| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 140 online users. » 0 Member(s) | 138 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| காதலன்தான் வேண்டும் கணவன் வேண்டாம் |
|
Posted by: SUNDHAL - 10-03-2005, 01:31 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
கணவனையும் குழந்தைகளையும் விட்டு கள்ளக்காதலனோடு ஓடிய பெண் அவனிடமே சேர்த்து வைக்கப்பட்டாள்.
கடையநல்லு}ர் அருகே உள்ள மேக்கரையை சேர்ந்தவர் சுடலை. அவரது மனைவி அய்யம்மாள்(வயது30) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அய்யம்மாளுக்கு அதே ஊரைச் சேர்நத மNது (வயது32) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன.
கள்ளக்காதலர்கள் இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
இதுகுறித்து அய்யம் மாளின் கணவர் சுடலை அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார்.
அய்யம்மாளை மீட்டு வர தென்காசி …ஏ.எஸ்.பி.† சந்தோஷ்குமார் உத்தரவின் போpல் ஆய்குடி இன்ஸ்பெக்டர் ராஜh, அச்சன்புதூர் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் கள்ளக்காதல் nஜhடி கேரளாவில் தங்கி இருப்பதாக தொpயவந்தது.
இதையடுத்து போலீசார் கேரளா சென்று 2 பேரையும் பிடித்தனர். அவர்களை செங்கோட்டை கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
வழக்கை விசாhpத்த ஜுடிசியல் மாஜpஸ்திரேட் ஆனந்திடம் அய்யம்மாள் நான் வாழ்ந்தால் மNதுவுடன் தான் வாழ்வேன் என கூறினாள். இதனால் அய்யம்மாள் மNதுவுடன் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்டாள்.
Thnaks;Dinakaran...
|
|
|
| பேத்தியை பெற்றெடுத்த பாட்டி |
|
Posted by: SUNDHAL - 10-03-2005, 01:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
குழந்தை பெற முடியாத மகளுக்கு, பெற்ற தாயே வாடகைத் தாயாகி குழந்தை பெற்றுத் தந்துள்ள விசித்திர பாசக் கதை லண்டனில் நடந்துள்ளது.
சினிமாகாரர்களுக்கு இதோ ஒரு புதிய கதை கிடைத் திருக்கிறது. திரைக்கதை எழுதி படம் எடுக்க உதவும் இந்தக் கதை பற்றிய விவரம் வருமாறு„-
லண்டனைச் சேர்ந்த இளம்பெண் எம்மா ஹhட்டர்லே. அவரது கணவர் ஆண்ட்ரூ. திருமணமாகி சில வருடங்களுக்குப் பிறகு குழந்தை பெற முடிவு செய்தனர். டாக்டாpடம் சென்று ஆலோசனை கேட்டனர். எம்மாவை பாpசோதித்த டாக்டர், அவரது இதயம், நுரையீரல்கள் மிக பலவீனமாக இருப்பதாகவும், கருவுற்றhல் குழந்தை மற்றும் தாய் இருவரும் பலியாக நேரலாம் என்று எச்சாpத்தார். அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் மனதைத் தேற்றிக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர். வெளியார் மூலம் வாடகைக்குக் குழந்தை பெற எம்மா விரும்பவில்லை.
மாறhக, தனது அம்மாவைப் பார்த்தார். …ஏன் எனது குழந்தையை நீ சுமந்து பெற்றுத் தரக்கூடாது† என்று கேட்டார். முதலில் அதிர்ந்தாலும் பிறகு மூவரும் விhpவான ஆலோசனை நடத்தினர். மகளுக்குக் குழந்தை பெற்றுத்தர தாய் அன்னி சம்மதித்தார்.
இதையடுத்து மகளின் கரு முட்டை, மருமகனின் உயிரணு மூலம் உருவாக்கப்பட்ட கருவை அம்மா தனது கருப்பையில் ஏற்றுக்கொண்டார். 53 வயதான அந்தப் பாசத்தாய்க்கு சிசோpயன் ஆபரேஷன் மூலம் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
…தாயும், சேயும் நலம்† . . . சாhp, …பாட்டியும், பேத்தியும் நலம்† என்று டாக்டர்கள் கூறினர். இந்த அதிசய பிரசவம் பற்றி குழந்தையின் தாய் எம்மா கூறுகையில், ……முகம் தொpயாத ஏதோ ஒரு பெண் மூலம் வாடகைக்குக் குழந்தை பெற நான் விரும்பவில்லை. நம்பிக்கையான, நெருக்கமான, பாசமான உறவினர் மூலம் பெற விரும்பினேன். அதற்கு என் தாயைப் போல யாரும் ஈடாகவில்லை. தாய் மூலம் என் குழந்தை பிறந்த அந்த நிமிடத்தில் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றhர்.
