Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 283 online users.
» 0 Member(s) | 280 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,298
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,229
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,289
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,626
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,052
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,458
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,023
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,238

 
  Tigers eye Jaffna city
Posted by: Vaanampaadi - 01-08-2006, 02:58 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

<b>Tigers eye Jaffna city</b>
Bull's Eye by a Special Defence Correspondent
<img src='http://www.sundayobserver.lk/2006/01/08/z_p11-Tiger.jpg' border='0' alt='user posted image'>

In the backdrop of increasing attacks on the security forces in the North, orders were given to the security forces to act in self defence. This has developed to a volatile situation with tension and panic being the order of the day in the peninsular.

Constant cordon and search operations have perturbed the LTTE sympathisers who harbour the Tigers that plan attacks. Many such families have left for Tiger held Kilinochchi to avoid security checks. Are these sympathizers offended by the constant security checks or does their leaving herald any possible LTTE offensive against the Government forces in the next few weeks?

Having disregarded international pressure to stop violence and the warning by the Co Chairs of the Tokyo donor group, the Tiger leadership has been preparing to launch a major offensive against the security forces in Jaffna intending to recapture the control of the peninsular. Newspapers reported this during the last week and Military Intelligence confirmed that Tigers are waiting until they are strategically prepared fully to face retaliation by the security forces.

It is also confirmed that the LTTE is deploying the fighting cadres in close proximity to the Forward Defence Lines (FDL) in the general area of Nagarkovil and Muhamalai, two areas that come under Tiger control at present.

The Tiger tactic is believed to be the consolidation of their full power to launch a final attack in the North to recapture Jaffna on the one hand, and on other hand, to delay peace talks by haggling over time frames and agenda. They are supposed to raise objections on minor matters and mark time while their military wing would be operating on the ground awaiting the best time for negotiations.

Once they recapture Jaffna town, the group would be able to stand strong at the negotiation table. Under such circumstances, their strategy is to bargain on the peace deal and demand control of the East even without any military struggle. Tigers would seek to convince the peace mediators too of their power and persuade them to talk to the Government to consider their demand to achieve their Eelam target on the pretext of peace.

Tigers believe that it is not impossible provided the peace mediators would pressurize the Government because so far, the Government has paid heed to their instructions. So Tigers would believe that the Government would allow them to consolidate their power in the East.

Tigers are heavily upset about losing control in the East during the last couple of years, especially after the split of Karuna, and the LTTE's main agenda is to use the Government forces to stop Karuna's operations in the East. If they become successful in neutralising Karuna's group in the East, it would be a major achievement of Pirabaharan's Eelam dream.

The Government seems to be undecided yet whether to retaliate against the enemy or restrain oneself as in the past. Apart from the Army, what instructions were given to other two forces, the Navy and the Air force? The two commanders are still silent on their stance on the LTTE offensives against their soldiers.

Therefore, a joint military scheming is vital to face the Tigers in any possible offensive in the North, and it is also imperative to prepare such plans in time as rushing to war without strategies would harvest irreparable human losses to the forces as well as their firepower.

Due to the dearth of their cadres, Tigers have started a new scheme to give military training to the civilians in the area, and many people have already been trained to handle sophisticated weapons in emergency situations.

Military surveillance reports confirmed last week of LTTE military standoff near the FDLs and busy training of civilians at Thalaiadi, a few miles North of Elephant Pass. At the same time, they have distributed leaflets in the LTTE stronghold areas of the East inviting deserters to return to duty on a temporary basis. They have been advised to call upon the nearest LTTE camp and join the cadres at least for a temporary period of time.

Meanwhile, Bhanu - the head of the fighting unit of Batticaloa has been summoned to serve in the North. This has has led to speculation of an imminent LTTE onslaught on Jaffna. Bhanu is a contemporary of Karuna, who mainly masterminded and planned some most successful attacks on several major military camps including Mullaitivu and the Elephant Pass. They were jointly responsible for many other killing sprees in the East where hundreds of security personnel and civilians were killed during the past two decades.

Information has also been received that the LTTE has positioned its artillery gun range near the FDLs, which is another clue to their preparedness for a possible major attack on Jaffna.

While the situation in the North is becoming more volatile, the cadres in Colombo have been ordered to be ready with their missions to upset the day to day life in the city.

Tigers have pressurised their proxies, the TNA MPs to protest against the arrest of any Tamil person whether they are LTTE cadres or not and mobilize all other forces including NGOs which appear in the name of human rights to join their protest and blame the government.

The government has to give serious thought to the security situation in the city as the LTTE may launch attacks in the city's vital targets. They had a free run during the UNP regime and riding on the CFA loopholes, they were able to bring arms and ammunition to the city and hide them in strategic positions to be used on demand.

Though the Government launched search operations in the city, it is hard to think that they will be able to raid the caches of arms or the true perpetrators. In this column recently we revealed how the LTTE use Sinhala criminal gangs on Tiger missions and on other secret operations such as drug trafficking, murdering politicians, military intelligence officers and others labeled as LTTE opponents.

A think tank comprising intelligence, military officials of three forces and police and officers of other vital institutions such as emigration and immigration, customs, motor traffic etc should sit together and find out ways and means to combat this menace without delay if the government is to fight terrorism in the city.

Despite security operations and taking in of over 900 suspects for questioning, the crime rate in Colombo has not been reduced when considering the criminal incidents in the city during the last week.

Apart from the killings in the North and East, there were several murders reported within the Colombo city during the last seven days. Police failed to find out any information of the killers or motive of the killings including the murder of an Indian business executive working in Colombo.

The real murder groups may have evaded any arrest during the operation. The authorities should focus their attention on why they failed to nab them.

Any ordinary man could imagine that they would have left the area before hand and it is worth investigating how such criminals received the news of possible security operations in the metropolis. As we revealed in our past columns, the news could be leaked to them by those within the police and security forces who are also in the pay lists of narcotic kingpins and other criminal gangs. Therefore, working with the betrayers would bring dangers to the genuine officers.

It is the general understanding that there is a shortage of narcotics in the city after the recent security operations. However, when considering the quantity of drugs and suspects taken into custody, one cannot help believing that the city is sans a major drug nuisance. Why did the police fail to apprehend the drug kingpins and their massive stocks? The reason would be the leakage of the news to the culprits beforehand.

Two weeks before the police started its raids, the IGP during his speech to his subordinates in a training workshop said that he would start a war against city drug dealers. This could pass a good message to the culprits and all the wanted men in the city fled to safe houses here or abroad. They removed their large stocks to the disappointment of the cops. It is learnt that many drug kingpins have flown to India for holidays soon after the IGP's speech was telecast over certain television channels.

According to Tamilnet, there is no LTTE operations taking place in the North as all killings, kidnapping and other violence are done by unidentified gunmen. Therefore, the duty of the security forces is to get the culprits and identify them. The LTTE has already violated the CFA over 5000 instances, and on all such occasions, the Government response was very vague.

Apart from an official complaint to the SLMM, no tangible step was taken and knowing this lukewarm response, Tigers made it a point to continue with violations, and in the abscene of a strong mediator, the Government is compelled to be satisfied with their decisions.

This could be the major reason, that the LTTE is firm on keeping Norway as the facilitator and the mediator in peace talks. The President's proposal to appoint two parties as facilitator and monitor is most welcome, and such a move would justify both parties provided the plan gets realised.

However, it is hard to believe that the LTTE would go for an all out war with the Government openly, due to multiple reasons. A major reason among them is the possible objections from the residents in the area who would no longer be able to bear the sufferings of a fourth war.

Another reason is the LTTE's reluctance to see destruction of their rehabilitated infrastructure and lose revenue in the form of ransom and tax. They are also afraid of losing international sympathy and possible sanctions. Therefore, the LTTE would continue with their hit and run tactics to destabilise the normal life to create political instability.

http://www.sundayobserver.lk/2006/01/08/fea03.html

Print this item

  சோல்ஹம்முடனான சந்திப்பை அடுத்து முக்கியஅறிவிப்பு
Posted by: Vaanampaadi - 01-08-2006, 02:33 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>சோல்ஹம்முடனான சந்திப்பை அடுத்து புலிகளின் முக்கிய அறிவிப்பு வெளிவரும் </b>

