| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 471 online users. » 0 Member(s) | 469 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,297
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,623
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| மார்பு மூலம் ஓவியம் வரையும் பெண் |
|
Posted by: Vaanampaadi - 01-08-2006, 04:16 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
மார்பு மூலம் ஓவியம் வரையும் பெண்
ஆஸ்திரேலியாவில் டாஸ் மானியா என்ற இடத்தைச் சேர்ந்தவர் டி பீல். 2 குழந்தைகளுக்கு தாயான இவர், தனது மார்பையே பிரஷ் போல பயன்படுத்தி ஓவியங்களை வரைகிறார்.மார்பில் பெயிண்ட் பூசிக் கொண்டு, அதைக்கொண்டு ஓவியம் வரைந்து அதில் மார்பைக் கொண்டே '' கையெழுத்தும் '' போடுகிறார்.
இவர் தனது ஓவியத்தை ரூ.300 முதல் ரூ.700 வரை விற்பனை செய்கிறார்.ஓவியம் வரைவதற்காக ஒவ்வொரு முறையும் வண்ணங்களை மாற்றும் போதெல்லாம் ஷவரில் நின்று குளிப்பது தான் சற்று சிரமமாக இருக்கிறது என்கிறார், டி பீல்.
Dailythanthi
|
|
|
| நாய்களுக்காக தனி பேக்கரி |
|
Posted by: Vaanampaadi - 01-08-2006, 04:15 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (15)
|
 |
நாய்களுக்காக தனி பேக்கரி
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாய்களுக்காக தனி பேக்கரி ஒன்று திறக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஹரியத் ஸ்டெர்ன்ஸ்டீன் இந்த பேக்கரியை தொடங்கி இருக்கிறார்.
அங்கு நாய்களுக்காக வெவ்வேறு நறுமணத்துடன் கூடிய பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.சிலர் தங்கள் செல்ல நாயை கடைக்கே அழைத்து வந்து அது விரும்பும் வாசனை உள்ள பிஸ்கெட்டை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.சில வகை பிஸ்கெட்டுகள் பூனை மற்றும் நாய்களுக்கு பிடித்த 'எலும்பு' வடிவங்களில் தயாரிக்கப்பட்டு உள்ளன.
முதலில் அனைவரும் வேடிக்கையாக பார்த்துச் சென்றதாகவும், இப்போது சகஜமாக தங்கள் செல்லப்பிராணிகளை அங்கு அழைத்துச் சென்று 'ஷாப்பிங்' செய்வது வாடிக்கையாகி விட்டதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
Dailythanthi
|
|
|
| பூகம்பம் ஏற்பட்டாலும் இடிந்து விழாத கட்டிடம் |
|
Posted by: Vaanampaadi - 01-08-2006, 04:15 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
பூகம்பம் ஏற்பட்டாலும் இடிந்து விழாத கட்டிடம்
பூகம்பம் ஏற்பட்டு கட்டி டங்கள் இடிந்து விழுவதும், ஏராளமானோர் உயிர் இழப்ப தும் இப்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகி வருகின் றன.
நில நடுக்கம் மற்றும் சுனாமி ஆபத்து ஏற்படுவதை முன் கூட்டியே கண்டு பிடித்து எச்சரிககை விடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகத்தை சேர்ந்த ஒரு நிபுணர் புதிய வீடு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த வீடு 6 அல்லது 7 ரிக்டர் அளவு வரை நில நடுக்கம் ஏற்பட்டாலும் இடிந்து விழா மல் அப்படியே நிற்கும். கான்கிரிட் சுவர் மற்றும் துண்களுக்கு இடையே பிளாஸ்டிக் பலகைகள், பிளாஸ்டிக் வலைகள் ஆகிய வற்றை வைத்து இந்த புதிய வகை வீட்டை உருவாக்கி இருக்கிறார்.
இந்த கட்டிடம் உறுதியாக நிலைத்து நிற்பதை நிரூபித்து காட்ட செயற்கையாக நில அதிர்வுகளும் நிருபர்கள் கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன.
Maalaimalar
|
|
|
| விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: |
|
Posted by: Vaanampaadi - 01-08-2006, 04:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: ராமேசுவரத்தில் கடற்படை ரோந்து தீவிரம் </b>
ராமேசுவரம், ஜன. 8-
இலங்கையில் விடுதலைப்புலிகள் தமிழ் ஈழம் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனால் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே நார்வே நாடு சமரச முயற்சியை மேற்கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வர முயன்றது. ஆனாலும் விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவத்தினர் இடையே அவ்வப்போது சண்டைகள் நடைபெற்று வருகிறது.
தற்போது இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு ராணுவத் தினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை திரிகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இலங்கை போர் கப்பல் மூழ்கடிக்கப்பட்டு கடற் படை வீரர்கள் 15 பேர் பலி யானார்கள்.
