| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 507 online users. » 0 Member(s) | 504 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,442
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,265
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,530
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,058
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| வரம் ஒன்று தா..! |
|
Posted by: kuruvikal - 06-12-2005, 03:04 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (15)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/flower1.jpg' border='0' alt='user posted image'>
<b>வசந்தத்தின் பரிசாய்
வசந்தம் வந்தாய்
வசமாய் வந்தாய்
வரமாய் வந்தாய்
வடிவாய் வந்தாய்
வகையாய் வந்தாய்
வதையாய் வந்தாய்
வம்பாய் வந்தாய்
வலமும் வந்தாய்
வண்ணமாயும் வந்தாய்
வஞ்சியா அன்பாய் வந்தாய்
வடிவிடு தெளிவாய் வந்தாய்
வராது வாட்டம் தந்தாய்
வந்து செழிப்பும் தந்தாய்
வதனமாய் அகமும் வந்தாய்
வலுவாய் அமர்ந்தும் கொண்டாய்
வரவாய் மலராய் வந்தாய்
வசந்தம் வாழ்வில் தந்தாய்
வருத்தமும் தந்தாய்
வகையாய் காதலும் தந்தாய்
வன்மையாய் வந்தாய்
வலியும் தந்தாய்
வருடவும் செய்தாய்
வதைக்கவும் செய்தாய்
வன்பும் தந்தாய்
வனப்பும் தந்தாய்
வந்தவை வரவாய் நிற்க
வஞ்சியே உன்னிடம்
வரைவிலா அன்பை வேண்டி
வரம் ஒன்று இறைஞ்சி
வணங்குகிறேன்
வந்திவன் நேசம் தங்கி - நீடூழி வாழ
வரம் ஒன்று தா...!</b>
|
|
|
| பிடிக்காத நாடு எது |
|
Posted by: sayanthan - 06-12-2005, 02:07 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (47)
|
 |
இது ஒரு பொழுதுபோக்கு பதிவு. இதில நீங்கள் எல்லாம் வந்து உங்களுக்கு பிடிக்காத நாடு / நாடுகள் எது / எவை என்று சொல்லிட்டு போகலாம். கட்டாயம் காரணம் வேணும் என்று இல்லை. விரும்பினால் சொல்லலாம்.
அதுக்காக எனக்கு லண்டன் பிடிக்காது ஏனென்றால் என்ரை ஜென்ம விரோதி அங்கை தான் இருக்கிறான் என்று சொல்லக் கூடாது.
இப்ப நான் சொல்லுறன். எனக்கு பிடிக்காத நாடு லண்டன்.
|
|
|
| 30 ஆம் திகதிக்குள் கையெழுத்திடா விட்டால் இராஜினாமா: ஜனாதிபதி |
|
Posted by: hamson - 06-12-2005, 01:31 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (2)
|
 |
உத்தேசப் பொதுக்கட்டமைப்பில் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கைச்சாத்திட முடியாது போனால் ஜனாதிபதிப் பதவியை இராஜினாமா செய்வதற்கு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சுமார் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னரே ஜனாதிபதி இந்தத் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவின் நலனை கருத்திற்கொண்டுதான் இந்த பொதுக்கட்டமைப்பில் கைச்சாத்திட தீர்மானித்ததாக ஜனாதிபதி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியுள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் தன்னால் இந்த பொதுக்கட்டமைப்பு தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது போனால் தனக்கு இந்த காரியத்தை ஆற்றுவதற்கு முட்டுக்கட்டைப் போட்டவர்கள் யார் யாரென பெயர் விபரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் விளக்கத்தைக் கேட்டபின்னர் கருத்துத் தெரிவித்த நிதியமைச்சர் சரத் அமுனுகமஇ இந்தப் பிரச்சனைத் தொடர்பாக ஜனாதிபதி தனித்து தீர்மானம் எடுக்கக் கூடாதென்றும் ஜனாதிபதியா முக்கியமா அல்லது கட்சியா என்பது பற்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையை கூட்டி முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு ஜனாதிபதியும் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த ஏனைய அமைச்சர்களும் இணக்ககம் தெரிவித்துள்ளனர்.
ஹம்சன்
|
|
|
| மரபுகளை மீறும் மரபுக்குள் நின்று...!! |
|
Posted by: Marapu - 06-12-2005, 03:10 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
அன்பே!
எனது காதல்
நீயூம் புரிந்து கொள்ளாமல்
எழுதிய நானும் விளக்கமுடியாத
புதுக் கவிதையாக போய் விடுமோ என்று
அச்சம் தரும் வகையில் நிகழ்தகவு அதிகரித்து செல்கிறது.
