| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 430 online users. » 0 Member(s) | 427 Guest(s) Baidu, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,441
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,529
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,758
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| சின்ன உதவி |
|
Posted by: தூயா - 06-27-2005, 12:19 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (14)
|
 |
எந்த ஒரு தமிழ் எழுத்தாக இருந்தாலும், அதை நாங்கள் வேண்டிய தமிழ் எழுத்துக்கு மாற்றுவதற்கு ஒரு இணையம் உண்டு. அதை மறந்துவிட்டேன். தெரிந்தவர்கள் கூற முடியுமா?
நன்றி
|
|
|
| வீட்டில் தொடங்கட்டும் தோழமை |
|
Posted by: Mathan - 06-27-2005, 10:07 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (6)
|
 |
வீட்டில் தொடங்கட்டும் தோழமை
இன்று பல குடும்பங்களில் ஒரு விநோதமான சூழ்நிலை. பெற்றோருக்கு குறிப்பாக, தகப்பன்மார்களுக்கு தாம் பெற்ற குழந்தைகளிடமே மனக்குறை. அதுவும் கல்லூரி அல்லது தொழிற்கல்வி பயில்பவர்கள் என்றால் அவர்களிடம் ஒரு மிகையான மனமுதிர்வை, எதிர்பார்த்து அதில் திருப்தி கிடைக்காத போது விளைகிற மனக்குறை. இளைய தலைமுறையினருக்கும் தம் பெற்றோரிடம் வேறு விதமான கோபம்.
அவர்கள் குறை அநேகமாக பொதுவானது - `எது ஒன்றுக்கும் தமக்குச் சுதந்திரம் இல்லை. அடக்கி ஆளப்படுகிறோம்' என்று வெறுப்பு, வயது வந்த பெண்கள் வெளி அலைச்சல்களில் நேரம் கழித்து வீடு திரும்பி, பேசாமலேயே இருக்கும் போது தேவையற்ற சந்தேகம். கோபம் எல்லாம்! `ஆம்பிளைப் பசங்க கிட்டே இப்படிக் கண்டிப்பு இல்லை. எல்லாம் எங்க கிட்ட மட்டும்தான்' என்றும் புகார்கள்.
`தலைமுறை இடைவெளி' என்ற ஒரு பொதுப் பெயரிட்டு - இதெல்லாம் அப்படித்தான் இருக்கும். இருந்தாக வேண்டும் என்பதுபோல - வசதியாக ஒரு மனப்பிரமையையும் பலர் வளர்த்துக் கொண்டு விடுகிறார்கள். சில பத்து வருடம் முன்புவரை - அப்போதும் இந்தத் தலைமுறை வேறுபாடு இருக்கத்தானே செய்தது - இப்போது போல `மனவிலகல்' அப்போது இருந்ததில்லை.
எங்கே கோளாறு? யாரைக் குறை சொல்வது? இரு மட்டத் தலைமுறைகளிலும் இன்றளவு பொது அறிவு அன்று குறைவுதான். இப்போது போல தகவல் தொடர்புச் சாதனங்களும் இல்லை. விஞ்ஞான நுட்ப விந்தைகள் வெளிப்பட்டதில்லை. ஆனால் இன்று காணக் கிடைக்காத மன அமைதி அன்று நிறையவே இருந்தது.
இன்று பல்துறை முன்னேற்றம் நம்மைப் பரவசப்படுத்துவது ஒரு பக்கம். தன் முனைப்பு, சுய முன்னேற்றம், பொது அறிவு வளர்ச்சி, உலகின் எந்த மூலையோடும் உடனடித் தொடர்பு எல்லாமே இன்று மிக அதிகம். ஒவ்வொன்றிலும் ஆரோக்கியமான போட்டி, அது ஏற்படுத்துகிற அபரிமித வேகம். அதன் விளைவாக அற்புதச் சாதனைகளும் நிறைய பக்கத்து வீடுகளில் பள்ளி - கல்லூரிகளில், அலுவலகங்களில், பஸ்- ரயிலில் சந்திப்பவர்களிடையில், எல்லாத் தரப்பார்க்கும் உள்ள நட்பு வட்டாரங்களில் - இங்கெல்லாம் புரிதல், மனித நேயம், பரிவு, அனுசரணையான உரையாடல் எல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமோ, அதில் ஒரு சிறு பகுதி கூட அவரவர் சொந்த வீடுகளில் காணக்கிடைப்பதில்லை. அதிசயம், ஆனால் இது உண்மை.
