Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 576 online users.
» 0 Member(s) | 572 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,261
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  எது கவிதை
Posted by: narathar - 07-14-2005, 08:05 PM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

எது கவிதை என்று எழுந்திட்ட கேள்விக்கு
எதுகவிதை எனச் சொல்வேன் இப்போ எது கவிதை
வதைபடும் மானுடத்தின் வழிசொல்லும் வரிவடிவம்
இதைச்சொல்வேன் கவிதையென என்றும்

பொதிகை மலைபிறந்த புதுமைத் தமிழணங்கின்
கதைகள் பலவுண்டு காண்போம் இதிலெல்லாம்
கவிதை சொல்கருத்து கணையாய் துளைத்திடுமே
கவிதை சிறப்பிதுவே காண்..................

நிலத்தில் ஓளிர்வடிவ இயல்தந்த வகைக்குள்ளே
பலத்தில் சிறந்ததுபார் கவிதை - மலை முகட்டில்
இலங்குகின்ற தீபமென எந்நாளும் வழிகாட்டி
இலங்குகின்றார் கவிதைமகள் எங்கும்

குன்றாச் சுவையுடையாள் குளிர்விக்கும் குணமுடையாள்
நன்றே இரசித்திடவும் ஆவாள் - வென்று
வழிகாட்டும் வடிவத்துள் வடித்திடவும் வேண்டுமிது
ஒளிகாட்டும் அப்போது உயிர்

வாழும் கவிதையதன் வண்ணம் எதுவென்று
சூழும் கவியுலகைப்பார் - நாளும்
பிறக்கின்ற கவிதைகள் பித்தலாட்டம் அழிய
சிறப்புள்ளது வாழும் செம்மை.
எழுத்துருவாக்கம்
கோகுலன்

http://www.erimalai.info/2005/march/poems/gokulan.htm

Print this item

  திருமலையில் விடுதலை புலிகள்-கடற்படையினர் நேரடி சண்டை
Posted by: வினித் - 07-14-2005, 05:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

One LTTE cadre killed, two Navy soldiers injured in Trincomalee

[TamilNet, July 14, 2005 16:21 GMT]
One Liberation Tiger cadre was killed and two Sri Lankan Navy soldiers were injured in a shooting incident that took place near Perkar area in Kumburupiddy division north of Trincomalee, according to Police sources. The incident took place near the German radio relay station Deutche Velle around 6:30 p.m. Thursday. Meanwhile, Kumburupiddy villagers, who have taken refuge in the Methodist Church, said that two Tamil civilians are missing in the area following the shooting incident.
The missing youths are Muthiah Rasa (20) and Thangarajah Keetheswaran (25) of Kumburupiddy, according to residents.

An LTTE cadre injured in the incident has been admitted to Hospital, sources said.

Names of the LTTE cadres or the injured Navy soldiers were not available at the moment.

Sri Lankan soldiers have rounded up the Vipulananda Kiramam, a resettled village in the Kumburupiddy division Thursday evening following the incident.

Families were not allowed to move out of the village, sources said.

Meanwhile, naval personnel Thursday evening conducted house to house search in the villages, Nilaveli and Gopalapuram.

On representation by the residents, Trincomalee district parliamentarian Mr.R.Sampanthan immediately contacted the Eastern Naval Commander Rear Admiral Wasantha Karanagoda who is in overall charge of the security of the district and requested him to take steps to prevent harassment of villagers, sources said.



thanks www.tamilnet.com

Print this item

  தொலைபேசி துண்டிப்பு
Posted by: ஊமை - 07-14-2005, 04:05 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

கிளிநொச்சிப்பிரதேசத்தின் தொலைத்தொடர்பு சேவைகள் யாவும் இன்று திடீர்ரென செயலிழந்தது Arrow

Print this item

  உங்கள் கருத்து
Posted by: ஊமை - 07-14-2005, 01:37 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (38)

மோகண் அண்ணா முன் பக்கத்தில் இருக்கும் செய்திகளை தினமும் மாற்றினால் நல்லாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் புதிய செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்வையிட வசதியாக இருக்கும். இது எனது ஒரு சிறிய வேண்டுகோள் கட்டளை அல்ல <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இன்னொன்று. கருத்துக்களத்தில் கருத்தாளர்களின் புதிய கருத்துக்கள் நாங்கள் அந்த தலைப்பின் மேல் சொடுக்கியவுடன் முன்னே வந்து நிற்கவில்லை. பிரதான தலைப்பும் அதனை ஆக்கியவரின் கருத்துமே இப்போதும் முன்னே வருகிறது. அதன் பின்னர் நாம் கருத்தாளர்களால் இறுதியாக எழுதிய கருத்தை தேடித்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனையும் மாற்றம் செய்யவும். இதனை தனிமடல் மூலம் உங்களூகு தகவல் சொனேன் ஆனால் இன்னும் அது கருத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

Print this item

  தமிழீழ செய்திகள்..
Posted by: வினித் - 07-14-2005, 10:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (15)

விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் குழுவைச் சேர்ந்த 22 பேர் வவுனியாவுக்கு ஊருடுவியிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து சிங்களப் படையினரின் பாதுகாப்புடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்த புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எஃப் (வரதர் அணி)போன்றவற்றின் முக்கிய உறுப்பினர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிகிறது.


