| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 192 online users. » 0 Member(s) | 190 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,297
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,623
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,050
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,457
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238
|
|
|
| குருடன் போல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் |
|
Posted by: Vaanampaadi - 01-09-2006, 11:49 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
பயங்கரவாத செயற்பாடுகளை குருடன் போல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்கிறார் ஜனாதிபதி
இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமான அரசியல் தீர்வொன்றைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கு இன்னுமிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, தான் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், எனினும் தீவிரவாத செயற்பாடுகளைக் கண்டும் குருடனாகவோ அல்லது செவிடனாகவோ செயற்படும் வகையில் அந்த அர்ப்பணிப்பு இருக்குமென விடுதலைப் புலிகளோ அல்லது வேறு எவருமோ புரிந்து கொண்டால் அது மிகத் தவறான எண்ணமெனவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஹொரணை, குடா உடுவ நாலந்த வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதும் ஒரு நாட்டிற்குள் சகல இனத்தவர்களும் எவ்வித சந்தேகமும், அச்சுறுத்தல்களும் இன்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவதாக தேர்தல் மேடைகளில் உறுதியளித்தேன். அதே நிலைப்பாட்டில் இருந்தே தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். நாட்டில் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தவே உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
இனப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்க்க முடியுமென நான் இப்பொழுதும் கூறுகிறேன். இப் பிரச்சினையை பேச்சுகள் மூலமான அரசியல் தீர்வின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர முடியுமென்ற நம்பிக்கை எனக்கு இன்னுமிருக்கிறது.
பொறுமையுடனும், அவதானத்துடனும் செயற்பட்டால் தேசிய பிரச்சினைக்கு முடிவு காண முடியுமென நான் தற்போதும் நம்புகிறேன்.
ஒரு நல்ல பௌத்தன் என்ற வகையில் சிறு வயதிலிருந்தே பொறுமையாயிருக்க நான் கற்றுள்ளேன், பழக்கப்பட்டுள்ளேன். ஆனால், இந்த பொறுமையை எவரும் இயலாமையென நினைத்துக் கொண்டால் அது அவர்களின் முட்டாள் தனமாகும்.
அத்துடன், சமாதானத்திற்காக நான் கடப்பாட்டுடன் செயற்படுவேன். எனினும், இடம் பெறும் தீவிரவாத செயல்களை பார்த்துக் கொண்டு குருடனாகவோ அல்லது செவிடனாகவோ அந்த அர்ப்பணிப்பு இருக்குமென விடுதலைப் புலிகள் அல்லது வேறு எவரும் நினைத்தால் அது தவறு. அவர்களின் குறைபாடு.
போர் நிறுத்தம் கடுமையாக மீறப்படுகின்றது. போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவது தொடர்பாக இந் நாட்டு மக்களும், சர்வதேச சமூகமும் தெரிந்திருப்பது சந்தோஷமான விடயமொன்று. இருப்பினும், தேசிய பாதுகாப்பை வழங்கும் போது, எனக்கு வரும் எந்த சவால்களையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராகவுள்ளேன்.
இதேவேளை, ஜனாதிபதி என்ற வகையில் நானெடுக்கும் தீர்மானங்களை எவரும் தீவிரவாத நடவடிக்கைகள் மூலமாகவோ, பலாத்காரமாகவோ மாற்ற முடியுமென நினைத்தால், அந்த நினைப்பு தவறானதாகும்.
இதேவேளை, இடம்பெறும் தாக்குதல்களை, அவை மகிந்தவிற்கு விழும் அடிகளென சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், இவ்வாறான தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்படுவது நாடும், அப்பாவி நாட்டு மக்களும் தான். எனவே, இனப் பிரச்சினையை சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வர சகல அரசியல் கட்சிகளையும் மக்களையும் ஒன்றுபட்டு முன்வருமாறு அழைக்கிறேன்.
http://www.thinakural.com/New%20web%20site...y/09/news-1.htm
|
|
|
| பிரபாகரனும் நானும் இலங்கையில்தான் சாவோம் |
|
Posted by: Vaanampaadi - 01-09-2006, 11:44 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>"Prabakaran and I will both die in Sri Lanka"-President</b>
(Jan 8, 2.30 pm) The President is reported to have eased his hard line stand on conducting peace talks in Oslo at a discussion held yesterday with Tamil National Alliance parliamentarians. The President has requested TNA members to send a group to talk with the LTTE to persuade them to return to the negotiating process.
