Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 481 online users.
» 0 Member(s) | 479 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,297
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,623
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  துரோகி பிள்ளையானின் துரோகம் - உண்மைச் சம்பவம்
Posted by: ஊமை - 01-08-2006, 08:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

<img src='http://img203.imageshack.us/img203/8535/pilaiyan1sx.jpg' border='0' alt='user posted image'>



விடுதலைப்புலிகளிடம் அண்மையில் சரணடைந்த களுவன்கேணியைச்சேர்ந்த ஞானதீபனும், அதே ஊரைச்சேர்ந்த தீபனும் இணைபிரியாத நண்பர்கள். ஞானதீபன் விடுதலைப்புலிகளில் இருந்தபோது இவருக்கு தீபன் பல உதவிகளை விடுதலைப் போராட்டத்திற்காக செய்திருந்தார். இதை பிள்ளையானும் நன்குஅறிந்திருந்தார். இதே காலப்பகுதியில் இவர் பங்குடாவெளியைச்சேர்ந்த ஒருபெண்ணை காதலித்து வந்தார். எனவே இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தற்போதும் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் புலனாய்வுத்துறை இவரை விசாரித்தது. பின் இவர் சகல நடவடிக்கைகளிலும் இருந்து ஒதுங்கியிருந்தார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் 3 தங்கைகளும் இருப்பதால் இவரே குடும்பத்தையும் பார்த்து வந்தார். இந்நிலையில் கறுத்தப் பாலத்தை கடந்து செல்பவர்கள் இராணுவத்திடம் பதிவதால், அனைவரது தகவல்களும் பிள்ளையானிடம் நேரடியாக இராணுவத்தால் கையளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு நாள் ஞானதீபனை அழைத்த பிள்ளையான் தீபனைப்பிடிக்கணும் அவரை எங்களுக்கு வேலை செய்ய வைக்கணும் என்று கூறியிருக்கிறார். சரி என்று அவரை கறுத்தப்பாலத்திலுள்ள பொலிசாரின் தகவலுடன் னழடிhin ரக வானில் வந்து கத்த கத்த தூக்கி வானுக்குள் எறிந்தனர். ஞானதீபன பிடித்த குழுவில் இருந்ததை சிலர் கண்டு உறவினரிடம் வந்து கூற, தீபனி;ன் உறவினர்கள் ஞானதீபனின் வீட்டார் ஊடாக தீவுச்சேனை கிழமைக்கு 2 தடவைகளாவது சென்று வந்தனர் இருந்தும்; மகனை காண முடியவில்லை ஒருதரம் தீவுச்சேனை சென்று வர 1800 ருபா செலவாம் முற்றிலும் இராணுவப் பாதுகாப்பாலான தீவுச்சேனைக்கு செல்ல படையினர் அனுமதிக்கவில்லை.