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்மின் இலங்கை விஜயத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள்கூறுகின்றன. இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டத்தை ஜனாதிபதி விரைவில் வெளியிட வேண்டுமென கடந்த மாவீரர் தின உரையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வலியுறுத்தியிருந்தபோதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இது வரை தீர்வுத்திட்டம் குறித்து புலிகளின் தலைமை விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு உட்பட தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கண்மூடித்தனமாக இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதோடு, இராணுவ கெடுபிடிகளும் நெருக்குவாரங்களும் அதிகரித்துள்ளன. போர்க்காலச் சூழலை விட மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் தமிழ் மக்கள் தற்போது இருப்பதால் புலிகளின் தலைமை கடும் விசனமடைந்திருப்பதாகவும் இதன் வெளிப்பாட்டை எரிக்சொல்ஹெய்மின் இலங்கை விஜயத்தின் போது புலிகளின் தலைமை அறிவிக்குமென்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை வரவுள்ள நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் ஜனாதிபதியையும் அரசாங்கத் தரப்பு பிரநிதிகளையும், விடுதலைப் புலிகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். முதலில் அரச தரப்பை சந்தித்துவிட்டே எரிக்சொல்ஹெய்ம் வன்னி செல்வாரென வெளியான தகவல்களை அரசு தரப்பு உறுதிப்படுத்தவில்லை. 24 ஆம் திகதி அவர் வன்னி சென்று புலிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நூலிழையில் தொங்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் ஸ்திரப்படுத்தும் நோக்கில் எரிக்சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளபோதும், இராணுவ கெடுபிடிகள், நெருக்குவாரங்கள் அதிகரித்து போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கும் போது எரிக்சொல்ஹெய்மின் விஜயம் தக்க பலனைத் தருவது சந்தேகமே என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் விடுதலைப் புலிகளின் தலைமை இது விடயத்தில் உறுதியானதும் இறுதியானதுமான தமது நிலைப்பாட்டை எரிக்சொல்ஹெய்மிடம் தெரிவிக்கக்கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, எரிக்சொல்ஹெய்மின் விஜயத்தின் பின்னர் இனப்பிரச்சினை விவகாரத்தில் முக்கிய திருப்புமுனையான அடுத்த கட்ட நகர்வை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இணைப்பு : kugan
Saturday, 07 Jan 2006 USA

http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&

Print this item

  போர் மூலம்தான் நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும்
Posted by: Vaanampaadi - 01-08-2006, 02:31 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும்: கா.வே.பாலகுமாரன்
[ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 00:51 ஈழம்] [புதினம் நிருபர்]
போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று இப்போது முடிந்த முடிவாகிவிட்டது என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.


வீரகேசரியின் வார வெளியீட்டுக்கு கா.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணல்:

கேள்வி: அரச படைகள் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஆயுத வன்முறையால் அடக்குகின்றனர். மக்களைத் தாக்குகின்றனர். இவ்வாறான சூழலில் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பொறுமை காத்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எல்லோரின் மனங்களிலும் போர் எப்போது தொடங்குமோ என்ற அச்சத்தில் உள்ளனரே?.

பதில்: போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று இப்போது முடிந்த முடிவாகிவிட்டது. அந்த வகையில் மக்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை நீங்கள் கேள்வியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பொதுவா சக மனிதர் எவரும் போரை விரும்புவதில்லை. அடக்கு முறையாளரைத் தவிர போருக்காக யாரும் போர் செய்வதில்லை.

ஆனால் எமக்குள்ள இறுதி வழியாக போரே வெளிப்படும் போது நாம் அதனை பின்பற்றியாக வேண்டும். இதற்கு இறுதியாக பொறுமையினையும் நிதானத்தையும் கடைப்பிடித்து எமது போராட்டத்தின் தார்மீக நியாயத்தை வெளிப்படுத்தி சிங்களத்தின் எவராலும் மாற்றமுடியாத கடும் போக்கினை அம்பலப்படுத்திய அதேவேளை இறுதிப் போருக்கான முழு ஆயத்தங்களையும் செய்து தேசியத் தலைவர் தமது வரலாற்றுப் பட்டறிவின் வழி உரியவர்களுக்கு உரிய காலத்தை வழங்கி தனது முடிவினை எடுக்கும் வேளை போர் தொடங்கும் என்று சொல்ல முடியும். ஆனால் இன்றைய நிலையில் மகிந்தர் முழு அளவிலான போர் ஒன்றை தமிழ் மக்கள் மீது விரைவில் தொடுப்பதற்கான சகல ஆயத்தங்களையும் செய்கின்றார் என்பதனை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம் என்பதனையும் சொல்ல முடியும்.

எமக்கு மகிழ்ச்சி என்னவென்றால் போரைத் தவிர்க்கவேண்டும் என்று விரும்புபவர்கள் தமது உள்மனதில் போரைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்பதுதான்.

கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறுகிய காலத்தில் ஒரு தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கும் படி மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு கால அவகாம் வழங்கியிருந்தார். அதை மகிந்தர் பயன்படுத்திய விதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: மகிந்தர் வித்தியாசமான புதிய பாதையில் செல்வேன் என தன்னை ஆரம்பத்தில் இனம் காட்டினார். ஆனால் ஓரிரு வாரத்திலேயே அவருடைய சுயரூபம் வெளித்தெரிய வந்தது. தலைவரின் கருத்தை அவர் கணக்கிலேயே எடுக்கவில்லை. அவர் ஒரு வெறுமையான பேச்சுவார்த்தை பற்றியே கதைக்கின்றார். போலியான சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பங்கு பற்றுவதில் புலிகளுக்கு உடன்பாடு இல்லை. வழமையான மரபுரீதியான தொடர்ச்சியான சிங்களத்தலைவராகத் தான் மகிந்தர்காணப்படுகின்றார்.

புதிய தலைவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கவில்லை என நாளை உலகம் எம்மீது ஒரு குற்றச்சாட்டுசுமத்தக் கூடாது என்பதற்காக மகிந்தர் எம்மை அணுக முதலே நாம் 2001 முதல் போர்நிறுத்தம் செய்ததுபோல் மகிந்தருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தோம்.

தலைவர் சொன்னது தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் படி. ஆனால் மகிந்தர் சொல்லுவது போர் நிறுத்தத்தை மீளாய்வு செய்வதுபற்றி. இது காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசு கையாளும் ஒரு உத்தியே. போர்நிறுத்தத்தை வலுப்படுத்துவது பற்றி பேச நாம் ஆயத்தமாகவுள்ளோம்.

கேள்வி: மகிந்தவின் அரசியல் நகர்வுகள் பற்றி உங்கள் பார்வை என்ன?

பதில்: மகிந்தர் வித்தியாமான பிரதேசத் தளத்திலிருந்து அரச தலைவராக வந்திருக்கின்றார். ஏழை மக்களின் பிரதிநிதி எனக் காட்டிக்கொள்ளுகிறார். அவர் தனது இருப்புக்காக போராடி இன்று அரச தலைவராகியுள்ளார். அவர் தலைவன் என்ற வகையில் சிந்திக்கின்றார்.

மகிந்தர் வித்தியாமான அணுகுமுறையினை கையாளுவார் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆரம்பத்தில் அப்படி காட்டிக் கொண்டார். ஆனால் அதை அவரால் தொடர்ந்தும் தக்கவைக்க முடியவில்லை. அவரிடம் புதிய உத்தி அல்லது நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வு பற்றிய சிந்தனை எதுவும் இல்லை. அவர் பழைய பண்டாரநாயக்கவாகவும் ஜெயவர்தனவாகவும் பிரேமதாவாகவும் சந்திரிகா போலவும் தான் சிந்திக்கின்றார்.

அவரின் நகர்வுகள் கைதேர்ந்த தந்திரமான குள்ள நரி போன்று உள்ளது. அவர் இரட்டை விளையாட்டை விளையாடுகின்றார்.

முன்னைய அரசாங்கங்களின் அடக்குமுறை கொள்கையினையே மகிந்தர் கையாளுகின்றார். அவரிடம் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மகாவம்ச கனவுலகில் இருந்து மீளவும் இல்லை. மகிந்தர் எமது பலம் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை. எமக்கு அரசியல் கற்பிக்க முயல்கின்றார். புலிகளை ஏமாற்ற முடியும் என நினைக்கின்றார். மகிந்தரின் கொள்கை சந்திரிகாவின் அல்லது தனது கட்சியின் கொள்கை இல்லை. அது ஜே.ஆரின் கொள்கை. அரசாங்கத்தை இயக்குவதற்கு மகிந்தர் திண்டாடுகின்றார்.

