Aggregator

லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது!

3 days 18 hours ago

லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால், இலங்கையர்கள் கைது!
adminMay 12, 2024
latvia-sri-lankans.jpg

லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று,   லத்வியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் எல்லையை கடக்க முயன்ற கார் ஒன்றில் இலங்கையர்கள் இருவர் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்த ஏனைய 6 பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மீது சட்டவிரோத குடியேற்றவாசிகளை லத்வியாவிற்கு அழைத்து வர முயற்சித்த குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 

https://globaltamilnews.net/2024/202745/

 

தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்

3 days 19 hours ago
தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன் ராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் பொழுது உள்ளூரில் கட்டுரைகளை வாசிப்பவர்கள் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது. வேட்பாளரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர்களிற் பலர் அது தொடர்பாக இதுவரையிலும் வந்திருக்கக்கூடிய கட்டுரைகளை காணொளிகளை வாசிக்கவில்லையா? கேட்கவில்லையா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு விடயத்தைக் குறித்த ஆழமான வாசிப்போ விளக்கமோ இன்றிக் கருத்து கூறுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தில் அரசியல் ஆர்வமுடைய வாக்காளர்கள் மட்டுமல்ல, பத்திரிகை ஆசிரியர்கள், புலமையாளர்கள், காணொளி ஊடகங்களில் கேள்வி கேட்பவர்கள், யுடியூப்பார்கள்… என்று அனைவரும் அடங்குவர். இவர்கள் பொது வேட்பாளர் என்ற ஒரு தெரிவை விளங்காமல் எழுதுகிறார்களா அல்லது எல்லாவற்றையும் நன்கு விளங்கிக்கொண்டும் ஏதோ ஒரூ சூதான அரசியல் உள்நோக்கத்தோடு,யாருக்கோ தங்களுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்காக எழுதுகிறார்களா? தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் மிகத் தெளிவாக வகிடு பிரித்துக் காட்டுகிறது. அரசியல்வாதிகள்,ஊடகங்கள், யுடியுப்கள் போன்றவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கின்ற பலரும் எங்கேயோ ஒரு விசுவாசப் புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்கள் வெளித்தோற்றத்துக்கு ஆளுக்காள் தொடர்பற்ற உதிரிகளாகத் தோன்றலாம். ஆனால் அவர்களில் பலர் ஏதோ ஒரு தரப்புக்கு விசுவாசமானவர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். பொது வேட்பாளரை எதிர்க்கும் பொழுது அவர்கள் காட்டும் வன்மம்,வெறுப்பு,பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றன அவர்கள் எந்தளவுக்கு தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள் என்பதைக் காட்டுகின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னுறுத்தி எழுதுபவர்கள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள், ஜனாதிபதித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மறைமுக வாக்கெடுப்பை நடத்துவது, அதில் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு பொது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவது, அதாவது தமிழ்த் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியை விடவும் தேய்மானமே அதிகம். பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் தோன்றியுள்ளன. கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன. மக்கள் அமைப்புகள் தோன்றிப் பின் சோர்ந்து விடுகின்றன. தமிழ் மக்களை வடக்கு கிழக்காய் சமயமாய் சாதியாய் இன்னபிறவாய் சிதறடிக்க விரும்பும் சக்திகள் தமிழ் மக்களாலேயே தெரிந்தெடுக்கப்படுகின்றன. 2009க்கு பின்னிருந்து தமிழ் கூட்டு மனோநிலை என்பது கொந்தளிப்பானதாக காணப்படுகிறது. யாரையும் நம்ப முடியாத சந்தேகப் பிராணிகளாக தமிழ் மக்கள் மாறிவருகிறார்கள். எல்லாவற்றுக்கு பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக மாறி வருகிறார்கள். அதாவது தமிழ் மக்களைப் பிரித்துக்கையாளும் சக்திகளுக்கு உள்ளூர் முகவர்கள் அதிகரித்து வருவதாக ஒரு கூட்டுப் பயம்; ஒரு கூட்டுச் சந்தேகம்; ஒரு விதத்தில் ஒரு கூட்டு நோய் அதிகரித்து வருகிறது. இது ஒரு கூட்டுத் தோல்வி மனப்பான்மையின் விளைவு. தோல்வி மனப் பான்மையிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பது என்றால் ஒருவர் மற்றவரை நம்பும்; ஒருவர் மற்றவருக்குத் தோள்கொடுக்கும் கூட்டுப் பலத்தில் நம்பிக்கை வைக்கும் ஓர் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்கான கடந்த 15ஆண்டுகாலப் பரிசோதனைகளில் இருந்து கற்றுக்கொண்டு, சிவில் சமூகமும் அரசியல் சமூகமும் இணைந்த ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பது குற்றமா? தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவது குற்றமா? தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது குற்றமா? அப்படியென்றால் எமது பள்ளிக்கூடங்களில்,பாலர் வகுப்பில் “ஒற்றுமையே பலம்”; “ஒன்று திரண்டால் உண்டு வாழ்வு”;“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று படித்ததெல்லாம் பொய்யா? தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிவில் சமூகங்கள் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்றுதானே கேட்கின்றன? தமிழ்மக்களை யாரிடமாவது சரணடையச் சொல்லி கேட்கின்றனவா? தமிழ்மக்களை யாருக்காவது விலை கூறி விற்க முற்படுகின்றனவா? இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக வெற்றுக் காசோலைகளாக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை, தமிழ் மக்களின் பேரபலத்தை உயர்த்தும் வாக்குகளாக மாற்றுவது தவறா? ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு எதிர்காலத்தில் தமிழ் அரசியலில் நிர்ணயகரமான ஒரு கட்டமைப்பாக கூர்ப்படைய வேண்டும் என்று கூடி உழைப்பது குற்றமா? தமிழ்ப் பொது வேட்பாளர் தோற்றால் எல்லாமே தோற்றுவிடும், அது தமிழ் மக்களைப் புதை குழிக்குள் தள்ளிவிடும்… என்றெல்லாம் எழுதுகிறார்கள். அப்படியென்றால் தமிழ் மக்கள் இப்பொழுது மட்டும் என்ன வெற்றிப் பாதையிலா சென்று கொண்டிருக்கிறார்கள் ? இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மிகப்பெரிய திருப்பகரமான வெற்றி எதையுமே பெற்றிருக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்கள் இனிமேல்தான் தோற்க வேண்டும் என்று இல்லை. கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் எனப்படுவது வெற்றியின் அரசியல் அல்ல. சிறிய தேர்தல் வெற்றிகள்,சில குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் எழுச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால் தொடர்ச்சியான வெற்றிகள் அல்ல. அதாவது தமிழ் அரசியலை ஒரு புதிய கட்டத்திற்கு திருப்பக்கூடிய வெற்றிகள் அல்ல. எனவே தோல்வியைக் காட்டி பயமுறுத்தும் அரசியல்வாதிகள் தாங்கள் ஏற்கனவே தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை மறைக்கிறார்களா ? கடந்த 15 ஆண்டுகாலம் தமிழ் மக்களுக்கு திருப்பகரமான வெற்றி எதையும் பெற்றுத்தரவில்லை. எனினும் காலம் ஒரு அரிதட்டு.அது பலரைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. பலரை அந்த அரிதட்டு சலித்துக் கழித்து விட்டிருக்கிறது. இப்பொழுது பொது வேட்பாளர் என்ற விடயமும் பலர் எங்கே நிற்கிறார்கள்? யாருக்கு விசுவாசமாக நிற்கிறார்கள்?யாரை சந்தோஷப்படுத்த எழுதுகிறார்கள்? போன்ற எல்லாவற்றையுமே தெளிவாக வெளியே கொண்டு வந்திருக்கிறது. பொது வேட்பாளர் தோற்கக்கூடாது. உண்மைதான். தோற்கக் கூடாது. அவ்வாறு தோற்கக் கூடாது என்று சொன்னால் அதற்காக தமிழ் மக்கள் கூட்டாக உழைக்க வேண்டும். அதற்குத்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. அரசியல் சமூகமும் சிவில் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது, இரண்டு தரப்பும் ஒன்றை மற்றொன்று பலப்படுத்தி அந்த முயற்சியை முன்னெடுக்கலாம், அதேசமயம் தேர்தல் அரசியல் எனப்படுவது வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான். கடந்த 15 ஆண்டுகால தோல்விகரமான அரசியல் பாதையில் இருந்து தமிழ் அரசியலை திருப்பகரமான விதத்தில் தடம் மாற்ற ஒரு பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. அதில் தோற்கலாம் வெல்லலாம். ஆனால் அது பரிசோதனை. இப்போதிருக்கும் தோல்விகரமான பாதையில் இருந்து தமிழரசியலை திசை மாற்ற முயற்சிக்கும் ஒரு பரிசோதனை. எனவே தோல்வியைக் குறித்து அச்சப்படுவோர் அல்லது தோல்வியை காட்டிப் பயமுறுத்துவோர்,தாங்கள் ரகசியமாக “டீல்” செய்ய முயற்சிக்கும் அரசியல்வாதியின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? அல்லது தமிழ் மக்களின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெல்லப் போவதில்லை. அவர் ஜனாதிபதியாக வரப்போவதும் இல்லை. ஆனால் அவர் தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவார். அதைவிட முக்கியமாக,தமிழ்ப் பொது நிலைப்பாடு ஒன்றை நோக்கி தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார். அவர் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஒரு வேட்பாளர்தான். இலங்கை முழுவதற்குமான தமிழ் வேட்பாளர் அல்ல. தமிழரசியல் கடந்த 15 ஆண்டுகளாக பிமுகர் மைய அரசியலாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் யார் அந்தப் பிரமுகர்,பொது வேட்பாளராக களமிறங்க போவது ? என்ற கேள்வி எழுகிறது. கட்டாயமாக அவர் ஒரு பிரமுகராக இருக்கத் தேவையில்லை. தேர்தலில் தனக்கு கிடைக்கும் பிரபல்யத்தை அடுத்தடுத்த தேர்தல்களுக்கு முதலீடு செய்யும் ஓர் அரசியல் விலங்காக அவர் இருக்கக் கூடாது. அவரும் அவர் பயன்படுத்திய பொது சின்னமும் எதிர்கால தேர்தல்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற ஒரு உடன்படிக்கைக்கு அவர் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். பொது வேட்பாளராக ஒரு பிரமுகரைத் தேடும் அனைவரும் ஏன் மற்றொரு அன்னை பூபதியை உருவாக்குவது என்று சிந்திக்கக்கூடாது? அன்னை பூபதி உண்ணாவிரதம் இருக்கும் வரையிலும் அவரை யாரென்று அநேகருக்குத் தெரியாது. ஆனால் 30 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததன் மூலம் நவீன தமிழ் வரலாற்றில் அழிக்க்கப்பட முடியாத இடத்தைப் பெற்றார். அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து மற்றொரு அன்னை பூபதியைக் கட்டியெழுப்ப முடியாதா? அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. யாரும் உயிர் துறக்கத் தேவையில்லை. உயிரைக் கொடுத்தது போதும். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட ஒரு வேட்பாளர் வேண்டும், தமிழ் அரசியலை கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்த ஒரு பொதுகட்டமைப்பானது எதிர்காலத்தில் கூர்ப்படையத் தேவையான ஒரு பொதுத்தளத்தை அவர் பலப்படுத்துவார். அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு களமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் இங்கு முக்கியம். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைப் பலப்படுத்தும் ஒரு பரிசோதனை. அதில் எத்தனை முறை தோற்றாலும் அதைவிட வேறுவழி தமிழ் மக்களுக்கு உண்டா? ஏனென்றால் ஐக்கியப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு அடுத்த கட்டமே இல்லை. அடுத்தகிழமை பதினைந்தாவது மே 18 வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருக்கும் தமிழ் அரசியலை ; கடந்த 15 ஆண்டுகளாகத் தேய்ந்து கொண்டு போகும் கட்சி அரசியலை; கட்சிக்காரர்களிடமிருந்தே கட்சிகளைக் காப்பாற்றவேண்டிய ஒரு காலகட்டத்தில்; வடக்காய் கிழக்காய் சாதியாய் சமயமாய் இன்னபிறவாய் சிதறிக் கொண்டே போகும் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாகத் திரட்டுவதைவிட உன்னதமான ஒரு நினைவு கூர்தல் உண்டா? https://www.nillanthan.com/6754/

தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்

3 days 19 hours ago

 

தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்

spacer.png

 

ராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் பொழுது உள்ளூரில் கட்டுரைகளை வாசிப்பவர்கள் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது. வேட்பாளரை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அவர்களிற் பலர் அது தொடர்பாக இதுவரையிலும் வந்திருக்கக்கூடிய கட்டுரைகளை காணொளிகளை வாசிக்கவில்லையா? கேட்கவில்லையா? என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு விடயத்தைக் குறித்த ஆழமான வாசிப்போ விளக்கமோ இன்றிக் கருத்து கூறுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தில் அரசியல் ஆர்வமுடைய வாக்காளர்கள் மட்டுமல்ல, பத்திரிகை ஆசிரியர்கள், புலமையாளர்கள், காணொளி ஊடகங்களில் கேள்வி கேட்பவர்கள், யுடியூப்பார்கள்… என்று அனைவரும் அடங்குவர். இவர்கள் பொது வேட்பாளர் என்ற ஒரு தெரிவை  விளங்காமல் எழுதுகிறார்களா அல்லது எல்லாவற்றையும் நன்கு  விளங்கிக்கொண்டும் ஏதோ ஒரூ சூதான அரசியல் உள்நோக்கத்தோடு,யாருக்கோ தங்களுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்காக எழுதுகிறார்களா?

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் மிகத் தெளிவாக வகிடு பிரித்துக் காட்டுகிறது. அரசியல்வாதிகள்,ஊடகங்கள், யுடியுப்கள் போன்றவை யாருக்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது. தமிழ்ப்  பொது வேட்பாளரை எதிர்க்கின்ற பலரும் எங்கேயோ ஒரு விசுவாசப் புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்கள் வெளித்தோற்றத்துக்கு ஆளுக்காள் தொடர்பற்ற உதிரிகளாகத் தோன்றலாம். ஆனால் அவர்களில் பலர் ஏதோ ஒரு தரப்புக்கு விசுவாசமானவர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அடங்குவர். பொது வேட்பாளரை எதிர்க்கும் பொழுது அவர்கள் காட்டும் வன்மம்,வெறுப்பு,பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றன அவர்கள் எந்தளவுக்கு தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள் என்பதைக் காட்டுகின்றது.

