Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 503 online users.
» 0 Member(s) | 501 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,412
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,207
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு .....
Posted by: விது - 09-09-2005, 05:27 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (32)

இளமையெனும் புூங்கற்று பாடியது ஓர் பாட்டு...பகலில் ஓர் இரவு திரைப்படத்தில் வரும் இப்பாடலை எங்காவது தரையிறக்கம் செய்ய முடியுமா பாடலாகவே அல்லது கீபோர்ட் நோட்சாகவோ..

Print this item

  MSN உதவிகள் சில
Posted by: Vishnu - 09-08-2005, 06:21 PM - Forum: இணையம் - Replies (4)

உங்கள் கணணியில் ஒன்றுக்கு மேற்பட்ட MSN-7 பயன்படுத்த விருப்பமா?? கீழே உள்ள மென்பொருளை பயன்படுத்தவும். முதலே அறிந்தவர்கள் மன்னிக்கவும்.

http://mastaline.com/msn/download.php?id=45

Print this item

  தேநீர்
Posted by: SUNDHAL - 09-08-2005, 05:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

உலகம் முழுவதும் விரும்பி அருந்தப்படும் பானம் தேநீர். இதன் உபயோகம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஷென்-நுங் என்ற சீன அரசனால் தற்செயலாகக் கண்டறியப்பட்டது.

வனப்பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது கொதிக்கும் நீரில் தற்செயலாக விழுந்த காய்ந்த தேயிலைகள் நறுமணத்தை உருவாக்கின. நீரை அருந்தியபோது புத்துணர்ச்சி தரும் விதத்திலும் இருந்தது. அன்றிலிருந்து தேநீர் அருந்தும் பழக்கம் சீனாவில் உருவாகியது.

சீனாவிலிருந்து ஜப்பான், அங்கிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவியது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தாவரவியலாளர் ராபர்ட் ஃபார்ச்சூன் என்பவர் சீனாவிலிருந்து தேயிலை விதைகளையும், அதைப் பயிரிடும் முறையையும் கற்று வந்து இங்கிலாந்து அரசின் உதவியுடன் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டு வளர்க்க முயன்றார். தவறான மண் தேர்வு, தவறான பயிரிடும் முறைகளின் காரணமாக இம்முயற்சி பலமுறை தோல்வியடைந்தது. தொடர் முயற்சிகளின் காரணமாக இந்தியா மற்றும் ஆசியாவில் தேயிலை பரவியது. இங்கிலாந்தில் 1880களின் பிற்பகுதியில் தேயிலை வாணிபம் தனித்தொழிற்துறையாக வளர்வதற்கு உதவியது.

இங்கிலாந்தில் தேநீர் அருந்தும் பழக்கம் அதிகரிக்கவே "தேநீர்த் தோட்டங்கள்' எனப்படும் தேநீர் விடுதிகள் உருவாகின.

மொத்தம் 3000-க்கும் மேற்பட்ட தேயிலை வகைகள் உள்ளன. தேயிலையைப் பறித்த பின்னர் அதை பதப்படுத்தும் முறையைப் பொருத்து பிளாக் டீ, கிரீன் டீ, ஒய்ட் டீ, ஊலாங் டீ(சீனாவில் பிரபலம்) என நான்கு வகையாகப் பிரிக்கின்றனர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்காட்லாந்து டீ மாஸ்டர் டிரிஸ்டேல் என்பவரால் கண்டறியப்பட்ட முறைகள் இவை.

தேயிலையில் உள்ள முக்கியப் பொருள்கள் எண்ணெய், காஃபின், பாலிஃபீனால் (டானின் என்பது தவறாகும்). எண்ணெய்களே தேயிலைக்கு மணம் தருபவை. காஃபின் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி புத்துணர்வை ஏற்படுத்தக்கூடியதாகும். பாலிஃபீனால்கள் நோய் எதிர்ப்புத் தன்மைகளைத் தரக்கூடிய ஆன்ட்டிஆக்சிடண்ட் ஆகும்.

ஒரு தேயிலைச் செடி(புதர்) 50 ஆண்டுகளுக்கு தேயிலை தரும்

Print this item

  Paramilitary cadre dies
Posted by: வினித் - 09-08-2005, 04:31 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

Paramilitary cadre dies in police gunfire - SLA

[TamilNet, September 08, 2005 14:31 GMT]
A paramilitary cadre from Karuna Group was shot and killed while he was engaged in a clash with a Liberation Tiger cadre Thursday morning around 10:00 a.m. Thursday, Sri Lanka Army sources claimed. The incident took place at Boundary Road Junction near Mamangam temple, 2 km east of Batticaloa town. However, initial reports from the Police said that the policemen, upon hearing gunshots, reached the site and shot at unidentified armed men who were fleeing from the scene. One person died and another was rushed to Batticaloa Hospital.
A pistol was recovered from the dead cadre, Police said.

The dead body is lying at Batticaloa Hospital. The body is yet to be identified, according to hospital sources.

The cadre shot dead by the policemen was a Karuna Group cadre, SLA sources claimed later.

SLA sources said that the injured person was an LTTE cadre.

The injured person identified as Mr. Regionld Silva is a former liquor shop owner. He was arrested by the Sri Lankan Police and released after 7 months in police custody, civilian sources said.

The incident "amply proves that both Security Forces and the Police are dedicated to maintain law and order with no bias to any of the Tamil Tiger factions," a news release by the Sri Lanka Army claimed.


Email this article Print this article


Reproduction of this news item is allowed when used without
any alterations to the contents and the source, TamilNet, is mentioned


- SLA

[TamilNet, September 08, 2005 14:31 GMT]
A paramilitary cadre from Karuna Group was shot and killed while he was engaged in a clash with a Liberation Tiger cadre Thursday morning around 10:00 a.m. Thursday, Sri Lanka Army sources claimed. The incident took place at Boundary Road Junction near Mamangam temple, 2 km east of Batticaloa town. However, initial reports from the Police said that the policemen, upon hearing gunshots, reached the site and shot at unidentified armed men who were fleeing from the scene. One person died and another was rushed to Batticaloa Hospital.
A pistol was recovered from the dead cadre, Police said.

The dead body is lying at Batticaloa Hospital. The body is yet to be identified, according to hospital sources.

The cadre shot dead by the policemen was a Karuna Group cadre, SLA sources claimed later.

SLA sources said that the injured person was an LTTE cadre.

The injured person identified as Mr. Regionld Silva is a former liquor shop owner. He was arrested by the Sri Lankan Police and released after 7 months in police custody, civilian sources said.

The incident "amply proves that both Security Forces and the Police are dedicated to maintain law and order with no bias to any of the Tamil Tiger factions," a news release by the Sri Lanka Army claimed.

Print this item

  இத படிங்க முதல்ல...
Posted by: SUNDHAL - 09-08-2005, 02:30 PM - Forum: நகைச்சுவை - Replies (2)

சில நேரங்களில் சில நூல்கள்!





காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு!
ஆசிரியர்: சதக் செல்லப்பா.

