Aggregator

கனடா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது - யார் அவர்கள்?

4 days 2 hours ago
ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கு | 4வது நபரை கைது செய்தது கனடா காவல்துறை! 12 MAY, 2024 | 09:21 AM கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்தியா கனடா உறவும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது. இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரும் ஆல்பர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் non-permanent residents என்றும் விசாரணை அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார். அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த மூன்று பேருக்கும் ஒருவரை மற்றொருவருக்குத் தெரியாதாம். இதற்கிடையே இந்திய அரசுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை விசாரணையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் உதவி ஆணையர் டேவிட் டெபூல் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் நான்காவது நபராக இந்தியரான அமந்தீப் சிங் (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சர்ரே மற்றும் அபோட்ஸ்ஃபோர்டில் வசித்து வந்துள்ளார். அமன்தீப் சிங், ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்டாறியோவில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183282

சமையலுக்கு எந்த பாத்திரம், எந்த அடுப்பு சிறந்தது? மைக்ரோவேவ் அவன், ஏர் பிரையர் தீங்கு தருமா?

4 days 2 hours ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர் பதவி, பிபிசி மராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'கேஸ் அடுப்பில் சமைத்த சாம்பார், விறகடுப்பில் சமைத்த போது இருந்த ருசியில் இல்லை, அந்த அடுப்பில் சமைத்த உணவே சிறந்தது, குக்கரில் சமைத்த சாதமும், சட்டியில் சமைத்த சாதமும் முற்றிலும் வேறு.. மைக்ரோவேவில் சமைத்த உணவில் ருசியே இல்லை. சாரம் இழக்கும் வகையில் சமைப்பது நல்லதல்ல. இப்படி சமைப்பது நல்லது, அப்படி சமைப்பது நல்லது.." இதுபோன்ற வாக்கியங்களை அடிக்கடி நம் வீடுகளில் கேட்க முடியும். பல வீடுகளில், உணவை சமைப்பது, சூடுபடுத்துவது, கொதிக்க வைப்பது என அனைத்திலும் பல விதிகள் பின்பற்றப்படுகின்றன. பெரும்பாலும் உணவு சமைப்பதில், பாரம்பரிய முறைகள் தான் சிறந்தது என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. மைக்ரோவேவ் அல்லது ஏர் ஃப்ரையர் போன்ற நவீன மின் சாதனங்கள் உணவின் ஊட்டச்சத்துக்களை அழித்து விடும் என்ற பலரும் நம்புகின்றனர். ஆனால் இந்த ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) வழங்கிய புதிய வழிகாட்டுதல்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், சமையல் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் பற்றிய நம்முடைய நம்பிக்கைகளை புரட்டிப் போடக் கூடியவை, இந்திய ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் எவ்வளவு உணவு தேவை, எவ்வளவு ஊட்டச்சத்துகள் தேவை, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உணவில் என்ன இருக்க வேண்டும் மற்றும் சமையல் உபகரணங்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 'இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன. சமையல் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் பற்றி இந்த அறிக்கை விவரிக்கும் தகவல்களை முதலில் பார்ப்போம்… எந்த பாத்திரத்தில் சமைப்பது சிறந்தது? எந்த வகையான பாத்திரத்தில் சமைப்பது? நாம் பயன்படுத்தும் பாத்திரம் நல்லது தானா? அதை எவ்வாறு பராமரிப்பது, அதில் ஏதேனும் பாதகமான ரசாயன எதிர்வினை இருக்கிறதா? சமைக்கும் போது, இந்த பாத்திரங்கள் உணவின் ஊட்டச்சத்துகளை அழித்து விடுமா? பாத்திரங்களில் ரசாயன பூசப்பட்டிருந்தால் அவை உணவோடு கலந்து விடுமா? - இதுபோன்று பல நேரங்களில் சந்தேகம் வரும். சில சமயங்களில் பயமும் இருக்கும். `ஐசிஎம்ஆர்’ மற்றும் `என்ஐஎன்’ வழங்கிய இந்த புதிய வழிகாட்டுதல்களில், மண் பாத்திரங்கள், உலோகம், துருப்பிடிக்காத எஃகு, நான்ஸ்டிக் மற்றும் கிரானைட் கற்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY மண் பாண்டங்கள் சமையலுக்கு பாதுகாப்பானவை. மண் பாண்டங்களில் சமைக்கும் போது குறைந்த எண்ணெயில் சமைக்க முடியும். மண் பாத்திரங்களில் வெப்பம் ஒரே அளவில் பரவும், உணவு பொருளில் ஒரே மாதிரி வெப்பம் ஊடுருவுவதால், ஊட்டச்சத்து மதிப்புகள் பாதுகாக்கப்படும் என்று அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊறுகாய், சட்னி, சாம்பார், சாஸ் போன்றவற்றை அலுமினியம், இரும்பு, செம்பு பாத்திரங்களில் வைக்கக் கூடாது. ஸ்டீல் கிண்ணத்தில் இந்த பொருட்களுக்கு எந்தவித பாதகமான விளைவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை உருவாக்கிய நிபுணர்கள் டெஃப்லான் பூச்சு கொண்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களை (pan) 170 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடாக்கினால் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். ஸ்டவ் மீது நீண்ட நேரம் காலியாக வைத்து சூடாக்கினாலும் ஆபத்தான விளைவு ஏற்படும். காலியாக வைத்து சூடுபடுத்தும் போது, நான்-ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் டெஃப்லான் லேயர், நச்சுப் புகைகளை உருவாக்கும். நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது, எப்படி சுத்தம் செய்வது என்னும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த சமையல் பாத்திரங்களில் நான்ஸ்டிக் பூச்சு சேதமடைந்து விட்டால், அதைப் பயன்படுத்த கூடாது என்றும் அறிக்கை கூறுகிறது. `ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இயக்குநர் டாக்டர். ஹேமலதா ஆர் கூறுகையில் , “மக்கள் `ஒட்டவே ஒட்டாத’ நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களை வாங்க விரும்புகிறார்கள், ஏனெனில் அது பிரபலமாக உள்ளது. எளிதில் கிடைக்கிறது. ஆனால் அதிக சூடேறும் போது, நான் - ஸ்டிக் பூச்சுகளில் உள்ள ரசாயனங்கள் வெளியேறி, நம் உணவில் கலந்து, நம் உடலுக்குள் செல்கின்றன. இது ஆபத்தானது. எனவே, நான்-ஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அப்படி பயன்படுத்தினாலும், அதன் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ஒரு சிறப்பு முறை உள்ளது. அதற்கேற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும். கீறல்கள் விழுந்த பழைய நான்-ஸ்டிக் பாத்திரங்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. `கிரானைட் கல்’ சமையல் பாத்திரங்கள் (Granite stoneware) இப்போது குறைந்த எடையிலும் கிடைக்கின்றன. இந்த கல் சட்டிகள் மூலம் குறைந்த நேரத்திலும் குறைந்த ஆற்றல் பயன்பாட்டிலும் சமைக்க முடியும். இந்த சட்டிகள் வெப்பத்தை நன்கு தக்கவைத்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை. அடுப்பு அணைக்கப்பட்ட பிறகும் நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். டெஃப்லான் பூச்சு இல்லாத கல் பாத்திரங்கள் பயன்படுத்த பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மைக்ரோவேவ் மற்றும் ஏர் பிரையர் பயன்பாடு பட மூலாதாரம்,GETTY இந்த வழிகாட்டுதல் அறிக்கையில், சமையல், கொதித்தல், குக்கர் சமையல், வேக வைத்தல், வறுத்தல், குறைந்த எண்ணெயில் வறுத்தல், பார்பிக்யூ, கிரில்லிங் மற்றும் ஏர் ஃப்ரை செய்தல் என சமையல் முறைகளின் நன்மைகள் மற்றும் சாத்தியமான தீமைகளையும் விவரிக்கிறது. உதாரணமாக பொரியலை எடுத்துக் கொள்வோம். இந்த அறிக்கையில் உள்ள தகவல்களின்படி, வறுக்கப்படும் செயல்முறை, உணவின் ஊட்டச்சத்து மதிப்புகளை மாற்றுகிறது. வைட்டமின் சி போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் அழிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், ஒரு உணவு பொருளை எண்ணெயில் வறுக்கும் போது, அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றப்பட்ட கூறுகள் உருவாகலாம் மற்றும் நச்சுகளும் உருவாகலாம். மிக முக்கியமாக, அதிகப்படியான எண்ணெய் மற்றும் கொழுப்பு நுகர்வு இதய நோய், பக்கவாதம், நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இது அடிவயிற்றை சுற்றி கொழுப்பு சேர்வதற்கும், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளின் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கிறது. அதே எண்ணெயை மீண்டும் பொரிப்பதற்கு பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மைக்ரோவேவ் அவனில் சமைப்பது பற்றிய ஒரு புதிய மற்றும் சிந்தனையைத் தூண்டும் தகவலை வழங்குகிறது. மைக்ரோவேவ் சமையலுக்கும் வழக்கமான சமையலுக்கும் இடையே சிறிய ஊட்டச்சத்து வேறுபாடு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துகளின் மீது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் சமையல் முறைகளில் மைக்ரோவேவ் சமையல் ஒன்றாகும். காரணம், மைக்ரோவேவில் சமைக்கும் போது, மிகக் குறைந்த நீரே பயன்படுத்தப்படும். மைக்ரோவேவ், உணவை உள்ளே இருந்து சூடாக்குகிறது. இது ஊட்டச்சத்துகளை அழிக்காததால், மற்ற சமையல் முறைகளை விட இது அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்க வைக்கிறது. மைக்ரோவேவ் அவனில் மிகக் குறுகிய காலத்தில் சமைப்பதால், அதிக நேர வெப்பத்தால் அழிக்கப்படும் வைட்டமின் சி மற்றும் பிற கூறுகளும் பாதுகாக்கப்படுகின்றன. இது புரதங்கள், லிப்பிடுகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றில் குறைவான விளைவை ஏற்படுத்தும். மைக்ரோவேவில் சமைக்கும் போது, பாதுகாப்பான கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்துமாறு அறிக்கை பரிந்துரைக்கிறது. பிளாஸ்டிக் கொள்கலன்கள் நல்லதல்ல என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'மைக்ரோவேவ் விதிகளை பின்பற்ற வேண்டும்' `ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இயக்குநர் டாக்டர். ஹேம்லதா ஆர் பிபிசி மராத்திக்கு கொடுத்த பேட்டியில், “வழக்கமான சமையல் முறைகளை விட மைக்ரோவேவ் சமையல் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் உங்களுக்கு வேறு வழியில்லை எனில் மைக்ரோவேவ் பயன்படுத்தலாம். மைக்ரோவேவ் நாம் நினைப்பது போல் மோசமான உபகரணம் இல்லை. நிச்சயமாக, மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது ஆபத்தானது. அதன் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எனவே, மைக்ரோவேவில் அனைத்து ஊட்டச்சத்து மதிப்புகளும் இழக்கப்படும் என்ற பொதுவான பார்வையை நம்ப வேண்டியதில்லை. மைக்ரோவேவை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். இது அந்தளவிற்கு கெடுதல் இல்லை." என்றார். மைக்ரோவேவில் உணவை நீண்ட நேரம் சூடாக்கினால், அதில் ' அக்ரிலாமைடு' (acrylamide) என்ற வேதிப்பொருள் உருவாகும். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எரிவாயு அல்லது விறகடுப்பில் உணவைச் சூடாக்குவதை விட மைக்ரோவேவில் உணவைச் சமைப்பது அதிக அக்ரிலாமைடை உருவாக்குகிறது என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள். மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கவனமாக இருங்கள்! இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. மைக்ரோவேவில் இருந்து வரும் வெப்பம் பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு பாலிமர் (polymer) துகள்களை உடைக்கும். இந்த பாலிமர் துகள்கள் உணவுடன் கலக்கின்றன. இந்த பாலிமர் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்கள் பாதிக்கப்படும். எனவே, பிளாஸ்டிக் பொருட்களை மைக்ரோவேவில் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருள்களை மிருதுவாக்க பயன்படுத்தப்படும் ரசாயனமான தாலேட்ஸ் (Phthalates) எனப்படும் பிளாஸ்டிசைசர்கள் (plasticizers) நமது வளர்சிதை மாற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலை மோசமடையத் தொடங்குகிறது. பட மூலாதாரம்,GETTY இந்த தாலேட்ஸ் (Phthalates) உடலில் நுழைவதால், குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இது இன்சுலின் சுரக்கும் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்னைகள் தோன்றும். இது ஆஸ்துமா அல்லது கருவுறுதல் தொடர்பான பிரச்னைகளையும் ஏற்படுத்தும் . பட மூலாதாரம்,GETTY மைக்ரோவேவ் அவன் இந்திய சமையலறைகளில் ஹோட்டல்களில் ஊடுருவி இருந்தாலும், ஏர் பிரையர்கள் ஒப்பீட்டளவில் நமக்கு புதியவை தான். இதில் வறுத்த உணவுகள் அதிக எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது. மற்ற சமையல் முறைகளில் உணவு பொருட்களை வறுப்பதை விட இதில் வறுக்கும் போது உணவில் குறைந்த அளவு எண்ணெய் உறிஞ்சப்படும் குறைந்த எண்ணெய் என்றால் குறைந்த கலோரிகள் என்று அர்த்தம். குறைந்த கலோரிகள் என்றால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் குறைவு. உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சமைக்க ஏர் பிரையர்களைப் பயன்படுத்தலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஏர் பிரையரில் மீன்கள் வறுக்கப்படும் போது, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்புகள்) குறையும் மற்றும் ஆரோக்கியத்தில் அழற்சியை ஊக்குவிக்கும் சேர்மங்களை அதிகரிக்கும் என்கிறது அறிக்கை. உணவுப்பொருள்களில் ஊட்டச்சத்துகளை தக்க வைப்பது எப்படி? சமையல் முறை மற்றும் பாத்திரங்கள் பற்றிய தகவல்களை பார்த்தோம், இந்த அறிக்கை ஊட்டச்சத்து மதிப்புகளை பராமரிக்க சில குறிப்புகளை வழங்கியுள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் படி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அடிக்கடி கழுவ வேண்டாம். காய்கறிகள் மற்றும் பழங்களை தோலுரிப்பதற்கும், வெட்டுவதற்கும் முன் கழுவவும். சமையலில் அதிக தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சமையலுக்கு தேவையான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும். காய்கறிகளை சமைக்கும் போது பாத்திரங்களை மூடி வைக்கவும். எண்ணெயில் வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைக்கவும். உடைந்த தானியங்கள் மற்றும் புளித்த உணவுகளை (இட்லி-தோசை) உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை சமைக்கும் போது சோடாவை சேர்க்க வேண்டாம். மீதமுள்ள எண்ணெயை மீண்டும் சூடாக்குவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவு முறை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோய்க்கும் டாக்டர்கள் 'வாழ்க்கை முறை மாற்றங்களை' அதாவது வாழ்க்கை முறையை மாற்றி 'ஆரோக்கியமான உணவை' சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் முதல் மனநோய் வரை இந்த அறிவுறுத்தலை மருத்துவர்களிடம் கேட்டிருப்பீர்கள். என்ன தான் சாப்பிடுவது என்ற கேள்வி வரும். 'ஆரோக்கியமான' உணவில் ஏராளமான காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மிதமான உலர் பழங்கள், கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் தயிர் ஆகியவை இருக்க வேண்டும் என்று ICMR மற்றும் NIN பரிந்துரைக்கின்றன. `ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இல் இந்த வழிகாட்டுதல்களை உருவாக்க பணியாற்றிய ஆராய்ச்சியாளர் டாக்டர். சுப்பாராவ் எம். ஜி, பிபிசி மராத்திக்கு கூடுதல் தகவல்களை வழங்கினார். உணவு பொருட்களில், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், எண்ணெய் வித்துகள், எண்ணெய், கொழுப்புச் சத்துள்ள உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், வேர்கள் மற்றும் கிழங்குகள், இறைச்சி, மீன், மசாலாப் பொருட்கள் என பத்து வகைகளாகப் பிரித்துள்ளோம் என்றார். மேற்சொன்ன உணவு வகைகளில் ஏதேனும் ஐந்து முதல் ஏழு உணவுகளை தினசரி உணவில் எடுத்து கொள்ளலாம். 2000 கலோரி உணவு என கருத்தில் கொண்டால், உங்கள் உணவில் பாதி காய்கறிகள் மற்றும் பழங்களாக இருக்க வேண்டும். முடிந்தவரை புதிய காய்கறிகள் மற்றும் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.” “மேற்சொன்ன 10 வகை உணவு உட்பிரிவுகளில், ஏதேனும் ஒன்றை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதும் சரியல்ல, உங்கள் உணவில் பலவகையான உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவுக்கு அதிக செலவு தேவையில்லை. ஆனால் உட்கொள்ளும் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவில் இருக்க வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் உண்ண வேண்டிய உணவுகள் பட மூலாதாரம்,GETTY `ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ வழிகாட்டுதல்களின்படி கருத்தரித்தல், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது நல்ல உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவை இருக்க வேண்டும். கருத்தரித்தலுக்கு முன்கூட்டிய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றி கொள்வது நல்லது. கர்ப்பிணிகள் சரியான ஹீமோகுளோபின் மற்றும் பிஎம்ஐ அளவை பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். முதல் கர்ப்பத்திற்கான குறைந்தபட்ச வயது 21-ஆக இருக்க வேண்டும். உணவில் பல்வேறு பருப்பு வகைகள், முந்திரி, பாதாம் போன்றவை, மீன், பால், முட்டைகள் இருக்க வேண்டும். அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மது, புகையிலை எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இரத்த சோகை வராமல் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரை ருசிக்கு மட்டும் தான் கடந்த சில ஆண்டுகளில், நிறைய உப்பு நிறைந்த பல உணவுகள் சந்தையில் விற்கப்படுகின்றன. வீட்டில் உள்ள உணவிலும் வெளியில் உண்ணும் உணவுகளிலும் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளிலும் மக்களின் உணவில் உப்பின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த கவலைகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன. ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ ஆகியவையும் ஒரு நாளைக்கு ஐந்து கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றன. அயோடின் உப்பு பயன்படுத்தவும். சாஸ்-கெட்ச்அப், பிஸ்கட், சிப்ஸ், சீஸ், கருவாடு ஆகியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பொட்டாசியம் கிடைக்கும். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம். இது ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது. இருப்பினும், இந்த உணவுகளில் கலோரிகள் அதிகம். எனவே, இந்த அறிவுறுத்தல்களில் உள்ள ஒரு முக்கியமான பரிந்துரை என்னவென்றால், அனைவரும் சாஸ்கள், சீஸ், மயோனைஸ், ஜாம், பழ கூழ், ஜூஸ், கார்பனேற்றப்பட்ட பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் ஆகியவற்றை குறைவாக சாப்பிட வேண்டும். வீட்டில் தயாரிக்கும் உணவில் எண்ணெய்-நெய், சர்க்கரை, உப்பு அதிகம் பயன்படுத்தினால் அதுவும் நல்லதல்ல. வெளியில் சாப்பிடும் போது கூடுதல் கவனம் தேவை. வறுத்த உணவு, இனிப்பு, உப்பு, வேக வைத்த உணவுகளைத் தவிர்க்கவும். உப்பு அதிகம் உள்ள உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று இந்த அறிவுறுத்தல்கள் கூறுகின்றன. https://www.bbc.com/tamil/articles/c72plr5y2w0o

