Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 333 online users.
» 0 Member(s) | 330 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,412
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,208
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  ஒட்டகம்
Posted by: Rasikai - 09-07-2005, 09:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<img src='http://img143.imageshack.us/img143/883/camel20ride2037tb.jpg' border='0' alt='user posted image'>

ஒட்டகம் என்றாலே பாலைவனமும், அது தனக்குள் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரும் தான் நம் நினைவுக்கு வரும்.
ஒட்டகம் நீண்ட பயணத்திற்கு தயார்படுத்தப்படுவது சற்று வினோதமாக இருக்கும். பயணத்திற்கு முன், ஒட்டகத்தில் பயணம் செய்ய இருப்பவர் ஒட்டகத்திற்கு அதிகப்படியாக உப்பை கொடுப்பார்.

உப்பின் தன்மையால் அதிகமான நீரை ஒட்டகம் குடிக்கும். கிட்டத்தட்ட 80 லீட்டர் தண்ணீரை அது குடித்துவிடும். ஒட்டகத்திற்கு மூன்று வயிறு இருக்கிறது. முதல் வயிற்றில் தனக்கு தேவையான உணவை சேகரித்து வைத்து கொள்கிறது. தேவைப்படும் போது அந்த உணவை வாயில் அசை போட்டு உட்கொள்ளும். இரண்டாவது வயிறு உணவுகளை ஜீரணப்படுத்துவதற்கான திரவங்களை சுரக்கும் இடமாக இருக்கிறது.

மூன்றாவது வயிற்றில் அசை போட்ட பண்டங்கள் சேருகின்றன. அங்குதான் உணவு ஜீரணிக்கப்படுகிறது. இதில் மூன்றாவது வயிற்றை தவிர முதல் இரண்டு வயிறுகளின் பக்கவாட்டு சுவர்களில் நிறைய பை போன்ற அமைப்பு இருக்கும்.

இந்த பைகளில் தண்ணீரை ஒட்டகங்கள் சேர்த்து வைத்து கொள்கின்றன. பைகளில் தண்ணீர் நிரம்பியவுடன் தசைகள் மூடிவிடும். தண்ணீர் வெளியே வராது. எப்போது அதற்கு தண்ணீர் தேவைப்படுகிறதோ திறந்து சுரக்கும். நீரை எடுத்து கொள்ளும்.

ஒரு ஒட்டகத்தின் மீது அதிக பாரம் ஏற்றாமல், வேகமாக நடக்காமல், ஓரளவு சாதாரண வேகத்தில் நடந்து சென்றால் எந்த பாலை வனத்திலும் ஒட்டகம் பத்து நாட்கள் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கும்.தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் வாழ்வதற்காக கடவுள் அளித்தவரம் இந்த தண்ணீர் சேமிப்பு.

பாலைவனத்தில் நீண்டதூரம் பயணம் செய்யும் போது மனிதனுக்கு அடக்க முடியாத தண்ணீர் தாகம் எடுத்தால் அவன் ஒட்டகத்தை கொன்று இரைப்பையில் உள்ள தண்ணீரை குடிப்பான்.


நன்றி தினமலர்.

Print this item

  யாழ் இந்து மாணவர்களின் சாதனை
Posted by: hindu - 09-07-2005, 05:17 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (30)

தமிழ் மாணவன் முதலிடம் - 2005 உயர்தரம்

<img src='http://jaffnahindu.org/php/forum/imgNews/mayoorran2.gif' border='0' alt='user posted image'>


More Details
http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=65

www.JaffnaHindu.Org

Print this item

  கூகிள் இணையத்தளத்தால் ஆசிய அரசுகளுக்கு அதிர்ச்சி!
Posted by: ANUMANTHAN - 09-07-2005, 02:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

கூகிள் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் உலக நாடுகளின் உள்ளமைப்புகள் தொடர்பான விரிவான செய்மதி படங்கள் குறித்து சிறிலங்கா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.
இது குறித்து சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிக்கேடியர் தயா ரட்நாயக்க கூறியதாவது:
அரச நிறுவனங்கள், கட்டடங்கள் தொடர்பான இச்செய்மதி படங்களை ஒருவர் இணையம் வழி பெறுவது என்பது கவலையளிப்பதாக உள்ளது. இருப்பினும் இது புது யுகம். இத்தொழில்நுட்ப யுகத்தில் நாம் இதை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இணையம் சார்ந்த வாழ்க்கை முறை இப்போது உருவாகிவருகிறது. குண்டுகள் தயாரிப்பு முதல் விமானங்களை உருவாக்குவது வரை இணையத்திலேயே இருக்கின்றன. இவற்றையும் இராணுவத் தரப்பினர்
உள்வாங்கிக் கொண்டு அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
இந்திய அரசு சார்பில் உத்தியோகப்பூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் இது குறித்து பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், இப்பிரச்சனை குறித்து இந்திய அரசு விவாதித்து வருகிறது. இது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் தடுக்க இயலாது. இந்த இணையத்தில் இந்திய அரசு தலைவரின் இல்லம் உட்பட அனைத்தும் விரிவாக போடப்பட்டுள்ளது. அரசு தலைவர் இல்லத்தில் உள்ள ஒவ்வொரு மரங்களும் கூட பதிவேற்றப்பட்டுள்ளது. எமது பாதுகாப்பு அமைப்புகள் இது குறித்து அவதானமாகவே உள்ளது. ஆனாலும் தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படித் தடுப்பது என்றார்.
இச்செய்மதி படங்கள் குறித்து தாய்லாந்தும் தென்கொரியாவும் கடும் அதிருப்தியில் இருக்கின்றன.
தாய்லாந்து விமானப் படை பேச்சாளர் மேஜர் ஜெனரல் வீரசக் மனே-இன் கூறுகையில், இந்தப் படங்கள் வெளியிடப்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் மேர்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்தில் இவை வெளியிடப்படிருக்கக் கூடும் என்றார்.
அதே நேரத்தில் தாய்லாந்து இரணுவம் இப்பிரச்சனை குறித்து தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் விவாதித்து வருவதாகவும், கூகிள் இணையத் தள நிறுவனத்திடம் தமது அரசுக்கு இதுபோன்ற சேவையை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தென்கொரிய அரச அதிகாரிகள் இப்படங்கள் குறித்து கூறுகையில், அமெரிக்காவிடம் தமது அரசின் கவலையை தெரியப்படுத்தியுள்ளது என்றனர்.
தென்கொரிய அரச தலைவரின் இல்லம், இராணுவத் தளங்கள் உள்ளிட்டவை கூகிள் இணையதளத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜப்பான் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையினரும் இது போன்ற அச்சுறுத்தல்களைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.
இருப்பினும் அவுஸ்திரேலியா அணுகுண்டு தொழில்நுட்பத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூகிள் செய்மதி படங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும் இவை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

-புதினம் செய்திகளிலிருந்து.

Print this item

  தீண்டாமை ஒழிப்பு இயக்க வரலாறு
Posted by: narathar - 09-07-2005, 12:35 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (2)

தீண்டாமை ஒழிப்பு இயக்க வரலாறு

கே. டானியல்

இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே குறிப்பாக வட பகுதியில் நிலவி வரும் சாதி அமைப்பு முறைக்கு எதிராக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளுக்கான இயக்க பூர்வமான காலத்தை 'சுமார் ஐம்பது ஆண்டு காலம்' என்று ஓரளவுக்குக் குறிப்பிடலாம். இந்த ஐம்பது ஆண்டு காலத்திற்கு முன்னால் இதன் கோர ரூபம் எப்படி இருந்திருக்கும் என்பதனை இந்த ஐம்பது ஆண்டு காலக்குறிப்புகளைக் கொண்டு கணக் கெடுத்துக் கொள்வது யாருக்கும் கடினமாக இராது.

