நாவூற வாயூற

சமையலுக்கு எந்த பாத்திரம், எந்த அடுப்பு சிறந்தது? மைக்ரோவேவ் அவன், ஏர் பிரையர் தீங்கு தருமா?

3 days 9 hours ago
சமையலுக்கு எது சிறந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர்
  • பதவி, பிபிசி மராத்தி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

'கேஸ் அடுப்பில் சமைத்த சாம்பார், விறகடுப்பில் சமைத்த போது இருந்த ருசியில் இல்லை, அந்த அடுப்பில் சமைத்த உணவே சிறந்தது, குக்கரில் சமைத்த சாதமும், சட்டியில் சமைத்த சாதமும் முற்றிலும் வேறு.. மைக்ரோவேவில் சமைத்த உணவில் ருசியே இல்லை. சாரம் இழக்கும் வகையில் சமைப்பது நல்லதல்ல. இப்படி சமைப்பது நல்லது, அப்படி சமைப்பது நல்லது.." இதுபோன்ற வாக்கியங்களை அடிக்கடி நம் வீடுகளில் கேட்க முடியும். பல வீடுகளில், உணவை சமைப்பது, சூடுபடுத்துவது, கொதிக்க வைப்பது என அனைத்திலும் பல விதிகள் பின்பற்றப்படுகின்றன.

பெரும்பாலும் உணவு சமைப்பதில், பாரம்பரிய முறைகள் தான் சிறந்தது என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. மைக்ரோவேவ் அல்லது ஏர் ஃப்ரையர் போன்ற நவீன மின் சாதனங்கள் உணவின் ஊட்டச்சத்துக்களை அழித்து விடும் என்ற பலரும் நம்புகின்றனர். ஆனால் இந்த ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) வழங்கிய புதிய வழிகாட்டுதல்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், சமையல் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் பற்றிய நம்முடைய நம்பிக்கைகளை புரட்டிப் போடக் கூடியவை,

இந்திய ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் எவ்வளவு உணவு தேவை, எவ்வளவு ஊட்டச்சத்துகள் தேவை, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உணவில் என்ன இருக்க வேண்டும் மற்றும் சமையல் உபகரணங்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 'இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

சமையல் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் பற்றி இந்த அறிக்கை விவரிக்கும் தகவல்களை முதலில் பார்ப்போம்…

எந்த பாத்திரத்தில் சமைப்பது சிறந்தது?

எந்த வகையான பாத்திரத்தில் சமைப்பது? நாம் பயன்படுத்தும் பாத்திரம் நல்லது தானா? அதை எவ்வாறு பராமரிப்பது, அதில் ஏதேனும் பாதகமான ரசாயன எதிர்வினை இருக்கிறதா? சமைக்கும் போது, இந்த பாத்திரங்கள் உணவின் ஊட்டச்சத்துகளை அழித்து விடுமா? பாத்திரங்களில் ரசாயன பூசப்பட்டிருந்தால் அவை உணவோடு கலந்து விடுமா? - இதுபோன்று பல நேரங்களில் சந்தேகம் வரும். சில சமயங்களில் பயமும் இருக்கும்.

`ஐசிஎம்ஆர்’ மற்றும் `என்ஐஎன்’ வழங்கிய இந்த புதிய வழிகாட்டுதல்களில், மண் பாத்திரங்கள், உலோகம், துருப்பிடிக்காத எஃகு, நான்ஸ்டிக் மற்றும் கிரானைட் கற்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

மண் பாண்டங்கள் சமையலுக்கு பாதுகாப்பானவை. மண் பாண்டங்களில் சமைக்கும் போது குறைந்த எண்ணெயில் சமைக்க முடியும். மண் பாத்திரங்களில் வெப்பம் ஒரே அளவில் பரவும், உணவு பொருளில் ஒரே மாதிரி வெப்பம் ஊடுருவுவதால், ஊட்டச்சத்து மதிப்புகள் பாதுகாக்கப்படும் என்று அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊறுகாய், சட்னி, சாம்பார், சாஸ் போன்றவற்றை அலுமினியம், இரும்பு, செம்பு பாத்திரங்களில் வைக்கக் கூடாது. ஸ்டீல் கிண்ணத்தில் இந்த பொருட்களுக்கு எந்தவித பாதகமான விளைவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • வழிகாட்டுதல்களை உருவாக்கிய நிபுணர்கள் டெஃப்லான் பூச்சு கொண்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களை (pan) 170 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடாக்கினால் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
  • ஸ்டவ் மீது நீண்ட நேரம் காலியாக வைத்து சூடாக்கினாலும் ஆபத்தான விளைவு ஏற்படும். காலியாக வைத்து சூடுபடுத்தும் போது, நான்-ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் டெஃப்லான் லேயர், நச்சுப் புகைகளை உருவாக்கும்.
  • நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது, எப்படி சுத்தம் செய்வது என்னும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த சமையல் பாத்திரங்களில் நான்ஸ்டிக் பூச்சு சேதமடைந்து விட்டால், அதைப் பயன்படுத்த கூடாது என்றும் அறிக்கை கூறுகிறது.
 

`ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இயக்குநர் டாக்டர். ஹேமலதா ஆர் கூறுகையில் , “மக்கள் `ஒட்டவே ஒட்டாத’ நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களை வாங்க விரும்புகிறார்கள், ஏனெனில் அது பிரபலமாக உள்ளது. எளிதில் கிடைக்கிறது. ஆனால் அதிக சூடேறும் போது, நான் - ஸ்டிக் பூச்சுகளில் உள்ள ரசாயனங்கள் வெளியேறி, நம் உணவில் கலந்து, நம் உடலுக்குள் செல்கின்றன. இது ஆபத்தானது. எனவே, நான்-ஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அப்படி பயன்படுத்தினாலும், அதன் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ஒரு சிறப்பு முறை உள்ளது. அதற்கேற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும். கீறல்கள் விழுந்த பழைய நான்-ஸ்டிக் பாத்திரங்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

`கிரானைட் கல்’ சமையல் பாத்திரங்கள் (Granite stoneware) இப்போது குறைந்த எடையிலும் கிடைக்கின்றன. இந்த கல் சட்டிகள் மூலம் குறைந்த நேரத்திலும் குறைந்த ஆற்றல் பயன்பாட்டிலும் சமைக்க முடியும்.

இந்த சட்டிகள் வெப்பத்தை நன்கு தக்கவைத்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை. அடுப்பு அணைக்கப்பட்ட பிறகும் நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். டெஃப்லான் பூச்சு இல்லாத கல் பாத்திரங்கள் பயன்படுத்த பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

மைக்ரோவேவ் மற்றும் ஏர் பிரையர் பயன்பாடு
எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

இந்த வழிகாட்டுதல் அறிக்கையில், சமையல், கொதித்தல், குக்கர் சமையல், வேக வைத்தல், வறுத்தல், குறைந்த எண்ணெயில் வறுத்தல், பார்பிக்யூ, கிரில்லிங் மற்றும் ஏர் ஃப்ரை செய்தல் என சமையல் முறைகளின் நன்மைகள் மற்றும் சாத்தியமான தீமைகளையும் விவரிக்கிறது.

உதாரணமாக பொரியலை எடுத்துக் கொள்வோம். இந்த அறிக்கையில் உள்ள தகவல்களின்படி, வறுக்கப்படும் செயல்முறை, உணவின் ஊட்டச்சத்து மதிப்புகளை மாற்றுகிறது. வைட்டமின் சி போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் அழிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், ஒரு உணவு பொருளை எண்ணெயில் வறுக்கும் போது, அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றப்பட்ட கூறுகள் உருவாகலாம் மற்றும் நச்சுகளும் உருவாகலாம்.

மிக முக்கியமாக, அதிகப்படியான எண்ணெய் மற்றும் கொழுப்பு நுகர்வு இதய நோய், பக்கவாதம், நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இது அடிவயிற்றை சுற்றி கொழுப்பு சேர்வதற்கும், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளின் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கிறது. அதே எண்ணெயை மீண்டும் பொரிப்பதற்கு பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மைக்ரோவேவ் அவனில் சமைப்பது பற்றிய ஒரு புதிய மற்றும் சிந்தனையைத் தூண்டும் தகவலை வழங்குகிறது.

மைக்ரோவேவ் சமையலுக்கும் வழக்கமான சமையலுக்கும் இடையே சிறிய ஊட்டச்சத்து வேறுபாடு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துகளின் மீது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் சமையல் முறைகளில் மைக்ரோவேவ் சமையல் ஒன்றாகும். காரணம், மைக்ரோவேவில் சமைக்கும் போது, மிகக் குறைந்த நீரே பயன்படுத்தப்படும். மைக்ரோவேவ், உணவை உள்ளே இருந்து சூடாக்குகிறது. இது ஊட்டச்சத்துகளை அழிக்காததால், மற்ற சமையல் முறைகளை விட இது அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்க வைக்கிறது.

மைக்ரோவேவ் அவனில் மிகக் குறுகிய காலத்தில் சமைப்பதால், அதிக நேர வெப்பத்தால் அழிக்கப்படும் வைட்டமின் சி மற்றும் பிற கூறுகளும் பாதுகாக்கப்படுகின்றன. இது புரதங்கள், லிப்பிடுகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றில் குறைவான விளைவை ஏற்படுத்தும். மைக்ரோவேவில் சமைக்கும் போது, பாதுகாப்பான கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்துமாறு அறிக்கை பரிந்துரைக்கிறது. பிளாஸ்டிக் கொள்கலன்கள் நல்லதல்ல என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
'மைக்ரோவேவ் விதிகளை பின்பற்ற வேண்டும்'

`ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இயக்குநர் டாக்டர். ஹேம்லதா ஆர் பிபிசி மராத்திக்கு கொடுத்த பேட்டியில்,

“வழக்கமான சமையல் முறைகளை விட மைக்ரோவேவ் சமையல் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் உங்களுக்கு வேறு வழியில்லை எனில் மைக்ரோவேவ் பயன்படுத்தலாம். மைக்ரோவேவ் நாம் நினைப்பது போல் மோசமான உபகரணம் இல்லை. நிச்சயமாக, மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது ஆபத்தானது. அதன் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எனவே, மைக்ரோவேவில் அனைத்து ஊட்டச்சத்து மதிப்புகளும் இழக்கப்படும் என்ற பொதுவான பார்வையை நம்ப வேண்டியதில்லை. மைக்ரோவேவை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். இது அந்தளவிற்கு கெடுதல் இல்லை." என்றார்.

மைக்ரோவேவில் உணவை நீண்ட நேரம் சூடாக்கினால், அதில் ' அக்ரிலாமைடு' (acrylamide) என்ற வேதிப்பொருள் உருவாகும். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எரிவாயு அல்லது விறகடுப்பில் உணவைச் சூடாக்குவதை விட மைக்ரோவேவில் உணவைச் சமைப்பது அதிக அக்ரிலாமைடை உருவாக்குகிறது என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள். மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கவனமாக இருங்கள்! இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

மைக்ரோவேவில் இருந்து வரும் வெப்பம் பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு பாலிமர் (polymer) துகள்களை உடைக்கும். இந்த பாலிமர் துகள்கள் உணவுடன் கலக்கின்றன. இந்த பாலிமர் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்கள் பாதிக்கப்படும். எனவே, பிளாஸ்டிக் பொருட்களை மைக்ரோவேவில் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருள்களை மிருதுவாக்க பயன்படுத்தப்படும் ரசாயனமான தாலேட்ஸ் (Phthalates) எனப்படும் பிளாஸ்டிசைசர்கள் (plasticizers) நமது வளர்சிதை மாற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலை மோசமடையத் தொடங்குகிறது.

எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

இந்த தாலேட்ஸ் (Phthalates) உடலில் நுழைவதால், குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இது இன்சுலின் சுரக்கும் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்னைகள் தோன்றும். இது ஆஸ்துமா அல்லது கருவுறுதல் தொடர்பான பிரச்னைகளையும் ஏற்படுத்தும் .

எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

மைக்ரோவேவ் அவன் இந்திய சமையலறைகளில் ஹோட்டல்களில் ஊடுருவி இருந்தாலும், ஏர் பிரையர்கள் ஒப்பீட்டளவில் நமக்கு புதியவை தான். இதில் வறுத்த உணவுகள் அதிக எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது. மற்ற சமையல் முறைகளில் உணவு பொருட்களை வறுப்பதை விட இதில் வறுக்கும் போது உணவில் குறைந்த அளவு எண்ணெய் உறிஞ்சப்படும்

குறைந்த எண்ணெய் என்றால் குறைந்த கலோரிகள் என்று அர்த்தம். குறைந்த கலோரிகள் என்றால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் குறைவு. உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சமைக்க ஏர் பிரையர்களைப் பயன்படுத்தலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஏர் பிரையரில் மீன்கள் வறுக்கப்படும் போது, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்புகள்) குறையும் மற்றும் ஆரோக்கியத்தில் அழற்சியை ஊக்குவிக்கும் சேர்மங்களை அதிகரிக்கும் என்கிறது அறிக்கை.

உணவுப்பொருள்களில் ஊட்டச்சத்துகளை தக்க வைப்பது எப்படி?

சமையல் முறை மற்றும் பாத்திரங்கள் பற்றிய தகவல்களை பார்த்தோம், இந்த அறிக்கை ஊட்டச்சத்து மதிப்புகளை பராமரிக்க சில குறிப்புகளை வழங்கியுள்ளது.

இந்த அறிவுறுத்தல்கள் படி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அடிக்கடி கழுவ வேண்டாம். காய்கறிகள் மற்றும் பழங்களை தோலுரிப்பதற்கும், வெட்டுவதற்கும் முன் கழுவவும். சமையலில் அதிக தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சமையலுக்கு தேவையான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும்.

காய்கறிகளை சமைக்கும் போது பாத்திரங்களை மூடி வைக்கவும். எண்ணெயில் வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைக்கவும்.

உடைந்த தானியங்கள் மற்றும் புளித்த உணவுகளை (இட்லி-தோசை) உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை சமைக்கும் போது சோடாவை சேர்க்க வேண்டாம். மீதமுள்ள எண்ணெயை மீண்டும் சூடாக்குவதைத் தவிர்க்கவும்.

ஆரோக்கியமான உணவு முறை என்றால் என்ன?
எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோய்க்கும் டாக்டர்கள் 'வாழ்க்கை முறை மாற்றங்களை' அதாவது வாழ்க்கை முறையை மாற்றி 'ஆரோக்கியமான உணவை' சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் முதல் மனநோய் வரை இந்த அறிவுறுத்தலை மருத்துவர்களிடம் கேட்டிருப்பீர்கள்.

என்ன தான் சாப்பிடுவது என்ற கேள்வி வரும். 'ஆரோக்கியமான' உணவில் ஏராளமான காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மிதமான உலர் பழங்கள், கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் தயிர் ஆகியவை இருக்க வேண்டும் என்று ICMR மற்றும் NIN பரிந்துரைக்கின்றன.

`ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இல் இந்த வழிகாட்டுதல்களை உருவாக்க பணியாற்றிய ஆராய்ச்சியாளர் டாக்டர். சுப்பாராவ் எம். ஜி, பிபிசி மராத்திக்கு கூடுதல் தகவல்களை வழங்கினார்.

உணவு பொருட்களில், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், எண்ணெய் வித்துகள், எண்ணெய், கொழுப்புச் சத்துள்ள உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், வேர்கள் மற்றும் கிழங்குகள், இறைச்சி, மீன், மசாலாப் பொருட்கள் என பத்து வகைகளாகப் பிரித்துள்ளோம் என்றார்.

மேற்சொன்ன உணவு வகைகளில் ஏதேனும் ஐந்து முதல் ஏழு உணவுகளை தினசரி உணவில் எடுத்து கொள்ளலாம். 2000 கலோரி உணவு என கருத்தில் கொண்டால், உங்கள் உணவில் பாதி காய்கறிகள் மற்றும் பழங்களாக இருக்க வேண்டும். முடிந்தவரை புதிய காய்கறிகள் மற்றும் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.”

“மேற்சொன்ன 10 வகை உணவு உட்பிரிவுகளில், ஏதேனும் ஒன்றை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதும் சரியல்ல, உங்கள் உணவில் பலவகையான உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவுக்கு அதிக செலவு தேவையில்லை. ஆனால் உட்கொள்ளும் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவில் இருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் உண்ண வேண்டிய உணவுகள்
எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது? சிறந்த சமையல் முறை எது? - புதிய வழிகாட்டுதல்கள்

பட மூலாதாரம்,GETTY

`ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ வழிகாட்டுதல்களின்படி

  • கருத்தரித்தல், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது நல்ல உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவை இருக்க வேண்டும். கருத்தரித்தலுக்கு முன்கூட்டிய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றி கொள்வது நல்லது.
  • கர்ப்பிணிகள் சரியான ஹீமோகுளோபின் மற்றும் பிஎம்ஐ அளவை பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  • முதல் கர்ப்பத்திற்கான குறைந்தபட்ச வயது 21-ஆக இருக்க வேண்டும்.
  • உணவில் பல்வேறு பருப்பு வகைகள், முந்திரி, பாதாம் போன்றவை, மீன், பால், முட்டைகள் இருக்க வேண்டும். அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • மது, புகையிலை எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • இரத்த சோகை வராமல் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
 
உப்பு மற்றும் சர்க்கரை ருசிக்கு மட்டும் தான்

கடந்த சில ஆண்டுகளில், நிறைய உப்பு நிறைந்த பல உணவுகள் சந்தையில் விற்கப்படுகின்றன.

வீட்டில் உள்ள உணவிலும் வெளியில் உண்ணும் உணவுகளிலும் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளிலும் மக்களின் உணவில் உப்பின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த கவலைகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ ஆகியவையும் ஒரு நாளைக்கு ஐந்து கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றன.

  • அயோடின் உப்பு பயன்படுத்தவும்.
  • சாஸ்-கெட்ச்அப், பிஸ்கட், சிப்ஸ், சீஸ், கருவாடு ஆகியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பொட்டாசியம் கிடைக்கும்.
  • அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம். இது ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது.
  • இருப்பினும், இந்த உணவுகளில் கலோரிகள் அதிகம். எனவே, இந்த அறிவுறுத்தல்களில் உள்ள ஒரு முக்கியமான பரிந்துரை என்னவென்றால், அனைவரும் சாஸ்கள், சீஸ், மயோனைஸ், ஜாம், பழ கூழ், ஜூஸ், கார்பனேற்றப்பட்ட பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் ஆகியவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.

வீட்டில் தயாரிக்கும் உணவில் எண்ணெய்-நெய், சர்க்கரை, உப்பு அதிகம் பயன்படுத்தினால் அதுவும் நல்லதல்ல. வெளியில் சாப்பிடும் போது கூடுதல் கவனம் தேவை. வறுத்த உணவு, இனிப்பு, உப்பு, வேக வைத்த உணவுகளைத் தவிர்க்கவும்.

உப்பு அதிகம் உள்ள உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று இந்த அறிவுறுத்தல்கள் கூறுகின்றன.

https://www.bbc.com/tamil/articles/c72plr5y2w0o

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 09 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"

3 days 11 hours ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 09 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"
 
 
பண்டைய பதிவுகளில் இருந்தும் இன்றைய நடை முறைகளில் இருந்தும் ஒரு அறிவு பூர்வ ஊகத்தின் அடிப்படையில் உணவு வரலாற்றாளர்கள், எப்படி பாதுகாப்பான உணவு என்பதை முதலில் ஆதி மனிதன் கண்டுபிடித்தான் என்பதற்கு விடை தேடினர். ஆதி மனிதர்கள் மற்ற விலங்குகளை கவனித்தல் மூலம் உணவுகளை தேர்ந்து எடுத்தார்கள். உதாரணமாக, மற்ற விலங்குகள் எதை உட்கொள்கின்றன, எதை தவிர்க்கின்றன என்பதை கவனித்து பின்பற்றினார்கள். மேலும் ஒரு உணவு அது உட்கொண்ட பின் நோயை உண்டாக்கினால், அதை மற்றவர்களும் தவிர்த்தார்கள். இப்படியான சோதனை மற்றும் பிழை [trial and error] அடிப்படையிலும் பாதுகாப்பான உணவுகள் தேர்ந்து எடுக்கப்பட்டன என்கின்றனர். எனினும் தொழில் நுட்ப அறிவின் முன்னேற்றம் இறுதியாக - திரும்பவும் சோதனை மற்றும் பிழை அடிப்படையில் - தீங்கு விளைவிக்கக் கூடிய உணவை நுகரக் கூடிய உணவாக மாற்ற உதவியது. உதாரணமாக, இறைச்சி பதப்படுத்தப்பட்டது, கொட்டைகள் கொதிக்கவைக்கப்பட்டன, காய்கறிகள் உரிக்கப்பட்டன. மேலும் விலங்குகளை வீட்டு மிருகமாக மாற்ற முன்பு சாத்தியமான காய்கறிகளை விலங்குகளுக்கு முதலில் கொடுத்து பரிசோதனை செய்திருக்க அவர்களுக்கு வாய்ப்பு எதுவும் இருந்திருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
வீட்டு வளர்ப்பிற்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட முன்னைய காட்டு தாவரங்களான கோதுமை, பார்லி, அரிசி, தினை, கம்பு, உருளைக்கிளங்கு போன்ற முதன்மையான தாவரங்கள், மனிதன் உட்கொள்ளும் முன் சமைத்தல் அவசியம் ஆகிறது. ஏனென்றால் அவை சமைக்கப்படாத நிலையில் நச்சுத் தன்மையை அல்லது சீரணிக்க முடியாத பொருள்களை அல்லது எதிர் - ஊட்டப் பொருள்களை [antinutrients] கொண்டிருப்பதாகும். ஆனால், சமைத்த பின் அவை செயலிழக்க செய்யப்படுகின்றன அல்லது மட்டுப் படுத்தப் படுகின்றன அல்லது குறைக்கப் படுகின்றன. ஆகவே நெருப்பை சமையலுக்கு பாவிக்கத் தொடங்கியது தான் இப்படியான தாவரங்களை வீட்டுப் பாவனைக்கு மாற்ற தூண்டியது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இதுவே மனித பண்பாட்டு முன்னேற்றத்திற்கு முக்கியமான காரணியாகும். அத்துடன் இது மேம்படுத்தப் பட்ட ஆரோக்கியத்தையும் கொடுத்தது. உணவு வரலாற்றாளர்கள் திறந்த வெளி நெருப்பில் உணவை வாட்டுதல் அல்லது சுடுதல் முதலில் தற்செயலாக ஏற்பட்டது என - நாம் முன்பு குறிப்பிட்டவாறு - கருதுகிறார்கள். என்றாலும் கொதித்தல் அப்படி தற்செயலாக ஏற்பட்ட ஒன்று அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மிகவும் கவனமாக இதற்காக வடிவமைக் கப்பட்ட கருவிகள் மூலம் அடைந்த ஒரு செய்முறையாகும்.
 