இது ஒரு நாவல் (என்று நம்பப்படுகிறது). கதையின் முதல் பக்கத்தில் திடீரென காணாமல் போய்விடும் அப்புசாமியைத் தேடிப்போகும் சுப்புசாமி காணாமல் போய்விடுகிறான். சுப்புசாமியைத் தேடிப்போகும் ராமசாமியும் காணாமல் போய்விட, ராமசாமியைத் தேடிப்போகும் கோவிந்தசாமியும் காணாமல் போய்விட, கோவிந்தசாமியைத் தேடிப்போகும் அப்புசாமியும் (சுப்புசாமி தேடிப்போகும் ஆள்தான்) காணாமல் போய்விடுகிறான் என கடைசிப் பக்கத்தில் கூறுகின்றார் ஆசிரியர். "மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து படிக்கவும்' என ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தகத்தைப் படித்து முடிக்கவே முடியாமல் வாசகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.

(வெளியீடு: காற்புள்ளி பதிப்பகம், நாவலூர். பக்கம்: 171; விலை: போடவில்லை).


30 நாட்களில் தூய தமிழ் பேசுவது சுலபம்!
ஆசிரியர்: இங்கிலீஷ்காரன்

"ஆக்சுவலி திஸ் புக் டெஸ்கிரைப் அபெüட் ஹெü டூ ஸ்பீக் இன் ப்யூர் டமில். திஸ் புக் இஸ் டீப்லி டெஸ்கிரைப் ஆல் டமில் வேர்ட்ஸ் வித் மீனிங் அன்ட் புரெüனன்சேஷன்' -இப்படி அட்டை டூ அட்டை தமிழ் கற்றுக்கொடுப்பதாக ஆங்கிலத்திலேயே ஜல்லியடித்திருக்கிறார்கள். அட்டையில் தலைப்பைத் தவிர வேறெங்கும் தமிழ் தேடினாலும் கிடைக்காது.

(வெளியீடு: ராமதாஸ் பதிப்பகம், சென்னை. பக்கம்: 420; விலை: 30$)


சாம்பார் வைப்பது எப்படி?
ஆசிரியர்: முருங்கைப்ரியா

சாம்பார் வைப்பது எப்படி என ர்ர்ரொம்ம்ப்ப விரிவாக விளக்கும் நூல். சாம்பாருக்குத் தேவையான பருப்பை, மிளகாய் வற்றலை, காய்கறிகளை எப்படி பயிர் செய்ய வேண்டும் என ஆ"ரம்ப'த்திலிருந்தே ஆரம்பித்து, அணு அணுவாக விளக்குகிறது. சாம்பார் வைக்கும் சட்டியின் விட்டம், உயரம், கரண்டியின் நீளம் எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டுமென தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது இதில்! இந்த நூலைப் படித்துப் பொறுமையாக உங்கள் ஆயுசு முடிவதற்குள் ஒரு முறையாவது சாம்பார் வைத்துவிடலாம். ஆனால் கடைசியில் சாம்பாருக்கு உப்பு போட மறந்துவிட்டார்கள்.

(வெளியீடு: பருப்பு பதிப்பகம், காரைக்குடி. பக்கம்: 222; விலை: ரூ.100)


பிரேக்கூ கவிதைகள்
ஆசிரியர்: ஜூஜூபி

ஒரு புதிய வகை கவிதை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். பிரேக்கே இல்லாமல் இஷ்டத்துக்கு வார்த்தைகளை வாரித் தெளிப்பதுதான் "பிரேக்கூ' என்கிறார் கவிஞர்.

"துப்பாக்கியின் கொட்டாவியில்
சுளுக்கெடுக்கும் பட்டாம்பூச்சியின்
சட்டைப் பொத்தானுக்கு'

என ஆரம்பிக்கும் ஒரு கவிதை பிரேக்கே இல்லாமல் 22 பக்கங்கள் கழித்து

"வாலில்லா வாசலில்
வந்து நிற்கும் டவுன்பஸ்! என்று முடிகிறது!

(வெளியீடு: எடக் மடக் பதிப்பகம், சென்னை. பக்கம்: 534; விலை: ரூ94.15)

உடம்பை வளர்க்க உபயோகமான வழிகள்

ஆசிரியர்: தொப்பையப்பன்

இது மனிதர்களின் உடல் நலம் சம்பந்தப்பட்ட புத்தகமல்ல. நீங்கள் யானை வளர்த்தால் அதனை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என விளக்கும் நூல். யானைக்கு எப்படி பல் தேய்ப்பது, யானையின் தொப்பையை எப்படிக் குறைப்பது என புகைப்படங்களுடன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது.

(வெளியீடு: யாரென்று போடவில்லை. பக்கம்: 120; விலை ரூ.35)


வாஸ்து உங்கள் தோஸ்து
ஆசிரியர்: வாஸ்தவா

வாஸ்து சாஸ்திரப்படி இந்தப் புத்தகத்திற்கு அட்டை கிடையாது. வீட்டின் ஈசான மூலையில் படுத்துத் தூங்கினால் "பீஸôன' மூளையும் இயங்க ஆரம்பிக்கும், வடதென்மேல்கிழக்குத் திசையில் பச்சை நிற கிழிந்த பாயின்மேல் 35 டிகிரி சாய்வாக டி.வி.யை தலைகீழாக வைத்துப் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது போன்ற பல பயனுள்ள வாஸ்துக் குறிப்புகள் புத்தகம் முழுவதும் வாஸ்துப்படி தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளது. நம் வீட்டுக்குள் ஆமை புகுந்தால் ஆமையின் வீட்டுக்குள் நாம் புகுந்துவிட வேண்டும் என பல அரிய யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

(வெளியீடு: செங்கல் பதிப்பகம், கலவையூர். பக்கம்: 84 1/2; விலை: ஒரு லோடு மணலின் விலை)


மனம் ண்ள் ஹ மனம்
ஆசிரியர்: சுவாமி சுனாமியானந்தா

மனம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதை அடக்கி ஆள்வது என்பது லாரிக்கு பின் நின்று கூட்டத்தில் முட்டி மோதி ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமம். மனிதர்களின் மனம் என்பது கார்ப்பரேஷன்காரன் தோண்டிப்போட்ட குழி போன்றது! பெரிய மனிதர்களின் மனம் என்பது மாநகராட்சி குப்பை வண்டிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒற்றைக் குப்பைத் தொட்டி போன்றது! -இது போன்ற சுவாமிஜியின் ஆழ்ந்த அனுபவ உரைகள் புத்தகம் முழுவதும் உப்பிக் கிடக்கிறது. "ராகித்ய அகாதெமி' விருதுக்காக இந்தப் புத்தகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(வெளியீடு: உள்ளீடு பதிப்பகம், கீழ்ப்பாக்கம். பக்கம்: 238-ல் ஆரம்பித்து 11-ல் முடிகிறது. விலை: நம் மனம் விரும்பும் விலை.)


குருதிக் கோட்டுக் குருவிகள்!
ஆசிரியர்: ரெüத்ரப்பித்தன்

இந்நூல் பின் நவீனத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 222 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது 25 பக்கங்கள். எந்தக் கட்டுரையிலும் தான் சொல்ல வருவது எந்த ஒரு வாசகனுக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டிருக்கிறார் ஆசிரியர். "நான் சொல்ல வருவது புரிதலையும் தாண்டிய புனிதம். நான் எழுதிய சில விஷயங்கள் எனக்கே புரியவில்லை' என்ற ஆசிரியரின் முன்னுரையைப் படிக்கும்போது மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.