தமிழருக்கு உருப்படியாக மகிந்தர் எதையும் செய்யப்போவதும் இல்லை. அதை நாம் நம்பவும் தயாராகவும் இல்லை. பேச்சுவார்த்தை என்று மகிந்தர் ஒரு நாடகம் ஆடுகின்றார். அவர் தனது பதவியினை தக்க வைப்பதற்காகவே எல்லாத்தரப்பினையும் ஆதரிக்கின்றார். புலிகளையும் அணைக்க முயல்கின்றார். ஜே.வி.பி.யையும் திருப்திப்படுத்த முயல்கின்றார். நோர்வே, இந்தியா, ஜப்பான், சீனா,பாகிஸ்தான் எல்லோரையும் அனுசரித்து தந்திரமாக காய்நகர்த்த முனைகின்றார். எல்லோரையும் பயன்படுத்த முனைகின்றார். எல்லோரையும் இராஜதந்திர ரீதியிலும் ஏமாற்ற முனைகின்றார். ஆனால் புலிகள், மகிந்தரின் பொறியில் விழமாட்டார்கள் என்பதனை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அனைத்தையுமே ஒரு அணிக்குள் கொண்டுவர தன்னால் முடியும் என சிங்கள மக்களுக்கு அவர் காட்ட முனைவது அவரது அனுபவமின்மையினை வெளிக்காட்டுகின்றது. இத்தகைய அணுகுமுறைகள் யாவும் ஏற்கனவே அவரது முன்னோரால் பின்பற்றப்பட்டவேயாகும். புறச்சூழலில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை கணக்கில் எடுக்காமல் சிறுபிள்ளைத்தனமாக அவர் செயற்படுவதனை பார்க்கும் போது பெரும் பரிதாபமாக உள்ளது. மிக வேகமாக அம்பலப்பட்ட அவரின் எதிர்காலம் மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. அவர் வரும் காலத்தில் அடையப்போகும் அவமானங்கள் இலங்கை வரலாற்றில் எந்த அரச தலைவரும் பெற்றதாக இருக்காது. பிணத்தில் மொய்க்கும் "ஈபோல அவர் அதறிப் பதறி பதவி ஆசை கொண்டு அலைவதைப் பார்க்கும்போது ஒரு சக மனிதர் என்ற வகையில் மிகுந்த வெட்கம் அடைகின்றோம்.

கேள்வி: ஜே.வி.-பி.க்கும் மகிந்த ராஜபக்சவுக்குமான உறவு பற்றி உங்கள் கணிப்பு என்ன?

பதில்: மகிந்தவின் முக்கிய நண்பர் இப்போது ஜாதிக ஹெல உறுமய. மகிந்தவின் நண்பன் ஜே.வி.பி. அல்ல. மகிந்தவின் மோசமான எதிரியே ஜே.வி.-பி.

கேள்வி: அதை எப்படி நீங்கள் கூறுவீர்கள்?

பதில்: இரண்டு தரப்பினரதும் வாக்கு வங்கி ஒன்று. இருவரினதும் அரசியல் தளமும் ஒன்று (தெற்கு). ஒரு உறையில் இரண்டு வாள் இருக்க முடியாது. ஒன்று தான் இருக்க முடியும். ஜே.வி.பி.க்கும் மகிந்தருக்கும் இடையில் இன்று பனிப்போர் தொடங்கிவிட்டது. அங்கு ஒரு நிழல் யுத்தம் நடைபெறுகிறது.

ஜே.வி.பி. தன் அரசியலை இலக்காகக் கொண்டு நகர்கின்றது. அதற்காக மகிந்தரைப் பயன்படுத்துகின்றது.

ஜே.வி.பி. தன் வீச்சுக்கு முடியாததை மகிந்தரைக் கொண்டு செய்கின்றது. குறிப்பாக சர்வதே விவகாரத்தை மகிந்தவைக் கொண்டு கையாளுகின்றது. உள்நாட்டில் ஆதரவு பெறக்கூடிய அல்லது வாக்கு வங்கியை பலப்படுத்தக்கூடிய அம்சங்களைத் தான் கையாளுகின்றது. புலிகள் விடயத்தை மகிந்தவைக் கொண்டு கையாளுகின்றது. மகிந்தர் ஆபத்தான அபாயமான சூழலில் சிக்குண்டுள்ளார்.

ஜே.வி.பி.. முதுகில் எப்போது குத்தும் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார். தலைக்கு மேல் வாள் தயாராக உள்ளது. மகிந்தர் தன்னிச்சையாக சுயமாக இயங்க முடியாத பொம்மையாகவும் உள்ளார். மகிந்தர் பாவம் பலிக்கடாவாக உள்ளார். அரசியலில் ஏற்படும் இலாபம் எல்லாம் ஜே.வி.பி. தனதாக்கிக் கொள்கின்றது.

அரசியல் அவமானம் நட்டம் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர் மகிந்தர். மகிந்தரும் ஜே.வி.-பி.யும் யதார்த்தத்திற்கு புறம்பாகவே காய் நகர்த்துகின்றனர்.

உண்மையில் தங்களின் உண்மையான எதிரி பற்றி சிங்கள மக்களும் ஜே.வி.பியினரும் மகிந்தரும் உணராமல் இருப்பது அல்லது உணர்ந்து ஒத்துக்கொள்ள மறுப்பது இருபத்தொராம் நூற்றாண்டில் முன்னேற வேண்டிய சிங்கள தேசத்தின் சாபக்கேடாக மாறிவிட்டது. மகிந்தரின் உண்மையான நண்பர் ஜாதிக ஹெல உறுமய. அவரின் பாதுகாப்பு ஆலோகர் கொட்டகதெனிய. உண்மையில் ஜே.வி.பியின் பிரதானமான எதிரிகள் சிங்கள ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த இரு பிரதானமான முதலாளித்துவக் கட்சிகளும் தான்.

ஜே.வி.பியின் பிரதான எதிரி மகிந்தர். அவ்வாறே மகிந்தருக்கும் பிரதான எதிரி ஜே.வி.பி ஆகும் .

இன்று ஏதோ பொது எதிரியான தமிழ் மக்களுக்கு எதிராக தாம் ஒன்றாக இருப்பது போல தோற்றம் காட்டுகின்றனர். உண்மையில் ஆழமாக நோக்கில் தாம் பதவிக்கு வருவதாக ஒரு நிழல் திரையாக பகடைக்காயாக இருப்பவர்கள் எம்மை பயன்படுத்துகின்றனர். விரைவில் புலிகள் நிகழ்த்தப் போகும் புரட்சியின் விளைவாக சிங்கள மக்களுக்கும் சிங்களத்தின் ஒடுக்கு முறை ஆட்சியாளர்களுக்கும் இடையே இருக்கும் நிழல் திரை அகன்று விடும்.

அப்போது அவரவர் தமது உண்மையான எதிரிகளை அவரவர் நேரடியாக சந்திப்பர். அப்போது நாம் முதலில் சொன்னதே நடந்தேறும். இப்போது மகிந்தரின் உண்மையான எதிரி ஜே.வி.பி தான்.

புலிகளுக்கு பயந்து அவர் செயற்படுகின்றமைக்கு அப்பால் ஜே.வி.பிக்கு பயந்து அவர் செயல்படுவதை கவனிக்கமுடியும். மகிந்தர் எத்தனை காலம் தான் ஜே.வி.பிக்கு அஞ்சி செயல்பட முடியும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

கேள்வி: இலங்கை இனவிவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு உள்ளது?

பதில்: இந்தியாவின் கடந்தகால இலங்கை இனப்பிரச்சினை அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தியா இன்று நாகரிகமாகவும், நிதானமாகவும் செயற்படுகின்றது போல உள்ளது. இலங்கை இனவிவகாரத்தில் தலைநீட்ட விரும்பவில்லை. மகிந்தர் அரசாங்கம் ஜே.வி.பி.யின் அழுத்தத்தால் நோர்வேயை ஓரம் கட்டி இந்தியாவை இழுக்க முனைந்தது. ஆனால் இந்தியா அதற்கு உடன்படவில்லை. இந்தியாவை உள் இழுக்கும் முயற்சியில் மகிந்தருக்கு தோல்வி. அதனாலேயே மீண்டும் நோர்வேயினை சமாதான முயற்சியில் ஈடுபடும்படி மகிந்தர்கோரியிருக்கின்றார்.

மகிந்தர் அரசாங்கத்தையே அழைத்துக்கொண்டு டில்லிக்குப் போயிருக்கின்றார். இந்தியாவின் அழுத்தத்திலிருந்து தப்பவே ஜே.வி.பி. செல்லவில்லை. மகிந்தவின் சதியில் இந்தியா மாட்டிக்கொள்ளாது. மீண்டும் ஒருமுறை இந்தியா இலங்கையிடம் ஏமாற தயாரில்லை. அது கடந்த காலத்தை மறக்கவில்லை. 1987- 90 அனுபவத்தை அது மறக்காது. இந்தியா முட்டாள் இல்லை என்பதை மகிந்தர் புரிய வேண்டும்.

கேள்வி: பேச்சு வார்த்தை தொடங்குமா?

பதில்: மகிந்தர் பரிதாப நிலையில் உள்ளார். அவரின் சுயரூபம் தெரிந்து விட்டது. அவர்கள் தமிழருக்கு எதுவும் வழங்க தயாரில்லை. அரச படை பலவீனமாகவுள்ளது. அரச புலனாய்வுப்பிரிவு சீர்கெட்டுள்ளது. தெளிவான வெளிநாட்டுக்கொள்கை அரசிடம் இல்லை. உள்நாட்டுப் பொருளாதாரம் சீரழியத் தொடங்கிவிட்டது. பேச்சுவார்த்தைக்கு உருப்படியான திட்டம் எதுவும் அராங்கத்திடம் இல்லை.