மனிதகுலத்தின் நாகரீகத்தின் வரலாற்றுக்கு முந்தைய கட்டத்திலிருந்தே, ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல மனதைக் கட்டியெழுப்ப உணவின் இன்றியமையாத தன்மையை மனிதன் உணர்ந்தான். நன்கு உணவளிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும், வலிமையானவர்களாகவும் இருப்பதையும், உணவு இல்லாதவர்களை விட அவர்கள் அதிக வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக இருப்பதையும் அவனால் கவனிக்க முடிந்தது . என்றாலும், கடந்த 150 ஆண்டுகளில் மட்டுமே நமது அன்றாட வாழ்க்கையில் உணவு வகிக்கும் முக்கிய பங்கை புறநிலையாகவும் அறிவியல் ரீதியாகவும் புரிந்து கொள்ள எம்மால் முடிந்தது. மனித உடலின் வளர்ச்சியிலும், உடலை ஆற்றலுடன் வைத்திருப்பதிலும் உணவின் பங்கை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்த சமீபத்திய அறிவியல் ஆய்வுகளால் மட்டுமே.
 
உண்மையில் மனிதர்கள் உட்பட எல்லா உயிர் இனங்களின் உணவுத் தேவையை இயற்கை நன்கு கவனித்துக் கொண்டது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் பிற தாவரங்களை வளர்க்கக்கூடிய விவசாய நிலத்தை அது எங்களுக்கு வழங்கியுள்ளது. அது கடலை மீன்களாலும், நிலங்களை இறைச்சி, பால் மற்றும் பிற உணவுப் பொருட்களையும் தரக்கூடிய விலங்குகளாலும் நிரப்பினது. உணவுப் பொருட்களைப் பயிரிடுவதற்கும் உற்பத்தி செய்வதற்கும் வழிகளைக் கண்டறியும் திறனை அது மனிதனுக்கு வழங்கியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதிகால மனிதன், காலப்போக்கில், வேட்டையாடுவதில் இருந்து விவசாயத்திற்கு மாறினான், இது நாகரீக வாழ்க்கையின் தொடக்க புள்ளியாக அமைந்தது. ஒருவகையில் மனிதன் ஆறாவது அறிவைப் பெற்றுள்ளான்.
 
அனைத்து உணவுப் பொருட்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவை. ஆடையில்லாமல் மனிதன் பாதி என்று தமிழ்ப் பழமொழி உண்டு; உணவு இல்லாமல் மனிதன் உயிரற்றவன் என்று சொல்லலாம். ஓராண்டு அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பருவமழை பொய்த்தால், விவசாய விளைபொருட்கள் கிடைக்காமல், கடும் வறட்சியால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இது சமூகத்தின் ஒழுக்கத்தைக் கெடுக்கும். அனுதாபம், அன்பு, பரோபகாரம் போன்ற உயர்ந்த குணங்கள் அனைத்தும் விலகும். சமூகம் தன் கலாச்சாரத்தை இழந்து, வாழ்க்கை தரம் சீரழியும். சமுதாயத்தின் இந்த முழு அமைப்பும் உணவை மையமாகக் கொண்டது. மனிதன் உணவுக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். எனவே நம் தமிழர்கள் பசியை ஒரு நோய் என்று வர்ணித்தனர். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். உடை, உறைவிடம் இல்லாமல் கூட சமூகம் இருக்க முடியும் ஆனால் உணவு இல்லாமல் இருக்க முடியாது. ஆதி மனிதனின் பல போராட்டங்கள் உணவை மையப்படுத்தியே இருந்தன.
 
"ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது."
 
இது வயிறுக்கு மனம் சொல்லுகிற செய்யுள்!!! துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே, கிடையாதபோது, ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; கிடைத்தபோது இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; ஆதலினால் உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது என்கிறார் ஔவையார். இனி உலகிற்கு முதல் முதல் நாகரிகம் தந்த பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் பற்றிப் பார்ப்போம்.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 10 தொடரும்
 
 
FOOD HABITS OF TAMILS / PART 09 "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING"
 
 
How did the first peoples know which foods were "safe" to eat? Food historians make educated guesses based on ancient records and modern practices. Based on this evidence, they presume foods were selected or rejected based on observation (they were avoided by the other animals in the area) in conjunction with basic trial and error (if it made the taster sick, it was unlikely others partook). Advances in technology eventually resulted in the ability (again, probably a matter of trial and error) to modify potentially harmful foods into consumable staples. Meat was preserved; nuts were boiled, vegetables were peeled. Before the domestication of animals, it is unlikely that potential vegetable food would have been given to any other animal species first, to see what effect these would have (perhaps one of the earliest functions of the dog, besides scavenging, was an 'experimental' animal to test 'new' foods -- a procedure known to have been practiced in some recent African communities).
 
All of the major domesticated plant foods, such as wheat, barley, rice, millet, rye, and potatoes, require cooking before they are suitable for human consumption. In fact, in a raw state, many plants contain toxic or indigestible substances or antinutrients. But after cooking, many of these undesirable substances are deactivated, neutralized, reduced, or released; Thus, the use of fire to cook plant foods doubtless encouraged the domestication of these foods and, thus, was a vitally important factor in human cultural advancement. Also Improved health must certainly have been one result of the discovery of cooking, Food historians generally agree the first cooking method was roasting over an open fire. Discovery is attributed to happy accident as explained earlier .Boiling was no accident. It was a carefully considered process achieved with tools crafted specifically for the purpose.
From the very prehistoric stage of the civilization of mankind man has realized the indispensability of food for the building up of healthy body and sound mind. He is able to notice that people who are well fed live longer and are stronger and they are able to do more work than those who do not have enough to eat. Yet it is only during the last 150 years that we are able to understand objectively and scientifically the important role that food plays in our daily life. Thanks to the recent scientific investigations that we are able to know clearly, the place of food in the growth of human body, as well as in ending the body with energy.
 
Nature has taken good care of food needs. She has given us farm land where vegetables, fruits, grains and other plants can be grown. She has filled the ocean with fish and the lands with animals that supply meat, milk and other food products. She has blessed us with the ability to find ways to cultivate and produce food products. Primitive man, in course of time, turned from hunting to farming and this marked the starting point of civilized life. In a way man is endowed with sixth knowledge.
 
All the food products are necessary for human life. There is a Tamil saying that man is half without dress; we may say man is lifeless without food. If the monsoon fails for just one year or two three years, then there will be no agricultural products and consequently people will suffer by severe drought. This will spoil the morality of the society. All the high qualities like sympathy, love and philanthropy will be dislocated. The society will lose its culture and standard of life will be degraded. This whole structure of the society centered on food. Man is ready to give anything for the sake of food. So our Tamils described hunger as a disease. The food, dress and shelter are the basic requirements for man. Society can exist even without dress and shelter but never without food. Many of the struggles of the primitive man were centered on food.
 
"If I ask you to give up a day's food, You won't
If I ask you to eat two day's food, You won't
Never will you understand my torment,
It's hard to live with you, my dreaded appetite"
[Avvaiyar's Good conduct (Nalvazhi)]
 
O my stomach, You will not know my sorrow even for a day; So living with you is very difficult for me says poet Auvaiyar. Which actually point out the importance of food & its habits. Now let's look at the food habits of the ancient Sumerians who gave the first civilization to the world
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 10 WILL FOLLOW
420190979_10224572180754765_8501166387668904164_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rWrF54V4MvUQ7kNvgHbrcr2&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBxPLtYKbqRO34vHi8R5HHw_Y5mVu9_zecTobT6h72STA&oe=6646A714 420199762_10224572180234752_7927322634131712045_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_ygUshNUazAQ7kNvgHObJMT&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCZvrtdOTTMdprSaT4djNCB3BBK6Q01XP0EchPoym0Vmg&oe=6646B8B0 
 
 
 
 

சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவை சமைத்து அசத்திய இலங்கைத் தமிழர்!!

5 days 14 hours ago

பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய உணவு

2-40.jpg?resize=600%2C360

 

எனினும், “இதற்கு முன் ஏன் இலங்கை உணவை வழங்கவில்லை” என நடுவர்கள் கேள்வியெழுப்பியிருந்ததுடன் அதற்கு பதிலளித்து பேசிய Darrsh தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார்.

எனினும், அவரை ஊக்கப்படுத்திய நடுவர்கள் MasterChef Australia நிகழ்ச்சி தமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவுவதாக தெரிவித்திருந்தனர்.

தனது தந்தை மற்றும் பாட்டியின் சமையலில் Darrsh ஈர்க்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இதேவேளை, இலங்கை உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ‘MasterChef Australia’ பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் Darrsh ஆவார்.

முன்னதாக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா அவுஸ்திரேலிய சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்ததுடன் நடுவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 08 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"

6 days 14 hours ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 08 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"
 
 
எமது உடல் எப்படி எப்பொழுது மாற்றம் அடைந்தது என்பதை முழுமையாக கண்டறியவும், எமது முதாதையர் என்னத்தை பெரும்பாலும் உட்கொண்டார்கள் என்பதை அறியவும், தொல்லுயிர் எச்சங்களை / புதைபடிவங்களை [fossil] நாம் ஆய்வு செய்ய வேண்டும். எமது முன்னைய முதாதையர் வாலில்லாக் குரங்கினம் போன்ற ஆசுத்திராலோபித்தசினெசுச் [Australopithecus] ஆகும். இது ஹோமோ எரக்டஸிற்கும் கொரில்லாவிற்கும் இடைப்பட்டதாகும். இது பெரிய பெருங் குடலைக் கொண்ட பெரிய தொந்தியை கொண்டிருக்கிறது. இது பலமான தாவரப் பொருள்களை சமிக்க உதவுகிறது. மேலும் கடினமான தாவரப் பொருட்களை அரைக்கவும் நொறுக்கவும் ஏற்றவாறு இதன் பற்கள் பெரிய தட்டையாக உள்ளது. இந்த ஆசுத்திராலோ பித்தசினெசுச் தான் முதல் முதல் மரத்தில் இருந்து ஆப்ரிக்கா வனாந்தரத்திற்கு கீழ் இறங்கி வந்து, அங்கு, சமதளப் புல் வெளியில் மேய்ந்து கொண்டு இருந்த விலங்குகளை சாப்பிட ஆரம்பித்த இன்றைய மனிதனின் முதாதையர் ஆகும். இந்த மாற்றம் தான், அதன் உடல் உட்கூறு அமைப்பில் [anatomy] பெரும் மாற்றத்தை ஏற்படுத்த அடியெடுத்துக் கொடுத்தது. ஹொமினிடுகளில், முள்ளந்தண்டு படிப்படியாக நேராகிக் கொண்டு வருவதையும், மூளையின் கனவளவு கூடிக் கொண்டு வருவதையும், முக அம்சங்கள் மாறிவருவதையும், பல்லமைப்பின் மாற்றத்தோடு சேர்ந்து மெல்லுவதற்கான தசைநார்கள் குறைந்து வருவதையும் புதைபடிவப் பதிவுகள் காட்டுகின்றன. 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அது பரிணாம மாற்றத்தை கண்டு மனிதன் போன்ற அமைப்பையும் கூர்மையான பற்களையும் 30% பெரிய மூளையையும் பெற்றது. மூளையின் முக்கியத்துவத்தை
 
“எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்”
 
என்ற ஒரு பழமை வரி சுட்டிக்காட்டுகிறது. இந்த மாற்றம் அடைந்த ஹொமினிட்டுகளை [hominids] ஹோமோ ஹபிலிஸ் (Homo habilis) என அழைத்தனர். என்றாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தியது 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய, எமது முதல் மனித முதாதையர் என நம்பப்படும் ஹோமோ எரக்டஸ் எனப்படும் எழுநிலை தொல்முன்மாந்தன் ஆகும். இது இன்னும் பெரிய மூளையையும், சிறிய தாடையையும் சிறிய பற்களையும் கொண்டிருந்தன. இதற்கு காரணம் கூர்ப்பின் தேர்வு வழி மூலம் மனிதரின் உணவுப் பழக்கம் மாறிவிட்டது ஆகும். இந்த ஹோமோ எரக்டஸ் எம்மைப்போன்ற உடல் அமைப்பை கொண்டிருந்ததுடன் குட்டையான கையையும் நீண்ட கால்களையும் கொண்டிருந்தன. மேலும் பெரிய தாவரப் பொருட்களை பதப்படுத்தும் குடலை இழந்தன. இதனால் இப்ப இந்த ஹோமோ எரக்டஸ் நிமிர்ந்து நடக்கவும் மட்டும் அல்ல, அவை ஓடக் கூடியதாகவும் புத்திசாலியாகவும் இருந்தன.
 
பேராசிரியர் வரங்ஹத்தின் [Professor Wrangham] கூற்றின் படி, ஆதி மனிதன் எப்படி சமைப்பது என்பதை கற்றுக்கொண்டது, எமது குடலை சிறிதாக்கியது. நாம் எமது உணவை சமைத்ததும், சமிபாடு நிகழ, பெரிய குடல் அவசியம் இல்லாமல் போய்விட்டது. எமது இந்த ஜீரண [செரிமான] அமைப்பின் மாற்றம் எமது மூளை பெரிதாக உதவியது. சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப் பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும். இது பக்குவப்படுத்துதல் என்ற பொருள் கொண்ட 'சமை' என்ற வினைச் சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும். சுருக்கமாக கூறுவதாயின் இது, உணவுப் பொருளின் சுவை, தோற்றம், ஊட்டப்பண்புகள் போன்றவற்றை விரும்பத்தக்க வகையில் வெப்பத்தைப் பயன்படுத்தி மாற்றுவதாகும்.
 
கிரிஸ் ஓர்கன், சார்லஸ் நுன், சாரின் மச்சாண்டா மற்றும் ரிச்சார்ட் வரங்ஹம் [Chris Organ, Charles Nunn, Zarin Machanda, and Richard Wrangham] ஆகிய ஆய்வாளர்கள், சமைப்பது சுமார் 1.8 மில்லியன் ஆண்டிலிருந்து 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாக கூறுகின்றனர். சமைத்தல் என்பது மனிதக் கூர்ப்பின் முக்கிய அம்சம் என வரங்ஹம் குறிப்பிடுகிறார், இது மனிதனுடைய நேரத்தையும் வேலையையும் இலகுவாக்கியதால், அது மூளை வளர்ச்சிக்கு வித்திட்டது என கூறுகிறார். அவர் ஆரம்ப மனிதனின் குடல் அளவு குறையும் சதவீதத்திற்கு இணையாக, மூளையின் வளர்ச்சி அதிகரித்திருக்கும் என மதிப்பிடுகிறார். எப்படியிருந்தாலும் அதிகமான ஏனைய மனிதவியலாளர்கள் [anthropologists] இதற்கு எதிராக கூறுகின்றனர், அவர்கள் சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் மனிதன் சமையலைத் தொடங்கினான் என்பதற்கு ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
 
நாம் உண்ணும் பொருட்கள் அனைத்தும், எம் உடலுக்குள் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு, துகள்களாக மாற்றப்பட்டு அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள் மற்றும் நன்மை தரும் பொருட்கள் ஆகியன இரத்தத்திலும் உடலின் உயிரணுக்களிலும் சேர்ந்து ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன. இவ்வாறு உணவுப் பொருட்கள் நறுக்கப்படுவதும் துணுக்குகளாக்கப் படுவதும் நமது செரிமான அமைப்பில் அல்லது குடல் பகுதியில் நடைபெறுகின்றன. உணவுப் பண்டத்தை முதன் முதலாக வாயில் கடிக்கும் போதே செரிமானப் பணி துவங்கி விடுகிகிறது. வாயில் உணவு துண்டுகளாக்கப் பட்டு பற்களால் நன்கு மென்று அரைக்கப் பட்டு உமிழ் நீருடன் கலக்கிறது. பின்னர் நாவினால் இவ்வுணவுப் பண்டம் பிசையப் பெற்று சிறு சிறு உருண்டைகளாகிறது. இவ்வுருண்டைகள் உணவுக் குழாய் மூலம் வயிற்றுக்குள் தள்ளப் படுகின்றன. பின்னர் இவை சிறிது சிறிதாக வயிற்றி லிருந்து சிறுகுடலுக்குள் செல்கின்றன. இங்கு தான் உணவு பெருமளவு செரிமான மடைகிறது. குடலில் இருக்கும் பல நுண்ணுயிர்கள் (சில வகை பாக்டீரியாக்கள்) உணவுப் பொருளை சிதைத்து குடல் செல்களுக்கு [cells / உயிரணு] ஆற்றலை விநியோகிக்கிறது. ஆகவே சமைத்த உணவை சாப்பிடும் போது, ஊட்டக் கூறுகளை அல்லது போசாக்கை விடுவிக்க எமது வயிறு பெரிதாக வேலை செய்யத் தேவையில்லை. ஆகவே மூளைக்கு சக்தி கொடுக்க அங்கு நிறைய சக்தி இருந்தது. மூளை செயல்படுவதற்கு மிக அதிக அளவு ஆற்றலைக் கோருகிறது. மனிதனின் ஒட்டு மொத்த உடலுக்கும் தேவையான ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு மூளையின் இயக்கத்திற்குத் தேவைப் படுகிறது. மேலும் சமத்த உணவு கூடிய ஆற்றலை விடுவிப்பதுடன், அதை ஜீரணிக்க குறைந்த ஆற்றலையே உடம்பு பாவிக்கிறது, அது மட்டும் அல்ல, சமையல் செய்து சாப்பிடும் ஒரு பிராணி, பூமியின் அதி உன்னத புத்திசாலி உயிர் இனமான மனிதன் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 09 தொடரும்
 
 
FOOD HABITS OF TAMILS / PART 08 "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING"
 
 
To understand how and when our bodies changed, we need to take a closer look at what our ancestors ate by studying the fossil records. Our earliest ancestor was the ape - like Australopithecus. Australopithecus had a large belly containing a big large - intestine, essential to digest the robust plant matter, and had large, flat teeth which it used for grinding and crushing tough vegetation. None the less, it was Australopithecus that moved out of the trees and onto the African savannah, and started to eat the animals that grazed there. And it was this change of habitat, lifestyle and diet that also prompted major changes in anatomy. The eating of meat ties in with an evolutionary shift 2.3 million years ago resulting in a more human -looking ancestor with sharper teeth and a 30% bigger brain, called Homo habilis. The most momentous shift however, happened 1.8 million years ago when Homo erectus - our first "truly human" ancestor arrived on the scene. Homo erectus had an even bigger brain, smaller jaws and teeth. Erectus also had a similar body shape to us.Shorter arms and longer legs appeared, and gone was the large vegetable - processing gut, meaning that Erectus could not only walk upright, but could also run. He was cleverer and faster.
 