(வெளியீடு: பிச்சைப்பாத்திரம், தர்மபுரி. பக்கம்: எண்ண முடியவில்லை. விலை ரூ.800)


108 வகைக் கோலங்கள்
ஆசிரியர்: புள்ளிராணி

விதவிதமான புள்ளிக் கோலங்களைப் போடக் கற்றுக்கொடுப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கமே. நூலாசிரியர் காதல் வயப்பட்டிருப்பதால் "புள்ளி வைச்சுக் கோலம் போட மறந்து'விட்டார். அதனால் கோலப் புத்தகம் அலங்கோலப் புத்தகமாகிவிட்டது.

(வெளியீடு, பக்கம், விலை: ரொம்ப முக்கியம்!)


எலக்கன பிலையின்றி எலுதுவது எப்டி?
ஆசிரியர்: தமிழ்க்கோடாரி

"இலக்கணப் பிழையின்றி எழுதுவது எப்படி?' என வந்திருக்க வேண்டிய புத்தகம். பக்கத்திற்குப் பக்கம் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இப்படி வந்திருக்கிறது. நூலாசிரியருக்கு தமிழில் பெரிய "ழ' என்னுமொரு எழுத்து இருப்பதே தெரியாது போல! "ஆ' என்பதை "அô' எனவும், "ஈ' என்பதை "இô' எனவும், மேலும் "உô', "எô', "ஒô' எனப் பல புதிய எழுத்துகளைக் கண்டுபிடித்து தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கிறது இந்நூல்.

(வெளியீடு: நியூ பதிப்பகம், செம்மொழியூர். பக்கம்: 120 (எழுத்துப் பிழையின்றி ஒரே ஒரு வெற்றுப்பக்கம்); விலை: ரூ.33).

ThanksBig Grininamani.....

Print this item

  21நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையளராக உருவெடுக்க போகிற
Posted by: stalin - 09-08-2005, 01:30 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (4)

http://www.thinakural.com/New%20web%20site...8/Article-3.htm 21 ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறாரா கார்ல் மார்க்ஸ்?

பிரான்ஸ் வீன்

கையில் ஒரு செப்புக் காசு தானும் இல்லாமல் புலம்பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழி தூற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். `அகதி' என்ற சொல்லைக் கேட்டாலே வலதுசாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தான். எனினும், தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது, 1883 இலேயே இறந்துவிட்டவர்.

ஆம்! `மார்க்ஸ் எனும் அரக்கன்' என்பதே மேற்படி கட்டுரையின் தலைப்பு. பி.பி.சி. `ரேடியோ- 4' அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்ததுதான் இந்த வெறி கொண்ட எதிர்வினைக்குக் காரணம்.

"ஸ்டாலின், மாவோ, போல்பாட், முகாபே போன்ற கொலைகாரச் சீடர்களை உருவாக்கிய ஒரு மனிதனை உலகின் தலைசிறந்த தத்துவஞானியாக எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?"- இது அந்தப் பத்திரிகை எழுப்பியிருக்கும் கேள்வி.

இந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் புரிந்து கொள்ளத்தக்கதே. 15 ஆண்டுகளுக்குமுன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பின், "மார்க்ஸின் கதை இதோடு முடிந்தது" என்றொரு கருத்து பொதுவாகப் பரவியிருந்தது. "அவர் செத்துவிட்டார், லண்டன் கல்லறையில் எஞ்சியிருக்கும் அவரது உடலின் எச்சங்கள் பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குக் கீழ் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டன. யாரும் அவரைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை. அவரது சிந்தனைகளை இனி படிக்கவே தேவையில்லை" என்பதே அந்தப் பொதுக் கருத்து.

பனிப்போர் முடிவுக்கு வந்த அந்த காலகட்டத்தில் பிரான்சிஸ் புகுயாமா கூறினார், "நாம் கடந்து சென்று கொண்டிருப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டமல்ல; நாம் காண்பது வரலாற்றின் முடிவு. மனித குலத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கே எல்லை இது தான். இத்துடன் முடிந்தது" இது அவரது பிரகடனம்.

வரலாறோ திரும்பியது; ஒரு வன்மத்துடன் விரைவிலேயே திரும்பியது. 1998 ஆகஸ்டில் ரஷ்யாவின் பொருளாதாரம் கற்பூரமாய்க் கரையத் தொடங்கியது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. உலக சந்தை முழுவதும் பீதி பரவத் தொடங்கியது.

"உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டி பத்தாண்டுகள் கூட ஆகவில்லையே! அதற்குள்ளாகவா நாம் நெருக்கடியில் சிக்கிவிட்டோம்?" என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டது லண்டனின் "ஃபைனான்சியல் டைம்ஸ்" பத்திரிகை. அந்தக் கட்டுரையின் தலைப்பென்ன தெரியுமா? "டாஸ் காபிடலை (மார்க்சின் "மூலதனம்" நூலை) இன்னொரு முறை புரட்டிப் பார்ப்போம்!"

முதலாளித்துவ அமைப்பினால் பெரிதும் ஆதாயம் அடைந்தவர்கள் கூட "நம்முடைய வண்டி தொடர்ந்து ஓடுமா?" என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார்கள்.

"தானும் தன்னையொத்த முதலாளிகளும் தங்களது மந்தை மனப்பான்மையை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த மந்தையின் காலடியில் எல்லோரும் மிதிபட்டுச் சாகவேண்டியதுதான்" என்று எச்சரிக்கை செய்கிறார் மிகப் பெரிய கோடீஸ்வரனும் ஊகச் சந்தை வணிகனுமான ஜார்ஜ் சோரோஸ்.

"முதலாளித்துவ அமைப்பைப் பற்றி நம்முடைய செவ்வியல் பொருளாதார வல்லுநர்கள் கூறும் சம நிலைக் கோட்பாட்டைக் காட்டிலும் சிறந்த முறையிலான ஆய்வை 150 ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்ஸும் ஏங்கெல்ஸும் வழங்கியுள்ளனர் என்று நிச்சயமாக என்னால் கூற முடியும்.

"அச்சுறுத்தும் வகையில் கூர்மையான அவர்களது ஊகங்கள் உண்மையாகாமல் போனதற்குக் காரணம் இருக்கிறது. ஜனநாயக நாடுகளில் (கம்யூனிச அபாயத்தைத் தடுக்க) எதிர்நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள்தான் அதற்குக் காரணம். வரலாறு நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அந்தப் பாடங்களிலிருந்து கூடத் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நாம் வருகிறோம். இன்னொரு முறை இதே தவறை நாம் செய்யும் அபாயம் இருக்கிறது. இந்த முறை அபாயம் கம்யூனிசத்திடமிருந்து வரவில்லை- சந்தை கடுங்கோட்பாட்டு வாதம் தான் இன்று நமக்கெதிரான அபாயமாகும்".

இவையெல்லாம் உலகின் மிகப் பெரும் ஊகச் சந்தை வணிகனான ஜார்ஜ் சோரோஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.