Thanks inakaran
|
|
|
| மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றது ஆஸ்திரேலியா |
|
Posted by: SUNDHAL - 10-03-2005, 12:49 PM - Forum: மருத்துவம்
- Replies (4)
|
 |
மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேரி ஜே மார்ஷல் மற்றும் ராபின் வாரன் மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர். இரைப்பையில் உள்ள பாக்டீரியா மற்றும் அல்சர் நோய் பற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.
|
|
|
| யாழில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொலை! |
|
Posted by: mayooran - 10-03-2005, 12:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இரண்டு பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
யாழ். கொக்குவில் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஈ.பி.டி.பி. உறுப்பினரான கிருஸ்ணன் பரமேஸ்வரன் (வயது 42) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இன்று காலை 7.30 அளவில் யாழ். சிங்கள மகாவித்தியாலயத்தில் பணிபுரியும் தனது மனைவியை பாடசாலைக்கு வழியனுப்பிவிட்டு திரும்பும் வழியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டிற்கு அவர் இலக்காகியுள்ளார். சங்கீத ஆசிரியராகவும் கிருஸ்ணன் பரமேஸ்வரன் பணியாற்றி வந்துள்ளார்.
கிருஸ்ணன் பரமேஸ்வரனின் தலையிலும் மார்பிலும் நான்கு சூட்டுக்காயங்கள் உள்ளன. துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான இடத்திலேயே அவர் பலியானார்.
இதனிடையே பருத்தித்துறை குடத்தனை வல்லிப்புரம் கோவிலுக்கருகில் ஒருவரின் சடலத்தை சிறிலங்கா காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை காலை கண்டுபிடித்துள்ளனர்.
எரிந்த நிலையிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு செய்துவிட்டு பின்னர் அவரை எரித்திருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்டவர் மணல் ஏற்றும் தொழிலாளி என்று கூறப்படுகிறது. இருப்பினும் கொல்லப்பட்டவர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
|
|
|
| உங்கள் கணவர் எந்த ரகம்..? |
|
Posted by: aathipan - 10-03-2005, 11:11 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (12)
|
 |
உங்கள் கணவர் எந்த ரகம்..?
மறைமுகமான ஆசை வார்த்தைகள்....
‰ நீங்கள் அணிந்திருக்கிற உடை நன்றhக இருக்கிறது என்பதை நேரடியாகச்
சொல்லாமல்இ …எனக்கு இந்தக் கலர் ரொம்பப் பிடிக்கும்† என்கிறhரா?
‰ நீங்கள் சமைப்பதை மோப்பம் பிடித்துவிட்டுஇ …நம்ம வீட்லேர்ந்தா இப்படி
வாசனை தூக்குது† என்கிறhரா?
‰ சாப்பாட்டை நேரடியாக நன்றhக இருப்பதாகப் பாராட்டாமல்இ …எப்படி
செய்தே? என்னவெல்லாம் சேர்த்துச் செஞ்சே?† என விசாரிக்கிறhரா?
கணவரின் மறைமுகமான இந்த பாராட்டுக்களுக்குப் பெரிதாக ரியாக்ட்
செய்யாதீர்கள். கண்டும்இ காணாதது போல விட்டு விடுங்கள். அவருக்கு
உங்கள் மீது அக்கறை நிறையவே இருக்கிறது. ஆனாலும் அதை வெளிப்
படுத்துவதில் தான் அவருக்கு ஏதோ தயக்கம்....
நேரடியான ஆசை வார்த்தைகள்....
‰ நீங்கள் போடுகிற டிரெஸ்இ நகை உட்பட சகலத்தையும் முதல் முறை
பார்த்த உடனேயே நன்றhக இருப்பதாகப் பாராட்டுகிறhரா?
‰ வெறும் பாராட்டோடு நிறுத்திக் கொள்ளாமல்இ உங்களைத் தொட்டுப்
பேசி தன் விருப்பத்தைத் தெரி விக்கிறhரா?