அதனை தொடர்ந்து இலங் கையில் எந்த நேரத்திலும் மீண்டும் போர் மூளும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்குள்ள தமிழர்கள் குடும்பம், குடும்பமாக பாது காப்பான இடங்களுக்கு வெளி யேறுகிறார்கள்.
அதோடு ஒரு பகுதியினர் கள்ளத்தனமாக படகுகளில் ஏறி தமிழக பகுதிக்கு வர முயற்சிக்கின்றனர். ஆனாலும் இதனை கண்காணிக்கும் இலங்கை கடற்படையினர் தமிழர்களை தடுத்து நிறுத்தி வருவதால் அவர்கள் எங்கு செல்வது என தவியாய் தவித்து உள்ளனர்.
என்றாலும் இலங்கை தமி ழர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ராமேசுவரம் பகுதியில் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுளளது.
ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய கடலோர பகுதிகளில் கடலோர காவல் படையினரும், உள்ளூர் போலீஸ்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் கள் விடிய, விடிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு சந்தேகப்படும் நபர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண் டுள்ளனர். மேலும் கடற்படைக்கு சொந்தமான ஹெலி காப்டர்களும் தாழ்வாக பறந்து வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.
மேலும் ராமேசுவரம் பகு திக்கு வெளிபகுதி மக்கள் யாராவது வருகிறார்களாப என்பது குறித்தும் கடற்படையினர் உஷார் நிலையில் கண் காணித்து வருகின்றனர்.
இதனிடையே ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந் திரன் உத்தரவின்பேரில் ராமேசுவரம் டி.எஸ்.பி. பால சுப்பிரமணியன் தலைமையில் மீனவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந் தது.
அப்போது போலீசார் மீனவர்களிடம், "யாராவது சந்தேகப்படும்படி நபர்கள் தங்கி இருந்தாலோ, அல்லது வந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரி விக்க வேண்டும் என்று அறி வுரை வழங்கினர்''
மேலும் இலங்கையில் தொடர்ந்து பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளதால் இந்திய எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீனவர்களை கடற்படையினர் எச்சரித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் தாக்குதல் எதி ரொலியாக ராமேசுவரத்தில் போலீ சாரும், கடற்படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக் கப்பட்டு உள்ளது.
Maalaimalar
|
|
|
| தமிழ் சினிமா 2005 |
|
Posted by: நர்மதா - 01-08-2006, 03:21 PM - Forum: சினிமா
- Replies (7)
|
 |
தமிழ் சினிமா 2005: ஒரு பார்வை சந்திரமுகி 300வது நாளை நோக்கி ஓடி கொண்டிருக்கிறது மன்மதன் 225 நாள்.....
தமிழ் சினிமாவுக்கு 2005ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டு என்றே சொல்லலாம். புதுப்புது நடிகர்கள்இ நடிகைகள்இ இயக்குனர்கள் என இளமைப் பட்டாளம் புகுந்து புதிய கதைகள் மூலம் சினிமாவை புதிய பாதைக்குக் கொண்டு போயின.
ரஜினியின் சந்திரமுகி பல ரெக்கார்டுகளை பிரேக் செய்து வசூலைக் கொட்டித் தீர்த்துவிட்டது. யாரும் எதிர்பாராத வகையில் காதல் பெரும் வெற்றி பெற்றது. மன்மதன் பெரும் சாதனை படைத்தது. அந்நியன் சினிமாவைப் புரட்டிப் போட்டது.
2005ம் ஆண்டில் தமிழ் திரையுலகின் முக்கிய புள்ளி விவரங்கள்:
தமிழில் இந்த ஆண்டில் மொத்தம் 126 படங்கள் வெளியாயின. இதில் நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 100இ டப்பிங் படங்கள் 26. இதில் பெரும்பாலானவை ஆங்கிலம்இ தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டவை.
அதிக படங்களில் நடித்தவர்கள்:
இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த ஹீரோ சத்யராஜ் தான். கதாநாயகனாக 6 படங்களில் நடித்துள்ளார். அடுத்த 2 வருடத்துக்கு இவரது கால்ஷீட் புல் ஆக இருக்கிறதாம். ஒன்றரை மாதத்துக்கு ஒரு படம் என்ற ரேஞ்சில் வரும் ஆண்டில் நடிக்கப் போகிறாராம்.
ஆசின், நமீதா:
அதே போல அதிகமான பட ஹீரோயின்கள் இரண்டு பேர். ஒருவர் ஆசின். இந்த ஆண்டில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். அடுத்து அதிகப் படங்களில் நடித்தவர் நமிதா தான். இருவருமே தலா 4 படங்களில் நடித்துள்ளனர்.
இந்த ஆண்டில் மிக அதிகமான படங்களில் நகைச்சுவை வேடம் செய்தவர் வடிவேலு. அவர் நடித்து வெளியான மொத்தப் படங்கள் 28. ஒரு படத்துக்கு ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வடிவேலுக்கு கால்ஷீட் தர நேரம் இல்லை. இதனால் ஒரு நாளைக்கு இவ்வளவுஇ ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என்ற ரேஞ்சுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆண்டில் அதிகப் படங்களைத் தயாரித்தவர் கலைப்புலி எஸ். தாணு. மொத்தம் 3 படங்களை வெளியிட்டார்.