According to Professor Wrangham - When Our earliest ancestor started to cook, this Cooking made our guts smaller. He says. "Once we cooked our food, we didn't need big guts. "They're costly in terms of energy. Individuals that were born with small guts were able to save energy, have more babies and survive better. Preparing food with heat or fire is an activity unique to humans, and scientists believe the advent of cooking played an important role in human evolution. Phylogenetic analysis by Chris Organ, Charles Nunn, Zarin Machanda, and Richard Wrangham suggests that human ancestors may have invented cooking as far back as 1.8 million to 2.3 million years ago. Wrangham proposes that cooking was instrumental in human evolution, as it reduced the time required for foraging and led to an increase in brain size. He estimates the percentage decrease in gut size of early humans directly correlates to the increase in brain size. Most other anthropologists, however,- as No known clear archaeological evidence for the first cooking of food has survived - believe that cooking fires began only about 300,000 years ago, when hearths started appearing. Cooking food breaks down its cells, meaning that our stomachs need to do less work to liberate the nutrients our bodies need. This, freed up energy which could then be used to power a larger brain. The increase in brain-size mirrors the reduction in the size of the gut. Significantly found that the reduction in the size of our digestive system was exactly the same amount that our brains grew by. It is also found that not only does cooked food release more energy, but the body uses less energy in digesting it. Humans - the cleverest species on earth - are also the only species that cooks.
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 09 WILL FOLLOW
418961771_10224541270502028_8876682249488568739_n.jpg?stp=dst-jpg_s851x315&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=REOyqwd9qn8Q7kNvgHDKz7y&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBOaqZ7WjIa59AWDGcnoqa6bpHx6NE5QNO-bdr2mljK9Q&oe=664284A3 419104543_10224541270262022_6059627079400586155_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HAJPpNIf5WcQ7kNvgFvB3-3&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAGBMKOPPb3yW8hel7lVuPl2ZSg826zBDlVMLO-VMahTQ&oe=6642AFB5   419019116_10224541270462027_7052961139631654627_n.jpg?stp=dst-jpg_p235x350&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=KLTY4c0t-CQQ7kNvgEjXfIV&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA4UJihPwYpxOgQ8MaEOxV0YrB09DrCuC4_dVonYxA4rg&oe=664297ED 419075138_10224541271222046_5430761182580969705_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=oChlyeFd018Q7kNvgG2rTAc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDCgb3igJTJ4Q2HaAfKq1AyamK-kin71SNJN-Q5au_pNg&oe=6642A091 418962467_10224541271342049_5661458214857224001_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9tF5Tl6FeRsQ7kNvgFk9ozG&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCZa3G01xlVk5sp5Va5cB2DILmRfhn8SD_qy1v14tACqw&oe=6642AC5B
 
 
 
 
 

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 07 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"

1 week 3 days ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 07 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"
 
 
நீண்ட கால மனித வரலாற்றில், எமது உணவின் முக்கிய மூலப் பொருட்கள் அவ்வளவாக மாற்றம் அடையவில்லை என்றும், ஆனால் அவை தயார் செய்யப்பட்ட விதம் அல்லது சமைக்கப்பட்ட முறைதான், எமது தாவர, விலங்கு இனங்கள் முழுமையான மற்றம் அடைய வழிவகுத்தது என்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக (Harvard University) பேராசிரியர் ரிச்சர்ட் வரங்ஹம் நம்புகிறார். எமது பழைய கற்கால முதாதையர்கள் தவறுதலாக தமது புலால் உணவை நெருப்பில் போட்டு இருக்கலாம். அதை பின் ஒருவாறு தட்டி எடுத்து உட்கொள்ளும் போது, அது இன்சுவை மிகுந்த ஒன்றாக மாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கலாம். அதுவே உணவை சமைத்து உண்ணும் - ஒரு புது திருப்பத்தை - ஏற்படுத்தி இருக்கலாம். மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு என்பது உணவைச் சமைத்து உண்பதும், மனித இனத்தின் தகவல் பரிமாற்ற மொழியும் தான். முக்கியமாக சமைப்பது என்பது, மொழியையும் விடவும் கூட தனித்துவமானதாக, சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் எந்த விலங்கும் உணவை சமைத்து உண்பதில்லை. கிடைப்பதை அப்படியே விழுங்கி வைக்கிறது. மனிதன் மட்டுமே விலங்கினத்தில் உணவை சமைத்து உண்கிறான். மனித இனம் தான், கொதிக்க வைத்து, சுட்டு, பொரித்து, வறுத்து, இப்படி எல்லாம் செய்து சாப்பிடுகிறது. மொழி / குரல் வளத்தில், மற்ற விலங்குகள், தொடர்புக்காக, மிரட்ட அல்லது தன் உணர்வைக் காட்ட குரைக்கின்றன, கனைக்கின்றன, உறுமுகின்றன, ஊளை யிடுகின்றன அல்லது ஏதாவது ஓர் ஒலியை எழுப்பி தகவலை பரிமாறுகின்றன. இதுதான் இயற்கை. சமைத்து உண்பது இயற்கைக்கு மாறுபட்ட ஒன்று. இந்த விடயம் தான் நாகரிகத்தின் இதயமாக வரலாற்றில் கருதப்படுகிறது. என்றாலும் துவக்க காலத்தில் பச்சை இலை தழைகளையும். பழங்களையும் உண்ட மனிதன் எப்போது சமைத்து உண்ணத் தொடங்கினான் என்பது துல்லியமாகத் தெரிய வில்லை. துவக்க கால மனிதன் - முதலில் தோன்றிய மனிதனை (ஆதிமனிதன்) ஆங்கிலத்தில் “ஹோமினிட்” (Hominids), என்று சொல்கிறார்கள் - ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், முன்பு கூறியவாறு, எப்படியோ மாமிசத்தை நெருப்பிலிட்டு உண்டிருக்கிறான். பின் சுட்டிருக்கிறான். அவன் கொன்ற விலங்கு தற்செயலாக காட்டுத்தீயில் மாட்டி சுடப்பட்டு கூட இருக்கலாம்? அப்படி சுடப்பட்ட மாமிசம் பல்லுக்கு மிக மெதுவாக இருந்ததுடன், நாவுக்கும் சுவையாகவும் இருந்திருக்கிறது. அது மட்டுமா? அந்த மாமிசம் வழக்கமான பச்சை மாமிசத்தை விட, மிக எளிதில் சீரணமும் ஆகிவிட்டது. ஆகவே, முதல் சமையல்காரர் என்பவர் தற்செயலாக எதிர் பாராமல் தான் உருவாகி இருப்பார். அது பெண்ணா, ஆணா, என்பதும் தெரியவில்லை. ஆனால் சமைத்து உணவை உண்பது என்பதை மனிதன் தவிர வேறு எந்த விலங்கும் செய்ய வில்லை. இந்த சமையல் தான் மனிதனின் பரிணாமப் பாத்திரத்தில் பெரும் பங்கு வகிப்பதாகும். அன்றில் இருந்து அவர்கள் எரியும் நெருப்பை சுற்றி கூடியிருந்து, அதிகமாக தமது தொன்மையான, பண்டைய வடிவ கேபப் [kebab] செய்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து பல்லால் அரைத்து அல்லது சப்பி உட் கொண்டிருப்பார்கள். உண்ணுதலை சூடாமணி நிகண்டு,
 
"பல்லினால் கடித்தல் நக்கல் பருகல் விழுங்கல் மற்றும் மெல்லவே சுவைத்தலாகும் வினவில்ஐந் துணவு தாமே"
 
என கூறுகிறது. இந்த செய்யுள் மூலம் உண்ணல் வகையில் கடித்துண்பது, நக்கியுண்பது, பருகியுண்பது, விழுங்கியுண்பது, சப்பியுண்பது என பலவகை உண்டு என அறிவதுடன் தமிழர்களுக்கு சுவையான உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, அவற்றை எப்படிச் சாப்பிடுவது என்றும் தெரிந்து இருந்ததை காண்கிறோம். மேலும் அருந்துதல் [அருந்தல் , குடித்தல், பருகல்], உண்ணுதல் [உண்ணல், துற்றல், தின்றல்], உறிஞ்சுதல் [உறிஞ்சல்], உணவை சுவைத்து மகிழுதல் [துய்த்தல்], நக்கல் [நக்கல்], முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல் [நுங்கல்], மெல்லுதல் [மெல்லல்], விழுங்குதல் [விழுங்கல்] மற்றும் பல சொற்கள் தமிழில் காணப்படுகின்றன. இந்த வார்த்தைகளை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றை சரியான இடங்களில் பயன்படுத்துகிறோமா என்று தெரியாமல் பேசுகிறோம். ஒவ்வொரு சொல்லும் அதன் தன்மைக்கேற்ப வழங்கப்படுவது தமிழின் சிறப்பு. மேலும் திரு.இரா.வேங்கடகிருட்டிணன் அவர்கள் 'தமிழே முதன் மொழி' என்ற நூலில், உணவு உட்கொள்ளும் வகைக்கு தமிழில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அதில் "சப்புதல்" என்ற சொல்லையும் தருகிறார். அதில் இருந்து தான் சாப்பாடு என்ற சொல் திரிந்தது என்கிறார். சப்பிடு - சாப்பிடு - சாப்பாடு ஆகும்.
 
அவர்கள் இந்த சப்பி சாப்பிடும் சாப்பாட்டை அதன் பிறகு தொடர்ந்து இருக்கலாம். இப்படி சமைத்த சாப்பாடு, இந்த முன்னைய மனித இனம் சமைக்காத மூலப்பொருளை பல்லால் கொறித்து கொறித்து சாப்பிடுவதிலும் அதை ஜீரணிப்பதிலும் பார்க்க குறைந்த நேரத்தை செலவளிப்பதற்கு வழி சமைத்தது. இது மற்றவைகளை செய்ய, உதாரணமாக கூடிப்பழக, போதுமான காலத்தையும் பலத்தையும் கொடுத்தது. இந்த ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டும் கூடிப்பழகும் செயல் அல்லது அறிவுத்திறன், மிகவும் பலம்வாய்ந்த மூளையை மேம்படுத்த அந்த முன்னைய மனித இனத்தை தூண்டியது. சமைத்த உணவு அதற்கு தேவையான சத்தியை, கலோரியை கொடுத்தது. எம்மை ஒரு அறிவுத் திறன் படைத்த மனிதனாக வளர்ச்சி பெற இந்த சமையல் இடம் கொடுத்தது. சமைத்தலில் உள்ள மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நெருப்பைக் கண்டு பிடித்ததும், அதனைக் கட்டுப் படுத்தியதும் தான். இந்த நெருப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் முன்னைய மனித இனம் சமைக்க மட்டும் அல்ல, குளிர் காயவும் வழிசமைத்தது. மேலும் நம் முன்னோர்கள் சூட்டை தணித்துக் கொள்ள முடியினை இழந்ததாகவும் கருதப்படுகிறது. நாம் சமைக்காத பச்சை உணவு சாப்பிட்டு இருந்தால், எமது உடல் அளவையும் எமது மூளை வைத்திருக்கும் நியூரான்களையும் [neurons], பராமரிக்க, குறைந்தது 9 மணித்தியாலத்திற்கு மேலாக நாம் சாப்பிட வேண்டி இருந்து இருக்கும். - மூளையின் அடிப்படை துகள்கள், நியூரான்கள் ஆகும். தகவல்களை உடலின் பாகங்களுக்குக் கொண்டு செல்வது இந்த நியூரான்கள் தான். அனைத்துத் தகவல்களும் மின் சைகைகளாக (Electric signals) மாற்றப்பட்டு நியூரான்கள் மூலம் கடத்தப்படுகிறது. - ஆகவே இந்த நெருக்கடியை தாண்ட சமைத்த உணவு ஹோமோ எரக்டஸ் (Homo erectus) இற்கு உதவியது. இதனால் சமூக கட்டமைப்பை கட்டமைக்க அவர்களுக்கு நேரம் மிகுதியாக இருந்தது. சமையலை எதோ எங்களுக்கு வழங்கப்பட்ட ஒன்று என நம்புகிறோம். ஆனால், இந்த சமையலை நாம் அறிந்துகொள்ளா விட்டால், நாம் இன்னும் சிம்ப்பன்சி போன்றே காட்சி அளிப்பதும் மட்டும் இன்றி, அவை போன்றே ஒரு நாளின் பெரும் பகுதியை உணவை சப்பிக் கொண்டு இருப்பதற்கு செலவழித் திருப்போம். அது மட்டும் அல்ல, ஒரு சராசரி மனிதன் வாழ, தனக்கு தேவையான கலோரியை [உணவினால் உடலுக்குக் கிடைக்கும் சக்தியின் அளவு / calories] பெற, குறைந்தது 5 கில்லோ பச்சை உணவை சாப்பிட வேண்டி இருந்து இருக்கும்.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 08 தொடரும்
 
 
FOOD HABITS OF TAMILS / PART 07 "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING"
 
 
Harvard Professor Richard Wrangham believes that it is not so much a change in the ingredients of our diet, but the way in which we prepare them that has caused the radical evolution of our species. Our ancestors most probably dropped food in fire accidentally & they would have found it was delicious and that set us off on a whole new direction. Since then they may Gathered around a blazing fire, probably made first archaic kebab, munching cooked meat and might share it and may be planed to continue there after. Eating cooked food allowed these early hominids to spend less time gnawing on raw material and digesting it, providing time and energy to do other things instead, like socialize.The strenuous cognitive demands of communicating and socializing forced human ancestors to develop more powerful brains, which required more calories - calories that cooked food provided. Cooking, in other words, allowed us to become human.The control of fire allowed early hominids to not only cook their food, but obtain warmth, allowing them to shed body hair and in turn run faster without overheating; to develop calmer personalities, enabling social structures around the hearth and even to form relationships among men and women - In short, to become human. If we ate an only raw diet, to maintain the body size we humans possess, as well as the number of neurons our brains possess, people would have to eat for more than 9 hours per day. Cooked food allowed Homo erectus to overcome these limitations. As a consequence, more time was available for social structure to develop. Cooking is something we all take for granted but a new theory suggests that if we had not learned to cook food, not only would we still look like chimps but, like them, we would also be compelled to spend most of the day chewing. Without cooking, an average person would have to eat around five kilos of raw food to get enough calories to survive.
 
Tamils do not only know how to cook delicious food. He knew how to eat them and had a variety of beautiful Tamil words for it. Here are those words
 
Drinking [அருந்தல் , குடித்தல், பருகல்], Eating [உண்ணல், துற்றல், தின்றல்] Sucking [உறிஞ்சல்], taste and enjoy the food [துய்த்தல்], Lick [நக்கல்], devouring [நுங்கல்], Chewing [மெல்லல்], Swallowing [விழுங்கல்] and so on. We use these words everyday. But we speak without knowing whether we are using these in the right places. It is the specialty of Tamil that each word is given according to its nature. Here I have also pointed out the method of using the words given for eating.
 
Drinking [அருந்தல் / குடித்தல் / பருகல்] = intake of liquid or liquid food (E.g .: 'took medicine' / மருந்து அருந்தினான் / drank porridge / கஞ்சி குடித்தான் / he drank yogurt drink / மோர் பருகினான்). Eating [உண்ணல் = துற்றல்] Indicates intake (e.g. Full-fed / வயிறார உண்டான்). Sucking [உறிஞ்சல்] = The word refers to the intake (e.g Sipping a drink through a straw / Sucked water with). தின்றல் = திற்றி Also known as திற்றில். It also refers to the feeding of living beings / இச்சொல் கொறித்தலையும் அஃறிணை உயிர்கள் தீனி கொள்வதையும் குறிக்கும் (e.g He ate a kind of short eat / முறுக்குத் தின்றான்). துய்த்தல் = taste and enjoy the food (eg:பல்சுவைப் பண்டம் துய்த்தான்). Lick [நக்கல்] = pass the tongue over (something) in order to taste e.g Licked with honey. devouring [நுங்கல்] = rushing to grab the whole thing in one mouth / eating food or prey hungrily or quickly. The word refers to the intake (e.g the wolf is a devouring beast). Chewing [மெல்லல்] = chewing and swallowing a piece of food / கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்வதை இச்சொல் குறிக்கும். Swallowing [விழுங்கல்] = The act or process of swallowing food (e.g. swallowed the pill / மாத்திரை விழுங்கினான்)
 
Sudamani Nigandu also describe about five type of foods, which human consumes by biting with teeth, licking, drinking, Swallowing and Slow Tasting. Also Mr. Ira Venkatagiruttinan in his book 'தமிழே முதன்மொழி / Tamil is the first language' mentions that there are more than twenty five words in Tamil for type of food intake and also gives the word "சப்புதல் / sapputhal", from which Tamil words for meal developed as: சப்பிடு - சாப்பிடு - சாப்பாடு
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 08 WILL FOLLOW
414983818_10224510625735928_2761463870591537362_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=mL72cBSe0T8Q7kNvgG97oUT&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBCKP-yt5RPVpqUWyCklcI-TIjoQMOtqecOyskuKQU9OQ&oe=663DB33B 414986122_10224510625455921_2384262144213738435_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=mf3e5L_afs4Q7kNvgGKh4sH&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDpYfkZlNBBxG9f3uIi-TERQIt7pTkIviinz2L3ClZb-Q&oe=663DCCA6 414981028_10224510625495922_1640960012995283924_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=YyqA8GEelVYQ7kNvgEdvVHs&_nc_oc=AdiuhRERBhRvoORN8a4Lf-B6oY-EIDVdER9hvCZygPMTNfFGGG8lTn234hvHqA8ah7H7ooSo6hLsqBJTaNMqAbnL&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC5s4_g1ekE7FkgTafJVrIaet_Gy5YuaPfgDiFi28dxQw&oe=663DB29E 414957150_10224510626375944_8305766789494749896_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=wryFAlLZDRYQ7kNvgGncHrl&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBgdlcywXIBIAyvh9Wh720cfWIKZ38NAOIyZ-kZ8-fjZA&oe=663DBA95 414996740_10224510626415945_7439305802581916484_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=UdofI0yYMNUQ7kNvgEjyrp4&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfABEvB9E46U5L6ZZ72bsCOEIV-vlMEKxG2_pOvBkoZiCw&oe=663DCA42 
 
 
 

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 06 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"

2 weeks ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி : 06 "பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD CONTINUING"
 
 
 
இன்றில் இருந்து, 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கும் 10,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட பழைய கற்காலத்தில் அதாவது விவசாயத்திற்கும் கைத்தொழிலிற்கும் முற்பட்ட காலத்தில், மனித இனம் பொதுவாக வேட்டையாடுபவராகவும், உணவு சேகரிப்போராகவும், ஒரு நாடோடி வாழ்க்கை முறையைக் மேற்கொண்டனர். கனிகள், காய்கள், கிழங்குகள் மற்றும் விலங்குகளின் இறைச்சிகள் இவர்களது முக்கிய உணவுப் பொருள்களாகும். பாலூட்டிகளை சோர்வடையும் வரை துரத்தினார்கள். பெரிய சூறையாடும் [மற்றப் பிராணிகளைத் தின்கிற] விலங்குகள் விட்டுச் சென்ற பிராணிகளின் இறைச்சி, கொழுப்பு, உறுப்பு போன்ற அழுகு ஊன்களை உண்டார்கள்.
 
என்றாலும் ஒருவாறு இறுதியில், அவர்கள் மீனைத் தூண்டில் போட்டு பிடிக்கவும் ஈட்டி, வலை, அம்பு, வில்லு போன்றவை கொண்டு வேட்டையாடவும் கற்றுக் கொண்டனர். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் உணவு முக்கிய இடத்தை பெறுகிறது. இது பல மாற்றங்கள் பெற்று, எமது முன்னோரில் இருந்து வழிவழியாக எமக்கு வந்துள்ளது. இன்று நாம், சிறந்த உணவை எமக்கு தேர்ந்து எடுப்பதற்கு, எப்படி நாம் பரிணாம வளர்ச்சி பெற்றோம் என்பதை விளங்கிக் கொள்வது கட்டாயம் உதவி புரியும்.
 
இன்று ஒவ்வொரு உயிர் இனமும் பொதுவாக சாப்பிடும் உணவு - அது பழமாகவோ, காய்கறியாகவோ அல்லது விலங்காகவோ அது எப்படி இருப்பினும் - அவை, அவைகளின் பழைய கற்கால முன்னோர்களின் உணவு பழக்கத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நாம் சாப்பிடும் தாவர, விலங்கு வகைகள் செயற்கைத் தேர்வு மூலம் மாற்றப்பட்டது. இன்று, முடிந்த அளவுக்கு இறைச்சி, பால், முட்டை முதலியவற்றைக் கூடுதலாக பெறக் கூடியதாக நாம் மாடு, கோழி, ஆடு போன்றவற்றை தேர்ந்து எடுத்து வளர்ப்பதுடன் பெரிய பழங்கள், மென்மையான, பொதுவாக உண்ணக்கூடிய கொழுப்பான கொட்டைகள், விதைகள் போன்றவற்றை அதன் ஓடுக்குள், நடுப்பகுதியில் கொண்ட பழங்கள், இனிமையான சதையையும் குறைந்த இயற்கையான நச்சுகளையும் கொண்ட பழங்கள் அல்லது காய்கறிகள் [biggest fruits, plumpest kernels, sweetest flesh and fewest natural toxins] போன்ற விரும்பத் தகுந்த தன்மைகளைக் கொண்ட விதைகளை தேர்ந்து எடுத்தும் நாம் விதைக்கிறோம்.
 