"Both Prabakaran and I are going to die in Sri Lanka So there shouldn't be any arguments over holding talks in Sri Lanka",
" No way will I go to Oslo" President has said
However when TNA parliamentarians proposed that Oslo should be the venue of the first round of talks, even though the President did not agree, he has not shown much dissent either.
The TNA MPs have appealed to the President to look into long term benefits that could be gained from holding talks in Oslo.
Meanwhile the President has also given an assurance to TNA legislators that he would not let murderers of Pararajasingham and five students to get away.
The TNA was represented at the meeting by R.Sampanthan, Suresh Premachandran, N. Raviraj and Gajendra Ponnambalam. Associated with the President were Minister maithreepala Sirisena and Presidential Secretary Lalith Weeratunga.
http://www.lankaenews.com/English/news.php?id=1550
|
|
|
| இலங்கை ஜனாதிபதி புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் |
|
Posted by: Vaanampaadi - 01-09-2006, 11:23 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
Last Update: Monday, January 9, 2006. 7:00pm (AEDT)
<b>Sri Lankan President warns rebels</b>
Sri Lanka's President has vowed a tough line on "terrorism" amid escalating attacks against Government forces that have cast doubts on the strength of the island's truce.
President Mahinda Rajapakse has told a rally in the island's south that his patience should not be mistaken for weakness.
The state-run Daily News reports Mr Rajapakse says he is "duty bound" to ensure the security of the nation.
"If someone takes my patience that I have inculcated through Buddhist values as my weakness, they would be mistaken," the President said.
"I am duty-bound to ensure the security of this country [and] in the same manner I am duty bound not to allow anybody to create problems in the country."
The President told the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE to stop thinking he is "deaf and blind."
"It is a great mistake if anyone thinks that our decisions can be altered by means of terror," he said.
"The LTTE should realise that we are not deaf and blind - if they think so, the time has come for them to give up such thoughts."
The President, however, says he is committed to a negotiated political settlement to the ethnic conflict, which has claimed over 60,000 lives since 1972.
Tamil Tiger rebels seeking independence for the island's ethnic Tamil minority agreed to a federal system during talks in December 2002.
But those negotiations have remained on hold since April 2003.
Mr Rajapakse came to power in November on a promise to replace the Norwegian-backed initiative with a new peace process.
However, since assuming office he has made a U-turn and asked Oslo to remain as the facilitator.
Since Mr Rajapakse came to power, there had been a surge in violence in the north and east.
At least 115 people, including 67 members of the security forces and police, have been killed in the past month alone despite the truce.
- AFP
http://www.abc.net.au/news/newsitems/20060...01/s1544317.htm
|
|
|
| திரிகோணமலையில் மோதல் |
|
Posted by: Vaanampaadi - 01-09-2006, 11:13 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>திரிகோணமலையில் விடுதலைப்புலிகள்- ராணுவம் மோதல்: துப்பாக்கி சண்டையில் 2 பேர் பலி </b>
கொழும்பு, ஜன. 9-
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு வத்துக்கும் இடையே 3 ஆண்டுகள் நீடித்து வரும் போர் நிறுத்தம் அதிகார பூர்வமாக வாபஸ் பெறப்பட்டாலும் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடை பெற்று வருகிறது. தமிழர் பகுதியில் ராணுவம் கெடு பிடி செய்து வருவதை தொடர்ந்து தமிழர்கள், குடும் பம் குடும்பமாக வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் திரிகோணமலையில் 5 தமிழ் இளைஞர்களை ராணுவம் சுட்டு கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் ராணுவத்தினர் மீது அதி ரடி தாக்குதல் நடத்தி வரு கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ படகு மீது விடுதலைபுலிகளின் தற்கொலை படையினர்அதி ரடி தாக்குதல் நடத்தி 15 கடற்படையினரை கொன்றனர்.
இந்த நிலையில் திரிகோண மலை பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் இருதரப் பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இலங்கை ராணுவத்தினர் 2 லாரிகளில் திரிகோணமலை பகுதியில் ஒரு கிராமத்தில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது விடுதலைப்புலிகள் புதர் மறைவில் இருந்து அவர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் இலங்கை ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 3 வீரர்கள் காயம் அடைந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பில் ஒருவர் பலியானார்.
