| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 611 online users. » 0 Member(s) | 609 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,260
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| வட இலங்கையில் மிதிவெடியகற்றல் |
|
Posted by: AJeevan - 07-16-2005, 07:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='font-size:23pt;line-height:100%'><b>வட இலங்கையில் மிதிவெடியகற்றல்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050716151410mineaction203c.jpg' border='0' alt='user posted image'>
<i>மிதிவெடி அகற்றல் வார நிகழ்வில்</i>
ஆயுத மோதல்கள் இடம்பெற்ற இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மிதிவெடிகள் மற்றும் கைவிடப்பட்டுள்ள வெடிப்பொருட்கள் என்பன 196 அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைக் குடித்திருக்கின்றன.
இவற்றால் சுமார் 1100 பேர் வரையில் தமது அவயவங்களை இழந்திருப்பதாகப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் யாழ் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
72 பேர் இங்கு இறந்துள்ளனர். 613 பேர் படுகாயமடைந்துள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் போரினால் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்குப் பெரும் தடையாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 20 லட்சம் கண்ணி வெடிகள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கலாம் என கண்ணி வெடியகற்றும் நிறுவனங்கள் மதிப்பிட்டிருக்கின்றன.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050716151359mineaction203b.jpg' border='0' alt='user posted image'>
<i>குழந்தைகளுக்கும் மிதிவெடி விழிப்புணர்வு</i>
கண்ணிவெடிகளை அகற்றும் பணியை விடுதலைப் புலிகளே தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் முதலில் ஆரம்பித்தனர்; அரச படைகள், மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய தரப்புக்கள் உள்ளிட்ட, பிரிட்டன், நோர்வே, சுவிற்சலாந்து, ஜப்பான், டென்மார்க், இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இலங்கையில் கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.
இதற்கென இந்த நாடுகள் பல மில்லியன்கள் ரூபா நிதியை இதற்கென ஒதுக்கியுள்ளன.
உயிராபத்து மிக்க இப்பணி மிகவும் கடினமானது. இயல்பிலேயே மிகவும் மெதுவானது. இவற்றை முழுமையாக அகற்றிமுடிப்பதற்கு நீண்டகாலம் எடுக்கும் என நிபுணர்கள் கருதுகின்றார்கள்.
இதன் காரணமாகவே மறுபக்கத்தில் கண்ணிவெடிகள், மிதி வெடிகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் பல நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன. இதற்கு யுனிசெவ் நிறுவனம் நிதியுதவி வழங்கி வருகின்றது.
ஐநா மன்றத்தின் ஒரு பிரிவும் கண்ணிவெடிச் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றது.
சமூக நம்பிக்கை நிதியம், விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய கிளிநொச்சியில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் <b>வெண்புறா நிறுவனம்</b> ஆகியன கடந்த வாரம் யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய வடமாகாண மாவட்டங்களில் கண்ணிவெடி விழிப்புணர்வு வாரத்தை ஏற்பாடு செய்திருந்தன.
வீதி நாடகம், பாடல் வில்லுப்பாட்டு, தாளலயம், போன்ற பல்வேறு கலைவடிவங்களின் ஊடாகவும், கண்காட்சியின் ஊடாகவும் கண்ணிவெடிகளின் ஆபத்து, அவை பற்றிய பாதுகாப்புச் செயற்பாடுகள் பற்றியும் இந்த நிறுவனங்கள் பொதுமக்களுக்கு விழிப்பூட்டி வருகின்றன.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050716151338mineaction203a.jpg' border='0' alt='user posted image'>
<i>காட்சிக்கு வைக்கப்பட்ட மிதிவெடிகள்</i>
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் மூலம் மதிவெடிகளினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இப்போது கணிசமாகக் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் யாழ் மாவட்டத்தில் இவ்வருடத்தின் 6 மாத காலப்பகுதியில் 13 பேர் கண்ணிவெடிகளினால் காயமடைந்துள்ளார்கள்.
