| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 509 online users. » 0 Member(s) | 506 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,323
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,644
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,504
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,240
|
|
|
| முதலிரவு |
|
Posted by: Birundan - 11-10-2005, 03:22 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (22)
|
 |
அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தேன். என் நேரம், கதவு திறக்கும் சத்தம் கேட்டதாலும், இனிமேல் முடியாது என உணர்ந்ததாலும், மடிக்கணினியை மூடும் வேலையை செய்யத் தொடங்க...
கொலுசுச் சத்தம், அவள் நெருங்கிவருகிறாள் என்பதை உணர்த்த, திரும்பிப் பார்த்தேன். எங்கள் வீட்டில் கொலுசுச் சத்தம் கேட்பதில்லை; பெண் குழந்தை இல்லாத காரணமோ என்னமோ, தெரியாது. அம்மா அணிந்திருக்கும் கொலுசு சத்தம் தராது. ஆனால் அதற்காக வருபவளை குற்றம் சொல்ல முடியுமா? திருமணம் முடிந்த முதல்நாள் அன்று, என்பதற்காக மட்டும் கிடையாது. ஒருவேளை அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகக் கூட கொலுசு இருக்கலாம்.
அவளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? யோசித்துப் பார்க்கிறேன். பெயர் அலமேலு, படித்தது ஹோலிகிராஸ் கல்லூரியில் முது அறிவியல் கணிப்பொறி பயன்பாட்டியல், அவ்வளவுதான். இதற்கு முன்னர் வெகுசில சமயந்தான் அவளைப் பார்த்திருக்கிறேன்; ஒரு முறை நிச்சயதார்த்தத்தின் பொழுதும் பிறகு கல்யாணப் புடவை எடுக்க வந்தபொழுதும். பின்னர் இன்று கல்யாண மேடையிலும் பின்னர் திருமணம் முடிந்தபின்னர் கோவிலிலும்.
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை, இடையில் வந்து பரிசளித்த என் பக்கத்து உறவினர்களை நானும் அவள் பக்கத்து உறவினர்களை அவளும் அறிமுகம் செய்து வைத்ததைத் தவிர. அவர்கள் வீட்டில் கேட்டுக்கொண்டதற்காக திருமணம் அவர்களுடைய சொந்த ஊரில், திருவிளையாட்டத்தில் நடைபெற்றது. ஆனால் எங்கள் பக்கத்தில், முதலிரவு எங்கள் வீட்டில்தான் நடைபெற வேண்டுமென உறுதியாக இருந்ததால், அங்கிருந்து காரில் திருச்சிக்கு மீண்டும் பயணம். நான் தனிக் காரில் என் குடும்பத்துடன்; அவள் வேறொரு காரில் அவளது குடும்பத்துடன்.
அன்றிரவு தான் வரமுடியும் என முன்பே தீர்மானித்துவிட்டதால் வரவேற்பு அடுத்தநாள் மாலைதான். இடையில் வீட்டிற்கு வந்து சேரும் நேரம், நல்ல நேரமாக இல்லாத காரணத்தால் நேராக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு போகச்சொல்லி என் பாட்டி சொல்ல மறுமொழியில்லாமல் கார்கள் மலைக்கோட்டைக்கு நகர்ந்தன.
அதற்குப் பிறகுதான் வீட்டிற்கு வந்தது. கல்யாணத்திற்காக நினைத்த நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதியளித்த அலுவலகம், ஒரேயொரு கட்டளையிட்டிருந்தது; அது மின்னஞ்சலில் அனுப்பப்படும் பிரச்சனை சார்ந்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும்மென்பது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை அமைதியாக இருந்த அம்மா, திருமண நாளன்று என் மடிக்கணினியை பிடுங்கி வைத்துக்கொண்டது தான் சோகமே. ஒரு நாள் முழுக்க வந்த அஞ்சல்களைப் படிக்க வேண்டித்தான் நான் முதலிரவு என்றுகூட பார்க்காமல் மடிக்கணினியை உபயோகித்துக் கொண்டிருந்தேன்.
நினைவு தெரிந்ததிலிருந்தே நான் உபயோகப்படுத்திய அறைதான், சினிமாவில் காண்பிப்பதைப் போன்று பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்படாத நான் உபயோகப்படுத்திய அதே பழைய கட்டில், ஒரேயொரு வித்தியாசம் ஒன்றிற்கு இரண்டாய் தலையணைகளும், சற்றே பெரிய படுக்கை விரிப்பும்.
உள்ளே வந்தவள், மிருதுவாய் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். பயணக் களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது; கல்யாணப்புடவைதான் அணிந்திருந்தாள்; இது என் அம்மாவின் வேண்டுகோளாயிருக்குமென்று நினைக்கிறேன். அவள் முகத்தைப் பார்த்ததிலிருந்தே மணியம் செல்வத்தின் ஒர் ஓவியம் உருக்கொண்டு வந்ததைப் போன்ற உணர்வுதான் ஏற்பட்டது. நீண்ட கண்கள், செழுமையான புருவங்கள், அளவான நெத்தி, நீண்ட சடை, கானலை போலில்லாமல் காணும்படியான இடைகள் ஒன்றுதான் வித்தியாசம் அந்த ஓவியங்களுக்கும் இவளுக்கும்.
"உங்களுக்கு வேலையிருந்தால் முடித்துவிடுங்கள். பரவாயில்லை." ஓவியம் அசைந்து பேசுவதுபோல் தான் இருந்தது. பின்னர் நினைவிற்கு வந்தவனாய், "இல்லை முடிஞ்சிருச்சு. நிக்கிறியே உட்காரு!" சொன்னவனாய் மடிக்கணினியை மடியில் இருந்து பிரித்து அந்தப் பக்கம் வைத்தேன்.
"இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா..."
நான் அவசரமாய், "இங்கப்பாரு இன்னிக்கின்னு மட்டுமில்லை, என்னிக்குமே நீ என் காலில் விழணும் அப்பிடின்னு அவசியம் இல்லை. எனக்கு பிடிக்காத ஒருவிஷயத்தில இதுவும் ஒன்னு. பரவாயில்லை உட்காரு."
"இல்லை அம்மா சொல்லியிருக்காங்க..."
"உங்கம்மாவா, பரவாயில்லை நாளைக்கு கேட்டாங்கன்னா விழுந்தேன்னு சொல்லு, என்கிட்ட கேட்டாங்கன்னா நானும் சொல்றேன்." சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன். குழப்பமாய் இருப்பதாய்ப் பட்டது, மெதுவாக கட்டிலில் என் அருகில் உட்கார்ந்தவளிடம், "இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும், பேசலாமா?"
எனக்கு அவள் எப்படிப்பட்ட பெண் என்று தெரியாது, அதுமட்டுமில்லாமல், பெண்களுடனான என் அறிமுகமும் மிகக்குறைவே, என் அம்மாவைத்தவிர நான் பெண்களிடம் நெருக்கமாய்ப் பழகியதில்லை. ஆரம்பத்திலிருந்தே இருபாலரும் படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்தாலும் கூடப்படிக்கும் பெண்களுடன் சண்டை போட்டிருக்கிறேனே ஒழிய, சாதாரணமாய் பழகியதில்லை. அந்தப் பெண்களிடம் எதிரி போன்ற ஒரு உருவகத்தையே பெரிதும் எடுத்திருக்கிறேன்.
"ம்ம்ம்..." அவ்வளவுதான் பதில் வந்தது.
"எனக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியணும், உனக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, எதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க ஆசைப்படுற, என்னைப் பத்தி என்ன தெரியணும். இன்னிக்கு உன்னைப் பத்தி நானும் என்னைப் பத்தி நீயும் தெரிஞ்சிக்கணும். அதுதான் முக்கியம்."
"நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?" கேட்டுவிட்டு என்னையே பார்த்தாள். அந்தக் கண்களின் உள்ளே சென்று பார்க்க நினைத்தேன், அந்தக் கண்கள் எனக்கு எதையுமே தனியாக விளக்கவில்லை.
"நிச்சயமா, கேளு!"
"உங்களுக்கு எதாவது கெட்ட பழக்கம் இருக்கா?" எனக்கு இந்தக்கேள்வி ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. எதிர்பார்த்ததுதான், ஆனால் முதல் கேள்வியாக இருக்குமென நினைக்கவில்லை.
"புரியலை, நீ கெட்ட பழக்கம்னு எதைச் சொல்லவர்ற? சிகரெட் பிடிக்கிறது, இல்லை தண்ணியடிக்கிறதப் பத்தி கேக்கறன்னா, கிடையாது. வேற எதையாச்சும் பத்தின்னா குறிப்பா கேட்டாத்தான் சொல்ல முடியும்." சொல்லிவிட்டு சிரித்தேன், ஏனென்றே தெரியாமல்.
"இல்லை நீங்க குறிப்பிட்டதைத்தான் கேட்டேன், ஏன் நீங்க அந்த தப்பையெல்லாம் பண்ணலை?"
ஆச்சர்யமான கேள்வி! பலர் இந்தக்கேள்வியை என்னிடம் கேட்டதில்லை, இந்தக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரிந்துதான் இருந்தது,
"உண்மையைச் சொல்லவா?"
"அது உங்கள் விருப்பம்." சிரித்தாள். முதல்முறை இப்பொழுதுதான் விகல்பமில்லாமல் அவள் சிரிப்பதாய்ப் பட்டது. கல்யாண மண்டபத்தில் பரிசுப்பொருள்கள் கொடுத்துக்கொண்டிருந்த பொழுது இருந்த அவளுடைய சிரிப்பில் இருந்து தற்போதைய சிரிப்பு வித்தியாசமாய் இருந்தது. அந்தச் சிரிப்பில் ஒரு செயற்கைத்தன்மையிருந்தது.
