Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 616 online users.
» 0 Member(s) | 614 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,644
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,259
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,553
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  இது யூலை மாதம்......
Posted by: Nitharsan - 07-22-2005, 05:33 AM - Forum: கவிதை/பாடல் - Replies (16)

<b>இது யூலை மாதம்....!
நீறு பூத்த இனவாதம்-தம்
சுயத்தை காட்டிய நேரம்-ஆமாம்
83 ல் எங்கள் உறவுகளை
எரித்த அதே யூலை மாதம்...
கொழும்பு நகர் தொடங்கி
கொடி காமம் வரைக்கும்
கொலைவேறியாடிய
அதெ யூலை மாதம்..-ஈழ
தமிழன் தவிர்க்கும் மாதம்
சிறைதனிலே குட்டி மணியுடன்
தங்கத்துரை இன்னும் பலர்...
வெளி தனிலே அப்பாவிகள்
அனைவரும் சரி....
ஆடியது சிங்களம்
நர பலியாட்டம்...
வாடியது தமிழன் உள்ளம்
நாடியது அவன் கரம்
ஆயுதத்தை.......
கொண்டது நெஞ்சது உறுதி
தமிழீழம் தான் உறுதியாச்சு
தாங்கி தாங்கி...
சலித்தவர்கள்....-அடி
வாங்கி வாங்கி
வலியை உணர மறுத்தவர்கள்
அடங்கி அடங்கி
அடிமையாக வாழ்ந்தவர்கள்..
எழுந்தனர்...எல்லோரும்
எழுந்தனர்...-ஏன்
நாம் அடிமைகளானோம் என்று
அழுதனர்..
அழுத விழிகளின் கண்ணீர்
காயுமுன்னே...
கரிகாலனின் தலைமையேற்று
தடைகளை வென்றனர்...-இது
அநீதிக்கெதிரான யுத்தம்
அகிம்சையால் வெல்ல மடியாத
தேசத்தை...
ஆயுதம் கொண்டு அழிக்க நினைத்த
அரசை எதிர்த்து -ஈழ
தமிழன் நடாத்தும் உரிமை
போரிது -இன்று
சமாதானங்கள் வரலாம்
சகஜமான வாழ்வு வரலாம்-ஆனால்
எண்பத்து மூன்று கடந்து
இருபத்து இரண்டு வருடங்கள்...-ஆனாலும்
எங்கள் நெஞ்சத்து தீ இன்னும்
அனையவில்லை.......-</b>

இளைஞனின் கருத்தை ஏற்று திருத்தப்படுகிறது....(நி+ன்)

Print this item

  உங்கள் இணைய தளத்தை அடையாளம் காட்ட...
Posted by: hari - 07-22-2005, 02:37 AM - Forum: இணையம் - Replies (13)

<b>உங்கள் இணைய தளத்தை அடையாளம் காட்ட... </b>

உங்களைப் பற்றி, உங்கள் திறமைகள் குறித்து, நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பது குறித்து ஓர் அழகான தகவல்கள் பொதிந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ளீர்கள். அதனை மற்றவர்கள் பார்த்து தெரிந்து கொண்டால் தானே பயன் கிடைக்கும். இதற்கான வழி என்ன? இங்கு பார்ப் போமா?

உங்கள் வெப் தளத்தின் முகவரியை மற்றவர்களுக்கு எப்படி தெரிவிக்கலாம்? தெரிந்தவர்களிடம் என்றால் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ கூறி விடலாம். உங்கள் விசிட்டிங் கார்டில் வெப் தள முகவரியை டைப் செய்யலாம். துண்டு பிரசுரங்கள் மூலம் உள்ளூரிலும், வெளியூரிலும் விநியோகம் செய்யலாம். உலகம் முழுக்க உள்ளவர்களுக்கு உங்களால் இவ்வாறு தெரிவிக்க முடியுமா? முடியாது. இங்குதான் சர்ச் எஞ்சின் உங்களுக்குக் கை கொடுக்கிறது.

