| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 424 online users. » 0 Member(s) | 422 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,432
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,540
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| மனைவியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமா? |
|
Posted by: SUNDHAL - 08-20-2005, 03:17 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (14)
|
 |
மனைவியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமா?
மனைவியிடம் கணவன் நல்ல பெயர் வாங்குவது அவ்வளவு சுலபமல்ல... சரி. ஒரு கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொண்டால் நல்ல பெயர் வாங்கலாம்?
உங்களுக்கு சில யோசனைகள்:-
* மனைவியை கவுரவமாக நடத்துங்கள். ஏய், வா, போ... என்று அழைப்பதை தவிர்த்திடுங்கள். வாடி, போடி என்பது இதை விட கொச்சையான வார்த்தைகள். அவற்றை வாய் தவறிக்கூட பயன்படுத்தி விடாதீர்கள்.
* இரவு நேரத்தில் வெளியே செல்வதாக இருந்தால் எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்பதையும் தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் இருந்தால் தொலைபேசி எண்ணையும் தெரிவித்துவிடுங்கள். எதிர்பாராத விதமாக அதிக நேரமாகிவிட்டால் மனைவிக்கு தகவலை தெரிவித்து விடுங்கள்.
* ஆடம்பரச் செலவு செய்வதை எந்த மனைவியும் விரும்பமாட்டார். எனவே தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
* வேலைக்குச் செல்லும்போது மனைவிக்கு சிறிதளவு பாக்கெட் மணி கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
* அலுவலக பிரச்சினைகளையும் உற்றார், உறவினர், நண்பர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும் நல்ல விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள்.
* அதேபோன்று மனைவி தன்னிடம் உள்ள மனக்குறையையோ, பிரச்சினைகளையோ சொன்னால் அதை காது கொடுத்து கேளுங்கள்.
* சேமிக்கும் பழக்கம் எப்போதும் உங்களிடம் இருக்கட்டும். எதிர்காலத்தில் ஏற்படப்போகும் செலவினங்கள், திட்டங்கள் போன்றவற்றிற்கு ஏற்ப உங்களது சேமிப்பு அமையட்டும்.
* குழந்தைகளைப் பற்றிய சிந்தனை எப்போதும் உங்களிடம் இருக்கட்டும். அவர்கள் எப்படி படிக்கிறார்கள், விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள், அவர்களின் குறைகள் என்னென்ன, பள்ளி, கல்லூரிகளிலும், வகுப்பின் சக மாணவர்கள் பற்றியும் அக்கறையுடன் கேளுங்கள். அப்போதுதான் குழந்தைகள் உங்களிடம் தோழமையுடன் பழகுவார்கள்.
* மனைவியைப் பிரியும் நிலையிலும் வீட்டிற்கு வரும் போதும் அன்பாக முத்தம் கொடுங்கள். முடியாத சூழ்நிலையில் புன்னகை செய்வது அவசியம்.
* அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள், உங்கள் மனைவியின் தோழிகள் பற்றி அவதூறாக எதையும் பேச வேண்டாம். அவர்களிடம் நிறை குறைகள் இருந்தால் அது பற்றி விமர்சிக்கலாம்.
* மனைவியைப் பற்றி உங்கள் பெற்றோர் கூறும் குறைபாடுகளையும் குற்றங்களையும் அப்படியே உள் வாங்கிக் கொண்டு மனைவியை சாடவேண்டாம். அதில் உள்ள சாதக, பாதகங்கள், மனைவியின் கருத்து ஆகியவற்றையும் மனம் விட்டு பேசி பின்னர் அதை தீர்ப்பதற்கான வழியைக் காணுங்கள்.
* போதைப் பழக்கமிருந்தால் அதனை உடனடியாக கைவிடுங்கள். எந்தப் பெண்ணும் போதைக்கு ஆண்கள் அடிமையாவதை விரும்புவதில்லை.
* வயதிற்கேற்ப ஆரோக்கியமான தாம்பத்யம் அவசியம்.