பரிணாம வளர்ச்சிக் கணக்கெடுப்பில் இருந்து பார்க்குமிடத்து நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் பிறப்போடு இந்தச் சாதி அமைப்பு முறையும் பிறப்பெடுத்ததென்று குறிப்பிடுவது பொருத்தமாயினும் இங்கு இந்த சாதி முறைக்கு எதிரான பொது இயக்கங்கள் பிறப்பிக்கப்பட்ட காலத்தைக் கணக்கிற் கொண்டுதான் இதன் வயது ஐம்பது ஆண்டுகளுக்குக் கணக்கிடப்படுகிறது..

தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியப் பிரதேசம் என உரிமை கொண்டாடும் பிரதேசங்களுள் கேந்திரப் பிரதேசமாகக் கணிக்கப்படும் வடபிரதேசம் எங்கும் உள்ள கிராமப்பிரிவுகளுக்குச் சென்று உன்னித்து ஊடுருவிப் பார்த்தால் இந்தச் சாதி அமைப்பு முறையின் சின்னங்களைத் தரிசிக்கமுடியும். கிராமங்களில் அமைப்பு முறையும்/ ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளும்/ அவர்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் பாதைகளும்/ அவர்கள் வாழும் நிலங்களும்/ அவைகளைச் சுற்றியுள்ள பிரதேச நிலங்களின் நிலத்தோம்புப் பெயர்களும்/ ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெரு ஆலயங்களும்/ குளங்களும்/ கிணறுகளும்/ மடங்களும்/ வேறும்பல சரித்திரச் சின்னங்களும்/ கால் நடைகளின் பட்டிக் குறிகளும்/ வீதிப் பெயர்களும்/ கிராமப் பெயர்களும்/ பேச்சு முறைகளும்/ பழக்க வழக்கங்களும்/ நன்மை தின்மை வைபவங்களின் நடை முறைகளும்/ மிகவும் தீண்டப்படாதாருடன் தொடர்பு கொள்வதற்காகச் சங்கடப் படலையோடு கூடிய படிலைத் தலைவாயிலும்/ அதற்குசற்று முன் வரிசையில் (உள்ள சாதியினருடன் பேசிக்கொள்வதற்காக அமைந்த) சவுக் கண்டியும்/ தம்மோடொத்தவர்கள் மட்டும் உள்ளே வர வசதியாக அமைக்கப்பட்ட நால்சார வீடும் நடு முற்றமும்/ பாரம்பரிய பெருஞ்சாதி மனிதர்களின் சாதி அமைப்பு முறையினை அனுசரித்து அமைந்த ஞாபகச் சின்னங்களாக இருப்பதைத் தெளிவாக உணர முடியும். .

இந்தச் சாதி அமைப்பு முறைக்கும் அதன் வெறியாட்டாங்களுக்கும் சவாலாகத் தலையெடுத்து வந்த எதிர்ப்புச் சாதனங்களுடன்தான் சாதி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதெனலாம்.1915-18ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட பகுதியில் சுன்னாகத்தைச் சேர்ந்த வி. எம். கந்தையா என்பவரை ஆசிரியராகக்கொண்டு வெளியான 'ஆதி திராவிடன்' மாத இதழுடன் இந்தச் சாதி எதிர்ப்பு இயக்கம் மெது மெதுவாக ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் இந்த 'ஆதி திராவிடன்' அடிப்படையில் சமய சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்தமையால் சாதி எதிர்ப்பு இயக்கத்தில் இது பிரதானப்படுத்துமளவுக்குத் தலை நிமிர்ந்து நிற்கவில்லை. இதைத் தொடர்ந்து 1920-25 கால இடைவெளியில் சூ. எ. சின்னப்பு என்பவரை ஆசிரியராகக் கொண்ட 'மேல் நோக்கம்' என்ற பத்திரிகை ஒரு படி முன்னேறிச் சாதிக் கொடுமையின் தம்மைகளை ஆத்மார்த்தக் கருத்துக்களோடு சேர்த்துக் கொண்டதும்/ அந்த வேளை அச்சுத்தொழிýல் பயிற்சி பெற்று இன்றும் ஈழகேசரி பொன்னையா என்று கெüரவமாக அழைக்கப்படும் பெரியார் 'முன்னேற்றம்' பத்திரிகையை நெறிப்படுத்தியதும் குறிப்பிடக்கூடியனவாகும். இந்த காலக்கட்டத்தில் தீவிரமான சாதி ஒழிப்பு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு துணிச்சலுக்கு இலக்கணமாக விளங்கிய அமரர் என்ற பத்திரிகையும்/ அப்பத்திரிகை மூலமாகப் போராட்டமயமான கருத்துக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கமும்'தான் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் ஓர் அத்தியாயத்தின் தொடக்கமாய் அமைந்தது எனலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் பட்டுவந்த இன்னல்களுக்கு எதிராக எழுந்துநின்று குரல் கொடுக்கும் பணியில் ஒப்புதல் தெரிவித்துக்கொண்டவர்களில் முக்கியமானவர்களாக இருந்தவர்களுள் அன்று இராமநாதன் கல்லூரி ஆசிரியராக இருந்த ருத்திரகோடீஸ்வர ஐயர்/ மத்தியூஸ் பாதிரியார்/ யாழ்பாணக்கல்லூரி அதிபர் லொக்கூட்/ பிக்கனல் பாதிரியார் ஆகியோர் குறிப்பிடக்கூடியவர்களாவர். அவ்வேளை இந்துக் கல்லூரி ஆசிரியராக இருந்து நெவில்ஸ் செல்லத்துரை அவர்களைத் தலைவராகவும் அமார் யேக்கப் ஸ்ரீகாந்தி அவர்களைச் செயலாளராகவும் கொண்டு உதயமாகிய 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கத்திற்கு' மேலே குறிப்பிடப்பட்ட நால்வரும் போஷகர்களாக இருந்தமையிýருந்து அன்று தொடக்கம் இன்றுவரை சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் தன்னந்தனியாக நிற்கவில்லை என்பதும்/ காலத்துக்குக் காலம் நல்லெண்ணம் கொண்ட மக்கள் பலரும் ஒத்தாசை நல்கியுள்ளனர் என்பதும் புலனாகின்றது..

இந்தப் போஷகர்களில் மூவர் வெள்ளையர்கள் ஆதலால் அவர்கள் பிரதானப்படுத்த படவில்லையாயினும்/ உருத்திர கோடீஸ்வர ஐயரைப் பொறுத்தவரை அவர் சாதித் தமிழர்களின் கண்டனங்களுக்கும் எதிர்ப்பு நடவடிக் கைகளுக்கும் இலக்காக வேண்டியதாயிற்று. இதேபோல் இந்த ஸ்தாபனத்தின் தலைமகனாகிய யோவேல் போல் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்துப் பெருமையைச் சம்பாதிக்கத் தவறவில்லை..