பலர், ஏதாவது வெப்தளத்தின் முகவரி வேண்டுமெனில், ஏதாவது ஒரு பொருள் குறித்த இணைய தளங்கள் வேண்டு மெனில் சர்ச் எஞ்சினில் நுழைந்து தேடுகிறார்கள். சர்ச் எஞ்சின் தேடித் தருகிற விடை பட்டியலில் உங்கள் தளத்தின் பெயரும் இருந்தால், தேடியவர்கள், உங்கள் தளத்தில் நுழைவார்கள்.


இன்றைய இணைய உலகில் ஏறக்குறைய 5 கோடி வெப் தளங்கள் உள்ளன. ஒவ்வொரு வெப்தளத்திலும் பத்து அல்லது நுõறு என வெப்பக்கங்கள் காணப்படும். இவ்வாறு உள்ள கோடிக் கணக்கான வெப் பக்கங்களில், உங்களது வெப்பக்கங்களும் அடங்கும்.

சர்ச் எஞ்சின் தேடித் தருகிற விடையின் முதல் நான்கைந்து பக்கங்களில் உங்களது வெப் பக்கமும் காணப்பட்டால், உங்கள் தளத்தில் மக்கள் நுழைவதற்கான வாய்ப்பு உண்டு. சர்ச் எஞ்சினின் விடைப் பட்டியல் ஆயிரம் பக்கங்களாக நீண்டு அதில் உங்கள் தளம் கடைசி பக்கங்களில் இருந்தால் எவரும் உங்கள் தளத்துக்கு வருகை தர மாட்டார்கள். இதற்கு என்ன செய்திட வேண்டும்? அதற்கு சர்ச் இஞ்சின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

சர்ச் எஞ்சின் உங்கள் தளத்தை எவ்வாறு அடையாளம் காண்கிறது?

Spider, Web Crawler, Robo, Bot போன்ற புரோகிராம்களை சர்ச் எஞ்சின்கள் பயன்படுத்துகின்றன. இவை புதுப்புது வெப் பக்கங்களை தேடிக் கண்டு பிடித்து அந்த பக்கங்களில் உள்ள சொற்களை வைத்து அந்த வெப் பக்கம் என்ன கூறுகிறது என்பதைக் கண்டு பிடித்து, அதற்கான பிரிவின் கீழ் உங்கள் வெப் பக்கத்தைச் சேர்த்து விடும்.

சர்ச் எஞ்சின் தேடிக் கண்டு பிடிக்க கொஞ்ச காலம் ஆகலாம். அதுவரை உங்களுக்குப் பொறுமை இல்லை என்றால் நீங்களாக நேரடியாக சர்ச் எஞ்சினில் நுழைந்து உங்கள் தளத்தை அதற்கு தெரிவிக்கலாம்.

உங்கள் வெப் பக்கத்தை சர்ச் எஞ்சின் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமானால் உங்கள் வெப் பக்கத்தில் Meta என்ற டேக்கை (Tag) நீங்கள் பயன்படுத்த வேண்டும். HTML மொழி தெரிந்தவர்களுக்கு டேக்கை பயன்படுத்தத் தெரியும். எனினும் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற நோக்கில் அது பற்றிய விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

META டேக்கினை பயன்படுத்த:

META டேக்குடன் Name என்ற அட்ரிபியூட்டை பயன்படுத்த வேண்டும். Name அட்ரிபியூட்டின் மதிப்பாக Description அல்லது Keywords என்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும் Content என்ற அட்ரிபியூட்டை பயன்படுத்தி அதில் Description அல்லது Keywords பற்றிய விஷயங்களைக் குறிப்பிட வேண்டும்.

சென்னையில் குடியிருப்புகளை கட்டி விற்கும் நிறுவனத்தை நீங்கள் நடத்துவதாகவும், உங்கள் வெப் பக்கத்தில் அது பற்றிய விபரங்களைக் குறிப்பிட்டு, அவற்றை சர்ச் எஞ்சின்கள் பயன்படுத்த விரும்புவதாகவும் நாம் வைத்துக் கொள்ளுவோம். இந்த எடுத்துக் காட்டின்படி எப்படி உங்கள் வெப் பக்கத்தில் ஹெச்டிஎம்எல் மொழியின் META டேக்கை பயன்படுத்த வேண்டும் எனப் பார்ப்போம்.

