Aggregator

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

3 months 2 weeks ago
தமிழர்கள் சந்தர்ப்பங்களை. வாய்ப்புகளை தவறவிட்டார்கள். என்பது மிகவும் பிழையான. கருத்துகள் இது நான் தமிழன் என்னும் நாமத்துடன். சொல்வதை கண்டிக்கின்றோம் தமிழர்கள் சந்தர்ப்பங்களை உருவாக்கியவர்கள். மிக அண்மைய உதாரணம் சுரேன் சுரேந்திரன். சந்தர்பங்கள். ஒப்பந்தம் எழுதி கிழித்து எறிவது இல்லை தீர்வு திட்டங்களை எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை போவதில்லை காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் இல்லை தரமுடியாது வடக்கு கிழக்கு இணக்க விடமாட்டோம் எபன்பவை சந்தர்ப்பங்கள் அல்ல

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

3 months 2 weeks ago
1) ""சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம்."" சிங்களத்தையும் இந்தியையும் நான் தொட்டுச் செல்லவில்லை. எமது வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது என் ஆதங்கம். நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது என்று இதற்காகத்தான் குறிப்பிட்டேன். 2) உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான் உங்கள் கணிப்பு தவறு. நீங்களும் நானும் எப்படியோ பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால் நிலத்திலுள்ள மக்களின் நிலையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எமது தவறுகளை அடையாளம் காண முடியும். 3) அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம். [உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை. ஒரு பேச்சுக்காகச் சொல்கிறேன்,....(சனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள உங்களின் கருத்துப்படி) 90% மான மக்களின் கருத்தைத்தானே 10 வீதமானவர்கள் கேட்டிருக்க வேண்டும்? இல்லையா? ] எதைச் சாதித்தாலும் வாய்ப்புக்களைத் தவறவிட்டால் இருப்பது இல்லாமல் போகும் என்பதற்கு ஈழத் தமிழரதுப்போராட்டம் சிறந்த உதாரணம். கவனிக்க: இங்கே நாம் என்று என்னால் குறிப்பிடப்படுவது எம் எல்லோரையும் சேர்த்துத்தான. எவரையும் தனியே குறிப்பிடவில்லை. “[I]t is much better to lose a battle and win the war than to win a battle and lose the war. Resolve to keep your eyes on the big ball.”

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!

3 months 2 weeks ago
உங்களுக்கு என்ன பிரச்சனை?? நீங்கள் விரும்பியவரை திருமணம் செயது கொள்ளலாம் எங்கள் ஆதரவு என்றும் உண்டு” 😂🤣

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

3 months 2 weeks ago
சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம். உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான். உங்களுடைய இந்த கருத்துக்கு லைக் கிடைக்கும் ஏனெனில் அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா பெண் : ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை கவனங்களில் ஆண் : இளமா மயில் பெண் : அருகாமையில் ஆண் : வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்ல வில்லையோ ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு ஆண் : மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே பெண் : அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே ஆண் : இரு தோளிலும் மணமாலைகள் பெண் : கொண்டாடும் காலமொன்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ......! --- என் கண்மணி ---

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!