`தலைமுறை இடைவெளி' என்ற சுலபமான ஒரு தப்புக் கணக்கு எல்லோருக்கும் போடத் தெரிந்திருக்கிறது! "தகவல் பரிமாற்றம்" என்பதை இதில் தொலைத்து விடுகிறோம். வீட்டில் இருப்பவர்கள் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசுவது பெரும்பாலான இடங்களில் இல்லை. இதுவே வெளி வட்டாரங்களில் சண்டப் பிரசண்டம் தான்!
அப்பாக்கள் தன் குழந்தைகளிடமும் வயது வந்த `டீன் ஏஜ்'காரர்கள் தம் பெற்றோரிடமும் இதே அளவு கலகலப்பாக உரையாடுவது எங்கோ சில குடும்பங்களில் இருக்கலாம். பரவலாக இல்லை.
ஒரு மூன்று, நான்கு குடும்பங்கள் எனக்கு நெருக்கமாகப் பழக்கம். அங்கிருந்து என்னிடம் அடிக்கடி புகார்கள் வரும். இரு தரப்பினரும் மாறி மாறி பரஸ்பரக் குறைகள், கடைசியில் கவலைப்படும் படி ஒன்றுமே இராது. `இரு தரப்பினரிடமும் பேசுங்கள். அவர்களோடு பேசுங்கள்' என்பேன். மறுபடி புகார்கள் வரும்போது "பேசினீர்களா!"என்று கேட்டால், மழுப்பல்தான் பதில். ஏன் பேசவே தயக்கம்? `நான்' என்ற `ஈகோ' யாரையும் விடுவதில்லை.
`தலைமுறை இடைவெளி' என்பது இருக்கத்தானே செய்யும்? ஓர் அடையாளத்திற்குதானே அந்த `இடைவெளி' என்ற அடைமொழி? அதை ஏதோ பயங்கர ஆயுதம் மாதிரி பாவித்து, ஏன் பகைமை பாராட்ட வேண்டும்? ஒருவருக்கொருவர் ஒத்துப்போவது, பெரிய சாகசச் சாதனையா என்ன?! வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் `வெளியில்' எல்லோரிடமும் நெருக்கமான தோழமை, நீங்காத நட்பு, பாசமுள்ள பரிவு, அலுக்காத அரட்டை, தேடித் தேடி பேச்சு எல்லாமே உண்டு. வீட்டுக்குள் மட்டும் ஒவ்வொருவரும் நவக்கிரகம்! என்ன சாபம் இது!
பெரிய விடயமே அல்ல. இரவு சாப்பாட்டு வேளை, எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நேரம்தான். ஒன்றாகக் கூடியமர்ந்து, ஒருவருக்கொருவர் மனம் விட்டுச் சிரித்துப் பேசி அன்று யாரையெல்லாம் சந்தித்தார்கள், எங்கெல்லாம் அலைந்ததில் என்னென்ன அனுபவங்கள், அசடு வழிந்தது, ஜெயித்தது, தோற்றது- தப்பு செய்தது கூட- தாராளமாகக் கொட்டி விடலாம். யார்- எல்லாம் நாம்தானே! மன இறுக்கம், அநாவசிய சந்தேகம் ஓடியே போய்விடும். வெளியிலுள்ள அளவு உள்ளேயும் அதே தோழமை தொடரும்போது, அதுதான் சொர்க்கம்.
