| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 291 online users. » 0 Member(s) | 288 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,306
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,604
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,294
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,633
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,059
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,462
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,481
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,027
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| என்ன செய்ய போகிறோம்? |
|
Posted by: Rasikai - 12-24-2005, 03:21 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
<b>என்ன செய்ய போகிறோம்?
-----------------------------------------
எவ்வளவு அழகிய பூமி.....என்னை சுற்றி இருப்பது!
என்னதான் வாழ்கை பெரிய சுமையாக தெரிந்தாலும்..
கொட்டுகின்ற பனியும்...அதனை கொஞ்சுகின்ற புல் தரையும் ..
நான் நட்டு வைத்த செடியில் முதல் முதலாய் பூத்து....
நாணத்துடன் சிரிப்பது போன்ற பூவும்...
சின்ன குழந்தை முத்தமாய்..
என் தேகம் நனைக்கும் மழை துளியும்..
என்றோ பிரிந்து வந்தாலும்..
இன்னும் என் இதயத்தின் வலி கொண்ட சிறகாய்.........
இன்றும் என் உயிர் பிசையும்.....
வாழ்ந்து விட்டு வந்த என் தேசத்து வசந்தமும்..
ம்ம் எண்ணியே பார்க்கிறேன்.. இன்னும் ஏதோ இருப்பது போல்த்தான் இருக்கு வாழ்வில்..!
ஆயினும்..
நான் இரசித்த அழகுகள் எல்லாம் என்றும் அப்படியே இருக்க........
தான் மட்டும் இருந்து கொண்டு பூமி .. எம்மை...
காலம் வந்தால் கை அசைத்து வழி அனுப்பி வைக்கும்!!!
கட்டாயம் அது நடக்கும்!!!
இருட்டில் தொலைத்த கறுப்பு மலரா வாழ்வு என்றெண்ணி ...
கனக்கிறது ...நிகழ் காலம்..!!
எதிர் காலம்..........
தன் ஒரு கரத்தினை தான் எங்களுக்காய் தரும்... !
மறு கரத்தை...
தனக்கும் கடவுளுக்கும் இடையில் செய்த ஒப்பந்தம் போலவே ஒளிச்சு வைக்கும்!!
வாழ்வு என்ற படகு கால கடலில் மூழ்கையில்...
நீ நீட்டுகின்ற கையை .. தட்டி விட்டு....
அது தன் பாட்டில் நடை பயிலும்!!!
பிறப்பு ..........ஆரம்பம்!
இறப்பு... முடிவு!!
வாழ்க்கை சிறு இடைவேளை!!
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் என்ன செய்ய போகிறோம்??
நடப்பது நடக்கட்டும்... நம் கையில் என்னவென்று...
உயிர் இருக்கயிலேயே உணர்வு செத்து போவாமா?
இல்லை..... விதியை பிடித்து வந்து...தூக்கில் ஏற்றி...
வெற்றி குதிரையின் முதுகில் பயணம் செய்து...
உன்னையும் என்னையும் தந்த உலகிற்கு...
உருப்படியாய் ஏதும் செய்வோமா?
பச்சை பாய் விரித்த எங்கள் வயல் நிலமும்...
பால் நிலவொளி கொண்டு கழுவிய எம் வீட்டு முற்றமும்...
எப்படி பறி போனதென்று எழுதி வைப்போமா?
இனி வரும் சந்ததி கையிலதை ஏடாய் ஆக்கி கொடுப்போமா?
எப்படி உன் பாட்டன் திரும்ப திரும்ப அடி வாங்கினான்...
எப்படி அவனை அடித்தவனை நாங்கள் திருப்பி அடித்தோம்..
என்றும் மறக்காமல் சொல்வோமா?
காதல்...காதல்..என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா?
இல்லை....கணணி யுகத்துடன் சேர்ந்து ஓடி..
நாமும் கொஞ்சம் வெல்வோமா?
என்ன செய்ய போகிறோம்???</b>
|
|
|
| கண்காணிப்புக் குழு பணிகள் நிறுத்தம் |
|
Posted by: நர்மதா - 12-24-2005, 01:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
யாழில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பணிகள் நிறுத்தம்
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ வன்முறைகளும் அதற்கான எதிர்வினைகளும் அதிகரித்து வரும் நிலையில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளை இடை நிறுத்தியுள்ளனர்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்ரூப் ஹொக்லெண்ட் கூறியதாவது:
யாழில் எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை பணிகளை இடைநிறுத்த யாழ். கண்காணிப்புக் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
கடந்த வியாழக்கிழமை முதல் யாழில் கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளை இடை நிறுத்தியுள்ளனர்.