வெப் பக்கத்தில் நீங்கள் குறிப்பிட வேண்டிய HTML டேக் இது:

<META NAME=Description Content=''Chennai Flat Sales, Flat at Chennai in reasonable price, the best flat seller in Chennai, Most reliable Flat seller in Chennai, CDMA approved flats in Chennai, Individual Luxury Duplex Bungalows in Chennai, Luxury Type Independent House in Chennai, Uniquely Designed House in Chennai, Independent House designed by experienced Architect''



உங்கள் வெப் தளத்தின் முக்கிய சொற்கள், உங்கள் நோக்கம் போன்ற எல்லா விபரங்களும் மேலே கண்டுள்ள Content என்பதில் Description மதிப்பாக குறிப்பிட்டு விட வேண்டும்.

இன்னும் ஒரு வேலையை நீங்கள் செய்ய வேண்டும். சர்ச் எஞ்சினில் நுழைபவர்கள் முக்கிய சொற்களை வைத்துத் தளங்களைத் தேடுவார்கள். என்ன சொற்களை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அந்த சொற்களை Keywords என்பதற்கு நீங்கள் குறிப்பிட வேண்டும்.

<META NAME=Keywords Content='' Flats, Houses, Bungalows, Chennai''>

Content மதிப்பாகக் கொடுக்கும் ஒவ்வொரு சொல்லை அடுத்தும் காற்புள்ளியை இட வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

சர்ச் எஞ்சினிற்கு நீங்கள் தெரிவிக்க Spider, Web Crawler, Robu Bots போன்ற புரோகிராம்களை வைத்து சர்ச் எஞ்சின்கள், வெப் தளங்களையும், வெப் பக்கங்களையும் கண்டு பிடிக்கும் என்று பார்த்தோம்.

சர்ச் எஞ்சின்கள் மற்றும் டைரக்டரிகள் என இரு வகையாக தேடல் தளங்கள் உள்ளன. META டேக்கினுள் கொள்ளும் டைரக்டரியால் அதைக் கண்டு பிடிக்க முடியாது. எனவே நீங்கள்தான் அதை டைரக்டரிக்கு தெரிவிக்க வேண்டும்.

டைரக்டரிக்கு தெரிவிப்பதை சர்ச் எஞ்சினுக்கும் தெரிவிக்கலாம், தப்பில்லை. நீங்கள் தெரிவிப்பதற்காகவே பல டைரக்டரிகளிலும், சர்ச் எஞ்சின்களிலும் Submission, அல்லது Request அல்லது Add URL போன்ற பொருள்படுகிற பெயர்களில் பட்டன்கள் அல்லது லிங்க்குகள் இருக்கும். அந்த பட்டனை அல்லது லிங்க்கை நீங்கள் கிளிக் செய்து உங்கள் தளம் பற்றி தெரிவிக்கலாம்.

கீழே உள்ள அட்டவணையில் ஒரு சில தளங்கள் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன.

சர்ச் எஞ்சின் அல்லது டைரக்டரி பெயர் தகவல் தர வேண்டிய வெப் பக்கத்திற்கான முகவரி

யாஹு: http://submit.search.yahoo.com/free/request

கூகிள்: www.google.com/addurl.html

எம்எஸ்என்: http://submit.bcentral.com/msnsubmit.htm

நன்றி: வானம்பாடி

Print this item

  அனைவருக்கும் வணக்கம்
Posted by: Mind-Reader - 07-21-2005, 09:40 PM - Forum: அறிமுகம் - Replies (31)

அனைவருக்கும் வணக்கம்

Print this item

  அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
Posted by: VERNON - 07-21-2005, 07:50 AM - Forum: பொழுதுபோக்கு - No Replies

வணக்கம் களநண்பர்களே
சரஷ்வதி சபதம் திரைப்படத்தில் வரும்
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
பாடலை முழுமையாக MP3 வடிவில் பகிர்ந்து கொள்ள முடியுமா

நன்றியுடன்
vernon

Print this item

  &quot;பிறந்த நேரம் சரியில்லை' என்றார் ஜோசியர் : 9 மாத குழந்தையை அ
Posted by: SUNDHAL - 07-21-2005, 03:03 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (14)

உன் மகன் பிறந்த நேரம் சரியில்லை' என ஜோசியர் கூறியதை நம்பி, தனது ஒன்பது மாத ஆண் குழந்தையைச் சரமாரியாக அடித்தே கொன்றார்' ஓட்டல் உரிமையாளர்.