தமிழ்ப்  பொது வேட்பாளரை முன்னுறுத்தி எழுதுபவர்கள் மிகத் தெளிவாக கூறுகிறார்கள், ஜனாதிபதித் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மறைமுக வாக்கெடுப்பை நடத்துவது, அதில் தமிழ்  மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒரு பொது நிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவது, அதாவது தமிழ்த் தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக்  கட்டியெழுப்புவது.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் வளர்ச்சியை விடவும் தேய்மானமே அதிகம். பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் தோன்றியுள்ளன. கட்சிகள் உடைந்து கொண்டே போகின்றன. மக்கள் அமைப்புகள் தோன்றிப் பின் சோர்ந்து விடுகின்றன. தமிழ் மக்களை வடக்கு கிழக்காய் சமயமாய் சாதியாய் இன்னபிறவாய் சிதறடிக்க விரும்பும் சக்திகள் தமிழ் மக்களாலேயே தெரிந்தெடுக்கப்படுகின்றன.

2009க்கு பின்னிருந்து தமிழ் கூட்டு மனோநிலை என்பது கொந்தளிப்பானதாக காணப்படுகிறது. யாரையும் நம்ப முடியாத சந்தேகப் பிராணிகளாக தமிழ் மக்கள் மாறிவருகிறார்கள். எல்லாவற்றுக்கு பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக மாறி வருகிறார்கள். அதாவது தமிழ் மக்களைப் பிரித்துக்கையாளும்  சக்திகளுக்கு உள்ளூர் முகவர்கள் அதிகரித்து வருவதாக ஒரு கூட்டுப் பயம்; ஒரு கூட்டுச் சந்தேகம்; ஒரு விதத்தில் ஒரு கூட்டு நோய் அதிகரித்து வருகிறது.

இது ஒரு கூட்டுத் தோல்வி மனப்பான்மையின் விளைவு. தோல்வி மனப் பான்மையிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பது என்றால் ஒருவர் மற்றவரை நம்பும்; ஒருவர் மற்றவருக்குத் தோள்கொடுக்கும் கூட்டுப் பலத்தில் நம்பிக்கை  வைக்கும் ஓர்  அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்கான கடந்த 15ஆண்டுகாலப் பரிசோதனைகளில் இருந்து கற்றுக்கொண்டு, சிவில் சமூகமும் அரசியல் சமூகமும் இணைந்த ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பது குற்றமா? தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவது குற்றமா? தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது குற்றமா? அப்படியென்றால் எமது பள்ளிக்கூடங்களில்,பாலர் வகுப்பில் “ஒற்றுமையே பலம்”; “ஒன்று திரண்டால் உண்டு வாழ்வு”;“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று படித்ததெல்லாம் பொய்யா?

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிவில் சமூகங்கள் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்றுதானே கேட்கின்றன? தமிழ்மக்களை யாரிடமாவது சரணடையச் சொல்லி கேட்கின்றனவா? தமிழ்மக்களை யாருக்காவது விலை கூறி விற்க முற்படுகின்றனவா?  இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக வெற்றுக் காசோலைகளாக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை, தமிழ் மக்களின் பேரபலத்தை உயர்த்தும் வாக்குகளாக மாற்றுவது தவறா? ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்து உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு எதிர்காலத்தில் தமிழ் அரசியலில் நிர்ணயகரமான ஒரு  கட்டமைப்பாக கூர்ப்படைய வேண்டும் என்று கூடி உழைப்பது குற்றமா?

 

articles_oqF2dgHWywdy2xvr1yHd-1c.jpg
438118590_1637440950399539_2087891460431

 

தமிழ்ப் பொது வேட்பாளர் தோற்றால் எல்லாமே தோற்றுவிடும், அது தமிழ் மக்களைப் புதை குழிக்குள் தள்ளிவிடும்… என்றெல்லாம் எழுதுகிறார்கள். அப்படியென்றால் தமிழ் மக்கள் இப்பொழுது மட்டும் என்ன வெற்றிப் பாதையிலா சென்று கொண்டிருக்கிறார்கள் ?  இல்லையே? கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மிகப்பெரிய திருப்பகரமான வெற்றி எதையுமே பெற்றிருக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்கள் இனிமேல்தான் தோற்க வேண்டும் என்று இல்லை. கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் எனப்படுவது வெற்றியின் அரசியல் அல்ல. சிறிய தேர்தல் வெற்றிகள்,சில குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மக்கள் எழுச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால் தொடர்ச்சியான வெற்றிகள் அல்ல. அதாவது தமிழ் அரசியலை ஒரு புதிய கட்டத்திற்கு திருப்பக்கூடிய வெற்றிகள் அல்ல. எனவே தோல்வியைக் காட்டி பயமுறுத்தும் அரசியல்வாதிகள் தாங்கள் ஏற்கனவே தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை மறைக்கிறார்களா ?

கடந்த 15 ஆண்டுகாலம் தமிழ் மக்களுக்கு திருப்பகரமான வெற்றி எதையும் பெற்றுத்தரவில்லை. எனினும்   காலம் ஒரு அரிதட்டு.அது பலரைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. பலரை அந்த அரிதட்டு சலித்துக் கழித்து விட்டிருக்கிறது. இப்பொழுது பொது வேட்பாளர் என்ற விடயமும் பலர் எங்கே நிற்கிறார்கள்? யாருக்கு விசுவாசமாக நிற்கிறார்கள்?யாரை சந்தோஷப்படுத்த எழுதுகிறார்கள்? போன்ற எல்லாவற்றையுமே தெளிவாக வெளியே கொண்டு வந்திருக்கிறது.

பொது வேட்பாளர் தோற்கக்கூடாது. உண்மைதான். தோற்கக் கூடாது. அவ்வாறு தோற்கக் கூடாது என்று சொன்னால் அதற்காக தமிழ் மக்கள் கூட்டாக உழைக்க வேண்டும். அதற்குத்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. அரசியல் சமூகமும் சிவில் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது, இரண்டு தரப்பும் ஒன்றை மற்றொன்று பலப்படுத்தி அந்த முயற்சியை முன்னெடுக்கலாம், அதேசமயம் தேர்தல் அரசியல் எனப்படுவது வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான்.

கடந்த 15 ஆண்டுகால தோல்விகரமான அரசியல் பாதையில் இருந்து தமிழ் அரசியலை திருப்பகரமான விதத்தில் தடம் மாற்ற ஒரு பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. அதில் தோற்கலாம் வெல்லலாம். ஆனால் அது பரிசோதனை. இப்போதிருக்கும் தோல்விகரமான பாதையில் இருந்து தமிழரசியலை திசை மாற்ற முயற்சிக்கும் ஒரு பரிசோதனை. எனவே தோல்வியைக் குறித்து அச்சப்படுவோர் அல்லது தோல்வியை காட்டிப்  பயமுறுத்துவோர்,தாங்கள் ரகசியமாக “டீல்” செய்ய முயற்சிக்கும்  அரசியல்வாதியின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா? அல்லது தமிழ் மக்களின் தோல்வியை குறித்து கவலைப்படுகிறார்களா?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெல்லப் போவதில்லை. அவர் ஜனாதிபதியாக வரப்போவதும் இல்லை. ஆனால் அவர் தென்னிலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவார். அதைவிட முக்கியமாக,தமிழ்ப் பொது நிலைப்பாடு ஒன்றை நோக்கி தமிழ் மக்களை ஐக்கியப்படுத்துவார். அவர் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஒரு வேட்பாளர்தான். இலங்கை முழுவதற்குமான தமிழ் வேட்பாளர் அல்ல.

தமிழரசியல்  கடந்த 15 ஆண்டுகளாக பிமுகர் மைய அரசியலாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் யார் அந்தப் பிரமுகர்,பொது வேட்பாளராக களமிறங்க போவது ? என்ற கேள்வி எழுகிறது. கட்டாயமாக அவர் ஒரு பிரமுகராக இருக்கத் தேவையில்லை. தேர்தலில் தனக்கு கிடைக்கும் பிரபல்யத்தை அடுத்தடுத்த  தேர்தல்களுக்கு முதலீடு செய்யும் ஓர் அரசியல் விலங்காக அவர் இருக்கக் கூடாது. அவரும் அவர் பயன்படுத்திய பொது சின்னமும் எதிர்கால தேர்தல்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற ஒரு உடன்படிக்கைக்கு  அவர்  கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.

பொது வேட்பாளராக ஒரு பிரமுகரைத் தேடும் அனைவரும் ஏன் மற்றொரு அன்னை பூபதியை உருவாக்குவது என்று சிந்திக்கக்கூடாது? அன்னை பூபதி உண்ணாவிரதம் இருக்கும் வரையிலும் அவரை யாரென்று அநேகருக்குத் தெரியாது. ஆனால் 30 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததன் மூலம் நவீன தமிழ் வரலாற்றில் அழிக்க்கப்பட முடியாத இடத்தைப் பெற்றார். அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து மற்றொரு அன்னை பூபதியைக் கட்டியெழுப்ப முடியாதா? அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. யாரும் உயிர் துறக்கத் தேவையில்லை. உயிரைக் கொடுத்தது போதும். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட  ஒரு வேட்பாளர் வேண்டும்,

தமிழ் அரசியலை கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்த ஒரு பொதுகட்டமைப்பானது எதிர்காலத்தில்  கூர்ப்படையத் தேவையான ஒரு பொதுத்தளத்தை அவர் பலப்படுத்துவார். அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு களமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் இங்கு முக்கியம். தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைப் பலப்படுத்தும் ஒரு பரிசோதனை. அதில் எத்தனை முறை தோற்றாலும் அதைவிட வேறுவழி தமிழ் மக்களுக்கு உண்டா? ஏனென்றால் ஐக்கியப்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு அடுத்த கட்டமே இல்லை. அடுத்தகிழமை பதினைந்தாவது மே 18 வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தேங்கிப் போயிருக்கும் தமிழ் அரசியலை ; கடந்த 15 ஆண்டுகளாகத் தேய்ந்து கொண்டு போகும் கட்சி அரசியலை; கட்சிக்காரர்களிடமிருந்தே கட்சிகளைக் காப்பாற்றவேண்டிய ஒரு காலகட்டத்தில்; வடக்காய் கிழக்காய் சாதியாய் சமயமாய் இன்னபிறவாய் சிதறிக்  கொண்டே போகும் ஒரு  சிறிய மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாகத் திரட்டுவதைவிட உன்னதமான ஒரு நினைவு கூர்தல் உண்டா?

 

https://www.nillanthan.com/6754/

 

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 days 21 hours ago
பார்ம்ல இருக்கவன பார்ம் அவுட் பண்ணனுமா... பார்ம்ல இல்லாதவனுக்கு ஓப்பனிங் பேட் வேணுமா டேபிள் கடைசில இருக்க அணிய டேபிள் டாப் கொண்டு போகனுமா மத்த டீம் கிட்ட அடி வாங்குனவன் எல்லாம் 100 அடிக்கனுமா டாஸ் வின் பண்ணி மேட்ச் தோக்கனுமா திறமையான பிளேயர்ஸ் எல்லாரையும் வருச கணக்கா பெஞ்ச்ல உக்கார வைக்கனுமா அணுகுவீர் சென்னை சூப்பர் கிங்ஸ்... சேப்பாக்கம் மைதானம்.... எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது..... முகநூல் பதிவொன்று https://www.facebook.com/story.php?story_fbid=2675239192649639&id=100004907528753&post_id=100004907528753_2675239192649639&mibextid=xfxF2i&rdid=t05xMYxZyNxFKvqs

அன்னையர் நாள்

3 days 21 hours ago
வணக்கம். காலையில் எழுந்ததும் இன்றைய நாள்(05/11/2024) குறித்த திட்டமிடல் குறித்துப் பேசினேன். மனைவியார் சொன்னார், “நாளைக்கு மதர்சு டே, ஆகவே கடைகள்ல கூட்டமா இருக்கும்”. தொடர்ச்சியாக ஒரு பேச்சைப் பதிவு(ஆடியோ கிளிப்) செய்து குழுக்களிலும் ஒருசிலருக்கும் அனுப்பி விட்டு வேலைகளைத் துவக்கி இருந்தேன். வணிக வளாகத்தை நோக்கி வண்டி சென்று கொண்டிருக்கும் போது ஓர் அழைப்பு. நார்த்கரொலைனாப் பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவரின்(president of University of North Carolina Tamil Students Organization) அழைப்பு அது. வண்டியைச் செலுத்திக் கொண்டேவும் உட்கிடை உரையாடற்கடத்தியின் ஊடாகப் பேசலானேன். “Appa, you are more inline with mother of mother's day" என்றார். நன்றி சொல்லி, நலம் விசாரிப்புக்குப் பின்னர் பேச்சு முடிவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், அன்னையர் நாளின் அன்னை குறித்த தேடலையும் நாடலையும் மேற்கொண்டேன். அமெரிக்க சிவில்வார், உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தில் கொந்தளிப்புகள் மேலோங்கி இருந்தன. பிள்ளைவளர்ப்பில் விழிப்புணர்வு வேண்டி, உள்ளூர் அளவில் தாயார்களுக்கான சங்கங்கள் அமைத்து விழிப்புணர்வு ஊட்டி வந்தார் யேனா ஜார்விஸ் என்பார். அடுத்தடுத்து அன்னையர்கள் நலம், கடமைகள் கருதிப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தார் யேனா. 1905ஆம் ஆண்டு மறைந்த தம் தாயாரின் செய்த பல தியாகங்களை மேற்கோள் காட்டி, 1908ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட வழிவகுத்தார் யேனா அவர்கள். தொடர்ந்து யேனா அவர்கள் மேற்கொண்ட அலுவல்களின் வழி, குடியரசுத் தலைவர் வுட்ரோ வில்சன் அவர்கள், மே மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை நாட்டின் அதிகாரப்பூர்வமான அன்னையர் நாளாகவும் விடுமுறைநாளாகவும் அறிவித்தார். நாடெங்கும் அன்னையர்நாள் பரபரப்பாகக் கடைபிடிக்கப்பட்டது. யேனா அவர்கள் சொல்லொணாத்துயர் கொண்டார். நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியிலிருந்து அன்னையர் நாளை நீக்க வேண்டுமெனப் போராடவும் விழைந்தார். காரணம்? அத்தகு நாள் அதன் நோக்கத்தில் இருந்து, அடிப்படையில் இருந்து விலகி, நழுவி, வணிகமயமாக்கப்பட்டதுதான் காரணம். அரசாங்கத்துடன் பேசிப் பேசி, தம் மறைவுக்குச் சற்று முன்பாக, 1948ஆம் ஆண்டு, நீக்கப்பட்டதைக் கண்டு சற்று மனம் ஆற்றிக் கொண்டார். இருந்தாலும், இன்றளவும், அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட்டே வருகின்றது. அன்னையர் நாளின் அன்னைக்கு நாம் செய்யும் தொண்டு என்னவாக இருக்க முடியும்? உள்ளபடியே அவரின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொண்டு செயற்படுவதால் மட்டுமே அது ஈடேறும். மகவினை ஈன்றுகின்ற போது ஒருவர் தாய் ஆகின்றார். அதன் நிமித்தம் அவர் பல்வேறு அர்ப்பணிப்புகளை, தன்னலம் கருதாமல் தியாகங்களைச் செய்கின்றார். ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்பு என வர்ணிப்பர். அதற்கும் மேற்பட்டு, மகவு ஈன்றபின்னரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே மீள்கின்றார். உயிர்நீர்களின்(hormonals imbalance) சமன்பாடின்மை நிமித்தம் மனச்சோகை(postpartum depression), தாய்ப்பால் ஊட்டுதற்சிக்கல்கள், தன்னுடற்கட்டுமான மீள்பணிகளெனப் பலவும். பிரசவத்திற்குப் பிறகான மனச்சோகை என்பது 80% பெண்களுக்கு ஏற்படுவதாகவும், எழுவரில் ஒருவருக்கு அது பெரும்சிக்கலாகவே உருவெடுப்பதாகவும் அற்வியற்கட்டுரைகள் சொல்கின்றன. பெரும்பாலானோர் இதனை இனம் கண்டு கொள்வதே இல்லை. மாறாக, பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் என்பதாகக் கருதி விடுகின்றனர். நீண்டநாள்ச் சிக்கல்களாக இன்னபிறவும். According to the WHO, more than a third of women experience lasting health problems after giving birth, including: Pain during sexual intercourse (30%) Low back pain (32%) Anal incontinence (19%) Urinary incontinence (8-31%) Anxiety (9-24%) Depression (11-17%) Perineal pain (11%) Fear of childbirth (tokophobia) (6-15%) சும்மா, அன்னையர் நாளில் லாலா பாடி, குளிர்விப்பதால் மட்டுமே மேன்மை கிட்டிவிடுமா? இது போன்றவற்றை வெளிப்படுத்தி, நல்லதொரு புரிதலையும் ஒத்துழைப்பையும் கவனிப்பையும் நல்குவதால் மட்டுமே, அன்னையர் நாளின் அன்னையாரான யேனா ஜார்விஸ் அவர்களின் புகழுக்கு வலுசேர்க்க முடியும். மாந்தகுலத்துக்கும் மேன்மை கிட்டும். அன்னையர் நாள் வாழ்த்தும் வணக்கமும்!! -பழமைபேசி, pazamaipesi@gmail.com http://maniyinpakkam.blogspot.com/2024/05/blog-post.html

தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் முடிவெடுக்க 19 ஆம் திகதி தமிழரசு மத்திய குழு கூடுகிறது

3 days 21 hours ago
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தீர்மானம் எடுக்க அவசரப்பட வேண்டாம் - தமிழ் அரசுக் கட்சி உட்பட அனைத்து தரப்பிடமும் சம்பந்தன் வேண்டுகோள் Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 10:44 AM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட விடயத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பிடமும் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் பகிரங்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான அரசியல் கட்சிகள் கொள்கை அளவில் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளன. சிவில் அமைப்புக்களும் ஏகமனதான கருத்துக்கு வருகை தந்துள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி 19ஆம் திகதி தீர்மானத்தை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரேஷ்ட தலைவர் என்ற வகையில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக உள்ளது என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டின் நீண்ட வரலாற்றை பார்க்கின்றபோது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்ற நிலைமைகள் உள்ளன. இந்த நிலையில் தென்னிலங்கையின் தேசியக் கட்சிகள் தற்போது வரையில் உத்தியோகபூர்வமாக தங்களது ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்புக்களைச் செய்யவில்லை. அக்கட்சிகள் அவ்விதமான அறிவிப்புக்களை செய்வதற்கு முன்னதாக நாம் எமது நிலைப்பாட்டை முன்வைத்து வீணான குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. தென்னிலங்கைத் தலைவர்களில் யார்? வேட்பாளர் அவர்களின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடு என்ன? அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் என்ன கூறுகின்றது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆழமான கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கில் சரித்திர ரீதியாக வாழ்ந்துவருகின்ற மக்கள் சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அதிகாரப்பகிர்வினைக் கோரிவருகின்றார்கள் என்பது தென்னிலங்கையின் தலைவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே அவர்கள் நாட்டின் தலைமைப்பொறுப்பினை ஏற்பதாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உள்ள சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். தென்னிலங்கையில் உள்ள தலைவர்கள் உள்ளக சுயநிர்ணய உரித்தினை ஏற்றுக்கொள்ளாது விட்டால் நாம் சர்வதேசச் சட்டங்களுக்கு அமைவாக வெளியக சுயநிர்ணயத்தினைக் கோருவதற்கு இயலுமானவர்களாக இருக்கின்றோம் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன். அந்த வகையில், நாம் அனைத்து சூழல்களையும் ஆழமாக எமது கருமங்களை முன்னெடுக்க வேண்டும். அவசரப்பட்டு எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றார். https://www.virakesari.lk/article/183291

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

3 days 21 hours ago
இனி யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேச மாட்டேன்.. நீதிபதியிடம் சொன்ன சவுக்கு சங்கர் சென்னை: இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இனிமேல் பேச மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். என்னை மோசமாக அடிக்கின்றனர். விசாரணையை என்று அடிக்கிறார்கள். இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன். நான் விசாரணை மேற்கொள்ளும் வரை தைரியமாக இருக்கும்படியும் சவுக்கு சங்கரிடம் நீதிபதி கூறியதாக சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் விஜயராகவன் பேட்டி அளித்துள்ளார். சிறைத்துறை தலைவர் வழக்கு: முன்னதாக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை வேண்டுமென்றே உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காயமடைந்த சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வு, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை (மே 09) தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் , சிறையில் சவுக்கு சங்கர் கொடுமை படுத்தப்படவில்லை. சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்? என பதிலளித்த அவர், அவருக்கு ஏற்கனவே சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம் எனவும், அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவித்தார். சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ளனர். அதனால், மருத்துவர்கள் அறிக்கை படி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். https://tamil.oneindia.com/news/chennai/i-will-not-hurt-anyones-feelings-anymore-in-youtube-videos-says-savukku-shankar-to-judges-605191.html

ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தேடும் 'ஆள் கடத்தல்காரரை' பிபிசி கண்டுபிடித்தது எப்படி? செய்தியாளரின் திரில் அனுபவம்