ஒருவர் உயிரிழந்திருப்பதாக யாழ் மாவட்ட கண்ணிவெடி நடவடிக்கைக்குப் பொறுப்பான அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
கண்ணிவெடிகளை அகற்றுவதிலும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் செலுத்தப்படுகின்ற அக்கறையும் ஆர்வமும் கண்ணிவெடி, மிதிவெடியில் சிக்கி அவயவங்களை இழந்தவர்கள் பக்கம் போதிய அளவில் காட்டப்படுவதில்லை என்ற விமர்சனம் பாதிக்கப்பட்டவர்களினால் முன்வைக்கப்படுகின்றது.
செயற்கைக் கால் பொருத்தப்பட்டவர்கள் ஆகக்குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது காலை மாற்றவேண்டியிருப்பதாகவும், இதற்கான செலவுத் தொகையான 3000 ரூபாவில் அரைவாசிப் பணத்தைச் செலுத்த வேண்டும் என சில நிறுவனங்கள் கேட்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டுஇ இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பாத தம்மால் இந்தப் பணத்தைச் செலவு செய்து கால் போடக்கூடிய நிலையில் இல்லையென்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமது நிலையை மனிதாபிமான ரீதியில் கருத்தில் எடுத்து செயற்கை அவயவங்களை இலவசமாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.</span>
BBC tamil
|
|
|
| ஈ.பி.டி.பி உறுப்பினர் மாணவர்கள், பொதுமக்களால் வெளியேற்றம்! |
|
Posted by: தமிழரசன் - 07-16-2005, 11:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>இந்து மாநாட்டுக்கு சென்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் மாணவர்கள், பொதுமக்களால் வெளியேற்றம்!</b>
[சனிக்கிழமை, 16 யூலை 2005, 13:56 ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். தேசிய கல்வியற் கல்லூயில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்து மாநாட்டுக்கு ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் பாதுகாவலர்களுடன் சென்ற ஈ.பி.டி.பி அமைப்பாளர் மதனராஜா அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களால் வெளியேற்றப்பட்டார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது:-
அகில இலங்கை இந்து மாமன்றம் பொன்விழாவை முன்னிட்டு யாழ். தேசிய கல்வியற் கல்லூரியுடன் இணைந்து நடத்தும் இந்து மாநாடு நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் அழையா விருந்தாளியாக ஈ.பி.டி.பி அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதனராஜாவும் கலந்து கொள்வதற்காக வந்தார். இவருடன் பொலிசாரும் ஆயுதபாணிகளான ஈ.பி.டி.பி மெய்ப்பாதுகாவலரென சுமார் 25 இற்கும் மேற்பட்டோர் விழா மண்டபத்துக்குள் நுழைந்தனர்.
இதனையடுத்து விழாவில் கலந்து கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் ஆயுதபாணிகள் எவரும் மண்டபத்துக்குள் வரக்கூடாதென விழாவில் பங்கேற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து விழா ஏற்பாட்டாளர்கள் ஈ.பி.டி.பி அமைப்பாளர் மதனராஜாவிடம் ஆயுதம் தாங்கியோர் மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தரப்பின் இக்கோரிக்கையால் சற்று நேரம் ஈ.பி.டி.பியினர் வாக்குவாதப்பட்டனர். எனினும் ஏற்பாட்டாளர்கள் ஆயுதபாணிகளை அனைவரும் மண்டபத்திலிருந்து வெளியேறக் கோரியதையடுத்து மதனராஜாவும் அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
ஈ.பி.டி.பி அமைப்பாளர் மதனராஜாவுக்கு தாம் இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழை அனுப்பவில்லை என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
puthinam
|
|
|
| பொதுக்கட்டமைப்பிற்கு தடை!!! |
|
Posted by: தமிழரசன் - 07-16-2005, 04:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>பொதுக்கட்டமைப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!!! </b>