மலரே!
எனக்குள் உன்னைத் தேடவும்
உனக்குள் என்னைத் தேடவும்
புரியும் படி ஒரு கவிதை செய்வோம்
மரபுகளை மீறும் மரபுக்குள் நின்று...!!!
|
|
|
| சிவராம் படுகொலை தொடர்பாக புளொட்டின் 2 முக்கிய உறுப்பினர்கள் |
|
Posted by: narathar - 06-11-2005, 12:10 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிவராம் படுகொலை தொடர்பாக புளொட்டின் 2 முக்கிய உறுப்பினர்கள் கொழும்பில் கைது
பிரபல ஊடகவியலாளர் ரி. சிவராமின் படுகொலை தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (புளொட்) சேர்ந்த இரு முக்கிய உறுப்பினர்கள் கொழும்பு குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ள அதேநேரம், இந்தக் கொலை தொடர்பாக புளொட் தலைவர் த. சித்தார்த்தனை விசாரணைக்குட்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இரவு கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து இனந்தெரியாத குழுவினால் கடத்தப்பட்ட சிவராம் பின்னர் பாராளுமன்றத்திற்கு அருகே, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது கொலையுடன் புளொட்டுக்கு தொடர்பிருப்பதாகக் கூறும் பொலிஸார், இது தொடர்பாக சித்தார்த்தனின் செயலாளரும் புளொட்டின் முக்கிய உறுப்பினருமான பீற்றரையும் (அ. சிறீஸ்கந்தராஜா) மற்றுமொருவரையும் கடந்த வாரம் கைதுசெய்து தீவிர விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.
சிவராமைப் புளொட்டே கொலை செய்ததாகவும் இந்தக் கொலைக்கான நோக்கம் மற்றும் வேறு விடயங்கள் குறித்து சித்தார்த்தனை விசாரணைக்குட்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இதேநேரம், இந்தக் கொலை தொடர்பாக சித்தார்த்தனின் பிரத்தியேக செயலாளர் `ஆர்.ஆர்.' என்பவரை தாங்கள் தேடி வருவதாகவும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் புளொட் தலைமைப்பீடத்திடம் வற்புறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலையுடன் கருணா குழுவிற்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதால் சக்திமிக்க தரப்பொன்றின் ஆதரவுடன் கருணா குழு, ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.) மற்றும் புளொட் அமைப்புகள் இணைந்து இதனை மேற்கொண்டிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.
இதேவேளை, இந்தக் கொலையுடன், அமைச்சர் ஒருவர் தலைமையிலான கட்சியொன்றுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கடந்த வாரம் பொலிஸார் கூறியிருந்தனர்.
புளொட் அமைப்பின் முன்னாள் நீண்டகால உறுப்பினரான சிவராம் அந்த அமைப்பின் அரசியல் பிரிவின் செயலாளராகவுமிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி தினக்குரல்
இதுதான் இந்தியா முன்வைக்கும் பல்னிலைத்தன்மை கூட்டின் செயல் வடிவம்
|
|
|
| கனடிய செய்திகள் |
|
Posted by: Mathan - 06-11-2005, 10:33 AM - Forum: புலம்
- Replies (66)
|
 |
கனடா-வெளிவிவகார கொள்கைகள்-வந்தேறுகுடிகள்
இந்த பெரும் கனடா தேசத்தில் சுமார் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கின்றனர். 15 ,20 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலும் அகதிகளாக வந்த ஈழத்தவர்கள் தம்மோடு கொண்டு வந்தது பணமோ பொருளோ அல்ல. தமது கல்வி, விடாமுயற்சி,கடும் உழைப்பு போன்றனவற்றையே. இன்று இந்த கனேடிய மண்ணில் சீனர்களுக்கு அடுத்த படியாக எல்லா விதத்திலும் குறிப்பிடும் விதமாக வளர்ந்திருக்கின்றனர் தமிழர்கள்.