எமது முன்னோர்கள் ஒரு நாளைக்கு எத்தனைத் தடவை உணவு உட்கொண்டார்கள் என்பது எமக்கு சரியாகத் தெரியா விட்டாலும், இன்று போல் அன்று மூன்று வேளை உணவு கட்டாயம் அவர்கள் உட்கொண்டிருக்க மாட்டார்கள் என்பது புரிகிறது. அன்றைய சூழ்நிலையில், அதிகமாக தமது பெரும்பாலான உணவை பிற்பகலில் அல்லது மாலையில் உண்டார்கள் என நாம் ஓரளவு சரியாக ஊகிக்க கூடியதாக உள்ளது. வேட்டையாட விலங்கு ஒன்று கிடைக்க வேண்டும், பின் அதை வேட்டையாடி கொல்ல வேண்டும். துண்டுகளாக வெட்டி, அதிகமாக சமைக்க வேண்டும். அதே போல கிழங்குகளும் காய் கறிகளும் கண்டுபிடிக்க வேண்டும், அதன் பின் தோண்ட வேண்டும் அல்லது பறித்து எடுக்கவேண்டும், இறுதியாக அவைகளை சாப்பிடக் கூடியதாக தயார் செய்ய வேண்டும்.
 
ஆகவே ஏதாவது காலை உணவு இந்த வேட்டையாடு பவர்களாலும், உணவு சேகரிப்போராலும் சாப்பிடப் பட்டது என்றால் அது கட்டாயம் முன்னைய இரவின் மிச்சமாகவே இருக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு, எந்தெந்த நேரம் சாப்பிட்டார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. என்றாலும் ஒன்று மட்டும் நன்றாகத் ஊகிக்க முடிகிறது. அவர்கள் வளர்ப்பு பிராணிகள் அல்லது முன்பு அறுவடை செய்த தானியங்கள், கிழங்குகள் வைத்து இருந்தாலொழிய மற்றும்படி, நித்திரையால் எழும்பியதும் உடனடியாக சாப்பிட அவர்களால் முடியாது. ஆகவே எமது முன்னைய வேட்டையாடு பவர்களாலும், உணவு சேகரிப்போராலும் அதிகமாக காலை உணவு சாப்பிட சந்தர்ப்பம் மிக மிகக் குறைவாகவே இருந்து இருக்கும்.
 
மேலும் இந்த சாவகாசமான வேட்டையாடுபவரினதும், உணவு சேகரிப்போரினதும் வாழ்வை விட விவசாயம் கடும் உழைப்பை கொண்டது. அது மட்டும் அல்ல, சேவல் கூவலுடன் அதி காலை தொடங்குகிறது. ஆகவே தமது நீண்ட கடும் வேலையை தொடங்கும் முன்பு, எமது முன்னைய விவசாயிகள் தம்மை பலப்படுத்த ஏதாவது ஒன்றை - தம்மிடம் உள்ளதைக் கட்டாயம் உண்டிருப்பார்கள் என நாம் நம்பலாம். மேலும் இது ஆச்சரியப் படகூடிய ஊகமும் அல்ல.
 
பொதுவாக ஒரு நாளில் மூன்று முறை உணவு உட்கொள்ளுதல் இயல்பான ஒன்று என்ற எண்ணம் எம்மிடம் இன்று உள்ளது. ஆனால் அப்படி என்றும் இருக்கவில்லை. இது இன்றைய பண்பாட்டில் ஏற்பட்ட ஒரு நடை முறையே ஆகும். உலகத்தில் உள்ள எல்லா மக்களும் - மேற்கு நாடு உட்பட - அனைவரும் என்றும் மூன்று முறை உணவு உட்கொள்ள வில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வேளை உணவு முறையே வழக்கத்தில் இருந்ததாக BBC யின் "history of breakfast, lunch and dinner." என்ற கட்டுரை ஒன்றும் கூறுகிறது. நாம் இன்று கேள்விப்படும் காலை உணவு முறை மனித வரலாற்றின் பெரும் பகுதியில் காணப் படவில்லை. ரோமர்கள் அப்படி ஒன்றை உண்ணவில்லை. அவர்கள் பொதுவாக ஒரு உணவையே மதியம் வேளை உண்டார்கள் என உணவு வரலாற்றாளர் கரோலின் யெல்தம் [Caroline Yeldham ] கூறுகிறார்.
 
பண்டையக்கால சரித்திரத்தை புரட்டி பார்த்தோம் என்றால், அதில் கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் வரலாற்று நிகழ்வுகள் பெரும் பகுதியாக நிறைந் திருக்கும். அப்படி பெருமைப் படத்தக்க கல்வி, தடகள கலாச்சாரங்களை [academic and athletic cultures] கொண்ட இந்த மக்கள் ஒரு சமைத்த பெரிய விருந்தாக - முதன்மை உணவாக - ஒரு நேரம் - அதிகமாக, பின்னேரம் அல்லது பிற்பகலில் உட்கொண்டார்கள். ஆகவே, அதிகமாக அவர்கள் இரண்டு உணவு உட்கொண்டார்கள் என நாம் ஊகிக்கலாம். அவர்கள் அதிகமாக, இந்த முதன்மை உணவிற்கு முன் ஒரு சிறிய உணவு எதோ ஒரு நேரத்தில் எடுத்து இருக்கலாம்.
 
"To rise at six, dine at ten, sup at six and go to bed at ten, makes a man live ten times ten." / "காலை ஆறுக்கு துயில் எழுந்து, பத்துக்கு [உணவை] உண்டு ,பின் ஆறுக்கு [இரா உணவை] உண்டு, பத்துக்கு [நித்திரைக்கு] கட்டிலுக்கு போய், வாழ்வை பத்து மடங்கு பத்தாக உயர்த்துவோம்"
 
என்ற பதினாறாம் நுற்றாண்டு பழமொழி ஒன்று என் நினைவுக்கு வருகிறது. எனவே மூன்று முறை உணவு என்ற கருத்து மிக அண்மையானதே. முன்னைய எமது முதாதையர்கள் அதிகமாக இரு முறையே உட் கொண்டிருப்பார்கள். சூரிய உதயத்திற்கு சற்றுப் பின்பும் சூரிய மறைவிற்கு சற்று முன்பும் ஆகும். இரவு உணவு முறை, அதிகமாக மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்ட பின் வந்து இருக்கலாம். நாம், வரலாற்றில் வளர்ச்சி அடைந்து கொண்டு போகையில், எமது நட வடிக்கையும் நீண்டு பிற்பகலின் பிற்பகுதி மட்டும் சென்றது. ஆகவே அவர்களுக்கு தமது உணவை அதற்குத் தக்கதாக பரப்ப அல்லது நீட்ட வேண்டி இருந்தது.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 07 தொடரும்
 
 
FOOD HABITS OF TAMILS / PART 06 "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING"
 
 
Our ancestors in the Palaeolithic period, between 2.5 million and 10,000 years ago and before agriculture and industry, lived as hunter - gatherers : picking berry after berry off of bushes; digging up tumescent tubers; chasing mammals to the point of exhaustion; scavenging meat, fat and organs from animals that larger predators had killed; and eventually learning to fish with lines and hooks and hunt with spears, nets, bows and arrows. Diet has been an important part of our evolution - as it is for every species - and we have inherited many adaptations from our Paleo predecessors. Understanding how we evolved could, in principle, help us make smarter dietary choices today. Every single species commonly consumed today - whether a fruit, vegetable or animal - is drastically different from its Palaeolithic predecessor. In most cases, we have transformed the species we eat through artificial selection: we have bred cows, chickens and goats to provide as much meat, milk and eggs as possible and have sown seeds only from plants with the most desirable traits - with the biggest fruits, plumpest kernels, sweetest flesh and fewest natural toxins.
 
it’s a reasonable assumption that our ancestors ate most of their food in the afternoon or evening. For example, Game had to be found, hunted, killed, butchered, and usually cooked. Tubers and vegetables had to be found, dug, gathered and prepared. So any “breakfast” eaten by hunter - gatherers would most likely have been leftovers from the night before - if they were lucky enough to have any. No one knows the exact timing and size of meals in different agricultural societies throughout history and I don’t put much stock in what passes for historical accounts, but it’s clear that we’re not going to reliably have food to eat soon after awakening unless we’ve got domesticated animals, or a storehouse of previously harvested and prepared grains or tubers. As opposed to the leisurely life of hunter-gatherers, which usually involves dramatically less work than ours farming is labor - intensive, and it usually starts at dawn with the rooster - so it’s not surprising that people would want to fuel up before beginning a long day of hard work. Historically, farmers seem to have eaten whatever food they had available. Hunter-gatherers most likely ate breakfast infrequently, if at all. When they did, it was leftovers.
 
Have been brought up on the idea of three square meals a day as a normal eating pattern, but it wasn't always that way. We grew up believing in three meals a day. But it's a cultural construct. People around the world, even in the West have not always eaten three squares. The three - meals model is a fairly recent convention, For more than a thousand years the one-meal system was the rule from a great BBC article on the history of breakfast, lunch and dinner. Breakfast as we know it didn’t exist for large parts of history. The Romans didn’t really eat it, usually consuming only one meal a day around noon, says food historian Caroline Yeldham. So in the history of some of the greatest academic and athletic cultures, they ate but only one “main” meal per day! In terms of “meal” in the quotes above, this was most likely referring to their larger “cooked” feast later in the day. It was more like 2 meals. The later meal being the main and larger one, but they most likely also had an earlier smaller “meal” at some point. For me …. I like this old 16th century proverb to sum it all up: "To rise at six, dine at ten, sup at six and go to bed at ten, makes a man live ten times ten". I think the concept of 3 meals a day is very recent. Early humans probably had 2 meals a day-just after sunrise and just before sunset. 2 meals probably made more sense as it synchronised with day and night. The concept of a night - time meal is probably after the invention of electricity. As we evolved, we started doing more activities that stretched into the later part of the evening - so probably needed to spread out our meals.
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 07 WILL FOLLOW
414308216_10224479093747648_2933440331078074239_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=X2GL3_DSc0AQ7kNvgH5XuCy&_nc_oc=Adhw9qHxLlBY9sF8uG8VKcI3W_31Fx2Zg_VR9cgun3qIFIy_voZWiFbpskMSf-eW8psnf5QqzQDN_hDlInbeydjO&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDzOA-8TNHmOz9evWr18gP5RQ6XQN9IsrK1No3fT17jlA&oe=6638A3F0 415251454_10224479095107682_5783605810467282604_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=5IiaHb_q9nQQ7kNvgFBPueC&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDJi5oXgPcX8z-h6nARTDkGAj_zZZvY0UC2GjJ_CY2Oiw&oe=6638B849 414243988_10224479095507692_4398023398133369439_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=m8RcZJDSpsUQ7kNvgFSSWYI&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC4h09s5K4kooqY33ejaDGih8WwzIge3-keGWlJgzu3pw&oe=6638C7A6 414301775_10224479093987654_4205223432149234683_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=N3DRIv7MUvUQ7kNvgFLtf3G&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAljiMuzwFZ3NxcFkSDZNSYRJH7sYjYjCut_A54qBm2Aw&oe=6638B778 415253665_10224479094787674_6000744892504236671_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vhlaR8dtOskQ7kNvgH7LYW5&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAJdyD9OBnpPJfttowlPkZRjor8HoPYj7dSC1_-km50EQ&oe=6638A30C 
 

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 05 "பழைய கற்கால உணவு பழக்கங்கள்" / "Food habits of Paleolithic age"

2 weeks ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 05 "பழைய கற்கால உணவு பழக்கங்கள்" / "Food habits of Paleolithic age" [இன்றில் இருந்து, 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கும் 10,000 ஆண்டுகளுக்கும் இடைப் பட்ட பகுதி / between 2.5 million and 10,000 years ago]
 
 
மனிதன் அனைத்துண்ணியாக [தங்களுடைய முதன்மை உணவாக தாவரம், விலங்குகள் ஆகிய இரண்டையும் கொள்ளும் உயிரினங்கள்] இன்று இருந்தாலும், அவன் அடிப்படையில் புலாலுண்ணுபவனாகவே பல மில்லியன் வருடங்களாக இருந்தான் என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளார்கள். அவன் தொடக்கத்தில் இருந்து கிட்டத் தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அதாவது புதிய கற்காலம் வரை, மனிதன் ஒரு நாடோடியாக, வேட்டையாடியும் காட்டு பழங்களையும் மரக்கறிகளையும் பொறுக்கி யெடுத்தும் வாழ்ந்தான். இடைக் கற்காலத்தை அடுத்து, வேளாண்மைத் தொழில் நுட்பத்தின் எழுச்சியுடன் உருவான, புதிய கற்காலத்தில், நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்பு தோன்றி, அவன் ஓர் இடத்தில் குடியேறி வாழத் தொடங்கினான். அவனின் உணவு பழக்கங்களில் முதலாவது வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன. கால்நடை வளர்ப்பு அவனுக்கு தொடர்ந்து ஊனுணவு [இறைச்சி] கிடைக்க வழிசமைத்தது. தொடக்கத்தில் செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. பின்னர் இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. புதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினமாகவே இருந்தன. இவை சில வகைக் கோதுமை, கம்பு [Pennisetum glaucum, Pearl Millet / ஒரு தானியம்], வாற்கோதுமை [பார்லி] போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன. அதன் பின் பருப்பு, பட்டாணி போன்ற பயறு வகைகளும், இறுதியாக, மரக்கறிகளும் பழங்களும் வளர்க்கப்பட்டன. இடைக் கற்காலஞ் சார்ந்த வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களுடன் ஒப்பிடும் போது, இந்த வேளாண்மை - கால் நடை பண்ணை மனிதனின், உணவு வகை கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. ஏனென்றால், ஒரு சில மிருகங்களே வீட்டு மிருகமாக மற்ற முடியும் என்பதாலும், அதே போல சில தானியங்கள், மரக்கறிகள் மாத்திரமே பயிர் செய்யக் கூடியதாக இருந்ததாலும் ஆகும். இந்த - எமது முதாதையரின் வாழ்க்கையின் அடிப்படை மாறுபாடு, அதன் தடயத்தை எம்மிடம் விட்டுச் சென்றுள்ளது. முதலாவதாக, இது மனிதனின் ஆரோக்கியத்தை பாதித்தது. பெரும்பாலும் அங்கு விவசாயத்தில் நிலவிய ஒரே வகை பயிர் செய்யும் போக்கு, மக்களின் உணவுகளில் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டது. அது மனிதனின் உயிர் வாழும் காலத்தை குறைத்தது. முன்னைய, பழமையான மனிதன் இயற்கையுடன் ஒன்றியும் அதனுடன் சமநிலைத் தன்மையுடனும் வாழ்ந்தனர். அவனது இயற்கை உணவு, காலநிலையுடன் அல்லது மற்ற இனங்களின் இடம் பெயர்தலுடன் ஒன்றி, தனது முன்னைய இடத்தில் இருந்து வேறு ஓர் இடத்திற்கு அசையும் போது, அவனும் அதனுடன் சேர்ந்து இடம் பெயர்ந்தான். ஆனால், ஓர் இடத்தில் அவன் நிலையாக குடியேறிய போது, மனிதன் தனக்கு தானே சில புதிய வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் திணித்தான்.
 
 
பழைய கற்காலத்தில், வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழக்கத்தினை கொண்ட அந்த ஆதிகாலத்து மனிதனின் உணவு பொதுவாக அங்கு நிலத்தில் வாழும் உயிரினங்களும் அங்கு தானாக முளைத்த தானியங்களும், பழங்களும் ஆகும். தொல்லுயிர் எச்சம் அல்லது புதை உயிர்ப் படிவ ஆதாரங்கள் இவர்களின் நாளாந்த உணவு அதிகமாக ஊன் [புலால்] உணவு என எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக இவர்கள் ஊட்டச்சத்து அதிகம் உள்ள மிருக இறைச்சி பகுதிகளான ஈரல், சிறு நீரகங்கள், மூளைகளை [liver, kidneys, and brains] விரும்பி உண்டார்கள். இந்த கற்கால மனிதர்கள் பால் உணவுகளை பெரிதாக சாப்பிடவில்லை. அத்துடன் அதிக மாவுச்சத்து [கார்போஹைட்ரேட்] உணவுகளான அவரை, அரிசி, கோதுமை, சோளம் [wheat, corn, rice…] போன்றவையையும் சாப்பிட வில்லை. இந்த பழைய கற்கால வேடர்களின் உணவின் தொகுதியில் கிட்ட தட்ட 2/3 பகுதி சக்தி மீன், மட்டி [fish and shellfish] உட்பட ஊன் உணவில் [இறைச்சியில்] இருந்தும், எஞ்சிய 1/3 பகுதி மட்டுமே தாவர உணவில் இருந்தும் எடுக்கப் பட்டுள்ளன என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. ஆகவே கற்கால மனிதர்கள் கூடுதலாக புரதத்தையும் குறைவாக மாவுச் சத்தையும் எம்மை விட சாப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கொழுப்பு சத்தை எம் போலவே உட் கொண்டார்கள். ஆனால், கொழுப்பின் வகை பரந்தளவில் வேறுபடுகின்றன. உதாரணமாக விவசாயத்திற்கு முன்னைய மனிதனின் ஒமேக 6 கொழுப்பு அமிலம் / ஒமேக 3 கொழுப்பு அமிலம் (Omega-3 & 6 fatty acids) விகிதம் 3:1 ஆக இருந்துள்ளது, ஆனால் இன்றைய பெறுமானம் 12:1 ஆகும். அத்துடன் அன்றைய மனிதன். தானியங்களை விட, பழங்களும் மரக்கறிகளும் மட்டுமே உட்கொண்டதால், மாவுச் சத்து அவர்களிடம் குறைவாகவே காணப்படுகிறது. விவசாய புரட்சிக்கு பின்பு தான் கோதுமை, அரிசி மற்றும் அது போன்ற தானியங்கள் மனிதனின் நாளாந்த உணவாக வந்தன.
 
 
ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்கள் முழுவதும் பெரிய பாலூட்டிகள் அழிந்து போனதால், இலகுவாக வேட்டையாடக் கூடிய மிருகங்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டதால், இந்த வேடுவர்கள் தமது உணவையும் உணவு பழக்கங்களையும் குறிப்பாக, தாம் செறிந்து வாழும் இடங்களில் மாற்றி அமைக்க வேண்டி இருந்தது . இந்த சூழ்நிலை மாற்றம், உணவு சார்ந்த தாவர விவசாயங்களுக்கு அடிகோலியது. இந்த மாற்றத்தின் பின், மாவுச் சத்து முன்னைய மனிதனின் உணவில் வழக்கமான அம்சமாகியது.
 
 
மனிதன் அற்ற, எல்லா வாலில்லாக் குரங்குகளும் அல்லது மனிதக் குரங்குகளும் அடிப்படையில் பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், உண்ணும் தாவர உண்ணிகளாகும். ஒராங்குட்டான், கொரில்லா [Orangutans and gorillas] போன்றவை தாவர உண்ணிகளே , எனினும் சிம்ப்பன்சி [chimpanzee] அதிகமாக, குறைந்தது 90% தாவர உண்ணியாக இருப்பதுடன், இதன் வேட்டையாடும் திறனும் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் ஆண் சிம்ப்பன்சி, பெண்ணை விட பெரும்பாலும் அதிகமாக புலால் உண்ணக் கூடியது. இங்கு ஒரு மிக சுவாரஸ்யமான விடயம் அதனின் பிடரிப்புடைப்பு அல்லது தலையின் பின்புற முகடு "occipital ridge" ஆகும். அதாவது கொரில்லாவின் கூம்பு வடிவத் தலை ஆகும். மிகவும் பலமான தாடை தசைகளை [jaw muscles] தாங்கிப்பிடிக்க occipital ridge உண்டாகினது. ஒரு நாள் முழுவதும் பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகளை சாப்பிடுவது அவ்வளவு இலகுவல்ல. அதற்கு பலமான தாடை தசைகள் தேவைப் படுகின்றன. ஏறத்தாள 2.4 மில்லியன் வருடங்களிற்கு முன், மனிதன், குரங்கில் இருந்து பிரிந்து, இந்த occipital crest ஐயும் இழந்தான். இதனால் நாள் முழுவதும் தாவரங்களை சாப்பிடுவது கடினமாகியது. ஆகவே அந்த முதல் மனிதனுக்கு தகுந்த இரை தேடும் திறமை தேவைப்பட்டது. அப்பொழுது இந்த மனித இனம் கூடுதலாக புலாலுணவும் மிக குறைந்த அளவு தாவரங்கள் உணவும் சாப்பிடத் தொடங்கின. அத்துடன் பின்மண்டை மேடை [occipital ridge ஐ] இழந்ததால் பெற்ற மேல் அதிகமான இடம், மூளை வளர்ச்சிக்கு தேவையான மேல் அதிகமான இடத்தை கொடுத்தது [The loss of the occipital ridge created increased space for brain development].
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 06 தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" / PART: 05 "Food habits of Palaeolithic age" [between 2.5 million and 10,000 years ago]
 
 
Historians are unanimous in stating that although man is omnivorous, he has been essentially carnivorous for millions of years. From the beginning and up to the Neolithic Period, approximately 10 000 years ago, man was a nomad who lived by hunting and picking wild fruit and vegetables. During the Neolithic Age, as these men became more and more sedentary, man’s eating habits suffered the first of the dramatic changes to come. Animal breeding allowed him to continue to have meat to eat (although not exactly the same kind of meat) while the development of agriculture let him plant his own food and produce cereals (wheat, rye, barley …, later on pulses (lentils, peas…) and lastly, vegetables and fruit. Compared to the hunter - food pickers of the Mesolithic Age, the farmer - cattleman had considerably reduced the variety of the food he ate. In fact, very few animals could be domesticated or bred and only certain vegetables could be grown. This revolution in our ancestors’ lifestyle left its mark. Firstly, it affected human health. As a result of the tendency to grow one sole crop, people’s diets became deficient; that which shortened their life span. Primitive man lived in harmony and in balance with nature. When he moved from one place to another with the different species ’migratory movements or with the seasons, his natural food too change as well. Upon becoming sedentary, man imposed new limitations and restrictions on himself.
 