டிசம்பர் 19 ஆம் நாள் யாழ்ப்பாண மாணவர்கள் அரச படையினர் மீது கற்களை மட்டும் வீசவில்லை. கண்காணிப்புக் குழு அலுவலகத்துக்குள்ளும் வலுக்கட்டாயமாக உள்நுழைய முயன்றனர்.
அதை அமைதியான ஊர்வலம் என்று அழைக்க முடியாது. அது மிகவும் மோசமானது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் சில இளைஞர்கள்தான் முன்னிலை வகிக்கின்றனர். அவர்களை இராணுவம் அடையாளம் கண்டு உடனே கைது செய்ய வேண்டும்.
வடக்கு - கிழக்கில் சிறிலங்கா அரச படையினர் அமைதியற்ற சூழலை உருவாக்கி உள்ளனர். அவர்கள் கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்பிலும் அக்கறை கொள்ளவில்லை.
கண்காணிப்புக் குழுவினர் மீதும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. எமது வாகனத் தொடரணி தாக்கப்பட்டது.
வடக்கு - கிழக்கு நிலைமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஆபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. படையினர் அமைதிக்கு எதிராக உள்ளனர். அவர்கள் அமைதி போதும் போதும் என்று கூறுகின்றனர்.
பேசாலை தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது.
எமது கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்புக்கு சர்வதேச நாடுகளினது உதவியை கோரமாட்டோம். சிறிலங்கா அரச படையினரால் 100 வீதம் எமக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்.
தற்போதைய நிலைமைகளைச் சீராக்க விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மேல்நிலை அளவிலும் கீழ்நிலை அளவிலும் உடனடியாக பேச்சுகள் நடத்தப்பட வேண்டும்.
அண்மைய படையினர் மீதான தாக்குதல்களுக்கு யார் காரணம் உறுதியான ஆதாரங்கள் இன்றி முடிவுக்கு வர இயலாது என்றார் ஹொக்ரூப் ஹொக்லெண்ட்.
புதினம்
|
|
|
| ஈழத்தமிழர் உள்ளம் கவர்ந்த தமிழகத் தலைவர் |
|
Posted by: Vaanampaadi - 12-24-2005, 12:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
ஈழத்தமிழர் உள்ளம் கவர்ந்த தமிழகத் தலைவர்
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/December/24/p2.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் கூறும் நல்லுலகில் கடந்த நூற்றாண்டில் அனைவரும் போற்றுதற்கு உரியராகி விளங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள். கடந்த நூற்றாண்டு முற்பகுதியில் தமிழ்த் திரைப்படத்துறை எதிர் பாராவகையில் அனைவரதும் உள்ளங்களையும் கவர்ந்து வளர்ச்சியடைந்தது. இத் திரைப்படத்துறையில் எம்.ஜி.ஆர்.அவர்கள் நடிகராக விளங்கினார். தமது இயல்பான நடிப்பாற்றலாலும் தான் ஏற்ற பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்திய சிந்தனைகளாலும் மக்கள் அனைவரையும் கவர்ந்தார்.
திரைப்படங்கள் சமயம் சார்ந்த பொழுதுபோக்குக்கு உரியன என இல்லாமல் சமுதாயச் சீர்திருத்தங்களுக்கு உரியன ஆக வழிப்படுத்தினார். இதனால் கிராமப் புற மக்கள் பெரும் பயன் பெற்றனர். கிராமத்து மக்கள் எம்.ஜி.ஆர்.மன்றங்களை அமைத்து இவரது சிந்தனைகளுக்கு உறுதுணை ஆயினர். மக்களின் நன்மதிப்பைப் பெற்ற எம்.ஜி. ஆர்.அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையினால் கவரப்பெற்று அவரது தி.மு.க.இயக்கத்தில் இணைந்து அவருக்கு உறுதுணை ஆனார். அவர் தமிழக அரசுப் பொறுப்பை ஏற்றபோது அவரின் அமைச்சர்களுள் ஒருவர் ஆனார்.
எம்.ஜி.ஆர் அவர்கள் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையினர் எனினும் தமிழ்ப்பற்று உள்ளவர். ஆகவே சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு நடைபெற்றபோது இம்மகாநாடு சிறப்பாக அமைவதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் பெரும்பணி செய்தார். அறிஞர் அண்ணா அவர்களின் பின் தமிழக முதல்வராக கலைஞர் வருவதற்கு எம்.ஜி.ஆர். உறுதுணையாக இருந்தார். கலைஞரது அமைச்சர்களுள் ஒருவராக இருந்தார்.ஆனால் இருவருக்கும் எதிர்பாராத வகையில் கருத்து வேறுபாடு வந்தபோது எம்.ஜி.ஆர்.அவர்கள் தி.மு.க.அமைப்பில் இருந்து விலகி அ.தி.மு.க.அமைப்பை நிறுவி அதன் தலைவர் ஆனார்.