கிட்டத்தட்ட 20 பத்திரிகைகள்(இந்த தமிழ் பத்திரிகைகள் பற்றி பின்னர் எழுதுகிறேன்.), 6 தமிழ் வானொலிகள், 4 தமிழ்தொலைக்காட்சிகள்.,,கிட்டத்தட்ட15 தமிழ் கோவில்கள்,2000 வணிக நிறுவனங்கள் மற்றும் சுமார் 5000 பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்,அரச அதிகாரிகள்,வைத்தியர்கள்,உள்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தும் வலிமை, இப்படி தமிழர்கள் தமது இருப்பை இந்த புலம்பெயர்ந்த மண்ணில் நிரூபித்து இருக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் ரொரன்ரோஸ்ரார் பத்திரிகையில் ஒரு பத்தி எழுத்தாளர் புதிய குடிவரவாளர்களால் கனடாவுக்கு ஏற்படும் நன்மை தீமை பற்றி எழுதிய கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.சீனர்களும் இந்த சிறீலங்கன் தமிழர்களும் கனடாவின் வெளிவிவகார கொள்கைகளில் (சீனா,இலங்கை விடையங்களில்) செல்வாக்கு செலுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று.
அப்போது தான் எனக்கு ஒன்று ஞாபகத்தில் வந்தது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒரு முறை சொல்லியிருந்தார்."தமிழர்கள் சிறுபான்மையினர்தான்.ஆனால் உலகிலேயே சக்தி வாய்ந்த சிறுபான்மையினர் இந்த தமிழர்கள் தான்" என்று. அப்போது எனக்கு புரியவில்லை ஜெயவர்தனா ஏன் இப்படி சொல்லியிருந்தார் என்று. ஆனால் இப்போதைய உலக நடப்புக்களைக் கொண்டு என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது, சிறுபான்மை தமிழர்களைக் கண்டு ஏன் ஜெயவர்தனா அப்படி பயந்தார் என்று.
எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது.
நன்றி - கரிகாலன்
|
|
|
| அண்ணன்மார் கனவு, அது நானாய்.. |
|
Posted by: தூயா - 06-11-2005, 09:00 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (40)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>அண்ணன்மார் கனவு,
அது நானாய்..</b>
தூயா</span>
[size=15]
முறத்தால் புலியை விரட்டிய தமிழ் பெண்ணில் வீரம் பற்றி, திருவிழாவில் நாடகம் போட்டு இருந்த்தார்கள். ஊர் மக்கள் அனைவரின் கவனங்களும் நாடகத்தில் இருந்த போது, என் மனது மட்டும் ஒரு இடத்தில் நிலை கொள்ளாது வாட்டியது.
இது இன்று புலி நாடகத்தை பார்த்து வந்ததல்ல, எப்பொழுதெல்லாம் புலத்தில் இருந்து தாயகத்திற்கு வருகிறேனோ, அப்பொழுதெல்லாம் வந்து ஆட்டி படைக்கும் நோய் இது.
சிறு வயதில் சுதந்திரமாய் கோவில் விளையாடும் என் வயது சிறுவர்களில் ஆரம்பித்து, இன்று கோவிலுக்கு பட்டுப்பாவாடை சரசரக்க வரும் அவர்களை பற்றியே என் எண்ணம் எல்லாம். என் காது படவே எத்தனை தரம் கூறி இருப்பார்கள். நான் வெளிநாட்டுகாரியாம். அவர்களுக்கு தான் ஊரில் அதிக உரிமை இருக்காம்.
அது எப்படி? இதே ஊரில் தானே நானும் பிறந்தேன். ஈழப்போராட்டத்தில் எங்கள் குடும்பத்தில் பங்களிப்பு இல்லாமாலா? எனை தூக்கி வளர்த்த என் மாமக்கள், அண்ணண்கள் மாவீரராகிய நேரங்கள். புலத்தில் இருந்து வந்து பார்த்தால் அப்பொழுதும் பபா என்று அழைப்பது போல் இருக்க நான் அழ, அண்ணாக்கள் எனை அணைக்க. சரி அதை விட்டாலும், புலத்தில் இருந்தால் எனக்கு உரிமை இல்லையா? நான் தமிழ் பெண் இல்லையா? ஈழத்தின் குழந்த்தை இல்லையா? இப்ப்படி எல்லம் சிறுவயதில் நினைப்பதுண்டு.
அண்ணண்களிடம் சொல்லி அழுத போது அவர்கள் சொன்ன பதில் "எங்கட பபா நிறைய படிச்சு, ஊருக்கு வந்த்து ஈழத்துக்கு சேவை செய்ய வேணும். அப்ப தான் அண்ணாக்களுக்கு சந்தோசம்".
நானும் இங்கு இருந்திருந்தால்...நினைவுகளே தேனாய் இனித்தது. அதற்க்கு காரணம் இல்லாமாலா?