1927ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இலண்டனிýருந்த தனது நண்பர் மூலமாக இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை/ இலண்டனில் குடியேற்ற நாடுகளின் பிரச்சனைகளைக் கவனிக்கவென நிறுவப்பட்ட சபைக்குத் தெரிவித்ததில் அமரர் யோவேல் போல் அவர்கள் எடுத்த முயற்சியின் பலாபலனாக டொனமூரைத் தலைவராகக் கொண்டு இலங்கைக்கு வந்த அறுவர் அடங்கிய கமிஷனாகும். 'வயது வந்தோருக்கு வாக்குரிமை அளித்தல்' என்ற கொள்கையின்கீழ் அன்று குடியேற்ற நாடுகளின் காரியதரிசியாக இருந்த அமெரி என்ற ஆ.ட.யினால் நியமிக்கப்பட்ட டொனமூர்க் கமிஷனுக்கு எதிர்ச்சாட்சியமளிக்க சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இலண்டன் மாநகரம் சென்றதிýருந்துதான்/ 'பஞ்சமச் சாதியிடம் வாக்குக் கேட்டுச் சாதிமான்கள் யாசகம் போவாரோ?' என்ற கேள்வி சாதிமான்களிடையே ஆக்ரோஷமாக எழுந்து சாதி அடக்குமுறைகள் கோர வடிவங்களை எடுத்தன/ என்பது முக்கிய கவனத்துக்குரியதாகும். பின்னர் இங்கே டொனமூர் கமிஷன் “வயது வந்தோருக்கு வாக்குரிமை” கிடைப்பதன் மூலம் பல உரிமைகளை அவர்கள் அடைய வழி பிறக்கும் என அறிக்கை மூலம் பிரகடனப்படுத்தியபோதும் உள்நாட்டு அரச இயந்திரங்களைப் பெருஞ்சாதியினரே ஆளுமை நடத்தி வந்தமையால் ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர்பார்க்கப்பட்டவைகள் நடந்தேறவில்லை. பதிலுக்கு அடக்குமுறைகள் அதிகரித்தன. அரசு இயந்திரங்கள் தீவிரமடைந்தன. விதானை/ உடையார்/ மணியகாரன் என்ற பதவிகளில் குந்தியிருந்தவர்கள்/ காவல் படையினைச் சேர்ந்தவர்கள் சிவில் சேவை அதிகாரம் வகித்தவர்கள் உட்பட சகல பிரிவினரும் தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் துரித கதியில் செயற்படத் தொடங்கினர். இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத ஒடுக்கப்பட்ட மக்கள் மதமாற்றம் போன்ற குறுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் ஒரு சில சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின என்பது உண்மையே. அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிகளுக்குள் கூட அனுமதி கிடைக்கப்பெறாத மக்களுக்குப் பிற மதப் பாடசாலைகள் சற்று வழிவிட்டன. சுற்றுப்புறச் சார்புகளை மீறிப் பாடசாலைகளுக்குச் சென்ற பலர் தண்டிக்கப்பட்டனர். இம்சிக்கப்பட்டனர்..

பகிரங்க வீதிகளில் தலைநிமிர்ந்து நடமாடத் தடை - சுடலைகளில் பிணம் சுடத் தடை - பொது ஸ்தாபனங் களின் உள்நுழையத்தடை -சுதந்திரமான வாகனப் போக்குவரத்துத்குக்குத் தடை - கோவிற் பக்கம் செல்லத்தடை - மேளம் அடிக்கத்தடை - மீசை விடத் தடை - கடுக்கன் அணியத் தடை - குளங்களில் குளிக்கத் தடை - பந்தல் போட்டு வெள்ளை கட்டத்தடை - முழங்கால் மட்டத்திற்குக் கீழ் வேட்டி அணியவும்/ மேல் அங்கி அணியவும்/ சால்வை போடவும் தடை - வண்டியில் ஆசனத்தட்டில் ஏறியிருக்கத் தடை - புகை வண்டியின் ஆசனங்களில்/ பஸ் ஆசனங்களில் இருக்கத்தடை - கடை போன்றவை வைக்கத்தடை - செய்த வேலைக்குக் கூý கேட்கத்தடை - குழந்தைகளுக்கு நல்ல பெயரிடத் தடை - பால்மாடு வளர்க்கத்தடை - விறுமர்/ அண்ணமார்/ காளி/ பெரியதம்பிரான்/ வீரபத்திரர்/ வைரவர்/ நாச்சிமார்/ காத்தவராயர் ஆகிய தெய்வங்களின் பெயர்களை விட ஏனைய பெயர்களில் கோவில்களை அமைக்கத்தடை - குடை பிடிக்கவும்/ வெள்ளை வேட்டி அணியவும்/ செருப்பு அணியவும் பெண்கள் குடுமி போட்டுக் கொள்ளவும் தடை - தாவணி போடத்தடை தங்கத்தாý/ நகை நட்டுக்கள் அணியத் தடை இப்படித் தடை வரிசையோ கணக்கற்றவை. இவை யாவும் தேச வழமை என்ற மதிப்பீட்டுக்கு உட்பட்டவையாகவே கணிக்கப்பட்டன. சர்வ சன வாக்குரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில் இராமநாதன் துரை அவர்கள் இலண்டன் சென்றிருந்தபோது அவரைத் தலைவராக/ கொண்டிருந்த சைவசித்தாந்த சபைக்குத் தற்காýகத் தலைவராக ஆறுமுக நாவலரின் மருமகனாகிய த. கைலாசப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்போது பரமேஸ்வராக் கல்லூரியில் சைவ சிந்தாந்த அறக் கல்விப் போதனைக்காக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அப்போது திரு. யோவேல் போல் அவர்களால் உந்தப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர் சிலர்/ தாமும் சைவ சித்தாந்த அறக் கல்வியைப் பெற வேண்டும் என்று கோரி/ மாநாட்டுத் தலைவர் கைலாசப்பிள்ளை மறுக்கவே. அறக்கல்விக்கு அனுமதி கேட்டுப் போயிருந்த ஒடுக்கப்பட்டோர்/ அவரின் மறுப்பை எழுத்தில் பெற்று/ டொனமூர்க் கமிஷனுக்கு தந்தி மூலம் இலண்டனுக்கு அனுப்பிவைத்தனர். அந்த வேளையும் உயர்சாதியைச் சேர்ந்த நாகநாதி அதிகாரம்/ இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இலண்டனில் இருந்த தம்பிமுத்து ஆகியோர் இந்த மக்களுக்கு ஆதராவாய் இருந்தனர். நம்மவர் துணிந்து செயற்பட்டமையால்தான் இராமநாதன் துரை அவர்களின் இலண்டன் பிரயாணம் தோல்வியில் முடிந்ததெனலாம். 1930ம் ஆண்டுக்காலப் பகுதியின் ஹண்டி. எச். பேரின்ப நாயகத்தைத் தலைவராகவும்/ செனட்டர் நாகýங்கம்/ ஒறேற்றர் சுப்பிரமணியம்/ கலைப் புலவர் நவரத்தினர்/ ஏ. எஸ். கனக ரத்தினம் ஆகிய முக்கியஸ்தர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இளைஞர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் தோன்றியது. இந்த ஸ்தாபனம் பல தேசியப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தபோதும்/ சாதி ஒழிப்பு விவகாரத்தில் பெருமளவு செயற்பட்டு/ 'சம ஆசனம் - சம போசனம்' என்ற கொள்கையை ஏற்று நாடெங்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அப்போது இவர்களுக்குச் சாதிமான்களால் கிடைத்த எதிர்ப்புகள் பெருமளவாகும். இதன் பிரச்சாரத்திற்கென தமிழக தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் அழைக்கப்பட்டு/ சமபந்தி சமபோசனப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதும் அவர் திரும்பிப்போன மறுகணமே அவர் பேசிச் சென்றதும்/ சம ஆசன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதுமான பல பாடசாலைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. வசாவிளான் வடமூலை/ ஒட்டகப்புலம்/ சுளிபுரம்/ புன்னாலைக்கட்டுவன்/ காங்கேசன்துறை/ பருத்தித்துறை ஆகிய இடங்களில் சுமார் 14 பாடசாலைகள் சாதி வெறியர்கள் வைத்த தீயில் வெந்து சாம்பராயின..

