| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 361 online users. » 0 Member(s) | 359 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,320
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,298
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,643
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,075
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,467
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,040
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| ''காதலி''யுடன் வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்ற வாலிபர் |
|
Posted by: SUNDHAL - 11-11-2005, 05:58 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (9)
|
 |
''காதலி''யுடன் வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்ற வாலிபர்
தன்னுடன் தகராறு செய்து அடிதடியில் இறங்கியகாதலியுடன்வாழ மறுத்து ஜெயிலுக்கு சென்றார் ஒரு வாலிபர். இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள உவோமிங் மாநிலத்தில் உள்ள செனினே நகரில் நடந்துள்ளது, அந்த நகரை சேர்ந்த வாலிபர் ரிக்கிஎவிங், ஒரு பெண்ணை காதலித்தார். நாளடைவில்இருவர்இடையே தகராறு வந்துவிட்டது. ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த வழக்கில் ரிக்கி எவிங் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எட்வர்டு கிராண்ட்,'' வாலிபர் ரிக்கி எவிங் தனது காதலியுடன் 6ஆண்டுகள் வாழவேண்டும்., இல்லையேல் 6 ஆண்டுகள் சிறை தண்டனைஅனுபவிக்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்தார். இதை கேட்ட ரிக்கி எவிங்,''காதலியுடன்இனி என்னால்சேர்ந்து வாழ முடியாது,. என்னை சிறைக்கு அனுப்பிவிடுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். ரிக்கி எவிங்கின் விருப்பத்தை நிறைவேற்றினார், நீதிபதி.
|
|
|
| சூடான பஜ்ஜி....! |
|
Posted by: shanmuhi - 11-11-2005, 05:32 PM - Forum: சமையல்
- Replies (12)
|
 |
[size=18]<b>சூடான பஜ்ஜி....! </b>
பஜ்ஜி
தேவையான பொருட்கள்:-
கடலைமாவு - 2 கப்
மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி
சோடாஉப்பு - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கலர்பொடி - சிறிது
உப்பு - தேவையான அளவு
கத்திரிக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
வாழைக்காய் - 1
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :-
1. கடலைமாவு, மிளகாய்தூள், சோடாஉப்பு, பெருங்காயத்தூள்,கலர்பொடி,உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவுக்கு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும்.
2. பிறகு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை மிகவும் மெலிதாக வெட்டி, பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
3. பஜ்ஜி உப்பி வந்தவுடன் எடுத்து விருப்பமான சட்னியுடன் பரிமாற வேண்டியதுதான். கரகர மொறு மொறு பஜ்ஜி தயார்...!
சுட்டது - http://nilaachoru.blogspot.com/
|
|
|
| யாழ் குடாக்கடலில் ஒருவகை நச்சுநீர்? உடலில் பட்டால் ..... |
|
Posted by: Vaanampaadi - 11-11-2005, 04:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
குடாக்கடலில் ஒருவகை நச்சுநீர்?
* உடலில் பட்டால் நெருப்பினால் சுட்ட உணர்வு!
* வியர்வை துவாரங்களில் ஊசி குத்திய வேதனை!!
* எந்த வகையான மருந்துகளுக்கும் தீராத பாதிப்பு!!!
யாழ்.குடாக்கடலில் கரையை அண்டிய ஆழம் குறைந்த கற்பாறைகளைக் கொண்ட ஒரு பகுதிக் கடலில் ஒரு வகை நச்சு நீர் கலந்திருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிலில் ஈடுபட்டிருக்கின்றபோது இந்த நீர் உடலில் பட்டதும் நெருப்பினால் சுட்டது போன்று உடல் முழுவதும் ஊசியால் குத்துவது போன்று தாங்கமுடியாத வேதனை ஏற்படுகிறது என்றும் மீனவர்கள் கூறு கின்றனர். இதன் தாக்கமும் வேதனையும் எந்த வகையான மருந்துகளுக்கும் தீராததாக இருக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடல் நீரிலிருந்து வேறுபடுத்திப்பார்க்க முடியாத வகையில் நிறத்திலும் செறி விலும் கடல்நீர் போன்றே கட்சியளிக்கிறது இந்த நச்சுநீர். கடந்த சில நாள்களாக குடாக் கடலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பல மீனவர்கள் இந்த நச்சு நீரின் தாக்கத்துக்கு இலக்காகியிருக்கின்றனர். இதனால் மீன வர்கள் தொழில் செய்வதற்கு அஞ்சுகின்ற னர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடல்நீரில் ஏற்பட்டிருக்கின்ற இந்த மாற்றம் தொடர்பாக உடனடியான உரிய ஆய்வுகளை மேற்கொண்டு மீனவர்களைப் பாதிப்பிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாஷை யூர் புனித அந்தோனியார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரி யல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாள ருக்கு மகஜர் கையளித்திருக்கின்றனர்.