Maalaimalar
<b>Latest clash kills one soldier, one rebel in Sri Lanka"s northeast</b>
http://www.khaleejtimes.com/DisplayArticle...bcontinent&col=
<b>Violence escalates in Sri Lanka</b>
http://english.aljazeera.net/NR/exeres/A07...D6E0469BD04.htm
|
|
|
| மன்னார் பகுதியில் எண்ணை அகழ அரசு முஸ்தீபு! |
|
Posted by: adsharan - 01-09-2006, 08:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தமிழர் தாயகத்தின் இதயமாகவும், கேந்திர நிலையமாகவும், பெருமளவு இயற்கைக் கனியவளங்கள் புதைந்து கிடக்கும் இடமாகவும் கருதப்படும் மன்னார் வளைகுடாவில் உள்ள பெற்றோலிய வளங்களை அகழ்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு முனைப்புடன் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றது.
இந்தத் திட்டம் நடவடிக்கை தமிழர் தரப்பில் பெரும் சீற்றத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து தமிழர் தாயகத்தின் மூலவளத்தைச் சுரண்டி, சூறையாடி, கொள்ளையிடும் சதித் திட்டத்தை சிங்கள அரசு செயற்படுத்துவதாகத் தமிழர் தரப்புக் கருதுகின்றது.
இலங்கை அரசின் இந்தச் செயற்பாடு குறித்து விடுதலைப் புலிகளின் தலைமையும் கோபமுற்றிருப்பதாகத் தெரிகின்றது.
மன்னார் வளைகுடாவில் நிலத்துக்கடி யில் இருக்கும் மதிக்க முடியாத பெறுமதி கொண்ட கனியவளங்களை அகழ்வதற்கான பொறுப்புகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் வழங்குவதற்கான கேள்வி மனுக்களை அரசு வெகுவிரையில் உத்தியோகபூர்வமா கக் கோரவிருக்கிறது.
இவ்வாறான கேள்வி மனுக்கோரலில் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற் காக அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் தயாராகியிருக்கின்றன எனவும், இதன் பொருட்டு அரச உயர்மட்டத்தை அந்த நிறு வனங்கள் நாடியிருக்கின்றன எனவும் மிக நம்பகரமாகத் தெரியவருகிறது.
முன்னதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தான் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில வாரங்களே இருக்கையில் இந்த விட யத்தை இலக்குவைத்து, தனியாக பெற்றோ லியத்துறை அமைச்சு என்ற ஒன்றை உருவாக்கினார். இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு, இந்த அகழ்வு வேலை களை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
ஆழ்கடல் எண்ணெய் அகழ்வில் உல கில் முன்னணியில் இருக்கும் நாடு நோர்வே என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வடமேற்குக் கடலோரப் பரப்பில் எண்ணெய் அகழ்வு வேலைத் திட் டத்தில் இலங்கை இந்தியா நோர்வே கூட் டுச் செயற்பாடும் இடம்பெறும் என்றும்
இதற்கான பூர்வாங்கப் பேச்சுகள் முடி வடைந்து விட்டன என்றும்
ஒரு தகவல் தெரிவித்தது.
நோர்வேயின் புதிய பிரதமர், அண்மை யில் புதுடில்லிக்குச் சென்றிருந்த சமயத்தில் இதுகுறித்து புதுடில்லியில் ஆராயப்பட்டதா கவும் கூறப்பட்டது.
தமிழர் தாயகத்தை ஒட்டிய பிரதேசத்தில் தமிழர் தரப்பின் இணக்கமின்றி இத்தகைய பணிகளைத் தொடங்குவது சிக்கல்கள் நிறைந் தது என்பதை சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் ஏற்கனவே உணர்ந்திருப்பதாகக் கூறப்ப டு கின்றது.
எனினும், சேது சமுத்திரக் கால்வாய் அகலமாக்கும் திட்டத்துடன் இணைந்து இப் பணியும் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஓரளவு பாதுகாப்பு உண்டு என சில வட்டாரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.