"சரி சொல்றேன், உண்மையா இல்லையான்னு நீதான் முடிவு பண்ணணும். எங்கப்பா தண்ணியடிப்பாரு, சொல்லப்போனா தினமும்; அதனால் ஏற்படும் பிரச்சனைகளை நேரில் இருந்து பார்த்தவன்ங்கிறதால தண்ணியடிக்க முடியலை. சிகரெட் பத்தி கேட்டீன்னா, என் மாமா சிகரெட் குடிப்பான்; அவன் அதை நிறுத்த முடியாம தவிக்கிறதை நேரில் பார்த்திருக்கேன். இதெல்லாம் ஆரம்பத்தில் நான் தவறு செய்யாம இருந்ததுக்கு காரணம்; இப்ப வரைக்கும் அது தொடருதுன்னா அதுக்கு காரணம்..." நான் அங்கே நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தேன். அவள் மிகவும் ஆர்வமாய் நான் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
"எனக்கு நெத்தி கொஞ்சம் பெரிசுங்கிறதால, ஆரம்பத்திலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. அதனால என்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அழகான பொண்ணுக்கு பரிசா எதையாவது கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் இன்னிவரைக்கும் தொடர்ந்துட்டு வர்றேன். இனிமேலும் என்னை நல்லவனா காப்பாதிக்க வேண்டியது உன் பொறுப்பு." சொல்லிவிட்டு நான் சிரிக்க அவள் சிரிக்காமல் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"நம்ப முடியலையா?"
அவள் அதற்கு பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியில் இறங்கினாள்.
"நீங்க யாரையாவது காதலிச்சீங்களா?" அவள் வாய்தான் பேசியதேயொழிய கண்கள் என் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன; உண்மையை மட்டும் உறிஞ்சக் கூடிய அன்னங்களாய்.
"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ணு, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்."
நான் சொல்லச் சொல்ல அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில் உணர்ச்சியே இல்லையாகையால், "ஏய் என்ன நான் சொன்னதை நம்ப முடியலையா?"
"இல்லை இதைப் பத்தி எனக்கு முன்னாடியே தெரியும்; நீங்கதான்னு நிச்சயமான பிறகு என்கிட்ட தொலைபேசலை; எனக்கு ஏன்னு தெரியாது, நான் நினைச்சேன் ஒருவேளை உங்களுக்கு என்னை பிடிக்கலையோன்னு. உங்கம்மாகிட்ட நான் பேசிக்கிட்டுத் தான் இருந்தேன். அவங்க நீங்க சொன்ன அத்தனையையும் சொன்னாங்க, ஒருவரி விடாம. இன்னோன்னும் சொன்னாங்க."
"என்ன சொன்னாங்க?"
"நீங்க இனிமேலும் தண்ணியடிக்காம, சிகரெட் பிடிக்காம இருக்கிறதுக்கு உத்திரவாதம் தர்றதாகவும் ஆனால் இன்னொரு பொண்ணு பின்னாடி போக மாட்டீங்கங்கறதுக்கு உத்திரவாதம் தரமுடியாதுன்னும், நான்தான் காப்பாதிக்கணும்னும் சொன்னாங்க." சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
எனக்கும் தெரியும் எங்கம்மா இதை சொல்லியிருப்பார்கள்தான்; அக்கா என்ற ஒருத்தி இல்லாத காரணத்தால் என் சம்மந்தப்பட்ட அத்துனை நிகழ்ச்சிகளும் அம்மாவிற்குத் தெரியும். அதுமட்டுமில்லாமல் நான் அம்மாவை வம்பிழுக்க சில சமயங்களில் அதிகமாகவே என்னை பாதித்த பெண்களைப்பற்றி சொல்லியது கூட காரணமாக இருக்கலாம்.
"நமக்கு நிச்சயம் ஆகியிருந்தாலும், திருமணம் முடிந்தபிறகுதான் பேசவேண்டும் அப்பிடின்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அது என் கொள்கை சார்ந்த ஒரு முடிவு. சரி என்னைப் பத்தியே கேட்டுக்கிட்டிருக்கியே, உன்னைப்பத்தி ஏதாச்சும் சொல்லு." நான் கேட்க,
"என்னைப் பத்தி சொல்றதுன்னா, உங்களமாதிரித்தான் எனக்கும் தண்ணியடிக்கிற, தம்மடிக்கிற கெட்ட பழக்கம் கிடையாது. இன்ஃபேக்சுவேஷன், உங்களமாதிரி தூயதமிழ்ல சொல்லணும்னா இனக்கவர்ச்சி இருந்ததுண்டு, அதுவும் உங்கள மாதிரிதான், ஆனா எனக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது. மற்றபடிக்கு நிறைய கோவில் குளமுன்னு ஊர் சுத்துவேன், நிறைய கதையடிப்பேன், புஸ்தகம் படிப்பேன். எனக்குன்னு தனியா கொள்கை எதுவும் கிடையாது; அதேமாதிரி கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு தொங்கமாட்டேன். எனக்காகத்தான் கொள்கை, கொள்கைக்காக நான் கிடையாது. இன்னிக்கு நீளமான தலைமுடியோட இருக்கிறது பிடிக்குதுங்கறதுக்காக வைச்சிருக்கேன், நாளைக்கே தலைவலிக்கிற மாதிரி இருந்ததுன்னா பாப் அடிச்சிட்டு வந்து நிப்பேன்..." அவள் சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள். நான் இதற்கு பதில் என்ன சொல்றதுன்னு தெரியாம யோசித்துக் கொண்டிருந்தேன்.
"இதுக்கு நீங்க பதில் சொல்லணும் அப்பத்தான், உங்களைப்பத்தி நான் புரிஞ்சிக்க முடியும்." அவள் கேட்டும் நான் யோசித்துக்கொண்டிருந்ததால் தொடர்ந்தவள், "நிச்சயம் ஆன நாள்ளேர்ந்து காத்துக்கிட்டிருந்தேன்; நம்மாளுக்கிட்ட கடலை போடலாம்னு. நீங்க தொலைபேசாததால், காதல் தோல்வி போலிருக்கு, நம்ம தலையில கட்டிவைக்கிறாங்கன்னுதான் நினைச்சேன். இப்படி லூசுத்தனமான கொள்கையிருக்கும்னு நினைக்கலை." அவள் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
நானும் லேசாய் சிரித்துவைத்தேன்,
"இங்கப்பாரு நீ இப்படி வெளிப்படையா பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு. நீ உன் முடியை பாப் வெட்டிக்கிட்டு வந்தாலும் சரி, இல்லை நான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்தான் போடுவேன்னு சொன்னாலும் சரி, அது உன்னோட விருப்பம். அதில் எக்காரணம் கொண்டும் நான் தலையிடமாட்டேன். எனக்கு நீ பண்ணவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்."
அவள் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்பதால் கவனிக்கிறாளா என்று பார்த்துக்கொண்டேன்.
"எங்கம்மா பத்தி நான் சொல்லணும், நான் இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் அம்மாதான்; அடுத்தநாள் உயிரோட இருப்பனான்னே தெரியாத நாட்கள் என்னோட வாழ்கையிலே இருந்திருக்கு, அதிலேர்ந்தெல்லாம் மீண்டு நானும் எங்க குடும்பமும் வந்திருக்குன்னா அதுக்கு ஒரேயொரு காரணம் அம்மாதான். அதனால அம்மாவை மட்டும் நீ அனுசரிச்சுப் போகணும். அதுமட்டும்தான் நான் உன்கிட்ட கேக்குறது, எனக்கும் இந்த பெண்சுதந்திரம் அப்பிடிங்கிற விஷயத்தில் எல்லாம் நம்பிக்கையுண்டு."
நான் சொல்லிமுடித்ததும் பலமாகச் சிரித்தாள்.
"நான் நினைச்சேன், நீங்க சரியான அம்மா புள்ளையாத்தான் இருப்பீங்கன்னு; சரியாத்தான் இருக்கு. இங்கப் பாருங்க எனக்கும் ஒரு அண்ணன் உண்டு; அவனுக்கு கல்யாணம் ஆகி அண்ணி எங்க வீட்டிலையும் இருக்காங்க. அதனால நீங்க பயப்படாதீங்க; நிறைய கதை கட்டுரையெல்லாம் படிச்சு பயந்து போயிருக்கிறீங்கன்னு நினைக்கிறேன். பயப்படாதீங்க உங்கம்மாவை நான் கடிச்சி தின்னுடமாட்டேன். பிரச்சனையே வராதுன்னு சொல்லமாட்டேன், வந்தாலும் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சரி பண்ணிடலாம்.
இன்னோன்னு, இந்த பெண் சுதந்திரம் இதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது சந்தோஷமா இருக்கு. கதை கட்டுரையெல்லாம் எழுதுவீங்க போலிருக்கு. ஆனா எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பாப் அடிப்பேன்னு சொன்னா, நீங்க உங்க பக்கத்து எதிர்பார்ப்பைச் சொல்லணும், இல்லை என் பொண்டாட்டி பாப்பெல்லாம் அடிக்ககூடாதுன்னோ இல்லை பரவாயில்லை அடிச்சுக்கோன்னோ; அதெல்லாமில்லாம அது உன்னோட விருப்பம்னு சொல்றது எனக்குப் பிடிக்காது. உரிமை எடுத்துக்கணும் என்கிட்ட, அதேபோல்தான் நானும், பெர்முடாஸ் போட்டுக்கிட்டு ரோட்டில் ஆம்பளைங்க நடக்கிறது எனக்கு பிடிக்கலைன்னா, உங்களை நடக்க விடமாட்டேன். அந்த உரிமையை நீங்களும் எடுத்துக்கலாம்.