அதிக படங்களை இயக்கியவர் 'கற்பு' குஷ்புவின் கணவரான சுந்தர். இயக்கியது 3 படங்கள்.
அதிகமான படங்களுக்கு இசை அமைத்தவர் தேவாவே தான். மொத்தம் 8 படங்கள். அதிக பாடல்களை எழுதியவர் கவிஞர் பா. விஜய். மொத்தம் 42 பாடல்கள்.
அதிக பாடல்களைப் பாடியவர்கள் பாடகர் கார்த்திக்கும்இ பாடகி அனுராதா ஸ்ரீராமும். கார்த்திக் 30 பாடல்களைப் பாடியுள்ளார். அனுராதா 23 பின்னணிப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
அதிகமா படங்களுக்கு நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர். மொத்தம் 22 படங்கள்.
அதே போல அதிகமான படங்களுக்கு (மொத்தம் 14) சண்டைக் காட்சிகளை அமைத்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன்.
ஜூப்ளி படங்கள்:
சந்திரமுகி 300வது நாளை நோக்கி ஓடி கொண்டிருக்கிறது
மன்மதன் 225 நாள்
திருப்பாச்சிஇ சச்சின் 200 நாள்
மதுர150 நாள்
அறிந்தும் அறியாமலும்141 நாள்
அந்நியன்125 நாள்
காதல் 122 நாள்
100 நாள் ஓடிய படங்கள்:
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி
7ஜி ரெயின்போ காலனி
இங்கிலீஷ்காரன்
கனா கண்டேன்
உள்ளம் கேட்குமே
ஏய்
ராம்
ஐயா
இந்த ஆண்டில் தான் இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, நடிகர் கமலஹாசன், இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, குமாரி கலா ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றனர்.
vaddakkachchi
|
|
|
| போர் நிறுத்தம் முறிந்து விட்டதா? |
|
Posted by: Vaanampaadi - 01-08-2006, 03:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>போர் நிறுத்தம் முறிந்து விட்டதா?</b>
* சொல்ஹெய்மின் வருகைக்கு முன் எறியப்படவுள்ள குண்டுகளும் தொடரப் போகும் அச்சமும்!
போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதா? போர் தொடங்கி விட்டதாகக் கருதப்படுவதால் போர்நிறுத்த உடன்பாடு குறித்து எவரும் சிந்திக்கப்போவதில்லை. அண்மைக் காலமாக நடைபெற்று வந்த சம்பவங்களெல்லாம் இந்த உடன்பாட்டை முற்று முழுதாகக் கேள்விக் குறியாக்கி வந்த நிலையில் தற்போது இந்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
இதன் உச்சக் கட்டமாக, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலும் நேற்று அதிகாலை திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு வெளியே அதிவேக டோரா படகொன்று அழிக்கப்பட்ட தாக்குதலும் அமைந்துள்ளது.
கிழக்கில் ஆரம்பமான நிழல் யுத்தம் நிஜ யுத்தமாக மாறப்போகின்றதென எச்சரிக்கப்பட்டு வந்த போதெல்லாம் அது பற்றி அரசு தரப்பு அலட்டிக்கொள்ளவில்லை. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட நிழல் யுத்தம் புலிகளை வலுவிழக்கச் செய்துவிட்டதாகக் கருதியோர் அந்த நிழல் யுத்தத்தை வடக்கிலும் மேற்கொள்ள முயன்றதன் விளைவே இன்றைய நிலைமை.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, குறிப்பாக புதிய ஜனாதிபதியின் பதவியேற்பும் புதிய இராணுவத் தளபதியின் நியமனமும் இவ்வாறானதொரு நிலைமையை தோற்றுவித்துவிட்டது.
யுத்தநிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதாயின் சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு முன்னர் 14 நாள் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டுமென்றெல்லாம் உடன்பாட்டில் கூறப்பட்டுள்ள போதிலும் எந்த முன்னறிவித்தலுமின்றி எல்லாமே முடிந்துவிட்டது.
போர்நிறுத்த உடன்பாடே அமுல்படுத்தப்படாத நிலையில் அந்த உடன்பாட்டிலிருந்து விலகுவதற்கு எவர் 14 நாள் முன்னறிவித்தல் கொடுக்கப் போகின்றனர்? இதுவே இன்று பெரும் யுத்தம் வெடிக்கப்போவதற்கான முன்னறிவித்தலாகிவிட்டது.