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்குமிடையே கைச்சாதிடப்பட்ட பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கைக்கு சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சிங்கள இனவெறி அமைப்புக்களான ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றால் பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்தநிலையில் இவ்வழக்கு பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்கள் காமினி அமரதுங்க மற்றும் ராஜா பெர்னான்டோ முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பொதுக்கட்டமைப்பிற்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீதிபதிகளால் பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றின் இறுதித் தீர்ப்புவரும்வரை இந்த தடையுத்தரவு நீடிக்குமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நிதிக்கையாள்கை, பிராந்திய குழுவின் தலைமையகம் கிளிநொச்சியில் அமைக்கப்படுவது மற்றும் திட்டங்களுக்கு பிராந்தியக்குழு ஒப்புதல் அளிப்பது தொடர்பிலேயே இதற்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
sankathi
|
|
|
| எமது பலமே எமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் |
|
Posted by: narathar - 07-15-2005, 06:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
மக்களின் நல்வாழ்வு சிங்களத்தின் பெருந்தன்மையினால் விளையப்போவதில்லை:பொட்டுஅம்மான்
இன்று எமது விடுதலைப்போராட்டம் ஒரு திருப்பம் அல்லது கேள்;வி அல்லது நாளை என்ன நடக்கும் என்ற வினாவின் நிலையில் நிற்பதை நாம் அறிவோம். நாளை நடக்கப்போவதை யாரும் அறியார். ஆனால் நாளை மட்டுமல்ல அதற்கு மறுநாளும் மறுநாளுக்கு மறு நாளும் நடக்கப் போவதை எம்மால் கூற முடியும். அது என்னவென்றால் எமது விடுதலையென்பது அல்லது மக்களின் நல்வாழ்வு என்பது சிங்களவர்களின் கருணையினாலோ சிறிலங்கா அரசின் பெருந்தன்மையினாலோ விளையப்போவதில்லை என்பது மட்டும் இன்றும் நாளையும் அதற்கு மறுநாளும் உறுதியாகக் கூறக்கூடியதாக இருக்கும்.எமது பலம், தமிழர்களின் பலம். அந்த பலமே எமக்குரிய விடுதலையை, எமது மக்களுக்குரிய நல்வாழ்வை பெற்றுத்தரும் என்பதே நாம் என்றென்றும் மனதில் வைக்க வேண்டிய எம்மனதில் கொள்ள வேண்டிய உறுதியான செய்தி.
நாளை யுத்தம் வெடிக்கலாம். அல்லது அது ஒரு வாரம் செல்லலாம். அல்லது உடனடியாகவே அதற்குரிய சூழல்கள் நிகழலாம். அரசியல்போக்குகள் எவ்வாறும் அமையலாம். இன்றைய அரசியல் சூழலை போராளிகளாகிய நீங்கள் அறியும் ஆவலில் இருப்பீர்கள். அந்த அரசியற் சூழல் ஒன்றே ஒன்றுதான் நேரடியாகக் கூறுவதாக இருந்தால் சிங்கள அரசாங்கம் போரைத் தொடங்கும் பழியை எமது தலையில் போடும் வகையிலே காரியங்களை ஆற்றி வருகிறது. சிறிலங்காப் படையினர் நேரடியாகவே
எதிரிகள் போருக்கான சூழலை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். எமது போராளிகள் மீதும் பொறுப்பாளர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தப்படுகின்றன் யுத்தம் எந்த நிலையிலும் வெடிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகிவருகின்றன. அந்த வகையிலே போராளிகளாகிய நாம் இன்று செய்ய வேண்டியது எம்மைப் பலப்படுத்தி நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிக்ககூடிய நிலையில் இருக்க வேண்டும். எம்மைப் பலப்படுத்துவதன் மூலம் எமது இயக்கத்தைப் பலப்படுத்தி எமது தேசத்தையும் பலப்படுத்துகின்றோம். எமது பலமே எமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் பலத்தைப் பெருக்கிக் கொள்வதில் காலத்தைப் பயனுள்ளதாக்குவோம் என்று கூறி அதுவே நாம் சீலனின் அன்றைய கனவை நனவாக்கும் எனவும் தெரிவித்தார்.
http://www.tamilkural.com/newtamilkural/in...d=150&Itemid=52
|
|
|
| மணபெண்கள் கவனிப்பார்களா? |
|
Posted by: SUNDHAL - 07-15-2005, 02:42 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (31)
|
 |
அண்மையில் கொழும்பில் நிகழ்ந்த சில திருமண வைபவங்களுக்குச் சென்றிருந்த அன்பர் ஒருவர், குறைபட்டுக் கொண்டு இத்தகவலைத் தெரிவித்தார்.