சமையலுக்கு எந்த பாத்திரம், எந்த அடுப்பு சிறந்தது? மைக்ரோவேவ் அவன், ஏர் பிரையர் தீங்கு தருமா?

4 days 2 hours ago
சமையலுக்கு எது சிறந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர்
  • பதவி, பிபிசி மராத்தி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

'கேஸ் அடுப்பில் சமைத்த சாம்பார், விறகடுப்பில் சமைத்த போது இருந்த ருசியில் இல்லை, அந்த அடுப்பில் சமைத்த உணவே சிறந்தது, குக்கரில் சமைத்த சாதமும், சட்டியில் சமைத்த சாதமும் முற்றிலும் வேறு.. மைக்ரோவேவில் சமைத்த உணவில் ருசியே இல்லை. சாரம் இழக்கும் வகையில் சமைப்பது நல்லதல்ல. இப்படி சமைப்பது நல்லது, அப்படி சமைப்பது நல்லது.." இதுபோன்ற வாக்கியங்களை அடிக்கடி நம் வீடுகளில் கேட்க முடியும். பல வீடுகளில், உணவை சமைப்பது, சூடுபடுத்துவது, கொதிக்க வைப்பது என அனைத்திலும் பல விதிகள் பின்பற்றப்படுகின்றன.

பெரும்பாலும் உணவு சமைப்பதில், பாரம்பரிய முறைகள் தான் சிறந்தது என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. மைக்ரோவேவ் அல்லது ஏர் ஃப்ரையர் போன்ற நவீன மின் சாதனங்கள் உணவின் ஊட்டச்சத்துக்களை அழித்து விடும் என்ற பலரும் நம்புகின்றனர். ஆனால் இந்த ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) வழங்கிய புதிய வழிகாட்டுதல்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், சமையல் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் பற்றிய நம்முடைய நம்பிக்கைகளை புரட்டிப் போடக் கூடியவை,

இந்திய ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் எவ்வளவு உணவு தேவை, எவ்வளவு ஊட்டச்சத்துகள் தேவை, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உணவில் என்ன இருக்க வேண்டும் மற்றும் சமையல் உபகரணங்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 'இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

சமையல் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் பற்றி இந்த அறிக்கை விவரிக்கும் தகவல்களை முதலில் பார்ப்போம்…

எந்த பாத்திரத்தில் சமைப்பது சிறந்தது?

எந்த வகையான பாத்திரத்தில் சமைப்பது? நாம் பயன்படுத்தும் பாத்திரம் நல்லது தானா? அதை எவ்வாறு பராமரிப்பது, அதில் ஏதேனும் பாதகமான ரசாயன எதிர்வினை இருக்கிறதா? சமைக்கும் போது, இந்த பாத்திரங்கள் உணவின் ஊட்டச்சத்துகளை அழித்து விடுமா? பாத்திரங்களில் ரசாயன பூசப்பட்டிருந்தால் அவை உணவோடு கலந்து விடுமா? - இதுபோன்று பல நேரங்களில் சந்தேகம் வரும். சில சமயங்களில் பயமும் இருக்கும்.

