| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 598 online users. » 0 Member(s) | 594 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,066
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,078
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,551
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,260
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,543
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,897
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,289
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,894
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,941
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,207
|
|
|
| தடையின் எதிரொலி |
|
Posted by: நேசன் - 04-12-2006, 09:59 PM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும்
இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்கள் அனைவரையும் அழைத்து பேசி, தடையால் கனடாத்தமிழ் மக்கள் மீது ஏற்படும் தாக்கங்கள் அதன் விளைவுகள் பற்றி எல்லாம் வெளிப்படையாக ஆராய்ந்து தடை பற்றி அறிவித்திருக்கலாம்.
ஆனால் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல்,இலகுவாக அறிவித்து விடடு அரசாங்கம் தனது பாசிச முதலாளித்துவ பற்களை தமிழ்மக்களின் முகத்தின் மேல் பதித்துள்ளது..
நாங்களோ அப்படியே அதை செய்தியாய் வாசித்து விட்டு நித்திரையாகி விட்டோம்.
வாழ்க 3 லட்சம் கனடா டமிலர் :evil:
|
|
|
| தி.மு.க.வில் இருந்து சரத்குமார் ராஜினாமா: கருணாநிதிக்கு பரபர |
|
Posted by: நேசன் - 04-12-2006, 09:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சரத்குமார் இன்று ஒரு கடிதம் எழுதி அனுப் பினார்.
அந்த கடிதத்தில் சரத்குமார் கூறி இருப்பதாவது:-
அன்புத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு.
நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நடிகர் சரத்குமார் எழுதும் கடிதம்.
சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1997-ஆம் ஆண்டு தமிழ்திரையுலகில் ஹசூரியவம்சம்' என்கிற மாபெரும் வெற்றியைத் தந்த நான் அரசியல் களத்தில் பிரசாரம் செய்ய இறங்குகிறேன்....
திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கோடு த.மா.கா.-தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கினேன். எந்த எதிர்பார்ப்போஇ வேண்டுகோளோ இன்றி தங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடு செயல் பட்டேன்.
எந்த ஒரு பிரதிபலனும் பாராமல்இ இரவு-பகல் பாராமல் எப்படி சூறாவளியாக பிரசாரம் செய்தேன் என்பதை தாங்களும் அறிவீர்கள். தங்களது இயக்க முன்னோடிகளும் அறிவார்கள்.
தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர உதவினேன் என்கிற ஒரே ஒரு மகிழ்வான உணர்வோடு இருந்தவன்இ தங்களால் ஈர்க்கப்பட்டு தங்களது இயக்கத்திலும் 1998-ஆம் ஆண்டு அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். நாடாளுமன்ற தேர்தலில் நெல்லையில் நிறுத்தப்பட்டேன்... இயக்கத்தில் சிலரின் ஒத்துழையாமையினால் தோற்கடிக்கவும்பட்டேன்.
நான் அன்று தங்கள் இயக்கத்தில் இணைந்ததை நான் சார்ந்திருக்கும் சமுதாயம் வரவேற்கவில்லை. காரணம் மெர்க்கண்டைல் வங்கி விவகாரத்தில் தாங்கள் பிரச்சினைக்கு சரிவர தீர்வு காணவில்லை என்ற உண்மை அனைவரையும் பாதித்ததால்.
இருப்பினும் நம் இயக்கத்தின் கொள்கைகளான கடமைஇ கண்ணியம்இ கட்டுப்பாட்டினை முழு மூச்சாக கொண்டு உண்மை உணர்வோடு மரபு மாறாமல் இயக்கத்திற்காக உழைத்து வந்திருக்கிறேன்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இயக்கத்திற்கு நான் ஊறு விளைவித்ததில்லை என்பதனை இவ்வுலகமே அறியும்.இது ஒருபுறம் இருக்க எத்தனையோ சந்தர்ப்பங்களில் தங்களை சார்ந்த சிலரே என்னை அவமானத்திற்கு உள் ளாக்கியிருக்கிறார்கள்.
அதனை தங்களுக்காகவும்இ இயக்கத்திற்காகவும்இ என் மனைவி ராதிகா சரத்குமாருக்காகவும் சில காலம் தாங்கிக் கொண்டிருந்தேன். அதையும் மீறி ஒரு கட்டத்தில் தங்களிடம் எனது உண்மையான உணர்வுகளை வெளிகாட்டியிருக்கிறேன்.
அப்பா என்று பாசத்தோடு தங்களிடம் வந்தேன். என்ன என்று கேட்டீர்கள்... சொன்னேன். எனது வேதனைகளுக் கும் நான் பட்ட காயங்களுக்கும் காரணம் தங்களது நெருங்கிய சொந்தங்களே என்பதை தெளிவாக உணர்ந்தீர்கள்.