இரண்டொரு திருமண வைபவங்களில் மணப்பெண், தோழிகள் ஆகியோரின் உடையலங்காரத்தைப் பார்த்தபோது வேதனை தான் ஏற்பட்டது. சடங்குகள், சம்பிரதாயங்கள் யாவும் தமிழ் கலாசார முறைப்படியே நடந்தன. ஆனால், மணப்பெண், தோழிகள் ஆகியோரின் உடையலங்காரம் வேற்று இன கலாசாரப் பாணியில் இருந்தது.
சபையில் பலர் இது பற்றி முணுமுணுத்துக் கொண்டதை அவதானித்தேன்.
தமிழ் கலாசார முறைப்படி ஒப்பனை செய்ய இயலாதவரிடம் ஏன் இவர்கள் சென்று இப்படி நமக்கு ஒவ்வாத முறையில் ஒப்பனை செய்து கொள்கிறார்கள்? என்று அவர் கேட்டார்.
வருங்கால மணப்பெண்களே கவனித்துக் கொள்ளுங்கோ!
Thanks:Thinakural
|
|
|
| சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கடிதம |
|
Posted by: Vaanampaadi - 07-15-2005, 07:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கடிதம்!
[வெள்ளிக்கிழமை, 15 யூலை 2005, 12:23 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பயணம் மேற்கொள்ளும் அரசியல் போராளிகள் பாதுகாப்பு ஒழுங்கு விடயத்தில் சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.
போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடித விவரம்:
திரு ஹக்ரப் ஹோக்லண்ட்
தலைவர்,
போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு,
அன்புடையீர்,
விடயம்: சிறிலங்கா இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிகளினூடான எமது உறுப்பினர்களின் பாதுகாப்பான போக்குவரத்து
11 யூலை 2005 எனத் திகதியிட்டு இதுவிடயம் தொடர்பாக நீங்கள் சிறிலங்கா சமாதானச் செயலகத்தினது கடிதத்தினையும் இணைத்து அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் இக்கடிதம் எழுதப்படுகிறது.
சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்கள் தொடர்பான எமது நிலைப்பாட்டினை தங்களுக்கு நாம் விளக்க விரும்புவதோடு எமது போராளிகளின் பாதுகாப்பான பயண ஒழுங்குகள் தொடர்பான எமது தெளிவான நிலைப்பாட்டை நாம் மீள வலியுறுத்த விரும்புகிறோம்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு என்ற வகையில் தாங்கள் கால வரையரைகளை ஏற்றுச் செயற்படுவதில்லை என சமாதானச் செயலகப் பணிப்பாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். உண்மையாதெனில், கால வரையறைகளின் அடிப்படையில்தான் போர் நிறுத்த ஒப்பந்தமே வரையப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம். ஒப்பந்தம் கைச்சாத்திடும் நாளிலிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் வணக்கத்தலங்கள், பாடசாலைகள், மக்கள் வாழும் இடங்கள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவம் விலகி மக்களின் இயல்பு வாழ்வுக்கு வழிகோலவேண்டும் எனக்கூறும் போர் நிறுத்த ஒப்பந்தம் காலவரையறைகளின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.
இத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு இரு அதிகார மையங்களும் தத்தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்துள்ளன என்ற உண்மையின் அடிப்படையிலேயே போர்நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டது என்பதை சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளருக்கு இவ்விடத்தில் நாம் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைப்படி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசியல் பணிகளில் ஈடுபடும் ஆயுதம் தரிக்காத போராளிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கே உண்டு. இந்த யதார்த்த நிலையை நிராகரித்துச் செயற்படுவதானது போர்நிறுத்த சூழல் குழம்பிப்போவதற்கே வழிவகுக்கும்.
போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் நோர்வேத் தூதரகம் என்பவற்றின் அனுசரணையுடன் இருதரப்பினருக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில்தான் கடந்த மூன்றரை வருடங்களாக எமது போராளிகளினது பாதுகாப்பான பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இவ்வாறாக சுமூகமாக இடம்பெற்று வந்த போக்குவரத்துக்கான வழித்துணையில் சர்ச்சையைக் கிளப்பி சமாதான சூழ்நிலையைக் குழப்புவது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இருப்பையே ஆட்டங்காணச் செய்கிறது. சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவ மற்றும் புலனாய்வு அமைப்புகளும் சமாதான சூழலைக் கேள்விக்குறியாக்கி தமிழர் தேசம் மீது மீண்டும் போரைத் திணிக்கும் ஓர் உத்தியாகவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களோ என்ற சந்தேகம் எமது மனங்களில் எழுகிறது.