எனக்கு இந்த விவாகரத்து பண்றதுல எல்லாம் நம்பிக்கையே கிடையாது, இனிமே எனக்கு நீங்கதான், நீங்க மட்டும்தான். அதேமாதிரிதான் உங்களுக்கும் நான் மட்டும்தான், உங்கம்மா சொன்னாங்கறதுக்காக எல்லாம் மணியம் செல்வம் ஓவியம் மாதிரியிருக்குறா இல்லை அஜந்தா ஓவியம் மாதிரியிருக்குறான்னு சொல்லிக்கிட்டு வேறபொண்ணை சைட் அடிக்கலாம்னு நினைச்சீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன், பின்னிடுவேன்.
கடைசியா ஒன்னு, நீங்க குறிப்பிட்டதால சொல்றேன். எனக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடுறது பிடிக்காது." சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
ஆச்சர்யமாய் இருந்தது, வந்தவுடன், "இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா..." அப்பிடின்னு திருதிருன்னு முழிச்சிக்கிட்டே கேட்ட பொண்ணா இவள்னு யோசிச்சேன். சந்தேகமாய் இருந்தது; ஆனால் சந்தோஷமாயும் இருந்தது; மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசிவிடுகிற பெண்கள் எப்பொழுதுமே பிரச்சனையில்லாதவர்கள், என் அம்மாவைப்போல்.
நான் யோசித்துக்கொண்டிருக்க, "என்ன பலத்த யோசனை?"
"இல்லை, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நல்ல பொண்ணா, கொஞ்சம் எழுந்திருச்சி நிக்கிறீங்களா அப்பிடின்னு கேட்ட பொண்ணா இதுன்னு யோசிச்சேன்." சொல்லிவிட்டு சிரித்தேன்.
"கால்ல விழுறதப் பத்தி கேக்குறீங்கன்னா, இப்பவும் கேக்குறேன் எந்திரிச்சு நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணிக்கிறேன். எங்கள் வீட்டில் நல்லநாள் பெரியநாள்னா பெரியவங்க காலில் விழுவது சம்பிரதாயம் தான், நானும் ஏன் என் அண்ணணுமே இன்னமும் எங்க மாமா, அத்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது உண்டு, அதனால் புருஷனான உங்கள் காலில் விழுவதிலும் எனக்கு பிரச்சனை கிடையாது. இல்லை நான் அதிகமா பேசுறேன்னு நினைச்சீங்கன்னா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, பழக்கதோஷம்னு வேண்ணா வைச்சுக்கோங்கோ." முகம் லேசாக வாடத் தொடங்கியிருந்தது. நான் அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "இல்லம்மா, நான் வேடிக்கையாத்தான் சொன்னேன், நீ உங்கவீட்டில் எப்படி இருப்பியோ அப்படியே இங்கையும் இருக்கலாம். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் குழந்தைகளைப் பற்றி நீ எதாச்சும் யோசிச்சு வைச்சிருக்கியா, வேலைக்கு போறாப்புல எதுவும் ஐடியா இருக்கா?"
"எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தங்க கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க; அவங்க சொன்னாங்க, நம்ம இரண்டுபேருக்கும் குழந்தை பெத்துக்குறதுக்கு இதுதான் நல்ல வயசாம். அதனால தள்ளிப்போடாம பெத்துக்கச் சொன்னாங்க. எங்கம்மாவும் இதைத்தான் சொன்னாங்க; மற்றபடிக்கு நீங்க வேற ஏதாச்சும் யோசிச்சு வைச்சிருந்தா சொல்லுங்க, அதேமாதிரி வேலைக்கு போறாப்புல ஐடியாயெல்லாம் கிடையாது, லட்சியமே அதுதான், நீங்கத்தான் பெரிய கம்பெனியில வேலை பார்க்குறீங்கல்ல. வாங்கிக் கொடுங்க." சொல்லிவிட்டு நக்கலாய்ச் சிரித்தாள்.
"எனக்கும் நாம் சீக்கிரமா குழந்தை பெத்துக்குறதுதான் நல்லதா படுது, உன் வேலையைப் பத்தி கவலைப் படாதே, உனக்கு ஆர்வமிருந்தா போதும், படிப்பு முடிந்தவுடன் வாங்கிரலாம். வேற ஏதாச்சும் கேக்கணும்னா கேளு, இல்லைன்னா ஒரே ஒரு வேண்டுகோள், எனக்கு கொஞ்சம் மின்னஞ்சல் எல்லாம் பாக்க வேண்டியிருக்கு, பத்து நிமிஷம் கொடுததேன்னா பார்த்திடுவேன்." கெஞ்சலாய்ப் பார்த்தேன்.
"அப்பவே சொன்னேன்ல பார்த்துக்கோங்கன்னு, ஆனா ஒன்னு உங்க அம்மா சொன்னாங்க லேப்டாப் உங்க முதல் பொண்டாட்டி மாதிரின்னு; அப்பிடியிருக்காதுன்னு நினைக்கிறேன். அப்பிடித்தான்னா உங்க லாப்டாப்புக்கு நேரம் சரியாயில்லைன்னு அர்த்தம், உங்களை நீங்களே மாத்திக்கோங்க." சொல்லி விட்டு மீண்டும் நக்கலாய்ச் சிரித்தாள்.
"அம்மா தாயே லாப்டாப்பை ஒன்னும் பண்ணீராதம்மா, இனிமே இந்த ரூமிற்குள்ளேயே எடுத்துட்டு வரமாட்டேன். இன்னிக்கு ஒருநாள் மன்னிச்சிரு." இரண்டு கைகளையும் கூப்பி நானும் நக்கலடித்தேன்.
"சரி சரி பொழச்சுப்போங்க, முதல் நாள்னு மன்னிக்கிறேன், நான் இந்த புடவையை கழட்டிவைச்சிட்டு நைட்டி போட்டுட்டு வருவேன்; அதுக்குள்ள பாத்து முடிச்சிருக்கணும். என்ன புரியுதா?" அவள் கேட்டுவிட்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைய, நான், 'ஆகா, சகாக்கள் எல்லாம் சொன்னதையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்போ?!' என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
-----------------
நன்றி:-
இந்தக் கதை மரத்தடி.கொம் இணையத்தளத்தில், குந்தவை வந்தியத்தேவன் எழுதியது.
|
|
|
| பஜ்ஜி-ஒரு லட்சிய வீரனின் கதை! |
|
Posted by: Birundan - 11-10-2005, 03:07 AM - Forum: நகைச்சுவை
- No Replies
|
 |
கோடம்பாக்கத்தில் எட்டுக்கு எட்டு அடி அளவுள்ள ஒரு பேச்சுலர் ரூம்.விரல்களின் இடுக்கில் கசிகின்ற புகையோடு மணிரத்னம், ஷங்கர், செல்வராகவன்... ஆக ஆசைப்பட்டு சொந்த ஊரை விட்டு ஓடி வந்த வருங்கால டைரக்டர்கள் மூவர். பெயரென்ன கேக்கறீங்களா.. ..ம், என்ன வைக்கலாம்! முதலில் சொன்ன பெயர்களே இருந்துட்டுப் போகட்டுமே! அவங்க என்ன கோச்சுக்கவா போறாங்க! செல்லுலாய்டு கனவுகளோடு சீரியஸாக கதை விவாதம் நடக்கிறது. நம் காதை கொஞ்சம் உள்ளே அனுப்பினோம் கதை கேட்க! கேட்டதிலிருந்து...
மணி : இது கதை. சின்னக் கதை. பழசுதான். ஆனா புதுசு. சொல்ற விதம் புதுசு. ஷங்கர் : சொல்லு. பழைய இட்லியை, உப்புமாவா மாத்துறதில்லையா! அது இட்லிதான். ஆனா இப்ப உப்புமா! அப்படித்தான் கதையும்!
செல்வா : சதைகள்ல உணர்ச்சியைக் காண்பிச்சுக் கவுத்துட்டா மக்கள் அநாவசியமா கதையைத் தேட மாட்டாங்க! நீ கதையோட ஒன் லைனைச் சொல்லு!மணி : கேட்கணும். கவனமாக் கேட்கணும். ஒரு கிழவி. வயசானவ!ஷங்கர் : டேய், வயசனாத்தாண்டா அவ கிழவி. மேல போ!
மணி : சுடுறா!
ஷங்கர் : தீவிரவாதிகளை காஷ்மீர் பார்டர்ல போயி தனி ஆளா நின்னு காலி பண்றாளா! செம ஸ்டோ ரிடா மச்சான்!
மணி : தேவை. பொறுமை தேவை. புரியும். கதை. இன்னும் சொல்லல!செல்வா : டேய் படுத்தாதடா. வார்த்தைகளை இன்ஸ்டால்மென்ட்ல பேசாம தொடர்ந்து பேசுடா!மணி : கிழவி இருக்கா. தொழில் வடை சுடுறது. எதிரி ஒருத்தன். ஒரே ஒருத்தன். பேரு காக்கா. நிஜக் காக்கா. வலைவிரிக்கிறான் தினமும் வடைக்கு. கிடைக்குது. ஒருநாள் கிடைக்குது. கொண்டு போயிடுறான் வடையை தன்னோட மரக்கிளைக்கு. வடை. ஆசை. நிறைவேறுன சந்தோஷம். ஆனா நிறைவேறல. வருது. பிரச்னை வருது. நரியா பிரச்னை வருது. காக்காவை நரி மயக்குது. வசியம் பண்ணுது. புத்தியால. வார்த்தைகளால. சொல்லுது. பாடச் சொல்லுது. பாட்டு. காக்கா வாய் தொறக்குது. வடை கீழே விழுது. எடுக்குது நரி. முடியது கதை. இது கதையில்ல. முழு கதையில்ல. செதுக்கணும். மாத்தணும். நிறைய்ய உழைக்கணும்.