கேள்வி: மேற்குலகின் நகர்வு பற்றி புலிகளின் நிலைப்பாடு என்ன?

பதில்: வரலாற்று ரீதியில் சர்வதே மூகம் எப்போதுமே அடக்குமுறை அரசுகளின் படையின் வலுவைப் பேணுவதற்கே உறுதுணையாக உள்ளது. அடக்கப்படும் மக்களின் போராட்ட பலம் பலவீனப்படுத்துவது பற்றியே அவர்கள் முயற்சி எடுக்கின்றார்கள். இதுபற்றி நாம் கவலைப்படவில்லை. இதுதான் உலக நியதி. மேற்குலகின் அனைத்துச் செயற்பாடும் அரசைக் காப்பாற்றுவதாக உள்ளது. அரசின் நிதி வளத்தை பேணுவதிலும் அதன் பொருளாதாரத்தை காப்பாற்றுவதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளது.

அடிமைப்படுத்தப்படும் மக்கள் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. சிங்கள இராணுவப் பலம் அதிகரிப்பது பற்றி கேள்வி கேட்கவில்லை. ஆனால் புலிகளின் படைபலம் வலுப்பெறுவதுபற்றிதான் கேள்வி கேட்கின்றனர். இது அநீதியானது.

ஆயினும் தற்போதைய நிலையில் மேற்குலகம் கள நிலைவரங்கள் பற்றிய உண்மைத் தன்மையினை உணர்ந்திருக்கும் என நம்புகின்றேன். தமிழ் மக்களின் போராட்ட சக்தியின் வலு அதிகரிக்கப்படுவதன் ஊடாகவே இலங்கையில் அமைதி பிறக்க முடியும் என்கின்ற யதார்த்தமான ஆனால் அவர்களுக்கு கசப்பான உண்மை. இப்போது உணர்த்தப்பட்டுள்ளது என நான் நம்புகின்றேன்.

கேள்வி: நோர்வேயின் நிலைப்பாடு பற்றிய யதார்த்த பூர்வமான உண்மை என்ன ?

பதில்: நோர்வே எம்மை பொறுத்த வரையில் நேர்மையாகவும் உண்மையான நடுநிலையுடன் இது வரை செயல்படுகிறது. ஆகவே தான் சிங்கள தேசம் நோர்வே மீது கொதிப்படைந்துள்ளது. சிங்கள தேசத்தைப் பொறுத்தளவில் நடு நிலையாக அல்லது அனுசரணையாளராக வருகின்ற நாடு எதுவாக இருந்தாலும் தமக்கு ஆதரவாக இருந்தாலேயொழிய நீதியை பேசுபவர்கள் அனைவரையும் புலிகளின் ஆதரவாளராக கண்டிக்கப்படுவர்.

இந்தியாவையும், கதிர்காமர் போன்றவர்களையும் இலங்கை தலையில் தூக்கி வைத்து ஆடியமைக்கு இதுவே காரணமாகும்.

நோர்வேக்கு இது மிகவும் கசப்பான அனுபவமாகவே இருந்திருக்கும் என நாம் கருதுகின்றோம். ஏன் என்றால் அனுசரணையாளராக வரும்படி அழைப்பு விடுத்து அதே வேளை அனுசரணைப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்காது தடங்கல்கள் செய்து தாங்கள் இழுத்த இழுப்படிப்பு எல்லாம் நோர்வே வராதபோதும் தூக்கி எறிந்து நோர்வேயினை மிகுந்த அவமானத்துக்கு சிறிலங்கா உள்ளாக்கியுள்ளது.

ஒரு நல்ல இணக்கமான நடு நிலை மனிதனாக கருதப்படும் எரிக் சொஹெய்மை சந்திரிகாவும் அவமானப்படுத்தினார். தற்பொழுது மகிந்தரும் அவமானப்படுத்துகிறார். ஜே.வி.பி யை திருப்திப்படுத்தவும் சிங்கள மக்களை ஏமாற்றவும் மகிந்தர்தன் இயலாமையினை மறைக்கவும் நோர்வே ஒரு பகடையாகவே அல்லது எரிக் சொல்ஹெய்மையும் ஒரு பகடைக்காயாக பயன்படுத்தப்பார்க்கின்றது.

நோர்வே இவ் உண்மையை உணர்ந்திருக்க கூடும். இருந்த போதும் இத் தீவில் அமைதி வரவேண்டும் என்பதற்காக எத்தகைய அவமானத்தையும் சகித்துக் கொள்ளும் நோர்வேயை தமிழ் மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவில் வைத்துக் கொள்வார்கள் என்றார் கா.வே. பாலகுமாரன்.


Puthinam

Print this item

  கண் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரும் ஐந்து வயது சிறுவன்
Posted by: kurukaalapoovan - 01-07-2006, 10:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

கண் சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி கோரும் ஐந்து வயது கிளிநொச்சி சிறுவன்

விளையாடிக் கொண்டிருந்த போது தடி கண்ணில் தாக்கியதால் இடது கண்பார்வை இழந்த சிறுவனுக்கு அவசர சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி கோரப்பட்டுள்ளது. நாலாம் வாய்க்கால் மருதநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து வயதுடைய அருளம்பலம் நிரோஜன் என்ற சிறுவனே இடதுகண் பார்வையை இழந்துள்ளார். இடது கண் பார்வையின்மையால் வலது கண்ணும் இரவில் சிறுவனுக்குத் தெரியாமலுள்ளது. இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு இரண்டு இலட்சம் ரூபா உடனடியாக தேவைப்படுகிறது.


இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கான நிதியைத் திரட்டும் பணியில் கிளிநொச்சி மாவட்ட மாற்றீடான வலுவுள்ளோர் சங்கம் ஈடுபட்டுள்ளது.

இச்சிறுவனின் கண் சத்திரசிகிச்சைக்கு உதவி செய்யக்கூடியோர் கிளிநொச்சி மாவட்ட மாற்றீடான வலுவுள்ளோர் சங்கத்தொலைபேசி இலக்கமான 0212285784 உடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
http://sooriyan.com/index.php?option=conte...id=2755&Itemid=

Print this item

  -வாழ்ந்து பார்க்கலாம்-
Posted by: வர்ணன் - 01-07-2006, 08:38 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)


நாற்றோடு காற்றுவந்து மோதும் - -
கரைகழுவிபோகும் அலைகள் ஏதோ ராகம் பாடும்- -

பூ ஒன்றின் இதழெடுத்து பொட்டிடு தோழி- -
பொன்மாலையதன் வண்ணம் அள்ளிவந்து
வாயிலை அலங்கரி!

இராவென்ன பகல் என்ன சொல்லு?
நீ இரவுக்குள் பகலாகி நில்லு!
மழையென்ன வெய்யில் என்ன -சீ போ!
வாழ்வென்ன பலமுறை வருமா?
உந்தன் வாழ்வு முடிந்து போனால் -பூமி
அதை உனக்கு திருப்பி தருமா?

வானத்தை பாரடி தோழி- நீல நிறத்தை கரைத்தூத்தியங்கே
நிலவுக்குள் பின்னால் சென்று ஒழிந்து கொண்டதாரடி?
வானம் குடைபிடிக்கிறது பார்-பார்!
அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை- -
வாழ்ந்து பார்ப்போமே?- வா வா!

வரைமுறையென்ற தாலிகட்ட பிறர்யார்?
உந்தன் வாழ்வதற்க்கு வேலி போட அவர் யார்?
புன்னகைக்கும் நேரமதில் வந்து தோழணைப்பார்-அறி
பொங்கியழும் நேரமதில் போயே போவார்-
அவர் உறவை நீ முறி!

உயிர்-அது என்னவென்று நினைத்தாய்?
ஊசலாடும் ஒரு பயிர் நீ அறிவாய்!
அறிவு கிண்ணத்தில் நீர் எடுத்தற்க்கு ஊற்று
அகிலமெங்கும் சென்று உன் கொடி நாட்டு!
திரும்பி வா- உன் தெருவெங்கும் ஆனந்த கூத்தாடு!

பசியென்று வருபவன் எவனோ- உனக்கில்லையென்றானாலும்
ஒருபிடி அன்னம் அவன் வாயிலூட்டு- -
அன்பென்ற ஊஞ்சல் கட்டி அதில் அவனை இருத்தி ஆட்டு!

காதல் தவறென்று சொல்வார் பாரு- -
காதலில்லாமல் பூமியென்பது இங்கேது?
காதலிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவரே - காதல் அசிங்கமென்று சொல்வது அதிகம் நீ பாரு!

* * * *
மதம் என்ன குலம் என்ன போடா- -
மலையென்ன மடுவென்ன போடா- -
சதி பின்ன சிலரெதுவோ சொல்வார்
அடா சாகபோகும் மனிதனுக்கு சாதி சமயம் ஒரு கேடா?

நீ பெற்ற அறிவதனை பிறர்க்கு சொல்லு- -
பிறர் கொண்ட அறிவதனை கேட்டு வாங்கு!