Thinakural
|
|
|
| வெளி நாடுகளில் நிதி சேர்க்கும் ஜேவிபி.. |
|
Posted by: selvanNL - 06-27-2005, 09:49 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (6)
|
 |
<b>வெளிநாடுகளில் கட்சி நடவடிக்கையை விஸ்தரிக்க கடைத்தொகுதிகளில் நிதி சேகரிக்கும் ஜே.வி.பி.யினர்</b>
சர்வதேச ரீதியில் தமது கட்சி நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் பொருட்டு மக்கள் விடுதலை முன்னணியினர் பிரான்ஸ் நாட்டில் பிரபல கடைத் தொகுதிகளில் தமது அரசியல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸில் தமிழ், சிங்கள மக்கள் செறிந்து வாழும் கஸி டு நோர்ட் மற்றும் லா சப்பல் ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையர்கள் சுமார் 10,000 பேர் பொருட்கள் கொள்முதல் செய்யச் செல்லும் கடைத்தொகுதிகளுக்குச் செல்லும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தமது கட்சிப் பத்திரிகையை அவர்களுக்கு வழங்குகின்றனர். அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் எமது பலத்தை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் எமது கிளைக் காரியாலயங்களில் உறுப்பினராகுங்கள் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன.
இம் மக்களுடன் லாவகமாக உரையாடும் இவர்கள் அவர்களிடம் நிதி சேகரிப்பிலும் ஈடுபடுகின்றனர். லா சப்பல் நகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று திரளும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒவ்வொரு செப்டெம்பர் மாதத்திலும் நடத்தும் விழாவில் ஜே.வி.பி.யினர் அண்மைக் காலமாக கலந்து கொள்கின்றனர்.
சிறுபான்மை சமூகத்தவர்களான தமிழர்கள் பற்றிக் கேட்கும் போது இவர்கள் இலகுவாக தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. தமிழர்களின் மேல்மட்ட மக்களே அரசியல் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர் எனக் கூறிவருகின்றனர்.
பிரபல தொழிற்சங்கமான `சிஜிரி' என்ற அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் ஒழுங்கு செய்யப்படும் மே தின நிகழ்வில் இதுவரை சுமார் 15 ஜே.வி.பி. உறுப்பினர்கள் பங்குபற்றி வந்தனர். எனினும், கடந்த முறை நிகழ்வில் 20-25 ஜே.வி.பி. உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்
நன்றி தினக்குரல்..
|
|
|
| யாழில் கண்ட காட்ச்சி |
|
Posted by: SUNDHAL - 06-27-2005, 09:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (17)
|
 |
யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் கண்ட காட்சியை அன்பர் ஒருவர் வர்ணிக்கிறார்.
ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார். அவர் வேறு யாருமல்ல, பனை உச்சியில் இருந்து கொண்டு கள் இறக்கிக் கொண்டிருந்த சீவல் தொழிலாளிதான்.
அவர்களின் உரையாடலைக் கேளுங்கள்.
`எனக்கு ஆறு போத்தல் வேண்டும் தரமுடியுமா?'
தனது கையடக்கத் தொலைபேசியில் சீவல் தொழிலாளி பதிலளிக்கிறார். `ஆறு என்றால் முடியாது. ஐந்து தரலாம் மிச்சத்துக்கு வேறு யாரையாவது பிடியுங்கள்.'
கையடக்கத் தொலைபேசிகளில் இருவரும் பேரத்தை முடித்து விட்டார்கள். அதுவும் ஒருவர் பனை உச்சியிலிருந்தே!
தகவல் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் பனை உச்சிவரை சென்றுவிட்டது!
நன்றி: தினக்குரல்
|
|
|
| நீங்கள் வாழும் நாடு |
|
Posted by: shiyam - 06-26-2005, 10:11 PM - Forum: பொழுதுபோக்கு
- No Replies
|
 |
நீங்கள் வாழும் நாடு அல்லது நீங்கள வாழும் நகரம் பற்றி அதன் சிறப்பங்சங்களுடன் புகைப்படங்களுடன் அறிய தாருங்கள் இது முதலில் தொடங்க பட்ட தலைப்புதான் யாழ் தாக்குதலில் அழிந்து விட்டது எனவே மீண்டும் தொடக்கி வைத்துள்ளேன்
|
|
|
| அதிகரித்த உடல் நிறையை எவ்வாறு தீர்மானிப்பது (Obesity) |
|
Posted by: KULAKADDAN - 06-26-2005, 02:42 PM - Forum: மருத்துவம்
- Replies (11)
|
 |
அதிகரித்த உடல் நிறை இன்று எமது மக்கள் மத்தியில் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதை எவ்வாறு அறிவது என பாருங்கள்.