அவரது பாராட்டுக்கு எந்த அர்த்தம் இருந்தாலும் அதை வெளிப்படையாகச்
சொல்லாதீர்கள். …நன்றி† என்ற ஒரு வார்த்தையோடு முடித்துக்
கொள்ளுங்கள்.
உணர்வுப் பூர்வமான வார்த்தைகள்....
‰ உங்கள் கூந்தலழகைப் பாராட்டுகிறhரா?
‰ நீங்கள் உடையணிகிற விதத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டுகிறhரா?
‰ உங்கள் அழகில் அவருக்கு மிகவும் பிடித்த விஷயத்தைக் குறிப்பிட்டுப்
பாராட்டுகிறhரா?
‰ உங்கள் வாசனை அவருக்குப் பிடிப்பதாகச் சொல்கிறhரா?
நல்ல விஷயம்தான். உங்கள் கணவரின் அன்பு சந்தேகத்திற்கப் பாற்பட்டது.
உங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர்.
அசத்தலான வார்த்தைகள்....
‰ வார்த்தைகளுக்கு மேக்கப் போடாமல்இ சந்தர்ப்பஇ Nழ்நிலையை
எதிர்பார்த்துக் காத்திருக்காமல் அந்தந்த
நேரத்தில் உங்களைப் பாராட்டுகிறhரா?
‰ நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றேhஇ எப்படி உடையணிந்தால்இ
மேக்கப் போட்டுக் கொண்டால் அழகாக இருப்பீர்கள் என்றேh சொல்கிறhரா?
‰ உங்கள் அழகைப் பாராட்டுவதை தினசரி வாடிக்கையாக வைத்துக்
கொள்ளாமல்இ குறிப்பிட்ட நாளில் திடீரெனப் புகழ்கிறhரா?
உங்கள் கணவரின் இந்தப் புகழ்ச்சிகளை எள்ளளவும் சந்தேகப் படவே
வேண்டாம். அவரது மனத்திலிருந்து வருகிற வெளிப் படையான
வார்த்தைகள் என நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.
அந்தரங்கமான பாராட்டுக்கள்....
‰ உங்கள் சருமத்தைத் தொட்டுப் பார்த்துஇ அதன் மென்மையைப் புகழ்
கிறhரா?
‰ உங்களை ரசித்துப் பார்ப்பதில் விருப்பம் காட்டுகிறhரா?
‰ நீங்கள் உங்கள் உடலில் குறையாக நினைக்கிற விஷயங்களைப் பெரிது
படுத்தா மல்இ அந்தரங்க நேரத்தில் தன் அன்பை வெளிப்படுத்துகிறhரா?
‰ உங்களிடம் அவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களை அந்த நேரத்தில்
அடிக்கடி சொல்கிறhரா?
‰ திருமணத்துக்கு முன்போஇ திரு மணமான புதிதிலோ உங்களுக்குள்
நடந்த அந்தரங்க சேட்டைகளைஇ சில்மிஷங்களை நினைவு கூர்ந்து
மகிழ்கிறhரா?
உங்களுக்கும்இ அவருக்குமான அந்தரங்க நேரத்தில் பொதுவாக இப்படி அதீத
அன்பான வார்த்தை கள் வெளிப்படுவது சகஜம்தான். ஆனா லும்
உங்களவரது வார்த்தைகள் அந்த நேரத்துக்கானவை என்றhல் அதிலுள்ள
செயற்கைத் தனம் உங்களுக்குக்காட்டிக் கொடுத்து விடும். அந்த ரங்க
நேரத்தில் உங்களை ஒரு மகாராணி மாதிரி நடத்துகிறhரா உங்கள் கணவர்?
அப்படியானால் அவரது வார்த்தைகளை நீங்கள் தாராளமாக நம்பலாம்.
செயற்கையான வார்த்தைகள்....
மனைவியைப் புகழவும் வேண்டும்இ அதே சமயம் தனது ஈகோவையும்
விட்டுக் கொடுக்கக் கூடாது என நினைக்கிற கணவர்களின் வார்த்தைகள்
எப்படியிருக்கும்?
‰ நீங்கள் சொன்னபடியே ஒரு விஷயம் நடந்திருக் கும். ஆனாலும் அதை
ஒத்துக் கொண்டால் உங்கள் கணவரது ஈகோ என்னாவது? அதனால் …நீ
சொல்றதுக்கு முந்தியே நான் இப்படித் தான் நடக்கும்னு நினைச்சேன்.