`ஐசிஎம்ஆர்’ மற்றும் `என்ஐஎன்’ வழங்கிய இந்த புதிய வழிகாட்டுதல்களில், மண் பாத்திரங்கள், உலோகம், துருப்பிடிக்காத எஃகு, நான்ஸ்டிக் மற்றும் கிரானைட் கற்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

மண் பாண்டங்கள் சமையலுக்கு பாதுகாப்பானவை. மண் பாண்டங்களில் சமைக்கும் போது குறைந்த எண்ணெயில் சமைக்க முடியும். மண் பாத்திரங்களில் வெப்பம் ஒரே அளவில் பரவும், உணவு பொருளில் ஒரே மாதிரி வெப்பம் ஊடுருவுவதால், ஊட்டச்சத்து மதிப்புகள் பாதுகாக்கப்படும் என்று அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊறுகாய், சட்னி, சாம்பார், சாஸ் போன்றவற்றை அலுமினியம், இரும்பு, செம்பு பாத்திரங்களில் வைக்கக் கூடாது. ஸ்டீல் கிண்ணத்தில் இந்த பொருட்களுக்கு எந்தவித பாதகமான விளைவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • வழிகாட்டுதல்களை உருவாக்கிய நிபுணர்கள் டெஃப்லான் பூச்சு கொண்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களை (pan) 170 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடாக்கினால் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
  • ஸ்டவ் மீது நீண்ட நேரம் காலியாக வைத்து சூடாக்கினாலும் ஆபத்தான விளைவு ஏற்படும். காலியாக வைத்து சூடுபடுத்தும் போது, நான்-ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் டெஃப்லான் லேயர், நச்சுப் புகைகளை உருவாக்கும்.
  • நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது, எப்படி சுத்தம் செய்வது என்னும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த சமையல் பாத்திரங்களில் நான்ஸ்டிக் பூச்சு சேதமடைந்து விட்டால், அதைப் பயன்படுத்த கூடாது என்றும் அறிக்கை கூறுகிறது.
 

`ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இயக்குநர் டாக்டர். ஹேமலதா ஆர் கூறுகையில் , “மக்கள் `ஒட்டவே ஒட்டாத’ நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களை வாங்க விரும்புகிறார்கள், ஏனெனில் அது பிரபலமாக உள்ளது. எளிதில் கிடைக்கிறது. ஆனால் அதிக சூடேறும் போது, நான் - ஸ்டிக் பூச்சுகளில் உள்ள ரசாயனங்கள் வெளியேறி, நம் உணவில் கலந்து, நம் உடலுக்குள் செல்கின்றன. இது ஆபத்தானது. எனவே, நான்-ஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அப்படி பயன்படுத்தினாலும், அதன் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ஒரு சிறப்பு முறை உள்ளது. அதற்கேற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும். கீறல்கள் விழுந்த பழைய நான்-ஸ்டிக் பாத்திரங்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

`கிரானைட் கல்’ சமையல் பாத்திரங்கள் (Granite stoneware) இப்போது குறைந்த எடையிலும் கிடைக்கின்றன. இந்த கல் சட்டிகள் மூலம் குறைந்த நேரத்திலும் குறைந்த ஆற்றல் பயன்பாட்டிலும் சமைக்க முடியும்.

இந்த சட்டிகள் வெப்பத்தை நன்கு தக்கவைத்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை. அடுப்பு அணைக்கப்பட்ட பிறகும் நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். டெஃப்லான் பூச்சு இல்லாத கல் பாத்திரங்கள் பயன்படுத்த பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

மைக்ரோவேவ் மற்றும் ஏர் பிரையர் பயன்பாடு
எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

இந்த வழிகாட்டுதல் அறிக்கையில், சமையல், கொதித்தல், குக்கர் சமையல், வேக வைத்தல், வறுத்தல், குறைந்த எண்ணெயில் வறுத்தல், பார்பிக்யூ, கிரில்லிங் மற்றும் ஏர் ஃப்ரை செய்தல் என சமையல் முறைகளின் நன்மைகள் மற்றும் சாத்தியமான தீமைகளையும் விவரிக்கிறது.

உதாரணமாக பொரியலை எடுத்துக் கொள்வோம். இந்த அறிக்கையில் உள்ள தகவல்களின்படி, வறுக்கப்படும் செயல்முறை, உணவின் ஊட்டச்சத்து மதிப்புகளை மாற்றுகிறது. வைட்டமின் சி போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் அழிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், ஒரு உணவு பொருளை எண்ணெயில் வறுக்கும் போது, அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றப்பட்ட கூறுகள் உருவாகலாம் மற்றும் நச்சுகளும் உருவாகலாம்.

மிக முக்கியமாக, அதிகப்படியான எண்ணெய் மற்றும் கொழுப்பு நுகர்வு இதய நோய், பக்கவாதம், நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இது அடிவயிற்றை சுற்றி கொழுப்பு சேர்வதற்கும், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளின் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கிறது. அதே எண்ணெயை மீண்டும் பொரிப்பதற்கு பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மைக்ரோவேவ் அவனில் சமைப்பது பற்றிய ஒரு புதிய மற்றும் சிந்தனையைத் தூண்டும் தகவலை வழங்குகிறது.

மைக்ரோவேவ் சமையலுக்கும் வழக்கமான சமையலுக்கும் இடையே சிறிய ஊட்டச்சத்து வேறுபாடு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துகளின் மீது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் சமையல் முறைகளில் மைக்ரோவேவ் சமையல் ஒன்றாகும். காரணம், மைக்ரோவேவில் சமைக்கும் போது, மிகக் குறைந்த நீரே பயன்படுத்தப்படும். மைக்ரோவேவ், உணவை உள்ளே இருந்து சூடாக்குகிறது. இது ஊட்டச்சத்துகளை அழிக்காததால், மற்ற சமையல் முறைகளை விட இது அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்க வைக்கிறது.

மைக்ரோவேவ் அவனில் மிகக் குறுகிய காலத்தில் சமைப்பதால், அதிக நேர வெப்பத்தால் அழிக்கப்படும் வைட்டமின் சி மற்றும் பிற கூறுகளும் பாதுகாக்கப்படுகின்றன. இது புரதங்கள், லிப்பிடுகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றில் குறைவான விளைவை ஏற்படுத்தும். மைக்ரோவேவில் சமைக்கும் போது, பாதுகாப்பான கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்துமாறு அறிக்கை பரிந்துரைக்கிறது. பிளாஸ்டிக் கொள்கலன்கள் நல்லதல்ல என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
'மைக்ரோவேவ் விதிகளை பின்பற்ற வேண்டும்'

`ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இயக்குநர் டாக்டர். ஹேம்லதா ஆர் பிபிசி மராத்திக்கு கொடுத்த பேட்டியில்,

“வழக்கமான சமையல் முறைகளை விட மைக்ரோவேவ் சமையல் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் உங்களுக்கு வேறு வழியில்லை எனில் மைக்ரோவேவ் பயன்படுத்தலாம். மைக்ரோவேவ் நாம் நினைப்பது போல் மோசமான உபகரணம் இல்லை. நிச்சயமாக, மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது ஆபத்தானது. அதன் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எனவே, மைக்ரோவேவில் அனைத்து ஊட்டச்சத்து மதிப்புகளும் இழக்கப்படும் என்ற பொதுவான பார்வையை நம்ப வேண்டியதில்லை. மைக்ரோவேவை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். இது அந்தளவிற்கு கெடுதல் இல்லை." என்றார்.

மைக்ரோவேவில் உணவை நீண்ட நேரம் சூடாக்கினால், அதில் ' அக்ரிலாமைடு' (acrylamide) என்ற வேதிப்பொருள் உருவாகும். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எரிவாயு அல்லது விறகடுப்பில் உணவைச் சூடாக்குவதை விட மைக்ரோவேவில் உணவைச் சமைப்பது அதிக அக்ரிலாமைடை உருவாக்குகிறது என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள். மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கவனமாக இருங்கள்! இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

மைக்ரோவேவில் இருந்து வரும் வெப்பம் பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு பாலிமர் (polymer) துகள்களை உடைக்கும். இந்த பாலிமர் துகள்கள் உணவுடன் கலக்கின்றன. இந்த பாலிமர் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்கள் பாதிக்கப்படும். எனவே, பிளாஸ்டிக் பொருட்களை மைக்ரோவேவில் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருள்களை மிருதுவாக்க பயன்படுத்தப்படும் ரசாயனமான தாலேட்ஸ் (Phthalates) எனப்படும் பிளாஸ்டிசைசர்கள் (plasticizers) நமது வளர்சிதை மாற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலை மோசமடையத் தொடங்குகிறது.

எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

இந்த தாலேட்ஸ் (Phthalates) உடலில் நுழைவதால், குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இது இன்சுலின் சுரக்கும் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்னைகள் தோன்றும். இது ஆஸ்துமா அல்லது கருவுறுதல் தொடர்பான பிரச்னைகளையும் ஏற்படுத்தும் .

எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

மைக்ரோவேவ் அவன் இந்திய சமையலறைகளில் ஹோட்டல்களில் ஊடுருவி இருந்தாலும், ஏர் பிரையர்கள் ஒப்பீட்டளவில் நமக்கு புதியவை தான். இதில் வறுத்த உணவுகள் அதிக எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது. மற்ற சமையல் முறைகளில் உணவு பொருட்களை வறுப்பதை விட இதில் வறுக்கும் போது உணவில் குறைந்த அளவு எண்ணெய் உறிஞ்சப்படும்

குறைந்த எண்ணெய் என்றால் குறைந்த கலோரிகள் என்று அர்த்தம். குறைந்த கலோரிகள் என்றால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் குறைவு. உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சமைக்க ஏர் பிரையர்களைப் பயன்படுத்தலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஏர் பிரையரில் மீன்கள் வறுக்கப்படும் போது, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்புகள்) குறையும் மற்றும் ஆரோக்கியத்தில் அழற்சியை ஊக்குவிக்கும் சேர்மங்களை அதிகரிக்கும் என்கிறது அறிக்கை.

உணவுப்பொருள்களில் ஊட்டச்சத்துகளை தக்க வைப்பது எப்படி?

சமையல் முறை மற்றும் பாத்திரங்கள் பற்றிய தகவல்களை பார்த்தோம், இந்த அறிக்கை ஊட்டச்சத்து மதிப்புகளை பராமரிக்க சில குறிப்புகளை வழங்கியுள்ளது.

இந்த அறிவுறுத்தல்கள் படி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அடிக்கடி கழுவ வேண்டாம். காய்கறிகள் மற்றும் பழங்களை தோலுரிப்பதற்கும், வெட்டுவதற்கும் முன் கழுவவும். சமையலில் அதிக தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சமையலுக்கு தேவையான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும்.

காய்கறிகளை சமைக்கும் போது பாத்திரங்களை மூடி வைக்கவும். எண்ணெயில் வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைக்கவும்.

உடைந்த தானியங்கள் மற்றும் புளித்த உணவுகளை (இட்லி-தோசை) உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை சமைக்கும் போது சோடாவை சேர்க்க வேண்டாம். மீதமுள்ள எண்ணெயை மீண்டும் சூடாக்குவதைத் தவிர்க்கவும்.