`நியூயோர்க்கர்' பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான் காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த உரையாடலைப் பற்றி அக்டோபர் 1997 இல் எழுதினார். "வால் தெருவில் (நியூயோர்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ. அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் மேற்கொண்ட முறைதான் சரியானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை" என்று சொன்னாராம் அந்த வங்கி முதலாளி.

மார்க்ஸின் நூல்களை இதுவரை படித்திராத செய்தியாளர் காசிடி, ஆவலை அடக்கமாட்டாமல் முதன் முறையாக மார்க்ஸைப் படித்தாராம். "உலகமயமாக்கம், ஏற்றத்தாழ்வுகள், அரசியல் ஊழல், ஏகபோகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கலாசாரத்தின் வீழ்ச்சி, தொடர்ந்து உயிர்த்துடிப்பை இழந்து வரும் நவீன வாழ்க்கையின் தன்மை - இவை பற்றியெல்லாம் ஆணி அடித்தாற்போலப் பேசும் மார்க்சின் எழுத்துக்களைக் கண்டேன். இதே விடயங்களைத்தான் இன்றைய பொருளாதார வல்லுநர்கள் ஏதோ புதிய பிரச்சினைகளாகக் கருதி எதிர்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில், மார்க்ஸின் கால்தடம் பதிந்த பாதையில்தான் செல்கிறோம் என்பதை அறியாமலேயே அந்தப் பாதையிலும் நடக்கிறார்கள்" இவை மார்க்ஸைப் படித்த பின் நியூயோர்க்கர் இதழில் காசிடி எழுதிய கருத்துக்கள்.

முதலாளி வர்க்கம் இன்னும் சாகவில்லை. மார்க்ஸும்தான் சாகவில்லை. முதலாளித்துவத்தைப் பற்றிய அவரது கணிப்புகளில் சில நிறைவேறாமல் போயிருக்கலாம்; அவர் தவறிழைத்திருக்கலாம்; ஆனால், முதலாளித்துவம் என்ற மிருகத்தின் இயல்பை வெளிக் கொணர்ந்து காட்டிய அவரது ஆய்வின் கூர்மை இருக்கிறதே - அந்த ஊடுருவிச் செல்லும் கூர்மை - அது அவரது கணிப்பில் நேர்ந்த சில பிழைகளையெல்லாம் புறந்தள்ளிக் கடந்து சென்றுவிட்டது.

கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் எழுதினார்: "ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி கலைதலும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்பும் முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய எல்லா சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.

சமீப காலம் வரையிலும் இங்கிலாந்திலும் பலர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் தொடர்ந்தார்கள்: அல்லது ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் இன்று? அப்படி யாரையாவது நாம் காட்ட முடியுமா? மார்க்ஸ் கூறியதைப் போல. "திடப் பொருட்கள் எல்லாம் காற்றில் கரைகின்றன" அல்லவா?

உண்மையில் மனிதனுக்கு மட்டுமே உரியவையாக இருக்கும் அனைத்தும் சரக்காக, உயிரற்ற சடப்பொருளாக உறைந்து போவதையும். அந்தச் சரக்கானது. பேராற்றலையும் உயிர்த் துடிப்பையும் பெற்று தன்னை உற்பத்தி செய்த மனிதர்களையே கொடுங்கோன்மைக்கு ஆளாக்குவதையும் தனது தலைசிறந்த படைப்பான மூலதனத்தில் மார்க்ஸ் நிரூபித்துக் காட்டுகிறார்.

நம்முடைய வாழ்க்கையை ஆளும் சக்திகளைப் பற்றியும் அவை நம் வாழ்வில் தோற்றுவிக்கும் நிச்சயமின்மை, அந்நியமாதல், சுரண்டல் போன்றவை பற்றியும் மார்க்ஸ் வழங்கியுள்ள சித்திரிப்பு இன்னும் எதிரொலித்த வண்ணம் தான் இருக்கிறது. அது உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்தே தீரும். பி.பி.சி. வானொலியின் கருத்துக் கணிப்பு காட்டும் உண்மை இதுதான்.

பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் மார்க்ஸ் புதைக்கப்பட்டு விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை. இப்பொழுதுதான் தனக்குரிய உண்மையான முக்கியத்துவத்துடன் அவர் எழுந்து வரப் போகிறார். இதனைப் புரிந்து கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ, முடியாமல் வலதுசாரிப் பத்திரிகைகள் என்னதான் ஊளையிட்டாலும், 21 ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறார்கள் கார்ல்மார்க்ஸ்.

(கட்டுரையாளர் `கார்ல் மார்க்ஸ்' என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர். லண்டன் கார்டியனில் வெளியானதே இக் கட்டுரை)

Print this item

  உதவி தேவை
Posted by: Eelavan - 09-08-2005, 01:16 PM - Forum: நூற்றோட்டம் - Replies (4)

அன்பின் கள உறவுகளுக்கு வணக்கம்

முன்னொருமுறை வெங்கட் எழுதிய ஹார்வர்ட்-கூகுள் மின்னூலாக்கத் திட்டத்தைப் பற்றிய கட்டுரைய மதன் இங்கிட்டதை மறந்திருக்கமாட்டீர்கள்.

அந்தக் கட்டுரையில் வெங்கட் சுட்டிக்காட்டிய விடயம்.யாழ் நூலகத்தின் எரிப்பும்பலகோடி பெறுமதியான நூல்களின் இழப்பும்.அதன் பின்னர் தமிழ்நூல் மற்றும் ஆவணக் காப்பகம் பற்றிய கருத்துருவாக்கம் வலுப்பெற்று சில தனிநபர்களால் முன்னெடுக்கப்பட்டும் வந்திருக்கிறது.

அவற்றையெல்லாம் ஒருங்கிணைப்பது தனிநபர் சார்ந்த விடயமல்ல.பல்கலைக்கழகங்களோ நிறுவனங்களோ செய்யவேண்டிய விடயங்கள்.

ஆனாலும் அவற்றுக்காகக் காத்திருக்கும் காலத்தில் எஞ்சிய பல நூல்களும் மெல்ல மெல்ல அழிந்து விடுமோ டென்ற அச்சம் எழுகிறது.

இவ்வாறான ஒரு சிந்தனையின் அடிப்படையில் திரு.பத்மநாப ஐயர் மதுரைத் திட்டம் என்னும் மின்னூலாக்கத் திட்டத்தில் ஈழத்து நூல்களின் பங்களிப்பையும் சாத்தியமாக்கினார்.பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டமும் கிடப்பில் இருக்கிறது.ஆகவே புதியதொரு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது

நூல்களை இணையத்தில் ஆவணம்மாக்கவேண்டிய தேவை தமிழகத் தமிழர்களை விட ஈழத்தமிழர்களுக்கு உண்டு.யாழ் பொது நூலகம்,ஹாட்லிக் கல்லூரி நூலகம்,யாழ் பல்கலைக்கழக நூலகம் என்று பலவிதமான இழப்புகளைச் சந்தித்தவர் நாங்கள்

அவ்வாறான இழப்புகள் தீண்டாதவண்ணம் எமது தமிழுக்கு வளம் சேர்த்த நூல்களை இணையத்தின் சாத்தியப் பாடுகளைப் பயன்படுத்திப் பாதுகாக்கவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.