3 days 21 hours ago
கட்டுரை தகவல் எழுதியவர், சூ மிட்செல் பதவி, பிபிசி செய்திகள் 11 மே 2024 'பர்ஸான் மஜீத், இங்கிலாந்து உட்பட பல நாடுகளின் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி. ஆங்கிலக் கால்வாய் வழியாக பல புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் ஊடுருவச் செய்த குற்றத்திற்காக இவர் தேடப்படுகிறார். பிபிசி செய்தியாளர் சூ மிட்செல் பெரும் போராட்டத்திற்கு இவரைச் சந்தித்து பேசினார். தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சூ மிட்செல்.' இராக்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான ஆள் கடத்தல் குற்றவாளியான மஜீத்துடன் இப்போது நேருக்கு நேராக அமர்ந்திருக்கிறேன். அடுத்த நாள் அவரது அலுவலகத்தில் என இரண்டு இடங்களில் அவருடன் உரையாட முடிந்தது. எங்கள் இருவருக்குமான உரையாடலின் போது, ஆங்கிலக் கால்வாய் வழியாக அவரால் கொண்டு செல்லப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என தனக்குத் தெரியாது என்று கூறுகிறார். “ஆயிரமாக இருக்கலாம், 10,000 இருக்கலாம். எனக்குத் தெரியாது, நான் எண்ணவில்லை” என்கிறார் மஜீத். சில மாதங்களுக்கு முன், மஜீத்துடனான இந்த சந்திப்பு சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றியது. அகதிகளுடன் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ராப் லாரியுடன் சேர்ந்து, ‘ஸ்கார்பியன்’ (Scorpion) என்று அழைக்கப்படும் இந்த மனிதரை (மஜீத்) கண்டுபிடித்து விசாரிக்க நான் புறப்பட்டேன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிப்ரவரி 2023: துருக்கியில் இருந்து இத்தாலிக்குச் சென்ற படகில் குறைந்தது 95 புலம்பெயர்ந்தோர் இறந்தனர். பல ஆண்டுகளாக, ஆங்கிலக் கால்வாய் வழியாக படகுகள் மற்றும் லாரிகள் மூலம் ஆட்களைக் கடத்தும் தொழிலை மஜீத்தும் அவரது கும்பலும் செய்து வந்தனர். ஆங்கிலக் கால்வாய் பகுதியில் நடைபெற்ற பெரும்பாலான ஆள் கடத்தல்களில் இந்த கும்பலுக்கு பங்கு இருந்தது. 2018 முதல் இன்று வரை, ஆங்கிலக் கால்வாயை படகு மூலம் கடக்க முயன்ற 70க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர். கடந்த மாதம், பிரான்ஸ் நாட்டின் கடற்பகுதியில் ஏழு வயது சிறுமி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய சட்டவிரோத பயணம் மிகவும் ஆபத்தான ஒன்று, ஆனால் கடத்தல்காரர்களுக்கு இவை மிகவும் லாபகரமானதாக இருக்கின்றன. படகு மூலம் ஆங்கிலக் கால்வாயை கடக்க ஒரு நபருக்கு 6,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 6.27 லட்சம்) வசூலிக்கிறார்கள். 2023இல் கிட்டத்தட்ட 30,000 பேர் இவ்வாறு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயற்சி செய்தார்கள், இதனால் இந்தத் தொழிலில் லாபத்திற்கான சாத்தியம் மிகத் தெளிவாக உள்ளது. ஸ்கார்பியன் என்னும் இந்த குற்றவாளி குறித்த எங்கள் தேடல், வடக்கு பிரான்சின் கலேஸ் நகருக்கு அருகே உள்ள ஒரு அகதிகள் முகாமில் இருந்து தொடங்கியது. அங்கு நாங்கள் ஒரு சிறுமியைச் சந்தித்தோம். டிங்கி (Dinghy) எனப்படும் காற்று அடைக்கப்பட்ட ஒரு சிறிய படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற அந்தச் சிறுமி, கிட்டத்தட்ட உயிரை இழக்கும் நிலைக்குச் சென்றார். அந்த டிங்கி படகு கடல் பயணத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கவில்லை. மிகவும் மலிவான விலையில், பெல்ஜியத்தில் இருந்து அந்த பழைய டிங்கி படகு வாங்கப்பட்டது. அதில் பயணித்த 19 பேரிடமும் லைஃப் ஜாக்கெட்டுகள் இல்லை. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சி செய்கிறார்கள். கடலுக்கு மக்களை அனுப்புவது யார்? சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் இங்கிலாந்து காவல்துறையினர், அவர்கள் மொபைல் போன்களை எடுத்து சோதனை செய்கிறார்கள். 2016 முதல் செய்த சோதனைகளில், ஒரு மொபைல் எண் மீண்டும் மீண்டும் கிடைத்தது. பெரும்பாலும் அந்த எண் ‘ஸ்கார்பியன்’ என்ற பெயர் அல்லது தேள் புகைப்படத்துடன் சேமிக்கப்பட்டிருக்கும். பர்ஸான் மஜீத் என்ற குர்திஷ் இராக்கிய மனிதரின் குறியீட்டுப் பெயர் தான் இந்த ‘ஸ்கார்பியன்’ என்பதை அதிகாரிகள் உணரத் தொடங்கினர் என்று இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் அமைப்பின் (NCA) மூத்த விசாரணை அதிகாரி மார்ட்டின் கிளார்க் எங்களிடம் கூறினார். 2006ஆம் ஆண்டில் 20 வயது இளைஞனாக, ஒரு லாரி மூலமாக இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார் மஜீத். ஒரு வருடம் கழித்து, இங்கிலாந்தில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், கூடுதலாக பல ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். அதில் சில ஆண்டுகளை துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் கழித்தார். அவர் இறுதியாக 2015இல் இராக்கிற்கு நாடு கடத்தப்பட்டார். இதற்குப் பிறகு, பெல்ஜியத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனது மூத்த சகோதரரிடமிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை இங்கிலாந்திற்குள் கடத்தும் தொழிலை கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. பின்னர் மஜீத், ஸ்கார்பியன் என்ற பெயரால் அறியப்பட்டார். 2016 மற்றும் 2021க்கு இடையில், ஐரோப்பாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மக்கள் கடத்தல் வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஸ்கார்பியன் கும்பல் கட்டுப்படுத்தியதாக நம்பப்படுகிறது. இரண்டு வருட சர்வதேச காவல்துறையின் கடுமையான நடவடிக்கையின் விளைவாக, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள நீதிமன்றங்களில் இந்த கும்பலைச் சேர்ந்த 26 உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் கைது செய்யப்படுவதிலிருந்து தொடர்ந்து தப்பித்து ஓடிக்கொண்டிருந்தார் ஸ்கார்பியன். பெல்ஜிய நீதிமன்றத்தில் அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில், 121 நபர்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அக்டோபர் 2022இல், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 834,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 8.72 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போதிருந்து, ஸ்கார்பியன் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. இதுவே நாங்கள் உடைக்க விரும்பிய மர்மம். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,மஜீத், 2012இல், நாட்டிங்ஹாமில் கார் மெக்கானிக்காக பணிபுரிந்தார். ஸ்கார்பியனை சந்திப்பதற்கான முயற்சி ராபின் தொடர்பு மூலம் ஒரு இரானிய நபரிடம் பேசினோம். அவர் ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது ஸ்கார்பியனை தொடர்பு கொண்டதாக கூறினார். ஸ்கார்பியன் அந்த இரானியரிடம் தான் துருக்கியில் இருப்பதாகவும், அங்கிருந்து தனது வணிகத்தை ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறியிருந்தார். பெல்ஜியத்தில், மஜீத்தின் மூத்த சகோதரரை நாங்கள் கண்டுபிடித்தோம், இப்போது அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஸ்கார்பியன் துருக்கியில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். இங்கிலாந்திற்குச் செல்லும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோருக்கு, துருக்கி ஒரு முக்கியமான இடமாகும். அதன் குடியேற்றச் சட்டங்கள் காரணமாக, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைய விசா பெறுவது ஒப்பீட்டளவில் எளிதானது. இஸ்தான்புல்லில் கடத்தல்காரர்கள் அடிக்கடி வரும் ஒரு ஓட்டலுக்கு நாங்கள் சென்றோம். பர்ஸான் மஜீத் சமீபத்தில் அங்கு காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடத்தல் வணிகத்தைப் பற்றி எங்களிடம் கூற முடியுமா என்று மேலாளரிடம் கேட்ட போது, மொத்த கஃபேயும் அமைதியாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு நபர் எங்கள் மேஜையைக் கடந்து செல்லும் போது, துப்பாக்கியை எடுத்துச் செல்வதைக் காட்ட தனது மேல் சட்டையை விலக்கி காண்பித்தார். நாங்கள் ஆபத்தானவர்களைக் குறித்து விசாரிக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாக அது இருந்தது. எங்கள் அடுத்த விசாரணை மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்தது. சில தெருக்களுக்கு அப்பால் உள்ள பணப் பரிமாற்ற நிலையத்தில் மஜீத் சமீபத்தில் 172,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 1.8 கோடி) டெபாசிட் செய்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் கைப்பேசி எண்ணை அங்கே கொடுத்துவிட்டு வந்தோம், அடுத்த நாள் இரவில், ராபின் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியின் மறுமுனையில் யாரோ ஒருவர் பர்ஸான் மஜீத் என்று கூறிக்கொண்டிருந்தார். இந்த அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே அழைப்பின் தொடக்கத்தை பதிவு செய்ய நேரம் இல்லை. ராப் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், “நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.” என்று கூறினார். நான் அவரிடம், 'நீங்கள் யார்? ஸ்கார்பியனா?' எனக் கேட்டபோது, 'நீங்கள் என்னை அப்படி அழைக்க விரும்புகிறீர்களா? பரவாயில்லை’ என்றார். இவர்தான் உண்மையான பர்ஸான் மஜீத் என்பதைச் சொல்ல வழியில்லை, ஆனால் அவர் கொடுத்த விவரங்கள் நமக்குத் தெரிந்தவற்றுடன் ஒத்துப்போகின்றன. 2015ஆம் ஆண்டு நாடு கடத்தப்படும் வரை நாட்டிங்ஹாமில் தான் வசித்து வந்ததாக அவர் கூறினார். ஆனால் தான் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லை என்று அவர் மறுத்தார். "இது உண்மையல்ல. இது வெறும் ஊடகங்களின் கூற்று" என்று அவர் தெரிவித்தார். தொடர்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டது, ஆனால் அவர் தனது இருப்பிடம் குறித்து எந்த துப்பும் கொடுக்கவில்லை. படக்குறிப்பு,தனது சகோதரர்களுடன் ஸ்கார்பியன். புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி மற்றும் இடம் தெரியவில்லை. 12 பேருக்கான படகில் 100 பேர் அவர் எப்போது மீண்டும் அழைப்பார் என்று எங்களுக்குத் தெரியாது. இதற்கிடையில், துருக்கியிலிருந்து கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு குடிபெயர்ந்தவர்களை கடத்துவதில் ஸ்கார்பியன் இப்போது ஈடுபட்டுள்ளதாக ராபின் உள்ளூர் தொடர்பு எங்களிடம் கூறினார். நாங்கள் கேட்டது கவலையளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது. ஏறக்குறைய 12 பேரை ஏற்றிச் செல்ல உரிமம் பெற்ற படகுகளில் 100 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம்கூட்டமாக ஏறத் தயாராக இருந்தனர். படகுகள் பெரும்பாலும் படகோட்டும் அனுபவம் இல்லாத கடத்தல்காரர்களால் இயக்கப்படும். கடலோர காவல்படை ரோந்துகளைத் தவிர்ப்பதற்காக சிறிய தீவுக் கூட்டங்களுக்கு இடையே ஆபத்தான பாதையில் செல்லும். இதில் பெரிய அளவிலான பணம் விளையாடுகிறது. இந்த படகுகளில் ஒரு இடத்திற்கு பயணிகள் தலா 10,000 யூரோக்கள் (9 லட்சம் ரூபாய்) செலுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 720,000க்கும் அதிகமான மக்கள் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 2,500 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். எஸ்ஓஎஸ் மெடிட்டரேனியன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜூலியா ஷாஃபர்மேயர் கூறுகையில், “கடத்தல்காரர்கள் இந்த மக்களின் வாழ்க்கையை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த மக்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று நான் நினைக்கிறேன்." இந்த நேரத்தில், இந்த கேள்வியை ஸ்கார்பியனிடம் நேரடியாக கேட்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் எங்களை அழைத்தார். மீண்டும் ஒருமுறை, தான் ஒரு கடத்தல்காரர் என்பதை அவர் மறுத்தார். இருப்பினும், தான் பார்த்த வேலைக்கான அவரது வரையறை என்பது “நான் பணியை மட்டுமே செய்தேன், ஆனால் கட்டளையிட்டவர் வேறு யாரோ” என்று தோன்றியது. “நான் வெறுமனே அங்கு இருந்தேன், இப்போது அப்படி கூட இல்லை. நான் பணத்தைக் கையாள்பவன் மட்டுமே” என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்தான்புல், ஐரோப்பாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு துருக்கி ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. ஸ்கார்பியனுக்கு சொந்தமான வில்லா மஜீத் நீரில் மூழ்கி இறந்த புலம்பெயர்ந்தோர் மீது சிறிதும் அனுதாபம் காட்டவில்லை. "நீங்கள் இறந்து போவது கடவுள் கையில் உள்ளது, ஆனால் சில நேரங்களில் உங்கள் தவறும் உள்ளது. கடவுள் ஒருபோதும் 'அந்த படகில் ஏறு’ என்று கூறுவதில்லை." என்கிறார் மஜீத். எங்களின் அடுத்த விசாரணைக்கான இடம் மர்மரிஸ் ரிசார்ட் ஆகும், அங்கு ஸ்கார்பியனுக்கு சொந்தமாக ஒரு வில்லா இருப்பதாக துருக்கி போலீசார் கூறினர். நாங்கள் அங்கு விசாரித்தபோது, அவருடன் எல்லோருடனும் நட்பாக இருந்ததாக ஒரு பெண் கூறினார். மஜீத் ஆள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதை அந்தப் பெண் அறிந்திருந்தார். இது மஜீத்துக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் கூட, அவரது கவலை பணத்தைப் பற்றி மட்டுமே, புலம்பெயர்ந்தோரின் தலைவிதி பற்றி அல்ல என்றும் அந்தப் பெண் கூறினார். "மஜீத் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அது மிகவும் வருத்தமாக இருக்கிறது, இல்லையா? நான் கேள்விப்பட்ட விஷயங்களை நினைத்துப் பார்த்தால், மிகவும் அவமானமாக உள்ளது. ஏனென்றால் அவை நல்லதல்ல என்று எனக்குத் தெரியும்." என்கிறார் அந்தப் பெண். அவர் இராக்கில் இருக்கலாம் என்று யாரோ தன்னிடம் கூறியிருந்தாலும், சமீபத்தில் மர்மரிஸில் உள்ள அவரது வில்லாவில் அவரைப் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள ஒரு நகரமான சுலைமானியாவில் உள்ள ஒரு பணப் பரிமாற்றத்தில் ஸ்கார்பியனை அண்மையில் பார்த்ததாக மற்றொரு நபர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. நாங்கள் அந்த இடத்திற்கு புறப்பட்டோம். அங்கு ஸ்கார்பியன் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் ராபின் நண்பரால் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. முதலில், மஜீத் மிகவும் சந்தேகமடைந்தார், எப்படியாவது அவரைப் பிடித்து ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறோம் என்று கவலைப்பட்டார். முதலில் ராபின் நண்பர் மூலமாகவும், பின்னர் நேரடியாக ராப் மூலமாகவும் குறுஞ்செய்திகள் குவிந்தன. ஸ்கார்பியன் எங்களை சந்திப்பார், ஆனால் சந்திக்கும் இடத்தை அவரே முடிவு செய்வார் என்றால் மட்டுமே சந்திப்பு நடக்கும். அவர் சொல்லும் இடம் என்றால் பாதுகாப்பாக இருக்குமா அச்சம் இருந்ததால் நாங்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் ஒரு குறுஞ்செய்தி வந்தது, "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" நாங்கள் அருகில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னோம். ஸ்கார்பியன் எங்களிடம் அவரை தரை தளத்தில் உள்ள ஒரு காபி ஷாப்பில் சந்திக்கச் சொன்னார். படக்குறிப்பு,சூ மிட்செல் மற்றும் ராப், ஸ்கார்பியனைச் சந்தித்தபோது, அவர்களின் ஓட்டுனர் ரகசியமாக அதை படம்பிடித்தார். ஸ்கார்பியனை சந்தித்த தருணம் இறுதியாக, நாங்கள் அவரைப் பார்த்தோம். பர்ஸான் மஜீத் ஒரு பணக்கார கோல்ப் வீரர் போல் தோற்றமளித்தார். புதிய ஜீன்ஸ், வெளிர்-நீல சட்டை மற்றும் கறுப்பு நிற மேல் கோட் அணிந்திருந்தார். அவர் கைகளை மேசையில் வைத்தபோது, அவரது விரல் நகங்கள் மெனிக்யூர் செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன். இதற்கிடையில், மூன்று பேர் அருகில் இருந்த மேஜையில் அமர்ந்தனர். அவரது பாதுகாப்பு குழு என்பதை நாங்கள் யூகித்தோம். மீண்டும், அவர் ஒரு குற்ற அமைப்பின் தலைவராக இருப்பதை மறுத்தார். மற்ற கும்பல்கள் தன்னை சிக்க வைக்க முயன்றதாக அவர் கூறினார். "சிலர் தாங்கள் கைது செய்யப்படும்போது, 'நாங்கள் அவருக்காக வேலை செய்கிறோம்' என்று கூறுகிறார்கள். அவர்கள் குறைவான தண்டனையைப் பெற விரும்புகிறார்கள். அதனால் இப்படிச் சொல்கிறார்கள்” என்றார். மற்ற கடத்தல்காரர்களுக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு அவர்களின் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் அவருக்கு கோபம் உள்ளது. "பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்த பையன் ஒருவன், மூன்று நாட்களில் 170 அல்லது 180 பேரை துருக்கியிலிருந்து இத்தாலிக்கு அனுப்பினான். நான் தொழில் செய்ய வேறு நாட்டிற்கு செல்ல விரும்புகிறேன். என்னால் இங்கு இருக்க முடியாது” என்றார் மஜீத். புலம்பெயர்ந்தோர் இறப்புக்கான அவரது பொறுப்பு குறித்து நாங்கள் கேட்டபோது, அவர் தொலைபேசியில் சொன்னதையே மீண்டும் கூறினார், அவர் பணத்தை எடுத்துக்கொண்டு படகில் இடங்களை மட்டுமே முன்பதிவு செய்தேன் என்று. அவரைப் பொருத்தவரை, ஒரு கடத்தல்காரன் என்பவன் மக்களை படகுகள் மற்றும் லாரிகளில் ஏற்றி அவர்களை சட்டவிரோதமாக கடத்துபவன். "நான் யாரையும் படகில் ஏற்றியதில்லை, யாரையும் கொன்றதில்லை." என்றார் அவர். உரையாடல் முடிந்தது, ஆனால் சுலைமானியாவில் தான் பணிபுரிந்த பணப் பரிமாற்ற அலுவலகத்தைப் பார்க்க ராப்பை அழைத்தார் ஸ்கார்பியன். அது ஒரு சிறிய அலுவலகம், ஜன்னலில் அரபு மொழியில் சில எழுத்துகளும் ஒன்றிரண்டு மொபைல் போன் எண்களும் இருந்தன. மக்கள் பணம் செலுத்த அங்கு வந்தனர். அங்கு இருந்தபோது ஒரு நபர் ஒரு பெட்டி நிறைய பணம் எடுத்துச் செல்வதைக் கண்டதாகக் கூறினார் ராப். இந்த சந்தர்ப்பத்தில், 2016ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவிற்குச் சென்ற போது, தான் எவ்வாறு இந்த வணிகத்தில் இறங்கினேன் என்பதைப் பற்றி பேசினார் ஸ்கார்பியன். “யாரும் அந்த மக்களை வற்புறுத்தவில்லை. அவர்கள் விரும்பியே சென்றனர்” என்று அவர் கூறினார். "அவர்கள் கடத்தல்காரர்களிடம், 'தயவுசெய்து, எங்களுக்கு இதைச் செய்யுங்கள்' என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் கடத்தல்காரர்கள், 'கடவுளுக்காக நான் அந்த மக்களுக்கு உதவுவேன்' என்று கூறுகிறார்கள். பின்னர் இது உண்மையல்ல, அது உண்மையல்ல என்று அவர்கள் புகார் கூறுகிறார்கள்” என்கிறார் ஸ்கார்பியன். படக்குறிப்பு,பெல்ஜியத்தில் உள்ள வழக்கறிஞர்களிடமிருந்து பெற்ற தகவல் தாள். 2016 மற்றும் 2019க்கு இடையில், பெல்ஜியம் மற்றும் பிரான்சில் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய இரண்டு முக்கிய நபர்களில் ஒருவராக தான் இருந்ததாக ஸ்கார்பியன் கூறினார், மேலும் அந்த சமயத்தில் அவர் லட்சக்கணக்கான டாலர்களைக் கையாண்டதாக ஒப்புக்கொண்டார். "நான் அவர்களுக்கு வேலை செய்தேன். பணம், இருப்பிடம், பயணிகள், கடத்தல்காரர்கள், இவை அனைத்திற்கும் இடையில் நான் செயல்பட்டேன்” என்று சொல்லும் அவர், தான் ஆட்கள் கடத்தலில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து மறுத்தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் இதற்கு முற்றிலும் முரணானது. ஸ்கார்பியன் அதை உணரவில்லை, ஆனால் அவர் தனது மொபைல் ஃபோனை ஸ்க்ரோல் செய்தபோது, ராப் பின்னால் உள்ள கண்ணாடியில் மொபைல் திரையின் பிரதிபலிப்பைப் பிடித்தார். சில பாஸ்போர்ட் எண்களின் பட்டியலை ராப்பால் பார்க்க முடிந்தது. கடத்தல்காரர்கள் இவற்றை இராக் அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள் என்று பின்னர் அறிந்தோம். புலம்பெயர்ந்தோர் துருக்கிக்கு செல்ல, போலி விசாக்களை வழங்க இராக் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படும். அதுதான் நாங்கள் ஸ்கார்பியனைக் கடைசியாகப் பார்த்தது. ஒவ்வொரு கட்டத்திலும், நாங்கள் எங்கள் விசாரணையின் முடிவுகளை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டோம். பெல்ஜியத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் ஆன் லுகோவியாக், ஸ்கார்பியனுக்கு எதிரான வழக்கில் முக்கிய பங்கு ஆற்றியவர். ஸ்கார்பியன் ஒரு நாள் ஈராக்கில் இருந்து நாடு கடத்தப்படுவார் என்று அவர் நம்புகிறார். "நீங்கள் விரும்பியதை எல்லாம் செய்ய முடியாது என்ற சமிக்ஞையை குற்றவாளிக்கு அனுப்புவது மிகவும் முக்கியம். நாங்கள் கண்டிப்பாக அவரை வீழ்த்துவோம்" என்று வழக்கறிஞர் ஆன் லுகோவியாக் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cp9gw9e8dnjo

ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தேடும் 'ஆள் கடத்தல்காரரை' பிபிசி கண்டுபிடித்தது எப்படி? செய்தியாளரின் திரில் அனுபவம்

3 days 21 hours ago
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சூ மிட்செல்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 11 மே 2024

'பர்ஸான் மஜீத், இங்கிலாந்து உட்பட பல நாடுகளின் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி. ஆங்கிலக் கால்வாய் வழியாக பல புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் ஊடுருவச் செய்த குற்றத்திற்காக இவர் தேடப்படுகிறார். பிபிசி செய்தியாளர் சூ மிட்செல் பெரும் போராட்டத்திற்கு இவரைச் சந்தித்து பேசினார். தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சூ மிட்செல்.'