வடக்கு - கிழக்கில் கடந்த சில வாரங்களாக அப்பாவித் தமிழ் மக்கள் படையினரால் இலக்கு வைத்து தாக்கப்பட்டனர். பொது மக்கள் மற்றும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டபோது போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கைகட்டிப் பார்த்திருந்தது. பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் பேரணியை படையினர் காட்டுமிராண்டித்தனமாக அடக்கியபோது கண்காணிப்புக் குழுவினர் மௌனம் சாதித்தனர்.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மிலேச்சத்தனமாக படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போது எவருமே வாய் திறக்கவில்லை. இந்த நிலைமைகள் தான் இன்று போர்நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டுவரக் காரணமாகிவிட்டன. இனி கண்காணிப்புக் குழு என்ன செய்யப் போகிறது?
போர் நிறுத்த உடன்பாடு, மக்களின் இயல்பு வாழ்க்கையை கருதிச் செய்யப்பட்டது. ஆனால், அந்த உடன்படிக்கை அமுலிலிருக்கையில், கண்காணிப்புக் குழு பார்த்துக் கொண்டிருக்கையில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படையினரின் தாக்குதல்களால் படுகாயமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர்.
வடக்கு - கிழக்கில் அண்மைக்காலமாக நடைபெற்ற தாக்குதலில் புலி உறுப்பினர் எவரும் கொல்லப்படவில்லை. கொல்லப்பட்டவர்களெல்லாம் அப்பாவி மக்களே. ஆனாலும், யாழ் நகரில் கோட்டை அருகே ஐவர் கொல்லப்பட்ட போது அவர்களைப் புலிகளென்றனர். திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட போது அவர்களையும் புலிகளென்றனர்.
எந்த உடன்பாடு தங்களுக்கு பாதுகாப்பாயிருக்குமென்று மக்கள் கருதினார்களோ அந்த உடன்பாடே அவர்களுக்கு எமனாகிவிட்டது. புலிகள் தான் படையினரைத் தாக்குகிறார்களென்றால், படையினர் புலிகளுடன் மோத வேண்டும். ஆனால், அண்மைக் காலத்தில் கொல்லப்பட்ட 40 அப்பாவி மக்களில் ஒரு புலியையாவது இவர்களால் காண்பிக்க முடியுமா என மக்கள் கேட்கின்றனர்.
திருகோணமலையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற படுகொலை தான், இனிமேல் போர்நிறுத்தமே வேண்டாமென தமிழ் மக்களை குரலெழுப்ப வைத்தது. திட்டமிட்ட ரீதியில் இந்தப் படுகொலை நடைபெற்றுள்ளது. திட்டமிட்டு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு அதன் பின் படுகொலைத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களையும் புலிகளென்று இராணுவம் அறிவித்தது. படையினரைத் தாக்கும் நோக்குடன் கைக்குண்டுகளுடன் வந்த புலிகளே, அதில் இரண்டு வெடித்ததில் உயிரிழந்ததாகக் கூறினர். இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இதனைக் கூறியிருந்தார்.
எனினும், இந்த ஐவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக மருத்துவ அறிக்கை கூறியபோது, படையினரைத் தாக்க வந்த புலிகள் படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த முற்பட்டபோது, சுட்டுக்கொல்லப்பட்டதாக பின்னர் இராணுவம் கூறியது. ஆனாலும், இதற்கும் படையினருக்கும் எதுவித தொடர்புமில்லையெனவும் படைத்தரப்பு கூறியது.
இதன் மூலம், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு வீச்சும் அதன் பின்னர் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதும், திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களென நிரூபணமாகிறது. படையினரின் பொய்ப் பிரசாரத்தை, மருத்துவ அறிக்கையும் வீதியிலிருந்த துப்பாக்கிச் சூட்டு அடையாளமும் அம்பலப்படுத்தியது.
அந்த ஐவரும் வைத்திருந்த கைக்குண்டுகள் தான் வெடித்து அவர்கள் உயிரிழந்தனரென்றால் அவர்களது மரணங்களுக்கு துப்பாக்கிச் சூடுகள் எவ்வாறு காரணமாயின? அப்படியானால் அவர்களை யாரோ சுட்டிருக்க வேண்டும்.
மருத்துவ அறிக்கை, இந்தச் சம்பவத்துடன் படையினருக்கு தொடர்பிருப்பதை உறுதிப்படுத்திவிட்டது. ஆனாலும், இதனுடன் தங்களுக்கு எதுவித தொடர்புமில்லையெனப் படையினர் கூறியது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகிவிட்டது.
இதற்கும் படையினருக்கும் தொடர்பில்லையென்றால், அவர்கள் வைத்திருந்த குண்டுதான் வெடித்து அவர்கள் இறந்ததாகவும், பின்னர் படையினர் மீது கைக்குண்டை வீச முற்பட்டபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் எவ்வாறு படையினரால் கூறமுடியும்.
ஆனால், திருகோணமலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்தப் படுகொலையின் தொடர்ச்சியே நேற்று அதிகாலை திருமலை கடற்படைத் தளத்திற்கு வெளியே இடம்பெற்ற டோரா படகு மீதான தாக்குதலாகும்.