எனினும் அவர்களை அழைத்து சுப்ரீம் ஸ்டார் தம்பி சரத்குமார் நமக்கு உண்மையானவன்இ உழைப்பவன்இ அவனது மனைவி ராதிகா நம் வீட்டுப் பெண் இருவரையும் எக்காரணம் கொண்டும் வேதனைப்படுத்தாதீர்கள் என தங்களால் சொல்ல இயலவில்லை. தங்களது சூழ்நிலை அதற்கு வழி வகுக்கவில்லை என்றே அதனை எடுத்துக் கொள்கிறேன்.
தங்களிடம் சொல்லி விட்டேன் என்பதற்காகவே என்னை எதிரியாக நடத்தத் தொடங்கினார்கள். எனது உண்மையான உழைப்பு கேலிக் கூத்தாக்கப்பட்டது.
நான் தங்களிடம் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் தங்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுக் கருத்தாகவே தெரிந்ததால் அதன் பாதிப்பும் தாக்கமும் என் மனைவி ராதிகா சரத்குமாருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தாங்கள் மகளாக பாவிக்கும் ராதிகா சரத்குமாரையும் தங்களால் பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. நாங்கள் சொல்கின்ற நியாயமான கருத்துக்களும் கோரிக்கைகளும் ஏற்கப்படக் கூடாதென எங்களுக்கெதிராக பலர் செயல்படும் போது இனியும் தங்களை வேதனைக் குள்ளாக்க நான் விரும்பவில்லை.
ஆனால் சுய மரியாதை உணர்வுகளோஇ கருத்துச் சுதந்திரமோ இல்லாதவன் மனிதனே அல்ல என்பது என் கருத்து. தங்களது இயக்கத்திலோ தற்போது அவற்றுக்கு வரவேற்பு இல்லை. வாய்மையும் பேசாதஇ வாயும் பேசாத அடிமைகளே தேவைப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழி.
இதுகாலம் வரை தங்களிடம் கற்ற அரசியல் பாடமும் என்னை வளர்த்த ரசிகர்களும் தாய்மார்களும் நண்பர்களும்இ கலை உலகத்தோழர்களும் என்னை சார்ந்த சமுதாயமும் தமிழக மக்களும் இனி எனது அரசியல் வாழ்க்கைக்கு துணை நிற்பர்.
தமிழக மக்கள் என்னை அவர்கள் மடியில் விழுந்த பிள்ளையை போல கருதி நான்பட்ட காயங்களுக்கு மருந்திட்டு விட்ட பணிகளை தொடர எனக்கு வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு. எனவே இன்று முதல் என்னை தங்களது இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன். தாங்கள் செய்யவிருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு எனது வாழ்த்துக்கள்.
இக்கடிதத்தையே எனது அடிப்படை உறுப்பினர் பதவிக்கான ராஜினாமாவாகவும் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சாதிமத மொழி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம். வணக்கத்து டன் ஆர்.சரத்குமார்.
இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.
விடுப்பு :
|
|
|
| கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க |
|
Posted by: Vaanampaadi - 04-12-2006, 08:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (8)
|
 |
வியாழன் 13-04-2006 02:11 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்]
<b>கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க ரோந்து நடவடிக்கையில் 20 டோரா படகுகள்.</b>
திருகோணமலை புல்மோட்டை கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் கடற்படையினரின் சுமார் 20 ரோரா படகுகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தவிர குச்சவெளி மற்றும் இறக்கக்கண்டி கடல் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் கிழக்கு பிராந்திய வன்னி பயணத்தினை எந்த வேளையிலும் ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ள நிலையில், கடற்புலிகளின் போக்குவரவுகளை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அந்த பிரதேச மக்கள் கருத்துரைத்துள்ளனர்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
|
|
|
| அடிமைச்சிறை தகர் |
|
Posted by: Gopina - 04-12-2006, 07:35 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
நான் இரசித்த கவிதை இது. உங்களுக்காக இங்கு இணைக்கிறேன். எழுதியவரின் பெயர் சிந்து.
<b>அடிமைச்சிறை தகர்...</b>
<img src='http://photos1.blogger.com/blogger/774/1856/400/0000260-Sneha.jpg' border='0' alt='user posted image'>
<b>பிறப்பிலிருந்து மரணம் வரை
அறியாமை உனது வாழ்வானதோ?
மழைக்குத் தோன்றி
மாண்டு போகும் மண்புழுவா நீ?
மலர்களும் காயப்படுத்தாத
தென்றல் தான் பெண்கள்
புயலாய் மாற்றம் கொண்டால்
மலைகளையும் சாய்த்திடுவர்
இடுப்பொடிந்து நீயும்
தலைவணங்கியது போதும்
கொஞ்சம் நிமிர்ந்து நீயும்
வாழும் உலகைப் பார்
எல்லாமே உனக்குள்
அடங்குமடி பெண்ணே
பெண்கள் மீது திணிக்கப்படும்
பாலியல் வன்முறை
ஆண்கள் இச்சை தீர்ந்தபின்
சுருக்குக் கயிற்றில் இறுகிச் சாகும்
விலங்கினமா பெண்கள்?