1931இல் வரவிருந்த ஆட்சிமன்றத் தேர்தலைத் தமிழர்களின் உரிமைக்காகப் பகிஷ்கரிக்கத் திட்டமிட்டுப் பிரசாரம் செய்துவந்த வாýபர் காங்கிரசினர்/ அவ்வேளை சாதி வெறியர்களின் கோபாக்கினிக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தக் காலக்கட்டத்தோடு வீறுகொண்டெழுந்து நின்ற சாதி வெறியர்கள் கிராமப் புறங்கள் எங்கும் தங்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தாக்குதல்களுக்கு முதன்முதýல் பýயிடப்பட்டவன் புத்தூர்ப்பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டவன் ஒருவனாகும். பீதி மிகுதியால் பனை மரத்தில் ஏறி இருந்த ஒரு அப்பாவிப் பஞ்சமன் மரம தறித்து வீழ்த்தப்பட்டு - கொல்லப்பட்டு - அந்த மரத்தின் அடியிலேயே கொழுத்திப் பிடி சாம்பராக்கப்பட்டான். ஏனைய கிராமப்புறங்களில் இல்லாத அளவில் புத்தூர்ப்பிரதேசத்தில் நில ஆதிக்கமுறையும்/ சாதி ஒடுக்கு முறையும் மேலோங்கி யிருந்தன என்பதற்கு இன்றும் அழியா அடையாளச் சின்னங்கள் பல உண்டு. பல பாரம்பரிய குடும்பங்களின் பழைய நால்சார் வீடுகளில் இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பல்லக்குகளும்/ வீட்டு முற்றங்களின் நீள வரிசைகளில் சுற்றுவட்டாரத்தில் உண்டாக்கப்பட்ட பல பாரம்பரிய பல அளவுகள் கொண்ட பொருக்குப் பட்டையற்ற நேர்மரங்களும் இன்றைய அமைப்புக்கு சற்று வேறுபட்ட/ சற்று உயர்ந்த அமைப்பிலுள்ள ஏர்க் கலப்பைகள் இடம் பெற்றுள்ளதும் இன்றும் நாம் பார்க்கக்கூடிய சின்னங்களாகும். அக்காலத்தில் பல்லக்கு முதý குடும்பம் எனப்படுவோர் தங்கள் பிரயாணத்திற்குப் பயன்படுத்திய பல்லக்குகளைச் சுமந்து செல்லக் கோவியர் சமூகத்தினரை அமர்த்தி வைத்துக் கொண்டிருந்ததையும்/ ஊரிலுள்ள பஞ்சமர்களிடையே ஏற்பட்ட குற்றங்களுக்குத் தண்டணை கொடுக்க/ அளவான மரத்தைப் பார்த்து அவர்களைக் கைகொடுக்க வைத்துச் சவுக்கடி கொடுத்து தர்பார்த்தன வழக்கத்தையும் மாட்டுக்குப் பதிலாக/ அடிமை மனிதனை ஏரில் பூட்டி/ உழுது பயிரிட்டமையும் இந்த அடையாளச் சின்னங்கள் இன்றும் நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன..

கýயாணப் பெண்களுக்குச் சீதனம் கொடுக்கும்போது அந்தச் சீதன வரிசையில் ஒரு கோவியனும்/ ஒரு பள்ளியும் நிச்சயமாக இடம் பெற்றே தீரவேண்டும் என்பது இறுக்கமான நடைமுறையாயிருந்தது. இந்தக் குடும்பங்களின் மரண வீடுகளில் தொண்டு வேலைகள் புரியும் வரிசைகள் சில இன்று வரை இருந்து வருவதைக் காணலாம்..

இயற்கை மரணத்தை எதிர் நோக்கி நிற்கும்/ நயினார் அல்லது நயினாத்தி மரணப் படுக்கையிற் கிடக்கும்போது கண்/ வாய் பொத்த கோவியன்/ அல்லது கோவிச்சி காத்திருக்க வேண்டும். மரணம் நிகழ்ந்த பின்பு சகல தொண்டு வேலைகளையும் கோவியக் குடும்பம் செய்து முடிக்க வேண்டும். மரணித்தது ஆணாக இருப்பின் பரியாரி' என்று இவர்களால் அழைக்கப்படும் அம்பட்டன் பிணத்துக்குச் சவரம் செய்வதும்/ 'கட்டாடி' என்று அழைக்கப்படும் வண்ணான் தனது சேவைகளைச் செய்வதும் முதன்மையான அடிமைத் தனத்தொண்டுகளாகும். இவைகளுக்குப் பின்பு பிரேத ஊர்வலத்தில் நடைமுறை வரிசை பார்ப்பதற்கே மனங் கொள்ளாக் காட்சியாக இருக்கும்..

http://tamil.sify.com/dalit/dalit10/fullst...php?id=13553620

Print this item

  இராணுவ பகுதிகளிலிருந்து புலிகள் வெளியேறினர்
Posted by: mayooran - 09-07-2005, 02:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

<b>தொடரும் தாக்குதல்களை அடுதடது தீவிர நடவடிக்கை</b>

அரச இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியல் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போராளிகள் அனைவரையும் உடனடியாக தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு திருப்பியழைக்க புலிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கில் போராளிகள் மீது தொடரும் தாக்குதல்களை அரசு கட்டுப்படுத்தாதையிட்டு புலிகள் இந்த முடிவை மேற் கொண்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசியல்பணியாற்றும் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரை அங்கு தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்வது எனவும் புலிகள் தீர்மானித்துள்ளனர்

Print this item

  யாழ் இந்து புகைப்பட தொகுப்புகள்
Posted by: hindu - 09-07-2005, 12:35 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

<img src='http://www.jaffnahindu.org/php/imggal/themes/mac_ox_x/images/top_panel_r1_c2.jpg' border='0' alt='user posted image'>


இந்து புகைப்பட தொகுப்புகள்
http://www.jaffnahindu.org/php/imggal/index.php



<img src='http://www.jaffnahindu.org/php/forum/templates/Morpheus/images/blue/logo_left.gif' border='0' alt='user posted image'><img src='http://www.jaffnahindu.org/php/forum/templates/Morpheus/images/blue/logo_right.gif' border='0' alt='user posted image'>

www.JaffnaHindu.Org

Print this item

  ஈழத்தில் சைவமும் தமிழும்..!
Posted by: kuruvikal - 09-06-2005, 09:51 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (2)

இந்தியாவைப் போலவே, ஈழமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய-பண்பாட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டது. போர்த்துகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கில காலணி ஆதிக்கங்களும், கிறித்துவ மிஷனரிகளின் இந்து சமய எதிர்ப்புப் பிரசாரங்களும் இந்தியாவில் புதிய சமய-பண்பாட்டு இயக்கங்களைத் தோற்றுவித்தன. இவற்றுள் பிரம்ம சமாஜம் (1828) பிரார்த்தனை சமாஜம் (1857), ஆர்ய சமாஜம் (1875), இராமகிருஷ்ண மிஷன் (1886), பிரம்ம ஞானசபை எனப்படும் 'தியோகெமிகல் சொசைடி' (1875), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865) ஆகியன குறிப்பிடத்தக்கன.

<img src='http://members.tripod.com/kanaga_sritharan/images/navalar10.jpg' border='0' alt='user posted image'>

சிறீலசிறீ ஆறுமுக நாவலர் (1822-1879)

இதே காலகட்டத்தில் இலங்கை ஈழத்தில் போர்த்துகீசிய, டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கங்களாலும், அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்து, சைவ சமய எதிர்ப்பு பிரசாரங்களும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலரை சைவ சமய எழு ஞாயிறாகத் தோன்றச் செய்தன. ஈழத்தில் சைவ சமயமே மிகப் பழமையானது, பெரும்பான்மையானது. ஆங்கிலக் கல்வியும், அதன் வழி அரசு ஊழிய பெரும் வாய்ப்பும், சைவ சமய உண்மை நெறி அறியா அறியாமையும் மேலோங்கி இருந்த சூழலில் சைவ சமயம், 'பிழைக்குமோ' என்ற பேரச்சம் பரவிய காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆறுமுக நாவலர் 18/12/1822 இல், கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார்.