இந்த கடல் நீரின் மாற்றத்தினால் மீனவர்களால் உணரப்பட்ட தாக்கங்களையும் குறிப்பிட்டு அந்த மகஜர் கையளிக்கப்பட்டது.
அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
யாழ்.குடாக் கடலை அண்மித்த ஆழம் குறைந்த பகுதியில், குறிப்பாக கற்பாறை களை கொண்ட கடற்பகுதியில் "நச்சு நீர்' அல்லது "சுணை' என பெயர் குறிப்பிடப்படு கின்ற கண்களுக்குப் புலப்படாத நீர் தொழி லாளர்கள் தொழிலை மேற்கொண்டிருக்கும் போது உடலில் படுவதால் தாக்கம் ஏற்படு கிறது.
லீஞிட் அளவு பகுதியிலேயே நச்சுநீர் தாக்கியது உணரப்படும். பின்னர் உடல் முழுவதும் அதன் தாக்கத்தின் வேதனை பரவிவிடும். இந்தத் தாக்கம் ஒரு சிலருக்கு மரணத்தைக் கூட ஏற்படுத்தியுள்ளது. மேற்படி தாக்கத்திற்குள்ளானவர்களிடம் இருந்து பெற்ற அனுபவங்களை உள்ளடக் கிய மேலும் பல தகவல்களை தருகின்றோம்.
* இந்தத் தாக்கம் ஏற்பட்டதும் அக் கடற்பகுதியை அவதானித்தால் கண்ணுக்குத் தெரியக் கூடிய எந்தப் பொருளோ அல்லது அக் கடற்பகுதியில் நிறமாற்றமோ புலப்பட மாட்டாது.
* தாக்கத்திற்குள்ளான உடற்பகுதியில் நெருப்பு சுட்டது போன்ற உணர்வு உடன் உணரப்படும்.
* அதிகமாக 30 நிமிட நேரத்திற்குள் உடல் முழுவதும் தாங்கமுடியாத வேதனை பரவிவிடும். இது 24 மணி வரை தணியாது. தாக்கத்தின் செறிவிற்கேற்ப 2,3 நாள்கள் வரை நீடிக்கும்.
* ஒரு மணி நேரத்தினுள் ஒவ்வொரு அணுவும் அல்லது வியர்வைத் துவாரமும் ஊசியால் குத்துவது போன்ற வேதனை உணரப்படும்.
* உடல் முழுவதும் குத்துவதால் தொடர் இருமலும். தும்மலும், மூக்கில் நீரும், கண்ணீரும், நாவில் அதிக உமிழ்நீரும் உண்டாகும்.
* சிறுநீர், மலம் கழிக்கமுடியாது.
* நச்சுநீர் பட்ட இடத்தில் ஏற்பட்ட எரிவு அல்லது அளத்தல் சாதாரண "கடற் சொறி' தாக்கியது போன்றும் உணரப்படும்.
* தாக்கம் ஏற்பட்ட பின் உணவு அருந்தினால் அதன் வேதனை இரட்டிப்பாகும்.
* தென்மேற்குப் பருவக்காற்றுக் காலங் களில் கூடுதலாக இத்தாக்கம் ஏற்படுவதில்லை.
* எந்தப்பிரிவு வைத்திய முறைகளும் பயன்தருவதில்லை.