தமிழுலகில் பெருமதிப்புப் பெற்று விளங்கிய கலைஞர் அவர்களையும் அவரது பலம் வாய்ந்த அமைப்பையும் எம்.ஜி.ஆர்.எதிர்கொள்வது பயன் தராது எனத் தமிழ் உலகு எண்ணியது. ஆனால் எதிர்பாராவகையில் தமிழகப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர்.அவர்கள் பெரும் வெற்றி பெற்றுத் தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுத் தமிழக முதல்வர் ஆனார்.எம்.ஜி.ஆர் அவர்கள் இயல்பாகவே சிந்தனை ஆற்றலும் செயலாற்றலும் உள்ளவர். ஆகவே தமது சிந்தனைகள் பலவற்றைச் செயற்படுத்தினார். தமிழறிஞர் பலரைத் தம் அமைச்சர் அவையில் இணையச் செய்து தமிழக ஆட்சியை மேற்கொண்டார். நல்ல பல செயல்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினார் ஆத்மீக அறிஞர்களின் அறிவுரைகளையும் பெற்றார்.
உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு மதுரையில் நடைபெற்ற போது அம்மகாநாடு மிகச் சிறப்பாகவும் பயன் உள்ளதாகவும் அமையும்படி வழி நடத்தினார். அரசியல் அறிஞர்களிலும் பார்க்கத் தமிழறிஞர்கள் மேலானவர்கள் என்பதை வெளிப்படுத்தினார். பெரும் தமிழறிஞர்களுக்குப் பெரும்நிதி வழங்கி அவர்கள் வாழ்வு வளம் பெறச் செய்தார். உலகத் தமிழ் வளர்ச்சிக்காக இன்று சிறப்புற்று விளங்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நன்கு செயற்பட உதவினார். தமிழக அறிஞர் துணையோடு தமிழில் சில எழுத்துகளின் வரிவடிங்கள் அமையச் செய்தார். அரசியலில் இணைய முன் இலங்கைக்கு வந்து இங்கு உள்ள தமிழர்களுக்குத் தம் அன்பை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர் அவர்கள் இலங்கையிற் பிறந்தவர். தமிழினப்பற்று உள்ளவர். ஈழத்துத் தமிழர் தம் வாழ்வகத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பெரிதும் உதவியதோடு இந்திய அரசு ஈழத் தமிழருக்கு ஆதரவு வழங்கும்படி உறுதுணையானார். இத்தகைய பெரும் பணிகள் மூலம் இவர் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவர் ஆனார். திரைப்பட நடிகர் ஒருவர் ஒரு நாட்டை நன்கு வழிநடத்த இயலும் என்பதை எம்.ஜி.ஆர்.அவர்கள் உலகிற்கு உணர்த்தினார்.
கடந்த நூற்றாண்டு நடுப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலையினாலும் இலங்கை அரசு மேற்கொண்ட நிதிக் கட்டுப்பாடுகளினாலும் தமிழகத்து நல்ல நூல்கள் இலங்கையில் பெறுதற்கு அரியனவாக இருந்தன. இந் நிலையில் இலங்கைத் தமிழ் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் தமிழக நூல்களைப் பெற்றுத் தரும்படி கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு அறிவுறுத்தினர். இந்நிலையில் தமிழக அமைச்சரான இரா.நெடுஞ்செழியன் அவர்கள் பாரதியார் நூற்றாண்டு நிறைவுக்காக இலங்கை அமைச்சர் செ.இராசதுரை அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை வந்தார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலும் உரை நிகழ்த்தினார். இத் தொடர்பினால் இலங்கைத் தமிழ் ஆய்வு முயற்சிகளுக்குத் தமிழக நூல்களை உதவும்படி தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தமிழ்சங்கப் பொதுச் செயலாளர் விண்ணப்பம் ஒன்றை எழுதி அனுப்பினார். செம்மனச் செல்வராக விளங்கிய முதல்வர் அவர்கள் இவ் விண்ணப்பத்தை உவந்து ஏற்றுக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்குத் தமிழக நூல்களை உதவும்படி உடன் ஆணை பிறப்பித்தார்.