 
During the Palaeolithic period of the Stone Age, humans were hunter - gathers whose diet foods included both the animals and plants that were part of their natural environment. Fossil evidence from groups of hunter - gatherers suggests that the daily diet came mainly from animal based foods. In particular, they enjoyed animal organ meats like the liver, kidneys, and brains - meat foods that are extremely rich sources of nutrition. Stone Age humans didn't consume much dairy food, nor did they eat high carbohydrate foods such as beans and cereal grains (wheat, corn, rice…). Latest studies into the composition of Palaeolithic hunter - gatherer diets show they obtained about two - thirds of their energy intake from animal foods, including fish and shellfish and only one - third from plant foods. Stone Age humans ate more protein and less carbohydrate than we do now. Their fat intake was similar to today but the type of fat was vastly different. For example, the average Omega-6 / Omega-3 ratio in pre-agricultural humans was about 3:1,compared to about 12:1 today. Carb intakes were lower as the main plant foods were fruits and vegetables rather than cereals. It was only after the agricultural revolution that wheat, rice, and other cereal grains became a regular feature of the early hunter gatherer diet. With the extinction of large mammals throughout the continents of Europe, Asia, and North America, and the depletion of easily hunted animals, hunter gatherers had to modify their diet and eating habits, especially in more densely occupied areas. This changing environment helped to create the agricultural revolution and the cultivation of plant - based foods. After this switch in human behaviour, carbohydrates would become a regular feature of the early human diet.
 
 
All non-human apes are basically vegetarians. Orangutans and gorillas are peaceful vegetarians. browsing fruits and leaves in trees. chimpanzee are mostly vegetarian, usually at least 90%, but they will eat meat once in a while - Males are more likely to eat meat than are females - although chimp hunting skills are relatively poor. These Gorillas and macaques, share large crests on their skulls to which their heavy jaw muscles attach. Such structures are notably absent from human skulls despite our fairly close genetic kinship with gorillas. It’s not easy to eat plants all day long. You need strong jaw muscles like them. But 2.4 million years ago, humans split from other apes and lost the occipital crest. A mutation 2.4 million years ago could have left us unable to produce one of the main proteins [a protein called MYH16] in primate jaw muscles, This made it harder to eat plants all day and required better foraging skills. At this time, humans or Homo started eating a lot more meat and a lot less plants. The occipital ridge was lost because believe it or not, it’s easier to eat meat than it is to eat plants all day. The loss of the occipital ridge created increased space for brain development.
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 06 WILL FOLLOW
412345823_10224448207575513_6604623414762384479_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qOAXnpR6DNsQ7kNvgF_XQ3i&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBN5E2qfO-Ghs79GVm2ZnUgGKSjxrD1tm77biYSGZ2mVQ&oe=6638034D 412345768_10224448209015549_3543285538225042932_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=uyk8200X2yoQ7kNvgGuWnCc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB25UOWWfmUChccaJqJGYBPe9dc_KjTrkS2jqSPxD6eLg&oe=6638258F 412340561_10224448207615514_1092524687396453032_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_iEPYKPV5OoQ7kNvgEbn_XM&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBQtzOCv7UkKlkrIWsAjFqAQ_7KjqoMkYy-oEgDq61t_w&oe=66382C02 412354397_10224448208055525_1083196257142684803_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=c42TVDU6tK4Q7kNvgEDLjlS&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCAkleiWosgWHCTjzbKzGCXW8E-fvybN7yIT53wSxKaeg&oe=66382369 412321272_10224448208415534_268854516944168744_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=QQeFySytvkAQ7kNvgEuFx4N&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBUJDL-rZZQ6d5WlCiALxLYJTWFvURCPt7bfLc9AFoGBw&oe=6638063D
 
 
 
 
 

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 04 "அறிமுகம் தொடர்கிறது" / "Introduction continuing"

2 weeks 1 day ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 04 "அறிமுகம் தொடர்கிறது" / "Introduction continuing"
 
 
பொதுவாக தமிழர்களின் பாரம்பரிய உணவாக, பிறந்த பிள்ளைக்கு [குழந்தைக்கு] முதன் முதலாக ஆறாம் அல்லது ஏழாவது மாதத்தில் சக்கரைப் பொங்கல் அல்லது தேனும், தயிரும் நெய்யும் கலந்த சோறு ஊட்டப்படும். அதே போல குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும், பல்லுக்கொழுக்கட்டை என்ற பெயரில் கொழுக் கட்டை அவித்து, அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுவார்கள். முதலாவது மாதவிடாய் வெளியேற்றமானது சாமத்தி அடைதல் [சாமத்திய சடங்கு], பூப்பெய்தல், பருவடைதல், பெரிய பிள்ளையாதல், மஞ்சள் நீராட்டு விழா எனும் பெயர்களால் இன்னும் பாரம்பரியமாக தமிழர்களும் வேறு பிரிவினரும் [ஆப்பிரிக்கா] கொண்டாடு கிறார்கள். உளுந்தக் களி, நல்லெண்ணெய் என உணவே மருந்தாக, உடல்நலத்தை மையமாகக் கொண்டு, உணவு அங்கு கொடுக்கப்படுகின்றன. முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு, ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது. அங்கு பல வித சாதம் / பொங்கல் [புளி சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், ...] இடம் பெறுகின்றன. இதே போல வெயில் காலத்தில் உழவர்களும் மற்றும் வெயிலில் நெடுநேரம் வேலை செய்ய வேண்டியுள்ள தொழிலாளிகளும் ஒடியல், கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து தயிர் சேர்த்துத் தயாரிக்கப்படும் கூழ்ம நிலையிலுள்ள உணவான 'கூழ்' உணவை விரும்பி உண்கின்றனர். அண்மைக் காலங்களில் உடல் நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
தமிழர் வாழும் இடங்களில், உணவு பழக்கங்கள் மிக மந்தமாகவே மாற்றம் அடைகின்றன. என்றாலும் மாற்றத்தின் சில அறி குறிகள் இப்ப தெளிவாகக் தென்படு கின்றன. பொதுவாக கோதுமை மா, தாராளமாக நகர்ப்புற பகுதிகளில் பாவிக்கப்படுகின்றன, அவர்கள், கோதுமை மாவில் சூடுபடுத்தி தயாரிக்கப்படும் சப்பாத்தியை பெரும்பாலும் இரவு சாப்பாட்டாகவும், கோதுமை மாவில் பொறித்து தயாரிக்கப்படும் பூரியையும், அதனுடன் உருளைக்கிழங்கையும் காலை சாப்பாட்டாகவும் அரிசிக்கு பதிலாக பாவிக்கிறார்கள். இன்றைய நவீனமயமாக்கல், தமிழரின் சமையல் அறையிலும் மெல்ல மெல்ல மாற்றங்களை கொண்டு வருகின்றன. விட்டுக் கொடுப்பும் இணக்கமும் கண்டு மாற்றி அமைக்கப் படுகின்றன. விரிவாக மிகுந்த அக்கறையுடன் நிதானமாக சமைக்க வேண்டிய பாரம்பரிய உணவு செய்முறை மறைந்து வருகின்றன. முன்னமே தயாரிக்கப்பட்ட [ரெடிமேட்] இட்டலி கலவை, தயார் செய்து பெட்டியில் அடைக்கப்பட்ட கறித்தூள், போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் இப்ப நகர்ப்புற சமையல் அறைகளை ஆட்டிப்படைக்கின்றன. அது மட்டும் அல்ல மின்னாற்றலால் இயங்கும் மேசை மேலான ஈரமாவு அரவைப் பொறி, இப்ப ஆட்டுக்கல்லிற்குப் பதிலாக இட்லி, தோசை, வடை போன்றவை தயாரிக்கப் பயன்படு கின்றன. கூட்டுக் குடும்பம் மறைந்து இன்று தனிக் குடும்பம் எங்கும் பரவலாகக் காணப் படுவதும், தொழில் புரியும் பெண்கள் அதிகரித்து இருப்பதும், இப்படியான தவிர்க்க முடியாத இன்றைய சூழ்நிலை, தமிழர்களின் சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துள்ளது. அவர்கள் இன்று இலகுவான சில உணவு வகைகளை நாடு கின்றனர். எனினும் தமிழர் உணவு நடைமுறைகள், அவர்களின் பண்பாட்டு தாக்கங்கள், ஈடுபாடுகள் இன்னும் அவைகளின் அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளன. முதலாம் நூற்றாண்டு சில உணவு செய்முறைகளை இன்னும் அப்படியே அவ்வளவு பெரிய மாற்றம் இன்றி இன்னும் பின்பற்றுகிறார்கள்.
 
"பெரு மனிதக் குரங்குகள்" என அழைக்கப்படும் சிம்ப்பன்சிகள், அண்மைக் காலம் வரை குறள சிம்ப்பன்சி அல்லது குட்டிச் சிம்ப்பன்சி (Pygmy Chimpanzee) என்று அழைக்கப்பட்ட, பொனொபோ, இவைகளின் பரம்பரையில் ஹோமோ சப்பியென்ஸ் ஆகிய மனிதனின் பொது முதாதையர் தொடக்கம் இன்றுவரை உணவு பழக்க வழக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் அடைந்துள்ளன. இந்த தொடர் கட்டுரையில் , குறிப்பாக திராவிடர் முதாதையர்களிடம் எப்படி உணவு பழக்கங்கள் வளர்ச்சி அடைந்தன, அவை எப்படி இன்றைய திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களை வடிவமைத்தன என அலச உள்ளோம். மனுவேந்தனின், தீபம்.கொம் [Theebam.com] இலும், என் வலைத்தளம் "A DROP IN THE OCEAN / கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam, இலும், 82 பகுதிகளாக "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" என்ற எமது தொடரில் நாம் விரிவாக ஏற்கனவே விளக்கியவாறு, மெசொப்பொதாமியா சுமேரியர்கள், ஹரப்பா - மொகெஞ்சதாரோ போன்ற பகுதிகளை சேர்ந்த சிந்து சம வெளி மக்கள், தமிழக சங்கம் மக்கள், தமிழக மத்திய கால அல்லது பக்தி கால மக்கள் - இவர்கள் எல்லோரும் இன்று திராவிடர்களிடம் / தமிழர்களிடம் காணப்படும் உணவு பழக்க வழக்கங் களுக்கும், அவைகளை வடிவமைப் பதற்கும் காரணமாக இருந்து உள்ளனர். ஆகவே இந்த தொடரை ஆரம்பத்தில் இருந்து எல்லா கால கட்டங்களிற்கும் ஊடாக நகர்த்தவுள்ளோம். அநேகமாகக் 'கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் ...’ என்ற திரைப் பாடல் தமிழர்களின் இன்றைய அறுசுவை விருந்து உணவு ஒன்றை கட்டாயம் படம் பிடித்து காட்டுகிறது. அதனால் அந்த பாடலை இந்த அறிமுகத்தின் முடிவாக இங்கு பதிக்கிறோம்.
 
"கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்
அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே
சந்தோஷ மீறிப் பொங்க இதுவே எனக்குத் திங்க
புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு
பூரி கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு
ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு
ஏராளமான தட்டு இனி இஷ்டம் போல வெட்டு"
[திரைப்படம்: மாயா பஜார் / 1957]
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 05 தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" PART: 04 "Introduction-continuing"
 
 
Generally as a traditional food of Tamils, The first rice meal given to a baby in the seventh month is 'sarkarai pongal', a combination of rice-milk, sugar and ghee. The teething of a child calls for 'pal kozhukattai' (tiny rice flakes resembling teeth, cooked in milk with sugar). The coming of age of a daughter is an important family event, as it is in all traditional communities. A kind of pasty pottage made with urad dal [ulutham kali / Black gram porridge] & gingelly oil are the main part of the food. Ulutham kali is usually made with black urad dal with skin as it is supposed to be more healthy and this used to give to the teen age girls, at the time of puberty to make the bones strong. 'Valaikappu' ['Bangle Ceremony'] or 'Seemandam', celebrated in the seventh or ninth month of pregnancy to bless a pregnant woman, calls for a variety of rice preparations such as 'Puli Sadham' ['Puliyodharai' or 'Tamarind Rice'], 'sakkarai pongal' ['Sweet Rice dish'], 'ven pongal' [Rice and Lentil Pudding]. Also during hot summer, among the Tamils mainly from south India and Sri Lanka, a porridge called Koozh made from millet such as 'Kezhvaragu' [finger millet, also known as ragi] or 'Cumbu' [Pearl millet] flour and broken rice is very popular and farmers and other workers who worked under the burning sun enjoy this tasty cool food with curd. Also it is served on special occasions and family gatherings too. But the traditional 'koozl' recipe from the North of Sri Lanka is mainly made from a palmyrah product called 'Odiyal' [a healthy and nutritious root of the palmyrah]. It almost tastes like a spicy seafood soup but the varieties of ingredients give an extra taste which you never get from an ordinary spicy seafood soup. It combines tamarind - based broth [குழம்பு] with seafood such as cuttlefish, prawns, crayfish, crabs, as well as different types of fish. Apart from seafood, the dish also incorporates various spices and vegetables, and it is traditionally thickened with odiyal — the flour made from palmyra tuber.
 
Change in food habits is slow in coming to Tamil lands, but some signs of it can be seen. Wheat is being increasingly used in urban areas. 'Chappathi' (wheat flour pancake) may be substituted for rice, especially for dinner, and poori (a deep - fried wheat pancake) and potato be served as breakfast. Modernization is also slowly bringing changes to the culinary scene. Compromises and adaptations are being made. Traditional recipes that call for elaborate and leisurely cooking are disappearing. Processed foods such as ready - made idli - mix and pre - packed curry powders have invaded urban kitchens. Mechanical aids such as motorized idli - grinders are also being used in traditional cooking. The break - up of the joint family and the increase in the number of career women have inevitably changes some Tamil Eating habits. A movement towards a simpler cuisine can be sensed. However, Tamil food practices and their cultural implications still retain their basic character. Some of the recipes that were in use in the first century AD are still being followed today, pretty much unchanged.
 
Since the last common ancestor shared by modern humans, chimpanzees and bonobos, the lineage leading to Homo sapiens has undergone a substantial change in food habits. In this article, we try to review the evolutionary changes that occurred in the food habit of human beings, mainly on dravidian ancestors & how it shaped up the food habits of the present Dravidians, particularly Tamils. As we have already explained in detail in our former article, "Origins of Tamils? [Where are Tamil people from?]", published in 82 parts in Theebam.com as well as "A DROP IN THE OCEAN / கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam, Sumerians of Mesopotamia, Indus valley people of Harappa, Mohenjo-Daro. Sangam people of South India, Medieval period people of south India are all found linked with the shaping up of present Dravidians / Tamils as we seen today. Hence we will present this article in serials covering all these periods starting from the first Human. The Tamil movie song from "Maya Bajar", which describe the present day Tamilians six taste wedding feasts, starting line with "wedding cooking rice and vegetable curries are amazing, That honor offering is enough for me ... " is given below as a conclusion of this introduction:
 
"kalyaaNa samaiyal saadham kaai kaRikaLum pramaadham
andha kowravaprasaadham idhuvE enakkup pOdhum
andhaara pajji angE sundhaara sojji ingE
sandhOsha meeRip ponga idhuvE enakkuth thinga
puLiyOdharaiyin sORu veku poruththamaai saampaaru
poori kizhangu paaru idhuvE enakku jOru
jOraana sEni lattu suvaiyaana seeni puttu
EraaLamaana thattu ini ishtam pOla vettu"
 
"கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்
அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
அந்தார பஜ்ஜி அங்கே சுந்தார சொஜ்ஜி இங்கே
சந்தோஷ மீறிப் பொங்க இதுவே எனக்குத் திங்க
புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு
பூரி கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு
ஜோரான சேனி லட்டு சுவையான சீனி புட்டு
ஏராளமான தட்டு இனி இஷ்டம் போல வெட்டு"
[Movie:MAYA BAJAR 1957-Songs about Wedding Feast]
 
Thanks
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 05 WILL FOLLOW
411151158_10224419832026142_5859351075960707325_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ph0Xs0emSAkQ7kNvgFJ50n2&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBobSC2KftFr04AZbdRFHnkpmSmjowbJ6c_pbIq0QNIEg&oe=6636D7B2 411131264_10224419831706134_4841143520937130487_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=NwBsPliHb7MQ7kNvgFQ-2JX&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAMOOzfcYugzjDa-ktAuYUJHHgKL7o5m-_4PGdVCLJJCA&oe=6636D40A 411171417_10224419831186121_3687218624030900623_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_r2xaNQVrAAQ7kNvgHvd6PM&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCNEreLgz_1xxgoY8tw5053kfMGJTNqrgtZwk5ggwHGGw&oe=6636DFCA 411077206_10224419831306124_15805405150450306_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9c3YaX47iXcQ7kNvgE52kRV&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD4y68Pqia0Y3Xhl32489TQlfUj2IiRCQ7gnfc-zucJgA&oe=6636D1C1 411156126_10224419830906114_3188200272459259421_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jRa2fhNKSeMQ7kNvgHFBMSt&_nc_oc=AdjT_Zk_0QYS-Y6x9kUEf8QXbApuw7Hh10l5zgzn404IsMJIPJKvRdGgkJKuJcnZ79TBDSNg0vNI2nZEiLfwR2Fp&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBtl77cJPkO_4yPXhnAbMOpNu-2b-YODEP4XVkwgb6tig&oe=6636F032 
 
 
 
 

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 03 "அறிமுகம் தொடர்கிறது" / "Introduction continuing"

2 weeks 2 days ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 03 "அறிமுகம் தொடர்கிறது" / "Introduction continuing"
 
 
பண்டைய காலத்தில் இலைகளே உணவு பரிமாற பயன்படும் பிரதான தட்டுகள் ஆகும். மனிதர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்திலிருந்தே, இலைகளில் சாப்பிடுவது பல காரணங்களால் வழமையாக இருந்து உள்ளது. பல பண்பாடுகளில் இன்றும் இலைகளில் உணவைச் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. தமிழர்கள் முக்கியமாக வாழை இலைகளைப் பயன்படுத்தினார்கள், அதற்குப் பண்டைய இலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் உள்ளன. அவ்வகையில், வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதை இரண்டாம் அல்லது மூன்றாம் நுற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், 6] கொலைக்களக் காதை, 41-43, இல்
 
"தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென"
 
என்று குறிக்கிறது. அதாவது, தனது கையினால் குளிர்ந்த நீரைத் தெளித்து மெழுகி, ஈனாத வாழையின் [குமரி வாழையின்] குருத்தினை விரித்து அதன்கண் உணவினைப் படைத்து அடிகாள் இவ்விடத்து உண்டருள்க என்று சொல்ல, என்கிறது இந்த வரிகள். அது மட்டும் அல்ல, சிலப்பதிகாரத்திற்கு முன்பே எழுதப் பட்ட புறநானுறு - 168[11-12] கூட,
 
"கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்"
 
என்று கூறுகிறது. அதாவது, - காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் - என்கிறது. இவை அனைத்தும் வாழை இலை நீண்ட காலமாக உணவு சாப்பிட ஒரு தட்டுப் போல் பாவிக்கப் பட்டதை சுட்டிக்காட்டுகிறது.
 
இன்றைய வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாடல், வாழை இலை விருந்து ஒன்றை வர்ணிக்கிறது. இதை "இந்திரா ரெங்கநாதன்" என்ற ஒரு பெண்மணி "PoemHunter.com" என்ற வலைத் தளத்தில் ஆங்கிலத்தில் பதித்துள்ளார்.
 
