Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 561 online users.
» 0 Member(s) | 558 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,334
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  JVP ஆயுதங்களைக் கையளிக்கவில்லை
Posted by: வினித் - 09-29-2005, 01:54 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஆயுதங்களை ஒப்படைக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேடைகளில் கோஷமிடும் ம.வி.மு.இன்னமும் தமது ஆயுதங்களைக் கையளிக்கவில்லை ரணில்
ஆயுதங்களை ஒப்படைக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேடைகளில் கோஷமிடும் மக்கள் விடுதலை முன்னணியினர் இன்னமும் தமது ஆயுதங்களைக் கையளிக்கவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாமும் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியும் அரசாங்கத்தில் இருந்த போது ஜனநாயக அரசிலயல் நீரோட்டத்திற்குள் புகுந்த மக்கள் விடுதலை முன்னணியினரிடம் அவர்களிடம் ஆயதங்களை கையளிக்குமாறு கோரவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். பெல்மெதுல்லை பாத்தகட சர்வோதய பிக்குகள் பயிற்சி நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டோக்கியோ பிரகடனம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை பிரகடனம் என்பனவற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றுக்கான சரியான சந்தர்ப்பத்தில் யுத்த நிலைமையில் இருந்து வழமை நிலைக்குத் திரும்புவதற்காக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் பிராந்திய நிர்வாகத்தில் அரசாங்க அதிகாரத்திற்குள் சேர்த்துக் கொள்ளும் சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமஷ்டி தீர்வொன்றுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஒஸ்லோவில் இணங்கியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். அவர்களை மீண்டும் தனி நாடொன்றிற்கான கோரிக்கைக்கு இட்டுச் செல்லாமல் தற்போதைய இணக்கப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதே தற்போது நாம் செய்ய வேண்டியதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&

Print this item

  அச்சத்தில் கண்காணிப்புக் குழு
Posted by: வினித் - 09-29-2005, 01:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

அரச ஆயுதக் குழுவின் தாக்குதல் அச்சத்தில் கண்காணிப்புக் குழு: உறுப்பினர்கள் திடீர் மாற்றம்! பாதுகாப்பு அதிகரிப்பு!!
[வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2005, 18:49 ஈழம்] [கொழும்பு நிருபர்]
<b>சிறிலங்கா அரச படைகளுடன் கருணா குழு என்ற பெயரில் இயங்கி வரும் ஆயுதக்குழுவினர் எந்த நேரத்திலும் தம் மீது தாக்குதல் நடாத்தக் கூடும் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அச்சத்தில் உள்ளது</b>.

இதையடுத்து கண்காணிப்புக் குழுவின் அலுவலகங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள், தாக்குதல் அச்சம் அற்ற பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி வெலிக்கந்தையில் திறக்கப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்த கண்காணிப்புக்குழுவின் கிளை அலுவலகத் திட்டமும் இந்த அச்சுறுத்தலால் கைவிடப்பட்டது.

மட்டக்களப்பிற்கு வருகை தந்த கண்காணிப்புக் குழுவின் தலைவர், கடந்த இரு தினங்களாகத் தங்கியிருந்து இந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் உரையாடியுள்ளதாகத் தெரியவருகிறது.

இவ்விடயத்தில் அதீத நம்பகத்தன்மை காணப்படுவதாக கண்காணிப்புக்குழு கருதியதையடுத்து மட்டக்களப்பில் அமைந்துள்ள கண்காணிப்புக்குழுவின் பிராந்தியத் தலைமையகம் மற்றும் வாழைச்சேனை கிளை அலுவலகம் ஆகியவற்றிற்கு 24 மணிநேர காவல்துறை-இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட கண்காணிப்புக் குழுவின் இரு முக்கிய உறுப்பினர்கள் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கொழும்பிலுள்ள கண்காணிப்புக்குழுவின் அதிகாரியொருவரிடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டபோது,

இக்கேள்விக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்தார் என்பதும் மறைமுகமாக அக் கேள்வியை சார்ந்த வகையிலேயே கருத்துக்களைத் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரச படையுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழு பற்றிய உண்மைகளை கண்காணிப்புக்குழு வெளிக் கொணர்ந்ததையடுத்து இந்த அச்சுறுத்தலை ஆயுதக் குழுவினர் விடுத்துள்ளனர்.

பொலநறுவை மாவட்டம் தீவுச்சேனையில் அரசபடைகளின் கண்காணிப்பின் கீழிருந்த ஆயுததாரிகள் பற்றிய செய்திகள் வெளியாவதற்கு கண்காணிப்புக் குழுவே காரணம் என்ற நிலையிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் கண்காணிப்புக் குழுவிற்கு விடுக்கப்பட்டுள்ளது.