தமிழ்நாடு பொதுநூலகத்துறை அனுப்பிய தமிழக முதற் தொகுதி நூல்களை இந்தியத் தூதுவராக இருந்த டி.என். தீக்சித் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழக நூல்கள் பொதுநூலகத்துறை மூலம் இச் சங்கத்திற்கு வந்தன. பொதுநூலகத்துறை இயக்குநர் அழைப்பை ஏற்றுத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் தமிழகம் சென்று இயக்குநர் உதவியினால் பல்கலைக்கழகங்கள், உயர்பதிப்பகங்கள் ஆதீனங்கள் ஆகியவற்றில் பயன் உள்ள நல்ல நூல்களைத் தேர்ந்து பொதுநூலகத்துறை மூலம் இங்கு வருதற்கு உதவினார். 1995 ஆம் ஆண்டு பொது நூலகத்துறை அனுப்பிய நூல்கள் வராமல் இருந்தன. எனினும், பொதுச் செயலாளர் முன்னைய தொடர்புகளின் துணையோடு தொடர்ந்த முயற்சிகளினால் அரிய 400 நூல்கள் இச் சங்கத்திற்கு வந்தன.
எம்.ஜி.ஆர்.அவர்கள பெரும் சிந்தனையாளர். ஆகவே இச் சங்க நூல்களுக்கு உதவிய நிதியை வங்கியில் இச் சங்கப் பெயருக்கு வைப்புச் செய்வித்தார். இதனால் இந் நிதியைத் தமிழக அரசு வேறுதேவைகளுக்குப் பயன்படுத்தவில்லை. இந்நிதியை வங்கியில் வைப்புச் செய்தததால் ஆண்டுதோறும் வட்டியினால் நிதிவளர்ந்தது. இதனால் தமிழக நூல்கள் தமிழ்ச் சங்கத்திற்குத் தொடர்ந்து கிடைப்பதாயின, இவைகளைப் பொதுநூலகத்துறை உதவி இயக்குநரான யே.செகநாதன் தெரிவித்தார். இந் நூல்களினால் இச் சங்கத்திற்கும் தமிழகத்திற்கும் நற்தொடர்பு உள்ளது. தொடர்ந்தும் நூல்கள் பெற வாய்ப்பு உண்டு. யாழ். நூலகத்திற்கும் பெரும் நிதியைத் தமிழக அரசு வழங்க எம்.ஜி.ஆர் வகை செய்தார். ஆனால் இந்நிதி அமைதியற்ற நிலையால் பயன்படுத்தப்படவில்லை.
தமிழக அரசு வழங்கிய நூல்கள் பன்னீராயிரத்துக்கு மேல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் உள. இவை பல்துறை சார்ந்த அரிய நூல்கள். தமிழக நூல்கள் வந்தபின்பே தமிழ்ச் சங்க நூலகம் சிறந்த பயன் உள்ள நூலகமாக வளர்ந்தது. அனைத்துப் பகுதிகளில் உள்ள தமிழ் ஆய்வாளர், ஆர்வலர்கள், பல்கலைக்கழகத்தினர். கல்விவெளியீட்டுத் திணைக்களத்தினர், கல்லூரிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய பலரும் இந்நூல்களைப் பயன்படுத்தினர். வெளிநாட்டு அறிஞர்களும் இந் நூலகத்தைப் பயன்படுத்தினர். இந் நாட்டிலும் உலக நாடுகளிலும் பெருமதிப்பைப் பெற்றுள்ளது.
இந் நாட்டில் அமைதியற்ற சூழ்நிலையில் நல்ல தமிழ் நூல்கள் பெறஇயலாத நிலையில் இந்நூலகம் இந்நாட்டிற்குப் பெரும்பணி செய்துள்ளது. சிறப்பாக வட,கிழக்குப் பகுதிகளிலும், மலையகம், தென்மேல் பகுதிகளிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நூலாக்க அறிஞர்களுக்கும் இந் நூலகம் பெரும் பணி செய்துள்ளது. இவ்வகையில் இதன் பயன்பாடு பெரியது. வேறு நூலககங்கள் இருப்பினும் பயனுள்ள தமிழ் நூல்கள் இருக்கவில்லை. இந் நூலகம் எம்.ஜி.ஆர்.நூலகம் ஆகும்.
முதன் முதல் இச் சங்கத்திற்குப் பெருநிதி வழங்கியவர் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்களே ஆவர். இந் நாட்டில் நிதிவளம் உள்ளவர்கள், நிறுவனங்கள் இருந்தும் பெரும் உதவி வழங்க முன்வரவில்லை. இச்சங்கத்திற்கும் இந் நூலகத்திற்கும் பெரும்வளர்ச்சியும் புகழும் வருதற்கு வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்.ஆகவே தமிழ்ச்சங்கம் இவரது உருவப் படத்தை இந் நூலகத்தில் திரைநீக்கம் செய்து வைத்துள்ளது. (1995) இந்திய தூதுவராக இருந்த நரேசுவர தயாள் அவர்கள் இதனைத் திரை நீக்கம் செய்து வைத்தார்.