ஆரோக்கியமான உணவு முறை என்றால் என்ன?
எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோய்க்கும் டாக்டர்கள் 'வாழ்க்கை முறை மாற்றங்களை' அதாவது வாழ்க்கை முறையை மாற்றி 'ஆரோக்கியமான உணவை' சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் முதல் மனநோய் வரை இந்த அறிவுறுத்தலை மருத்துவர்களிடம் கேட்டிருப்பீர்கள்.

என்ன தான் சாப்பிடுவது என்ற கேள்வி வரும். 'ஆரோக்கியமான' உணவில் ஏராளமான காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மிதமான உலர் பழங்கள், கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் தயிர் ஆகியவை இருக்க வேண்டும் என்று ICMR மற்றும் NIN பரிந்துரைக்கின்றன.

`ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இல் இந்த வழிகாட்டுதல்களை உருவாக்க பணியாற்றிய ஆராய்ச்சியாளர் டாக்டர். சுப்பாராவ் எம். ஜி, பிபிசி மராத்திக்கு கூடுதல் தகவல்களை வழங்கினார்.

உணவு பொருட்களில், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், எண்ணெய் வித்துகள், எண்ணெய், கொழுப்புச் சத்துள்ள உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், வேர்கள் மற்றும் கிழங்குகள், இறைச்சி, மீன், மசாலாப் பொருட்கள் என பத்து வகைகளாகப் பிரித்துள்ளோம் என்றார்.

மேற்சொன்ன உணவு வகைகளில் ஏதேனும் ஐந்து முதல் ஏழு உணவுகளை தினசரி உணவில் எடுத்து கொள்ளலாம். 2000 கலோரி உணவு என கருத்தில் கொண்டால், உங்கள் உணவில் பாதி காய்கறிகள் மற்றும் பழங்களாக இருக்க வேண்டும். முடிந்தவரை புதிய காய்கறிகள் மற்றும் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.”

“மேற்சொன்ன 10 வகை உணவு உட்பிரிவுகளில், ஏதேனும் ஒன்றை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதும் சரியல்ல, உங்கள் உணவில் பலவகையான உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவுக்கு அதிக செலவு தேவையில்லை. ஆனால் உட்கொள்ளும் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவில் இருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் உண்ண வேண்டிய உணவுகள்
எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

`ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ வழிகாட்டுதல்களின்படி

  • கருத்தரித்தல், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது நல்ல உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவை இருக்க வேண்டும். கருத்தரித்தலுக்கு முன்கூட்டிய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றி கொள்வது நல்லது.
  • கர்ப்பிணிகள் சரியான ஹீமோகுளோபின் மற்றும் பிஎம்ஐ அளவை பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • முதல் கர்ப்பத்திற்கான குறைந்தபட்ச வயது 21-ஆக இருக்க வேண்டும்.
  • உணவில் பல்வேறு பருப்பு வகைகள், முந்திரி, பாதாம் போன்றவை, மீன், பால், முட்டைகள் இருக்க வேண்டும். அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • மது, புகையிலை எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • இரத்த சோகை வராமல் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
 
உப்பு மற்றும் சர்க்கரை ருசிக்கு மட்டும் தான்

கடந்த சில ஆண்டுகளில், நிறைய உப்பு நிறைந்த பல உணவுகள் சந்தையில் விற்கப்படுகின்றன.

வீட்டில் உள்ள உணவிலும் வெளியில் உண்ணும் உணவுகளிலும் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளிலும் மக்களின் உணவில் உப்பின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த கவலைகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ ஆகியவையும் ஒரு நாளைக்கு ஐந்து கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றன.

  • அயோடின் உப்பு பயன்படுத்தவும்.
  • சாஸ்-கெட்ச்அப், பிஸ்கட், சிப்ஸ், சீஸ், கருவாடு ஆகியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பொட்டாசியம் கிடைக்கும்.
  • அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம். இது ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது.
  • இருப்பினும், இந்த உணவுகளில் கலோரிகள் அதிகம். எனவே, இந்த அறிவுறுத்தல்களில் உள்ள ஒரு முக்கியமான பரிந்துரை என்னவென்றால், அனைவரும் சாஸ்கள், சீஸ், மயோனைஸ், ஜாம், பழ கூழ், ஜூஸ், கார்பனேற்றப்பட்ட பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் ஆகியவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.

வீட்டில் தயாரிக்கும் உணவில் எண்ணெய்-நெய், சர்க்கரை, உப்பு அதிகம் பயன்படுத்தினால் அதுவும் நல்லதல்ல. வெளியில் சாப்பிடும் போது கூடுதல் கவனம் தேவை. வறுத்த உணவு, இனிப்பு, உப்பு, வேக வைத்த உணவுகளைத் தவிர்க்கவும்.

உப்பு அதிகம் உள்ள உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று இந்த அறிவுறுத்தல்கள் கூறுகின்றன.

https://www.bbc.com/tamil/articles/c72plr5y2w0o

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

4 days 2 hours ago
சவுக்கு சங்கர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டவை என்ன? பட்டியல் இதோ…, லேப்டாப், பென் டிரைவ், கஞ்சா; சவுக்கு சங்கர் வீடு, அலுவலகம் மற்றும் கார் ஓட்டுனர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் இங்கே WebDesk11 May 2024 23:23 IST சவுக்கு சங்கர் வீடு, அலுவலகம் மற்றும் கார் ஓட்டுனர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் Listen to this article பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் இருந்து கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், மொபைல் போன், வெப் கேமரா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் குறித்தும், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச் செட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் நேற்று (மே 10) சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு லேப்டாப், செல்போன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்தனர். இந்தநிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கைப்பற்ற பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி சவுக்கு சங்கர் வீட்டில், குடும்ப அடையாள அட்டை, ஐபாட் டாப், மொபைல் போன், இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் பணம், கம்ப்யூட்டர் மானிட்டர், டி.வி.ஆர், ஐந்து கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, கார், பேங்க் பாஸ்புக், பழைய பாஸ்போர்ட், சிகரெட் ஆஸ்ட்ரே ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் அலுவலகத்தில் இருந்து, 3 லேப்டாப், 10 ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், செல்போன், நான்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சவுக்கு சங்கரின் கார் ஓட்டுனர் வீட்டில் இருந்து, 3 லேப்டாப், ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், சிறிய கஞ்சா பொட்டலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-seizes-ganja-laptop-hard-disk-from-youtuber-savukku-shankar-home-office-4556569 யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- சென்னை காவல்துறை நடவடிக்கை யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது. யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட 6 வழக்குகள் பதிந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் 7வதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர். சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில், 7வது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை சிறை அதிகாரிகள் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறை வழங்கியுள்ளது. காவல்துறையினர் குறித்த அவதூறு பேச்சு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் கைதாகியுள்ள சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். https://www.maalaimalar.com/amp/news/state/gangster-law-pounced-on-youtuber-savukku-shankar-717930

மன்னாரில் நடைபெற்ற நுங்கு விழா

4 days 2 hours ago
வவுனியாவில் நுங்கு திருவிழா! 12 MAY, 2024 | 06:15 PM வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா இன்று (12) நடைபெற்றது. இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் கலை நிலா கலையகத்தினால் 'குளக்கரையை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் நாடக ஆற்றுகையும் நடைபெற்றிருந்தது. சுயாதீன இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்த நுங்கு திருவிழாவில் பெருமளவான இளைஞர்கள், யுவதிகள் பலரும் கலந்துகொண்டு நுங்குகளை பருகி மகிழ்ந்ததை இம்முறையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. https://www.virakesari.lk/article/183349

மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!

4 days 2 hours ago
தனி ஒரு மனிதனுக்கு மாட்டு கொத்து இல்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்! இவ்வண், உடான்ஸ் சாமியார் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிஸ்டேக் & மாட்டுகொத்து நுகர்வோர் பேரவை

ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா? நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதா? ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் - சம்பிக்க

4 days 2 hours ago
12 MAY, 2024 | 03:38 PM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மஹரகம பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடற்ற வகையில் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கு தம்மிடம் வேட்பாளர் இல்லை என்பதையும், அவ்வாறு களமிறக்கினால் படுதோல்வியடைய நேரிடும் என்பதை ராஜபக்ஷர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை கோருகிறார்கள். பாராளுமன்றத்தின் தற்போதைய பலத்தை கொண்டு பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள். ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தனது பிரதான இலக்கு என்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவு பெறும் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தை கலைத்தால் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை தோற்றம் பெறும். அது கடன் மறுசீரமைப்புக்கு தாக்கம் செலுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கறிவார். அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் முரண்பாடான அரசாங்கமே தோற்றம் பெறும். ஜனாதிபதி ஒரு கட்சியையும், அரசாங்கம் பிறிதொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும்போது அரசியல் நெருக்கடிகள் தோற்றம் பெறும். ஆகவே நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு ஜனாதிபதி இடமளிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/183321

ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா? நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதா? ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் - சம்பிக்க

4 days 2 hours ago
12 MAY, 2024 | 03:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மஹரகம பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடற்ற வகையில் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கு தம்மிடம் வேட்பாளர் இல்லை என்பதையும், அவ்வாறு களமிறக்கினால் படுதோல்வியடைய நேரிடும் என்பதை ராஜபக்ஷர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை கோருகிறார்கள்.

பாராளுமன்றத்தின் தற்போதைய பலத்தை கொண்டு பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள். ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தனது பிரதான இலக்கு என்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவு பெறும் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தை கலைத்தால் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை தோற்றம் பெறும். அது கடன் மறுசீரமைப்புக்கு தாக்கம் செலுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கறிவார்.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் முரண்பாடான அரசாங்கமே தோற்றம் பெறும். ஜனாதிபதி ஒரு கட்சியையும், அரசாங்கம் பிறிதொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும்போது அரசியல் நெருக்கடிகள் தோற்றம் பெறும். ஆகவே நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு ஜனாதிபதி இடமளிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/183321

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

4 days 2 hours ago
முன்பு சம்பளக் காசில் சேர்த்து வைத்து தான் தங்கம் வாங்கலாம் இப்பொது ஒரு " call " கொடுத்தால் போதும் வங்கியில் வந்து விழும் காசு வெளிநாடு காசு ஐயா வெளிநாட்டுக் காசு...