மேற்கூறிய அனுபவக் குறிப்புக்களை முன்னிறுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு தடுப்பு முறைகளையோ அல்லது தாக்கத் திற்கு உடன் நிவாரண மருந்துக்களையோ கண்டுபிடித்து தொழிலாளர்களுக்கு உதவ ஆவண செய்யுமாறு தங்களை பணிவன் புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Uthayan
|
|
|
| யாழ். சிறை உடைத்து தப்பினர் இருவர்: தப்பியது விடுதலைப் புலிக |
|
Posted by: adsharan - 11-11-2005, 03:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சிறைச்சாலை உடைக்கப்பட்டு இரு சிறைக்கைதிகள் தப்பியுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இந்த சிறை உடைப்புச் சம்பவம் நடந்தது.
சிறையில் விளக்கமறியலில் இருந்த இருவருடன் வெளியிலிருந்து உள்நுழைந்த இருவரும் இணைந்து கைத்துப்பாக்கி மூலம் சிறைத்துறை அதிகாரிகளை மிரட்டி சிறையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பின்னர் கொழும்புத்துறை சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் 4 பேரும் தப்பிச் சென்றனர்.
காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட மணாளன் மற்றும் பருத்தித்துறை கடற்பிரதேசத்தில் கைது செயப்பட்ட கமல் ஆகியோர் சிறையை உடைத்துத் தப்பியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தப்பிய இருவர் மீதும் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விரைவில் விசாரணை நடைபெற இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்றவர்கள் விடுதலைப் புலிப் போராளிகளாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து சிறைப் பகுதியில் கூடுதலாக சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
http://www.eelampage.com/?cn=21610
|
|
|
| கோபிஅனான் இதையும் ஒருக்கால் பாருங்கோ ..... |
|
Posted by: வன்னியன் - 11-11-2005, 12:30 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
சிறுவர்களை கடத்தி கட்டாய பயிற்சி கொடுத்து கொலை செய்யுமாறு வற்புறுத்துவது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் - சர்வதேச தமிழர் ஒன்றியம்
சிறீலங்கா துணை ஆயுதக் குழுக்களால் தமிழ்ச் சிறுவர்கள் கடத்தப்பட்டு கட்டாயப் பயிற்சி வழங்குவது தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கொலைகளைச் செய்யுமாறு வற்புறுத்துவது தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச தமிழர் ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.
சிறுவர்களும் ஆயுத முரண்பாடுகளுக்குமான செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதிக்கு சர்வதேச தமிழர் ஒன்றியம் அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ துணை ஆயுதக் குழுக்களால் கடத்தப்படும் சிறுவர்கள் கட்டாய பயிற்சிக்காக சிறீலங்கா இராணுவ முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பயிற்சியை முடித்ததும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக கொலைகளைச் செய்யுமாறும் வற்புறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் இவர்களால் கடத்தப்பட்ட தமிழ்ச் சிறுவர்கள் இளைஞர்களின் பெயர் விபரங்களை ஆதார புூர்வமாக எடுத்துக்காட்டிய சர்வதேச தமிழர் ஒன்றியம் இது போன்ற செயல்களால் மிகுந்த கவலை அடைந்ததாகவும் இது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சுட்டது பதிவிலிருந்து.
புலிகள் சிறுவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதாக குற்றம் சாட்டிய ஐ.நா.வின் மனித உரிமைகள் (?) அமைப்புக்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்கள?
அவைக்குத்தான் அரசாங்கம் கொடுக்கவேண்டியவைகளை கொடுத்துவிடுவினம் பிறகேன் வாயைத்திறக்கபோகின்றார்கள்
:oops: :oops: :oops: :oops:
|
|
|
| ஒரு காதலின் கதை |
|
Posted by: Vishnu - 11-11-2005, 12:27 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (15)
|
 |
<img src='http://img458.imageshack.us/img458/9577/a2lh.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒரு காதலின் கதை</b>
காதலி முகம் கண்டதில்லை
நினைவுகளில் மட்டுமே...
காதல் உணர்வுகளை சொன்னதில்லை
எனது காதலை மட்டுமே...
அழகை கண்டு ரசித்ததில்லை
உள அழகை மட்டுமே...
அவளுடன் அதிக நேரம் பேசியதில்லை
இதயத்துடன் மட்டுமே...
கைகோர்த்து காதல் செய்ததில்லை
கனவுகளில் மட்டுமே...
பரிசுப்பொருட்கள் கொடுத்ததில்லை
காதல் கஸ்டங்களை மட்டுமே...