கோவையில் உள்ள உடையாம்பாளையம், எம்.ஜி.ஆர்., வீதியில் வசிப்பவர் ரகுபதி (29). ஓட்டல் உரிமையாளர். இவருக்கும் காடம்பாறையைச் சேர்ந்த சந்திரகலா (26) என்பவருக்கும் 2003ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது மகன் விக்னேஷ்வரன். ஒன்பது மாத குழந்தை. இவன் பிறந்த பிறகு ரகுபதி நடத்தி வந்த ஓட்டல் நஷ்டத்தில் வீழ்ந்தது. இதையடுத்து மகனின் ஜாதகத்தை, தனது குடும்ப ஜோசியரிடம் காண்பித்து, "எதிர்கால பலன்' கேட்டுள்ளார் ரகுபதி. அதற்கு அந்த ஜோசியர், "உன் மகன் பிறந்த நேரமே சரியில்லை, ஒன்று நீ இருப்பாய், அல்லது உன் மகன் இருப்பான். இருவரில் யாராவது ஒருவர் தான் உயிருடன் இருக்க முடியும் என ஜாதகம் சொல்கிறது. இந்த ஆபத்தில் இருந்து நீ விடுபட வேண்டுமெனில், ஒரு ஆண்டு வரை மகனை பிரிந்து இருக்க வேண்டும்' என கூறினார்.

ஜோசியரை சந்தித்து விட்டு வந்ததில் இருந்தே, ரகுபதி தனது மகன் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். சில மாதங்களுக்கு முன் திடீரென தனது மகனை காடம்பாறைக்கு அழைத்துச் சென்று மாமனார் வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டார். சமீபத்தில் காடம்பாறைக்குச் சென்ற இவரது மனைவி சந்திரகலா, தனது மகனை அழைத்துக் கொண்டு கோவை வந்தார்.

கடந்த 17ம் தேதி மதியம் வீட்டுக்கு குடிபோதையில் வந்த ரகுபதி, கட்டிலில் துõங்கிக் கொண்டிருந்த மகனை கண்டார். "இவனால் தான் எல்லாம் வந்தது' எனக் கூறி மகனின் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சராமாரியாக தாக்கியுள்ளார். காலை பிடித்து துõக்கி குழந்தையை கட்டிலில் அடிக்க, மனைவி கதறியபடியே தடுத்துள்ளார். எனினும், இவர் கோபம் தணியாமல் மீண்டும், மீண்டும் தாக்கியதால் குழந்தை கதறியபடியே மயக்கம் அடைந்தது.

அருகில் இருந்தவர்கள் இக்குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க போதிய பண வசதியில்லாததால், குழந்தையை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ்வரன் நேற்று இறந்தான். தந்தை ரகுபதியை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கைது செய்தார். போலீசாரிடம் இவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், "எல்லாம் ஜோசியத்தால் வந்த வினை. ஜோசியரின் பேச்சை நம்பி என் குழந்தையை அநியாயமாக நானே கொன்று விட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Print this item

  முன்னேற்ற படிக்கற்கள்
Posted by: MUGATHTHAR - 07-20-2005, 06:28 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (3)

<b>முன்னேற்ற படிக்கற்கள் </b>

கள உறவுகளே உங்களுடைய வாழ்க்கையின்முன்னேற்றத்துக்கு
படிக்கற்களாக இருந்தவர்கள் யார்? ஆதுதான் இந்த தலைப்பின் கீழ் வரப் போகிறது நாங்கள் அனைவரும்

1. பெற்றோரின் அருவணைப்பு
2. சகோதரரின் பாசம்
3. நண்பர்களின் நட்பு
4. மனைவி /கணவனின் காதல்
இவற்றினால் கட்டுண்டு இருக்கிறோம் இதில்அருவணைப்பு . பாசம் . நட்பு . காதல் நான்கையும்; அன்பு என குறிப்பிடுவோம் இவற்றுள் எந்த அன்பு சிறந்தது என வாக்குப் போட முடியாது ஏனெனில் எமது ஒவ்வொரு பருவத்திலும் இவர்களின் அன்பு . ஊக்கம் கிடைத்திருக்கிறது /கிடைக்கும் இதில் உங்களுடைய இன்றைய முன்னேற்றத்துக்கு ஊக்கமாகவும் உறுதுனையாகவும் இருந்தவர்கள் இருப்பவர்கள் யார்? அவர்கள் யார் எண்டு குறிப்பிடுவதில் தப்பொன்றும் இல்லையே.. .. .. ..