எம்.ஜி.இராமச்சந்திரன் பலதுறைகளிலும் பெரும்பங்களிப்புகளைச் செய்து வந்ததனால் உலகப் பிரசித்தி பெற்ற உயர்ந்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இலங்கையில் பிறந்தவரான அவர் இலங்கை மக்களைச் சிறப்பாகத் தமிழர்களைத் தன் உயிராக உடன்பிறப்புகளாக நேசித்தார். எம்.ஜி.ஆர்.தமிழக முதல்வராக இருந்தபோது 1983 ஆண்டுக்கலவர காலத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான சிறந்த பல நூல்களை அன்பளிப்பாக வழங்கியதன் மூலம் தமிழ் இலக்கியத்திற்கும் மொழிக்கும் அவர் ஆற்றிய சேவைகளை எம்மால் நன்றாக அறிந்து கொள்ளலாம். சிறந்த அரசியல் அறிஞராக, இராஜதந்திரியாக, பெருந் தலைவராக, ஒப்பற்ற நடிகராக, கொடைவள்ளலாக, கொள்கைக் கோமானாக, மனிதநேயம் மிக்கவராக, மாமனிதராக வாழ்ந்து மறைந்த இன்னொரு தலைவரை இனி எம்மால் சந்திக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அவரின் திருவுருவப் படத்தைத் திரைநீக்கம் செய்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தலைநகரில் உலகளாவிய ரீதியில் நல்ல பல பணிகளை ஆற்றிவரும் இச் சங்கத்திற்கு எமது சக்திக்குட்பட்ட சகல உதவிகளையும் எந்த நேரத்திலும் செய்யக் காத்திருக்கிறேன்' எனத் தூதுவர் அவர்கள் தமது உரையில் தெரிவித்தார்.
ஆகவே, வரலாற்றில் இச் சங்க நூலகத்திற்கும் ஈழத்தமிழர்க்கும் பெரும்பணிகள் ஆற்றிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இச் சங்கம் ஈழத்தமிழரும் பெரிதும் கடமைப்பட்டுள்ளனர். இவரது நினைவு நிகழ்வு இச் சங்கத்தில் நிகழ வேண்டிய ஒன்றாகும்.
(கட்டுரையாளர் :கொழும்புத் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர்)
தமிழவேள் இ.க.கந்தசாமி
thinakural
|
|
|
| நேர்வேயிலேயே பேச்சு... |
|
Posted by: நர்மதா - 12-24-2005, 11:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
நேர்வேயிலேயே பேச்சுக்களை நடத்துவது எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடாகும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளினுடனான சந்திப்பின் பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன்
நேர்வேயிலேயே பேச்சுக்களை நடத்துவது எமது தலைமைப்பீடத்தின் நிலைப்பாடாகும் இவ்வாறு தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்தார் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளினுடனான சந்திப்பின் பின்னர் ஊடக வியலாளர்களிற்குக் கருத்துத் தெரிவித்த சு.ப. தமழ்ச்செல்வன் இதனைக் குறிப்பிட்டார். இன்றைய காலகட்டத்தில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாகவே இன்றைய சந்திப்பில் ஆராயப்பட்டதாக சு.ப தமிழச்செல்வன் தெரிவித்தாh தற்போது சிறீலங்கா இராணுவம் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது இளம்பெண் ஒருவர் புங்குடுதீவில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தினால் ஆத்திரமடைந்த மக்கள் கொந்தளிப்பது தவிர்க்க முடியாதது. இந்த நிலையில் யுத்தநிறுத்தம் அமுலாக்கம் சரியான முறையில் நடைமுறையில் இருந்தால் மட்டுமே பேசு;சுக்களுக்கான நல்ல சூழல் உருவாகும் தமிழ்மக்களும் சர்வதேசமும் தமழீழ விடுதலைப்புலிகளும் பேச்சுக்கள் நடைபெற வேண்டு மென்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சிங்கள தேசம் முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றது நோர்வே அனுசரணை வழங்க வேண்டும் என்று கூறும் அரசு ஆசியாவில் பேச்சு நடத்த வேண்டும் எனக் குறிப்பிடுகிறது முரண்பட்ட நிலைப்பாட்டை உருவாக்கி யிருக்கின்றது என்று குறிப்பிட்டார். இன்றைய சந்திப்பு விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று மு.ப 11.50 மணியளவில் ஆரம்பமாகி 2.50 மணிக்கு முடிவடைந்தது இன்றைய சந்திப்பில் சு.ப தமிழ்ச்செல்வனுடன் காவல்துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் சமாதானச் செயலகப்பொறுப்பாளர் புலித்தேவனும் கலந்து கொண்டார். இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ய10லியன் வில்சன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸ்ரீபன் இவான் யப்பானிய தூதுவர் அக்கியோ சூடா நோர்வேயின் பிரதி தூதுவர் ஒட்வர் லிங்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லங்காசிறி
|
|
|
| டக்ளஸ் மீது கூட்டமைப்பினர் பாய்ச்சல்! |
|
Posted by: நர்மதா - 12-24-2005, 10:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
டக்ளஸ் மீது கூட்டமைப்பினர் பாய்ச்சல்! இனவாதிகளுக்கு செருப்புத்தூக்கு பவன்இ தமிழ்மக்களைக் காட்டிக் கொடுக்கும்துரோகி திட்டித்தீர்த்தார் கஜேந்திரன் எம்.பி.