பரவாயில்லையேஇ உனக்குக் கூட வரஇ வர அறிவு வேலை செய்ய
ஆரம்பிச்சிருக்கு போல† என்று நக்கலடிப்பார்.
‰ நீங்கள் அணிந்திருக்கிற டிரெஸ் உங்களுக்கு மிக அழகாக இருக்கும்.
ஆனாலும் அதை நேரடியாகச் சொன்னால் உங்களுக்குக் கொம்பு முளைத்து
விடும் என நினைப்பார் உங்களவர். அதனால் …டிரெஸ் எப்படி நல்லா
இல்லாமப் போகும்? ஐயாவோட செலக்ஷனாச்சே† என்றேhஇ …டிரெஸ்சோட
கலர் அப்படி... யார்போட்டா லும் அழகாக் காட்டும்† என்றேh சொல்வார்.
மேற்சொன்ன பட்டியலில் உங்களவர் எந்த ரகம்?
|
|
|
| தீபங்கள் பேசும்..... |
|
Posted by: Muthukumaran - 10-03-2005, 06:36 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (100)
|
 |
விரைவில் நூலாக வெளிவர இருக்கின்ற எனது <b>தீபங்கள் பேசும் </b>கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகளை இங்கே பதிக்கிறேன் --- யாழ் நண்பர்களுக்காக
<b>முதல் கவிதை</b>
<b>களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்</b>..
|
|
|
| தமிழீழ மீட்பு நிதிக்கடன் |
|
Posted by: mayooran - 10-03-2005, 04:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
13 வருட தொடர்ச்சியான இடப்பெயர்விற்குள்ளும் மண்மீட்புக் கடன் தொடர்பான எமது ஆவணங்களைப் பாதுகாத்து கடனை மீளளிக்கும் நிதித்துறையின் நிர்வாகக் கட்டமைப்பு வியக்க வைக்கிறது
13 ஆண்டு காலமாக நிகழ்ந்த பல இடப்பெயர்வுகளுக்குள்ளும் யுத்த பாதிப்பிற்குள்ளும் எமது தமிழீழ மீட்பு நிதிக்கடன் தொடர்பான ஆவணங்களை பாதுகாத்து இன்று கணனி மயப்படுத்தப்பட்ட முறையிலான நிர்வாக கட்டமைப்பின் ஊடாக அவற்றை மீளளிப்பது தமிழீழ நிதித்துறையின் சிறந்த நிர்வாக கட்டமைப்பை எடுத்துக் காட்டுகின்றது என கிளிநொச்சி திருநகர் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட திட்டமிடலாளராக பணிபுரியும் திரு.கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழீழ மீட்பு நிதிக் கடன் மீளளிப்பு தொடர்பாக தனது கருத்தை எமது செய்தியாளருக்கு தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த கடன் மீளளிப்பானது குலுக்கலடிப்படையிலும் அகவை மூப்பின் அடிப்படையிலும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் நான் குலுக்கல் முறையிலும் எனது தாயார் வயது மூப்பின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். 1993ம் ஆண்டு காலப்பகுதியில் எங்களுடைய பிரதேசத்தில் இருந்து தமிழீழ மண்மீட்பு நிதி இத்தேசத்தினுடைய நிதிப்பற்றாக்குறை காரணமாக மக்களிடமும் கோரப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் பல்வேறு விதமான எல்லாத்தரப்பு மக்களும் பங்களிப்பு செய்து தங்களாலான பங்களிப்பினை காட்டினார்கள். அதில் இரண்டு விதமான பங்களிப்பினை குறிப்பிட முடியும் இரண்டு பவுன் 21 கரட் தங்கம் பெறப்பட்டது. அவ்வாறு பெற்றவர்களிடம் இருந்து 2பவுன் 23 கரட் தங்கம் மீளளிப்பு செய்யப்படுகின்றது. அதே போல் அப்பொழுது 10,000 ரூபா செலுத்தியவர்களுக்கு இப்பொழுது 22,800 ரூபாவாக மீளளிப்பு செய்யப்படுகின்றது. இந்த அடிப்படையில் மண்மீட்பு நிதியை மீளப்பெறுவதென்னும் நோக்கத்துடன் உண்மையில் யாருமே அந்தக் காலப்பகுதியில் இதைக் கொடுக்கவில்லை. நாங்களும் கூட தேசிய பங்களிப்பாக அப்போது முடக்கப்பட்டிருந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காகத் தான் இந்த மண்மீட்பு நிதி பங்களிப்பை செய்தோம். இன்று அந்த நிதியை மீளளிக்கின்ற தன்மையை அல்லது அந்த நாணயத்தன்மையை நினைக்கின்ற பொழுது உண்மையிலேயே நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