மட்டக்களப்பு, அம்பாறையில் கருணா குழுவின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிழல் யுத்தம் தங்களுக்கு வெற்றியளித்து வருவதாக படைத்தரப்பு கருதுகிறது. இதன் தொடர்ச்சியாக வடக்கிலும் நிழல் யுத்தம் ஆரம்பமானது. பொது மக்கள் கொல்லப்பட்டனர். ஆழ ஊடுருவும் படையணியும் தனது கைவரிசையை காட்டத்தொடங்கிய நிலையில் திருமலையிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த மாணவர் மீதான படுகொலை மேற்கொள்ளப்பட்டது.
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையும், புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க முற்படுவதும் இனவாதிகளுக்கு பெரும் வாய்ப்பாகிவிட்டது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் புலிகளால் எவ்வித தாக்குதலையும் தொடுக்க முடியாதென்ற கணிப்பில் வடக்கு - கிழக்கில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி அதன்மூலம் மக்களை அச்சுறுத்தி புலிகள் பக்கமிருந்து அவர்களை பிரித்துவிடலாமெனத் தப்புக் கணக்கு போடப்பட்டுள்ளது.
குடாநாட்டில் முன்பெல்லாம் படையினரின் வாகனம் மோதி எவராவது காயமடைந்தால் கூட கொந்தளிக்கும் மக்கள், இன்று எத்தனையோ அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டும் பேசாதிருக்கின்றனர். ஆறுமணியுடன் யாழ். குடாநாடே முடங்கிவிடுகிறது. எதனைப் பற்றியும் எவருமே பேசுவதில்லை.
போர் நடைபெற்ற காலத்தில் கூட இருந்திராத அளவிற்கு இன்று வடக்கு - கிழக்கு மக்கள் மாலை 6 மணியுடன் வீடுகளுக்குள் முடங்கிவிடுகின்றனர். அவசர நோயாளர்களைக் கூட இரவில் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம், புலிகளின் நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் மக்களின் ஆதரவை இல்லாது செய்துவிடலாமென படைத்தரப்பும் அரசும் கருதுவது போல் தெரிகிறது. அச்சமூட்டி தமிழர்களை அடக்கிவிடலாமென்ற ரீதியில் உளவியல் போர் தொடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சமூகத்தின் மூலம் புலிகளுக்கு கடும் அழுத்தங்களை கொடுத்தவாறு இந்த உளவியல் போரை முன்னெடுப்பதே புதிய அரசினதும் புதிய இராணுவத் தளபதியினதும் திட்டமென தமிழ் தரப்புகள் கடும் குற்றஞ்சாட்டுகின்றன. எனினும், இந்த அச்சமூட்டும் உளவியல் போரை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப் போகின்றார்களென்பதையே திருகோணமலையில் மாணவர்கள் மீதான படுகொலை உணர்த்தியது.
இந்தச் சூழ்நிலையில் தான் புலிகளின் கடும் எச்சரிக்கை வெளியானது. மக்களைப் படையினர் படுகொலை செய்வதை இனியும் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லையென புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அறிவித்தார். மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்தார்.
ஆனாலும், படையினர் மீது பொது மக்கள் தாக்கினாலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்துமாறு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடும் உத்தரவு பிறப்பித்த மறுநாளே, படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறி ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இவையெல்லாவற்றுக்குமான உச்சபட்ச தாக்குதலே நேற்று அதிகாலை திருகோணமலையில் டோரா மீது மேற்கொள்ளப்பட்டதாகும். கடற் கரும்புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கடற்படையினர் கூறுகின்றனர். கிளேமோர் தாக்குதல்களின் அடுத்த கட்டத் தாக்குதல் இதுவாகும்.
எதிர்வரும் 23 ஆம் திகதி நோர்வேயின் விஷேட பிரதிநிதியும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். அவரையும் நோர்வேயையும் சமாதான முயற்சியிலிருந்து அப்புறப்படுத்துவதில் புதிய ஜனாதிபதி மிகத் தீவிரம் காட்டியதால் அவரும் கடும் அழுத்தங்களின் மத்தியிலேயே இங்கு வருகிறார். அவர் கூட அரசியன் உளவியல் போரில் சிக்குண்டுள்ளார்.
புதிய அரசு பதவியேற்ற பின்னர் நோர்வே மேற்கொள்ளும் முதலாவது அனுசரணைப் பணி இதுவாகும். அதற்கு முன்னர் தமிழ் மக்களையும் புலிகளையும் மிரட்டி அச்சுறுத்தும் வகையிலேயே தற்போதைய கடும் நடவடிக்கைகளில் படைத்தரப்பு இறங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனாலும், அதற்கு முன்னர் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாய தேவை புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சொல்ஹெய்ம் இங்கு வந்ததும், ஒஸ்லோவில் கூட போர்நிறுத்த உடன்பாடு குறித்துப் பேச தாங்கள் தயாரென அரசு அறிவித்துவிட்டால், அதன் பின் எறியப்படும் ஒவ்வொரு கைக்குண்டையும், சமாதான முயற்சியை குழப்ப புலிகள் முயல்வதாக சுலபமாகக் கூறிவிடலாம். அவ்வாறானதொரு நிலையில் புலிகளால் எதுவுமே செய்ய முடியாது போய்விடும். சமாதான முயற்சிக்கு அரசு உடன்பட்ட நிலையில் அதனைக் குழப்பவே புலிகள் தாக்குதல் நடத்துவதாக வெளியுலகும் கண்டிக்கும்.