கடந்த புதனன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2006ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனைப் பேசவிடாமல் கூச்சல்போட்டு குறிக்கீடு செய்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவரைப் பார்த்துப் பதிலுக்கு மிக மோசமான வார்த்தைகளினால் திட்டித்தீர்த்தார் கஜேந்திரன் எம்.பி.
""தமிழ் மக்களை இனவாதிகளுக்குக் காட்டிக்கொடுக்கும் உனக்கு எம்மைப் பேசவிடாமல் குறுக்கீடு செய்வதற்கு என்ன தகுதி இருக்கின்றது?'' என்றும் ஏசினார் கஜேந்திரன்.
சபையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழவேந்தன்இ சிவநேசன் ஆகியோரும் கஜேந்திரனுக்கு ஆதரவாக தொடர்ந்தும் சத்த மிட்டவாறு ஏசத்தொடங்கியதால் அமைதியாக அடங்கிப்போனார் அமைச்சர் டக்ளஸ்.
இந்தக் களேபரத்தில் சபை ஒரே கூச்சலால் இரண்டுபட்டது.
நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற 2006ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத் தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் யாழ்.புங்குடுதீவில் இளம் பெண் ஒருவர் கடற்படையினரால் பாலியல் வல்லலுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டமை பற்றியும் அதனைத் தொடர்ந்து படையினர் யாழ். பல் கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர் மீது மேற்கொண்ட தாக்குதல் பற்றியும் கார சாரமாகக் கண்டித்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆளுங்கட்சியின் முன் வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ கஜேந்திரனைப் பேச விடாமல் குறுக்கீடுசெய்தார். கஜேந்திரன் கூறுவது பொய் எனப் பொருள்படும் வார்த் தைகளை அவர் பிரயோகித்தார்.
தமிழ் உணர்வுடன் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்த கஜேந்திரன்இ டக்ளஸின் குறுக் கீட்டால் மேலும் ஆவேசமடைந்தார்.
அந்த ஆவேசத்தில் டக்ளஸ் தேவானந்தாவை வாயில் வந்தவாறு ஏசித்தள்ளினார் கஜேந்திரன்.
"இனவாதிகளுக்கு செருப்புத்தூக்கு பவன்'இ "தமிழ்மக்களைக் காட்டிக் கொடுக்கும்துரோகி' போன்ற சொற்பதங்கள் தாராளமாகப் பிரயோகிக்கப்பட்டன.
கஜேந்திரனுடன் இணைந்து அவரின் பின்வரிசையில் அமர்ந்திருந்த சிவநேசன் மற்றும் ஈழவேந்தன் ஆகியோரும் பலத்த சத்தத்துடன் அமைச்சர் டக்ளஸுக்கு எதிராகச் சொற்போர் தொடுத்தனர்.
ஆளுங்கட்சியில் எவரும் அமைச்சர் டக் ளஸுக்கு ஆதரவாக அவருடன் இணைய வில்லை. அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஜே.வி.பியினர் சபையில் இருந்தும்கூட அவர்களும் கூச்சல் போடாமல் குழப்பம் செய்யாமல் அமைதி யாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
கஜேந்திரன் உரையாற்றி முடிந்ததன் பின்பும் கூட டக்ளஸுக்கு எதிரான தமது வசை பாடலைத் தமிழ்த் தேசிய கூட்டமைப் பினர் நிறுத்தவில்லை.
இதனால்இ கஜேந்திரனைஅடுத்து உரை யாற்ற வேண்டிய அமைச்சர் டியூ. குணசேகர வால் உரையாற்ற முடியாமல்போனது.