பின் ஞானதீபனை சந்திக்கப்போகிறோம் என்றுகூறியே சென்று வந்துள்ளனர். இதன்போது அங்கும் பல தரம் சாப்பாடு, தண்ணி இல்லாமல் பல தடவைகள் அலைந்தபோதும் முடியவில்லை பரிதாபம் தாங்கமுடியாமல் ஞானதீபன், தீபனி;ன் குடும்பத்தை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் சிறிய தொகையை வழங்கி வந்தார். தீபன் யாருக்கும் அஞ்சாமல் என்னால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஈடுபடமுடியாது எனக் கூற, சிறையில் அடைப்பதாக கூறி பிள்ளையான் சுட்டுக் கொன்றுவிட்டாh.; இந்த விடயம் ஞானதீபனுக்கு பின்னரே தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஞானதீபன் பிள்ளையானையே குறிவைத்துகாத்திருந்தார். இந்நிலையில் தீபனி;ன் உறவினர்களுக்கு ஒன்றும் கூறமுடியாதிருந்த ஞானதீபன உங்கள் மகன் கர்ணா குழுவில் இயங்குகிறார் அவர் தாக்குதலுக்கு போய் விட்டார் என்றுகூறி மழுப்பி வந்தார். தனது நண்பனை உதவி செய்ய கூட்டி வந்துவிட்டு, அவர் அதனை நிராகரிக்க சுட்டதை தாங்க முடியாத ஞானதீபன் தனது மெய்ப்பாதுகாவலாளருடன் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப்புலிகளில் சரணடைந்தார். இவ்வாறாக பல இளைஞர்கள் பிள்ளையானால் கடத்தி உதவி செய்ய மறுப்பவர்கள் சுடப்படுவதாகவும் தீவுச்சேனை காட்டுப்பகுதிகளில் இவ்வாறு சுட்டு விட்டு சனத்துக்கு காசு வழங்கி புதைக்குமாறு கூறுவானாம். பின்னர் தற்போது தீபனின் வீட்டார் விடுதலைப்புலிகளால் வரவழைக்கப்பட்டு உங்களது மகன் இந்த நாளில் பிள்ளையானால் சுடப்பட்டார் எனவே நீங்கள் அங்கு அலைய வேண்டாம் அதற்குரிய கிரியைகளை செய்யுமாறு கூறினாh.; அப்போது பல தாய்மார் இவவாறு சாப்பாடு தண்ணி இல்லாமல் பல தடவைகள் அலைந்தவண்ணமிருக்கின்றனராம். ஆனால் அவர்கள் ஏன் வந்தனர் என பீதியில் கூற மறுக்கின்றனராம.; பிள்ளையான் வரும்போது சகல இராணவ முகாம்களுக்கும் அறிவித்த பின்னரே வருவாராம் இவரது மெய்ப்பாதுகாவலராக உருத்திராவும் 2 சிங்களவரும் இருப்பதாகவும் அறியமுடிகிறது.. வந்தாறுமுலை இராணுவ முகாமில் கூடுதலாக தங்குவாராம்.

சுட்டது: நிதர்சனம்

Print this item

  சிறீலங்கா கடற்படையினருடன் படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளோ
Posted by: Vaanampaadi - 01-08-2006, 08:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஞாயிறு 08-01-2006 22:06 மணி தமிழீழம் [நிருபர் மாறன்]

சிறீலங்கா கடற்படையினருடன் படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளோம் - கண்காணிப்புக் குழு
கடற்படையினரின் ரோந்து படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.திருகோணமலை துறைமுகப்பகுதியில் நேற்று கடற்படையினரின் படகின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அதில் பயணித்த 13 கடற்படையினர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையி;ல் கடற்படையினரின் படகுகளில் பயணம் செய்வது ஆபத்தானது என்ற அடிப்படையிலேயே இந்த முடிவை மேற்கொண்டதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் தலைவர் ஹப்ருக் ஹோக்லென்ட் தெரிவித்துள்ளார்.

கடற்கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் தமது குழுவினர் தனியான படகில் தமது இலச்சினைகளுடன் பயணம் செய்யப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pathivu

Print this item

  அமெரிக்காவில் இரு இலங்கைப் பெண்கள் சுட்டுக் கொலை.
Posted by: Vaanampaadi - 01-08-2006, 08:09 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

ஞாயிறு 08-01-2006 22:20 மணி தமிழீழம் [அமெரிக்க நிருபர் ]

அமெரிக்காவில் இரு இலங்கைப் பெண்கள் சுட்டுக் கொலை.

அமெரிக்காவின் சண்ரைஸ் பிரதேசத்தில் இரு இலங்கைப் பெண்களது சடலங்கள் அப்பிரதேச காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சொர்ணமணி முத்துலிங்கம்(வயது 63) அவரது மருமகள் ரசேல் லவன் (வயது 43) ஆகிய இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். இவர்களது சடலங்களுக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரசேல் லவன் கணக்களாராக மியாமி-டேட் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரது மாமியார் தனது பேரப்பிள்ளைகளை பராமரிப்பதற்காக அன்மையில்தான் இலங்கையிலிருந்து வருகைதந்திருந்தார். விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து உள்வீட்டு தகராறு காரணமாக இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றிருக்கலாமென அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அயலவர்களின் தகவல்களின்படி எந்தவொரு குடும்ப சச்சரவுகளும் கடந்த காலத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என தெரியவருகின்றது.