சொல்ஹெய்மின் வருகைக்கு முன், எப்படித் தங்களை வலுவுள்ளவர்களாகக் காட்ட முடியுமோ அந்தளவிற்கு அச்சமூட்டும் உளவியல் போரை நடத்துவதில் படைத்தரப்பு தீவிரம் காட்டுவது போல் தென்படுகிறது.
அதனால் தான் சொல்ஹெய்மின் வருகைக்கு முன்னர் புலிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது. அதன் ஒரு கட்டமே நேற்றைய டோரா மீதான தாக்குதலென பலரும் கருதுவதால் செல்ஹெய்மின் வருகைக்கு முன்னர் மேலும் அசம்பாவிதங்கள் நிகழக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், சொல்ஹெய்மின் வருகைக்கு முன்பே முழு அளவில் போர் வெடித்து விடலாமென்ற அச்சமும் எழுந்துள்ளது. அதற்கேற்பவே தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.டோரா மீதான தாக்குதல் குறித்து இன்னமும் சரியான விபரங்கள் வெளியாகவில்லை.
இது தற்கொலைத் தாக்குதல்தானென்றால் அவ்வாறானதொரு தாக்குதலை மேற்கொள்ளுமளவிற்கு நிலைமை சென்றுவிட்டதால் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது கடினம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மௌனம், தற்போதைய நிலைமைகளுக்கு அவரது ஆசியும் உண்டெனக் கருத வைக்கிறது. நிலைமையின் பாரதூரத்தை அவர் இதுவரை உணர்ந்து கொள்ளவில்லையென்பதும் தெளிவாகிறது.
இந்தச் சூழ்நிலையில் பெரும் போர் வெடிக்காவிட்டாலும் அரசினதோ அல்லது சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கோ புலிகள் இனிப் பணிந்து போகும் சாத்தியமில்லையென்பது தெளிவு. முன்பெல்லாம் யுத்தநிறுத்தம் முறிந்து போனபோது அதற்கு புலிகள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. ஆனால், இம்முறை புலிகள் மீது வலுக்கட்டாயமாக யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் மௌனம் குறித்து தமிழ் மக்கள் கேள்வியெழுப்பத் தொடங்கிய நிலையில் திருமலையில் டோரா மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது தொடரும் சாத்தியமும் தென்படுகிறது. வடக்கு - கிழக்கில் யுத்த நிறுத்தம் அமுலிலுள்ள போதே தமிழர்கள் படுகொலை செய்யப்படுகையில் அந்த யுத்தநிறுத்தத்தைப் பயன்படுத்தி தெற்கிலிருந்து இனியும் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்க முடியாதென்பது தெளிவாகிவிட்டது.
நோர்வேயின் அனுசரணை முயற்சி இனியும் பயனளிக்கும் சாத்தியம் தெரியவில்லை. காலத்தை கடத்தும் முயற்சியே இந்த சமாதானப் பேச்சுவார்த்தையும் போர்நிறுத்தமும் என்பதை தமிழர்கள் உணர்ந்துவிட்டனர். இதையே, மாவீரர் தின உரையிலும் புலிகளின் தலைவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவர் கூறியதுபோல், மகிந்தவின் அரசிற்கான காலக்கெடு முடிந்து தாயக விடுதலைக்கான போராட்டத்தை தமிழர்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டதாகவே தெரிகிறது.
பொன்சேகா கடும் உத்தரவு பிறப்பித்த மறுநாளே, படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறி ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இவையெல்லாவற்றுக்குமான உச்சபட்ச தாக்குதலே நேற்று அதிகாலை திருகோணமலையில் டோரா மீது மேற்கொள்ளப்பட்டதாகும். கடற் கரும்புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கடற்படையினர் கூறுகின்றனர். கிளேமோர் தாக்குதல்களின் அடுத்த கட்டத் தாக்குதல் இதுவாகும்.
எதிர்வரும் 23 ஆம் திகதி நோர்வேயின் விஷேட பிரதிநிதியும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். அவரையும் நோர்வேயையும் சமாதான முயற்சியிலிருந்து அப்புறப்படுத்துவதில் புதிய ஜனாதிபதி மிகத் தீவிரம் காட்டியதால் அவரும் கடும் அழுத்தங்களின் மத்தியிலேயே இங்கு வருகிறார். அவர் கூட அரசியன் உளவியல் போரில் சிக்குண்டுள்ளார்.