இந்தக் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு தப்பிச் சென்றுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கெதிராகச் செயற்படும் இவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே முல்லைத்தீவிலிருந்து பிஸ்ரல் குழுவினர் வவுனியா வந்துள்ளதாக அரச புலனாய்வுத்துறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து சிங்களப் படையினர் வவுனியாவில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

வாகனங்களில் பயணம் செய்வோரில் சந்தேகத்திற்கிடமானவர்களை சோதனையிட்டும் வருகின்றனர்.

வவுனியாவில் கோவில்குளம், சின்னக்குளம், குருமன்காடு ஆகிய பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் குழுவினர் நடமாடுவதாக சிறிலங்கா படையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டாலும் இதுவரை படையினரால் நடத்தப்பட்ட சோதனையில் பிஸ்ரல் குழுவைச் சேர்ந்த எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் படை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

Print this item

  புலிகள் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினருக்கு உத்தரவு!
Posted by: வினித் - 07-14-2005, 09:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (13)

வியாழக்கிழமை, 14 யூலை 2005, 14:18 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு இராணுவ தளபதி சாந்த கொட்டேகொட உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தென் தமிழீழத்தில் ஆக்கிரமித்து இருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான இனந்தெரியாத குழுவினரின் பல்வேறு தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி படையினர் மத்தியில் பேசிய சாந்த கொட்டேகொட, தமிழீழ விடுதலைப் புலிகள் படையினரைத் தாக்கினால் அவர்களைத் திருப்பித் தாக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி புதினம்

Print this item

  கவிப்பேரரசால் கௌரவிக்கப்பட்ட உணர்ச்சிக் கவிஞர்
Posted by: Kalai - 07-14-2005, 07:45 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (17)

<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Tamil/13895662_vaira120.jpg' border='0' alt='user posted image'>கவிஞர் வைரமுத்து தனது 53-வது பிறந்தநாளை, கவிஞர்கள் திருநாளாக நேற்று கொண்டாடினார்.

பொன்மணி மாளிகையில் நடந்த இந்த விழாவுக்கு, முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவிஞர் காசிஆனந்தன், இன்குலாப் ஆகிய 2 பேருக்கும் கவிஞர்கள் திருநாள் விருதும், தலா ரூ.10 ஆயிரம் பரிசுகளையும் கவிஞர் வைரமுத்து வழங்கினார்.

விருது பெற்ற 2 கவிஞர்களையும், அவற்றை வழங்கிய வைரமுத்துவையும் நீதிபதி கோகுல கிருஷ்ணன், கவிஞர் ஈரோடு தமிழ்ன்பன் ஆகிய இருவரும் வாழ்த்தி பேசினார்கள்.

கவிஞர்கள் காசிஆனந்தன், இன்குலாப் ஆகிய இருவரும் ஏற்புரை நிகழ்த்தினார்கள்.

காசி ஆனந்தன் பேசும்போது, தமிழ் மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழிக்குள் ஏற்கனவே சமஸ்கிருதம் ஊடுருவியது. இப்போது ஆங்கிலம் ஊடுருவி 80 சதவீதம் அது வளர்ச்சி அடைந்து விட் டது. காதலை வெளிப்படுத்தும் போது கூட, நான் உங்களை காதலிக்கிறேன் என்று யாரும் சொல்வதில்லை. ஐ லவ்யூ' என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் என்றார்.

அவரைத் தொடர்ந்து வைரமுத்து பேசியதாவது

இந்தநாள் ஒரு தனி மனிதன் பிறந்தநாள் அல்ல. கவிஞர்கள் திருநாள் என்று கொண்டாடினாலும் கூட, எங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக கொண்டாடப்படுவது அல்ல.

இதுதான் நான் பெறும் முதல் விருது என்று கவிஞர் இன்குலாப் இங்கே பேசும்போது, என் கண்களின் ஓரம் கண்ணீர் தேங்கியது. இதுவே என் கடைசி விருதாகக் கூட இருக்கலாம் என்று அவர் சொன்னபோது, உடைந்து போனேன்.