பதின்மூன்றாம் வயதிலேயே சைவ சமயத்தின் வீழ்ச்சியைத் தடுத்து அருள்புரிய சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து ஒரு வெண்பாவை இயற்றியதாக அவருடைய வரலாற்றை 1916-இல் எழுதிய யாழ்ப்பாணம் நல்லூர் த.கைலாசபிள்ளை குறிப்பிட்டுள்ளார். அந்த வயதில் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் ஆங்கிலம் கற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது இளமைக்காலத்துச் சிந்தனைகளை, 1868இல் வெளியிட்ட "சைவ சமயங்களுக்கு விக்கியாபனம்" எனும் கட்டுரையில் கூறியதாவது:

"நான் ஜய வருஷம் (1834) முதலாகப் பீற்றர் பார்சிவல் துரையுடைய இங்கிலீஷ் கற்றேன். பிலவ வருஷம் (1841) பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனானேன். பார்சிவல் துரை 'நான் தங்களுக்கு உயர்வாகிய வேதனம் தருவேன்; தாங்கள் என்னை விடலாகாது' என்று பல தரம் வற்புறுத்திச் சொல்லிய வழியும், நான் அவ்விருத்தியில் விருப்பம் வைக்கவில்லை. நான் இல்வாழ்க்கையில், புகவில்லை. இவையெல்லாவற்றிற்குங் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையாம். நான் என் சிறுவயது முதலாகச் சிந்தித்து சிந்தித்து, சைவ சமயத்தை வளர்த்ததற்கு வேண்டும் முயற்சிகளைச் செய்வாரில்லையே! இதற்கு யாது செய்யலாம்? சைவ சமய விருத்தியின் கண்ணாகிய பேராசையை அதனை முடித்தற்குச் சிறிதும் சக்தியில்லாத எனக்குத் தந்தருளிய சிவபெருமான் சக்தியுடைய மற்றையோர்களுக்குக் கொடுத்தருளினாரில்லையே!" என்று இரவும் பகலும் பெருங் கவலை கொண்டு பெருமூச்செறிதலிலும் பலருக்கும் பிதற்றலிலுமே பெரும்பான்மையும் என் காலத்தைப் போக்குவேனாயினேன்."

இங்கு பண்டைய ஈழத்தின் அரசியல் பின்னணியையும் சுருக்கமாக அறிதல் வேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் தமிழ் மன்னர் ஆட்சி நிலவியதை சிங்கள இதிகாசமான மகாவம்சம் ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை அரசுகளும் தமிழ்நாட்டின் சோழ, பாண்டிய விஜயநகர அரசுகளும் தம்முள் கொண்டிருந்த அரசியல் கலாசார உறவுகள் வரலாற்றில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி பதினேழாம் நூற்றாண்டில் மறைவதற்கு முன்பாக ஆட்சி செலுத்திய தமிழ் மன்னர்கள் ஆரிய சக்ரவர்த்திகள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள், "தமிழையும் சைவத்தையும் பேணி வளர்த்த புரவலராகவும், புலவராகவும்" பாராட்டப்பட்டுள்ளனர்.

கி.பி. 1620இல் போர்த்துகீசியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். இவர்கள் காலத்தில் சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன. கிறித்துவ சமய மாற்றத்தில் கொடுமைகள் நிகழ்ந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இந்துவும் போர்த்துகீசிய தலைவனுக்கு நாள்தோறும் உணவிற்காக ஒரு பசுவை அனுப்பி வைக்க வேண்டும் என விதிக்கப்பட்டது.

போர்த்துகீசிய ஆதிக்கத்துக்குப் பிறகு டச்சு, காலனியாதிக்கம் கி.பி. 1658 முதல் கி.பி. 1790 வரையில் நீடித்தது. புரட்டஸ்தாந்து சமயத்தைச் சார்ந்த டச்சு ஆதிக்கத்தில் சுதேசிய சமயங்கள் இழிந்துரைக்கப்பட்டன. மதமாற்றமும் தீவிரமுற்றது. 1796-ல் ஆங்கிலேயர் கொழும்பு நகரைக் கப்பற்றினர். கி.பி. 1815-ல் கண்டி அரசனை வீழ்த்தி ஈழம் முழுவதையும் ஆங்கிலேயர் தமது காலனியாதிக்கத்தின் கீழ் அடிமைப்படுத்தினர். இவர்கள் காலத்தில் ஆங்கிலக் கல்வி முறையை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளாமல் கிறிஸ்துவ மிஷனரிகளிடம் விட்டு விட்டதால், ஆங்கிலக் கல்வி முறையை தங்களது மதமாற்ற முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், கிறிஸ்துவ மிஷனரிகள், வெஸ்லியன் (1814), அமெரிக்கர் (1816), சேர்ச் மிஷன் (1819) முதலான கிறிஸ்துவ மிஷனரிகள் முன்னிருந்தவர்களைக் காட்டிலும் பன்மடங்கு உத்வேகத்துடன் கல்வி பரப்புதலுடன், கிறிஸ்துவ சமயப் பரப்புதலலயும் மேற்கொண்டனர்.

சைவ சமய ஆர்வலர்கள், சைவ சமய குருமார்கள் கிறிஸ்துவ மிஷனரிகளைப் போல்க் கல்வி பரப்புதலை ஆள்வதில் தகுதியும், திறமையுமற்று பின் தங்கியிருந்தனர். பொதுக் கல்வியில் மட்டுமன்று, சைவ சம்யக் கல்வியும் போதிய தேர்ச்சியில்லாமல் புறச் சமயத்தவரின் எதிர்ப்பு பிரசாரத்திற்கு பயனளிக்க இயலாமல் திணறினர். இந்தச் சூழலில் ஆறுமுக நாவலர் கிழர்ந்தெழுந்தார்.

சமயம் பிரசார நூல்களை போர்க்கலன்களாகப் படைப்பதில் நாவலர் தனி முத்திரை பதித்தார். மெதடிஸ்த பாடசாலையில் மாணவராகவும், ஆசிரியராகவும் அவர் பெற்ற அறிவும், அனுபவமும் பைபிளை தமிழாக்கம் செய்ததில் பேர்சிவல் பாதிரியாருடன் கொண்டிருந்த தொடர்பும், சமய பிரசாரத்தில் கிறிஸ்தவர்கள் கையாண்ட வழி முறைகள் நாவலரிடம் பெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும், இயக்க ஆற்றலையும் ஏற்படுத்தின.

(தொடரும்)

(தகவல் ஆதாரம் தொடரின் முடிவில் தரப்படும்..!)

<b>ஐநா பிரகடனத்தின் வாயிலாகவும் அடிப்படை மனித உரிமைகளின் வகையிலும் உலகில் எந்தப் பிரஜைக்கும் தான் விரும்பிய மதத்தை மொழியை கலாசாரத்தைப் பின்பற்ற பரிபூரண சுதந்திரம் உண்டு..அந்த வகையில் சைவத்தையும் தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் பின்பற்ற நினைப்பவர்களுக்காக...ஒரு நினைவூட்டல்...!</b>

Print this item

  கதிர்காமர் கொலையும், சந்திரிக்கா நிலையும். பகுதி 8
Posted by: malaravan - 09-06-2005, 08:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகினது…