ஷங்கர் : நல்ல தீம்டா! இதுதான் கரு. ஆனா இதை வைச்சு நாம உருவாக்குற கதையால எல்லாரும் மிரளணும். செல்வா : முதல்ல பாட்டி கேரக்டரைத் தூக்கணும். பாட்டியை மெயினாப் போட்டா நாம மூணு பேரும்தான் படத்தை மாத்தி மாத்தி பாக்க வேண்டியது வரும். அதனால பாட்டி ரோலை உருவிட்டு, அங்க ஒரு இளம் பெண் கேரக்டரை சொருகிரலாம்.
ஷங்கர் : அப்ப அந்த கேரக்டருக்கு நமீதா ஓ.கே. நமீதா ஸ்கீரின்ல வடை சுட்டாப் போதும். பிரம்மாண்டமா இருக்கும்.
செல்வா : வடை அப்படிங்கிற கேரக்டர் கூட ரொம்ப நாள் இருந்ததால ஊசிப்போச்சு. அதனால வடையை மாத்துறோம்.
ஷங்கர் : நேற்றைக்கு வடைன்னா, இன்னிக்கு வடைகறி!
செல்வா : அப்பா ராசா, எண்ணையில பொரிக்கறாப்ல ஏதாவது சொல்லுடா!மணி : மாடர்ன் நமீதா சுடுறா! டெல்லி அப்பளம் சுடுறா!
ஷங்கர் : டேய் இது உனக்கே ஓவராத் தெரியல! அம்மாம் பெரிய டெல்லி அப்பளத்தை சிங்கிள் காக்கா எப்படிடா தூக்கிட்டுப் போகமுடியும்? அநியாயமாப் பேசாதடா! ஏதாவது சின்னதா மாடர்னா சொல்லு.
செல்வா : ஆங். அப்ப பிரெட் வைச்சுக்கலாம். நம்மாளுங்கதான் சாஃப்டா எது கிடைச்சாலும் உடனே கரைச்ச கடலை மாவுல பொரட்டி எடுத்து, கொதிக்கிற எண்ணையில நீச்சலடிக்க வைச்சி, வாய்க்குள்ள தள்ளிடுறாங்களே! பிரெட் பஜ்ஜின்னு வைச்சுக்கலாம்.
மணி : இடம் முக்கியம். நமீதா இருக்குற இடம் முக்கியம்.
செல்வா : ஏதாவது தெரு முனையில கடையைக் காண்பிக்க வேண்டியதுதான!
ஷங்கர் : இல்ல, இதுல பிரம்மாண்டம் முக்கியம். அதனால தாஜ் கோரமண்டல் பைவ் ஸ்டார் ஹோட்டல்.. வாசலுக்கு எதிர்த்தாப்ல கடையை வைச்சுக்கலாம்.
செல்வா : அப்ப, காக்கா, தாஜ் ஹோட்டலோட மொட்டை மாடியில குடியிருக்குது. பணக்காரக் காக்கா! எப்படி!
ஷங்கர் : பணக்காரக் காக்கா ஹார்ட் பேஷண்ட். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடக் கூடாது. அதனால பஜ்ஜி மேல காக்காக்கு ஒரு கண்ணு.
மணி : போதாது. சென்டிமென்ட் போதாது. வேணும். வேற ப்ளாஷ்பேக்!செல்வா : அப்ப காக்காவோட அம்மா கதை ஒண்ணை ப்ளாஷ்பேக்ல புகுத்திரலாம். இதே மாதிரி நமீதாவோட அம்மா கடையில் வடையத் திருடப் போன அம்மா காக்கா, ஸ்லிப் ஆகி எண்ணெய்ச் சட்டியில விழுந்து செத்துப் போயிருது. அதைத் தன்னோட ரெண்டு கண்ணால பாக்குற மகன் காக்கா மனசு முழுக்க வெறியோட அலையுது.
ஷங்கர் : நெஞ்சை நக்குது!மணி : காக்கா.. பஜ்ஜி.. காக்கா.. பஜ்ஜி.. காட்டுறோம் ரெண்டையும் மாத்தி மாத்தி!
ஷங்கர் : முந்நூறு அடி உயரத்துல இருந்து காக்கா, நமீதா கடையைப் பாத்து பறந்து வர்றதை காக்கா ஆங்கிள்ல காட்டுறோம். இதுக்கு ஹெலிகாப்டரை யூஸ் பண்ணி ஷாட் வைச்சுக்கலாம்.
மணி : வேணும். இங்க பரபரப்பு வேணும். மேல இருந்து காக்கா பறந்து வர்றதுக்குள்ள இருந்த ஒரு பிரெட் பஜ்ஜியும் ஆயிடுது காலி. ஒருத்தன் வாங்கிட்டுப் போயிடுறான்.
செல்வா : தூள்மா! அப்படியே பரபரப்போட இங்க கொஞ்சம் கிளுகிளுப்பையும் தூவிரலாம். இவ்வளவு தூரம் பறந்து வந்தது வேஸ்ட் ஆயிடக் கூடாதேன்னு காக்கா வந்த வேகத்துல நமீதாக்கு லிப் டூ லிப் ஒரு கிஸ் அடிச்சுட்டுப் போயிடுது! எப்படி!
மணி : கிஸ்.. செம கிஸ்! கிக்.. செம கிக்!
ஷங்கர் : ஆனா காக்கா கதாநாயகிக்கு கிஸ் அடிச்சா மக்கள் ஒத்துக்க மாட்டாங்களே! அதுபோக நம்ம கதையில இன்னும் கதாநாயகன் கேரக்டரையே கொண்டு வரலையே!
செல்வா : காக்காதான் கதாநாயகன். வேறேந்த புது கேரக்டரைக் கொண்டு வந்தாலும் வலுக்கட்டாயமா திணிச்ச மாதிரி ஆயிரும். ஆங்.. ஐடியா! கேரக்டருக்கு ஏத்தாப்ல எப்படி வேணும்னாலும் உடம்பை மாத்திக்குற கமல், விக்ரம், சூர்யா இவங்க யாரையாச்சும் காக்கா கெட்-அப்ல நடிக்க வைச்சுரலாம்!
ஷங்கர் : செம ஐடியா மச்சி! கிஸ் அடிச்சுட்டு வந்த கிக்ல காக்கா ஹீரோ நமீதாகூட ஒரு கனவு டூயட் பாடுறாரு!
மணி : சூப்பர். அடுத்த அட்டெம்ப்ட். இது வேற பஜ்ஜி. ஜெயிச்சிடுச்சி! பஜ்ஜி இப்ப காக்கா வாயில! கண்ணீர் நமீதா கண்ணுல!
ஷங்கர் : ஓ.கே. இப்ப வில்லன் கேரக்டர் நரியைக் கொண்டு வர்றோம். ஆனா நரி தாஜ் கோரமண்டல் வாசல்ல நின்னுக்கிட்டு, அவ்ளோ உயரத்துல இருக்குற காக்காகிட்ட 'பஜ்ஜியைத் தா! தா!'ன்னு கேட்டு வாங்க முடியாதே! வேணும்னா ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
மணி : வேண்டாம். நரி வேண்டாம். தேவை பவர்ஃபுல் வில்லன்! உயரமான வில்லன். வைச்சுக்கலாம் டினோசரை!
செல்வா : சூப்பர். டினோசர் வில்லன் காக்காவோட பஜ்ஜிக்கும், கூடவே நமீதா கடையில இருக்குற பஜ்ஜிகளுக்கும் ஆசைப்படுறான். ஹீரோ காக்கா, ஹீரோயின் நமீதாவையும், தன்னோட லட்சிய பஜ்ஜியையும் எப்படி காப்பாத்தறான்னு சொல்லுறோம்.
ஷங்கர் : ஹீரோ காக்காகிட்ட பேசி, மயக்கி, அதை பாட்டு ஒண்ணு பாடச் சொல்லி கெஞ்சுது டினோசர். அப்ப காக்கா ஒரு பாட்டு பாடுது. அது குத்துப்பாட்டு. காக்காவோட சிந்தனையில அந்த சிங்கிள் பாட்டுக்கு நயன்தாரா டான்ஸ் ஆடுற மாதிரி வைச்சுரலாம்.
மணி : முடியுது பாட்டு. கீழே விழுகுது பஜ்ஜி.
செல்வா : முந்நூறு அடி உயரத்துல இருந்து விழுற பஜ்ஜியை கேட்ச் பிடிக்க காக்கா, டினோசர், நமீதா மூணு பேரும் டிரை பண்ணுறாங்க.
மணி : இது க்ளைமாக்ஸ். வேணும் மெஸேஜ்.
செல்வா : டினோசர் பஜ்ஜியை கேட்ச் பிடிச்சுட்டு, நமீதாவையும் தூக்கிட்டு மௌண்ட் ரோட்டுல ஓடுது.
ஷங்கர் : காக்கா ஹீரோ துரத்துது. இந்த சேஸிங் சீனை செம த்ரில்லிங்கா எடுக்கணும். செல்வா : ஓடிக்கிட்டிருக்கும்போதே பஜ்ஜியை லைட்டா டேஸ்ட் பண்ணிப் பாக்குற டினோசர் அதை வேண்டாம்னு துப்பிடுது.
மணி : சொல்லணும் இங்க மெஸெஜ். டினோசர் நான் வெஜ். பஜ்ஜி வெஜ். பிடிக்கல! அதான் பிடிக்கல! துப்பிடுது.