<b>உடல் திணிவு சுட்டி = உடல் நிறை/ (உயரம்)^2</b>
<img src='http://img247.echo.cx/img247/560/untitled8zu.jpg' border='0' alt='user posted image'>
அதிகரித்த உடல் நிறை உடனடியாக பெரிய பிரச்சனையை கொடுக்காவிட்டாலும் காலப்போக்கில் அது பிரச்சனைக்குரியதாக மாறலாம்.
நீரிழிவு
உயர் குருதியழுத்தம் போன்றவை பிற்காலத்தில் ஏற்படலாம்
எனவெ உங்கள் உயரத்துடன் ஒப்பிட்டு உங்கள் நிறை எவ்வாறு இருப்பது விரும்பத்தக்கது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
உதாரணமாக ஒருவருடத்தில் 1000, 000 கிலோகலோரி உணவு உள்ளெடுகிறீர்கள் என வைத்தல். அதில் 1% மான சக்தி உங்கள் உடலில் சேமிக்கப்பட்டால் உங்கள் வருடந்திர நிறை அதிகரிப்பு 1.2-1.7 கிலோகிராம் ஆக இருக்கும். இதேவேகத்தில் போனால் 10 வருடத்தில் 17 கிலோகிராம் நிறைஅதிகரிப்பு உங்கள் உடல் நலனை சீர் குலைக்க போதுமானதாக இருக்கும்.
இத்தரவு உங்கள் உடல் நிறை எங்கிருக்கிறது என அறிய உதவும் என் நினைக்கிறேன்.
இதை பற்றி மேலும் தர முயற்சிக்கிறேன்.
தொடரும்.............
|
|
|
| வன்னி ரெக்கிற்கு உதவுங்கள். |
|
Posted by: narathar - 06-26-2005, 12:04 PM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
வன்னி ரெக்கிற்கு உதவுங்கள்.
ஜய் குமாரசூரியரினலும் பல புலம் பெயர்ந்த தமிழ் தொழில்னுட்பவியலாளரின் அயராத முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட வன்னி ரெக் இன்று மூன்றாவது மாணவர் தொகுதியை உள்வாங்க உள்ளது.
இவ் வாண்டிற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளிடம் இக் கோரிக்கையை ஜய் குமாரசூரியர் முன் வைத்துள்ளார்.
எமது பொருளாதரத்தை கட்டி எழுப்பவும்,எமது தேசிய நிறுவனங்களின் தொழில்னுட்ப ஆளுமயை வளர்ப்பதிலும் வன்னி ரெக்கின் வளர்ச்சி காத்திரமான பங்களிப்பைச் செய்யும்.
இது சம்பத்தமான மேலதிக தகவல்களை அறிய கீள் உள்ள தளங்களைத் திறக்கவும்.
www.ittpo.org
www.vanni.org
USD 500.00 மேல் உதவியளிப்போர் வன்னி ரெக்கின் புரவலர்குளாதிற்கு அங்கத்துவம் உடையோராகவும், USD 2,000.00 மேல் அழிப்போர் தாங்கள் விரும்பும் பெயரை உடைய புலைமைப் பரிசில் ஒன்றை அமைக்கும் சந்தர்ப்பத்தையும் பெறுவர்.
எமது நாளைய வெற்றி எமது பலத்திலேயே தங்கி உள்ளது.
எமது பலம் எமது திறனிலேயே தங்கி உள்ளது.எமது திறனையும் ,ஆளுமையையும் வளர்க்க எமது பங்களிப்பை காத்திரமான வழிகளில் வழங்கிடுவோம்.இத் தகவலை உங்கள் உறவுகளிடமும் , நண்பர்களிடமும் தெரிவியுங்கள்.
உதவ விரும்புவோர் treaurer@ittpo.org or directors@ittpo.org என்னும் மின்னச்சலுக்கு அறியத்தரவும்,சிறிய தொகையாகினும் உங்கள் உதவிக்கு நன்றி.
|
|
|
|