சென்ற கட்டுரையில் ஏன் பொதுஜன ஐக்கிய முன்னணிக் கட்சியே கதிர்காமரை சுட்டிருக்கக்கூடாதென பார்த்தோம். அதன் பின் எப்படி சுடுவதற்கான ஆயுதம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் எனவும் கேள்வி எழுப்பி விட்டிருந்தோம். அக்கேள்விக்கான விடையை சற்றேனும் ஊன்றிப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதால் இப்போ அவை பற்றி நோக்குவோம். அதற்கு முன்னர் அனுரத்த ரத்வத்தை காலத்தில் எப்படி கொழும்பு இருந்தது என்பது பற்றியும், அவர்கள் (சந்திரிகா உட்பட) சமாதானத்தில் எவ்வளவு பற்றுறுதி கொண்டிருந்தார்கள் என்றும் பார்ப்போம். அனுரத்த ரத்வத்தை பாதுகாப்பமைச்சராகவிருந்த போது கொழும்பில் வெள்ளைவான் கடத்தல், தமிழ் இளைஞர்கள் கொலைசெய்யப்படல், எங்கே, எப்போ எனப்பாராது கைது போன்ற சம்பவங்கள் வகைதொகையின்றி இடம்பெற்றதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அவற்றிக்கெல்லாம் மூலகர்த்தாவானவர் ரத்வத்தையும், அவரின் புதல்வர்களும், அவரின் அதிதீவிர விசுவாசிகளும் என்பதும் இப்போ நாமறிந்த உண்மையாகின்றது. இவைகள் சாதாரண தமிழனுக்கே தெரிந்திருந்தும் அவைகளை ஆணித்தரமாக உறுதிசெய்ய இயலாத தன்மையால் அவை வெட்டவெளிச்சமாக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனால் சிற்றி மிலேனிய முகாம் பற்றிய தகவல்கள் வெளியானதன் பிற்பாடுதான் சிறீலங்கா அரசின் சில குறிப்பிட்ட தில்லுமுல்லுகள் அம்பலத்திற்கு வந்ததெனலாம். காரணம் அங்கெ விடுதலைப்புலிகளுக்கு உரித்தான சீருடைகள் சிலவும் நவீன ஆயுதங்கள் சிலவும் கைப்பற்றப்பின்தான் அவை வெளிச்சத்திற்கு வந்தன. முதலில் அம்முகாமை கைப்பற்றியவுடன் அம்முகாம் விடுதலைப்புலிகளின் முகாமாகவே சித்தரிக்க முற்பட்ட இலங்கை இராணுவமும், பொலீசாரும், கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் தமிழராக இருந்ததினால் விடுதலைப்புலிகளின் முகாமை கைப்பற்றியதாக அறிக்கைகளை உடனும் வெளியிட்டு விட்டனர். ஆனால் பின்னர்தான் அவர்களுக்கே அது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர்கள் தங்கும் முகாமென தெரியவந்தது. அத்துடன் அம்முகாம் பற்றிய எத்தகவலும் சிங்கள இராணுவ உயர்மட்டத்தைச்சேர்ந்த ஒருசிலரைத்தவிர மிகுதிப்பேர்களுக்கு தெரியாதவகையில் இரகசியமாக இயங்கிய தொன்றென்பதும், அப்பிரதேச மக்களுக்கே அவைபற்றி எதுவும் தெரியாத வகையில் அவர்கள் சில வருடங்கள் தங்கிப்போயிருக்கின்றார்கள் என்பதுடன், கருணாவின் ஒட்டுண்ணிகள் சிலர் அதில் தங்கப்போய்தான் அம்முகாம்பற்றி மக்கள் பொலீசாரக்கு தகவல் கொடுத்தார்கள். சிங்களம் கருணாவிற்கு அடைக்கலம் கொடுக்கப்போய் இருந்த வெள்ளத்தை வந்தவெள்ளம் கொண்டுபோன கதையாகிவிட்டது இப்போ. மேற்படி முகாம் தங்களின் ஆழ ஊடுருவும் புலனாய்வுப்பிரிவிற்கு உரித்தானது என்று தெரிந்தபின்னர்தான் அவைபற்றி அமுக்கி வாசிக்க வேண்டிய தேவையையும் புரிந்துகொண்டனர். இருப்பினும் அப்போ ரணில் ஆட்சியைப்பிடித்திருந்ததால் சந்திரிகா அம்மையாரை மீண்டும் அரசில், அரசியலில் இடம்பெறாது செய்வதற்காக அதை சட்ட நடவடிக்கைப்பிரிவிற்கு மாற்றி அரசியல் ஆக்கினார்கள். அதுவே சிங்கள அரசின் சமாதானத்தின் மீதான பற்றுதலையும்?, தமிழ்மக்களுக்கு அவர்கள் ஆற்றிவரும்? சேவையையும் உலகிற்கு உணர்த்தப்போதுமானவையாகின. அதாவது விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்தை கடைப்பிடிக்கத்தொடங்கிய காலத்தில் கேணல் சங்கரை மேற்படி சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் பிரிவே கொன்றதையும், அத்துடன் மடுவில் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் முயற்சியையும், கடற்புலிகளின் தளபதி லெப்.கேணல் கங்கையமரன் மீதான தாக்குதலையும் அவர்களே செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்ததன் பின்னணியை நோக்கையில் புலிகளை சீண்டி கோபம் கொள்ள வைத்து அதன்மூலம் மீண்டும் ஓர் யுத்தத்தை புலிகளே தொடக்க வைக்கப்பார்த்ததை உலகு புரிந்துகொள்ள வழிசமைத்து நின்றது. அத்துடன் மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கப்பட்டபின் சிங்களப்பகுதியில் வரிப்புலிச் சீருடை தரித்தவர்கள் சில சிங்கள மக்களை கொன்றதை புலிகள் கொன்றதாக பிரச்சார யுத்தத்திற்கு அரசு பாவித்ததானது மேற்படி அவர்களின் படையே காரணமாகின்றது என்பதையும் சிங்கள மக்கள் தௌ;ளத்தெளிவாக புரிந்து கொள்ளச்செய்தது. அத்துடன் இக்குழுவிற்கு தமிழருக்கு எதிராக செயற்படும் சோரம்போன தமிழ், முஸ்லீம் பேர்வழிகளையே பயன்படுத்தியமையும் தெளிவாக அனைவரும் புரிந்துகொள்ளச்செய்தது. கொழும்பில் வைத்து கொல்லப்பட்ட முத்தலிப்பின் பங்கு கேணல் சங்கரின் கொலையில் நேரடியானதாக இருந்து அவரின் மறைவிற்குபின் அரசால் வெளிக்கொண்டுவரப்பட்டதானது அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு யுத்தத்தை மட்டும் நேசித்து, அதன்மூலம் தம்மை வளம்படுத்த எப்படி இலங்கை யுத்தத்தை பாவிக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அத்துடன் இப்போ கருணாவையும் அவனுடன் சேர்ந்தியங்கும் ஒருசிலரையும் வைத்தும் தாமும் அதில் பங்குகொண்டும் மீண்டும் கிழக்கிலங்கையில் யுத்த முஸ்தீபுகளில் ஈடுபடுவதையும் நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றதல்லவா?. அவ்வாறு சேர்ந்தியங்கும் குழுக்களுக்கு இராணுவ உயர்மட்ட மேலதிகாரிகளே ஆயுதத்தை வழங்குகின்றார்கள். அப்படி வழங்கப்படும் ஆயுதமானது யுத்தமுனையில் இருக்கும் இராணுவத்தினரது பாவனையில் இல்லாத அதியுயர் நவீனமயமான ஆயுதங்களே வழங்கப்பட்டிருப்பதும், அவ்வாறான ஆயுதத்தாலேயே கதிர்காமர் சுடப்பட்டிருப்பதையும் வாசகர்கள் புரிந்துகொண்டிருப்பீகள். அவ்வாறு இவர்களை வைத்து கொலைசெய்த பின்னர் கூட அவர்கள் புலிகள் மேல் பழி போட எவ்வளவு நுணுக்கமாக செயலாற்றியிருப்பினும் அவையில் பெரும் சறுக்கல் ஏற்பட்டிருப்பதை நாம் கவனிக்கலாம். அதன்மூலம் புலிகள் அக்கொலையை செய்யவில்லை என்பதை நிரூபிக்க அங்கே கிடைத்த தடயப்பொருட்கள் போதுமானவையாக இருக்கின்றது. புலிகள் தாக்குதலுக்கு முன்னர் கன்டோஸ் சாப்பிடுவதாக கேள்விப்பட்ட சிங்களம் அதற்கேற்றால்போல் வெறும் கன்டோஸ் பைக்கற்றுக்களை விட்டிருந்தார்கள். அத்துடன் வெற்றுத்தோட்டக்களையும் விட்டிருந்தார்கள். அவைகளை எடுத்தவுடன் கொழும்பு பேரினவாத பத்திரிகைகள் கதிர்காமரை கொன்றது புலிகள்தான் என்றும், அவர்கள் அதிநவீன ஆயுதத்தைக்கொண்டு இக்கொலையை செய்ததாகவும் கொக்கரிக்கத்தொடங்கியபின்தான் அடுத்த தடயமாக பல புகைத்து முடிக்கப்பட்ட சிகரெட் துண்டுகள் பொறுக்கியெடுக்கப்பட்டன. அதன்பின் புலிகளை சாட்டிய அனைவரும் அழுத்தமாக புலிகளை சாட்டமுடியாத நிலையில் இருக்கின்றார்கள். காரணம் புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது. அதே போல் விடுதலைப்புலிகள் சாவரினும் புகைத்தலை செய்யக்கூடியவர் இல்லை என்பதில் சிங்கள பேரினவாதிகளுக்கும் தெரிந்த ஒன்றாகையால் அவ்விடத்தில் கொலையாளி புகைபிடிப்பவராகின் புலிகள் அக்கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், அது உள்வீட்டு சதியெனவும் அவர்களுக்கு புரியத்தொடங்கிவிட்டது. ஆதலினால் இப்போ கதிர்காமரை போட்டது கொழும்பில் உள்ள ஏதாவது, தங்களைச்சார்ந்த ஓர் கட்சியோ? அன்றி தம்மைச்சார்ந்த அமைப்போதான் என்கின்ற உண்மை உறைக்கத்தொடங்கிவிட்டது. இப்போ அதை நம்பத்தொடங்கிவிட்டார்கள். அனுரத்த ரத்வத்தைக்கு வேண்டியது சந்திரிக்காவிற்கு அடுத்ததாகவிருந்த தன்னைமுந்தி கதிர்காமர் வருவதா? என்கின்ற எண்ணமும், ரத்வத்தையின் விசுவாசிகளுக்கு தமது தளபதி ஏன் ஒரு தமிழனால் கட்சியில் கடைநிலைக்கு போகவேண்டும் என்கின்ற கோபமுமாக சேர்ந்து கதிர்காமரின் உயிரைக்குடித்திருக்கின்றது அல்லவா!. ஆகவே இப்போ கதிர்காமரை கொலைசெய்ய பொதுசன ஐக்கிய முன்னணிக்குள் ஆட்கள் இருப்பதையும் புரிந்திருப்பீர்கள் அல்லவா? வாசகர்களே!
இனி இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ராஜபக்ஷா ஏன் இக்கொலையை செய்திருக்கக்கூடாதென பார்ப்போம். அவை தொடரும்.