"நேர்த்தியாக வெட்டப்பட்டு பளிச்சிடும்
வாலில்லா பச்சைமீன் வாழையிலையில்
மாணிக்க நீரைத் தெளித்து பிரகாசிக்க
தமிழர் கண்ட புதுமைப் பண்பாடு!"
"இனிப்பு நறுமணம் ஒன்றாய்ச் சேர
வாய்க்கு முதல் பாயாசம் கொடுத்து
சுவையான பச்சடி சர்க்கரை உப்பு
உலர்ந்த அரை திடமான கறிகள்!"
பப்படம், பொரியல் ஊறுகாய் வாய்க்கு
மென்மையான இனிப்புத் திண்பண்டம்
சூடான சோறு மத்தியில் சாம்பார்
துண்டுகளுக்கு இடையே வரிசையாகக் கறிகள்"
"சூடாக சோறும் இரசமும் சேர
இனிய இடைவேளைக்கு பாயாசம்
உள்ளத்தைக் கொள்ளைகொள்ள
வாய்க்கு என்றும் சொர்க்கமே!"
"தொட்டு சுவைக்க ஊறுகாய்
சாதம் தயிருடன் மனது நிரப்ப
விரும்பிய வகையில் சமைத்து வந்து
விருந்தளித்ததே சொல்லெண்ணா உணவு!"
"வாழையிலையின் விளக்கமுடியாத சுவை
தெய்வீக சொர்க்கம் அள்ளித் தர
அனுபவித்த வயிற்றின் எண்ணம்
மகிழ்ந்து ஒரு ஏப்பம் விடுகுதே!
 
[மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
 
தமிழர்களால், சைவம் அசைவம் எந்த உணவாக இருந்தாலும் அவை பொதுவாக, இரண்டு விதமாக சூடு, குளிர்ச் சாப்பாடுகள் என பிரிக்கப்படுகின்றன. உதாரணமாக, தயிர், வெண்டைக்காய், தக்காளி போன்றவை குளிர்ச் சாப்பாடுகள் ஆகும். தமிழர்களின் உணவுகள் இன்னும் பெரும்பாலும் இந்த அடிப்படையை கொண்டவை ஆகும். தமிழர்களின் நாட்டு வைத்தியமும் அதிகமாக இப்படியே அமைகிறது. அதனால் சுகையீனமும் சூடு, குளிர் என வகைப்படுத்தப் படுகிறது. உணவு வழி சிகிச்சை [diet therapy], சூட்டை உண்டாக்கும் நோய்களுக்கு குளிர் உணவு வழியாகவும், குளிரை உண்டாக்கும் நோய்களுக்கு சூட்டு உணவு வழியாகவும் சிகிச்சை அளிக்கிறது. இந்த நம்பிக்கை இன்னும் தமிழரிடம் காணப்படுகிறது. உதாரணமாக, உடலில் சூட்டை உண்டாக்கும் சின்னம்மை நோய்க்கு, சூட்டை தணிக்கும் குளிர்ச் சாப்பாடுகளான பழங்கள், மோர், இளநீர் போன்றவை கொடுக்கப்படுகின்றன. மேலும் தமது பாரம்பரிய உணவு வகைகளை பேணிக் காக்கும் முகமாகவும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் முகமாகவும் ஒவ்வொரு விழாவிலும் சடங்கிலும் பாரம் பரிய உணவுகள் பெரும்பாலும் இன்னும் வழங்கப்படுகின்றன.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி :04 'அறிமுகம் தொடர்கிறது' தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" / PART 03 'Introduction continuing'
 
 
Leaves are the prime plates used for serving food. Since the time humans lived in forests, leaves have been used for various reasons, such as eating food off leaves. Many nature reserve even now serve food on leaves. In this case , we found that Tamils used Banana leaves. For example, Silappatikaram, which was written in the 2nd or 3rd century AD has references to serving food in banana leaf as:
 
"தண்ணீர் தெளித்துத் தன்கை யால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென" .
 
These lines describe how the wife is serving food to her husband and it explicitly says that she sprinkle water, clean the banana leaf and spreads it and serves food on it. Another old Tamil work, Purananuru 168, which was written well before Silappatikaram, also, has the following lines,
 
"front yard where wild jasmine grows beautifully along with koothalam [Convolvulus]. They share their food on wide leaves of plantain trees."
"கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்",
 
So there are enough evidences that banana leaf has been in use to serve food for a very, very long time. Even A song from PoemHunter.com, a poetry site of today, where you can find poems from all around the world, praise the tamilian traditional foods served on banana leaf as below:
 
"Gleaming, green and live
Like a tailless fish alive
Neatly cut and placed
Gemming sheen of water sprinkled...
Wished varieties cooked and brought on
Dished up with many a pattern
Items sweetened and savoured
The Tamilian way innovated
Served on sweetly first paayasam
Of course hand to mouth a culinary mannerism
Delightful pachdis sugar and salt varied next
Delicious curries dry and semi-solid next
Incoming pappads, crisp vegetable chips and pickle
Following fudges and ladoos and like many to tickle
Spooned in the centre hot rice
Mixed with sambar so spice
Rowed up curries in-between morsels
Put into mouth, divine and dainty handsels
Next helping…rice and rasam too hot
Second helping…vegies to fill the heart
Sweet break...
Paayasam, much more to take
On and on...' No' to brake
Ending with rice and curd
Touchy pickles dotted and tasted
A meal of regale admired
A menu of plethoric choices
The banana leaf's magic flavours
The stomach's cliche
Yeaaaave...belch"
 
[-By Indira Renganathan / poemhunter.com]
 
Whether it is vegetarian or non-vegetarian food, all food commodities were divided into two broad categories, hot and cold. The whole of Tamil cuisine is still largely based on this classification which also influenced indigenous medicinal practices: Illnesses were classified as hot and cold and the diet therapy was based on treating with cold food those caused by heat and with hot food those caused by cold. This belief still persists. Chicken pox, for example, is believed to be a manifestation of body heat and the foods permitted are those that are supposed to counter this heat - fruit, butter milk and tender coconut. Also Every festival and ceremony has a traditional menu.
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART :04 'Introduction continuing' WILL FOLLOW
408187800_10224389557189290_3319210349163053123_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xsTY8G3Qj9AQ7kNvgHde6VG&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCoRbqo5yJp9ja6GrsWS-psTE1EjJQXnSuJkHVn7XRPNw&oe=66359CA2 408177107_10224389557349294_3955629063668715675_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Bt7-7u6KWIsQ7kNvgF6zKuh&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAH6gCWw-7hcejtVafCbBB5Pa2OJe6BPSXgCqKTAh3HfQ&oe=66356AD3 408096812_10224389557309293_2929424112017975878_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ssgN3yIqkSEQ7kNvgHKp6SD&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBpayjtzpOQzm8zLmRzniaik9CGpakWd9hoqmDnZg82RA&oe=66358C3A 408085927_10224389558109313_5552308869291016981_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IVZ8JFYLfmAQ7kNvgF8oVcW&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC2h2V7OKErIJVU69Q01KL0As_uohVp4BjQBxhtClCmDQ&oe=66357DE1 408142841_10224389558229316_9062636564140865542_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=7r1OQjuv-mgQ7kNvgGrqoIf&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDAiON6ae9T-Ul8whjTBZ7eELUHfR6TA_s_nxvSn4z8jQ&oe=66358B35 
 
 

"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"

2 weeks 4 days ago
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 01 'அறிமுகம்' / 'Introduction'
 
 
இத் தொடர் திராவிடர்களின், குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி, முடிந்த அளவு மனிதனின் ஆரம்ப காலத்தில் இருந்து, சுமேரிய, ஹரப்பா - மொகெஞ்சதாரோ, சங்க கால, மத்திய கால அல்லது பக்தி காலத்தின் ஊடாக ஆய்வு செய்யவுள்ளது. பெரும்பாலான திராவிடர்கள் வாழும் தென் இந்தியா மிளகு, கிராம்பு, ஏலம், இலவங்கம் [கருவா] போன்ற பல வகையான வாசனைத் திரவியங்களின் உற்பத்தி இடமும் ஆகும். உண்மையில், மிளகு போன்றவை இங்கு தான் முதலில் வளர்ந்தன. திராவிடர்களின் முக்கிய உணவு, பல ஆயிரம் ஆண்டுகளாக, இன்று வரையும் - அரிசி, அவல், பொரி, மா, இப்படி பல வகையான வேறுபாடுகள் கொண்ட - நெல் அரிசி உணவை அடிப்படையாக கொண்டது. அது மட்டு அல்ல, காலப் போக்கில் , தென் கிழக்கு ஆசியாவினது சமயலும், சில இஸ்லாமிய ஐதராபாத் நவாப் காலத்து சமயலும் திராவிடர்களின் உணவு பழக்கங்களில் சில, சில தாக்கங்களை உண்டாக்கின. என்றாலும் பொதுவாக, திராவிடர்களின் சமையலறை தனித்துவமாகவும் கலப்பு அற்றதாகவும் கடந்த 6000 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
 
இன்றைய நவீன கால திராவிடர்களின் உணவை இரு வகையாக பிரிக்கலாம். அவை சைவம், அசைவம் ஆகும். புலால் உணவு / மிருக பகுதிகள் தவிர்த்த அனைத்தும் சைவ உணவாகும். தாவரங்கள் சார்ந்த, செடிகளில் இருந்து கிடைக்கும் தாணியங்கள், காய் கறிகள், பழங்கள், மர வகை உணவுகள், பால், வெண்ணை, நெய் அனைத்தும் சைவ உணவுகள் ஆகப் கருதப் படுகின்றன. என்றாலும் இங்கு பால், வெண்ணை, நெய் என்பன தாவர உணவு அல்ல.
சுருக்கமாக, மரக்கறி உண்பதை சைவம் என்றும், மச்சம் [" மச்சம் " - "மாமிசம்"] உண்பதை அசைவம் என்றும் பொதுவாக கருதப் படுகிறது. என்றாலும் இறைச்சியும் மீனும் கிட்டத்தட்ட எல்லோராலும் குறைந்த அளவிலேயே சாப்பிடப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விலை அதிகமாக இருப்பதும், அதே நேரம் மரக்கறிகள் ஒவ் வொரு தோட்டத்திலும் வளர்வதும் ஆகும். அரிசி முக்கிய உணவாக இருப்பதுடன் தென் இந்தியா, இலங்கை கரையோர பகுதி மக்களின் உணவில் மீனும் முக்கிய இடத்தை வகிக்கிறது. மேலும் பல விதமான கடல் உணவுடன், ஒரு முக்கிய உணவு சமைப்பதற்குப் பயன்படும் கூட்டுப்பொருளாக, தேங்காயும் கேரளம், கடலோர கர்நாடகம், இலங்கை போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. அதே நேரம் இன்சுவை மிகுந்த ஊறுகாய், காரமான நறுமண கறிகள், மிளகாய் தூள் தாராளமாக பயன்படுத்துதல் போன்றவை ஆந்திர உணவு வகைகளில் அதிகமாக காணலாம். பொதுவாக ஆந்திரா சாப்பாடு என்று சொன்னாலே பலருக்கு கண் எரியும். தென் இந்தியா முழுவதும் தோசை, இட்லி (இட்டளி), ஊத்தப்பம் போன்றவை மிகவும் பிர பல மானவை.
 
உதாரணமாக, தமிழ் நாட்டில் இட்லி, தோசை, பொங்கல், சாம்பார், வடை போன்றவை பொதுவான காலை உணவாக உள்ளது, அதே நேரத்தில் - தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளிற்கு இடையிலான வேறுபாடுகளுடன் - இலங்கை தமிழ் உணவுகள், இந்தியா தமிழ் உணவில் இருந்து பலவகையில் தனித்துவமாக உள்ளது. மதிய உணவிற்கு சோறும் கறியும் பரவலாக இருப்பதுடன், காலை உணவிற்கும், இரவு உணவிற்கும் அரிசி மாவினால் அதிகமாக 12 சதம மீட்டர் விட்ட, வட்ட வடிவில் தயாரிக்கப்பட்ட இடியப்பமும் தக்காளி சொதியும் கறியும் இலங்கையில் [கேரள மாநிலத்திலும்], அதிக அளவில் காணப்படுகிறது. அத்துடன் மூங்கிலால் செய்யப்படும் பிட்டுக் குழலில் அல்லது பனையோலையினால் செய்யப்பட்ட கூம்பு வடிவான நீற்றுப் பெட்டியில் அவித்த அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்ட பிட்டும் [புட்டும்], வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் சுடப்படும் அரிசி மா அப்பமும் இலங்கை தமிழர்களிடம் பிரபலமானவை. மேலும் தேங்காய் பாலும் உறைப்பு ["உறைப்பு " - "காரம் "] கூடிய மிளகாய் தூளும் பெரும் பாலும் அங்கு சமையலுக்கு பாவிக்கப்படுவதுடன், பல தரப்பட்ட ஊறுகாய் [அச்சாறு], வடகம் மற்றும் மாவுடன், பணை வெல்லம், எள், தேங்காய், நல் லெண்ணெய் போன்றவைகளை முதன்மையாக பாவித்து வீட்டில் செய்யப்பட்ட பயத்தம் பணியாரம், மோதகம் / கொழுக்கட்டை, பால்ரொட்டி, முறுக்கு, அரியதரம், அவல் போன்ற இனிப்பு வகைகள், வேறு பிற சிற்றுண்டிகள் தனித்துவான மண் வாசனையை அவர்களுக்கு கொடுக்கிறது. இலங்கை மக்களால் மிக மிக விரும்பி உண்ணப்படும் இனிப்பு சீனி அரியதரம் அல்லது அரியதரம் ஆகும். இது திருமணம் போன்ற கலாச்சார வைபவங்களில் மிகமிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
 
நான் 'திராவிடம்' என்னும் வார்த்தையை இங்கு தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல் - தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு - போன்ற கருத்துக்களில் மட்டுமே பாவிக்க உள்ளேன் ,அதாவது திராவிடம் என்பது, தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடும் அம்மக்களின் மொழியும் ஆகும் என்ற ஒரு பொது கருத்தில் மட்டுமே பாவிக்க உள்ளேன் . உதாரணமாக திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல். சமற்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை, திராவிடரும் இல்லை. ஆனால் சமற்கிருதம் நீக்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனைத்தும் தமிழ் மொழியே". அதேபோல "ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் 'த்ரமிளர்' என்றழைக்கப்பட்டு 'த்ரவிடர்' என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்று ள்ளது" என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அதே போல கி.பி 17ம் நூற்றாண்டில், தாயுமானவர் "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்" என்று படித்தவர்களின் போலியை நகைக்கிறார். அதில், "வடிமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் [வடமொழியிலே வல்லவனான ஒருத்தன் வந்தால்] த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் [திராவிடத்திலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரமாக சொல்லுவேன்] வல்ல தமிழறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்" என்று கூறுகிறார்.'தமிழ் மொழியும் தெரியும்' என்று சொல்வதற்கு பதிலாக 'திராவிடமும்' தெரியும் என்று தான் பயன்படுத்துகிறார் என்பதையும் கவனிக்க. அதாவது ராபர்ட் கால்ட்வெலுக்கு குறைந்தது 100 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி கூறுகிறார். இதிலிருந்து 'தமிழம்' / 'தமிழ்' என்ற சொல்லே வட மொழியில் 'திராவிடம்' என்றானது. திராவிடம் என்ற தனித்த மொழியோ, இனமோ இல்லை. 'தமிழ்' தான் 'திராவிடம்'. 'திராவிடம்' தான் 'தமிழ்' - 'தமிழரை'த் தான் 'திராவிடர்' என்று குறித்தார்கள் என்று அறிய முடிகிறது என்பது என் கருத்து.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி :02 'அறிமுகம் தொடர்கிறது' தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" / PART 01 'Introduction'
 
 
This thread is aimed to show you the food habits of Dravidians, mainly Tamil people - from first man, through Sumerian, Harappa-Mohenjo daro, Sangam period, Medieval or Bhakti period. South India, where majority of Dravidians live, is the home of all kind of spices, in fact spices like black pepper grew originally only in this region. Staple Food in Dravidians is mostly based on rice in all kind of variations. There has been influences from South East Asia, but also in some parts by the Islamite kitchen during the time of Hyderabad Nawabs. But all in all the Dravidian kitchen has been independent and pure for the last 6000 years or so.
 
Modern Dravidian food could be divided in two categories. Veg and Non-Veg. Meat and fish is eaten by virtually all people to a lesser extent, because these items are costly, while Veg food grows in every garden. Rice is the staple diet, with fish being an integral component of coastal South Indian and Srilankan meals, along with various kind of seafoods. Coconut is an important ingredient in Kerala and costal part of Karnataka of South India as well as sri lanka, whereas the cuisine in Andhra Pradesh is characterized by the delicious pickles, spicy aromatic curries and the generous use of chili powder. Dosa, Idli, Uttapam etc. are popular throughout the South Indian region. Tamil Nadu is well known for its idli, dosai, pongal, sambhar [a lentil-based vegetable stew], vadai which is the common breakfast in Tamil families, But in Sri Lanka, Tamil dishes distinct from Indian Tamil cuisine, with regional variations between the island's northern and eastern areas. While rice with curries is the most popular lunch menu, String hoppers, which are made of rice flour and look like knitted vermicelli neatly laid out in circular pieces about 12 centimetres (4.7 in) in diameter, are frequently combined with tomato sothi (a soup) and curries for breakfast and dinner. Another two common items among the sri lankan Tamils is puttu, a granular, dry, but soft steamed rice powder cooked in a bamboo cylinder with the base wrapped in cloth so that the bamboo flute can be set upright over a clay pot of boiling water. and Appam, a thin crusty pancake made with rice flour, with a round soft crust in the middle. It has variations such as egg or milk Appam, Coconut milk and hot chilli powder are also frequently used by sri lankan Tamils along with a range of achars (pickles) and vadakams. as well as Snacks and sweets are generally of the homemade "rustic" variety, relying on jaggery, sesame seed, coconut, and gingelly oil, to give them their distinct regional flavour.
 
Here the term term "DRAVIDIAM" OR "DRAVIDIAN" is only used in the following sense: Robert Caldwell used the term Dravidian (from the Sanskrit word for "southern") to separate the languages spoken in South India from other, more Sanskrit - affiliated languages of India. Also, here Dravidian denotes the peninsular South and not just Tamizh Nadu. (It is only geographic indicator and not racial). For example: Shankaracharya in Soundarya Lahiri, uses "Dravida Sisu". He was from present day kerala. Though the word "Dravidian" is seemly used incorrectly, My understanding here is Robert Caldwell found Tamil Language Group in south India, but he don’t wanted to call it Tamilian Language group. Since Tamilian means Tamil People (people who speak Tamil language). So he marked this group of Languages as “Dravidian Languages.” In the ancient India, the term Dravidian was loosely used to refer to all Southern people, but not their languages. It was the 19th century British scholar, Bishop Robert Caldwell (1875), who originally coined the name “Dravidian”.
 
According to him;
 
"The word I have chosen is 'Dravidian' from Dravida, the adjective form of Dravida. The term is still sometimes used as that of Tamil itself. …. On the whole it is the best term I can find, I admit that it is not perfectly free from ambiguity. It is a term which has been used more or less distinctively by Sanskrit philologists (grammarians), as a generic appellation for the South Indian people and their languages, and it is the only the single term they seem to have used in this manner. I have, therefore, no doubt of the propriety of adopting it. A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages, Page-4" There is no clear etymology for the word Dravidam. Robert Caldwell a Christian missionary who learnt Thamizh and many other languages,wrote a book called "Dravida mozhigalin oppilakkanam" (A comparative Grammar of the Dravidian or the South Indian family of Languages) where he used the word Dravidam to mean a group of languages, which are related to Tamil. Previously such languages were used to be called as “Tamulic” languages. All my articles, I used the term 'Dravidiam' or "Dravidian" only in this sense,.though true sense It is a misleading and incorrect word!
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART :02 'Introduction continuing' WILL FOLLOW
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 

"பண்டைய சங்க தமிழரின் உணவு & நீராவி சமையல் எப்ப தமிழர்களிடம் ஆரம்பித்தது மற்றும் இட்டலி, தோசை போன்றவை ஆரம்பித்த இடம்"

3 weeks 4 days ago

"பண்டைய சங்க தமிழரின் உணவு & நீராவி சமையல் எப்ப தமிழர்களிடம் ஆரம்பித்தது மற்றும் இட்டலி, தோசை போன்றவை ஆரம்பித்த இடம்"


"கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்"[63-64] மற்றும் “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” [177-178] போன்ற பட்டினப்பாலை அடிகள், அங்கு வறுத்த இறாலையும் வேகவைத்த ஆமையையும் உண்டார்கள் என்பதையும், பூம்புகாரின் அங்காடித் தெருவில் அமைந்து உள்ள மதுபானக் முற்றத்தில், மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தையும் தெட்டத் தெளிவாக எடுத்து கூறுகிறது. மேலும் விளைந்த நெல்லை, மழலைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, பெரியவருக்கு கைக்குத்தல் புழுங்கல், பாட்டிக்கு அவல், மாலை சிற்றுண்டியாக பொரி, என நெல்லை தேவைக் கேற்றபடி தயாரிக்கவும் அறிந்து இருந்தது. இனிப்பு கலந்த பாலில் நனைத்த அரிசி அப்பமும், நீண்ட வெள்ளை சரங்களை போன்று அவிக்கப்பட்ட இடி அப்பமும் பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.