ரசேல் லவன் இனது கணவர் ரசேல் முத்து சடலங்களை கண்டெடுத்தார். காவல்துறையினர் அவரிடம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டபோதும் அவர் மீது எந்த குற்றச்சாட்டுக்களையும் இதுவரை சுமத்தவில்லை. ஆனால் அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்திருக்கின்றது. இவர்களது 3 குழந்தைகளும் இப்போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.



Pathivu

Print this item

  பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?
Posted by: Aaruran - 01-08-2006, 07:22 PM - Forum: தமிழ் /தமிழர் - Replies (177)

[size=14]<b>பரதநாட்டியத்தை வடமொழியில் பரதமுனிவர் இயற்றினாரா? அல்லது அது தமிழரின் நாட்டியக்கலையா?</b>

தமிழ்நாட்டைப் போலல்லாது ஈழத்தில் பரதநாட்டியம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிதும், மேட்டுக் குடியினரதும் சொத்தல்ல. ஈழத்தமிழர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்குப் பரதநாட்டியம் கற்பித்துப் பெரும் பணச்செலவில் அரங்கேற்றம் செய்விக்கிறார்கள். அதே வேளையில் பரதநாட்டிய அரங்கேற்றத்தன்று வெளியிடும் அரங்கேற்ற மலர்களில் பரதநாட்டியம் பரதமுனிவரால் வடமொழியில் எழுதப்பட்டதாகவும், பரத என்ற சொல்லுக்குப் பவம், நயம், தாளம் என்று வியாக்கியான்ம் கொடுப்பது மட்டுமல்லாமல், அரங்கேற்றத்தைக் காணவும், தொடக்கி வைக்கவும் வரும் வேற்று இன மக்களுக்கும் பிரமுகர்களுக்கும் அதையே கூறுகிறார்கள். அவர்களும் சமஸ்கிருத மொழியில் பரதமுனிவரால் இயற்றப்பட்ட நாட்டிய சாத்திரத்தைத் தான் தமிழர்கள் இரவல் வாங்கினார்கள் என்று நினைத்துக் கொண்டு, தமிழரின் தமிழ் நாட்டிய விழாவுக்கு வந்து சமஸ்கிருதத்தின் புகழை எண்ணிக் கொண்டும் போகிறார்கள்.

<b>பரதநாட்டியத்தின் (சதிராட்டம்) உயிரும், வேர்களும் தமிழரின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஆழப் பதிந்திருக்க நாமே பரதநாட்டியத்தை நாங்கள்,தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கூறுவதன் அறியாமையை என்னவென்பது.</b> சிலப்பதிகாரத்திலேயே தமிழரின் நாட்டியக்கலையைப் பற்றி விளக்கமாக உள்ளது. மாதவியின் அரங்கேற்றத்தை விவரிக்கும் இளங்கோவடிகள், ஆட்ட வகைகள், உடையலங்காரம், ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும், தேவையான் மேடையின் அளவு அலங்காரத்தைக் கூட விவரிக்கிறார். தமிழரின் பண்டைக்கால நாட்டிய நன்னூல் தமிழெதிரிகளால் அழிக்கப் பட்டு விட்டது.