ஷங்கர் : கூவத்துல விழப் போன பஜ்ஜியைக் கைப்பற்றிட்டு, எப்படி நமீதாவை டினோசர்கிட்ட இருந்து பைட் பண்ணி காக்கா ஹீரோ காப்பாத்துதுன்னு துடிக்கத் துடிக்கக் காட்டி, கடைசியில ஒரு லவ் சென்டிமென்ட்டோட படத்தை முடிக்கிறோம்.
செல்வா : சரி, வா மச்சான். ரொம்ப சிந்திச்சிட்டோம். பசிக்குது. நாயர் கடையில சிங்கிள் டீயை ஒன் பை த்ரீ குடிச்சிட்டு வந்து, நரி, திராட்சை பழம் பறிக்கப் போன கதையை டெவலப் பண்ணலாம்.
**********
(லொள்ளு தர்பார் - தினமணிக் கதிர் - இரு வாரங்களுக்கு முன்பு)
|
|
|
| தன்னம்பிக்கை.. விடாமுயற்சி... உழைப்பு... |
|
Posted by: aathipan - 11-09-2005, 09:20 PM - Forum: தமிழீழம்
- Replies (3)
|
 |
குருநகர், மவுண்கார்மேல் வீதியைச்சேர்ந்த அல்பெட் பெஸ்ரியன் 1988 ஆம் ஆண்டு நான்கு வயதுச் சிறுவனாக இருந்தார். அந்தக் காலத்தில் எமது மண்ணில் போர்க்காலச் சூழல் நிலவியது. மின்சக்தி பாவனை இருக்கவில்லை. ஆத னால் பழுதடைந்த மபோலியோடு சொட்டு மருந்தை வீடுவீடாகச் சென்று குழந்தைகளுக்கு வழங் கியதால், பெஸ்ரியன் போன்று அவயவங்கள் ஊனமுற்ற சிறுவர் கள் பலர். இன்னும் சில சிறு வர்கள் மரணித்தனர்.
உயிர் பிழைத்துக்கொண்ட பெஸ்ரியன் - 1990 ஆம் ஆண்டு ஆறாவது வயதில் இடம்பெயர் ந்து தமிழ்நாடு செல்ல நேர்ந்தது. அதற்கு முன்னர் முன்பள்ளியில் சிலமாதகாலமே இங்கே கல் வியைப் பெற்றுக்கொண்டார்.
இடுப்புக்குக் கீழே செயலி ழந்துவிட்ட பெஸ்ரியனை, சிறு வயதில் தாயாரே இடுப்பில் சுமந்துசென்று கல்வியைக் கற்க விட்டு அழைத்துவருவார். இதே நிலைமை தமிழ் நாட்டிலும் தொடர்ந்தது. ஆயினும் மனம் தளர்ந்துபோகாமல் சாதாரண கல்வியில் இருந்து, உயர் கல்வி யையும் பெற்று இன்று கணினித் துறையில் அவர் ஒரு நிபுண ராகத் திகழ்கிறார் என்றால், அவ ரது முயற்சியுடன் பெற்றோரின் அயராத உழைப்புந்தான் கைகொடு த்தது எனலாம்.
அவரை மநமது ஈழநாடுடு வாசகர்களுக்கு அறிமுகம் செய் யும் அதேவேளை - இவரைப் போன்று யுத்தநிலைமையால் நமது மண்ணில் பலர் இழப் புகளுக்கு உள்ளாகியிருப்பார் கள். அவர்களில் பெஸ்ரியனைப் போன்று வாழ்க்கையில் எதிர் நீச்சலடித்து முன்னேறியவர் எத்தனைபேர்?
இனிமேலும் இவரைப் போன்ற திடமனதுடைய சிறு வர்கள் உருவாகவேண்டுமென்ற நோக்கத்துடன், அவருடனான சந்திப்பில் பெற்றுக்கொண்ட வற்றை வாசித்துப் பாருங்கள்.
1990 ஆம் ஆண்டு நமது மண்ணில் ஏற்பட்ட யுத்த நிலைமையால் எனது குடும்பம் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்தது. தமிழ்நாட் டில் தங்கச்சிமடம் என்ற இடத் தில் சிலநாட்கள் இருந்தோம். பிற்பாடு வெள்ளப்பள்ளம் அகதி முகாமில் சிறிதுகாலம். அடுத்து பவானிசாகர் இதன்பின்பும் இடம்பெயர்ந்து...
ஈரோடு மாவட்டத்திலுள்ள அறச்சலூர் என்ற மிகவும் பின் தங்கிய கிராமம். இத்தனை கால மும் முன்பள்ளிப் பாடங் களையும், வீட்டில் அம்மா கற் றுத்தந்தவையுமே எனது கல்வித் தராதரமாக இருந்தது.
முதல்முறையாக பாடசா லைக் கல்விக்காக அறச்சலூரில் இருந்த பாடசாலையில் மூன் றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு, கல்வியைத் தொடர்ந்தேன். ஆறாம் வகுப்பில் இருந்து அறச் சலூர் உயர்நிலைப் பள்ளியில் இணைந்து மபிளஸ்ற்ரூடு வரை கற்றுத் தேர்ந்தேன்.
இதற்கிடையில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் - மசென்ரல் வீடெக்டு என்னும் தனி யார் கணினிப் பயிற்சி மையத் தில் பெற்றோர் சேர்த்தார்கள்.
அங்கே கணினித்துறையில் 6 மாதகாலம் கணினி மென் பொருள் அடிப்படைக் கல்வி யையும், 6 மாதகாலம் கணினி வன்பொருள் அடிப்படைக் கல்வியையும் கற்றுத் தேறியிருந் தேன்.
10 ஆம் வகுப்புப் படிக்கை யில் வேறெந்தத் துறையிலும் ஈடுபடாமல், கல்லூரிப் பாடங் களையே கற்றதாலே மபிளஸ்ற்ரூடு வகுப்பில் திறமைச்சித்தி பெற லாம் என்பதால், கணினிக் கற் கைகளை ஒருவருடம் நிறுத்தி யிருந்தேன்.
10 ஆம் வகுப்பில் 60 விழுக் காடுகளுக்குமேல் எடுத்தாலே மபிளஸ்ற்ரூடுவில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கு அனு மதி தருவார்கள். நான் அந்தத் தேர்வில் 68 புள்ளிகள் எடுத்து முதல் தரத்தில் தெரிவாகியிருந் தேன்.
அதேபோன்று மபிளஸ்ற்ரூடு விலும் ஆங்கிலம், கணிதம், அறி வியல், தமிழ் பாடங்களில் முதல் தரத்தில் தெரிவாகினேன். அதேவேளை தனியார் நிலை யத்தில் கற்றுவந்த கணினித் தேர்விலும் மிகச்சிறந்த பெறு பேறுகளைப் பெற்றிருந்ததால், பெருந்துறை நந்தாபொறியியல் கல்லூரி கணினிப் பிரிவில் சேர்க் கப்பட்டேன்.
4 வருடம் படிக்கவேண்டிய கற்கைகளில் என்னால் ஒரு வருடம் மட்டுமே கற்க இயன் றது. மூன்று மாடிகள் உள்ள அந் தக் கல்லூரியில் - முதல் மாடி யில் எனக்கான கற்கைகள் இருந்தபோதும், இருபது படிக ளில் தினம் ஏறி இறங்குகையில் முழங்கால் சிரட்டைகளில் தேய்வு ஏற்பட்டதால், வைத்தி யரின் ஆலோசனைப்படி ஒரு வருடத்துடன் நிறுத்தவேண்டி ஏற்பட்டது. அவ்வேளை மலிப்ற்டு வசதிகள் இருக்கவில்லை.
திரும்பவும் அறச்சலூர் வந் தேன். அப்பொழுது முதலில் எனக்கு கணினி வகுப்பெடுத்த ஆசிரியர் இத்தோடு விட்டு விடாமல் தொடர்ந்தும் கணி னித்துறையில் மேலதிக கற்கை நெறிகளைப் பெறச் சொன்னார்.
பிற்பாடு மூலப்பாளையம் என்னும் இடத்தில் தங்கிநின்று, ஈரோடு மாவட்டத்திலுள்ள மசிக்சிக்மா சொலீயுசன்ஸ்டு என் னும் தனியார் நிறுவனத்தில் 1 வருடம் மகிறாபிக்ஸ்டு படித்தேன். இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவிலுள்ள புளொ றிடா மாநிலத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
என்று கூறிய பெஸ்ரியன் தொடர்ந்தும் தெரிவித்ததா வது-
மசிக்சிக்மா சொலீயுசன்ஸ்டு நிறுவனத்தில் எனது திறமை யைப் பார்த்து, பகுதிநேர ஆசி ரியராக மாதம் எண்ணாயிரத்து ஐந்நூறு இந்திய ரூபா சம்பளத் தில் நியமனம் பெற்று ஆறு மாதம் சேவையாற்றினேன்.
இந்தநிலையில் எனது குடும் பத்தைச் சேர்ந்த பல உறுப்பி னர்கள் எமது தாயக மண்ணுக்கு வந்து சேர்ந்தனர். என்னோடு இருந்த பெற்றாரும் இங்கே வர நேர்ந்ததால், நானும் தாயக மான குருநகர் மண்ணுக்கு வந்து சேர்ந்தேன்.
அங்கே கற்றிருந்த கணினி வேலைகளை ஒருவருடகாலம் எமது வீட்டில் வைத்துச் செய்து வந்தேன். இப்பொழுது குரு நகர், மவுண்கார் மேல்வீதி, 45 ஆம் இலக்கத்தில் மபெஸ்ட் வொர்க்ஸ்டு என்னும் கணினி சார்ந்த வேலைத் தலத்தைப் பெற்றார் நிறுவித்தந்துள்ளனர்.