அதனைச் செயற்படுத்துவதற்காக நண்பர்கள் சிலர் சேர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

உங்களின் உதவி கீழ்வரும் செயற்பாடுகளில் தேவைப்படுகிறது.

முக்கியமான நூல்களை(அவை கட்டுரை,நாவல் எவ்வாறாகவும் இருக்கலாம்) தட்டச்சுச் செய்தல்.அவற்றின் ஆசிரியர்களை அறிந்திருப்பின் அனுமதியையும் பெற்றுக்கொள்ளல்

அவற்றைச் செவ்வை பார்த்தல்

அவ்வாறான நூல்கள் கைவசம் இருந்து உங்களால் தட்டச்சுச் செய்ய முடியாதிருப்பின் அவற்றின் ஒளிப்பிரதியையோ(photocopy) அல்லது.மின்படமாகவோ(Scan copy) எமக்கு அனுப்புதல்.

ஈழத்து எழுத்தாளர்கள்,ஆவணங்களை வைத்திருப்பவர்கள் பலரும் புலத்தில் வதிவதால் நீங்கள் அறிந்தவர்கள்/உறவினர்களிடம் இதுபற்றி எடுத்துக் கூறி அவர்களின் நூல்களைப் பெற்றுத்தருதல்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள் eelanathan@gmail.com

அன்புடன்
ஈழவன்

Print this item

  மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் பேரினவாதிகள்
Posted by: வினித் - 09-08-2005, 11:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சிங்கள மக்களை மீண்டும் முட்டாளாக்க
முயற்சிக்கும் சிங்கள பேரினவாதிகள்

மிகச் சிறிய நாடான இலங்கையில், பிரிவினை எதற்கு? நாமெல்லாம் சேர்ந்து வாழலாமே! என்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோது முடிவெடுத்தவர்கள் தமிழர்கள். இருந்தாலும் இந்த முடிவு தவறு என்று விரைவிலேயே அனுபவ ரீதியாகப் பாடம் புகட்டினார்கள் பேரினவாத சிங்களத் தலைமைகள்.

ஐம்பதுக்கு ஐம்பது என்ற வகையில் நாட்டின் உரிமைகளைப் பிரித்துக் கொள்ளலாமே என்று ஜி.ஜி.பொன்னம்பலம் கேட்டபோது, அதை மறுத்த டி.எஸ்.சேனநாயக்க, அதற்குப் பதிலாக, 60 க்கு 40 என்று பிரித்துக்கொண்டு ஆட்சியமைக்கும் திட்டத்தை முன்மொழிந்தார். இது வேண்டாம், தருவதாக இருந்தால் 50 க்கு 50 தான் என்று அடம்பிடித்தவர் ஜி.ஜி.

இது வரலாறில் பழைய கதைதான். இதை எப்படியோ தூசு தட்டி, அவ்வப்போது பாட்டிக்கதை போல திரித்தும் சுழித்தும் இணைத்தும் குறைத்தும், சிங்கள மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கைக்காக பாவித்து வருகிறார்கள் சிங்கள பேரினவாதிகள்.

ஏதோ, தமிழர்களெல்லாம் சிங்கள மொழி பேச மறுத்தது போலவும், அவர்களைக் கட்டாயப்படுத்தி சிங்கள மொழி பேச வைத்துப் பழி தீர்ப்பதால், சிங்கள மக்களுக்கு சித்த பலனனைத்தும் நித்திய பரம்பரைக்கும் கிடைத்துவிடும் என்பது போலவும் திசைதிருப்பி, சிங்களம் மட்டும் என்ற புதிய சட்டத்தை 24 மணிநேரத்தில் நடைமுறைப் படுத்துவதாக நம்பவைத்து, அட்டகாசமான வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்தவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க.

சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்த பண்டா நினைத்தது, சிங்கள மக்களின் நன்மைக்காக என்பது போன்று அவர்களை நம்பவைத்து, ஒட்டுமொத்த நாட்டுக்குமே துரோகம் செய்தவர் பண்டாரநாயக்க. ஆனால் உண்மையில் இந்த ஒரு துருப்பைத் தவிர, தேர்தலில் வெற்றிபெற பண்டாரநாயக்காவிடம் வேறு எதுவும் கைவசம் இருக்கவில்லை என்பது தான் உண்மை.

1949 ல் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் உருவாகியது பெடரல் பார்ட்டி என ஆங்கிலத்தில் கூறப்பட்ட தமிழரசுக் கட்சி. வடக்கு கிழக்கை இணைத்து, ஒரு பிரதேசமாக சமஷ்டி முறையிலான ஆட்சியமைப்பின் கீழ் கொண்டுவரவேண்டுமென்ற திட்டத்தை 1951 ல் பிரஸ்தாபித்தார்கள் தமிழரசுக் கட்சியினர்.

இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் இருந்தால் தனக்கு தலைமைப் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்ட பண்டாரநாயக்க, அதிலிருந்து விலகி, சிறீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். 1956 ல் பொதுத்தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், 51 ல் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியை நாடு தளுவிய ரீதியில் வெற்றிபெற வைப்பதற்கு புயல் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டியிருந்தது. 47 ல் ஆரம்பித்து, மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் மோதுவதற்கு, பண்டாரநாயக்க தேடியலைந்து கண்டுபிடித்த பேராயுதம் தான் ~சிங்களம் மட்டும்| என்ற பொன்முட்டையிடும் வாத்து.

உடனடியாகவே அதன் அறுவடையையும் அவர் கண்டுகொண்டார். அரச உயர் பதவிகளில் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழர்களுக்கு நிகராக சிங்கள மக்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றும், கற்றறிந்த ஞானிகளாக தமிழர்களே கருதப்படுகிறார்களென்றும் உள்ளுர ஆத்திரமடைந்திருந்த சிங்கள இனவாதிகளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, என்னைத் தேர்தலில் தெரிவு செய்தால், தமிழர்களையெல்லாம் தூக்கி வீசி, தமிழ் மொழியையும் அவர்களது கலை கலாச்சாரத்தையும் கால்தூசிக்கும் குறைவாக 24 மணிநேரத்தில் மாற்றிக் காட்டுகிறேன் என்று முழங்கினார் பண்டாரநாயக்க.

சிங்கள மக்கள் எதுவித தொலைநோக்குப் பார்வையுமற்று, பண்டாரநாயக்காவின், சிங்கள பௌத்த தனியுரிமை ஆணையை அப்படியே நம்பிக்கொண்டு, அவருக்கு முழுமையாக வாக்களித்து, அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் அவரை ஆட்சிப் பீடமேற்றினார்கள்.

உடனடியாகவே இன மோதல்கள் வலிந்து திணிக்கப்பட்டாலும், இவை பொதுமக்களால் கட்டவிழ்த்து விடப்பட்டவை போலவும், அரசுக்கு இதிலே எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பது போன்றுமே உருவாக்கம் செய்யப்பட்டது. இதனால், தமிழர்களின் அறிவு வளர்ச்சியிலும், உயர் பதவிகளைத் தமிழர்கள் பெற்றிருந்ததிலும் ஆத்திரமுற்றிருந்த சிங்களவர்கள் சிலர், அரசின் நிழல் கூலிகளாக, அவ்வப்போது தமிழர்களைத் தாக்கியும், அடித்து விரட்டியும் வந்தார்கள். 1956 லிருந்து வருடாவருடம் இனமோதல்கள் ஆங்காங்கே வெடித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சிங்களம் மட்டும் என்ற கவர்ச்சி அறிக்கை மூலம் எப்படி பண்டாரநாயக்க சிங்கள மக்களை ஏமாற்றினாரோ, அதேபோன்று, தமிழ் மக்களையும் 1958 ல் ஏமாற்றலாம் என்ற முயற்சியில் இறங்கினார்.