எதற்காகவும் நான் கலங்கியதில்லை
காதலுக்காக மட்டுமே...
பெற்றோர் சகோதரர் என் காதலை எதிர்த்ததில்லை
உதாசீனம் மட்டுமே...
கஸ்டங்களை காதலியுடன் பகிந்ததில்லை
என் சந்தோசங்களை மட்டுமே...
காதலுடன் சேர இன்னும் பொழுதில்லை
கடமைகளுடன் மட்டுமே...
இந்த கவிவரிகளை நான் திருடவில்லை
வடிவத்தை மட்டுமே...
நன்றி
|
|
|
| சங்கரியும் ஜே.வி.பி.யும் |
|
Posted by: வினித் - 11-11-2005, 12:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
சங்கரியும் ஜே.வி.பி.யும்
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்த சங்கரி ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு நீண்டதொரு கடிதத்தை எழுதியிருக்கிறார். இலங்கை இனநெருக்கடிக்கு இந்தியப் பாணியிலான அதிகாரப் பரவலாக்கலின் அடிப்படையில் தீர்வொன்றைக் காண்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜே.வி.பி.யினரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கும் ஆனந்த சங்கரி, இது தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றை அவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்றும் அல்லாவிட்டால் பலருக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்து விடும் என்றும் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவைப்பதற்காக முழுமூச்சாக பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஜே.வி.பி.யினருக்கு வாக்களிப்பு தினமான எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் தமிழர் விடுதலை கூட்டணித் தலைவரின் வேண்டுகோளைப் பரிசீலனைக்கெடுத்து தீர்மானமொன்றை அறிவிப்பதற்கு கால அவகாசம் இருக்குமோ தெரியவில்லை. அவ்வாறு ஜே.வி.பி.யினர் அறிவிக்காவிட்டால், உண்மையில் யார்யாருக்கெல்லாம் ஏமாற்றமாயிருக்கும் என்பது ஆனந்த சங்கரி அவர்களுக்கே வெளிச்சம்.
ஆனந்த சங்கரியின் கடிதத்தில் எமது கவனத்தைப் பெரிதும் ஈர்த்த அம்சம் ஜே.வி.பி.யினருக்கு `இனக் குரோத சிந்தனையற்றவர்கள். பல்வேறு சமூகங்கள் மத்தியில் குரோதத்தை மூளவைக்கும் நோக்குடன் ஆத்திரமூட்டும் வகையிலான பேச்சுகளை ஜே.வி.பி.யினர் ஒரு போதும் நிகழ்த்தியதில்லை. இருந்தாலும் சிறுபான்மையினங்களுக்கு எதிரான இனவாதக் கட்சியென்று ஜே.வி.பி.க்கு நாமகரணஞ் சூட்டப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளினால் நேரடியாக அல்லது மறைமுகமாக கட்டுப்படுத்தப்படும் தமிழ் ஊடகங்கள் சிலவற்றினால் உங்களது கட்சிக்கு இத்தகைய சேதம் ஏற்படுத்தப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஒவ்வொருவரையும் கண்டனம் செய்வதற்கு இந்தத் தமிழ் ஊடகங்கள் தயங்குவதில்லை' என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளருக்கான கடிதத்தில் ஆனந்த சங்கரி தெரிவித்திருக்கிறார்.
தனது கடிதத்தில் ஆனந்த சங்கரி `இளைய தலைமுறையினரின் நன்மைக்காகவும் பழைய தலைமுறையினரின் நினைவுகளைப் புதுப்பிப்பதற்காகவும்' என்று கூறி இன நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த காலத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கைகள் குறித்தும் தமிழர் பிரச்சினையின் முக்கிய சம்பவங்களையும் விளக்கமளித்திருக்கிறார். ஆனால், ஜே.வி.பி.யின் கடந்த காலம் குறித்து தனது நினைவுகளை அவர் புதுப்பித்துக் கொள்ள ஏன் முயற்சிக்கவில்லை என்பது எமக்குப் புரியவில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஆனந்த சங்கரி, ஜே.வி.பி.யினரின் அரசியல் வரலாற்றைத் தெரியாதவராகப் பேசுகின்றாரா அல்லது தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு தென்னிலங்கையில் கிடைக்கக் கூடிய ஒரு சக்தி மிகு நேச அணியாக ஜே.வி.பி.யினரைக் காண்பதால் அவர்வளுக்கு `இன வாத சிந்தனையற்றவர்கள்' என்று நற்பெயர் வாங்கிக்கொடுக்க முயற்சிக்கின்றாரா?