சிறு வயதில் புலத்திற்கு போகலாம் என அப்பா சொன்ன போது, சந்தோசமாக தான் இருந்தது. அங்கு போன பின்னர் தான் புலத்தின் அருமை. :நிற்க: எதற்கு தேவையில்லாமல் ஒரு நாட்டில் பழி போட வேண்டும்.
எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என அம்மாவிடம் அழாதா நாட்கள் போன புதிதில் இல்லை என்றே கூறலாம்.
தாயகத்தில் அப்பா, அம்மா என இரு குடும்பங்களிற்கும் ஒரே ஒரு பெண்ணாய் பிறந்தது. அண்ணாக்களில் கைகளிலே த்வழ்ந்தவள் நான். கதைகளில் வரும் இளவரசி கூட என் அளவுக்கு வாழ்ந்திருப்பாளா என சந்தேகம் தான்.
அப்படி இருந்தா என்னை தனியே கொண்டு வந்து, என்னை கொடுமை செய்கிறார்கள் என தான் சிறு வயதில் நினைத்து இருந்தேன். அந்த அளவிற்கு என் பிறந்த மண்ணிலும், என் அண்ணன்களுடனும் அன்பை வைத்து இருந்தேன்.
காலப்போக்கில் கல்வி பாடம் படிப்பு என இவற்றில் இருந்து கொஞ்சம் விடு பட்ட போதும், தாயகத்திற்கு போகும் போதெல்லாம் என் வயதை ஒத்தவர்களுக்கு தாயகத்தில் கிடைக்கும் சுதந்திரம் எனக்கு புலத்தில் இல்லை என்றே தோன்றும்.
இதோ பல்கலைக்கழகமும் முடித்தாயிற்று, மேலும் படிக்கலாம் என முடிவு செய்த நேரத்தில் தான் ஊரில் தாத்தாவுக்கு உடல் சரியில்லை என தகவல்.
போட்டது போட்டபடி ஓடி வந்தால், 2 நாட்களில் தாத்தாவின் உடல் நலம் வியக்க தக்க வகையில் முன்னேற்றம்.
"பேத்தியை கண்டது தாத்தாவுக்கு சந்தோசத்திலே எல்லாம் சரியாகிவிட்டது" என அனைவரும் கூறும் போது மனதிற்குள் சந்தோசம் ஊடுறுவதை தவிர்க்க முடியவில்லை. பெருமையாக கூட இருந்தது.
வந்தது வந்தது தானே, கோவில் திருவிழாவை முடித்து போகலாம் என தாத்தா கூறியதின் பலன் தான் கோவில் திருவிழாவின்ல் இன்று நான்.
கண்களோ தமிழ் குறத்தியை பார்க்க, மனம் ஒரு உலகவுலா போய்வரும் போது பக்கத்தில் சில பெண்களின் பேச்சால் கவரப்பட்டு கவனத்தை அவர்கள் பேச்சில் திருப்பினேன்.
என்ன தான் சொல்கிறார்கள் என பார்க்கலாமே;
"என்னத்தை அக்கா சொல்லுறது. பெடியன் வீட்டில 50 பவுண் எல்லோ கேட்கினம். அம்மளாச்சி ஒரு வழி காட்டமாட்டாளா என்று தான் விரதம் வேண்டுதல் எல்லாம்" என கடவுளை பண்டை மாற்று முறைக்கு அழைக்கும் ஒருத்தி.
"என்ன ராதா சொல்லுறாய், உன்ட பெட்டைக்கு தானே வீடு, காணி என்று இருக்கு. பிறகென்ன 50 பவுண் கதை" என கூறி தன் 3 குமர்களின் மேல் பார்வையை செலுத்தினார்.
"பெடியன் லண்டனாம். வீடும் காணியும் அவர்களுக்கு இங்க எதுக்காம். லண்டனில தான் வீடு வேணுமாம். சரி அக்கா உந்த மனுசன் கோப்பிடுறாப்போல இருக்கு வாறன் " என கூறி அவர் நடந்த போது... என்னையும் மீறி என் தலை உயர்ந்தது.
தனியே யாரும் இல்லா நாட்டில் 18 வருட வாழ்க்கை. உறவுகளை பிரிந்து ஏங்கிய ஏக்கங்கள். தாதாவின் தவிப்பு அனைத்துக்கும் விடை இன்று கிடைத்தது போல் ஒரு திருப்ப்தி.
இவர்கள் கூறிய பெண்களை போல் இல்லாது என்னால் என்னை பார்த்துக் கொள்ள முடியும். அது மட்டுமா நாளை நான் படித்த படிப்பின் மூலம் தாயகத்திற்கு எத்தனையோ சேவைகள் செய்யலாமே.