3 months 2 weeks ago
சிறீலங்காவின் நாடாளுமன்றில் ஒரு சிங்கள உறுப்பினர் ஒரு மாதத்திற்குள் சாணாக்கியனின் காதலி ஒரு சிங்களப்பெண் அவரைத்தன் சாணாக்கியன் திருமணம் செய்யவுள்ளார் எனக்கூறும் போது சாணாக்கியன் எந்தப்பதிலும் கூறவில்லை. அப்படி அவர் சுத்தமானவராக இருந்தால், தனது நாடாளுமன்றப் பதவியின் அடிப்படை உரிமையை சம்பந்தப்பட்ட ஊறுப்பினர் மீறுகிறார் எனக்கூறியிருக்கவேண்டும். இந்த ஆதாரம் போதுமா நான் வாழுவது பின்லாந்து நாட்டில் இப்போது பின்லாந்தின் அடிப்படைவாதிகளும் பணக்காரர்களுக்குமான கட்சியும் சேர்ந்தேதான் அரசை அமைத்திருக்கிறது குறிப்பிட்ட அளவு பல்லின மக்கள் இங்கும் வாழுகிறார்கள். அதில் அனேகமானவர்கள் வேலைசெய்தே தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்கிறார்கள். பின்லாந்தின் அடிப்படைவாதக்கட்சி என்ன சொல்லுது என்றால் பின்லாந்து பின்லாந்தியர்களுக்கே என, இலங்கைத் தீவிலிருந்து நான் புலம்பெயரக்காரணமானது சிங்கள அடிப்படைவாதமே ஆனால் சிங்கள் அடிப்படைவாதம் எனப்படுவது சிங்களவர்களுக்கு இருந்தே ஆக வேண்டும் அதேவேளை மாற்று இனத்தவர்களுக்கான உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என. பின்லாந்தின் அரசமைப்பு மற்றும் சட்டதிட்டங்கள் அனைத்தும் பின்லாந்தியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது அது கனடாபோன்ற பல்லினமக்கள் வாழும் நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுடன் ஒத்துப்போகாது. ஏன் பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுடனேயே ஒத்துப்போகாது. பின்லாந்து மக்களது எண்ணங்களுடன் நான் ஒத்துப்போகிறேன் அந்தவகையில் சுத்த தமிழ்தேசிய அடிப்படைவாதம் எனக்கு இருந்தால் எவருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை. நான் அப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். நான் எந்தவிதமான ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எனது எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதுபோல் நான் எந்தவிதமான சிந்தனை உடையவனாக இருக்கவேண்டும் என்பதையும் எனது எதிரிதான் தீர்மானிக்கிறான். சும்மா சகோதரத்துவம் தேசிய ஒருமைப்பாடு எனக்கூறிக்கொண்டிருந்தால் சுரணை கெட்டவனாக இருப்பதுபோன்றதாகும்.

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

3 months 2 weeks ago
பரந்துபட்ட பார்வையுடன் எமது வரலாற்றை அவதானித்தால் உங்கள் இந்த கருத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் துரதிஷர்ரவசமாக ஏற்கனவே எமது மண்டைக்குள் புகுத்தப்பட்ட ஒற்றைத்தன்மையான உணர்சசி அரசியல் கோட்பாடுகளினால் மட்டுமே நாம் எமது அரசியலை கொண்டு செல்வோம் என்று அடம் பிடிப்பதால் இதுவரை நாம் போராடியதாக கூறப்பட்ட அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. இதை மாற்றும் சகதி எதில்காலத்தில் தாயகத்தில் வாழப்போகும் மக்களுக்கு இருக்குமேயானால் அவர்களாவது அதிஷ்ரசாலிகளாக இருப்பர்.

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

3 months 2 weeks ago
நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது. ஆனாலும் realty என்ன? இன்று நாம் கையறு நிலையில் நிற்கிறோம். இல்லையா? எங்கள் நிலத்தில் உள்ள மக்களிடம் இருந்த அற்ப சொற்ப பலமும் இல்லாமல் போய்விட்டது. வெளிநாடுகளில் உள்ளவர்களோ ஆளாளுக்கு நான்கு திசைகளாகப் பிரிந்துவிட்டோம். எங்களிடம் எஞ்சியிருப்பது என்ன? இதிலிருந்துதானே எமது தவறுகளை எடைபோட முடியும்? இன்னும் 10 வருடங்கள் கழித்து தாயக மக்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எனது ஆதங்கம்/கோபம் புரியும்.