இந்தியாவில் உள்ளதைப் போன்ற அதிகாரப் பரவலாக்கலுக்கு ஜே.வி.பி.யினரின் ஆதரவைக் கோரி நிற்கும் ஆனந்த சங்கரிக்கு ஆரம்பம் முதலிருந்தே தமிழர் பிரச்சினை விவகாரத்தில் அக் கட்சியினரின் கொள்கைகளை நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சீனச் சார்பு பிரிவில் இருந்து ரோஹண விஜேவீர பிரிந்து சென்று ஜே.வி.பி.யை அமைத்த போது, சுமார் 40 வருடங்களுக்கு முன்னரேயே அவரின் கட்சியின் சிறுபான்மையினர் விரோதக் குணாம்சம் குறித்து அரசியல் அறிஞர்கள் தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்த விமர்சனங்களை அன்றிருந்தவர்களில் அதிக பெரும்பான்மையானவர்கள் நம்பவில்லை. ஜே.வி.பி.யினரின் மார்க் சீயப் போர்வையே இதற்குக் காரணம். இன்று உண்மை நிலை தெளிவாகத் தெரிகிறது. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் அவ்வப்போது அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட சகல திட்டங்களையும் ஜே.வி.பி. எதிர்த்தே வந்திருக்கிறது.
பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலகட்டத்தில் ஜே.வி.பி. தோற்றம் பெற்றிருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் சீனச்சார்ப்பு பிரிவில் அங்கம் வகித்த விஜேவீர, டட்லி - செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பழைய இடதுசாரிக்கட்சிகளும் எதிர்ப்பியக்கத்தை நடத்தியபோது கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி அவர்களுடன் ஊர்வலம் சென்றார் என்பது ஆனந்தசங்கரிக்குத் தெரியுமா? என்று நினைக்கின்றோம். ஜே.ஆர். ஜெயர்வதன 1981 இல் மாவட்ட சபைகளைக் கொண்டு வந்த போது, ஜே.வி.பி. அதை எதிர்த்தது. 1983 ஜூலை இனவன்செயல்களையடுத்து தடை செய்யப்பட்டிருந்த ஜே.வி.பி. 1987 ஜூலையில் இலங்கை- இந்திய சமாதான உடன்படிக்கையை எதிர்த்து தென்னிலங்கையில் வன்முறைப் போராட்டங்களில் இறங்கியது. தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்று கூறிக் கொண்டு அரசாங்கங்கள் வஞ்சத் திட்டங்களுடன் முன்வைத்த ஏற்பாடுகளைக் கூட ஜே.வி.பி.யினர் வெறித்தனமாக எதிர்த்தனர். தங்கள் தரப்பிலான யோசனைகளை அவர்கள் ஒரு போதுமே முன்வைத்ததில்லை.