இராக்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான ஆள் கடத்தல் குற்றவாளியான மஜீத்துடன் இப்போது நேருக்கு நேராக அமர்ந்திருக்கிறேன்.

அடுத்த நாள் அவரது அலுவலகத்தில் என இரண்டு இடங்களில் அவருடன் உரையாட முடிந்தது. எங்கள் இருவருக்குமான உரையாடலின் போது, ஆங்கிலக் கால்வாய் வழியாக அவரால் கொண்டு செல்லப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என தனக்குத் தெரியாது என்று கூறுகிறார்.

“ஆயிரமாக இருக்கலாம், 10,000 இருக்கலாம். எனக்குத் தெரியாது, நான் எண்ணவில்லை” என்கிறார் மஜீத்.

சில மாதங்களுக்கு முன், மஜீத்துடனான இந்த சந்திப்பு சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றியது.

அகதிகளுடன் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ராப் லாரியுடன் சேர்ந்து, ‘ஸ்கார்பியன்’ (Scorpion) என்று அழைக்கப்படும் இந்த மனிதரை (மஜீத்) கண்டுபிடித்து விசாரிக்க நான் புறப்பட்டேன்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிப்ரவரி 2023: துருக்கியில் இருந்து இத்தாலிக்குச் சென்ற படகில் குறைந்தது 95 புலம்பெயர்ந்தோர் இறந்தனர்.

பல ஆண்டுகளாக, ஆங்கிலக் கால்வாய் வழியாக படகுகள் மற்றும் லாரிகள் மூலம் ஆட்களைக் கடத்தும் தொழிலை மஜீத்தும் அவரது கும்பலும் செய்து வந்தனர். ஆங்கிலக் கால்வாய் பகுதியில் நடைபெற்ற பெரும்பாலான ஆள் கடத்தல்களில் இந்த கும்பலுக்கு பங்கு இருந்தது.

2018 முதல் இன்று வரை, ஆங்கிலக் கால்வாயை படகு மூலம் கடக்க முயன்ற 70க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர். கடந்த மாதம், பிரான்ஸ் நாட்டின் கடற்பகுதியில் ஏழு வயது சிறுமி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

இத்தகைய சட்டவிரோத பயணம் மிகவும் ஆபத்தான ஒன்று, ஆனால் கடத்தல்காரர்களுக்கு இவை மிகவும் லாபகரமானதாக இருக்கின்றன.

படகு மூலம் ஆங்கிலக் கால்வாயை கடக்க ஒரு நபருக்கு 6,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 6.27 லட்சம்) வசூலிக்கிறார்கள். 2023இல் கிட்டத்தட்ட 30,000 பேர் இவ்வாறு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயற்சி செய்தார்கள், இதனால் இந்தத் தொழிலில் லாபத்திற்கான சாத்தியம் மிகத் தெளிவாக உள்ளது.

ஸ்கார்பியன் என்னும் இந்த குற்றவாளி குறித்த எங்கள் தேடல், வடக்கு பிரான்சின் கலேஸ் நகருக்கு அருகே உள்ள ஒரு அகதிகள் முகாமில் இருந்து தொடங்கியது.

அங்கு நாங்கள் ஒரு சிறுமியைச் சந்தித்தோம். டிங்கி (Dinghy) எனப்படும் காற்று அடைக்கப்பட்ட ஒரு சிறிய படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற அந்தச் சிறுமி, கிட்டத்தட்ட உயிரை இழக்கும் நிலைக்குச் சென்றார்.

அந்த டிங்கி படகு கடல் பயணத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கவில்லை. மிகவும் மலிவான விலையில், பெல்ஜியத்தில் இருந்து அந்த பழைய டிங்கி படகு வாங்கப்பட்டது. அதில் பயணித்த 19 பேரிடமும் லைஃப் ஜாக்கெட்டுகள் இல்லை.

ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சி செய்கிறார்கள்.
கடலுக்கு மக்களை அனுப்புவது யார்?

சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் இங்கிலாந்து காவல்துறையினர், அவர்கள் மொபைல் போன்களை எடுத்து சோதனை செய்கிறார்கள்.

2016 முதல் செய்த சோதனைகளில், ஒரு மொபைல் எண் மீண்டும் மீண்டும் கிடைத்தது.

பெரும்பாலும் அந்த எண் ‘ஸ்கார்பியன்’ என்ற பெயர் அல்லது தேள் புகைப்படத்துடன் சேமிக்கப்பட்டிருக்கும். பர்ஸான் மஜீத் என்ற குர்திஷ் இராக்கிய மனிதரின் குறியீட்டுப் பெயர் தான் இந்த ‘ஸ்கார்பியன்’ என்பதை அதிகாரிகள் உணரத் தொடங்கினர் என்று இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் அமைப்பின் (NCA) மூத்த விசாரணை அதிகாரி மார்ட்டின் கிளார்க் எங்களிடம் கூறினார்.

2006ஆம் ஆண்டில் 20 வயது இளைஞனாக, ஒரு லாரி மூலமாக இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார் மஜீத். ஒரு வருடம் கழித்து, இங்கிலாந்தில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், கூடுதலாக பல ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். அதில் சில ஆண்டுகளை துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் கழித்தார்.

அவர் இறுதியாக 2015இல் இராக்கிற்கு நாடு கடத்தப்பட்டார். இதற்குப் பிறகு, பெல்ஜியத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனது மூத்த சகோதரரிடமிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை இங்கிலாந்திற்குள் கடத்தும் தொழிலை கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

பின்னர் மஜீத், ஸ்கார்பியன் என்ற பெயரால் அறியப்பட்டார்.

2016 மற்றும் 2021க்கு இடையில், ஐரோப்பாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மக்கள் கடத்தல் வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஸ்கார்பியன் கும்பல் கட்டுப்படுத்தியதாக நம்பப்படுகிறது.

இரண்டு வருட சர்வதேச காவல்துறையின் கடுமையான நடவடிக்கையின் விளைவாக, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள நீதிமன்றங்களில் இந்த கும்பலைச் சேர்ந்த 26 உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் கைது செய்யப்படுவதிலிருந்து தொடர்ந்து தப்பித்து ஓடிக்கொண்டிருந்தார் ஸ்கார்பியன்.

பெல்ஜிய நீதிமன்றத்தில் அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில், 121 நபர்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அக்டோபர் 2022இல், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 834,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 8.72 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டது.

அப்போதிருந்து, ஸ்கார்பியன் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. இதுவே நாங்கள் உடைக்க விரும்பிய மர்மம்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,மஜீத், 2012இல், நாட்டிங்ஹாமில் கார் மெக்கானிக்காக பணிபுரிந்தார்.
ஸ்கார்பியனை சந்திப்பதற்கான முயற்சி

ராபின் தொடர்பு மூலம் ஒரு இரானிய நபரிடம் பேசினோம். அவர் ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது ஸ்கார்பியனை தொடர்பு கொண்டதாக கூறினார். ஸ்கார்பியன் அந்த இரானியரிடம் தான் துருக்கியில் இருப்பதாகவும், அங்கிருந்து தனது வணிகத்தை ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

பெல்ஜியத்தில், மஜீத்தின் மூத்த சகோதரரை நாங்கள் கண்டுபிடித்தோம், இப்போது அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஸ்கார்பியன் துருக்கியில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இங்கிலாந்திற்குச் செல்லும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோருக்கு, துருக்கி ஒரு முக்கியமான இடமாகும். அதன் குடியேற்றச் சட்டங்கள் காரணமாக, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைய விசா பெறுவது ஒப்பீட்டளவில் எளிதானது.

இஸ்தான்புல்லில் கடத்தல்காரர்கள் அடிக்கடி வரும் ஒரு ஓட்டலுக்கு நாங்கள் சென்றோம். பர்ஸான் மஜீத் சமீபத்தில் அங்கு காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

கடத்தல் வணிகத்தைப் பற்றி எங்களிடம் கூற முடியுமா என்று மேலாளரிடம் கேட்ட போது, மொத்த கஃபேயும் அமைதியாக இருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு நபர் எங்கள் மேஜையைக் கடந்து செல்லும் போது, துப்பாக்கியை எடுத்துச் செல்வதைக் காட்ட தனது மேல் சட்டையை விலக்கி காண்பித்தார். நாங்கள் ஆபத்தானவர்களைக் குறித்து விசாரிக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாக அது இருந்தது.

எங்கள் அடுத்த விசாரணை மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்தது. சில தெருக்களுக்கு அப்பால் உள்ள பணப் பரிமாற்ற நிலையத்தில் மஜீத் சமீபத்தில் 172,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 1.8 கோடி) டெபாசிட் செய்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் கைப்பேசி எண்ணை அங்கே கொடுத்துவிட்டு வந்தோம், அடுத்த நாள் இரவில், ராபின் தொலைபேசி ஒலித்தது.

தொலைபேசியின் மறுமுனையில் யாரோ ஒருவர் பர்ஸான் மஜீத் என்று கூறிக்கொண்டிருந்தார்.

இந்த அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே அழைப்பின் தொடக்கத்தை பதிவு செய்ய நேரம் இல்லை.

ராப் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், “நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.” என்று கூறினார்.

நான் அவரிடம், 'நீங்கள் யார்? ஸ்கார்பியனா?' எனக் கேட்டபோது, 'நீங்கள் என்னை அப்படி அழைக்க விரும்புகிறீர்களா? பரவாயில்லை’ என்றார்.

இவர்தான் உண்மையான பர்ஸான் மஜீத் என்பதைச் சொல்ல வழியில்லை, ஆனால் அவர் கொடுத்த விவரங்கள் நமக்குத் தெரிந்தவற்றுடன் ஒத்துப்போகின்றன. 2015ஆம் ஆண்டு நாடு கடத்தப்படும் வரை நாட்டிங்ஹாமில் தான் வசித்து வந்ததாக அவர் கூறினார். ஆனால் தான் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லை என்று அவர் மறுத்தார்.

"இது உண்மையல்ல. இது வெறும் ஊடகங்களின் கூற்று" என்று அவர் தெரிவித்தார். தொடர்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டது, ஆனால் அவர் தனது இருப்பிடம் குறித்து எந்த துப்பும் கொடுக்கவில்லை.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
படக்குறிப்பு,தனது சகோதரர்களுடன் ஸ்கார்பியன். புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி மற்றும் இடம் தெரியவில்லை.
12 பேருக்கான படகில் 100 பேர்

அவர் எப்போது மீண்டும் அழைப்பார் என்று எங்களுக்குத் தெரியாது. இதற்கிடையில், துருக்கியிலிருந்து கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு குடிபெயர்ந்தவர்களை கடத்துவதில் ஸ்கார்பியன் இப்போது ஈடுபட்டுள்ளதாக ராபின் உள்ளூர் தொடர்பு எங்களிடம் கூறினார்.

நாங்கள் கேட்டது கவலையளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது. ஏறக்குறைய 12 பேரை ஏற்றிச் செல்ல உரிமம் பெற்ற படகுகளில் 100 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம்கூட்டமாக ஏறத் தயாராக இருந்தனர்.

படகுகள் பெரும்பாலும் படகோட்டும் அனுபவம் இல்லாத கடத்தல்காரர்களால் இயக்கப்படும். கடலோர காவல்படை ரோந்துகளைத் தவிர்ப்பதற்காக சிறிய தீவுக் கூட்டங்களுக்கு இடையே ஆபத்தான பாதையில் செல்லும்.

இதில் பெரிய அளவிலான பணம் விளையாடுகிறது. இந்த படகுகளில் ஒரு இடத்திற்கு பயணிகள் தலா 10,000 யூரோக்கள் (9 லட்சம் ரூபாய்) செலுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 720,000க்கும் அதிகமான மக்கள் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 2,500 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

எஸ்ஓஎஸ் மெடிட்டரேனியன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜூலியா ஷாஃபர்மேயர் கூறுகையில், “கடத்தல்காரர்கள் இந்த மக்களின் வாழ்க்கையை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த மக்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று நான் நினைக்கிறேன்."

இந்த நேரத்தில், இந்த கேள்வியை ஸ்கார்பியனிடம் நேரடியாக கேட்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் எங்களை அழைத்தார்.

மீண்டும் ஒருமுறை, தான் ஒரு கடத்தல்காரர் என்பதை அவர் மறுத்தார். இருப்பினும், தான் பார்த்த வேலைக்கான அவரது வரையறை என்பது “நான் பணியை மட்டுமே செய்தேன், ஆனால் கட்டளையிட்டவர் வேறு யாரோ” என்று தோன்றியது.

“நான் வெறுமனே அங்கு இருந்தேன், இப்போது அப்படி கூட இல்லை. நான் பணத்தைக் கையாள்பவன் மட்டுமே” என்று அவர் கூறினார்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்தான்புல், ஐரோப்பாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு துருக்கி ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது.
ஸ்கார்பியனுக்கு சொந்தமான வில்லா

மஜீத் நீரில் மூழ்கி இறந்த புலம்பெயர்ந்தோர் மீது சிறிதும் அனுதாபம் காட்டவில்லை.

"நீங்கள் இறந்து போவது கடவுள் கையில் உள்ளது, ஆனால் சில நேரங்களில் உங்கள் தவறும் உள்ளது. கடவுள் ஒருபோதும் 'அந்த படகில் ஏறு’ என்று கூறுவதில்லை." என்கிறார் மஜீத்.

எங்களின் அடுத்த விசாரணைக்கான இடம் மர்மரிஸ் ரிசார்ட் ஆகும், அங்கு ஸ்கார்பியனுக்கு சொந்தமாக ஒரு வில்லா இருப்பதாக துருக்கி போலீசார் கூறினர். நாங்கள் அங்கு விசாரித்தபோது, அவருடன் எல்லோருடனும் நட்பாக இருந்ததாக ஒரு பெண் கூறினார்.

மஜீத் ஆள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதை அந்தப் பெண் அறிந்திருந்தார். இது மஜீத்துக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் கூட, அவரது கவலை பணத்தைப் பற்றி மட்டுமே, புலம்பெயர்ந்தோரின் தலைவிதி பற்றி அல்ல என்றும் அந்தப் பெண் கூறினார்.

"மஜீத் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அது மிகவும் வருத்தமாக இருக்கிறது, இல்லையா? நான் கேள்விப்பட்ட விஷயங்களை நினைத்துப் பார்த்தால், மிகவும் அவமானமாக உள்ளது. ஏனென்றால் அவை நல்லதல்ல என்று எனக்குத் தெரியும்." என்கிறார் அந்தப் பெண்.

அவர் இராக்கில் இருக்கலாம் என்று யாரோ தன்னிடம் கூறியிருந்தாலும், சமீபத்தில் மர்மரிஸில் உள்ள அவரது வில்லாவில் அவரைப் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள ஒரு நகரமான சுலைமானியாவில் உள்ள ஒரு பணப் பரிமாற்றத்தில் ஸ்கார்பியனை அண்மையில் பார்த்ததாக மற்றொரு நபர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

நாங்கள் அந்த இடத்திற்கு புறப்பட்டோம். அங்கு ஸ்கார்பியன் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஆனால் ராபின் நண்பரால் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. முதலில், மஜீத் மிகவும் சந்தேகமடைந்தார், எப்படியாவது அவரைப் பிடித்து ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறோம் என்று கவலைப்பட்டார்.