இந்திய விமானப்படையின் 2016-ல் மாயமான விமானம்: பாகங்கள் கண்டுபிடிப்பு

3 months 2 weeks ago
2016-ல் மாயமான விமானம்: சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிப்பு
13 JAN, 2024 | 09:37 AM
image
 

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அந்தமான் தலைநகர் போர் பிளேர் சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது மாயமானது. அந்த விமானம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார் டிராக்கிங் பார்வையில் இருந்து மறைந்தது. இந்த சூழலில் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடல் பகுதியில் ‘சொனார்’ டெக்னிக் மூலம் An-32 விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை படம் பிடித்து புவி அறிவியல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து விமானப்படைக்கு அந்த படங்கள் சென்றுள்ளன. அதன் பிறகு அது மாயமான An-32 விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரையில் இருந்து 140 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 11,200 அடி ஆழத்தில் An-32 விமானத்தின் பாகங்கள் இருந்துள்ளன. கடந்த 2016, ஜூலை 22-ம் தேதி இந்த விமானம் மாயமானது. அதில் சுமார் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

An-32 விமானம்: பல்வேறு உலக நாடுகள் தங்களது ராணுவ பயன்பாட்டுக்காக இந்த விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவும் அடங்கும். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஏவியன்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. கடந்த 1980 முதல் 2012 வரை இந்த விமானம் தயாரிக்கப்பட்டது. இரட்டை என்ஜின் கொண்ட இந்த விமானம் மோசமான வானிலையிலும் இயங்கக் கூடிய தன்மை கொண்டது என சொல்லப்படுகிறது.

https://www.virakesari.lk/article/173834

இந்திய விமானப்படையின் 2016-ல் மாயமான விமானம்: பாகங்கள் கண்டுபிடிப்பு

3 months 2 weeks ago
2016-ல் மாயமான விமானம்: சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிப்பு 13 JAN, 2024 | 09:37 AM கடந்த 2016-ம் ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அந்தமான் தலைநகர் போர் பிளேர் சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது மாயமானது. அந்த விமானம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார் டிராக்கிங் பார்வையில் இருந்து மறைந்தது. இந்த சூழலில் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 310 கி.மீ தொலைவில் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. சென்னையில் இயங்கி வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடல் பகுதியில் ‘சொனார்’ டெக்னிக் மூலம் An-32 விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை படம் பிடித்து புவி அறிவியல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து விமானப்படைக்கு அந்த படங்கள் சென்றுள்ளன. அதன் பிறகு அது மாயமான An-32 விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரையில் இருந்து 140 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 11,200 அடி ஆழத்தில் An-32 விமானத்தின் பாகங்கள் இருந்துள்ளன. கடந்த 2016, ஜூலை 22-ம் தேதி இந்த விமானம் மாயமானது. அதில் சுமார் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. An-32 விமானம்: பல்வேறு உலக நாடுகள் தங்களது ராணுவ பயன்பாட்டுக்காக இந்த விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவும் அடங்கும். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஏவியன்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. கடந்த 1980 முதல் 2012 வரை இந்த விமானம் தயாரிக்கப்பட்டது. இரட்டை என்ஜின் கொண்ட இந்த விமானம் மோசமான வானிலையிலும் இயங்கக் கூடிய தன்மை கொண்டது என சொல்லப்படுகிறது. https://www.virakesari.lk/article/173834

ஜனாதிபதி சுவிற்சர்லாந்துக்கு பயணமானார்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 11:50 AM உலக பொருளாதார மாநாட்டின் 54 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுவிற்சர்லாந்து சென்றுள்ளார். இந்நிகழ்வு நடைபெற்று வரும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 12 நாட்கள் தங்கியிருந்து மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று சனிக்கிழமை அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். https://www.virakesari.lk/article/173851

ஜனாதிபதி சுவிற்சர்லாந்துக்கு பயணமானார்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3  13 JAN, 2024 | 11:50 AM

image
 

உலக பொருளாதார மாநாட்டின் 54 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுவிற்சர்லாந்து சென்றுள்ளார்.