<b>உண்மையில் பரதநாட்டியம் என்பது 20ம் நூற்றாண்டில் தமிழரின் கலைவடிவமாகிய சதிருக்குப் புத்துயிரும், புதுவடிவமும் கொடுக்கப்பட்ட பின் இணைக்கப் பட்ட புதிய பெயர்.</b> தமிழரின் நாட்டியக் கலையான சதிர் அல்லது பரதநாட்டியத்துக்கும் பரதமுனிவருக்கும், சமஸ்கிருதத்துக்கும் எள்ளளவும் தொடர்பும் கிடையாது. என்று தான் நாங்கள் தமிழர்கள் எங்கள் தலையில் நாங்களே மண்வாரிப் போடுவதை நிறுத்துவோம் என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

Print this item

  குழந்தைகள் தமிழ் கற்பதற்கு
Posted by: gausi - 01-08-2006, 07:07 PM - Forum: தளமுகவரிகள் - Replies (5)

http://www.tamilvu.org/

Print this item

  மகனை கொலை செய்ய அனுமதி கேட்கும் பெற்றோர்
Posted by: SUNDHAL - 01-08-2006, 05:55 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் யாடிகி பகுதி சவு டேஸ்வரி காலனியை சேர்ந் தவர் கண்ணையா. இவரது மகன் சவுடய்யா (வயது 21) 8-ம் வகுப்பு வரை படித் துள்ளார்.

சவுடய்யாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. அன்று முதல் அவர் அந்த பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். கடந்த 4 வருடமாக அவரது தொந்தரவு அதிகரித்து விட்டது.

முதலில் இவன் பலரது வீடுகளில் புகுந்து திருட ஆரம் பித்தான். பின்னர் தெருவில் போவோர் வருவோரை தாக்க தொடங்கினான். அந்த வழியாக செல்வோரை கல்லால் தாக்கி தொடர்ந்து அட்டூழியம் செய்து வந்தான்.

அவனது அட்டூழியம் அதிக மானதால் தினமும் அவனது பெற்றோருக்கு புகார் கள் வந்த வண்ணம் இருந்தது. இது பெற்றோருக்கு தலைவலியை கொடுத்தது.

அவனது மனநோயை குணமாக்க ரூ.70 ஆயிரம் வரை செலவழித்து விட்டனர். ஆனாலும் நோய் கொஞ்சம் கூட குணமாகவில்லை. சவுடய்யாவின் நடவடிக் கையால் 2 சகோதரிகளும் திருமணமாகியும் வாழா வெட்டியாக வீட்டில் இருக்கிறார்கள்.

மகனின் தொந்தரவு அதிக மானதால் அவனை கண்ணையா சங்கலியால் கட்டிப்போட்டார். பலசாலியான அவன் அதையும் உடைத்து விட்டு தப்பி விடுகிறான். முடிவில் அவனை கொன்றால் தான் அனைவரும் நிம்மதியாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு கண்ணையா வந்துள்ளார். அவனை கொலை செய்தால் போலீஸ் பிரச்சினை வராமல் இருக்க அனுமதி கேட்கிறார்.

இதற்காக பலரிடம் கையெ ழுத்து வேட்டையும் நடத்தி உள்ளார். இதற்கிடையே சவுடய்யாவின் அட்டூழியம் கார ணமாக போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.
Thanks:malaimalar...

Print this item

  Sri Lankan president still for peace with Tiger rebels
Posted by: Vaanampaadi - 01-08-2006, 05:16 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>Sri Lankan president still for peace with Tiger rebels</b>

www.chinaview.cn 2006-01-08 23:55:26


COLOMBO, Jan. 8 (Xinhua) -- Sri Lankan President Mahinda Rajapakse said Sunday that he was still committed to the internationally backed cease-fire with the Tamil Tigers despite continued acts of violence perpetrated by the rebel group.

Rajapakse was reacting to Saturday's attack by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) on a Navy fast attack craft at the eastern port of Trincomalee.

Addressing a religious public gathering at Horana, 38 km southeast of the capital Colombo, the president said the LTTE attack was "a blatant violation of the cease-fire agreement" and added that "I am ready at any time to open talks for a negotiated peaceful settlement."

However, the president warned the LTTE that he would neither turn blind nor deaf in the face of violence.