புதிய அரசு பதவியேற்ற பின்னர் நோர்வே மேற்கொள்ளும் முதலாவது அனுசரணைப் பணி இதுவாகும். அதற்கு முன்னர் தமிழ் மக்களையும் புலிகளையும் மிரட்டி அச்சுறுத்தும் வகையிலேயே தற்போதைய கடும் நடவடிக்கைகளில் படைத்தரப்பு இறங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனாலும், அதற்கு முன்னர் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாய தேவை புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சொல்ஹெய்ம் இங்கு வந்ததும், ஒஸ்லோவில் கூட போர்நிறுத்த உடன்பாடு குறித்துப் பேச தாங்கள் தயாரென அரசு அறிவித்துவிட்டால், அதன் பின் எறியப்படும் ஒவ்வொரு கைக்குண்டையும், சமாதான முயற்சியை குழப்ப புலிகள் முயல்வதாக சுலபமாகக் கூறிவிடலாம். அவ்வாறானதொரு நிலையில் புலிகளால் எதுவுமே செய்ய முடியாது போய்விடும். சமாதான முயற்சிக்கு அரசு உடன்பட்ட நிலையில் அதனைக் குழப்பவே புலிகள் தாக்குதல் நடத்துவதாக வெளியுலகும் கண்டிக்கும்.
சொல்ஹெய்மின் வருகைக்கு முன், எப்படித் தங்களை வலுவுள்ளவர்களாகக் காட்ட முடியுமோ அந்தளவிற்கு அச்சமூட்டும் உளவியல் போரை நடத்துவதில் படைத்தரப்பு தீவிரம் காட்டுவது போல் தென்படுகிறது.
அதனால் தான் சொல்ஹெய்மின் வருகைக்கு முன்னர் புலிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது. அதன் ஒரு கட்டமே நேற்றைய டோரா மீதான தாக்குதலென பலரும் கருதுவதால் செல்ஹெய்மின் வருகைக்கு முன்னர் மேலும் அசம்பாவிதங்கள் நிகழக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், சொல்ஹெய்மின் வருகைக்கு முன்பே முழு அளவில் போர் வெடித்து விடலாமென்ற அச்சமும் எழுந்துள்ளது. அதற்கேற்பவே தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.டோரா மீதான தாக்குதல் குறித்து இன்னமும் சரியான விபரங்கள் வெளியாகவில்லை.
இது தற்கொலைத் தாக்குதல்தானென்றால் அவ்வாறானதொரு தாக்குதலை மேற்கொள்ளுமளவிற்கு நிலைமை சென்றுவிட்டதால் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது கடினம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மௌனம், தற்போதைய நிலைமைகளுக்கு அவரது ஆசியும் உண்டெனக் கருத வைக்கிறது. நிலைமையின் பாரதூரத்தை அவர் இதுவரை உணர்ந்து கொள்ளவில்லையென்பதும் தெளிவாகிறது.
இந்தச் சூழ்நிலையில் பெரும் போர் வெடிக்காவிட்டாலும் அரசினதோ அல்லது சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கோ புலிகள் இனிப் பணிந்து போகும் சாத்தியமில்லையென்பது தெளிவு. முன்பெல்லாம் யுத்தநிறுத்தம் முறிந்து போனபோது அதற்கு புலிகள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. ஆனால், இம்முறை புலிகள் மீது வலுக்கட்டாயமாக யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் மௌனம் குறித்து தமிழ் மக்கள் கேள்வியெழுப்பத் தொடங்கிய நிலையில் திருமலையில் டோரா மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது தொடரும் சாத்தியமும் தென்படுகிறது. வடக்கு - கிழக்கில் யுத்த நிறுத்தம் அமுலிலுள்ள போதே தமிழர்கள் படுகொலை செய்யப்படுகையில் அந்த யுத்தநிறுத்தத்தைப் பயன்படுத்தி தெற்கிலிருந்து இனியும் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்க முடியாதென்பது தெளிவாகிவிட்டது.
நோர்வேயின் அனுசரணை முயற்சி இனியும் பயனளிக்கும் சாத்தியம் தெரியவில்லை. காலத்தை கடத்தும் முயற்சியே இந்த சமாதானப் பேச்சுவார்த்தையும் போர்நிறுத்தமும் என்பதை தமிழர்கள் உணர்ந்துவிட்டனர். இதையே, மாவீரர் தின உரையிலும் புலிகளின் தலைவர் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவர் கூறியதுபோல், மகிந்தவின் அரசிற்கான காலக்கெடு முடிந்து தாயக விடுதலைக்கான போராட்டத்தை தமிழர்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டதாகவே தெரிகிறது.
http://www.thinakural.com/New%20web%20site...08/vithuran.htm
|
|
|
| பூக்கள் |
|
Posted by: sooriyamuhi - 01-08-2006, 03:05 PM - Forum: புலம்
- Replies (2)
|
 |
<img src='http://img219.imageshack.us/img219/2136/pokcanada18hj.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| Jaya writes to PM on Lankan Navy attack on Indian fishermen |
|
Posted by: cannon - 01-08-2006, 03:04 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
Jaya writes to PM on Lankan Navy attack on Indian fishermen
Source: UNI - January 8, 2006
Tamil Nadu Chief Minister J Jayalalithaa today urged the Centre to take the Katchatheevu Island on lease in perpetuity to solve the problem of frequent attacks on Indian fishermen by the Sri Lankan Navy.