கௌசல்யன் கொலை தொடர்பான சிறிலங்கா அரச தலைவர் ஆணைக்குழு முன்னான சாட்சியத்தின் போது தீவுச்சேனையில் ஆயுததாரிகள் இருப்பது பற்றி கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இரண்டு மாதங்களிற்கு முன்னர் தீவுச்சேனைப் பகுதியில் ரோந்து சென்ற போது கருணா குழு என்ற பெயரிலான ஆயுததாரிகளைச் சந்தித்து இதனை கண்காணிப்புக்குழுவினர் மீண்டுமொருமுறை நிரூபித்திருந்தனர்.

இச்சந்திப்புப் பற்றிய செய்திகளேதும் கண்காணிப்புக் குழுவால் வெளிவராதபோதும், அது பற்றிய செய்தியை சிறிலங்கா அரசின் அனுசரணையில் இயங்கும் தமிழின விரோத இணையத்தளமும், மட்டக்களப்பின் குறிப்பிட்ட பகுதிகளில் இராணுவத்தால் இரவு வேளைகளில் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரமொன்றுமே வெளிக்கொணர்ந்தன.

இவ்வாறு சிறீலங்காப் படைத்தரப்பு இச்செய்தியை வெளியிட்ட பிற்பாடே, கண்காணிப்புக்குழுவின் தீவுச்சேனைச் சந்திப்புக் குறித்த உண்மையான விடயங்கள் வெளியுலகின் பார்வைக்கு வந்தன.

குறிப்பாக, அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழே இந்த ஆயுதக்குழு இயங்குகிறது என்பதை நிரூபிப்பதற்கான சந்திப்பே அது என்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இப்படியான திரிசங்கு சொர்க்க நிலையையடைந்த மேற்படி ஆயுதக்குழு மற்றும் சிறிலங்காப் புலனாய்வுத்துறையினர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.


http://www.eelampage.com/?cn=20432

Print this item

  இராணுவ பாதுகாப்புடன் யாழில் ஈ.என்.டி.எல்.எஃப்!
Posted by: வினித் - 09-29-2005, 01:37 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

சிங்கள இராணுவ பாதுகாப்புடன் யாழில் ஈ.என்.டி.எல்.எஃப்!
[வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2005, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்]
<b>கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினர் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புடன் கடந்த வாரம் ஆறு பேர் கொண்ட இக்குழுவை விமானம் மூலம் வி.ஆனந்தசங்கரி அழைத்து வந்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.டி.பி. செயற்படுவது போல ஈ.என்.டி.எல்.எஃப் குழுவையும் செயற்பட வைக்க திட்டமிடப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈ.என்.டி.எல்.எஃப் குழுவினர் தற்போது தீவகம் மற்றும் ஊர்காவற்துறைப் பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் இலங்கையின் வடபகுதிக்கும் இடையில் உள்ள கடல்வழி தொடர்புகளை வேணுவதற்காகவும் இவர்களை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.</b>
www.puthinam.com

Print this item

  ஓடியோ மென்பொருள்
Posted by: Paranee - 09-29-2005, 06:13 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (1)

ஓடியோ மென்பொருள் ஓன்ற தேவை இணையத்தில் தரவிறக்க விபரம் அறிந்தவர்கள் உதவுங்கள்

ஒரு பாடலில் இருந்து இசையை பிரித்து எடுக்கவேண்டும்

இசைவேறு பாடல் வேறாக




நட்புடன் பரணீதரன்

Print this item

  நம்ப முடிகிறதா?
Posted by: sooriyamuhi - 09-29-2005, 06:05 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (16)

புகையிரத கடவை,பஸ் கடவை ஏன் கப்பல் கடவை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்......
இது ஆகாய விமானக்கடவை ஜேர்மனியில். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :?: ..........
வாகனங்கள் விமானம் கடக்கும்வரை காத்திருப்பதைப்பாருங்கள்


<img src='http://img251.imageshack.us/img251/5188/aircross14vh.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  காதலில்
Posted by: inthirajith - 09-28-2005, 10:31 PM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

காதலில் அன்பு உண்டு ஆணுக்கு உன்
ஆனந்தம் என் ஆனந்தம் என்றுதான்
நீ மகிழ்ந்த பொழுதெல்லாம் என் மகிழ்வாய்
நான் கொண்டாடினேன் அது உன் மனதுக்குபுரியும்