எமது விடுதலை அமைப்பின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டமையினால் கருணாவை அமைப்பிலிருந்து நீக்கி எமது அமைப்பின் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்திருந்தது. இவ்வாறாக, அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவரை இன்று இராணுவம் பூரண பாதுகாப்பினை வழங்கி பாதுகாத்து வைத்திருப்பதோடு அவரது பெயரில் கருணா குழுவென இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே செயற்பட்டு வருவது யாவரும் அறிந்த உண்மை.
எமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திலோ அல்லது தமிழர் தாயகப்பகுதியிலோ ஏதாவதொரு நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குழுவாக கருணா குழு இயங்கவில்லை. அவரை இராணுவமே முழுமையாகப் பயன்படுத்தி வருவதோடு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்பில்தான் அவர் இருக்கிறார் என்பது வெளிப்படையான உண்மை.
கடந்த மூன்றரை வருடங்களாகத் தொடர்ந்து வருகின்ற சமாதான சூழலை சிதைப்பதற்கான ஒரு பொறிமுறையாகவே இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திட்டமிட்ட ரீதியல் கருணா குழு என்ற பெயரில் இக்குழு உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நாம் பலமுறை ஆதாரங்களுடன் உங்களுக்குச் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தேவையேற்படும் பட்சத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக தகவல்களை நாம் உங்களுக்கு வழங்கவும் தயாராக உள்ளோம்.
வடக்குக் கிழக்கில் இயங்கி வருகின்ற ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு, இக்குழுவினர் எமது தாயகப்பிரதேசப் பகுதிகளிலிருந்து முற்றாக அகற்றப்படவேண்டும் என்பதே போர்நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8 இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்குப் பெரும் அச்சுறுத்தலாக இந்த ஆயுதக்குழுக்கள் அமைந்துவிடும் என்பதுடன் சமாதான சூழலைக் குழப்பும் நோக்கில் அவை செயற்பட்டுவிடும் என்பதையும் நோர்வே அனுசரணையாளர்களும் சிறிலங்கா அரசாங்கமும் ஏற்றுக்கொண்ட பின்னர்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சரத்து 1.8 சேர்க்கப்பட்டது. அவ்வாறிருந்தும், இன்று இப்படியானதோர் ஆயுதக்குழுவைப் படைத்தரப்பே உருவாக்கி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதோடு எமது போராளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கடந்த மூன்றரை வருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்டுவந்த சமாதான சூழலைச் சீர்குலைக்கின்ற, அதேநேரம் நடைமுறையிலுள்ள யுத்த நிறுத்த சூழலைத் குழப்புகின்ற நடவடிக்கையாகத்தான் இராணுவப் புலனாய்வுப் பிரிவினதும் படைத்தரப்பினரதும் செயற்பாட்டை நாம் கருதுகிறோம்.
கடந்த யூன் 26 ஆம் நாள் இடம்பெற்ற கண்ணிவெடித்தாக்குதல், எமது மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மீதான தாக்குதல், மட்டக்களப்பு நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சேனாதி மீதான தாக்குதல் மற்றும் கடந்த 10 ஆம் திகதி அன்று திருமலையில் இடம்பெற்ற தாக்குதல் என எமது போராளிகள் மீதான அனைத்துத் தாக்குதல்களும் சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள்தான் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட விதம், நடாத்தப்பட்ட இடம் மற்றும் ஏனைய காரணங்களை வைத்து நோக்கும்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் சிறிலங்கா படையினருமே இவ்வனைத்துத் தாக்குதல் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளமை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.
சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளரின் கடிதத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் நிலவிய போர்ச் சூழலில் இடம்பெற்ற சம்பவங்களையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு தரப்பினருக்கிடையேயும் போர் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை இரண்டு தரப்பினரும் சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டுள்ள இந்த சமாதான சூழலில் சுட்டிக்காட்டுவதும் விவாதிப்பதும் சிறந்ததல்ல என்பதோடு அது ஒப்பந்தத்திற்கு விரோதமானதோர் நடவடிக்கையாகவே நோக்கப்படுகிறது.