முதலில் ராபின் நண்பர் மூலமாகவும், பின்னர் நேரடியாக ராப் மூலமாகவும் குறுஞ்செய்திகள் குவிந்தன. ஸ்கார்பியன் எங்களை சந்திப்பார், ஆனால் சந்திக்கும் இடத்தை அவரே முடிவு செய்வார் என்றால் மட்டுமே சந்திப்பு நடக்கும். அவர் சொல்லும் இடம் என்றால் பாதுகாப்பாக இருக்குமா அச்சம் இருந்ததால் நாங்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை.

பின்னர் ஒரு குறுஞ்செய்தி வந்தது, "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?"

நாங்கள் அருகில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னோம். ஸ்கார்பியன் எங்களிடம் அவரை தரை தளத்தில் உள்ள ஒரு காபி ஷாப்பில் சந்திக்கச் சொன்னார்.

ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
படக்குறிப்பு,சூ மிட்செல் மற்றும் ராப், ஸ்கார்பியனைச் சந்தித்தபோது, அவர்களின் ஓட்டுனர் ரகசியமாக அதை படம்பிடித்தார்.
ஸ்கார்பியனை சந்தித்த தருணம்

இறுதியாக, நாங்கள் அவரைப் பார்த்தோம்.

பர்ஸான் மஜீத் ஒரு பணக்கார கோல்ப் வீரர் போல் தோற்றமளித்தார். புதிய ஜீன்ஸ், வெளிர்-நீல சட்டை மற்றும் கறுப்பு நிற மேல் கோட் அணிந்திருந்தார்.

அவர் கைகளை மேசையில் வைத்தபோது, அவரது விரல் நகங்கள் மெனிக்யூர் செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன்.

இதற்கிடையில், மூன்று பேர் அருகில் இருந்த மேஜையில் அமர்ந்தனர். அவரது பாதுகாப்பு குழு என்பதை நாங்கள் யூகித்தோம்.

மீண்டும், அவர் ஒரு குற்ற அமைப்பின் தலைவராக இருப்பதை மறுத்தார். மற்ற கும்பல்கள் தன்னை சிக்க வைக்க முயன்றதாக அவர் கூறினார்.

"சிலர் தாங்கள் கைது செய்யப்படும்போது, 'நாங்கள் அவருக்காக வேலை செய்கிறோம்' என்று கூறுகிறார்கள். அவர்கள் குறைவான தண்டனையைப் பெற விரும்புகிறார்கள். அதனால் இப்படிச் சொல்கிறார்கள்” என்றார்.

மற்ற கடத்தல்காரர்களுக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு அவர்களின் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் அவருக்கு கோபம் உள்ளது.

"பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்த பையன் ஒருவன், மூன்று நாட்களில் 170 அல்லது 180 பேரை துருக்கியிலிருந்து இத்தாலிக்கு அனுப்பினான். நான் தொழில் செய்ய வேறு நாட்டிற்கு செல்ல விரும்புகிறேன். என்னால் இங்கு இருக்க முடியாது” என்றார் மஜீத்.

புலம்பெயர்ந்தோர் இறப்புக்கான அவரது பொறுப்பு குறித்து நாங்கள் கேட்டபோது, அவர் தொலைபேசியில் சொன்னதையே மீண்டும் கூறினார், அவர் பணத்தை எடுத்துக்கொண்டு படகில் இடங்களை மட்டுமே முன்பதிவு செய்தேன் என்று.

அவரைப் பொருத்தவரை, ஒரு கடத்தல்காரன் என்பவன் மக்களை படகுகள் மற்றும் லாரிகளில் ஏற்றி அவர்களை சட்டவிரோதமாக கடத்துபவன்.

"நான் யாரையும் படகில் ஏற்றியதில்லை, யாரையும் கொன்றதில்லை." என்றார் அவர். உரையாடல் முடிந்தது, ஆனால் சுலைமானியாவில் தான் பணிபுரிந்த பணப் பரிமாற்ற அலுவலகத்தைப் பார்க்க ராப்பை அழைத்தார் ஸ்கார்பியன்.

அது ஒரு சிறிய அலுவலகம், ஜன்னலில் அரபு மொழியில் சில எழுத்துகளும் ஒன்றிரண்டு மொபைல் போன் எண்களும் இருந்தன. மக்கள் பணம் செலுத்த அங்கு வந்தனர். அங்கு இருந்தபோது ஒரு நபர் ஒரு பெட்டி நிறைய பணம் எடுத்துச் செல்வதைக் கண்டதாகக் கூறினார் ராப்.

இந்த சந்தர்ப்பத்தில், 2016ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவிற்குச் சென்ற போது, தான் எவ்வாறு இந்த வணிகத்தில் இறங்கினேன் என்பதைப் பற்றி பேசினார் ஸ்கார்பியன்.

“யாரும் அந்த மக்களை வற்புறுத்தவில்லை. அவர்கள் விரும்பியே சென்றனர்” என்று அவர் கூறினார். "அவர்கள் கடத்தல்காரர்களிடம், 'தயவுசெய்து, எங்களுக்கு இதைச் செய்யுங்கள்' என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் கடத்தல்காரர்கள், 'கடவுளுக்காக நான் அந்த மக்களுக்கு உதவுவேன்' என்று கூறுகிறார்கள். பின்னர் இது உண்மையல்ல, அது உண்மையல்ல என்று அவர்கள் புகார் கூறுகிறார்கள்” என்கிறார் ஸ்கார்பியன்.

 
ஐரோப்பாவின் தேடப்படும் கடத்தல்காரரை பிபிசி செய்தியாளர் கண்டுபிடித்தது எப்படி
படக்குறிப்பு,பெல்ஜியத்தில் உள்ள வழக்கறிஞர்களிடமிருந்து பெற்ற தகவல் தாள்.

2016 மற்றும் 2019க்கு இடையில், பெல்ஜியம் மற்றும் பிரான்சில் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய இரண்டு முக்கிய நபர்களில் ஒருவராக தான் இருந்ததாக ஸ்கார்பியன் கூறினார், மேலும் அந்த சமயத்தில் அவர் லட்சக்கணக்கான டாலர்களைக் கையாண்டதாக ஒப்புக்கொண்டார்.

"நான் அவர்களுக்கு வேலை செய்தேன். பணம், இருப்பிடம், பயணிகள், கடத்தல்காரர்கள், இவை அனைத்திற்கும் இடையில் நான் செயல்பட்டேன்” என்று சொல்லும் அவர், தான் ஆட்கள் கடத்தலில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து மறுத்தார்.

ஆனால் அவரது நடவடிக்கைகள் இதற்கு முற்றிலும் முரணானது.

ஸ்கார்பியன் அதை உணரவில்லை, ஆனால் அவர் தனது மொபைல் ஃபோனை ஸ்க்ரோல் செய்தபோது, ராப் பின்னால் உள்ள கண்ணாடியில் மொபைல் திரையின் பிரதிபலிப்பைப் பிடித்தார்.

சில பாஸ்போர்ட் எண்களின் பட்டியலை ராப்பால் பார்க்க முடிந்தது. கடத்தல்காரர்கள் இவற்றை இராக் அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள் என்று பின்னர் அறிந்தோம். புலம்பெயர்ந்தோர் துருக்கிக்கு செல்ல, போலி விசாக்களை வழங்க இராக் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படும்.

அதுதான் நாங்கள் ஸ்கார்பியனைக் கடைசியாகப் பார்த்தது. ஒவ்வொரு கட்டத்திலும், நாங்கள் எங்கள் விசாரணையின் முடிவுகளை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டோம்.

பெல்ஜியத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் ஆன் லுகோவியாக், ஸ்கார்பியனுக்கு எதிரான வழக்கில் முக்கிய பங்கு ஆற்றியவர். ஸ்கார்பியன் ஒரு நாள் ஈராக்கில் இருந்து நாடு கடத்தப்படுவார் என்று அவர் நம்புகிறார்.

"நீங்கள் விரும்பியதை எல்லாம் செய்ய முடியாது என்ற சமிக்ஞையை குற்றவாளிக்கு அனுப்புவது மிகவும் முக்கியம். நாங்கள் கண்டிப்பாக அவரை வீழ்த்துவோம்" என்று வழக்கறிஞர் ஆன் லுகோவியாக் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cp9gw9e8dnjo

தமிழர்களின் நீதிக்கான பொறிமுறையை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

3 days 22 hours ago
Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 09:39 AM (எம்.மனோசித்ரா) இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர்வர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் நீதி கோரி போராடுகின்றனர். அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கடந்த செவ்வாயன்று பாராளுமன்ற உரையில் எம்.ஏ.சுமந்திரன், உள்ளக பொறிமுறையின் மூலம் ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்றும், ரோம் சட்டத்திற்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். எதிர்வரும் 19ஆம் திகதியுடன் யுத்தம் நிறைவுப்பெற்று 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இவ்வாறானதொரு நிலையில் பொறுப்பு கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் கடப்பாடு தொடர்ந்தும் விமர்சனத்துக்குட்பட்டதாகவே காணப்படுகிறது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் அலுவலகத்தில் சென்று தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை தேடித்தருமாறு கோருகின்றனர். அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது. மாறாக அதனை சர்வதேசத்துக்கு வழங்கினால் உள்நாட்டவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நல்லிணக்க பொறிமுறையானது தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இதனை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது. அது நடைமுறையில் யதார்த்தமானதல்ல. கடந்த செவ்வாய்கிழமை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே பாராளுமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கக் கூடும். மறுபுறம் உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர போன்றோர் அவ்வாறு எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆனால் பிரிதொரு தரப்பினர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்று கூறுகின்றனர். எனவே இவ்விடயத்தில் பக்க சார்பாக அன்றி நடுநிலையான தீர்வினை வழங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார். https://www.virakesari.lk/article/183281

தமிழர்களின் நீதிக்கான பொறிமுறையை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

3 days 22 hours ago

Published By: DIGITAL DESK 7   12 MAY, 2024 | 09:39 AM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர்வர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் நீதி கோரி போராடுகின்றனர்.

அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கடந்த செவ்வாயன்று பாராளுமன்ற உரையில் எம்.ஏ.சுமந்திரன், உள்ளக பொறிமுறையின் மூலம் ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்றும், ரோம் சட்டத்திற்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.  எதிர்வரும் 19ஆம் திகதியுடன் யுத்தம் நிறைவுப்பெற்று 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் பொறுப்பு கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் கடப்பாடு தொடர்ந்தும் விமர்சனத்துக்குட்பட்டதாகவே காணப்படுகிறது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் அலுவலகத்தில் சென்று தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை தேடித்தருமாறு கோருகின்றனர். அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது.

மாறாக அதனை சர்வதேசத்துக்கு வழங்கினால் உள்நாட்டவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நல்லிணக்க பொறிமுறையானது தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இதனை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது. அது நடைமுறையில் யதார்த்தமானதல்ல.

கடந்த செவ்வாய்கிழமை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே பாராளுமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கக் கூடும். மறுபுறம் உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர போன்றோர் அவ்வாறு எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தேவையில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால் பிரிதொரு தரப்பினர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்று கூறுகின்றனர். எனவே இவ்விடயத்தில் பக்க சார்பாக அன்றி நடுநிலையான தீர்வினை வழங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/183281

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்களைக் கூலிப்படைகளில் அமர்த்தும் மனித கடத்தல் செயற்பாடு

3 days 22 hours ago
சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்பு படைகளை சேர்ந்த பலர் உயிரிழப்பு : ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி பாதுகாப்பு சபையில் சாட்சியம் Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 09:40 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்பு படைகளை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு சபையில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாட்சியமளித்த ஒய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி, ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்று மீண்டும் இலங்கைக்கு தப்பித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேலும் குறிப்பிடுகையில், இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப்பெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளனர். இவர்களை போரில் தொடர்புப்படுத்தியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு சபையில் வலியுறுத்தினார். இலங்கை பாதுகாப்பு படைகளை சார்ந்தவர்களை ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்க செய்தவர்கள் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் காமினி வலேபொட ஆகியோரையும் அன்றைய தினம் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு தகவல்கள் கோரப்பட்டது. ஏனெனில் குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பல தகவல்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தனர். இதன் பிரகாரமே அவர்கள் அழைக்கப்பட்டனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்று அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு தப்பிவந்த ஒய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் குறித்து தகவல்கள் வழங்கப்பட்டது. உடனடியாக தொலைப்பேசியில் தொடர்புக்கொண்ட பாதுகாப்பு சபை அதிகாரிகள், முழு விபரத்தையும் கேட்டறிந்தனர். குறித்த இராணுவ அதிகாரி வழங்கிய தகவல்களுக்கு அமைய, இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப்பெற்ற பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு முப்படைகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டதுடன், நாட்டு மக்களை தெளிவுப்படுத்தி ரஷ்ய - உக்ரைன் போரில் இலங்கையர்கள் பங்கேற்பதை தவிர்க்க ஊடகங்களின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரட்னவுக்கு ஆலோசனை வழங்கினார். https://www.virakesari.lk/article/183284

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு - ஒன்றுபட்டு தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணைய அழைப்பு