. . . . . . . . . . . . . .எனக்குத் தெரியும் கனபேர் மனசுக்கை நினைப்பியள் எல்லா உறவுகளாலும் தொல்லையும் உபத்திரவமும் தான் எங்களை எங்கை முன்னேற விடுகுதுகள் உவன் முகத்தானுக்குத் தேவையில்லாத வேலை எண்டு என்ன செய்ய. . . . . .

Print this item

  எல்லாருக்கும் வணக்கம்
Posted by: muniyama - 07-20-2005, 03:01 PM - Forum: அறிமுகம் - Replies (33)

எல்லாருக்கும் வணக்கம் நான் தானுங்கோ முனியம்மா உறவுகளே வணக்கம்

Print this item

  செல்போன் `ரிங்டோன்' களை பயன்படுத்தி தீவிரவாதிகள் புது வித தா
Posted by: SUNDHAL - 07-20-2005, 02:44 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

சில நாட்களுக்கு முன் மும்பை செல்போன்களில் நடிகை மல்லிகா ஷெகாவத்தின் செக்ஸ் காட்சிகள் செல் போன் எஸ்.எம்.எஸ். மூலம் பரவியது. சில நிமிடங்கள் மட்டும் ஓடும் வீடியோ காட்சிகளும் வெளியானது.

இதைப் பார்த்த நடிகை மல்லிகா அதிர்ச்சி அடைந்தார். டெக்ஸ் காட்சியில் வரும் உடல் தன்னுடையது அல்ல. தனது முகத்தை காட்டி விட்டு வேறு பெண்ணின் உடலுடன் கிராபிக்ஸ் முறையில் இணைந்து வெளியிட்டு இருக்கிறார்கள் என்று மல்லிகா குற்றம் சாட்டினார்.

இதில் உடல் யாருடையது என்று கண்டு பிடிக்க முடியாமல் மும்பை போலீசார் திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதே போல் செல் போன்களால் அசாம் போலீசாருக்கு புதிய தலைவலி ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு பிரச் சினை செக்ஸ் காட்சிகளால் அல்ல. பழைய இந்திப் பாடல்கள் மூலம் உருவாகி உள்ளது.

கடந்த மாதம் அசாமில் போலீசாருக்கும் உல்பா தீவிர வாதிகளுக்கும் நடந்த சண் டையில் உத்பல்தாஸ் என்ற தீவிரவாதி சுட்டுக் கொÖல்லப்பட்டான். இவன் தீவிரவாத இயக்கத்துக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுப்பவன். அவன் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து போலீசார் செல்போனை கைப்பற்றினார்கள்.

அந்த செல் போனில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பழைய இந்திப் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

`தமëமரோ தம்' போன்ற புகழ் பெற்ற பாடல்களும் அடங்கி இருந்தது. ஒவ்வொரு பாடலையும் தீவிரவாதிகள் சந்தேக பாஷையாக பயன் படுத்தியதை போலீசாÖர் கண்டு பிடித்து உள்ளனர்.

ஒரு தீவிரவாதி தனது கூட்டாளிக்கு `போலீஸ் நடமாட்டம் இருக்கிறது உஷாராக இரு' என தகவல் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு என ஒரு பாடலை பயன்படுத்துகிறார்கள்.

எதிரி வருகிறான் அவனை தாக்கு என்பதற்கு மற்றொரு பாடல் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பாடலை குறிப்பிட்ட ஒரு செல்லில் இருந்து கூட்டாளியின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி விடுகிறார்கள். இதனால் தீவிரவாதிகளுக்கு வேலை சுலபமாக போய்விடுகிறது. அவர்கள் பேசிக் கொள்ளாமலே காரியத்தை சாதித்து விடுகிறார்கள்.