இந்நிகழ்வு நடைபெற்று வரும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 12 நாட்கள் தங்கியிருந்து மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று சனிக்கிழமை அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

https://www.virakesari.lk/article/173851

இலங்கை: அம்பாறை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம்; 1,70,000 மக்கள் பாதிப்பு

3 months 2 weeks ago
படக்குறிப்பு, இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டம் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 21 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டமையாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று 12ஆம் தேதி விடுத்த அறிக்கையின்படி, சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மொத்தம் 53,641 குடும்பங்களைச் சேர்ந்த 178,312 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 50,996 குடும்பங்களைச் சேர்ந்த 169,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு தொகையினர் இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளை பிரதேச செயலகங்கள் ஆரம்பித்துள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். படக்குறிப்பு, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமக்கள் உணவு சமைத்து வழங்குகின்றனர். அதேவேளை சமூக ஆர்வலர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமயத்தலங்களின் நிருவாகிகள் மற்றும் இளைஞர் அமைப்புகளும் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளைச் சமைத்து வழங்கி வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் சீற்றமான பருவநிலை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று (12) காலை வரையில் 2401 குடும்பங்களைச் சேர்ந்த 7173 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 15,792 குடும்பங்களைச் சேர்ந்த 50,777 நபர்கள் தமது இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து - உறவினர்கள் மற்றும் அண்டை வீடுகளில் தங்கியுள்ளனர் என, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்தின் கதவுகள் திறந்து விடப்பட்டமையாலும், அம்பாறை மாவட்டம் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. முற்றாகத் திறந்து விடப்பட்டுள்ள சேனநாயக்க குளக் கதவுகள் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சேனநாயக்க குளம் (சேனநாயக்க சமுத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது) 1949ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவால் நிர்மாணிக்கப்பட்டது. நெல் விவசாயத்துக்கான நீரைத் தேக்கி வைத்து வழங்குவதற்காக இந்தக் குளம் உருவாக்கப்பட்டது. அம்பாறையில் இந்தக் குளம் அமைக்கப்பட்டுள்ள போதும், அதன் சில பகுதிகள் மொனராகல, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் உள்ளன. சேனநாயக்க குளத்தில் 05 கதவுகள் உள்ளன. அதில் 110 அடி உயரம் வரையில் நீரைத் தேக்கி வைக்க முடியும். ஆனாலும் 104 அடி உயரத்தை எச்சரிக்கை மட்டமாக (Warning Level) குறிப்பிடுகின்றனர். அதாவது குளத்தின் 104 அடி உயரத்துக்கு நீர் நிரம்பும்போது, குளத்தின் கதவுகளைத் தேவைக்கேற்ற வகையில் திறந்து விடுவார்கள். ஆனால் தற்போது குளத்தில் 111.8 அடி உயரம் வரை - நீர் நிரம்பியிருப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் நேற்று (12) பிபிசி தமிழிடம் தெரித்தார். ”இதன் காரணமாக குளம் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. குளத்தின் அனைத்துக் கதவுகளும் தொடர்ச்சியாகத் திறந்து விடப்பட்டுள்ளன, மொனராகல மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளமும் 3 நாட்களில் சேனநாயக்க குளத்தை 50 அடியளவுக்கு நிரப்பியது. இதனால் அசாதாரண சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது. குளத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள போதும், பிற பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீர் - குளத்தில் தொடர்ச்சியாகச் சேர்வதால், குளத்தின் நீர் மட்டம் குறையாமல் உள்ளது,” என றியாஸ் விவரித்தார். இவ்வாறு சேனநாயக்க குளத்தின் அனைத்துக் கதவுகளையும் திறந்து விடும்போது, 1 விநாடினுக்கு 6,000 கன அடி (6000 cubic feet per second) நீர் வெளியேறுவதாகவும் அவர் கூறினார். 6000 கன அடி நீர் என்பது 169901.1 லிட்டருக்கு சமனானது. சேனநாயக்க குளத்திலிருந்து வெளியேறும் நீர் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியை அடைவதற்கு 9 மணித்தியலங்கள் எடுக்கும் எனவும் றியாஸ் குறிப்பிடுகின்றார். சுமார் 13 வருடங்களுக்குப் பின்னர் சேனநாயக்க குளத்தின் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இவ்வாறான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியை அடுத்துப் பெய்த மழையால் – இதுபோன்றதொரு வெள்ளம் ஏற்பட்டது. 