3 days 22 hours ago
12 MAY, 2024 | 09:49 AM இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும் என்றும் எனவே அனைவரும் பேதங்களைத் துறந்து சுயலாப சுயவிளம்பரப் படுத்தல்களைக் கடந்து பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. நினைவேந்தல் நிகழ்வு குறித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15 ஆவது ஆண்டு. ஈழத்தமிழினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டப் பரிமாணத்தை பல்வேறு சக்திகளின் துணை கொண்டு இலங்கை அரசு மௌனிக்கச் செய்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. தமிழ்த்தேசியத்தின் நம்பிக்கையில் உறுதி கொண்டு தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வடிவங்களை மாற்றி தொடர்ந்தும் விடுதலைக்காக ஈழத்தமிழினம் பயணிக்கின்றது என்பது, விடுதலையின் மீது கொண்ட பேரவாவின் பிரதிபலிப்பு. ஈழத்தமிழினத்தின் நீதி வேண்டிய பயணமும் தொடர் போராட்ட முன்னெடுப்புகளும் நீதியின் கதவை எப்போதுமே தட்டிக்கொண்டேயிருக்கப்போகிறது. மனித உரிமைக்காவலர்கள் என்று மார் தட்டிக்கொள்பவர்களின் வெள்ளைச்சாயம் தமிழினப்படுகொலையில் வெளுக்கத்தொடங்கி தற்போது காசாவில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப்படுகொலையில் கட்டங்கட்டமாக அப்பட்டமாக தோலுரிக்கப்படுகிறது. மனித உரிமை சாசனத்தை ஒரு கையிலும்இகொலைக்கருவியை இன்னொரு கையிலும் கொண்டு சனநாயகம் போதிப்பவர்களின் அபத்தம் வெளிக்கிளம்புகிறது. ஈழத்தமிழினம் நினைவுகளை மட்டும் ஆயுதமாக்கவில்லை.விடுதலைக்கனவினை நம்பிக்கை இயங்கியலாக்கி இலக்கு நோக்கிப் பயணிக்கின்றது. நீதிக்கான தொடர் தேடலும் ஓர் ஆயுதமே என்பதை ஆர்மேனியா தொடக்கம் பலஸ்தீனம் வரைக்கும் விடுதலைப்போராட்டங்களின் வரலாறு எமக்கு சொல்லித்தருகின்றது. பேரவலத்தை நினைவு கூருவதற்கு அப்பால்இ ஈழத்தமிழினம் விடுதலைக்காய் தியாகித்தவர்களின் கனவுகளின் நினைவுகளைச் சுமந்து பயணிக்கின்றது. முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல.அடக்குமுறை எதிர்ப்பின் நம்பிக்கையின் குறியீடு விடுதலைப்போராட்டத்தை வெற்றிஃதோல்வி என இருமைக்குள் வரையறுத்துவிட முடியாது. 15வது ஆண்டின் நினைவேந்தல் ஒழுங்குமுறைகளை தயார் செய்யும்ஈழத்தமிழினம்இ முள்ளிவாய்க்கால் தரும் விடுதலை நம்பிக்கையின் நினைவுகளை மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய கால கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. விடுதலை நம்பிக்கையின் நினைவுகளை மக்கள் மயப்படுத்துவதென்பதுஇ ஒரு அமைப்பின் நிகழ்ச்சித்திட்டமல்ல. ஒவ்வொரு ஈழத்தமிழனதும் வரலாற்றுக்கடமையும் உரிமையும் கூட. இதை நினைவில் கொண்டு இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் 05. 18 இல் முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும். எனவே அனைவரும் பேதங்களைத் துறந்து சுயலாபசுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் அன்று மாலை 6மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் கோவில்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன் அன்று இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவு கூருவோம். https://www.virakesari.lk/article/183285

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு - ஒன்றுபட்டு தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணைய அழைப்பு

3 days 22 hours ago
12 MAY, 2024 | 09:49 AM
image
 

இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும் என்றும் எனவே அனைவரும் பேதங்களைத் துறந்து சுயலாப சுயவிளம்பரப் படுத்தல்களைக் கடந்து பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நினைவேந்தல் நிகழ்வு குறித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15 ஆவது ஆண்டு. ஈழத்தமிழினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டப் பரிமாணத்தை பல்வேறு சக்திகளின் துணை கொண்டு இலங்கை அரசு மௌனிக்கச் செய்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 

 தமிழ்த்தேசியத்தின் நம்பிக்கையில் உறுதி கொண்டு தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வடிவங்களை மாற்றி தொடர்ந்தும் விடுதலைக்காக ஈழத்தமிழினம் பயணிக்கின்றது என்பது, விடுதலையின் மீது கொண்ட பேரவாவின் பிரதிபலிப்பு. 

 ஈழத்தமிழினத்தின் நீதி வேண்டிய பயணமும் தொடர் போராட்ட முன்னெடுப்புகளும் நீதியின் கதவை எப்போதுமே தட்டிக்கொண்டேயிருக்கப்போகிறது.

மனித உரிமைக்காவலர்கள் என்று மார் தட்டிக்கொள்பவர்களின் வெள்ளைச்சாயம் தமிழினப்படுகொலையில் வெளுக்கத்தொடங்கி தற்போது காசாவில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப்படுகொலையில் கட்டங்கட்டமாக அப்பட்டமாக தோலுரிக்கப்படுகிறது. 

 மனித உரிமை சாசனத்தை ஒரு கையிலும்இகொலைக்கருவியை இன்னொரு கையிலும் கொண்டு சனநாயகம் போதிப்பவர்களின் அபத்தம் வெளிக்கிளம்புகிறது.

ஈழத்தமிழினம் நினைவுகளை மட்டும் ஆயுதமாக்கவில்லை.விடுதலைக்கனவினை நம்பிக்கை இயங்கியலாக்கி இலக்கு நோக்கிப் பயணிக்கின்றது. நீதிக்கான தொடர் தேடலும் ஓர் ஆயுதமே என்பதை ஆர்மேனியா தொடக்கம் பலஸ்தீனம் வரைக்கும் விடுதலைப்போராட்டங்களின் வரலாறு எமக்கு சொல்லித்தருகின்றது.

 பேரவலத்தை நினைவு கூருவதற்கு அப்பால்இ ஈழத்தமிழினம் விடுதலைக்காய் தியாகித்தவர்களின் கனவுகளின் நினைவுகளைச் சுமந்து பயணிக்கின்றது. முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல.அடக்குமுறை எதிர்ப்பின் நம்பிக்கையின் குறியீடு விடுதலைப்போராட்டத்தை வெற்றிஃதோல்வி என இருமைக்குள் வரையறுத்துவிட முடியாது. 15வது ஆண்டின் நினைவேந்தல் ஒழுங்குமுறைகளை தயார் செய்யும்ஈழத்தமிழினம்இ முள்ளிவாய்க்கால் தரும் விடுதலை நம்பிக்கையின் நினைவுகளை மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய கால கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. விடுதலை நம்பிக்கையின் நினைவுகளை மக்கள் மயப்படுத்துவதென்பதுஇ ஒரு அமைப்பின் நிகழ்ச்சித்திட்டமல்ல. 

ஒவ்வொரு ஈழத்தமிழனதும் வரலாற்றுக்கடமையும் உரிமையும் கூட. இதை நினைவில் கொண்டு இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் 05. 18 இல் முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும்.

எனவே அனைவரும் பேதங்களைத் துறந்து சுயலாபசுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் அன்று மாலை 6மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் கோவில்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன் அன்று இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவு கூருவோம். 

https://www.virakesari.lk/article/183285

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 days 22 hours ago
KKR vs MI: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா தகுதி - திருப்புமுனை ஏற்படுத்திய ரஸல், ராணா பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2024 சீசனில் இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றை அதிகாரபூர்வமாக உறுதி செய்யாமல் இருந்தன. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நெருக்கமாக இருந்தபோதிலும், அதை உறுதி செய்ய ஏதாவது ஒரு வெற்றி தேவையாகவே இருந்து வந்தது. அந்த வெற்றியை நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றதையடுத்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு 18 புள்ளிகளுடன் முதல் அணியாகத் தகுதி பெற்றது. அதேநேரம், முதல் இரு இடங்களைப் பிடிக்கவும் கொல்கத்தாவுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மழையால் ஆட்டம் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 16 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. முதல் இரு இடங்களில் கொல்கத்தா இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 12 போட்டிகளில் 9 வெற்றி 3 தோல்விகளைப் பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளே ஆஃப் சுற்றையும் முதல் அணியாக உறுதி செய்தது. நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா அணி வலுவாக 1.428 என இருக்கிறது. கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் சாதாரணமாக வென்றாலே 22 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்க வைக்கும். ஒருவேளை இரு ஆட்டங்களிலும் தோல்வி அடையும்பட்சத்தில் 18 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்திருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றில் இருப்பதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்து, மற்றொரு ஆட்டத்தில் வென்றால்கூட கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கலாம். பட மூலாதாரம்,SPORTZPICS ஆனால், அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 3 லீக் ஆட்டங்களில் ஒன்றில் தோற்று மற்ற இரு ஆட்டங்களில் வெல்ல வேண்டும். ஒருவேளை கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முடித்து நிகர ரன்ரேட்டில் வலுவாக இருந்தபோதிலும், ராஜஸ்தான் அணி 22 புள்ளிகளுடன் முடித்தால் ராஜஸ்தான் அணிதான் முதலிடத்தைப் பிடிக்கும். ஒருவேளை கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் அணியும் தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடன் முடித்தால், நிகர ரன்ரேட் அடிப்படையில் முதல் இரு இடங்கள் முடிவு செய்யப்படும். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் அணியைவிட வலுவாக கொல்கத்தா இருக்கிறது. அடுத்த இரு வெற்றிகளால் கொல்கத்தா அணி இன்னும் புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டை வலுப்படுத்தும். ஆனால், ராஜஸ்தான் அணி 0.426 என கொல்கத்தா ரன்ரேட்டைவிட ஒரு புள்ளி குறைவாக இருப்பதால் நிகர ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடிப்பது மாபெரும் வெற்றிகளைப் பெற்றால்தான் சாத்தியம். ஆதலால், கொல்கத்தா அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே முதல் இரு இடங்களைப் பிடிப்பது உறுதி. மும்பை அணிதான் ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இருப்பினும் ஆறுதல் வெற்றிக்காக நேற்று களமிறங்கி 9வது தோல்வியைச் சந்தித்தது. மும்பை அணி இதுவரை 13 போட்டிகளில் 4 வெற்றி, 9 தோல்வி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. தனது கடைசி லீக்கில் லக்னெள அணியை மும்பை அணி வரும் 17ஆம் தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் ஒருவேளை மும்பை அணி வென்றால், லக்னெளவின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். ஒருவேளை லக்னெள அணி வென்றால், ப்ளே ஆஃப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும். தமிழக வீரர் வருணுக்கு ஆட்டநாயன் விருது பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது பந்துவீச்சாளர்கள்தான். ஈரப்பதமான ஆடுகளத்தை நன்றாகப் பயன்படுத்தி, மும்பை பேட்டர்களை ரன்சேர்க்கவிடாமல் திணறவிட்டனர். குறிப்பாக சுனில் நரைன், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இருவரும் மும்பை பேட்டர்களின் கைகளைக் கட்டிப்போடும் வகையில் பந்து வீசினர். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சராசரியாக ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே இருவரும் விட்டுக்கொடுத்தனர். இதில் வருண் சக்ரவரத்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக பவர்ப்ளே ஓவர்கள் முடிந்து, அடுத்த 5 ஓவர்களை வருண், நரைன் வீசி வெறும் 22 ரன்கள் மட்டுமே அடிக்க மும்பை பேட்டர்களை அனுமதித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பெரும் நெருக்கடி அளித்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ரஸல், ராணா திருப்புமுனை ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸலும் பந்துவீச்சில் நேற்று 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கெனவே நரைன், வருண் பந்துவீச்சில் ரன் சேர்க்க முடியாமல் சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் திணறி வந்தனர். இதில் ரஸலும் தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்தி, ஸ்லோவர் பால், நக்குல் பால், ஸ்லோ பவுன்சர் என வீசி ஸ்கை பேட்டரை திணறவிட்டார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஸ்கை 11 ரன்களில் ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல டிம் டேவிட் வந்தவேகத்தில் ரஸல் பந்துவீச்சில் டக்அவுட் ஆகி வெளியேறினார். இரு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி ரஸல் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித் தரக் காத்திருந்த திலக் வர்மா, நமன் திர் இருவரையும் ஹர்சித் ராணா வெளியேற்றினார். இந்த 4 பந்துவீச்சாளர்கள்தான் கொல்கத்தா அணி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து டிபெண்ட் செய்து கொடுத்தனர். கொல்கத்தாவின் பேட்டிங் எப்படி இருந்தது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணிக்கு வழக்கமாக அதிரடியான தொடக்கம் அளிக்கும் நரைன்(0), பில் சால்ட் (6) ஸ்ரேயாஸ்(7) மிகச் சொற்ப ரன்களில் வெளியேறினர். பவர்ப்ளேவில் கொல்கத்தா 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெங்கடேஷ்(42), நிதிஷ் ராணா(33), ரஸல்(20), ரிங்கு சிங்(20) ஆகியோர் சிறிய கேமியோ ஆடி சேர்த்த ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர். எந்த பேட்டரும் அரைசதம்கூட அடிக்கவில்லை, அனைத்து வீரர்களின் பங்களிப்பால் 157 ரன்கள் எனும் ஸ்கோரை கொல்கத்தா அடைந்தது. பும்ராவின் மேஜிக் பந்துவீச்சு ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை நேற்று எதிர்கொண்ட சுனில் நரைன் நிச்சயமாக சில வினாடிகள் திகைத்திருப்பார். பும்ரா வீசிய பந்து யார்க்கராக ஸ்டெம்பை பதம் பார்க்கும் என்று நரைன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். இந்த பந்துக்கு எந்தப் பதிலும் இல்லாமல் நரைன் டக்-அவுட்டில் வெளியேறினார். இந்த சீசனில் நரைன் டக்-அவுட் ஆவது இதுதான் முதல்முறை. பும்ரா வீசிய முதல் ஓவர் முதல் பந்து, பும்ராவின் கையில் இருந்து ரிலீஸ் ஆகும்போது அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கிச் சென்றது. ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் ஸ்விங் ஆகி நரைனின் ஆஃப் ஸ்டெம்பை தட்டிவிட்டு க்ளீன் போல்டாக்கியது. அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கி பந்து செல்கிறது என நினைத்து பேட்டை தூக்கியவாறு நரைன் நிற்க பந்து ஸ்டெம்பை தட்டிவிட்டு சென்றதைப் பார்த்து நரைன் சில வினாடிகள் திகைத்து நின்றார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ‘நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை’ பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “எங்களுக்கு இந்த சீசனும், இந்த ஆட்டத்தின் தோல்வியும் கடினமாக இருந்தது. பேட்டிங்கில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும் அதை நடுவரிசையில் வந்தவர்கள் பயன்படுத்தாதற்கு விலை கொடுத்துவிட்டோம். ஆடுகளம் கண்டுபிடிக்க முடியாத அளவு வித்தியாசமாக இருந்தது, ஆனால், தருணம்(மொமென்ட்டம்) என்பது முக்கியமானது, அந்தத் தருணத்தை, வாய்ப்புகளை நாங்கள் கைப்பற்ற முடியவில்லை." "இந்தச் சூழலுக்கு இந்த இலக்கு அடையக்கூடியதுதான். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். மழை காரணமாக, பந்துகள் பவுண்டரி சென்றாலே ஈரமாகிவிடுகிறது. கொல்கத்தா அணியும் சிறப்பாகப் பந்துவீச்சில் செயல்பட்டனர். அடுத்து வரும் ஆட்டத்தை அனுபவித்து விளையாட வேண்டும், நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், நாங்கள் போதுமான அளவு நல்ல கிரிக்கெட்டை இந்த சீசனில் விளையாடவில்லை,” எனத் தெரிவித்தார் ஃபார்ம் இழந்து தவிக்கும் ரோஹித் சர்மா மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளாகவே ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த நிலை நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி பவுண்டரிகளை அடித்து வரும் நிலையில் ரோஹித் சர்மா விருப்பமில்லாமல் பேட் செய்தார். அதிலும் குறிப்பாக வருண் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க பலமுறை ரோஹித் முயன்றும் பந்து அவருக்கு மீட் ஆகவில்லை. பவர்ப்ளே ஓவர்கள் முழுவதும் களத்தில் இருந்த ரோஹித் சர்மா பேட்டிலிருந்து ரன்கள் வருவது நேற்று கடினமாக இருந்தது. 24 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 19 ரன்கள் சேர்த்தார் இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். பட மூலாதாரம்,SPORTZPICS ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 79 ஆக இருந்தது. இஷான் கிஷன் அதிரடியாக பேட்டை சுழற்றியதால்தான் பவர்ப்ளேவில் மும்பை 59 ரன்கள் சேர்த்தது. டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் ரோஹித் சர்மா இப்படி ஃபார்மின்றி தவிப்பது இந்திய அணியின் நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. மறுபுறம் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கிலும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை ஃபார்மிலும் இல்லை, பந்துவீச்சிலும் ஜொலிக்கவில்லை. ஆனால், இந்திய அணிக்கு துணை கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளதும் பல்வேறு கேள்விகளை கிரிக்கெட் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது. நம்பிக்கையளித்த பேட்டர்கள் சூர்யகுமார் யாதவ்(11) நடுவரிசை பேட்டர்கள் ஹர்திக் பாண்டியா(2), டிம் டேவிட்(0), நேஹல் வதேரா(3), ஆட்டமிழந்தாலும், திலக் வர்மா, நன் திர் இருவரும் மும்பை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயன்றனர். கடைசி 18 பந்துகளில் 57 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஐபிஎல் டி20 தொடரில் இந்த ஸ்கோர் எட்டக்கூடியதுதான். ஹர்சித் ராணா வீசிய 14வது ஓவரில் திலக் வர்மா சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். நமன் திர் உற்சாகமடைந்து, ரஸல் வீசிய 15வது ஓவரில் இரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா, நமன்திர் மீது நம்பிக்கையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், ராணா வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் திலக் வர்மா(32), நமன்திர்(17) இருவரும் விக்கெட்டை இழக்க மும்பையின் கதை முடிந்தது. https://www.bbc.com/tamil/articles/cnd6jw30dj9o