ஒரு சில நிமிடங்கள் கழித்தே சபையில் அமைதி நிலவியது. அதன்பிறகே அமைச்சர் டீயூ. குணசேகர உரையாற்றினார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் சபையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவ நாதன் கிஷோர் இந்தச் சண்டையில் கலந்து கொள்ளாமல் அமைதியாகவே காணப் பட்டார்.
அதன் பிறகு டக்ளஸ் தேவானந்தா ஆச னத்தைவிட்டு எழுந்து சென்று ஒவ்வொரு அமைச்சரிடமும் ஏதோ கூறினார்.
முதலில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்காவின் காதில் ஏதோ ஓதினார் அவர். அதன்பின் அமைச்சர் டிலான் பெரேராவிடம் போய் ஏதோ உரைத்தார்.
அதனையடுத்து எதிர்வரிசையில் அமைர்ந்திருந்த ஜே.வி.பி.யின் நாடாளு மன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர னும் டக்ளஸின் அருகே வந்து அவரின் காதோடு காதாக எதையோ கூறினார்.
அதன்பின் சிறுது நேரம் சபையில் இருந்து விட்டு வெளியேறிப்போய்விட்டார் அமைச்சர் டக்ளஸ தேவானந்தா.
லங்காசிறி
|
|
|
| மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறும் சிங்கள... |
|
Posted by: kurukaalapoovan - 12-24-2005, 10:06 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறும் சிங்கள மேலாண்மைவாதம்.
Why does the South feel the equilibrium has been lost? The election of President Rajapakse demonstrates clearly that the southern voter had been disenchanted with the CFA particularly with the rate of political killings and child abductions.
...
......
Some are arguing that the LTTE escalation of violent conflict may be a prelude to seeking concessions from the government, as a sequel to restarting the talks on the CFA.
If this is so then the LTTE is employing a high-risk strategy, which could boomerang on them. If it is a prelude to open hostilities then it means that the LTTE thinks that it would secure a quick military victory before resuming talks again once the equilibrium is restored.
...
.....
Although the LTTE has the military ability to achieve some of its objectives, a military adventure to reach its objectives would have serious consequences for itself and for the country as a whole. The Government whilst weak militarily has accumulated goodwill within the international community, and India would not allow such an adventure. The government would naturally try to develop a broad anti terrorist alliance amongst India and the Western powers. Such are the dreams of those who seek to advise the President.
....
......
The Sri Lankan Government on the other hand would also make a profound mistake in thinking that an easy victory would be possible with the LTTE. The military always underestimated the strength of the LTTE. The fact that the army was not allowed to meet the LTTE to reduce tensions is regrettable since it has been standard practice over many years. So far the President has not invited the Norwegians to visit the country although they have been waiting for such an invitation.
Surely the Norwegians should be asked to meet the leader of the LTTE and the President. The SLMM had over the years facilitated the military from both sides. These talks should be resumed immediately. There has been too much delay in resuming talks on the CFA. High priority should be given to start these talks. All efforts must be made to reduce the continued escalation of violence. This is the need of the hour.
http://www.tamillinks.net/archive/2005/new..._24122005_a.htm
|
|
|
| உதவி |
|
Posted by: Vasan - 12-24-2005, 09:22 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (13)
|
 |
எழுக தமிழ் பாடலை எங்கு கேட்க முடியும்
யாழ் களத்தில் என்னங்க என்ற பாடல் இருந்தது. அது எந்த முகவரியில் யாரவது உதவி செய்ய முடியுமா,?
|
|
|
| எல்லாம் போர்முனைக்கே எல்லாம் வெற்றிக்காகவே |
|
Posted by: Mathan - 12-24-2005, 09:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
திருமகள் எழுதிய இந்த கட்டுரையை யாழ் முகப்பில் படித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். படிக்க தவறியவர்களுக்காக அதன் இணைப்பை இங்கே தருகின்றேன் படித்து பாருங்கள். - மதன்
"எல்லாம் போர்முனைக்கே எல்லாம் வெற்றிக்காகவே"
மப்பும் மந்தாரமுமான ஒரு பகற்பொழுதில் யாழ்ப்பாணத்தின் பிரபல குளிர்களி விற்பனை நிலையத்தினுள் நண்பிகளுடன் நுழைந்தேன். ஏறத்தாள ஏழு வருடங்களின் பின்னரான சந்திப்பு என்பதால் அனைவருமே மிக உற்சாகமாக இருந்தோம்.
குளிர்களியுடன் கை துடைப்பதற்காக வழங்கப்பட்ட பழைய பத்திரிகைத் துண்டு எமது கருத்துப்பரிமாற்றத்தை உணர்வுபூர்வமானதாக மாற்றிவிட்டது.