அடிமை சிறை தகர்த்து
சிறகுகள் முளைத்து
சுதந்திர வானில் நீயும்
பறந்திட வேண்டாமா?
அடிமைத்தனத்தின் ஆணிவேர்
அறுத்து எறியப்படுமா?
ஆதிக்கத்தின் கொடும் பற்கள்
அடியோடு பிடுங்கப்படுமா?
இராவணர்கள் வாழ் பூமியில்
சீதையாய் நீ பிறந்ததால்
சிறைப்பட்டு வாழ்தல் வேண்டுமா?
இராமர்களுக்கு வாழ்க்கைப்பட்டு
சந்தேகத் தீக்குளித்தல் வேண்டுமா?
அடிமை விலங்கோடு
நீ வாழ்ந்து மடிந்தால்
உந்தன் கல்லறையிலும்
பூக்கள் மலர்வது கூட
சுமையாகித்தான் போகும்
அடிமை விலங்கு அணிவித்து
வீட்டுக்குள் சிறை வைக்க
நாம் செய்த குற்றமென்ன - சொல்!
பெண்ணாய்ப் பிறந்ததுவோ?
சீரழிந்த உன் இனத்தை
சீர் திருத்த யார் வருவார்?
எதிர்பார்த்துக் காத்திருக்கிறாய் - சொல்!
காத்திருந்து என்ன பயன்?
களத்தில் இறங்கிவிடு
சுதந்திரமில்லாத பெண்ணாய்
நான்கு சுவற்றுக்குள்
கண்ணீர் சிந்தி என்ன பயன் - சொல்
கண்ணீருக்கு முதல் அணைபோடு
பெண்ணே உன் கண் எதிரே
சூரியன் காத்திருக்கிறான்
கண்களை மூடிக் கொண்டு
இருட்டுக்குப் பயந்தென்ன பயன் -சொல்
விழிகளை திறந்து விடியலை நோக்கு</b>
|
|
|
| ராச்குமார் மரணம் |
|
Posted by: sathiri - 04-12-2006, 07:18 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
கன்னடத்தின் மிகபெரும் நடிகரும் கன்னட வெறியருமான ராச்குமார் மரணம் என்று செய்திகளிலை வந்திருக்கு
|
|
|
| தமிழீழக் குடிமக்களை எவ்வாறு அழைப்பது |
|
Posted by: ThamilMahan - 04-12-2006, 04:36 PM - Forum: தமிழீழம்
- Replies (23)
|
 |
என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது.
புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ:
England - English
France - French
Canada - Canadian
Spain - Spanish
India - Indian (or Desi)
Australia - Australian
Norway - Norwegean
Denmark - Danish
ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் Tamil/Tamilian என்பது ஒரு பரந்துபட்ட வரைவிலக்கணத்தை(definition) கொண்டிருக்கிறது. இது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களையும் மற்றும் தமிழ் தெரியா தமிழர்களையும் உள்ளடக்கும் ஒரு வார்த்தை.
ஆகவே எனது கேள்வி என்னவெனில், ஈழத்தில் தமிழ் தேசியத்தின் கீழ் வாழ்பவர்கள்/வாழ்ந்தவர்கள்/வாழவிரும்புவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது (அல்லது அழைப்பது)?
சுருக்கமாக சொன்னால் "I am ..........." என்பதில் கீறிட்ட இடத்தில் வரவேண்டிய சரியான வார்த்தை என்ன?
யாருக்காவது இதுபற்றிய ஏதும் யோசனைகள் இருந்தால் இங்கே தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
|
|
|
| மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு. |
|
Posted by: Vaanampaadi - 04-12-2006, 03:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
புதன் 12-04-2006 21:18 மணி தமிழீழம் [நிருபர் மகான்]
<b>வாளைச்சேனை மாஞ்சோலையில் மேஜர் தர படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு</b>.
வாழைச்சேனை மாஞ்சோலை முஸ்ஸிம் பகுதியில் இராணுவ உயர் அதிகாரி மீது இனம் தெரியாத ஆயுததாரிகளினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாஞ்சோலையில் உள்ள முஸ்ஸிம் வீடு ஒன்றுக்கு இன்று புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 38 அகவையுடைய மேஜர் குமாரசம்பவ இடத்திலேயே படுகாயமடைந்துள்ளார். 48 அகவையுடைய கஜனலி என்ற இன்னொரு படைவீரரும் காயமடைந்துள்ளார்.
இவர்கள் இருவரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிற்சைக்காக சிறீலங்கா உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
|
|
|
|