இதற்காக பண்டாரநாயக்க உருவாக்கியதுதான் பண்டா-செல்வா ஒப்பந்தம். வடக்கு கிழக்கை இணைத்து, ஒரு சமஷ்டி ஆட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக உறுதியளித்து 58 ல் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம், ஒருவாரத்தில் அதே பண்டாரநாயக்காவால் மீளப்பெறப்பட்டது. பௌத்த பிக்குகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டி தப்பிக்க முயன்றார் பண்டா. எந்த பிக்குகளைத் திருப்திப்படுத்த, பண்டா-செல்வா ஒப்பந்தத்தை மீளப்பெற்றாரோ, அதே பிக்கு ஒருவரால், 1959ல் சுட்டுக்கொல்லப்பட்டார் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க.

பௌத்தம் மட்டுமே தனி மதம், சிங்களம் மட்டுமே தனி மொழி என்ற கவர்ச்சிப் பிரச்சாரம் மூலம் 56 ல் சிங்கள மக்களை ஏமாற்றிய பண்டாரநாயக்க, 3 வருடங்களில் அதே மதத்தின் வழிகாட்டி ஒருவரால் சுடப்படுமளவிற்கு அந்த பௌத்த சிங்களவர்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள்.

60ல் பதவியேற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்திலிருந்து, இன்றுவரை தொடர்கிறது அன்று பண்டா விதைத்துச் சென்ற வித்தான சிங்கள இனவாதம். இந்த விதை, சிறிதாக முளைவிட்டு எழுந்தபோது, சுய அரசியல் இலாபங்களுக்காக, அதை நீரூற்றி வளர்த்தவர்கள் சிங்களத் தலைமைகள் தான். இதனால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்தப் பயனுமில்லை என்பதை விட, தீமைகள் ஏராளம் காத்திருக்கின்றன என்பதைத் தெரிந்திருந்தும், தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள, அடிக்கடி இதே இனவாதத்தைப் பயன்படுத்தினார்கள். இனவாதம் ஒரு பொன்முட்டையிடும் வாத்தாக, அத்தனை இனவாதிகளுக்கும் சுயலாபத்தை அள்ளி வீசியது. இனவாதத்தால் குளிர்காய்ந்த பேரினவாதிகள் ஏராளம்.

பண்டாரநாயக்காவிலிருந்து, இன்றைய சந்திரிகா வரை, ஜே.ஆர்., இரத்தினசிறீ உட்பட அத்தனைபேரும் இதே குதிரையைப் பாவித்து, தமிழருக்கு செக்மேற் வைத்தார்கள். விளைவு, ஒட்டுமொத்த இலங்கையுமே குட்டிச்சுவராகியது மட்டுமே.

இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று, 1952ம் ஆண்டு டட்லி சேனநாயக்கவின் முதலாவது தேர்தல் வெற்றியைப் பார்த்தால் கூட, சிங்கள மக்கள் எவ்வளவு தூரம் ஏமாற்றப்பட்டார்கள் என்பது பட்டென்று புலப்படும். அப்போது நடைபெற்றது ஒரு தேர்தல்கூட அல்ல. ஒரு ரெபரெண்டம் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு என்று தான் கூற வேண்டும். ~நாங்கள் ஆட்சியிலிருக்கும் வரை, அது எவ்வளவு காலமாக இருந்தாலும், இந்த நாட்டில் அரிசியின் விலை 25 சதமாகவே இருக்கும்| என்று அறிவித்தார் டட்லி சேனநாயக்க.

இந்த அரிசி விலைக்காக மட்டுமே, மீதி எல்லாவற்றையும் தூக்கியெறிந்து, டட்லியை ஆட்சியலமர்த்தினார்கள். ஆவணியில் ஆட்சிப் பீடமேறிய டட்லி, ஐப்பசியிலேயே, தன் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டார். அரிசி விலையை அப்படியே வைத்துக்கொண்டு, அரிசி விநியோகத்தின் அளவை, மூன்றில் இரண்டாகக் குறைத்தார் டட்லி. சீனி விலையேற்றம் தொடர்ந்தது. மாணவர்களுக்கான மதிய உணவு நிறுத்தப்பட்டது. பாடசாலைச் சிறார்க்கான பால் விநியோகம் நின்றது, புகையிரதக் கட்டணம், முத்திரை விலை போன்றன உயர்ந்தன, இறுதியில் 25 சதம் என வழங்கப்பட்ட அரிசி விலை வாக்குறுதி, 70 சதமாக உயர்ந்தது. 1950களில், மூன்று மடங்காக விலையேற்றம் வழங்குவது என்பது சாதாரண விடயமல்ல. 70 சதம் என்பது மிகப்பெரிய தொகையாக இருந்த காலம் அது.

இப்படி வாக்குறுதிகளை வழங்கி வழங்கி, தங்கள் வாக்கு வங்கிகளை நிறைத்துக் கொண்டவர்கள் பேரினவாத அரசியல் தலைமைகள். இன்றுவரை இது தொடர்கதைதான்.

1956ல் கொல்வின் ஆர். டி.சில்வா தீர்க்க தரிசனமாக ஒரு கருத்தை முன்வைத்தார். தமிழர் தாயகப் பகுதிகளை முழுமையாகப் பிரித்துக் கொடுங்கள், இரண்டு இனங்களும் இரண்டு பிரதேசங்களும் வழமை பெறும் என்றார் அவர். அத்தோடு இன்னுமொன்றையும் சொன்னார், ~தற்செயலாக தமிழர் தாயகப் பகுதிகளைப் பிரித்துக் கொடுக்காது, சிறுபான்மை இனத்திற்கு துரோகமிழைக்க முயற்சித்தால், இன்நாட்டின் இரு இனங்களும் அழிந்து போவதுடன், இரு பிரதேசங்களும் நெருக்கடியையே சந்திக்கும்| என்றார். இதுதான் தீர்க்கதரிசனமான வார்த்தைகள். இதன் இறுதி அத்தியாயத்தை இப்போது பார்க்கிறோம்.

இப்போது வாக்குக்காக மட்டுமே வாக்குறுதி கொடுப்பவர், மஹிந்த ராஜபக்ஷ. இவர், தன்னை ஆரம்பத்தில் ஒரு சமாதானப் பிரியர் போன்றும் சாந்த குணமுள்ளவர் போன்றும் காட்டிக் கொண்டாலும், இவரின் பின்புலத்தை அறிந்தவர்கள், மஹிந்தவின் தளமும் களமும் எது எது என்று அறிந்திருப்பார்கள்.