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

4 days 3 hours ago
ராஜஸ்தானை வென்று மூன்றாவது இடத்திற்கு சிஎஸ்கே முன்னேற்றம் - ரசிகர்களுக்கு தோனி தந்த 'ஸ்பெஷல்' என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 42 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரின் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் பாதையை விசாலமாக்கியுள்ளது. ஆனால், ப்ளே ஆஃப் சுற்றை இன்னும் உறுதி செய்யவில்லை என்பதால், சிஎஸ்கே ரசிகர்களுக்கு டென்ஷன் நீடிக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 61-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் மந்தமான ஆட்டம் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஜெய்ஸ்வால், பட்லர் ஆட்டத்தைத் தொடங்கினர். வழக்கமாக அதிரடியாகத் தொடங்கக்கூடிய இருவரும் நிதானமாக ஆடினர். தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள்தான் எடுத்தனர். தீக்சனா வீசிய 2வது ஓவரிலும் பவுண்டரிகள் ஏதும் அடிக்காமல் ராஜஸ்தான் பேட்டர்கள் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். தேஷ்பாண்டே வீசிய 3வது ஓவரில்தான் பட்லர் முதல் பவுண்டரியை அடித்தார். தீக்சனா வீசிய 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரி என 13ரன்கள் சேர்த்தார். அதன்பின் ஷர்துல் வீசிய 5வது ஓவரில் ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து 9 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் மட்டுமே சேர்த்து. இந்த ஐபிஎல் சீசனில் விக்கெட் இழப்பின்றி ஒரு அணி பவர்ப்ளேயில் சேர்த்த குறைந்த ஸ்கோராகும். பட மூலாதாரம்,GETTY IMAGES விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிவு 7வது ஓவரை வீசி சிமர்ஜீத் சிங் அழைக்கப்பட்டார். அவரின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் 24 ரன்கள் சேர்த்தநிலையில் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த சாம்ஸன், பட்லருடன் இணை சேர்ந்தார். ஜடேஜா வீசிய 8-வது ஓவரில் பட்லர், சாம்ஸன் இருவரும் ரன்சேர்க்கத் தடுமாறினர். 8-வது ஓவரை மீண்டும் சிமர்ஜீத் சிங் வீசினார். அப்போது ஸ்கூப் ஷாட்டுக்கு முயன்ற பட்லர் 21ரன்களில் தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் வந்தவுடனே சிக்ஸர் விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளத்தில் பேட்டர்களை நோக்கி பந்து வருவது மெதுவாக இருந்ததால், ரன் சேர்க்க ராஜஸ்தான் பேட்டர்கள் திணறினர். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஜடேஜா வீசிய 11வது ஓவரில் ரியான் பராக் ஸ்விட்ச் ஹிட் ஷாட் அடிக்க டீப் கவர் திசையில் நின்றிருந்த தேஷ்பாண்டே அந்த கேட்சை தவறவிட்டார். சாம்ஸன், ரியான் பராக் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க சிரமப்பட்டு, ஒரு ரன், இரு ரன்களாகவே சேர்த்தனர். இதனால் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் வீதமே சேர்க்க முடிந்தது. 15-வது ஓவரை சிமர்ஜீத் சிங் வீசினார். ரன் சேர்க்க ஏற்கெனவே சாம்ஸன் தடுமாறி வந்தார். அவர் நினைத்தபடி எந்த ஷாட்களையும் அடிக்க முடியாததால் விரக்தியில் இருந்தார். சிமர்ஜித் வீசிய அந்த ஓவரின் 2வது பந்தை சாம்ஸன் தூக்கி அடிக்க முற்பட்டு, மிட்ஆஃப் திசையில் கெய்க்வாட்டிடம் கேட்சானது. சாம்ஸன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணி ரன் சேர்க்க திணறல் அடுத்து ஜூரெல் களமிறங்கி, பராக்குடன் சேர்ந்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய 16-வது ஓவரில் ஜூரெல் டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸர் பறக்கவிட ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கடந்தது. சிமர்ஜீத் வீசிய 17-வது ஓவரில் ஜுரெல், பராக் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். கடைசி ஓவரை தேஷ்பாண்டே வீசினார். அவுட்சைட் ஆஃப் சைடில் வீசப்பட்ட பந்தை ஜூரெல் தூக்கி அடிக்க ஷர்துல் தாக்கூரிடம் கேட்சானது. ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷுபம் துபே, வந்த வேகத்தில் ஸ்லோவர் பாலை அடித்து ஷிவம் துபேயிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டாகினார். அந்த ஓவரில் ரியான் பராக் சிக்ஸர் அடித்து 10 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 141ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் 47 ரன்களுடனும், அஸ்வின் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இவர்கள் தவிர ஜடேஜா, தீக்சனா இருவரும் நடுப்பகுதி ஓவர்களிலும், தொடக்கத்திலும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ராஜஸ்தான் ரன்ரேட்டை உயர விடாமல் பார்த்து கொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணி அதிரடி தொடக்கம் 142 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணியின் ரவீந்திரா, கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். டிரன்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சிஎஸ்கேவுக்கு கிடைத்தது. சந்தீப் சர்மா வீசிய 2வது ஓவரில் ரவீந்திரா ஒரு சிக்ஸர் உள்பட 12 ரன்கள் சேர்த்தனர். போல்ட் வீசிய 3வது ஓவரில் ரவீந்திரா சிக்ஸர், பவுண்டரி என 12 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கேவின் தொடக்க ஜோடியில் இடதுகை பேட்டர் இருப்பதால் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார் அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அஸ்வின் வீசிய ஓவரில் 4வது பந்தை ரச்சின் ரவீந்திரா தூக்கி அடிக்க அஸ்வினிடமே கேட்சானது. ரவீந்திரா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டேரல் மிட்ஷெல் களமிறங்கினார். சந்தீப் சர்மா வீசிய 5வது ஓவரில் மிட்ஷெல் இரு பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் வீசிய 6-வது ஓவரிலும் மிட்ஷெல் 2 பவுண்டரிகளை விளாசி சிஎஸ்கே ரன்ரேட்டை உயர்த்தினார். பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிக்கனம் 7வது ஓவரை ஆந்த்ரே பர்கர் வீசினார், இந்த ஓவரில் பவுன்சராக வீசப்பட்ட பந்தை கெய்க்வாட் சிக்ஸர் விளாச 10 ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சில் மாற்றம் செய்து சஹல் அழைக்கப்பட்டார். சஹல் வீசிய 8-வது ஓவரில் கால் காப்பில் வாங்கி மிட்ஷெல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மொயின் அலி களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். ஆவேஷ் கான் வீசிய 9-வது ஓவரில் சிஎஸ்கே பேட்டர்கள் 7 ரன்களும், அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் 3 ரன்களும் சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்தனர். 11வது ஓவரை பர்கர் வீசினார். தொடக்கத்தில் இருந்தே திணறிய மொயின் அலி, டீப் கவர் பாயின்ட் திசையில் சிக்ஸருக்கு முயல, ஆவேஷ்கானால் கேட்ச் பிடிக்கப்பட்டார். மொயின் அலி 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிக்ஸர் துபே ஏமாற்றம் அடுத்து ஷிவம் துபே களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். சஹல் வீசிய 13-வது ஓவரில் துபேவும், கெய்க்வாட்டும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 14-வது ஓவரை அஸ்வின் வீசினார், முதல் பந்திலேயே துபே, ஸ்ட்ரைட் திசையில் சிக்ஸருக்கு விளாசினார், 2வது பந்தில் துபே பவுண்டரி விளாசினார். அஸ்வின் வீசிய கடைசிப்பந்தில் துபே சிக்ஸருக்கு முயற்சிக்க ரியான் பராக்கிடம் கேட்சானது. துபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். துபே விக்கெட்டை வீழ்த்திய போது, அஸ்வின் முக்கிய மைல்கல்லை எட்டினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது 50-வது விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்டன. 15-வது ஓவரை சஹல் வீசினார். இந்த ஓவரில் கெய்க்வாட் ஒரு பவுண்டரி அடிக்க, ஜடேஜா சிக்ஸருக்கு முயன்றார். ஆனால் பவுண்டரி அருகே நின்றிருந்த பட்லர் கேட்ச் பிடித்த நிலையில் எல்லைக்கோட்டின் மீது விழுவதற்கு முன்பே பந்தை தூக்கி எறிந்ததால் கேட்சாக மாறவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜடேஜாவின் அரிதான ரன்அவுட் ஆவேஷ் கான் 16-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசிப்பந்தை சந்தித்த ஜடேஜா தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். ஒரு ரன் எடுத்த நிலையில், 2 வது ரன்னுக்கு ஓடி வரவே கெய்க்வாட் மறுத்துவிட்டார். இதனால் மீண்டும் நான்-ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு ஜடேஜா ஓடும்போது, ஸ்டெம்பை மறைத்துக்கொண்டு ஓடினார். தன்னுடைய ஓடும் பகுதியையும் மாற்றி, பீல்டர் ரன்அவுட் செய்ய இடையூறு செய்யும் வகையில் ஸ்டெம்பை மறைத்து ஜடேஜா ஓடினார். பந்தை பிடித்து எறிந்த சாம்ஸன், ரன்அவுட் செய்ய முயல, பந்து ஜடேஜா கையில் பட்டது. ரன்அவுட்டுக்கு இடையூறாக ஓடியதாக ஜடேஜா மீது 3வது நடுவரிடம் சாம்ஸன் அப்பீல் செய்தார். இதை ஆய்வு செய்த 3வது நடுவர், ஜடேஜா ரன்அவுட் செய்யவிடாமல் ஸ்டெம்பை மறைத்து ஓடியது உறுதி செய்து அவுட் வழங்கினார். ஜடேஜா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஸ்வி களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். கெய்க்வாட் பொறுப்பான பேட்டிங் பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே வெற்றிக்கு 24 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டன. சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் ரிஸ்வி பவுண்டரி உள்பட 8 ரன்கள் சேர்த்தார். கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. ஆந்த்ரே பர்கர் வீசிய 18-வது ஓவரில் கெய்க்வாட் ஒரு சிக்ஸர் விளாசி ரசிகர்களின் பதற்றத்தைக் குறைத்தார். போல்ட் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி பவுண்டரி அடித்து வெற்றியை நெருங்க வைத்தார். 2வது பந்தில் ரிஸ்வி பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார். 18.2 ஓவர்களில் சிஎஸ்கே அணி இலக்கை அடைந்தது. கேப்டன் கெய்க்வாட் 42 ரன்களிலும், ரிஸ்வி 15 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரசிகர்களுக்கு தோனி தந்த 'ஸ்பெஷல்' என்ன? இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி லீக் என்பதால், சிஎஸ்கே அணிக்கு ஆதரவு அளிக்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வந்திருந்தனர். அரங்கமே மஞ்சள்மயமாகக் காட்சியளித்தது. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு ஏகோபித்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு வெற்றியுடன் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் மைதானத்தை வலம் வந்து நன்றி செலுத்தினர். அது மட்டுமல்லாமல் தோனி டென்னிஸ் ராக்கெட் மூலம் பந்துகளை ரசிகர்கள் மத்தியில் அடித்து அவர்களை மகிழ்வித்தார். ஆட்டநாயகன் சிமர்ஜீத் சிங் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அச்சாரமாக இருந்தது சிமர்ஜீத் சிங்கின் பந்துவீச்சும், கேப்டன் கெய்க்வாட்டின் ஆங்கர் ரோல் பேட்டிங்கும்தான். பதீராணா, முஸ்தபிசுர் ரஹ்மான் இல்லாத நிலையில் சிமர்ஜீத் பந்துவீச்சு, சிஎஸ்கே அணிக்கு பெரிய பலமாக மாறியுள்ளது. சிமர்ஜீத் தொடக்கத்திலேயே பட்லர், ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். இந்த அழுத்தத்தில் இருந்து ராஜஸ்தான் அணி கடைசி வரை மீள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணி ஏன் தோற்றது? அது மட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணி இதுவரை பேட்டர்களுக்கு சாதமான ஆடுகளத்தில் விளையாடிவிட்டு, சேப்பாக்கத்தில் மந்தமான ஆடுகளத்தில் விளையாடும் போது ஸ்கோர் செய்யத் திணறியதும் தோல்விக்கான காரணம். 141 ரன்கள் சேர்த்து அதை ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்வது கடினமானது, சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி? இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டில் ராஜஸ்தான் அணியை விட உயர்ந்து 0.528 என வலுவாக இருக்கிறது. சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றால், 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும். ஏற்கெனவே வலுவான நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணி இருப்பதால், 16 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ், டெல்லி, லக்ளெ அணிகள் போட்டியிட்டாலும் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றில் 3வது அல்லது 4வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபியுடன் தோல்வி அடைந்து, ஆர்சிபி அணி இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்றாலும், 14 புள்ளிகளுடன் இரு அணிகளும் கடைசி இடத்துக்கு போட்டியிடும். ஆனால், நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே வலுவாக இருப்பதால், குறைந்தபட்சம் 4வது இடம் கிடைக்க வாய்ப்புண்டு. பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தானுக்கு 2வது இடம் கிடைக்குமா? ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்தாலும், ராஜஸ்தான் அணி தனது 2வது இடத்திலிருந்து கீழே இறங்கவில்லை, நிகர ரன்ரேட்டும் பெரிதாக குறையாமல் 0.349 என நீடிக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் வென்றாலும், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம் ராஜஸ்தானுக்கு சவாலாக இருக்கும். இன்னும் ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால்கூட 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும். அதேநேரம், சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 2 லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால், ராஜஸ்தான் 2வது இடத்தைப் பிடிக்கும். சன்ரைசர்ஸ் அணி கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்று, ராஜஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்றால், நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் தீர்மானிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/cjq581v213go

யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்

4 days 3 hours ago
சினிமா இன்று தேக்கத்தில் இருக்கிறது என்பதை தொடர்ந்து அத்தகைய படங்களைப் பார்த்து வந்திருப்போர் அறிவர். இதன் அரசியல், பொருளியல், கலாச்சாரப் பரிமாணத்தை அதில் ஈடுபட்டிருப்போர்தான் அனுபவங்களுடன் பேசமுடியும். என்றாலும், அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க இரு படங்கள் வந்திருக்கின்றன. மதிசுதாவின் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' அப்படங்கள். 2009 மே மாதத்தின் இறுதிப் போர்காலத்தின் அனுபங்களை மதிசுதாவின் படம் பேச, ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' 2009குப் பின் துவங்கி இன்றுவரையிலுமான ஈழத்து வாழ்வின் இருண்ட நினைவுகளைப் பேசுகிறது. ஈழத்தின் முதல் நான்லீனியிர் வெகுஜனப் படம் என 'ஊழி'யைக் குறிப்பிடலாம். ரஞ்ஜித்தின் முதல் படமான 'சினம்கொள்' மிகமிக நேரடியான கதைசொல்லல் கொண்ட படம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஈழத்தில் 'நிலம், கல்வி, காதலுறவு' போன்ற பிரச்சினைகள் குறித்த மிகுந்த இருண்ட சித்திரங்கள் மூன்று சமாந்தரக் கதைகளாக படத்தில் விரிகிறது. இருண்ட காலத்திலும் துளிர்விடும் 'நம்பிக்கை' என்பதை நான்காவது பிரச்சினையாக அல்லது கதையாக எடுத்துக் கொள்ளும் 'ஊழி' அதனிலும் இருண்மையே விரவியிருக்கிறது என்பதையே சுட்டுகிறது. துயர இசை படமெங்கும் ஒலிக்கும் ஊழி ஈழத்தின் இருண்ட சமகாலம் குறித்த முகாரி ராகம். சினிமாவைப் பிரச்சாரமாக அல்லாமல், கலையாக அணுகும் அக்கறையுள்ள ஒருவர் ரஞ்ஜித் ஜோசப் என்பதை ஊழி மெய்ப்பிக்கிறது. நேர்மறை எதிர்மறை சமநிலை அலசல் விமர்சனத்திற்கு இது தருணம் அல்ல. பலரும் படத்தைப் பார்த்தபின் அதனைச் செய்யலாம் எனக் கருதுகிறேன். யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran

"தாய்" [12 மே 2024]

4 days 4 hours ago
"தாய்" [12 மே 2024] "அன்பின் இலக்கணம் அன்னை ஆகி அகிலத்தில் அவளே உயர்வு ஆவாள்! அல்லல் பொறுக்கும் தியாகி ஆகி அனைவரையும் அணைக்கும் ஆண்டவன் ஆவாள்!" "பாதிக்கும் இடர்களை தானே தாங்கி பாரம் என்று பிள்ளைகளை எண்ணாள்! குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள் குழவி கொஞ்சுகையில் துன்பம் மறப்பாள்!" "நடைதவறி வீழ்கையில் துணை நின்று நமதவறுகள் மன்னித்து ஒன்று சேர்ப்பாள்! கடையன் என்று பிறர் சொலினும் கைதடுத்துக் காத்து துணிவு ஏற்றுவாள்!" "வானும் கடல்மலையும் கானகமும் விந்தையில்லை வான்நிலாவும் மலரும் மழைவெயிலும் அதிசயமில்லை வானவன் படைத்ததிலே எதுவுமே புதுமையில்லை தாயைப் படைத்தானே அதற்கு இணையேயில்லை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

"தாய்" [12 மே 2024]

4 days 4 hours ago
"தாய்" [12 மே 2024]
 
 
"அன்பின் இலக்கணம் அன்னை ஆகி
அகிலத்தில் அவளே உயர்வு ஆவாள்!
அல்லல் பொறுக்கும் தியாகி ஆகி
அனைவரையும் அணைக்கும் ஆண்டவன் ஆவாள்!"
 
"பாதிக்கும் இடர்களை தானே தாங்கி
பாரம் என்று பிள்ளைகளை எண்ணாள்!
குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள்
குழவி கொஞ்சுகையில் துன்பம் மறப்பாள்!"
 
"நடைதவறி வீழ்கையில் துணை நின்று
நமதவறுகள் மன்னித்து ஒன்று சேர்ப்பாள்!
கடையன் என்று பிறர் சொலினும்
கைதடுத்துக் காத்து துணிவு ஏற்றுவாள்!"
 
"வானும் கடல்மலையும் கானகமும் விந்தையில்லை
வான்நிலாவும் மலரும் மழைவெயிலும் அதிசயமில்லை
வானவன் படைத்ததிலே எதுவுமே புதுமையில்லை
தாயைப் படைத்தானே அதற்கு இணையேயில்லை!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
321208633_1211161826420729_7157779593602397621_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=D1sVKY7aOwIQ7kNvgF4s2Uj&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAzmXH5TUC5B6qzuUEEJ2cE5cddg3SoLhAym0sxdnTplw&oe=6646C526 321026529_1633224933746870_4286717943230040333_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=OvVRx635Rj8Q7kNvgEGHxVf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAgTRSO-BGSWfWf0XNKnkPCNmBYSZv6aLvAhBrQDDE27w&oe=6646AE34 

அன்னையர் நாள் / Mother's Day [12 மே 2024 / 12 th May 2024]

4 days 4 hours ago
அன்னையர் நாள் / Mother's Day [12 மே 2024 / 12 th May 2024] அன்னையர் நாள் விடுமுறை தினம், அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் [Anna Jarvis] அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் [Grafton, West Virginia] உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. உதாரணமாக ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, இத்தாலி, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள் மே மாதத்திலும், அயர்லாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவை மார்ச் மாதத்திலும் கொண்டாடுகின்றன. சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந் ஜார்விஸ் [Mrs. Ann Marie Reeves Jarvis] என்ற பெண்ணின் மகள் அனா ஜார்விஸ் [Anna Jarvis] முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். அதன் பின், அனா ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். தம் எண்ணத்தை, அனா ஜார்விஸ் பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது. இங்கிலாந்தை பொறுத்த வரையில் அங்கு பழங்காலத்தில் தாய்க் கடவுளுக்கு வசந்த விழா கொண்டாடப் பெற்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அங்கு “லென்ற்” [Lent] என்ற வழிபாடு இருந்ததாகவும், “லென்ற்” என்ற வார்த்தையின் அர்த்தம், இளவேனிற் காலத்தின் முதல் நாள் என்றும், பனியும் குளிரும் முடிய, பயிர் போடும் காலம் இது என்றும், அது பின் சமயமயப்பட்டது என்றும் கூறுகின்றனர். அதனை தொடர்ந்து, 16ம் நூற்றாண்டில் தாய்மை ஞாயிறு ["MOTHERING SUNDAY"] என்ற நாள் முதன் முதலாக அனுசரிக்கப் பட்டதாகவும், அதுவே பின்னாளில் அமெரிக்காவின் தாக்கத்தால் இங்கிலாந்திலும் அன்னையர் நாள் ["Mother's Day"] என மாறியது என்கின்றனர். Mother's Day is a celebration honoring the mother of the family, as well as motherhood, maternal bonds, and the influence of mothers in society. It is celebrated on various days in many parts of the world, most commonly in the months of March or May, For example, the most of countries such as Canada, Sri Lanka, India, Germany, Italy, Japan, New Zealand, Ausralia, America etc celebrates on May and few countries such as United Kingdom & Ireland on March. The origin of Mother’s Day as we know it took place in the early 1900s. A woman named Anna Jarvis started a campaign for an official holiday honoring mothers in 1905, the year her own mother died. The first larger-scale celebration of the holiday was in 1908, when Jarvis held a public memorial for her mother in her hometown of Grafton, West Virginia. Over the next few years, Jarvis pushed to have the holiday officially recognized, and it was celebrated increasingly in more and more states around the U.S. Finally, in 1914, President Woodrow Wilson signed a proclamation making Mother’s Day an official holiday, to take place the second Sunday of May. In the UK, actually they don’t have “Mother’s Day”. Although it’s popularly referred to as Mother’s Day, due to American influence, the correct term is “Mothering Sunday”, which began as a religious festival in the Middle Ages and is many hundreds of years older than the purely secular and commercial Mother’s Day, celebrated in the USA and some other countries. Historians believe it evolved from the 16th-century Christian practice of visiting mothers in the season of Lent. "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா - என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா.... நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா - என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" "என் உழைப்பும் உயர்வும் உன்கனவேயம்மா... உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பேயம்மா.... நான் மீண்டும் வேண்டுவது உன் கருவறையம்மா" "வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே பாரோடி பறந்தாலும் நான் உன் சிறகே அம்மா - என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயம்மா" "தாயின் காலடியும் ஒரு ஆலயமே.... அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே - நான் கண்ட முதல் வைத்தியரும் நீயம்மா" "மண்ணும் பெண்ணும் என்சுவாசமே அம்மா.... தாய்மை பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா - என் அழுகையில் பதறி, சிரிக்கையில் மகிழ்ந்தவளே" "நான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே என்றும் நான் உன் மழலை அம்மா.... தெய்வம் உனக்கு தந்த குழந்தை அம்மா" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்) "In my heart, The god I pray is you Mother is only my prime god" "My Sincerity & honesty- is you The life, I am living- is yours You become flowered creeper with my pregnant" "Again I need one more time- your womb My work & advancement - is your dream your smelling flower- is my life" "Even shoot from roots- wood apple is wood apple Even child fly anywhere- it is your feather My light house for my life- is you " "Even scent from your foot step- is a temple which is a peace of mind for me You are my first doctor " "Earth & woman are breath for life Chastity is a cultured behaviour of you You felt fear on my cry & felt happy on my laugh" "I call you as "Amma" - is your blessing I am Always your - hailing toddler Your god gifted child - is me " (Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna)

