Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேத்தியை பெற்றெடுத்த பாட்டி
#1
குழந்தை பெற முடியாத மகளுக்கு, பெற்ற தாயே வாடகைத் தாயாகி குழந்தை பெற்றுத் தந்துள்ள விசித்திர பாசக் கதை லண்டனில் நடந்துள்ளது.

சினிமாகாரர்களுக்கு இதோ ஒரு புதிய கதை கிடைத் திருக்கிறது. திரைக்கதை எழுதி படம் எடுக்க உதவும் இந்தக் கதை பற்றிய விவரம் வருமாறு„-

லண்டனைச் சேர்ந்த இளம்பெண் எம்மா ஹhட்டர்லே. அவரது கணவர் ஆண்ட்ரூ. திருமணமாகி சில வருடங்களுக்குப் பிறகு குழந்தை பெற முடிவு செய்தனர். டாக்டாpடம் சென்று ஆலோசனை கேட்டனர். எம்மாவை பாpசோதித்த டாக்டர், அவரது இதயம், நுரையீரல்கள் மிக பலவீனமாக இருப்பதாகவும், கருவுற்றhல் குழந்தை மற்றும் தாய் இருவரும் பலியாக நேரலாம் என்று எச்சாpத்தார். அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் மனதைத் தேற்றிக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர். வெளியார் மூலம் வாடகைக்குக் குழந்தை பெற எம்மா விரும்பவில்லை.

மாறhக, தனது அம்மாவைப் பார்த்தார். …ஏன் எனது குழந்தையை நீ சுமந்து பெற்றுத் தரக்கூடாது† என்று கேட்டார். முதலில் அதிர்ந்தாலும் பிறகு மூவரும் விhpவான ஆலோசனை நடத்தினர். மகளுக்குக் குழந்தை பெற்றுத்தர தாய் அன்னி சம்மதித்தார்.

இதையடுத்து மகளின் கரு முட்டை, மருமகனின் உயிரணு மூலம் உருவாக்கப்பட்ட கருவை அம்மா தனது கருப்பையில் ஏற்றுக்கொண்டார். 53 வயதான அந்தப் பாசத்தாய்க்கு சிசோpயன் ஆபரேஷன் மூலம் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

…தாயும், சேயும் நலம்† . . . சாhp, …பாட்டியும், பேத்தியும் நலம்† என்று டாக்டர்கள் கூறினர். இந்த அதிசய பிரசவம் பற்றி குழந்தையின் தாய் எம்மா கூறுகையில், ……முகம் தொpயாத ஏதோ ஒரு பெண் மூலம் வாடகைக்குக் குழந்தை பெற நான் விரும்பவில்லை. நம்பிக்கையான, நெருக்கமான, பாசமான உறவினர் மூலம் பெற விரும்பினேன். அதற்கு என் தாயைப் போல யாரும் ஈடாகவில்லை. தாய் மூலம் என் குழந்தை பிறந்த அந்த நிமிடத்தில் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றhர்.

ThanksBig Grininakaran
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)