எமது கையில் கிடைத்த அந்தத் துண்டுப் பத்திரிகைப் பாகத்தில் அச்சிடப்பட்டிருந்த படம்தான் அதற்குக் காரணம். அந்தப்படத்தில் அப்படியென்ன அதிசயம் என்று நீங்கள் விழிப்பது புரிகிறது. இதோ நீங்களே அதனைப் பாருங்கள்.
<img src='http://www.yarl.com/m_eelam/uploads/vavuniya1.jpg' border='0' alt='user posted image'>
முழுமையாக படிக்க .....[/size]
http://www.yarl.com/m_eelam/article_1006.shtml
|
|
|
| 13905 :இன்னுமொரு "தூக்கு மேடைக்குறிப்பு" |
|
Posted by: மேகநாதன் - 12-24-2005, 08:49 AM - Forum: நூற்றோட்டம்
- Replies (1)
|
 |
<b>13905</b> :<b><i>இன்னுமொரு "தூக்கு மேடைக்குறிப்பு"</i></b>
"நான் அனுபவசாலியான படைப்பாளியோ,தொழில்முறைப் படைப்பாளியோ கிடையாது..
எனது சிறுகதைகளனைத்துமே எனது தாயகத்தில் எங்கோ ஒரு பகுதியில் நிகழ்ந்தவற்றின் பிரதிபலிப்பே.."
என்று "சிலவார்த்தைகள்" இடம்பெற்றிருப்பது "<b>13905"</b>
என்ற நூலில்...
நூலாசிரியர் <b>ம.தி.சாந்தன்</b>...
ராஜிவ் என்ற தனிமனித சாவுக்காக தூக்குத்தண்டணை பெற்ற மூவரிலொருவர்...20 சிறுகதைகளைக் கொண்ட இந் நூலை "<b>அர்ச்சுனா பதிப்பகம்" சூன் 2005</b> இல் வெளியிட்டிருக்கிறது...அண்மையில் இங்கு நூலகத்தில் பார்த்தேன்;படித்தறிந்தேன்...
தலைப்பிட்ட மாதிரி, இது இன்னுமொரு "தூக்குமேடைக் குறிப்பு" ( ஜூலியஸ் பூஸிக்" இனது முனையது)த்தான்....
மிக்க அறிவு முதிர்ச்சியோடு பல கருத்துக்கள்,நிகழ்வுகள் "கதைகள்" ஆக பேசப் படுகின்றன...
நாம் வெளியில் இருந்தும் எவ்வளவு "பின்" நிற்கிறோம் என்பதை நமக்குணர்த்தும் கதைகள்...
கரவெட்டி முதல் நோர்வே என கதைப் பரப்புகள் விரிகின்றன,,,
அலட்டல் இல்லாத அமைதியான, ஆனால் அழமான கருத்துகள் பார்வைகள் சிந்தனைகள் என "13905" மூலம்"ம.தி.சாந்தன்" நமக்கு "இன்னும்" உயர்கிறார்....
அவருக்கு வாழ்த்து சொல்ல எனக்குத் தகுதி இல்லவேஇல்லை...
|
|
|
| அமெரிக்க வல்லாதிக்கத்தின் கொடுரங்கள்.... |
|
Posted by: Danklas - 12-24-2005, 08:43 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (2)
|
 |
சிறுவர்களை படையில் சேர்க்காதே, சிறுவர்களுக்கு பலவந்தமாக பயிற்சிகள் வழங்காதே, சிறுவர்களை துன்புறுத்தாதே என தமிழிர்களின் அரசாங்கத்தை கண்டிக்கும், கண்டித்து அறிக்கை விடும் அமெரிக்கா வல்லாதிக்கம், ஈராக்கில் செய்யும் கொடுரத்தை தட்டிக்கேக்க எவனுக்குமே துணிவு இல்லையா? என்ன கொடுரத்தை அமெரிக்கா நர பலி இராணுவம்செய்து கொண்டு இருக்கிறது ஈராக்கில்? :evil: :evil:
இதை பாருங்கள்.... http://www.aztlan.net/iraqichildrenhorror.htm
தன்னுடைய நாட்டில் 3000 பேரை கொன்றுவிட்டதாக கூறி ஈராக்கில் எத்தனை ஆயிரம் சிறுவர்கள், குழந்தைகள், மக்களை தினம் தினம் கொன்றழித்துக்கொண்டு இருக்கிறார்கள்? :evil: :evil:
ஈராக் மக்களுக்குள் ஒற்றுமை இல்லையா? ஈழத்திலே நடந்துகொண்டு இருப்பது போல இராணுவத்தின் மேல் தாக்குதலை மேற்கொண்டு பேய்களை விரட்டி அடிக்க துணிவு இல்லையா? :evil: :evil:
|
|
|
|