இதற்கிடையில்
இந்தப் பணியைக் கையாளும் இலங் கைத் தரப்பின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரியாக பெருந்தொகை மாதாந்த வேதனத்துடன் முன்னாள் கூட்டுப் படை களின் தளபதியும், இராணுவத் தளபதியு மான லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பல கல்ல நியமிக்கப்பட்டிருக்கின்றார். இந்த வேலையுடன் அதன் பாதுகாப்பு விவகாரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டதா லேயே இத்தகைய ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார் என விடய மறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
இந்த விவாகரம் தொடர்பில் நேற்று "உத யனு'க்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலை வர் ஜாலிய மெதகம, மன்னார் வளைகுடாவில் இந்த அகழ்வுகளை மேற்கொள்வதற் கான கேள்விமனுக்கள் கோரப்படவுள்ளன. ஆனால் அதற்கான கால எல்லை நிர்ண யிக்கப்படவில்லையென்றும்கூறினார்.
இது விடயத்தில் விடுதலைப் புலிகளிட மிருந்து எதிர்ப்பு வராதா என்று கேட்டபோது அதற்குப் பதலளித்த அவர், அவர்களுடன் இதுவிடயத்தை பேசுவது அரசின் பொறுப்பாக இருக்குமென்றும் கூட்டிக்காட்டினார்.
இவ்விடயத்தில் நோர்வேத் தரப்பு வெறும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதோடு ஒதுங்கிவிடுமா அல்லது முழு அளவில் தன்னையும் ஒரு பங்குதாரராக இணைத்துக் கொள்ளுமா என்பது இதுவரை தெரியவர வில்லை.
www.uthayan.com
|
|
|
| பலூன் வாரம் |
|
Posted by: sooriyamuhi - 01-09-2006, 08:16 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
அவுஸ்திரேலியா, பில்ஸ்மோஸில் 27வது பலூன் வாரத்தில் பறக்க விடப்படும் வெப்பக்காற்றுப் பலூன்கள்
<img src='http://img389.imageshack.us/img389/1231/fpn7qe.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| VB தொடர் 2005 -06 |
|
Posted by: MUGATHTHAR - 01-09-2006, 08:08 AM - Forum: விளையாட்டு
- Replies (61)
|
 |
[u][b] VB தொடர் 2005-06 முத்தரப்பு ஓருநாள் போட்டி
மெல்பேனில் வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஆவுஸ்ரேலியா ஆரம்ப துடுப்பாட்டகாரராக களம் இறக்கப்படுவர் என தெரிகிறது முதலாவது போட்டி வரும் வெள்ளிக் கிழமை 13ம் திகதி அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மெல்பேனில் நடைபெற இருக்கிறது.
|
|
|
| கிட்டண்ணா! |
|
Posted by: வர்ணன் - 01-09-2006, 07:25 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
வரிப்புலி ஊர்வலம்!
-----------------
ஆடிவரும் கடலையே - சொல்லு
எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே
ஒளித்து வைத்தாய்?
காற்றே வா மெல்ல எம் கதவு திற-
பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும்
சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை-
எங்காவது பார்த்தீயா? சொல்லி போ!
சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் -
சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன்
படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன்
அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை-
விடை சொல்லாமல் போனானே அதுதான் -
ஏனென்று இன்னும் தெரியவில்லை!
எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு-
எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு-
கிட்டண்ணா - தமிழன் இழந்துவிட்ட இன்னொரு சகாப்தம்!
கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-
குலை நடுங்க வைத்தவனே-
வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!
வாயேன் ..வந்து படை நடத்து...
வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!
|
|
|
| மைக் ஸ்பீக்கிங்! |
|
Posted by: SUNDHAL - 01-09-2006, 06:28 AM - Forum: நகைச்சுவை
- No Replies
|
 |
கற்பனை: முகில்
"மைக்'ல நாம பேசலாம். ஆனா "மைக்'கால நம்மகிட்ட பேசமுடியுமா!
-செம ஃபீலிங்கான தத்துவமா இருக்குல்ல! இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த தத்துவத்தை ஒரு கட்சிக் கூட்ட மேடையிலே, பேச்சில சோளப்பொறி...ச்சீ...தீப்பொறி பறக்குற ஒரு அரசியல் பேச்சாளர் எடுத்து விட ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு நம்ம கதாநாயகன் "மைக்'கேல். இனி ஓவர் டூ மைக்கேல்!