எனக்கு நேரே மூத்த சகோ தரன் சுவேந்திரனின் உதவியு டன் அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எனக்கு சகல விதத் திலும் உதவியாக இருப்பவர்கள் தகப்பனார் அல்பெட் சின்னத் துரை, தாயார் திரேசம்மா, சகோதர சகோதரிகள்தான்.
எனது வேலைத்தலத்தில் வீடியோ மிக்சிங், எடிட்டிங், போட்டோ டிசைனிங், புத்தக வடிவமைப்பு, நூல்கள் பதிப்பித் தல், கலண்டர் மாதிரிகள் மற் றும் சகல வாழ்த்துமடல்கள், வீடி யோவை இறுவெட்டுக்கு மாற் றல், டி.வி.டிக்கு மாற்றல், கல் யாண புகைப்பட ஆல்பம் வடி வமைத்தல், கடை மற்றும் சினிமா விளம்பரம் செய்தல் ஆகிய வேலைகளைச் செய்து வரு கிறேன்.
இவ்விதம் தெரிவித்த மபெஸ்ட் வொர்க்ஸ்டு உரிமையாளர் அல் பேட் பெஸ்ரியனிடமிருந்து விடைபெறும்போது அவரது தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சியும், உழைப்பும் பிரமிக்கவைத்தது. மற்றையோர் க்கு முன்னுதாரணமாகவும் இருந்தது.
நன்றி - நமது ஈழநாடு
|
|
|
| உராய்வு + குறும்பட மாலை |
|
Posted by: AJeevan - 11-09-2005, 08:23 PM - Forum: குறும்படங்கள்
- No Replies
|
 |
[quote]<img src='http://img494.imageshack.us/img494/3207/uraivuajeevanimg7mg.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:21pt;line-height:100%'><b>இரவில்லை பகலில்லை
பொழுதெல்லை ஏதுமில்லை
நாடெல்லை அதுவுமில்லை</b></span>
-----------
<span style='color:blue'>அன்புடையீர்
சஞ்சீவ்காந்தின் (இளைஞன்)
<b>உராய்வு</b>
கவிதை நூல் வெளியீட்டு விழாவும்
ஆய்வு மற்றும் விமர்சனமும் வெகு விரைவில்
<b>சுவிஸில்</b>
நடைபெற இருக்கிறது.
இந் நிகழ்வில் பங்கு கொள்ளவும்
இணைந்து நிகழ்வுகளை ஒழுங்கு செய்யவும்
விமர்சனங்களை முன் வைக்கவும் விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் கருத்துகளையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்.
<img src='http://img334.imageshack.us/img334/8219/ajeevanhand15zy.jpg' border='0' alt='user posted image'>
<b>நாம்
நமது படைப்பாளிகளையும்
அவர்களது படைப்புகளையும் கெளரவித்து -நாளைய
நம் சமூகத்தின் கரம் பற்றி
அவர்கள் வளர வழி செய்வோம்</b>
-----------------+
-----------சில குறும்படங்கள்
---------
இந் நிகழ்வு தொடர்பான கருத்துகளை
யாழ் இணைய கருத்துக் களத்தின் வழியாகவும்
நேரடி மின் அஞ்சல் வழியாகவும் தொடர்பு கொண்டு பகிர்ந்து கொள்ளலாம்.
</span>
e-mail: ajeevan@ajeevan.com
நன்றி.
<img src='http://img92.imageshack.us/img92/8353/europemovieclub5tf.png' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com/forum/images/avatars/9978377054313793eceab0.jpg' border='0' alt='user posted image'>
www.ajeevan.com
|
|
|
| பிரித்தானிய பயங்கரவாத தடை சட்டம் |
|
Posted by: Mathan - 11-09-2005, 07:40 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதம்
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40993000/jpg/_40993968_blair2032_ap.jpg' border='0' alt='user posted image'>
<b>புதிய அதிகாரம் தேவை என்கிறார் பிரதமர் டோனி பிளேர்</b>
பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்யாமலேயே அவர்களை 90 நாட்கள்வரை தடுத்துவைக்க வழிசெய்யும் சட்ட மசோதா குறித்து விவாதம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மீண்டும் துவங்கியுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் இந்த விவாதத்தின் மீது பேசுகையில் லண்டனின் போக்குவரத்துக் கட்டமைப்பு மீது ஜூலை மாதம் நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்து இரண்டு தாக்குதல்களை காவல்துறையினர் முறியடித்துவிட்டனர் என்று குறிப்பிட்டார்.
ஆனால் இதுபற்றி அவர் விவரிக்கவில்லை. பிரிட்டனின் மக்களவையில் இப்பிரச்சனை கடுமையாக விவாதிக்கப்பட்டுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமான ஒன்று என்றும், பாதுகாப்பு படையினர் இந்த நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்துவதாகவும் பிளேர் கூறினார்.
ஆனால் எதிர்கட்சியினர் இதை ஏற்கவில்லை. இந்த நடவடிக்கைகள் அதிகபட்சமானவை என்றும் இவை மிக அதிக அளவிலான முஸ்லீம்களை கோபமடையச்செய்யும் என்றும் எதிர்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்த விபரங்கள் பெருவதையும் இந்த நடவடிக்கை மேலும் கடினாமாக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆளும் தொழிற் கட்சியைச் சேர்ந்த சிலரும் புதிய சட்டத்தை எதிர்கின்றனர்.
BBC தமிழ்
|
|
|
| GROWTH, HUMAN DEVELOPMENT AND ECONOMIC POLICIES IN JAPAN |
|
Posted by: narathar - 11-09-2005, 04:27 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
1. Introduction
The Japanese society is known around the world for accomplishing astounding economic growth in the post-war era and at the same time realizing a commendable degree of equality in the distribution of income. Sustaining low rates of unemployment in the presence of business cycles poses a real wonder for macroeconomists. Overall achievement in human development measures reported in the existing issues of the Human Development Report is also very high. Yet there seem to be many problems that remain to be resolved. Clearly there is a need for a well-balanced evaluation of the achievements of the four decades.
The organization of this report is as follows. Sections 2, 3 and 4 review concisely the basic accomplishments in the arena of economic growth, income distribution, poverty abatement, and conditions of human development, respectively, during the period 1955-1993. Since most researchers agree that the postwar Japanese economic development started from 1955, in which year the economy restored the pre-war peak level of production, we shall take 1955 to be the beginning year of this study.
Section 5 then focuses on the rapid growth period of 1955-73, in which income equalization, poverty reduction and improvement in human development conditions occurred simultaneously with growth. It also explains why rapid growth and income equalization went hand in hand and in what way the latter might have caused the former.
Section 6 characterizes the development in the size and composition of the government expenditure during the rapid growth era and the post-rapid growth era while also explains the mechanism by which the government might have promoted growth and equalization together. It also shows using a regression analysis that the government expenditure on hygiene has had a positive effect on reducing the infant and child mortality rates which was independent of the effect of the growth of per capita household income. That is, there were indeed some areas in which the government made a direct contribution in improving the human development conditions.
Section 7 concludes by leaving qualifications to the economic policies with regard to growth, income distribution and human development and by indicating the problems that still lie ahead to be resolved in this country from the perspective of human development.
http://hdr.undp.org/docs/publications/ocat...papers/oc23.htm
|
|
|
| மறைமுகமாக முடக்கப்படும் தமிழ் இளையோர். தீர்வு என்ன? |
|
Posted by: thiru - 11-09-2005, 03:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
ஒரு தேசிய இனம் தனது விடுதலைக்காகப் போராடி வரும் தருணம் இது.
இந்தப் போராட்டத்தினை ஒடுக்க ஆக்கிரமிப்பாளர்கள் பல்வேறு ஆக்கிரமிப்பு வடிவங்களைப் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி எமது இளம் சந்ததியை நசுக்கிவிட, அவர்களைப் போராட்டத்தின் திக்கிலிருந்து திசைகெடவைக்க முனைப்புடன் முனைந்துவருகிறார்கள் என்பதும் உங்களுக்குப் புதிய செய்தியல்ல.
தமிழனின் கை கொண்டே அவனது கண்ணைக்குத்தும் முயற்சியாக தமிழ்ச் சிறார்களின் மனங்களில் நச்சு விதைகளை விதைத்துத் தறிகெட வைக்கச் சிங்களப் புலனாய்வுத் துறை முயன்றுவருவதும், யாழ் மண் ஆக்கிரமிக்கப்பட்ட காலம் முதல் இந்த நடவடிக்கைக்கான பரீட்சைக் களமாக யாழ் மண் விளங்குவதையும் தமிழீழ மக்கள் நன்கு அறிவர்.
யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லு}ரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி மீதான வன்புணர்வு மற்றும் படுகொலையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டம் படிப்படியாக விரிவடைந்து இன்று ஆபாசப் படங்கள், போதைதரும் பாக்குகள், சாராயக் கடைகள், அப்பக் கடைகள் என்று பல்வேறு வடிவங்களில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறு இளைய தமிழர்கள் திசைமாறவேண்டும் என்ற ஒரே நோக்கோடு செயற்படும் சிங்களதேசம் தனது நோக்கம் நிறைவேறி வருவதாகத் தற்போது எண்ணத்தலைப்பட்டுள்ளது.