In a letter to Prime Minister Manmohan Singh, a copy of which was released to the press here, Ms Jayalalithaa referred to the firing on Indian fishermen by Sri Lankan Navy early this morning and asked him to take up the issue of ''indiscriminate attack on poor fishermen belonging to Tamil Nadu on high seas with the Government of Sri Lanka and register a strong protest against this inhuman act perpetuated by the Sri Lankan Navy.'' Referring to the incident which took place at around 0300 hrs near the Katchatheevu, the Chief Minister said while three fishermen escaped, one sustained bullet injuries and was undergoing treatment at the Government Hospital at Rameswaram. Even their catch was seized.
Ms Jayalalithaa said she had been repeatedly drawing the Centre's attention to such attacks seeking protection of the traditional rights and privileges of Indian fishermen to carry on their normal occupation of fishing in these waters 'which must be recognised early and a suitable working arrangement devised.' The Chief Minister said she had been repeatedly emphasising on the Government to find a long term and lasting solution to the ''burning issue of violence against poor fishermen belonging to Tamil Nadu taking place in the Palk Bay Region'' and asked the Government to address the issue without any delay.
http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3733&SID=530
|
|
|
| ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன த |
|
Posted by: Vaanampaadi - 01-08-2006, 03:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன தமிழகக் கட்சிகள்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவிப்பு
ஈழத்தமிழர் போராட்டம் புதுவடிவம் எடுத்திருக்கின்ற இந்நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகி வருகின்றோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுடனான சந்திப்பின்போதே டாக்டர் ராமதாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் போராட்டத்தில் அக்கறை கொண்டுள்ள தமிழக அமைப்புகள் மட்டுமல்லாது, முழு இந்தியாவிலும் உள்ள சகல அமைப்புகளையும் அணிதிரட்ட வேண்டிய கட்டாயத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
இலங்கை இனப்பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு என்ற எல்லை கோட்டுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அது இந்திய வம்சாவளி தமிழர்களின் எதிர்காலத்தையும் உள்ளடக்கியதே என்பதை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மலையகத்தில் பிரதான அரசியல் அமைப்புகளான மலையக மக்கள் முன்னணியும், இ.தொ.கா.வும் புரிந்துணர்வோடு ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு அமைப்புகளோடு கைகோர்க்க முன்வந்திருப்பது நல்ல ஒரு அடையாளம் மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும் ஆகும்.
பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பம் முதலே இலங்கை விவகாரத்தில் தனது அக்கறையை ஒளிவு மறைவின்றி துணிச்சலாக வெளிப்படுத்தி வந்துள்ளது. தற்போது தமிழக அமைப்புகள் பலவும் மீண்டும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்ற வரலாற்று கடமை எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிடாமல் இருக்கவும் முடியாது. அதேநேரம் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கியோ, பயிற்சி அளித்தோ நிலைமையை மேலும் சிக்கலாக்கவும் கூடாது என்பதை இந்திய அரசுக்கு இடித்துரைக்க நாங்கள் உறுதியுடன் இருக்கின்றோம்.
இலங்கை இனவாத அரசியல்வாதிகளின் கபட நாடகத்தை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பை உணர்ந்து நாங்கள் செயற்படுவோம் எனவும் அக்கலந்துரையாடலில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
இக்கலந்துரையாடலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜீ.கே.மணி எம்.பி., ஏ.கே.மூர்த்தி எம்.பி., மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
http://www.thinakural.com/New%20web%20site...y/08/news-3.htm
|
|
|
| தகப்பனுக்கும் மகளுக்கும் வாள்வெட்டு |
|
Posted by: Vaanampaadi - 01-08-2006, 03:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>தகப்பனுக்கும் மகளுக்கும் சாவகச்சேரியில் வாள்வெட்டு</b>
சாவகச்சேரியில் நேற்று சனிக்கிழமை தகப்பனும் மகளும் வாள் வெட்டுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சாவகச்சேரி தபாற் கந்தோர் வீதியில் உள்ள பொலிசன் கப்பலோட்டிய தமிழன் (வயது 47) அவரது மகள் செல்வி க.பிறேமிளா (வயது 18) ஆகிய இருவருமே தலையில் வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் எடுத்து வரப்பட்டுள்ளார்கள்.
மனைவி க.சந்திரமதி அடி காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நண்பகல் 2 மணியளவில் முகத்தை இராணுவத்தினர் போன்று துண்டினால் மறைத்துக் கட்டிக் கொண்டு வந்தவர்களே இவ்வாறு தங்களை வாளினால் வெட்டியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thinakural
|
|
|
|