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 09 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"

4 days 4 hours ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 09 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING" பண்டைய பதிவுகளில் இருந்தும் இன்றைய நடை முறைகளில் இருந்தும் ஒரு அறிவு பூர்வ ஊகத்தின் அடிப்படையில் உணவு வரலாற்றாளர்கள், எப்படி பாதுகாப்பான உணவு என்பதை முதலில் ஆதி மனிதன் கண்டுபிடித்தான் என்பதற்கு விடை தேடினர். ஆதி மனிதர்கள் மற்ற விலங்குகளை கவனித்தல் மூலம் உணவுகளை தேர்ந்து எடுத்தார்கள். உதாரணமாக, மற்ற விலங்குகள் எதை உட்கொள்கின்றன, எதை தவிர்க்கின்றன என்பதை கவனித்து பின்பற்றினார்கள். மேலும் ஒரு உணவு அது உட்கொண்ட பின் நோயை உண்டாக்கினால், அதை மற்றவர்களும் தவிர்த்தார்கள். இப்படியான சோதனை மற்றும் பிழை [trial and error] அடிப்படையிலும் பாதுகாப்பான உணவுகள் தேர்ந்து எடுக்கப்பட்டன என்கின்றனர். எனினும் தொழில் நுட்ப அறிவின் முன்னேற்றம் இறுதியாக - திரும்பவும் சோதனை மற்றும் பிழை அடிப்படையில் - தீங்கு விளைவிக்கக் கூடிய உணவை நுகரக் கூடிய உணவாக மாற்ற உதவியது. உதாரணமாக, இறைச்சி பதப்படுத்தப்பட்டது, கொட்டைகள் கொதிக்கவைக்கப்பட்டன, காய்கறிகள் உரிக்கப்பட்டன. மேலும் விலங்குகளை வீட்டு மிருகமாக மாற்ற முன்பு சாத்தியமான காய்கறிகளை விலங்குகளுக்கு முதலில் கொடுத்து பரிசோதனை செய்திருக்க அவர்களுக்கு வாய்ப்பு எதுவும் இருந்திருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டு வளர்ப்பிற்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட முன்னைய காட்டு தாவரங்களான கோதுமை, பார்லி, அரிசி, தினை, கம்பு, உருளைக்கிளங்கு போன்ற முதன்மையான தாவரங்கள், மனிதன் உட்கொள்ளும் முன் சமைத்தல் அவசியம் ஆகிறது. ஏனென்றால் அவை சமைக்கப்படாத நிலையில் நச்சுத் தன்மையை அல்லது சீரணிக்க முடியாத பொருள்களை அல்லது எதிர் - ஊட்டப் பொருள்களை [antinutrients] கொண்டிருப்பதாகும். ஆனால், சமைத்த பின் அவை செயலிழக்க செய்யப்படுகின்றன அல்லது மட்டுப் படுத்தப் படுகின்றன அல்லது குறைக்கப் படுகின்றன. ஆகவே நெருப்பை சமையலுக்கு பாவிக்கத் தொடங்கியது தான் இப்படியான தாவரங்களை வீட்டுப் பாவனைக்கு மாற்ற தூண்டியது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இதுவே மனித பண்பாட்டு முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணியாகும். அத்துடன் இது மேம்படுத்தப் பட்ட ஆரோக்கியத்தையும் கொடுத்தது. உணவு வரலாற்றாளர்கள் திறந்த வெளி நெருப்பில் உணவை வாட்டுதல் அல்லது சுடுதல் முதலில் தற்செயலாக ஏற்பட்டது என - நாம் முன்பு குறிப்பிட்டவாறு - கருதுகிறார்கள். என்றாலும் கொதித்தல் அப்படி தற்செயலாக ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மிகவும் கவனமாக இதற்காக வடிவமைக் கப்பட்ட கருவிகள் மூலம் அடைந்த ஒரு செய்முறையாகும். மனிதகுலத்தின் நாகரீகத்தின் வரலாற்றுக்கு முந்தைய கட்டத்திலிருந்தே, ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல மனதைக் கட்டியெழுப்ப உணவின் இன்றியமையாத தன்மையை மனிதன் உணர்ந்தான். நன்கு உணவளிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும், வலிமையானவர்களாகவும் இருப்பதையும், உணவு இல்லாதவர்களை விட அவர்கள் அதிக வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக இருப்பதையும் அவனால் கவனிக்க முடிந்தது . என்றாலும், கடந்த 150 ஆண்டுகளில் மட்டுமே நமது அன்றாட வாழ்க்கையில் உணவு வகிக்கும் முக்கிய பங்கை புறநிலையாகவும் அறிவியல் ரீதியாகவும் புரிந்து கொள்ள எம்மால் முடிந்தது. மனித உடலின் வளர்ச்சியிலும், உடலை ஆற்றலுடன் வைத்திருப்பதிலும் உணவின் பங்கை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்த சமீபத்திய அறிவியல் ஆய்வுகளால் மட்டுமே. உண்மையில் மனிதர்கள் உட்பட எல்லா உயிர் இனங்களின் உணவுத் தேவையை இயற்கை நன்கு கவனித்துக் கொண்டது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற தாவரங்களை வளர்க்கக்கூடிய விவசாய நிலத்தை அது எங்களுக்கு வழங்கியுள்ளது. அது கடலை மீன்களாலும், நிலங்களை இறைச்சி, பால் மற்றும் பிற உணவுப் பொருட்களையும் தரக்கூடிய விலங்குகளாலும் நிரப்பினது. உணவுப் பொருட்களைப் பயிரிடுவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் வழிகளைக் கண்டறியும் திறனை அது மனிதனுக்கு வழங்கியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதிகால மனிதன், காலப்போக்கில், வேட்டையாடுவதில் இருந்து விவசாயத்திற்கு மாறினான், இது நாகரீக வாழ்க்கையின் தொடக்க புள்ளியாக அமைந்தது. ஒருவகையில் மனிதன் ஆறாவது அறிவைப் பெற்றுள்ளான். அனைத்து உணவுப் பொருட்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவை. ஆடையில்லாமல் மனிதன் பாதி என்று தமிழ்ப் பழமொழி உண்டு; உணவு இல்லாமல் மனிதன் உயிரற்றவன் என்று சொல்லலாம். ஓராண்டு அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பருவமழை பொய்த்தால், விவசாய விளைபொருட்கள் கிடைக்காமல், கடும் வறட்சியால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இது சமூகத்தின் ஒழுக்கத்தைக் கெடுக்கும். அனுதாபம், அன்பு, பரோபகாரம் போன்ற உயர்ந்த குணங்கள் அனைத்தும் விலகும். சமூகம் தன் கலாச்சாரத்தை இழந்து, வாழ்க்கை தரம் சீரழியும். சமுதாயத்தின் இந்த முழு அமைப்பும் உணவை மையமாகக் கொண்டது. மனிதன் உணவுக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். எனவே நம் தமிழர்கள் பசியை ஒரு நோய் என்று வர்ணித்தனர். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். உடை, உறைவிடம் இல்லாமல் கூட சமூகம் இருக்க முடியும் ஆனால் உணவு இல்லாமல் இருக்க முடியாது. ஆதி மனிதனின் பல போராட்டங்கள் உணவை மையப்படுத்தியே இருந்தன. "ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும் என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது." இது வயிறுக்கு மனம் சொல்லுகிற செய்யுள்!!! துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே, கிடையாதபோது, ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; கிடைத்தபோது இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; ஆதலினால் உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது என்கிறார் ஔவையார். இனி உலகிற்கு முதல் முதல் நாகரிகம் தந்த பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் பற்றிப் பார்ப்போம். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 10 தொடரும் FOOD HABITS OF TAMILS / PART 09 "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING" How did the first peoples know which foods were "safe" to eat? Food historians make educated guesses based on ancient records and modern practices. Based on this evidence, they presume foods were selected or rejected based on observation (they were avoided by the other animals in the area) in conjunction with basic trial and error (if it made the taster sick, it was unlikely others partook). Advances in technology eventually resulted in the ability (again, probably a matter of trial and error) to modify potentially harmful foods into consumable staples. Meat was preserved; nuts were boiled, vegetables were peeled. Before the domestication of animals, it is unlikely that potential vegetable food would have been given to any other animal species first, to see what effect these would have (perhaps one of the earliest functions of the dog, besides scavenging, was an 'experimental' animal to test 'new' foods -- a procedure known to have been practiced in some recent African communities). All of the major domesticated plant foods, such as wheat, barley, rice, millet, rye, and potatoes, require cooking before they are suitable for human consumption. In fact, in a raw state, many plants contain toxic or indigestible substances or antinutrients. But after cooking, many of these undesirable substances are deactivated, neutralized, reduced, or released; Thus, the use of fire to cook plant foods doubtless encouraged the domestication of these foods and, thus, was a vitally important factor in human cultural advancement. Also Improved health must certainly have been one result of the discovery of cooking, Food historians generally agree the first cooking method was roasting over an open fire. Discovery is attributed to happy accident as explained earlier .Boiling was no accident. It was a carefully considered process achieved with tools crafted specifically for the purpose. From the very prehistoric stage of the civilization of mankind man has realized the indispensability of food for the building up of healthy body and sound mind. He is able to notice that people who are well fed live longer and are stronger and they are able to do more work than those who do not have enough to eat. Yet it is only during the last 150 years that we are able to understand objectively and scientifically the important role that food plays in our daily life. Thanks to the recent scientific investigations that we are able to know clearly, the place of food in the growth of human body, as well as in ending the body with energy. Nature has taken good care of food needs. She has given us farm land where vegetables, fruits, grains and other plants can be grown. She has filled the ocean with fish and the lands with animals that supply meat, milk and other food products. She has blessed us with the ability to find ways to cultivate and produce food products. Primitive man, in course of time, turned from hunting to farming and this marked the starting point of civilized life. In a way man is endowed with sixth knowledge. All the food products are necessary for human life. There is a Tamil saying that man is half without dress; we may say man is lifeless without food. If the monsoon fails for just one year or two three years, then there will be no agricultural products and consequently people will suffer by severe drought. This will spoil the morality of the society. All the high qualities like sympathy, love and philanthropy will be dislocated. The society will lose its culture and standard of life will be degraded. This whole structure of the society centered on food. Man is ready to give anything for the sake of food. So our Tamils described hunger as a disease. The food, dress and shelter are the basic requirements for man. Society can exist even without dress and shelter but never without food. Many of the struggles of the primitive man were centered on food. "If I ask you to give up a day's food, You won't If I ask you to eat two day's food, You won't Never will you understand my torment, It's hard to live with you, my dreaded appetite" [Avvaiyar's Good conduct (Nalvazhi)] O my stomach, You will not know my sorrow even for a day; So living with you is very difficult for me says poet Auvaiyar. Which actually point out the importance of food & its habits. Now let's look at the food habits of the ancient Sumerians who gave the first civilization to the world Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 10 WILL FOLLOW

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 09 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"

4 days 4 hours ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 09 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"
 