அவ்வாறானால், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்காப் படைத்தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் மக்கள் மீதான வன்முறைகள், சிறிலங்கா படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் என அனைத்தையுமே நாம் சுட்டிக்காட்ட வேண்டிவரும். போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை நாம் சரியாகக் கடைப்பிடித்து நடப்பதால்தான் சிறிலங்கா கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் அரசியல் பணியில் ஈடுபட்டுள்ள எமது போராளிகள் மீது சிறிலங்கா படையினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்த விதிகளின்படி, சிறிலங்கா கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதங்களின்றி அரசியல் பணிபுரியும் போராளிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு. அதேநேரம் இவ்வாறாக எமது போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் கடமையாகும். இதுபோன்றே எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் சிறிலங்கா பிரதிநிதிகளினதும் சிறிலங்கா அதிகாரிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு எமக்குண்டு.
போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு, எமது போராளிகள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதற்கு பிற மாவட்டங்களுக்குச் சென்றுவர வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டுள்ள எமது போராளிகள் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக அடிக்கடி கிளிநொச்சிக்கு வந்துசெல்ல வேண்டிய தேவையுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் கூட போராளிகளின் இவ்வாறான பயணங்கள் எமக்கேயுரிய பிரத்தியேக வழிமுறைகளினூடாக சுமூகமாக இடம்பெற்று வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவ்வாறான எமது போராளிகளின் பயணங்களை போருக்குத் தயார்படுத்துவதற்கான பயணங்கள் என்றும் வன்முறையைத்தூண்டுவதற்கான நடவடிக்கைகள் என்றும் கூறி, சிறிலங்கா தரப்பினர் தேவையற்ற மாயையைத் தோற்றுவிக்க முயல்வது வருந்தத்தக்கது.
மேற்குறிப்பிட்டது போல, மிகவும் அவசியமானதும் தேவையானதுமான எமது போராளிகளினது பாதுகாப்பான பயணங்களை உறுதிப்படுத்தும் வகையிலேயே கடந்த 30 யூன் 2005 அன்று அனுப்பிய கடிதத்தில் சில யோசனைகளை நாம் முன்வைத்திருந்தோம். எமது போராளிகளின் பூரண பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால் எமது யோசனைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். நீண்ட நாட்களாக பயணங்கள் ஒழுங்குபடுத்தப்படாத நிலையில், எமது பயணங்களை மிக அவசரமாக ஒழுங்குபடுத்த வேண்டியநிலை எமக்கு இருந்தமையினாலேயே நாம் ஓர் கால அவகாசத்தினை சிறிலங்கா தரப்பினருக்கு வழங்கியிருந்தோம். மாதத்தில் ஒருதடவைதான் பயணம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும், பயணத்தின் போது குறிப்பிட்ட தொகைப் போராளிகள் மாத்திரமே பயணம் செய்யவேண்டும் என்றும் சிறிலங்கா தரப்பினர் கட்டுப்பாடுகளைப் போடுவதை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். இது விடயத்தில் சிறிலங்கா தரப்பினரின் யோசனையானது ஏதோ ஒருவகையில் எமது போராளிகளின் பாதுகாப்பான பயணம் முடக்கப்படுவதற்கே வழிவகுக்கும் ஒன்றாகவே எமக்குத் தெரிகிறது.
ஆகையால், நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் தீர ஆராய்ந்து எமது போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாம் கடந்த யூலை 30, 2005 அன்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்ட யோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு கூடிய விரைவில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று நாம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறாக நடவடிக்கைகளை எடுப்பதில் மேலும் கால தாமதங்கள் ஏற்படுமானால் நாம் ஏற்கனவே கூறியதைப் போன்று எமக்கேயுரிய பாதுகாப்பான பயண வழிமுறைகளைக் கைக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறோம்.
அவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் சிறிலங்கா தரப்பினர் எமது பாதுகாப்புடன் கூடிய போராளிகளினது பயணங்களைத் தடுக்காது இருக்க வேண்டும். மாறாக தடுக்கும் நிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் நாம் அதற்கான தகுந்த பதில் நடவடிக்கையை எடுக்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.
இந்நிலைமை யுத்த நிறுத்த உடன்படிக்கையை மிகவும் சிக்கலான நிலைமைக்குள் தள்ளிவிடும் என்று நாம் அஞ்சுகின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்,
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்
Puthinam
|
|
|
| பொதுகட்டமைப்பு ஒப்பந்ததிற்கு இடைக்கால தடைஉத்தரவு |
|
Posted by: Vaanampaadi - 07-15-2005, 07:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b>BREAKING NEWS</b>
<b>Sri Lanka's Supreme Court issues stay order against P-TOMS</b>
[TamilNet, July 15, 2005 06:24 GMT]
Sri Lanka's Supreme Court (SC) Friday issued a stay order on four main points of the Post-Tsunami Operational Management Structure (P-TOMS) signed between the Government of Sri Lanka (GoSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), legal sources said. Fund management, location of Regional Committee in Kilinochchi, Project approval and implementation issues in Regional Committees are the issues being mentioned in the stay order, according to the information available at the moment. The marxist Sinhala nationalist Janatha Vimukthi Peramuna (JVP) and the Buddhist Sinhala nationalist JHU filed cases seeking the Court to make P-TOMS null and void.
This stay order will be valid until the final determination that will be reviewed by the Supreme Court.
The Case will be taken up again on September 12, 2005.
The ruling given by the bench comprises of Chief Justice Sarath Silva, Justice Gamini Amratunga and Justice Raja Fernando.
Tamilnet.com
|
|
|
| காதல் கிறுக்கனாய்... |
|
Posted by: kuruvikal - 07-15-2005, 05:58 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (24)
|
 |
<img src='http://img311.imageshack.us/img311/6126/brain1mi.jpg' border='0' alt='user posted image'>
<b>வண்ண வண்ண நினைவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாய்
வண்ண மனத் தோட்டத்தில்
வட்டமடிக்க
வஞ்சி மலரவள் வாசம் நாடி
வந்தேன் வலம்..!
வடிவுக்கு அரசியவள்
வஞ்சிக்க வந்தாளோ
வசீகரிக்க வந்தாளோ
வம்புகள் பண்ணியே
வசமாக்கிக் கொண்டாள்
வஞ்சகமில்லா நானும்
வஞ்சிக் கொடியவள்
வலைக்குள்
வலிந்தே சிக்கினேன்
வசந்தம் அது என்று...!
வந்தவள் வஞ்சியல்லோ
வஞ்சிக்க மறப்பாளோ....??!
வண்ணப் படமாய்
வண்ணப் புன்னகை தந்து
வனப்போடு வரவழைத்து
வந்ததும்
வசமாய் மனதோடு பூட்டிவைத்து.....
வசந்தமும் தந்து
வாட்டமும் தருகிறாள்
வகை தொகையாய் வார்த்தைகள்
வருத்தமின்றி உதிர்க்கிறாள்
வரவு வைக்கட்டாம் ஊடலும் கூடலும்
வழக்கப்படுத்தவும் வற்புறுத்திறாள்...!
வர வர
வழக்கங்கள் வழமைகள் மாறுது
வந்தவள் ஆட்சி
வந்திவன் மனதிலோங்க
வர்க்கமாய் இருந்தவன்
வடிவிழந்தே போகின்றான்...!
வந்தது என்ன
வஞ்சிப் பயலிடம்...
வடிவாய் இருந்தவன் - சில கணம்
வதங்குகிறான் வாடுகிறான்
வசனங்கள் உதிர்கின்றான் தனிமையில் - மறு கணம்
வசந்தத்து அவன் மலர் போல்
வதனம் மலர்கிறான்
வழிகிறான் குழைகிறான்
வானம் போல் பொழிகிறான் அன்பு..!
வழமைகள் வாழினும் மாறினும்
வகையாய் இவன்
வழி நடக்கிறான் காதல் கிறுக்கனாய்
வாழும் தன்னவள்
வழுவில்லா நினைவின் துணையோடு...!</b>
|
|
|
|