நன்றி

மலரினி மலரவன்.
www.tamilkural.com

Print this item

  பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம்
Posted by: narathar - 09-06-2005, 07:07 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (5)

பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம்

இரா. திருநாவுக்கரசு

எந்த ஒரு வரலாற்று ஆளுமை மீதான விமர்சனத்திலும் அன்றாட அரசியல் ரீதியான பார்வையில், நேர் அல்லது எதிர்மறையான பண்புகளே பொதுவாக முன்னிறுத்தப்படும். ஆனால் ஒரு வரலாற்று ஆளுமையை அவர் காலச் சமூக, அரசியல், கலாச்சாரச் சூழலோடு பொருத்திப் பார்த்து (நீஷீஸீற்மீஜ்ற்ன்ணீறீவீக்ஷ்மீ) அணுகும்போது நமது விமர்சனங்கள் நல்லது / கெட்டது என்பவற்றுக்குள் அடங்க மறுக்கும்.

பெரியாரை அவர் வாழ்ந்த சமூக, அரசியல், கலாச்சாரச் சூழýல் பொருத்திப் பார்த்தால் மட்டுமே இன்றைய 'அன்றாட அரசியல்' தேவைகளுக்காகவும் வசதிக்காகவும் அவரைப் புகழ்ந்தோ இகழ்ந்தோ மதிப்பிடுவதை விடுத்து விரிவான, ஆழமான புரிதலை அடைய முடியும்.

பெரியாரை ஒரு சர்வரோக நிவாரணியாகப் பார்க்கும் மதிப்பீடு ஒரு புறம். அவரை ஏறக்குறைய ஒரு தýத் விரோதி என்று சித்தரிக்கும் அளவிற்குப் போகும் கருத்தாக்கம் மற்றொரு புறம். பெரியார் தனது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்த ஒரு போý - அவரைப் பெண் விடுதலைக்கு மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் ஆதர்சமாக முன்னிறுத்துவது ஆபத்தானது என்று வழக்கம்போலப் பெரியாரின் அன்றாட அரசியலை மட்டுமே பிரதானப்படுத்தும் தார்மீகக் கண்ணீர். இவை போன்ற வாதங்களும் எதிர்வினைகளும் பெரியாரின் சிந்தனைகளை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழýன் தன்மையோடு பொருத்திப் பார்க்கும் ஆய்வு நோக்கை முற்றிலும் மழுங்கடிக்கக் கூடியவை.

காலனிய ஆட்சி மூலமாக முதýல் இந்தியாவின் அரசியல்-பொருளாதாரத் தளங்களில் மாறுதல்கள் ஏற்பட்டாலும் பின்னர் நிறுவனமயமாக்கத்தால் சமூக, கலாச்சாரத் தளங்களில் அதுவரை நிலவிவந்த மதிப்பீடுகள் பெரும் அதிர்வைச் சந்தித்தன. இதன் பின்புலம் நவீனத்துவமே என்ற சுயபிரக்ஞையுடன் அதை ஒரு சித்தாந்தமாகவே சுவீகரித்துக்கொண்டு பல அறிஞர்கள், தலைவர்கள் சமூக, கலாச்சாரத் தளங்களில் தீவிரமாக இயங்கினர். அதுவரை நிலவிவந்த சாதிக் கொடுமைகள், சாதி அமைப்பிற்கும் இந்து மதத்திற்குமான உறவு பற்றிய புரிதல் ஆகியன நவீனத்துவச் சிந்தனைகள் மூலமே சாத்தியப்பட்டன. சமூகச் சீர்திருத்தம் எனும் பெயரால் நடந்தவை அனைத்துமே சாதி-இந்து மதம் சார்ந்தே அமைந்திருந்தன. சாதி அழிப்பாளர்களுக்கு நவீனத்துவம் தத்துவ நிலைப்பாடு என்பதிýருந்து, சித்தாந்த நிலைப்பாடாக மாறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் சூழýல் நவீனத்துவச் சிந்தனைகள் சமூகச் சீர்திருத்தத்திற்கான இயக்கச் சக்தியாகச் செயல்பட்டதோடு, அதன் அடுத்த, மேம்பட்ட எல்லையான தேசியச் சிந்தனையை எட்டவும் உதவியது. இது போன்று நிகழவேண்டுமானால் சமூக, கலாச்சாரத் தளங்களில் அத்தியாவசியமான சில மாற்றங்கள் கட்டாயம் நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது, தேசியம், தேசம் பற்றிய பிரக்ஞைக்குத் தேவையான அமைப்பு ரீதியான மாற்றங்கள் தமிழ்ச் சூழýல் ஏற்பட்டிருக்க வேண்டும். சாதி அழிப்பு, பெண் விடுதலை, தனிநபர் உரிமை, மதச் சார்பின்மையாக்கம், குடிமை உரிமை, பின்னர் தேசியப் பிரக்ஞை ஆகிய அனைத்துமே நவீனத்துவத்தைத் தோற்றுவாயாகக் கொண்டவை. தமிழ்ச் சூழýல் நவீனத்துவத்தால் சாதி அழிப்பு இயக்கம் பெற்ற உத்வேகம் அசாதாரணமானது. இதன் தொடக்கப் புள்ளி அயோத்திதாசர் என்று ஐயமின்றிக் கூறலாம். அதே சமயம், இவரது சாதி எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக உருவான சனாதனிகளின் இயக்கத்தை ஆதிக்கம் பெறாமல் செய்தது மட்டுமன்றி ஒரு கட்டத்தில் சிதைந்துபோகும் அளவிற்குக் கொண்டுவந்தது, அயோத்திதாசருக்குப் பிறகு நவீனத்துவக் கருத்துகளைத் தீவிரத்துடன் பரப்பிய பெரியாரின் சிந்தனை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு நவீனத்துவத்தின் மூலமே நிரந்தரத் தீர்வு என்பதில் அயோத்திதாசருக்கும் பெரியாருக்கும் இருந்த நம்பிக்கை குறைகாண முடியாதது.