 
பண்டைய பதிவுகளில் இருந்தும் இன்றைய நடை முறைகளில் இருந்தும் ஒரு அறிவு பூர்வ ஊகத்தின் அடிப்படையில் உணவு வரலாற்றாளர்கள், எப்படி பாதுகாப்பான உணவு என்பதை முதலில் ஆதி மனிதன் கண்டுபிடித்தான் என்பதற்கு விடை தேடினர். ஆதி மனிதர்கள் மற்ற விலங்குகளை கவனித்தல் மூலம் உணவுகளை தேர்ந்து எடுத்தார்கள். உதாரணமாக, மற்ற விலங்குகள் எதை உட்கொள்கின்றன, எதை தவிர்க்கின்றன என்பதை கவனித்து பின்பற்றினார்கள். மேலும் ஒரு உணவு அது உட்கொண்ட பின் நோயை உண்டாக்கினால், அதை மற்றவர்களும் தவிர்த்தார்கள். இப்படியான சோதனை மற்றும் பிழை [trial and error] அடிப்படையிலும் பாதுகாப்பான உணவுகள் தேர்ந்து எடுக்கப்பட்டன என்கின்றனர். எனினும் தொழில் நுட்ப அறிவின் முன்னேற்றம் இறுதியாக - திரும்பவும் சோதனை மற்றும் பிழை அடிப்படையில் - தீங்கு விளைவிக்கக் கூடிய உணவை நுகரக் கூடிய உணவாக மாற்ற உதவியது. உதாரணமாக, இறைச்சி பதப்படுத்தப்பட்டது, கொட்டைகள் கொதிக்கவைக்கப்பட்டன, காய்கறிகள் உரிக்கப்பட்டன. மேலும் விலங்குகளை வீட்டு மிருகமாக மாற்ற முன்பு சாத்தியமான காய்கறிகளை விலங்குகளுக்கு முதலில் கொடுத்து பரிசோதனை செய்திருக்க அவர்களுக்கு வாய்ப்பு எதுவும் இருந்திருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
வீட்டு வளர்ப்பிற்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட முன்னைய காட்டு தாவரங்களான கோதுமை, பார்லி, அரிசி, தினை, கம்பு, உருளைக்கிளங்கு போன்ற முதன்மையான தாவரங்கள், மனிதன் உட்கொள்ளும் முன் சமைத்தல் அவசியம் ஆகிறது. ஏனென்றால் அவை சமைக்கப்படாத நிலையில் நச்சுத் தன்மையை அல்லது சீரணிக்க முடியாத பொருள்களை அல்லது எதிர் - ஊட்டப் பொருள்களை [antinutrients] கொண்டிருப்பதாகும். ஆனால், சமைத்த பின் அவை செயலிழக்க செய்யப்படுகின்றன அல்லது மட்டுப் படுத்தப் படுகின்றன அல்லது குறைக்கப் படுகின்றன. ஆகவே நெருப்பை சமையலுக்கு பாவிக்கத் தொடங்கியது தான் இப்படியான தாவரங்களை வீட்டுப் பாவனைக்கு மாற்ற தூண்டியது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இதுவே மனித பண்பாட்டு முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணியாகும். அத்துடன் இது மேம்படுத்தப் பட்ட ஆரோக்கியத்தையும் கொடுத்தது. உணவு வரலாற்றாளர்கள் திறந்த வெளி நெருப்பில் உணவை வாட்டுதல் அல்லது சுடுதல் முதலில் தற்செயலாக ஏற்பட்டது என - நாம் முன்பு குறிப்பிட்டவாறு - கருதுகிறார்கள். என்றாலும் கொதித்தல் அப்படி தற்செயலாக ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மிகவும் கவனமாக இதற்காக வடிவமைக் கப்பட்ட கருவிகள் மூலம் அடைந்த ஒரு செய்முறையாகும்.
 
மனிதகுலத்தின் நாகரீகத்தின் வரலாற்றுக்கு முந்தைய கட்டத்திலிருந்தே, ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல மனதைக் கட்டியெழுப்ப உணவின் இன்றியமையாத தன்மையை மனிதன் உணர்ந்தான். நன்கு உணவளிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும், வலிமையானவர்களாகவும் இருப்பதையும், உணவு இல்லாதவர்களை விட அவர்கள் அதிக வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக இருப்பதையும் அவனால் கவனிக்க முடிந்தது . என்றாலும், கடந்த 150 ஆண்டுகளில் மட்டுமே நமது அன்றாட வாழ்க்கையில் உணவு வகிக்கும் முக்கிய பங்கை புறநிலையாகவும் அறிவியல் ரீதியாகவும் புரிந்து கொள்ள எம்மால் முடிந்தது. மனித உடலின் வளர்ச்சியிலும், உடலை ஆற்றலுடன் வைத்திருப்பதிலும் உணவின் பங்கை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்த சமீபத்திய அறிவியல் ஆய்வுகளால் மட்டுமே.
 
உண்மையில் மனிதர்கள் உட்பட எல்லா உயிர் இனங்களின் உணவுத் தேவையை இயற்கை நன்கு கவனித்துக் கொண்டது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற தாவரங்களை வளர்க்கக்கூடிய விவசாய நிலத்தை அது எங்களுக்கு வழங்கியுள்ளது. அது கடலை மீன்களாலும், நிலங்களை இறைச்சி, பால் மற்றும் பிற உணவுப் பொருட்களையும் தரக்கூடிய விலங்குகளாலும் நிரப்பினது. உணவுப் பொருட்களைப் பயிரிடுவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் வழிகளைக் கண்டறியும் திறனை அது மனிதனுக்கு வழங்கியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதிகால மனிதன், காலப்போக்கில், வேட்டையாடுவதில் இருந்து விவசாயத்திற்கு மாறினான், இது நாகரீக வாழ்க்கையின் தொடக்க புள்ளியாக அமைந்தது. ஒருவகையில் மனிதன் ஆறாவது அறிவைப் பெற்றுள்ளான்.
 
அனைத்து உணவுப் பொருட்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவை. ஆடையில்லாமல் மனிதன் பாதி என்று தமிழ்ப் பழமொழி உண்டு; உணவு இல்லாமல் மனிதன் உயிரற்றவன் என்று சொல்லலாம். ஓராண்டு அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பருவமழை பொய்த்தால், விவசாய விளைபொருட்கள் கிடைக்காமல், கடும் வறட்சியால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இது சமூகத்தின் ஒழுக்கத்தைக் கெடுக்கும். அனுதாபம், அன்பு, பரோபகாரம் போன்ற உயர்ந்த குணங்கள் அனைத்தும் விலகும். சமூகம் தன் கலாச்சாரத்தை இழந்து, வாழ்க்கை தரம் சீரழியும். சமுதாயத்தின் இந்த முழு அமைப்பும் உணவை மையமாகக் கொண்டது. மனிதன் உணவுக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். எனவே நம் தமிழர்கள் பசியை ஒரு நோய் என்று வர்ணித்தனர். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். உடை, உறைவிடம் இல்லாமல் கூட சமூகம் இருக்க முடியும் ஆனால் உணவு இல்லாமல் இருக்க முடியாது. ஆதி மனிதனின் பல போராட்டங்கள் உணவை மையப்படுத்தியே இருந்தன.
 
"ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது."
 
இது வயிறுக்கு மனம் சொல்லுகிற செய்யுள்!!! துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே, கிடையாதபோது, ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; கிடைத்தபோது இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; ஆதலினால் உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது என்கிறார் ஔவையார். இனி உலகிற்கு முதல் முதல் நாகரிகம் தந்த பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் பற்றிப் பார்ப்போம்.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 10 தொடரும்
 
 
FOOD HABITS OF TAMILS / PART 09 "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING"
 
 
How did the first peoples know which foods were "safe" to eat? Food historians make educated guesses based on ancient records and modern practices. Based on this evidence, they presume foods were selected or rejected based on observation (they were avoided by the other animals in the area) in conjunction with basic trial and error (if it made the taster sick, it was unlikely others partook). Advances in technology eventually resulted in the ability (again, probably a matter of trial and error) to modify potentially harmful foods into consumable staples. Meat was preserved; nuts were boiled, vegetables were peeled. Before the domestication of animals, it is unlikely that potential vegetable food would have been given to any other animal species first, to see what effect these would have (perhaps one of the earliest functions of the dog, besides scavenging, was an 'experimental' animal to test 'new' foods -- a procedure known to have been practiced in some recent African communities).
 
All of the major domesticated plant foods, such as wheat, barley, rice, millet, rye, and potatoes, require cooking before they are suitable for human consumption. In fact, in a raw state, many plants contain toxic or indigestible substances or antinutrients. But after cooking, many of these undesirable substances are deactivated, neutralized, reduced, or released; Thus, the use of fire to cook plant foods doubtless encouraged the domestication of these foods and, thus, was a vitally important factor in human cultural advancement. Also Improved health must certainly have been one result of the discovery of cooking, Food historians generally agree the first cooking method was roasting over an open fire. Discovery is attributed to happy accident as explained earlier .Boiling was no accident. It was a carefully considered process achieved with tools crafted specifically for the purpose.
From the very prehistoric stage of the civilization of mankind man has realized the indispensability of food for the building up of healthy body and sound mind. He is able to notice that people who are well fed live longer and are stronger and they are able to do more work than those who do not have enough to eat. Yet it is only during the last 150 years that we are able to understand objectively and scientifically the important role that food plays in our daily life. Thanks to the recent scientific investigations that we are able to know clearly, the place of food in the growth of human body, as well as in ending the body with energy.
 
Nature has taken good care of food needs. She has given us farm land where vegetables, fruits, grains and other plants can be grown. She has filled the ocean with fish and the lands with animals that supply meat, milk and other food products. She has blessed us with the ability to find ways to cultivate and produce food products. Primitive man, in course of time, turned from hunting to farming and this marked the starting point of civilized life. In a way man is endowed with sixth knowledge.
 
All the food products are necessary for human life. There is a Tamil saying that man is half without dress; we may say man is lifeless without food. If the monsoon fails for just one year or two three years, then there will be no agricultural products and consequently people will suffer by severe drought. This will spoil the morality of the society. All the high qualities like sympathy, love and philanthropy will be dislocated. The society will lose its culture and standard of life will be degraded. This whole structure of the society centered on food. Man is ready to give anything for the sake of food. So our Tamils described hunger as a disease. The food, dress and shelter are the basic requirements for man. Society can exist even without dress and shelter but never without food. Many of the struggles of the primitive man were centered on food.
 
"If I ask you to give up a day's food, You won't
If I ask you to eat two day's food, You won't
Never will you understand my torment,
It's hard to live with you, my dreaded appetite"
[Avvaiyar's Good conduct (Nalvazhi)]
 
O my stomach, You will not know my sorrow even for a day; So living with you is very difficult for me says poet Auvaiyar. Which actually point out the importance of food & its habits. Now let's look at the food habits of the ancient Sumerians who gave the first civilization to the world
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 10 WILL FOLLOW
420190979_10224572180754765_8501166387668904164_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rWrF54V4MvUQ7kNvgHbrcr2&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBxPLtYKbqRO34vHi8R5HHw_Y5mVu9_zecTobT6h72STA&oe=6646A714 420199762_10224572180234752_7927322634131712045_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_ygUshNUazAQ7kNvgHObJMT&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCZvrtdOTTMdprSaT4djNCB3BBK6Q01XP0EchPoym0Vmg&oe=6646B8B0