இன்று 06-10-2005 கொழும்பில் பிரசுரமான சண்டே ரைம்ஸ் வார இதழில் 'யாழ்ப்பாண இளைஞர்கள் அனைவரும் போராடப் போய்விட்டதாகத் தோன்றிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் தீபாவளி தினத்தன்று வடக்கின் தலைப்பட்டினத்தில், நு}ற்றுக்கணக்கான இளைஞர்கள் மனோகரா திரையரங்கின் முன் புதிய திரைப்படமான சிவகாசியைக் காண வரிசை கட்டி நிற்கும் வித்தியாசமான காட்சியைக் காணமுடிந்தது.' என்ற விளக்கத்துடன் முதற்பக்கத்தில் படம் ஒன்று பிரசுரமாகியிருப்பதாக அறிய முடிகிறது. (நன்றி: த சண்டேரைம்ஸ்)
<img src='http://img118.imageshack.us/img118/7544/mano7rm.th.jpg' border='0' alt='user posted image'> (குறிப்பு: படத்தின் மீது அழுத்துவதன் மூலம் அதனைப் பெரிதாகத் தெளிவாகப் பார்க்கமுடியும்)
இளைஞர்கள் படத்திற்குச் செல்வதும், வரிசைகட்டுவதும் அந்தக்காலத்திலிருந்து நடந்துவரும் காரியங்கள். இதற்கு இப்பொழுது என்ன முக்கியத்துவம் வந்தது என்று சிந்தித்துப் பாருங்கள்.
சிறிலங்கா அரசினதும் அதன் புலனாய்வாளர்களினதும் உள்ளக்கிடக்கையை, அவர்கள் எதை விரும்பினார்களோ அதைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியை மேற்படி செய்தியிலிருந்து நீங்கள் அறியவில்லையா?
'படம் பார்ப்பதால் என்ன வந்து கெட்டது. நாங்கள் பார்க்காத படமா?' என்று உங்களிற் சிலர் நியாயமான ஒரு கேள்வியை எழுப்பலாம்.
நீங்கள் படம் பார்த்தீர்கள், படலையைப் புரட்டி நட்டீர்கள். ஆனால் தெருவில் செல்லும் பெண் புரசுகளைப் பதம்பார்க்கும் எண்ணமோ, அல்லது முதுகின் பின்னே கத்தியைச் செருகிச்சென்று கண்முன்னே கண்டவரைச் சீவித்தள்ளும் வெறியோ உங்களுக்குள் இருக்கவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் (Surgical words) போய்பாருங்கள். பெண்நோயியல் மருத்துவரை (Gynecologist) , சிறுவர் பிரிவில் கடமைபுரியும் வைத்தியர்களைக் (Paediatricians) கேளுங்கள். பேரினவாதத்தின் திட்டமிட்ட, ஆனால் மிகவும் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டுவரும் இன அழிப்பின் புதிய வடிவம் குறித்து உங்களுக்கு ஒரு செய்தியை அவர்கள் சொல்லுவார்கள்.
யாழ்ப்பாண வைத்தியசாலையில் தினந்தோறும் அடிகாயங்களுடனும், வெட்டுக்காயங்களுடனும் விபத்துப் பிரிவில் (casualty word) அனுமதிக்கப்படுபவர்களில் பாதிக்குமேற்பட்டோர் பதின்வயதைச் (teenage) சேர்ந்த தமிழ் இளைஞர்கள். இவர்களில் பலருக்கு அடியும், வெட்டும் விழுவது தலையில்.
வெட்டுவதும் தமிழன். வெட்டப்படுவதும் தமிழன். வெட்டு விழுவதோ தலையில். தலை என்பது மிகவும் பிரதானமான அங்கம் என்பது 'எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்' என்று என்றைக்கோ எழுதிவைத்த தமிழனின் இன்றைய வாரிசுகளுக்குத் தெரியவில்லை.
இனி வெளிநோயார் பிரிவைப் (OPD) பார்ப்போமா? அங்கும் இளைஞர்கள் தென்படுகிறார்கள். பார்க்க வாட்டசாட்டமாக, அழகாகத் தென்படும் இவர்களுக்கு என்ன குறை??
இவர்கள் தற்போது வருந்துவற்குக் காரணமே, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் தலையில் பட்ட அடிதான். அந்த அடியின் பின்விளைவாகத் தற்போது மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டதால், உடலின் ஏதாவது ஒரு அல்லது பல பாகங்களில் வலி, சோர்வு, செயலிழப்பு, உணர்வின்மை போன்ற நரம்புத்தொகுதி சார்ந்த வியாதிகள் இவர்களைப் பீடித்துள்ளது.
அதாவது இதனை இன்னொரு விதமாகச் சொல்வதானால், யாழ்ப்பாணத்தை இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்து சிலகாலம் கழிகையில் அப்போது பதின்வயதில் இருந்த இந்த இளைஞர்கள், படங்களில் தாங்கள் பார்த்ததைப் பரீட்சித்துப் பார்த்ததன் பின்விளைவுகள் இவை.
இந்த நானாவித குளறுபடிகளுக்கும் காரணம் வைத்தியத் துறையால் இதுவரைக்கும் மாற்றுக் கண்டுபிடிக்கப்படாத அங்கமான மூளையில்- மைய நரம்புத் தொகுதியில் (CNS - Central Nervous system)- ஏற்பட்ட நிரந்தரப் பாதிப்புகள்.
இனி மருந்து மாத்திரைகளுடன் கழியப்போகும் இவர்களது எதிர்காலம் என்ன? இவ்வாறு மௌனமாக ஒரு இனத்தின் இளம் சமூகம் திட்டமிட்ட விதத்தில் முடமாக்கப்படுவது குறித்துக் குடாநாட்டிலுள்ள எவருமே - விடுதலைப் புலிகளைத் தவிரப்- புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
இதற்குச் சற்றும் குறையாத வேதனைக் கதைகளுடன் பெண்கள் பிரிவும், சிறுவர் பிரிவும் இயங்குகின்றன. பராயமடையாத சிறுமிகளைக் கூட சிறுவர்களே தீண்டியதாக வழக்குகள். பதின்வயதில் கர்ப்பமாகி நடுத்தெருவில் நிறுத்தப்படும் சிறுமிகள், சட்டவிரோத கருக்கலைப்பால் தினசரி ஒருவராவது ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொடுமை.
இப்படிச் சிறுவயதிலேயே உளரீதியாக முடமாக்கப்படும் பெண்கள், சிறுமிகள் குறித்து எந்தப் பெண்ணுரிமைவாதிகளாவது, எந்தச் சர்வதேச சிறுவர் அமைப்புகளாவது கண்கொண்டு பார்த்தனரா? பாதிக்கப்பட்ட பின்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அறிக்கை விடுப்பதும்தான் இவர்களது செயற்பாட்டின் எல்லைகளா?? இப்படியான சம்பவங்கள் மேலும் நிகழாது தடுக்க இவர்களில் எவரிடமாவது தொலைநோக்கான திட்டங்கள் இருக்கிறதா???
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத் தவிர வேறு எந்தச் சனநாயகத்தின் காவலராவது இந்தச் சீரழிவு குறித்து ஒரு வரியாவது சிந்தித்திருக்கிறார்களா? பேசியிருக்கிறார்களா? தாமே 'சனநாயக்கத்தின் காவலர்கள்' என்றும் 'தமிழர்களைக் காக்க வந்த இரட்சகர்கள்' என்றும் உளறித்திரியும் எவராவது இந்தச் சீரழிவுகளைத் தடுப்பது குறித்து ஏதாவது செய்திருக்கிறார்களா? தமிழ் மக்கள் அவசியம் தங்களைத் தாங்களே கேட்டுணரவேண்டிய கேள்வி இது.
கேவலம்! இதிலே கூடப் புலிகளுக்கு ஆதரவான எவராவது அரிதாகச் சிக்குப்பட்டால் மட்டும் இவர்களது கண்ணிற்கு அது தென்படும். அதுவும் நீதிமன்றமே எச்சரிக்கும் அளவிற்கு அது பற்றி 'வீணையை மீட்டிக்' கூச்சலிடுவார்கள். ஆனால் மற்றவர்கள் குறித்து அவர்களிற்குக் கவலையில்லை. ஏன் தெரியுமா? புலிகளை எதிர்த்துக் கூச்சலிட்டால் மட்டுமே இவர்களுக்குச் சம்பளமும், சலுகைகளும் கிடைக்கும். வயிறு நிரம்பும்.
இங்கே உதாரணத்திற்குக் குறிப்பிட்டது யாழ் குடாவின் -யாழ்ப்பாண வைத்தியசாலையின்- எல்லைக்குள்ளான நிலைவரம். வடக்குக் கிழக்கில் எத்தனை இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்பது உங்களுக்கே தெரியும். இவ்வாறு சொல்லுந்தரமற்ற வகையில் எமது இளம் சந்ததி இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில்; இரகசியமாக அழிக்கப்பட்டு வருவதை தடுப்பதற்கு வழி என்ன?
நிச்சயமாக இதனை எமது மக்கள்தான் தடுக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் எவராவது வரவேண்டும் என்று பார்த்துக்கொண்டிருப்பதை விடுத்து மக்களே செயலில் இறங்கவேண்டும். அதாவது அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழ் மண்ணிலிருந்து தமிழ் மக்களால் அகற்றப்படவேண்டும். அதுவே இந்தச் சிக்கலிற்கான இறுதித் தீர்வாக அமையும்.
<b>-திருமகள்-</b>
|
|
|
| அன்புள்ள தமிழனே! |
|
Posted by: காவடி - 11-09-2005, 03:25 PM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
நீ தமிழன்; எப்படி? மொழியால், இனத்தால் பண்பாட்டால் நீ தமிழன். இந்த அளவுகோல்படி நீ தமிழனாக இருக்கிறாயா? இது என் கேள்வியல்ல _ தந்தை பெரியாரின் கேள்வி.
அறிஞர் அண்ணா தமிழர்கள் என்பதற்கு விளக்கம் சொன்னார் _ மொழியால், வழியால், விழியால் (பண்பாட்டில்) தமிழர் என்றார்.