ஹலோ "மைக்' டெஸ்டிங் ஒன்...டூ..த்ரீ...
இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். நான்தான் "மைக்'கேல் பேசறேன். நீங்க சாதாரணமா பேசுனாலும், சத்தே இல்லாம பேசுனாலும் பேசறதை சத்தமா எல்லாருக்கும் கேக்குற மாதிரி சவுண்டாக்குறதுதான் என்னோட குணம், தொழில். உங்க குரலைச் சவுண்டாக்குற எங்களால, சுயமா சவுண்டா குரலு கொடுக்க முடியாதுன்னு ஒருத்தர் சவுடால் விட்டதை என்னால தாங்க முடியல! நைட்டெல்லாம் தூங்க முடியல! என் மனசுல உள்ளதைக் கொட்டிடுறேன்.
என்னோட பொறப்பு சமாச்சாரம் பத்தியெல்லாம் பெருசா சொல்லுறதுக்கு ஒண்ணுமில்லை. நான் பொது வாழ்க்கைக்கு வரக் காரணமா இருந்தவர் கந்தசாமி. "மெüனம் சவுண்ட் சர்வீஸ்' ஓனர் அவர்தான். என் மேல அவருக்கு ரொம்ப பிரியம். எப்பவும் என்னை ஒரு மஞ்சத் துணியில் சுத்தித்தான் தூங்க வைப்பாரு. நல்லாத் தூங்குவேன். எப்பவாவதுதான் டியூட்டி! ஆனால் என் முதல் அனுபவமே செம ஃபீலிங்காப் போயிடுச்சு! பாட்டு பாடுறதுக்கு மைக் வேணும்னு சொல்லித்தான் வாங்கிட்டுப் போனான் ஒருத்தன். அட, நமக்கு கெடைக்குற முதல் வாய்ப்பே சூப்பரா, மங்களகரமா பாட்டு சான்ஸô இருக்கேன்னு நம்பி நானும் போனேன். அங்க போனா...
"புறங்கையால புலிய விரட்டுவ
முழங்கையால முதலய விரட்டுவ
இடது கையால இமயத்த தூக்குவ
வலது கையால வானத்த தூக்குவ
என் கையால எள்ளுருண்டை தின்னவனே எமன் கைக்கு சோசியம் பாக்கப் போனியோ!' -அப்படின்னு ஒரு பாட்டி மூக்கைச் சிந்திக்கிட்டே ஒப்பாரி வைச்சு ஆரம்பிச்சா!
ச்சே! ஆரம்பமே அழுகையாப் போயிடுச்சேன்னு செம அப்செட் ஆயிடுச்சு! நாலு நாளா ஒழுங்கா சவுண்டே வரல. தொண்டை அப்செட் ஆயிடுச்சு. அடுத்ததா ஒரு ஆளு வந்து "சாயங்காலம் வீட்டாண்ட வந்து குழாய் கட்டிருங்க'ன்னு புக் பண்ணிட்டுப் போனான். இதுவாவது ஒப்பாரியா இல்லாம உருப்படியா இருக்கணும்னு என்னோட இஷ்ட தெய்வம் மைக் மூனிஸ்வரர்கிட்ட வேண்டிக்கிட்டேன். நல்லவேளை. என்னைச் சுத்தி மோளம், கிட்டாரு, ஆர்மோனியம்னு நெறைய விஷயம் வச்சிருந்தாங்க! நல்ல கூட்டம். சினிமாக்காரங்க கச்சேரியாம். சினிமாவுல பாடிக்கிட்டு இருக்குற ஒரு பெரிய பாடகர் பாட வரப்போறாருன்னு சொன்னாய்ங்க! எனக்கு ஒரே பிரம்மிப்பா இருந்துச்சு. உடம்பெல்லாம் சிலிர்த்துக்கிச்சு! தகதகான்னு முட்டியைத் தாண்டி நீண்டுக்கிட்டிருக்குற மாதிரி ஜிப்பா ஒன்னைப் போட்டுக்கிட்டு வந்தாரு ஒரு பாடகரு. பார்த்தா தமிழ்நாட்டுக்காரரு மாதிரி தெரியல. பக்கத்துல ஒரு குண்டு ஆன்ட்டியும் பாட ரெடியா இருந்தாங்க. என் முன்னால வந்து பாட ஆரம்பிச்சாரு அந்தப் பாடகரு.