இப்படி சகலவிதத்திலும் நீங்கள் மனைவியை திருப்திப்படுத்துகிறவர்களாக இருந்தால் உங்களுக்கு மனைவியிடம் நல்ல பெயர் தாராளமாய் கிடைக்கவே செய்யும்.
Thanks:Thanthi
|
|
|
| உந்தப் பழமும் புளித்து விட்டதாம்? |
|
Posted by: கறுணா - 08-20-2005, 01:38 PM - Forum: புலம்
- Replies (2)
|
 |
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
வெங்காயக் கருணா
இலங்கை இராணுவமுகாம் பங்கர்
மின்னேரியா இராணுவமுகாம்
இந்நாள் பொலறறுவை மாவட்டம்
மற்றும்படி மட்டக்களப்பு
20/2005
மாமோய் "ஆ"சங்கரி
ஈ.****எப் அரசியல் பொறுப்பாளர்
நக்குமிடங்கள்-கொழும்போ! இந்தியாவோ!! கனடாவோ!!!
அன்புடையீர்!!
நானும், நீரும் சுகமாய் இருக்க இந்திய "றோ"க்கடவுள் அருலாள் என்றென்றும் அருள்பாலிப்பாராக?? ...
.... தாங்கள், கதிர்காமர் மண்டையைப் போட்டபின் இந்திய கடவுள் "றோ"வின் ஆதரவுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சராக வருவீர்கள் என கனவுலகில் மிதந்தீர்களாம்?? தங்களது புது எஜமானர்களாகிய "ஈ.*****.எப்" கூலிகளின் கூலிகளும் வானவேடிக்கைகள் செய்யக் கூட ஆரம்பித்துவிட்டார்களாம்?? தாங்களும் அடிக்கடி மொட்டைகளின் கூடமாகிய "தலதா மாளிகைக்கும்" அடிக்கடி சென்று பிரித்தும் ஓதினீர்கலாம்?? உங்களுக்காக வாய்சொல்லில் வீரர்களான "ஜெ.வி.பி"யும், காவி மொட்டைகளின் கும்பலான "பிக்குகள் முன்னனியும்" ஆதரவாக குரல் கொடுத்தனவாம்??........... அப்படியெல்லாம்ய் இருக்க.... அய்யோ!! ஐயோ!!!! ..... என்ன நடந்து விட்டது?????... கவலை தாங்க முடியவில்லை! ஒரு மனிச வர்க்கமா உந்தச் சிங்களவங்கள்?? எச்சிலிலைத் துண்டுக்கு ஆசையைக் காட்டிப் போட்டு ..... வாரி விட்டுட்டாங்களே???? ஓஓஓஓஓ............. அழுது கொண்டிருக்கிறானாக்கும்.......ஓஓஓஓ.
... ஓஒ... உங்கள் வரலாற்றில் எத்தனை சாகஸங்களை செய்தீர்கள்??????... அப்படியான உங்களுக்கா??? உந்தச் சோதனை!!!!!