ஹம்பாந்தோட்டையின் றுகுண பகுதியில், பெலியத்த தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் மஹிந்த ராஜபக்ஷ. சிங்கள இனவெறியருக்கும் காடையருக்கும் தாதாக்களுக்கும் பாதாள உலகக் கோஷ்டிகளுக்கும் நன்கு பரீட்சயமான பிரதேசமே இந்த றுகுண சுற்றுவட்டாரம்.

இந்தக் குழுக்களின் தலைமைகளுடன் நல்ல நட்புறவு கொண்டவராக மஹிந்த விளங்கினாலும், வெளியே புன்னகை பூத்தவாறு, பொன்மனச் செம்மலாக நடமாடுகிறார்.

பௌத்த மதத்திற்கும் மக்களுக்கும் இவர் ஆற்றிவரும் சேவைக்காக, இவருக்கு ~ஸ்ரீ றோகண ஜனரஞ்சன| என்ற பட்டத்தை, பௌத்த அதிஉயர்பீடமான மல்வத்தை பீடம், 2000ம் ஆண்டு இவருக்கு வழங்கியது. இது பெரும்பான்மை சமூகத்திற்கு புகழ்சேர்க்கும் விடயமென்றாலும், சிறுபான்மை இனங்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் இனவாத சக்திகளுக்கான குரலாக இவர் ஒலித்ததற்கே இந்தப் பட்டம் இவருக்குக் கிடைத்தது.

இவருக்கு எதிராக இரண்டு கொலைக் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. தனது அரசியல் பலத்தைப் பிரயோகித்து, இந்த இரண்டு வழக்குகளையும் மூடி வைத்துள்ளார் இவர்.

ஏனைய குற்றச்சாட்டுக்கள் ஏராளம். குறிப்பாக, இவரிடம் வழக்கிற்கு செல்வோரை, இவர் அணுகுவதே ஒரு சுவாரஷ்யமான சமாச்சாரம். தனது தரப்பு ஆளுக்காக சுருக்கமான வழியில் தீர்வுகண்டு வந்தவர் இவர். எதிரி தரப்பு, பாதுகாப்புப் படையுடன் சம்பந்தப்பட்டிருந்தால், தனது அரசியல் செல்வாக்கைப் பாவித்து, அவனை அல்லது அவளை, போர் உக்கிரமாக நடக்கும் முகாமுக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்து, கேசை மூடி விடுவார். எதிரி தரப்பு, தமிழனாக இருந்தால், புலி என்று கூறி, நான்காம் மாடிக்கு அனுப்பி ஒரு தட்டுத்தட்டி, கேசை வாபஸ் பெற வழி செய்து விடுவார். ஏனைய ஏழைகள் யாருமென்றால், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, கேசை சில வருடங்கள் இழுத்தடித்து, பணமுடக்கம் கொடுத்தே வெற்றிபெறுவார்.

இவர் தொழில் பார்த்த இடம் ஒன்றும் சாதாரணமானதல்ல. சிங்கள இனவெறிக்கு அடி அத்திவாரமும் தூபமுமிட்ட துட்டகைமுனு வம்சத்தின் மண் என்றும், பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளின் மண் என்றும் கருதப்படும் தங்காலை என்ற சிங்களக் கிராமமே, மஹிந்த ராஜபக்ச சட்டத்தரணியாக தொழிலாற்றிய பிரதேசம். இங்கு இனத்துவ வேசத்தை யாரும் புதிதாக விதைக்கும் அவசியமில்லை, அவ்வளவிற்கு அது விளைந்து போயிருக்கிறது.

தன்னை ஒரு சமாதானப் பிரியர் போன்று காட்டிக் கொண்டாலும், ஒரு பழுத்த இனவாதக் கொள்கை கொண்டவர் என்பதை, இவர் தென்பகுதி சிங்கள மக்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது காட்டி விடுவார். தற்போது ஊடகங்கள் பலமாக உள்ளதால், கிராமப்புறத்து மக்களிடம் ஒன்றும், மீதிப் பேரிடம் வேறொன்றும் கூறும் இவரது யுக்தி கைகூட மறுக்கிறது.

- ஜே.வி.பி.யின் நிபந்தனைகளுக்கு இணங்கி, பாமர சிங்கள கிராமவாசிகள் வாக்கைப் பெறுவது

- ஹெல உறுமயவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பௌத்த மேலாதிக்கத்தினரின் வாக்குகளையும் அள்ளுவது

- பிரபாகரனுடன் நேரே பேசப் போகிறேன் என்று கூறி தமிழரின் முதுகிலும் குத்துவது

என்று இவர் எடுத்த முதற்படியிலேயே, ஒரே சறுக்கலாக உள்ளது. ஊடகங்கள் கண்ணில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு, மஹிந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலை முடுக்கில் நின்றெல்லாம் செய்திகளைக் கொண்டுவந்து, உடனே பரப்பி விடுவதால், மனிதர் கொஞ்சம் சிரமப்படுவது தெரிகிறது.

ஜே.வி.பி.யுடன் சேர்ந்தேன் என்று சொல்ல வந்தவர், சற்று இழுத்து, சேரத்தான் முயற்சிக்கிறேன், இன்னும் இல்லை, ஆனால் சேராமலும் விடவில்லை, என்றாலும் சேருவதும் சேராததும் ..... என்று ஏதோ தடுமாறுவது தெரிகிறது.

புத்த பிக்குகள் கைகொடுப்பார்கள் என்றால், அவர்களும் பக்கம் பக்கமாக நிபந்தனை வைக்கிறார்கள். எங்காவது கிராமப் புறத்தில் வைத்துக் கேட்டால், இரகசியமாக இணங்கலாம், ஆனால் இவன்கள் கொழும்பில் வைத்து, றிப்போர்ட்டர்ஸ்க்கு முன்னால கேட்டுத் தொலைக்கிறான்கள்.

இந்த அரச பேச்சாளரோ கத்தரிக்காயோ .. .. .. நிமால் சிறீபால டி சில்வா, ஏதோ தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல, அடிக்கடி சுதந்திரக்கட்சியின் கொள்கையை ஞாபகப் படுத்திறாராம்!. வெட்டி ஆற்றிலே போட்டிருவன், தேர்தல் காலமாகக் கிடக்குது .. .. .. பொருமுவது வேறு யாருமல்ல, மஹிந்த தான்.

1952 லிருந்து காலம் காலமாக சிங்கள இனவெறியை தங்கள் பிரதான அங்குசமாகப் பாவித்து, தமிழினத்தை மட்டுமல்ல, சிறீலங்கா என்ற நாட்டையே துவம்சம் செய்து குட்டிச் சுவராக்கி விட்டார்கள்.

இப்போது மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ கையிலும், அதே இனத்துவேச, இனவெறி, இனஅழிப்பு ஆயுதம் தான். காலங்கள் உருண்டோடினாலும், சிங்கள மக்கள் வறுமையில் வாடினாலும், நாட்டின் பொருளாதாரம் குட்டிச் சுவராகினாலும், தன் பதவிக்காக அதே துருப்பிடித்த பழைய ஆயுதம் மீண்டும் தூசுதட்டி மேசைக்கு வருகிறது.