"வதுமான்கா ஊரத்துங்கோ!
டயிர்ஷாதம் ரெதி பண்ணுங்கோ!
உங்கம்மா எங்கம்மா நம சேட்டு வெப்பாலா!
சும்மா சும்மா நம பெட்டு வித்தாலா'
என்ன இலவுடா இது. இதுக்கு இலவு வீட்டு ஒப்பாரி பாட்டே எவ்வளவோ தேவலைன்னு புரிஞ்சுது. இந்தச் சம்பவம் நடந்ததுல இருந்து, யாராவது பாடுறதுன்னு சொல்லி என்னை வாங்கிட்டுப் போனாப் போதும். வெறுப்பாயிடும் எனக்கு. அது ஏதோ ஆடி மாசமாமே...அந்த மாசம் முழுசும் இதே ரோதனைதான். யாராவது என் முன்னால நின்னு கத்திக்கிட்டு நிக்க, டெய்லி ராக்கூத்துதான். ஒரு வழியா ஆடி முடிஞ்சுப்போச்சு. கொஞ்ச நாளா வேலையே இல்லை. நல்லா ரெஸ்ட் கிடைச்சுது.
"நம்மத் தலைவர் பேசுறாரு. ஏழு மணிக்கு. தேரடி முக்குலதான் 'னு ஒரு தொண்டரடிப்பொடி வந்து சொல்லிட்டுப் போனாரு. அப்பாடா நிம்மதி. பாட்டு இல்ல, பேச்சுதான்னு நிம்மதியா இருந்துச்சு. ஏழு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கூட்டம், பர்ஃபெக்டா எட்டே முக்காலுக்கு தொடங்கிச்சு. சதுரம், முக்கோணம், வட்டம், மாவட்டம் எல்லாம் வரிசையா வந்து "கொழகொழ'ன்னு உளறிட்டுப் போனாய்ங்க! இந்தத் தலைவரு பேச ஆரம்பிச்சாப் போதும் வாய்க்குள்ள டெங்கு கொசு நுழையறது தெரியாமக் கூட கூட்டம் உட்கார்ந்து கேட்கும்னு சொன்னாங்க. வந்தாரு தலைவர்.
"என் கூடப் பிறக்காத உயிரின் உயிர்களே'ன்னு ஆரம்பிச்ச அவரு..
"நான் ஆளும் வர்க்கத்தைக் கடுமையாகக் கேட்கிறேன். கராத்தே தெரியும் என்று சொன்னால் கடைக்காரன் பிளாக் பெல்ட்டை இலவசமாகக் கொடுத்து விடுவானா என்ன?
எந்தப் பாம்பாவது விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்குமா?
விஷம் ஏறுனா நுரை தள்ளும். அதுக்காக நுரை தள்ளுனா விஷம் ஏறாது. தேள் கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா வலிக்காது.'
இப்படி எக்கச்சக்கமா பினாத்திக்கிட்டே போனாரு. அதோட விட்டாரா...
"சுடுற தோசைக் கல்லுல மாவை ஊத்தி தோசை சுடலாம்
அதுக்காக சுடுற துப்பாக்கில மாவை ஊத்தினா தோசை சுட முடியுமா?'
அய்யா சாமி..இதை அந்தக் கூட்டம் விசிலடிச்சு கைதட்டி ரசிச்சதைப் பார்க்கறப்போ என்னால தாங்கவே முடியல!
"கரண்ட் எனக்குள்ளே ஓடினாத்தான் என்னால பேசமுடியும். அதே கரண்ட் உனக்குள்ளே ஓடவிட்டா உன் பேச்சை என்னால நிறுத்த முடியும்'னு பஞ்ச் டயலாக் விடுற அளவுக்கு எனக்குள்ள வெறி ஏத்திட்டுப் போயிட்டாரு அந்தத் தலைவர்.
அடுத்து ரெண்டு நாள் கழிச்சு ஒரு கல்யாண வீட்டுல ஷிப்ட் பாக்கப் போயிருந்தேன். பேசணும் பேசணும்னு என்னை "மொய்'ச்சு எடுத்துட்டாங்க!