என்றாலும் இன்று அவிப்பது போன்ற நீராவியில் சமைத்த வட்ட வடிவ இடியப்பம் அன்று இருக்கவில்லை. உதாரணமாக, கரியசட்டியில் இனிப்புப் பாகொடு பால் கலந்து பிடித்து அழகான வட்டமாக அப்பம் சுடப்பட்ட நிகழ்வை பெரும்பாணாற்றுப்படை, வரிகள் ,377-378  "கூவியர் பாகொடு பிடித்த, இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்" என்ற வரிகள் விளக்குகின்றன.

உணவியல் அறிஞர் கே.டி.ஆசயா[Dr. K.T. Achaya] தனது  "Indian Food, A Historical Companion, The Food Industries of British India, and A Historical Dictionary of Indian Food (all published by Oxford University Press, India)" என்ற புத்தகங்களில் தோசை, வடை போன்றவை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆணித்தரமாக குறிப்பிடுகிறார். எனினும் இட்டலி அப்படியில்லை என்கிறார். அது ஒரு வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது என்கிறார். கி பி 920 ஆண்டை சேர்ந்த சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே என்னும் பழமையான சமஸ்கிருத, கன்னட நூலில், இட்டலியை ‘இட்டலிகே ’ என குறிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்தே இட்டலி என்ற சொல் பிறந்தது என்கிறார். ஆனால், இந்த  இட்டலிகே, உளுத்தம் பருப்பு மாவினால் மட்டுமே செய்யப்பட்டவை ஆகும். மேலும் இது புளிக்க வைக்கப்படவில்லை. மேலும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்ற ஒரு பிரமச்சாரிக்கு உபசாரம் செய்த 18 உணவுகளில் ஒன்றாக இது குறிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கி பி 1130 இல் எழுதப்பட்ட மற்றொரு சமஸ்கிருத, கன்னட நூலான, மனசொல்லசாவில் (Manasollasa)  'இட்டரிக்க' என குறிக்கப்பட்டுள்ளது. இதுவும் உளுத்தம் பருப்பு மாவினால் மட்டுமே செய்யப்பட்டவை ஆகும்.  இது சிறு உருண்டைகளாக, மிளகு தூள், சீரகத் தூள், பெருங்காயம் போன்றவற்றால் வாசனைப்  படுத்தப்பட்டன என்கிறது. என்றாலும் இன்று இட்டலி செய்யும் முறைகளான உளுந்துடன் தீட்டப்படாத அரிசி, நீண்ட நேரத்திற்கு கலவையை புளிக்க வைத்தல், நீராவியில் முழுமையாக அவித்தல் ஆகிய இந்த மூன்று முறையும் அங்கு காணப் படவில்லை.

கி பி 1250 இற்கு பின்புதான் இப்ப நாம் செய்வது போன்ற இட்டலி நடைமுறைக்கு வந்ததாக கே.டி.ஆசயா கூறுகிறார். அது மட்டும் அல்ல சீன காலவரிசையாளர் Xuang Zang ,கி பி 700 ஆண்டு இந்தியர் நீராவி சமையலை அறிந்து இருக்கவில்லை என்று மிக அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். இட்டலி இந்தோனேஷியாவில் முதலில் சமைக்கப்பட்டது என்றும், அதன் ஒரு பகுதியை ஆட்சி செய்த அரசனின் சமையல்காரன் கி பி 800-1200 ஆண்டுகளில் நாடு திரும்பும் போது, இந்த உணவை தென் இந்தியாவிற்கு கொண்டு வந்து இருக்கலாம் என்ற ஒரு பரிந்துரையும் முன்வைக்கப்படுகிறது. இது அங்கு கேட்லி [Kedli ] என அழைக்கப்பட்டது.  அத்துடன் அவர் சங்க காலத்தில் செய்யப்பட்ட தோசை அதிகமாக அரிசியை மட்டுமே பாவிக்கப்பட்டதாக இருந்ததாகவும், அது கள்ளு முதலியவற்றால் புளிக்க வைக்கப்பட்டது என்றும், கட்டாயம் உளுந்து பாவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.மேலும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மனசொல்லசாவில் குறிக்கப்பட்ட தோசக [“dhosaka”], முற்றிலும் உளுந்த்தில் செய்யப்பட்டது. அரிசி அங்கு பாவிக்கப்படவே இல்லை. இந்த தோசையானது தோன்றிய இடம் தோராயமாக  கர்நாடக மாநிலம் மைசூர் தான் என்றும் அதுவும் உடுப்பியில் என்றே கருதப்படுகிறது. 

இடியப்பமும் அப்பமும் காழியர், கூவியர்களால் கடற்கரை வீதிகளில் விற்கப்பட்டதாக கூறுகிறார். இது பிந்திய சங்க இலக்கியமான சிலப்பதிகாரம், மணிமேகலையில் விவரிக்கப்பட்டுள்ளது. "பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர் கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் ", என்ற கச்சிமாநகர் புக்க காதை, மணிமேகலை 31,32 ஆவது வரி-பல மீன்களை விற்கும் பரதவரும் வெள்ளிய உப்பு விற்போரும் கள்ளை விற்கும் வலைச்சியரும் பிட்டு வாணிகரும் அப்ப வாணிகரும்-என கூறுகிறது. புளியோதரை எனப்படும் புளி சாதம் பற்றியும் புளி,நெல்லிக்காய் சேர்ந்த ஒரு வகை பானம் பற்றியும் அங்கு விரிவாக சொல்லப்பட்டுள்ளது. கீரை,  பூசனிக்காய், முருங்கைக்காய், மற்றும் மூன்று பருப்பு வகைகள்- உளுந்து, பயத்தம் பருப்பு,துவரம் பருப்பு -அங்கு பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போல அரிசி, தயிர், தயிரில் நனைத்த வடை போன்றவையாகும். மற்றும் முக்கனிகளான மா, பலா வாழையும் அவர்களின் உணவில் தாராளமாக இருந்தன. சங்க இலக்கியமான ‘மதுரைக் காஞ்சி’ சித்திரிக்கும் மதுரை நகரம் இன்றளவும், இரண்டாயிரமாண்டு களைக் கடந்த பின்னரும் குதூகலத்துடன் கண் விழித்திருக்கின்றது. இரவு வேளையில், இரண்டாம் சாமத்தில், மதுரை நகரின் நிலை பற்றிய காட்சி ஒன்றை , வரிகள், 624-627: "நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை, அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம், கவவொடு பிடித்த வகை அமை மோதகம், தீஞ் சேற்றுக் கூவியர்" என்று சுட்டிக்காட்டுகிறது. இதில், நல்ல வரிகளையுடைய தேனிறால் போன்ற அடை, மற்றும் காய்ச்சின பாகோடே பருப்பும் தேங்காய் கூட்டி உள்ளீடாக வைத்துப் பிடித்த மோதகம் விற்கும் வணிகர் பற்றிய தகவலுடன், இரவு நேரத்தில் மதுரை நகரில் உண்பதற்குப் பல சிற்றுண்டிக் கடைகள் இருந்தன என்று அறிய முடிகின்றது.

சங்கத்தமிழரின் உணவுமரபை ஒரு இளமனைவியின் கதையாகவே கொடுக்கிறது கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167. மேலும் அந்த இளம் குடும்பப் பெண் தித்திக்கும் புளிச்சுவை நிறைந்த மோர்க் குழம்பை அல்லது புளிக் குழம்பை ஆக்குவதில் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டை ஒவ்வொரு வரிகள் ஊடாகவும் அதே நேரம் அந்த உணவு ஆக்கும் முறையையும் நாம் அதில் அறிய முடிகிறது. தலைவனும் தலைவியும் பிறர் நன்கு அறியாதபடி மறைவாக கண்டு காதல் கொண்டு, பெற்றோரின் சம்மதம் இன்றி, களவு மணம் செய்து இருவரும் தனிக் குடித்தனம் சென்றனர். துடித்துப் போனாள் மணப் பெண்ணின் தாய். பொறுப்பேதுமின்றி, செல்வச் செழிப்புடன், உலாவித் திரிந்தவளால் தனக் குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப்போடுவாள்? அமைதி கொள்ள முடியாத தாய், தன் தோழியை அழைத்து மகளின் தனிக் குடித்தனத்தின் சிறப்பை கண்டு வருமாறும் கேட்டுக் கொண்டாள். அதன் படி, எப்படி இல்லறம் நடத்துகிறாள் என்பதைப் பார்க்கப் போன செவிலிக்குக் கிடைத்த அருமையான காட்சி இங்கு கவிதையாகிறது.

தலைவன் வெளியே சென்று விட்டான், தன் தலைவனுக்காக உணவு ஆக்கும் பணியில் இறங்கினாள் அந்த இளம் தலைவி. முதல் காட்சியில் தலைவி சமையல் செய்கிறாள். நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து, அந்த   கெட்டித் தயிரை தன் மெல்லிய விரல்களால் பிசைகிறாள்; அவ்வேளை, அவள் திடுமென எழுகிறாள். அப்பொழுது, அவள் அணிந்திருந்த சேலை நழுவிவிட்டது. கை கழுவிப் பின் சேலையைச் செருகி மீண்டும் தயிரைத் தொட்டால் தயிரின் பதம் கெட்டு விடும் என்பதால், அது அழுக்காகி விடும் என்று தெரிந்தும், உடனே தயிர் பிசைந்த கையால் பற்றி ஆடையை உடுத்துக் கொள்கிறாள். நெய்யோடு கடுகு மிளகு என்பன இட்டுத் தாளித்துப் பின் பிசைந்த தயிர் ஊற்றி மோர்க்குழம்பு செய்தாக வேண்டும். அப்படி முறைப்படி  தாளிக்கும்போது, கடும் மிளகும் இன்ன பிறவும் நெய்யில் வதங்கிப் பொரிய, தாளிதப் புகை பொங்கி எழுந்தது, கண்களில் புகை நிறைகிறது ; கண்ணைக் கசக்கியபடி தாளிதத்தைத் துழாவிக் கொண்டிருந்தாள். தாளிதச் சட்டியைவிட்டு விலகவேயில்லை. சற்றே விலகினாலும் சுவை மாறிவிடும் என்பதால். இவ்வாறு புளிக்குழம்பு செய்து முடிக்கிறாள் தலைவி. அடுத்த காட்சியில் தலைவன் உண்டு கொண்டிருக்கிறான். ‘இனிது’ என்கிறான். தலைவியின் முகத்தில் வார்த்தைகளில் சொல்ல முடியாத மிக நுட்பமான மகிழ்ச்சி பரவுகிறது. செவிலி வருணிக்கும் காட்சியில் கேட்கும் ஒரே பேச்சுக்குரல் தலைவன் சொன்ன “இனிது” என்ற ஒற்றைச் சொல்தான். மற்றபடி இது அன்பினால் இயக்கப்பட்ட ஒரு மௌன நாடகம் ஆகும்.

 

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்   
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் 
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் 
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் 
இனிதெனக் கணவ னுண்டலின் 
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.”

குறுந்தொகை 167

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
May be art of 1 person  No photo description available. May be an illustration of 1 person and templeMay be an image of 3 people and text that says 'INDIAN FOOD A HISTORICAL -COMPANION K.T. K.T.ACHAYA ACHAYA' May be an image of text May be an image of dim sum and text

 

"பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்" 

3 weeks 5 days ago

"பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்" 

 

மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக 
7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும்.

இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம். 

ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்

முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை. 

இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது:

"தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை, 

பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்"

ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது:

"முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்,"

"Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire"

It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues 

"Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)"

இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது:

"நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு." 

"Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.]

என்கிறது.

மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.

 
இறுதியாக, 


இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள். 


அவர்களுக்கு 


அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன. 

இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்?


அப்படி என்றால் நீராவிச் சமையல் ??


உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன் 

 
நன்றி


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

No photo description available. No photo description available. No photo description available. No photo description available. May be an image of pastaMay be an image of textMay be an image of text

 

 

"மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"

3 weeks 6 days ago

"மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"

 

 

பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த ஒரு வகைச் சாராயத்தை /பீர் மது பானத்தை [beer] விற்கவும் முடியும். அதாவது பெண்கள் தவறணை காப்பாளராகவும் இருக்க முடியும். மேலும் அந்த துதி பாடல் சேர்மானங்களையும் செய்முறையையும் விளக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக புளிக்கச் செய்யப் பயன் படும் பொருள் முதல், ஊற வைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை தருகிறது.
 
 
"நின்காசி, நியே மாவை [dough] ஒரு பெரிய வாரி [shovel] மூலம்
குழியில் கலாவுகிறாய்-
பார்லி ரொட்டியையும் [bappir] தேனையும்
[இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது?]
 
நின்காசி, நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக் கிறாய்-
உமி தானியங்ககளை [hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து
[வடித்தலின் போது "பப்பிர்" [bappir: பார்லி ரொட்டி] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது. ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது. மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது]
 
நியே பார்லி முளை தானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்-
பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது
நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்-
அலைகள் ஏறுகின்றன, அலைகள் இறங்கு கின்றன
[இந்த அசைவு மறை முகமாக அரைத்தலை குறிக்கலாம் ? அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப் படுகிறது? அத்துடன் இந்த மசியல் அதிகமாக சூடாக்கி இருக்கலாம்?]
 
நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை [cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்-
சூடு தணிகிறது, குளிர்ச்சி வெற்றி கொள்கிறது
[இது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்? அது மட்டும் அல்ல, சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால், நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast / புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால்]
 
நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் -
அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய்
[இது உண்மையில் தேனா? அல்லது பேரீச்சம் பழம் சாறா? என்பது ஒரு கேள்விக் குறியே. அது மட்டும் அல்ல, திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்" ['yeast'] காணப்படுகிறது. ஆனால் ஒயினில் [wine] அப்படி அல்ல. அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது. ஆகவே இது திராட்சை ரசமாக இருக்க முடியாது. அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?]
 
நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது-
நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [large collector vat] சரியாக வைக்கிறாய்"
[இந்த இன்பமான ஒலி அதிகமாக, சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]
 
அது மட்டும் அல்ல, இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை ."பீர் மதுபான பெண் தெய்வம்" பெற்றால் என அறிய முடிகிறது. மேலும் நின்காசிக்கும் பீர் மது பானத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் பலமானது என்பதையும் அறிய முடிகிறது. உதாரணமாக மேலும் இரண்டு புகழ்ச்சியை கிழே தருகிறோம்.
 
"நின்காசியே, நியே, வடித்த பீர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய். அது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது [Ninkasi, you are the one who pours out the filtered beer of the collector vat, It is [like] the onrush of Tigris and Euphrates]"
 
மற்றது
 
"குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards] [and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும்.
 
மேலும் மெசொப் பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து. பீர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.
 
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.”
(குறள் 926)
 
என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது.  துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,
 
"சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"
 
என்று எடுத்து உரைக்கிறார். அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார் ஒளவையார். மேலும் அகநானுறு 336:
 
"தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்"
 
என கூறுவதையும் காண்க, அதாவது, தெளிந்த கள்ளினைக் குடித்து, பெண்கள், நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.
 
"அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல் அடை அளைஇ தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த
வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி"
-பெரும்பாணாற்றுப்படை(275-281)
 
அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள கள் என்கிறது.
 
"துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்கோதை மைந்தர் மலையவும்"
- பட்டிணப்பாலை[106-110]
 
அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available. No photo description available.
 

தினமும் பரோட்டா சாப்பிட்டால் என்ன ஆகும்? மைதா பற்றிய உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

4 weeks ago
தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

மைதா உணவு என்றாலே பலரது நினைவுக்கும் உடனே வருவது ‘பரோட்டா’ மட்டும் தான்.

“நான் மைதா உணவே எடுத்துக்கொள்வதில்லை, எப்போதாவது மாதம் ஒருமுறை மட்டுமே பரோட்டா. அதுவும் கோதுமை பரோட்டா தான்” என்பார்கள்.

ஆனால், மைதா என்பது பரோட்டாவில் மட்டுமில்லாமல் நமது பெரும்பாலான அன்றாட உணவுகளில் கலந்துள்ளது. உதாரணமாக, பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் பிரெட்கள் மைதாவால் செய்யப்பட்டவையே.

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீட்சா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ், ஆகிய உணவுகளில் இருப்பது மைதாவே. கேக்குகள் மற்றும் பாதுஷா, குலாப் ஜாமுன், ஜிலேபி, சோன் பப்டி போன்ற பல பிரபலமான இனிப்புகளை மைதா இல்லாமல் செய்ய முடியாது.

மாலை வேளையில் தேநீருடன் எடுத்துக்கொள்ளும் பிஸ்கட், சமோசா, பகோடா, ரஸ்க், பப்ஸ், இவை அனைத்திலும் மைதா உள்ளது. இப்படியிருக்க தினமும் ஏதேனும் ஒரு வகையில் நாம் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறோம்.

நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

 
தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

“மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?” என்று பொது மக்கள் சிலரிடம் கேட்டோம்,

“மரவள்ளிக்கிழங்கில் இருந்து தான் மைதா தயாரிக்கப்படுகிறது. பரோட்டா சாப்பிட்டாலே அது தெரியும்” என்று ஒருவர் கூறினார்.

மற்றொருவர், “மரவள்ளிக்கிழங்கைப் பொடித்து தான் மைதா மாவு செய்கிறார்கள். கேரளாவில் அதைக் கப்பக்கிழங்கு என்பார்கள், அதனால் தான் பரோட்டா அங்கு பிரபலமான உணவு” என்றார்.

“எதிலிருந்து வந்தால் என்ன, மைதா கண்டிப்பாக உடலுக்கு கேடு” என்று சமோசாவை சாப்பிட்டுக் கொண்டே ஒரு இளைஞர் கூறினார்.

“கோதுமையின் கழிவு தான் மைதா, அந்த கழிவில் ஒரு ஆபத்தான ரசாயனத்தை கலந்து மைதா செய்கிறார்கள்” என்றார் ஒரு பெண்.

உண்மையில் மைதா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அதன் மூலப்பொருள் என்னவென தெரிந்துகொள்ள குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமாரிடம் கேட்டோம்.

“நெல்லில் உமி, தவிடு, உள்ளிருக்கும் அரிசி என மூன்று விதமான லேயர்கள் இருக்கும். உமியை நாம் அகற்றிவிடுவோம். தவிடுடன் இருக்கும் அரிசியைத் தான் பிரவுன் அரிசி என்போம். தவிட்டை நீக்கிவிட்டால் பட்டைத் தீட்டப்பட்ட அரிசி (Polished) என்கிறோம்.

அதே போல கோதுமையிலும் உமியை நீக்கிவிட்டு தவிடுடன் மாவாக்கி பயன்படுத்தினால் வழக்கமான கோதுமை. அதுவே தவிடு நீக்கப்பட்ட கோதுமையை மிகவும் மிருதுவாக அரைத்தால் அது மைதா, வெளிநாட்டில் 'ஆல் பர்பஸ் ஃப்ளோர்' (All purpose flour) என்பார்கள். மைதா என்பது பாஸ்மதி அரிசி போன்ற ஒரு அரிசி வகைக்கு சமமான ஒன்று தான்” என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதே தவிடு நீக்கிய கோதுமையை மிருதுவாக இல்லாமல் சாதாரணமாக அரைத்து கிடைப்பதே ரவை. எனவே ரவைக்கும் மைதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மைதாவை அதிகம் எடுத்துக்கொள்வது கண்டிப்பாக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல தான். ஆனால் அதற்காக மைதா மீது மட்டும் இருக்கும் இந்த அதீத பயமும் தேவையில்லை. இணையத்தில் உலவும் சில தவறான தகவல்கள் இதற்கு காரணம்” என்றார்.

தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,DRARUNKUMAR/FACEBOOK

படக்குறிப்பு,குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்.
மைதாவின் வெள்ளை நிறம் எப்படி பெறப்படுகிறது?

கோதுமையை அரைத்து தான் மைதா கிடைக்கிறது என்றால், கோதுமை மாவு போல பழுப்பு நிறத்தில் இல்லாமல் பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் மைதா இருப்பது எப்படி, இப்படி வெள்ளை நிறத்திற்கு மைதாவை கொண்டுவர ஏதேனும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறதா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம்.

“மைதா என்பதே அதன் வெள்ளை நிறத்திற்காக தான் அறியப்படுகிறது. மைதாவில் இருந்து செய்யப்படும் பிரெட், பன், கேக், பிஸ்கட், பரோட்டா என அந்த வெள்ளை நிறமும், மிருதுவான தன்மையும் தான் மைதாவை ஒரு முக்கிய உணவுப் பொருளாக மாற்றியுள்ளது."