... நீங்கள் ஆசிரியராகத் தொடங்கினீர்களாம்!! ஆனால் யாரும் தங்களால் முன்னேறியதாக கேள்விப்படவேயில்லை!! பின் அரசியல்வாதியாம்!! அதுகும் மாக்ஸ்ஸீயவாதியாம்!! அதுகும் கொள்கைப் பற்றுக்கொண்ட ஆரம்பகால சமஸமாயக்கட்சியின் மூத்த உறுப்பினராம்!! மக்கள் ஆதரவற்ற சமஸமாயிகளுடனிருந்து இலங்கைப் பாராளுமன்றத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாதென்ற உண்மையுணர்ந்த மாமேதை!!! முடிபு... இலங்கை தமிழ்க்காங்கரசின் உறுப்பினர்!!!!!!!!!! பின் கூட்டனியென்று பரந்துபட்ட உங்கள் கதிரைக்கான அரசியலில் இன்று ஏ.****எல்.எப்பின் பிரச்சாரப் பீரங்கி!!!!!..ஆனால்....... என்ன கிடைத்தது?? இந்தப் கதிரைகளுக்காகத்தானே எத்தனை திருவிளையாடல்களைச் செய்தீர்கள்?? அமிர்தலிங்கத்தை, எண்பதுகளில் ஆரம்பத்தில் "புளொட்"டினுள் அன்றிருந்த பிரபல நெல்லுமூட்டை, கோழி, ஆடு, மாட்டுப் புகழ் "பரந்தன் ராசன்"இன் உதவியுடன் போட முனைந்தீர்கள்!! ஆனால் இன்றோ அதே அமிருக்காக ஓநாய் அழுகையாம்!!! ..... கடந்த முறைக்கு முந்திய இலங்கைப் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் "கூட்டணியின் பெயரால்" வென்று எம்.பியானதும், "துணை சபாநாயகர்" பதவிக்காக, சந்திரிக்காவின் "கக்கா" கூட அள்ள தயாராக இருந்தீர்களாம்!!! ஆனால்... அந்தப் பழம் கூட உங்களுக்கு எட்டவில்லையாம்!! ஐயோ! என் செய்வது? இன்றோ அவ்ற்றை விட சோகம்!! ஏதாவது ஒண்றாவது வருமென்ற நம்பிக்கையில்தானே, மாற்றுக்கருத்தாளர்களாகினீர்கள்!! கிடைத்ததோ அந்த ஐணூறு மட்டுமே!! உந்த ஐணூறுக்காக "றோ"க் கடவுள் வாரியிரைத்தது கொங்ச நஞ்சமா!! கடைசியாக அதுகுமில்லை! இதுகுமில்லை!! எதுகுமில்லை!!! ...... ஓஓஓஓஓஓஓஓ...........
மாமோய்........ என் நெஞ்சே வெடித்து விடும் போலுள்ளது!! ...........ஆஆஆஆ.......உந்த கட்டையிலை போற வயசில் எத்தனை ஏமாற்றங்கள்! எத்தனை சோகங்கள்!!............. உந்தக் கவலைகளிலேயே தொப்பென்று போனாலும் போய் விடுவீர்கள் போலுள்ளது?? ஆரும் போடவும் தேவையுமில்லை!!!! இப்படியே போனாலும் அந்தக் குண்டுகளும் மிச்சம்தானே!!!!!!
இந்த வெங்காயமும், உங்கலுக்குப் பக்கத்திலிள்ளை! இங்கு பங்கருக்குள் சுருட்டிப் போட்டார்கள்!! பக்கத்திலிருந்தாவது உங்கள் சோதனை, வேதனை, ரோதனை, ...களில் பங்குபற்றியிருப்பேன்!!!!!! ஒருக்கால் இறுக்கக் கட்டிப் பிடித்து அழுதிருந்தால் என் சோகமும் கொஞ்சம் தீர்ந்திருக்கும்!!!! ... ஓஓஓஓஓஓஒ......
ஆனால்.......தளராதே! கட்டையிலை போகுமட்டும் நக்கிற எச்சிலிலைகளை நக்கு!! கழுவாதவங்களின் .... கழுவு!! காட்டிக் கொடுக்கக் கூடிய மட்டும் தமிழனைக் காட்டிக் கொடுத்திடு!! .... எல்லாவற்றிற்கும் மேலாக "பாரதியின்" வாய்ச்சொல்லில் வீரனாக இருந்திடு!! .......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............
......... உதை எழுதும்போது எங்கிருந்தோ .. அந்தப் பாடல் ....... கேட்கிறது ........
...."நெஞ்சில் துணிவுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை செய்வாரடி
கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி!!".............
.......... அது ஏதோ கேட்குது..... அது பாடட்டும் ..... உதெல்லாம் எங்களுக்கு ஏறப் போகுதோ! சுனைக்கப் போகுதோ!!........ அதெல்லாம் இரத்தத்திலை ஊறினது! மாறாது!! மாற்றவும் முடியாது!!!!!!