புலத்தில் வளர்ந்தால் என்ன? பிறந்தால் என்ன? நானும் தமிழ் தாயின் குழந்தை தான்.
இதை தானே என் அண்ணண்களும் எனக்காக வேண்டினார்கள். அவர்கள் கனவை நனவாக்கும் நேரம், கூட இருந்து பார்க்க அவர்கள் இல்லை. ஆனாலும் என்ன இப்பொழுதும் "பபா" என அவர்கள் எனை அழைப்பது போல் கேட்கிறதே. இதோ மீண்டும் 18 வருடங்களின் பின் மீண்டும் என் அண்ணண்களின் இளவரசியாய்...
முற்றும்.
முதன் முதலில் கதை எனும் பெயரில் ஏதோ ஒன்றை எழுதி இருக்கிறேன். யாழ் வந்த பின்னர் தான் உங்கள் அனைவரையும் பார்த்த பின்னர் நானும் எழுதினால் என்ன என நினைத்தேன். ஆகவே உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
ஆர்வம் இருந்த போதும், என் தமிழ் மேல் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். எனக்கு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் தந்த சியாம் அண்ணாவிற்கு இந்த சிறு கதையை சமர்ப்பிக்கிறேன்.
தவறுகள், பிழைகள் இருப்பின் பெரிய மனது பண்ணி மன்னிக்கவும். நன்றி.
தூயா
|
|
|
| போராட்டத்தில் இணைவோம்-எம்.சி. அகமட் |
|
Posted by: hari - 06-11-2005, 06:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>தம்பி பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செல்லத் தயாராகவுள்ளோம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி. அகமட் </b>
தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களையும், தமிழ் மக்களையும் சுனாமி ஏற்படுத்திய பாதிப்பிற்கு அவர்களின் அபிவிருத்தியை பேரினவாத அரசியல்வாதிகள் முன் எடுக்கவில்லை. இந்நிலையில் முஸ்லிம் மக்களுக்கும் அபிவிருத்தியிலும், நலன்களிலும், தமிழீழ விடுதலைப் புலிகளே அக்கறை செலுத்தினர் என இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி. அகமட் தெரிவித்தார்.
பட்டிருப்புக் கோட்ட அரசியல் பணிமனையில் கடந்த வியாழக்கிழமை முஸ்லிம் பிரமுகர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பட்டிருப்புக் கோட்ட அரசியல் பொறுப்பாளர் செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அகமட் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்:-
முஸ்லிம் காங்கிரசோ மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளோ இழந்த நிலங்களை பெற்றுத்தரவில்லை.
ஜே.வி.பி.யும் சிங்கள பௌத்த, பேரினவாதிகளும், புத்தர் சிலைகளை நிறுவி பௌத்த நாடாக மாற்றும் முயற்சியிலீடுபட்டுள்ளனர். உல்லையிலும், பொத்துவில்லிலும், திருமலையிலும் வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலைகளே உதாரணமாக அமைகின்றன. இதை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்கள் தான் முஸ்லிம் காங்கிரசும், ஆட்சியிலிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும். இப்படியான பச்சோந்திகள் இஸ்லாமியத் தலைவர்களாக இருப்பது வெட்கக்கேடானது.
இனியும் வடகிழக்கு முஸ்லிம் பிரதிநிதிகளை நம்பத்தயாரில்லை. ஆகவேதான் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்த போராட்டத்தில் தமிழீழத்தை மீட்டு எடுக்கலாம். இதய சுத்தியுமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை நம்புங்கள். துலாம்பரமாகக் காண்கின்றோம். தம்பி பிரபாகரனுடைய போராட்டத்தை முன் எடுத்துச் செல்வதற்கு தயாராக உள்ளோம்.
கண்டியிலிருந்தும் பேருவளையிலிருந்தும் உருவாகும் தலைமைப்பீடம் மாறவேண்டும். வடக்கு கிழக்கிலிருந்து தலைமைத்துவம் உருவாக வேண்டும். அந்தந்த தலைமைத்துவம் தேசியத் தலைவர் பிரபாகரனோடு இணைந்து முஸ்லிம் உரிமைகளை வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.
தேசியத்தலைவரின் போராட்டம் வட - கிழக்கு தமிழர்களுக்கு மட்டுமின்றி முஸ்லிம்களுக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தங்கள் பணிகளை செய்வதற்கு உறவுகளைப் பலப்படுத்தி ஒன்றிணைவோம் எனக்கூறினார்.
|
|
|
|