"மணமக்களின் நல்வாழ்க்கைக்கு பதினோரு ரூபாய் மொய் செய்த நம் சமூகத்தலைவர் வடக்கம்பட்டி ராமசாமி தற்போது உங்களிடையே பேசுவார்'னு சொன்னாங்க. வந்தாரு வடக்கம்பட்டி.
"இந்த அருமையான தருணத்திலே இந்த அழகான தருணத்திலே ஒரு நல்ல நாளிலே மங்களகரமான நாளிலே நான் இங்கே வந்து எனை பேச அழைத்த ஒரு அருமையான பொழுதிலே மணமக்களை வாழ்த்த வாய்ப்பு கொடுத்த இந்த தம்பதிகளின் வாழ்க்கை நல்ல விதமாக அமைய இவர்கள் பதினாறும் பெற்று உளமாற நெஞ்சார மனதார...' ன்னு பேசிக்கிட்டிருக்கறப்பவே "சாப்பாடு ஆறுது'ன்னு யாரோ சவுண்ட் விட அவ்வளவுதான் என்னைக் கீழே தள்ளிவிட்டுட்டு ஓடியே போயிட்டாரு வடக்கம்பட்டி.
எப்பா இன்னும் சில விரோதிங்க இருக்காங்க எனக்கு . அதுல நம்பர் ஒன் விரோதின்னா அது பல்லைத் தேய்க்காம என் முன்னால வந்து பேசுற பயலுகதான். படுபாவிங்க! அடுத்த "ரவுண்ட்' விரோதிங்கன்னா அது குவார்ட்டர் குப்புசாமிங்கதான். இவங்க பேசறதையெல்லாம் முன்னால உட்கார்ந்திருக்கிற நீங்க கேட்கறீங்களோ இல்லையோ, தலையெழுத்து , ஒரு எழுத்துவிடாம நான் கேட்டுத்தான் ஆக வேண்டியதிருக்கு. இதுல ஒரு படி மேல போயி எச்சியால என்னைக் குளிப்பாட்டுற ஜந்துக்களும் இருக்காங்க.
ஓ.கே. இன்னிக்கு ஏதோ ஸ்பெஷல் ஆர்டர் வந்திருக்கு போல. அதான் நம்ம ஓனர் முகம் இவ்வளவு பிரகாசமா இருக்கு. ஆகா என்னால கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியல . நான் டெல்லி போயிட்டிருக்கிறேனா! என்னது நான் பார்லிமெண்டுக்குப் போயிட்டிருக்கிறேனா! வாழ்க்கையில இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லையே! இவ்வளவு நாள் வெட்டிப் பேச்சா இருந்த வாழ்க்கைக்கு இன்னைக்குத்தான் ஒரு அர்த்தம் கிடைக்கப் போகுது. ஆஹா சபை கலைகட்டுதுடோய்! என் முன்னால உட்கார்ந்திருக்கிற எம்.பி. பேசப் போறாருடோய்!
"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. ஏன்?'
"ஏர்வாய்ஸ் செல்லுல மெúஸஜ் ப்ரீயா?'
"கால்நடைத் துறை அமைச்சருக்கு பால் கறக்கத் தெரியணுமா?'
"மல்லிகா ஷெராவத்துக்கு மாமியாராகப் போறது யாரு?'
என்னடா இவரு ஏதோ கேட்கணுமேன்னு கடமைக்கு கேட்ட மாதிரி இருக்கு. யாராவது எழுதிக் கொடுத்ததை இங்க வந்து கேட்கிறாரோ? இதுல ஏதாவது "மணி' விவகாரம் இருக்கலாம். நமக்கெதுக்கு வம்பு. வழக்கமான டயலாக்கோட நான் முடிச்சுக்கிறேன். இத்துடன் என் பேருரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| என்னை மிரட்டும் இந்திய பேட்ஸ்மேன்' -சோயப் அக்தர் |
|
Posted by: rajathiraja - 01-09-2006, 05:48 AM - Forum: விளையாட்டு
- No Replies
|
 |
இங்கிலாந்து தொடரில் கலக்கிய வேகப் புயல் சோயப் அக்தர், அடுத்து இந்தியாவுக்கு எதிராக சாதிக்க காத்திருக்கிறார். இந்தியா என்ற பெயரை கேட்டாலே தன்னம்பிக்கை தானாக பிறந்து விடும் என்கிறார். தனது பவுலிங் மாற்றத்துக்கு என்ன காரணம்? இந்திய தொடரில் தனது இலக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் அக்தர் அளித்த ருசிகர பேட்டி:
* வணக்கம் அக்தர். இங்கிலாந்து தொடரில் பிரமாதம் பண்ணி விட்டீர்கள்! அடுத்து இந்தியாவை பழி வாங்க காத்திருக்கிறீர்களா?