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
|
|
|
| உன்நினைவு ஈரமாய் |
|
Posted by: inthirajith - 08-20-2005, 01:11 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
யாருக்கும் தெரியாமல் உறவு பூ உன் கèத்தில்
அந்த உறவு புரியாமல் நம்மை பிரிக்கநினைக்கும்
உலகம் நென்சிநில் நிலையாய் நீ உனக்கு அற்பமாய்
என்நினைவுகள் நென்சில் தீயாய் உன்முகம் நினைவுகள்
பின்னோக்கி நீ தந்த அன்புமுத்தம் பரதனிடம்
பாதுகையாய் உன் இரு அன்பு பரிசுகள் அதன் வாசத்தில்
நீ வருவாய் என்று சொன்ன உன் வார்த்தைகள்
நம்பிக்கை தானே என் உயிரில் கலந்த உணர்வு
தாய் நாடு போகாதே உயிரே என்று தடுத்தாய்
உன் வார்த்தை மீறி அறிந்தது இல்லை மதன்
வார்த்தைகள் நிஜம் என்றால் காதலில் நிரந்தர
பிரிவே இல்லை தற்காலிகமாக விலகி இருப்போம்
மனதில் சேர்ந்தே இருப்பேன் நடு இரவில் உன்
நினைப்பில் நான் அணைப்பது உன் வாசமுல்லை
அதில் உன்வாசம் தீரமுன் வந்துவிடு
[/b]
|
|
|
| ஷங்கர் இயக்கத்தில் ரஜனி ! |
|
Posted by: Mathan - 08-20-2005, 02:26 AM - Forum: சினிமா
- Replies (17)
|
 |
ஏவிஎம் படத்தில் ரஜினி: ஷங்கர் இயக்குகிறார்
<img src='http://www.dinamani.com/cinema/images/Aug05/20shankar.jpg' border='0' alt='user posted image'>
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரஜினியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது.
ஏவிஎம் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தை இயக்குவது ஷங்கர்.
எம். சரவணன், எம்.எஸ். குகன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏவிஎம்மின் 168-வது படமிது. இந்நிறுவனத்தில் ரஜினி நடிக்கும் 9-வது படமிது. அதே போல ஷங்கர் இயக்கும் 9-வது படமிது. ரஜினியின் ராசி எண்ணும் 9 என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்துக்கான தலைப்பு இன்னும் சூட்டப்படவில்லை. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் கதை விவாதத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் ஷங்கர்.
இது தொடர்பாக ஷங்கரிடம் கேட்டபோது, "ரஜினியின் படத்தை இயக்கப்போவது சந்தோஷமான விஷயம். பெருமையாக இருக்கிறது. அதே சமயம் பொறுப்பும் அதிகமாக இருக்கிறது' என்றார்.
இயக்குநர்கள் பி. வாசு, ராஜா ஆகியோரும் தனித்தனியே ரஜினியின் புதிய படத்துக்காக கதை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போகும் செய்தி திடீரென வெளிவந்துள்ளது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.தினமணி
|
|
|
| சமாதானப் பேச்சு வார்த்தைகள் சில வாரங்களில் |
|
Posted by: AJeevan - 08-19-2005, 08:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'><b>Tamil Tigers say talks to salvage Sri Lanka truce to start within two weeks </b>
08.19.2005, 08:13 AM
COLOMBO (AFX) - Sri Lanka's Tamil Tigers will hold talks with the Colombo government on salvaging their truce 'in a couple of weeks' in Norway, Agence France Presse reported a pro-rebel website quoted the separatists' top negotiator as saying.
The Liberation Tigers of Tamil Eelam (LTTE) wrote to peace broker Norway agreeing to hold talks amid fears for the ceasefire following last week's assassination of Foreign Minister Lakshman Kadirgamar, Tamilnet reported.
'The LTTEs theoretician (Anton Balasingham) revealed that the talks, facilitated by the Norwegians, would be held in Oslo within the next couple of weeks,' the Tamilnet website said.
aj/fz/ec
COPYRIGHT
Copyright AFX News Limited 2005. All rights reserved.</span>
|
|
|
|