அன்று எம்மால் இவ் மண்மீட்பு நிதி கையளிக்கும் போது எம்மில் இருந்து பெறப்பட்ட பதிவுகள் 1993 ஆண்டு காலப்பகுதியில் இருந்து இன்று வரை பல்வேறு யுத்த நெருக்குவாரங்களுக்கு மத்தியில் 13 வருட காலப்பகுதிகளாக அந்த ஆவணங்களை பாதுகாத்து அதே ஆவணங்களைக் கொண்டு சிறந்த ஒழுங்கு படுத்தலுடன் உரியவர்களுக்கு மீளளிக்கின்றார்கள். அதேநேரம் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்த காலப்பகுதிகளில் சிலர் மண்மீட்பு நிதிக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களை தவறவிட்டிருந்தார்கள். சிலர் இவ்மண்மீட்பு நிதி கையளித்தவர்கள் யுத்த காலப்பகுதியில் இறந்து போயிருந்தார்கள். அவர்களிற்குமான கடன் மீளளிப்பினை தம்மிடம் உள்ள பதிவுகளைக் கொண்டு மேற்கொண்டு வருகின்றார்கள்.
உண்மையிலேயே இவையனைத்தையும் பார்க்கின்ற போது நிதித்துறையின் நிர்வாக அமைப்பை உண்மையாகவே மெச்சுகிறோம். எமது கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் புூரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் மூன்று ஆண்டுகளாக அகதிகளாக தங்கியிருந்து விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் நடவடிக்கைகளின் பின் மீளவும் எமது பிரதேசங்களுக்கு திரும்பியிருக்கிறோம். இவ்வளவு காலத்திற்குள்ளும் இந்த ஆவணங்கள் ஒழுங்குமுறைப்படுத்தி கணனி மயப்படுத்தப்பட்ட நிலையில் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்ற நிலை உண்மையில் நிதித்துறை நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கின்ற மிகமுக்கியமான முன்னேற்றம் என்று தான் நாங்கள் இதனைக் கருதுகின்றோம்.
இவ் மண்மீட்பு நிதி மீளளிப்பு தொடர்பாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்; அனைத்தும் முற்கூட்டியே உள்ளுர் பத்திரிகைகள் அனைத்திலும் பிரசுரிக்கப்பட்டிருந்ததுடன் எமது முகவரிகளுக்கு கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆகவே இந்த நிர்வாக ஏற்பாடுகள் மிகத்தரமான செயற்பாடு என்று கருதுகிறேன்.
அத்துடன் இந்த மூப்பின் அடிப்படையில் 60வயதிற்குமேல் உடனடியாக தெரிவு செய்யப்பட்டு மீட்பு நிதிக்கடன் மீளளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பல முதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது எனத் தெரிவித்தார்.
|
|
|
| மூது}ர் கடலில் நான்கு தமிழ் இளைஞர்கள் கைது |
|
Posted by: mayooran - 10-03-2005, 04:16 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மூது}ர் கடலில் படகில் சென்று கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் கடற்புலிகளென கூறியே கடற்படையினர் அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைந்துள்ளனர்.
இவர்களின் படகிலிருந்து ஒளிப்பதிவு கருவியையும் தாம் மீட்டதாக சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
|
|
|
| சிட்னியில் நடைபெற்ற தமிழ்விழா |
|
Posted by: mahilan - 10-03-2005, 04:10 AM - Forum: புலம்
- Replies (5)
|
 |
சிட்னியில் நடைபெற்ற தமிழ்விழா
சிட்னியில் தமிழ் விழா ஒன்று நடைபெற்றது. அதன் புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன்.
<img src='http://www.aruchuna.com/Resolution/people/02%2010%202005/photos/photo1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aruchuna.com/Resolution/people/02%2010%202005/photos/photo3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aruchuna.com/Resolution/people/02%2010%202005/photos/photo8.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aruchuna.com/Resolution/people/02%2010%202005/photos/photo13.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aruchuna.com/Resolution/people/02%2010%202005/photos/photo15.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் விழா குறித்த மேலதிக படங்கள் .... அர்ச்சுனா இணையதளத்தில்
http://www.aruchuna.com/Resolution/people/...2005/index.html
|
|
|
|