சிறீலங்கா என்ற நாட்டில் இரு இனங்கள் இருப்பதையே ஏற்க மறுக்கும் ஜே.வி.பி.யுடனும், சிறீலங்கா பௌத்த சிங்களவர்களுக்கே சொந்தம் என்று ஓலமிடும் ஹெல உறுமயவுடனும் ஒட்டுறவு வைத்துக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷ, மறைமுகமாக சொல்லிநிற்கும் செய்தி என்ன தெரியுமா? சிறுபான்மை இனங்களின் ஆதரவோ வாக்குகளோ அபிமானமோ தனக்கு அவசியமில்லை என்பதைத்தான். சிறுபான்மை என்று சொல்லும்போது, இதற்குள் மலையகத் தமிழர், நாட்டில் வாழும் அத்தனை முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் ஒட்டுமொத்த தமிழரும் அடங்குவர். இவர்கள் அனைவரையும் வேரோடு பிடுங்கி எறிந்து, இவர்கள் யாரினதும் அடிப்படை உரிமை குறித்து தனக்கு எந்தவித அக்கறையும் இல்லை, இந்த சிறுபான்மை இனங்களுக்கு சிறீலங்கா என்ற நாட்டில் வாழ அருகதையே இல்லை என்பதையே, மஹிந்த ராஜபக்ஷவின் இனவாத தேர்தல் ஒப்பந்தங்கள் சுட்டிநிற்கின்றன.

சிங்கள மக்கள் எவ்வளவு காலம்தான் ஏமாறப் போகிறார்கள்? இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுவதும் நடக்கத்தான் போகிறது. இனவாதம் அழிவதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா சொன்னதுபோல், தங்கத் தமிழீழத்திலிருந்து புகையிரதம் தயாரித்து, சிங்கள நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே படுகிறது.

ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் ஏகோபித்த பாராட்டிற்குரியவர்கள் இருவர். ~முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒன்றுசேர்ந்து தங்கள் ஒருமித்த குரலை உயர்த்த வேண்டும்| என்று பகிரங்க அழைப்பு விடுத்திருக்கும், உலமாக்களின் தலைவர் மதிப்பிற்குரிய கே.உத்மான் லெப்பை, ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட பேரறிஞர்.

~மலையகத் தமிழரும் மனிதர்களே, அவர்களுக்கும் ஏனைய மக்களைப்போன்ற சுயநிர்ணய உரிமை தரவேண்டும், ஈழத்தமிழர்கள் என்றால், அதிலே மலையகத் தமிழரும் அடக்கம்? என்று தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் குரல்கொடுத்து வரும் பெ.சந்திரசேகரன் உண்மையில் மனிதாபிமானமுள்ள ஒரு தலைவர்.

ஆங்காங்கே கூனிகளும், சகுனிகளும், விசமிகளும், காக்கை வன்னியன்களும், ஏதிலிகளும், எட்டையப்பன்களும் கிளர்ந்தெழுந்து குரல்கொடுத்தாலும், ~ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம், எங்கள் தலைவன் பிறந்தான்| என்ற தேனிசை செல்லப்பாவின் காந்தக் குரலே நம் காதில் ஒலிக்கிறது. பதில் விரைவில் கிடைத்துவிடும் என்றே தோன்றுகிறது.

~ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்|

ஒருவன் மனத்தில் உள்ளதை தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம் - கலைஞர் உரை

எண்ணப் பரிமாற்றத்தில், உங்களுடன்,

குயின்ரஸ் துரைசிங்கம்
ரொறன்ரோ - கனடா

Print this item

  அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கான
Posted by: விது - 09-08-2005, 04:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கான இடமாக தலாதா மாளிகையே சிறந்தது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கும் தமிழ் மக்களிற்குமிடையே ஒரு பேச்சு எதிர்காலத்தில் நடைபெறுமாக இருந்தால் பேச்சுக்கான இடமாக நோர்வே தரப்பு தலதா மாளிகையை தெரிவு செய்வதே சிறந்தது என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமாதானப்பேச்சுகள் என்று பேச்சளவில் மட்டும் பேசியே கடந்த காலத்தை வெற்றிகரமாக இலங்கை அரசு நகர்த்தியுள்ளது. தற்போது நரிக்கொம்பாக இருக்கும் இந்த அரசாங்கத்தின் பேச்சுக்கான இணக்கப்பாட்டை நம்பி பேச்சுவார்த்தை மேசையை எங்கே வைப்பது என்று கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்த நோர்வே அரசு தற்போது கொழும்பு சர்வதேச விமானநிலையத்தை தெரிவு செய்துள்ளது. ஒஸ்லோவில் பேசலாம் என்ற கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசு அதற்கு மாற்றீடாக ஒமந்தை யுத்த சூனிய பிரதேசத்தை தெரிவுசெய்தது. இதனையடுத்து சிங்களத்தின் சுூனியத்தை நிராகரித்த தமிழ் மக்கள் சிங்கள படைகள் முடக்கப்பட்டு தமிழ் மண்ணில் மண்டியிட்ட கிளிநொச்சியில் பேசுவோம் என்று அறிவித்தபோது அதனை இலங்கை அரசு நிராகரித்தது. இந் நிலையில் இழுபறிப்பட்ட பேச்சுவார்த்தைக்கான இடத்தினை தெரிவுசெய்யும் விவகாரத்தில் ஈடுபட்டிருந்த நோர்வேத் தரப்பு தற்போது சிங்கள படைகள் தனது நிலத்தில் மீண்டும் தமிழரிடம் மண்டியிட்ட கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை தெரிவுசெய்துள்ளது. இவற்றை எல்லாம் விடுத்து நோர்வே தரப்பு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உறைவிடமாக உள்ள தலதா மாளிகையில் சமாதானத்தை பேசுவதன் மூலம் பௌத்த பேரினவாதத்தில் இருந்து தமிழ் மக்களை மீட்டு நிம்மதியாக வாழ்வதற்கான வழிவகைகளை கண்டறியலாம் என்று அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

nitharsanam.com

Print this item

  திருமலையில் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல்
Posted by: mayooran - 09-08-2005, 02:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர் பெரும்பான்மையாக வதியும் சிறிமாபுரப் பகுதியால் நேற்றிரவு சென்ற தமிழ், முஸ்லீம் மக்கள் சிங்களக் காடையர்களின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
தமிழ், முஸ்லீம் மக்கள் மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடாத்திக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா காவல்துறையினரே அல்லது படையினரோ அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிங்களக் காடையர்களின் தாக்குதலின் காரணமாக தமிழ், முஸ்லீம் மக்கள் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலையில் நேற்று தமிழ் பகுதிகளிற்குச் சென்ற படையினரும் காவல்துறையினருடம் வீடு வீடாகத் தேடுதல் நடாத்தியுள்ளனர். எனினும் எவரும் இந்தத் தேடுதலின்போது கைது செய்யப்படவில்லை என அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை நேற்று முந்நாள் சிங்களப் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய படுகாயமடைந்த சமாதிபிள்ளையார் கோயிலின் பூசகர் கண்ணன் மற்றும் அவரின் உதவியாளர் தாசன் ஆகியோரை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனக்கூறி கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கா படையினர் முயன்றபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. இரா.சம்பந்தன் அவர்களினும் மக்களினதும் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
[size=7]சங்கதி

Print this item