எத்தனையோ சபைகளில் தான் நிராகரிக்கப்பட்டதாக கவிஞர் காசிஆனந்தன் பேசும்போது கூறினார். அதற்காக நான் வெட்கப்படுகிறேன். நீங்கள் நிராகரிக் கப்பட்டதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.
இவர் எழுதிய கவிதை வேண்டும். இவர் வேண்டாமா? சூடு வேண்டும். நெருப்பு வேண்டாமா? தண்ணீர் வேண்டும் மழை வேண்டாமா?, கவிதையும் கவிஞனும் சேர்ந்தே மதிக்கப்பட வேண்டும்.

2 கவிஞர்களும் ஒரே புள்ளியில் இயங்குபவர்கள். கொண்ட கொள்கையில் இருந்து விலகாதவர்கள். வாழ்க்கைக்காக, சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.

நாங்கள் கொஞ்சம் சமரசம் செய்து கொள்கிறோம். தங்கத்தில் சிறு செம்பு கலப்பது போல்... இது, தங்கத்தை மாசுபடுத்துவதற்காக அல்ல. தங்கத்தில் நகை செய்வதற்காக...

காசி ஆனந்தனின் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தில் ஈடுகட்டப்படும். தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும். இதை தமிழன் செய்யாமல், வேறு யார் செய்வார்கள்?

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

நன்றி: தமிழ் சிபி

Print this item

  யாழ்குடாநாட்டில் இரவு நேரங்களில் கடுமையான பயிற்சி
Posted by: தமிழரசன் - 07-14-2005, 03:04 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>யாழ்குடாநாட்டில் இரவு நேரங்களில் கடுமையான பயிற்சி படைத்தளபாடங்கள் முன்னனி காவலரண்கள் நோக்கி நகர்வு! </b>


நாகர்கோவில், கிளாலி, எழுது மட்டுவாள் பிரதேசங்களில் நிலை கொண்டுள்ள சிறிலங்காப் படைகள் இரவில் தீவிர பயிற்சி நடவடிக்கை களில் ஈடுபட்டுவருவதால் மிருசுவில் வரையான கிராமங்கள் குண்டுச் சத்தங்களால் அதிர்ந்து வருகின்றன. அத்தோடு போர்த் தளபாடங்களையும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து முகமாலை நோக்கி நகர்த்தி வருகின்றன.

இடைவிடாத துப்பாக்கிச் சூடுகளுடன் எறிகணைகளையும், டாங்கிகள் உட்பட கனரக ஆயுதங்கள் மூலமும் இப்பயிற்சிகள் இடம் பெற்று வருவதால் குண்டுச் சத்தங்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகின்றது.

இதேவேளை யாழ்.குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து முகமாலை நோக்கி கனரக துருப்புக்காவிகள், கவச வாகனங்கள் மற்றும் பல்பேவறு வகையான போர்க் கருவிகளையும் படையினர் நகர்த்தி வருவதாகத் தெரியவருகிறது.

Print this item

  படையினர் மீது கைக்குண்டு வீச்சு: 8பேர் படுகாயம்
Posted by: தமிழரசன் - 07-14-2005, 02:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

படையினர் மீது கைக்குண்டு வீச்சு: 8பேர் படுகாயம்

திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்புூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த படையினர் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலத்தோப்புூரிலிருந்து பன்சல்வத்தை இராணுவ முகாமிற்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற படையிர் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த படையினர் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர

Print this item

  பிரபல்யமில்லாதவர்களின் அறிமுகம்
Posted by: Vishnu - 07-13-2005, 08:51 PM - Forum: சினிமா - Replies (207)

<b>இங்கே.. பிரபல்யம் இல்லாதவர்களின் அறிமுகங்களை பதிக்கிறேன்.</b>


<img src='http://img32.imageshack.us/img32/4424/esha269wh.jpg' border='0' alt='user posted image'>
<b>ISHA DOEL</b>
<b>
இவர் தமிழில் பிரபல்யம் இல்லாதவரே தவிர... இந்தியில் பேசப்படும் ஒரு நட்சத்திரம். ஒன்றுக்கு மேற்பட்ட மொழியில் தயாரான.. அயுத எழுத்து படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். இது தான் இவரது முதல் தமிழ்படம்.

இவரும் ஒரு நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்தவர். ஹேமா மாலினி, தர்மேந்திராவின் ( 70, 80 களில் பேசப்பட்ட இந்தி நடிகர், நடிகை ) 2 மகள்களில் இவர் ஒருவர்</b>

Print this item