அழகென்பதெது என்று சொல்லு?

ஐஸ்வர்யா- சந்தியா- அஜித்?
அமெரிக்கா - சுவிஸ்- அவுஸ்ரேலியா?

உலகமெல்லாம் சுற்றிவந்து ஒவ்வொன்று சொல்வாய் சீ..சீ
உன் வீட்டுக்குள்ளேயே விடை இருக்கு பார் பார்!

ஐயிரண்டு மாதம் சுமந்து பெற்றாளே எம் அன்னை
அவளே உலகத்தில் பேரழகு போ போ!
-வர்ணன் -

Print this item

  தொப்புள் கொடி உறவொன்று...
Posted by: நர்மதா - 01-07-2006, 08:27 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (3)

எழுதியவர் ஷண்முகி
tanilamutham

அன்று அதிகாலை வேளை கண்கள் மூடியபடியே இருக்க நினைவுகளை அசைபோட்டுக் கொண்டேஇ படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். அதில் நினைவுகள் வெற்றி பெற்றுக்கொள்ளஇ நித்திரை மெல்லென விடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று எனக்கு பதினெட்டாவது வயது. என் மனம் ஏனோ என் அம்மாவை நினைத்துக் கொண்டு ஏங்கியது.

என் சின்னச் சின்ன தேவைகள்இ என் அன்பை முழுவதுமாக கொட்டிக்கொள்ள... அம்மா என்னுடன் இருந்திருந்தால்இ எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்ன செய்வது. ம்... அன்று செய்ய வேண்டிய கடமைகள் ஒவ்வொன்றையும் மனதினுள் எடைபோட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வந்த அப்பா
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களம்மா..." என்றபடியே முத்தம் தந்து விட்டுஇ "எப்போதும் போல நீ நல்லா சுகமா இருக்கோனும்...” என்று வாழ்த்தி விட்டுப் போகின்றார்.

நானும் எழும்பிஇ காலைக் கடமைகளை செய்ய முற்படுகிறேன். அனைத்தையும் முடித்துவிட்டுஇ அம்மாவின் படத்துக்கு விளக்கேற்றிஇ மலர்கள் தூவி வணங்கியபடியே... இன்றுதான் முதன்முதலாக அம்மாவின் படத்தைப் பார்ப்பதுபோல் வைத்த கண்வாங்காமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.

ம்... என் நினைவு முழுவதும் அம்மாதான். எல்லோரும் சொல்வது போல் நான் அம்மா மாதிரிதான் இருக்கிறன். என்னைப்பார்த்தால் அம்மாவை பார்க்கத் தேவையில்லை என்பது போல் உருவ ஒற்றுமை. அப்படி கச்சிதமாக இருந்தது. உறவினர் நண்பர்கள் பலர் கூறியிருக்கிறார்கள். "நீ அசல் அம்மா மாதிரியே உரிச்சி வைச்சி பிறந்திருக்கிற..." என்று சொல்லும் போதுஇ நான்தான் "அம்மா தான் என்னைப்போல் இருக்கிறா” என்று சிறுவயதில் விளையாட்டாக சொன்னவற்றையே இப்போதும் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறேன்.

இன்றுதான் முதன் முதலாக "ம்.... அம்மா வைப்போலத்தான் நான் இருக்கிறேன்" என்று முழுமனதாக ஏற்றுக் கொள்கிறேன். அம்மாவை நினைக்கும் போது என் உடம்பில் என்னையறியாமல் ஓர் புது உணர்வு ஊடுருவுவது போல் உணர்ந்து கொள்ளஇ என் கண்கள் பனிக்கத் தொடங்குகின்றன. அம்மாவின் நினைப்பு இதயம் முழுவதும் உந்தி எழ... கண்ணீர் பொல பொலவென வழியத் தொடங்குகிறது.

"அம்மா அம்மா... எனக்கு அம்மா வேண்டும்..."

"என்னம்மா... பிறந்த நாள் அதுவுமாக ஏன் இப்படி" என்று அப்பா அன்பாக கூறியபோதுஇ என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. "அப்பா..." என்றபடியே மீண்டும் அழுத்தொடங்குகிறேன். மனதிலுள்ள பாரம் இறங்குமட்டும் அழட்டும் என்று அப்பாவும் சில கணங்கள் மௌனமாகவே இருக்கின்றார்.

"அப்பாஇ நான் அம்மாவின் கல்லறையைப் பார்க்கோணும். அந்தக் கல்லறையை நான் தொட்டுக் கும்பிட வேண்டும். என்னுடைய அம்மா வாழ்ந்த பூமியை நான் ஒருக்கா பார்க்கோணும். எனக்கு அம்மா வேண்டும்" என்றேன் வழக்கமாக அழுதபடியே...

இப்படி நான் கூறுவது ஒன்றும் புதிது இல்லை... ஆனால் அப்பா நெடுக இதைத்தான் சொல்வார்.

"அகிலாஇ எனக்கும் உன்னைக்கூட்டிக்கொண்டு ஊருக்கு ஒருக்கா போய் வரவேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கம்மா ஆனால்... போற இடத்துல ஆமிக்காரங்கள் எனக்கோ உனக்கோ ஏதும் செய்து போட்டால் என்டால்... அதை என்னால் நினைச்சு பார்க்க முடியாதும்மா. எப்பபார்த்தாலும் ஆமியிண்ட கெடுபிடிதான் அதிகமா இருக்கும்.." அப்பா வழமையாக ஒப்புவிப்பவை இவை.

ஆனால்... இன்று வழமைக்கு மாறாக "பிள்ள அகிலா இந்தமுறை மாவீரர் வாரத்தில்ல நாம் ஊரில்ல நிற்கிறோம். இது பிராமிஸ்(pசழஅளைந). இப்போ சந்தோசம் தானே..?" என்று கூறிய போது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமே. வானத்தில பறக்கிற மாதிரி அப்படி ஒரு உணர்வு. என்ட நண்பிகள் எல்லாம் தமிழீழத்தைப்பற்றிச் சொல்லேக்க எனக்கு சரியான கவலையாய் இருக்கும். ஆனா இப்ப எனக்கிருக்கிற சந்தோசத்தில்ல என்ன செய்யுறதெண்டு தெரியல..

அம்மாவை சின்னவயசுல பார்த்தது எனக்கு பெரிசா நினைப்பில்லை. எனக்கு எல்லாமே என் அப்பாதான். அம்மா சயனைட் குப்பிகளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டுஇ மாவீரராக மரணித்து கல்லறைகளுக்குள் துயின்றபோதுஇ எனக்கு வயது மூன்றாக இருந்தது. என் அப்பா என்னை அழைத்துக் கொண்டுஇ தன்னந் தனியனாய் என் வாழ்வு சிறப்பாக அமையும் நோக்குடன் லண்டன் நாட்டுக்கு அகதி அந்தஸ்து தேடி வந்தார்.

அன்றிலிருந்து அவர் எனக்காகவே வாழ்ந்து வருகின்றார். அடிக்கடி சொல்லிக் கொள்வார். "எப்பாடு பட்டாவது உவள நல்லா படிப்பிச்சு போடனும். நல்ல ஒருத்தனிட்ட இவளை ஒப்படைக்க வேண்டும்" என்பார்.

இதைவிட அப்பா லண்டலில் நடைபெறும் ஒவ்வொரு மாவீரர்தின நிகழ்வுகளுக்கும் என்னை அழைத்துச் செல்வதுஇ தன்னால் ஆன உதவிகளையும்இ பங்களிப்புக்களையும் செய்யத் தவறுவதே இல்லை. அப்படித்தான் ஒருநாள் என்னை மாவீரர் நிகழ்வுக்கு அழைத்துக் கொண்டு சென்ற சமயம்இ அங்கு ஒலிக்கும் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சமயம்...

அந்த பாடலில் வந்த வரிகள்...

படலையில் தினம் காத்திருப்பேன்
பள்ளி சென்று நீ திரும்பும் வரை
சுடலைக்கு உன்னை அனுப்புவேனோ
சோதனை ஏனனை ராசாவே

பகைவர் குண்டுகள் நெஞ்சினிலே நெஞ்சினிலே
சுமக்கும் உன்வீரம் வரலாறு ஆனதே

என் மனதை சற்றே கலங்க வைக்கின்றது.

"அப்பாஇ இந்தப் பாடலையெல்லாம் கேட்கும் போது... மனசுக்குள்ள ஏதோ ஒரு உணர்வு... சோகம்... வலி... என்ன என்று சொல்லத் தெரியல எனக்கு அழவேண்டும் போல இருக்கு. ஏன் எங்கட நாட்டில இப்படி... சாவதை நினைத்தால்... எனக்கு கவலையா இருக்கு அப்பா..." என்றேன்.