நோர்வேயின் அனுசரணையுடனான அண்மைக்கால சமாதான முயற்சிகளுக்கு எதிராக ஜே.வி.பி. யினரும் ஜாதிக ஹெல உறுமயவினரும் முன்னெடுத்த எதிர்ப்பியக்கங்களே இன்று தென்னிலங்கை அரசியல் சமுதாயத்திற்குள் முனைப்படைந்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத உணர்வுகளுக்கு பிரதானமான காரணம். சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத ஜே.வி.பி. க்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இனவாத உணர்வற்ற கட்சிகள் என்று நற்சான்றிதழ் வழங்கும் அளவுக்கு ஆனந்த சங்கரி தன்னைத் தானே ஒரு பொருந்தாத் தன்மைக்கு உள்ளாக்கி அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
தமிழர்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் கற்களை வீசும் சிங்களவர் மாத்திரம்தான் இனவாதியல்ல. கல் எறியாவிட்டாலும், நச்சுத்தனமான அரசியல் சிந்தனைகளைச் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி இனநெருக்கடிக்கு விட்டுக் கொடுப்பின் அடிப்படையில் அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகாமல் தடுக்கும் சக்திகளே மிகவும் ஆபத்தானவை என்பதை ஆனந்த சங்கரி அவர்களினால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? ஜே.வி.பி. தொடர்பாக நாம் தெரிவித்து வரும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு அடிப்படைக் காரணம் இலங்கையை உலுக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் தீர்வைக் காண்பதற்கான சமாதான முயற்சிகளுக்கு அக்கட்சி ஆதரவை வழங்கவில்லை என்பதைத் தவிர, வேறு ஒன்றுமில்லை. சமாதான முயற்சிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கக் கூடிய சூழ்நிலைகளை தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் மூலம் ஜே.வி.பி. யினர் படிப்படியாகத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிராகரிக்கும் பேரினவாத முனைப்புடனான சிங்கள பௌத்த தேசிய வாதத்தை கோட்பாட்டுத் தளமாகக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. இலங்கை அரசியலில் ஒரு பெரிய புதிராக விளங்குகிறது. தீவிரமான முற்போக்கு மாற்றங்களை நாடி நிற்க வேண்டிய இளஞ் சந்ததியைச் சேர்ந்த தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொண்ட அக்கட்சி தென்னிலங்கைச் சமுதாயத்தின் மத்தியில் காணப்படக்கூடிய பழைமைவாதச் சிந்தனைகளையும் சீர்திருத்தங்களுக்கு விரோதமான பின்னோக்கிய உணர்வுகளுடனான சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறது. எதிரியின் எதிரி நண்பன் என்ற தந்திரோபாயம் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கச்சிதமாகப் பொருந்துவதில்லை என்பதை ஆனந்த சங்கரி புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.
http://www.thinakural.com/New%20web%20site...1/editorial.htm
|
|
|
| இலங்கையிலிருந்து சென்னை வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக் |
|
Posted by: Vaanampaadi - 11-11-2005, 10:20 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
சென்னை வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கு அனுமதி மறுப்பு
நவம்பர் 11, 2005
சென்னை:
சுற்றுலா விசா மூலம் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
விமானங்களை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும், பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் சுற்றுலா விசா மூலம் இலங்கை வழியாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் சென்னை வந்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கருத்தை கேட்டனர்.
ஐந்து பேரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரி அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
Thatstamil
|
|
|
| ..போட்டோவில்''உம்'' என்று இருந்ததால் குடியுரிமை மனு தள்ளுபடி |
|
Posted by: Vaanampaadi - 11-11-2005, 10:14 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
திருமண போட்டோவில்''உம்'' என்று இருந்ததால், குடியுரிமை மனு தள்ளுபடி
திருமண போட்டோவில் ''உம்'' என்று மனைவி இருந்ததால், அவரது குடியுரிமை மனுவை அதிகாரிகள்தள்ளுபடிசெய்து விட்டனர்.இந்த சம்பவம் கனடாநாட்டில் நடந்துள்ளது.
இந்தியாவில்உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர், ஆர்.சிங் (வயது 55). இவர் கனடாநாட்டில்ஆலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். எனவே அவர் பஞ்சாப் வந்து ரஞ்சித் என்ற 36 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் கனடா சென்று, அவருக்கும் ரஞ்சித்துக்கும்நடந்த திருமண போட்டோவை இணைத்து ரஞ்சித்துக்கு குடியுரிமை கோரி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார்.
அந்த மனுவை கனடாஅதிகாரிகள் பரிசீலித்து, '' இது உண்மையான திருமணமா? என்பது சந்தேகமாக இருக்கிறது. இதில்ரஞ்சித் '' உம்'' என்று இருக்கிறார். இந்த மனுவை ஏற்க முடியாது'' என்று அதிகாரிகள் கூறி தள்ளுபடி செய்து விட்டனர். இதைத்தொடர்ந்து, "திருமண நிகழ்ச்சியின்போது சுமார் 150 பேர்கூடி இருந்தனர். எனவே அவர்கள் மத்தியில் மணமகள் வெட்கத்துடன் 'உம்' என்று இருக்கிறார். இது உண்மையான திருமணம் தான்'' என்று சிங் விளக்கம்கொடுத்தார். ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
Dailythanthi
|
|
|
|