உன்சோகம் உன்வேதனை என்மீது சுமத்து
ஆனந்தமாய் சுமப்பேன் ஆனால் காமம்
வெறும் உடல் ரசனை என்று மிருகமாக்காதே
மனிதன் தான் இதுவரை என் மடல் திறக்காமல்
மனது தெரியாது என் அழைப்பு அனுமதிக்காமல்

என்முடிவு புரியாது நான் உபவாசம் இருப்பதும்
என் பிரார்த்தனைகளும் யாருக்காக என் உறவு
நீ தான் ஆயிரம் சால்ஜாப்பு நீ சொல் என்னை
தவிர்த்தால் 5ஜென்மங்களுக்கு தீரா வேதனை
அது உன்கைகளில் ஏதொ கனவுகள்
நினைவுகள் காற்றினில் அலைகிறது அது

உன்மனவாசல் திறந்தால் ...........

Print this item

  மனிதனும் மிருகமாகலாம் (உன்னால்)
Posted by: inthirajith - 09-28-2005, 08:43 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

காலம் முச்சூடும் உன்னுடன் என்றாயே
காலம் மட்டும் போனது உன் நிஜம் என்ன
காதல் மாறியதோ இல்லை கனவாய் போனதோ
காணும் போது எல்லாம் அத்தான் என்றாயே

உயிர்வரை வலிக்கிறதே பிரியசகி ஏன் இந்தமௌனம்
உன்னால் உறவுகள் இல்லாமல் தனிமரம்
உறக்கம் இல்லா இரவுகள் உன்னை மட்டும்
உபாசிக்கின்றதே உள்ளம் தவிப்பது புரியலையா?

யாருமே இல்லாமல் வாழும் வாழும் என்நிலை
யாருக்கு புரியும் உன்னை தவிர புரிந்த நீயே.....
யாதுமாய் நின்றாயே யாரும் வேண்டாம்
யான் இருப்பேன் என் மடிமீது அழு என்றாயே

இப்போ மட்டும் என்னை தவிக்கவிட்டு நீ
இரக்கமில்லா இரவுகளில் என்னை கொல்வது
இருதிங்களுக்கு முன்னால் மரணம் என்னை
இல்லாது செய்தால் இருக்காதே இந்தவலியெலாம்

மனிதனும் புத்தனாகலாம் அரசனாய் இருந்தால்
மனிதனும் மகாத்மா ஆகலாம் ஆபிரிக்கா போனால்
மனிதனும் வீரனாகலாம் அடக்குமுறையை அழித்தால்
மனிதன் நான் மட்டும் மிருகமாககூடாத உன் அலட்சியத்தால்..

Print this item

  றா றா சரசுக்கு றா றா
Posted by: கீதா - 09-28-2005, 08:05 PM - Forum: சினிமா - Replies (114)

<img src='http://img214.imageshack.us/img214/8383/vijayn25hb.jpg' border='0' alt='user posted image'>

றா றா சரசுக்கு றா றா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஜோதிகாவின் வேண்டுகோளின் பெயரில் அவர் இணைத்த படத்தை நீக்கியிருக்கின்றேன். அதன் இணைப்பில் கிளிக் செய்து விரும்பியவர்கள் பார்க்கலாம் - மதன்

இணைப்பு http://img258.imageshack.us/img258/7339/pi...2in.gif[/color]

Print this item

  நினைவு கிடைக்குமா
Posted by: கீதா - 09-28-2005, 08:00 PM - Forum: சமையல் - Replies (25)

<img src='http://img256.imageshack.us/img256/595/htte9uc.jpg' border='0' alt='user posted image'>



நினைவு கிடைக்குமா

Print this item

  மட்டு. புனர்வாழ்வுக்கழகம் மீது தாக்குதல்: காவலாளி கொலை
Posted by: malaravan - 09-28-2005, 07:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதிச் சந்தியிலுள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மாவட்ட அலுவலகம் மீது இன்றிரவு 8.20 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு இரவு நேர கடமையிலிருந்த காவலாளியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இவர் வேலுப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் அலுவலகம் முன்பாக இறங்கிய இரண்டு நபர்கள் 5 கைக்குண்டுகளை வீசி இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். ஏற்கனவே டயஸ் வீதியிலுள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் அலுவலகம் சில மாதங்களுக்கு முன்பு இப்படியானதொரு தாக்குதலுக்கு இலக்கானதையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டமை குறிப்படத்தக்கது.
நன்றி. நிதர்சனம்
www.nitharsanam.com


மலரவன் மலரினி
www.tamilkural.com

Print this item