அப்போது அப்பா மிகத் தெளிவாகஇ
"அகிலா மாவீரர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லையம்மா. அவர்கள் வாழ்ந்த மண்ணிலே விழுதாகி வேர் விடுகிறார்கள். அவர்கள் காற்றில் கலந்து எம் சுவாசத்தில் வாழ்கிறார்கள்..." என்று கூறியதை அடிக்கடி என் நினைவில் நிலை நிறுத்திப் பார்த்து இருக்கிறேன்.
இம்முறை தமிழீழத்தில் இதன் நிகழ்வுகளை நேரில் காணப்போவதோடுஇ என் அம்மாவின் கல்லறையை காணப் போகிறோம் என்ற மகிழ்வே என்னிடம் அதிகமாக இருந்தது.

தமிழீழ மண்ணில் காலடி வைத்தபோதுஇ எமக்கு கிடைத்த வரவேற்பு கண்டு உடம்பெங்கும் ஒர் இனம்புரியாத உணர்வு ஊடுருவதை அறிந்து கொள்கிறேன். அது இன்பத்தின் பிரதிபலிப்பா...? அல்லது அது என்ன...? என்று என்னால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. பாதைகளில் பாதம் படப்பட எனது சின்னவயதின் காலத்துக்குள் புகுந்துவிட்ட நினைப்புடன்இ வீடுகள் ஒவ்வொன்றையும் என் கண்கள் தடவிய படியே வந்தன.

நான் சிறுவயதில் ஒடியாடிஇ விளையாடிய இடம்இ வீடு எல்லாவற்றையும் அப்பா காட்டினார். என் அம்மா வாழ்ந்த இடமும் அதுதான். அம்மாவின் கைகளை பற்றியபடி இந்த வீதியெல்லாம் சுற்றிஇ சுற்றி வந்திருக்கிறேனே. மீண்டும் ஒருமுறை என் ஆசை அம்மாவின் கைகளை இருக பிடித்துக் கொண்டு இந்த பாதையை... ஏன் இந்த உலகத்தை சுற்றிக்கொண்டு வர மாட்டேனா... என்ற ஏக்கம் பெருமூச்சாக வெளிப்படுகிறது.

வீட்டிலிருந்த என் பெரியம்மாஇ பெரியப்பா எல்லோரும் எங்களை அணைத்து தங்கள் அன்பைத் தெரிவித்துக்கொண்டார்கள். பெரியம்மா என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னாஇ
"அசல் அம்மா வை வார்த்து எடுத்த மாதிரி அப்படியே இருக்கிறாள்.." .

நாம் வருவதை தெரிந்து கொண்ட உறவினர்கள் பலர் வீட்டிற்கு வந்து சுகம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதில் இருந்த ஒரு பெரியவர்இ
"உவள் சந்தியாவின்ட பெட்டையே. நான் அவள்தான் வந்து நிக்கிறோளோ.. என்டு நினைச்சுப்போட்டன். ம்... அவள் தான் மாவீரரா போயிட்டாள்" என்று சொல்ல அதற்கு மற்றவர் "சந்தியாவின்ட பெட்டைதான் உவள். அசல் அம்மாவைப்போலவே தானே இருக்கிறாள்..." என்று சொல்லஇ
இன்னும் ஒருவர் "இண்டைக்கு காலத்தால உந்த காகம் விடாம கத்திக் கொண்டு இருந்த போதே நினைச்சனான். யாரோ வரப்போயினம் என்டு..." என்றார்.

சாய்மனைக் கதிரையில் அமர்ந்திருந்த வயதான ஆச்சி "கடவுளான உந்த பிள்ள சந்தியா இருக்குமட்டும் எனக்கு கரைச்சல் இல்லை. உந்த கிணத்துல தண்ணி அள்ளி தாரது எல்லாம் உவள் தான்..." என்றும் இப்படி எத்தனையோ உரையாடல்கள்.

அம்மாவைப்போல் நானிருக்கிறேன் என்று எல்லோரும் கூறியதில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அப்பாவின் முகத்திலும் என்றுமில்லாத மகிழ்ச்சிக்களை... அன்று இரவு முழுவதும் வீட்டு முற்றத்தில் அமர்ந்த படியே உரையாடிஇ சாப்பிட்டது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்நிய நாட்டில்இ அந்நியமாகிப்போய்இ அன்னியனுக்கு அகப்பட்ட வாழ்க்கையில் அகதியாய் வாழ்ந்த வாழ்க்கைக்கும்இ உறவினரோடு உறவினராய் அளாவலாவி வாழ்கின்ற வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசமும்இ எல்லாம் மறக்கமுடியாத நினைவுகளாயும் இருந்தது.

அம்மாவின் இளமைக்காலம்இ படிப்புஇ அம்மாவின் குறும்புத்தனங்கள்இ இலட்சியங்கள் எல்லாம் மணிக்கணக்காக அதை உறவினர்கள் சொல்ல... சொல்ல... எனக்குள் அம்மா உயர்ந்து கொண்டே நின்றாள். அம்மா உனக்கு நான் மகளாக பிறந்தது அது நான் செய்த புண்ணியம்.

அன்று இரவு முழுவதும் என் நினைவில் அம்மாவைப்பற்றிய நினைவுகளே... வலம் வந்து கொண்டே இருந்தன. அடுத்த நாள் நானும் அப்பாவும்இ உறவினர்களும் அம்மாவின் கல்லறைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டுஇ அங்கு சென்று அடைந்தோம்.

நெருப்பாய் கனலும் நெஞ்சத்துடன்இ பொங்கி நுரைத்துக் கரையுடைத்துப் பாய்ந்து கொண்டிருக்கும் போராட்ட நதிவேகம் எனக்குள் மெல்லென தொற்றிக்கொள்ள ஆரம்பித்தக் கொண்டிருந்தது.

அடுத்தகணமே அத்தனையையும் சாந்தமாக்கிஇ விழிநீர் பூக்கவைக்கும் இயல்பிற்குறியவர்களாக அங்குறங்கும் மாவீரர்கள் கல்லறைகள் அமைந்திருந்ததன.

அங்கே... என் அம்மாவின் கல்லறையில் விளக்கேற்றிஇ தொட்டு வணங்கியபோது... என் கண்கள் பனிக்கத் தொடங்கன. அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுவது போல்இ அம்மாவின் கல்லறையை கட்டிக் கொண்டு ஓ... வென அம்மாஇ அம்மா... என்று அழ வேண்டும் போல் ஒர் துடிப்பு... வேகம்... எனக்குள் அடக்கிக் கொண்டேன். அப்பா கூறியது இப்போதும் என் நினைவில் எதிரொலித்தபடியே... எனக்குள் புது தைரியத்தைத் தந்து கொண்டிருந்தது.

"அகிலா மாவீரர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லையம்மா. அவர்கள் வாழ்ந்த மண்ணிலே விழுதாகி வேர் விடுகிறார்கள். அவர்கள் காற்றில் கலந்து எம் சுவாசத்தில் வாழ்கிறார்கள்."

அப்பாவின் பார்வை என்மீது விழுகின்றது. எங்கே... நான் அழுதுவிடுவேனோ... என்று. ஆனால் என்னைப்பார்த்து அப்பா ஆச்சரியப்படுகின்றார்.

எல்லோரும் என்னை அம்மா மாதிரி என்று சொல்றார்களே... அப்படிப்பட்ட எனக்கு மட்டும் ஏன் அம்மாவின் நெஞ்சினில் நிலை நிறுத்திப்போன இலட்சியம்இ நாட்டுப்பற்று போன்ற உணர்வுகள் இல்லாமல் போய்விட்டது. அம்மாவின் தொப்புக்கொடி உறவாய் பிறந்த எனக்குள் அவை எங்கே ஒழிந்து போனது...? என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணீரால் வெறும் வார்த்தைகளால் அழிந்து விட முடியாத துயரம் ஒன்று நெஞ்சுக்குள் தீயாகியது. கல்லறையில்இ வைக்கப்பட்ட தீப ஒளியில்இ என் இதயத்துள்ளும் ஒரு தீச் சுவாலை ஒன்று பிரவாகமெடுத்துஇ சங்கமித்துக் கொண்டிருந்தது.

உள்ளத்தின் வெள்ளமது நதிபோல அசைந்துஇ என்னிதயத்தின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த என் மனப்பறவையது விழித்துக் கொண்டு இசைக்கின்றது... என் மண்! என் மக்கள்! என் மொழி!

என்றோ ஒர் நாள் எம் இனத்தின் எல்லா துன்பமும் தொலைந்து போய்இ அங்கே அத்தனை அடிமைத்தனமும் முடிந்து போன வாழ்விருக்கும். அதுவரை என் வாழ்வின் போராட்டமும் தொடர்ந்தபடியே... தொப்புள் கொடி உறவாய்.... பரிணமிக்கப்போகின்றது.


(பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனை.)