உன் பெயர் முதலில் உன் தாய்மொழியில் இருக்கிறதா? உன் தாய்மொழி உன் வீதியில் இருக்கும் கோயிலுக்குள் ஒலிக்கிறதா?
உன் வீட்டு நிகழ்ச்சிகளில் தாய் மொழிக்கு இடம் உண்டா?
தமிழா, நீ கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழன் உள்ளே சென்று பூசை செய்ய முடியுமா?
முடியாது! காரணம் என்ன? நீ ‘‘சூத்திரன்’’, ‘‘பஞ்சமன்’’ _ சாஸ்திரப்படி மட்டுமல்ல; இன்றைய அரசமைப்புச் சட்டப்படியும் கூட!
அதனால்தானே தந்தை பெரியாரும் 10 ஆயிரம் கறுப்புச் சட்டைத் தொண்டர்களும் 1957 நவம்பர் 26_இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26_வது மதப் பாதுகாப்பு பிரிவினை _ ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியைத் தீயிட்டுக் கொளுத்தினர். மூன்றாண்டுகள் வரை கடுந்தண்டனையும் ஏற்றனர்.
இன்று வரை அதில் மாற்றம் இல்லையே _ பின் எப்படி நாம் மானமுள்ள தமிழர்கள்?
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் காணிக்கைகளைப் பெற்றுக் கொண்டு, தமிழ் ‘‘நீச்ச பாஷை’’ என்பவர்தானே உமக்கு ஜெகத்குரு?
நீ கொண்டாடுவது ‘‘பண்டிகைகளே’’ தவிர விழாக்கள் அல்லவே!
தீபாவளியாக இருந்தாலும், வேறு எந்தத் தெருப் புழுதியாக இருந்தாலும் ‘‘தேவர்கள், அசுரர்களைக் கொன்றார்கள்’’ என்கிற கதை வராத பண்டிகைகள் உண்டா?
அசுரர்கள் எனக் கூறப்படுபவர்கள் எல்லாம் சுராபானம் குடிக்க மறுத்த திராவிடர்கள்தானே? சுரர்கள் எனப்படுபவர்கள் எல்லாம் சுரா பானம் குடித்த ஆரியர்கள் என்று விவேகானந்தர் முதல் நேரு உள்ளிட்டு பி.டி.சீனிவாச அய்யங்கார்கள் வரை எழுதியுள்ளனரே _ அவற்றைப் பற்றி ஒரு நொடி நேரம் அறிவைச் செலுத்தி சிந்தித்தது உண்டா?
சுரர்கள் அசுரர்களைச் சூழ்ச்சியால் அழித்தார்கள் என்று எழுதி வைத்த கதைகளை நம்பி அசுரர்களாக்கப்பட்ட நாமே நமது அழிவைப் பெருமைப்படுத்திக் கொண்டாடுவது, ஒரு இனத்தின் தன்மானத்துக்கு அழகாக இருக்க முடியுமா?
இதனைத் தானே அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 60 ஆண்டு காலத்திற்குமேல் படித்துப் படித்துச் சொன்னார். _ இதற்கு மேலும் நம் தோல் மரத்துக் கிடக்கலாமா?
தமிழன் படிக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து மேல் நிலைக்குச் செல்ல வேண்டும் என்றுதானே ஓயாது பாடுபட்டோம். குலக் கல்வியை பெரியார் ஒழித்ததால்தானே தமிழன் இன்று படிப்பும், பதவியும் பெறும் நிலை!
ஜாதியால் பிளவுபட்டுக் கிடக்கிறாயே! தமிழா, நீ தமிழனாக, மானம் உள்ள மனிதனாக இருக்கவேண்டாமா? அதனைத் திசை திருப்பும் ஜாதிச் சாவுக் குழி வெட்ட வேண்டாமா? உன் உடன்பிறப்பையே ‘‘தீண்டத்தகாதவன்’’ என்கிறாயே _ உன்னைச் சூத்திரன் என்பவனை ‘சாமி’ என்கிறாயே!
படித்த இளைஞனே _ இரண்டு பேர் நீங்கள் சந்தித்தால் உங்களின் உரையாடல் என்ன? நம் இனத்தைப் பற்றியா _ மொழி உணர்வைக் குறித்தா? பண்பாட்டுத் தளத்தைப் பற்றியா? இல்லையே!
சினிமாவைப்பற்றிதானே சிரித்துச் சிரித்துப் பேசுகிறாய்!
சீரழிக்கும் சினிமாக்கள்தான் உன் குருதி ஓட்டமா? சினிமாக்காரர்கள்தான் உங்கள் கனவு லோக லட்சியப் புருடர்களா?
உலகில் சினிமாக்காரர்களுக்காக டிக்கெட்டுகளை விற்பதும், திரைப்படப் பெட்டிகளுக்கு ஊர்வலம் விடுவதும், அதில் யார் முந்தி என்பதில் அடித்துக் கொண்டு கொலை வரை நடப்பதும் இங்கல்லாமல் வேறு எங்கு?
இந்த நாட்டைப் பீடித்துள்ள அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்று தொலைநோக்கோடு தந்தை பெரியார் கூறியதை ஒரு கணம் நினைத்துப் பார்ப்பாயா?
விஞ்ஞானம் வளர்ந்தால் அறிவு வேட்கை வளரும் என்பது பொது நியதி. ஆனால், இந்த நாட்டில் என்ன நடக்கிறது?
தொலைக்காட்சி என்னும் அறிவியல் சாதனம் மற்றும் ஏடுகள், இதழ்கள் மூடத்தனத்தின், பிற்போக்குத்தனத்தின் மொத்த குத்தகையாகத்தானே செயல்படுகின்றன?
அஞ்ஞானத்தை, விஞ்ஞானத்தின் மூலம் பரப்புகிறார்களே _ இது அறிவு நாணயமா? படித்த தமிழனே, பகுத்தறிவை இழந்து இந்த வலையில் வீழ்வது விவேகம் தானா?
செல்போன், இணைய தளம் என்பது தேவையான விஞ்ஞான சாதனங்கள்தான். சினிமாக் கலாச்சாரத்தால் சீரழிந்துபோன உன் சிந்தனை அவற்றில் எவற்றைத் தேடிக் கொண்டு இருக்கிறது?
இளைஞனே, இலட்சியங்கள் உன்னை கொள்ளை கொள்ள வேண்டாமா? அவற்றிற்கு மாறாக பல்வேறு ‘‘போதைகள்’’ அல்லவா உன்னைப் பாதை மாற்றத்திற்குச் செலுத்துகின்றன.
போதைகளால் தடுமாறும் உனக்கு நாடு எக்கேடு கெட்டால் என்ன _ சமுதாயம் சீரழிந்தால் என்ன _ மொழி மூக்கறுபட்டால் என்ன _ பண்பாடு பாழ்பட்டால்தான் என்ன?
அளவுக்கு மீறி கேளிக்கை உணர்ச்சிகள் ஒரு சமூகத்தில் புகுத்தப்படுவதற்கு உள்நோக்கம் உண்டு என்பது உனக்குத் தெரியுமா?
உணவுக்கு உப்பு தேவைதான். ஆனால், உப்பே உணவாகலாமா?
தமிழனிடத்தில் இன உணர்வும், நாட்டு உணர்வும், இலட்சியக் கோட்பாடுகளும் ஆட்கொண்டு விடக் கூடாது என்கிற சூழ்ச்சிதானே!
கறுப்புச் சட்டை உனக்குச் சுயமரியாதையை ஊட்டியது _ பகுத்தறிவைக் கொடுத்தது _ சமூக நீதியைச் சொல்லிக் கொடுத்தது _ பெண்ணுரிமையைப் பேணும் பண்பாட்டை உணர்த்தியது.
அந்த மண்ணில் இவற்றையெல்லாம் தலைகீழாகப் புரட்ட காவிகள் காலடி எடுத்து வைத்தால், பழைய சரிதம் மறந்து, அவற்றிற்கு நடைபாவாடை விரிக்க மல்லுக்கட்டி நிற்கலாமா?
உன் இனத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்த தலைவர்களை உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்த சிலர் துடிக்கும் பொழுது, ‘ஏதோ ஒரு மயக்கத்தில்’ அவர்களுக்குக் கைலாகு கொடுக்கிறாய். கேட்டால் விமர்சனம் என்கிறாய் _ விமர்சனத்தின் விளக்கம் தெரியுமா உனக்கு?
திராவிடன், தமிழன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கடைசியில் எதிரிகளின் காலடிக்குள் உன்னை அறியாமல் பதுங்கப் பார்க்கிறாய். புத்தம் அழிந்த வரலாறு தெரியுமா உனக்கு?
நண்பன் யார்? பகைவன் யார்? என்று அடையாளம் காணத் தெரியாவிட்டால் உன் எதிர்காலம் எங்கே போய் முடியும்?
‘போதை’யை விடு _ சமுதாயப் பாதையை தேர்ந்தெடு! இலட்சிய மிடுக்குடன் வீறு நடை போடு!
5 நட்சத்திர ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்படுகிறாய். சிக்கனம் என்பதைச் சிறுமையாகக் கருதுகிறாய் _ இது உன்னை எங்கு கொண்டு சேர்க்கும் என்று சிந்திக்க மறுக்கிறாய்.
தாயை முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்டு, தாய் மூகாம்பிகைக் கோயிலுக்குக் கடன் வாங்கிக் குடும்பத்துடன் செல்கிறாய்!
ஏனிந்த போதைகள்?
உரத்தின் மூலம் உணவு விளையும் உண்மைதான்; அதற்காக உரத்தையே உண்ண முடியுமா?
-கீ.வீரமணி- நன்றி குமுதம்
|
|
|
|