2010ஆம் ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாக - சேனநாயக்க குளத்தின் அனைத்துக் கதவுகளும் திறக்கப்பட்டமையாலும் இவ்வாறானதொரு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது,” என பிரதிப் பணிப்பாளர் றியாஸ் குறிப்பிட்டார். சேனநாயக்க குளத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் கன அடி நீரை சாதாரணமாகத் தேக்கி வைக்க முடியும் என்றும், ஆனால் தற்போது குளத்தில் 8 லட்சத்து 1500 ஏக்கர் கன அடி நீர் உள்ளதாகவும் அவர் கூறினார். பாதிப்புகள் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்திலிருந்து பெருமளவான நீர் திறந்து விடப்பட்டுள்ளமையாலும் அம்பாறை மாவட்டத்தின் தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதேபோன்று ஆறுகள், நீர்ப்பாசன (Irrigation) பகுதிகள் மற்றும் விவசாய இடங்களின் ஒதுக்குப் பகுதிகளை (Reservation area) ஆக்கிரமித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களும் வசிப்பிடங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் றியாஸ் குறிப்பிடுகின்றார். ”நெல் பயிர்களும் கணிசமான அளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் நெல் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து - மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” எனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக நீர் பிடிப்புள்ள பகுதிகளில் (Wetlands area) உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணித்தவர்களும், தற்போதைய வெள்ளத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் றியாஸ் சுட்டிக்காட்டினார். இவ்வாறு அனுமதியின்றி நீர்ப் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமையால், ஆபத்தற்ற பகுதிகளாகக் கருதப்பட்ட இடங்களில்கூட - வெள்ளம் புகுந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். வெள்ளத்தில் மூழ்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் - களியோடை ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. இதன் காரணமாக, அந்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகின்றமையால் பல்கலைக்கழககத்தின் பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கியிருந்த சுமார் 3,000 மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரமீஸ் அபூக்கர் தெரிவித்தார். முல்லைத்தீவைச் சேர்ந்த 4 மாணவர்கள் தொடர்ச்சியாக பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருப்பதாகவும் அவர்களின் சொந்த இடத்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளமையால், அவர்கள் இவ்வாறு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். ”நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழகத்தின் பாதுகப்பற்ற பகுதிகளாக அடையாளம் கண்டிருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றோம். ஆனால், பொறியியல் பீட கட்டடத்தின் கீழ்பகுதியில் எதிர்பாராத விதமாக வெள்ளம் புகுந்தமையால், அங்கிருந்த சில உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இழப்புகள் குறித்து மதிப்பீடு செய்து வருகிறோம்,” எனவும் உபவேந்தர் குறிப்பிட்டார். இந்த நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக அறிவித்த பல்கலைக்கழக நிர்வாகம், எதிர்வரும் 16ஆம் தேதி மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் எனக் கூறியிருந்தது. ஆனால், நேற்று (12) காலை எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, எதிர்வரும் 22ஆம் தேதி பல்கலைக் கழகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் கூறினார். ஆறு பீடங்களைக் கொண்ட தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் 8100 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். படக்குறிப்பு, இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை என்பதால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம், சில நாட்களில் வடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைமை எப்போது வழமைக்குத் திரும்பும்? அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் வடிந்து, நிலைமை எப்போது வழமைக்குத் திரும்பும் என, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் றியாஸிடம் பிபிசி தமிழ் வினவியது. இதற்கு அவர் பதிலளிக்கையில் இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை என்பதால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம், சில நாட்களில் வடிந்துவிடும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். ”ஆனால் எதிர்வரும் 16ஆம் தேதிக்குப் பின்னர் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும். அப்போது மீண்டும் கடுமையான தொடர் மழை பெய்தால், இவ்வாறான அனர்த்த நிலை மீண்டும் உருவாகலாம்,” எனவும் றியாஸ் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c28ylzvwrnro