The LTTE destroyed the Naval craft at around 1:00 a.m. local time on Saturday (1900 GMT, Friday) in what is believed to be a suicide attack, killing some 13 sailors.

Commenting on the incident, the government spokesman and Health Minister Nimal Siripala De Silva said Sri Lanka would move to educate the international community on the LTTE's violation of the cease-fire agreement of February 2002.

The Sri Lankan president, narrowly elected in November, was seen to be adopting a hard-line towards the LTTE due to his electoral alliances with the two extremist parties the JVP and theJHU.

The Tiger leader in his annual Heroes Day speech late November warned that the Tigers would be forced to pursue its independence struggle unless the Rajapakse administration came up with a credible solution to the armed conflict.

The LTTE since December has killed 40 soldiers in four separate claymore mine attacks against the government troops in Jaffna prior to Saturday's attack on the Naval craft in the east.

http://news.xinhuanet.com/english/2006-01/...ent_4026188.htm

Print this item

  பருத்தித்துறையில் வெதுப்பக உரிமையாளர் சுட்டுக்கொலை.
Posted by: Vaanampaadi - 01-08-2006, 05:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஞாயிறு 08-01-2006 17:25 மணி தமிழீழம் [நிருபர் தவச்செல்வன்]

பருத்தித்துறையில் வெதுப்பக உரிமையாளர் சுட்டுக்கொலை.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரப் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர் இன்று பிற்பகல் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லபட்டடுள்ளார்.

சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இவருடைய வெதுப்பகத்திற்குள் பிரவேசித்த ஆயுதாரிகள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

வெதுப்பக உரிமையாளர் பெயர் விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை.தாக்குதலை சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்களே நடத்தியிருப்தாக சந்தேகிக்கப்படுகிறது.

இவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணமும் இதுவரை அறியமுடியவில்லை.



பதிவு

Print this item

  முத்தூர் கிறனைட் தாக்குதலில் 3 இலங்கை ராணுவம் காயம்
Posted by: Vaanampaadi - 01-08-2006, 04:25 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (2)

<b>Three SLA soldiers injured in Mutur grenade attack</b>

[TamilNet, January 08, 2006 14:29 GMT]
Three Sri Lanka Army (SLA) soldiers were seriously injured when unknown gunmen hurled grenade at their truck in Mutur, Pachchanoor at 7.20 p.m. Sunday, sources said. The injured soldiers have been taken to Trincomalee General Hospital, medical sources said.
The SLA truck was heavily damaged in the attack, according to eye witnesses.

The SLA returned fire at random.

தமிழ்நெற்

Print this item

  பிணத்துக்கு 'உயிர்' வந்ததால் பணிப்பெண்கள் அதிர்ச்சி
Posted by: Vaanampaadi - 01-08-2006, 04:17 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

பிணத்துக்கு 'உயிர்' வந்ததால் பணிப்பெண்கள் அதிர்ச்சி


'உங்களால் முடியுமா?' என்ற வரிசையில் வெளியான டி.வி. நிகழ்ச்சி ஒன்றினால், அதன் தயாரிப்பாளர் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார்.

டச்சு நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த டி.வி. நிகழ்ச்சியில் இடுகாட்டில் சவப்பெட்டிக்குள் ஒருவர் 'பிணம்' போல் படுத்திருந்த காட்சி இடம் பெற்று இருந்தது. தற்செயலாக அங்கு வந்த மயானத்தில் பணி புரியும் 3 பெண்கள், பிணத்தின் கோட்டில் இருக்கும் சாவியை அகற்றும்படி கூறினார்கள்.

அந்த நேரத்தில் பிணமாக படுத்து இருந்தவர் 'திடீர்' என்று அசைந்ததால் படப்பிடிப்பு என்று அறியாத அந்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அவர்கள் தொடர்ந்த வழக்கிற்காக இப்போது அந்த டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கோர்ட்டுக்கு அலைந்து வருகிறார்கள்.

Dailythanthi

Print this item