செல்போன் ரிங்டோன்களில் பாடல்களை பயன்படுத்தி சமீபகாலமாக அசாம் தீவிரவாதிகள் பல அசம்பாவிதங்களில் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதை தடுக்க அசாம் போலீசார் மாற்று நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்

Print this item

  கல்லூரியில் ரூ. 10 இலட்சம் கொள்ளை
Posted by: அருவி - 07-20-2005, 07:58 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (5)

கல்லூரிக்குள் புகுந்து 15 பேர் கும்பல் அட்டகாசம்: ரூ. 10 லட்சம் கொள்ளை
ஜூலை 20, 2005

பெரம்பலூர் :

பெரம்பலூர் அருகே தனியார் கல்லூரிக்குள் புகுந்த 15 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் 7 காவலாளிகளைத் தாக்கி விட்டு ரூ. 10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது

திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்ப் பந்தல் என்ற இடத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக கல்லூரிக்கு நேற்றிரவு 15 பேர் கொண்ட கும்பல் வந்தது.

கல்லூரியில் பணியில் இருந்த 7 காவலாளிகளையும் இக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தாறுமாறாக அடித்துக் கட்டிப் போட்டனர். தடுத்த சில காவலாளிகளுக்கு கத்திக் குத்தும் விழுந்தது. பின்னர் 7 பேரையும் ஒரு அறைக்குள் போட்டு அடைத்தனர்.

அவர்களது வாயில் துணியை வைத்து சப்தம் வராத அளவுக்கு அடைத்தனர்.

அதன் பின்னர் முதல்வர் அறை, காசாளர் அறை உள்ளிட்ட பல்வேறு அறைகளின் பூட்டுக்களை உடைத்துத் திறந்து உள்ளே சென்றனர். இதில் காசாளர் அறையில் இருந்த பணப் பெட்டகத்தை உடைக்க முயன்று முடியாத காரணத்தால் அதை அப்படியே எடுத்துச் சென்றனர்.

மொத்தம் ரூ. 10 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக தெரிய வந்துள்ளது. இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.


நன்றி-Thats Tamil.

Print this item

  ஐரோப்பிய நாடுகளுக்கு அல்கொய்தா 1 மாதம் கெடு
Posted by: kuruvikal - 07-20-2005, 07:32 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

<span style='color:red'><b>ஐரோப்பிய நாடுகளுக்கு அல்கொய்தா 1 மாதம் கெடு</b>

துபாய்:

<b>இராக்கில் இருந்து தங்களது படைகளை ஒரு மாதத்துக்குள் வாபஸ் பெறாவிட்டால் லண்டனில் நடந்தது போன்ற வெடிகுண்டுத் தாக்குதல்களை உங்கள் நாடுகளிலும் நடத்துவோம் என ஐரோப்பிய நாடுகளுக்கு அல்கொய்தா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல்கொய்தாவின் ஐரோப்பியப் பிரிவு ஒரு இணையத் தளம் மூலமாக வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்,

ஐரோப்பிய நாடுகளுக்கு இது இறுதி எச்சரிக்கை. மெசபடோமியாவில் (இராக்) இருந்து உங்கள் நாட்டு வீரர்களை ஒரு மாதத்துக்குள் திரும்பப் பெற வேண்டும் என கெடு விதிக்கிறோம். ஆகஸ்ட் 15ம் தேதியுடன் இந்த கெடு முடியும். அதற்குப் பின் எச்சரிக்கை எல்லாம் விட மாட்டோம்.

எங்கள் தாக்குதல்களை அரங்கேற்றுவோம். ஐரோப்பாவின் இதயத்தில் எங்கள் தாக்குதல் இருக்கும். பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து ஆகியவை உள்பட எங்கள் மண்ணில் படைகளை நிறுத்தியிருக்கும் நாடுகளுக்கு நாங்கள் விடுக்கும் கடும் எச்சரிக்கை இது.

ஸ்பெயின் ரயிலிலும், லண்டன் ரயில், பஸ்களிலும் நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம். ஒரு மாதத்தில் ஐரோப்பாவை மீண்டும் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.</b>

[size=9]that'stamil.com</span>

Print this item