பழி வாங்க ஒன்றுமில்லை. விட்டதை பிடிக்க காத்திருக்கிறேன். கடந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இதை ஈடு செய்யும் வகையில் இம்முறை சிறப்பாக பந்துவீச திட்டமிட்டுள்ளேன்.
* யாருக்கு அதிக வாய்ப்பு காணப்படுகிறது?
இரு அணிகளும் சொந்த மண்ணில் வெற்றி பெற்ற கையோடு களம் காண உள்ளன. ஆனாலும், பாகிஸ்தான் அணி வலிமைமிக்க இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. இதனால் எங்களுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது.
* இத்தொடருக்கு தயாராக இருக்கிறீர்களா?
நிச்சயமாக. இந்தியா என்ற பெயரை கேட்டதும் தன்னம்பிக்கை, ஊக்கம் எல்லாம் தானாக வந்துவிடும். இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே... சாதிக்கும் துடிப்பு பிறந்து விடும். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்களும் இந்திய தொடருக்கு தயாராக இருக்கிறார்கள்.
* கடந்த முறை ஏற்பட்ட சர்ச்சை பாதிக்குமா?
சென்ற முறை ராவல்பிண்டி டெஸ்டின் போது எனக்கு ஏற்பட்ட காயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது எனது அர்ப்பணிப்பு உணர்வு குறித்து கேள்வி எழுப்பினார்கள். இது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது எல்லாவற்றையும் மறந்து விட்டேன்.
* இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் அள்ளியதன் ரகசியம்?
இத்தொடருக்கு முன்னதாக எனது குரு இம்ரான் கானை சந்தித்தேன். அவர் சில அறிவுரைகள் தந்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் இக்கட்டான நிலையில் இருப்பதை எடுத்துக் கூறினார். இத்தொடரில் கட்டாயம் சிறப்பாக செயல்பட வேண்டுமென எச்சரித்தார். இவரது ஆலோசனையை பின்பற்றியதால் சாதிக்க முடிந்தது. அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. மூன்று டெஸ்டிலும் பங்கேற்றதால் எனது அர்ப்பணிப்பு குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை.
* தங்களது "சூப்பர் பார்ம்' தொடருமா?
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 17 விக்கெட் வீழ்த்தினேன். இதே "பார்ம்' இந்தியாவுக்கு எதிராகவும் தொடர விரும்புகிறேன். சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடி தந்தால் நிம்மதி பெருமூச்சு விடலாம்.
* இந்திய அணியின் வலிமைமிக்க பேட்டிங் படை குறித்து?
சச்சின், சேவக், டிராவிட் என நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்களில் பவுலர்களை மிரட்டக் கூடியவர் கேப்டன் டிராவிட் தான். இவரை வெளியேற்றுவது மிகவும் கடினம். தற் காப்பு ஆட்டத்தில் கெட்டிக்காரரர். சச் சின், சேவக் போல் விளாசாமல் நிதானமாக ஆடும் ஆற்றல் படைத்தவர். அதிரடியாக விளையாடாத ஒருவரை அவுட் டாக்குவது எப்போதுமே சிரமம் தான்.
* இம்முறை பாகிஸ்தான் சாதிக் குமா?
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வீரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டனர். பவுலர்கள் தங்கள் பணியை திறம்பட செய்தனர். இருப் பினும் பாகிஸ்தான் சூழ்நிலை இந்தியாவுக்கு பழக்கமானது. எனவே, கூடுதல் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். கேப்டன் இன்சமாம் அபார "பார்மில்' இருப்பதால், இந்திய அணியை அசைக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன்.
source :www.dinamalar.com
|
|
|
|