![]() |
|
கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க (/showthread.php?tid=242) |
கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க - Vaanampaadi - 04-12-2006 வியாழன் 13-04-2006 02:11 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்] <b>கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க ரோந்து நடவடிக்கையில் 20 டோரா படகுகள்.</b> திருகோணமலை புல்மோட்டை கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் கடற்படையினரின் சுமார் 20 ரோரா படகுகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தவிர குச்சவெளி மற்றும் இறக்கக்கண்டி கடல் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் கிழக்கு பிராந்திய வன்னி பயணத்தினை எந்த வேளையிலும் ஆரம்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ள நிலையில், கடற்புலிகளின் போக்குவரவுகளை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அந்த பிரதேச மக்கள் கருத்துரைத்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1& - Sujeenthan - 04-12-2006 20 டோரா படகுகளா? அதுவும் ஒரே இடத்திலா?!! இப்ப மக்கள் படை தங்கள் வேலையைக்காட்டினல்; இலங்கை இராணுவத்தால ஈடுசெய்யமுடியாத இழப்பு ஏற்படும். - தூயவன் - 04-13-2006 <b>எமது கடற்கலத்தில் விரைவில் பயணம்: தயாமோகன் </b> தென் தமிழீழத்திலிருந்து கிளிநொச்சி எமது கடற்கலத்தில் எமது கடற்பரப்பில் விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த தயாமோகன்இ ஜெனீவா பேச்சுகள் தொடங்கும் 19 ஆம் நாளுக்கு முன்னராக எமது கடற்பயணம் மேற்கொள்ளப்படும் என்றார். இருப்பினும் தங்களது கடற்பயண நாள் தொடர்பாக எமக்கு விடுதலைப் புலிகள் தகவல் தெரிவிக்கவில்லை என்று கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஓல்ப்ஸ்டொட்டிர் கூறியுள்ளார். அத்தகைய பயணம் மேற்கொள்ளப்படும் நிலையில் கடற்பிரதேசங்களில் நாம் கண்காணிப்புப் பணியில் தீவிரம் செலுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். யுத்த நிறுத்த ஒப்பந்தந்திற்கமைய நல்லெண்ண செயற்பாடாக தென் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் கிளிநொச்சிக்கு வருகை தர வான்வழிப் பயண ஏற்பாடுகள் முன்னர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆனால் அண்மைக்காலமாக இக்கோரிக்கை இழுத்தடிக்கப்பட்டுஇ உரிய பதிலளிக்கப்படாதுஇ கடைசி நேரத்தில் நிராகரிக்கப்படுவதாக சிறிலங்கா தரப்பில் தெரிவிக்கப்படுவதை வழமையாகக் கொண்டிருந்தனர். இதையடுத்து தங்களது வலிமையான கடற்படையின் துணையுடன் தங்களது கடற்கலத்திலேயே பயணம் மேற்கொள்ளப்படும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த சிறிலங்கா அரசாங்கம்இ தமது கடற்கலத்தில் கண்காணிப்புக் குழுவினர் வழித்துணையுடன் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தது. இதை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்து தங்களது கடற்பயணத்தை உறுதி செய்துள்ளனர் செய்தி: புதினம் - Vaanampaadi - 04-13-2006 <b>கிழக்குத் தளபதிகளுடன் வரும் கடற்புலிகளின் படகுகளை சுட்டுத்தள்ளுமாறு அரசு உத்தரவு</b> [13 - April - 2006] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளுடன் கடற்புலிகளின் படகுகள் செல்லுமாயின் அவற்றைச் சுட்டுத்தள்ளுமாறு கடற்படையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அவசர கூட்டமொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிரேஷ்ட படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போதே, விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதிகளுடன் கடற்புலிகளின் படகுகள் செல்லுமாயின் அவற்றைச் சுட்டுத் தள்ளுமாறு கடற்படையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக புலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் பேச்சுகளை நடத்துவதற்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நேற்று வன்னிக்குச் சென்றிருந்தார். ஜெனீவாப் பேச்சுகளுக்கு முன்னர் தங்களது தளபதிகளின் வன்னிப் பயணத்திற்கு ஹெலிகொப்டர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் தங்களது படகுகளில் கண்காணிப்புக் குழுவினருடன் தங்களது தளபதிகள் கிழக்கிலிருந்து வன்னிக்கு வருவதற்கு அரசு அனுமதி மறுத்துவிட்டதாலும், தங்களது படகுகளில் தங்களது பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பயணம் செய்யப்போவதாக கண்காணிப்புக் குழுவிடம் நேற்று முன்தினம் புலிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்தே நேற்று முன்தினம் மாலை கூடிய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து இதன் சிபார்சுகளை அரசுக்குத் தெரிவித்திருந்தனர். இதையடுத்தே போர் நிறுத்த உடன்பாட்டை மீறும் விதத்தில் புலிகளின் தளபதிகளுடன் கடற்புலிகளின் படகுகள் ஏதாவது பயணம் செய்யுமாயின் அவற்றை உடனடியாக சுட்டுத் தள்ளுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவானது கண்காணிப்புக் குழுவினூடாக புலிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடற்புலிகளின் படகுகள் வரலாமென்ற எதிர்பார்ப்பில் முல்லைத்தீவு முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பில் கடற்படையினரின் டோரா படகுகள் 24 மணிநேரமும் பெருமளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. http://www.thinakkural.com/news/2006/4/13/...ews_page532.htm Re: கிழக்குத் தளபதிகள் வன்னி செல்வதை அவதானிக்க - uoorkkruvi - 04-13-2006 Vaanampaadi Wrote:வியாழன் 13-04-2006 02:11 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்] - uoorkkruvi - 04-13-2006 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தளபதிகள் வந்தால் கவனமாப் போட்டுவாங்கோ இல்லாமல் ராசா எண்டு விட்டுவிடுவினமாமோ - uoorkkruvi - 04-13-2006 தளபதிகள் இல்லாமல் வந்தால் கவனமாப் போட்டுவாங்கோ ராசா எண்டு விடுவினமாமோ - uoorkkruvi - 04-13-2006 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 20 டோறாவிலையும் நிக்கிற நேவிக்காரருக்கும் காடாத்துக்கு சாம்பல் இல்லாமல் போகப்போகுது கண்டியளோ.. - தூயவன் - 04-13-2006 மூத்த தளபதிகளான சொர்ணமும், பானுவும் இதில் போக இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் கடலில் புலிகளின் படகுகளைக் கண்டால் சுடும்படி சிங்கள ஜனாதிபதி மகிந்த அறிவித்திருக்கின்றார். எனவே தளபதிகளின் பாதுகாப்பில் தலைமை கவனமாகச் செயற்படும். சிங்கள இராணுவம் ஏதும் தப்பாக நடக்க முயன்றால் நிற்சயம் அது தன் அழிவிற்கு வழிகோலக்கூடும். |