதி செயல்பட வேண்டும்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரை முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் அரசாங்க நிவாரணப் பணிகளுக்கு எவ்வகையிலும் அவர்கள் தடையாக இருந்ததில்லை.
இந் நிலையில் இந்த பணிகளுக்கு அவர்களும் உள்ளடக்கப்பட்டால் அது மிகவும் நல்லதாக இருக்கும்
தற்போது சமாதானப் பேச்சுவார்ததை இடை நிறுத்தப்பட்டிருந்தாலும் அந்த பேச்சுவார்ததையுடன் தொடர்புடைய மறு தரப்பு விடுதலைப் புலிகள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஒரு பிரதேசத்தில் ஒரு பிரிவினருக்கு ஏதாவது அதிகாரம் இருக்குமானால்அந்த பிரதேசத்தில் எந்தவொரு காரியத்தையும் செய்வது மிகவும் இலகுவானது. மக்களைப் பொறுத்த வரை அரசாங்க அதிகார்ததை விட அந்த பிரிவினரிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர் பார்க்கின்றார்கள்.
விடுதலைப புலிகள் ஆயுதம் தரித்தாலும் அவரிகளிடமும் பலம் இருக்கின்றது. இதன் காரணமாகவே பேச்சுவாரததைக்கு அரசாங்கம் முன் வந்தது.
அவர்கள் தற்போது அரசாங்கத்துடன் இனைந்து செயல்பட முன் வந்துள்ள சந்தரப்பததை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் .இது நாட்டிற்கு நன்மையை தரக் கூடியதாக இருக்கும்.
உத்தேச பொதுக் கட்டமைப்பானது தனி நாட்டுக்குரிய அத்திவாரம் என ஜே.வி.பி. போன்ற கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.
இப்படியான அச்சம் புதியதொன்றல்ல. ஏற்கனவே போர் நிறுத்த உடன் படிக்கை கைச்சாத்திட்ட போது கூட இப்படியான அச்சம் நிலவியது. இது தேவையற்ற அச்சமாகும். இப்படியான அச்சங்களும் சந்தேகங்களும் நிலவினால் பிரச்சினைக்கு தீர்வென்பது கிடைக்கப் போவதில்லை.
விடுதலைப் புலிகள் தங்களுக்கு தனி நாடு தேவை எனக் கருதினால் போர் நிறுத்த உடன் படிக்கையிலோ அல்து உத்தேசக் கட்டமைப்பிலோ ஆர்வம் காட்ட வேண்டிய தேவை இல்லை. 'எங்கள் வழியை நாங்கள் பார்க்கின்றோம். உங்கள் உதவி எங்களுக்கு தேவை இல்லை' என்றிருப்பார்கள்.
இந் நாடு சிங்கள பௌத்த மக்களுக்கு மாத்திரம் சொந்தமானது என நினைப்பது தான் பிரச்சினைகளுக்கு மூல காரணம். இது நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சொந்தமானது என்பதை உணர்ந்து சகல அதிகாரங்களையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
புதினம்
|
|
|
| அன்பின் அடையாளம்...! |
|
Posted by: kuruvikal - 05-10-2005, 12:32 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (21)
|
 |
<img src='http://img69.echo.cx/img69/8735/12throsesmall5ab.jpg' border='0' alt='user posted image'>
<b>அன்புக்கு
அடையாளம் தேடினேன்
ஆண்டவனை
உதாரணம் தந்தது உலகம்
ஆலயத்தில்
சிலையாய் ஆண்டவன்
அவனிடத்தில்
அன்பு எப்படி...??!
தேடித்தான்
பார்த்தேன் உறுத்தல்கள் மிச்சமாக
முடிவில்லா
தேடல்கள் தொடர்ந்தது
முடிவங்க
எட்டாது தொடர்ந்தது போராட்டம்..!
கடைசியில்
உண்மையாய் உன்னைக் கண்டேன்
அன்பின்
உருவமாய் உணர்வதில்
இன்று...........
தெளிவாய்
அடித்துச் சொல்கிறேன்
அன்புக்கு
அடையாளம் தந்தது நீயே...!
அந்த நீ யார்
எப்படி
குழந்தையாய் எனக்குள்
நானறியா
என் அன்பை
எனக்கே
அடையாளம் காட்டவா..?!
தலையாட்டியாய்
வந்தும் அமைதியாய்
போராட்டம் தணித்தவளே
நீயே
என்னன்பு... கடவுள்...!</b>
|
|
|
| தூக்கம் [ஹைக்கூ....] |
|
Posted by: sWEEtmICHe - 05-10-2005, 04:59 AM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>தூக்கம் [ஹைக்கூ.... ]
<b>தூக்கம் </b>
பல பூக்கள் உதிர்கின்றது
வாழ்வின் எல்லை மூடுகின்றது
பார்த்தது நீ அல்ல
<b>இது சுவிற்மிச்சி எழுதிய ஹைக்கூ....</b> :wink: </span>
|
|
|
|