Print this item

  ஒரு யுத்தம் தான் தீர்வா?
Posted by: kurukaalapoovan - 01-07-2006, 07:38 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<b>ஒரு யுத்தம் தான் தீர்வா..?</b>
<i>-நிலாந்தன்-</i>
ஒலி வடிவில்: http://www.tamilnaatham.com/audio/2006/jan...n/20060108.smil
எல்லாச் சமாதான முயற்சிகளும் ஏதோ ஒரு வலுச்சமநிலையின் மீதே கட்டியெழுப் பப்படுகின்றன. பரஸ்பரம் இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வலுச்சம நிலையானது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெறும்போது குறிப்பிட்ட சமாதான முயற்சிகள் வெற்றிபெறுகின்றன. மாறாக சமாதானத்தில் ஈடுபடும் தரப்புக்கள் நிலவும் வலுச்சமநிலையை தமக்குச் சாதகமாக மாற்றமுடியும் என்று நம்புமாக இருந்தால் அல்லது வலுச்சமநிலை தனக்குப் பாதகமாய் மாறிவருகிறது என்று ஏதாவது ஒரு தரப்பு அஞ்சுமாக இருந்தாலும் அந்த வலுச்சமநிலை தளம்பத்தொடங்கிவிடும். அதாவது சமாதான முயற்சிகள் ஈடாடத் தொடங்கிவிடும்.

பொதுவாக வலுச்சமநிலை என்ற வார்த்தை அதன் போரியல் அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வலுச்சமநிலை எனப்படுவது தனிய யுத்தகள நிலவரங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அதற்கும் அப்பால் பின்வரும் காரணிகளும் ஒரு வலுச்சம நிலையை உருவாக்குவதில் தவிர்க்கப்படவியலாத பங்கை வகிக்கின்றன....
...
.....
......
இந்த எல்லாக் காரணங்களினாலும் வலுச்சமநிலை குழம்பிவிட்டது என்று மகிந்தவும் சரத்பொன்சேகாவும் நம்புகிறார்கள்.

இப்படிக் குழம்பிய வலுச்சமநிலை காரணமாக இருதரப்பும் தத்தமது நிலையை முன்னேற்றுவதற்காகவே ஒரு மென்தீவிர யுத்தத்தில் ஈடுபடுவதாகவும்இ ஒரு முழுத்தீவிர யுத்தத்தில் ஈடுபடும் நோக்கம் இருதரப்பிடமும் இல்லை என்றும் தமிழ் பகுதிகளில் இயங் கிவரும் சில சர்வதேச தொண்டர் நிறுவனங்களில் உள்ள சில மேல் நாட்டவர் கள் கருதுவதாக கொழும்பில் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

பொங்குதமிழ் படையின் தாக்குதல்களோ அல்லது ஆர்ப்பாட்டங்களோ ஊர்வலங் களோ வலுச்சமநிலையை மாற்றப்போது மானவை அல்ல. பதிலாக அவை வலுச்சம நிலை மாற்றப்படவேண்டிய அவசியத்தை முன்னுணர்த்துகின்றன என்பதே சரி.

வலுச்சமநிலை குழம்பிவிட்டது என்றாலோ அல்லது நிலவும் வலுச்சமநிலையை ஏதாவது ஒரு தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ அதன் அர்த்தம் ஒரு புதிய வலுச்சமநிலையை உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பதே.ஒரு புதிய வலுச்சமநிலையை உருவாக்குவது என்பது இப்பத்தியின் தொடக் கத்தில் கூறப்பட்டது போல வலுச்சமநிலையைத் தீர்மானிக்கும் காரணிகளில் நிர்ணயகரமான மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்தாலேயே சாத்தியப்படும். அதன்படி ஒரு யுத்தம் ஒன்றின் மூலமோ அல்லது சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளின் அதிகரித்த ஈடுபாடு அல்லது அதிகரித்த அழுத்தம் என்பவற்றின் மூலமாகவோதான் நிலவும் வலுச்சமநிலையை மாற்றலாம்.
....
......
அப்படியொரு யுத்தம் மூளும்போது அதில் பிராந்திய சக்திகளின் ஈடுபாடு எந்தளவுக்கு இருக்கும் என்பதன் அடிப்படையில் ஒரு புதிய வலுச்சமநிலை உருவாகும். அப்புதிய வலுச்சமநிலையே மற்றொருகட்டச் சமாதான முயற்சிகளின் ஆயுளையும் அவற்றுக்கிருக்கக் கூடிய வரையறைகளையும் தீர்மானிக்கும். அல்லது,அதுவும்கூட அதற்குமுந்திய எல்லா வலுச்சமநிலைகளையும் போல யுத்தத்தை மற்றொரு கட்டத்துக்கு ஒத்தி வைக்கப்போகும் மற்றொரு இடைத்தரிப்புக் காலத்துக்குரிய அடிப்படையாக அமைதல் கூடும்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=8&

Print this item

  சிறிலங்காவுக்கு ஆயுதம் வழங்கியது இந்தியா
Posted by: vasisutha - 01-07-2006, 06:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (34)

<b>சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!! </b>


சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.


இந்திய சிறப்பு விமானத்தின் மூலம் இந்த 4 விமானப் பாதுகாப்பு கருவிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

தங்களிடம் இருக்கும் ஸ்லிஸ் ரக விமானங்கள் இரண்டைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று சிறிலங்கா அஞ்சியிருந்தது.

இந்த நிலையில் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள இந்த விமானப் பாதுகாப்புக் கருவிகள் மூலம் முழு இலங்கையையும் கண்காணிக்க முடியும் என்றும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் குறித்து உடனடியாக அறிந்து கொள்வதற்கும் அவற்றை உடனடியாக அழிப்பதற்கும் உதவும் என்றும் விமானப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் விமானப் படைக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் கிடைத்த சிறப்பு வெற்றி என்றும் அவர் கூறினார்.


http://www.eelampage.com/?cn=23187

Print this item

  இன்று போய் நாளை வா!
Posted by: kurukaalapoovan - 01-07-2006, 01:11 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

<b>இன்று போய் நாளை வா! Atha Gila Heta Enda!</b>

<i>வடக்குக் கிழக்கினைச் சிங்கள தேரவாத பௌத்தத்திற்கு உரிமைகோரும் Ven. Ellawala Medhananda Thera The Sinhala Buddhist Heritage in The East and The North of Shri Lanka என்ற நுல் பற்றிய விமர்சனம் </i>
சாணக்கியன் 07.01.2005, சனி.

இலங்கையில் அன்று, முடிவுகளைத் தாமாகவும், சரியாகவும் எடுக்கும் பக்குவ நிலையை அடையாத சிறுவர்கள, தேரவாத பௌத்த பிக்குகளாக ஆக்கப்பட்டும், கத்தோலிக்க பாதிமார்களாக ஆக்கப்பட்டும் வந்துள்ளனர். ஆனால், இன்று, எந்தவித முடிவுகளையும் தாமாகச் சிந்தித்து எடுக்க முடியாத நிலையில் இருக்கும் சிறுவர்களுக்கு இவை தொடரும் அதே வேளையில், தென்னிலங்கையில் 40,000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் களியாட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தென்னிலங்கையில் சிறுவர்கள் ஆயிரக்கணக்கில் பாலியல் களியாட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதுபோன்ற நிலை, வடக்குக் கிழக்கில், இல்லை என்பது இங்கு அவதானிக்கத்தக்கது.

அதேநேரத்தில், வடக்குக் கிழக்கில், போரினால் தாய், தந்தையரை, சகோதர, சகோதரிகளை இழந்த சிறுவர்களும், படைகளின் கொடுரங்களை அனுபவித்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களும், தம்மை விடுதலை அமைப்பில் இணைத்துக் கொள்வதைக் காணமுடிகின்றது.

விடுதலை அமைப்பில் ஒருவர் இணைந்து கொள்வதும், அவர் ஆயுதப் பயிற்சியை பெறுவதும், அவர் சிறுவனாக இருக்கும்போதே ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார் என்பதற்கில்லை. ஒரு விடுதலை அமைப்பில், ஆயுதப்படை ஒரு பகுதி மாத்திரமே!

ஆனால், ஐக்கிய நாடுகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் சிறுவர்கள் உரிமைகள் பற்றிப் பேசும்பொழுதும், தென்னிலங்கையில் அதி கூடிய எண்ணிக்கையாக 40,000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் களியாட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதையோ, அல்லது சமயக் குருமாராக மாற்றப்படுவதையோ கண்டு கொள்ளாது, விடுதலைப் போராட்டத்தில் இணைவதைப் பற்றியே பெரிதாகப் பேசுவதையும்@ அதனை இல்லாது செய்யவேண்டுமென ஓலமிடுவதையும்தான் காணமுடிகிறது.