எனினும் நவீனத்துவம் பற்றிய பெரியாரின் புரிதல் பொதுப் புத்தியும் தன்னுணர்வும் சார்ந்தது. ஆனால் மானுட விடுதலைக்கு நவீனத்துவத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கை மாசற்றது. தனது சமூகத்தின் வரலாற்றை யாருமே எதிர்பாராதபடியெல்லாம் விமர்சித்தார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றதுகூட இந்தப் பொருளில்தான்; அறிவு (க்ஷீமீணீள்ஷீஸீ) மற்றும் நவீனத்துவக் கருத்துகளை உள்வாங்கும் தன்மை தமிழில் இல்லை என்று அவர் நம்பியதன் விளைவே இது.

நவீனத்துவத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து அதைச் சமூகத்தின் அனைத்து எல்லைகளுக்கும் நீட்டிக்க உழைத்த பெரியார் இல்லாத ஒரு தமிழ்ச் சூழல் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும். சாதி இறுக்கம் குறிப்பிடத்தக்க அளவு குறைய பெரியாரின் நவீனத்துவக் கருத்துகள் காரணம் என்பதை மறுக்க முடியாது.

நவீனத்துவக் கருத்துகளைப் பெரியார் முன்னெடுத்துச் செல்லும்போது, வரலாற்றுக் காரணங்களால் சில வசதிகளோடு முன்வரிசையில் இருந்தவர்கள் அதன் சலுகைகளைச் சற்றே கூடுதலாகப் பெற்றுவிட்டார்கள் என்பதற்காக அவரது நவீனத்துவக் கருத்தே தவறு எனக் கூற முடியுமா? பெரியாரது பணியே ஆதிக்கச் சக்திகளான சாதி இந்துகளைப் பாதுகாக்கவே எனச் சிலர் கூறுவது அசல் திரிபுவாதம். அம்பேத்கரின் இயக்கத்தில்கூட, அதன் பலனைப் பெற்றவர்களில் அன்றைய சூழýல் சில மேம்பட்ட தýத் வகுப்பாளர்களே அதிகம். அதற்காக, 'மஹர்' வகுப்பைத் தவிர ஏனைய தýத்துகளுக்கு அம்பேத்கர் எதிரி என்று சொல்ல முடியுமா?

தமிழின் பழமை பற்றி அளவிற்கதிகமான பெருமிதமும் சகிக்க முடியாத உயர்வு நவிற்சியும் கொண்டிருந்த தி.மு.க. பெரியாரின் நவீனத்துவச் சிந்தனைகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தவறியதோடு, வாக்கு அரசியலுக்கு முக்கியத்துவம் தரத் துவங்கியதால் பெரியாரின் இயக்கமே 'சாதி எதிர்ப்பு இயக்கமல்ல, வெறும் பிராமண எதிர்ப்பு இயக்கமே' எனும் பெயரைப் பெறக் காரணமாகிவிட்டது. ஆக, ஒரு ஆக்கபூர்வமான சிவில் சமூகம் உருவாவதை இவர்கள் யாருமே விரும்பவில்லை எனத் தெரிகிறது.

தமிழகச் சூழýல் நவீனத்துவக் கருத்துகளைப் பெரியாருக்குப் பிறகு தர்க்கரீதியாக அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு சாதி பற்றிய புரிந்துணர்வு கொண்ட மார்க்சியவாதிகளான நக்சல் அமைப்பினரிடமும் தýத் இயக்கங்களிடமுமே உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் பெரியாரின் நவீனத்துவச் சிந்தனைகளின் தொடர்ச்சியே முக்கியப் பங்காற்றும். மாறாக, பெரியாரின் சிந்தனைகள் எதிர்மறையானவை என்பது புரட்டல்வாதமே.

பெரியாரை அழித்தே தýத் விடுதலை என்பது நவீனத்துவத்தை மறுத்தே தýத் விடுதலை என்பதற்கு ஒப்பாகும். அன்றாட அரசியல் குறைகளை முன்னிறுத்திப் பெரியாரை, நவீனத்துவத்தை மறுதýப்பதால் ஏற்படும் வெற்றிடம் தýத் விடுதலைக்கு, பெண் விடுதலைக்கு எப்படி உதவும் என்று தெரியவில்லை.

மேலும் கழகங்கள் இந்துத்வ சக்திகளோடு கூட்டணி சேர்ந்ததற்குப் பெரியார் பொறுப்பாக மாட்டார்; அதேபோல் குலதெய்வத்தைக் கும்பிட்டு, ஜார்ஜ் பெர்னாண்டஸ÷டன் கூட்டுச் சேர்ந்தால் அது அம்பேத்கரின் தவறல்ல. இதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் அன்றாட அரசியýன் ஒரு பரிமாணம். இவற்றை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தி இகழ்ந்தோ, புகழ்ந்தோ பேசுவது சாதாரணப் பத்திரிகை நிருபர் செய்யும் வேலை. ஆகையால் அன்றாட அரசியலையும் அதன் நிறை, குறைகளையும் பின்தள்ளி, வரலாற்று ரீதியாக, ஆய்வு நோக்கில், ஓர் இயக்கத்தின் முற்போக்குச் சிந்தனைகள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எப்படி உருமாற வேண்டும் என்ற புதிய கருத்தாக்கங்களை உருவாக்க வேண்டும்.

சுருங்கக் கூறின், சாதி அழிப்பு, பெண் விடுதலை, மதச் சார்பின்மையாக்கம் போன்ற உயர்ந்த விழுமியங்களுக்கு நவீனத்துவமே தோற்றுவாய். தமிழ்ச் சூழýல் இந்த நவீனத்துவச் சிந்தனைகளை முதன்மைப்படுத்தியோரில் முதýரண்டு இடங்கள் அயோத்திதாசருக்கும் பெரியாருக்கும் உரியவை. இச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இவ்விழுமியங்களில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய பணியே. எனினும் மார்க்சிய - லெனினிய இயக்கங்களும் தýத் அமைப்புகளும் இப்பணியைச் செய்யச் சித்தாந்த பலம் பெற்றவை.

கட்டுரையாசிரியர் புதுதில்ý ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை ஆய்வு மாணவர்.


http://tamil.sify.com/kalachuvadu/april05/...php?id=13710510

Print this item

  அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது
Posted by: AJeevan - 09-06-2005, 05:58 PM - Forum: குறும்படங்கள் - No Replies

<span style='font-size:22pt;line-height:100%'><b>அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050905154801adoor203.jpg' border='0' alt='user posted image'>
<i>இயக்குனர்
அடூர் கோபாலகிருஷ்ணன்</i>

இந்திய அரசு சினிமா துறைக்கு வழங்கக்கூடிய மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதில் 2004ஆம் ஆண்டிற்கான விருது கேரளாவின் பிரபல கலைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக இப்படியான விருதுகள் வட மாநிலத்தவருக்கே வழங்கப்படுவதாக புகார் நிலவும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்கும், தற்போது அடூர் கோபால கிருஷ்ணனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டிருப்பது தென்னிந்தியருக்கு மனநிறைவைக் கொடுக்கலாம்.

அடூர் கோபாலகிருஷ்ணன் இதுவரை ஒன்பது படங்களைத்தான் இயக்கியுள்ளார், என்றாலும் அவர் இயக்கிய அனைத்துப் படங்களும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றவை.

\"ரியலிஸம்\" எனப்படும் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களையும் தாண்டி புதுமைகளை செய்து கலைப்படங்களை இயக்கலாம் என்று நிரூபித்துக்காட்டியவர் அடூர் கோபாலகிருஷ்ணன் என்று கூறுகிறார் எல்.வி.பிரசாத் திரைப்படப் பயிற்சிக் கல்லூரி இயக்குநரான கே.ஹரிஹரன்.

கேரள சினிமா ரசிகர்களின் ரசனைத் தரத்தை உயர்த்தியதில் பெரும் பங்கு அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு என்கின்றார் சினிமா விமர்சகர் சசிகுமார்.

</span>

-BBC tamil

Print this item