வவுனியாவில் 15 வயது சிறுமிக்கு போதைமருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வு : உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது

3 days 22 hours ago
12 MAY, 2024 | 07:20 AM வவுனியா நகரை அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்க்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிசார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரும் வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/183279

வவுனியாவில் 15 வயது சிறுமிக்கு போதைமருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வு : உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது

3 days 22 hours ago
12 MAY, 2024 | 07:20 AM
image

வவுனியா நகரை அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

வவுனியா, ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்க்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிசார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரும் வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/183279

முள்ளிவாய்க்காலின் 15ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சுமந்திரன் விடுத்துள்ள அறைகூவல்!

3 days 22 hours ago
12 MAY, 2024 | 10:19 AM 'முக்கால் நூற்றாண்டு போராட்டமும் எமது தேசத்தின் எதிர்காலமும்' என்ற தொனியில் முள்ளிவாய்க்காலின் 15ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சுமந்திரன் அறைகூவலொன்றை விடுத்துள்ளார். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2009 மே மாதம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்த வாரம் நாம் நினைவுகூருகிறோம். யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே எந்தத் திசையிலும் தப்பியோட முடியாமல், தொடர்ச்சியாக அன்பானவர்களை இழந்தவண்ணமாக வெறுங்கையர்களாக எமது மக்கள், உணவில்லாமல், கஞ்சி மட்டும் குடித்தபடி, பாரிய நெருக்கடியிலும் துயரத்திலும் கழித்த நாட்கள் இவை. துப்பாக்கி, வெடிகுண்டு சத்தங்கள் மௌனித்த பின்பு, தாம் அகப்பட்டிருந்த இடத்திலிருந்து மக்கள் வெளியேறியபோது, பலர் அரச படைகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதும், மற்றவர்கள் பல விதங்களில் துன்புறுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்த உண்மை. குறித்த வயதெல்லைக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் அரச படைகளிடம் சரணடைய வேண்டுமென வற்புறுத்தப்பட்டு தங்கள் உறவினர்களால் அப்படியாகக் கையளிக்கப்பட்டவர்கள் இன்று வரை காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். எஞ்சியவர்கள் முட்கம்பி வேலிகளுக்குள் கைதிகளைப் போல அடைக்கப்பட்டு, ஒன்றரை வருடத்திற்கு மேல் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இத்தனை கொடூரங்களும் உலகமே பார்த்திருக்க அரங்கேற்றப்பட்டு 15 வருடங்கள் இன்று நிறைவடைகின்றன. இன்று வரை இந்த சர்வதேச குற்றங்களுக்காக ஒருவருக்கெதிராகத் தானும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஒருவரும் குற்றவாளியாக காணப்படவுமில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2014ஆம் ஆண்டு OISL என்ற முழுமையான சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்தி, அதன் அறிக்கையை 2015 செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையிலும் அதற்கு முன்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கொடுக்கப்பட்ட 2012 மார்ச் 31 திகதியிட்ட நிபுணர் குழுவின் அறிக்கையிலும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பல சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2015 அக்டோபர் 1ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரச அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தில் சர்வதேச விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள், வழக்கு தொடுநர்கள் மற்றும் நீதிபதிகளினுடைய பங்கேற்புடன் நீதிமன்ற பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதாக உறுதி கூறப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா அரசு பின்னர் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர் கடந்த 15 ஆண்டு காலத்தில் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் சம்பந்தமாக சிந்தித்து செயலாற்றுவதற்கான பொருத்தமானதொரு தருணம் இதுவென்று நான் நினைக்கின்றேன். எமது அரசியல் விடுதலைக்கென்றே கால் நூற்றாண்டுக்கு கூடுதலாக ஆயுதப் போராட்டமொன்று நிகழ்த்தப்பட்டது. ஆயுத முனையில் அறம் சார்ந்த அரசியல் விடுதலையை பெற முடியாது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாக இருந்தபோதிலும், தம் மீது மோசமான அடக்கு முறைகளையும் வன்முறையையும் இலங்கை அரசு பிரயோகித்த பின்னணியில் வேறு வழியின்றி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அன்று எடுத்த தீர்மானத்தை இன்று வேறொரு சூழ்நிலையிலிருந்து நாம் மதிப்பிடவோ, குறை கூறவோ முடியாதென்பதை தொடர்ச்சியாக கூறி வந்துள்ளேன். அத்தோடு, அத்தகைய ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வித சுயநல சிந்தனையும் இன்றி எமக்காக செய்த அர்ப்பணிப்புகளும் உயிர்த் தியாகங்களும் எக்காலத்திலும் எமது சமூகத்தில் மிக உயர்ந்த பங்களிப்பாக கருதப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி இருக்கிறேன். ஆனால் அத்தகைய தியாகம் மிக்க ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு, எத்தனையோ பேரிழப்புகளை சந்தித்த பின்பு, மற்றுமொரு முறை ஆயுதம் ஏந்திப் போராடுவதை இலங்கையில் வாழும் எந்தத் தமிழ் மகளும் தமிழ் மகனும் ஒரு தெரிவாக நினைத்துப் பார்ப்பதே இல்லை. அப்படியான பின்புலத்தில் கடந்த 15 வருட காலத்தில் எங்களுடைய அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக நாம் மேற்கொண்ட அணுகுமுறைகள் வெற்றியளித்துள்ளனவா என்ற கேள்வியின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வது அத்தியாவசியமானது என்று கருதுகிறேன். ஒரு கணம் எமது அரசியல் உரிமைப் போராட்டத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இக்காலகட்டத்தில் எமது சமூக மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளை நோக்குவோமாயின், நாம் பாரிய பின்னடைவுகளை தொடர்ச்சியாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புலனாகும். இளையவர்கள் மத்தியிலே பரவலாகி இருக்கின்ற வாள்வெட்டுக்குழுக்கள் போன்ற வன்முறைக் கலாசாரமும், போதைவஸ்து பாவனையும் இதற்கான சான்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவை எமது இளைஞர், யுவதிகளை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சிகளாகும். ஆட்சியாளர்களே இவற்றை ஊக்குவிக்கிறார்கள் என்பதில் உண்மை இருக்கும்போதிலும், இவற்றைக் கட்டுப்படுத்தும் முதலாவது பொறுப்பு எமது அரசியல் மற்றும் சமூக தலைவர்களிடம் தான் இருக்கின்றது. வன்முறைக்கும் போதைப் பாவனைக்கும் சினிமா போன்ற வெளிசக்திகள் பெரும் செல்வாக்கை செலுத்தினாலும் கூட, அந்த தாக்கங்களை மழுங்கடிக்கின்ற விதமான செயற்பாடொன்றையும் முன்னெடுக்காதது எமது தவறேயாகும். இந்தப் பின்னடைவுகள் தொடருமாக இருந்தால், அரசியல் விடுதலை ஒன்று எமக்கு கிடைத்தாலும் கூட அதைப் பொறுப்போடு நிர்வகிக்கின்ற திறன் அற்றவர்களாக எமது இளைய சமுதாயத்தினர் மாறியிருப்பார்கள். எமது இளையவர்கள் கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டுத்துறைகளில் தங்களது அபரிமிதமான திறனை உள்நாட்டிலும் பிராந்தியத்திலும், சர்வதேச மட்டத்திலும் கூட அண்மைய காலங்களில் வெளிப்படுத்தியிருப்பது எமக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய விடயம். இது இளைய சமுதாயத்தின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு நாம் மூலதனங்களை செய்ய வேண்டும் என்பதை அழுத்திச் சொல்கின்றன. இதைப் போலவே பொருளாதார ரீதியில் மிக மோசமாக நலிவடைந்திருக்கும் எமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு புலம்பெயர்ந்திருக்கின்ற எமது உறவுகளின் முயற்சிகளின் பயனாக பல செயற்றிட்டங்கள் ஆங்காங்கே செய்யப்பட்டாலும் பாரியளவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே கண்ணியமாக சுய கௌரவத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இளைஞர்கள் வாக்களித்த முறை இதனை அம்பலப்படுத்தியது. மேற்சொன்ன இரண்டு காரணிகளும் எமது அரசியல் உரிமைகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. மாறாக, எமது அரசியல் உரிமைகளிலிருந்து பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்தவை. எமது மக்களுக்கான விடுதலை பாதை என்பது இப்படியான முழுமையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானதொரு அணுகுமுறையை கடந்த 15 ஆண்டுகளாக நாம் பின்பற்ற தவறிவிட்டோம் என்பதே கசப்பான உண்மை. சென்ற பாராளுமன்ற காலம் 2015 - 2019 மட்டும் இதற்கு சற்று விதிவிலக்கானது. அந்த காலகட்டத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான நிலங்கள் விடுவிக்கப்பட்டதும், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டிருந்த எமது பிரதேசங்களில் அபிவிருத்திக்கும் பொருளாதார மீளெழுச்சிக்குமென முக்கியமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதை நாம் மறந்துவிடலாகாது. ஆனால் அதற்குப் பின்னர் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து மிக வேகமாக நடைபெறுவதையும் பல்வேறு அடக்குமுறைகள் எம்மீது பிரயோகிக்கப்படுவதையும் நாம் நன்கு அறிவோம். இவற்றை தடுப்பதென்பது, நாம் ஒரு தேசமாக இத்தீவிலே தொடர்ந்து வாழக்கூடிய எமது இருப்பை தக்கவைக்கின்ற, "தமிழ்த் தேசியத்தை" பாதுகாக்கின்ற பிரதானமான செயற்பாடாகும். வெற்றுக் கோஷங்களையும், போராட்ட மனநிலையை தூண்டுகின்ற பேச்சுக்களையும் நடைமுறை சாத்தியமற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டும் எமது மக்களுக்கான விடுதலைப் பயணத்தை ஒரு அங்குலம் கூட முன்நோக்கி நகர்த்த முடியாது. நாம் ஒரு தனி தேசமென்பதை உரக்கச் சொல்லுகிற அதேவேளையில் ஒரு தேசமாக வாழ்வதற்கு வேண்டிய அணுகுமுறைகளை நாம் கைவிடக்கூடாது. தந்தை செல்வாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் நாங்கள் வன்முறையையோ அதன் வெவ்வேறு பிரதிபலிப்புக்களையோ முற்றாக தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். எமது இளைஞர் யுவதிகளினதும், போரிலே மடிந்தவர்களினதும் உயிர்த்தியாகங்கள் வீணாக போகாதிருக்க வேண்டுமேயானால் வன்முறைக்கு தூண்டாத எமது அணுகுமுறை தொடர்பாக எமது சிந்தனையிலும் பேச்சிலும் தெளிவு இருத்தல் வேண்டும். 1957ஆம் ஆண்டு வன்முறையில் ஈடுபடத் தொடங்கியிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியினருக்கு தந்தை செல்வா கூறிய எச்சரிக்கை: "தமிழ் மக்களுக்கு நல்லது கொண்டுவரப் புறப்பட்ட நாங்கள், நாசம் கொண்டுவந்த கதையாக மாறிவிடும்" என்பது இன்றைய சூழ்நிலைக்கும் சாலப்பொருந்தும். எமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக நிலைத்திருந்து எமது தன்மானத்துக்கும் சுய கெளரவத்துக்கும் ஏற்ற விதமான ஆட்சி மாற்றத்துக்கு சாத்வீக வழியில் போராடுகின்ற அதேவேளையில், தேர்தல் நேரங்களிலும் மற்ற தருணங்களிலும் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை உன்னிப்பான இராஜதந்திர நோக்கோடு நாம் கையாள வேண்டும். ஒரு ஜனநாயக அமைப்பிலே, எண்ணிக்கையிலே குறைவானவர்களாக இருக்கின்ற ஒரு தேசம் கைக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய அணுகுமுறை அது. நாம் வலியுறுத்துகின்ற தமிழ் தேசிய பிரச்சினை, இலங்கையின் பிரதானமான தேசிய பிரச்சினை என்பதை இலங்கையில் வாழும் மற்றைய சமூகத்தினருக்கும் நாம் பொருத்தமான முறைகளில் விளங்கப்படுத்த வேண்டும். எம்மை ஒரு தேசமாக அங்கீகரிப்பது தமக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கின்ற உண்மையை அவர்களும் உணரச்செய்தல் வேண்டும். எமது போராட்டம் நீதிக்கான போராட்டம்; நியாயமான அரசியல் உரிமைகளுக்கான போராட்டம். அநீதி, அநியாயம் ஒருபோதும் வென்றதில்லை. எமது போராட்டம் நீண்ட நெடியதானதாக இருந்தாலும், அற வழியில் சாத்வீக முறைகளைக் கைக்கொண்டு அதிலிருந்து அணுவளவும் பிசகாமல் போராடுவோமானால் எமக்கான நீதி கிடைத்தேயாக வேண்டும். அப்படியானதொரு தூய்மையான அறவழிப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன். எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு சேர்ந்து பயணிப்போம்! https://www.virakesari.lk/article/183290