இன்று இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்துவரும் மதிப்புக்குரிய ரட்ணசிறி விக்ரமநாயக்க அவர்கள் முன்னர் பிரதம மந்திரியாகவும், புத்த சாசன அமைச்சராகவும் இருந்து வந்தார். அவர் இலங்கையில் தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்றவென, ஆயிரம் பேரை உடனடியாகப்; புத்த பிக்குகளாக ஆக்கும் ஒரு திட்டத்தினை பெரும் விளம்பரத்துடன் நடைமுறைப்படுத்தியிருந்தார். 2001ஆம் ஆண்டில், நு}ற்றுக் கணக்கான 7 வயது முதல் 15 வயதுவரையான பாடசாலை மாணவர்கள் பௌத்த பிக்குகளாக ஆக்கப்பட்டனர். பொலனறுவ மாவட்டத்தில் னுiஅடிரடபயடய என்ற இடத்தில் மாத்திரம், 118 சிறுவர்கள் புத்த பிக்குகள் ஆக்கப்படும் ஒரு பெரிய நிகழ்ச்சி யுூன் மாதத்தில் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. இதைப் போன்று, பல இடங்களில் சிறுவர்கள் புத்த பிக்குகளாக ஆக்கப்படும் நிகழ்ச்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. ஆனால், இங்கு அவதானிக்கப்படவேண்டியது என்னவென்றால், சிங்கள ஆளும் வர்க்கங்களின் சிறுவர்கள் எவரும் இலங்கையில் தேரவாத பௌத்தத்தினைக் காப்பற்றப்; பிக்குகளாக ஆக்கப்படவில்லை! கிராமப் புறங்களின் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள்தான், பெற்றோரின் வற்புறுத்தலால் புத்தபிக்குகளாக ஆக்கப்பட்டனர்!! சிறீ லங்காப் படைகளிலும், கிராமங்களைச் சேர்ந்த வறியவர்கள்தான் பெரும்பாலும் சேர்க்கப்பட்டு, போர்ப் பிராந்தியங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அதாவது: வறிய சிங்கள இளைஞர்களே, இலங்கையின் போலி ஜனநாயகத்தைக் காப்பாற்ற, ஆளும் வர்க்கங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்!

சிறுவர்களைப் பிக்குகள் ஆக்கும் இந்த நிகழ்ச்சிகளில், வறிய தாய்மார்களும், சிறுவர்களது சகோதர, சகோதரிகளும், நெருங்கிய உறவினர்களும், கண்ணீருடன் நின்றதைத்தான் காண முடிந்தது!

இது சிறுவர் உரிமை மீறலா, இல்லையா என்பதற்குச் சரியான விடை காணப்படவேண்டும். இதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமா, இல்லையா என்பதைப் பற்றி, ஐக்கிய நாடுகள் எப்போதாவது வாதித்துள்ளதா என்பதும் தெரியவில்லை!

ஆனால், இன்று பிரதமராக ஆக்கப்பட்டுள்ள அதே ரடணசிறி விக்ரமநாயக்க சிறீ லங்காப் படைகளின் அடாவடித் தனத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த வடக்குக் கிழக்குச் சிறுவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேருவது பற்றிக் கூக்குரல் இடுவதை என்னவென்று சொல்லலாம்?

இதில் வியப்பானது என்னவென்றால், மதிப்புக்குரிய மேதானந்த தேரர் போன்ற தேரர்களும், இது பற்றிப் பேசுவதே!

இங்கு அவதானிக்கப்படவேண்டிய மிக முக்கிய மற்றொரு விடயம் என்னவென்றால், சுய சிந்தனை அடிப்படையில் சுய விருப்புடன் தன்னைப் பிக்குவாக ஆக்கிக்கொள்ளும் பக்குவத்தை அடைந்த ஒருவரே, பௌத்த போதனையை முழுமையாகக் கடைப்பிடித்து, பௌத்த போதனையைப் பரப்பும் நிலை உருவாகமுடியும்@ இலங்கையின் மனித சமூகமானது இன்பமான, மேன்மையான வாழ்க்கை வாழ உதவமுடியும். ஆனால், சுயமாகச் சிந்தித்து, சுயமாக முடிவுகளை எடுக்கமுடியாத நிலையில் பிக்குகளாக ஆக்கப்படும் சிறுவர்கள, பௌத்த போதனையை எவ்வளவுக்கு விரும்பிச் சரியாகக் கடைப்பிடிப்பர் என்பதும், அவர்கள் இலங்;கையில் பௌத்தத்தினைக் காப்பற்றுவார்களா என்பதும் கேள்விக்குரிய விடயங்களே. ஏனெனில், பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவம் மழெறடநனபந ஆகும், நடுவுப்பாதை ஆகும், அறம் ஆகும்!

இன்று சிங்கள தேசத்தில் புத்தபெருமானும், பௌத்தமும் கேவலப்படுத்தப்படும் நிலை உருவாகியமைக்கு, இதுதான் முக்கிய காரணமாகும். சுருங்கக் கூறினால், சிங்கள தேசத்தில் பௌத்த போதனையைக் காப்பாற்றுவதாயின், அதன் அரசியல்வாதிகளும், சமய, சமூகப் பெரியோர்களும், ஆசிரியர்களும், நிர்வாகிகளும், ஊடகங்கங்கள் என்பவையும், சிங்கள தேச மக்களின் அறிவையும், ஆராயும் வல்லமையையும் வளர்ப்பது}டாகப் புத்தபெருமானின் போதனையைச் சரியாக விளங்க உதவி, அதைக் கடைப்பிடிக்க உதவவேண்டியுள்ளதே அன்றி, வேறு விடயங்களைச் செய்வது}டாக அந்தப் பெரும் சேவையைச் செய்ய முடியாது.

சிங்கள தேசத்தில் புத்தபெருமானும், அவரது போதனையும், தேரவாத பௌத்த பிக்குகளாலும், தேரவாத பௌத்த மத பீடங்களாலும், பௌத்தத்தினை இலங்கையில் தாமே காப்பாற்றி வருவதாகச் சிங்கள மக்களுக்கும், உலகிற்கும் காட்டி வருபவர்களாலும்தான் உண்மையில் நிராகரிக்கப்பட்டு வருகின்றன, கேவலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதை அறிந்து கொள்ளுமளவிற்குக் கூட, இவர்கள் தமது அறிவையும், ஆராயும் வல்லமையையும் போதிய அளவிற்கு இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை!

இப்படிக் கூறும்போது, சிங்கள தேசத்தின் தேரவாத பௌத்த மத பீடத்தலைவர்களும், கற்றோர் எனப்படுபவர்களும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும், கொதித்து எழ முடியும். ஆனால், இக்கூற்றினை அவர்களால் நிராகரிக்கவே முடியாது.

..........
..................
........................

மேதானந்த தேரர், பேராசிரியர் அபய ஆர்யசிங்க போன்றவர்களது அறிவியலுக்குப் புறம்பான புலம்பல்களை ஏற்றுச் சிங்கள தேச ஆளும் வர்க்கம்; அறிவியலையும், அறத்தினையும் நிராகரித்து, தமிழ்த் தேசத்தின்மீது போரை ஆரம்பிக்க முற்பட்டால், அறிவியலின் பெயரிலும், அறத்தின் பெயரிலும் போரை வீரத்துடன் நடாத்துவதைவிட வேறு வழியே இல்லை.

இதற்குச் சிங்கள தேசத்தின் ஒரு பகுதி மக்களும், இந்தியா, ஜப்பான், ஏனைய நாடுகளும் புூரண உதவிகளைத் தமிழத் தேசத்திற்கு வழங்குவதுதானே அறமானது?
http://www.mousegroup.net/tamilsociety/07....a%20enda-01.htm

Print this item

  &quot;இந்தி படியுங்கள்': அதிபர் புஷ் அறிவுரை
Posted by: Vaanampaadi - 01-07-2006, 12:13 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

"இந்தி படியுங்கள்': அதிபர் புஷ் அறிவுரை
வாஷிங்டன்: ""தேசிய பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் அமெரிக்க மாணவர்கள் இந்தி உட்பட பல வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டும்,'' என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மொழித் திட்டத்தை அமெரிக்கா துவக்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அமெரிக்க இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட பிறகு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா வந்து படிப்பதற்கு தயங்குகின்றனர்.


இதனால், மற்ற நாட்டு மாணவர்களுடன் உரையாடவும், அவர்களுடைய கலாசாரத்திற்கு மதிப்பு கொடுக்கவும் அமெரிக்க அதிகாரிகள் இந்தி, அரபு, சீனம், ரஷ்யா மற்றும் பார்சி மொழிகளை கற்க வேண்டும். அமெரிக்க அதிபர் புஷ்சின் அறிவுரைப்படி, உள்துறை, பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சர்கள் நுண்ணறிவு துறையின் தேசிய இயக்குனர் ஆகியோர் சேர்ந்து தேசிய பாதுகாப்பு மொழித் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்கர்களுக்கு அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படும். குழந்தை பருவத்திலிருந்தே இந்த மொழிகள் கற்பிக்கப்படும். பள்ளிகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் கூட இவை சொல்லித் தரப்படும். வெளிநாட்டு மொழி தெரிந்தவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Dinamalar

Print this item