"கோதுமையின் பழுப்பு நிறம் மைதாவில் வரக்கூடாது என்பதற்காக ப்ளீச் (Bleach) எனப்படும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதைச் சுற்றி தான் பல சர்ச்சைகள் உள்ளன. ப்ளீச் என்பது ஆக்சிசனேற்றம் (Oxidation) எனும் செயல்முறை தான். பள்ளியில் இதைப் பற்றி படித்திருப்போம். இந்த வேதியியல் செயல்முறை மூலம் கோதுமையின் பழுப்பு நிறமியை நீக்கிவிடலாம்."

"இதற்காக குளோரின் வாயு, பென்சாயில் ஃபெராக்ஸைடு போன்ற சில ப்ளீச்சிங் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அது சரியான அளவில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். "

"இதையெல்லாம் தாண்டி, ப்ளீச்சிங் செயல்முறை முடிந்து இறுதியாக மைதா கிடைக்கும்போது அதில் இந்த ரசாயனங்கள் இருக்காது என்று தான் உணவுத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைதா நீரிழிவை ஏற்படுத்துமா?

மைதாவை ப்ளீச் செய்யும்போது அலோக்ஸன் எனும் ரசாயனம் அதில் சேர்க்கப்படுகிறது என்றும், இந்த ரசாயனம் நீரிழிவை உண்டாக்கும் என்றும் கூறப்படுகிறது, இது குறித்து மருத்துவரிடம் கேட்டபோது,

“2016இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது, மைதாவில் நீரிழிவை உண்டாக்கும் அலோக்ஸன் சேர்க்கப்படுகிறது, எனவே மைதாவை தடைசெய்ய வேண்டுமென மனுதாரர் கூறியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மைதா கொண்டு செய்யப்படும் உணவுகளை ஆய்வு செய்ய உணவுத் துறைக்கு உத்தரவிட்டது."

"அவ்வாறு உணவுத் துறை ஆய்வு செய்து பார்த்ததில், ஆபத்து விளைவிக்கக்கூடிய ரசாயனங்கள் மைதாவில் இல்லை என்பது உறுதியானது. இந்த அலோக்ஸன் குறித்துப் பார்த்தால், அது மைதாவில் ப்ளீச்சிங் முறைக்கு கலக்க மாட்டார்கள். மாறாக அது ஆக்சிசனேற்றம் முறையின் போது தானாக உருவாகக்கூடிய ஒருதுணைப் பொருள். எல்லா மைதாவிலும் குறைந்தபட்ச அளவில் அது இருக்கும்."

"பயம் ஏன் வருகிறது என்றால், எலிகளை வைத்து செய்யும் ஆய்வுகளில் அவற்றுக்கு செயற்கையாக நீரிழிவு நோய் வரவைக்க இந்த அலோக்ஸன் பயன்படும். ஆனால் மைதாவில் இருக்கும் அலோக்ஸனை அந்த ஆய்வுகளுக்கு பயன்படும் அலோக்ஸன் 25,000 மடங்கு வீரியமானது. அதனால் அதையும் இதையும் ஒப்பிட முடியாது. அப்படி பார்த்தால் பிஸ்கட், பரோட்டா உண்ணும் பலர் இன்று நீரிழிவு நோயாளிகளாக மாறியிருக்க வேண்டுமல்லவா."

"எனக்கு மைதா உணவுகள் வேண்டாம் என்று ஒதுக்குவது சரிதான், காரணம் மைதாவில் மாவுச்சத்து அதிகம் மற்றும் நார்ச்சத்து மிகக் குறைவு. எனவே அதைவிட்டு அறிவியல் ஆதாரமற்ற காரணங்களுக்காக மைதாவை ஒதுக்கத் தேவையில்லை” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

 
தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைதாவுக்கு மாற்றா கோதுமை?

“இன்று கோதுமையில் செய்யப்படும் பிரெட், பிஸ்கட், பரோட்டா இவையெல்லாம் மைதா உணவுகளுக்கு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், கோதுமை பரோட்டாவிலும் கூட மைதா சேர்க்கப்படுகிறது."

"அதேபோல வெறும் கோதுமையை வைத்து கோதுமை பிரெட் அல்லது கோதுமை பிஸ்கட் தயாரிக்க முடியாது, அதில் குறிப்பிட்ட அளவு மைதா சேர்க்கப்பட வேண்டும். காரணம் மைதாவின் மிருதுவான தன்மை."

"எனவே 2 மைதா பரோட்டாவிற்கு பதிலாக, கோதுமை ஆரோக்கியமானது என்பதற்காக 5 அல்லது 6 சப்பாத்தி சாப்பிட்டாலும் அது அதிக மாவுச் சத்து தான். அதனால் மைதா சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை அளவாக அல்லது மிகக்குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது” என்றார் மருத்துவர் அருண்குமார்.

தினமும் பரோட்டா சாப்பிடலாமா
படக்குறிப்பு,ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.
மைதாவில் உள்ள சத்துக்கள் என்ன?

மைதாவில் உள்ள சத்துக்கள் குறித்து நம்மிடம் பேசினார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன், “கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மைதாவில் மாவுச் சத்து தான் அதிகமாக உள்ளது. உதாரணமாக 100 கிராம் மைதாவில் 351 கலோரிகள் உள்ளது. மேலும் 10.3 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 2.76 கிராம் நார்ச்சத்து, 74.27 மாவுச்சத்து உள்ளது.” என்றார்.

 
தினமும் பரோட்டா சாப்பிடலாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைதாவால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் என்ன?

“பொதுவாக மைதா கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிகமான கொழுப்பு சேர்க்கப்படுகிறது. பரோட்டாவில் அதிக எண்ணெய் சேர்க்கப்படுகிறது. சோலே பட்டூரா, மிகப் பிரபலமான மைதா கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள். அதை எண்ணெயில் பொரித்து தான் எடுக்கிறார்கள்."

"இதுபோக மைதா கொண்டு செய்யப்படும் பிஸ்கட்டுகள், பலகாரங்கள் என அனைத்தும் அளவுக்கு அதிகமான இனிப்பும் எண்ணெயும் கொண்டு தான் செய்யப்படுகிறது. ஏற்கனவே அதிக மாவுச் சத்துள்ள மைதாவில் இதுபோன்ற துணைப்பொருட்களும் சேரும்போது அது உடலுக்கு கேடாக மாறுகிறது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

தொடர்ந்து பேசிய அவர், “நீரிழிவு உள்ளவர்கள் கண்டிப்பாக அதை எடுக்கக்கூடாது. காரணம் எந்த நார்ச்சத்தும் இல்லாத மைதா சேர்த்த உணவை குறைவாக எடுத்தாலும் கூட இரத்த சர்க்கரை அளவு உடனே கூடும். உடல்பருமன் உள்ளவர்களும் இதைத் தவிர்க்க வேண்டும்."

"முக்கியமாக எடை அதிகமாக உள்ள பெண்களும் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மேலும் எடை கூடும்போது, மாதவிடாய் தள்ளிப்போவது முதல் பல பிரச்னைகள் ஏற்படலாம்” என்று கூறுகிறார் தாரிணி கிருஷ்ணன்.

https://www.bbc.com/tamil/articles/cxwvmjjlxdxo

தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட 'பக்கோடா' உலகெங்கும் பரவியது எப்படி?

1 month ago
ரமலான் - பக்கோடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், உருஜ் ஜாஃப்ரி
  • பதவி, பிபிசி இந்திக்காக இஸ்லாமாபாத்திலிருந்து
  • 9 ஏப்ரல் 2024

பக்கோடாவும் இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான ரமலானும் ஒன்றோடொன்று இணைந்தது.

இஃப்தார் (நோன்பு திறப்பு) மேசையில் பக்கோடா பரிமாறப்படாத எந்த முஸ்லிம் குடும்பமும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்க வாய்ப்பில்லை.

இஃப்தார் நேரமும் மாலை தேநீர் நேரமும் ஒன்றுதான்.

ஒவ்வொரு குடும்பத்திலும் மாலை நேரத்தில் தேநீருடன் பக்கோடாவும் தயாரிக்கப்படுகிறது. ஆனால், பக்கோடாவின் வரலாறு எவ்வளவு பழமையானது என்பது பற்றி பல்வேறு கூற்றுகள் உள்ளன.

பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின்படி, பக்கோடா கி.பி. 1025 முதலே உள்ளது.

அவை முதலில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

பக்கோடா சாப்பிடும் பழக்கம்
பக்கோடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பருப்புகளை அரைத்து, அதனை காய்கறிகளுடன் கலந்து பக்கோடா தயாரிக்கப்பட்டது. அதை மக்கள் பொறித்து சாப்பிட்டனர். மக்கள் இதை பக்கவாடா (Pakavata) என்று அழைத்தனர். அதாவது, சமைத்த உருண்டை அல்லது கட்டி என்பது இதன் பொருள்.

இது பல இடங்களில் பாஜியா என்றும் அழைக்கப்படுகிறது.

1130 இல் வெளியான மானசொல்லாசம் (Manasollas) மற்றும் 1025 இல் வெளியிடப்பட்ட லோகோபகாரம் (Lokapakara) ஆகிய வரலாற்று உணவு நூல்களில், பாஜியா அல்லது பக்கோடா செய்ய, காய்கறிகளை கடலை மாவில் கலந்து, மீன் வடிவ அச்சில் பொறித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு, கீரை, வெங்காயம், பச்சை மிளகாயுடன் காய்ந்த மசாலாப் பொருட்களைக் கலந்து பக்கோடாக்கள் தயாரிக்கப்படுகின்றன. ரவை மற்றும் அரிசி மாவு இதில் பயன்படுத்தப்படுகின்றன.

பக்கோடா அல்லது பாஜியாவில் ஊருக்கு ஏற்ப சில வித்தியாசங்கள் இருப்பதாகவும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பக்கோடா பரவியது எப்படி?
ரமலான் மாதத்திற்கும் பக்கோடாவுக்கு என்ன தொடர்பு? உலகம் முழுவதும் பக்கோடா பிரபலமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கடல் மார்க்கமாக இந்தியக் கடற்கரைக்கு வந்த போது, நீண்ட காலம் கெடாமல் இருக்கும் பண்டங்களைத் தேடினர் என்றும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்த்துகீசியர்கள் பொதுவாக இந்திய சமையல்காரர்களை பயணத்தின் போது தங்களுடன் வைத்திருப்பார்கள். அந்த சமையல்காரர்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், கத்தரிக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் பச்சரிசி மாவு மற்றும் மசாலா சேர்ந்து வறுத்த காய்கறிகளை போர்ச்சுகீசியர்களுக்கு உணவாக வழங்குவர்.

வறுத்த பிறகு அவற்றின் ஈரப்பதம் நீக்கப்பட்டதால், அவை நீண்ட காலத்திற்கு கெட்டுப்போவதில்லை.

போர்ச்சுகீசியர்களால்தான் பக்கோடாக்கள் ஜப்பானை சென்றடைந்தன. ஜப்பானில் பருப்பு பயிரிடப்படாததால், அங்குள்ள மக்கள் காய்கறிகள் மற்றும் உலர்ந்த மசாலாப் பொருட்களுடன் பருப்பால் ஆன மாவுக்குப் பதிலாக மைதா மாவைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஜப்பானிய டெம்புரா பிறந்தது இப்படித்தான்.

இன்றும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பேருந்தில் பயணம் செய்தாலும், ரயிலில் பயணம் செய்தாலும், பக்கோடா, பாஜியா, போண்டா போன்றவற்றை சட்னியுடன் சேர்த்து எடுத்துச் செல்வதுதான் வழக்கம்.

இந்திய-பாகிஸ்தானிய பக்கோடாக்கள், ஜப்பானிய மற்றும் பிரிட்டிஷ் ஃபிரிட்டர்ஸ் வகை உணவு மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளின் ஃபாலாஃபெல், அனைத்து உணவுகளும் ஒன்றுக்கொன்று உறவினர்கள் போல் தெரிகிறது.

பக்கோடாக்களுக்கான மாவு பருப்பு மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஃபிரிட்டர்ஸ் உணவுக்கு மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், ஃபாலாஃபெலுக்கு வேகவைத்த பயிரை அரைத்து மாவு தயாரிக்கப்படுகிறது.

 
ரமலானுக்கும் பக்கோடாவுக்கும் என்ன தொடர்பு?
ரமலான் மாதத்திற்கும் பக்கோடாவுக்கு என்ன தொடர்பு? உலகம் முழுவதும் பக்கோடா பிரபலமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உணவு மற்றும் பானங்கள் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்த புஷ்பேஷ் பந்த், பக்கோடாவின் வரலாறு பற்றி கூறுகையில், "பக்கோடாவின் வரலாறு உணவு வரலாற்றில் இல்லை, ஆனால் உணவுகள் வறுத்த உணவுகளின் வரலாற்றில் உள்ளது. ரமலான் மாதத்தில் இதன் பயன்பாடு பெரிது. இவ்வகை உணவுகள் எண்ணெயில் பொறித்தது என்பதால், சீக்கிரம் கெட்டுப்போகாது. கடலை மாவு என்பதால் சத்தானது. மேலும், இதை உங்களுக்குப் பிடித்த காய்கறிகள் மற்றும் சட்னிகளுடன் சாப்பிடலாம்” என்றார்.

நோன்பு திறப்பின்போது நமக்குப் பிடித்தமான காரமான மற்றும் இனிப்பு உணவுகளை உண்ண நம் இதயம் விரும்புகிறது.

பக்கோடா என்பது ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய ஓர் உணவு. அதன் தயாரிப்புக்கான அனைத்து பொருட்களும் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும்.

பக்கோடாக்கள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலம். இதற்கு ஒரு காரணம், அவை இரண்டு நாடுகளின் வானிலைக்கும் ஏற்றது. இதுவே காலப்போக்கில் பக்கோடா தயாரிப்பதில் பல வகைகள் தோன்றியதற்குக் காரணம்.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டுமின்றி, தாமரை, வெள்ளரிக்காய், மீன் போன்றவற்றையும் கடலை மாவில் கலந்து பக்கோடாவாக செய்வார்கள்.

புஷ்பேஷ் பந்த் கூறுகையில், "முஸ்லிம்கள் இறைச்சியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் அவர்களின் இஃப்தார் உணவு அட்டவணை இது தவறு என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில், ரமலானின் போது, உணவு மேசையில் உருளைக்கிழங்கு சாட் மற்றும் சாட் பக்கோடாக்கள் கிடைக்கும். மேலும் உருளைக்கிழங்கு-வெங்காயம் பக்கோடாவும் கிடைக்கும். ஒருபுறம், அது காரமான சுவையை அளிக்கிறது. மறுபுறம், இது நோன்பு இருப்பவர்களின் உடலில் சோடியம் மற்றும் புரதத்தின் அளவையும் சமநிலையில் வைத்திருக்கிறது" என்றார்.

 
பாகிஸ்தான் பக்கோடாக்கள்
ரமலான் மாதத்திற்கும் பக்கோடாவுக்கு என்ன தொடர்பு? உலகம் முழுவதும் பக்கோடா பிரபலமானது எப்படி?

பட மூலாதாரம்,UROOJ JAFRI

படக்குறிப்பு,

உருஜ் ஜாஃப்ரி

பாகிஸ்தானின் பிரபல சமையல் கலைஞரான ஜுபைதா அபா இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அவருடைய சமையல் கலை தந்திரங்கள் மற்றும் உணவு வகைகளை இன்னும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சமையலறைகளில் பயன்படுத்துகின்றனர்.

அவரது மகள் ஷாஷா ஜாம்ஷெட் கூறுகையில், "அம்மா பக்கோடாவில் இனிப்பு சோடாவைப் பயன்படுத்துவார். அதனால் பக்கோடா மென்மையாகவும், லேசாகவும் இருந்தது. அது ரமலான் மாதமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி, ஒருவர் தேநீர் மற்றும் பக்கோடாவுடன் அரட்டையடிக்கலாம், நோன்பு திறக்கலாம்” என்றார்.

பாகிஸ்தானில், ரமலான் மாதத்தில் ஒவ்வோர் இனிப்பு கடையிலும் பக்கோடா மற்றும் ஜிலேபி கிடைக்கும். உருளைக்கிழங்கு பக்கோடா பல தசாப்தங்களாக மக்களின் விருப்பத்தில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்ப அதில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

பெஷாவரில், கீமா அல்லது சிக்கன் பக்கோடாக்களும் கிடைக்கின்றன. அதேபோல், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் கோழி மற்றும் கடல் உணவுகளுடன் கூடிய பக்கோடாவும் கிடைக்கும்.

 
ரமலான் மாதத்திற்கும் பக்கோடாவுக்கு என்ன தொடர்பு? உலகம் முழுவதும் பக்கோடா பிரபலமானது எப்படி?

பட மூலாதாரம்,UROOJ JAFRI

படக்குறிப்பு,

ஆயிஷா அலி பட்

லாகூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஆயிஷா அலி பட் கூறுகையில், "பருப்பு மாவின் சுவை வித்தியாசமானது. ஆனால், மற்ற நாடுகளில் பக்கோடா மாவு மற்றும் அரிசி மாவு கலவையில் செய்யப்படுகிறது" என்றார்.

“பிரிவினை மூலம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் உருவாக்கியவர்களுக்கு அவமானம். அசாம் முதல் பஞ்சாப் சிந்து வரை, கேரளா முதல் காஷ்மீர் வரை எங்கு முஸ்லிம்கள் இருந்தார்களோ, அங்கெல்லாம் பக்கோடாக்களும் இருந்தன” என்கிறார் புஷ்பேஷ் பந்த்.

"ஒடிசாவிலும் வெங்காயத்தில் இருந்து தயாரிக்கப்படும் பியாஜி உள்ளது. அதேசமயம் வங்காளத்தில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கலந்து பைகுனி எனும் உணவு கிடைக்கும். தென்னிந்தியாவில் காய்கறிகளை பொடியாக நறுக்கி பாஜியா செய்யப்படுகிறது. பிகாரில் நிறுபருப்பை அரைத்துத் தயாரிக்கப்படுகிறது. காஷ்மீரில் வேகவைக்கப்பட்ட தாமரை, வெள்ளரி பக்கோடாக்கள் நாதிர் மோஞ்சி என்று அழைக்கப்படுகின்றன."

பிரிட்டனில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே பிரிட்டனிலும் பக்கோடாக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

லண்டனில் மழை பெய்யும் போதெல்லாம், பிபிசி உருது சேவையின் மூத்த சக ஊழியரான ராசா அலி அபிதி சாப், மத்திய லண்டனில் உள்ள டிரம்மண்ட் தெருவில் இருந்து கலவையான பக்கோடாக்களையும் ஜிலேபிகளையும் கொண்டு வருவார்.

பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் உலகில் எங்கிருந்தாலும் பக்கோடா விருந்து இல்லாமல் ரமலான் அல்லது மழைக்காலத்தைக் கொண்டாடுவதில்லை.

https://www.bbc.com/tamil/articles/crg3kv4r872o

மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?

1 month 2 weeks ago
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அரிசியின் வெவ்வேறு வகைகள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 29 மார்ச் 2024, 02:21 GMT

உலக அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விட உலகிலேயே அதிக அரிசியை உட்கொள்ளும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம், ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 முதல் 100 மில்லியன் மெட்ரிக் டன் உணவுகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுவும், தென்னிந்தியாவின் பிரதான உணவுகளில் அரிசி முதன்மையானது என்பதை நாம் அறிவோம்.

அதற்கேற்றாற்போல் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் விளைவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையில் அரிசி நமக்கு சரியான உணவுதானா? அதனால் நமக்கு நன்மையா அல்லது தீமையா?

எந்த அரிசியை சாப்பிடுவது மனிதர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உள்ளிட்ட அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு உணவு நிபுணர்களின் பதில் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரிசியின் வகைகள் என்னென்ன?

தமிழர்களின் உணவு பாரம்பரியத்தில் தினை வகைகளே தொன்று தொட்டு தொடர்ந்து வரும் உணவுகள். ஆனால், இடையில் வந்த அரிசியும் தினைகளுக்கு இணையான இடத்தை பிடித்துக் கொண்டது.

தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் நாம் பெரும்பாலும் உட்கொள்வது வெள்ளை நிறத்தில் கிடைக்கும் பாலிஸ் செய்யப்பட்ட அரிசிதான்.

அதைத் தாண்டி ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு வகையான அரிசி வகை இருப்பதாக கூறுகிறார் சிவாலயா மருத்துவமனையின் இயற்கை மருத்துவரான மருதராஜ்.

அரிசியில் பாரம்பரிய அரசி மற்றும் ஹைபிரிட் அரிசி வகைகளும் கிடைக்கின்றன. பாரம்பரிய அரிசிகள் உடலுக்கு நல்லது என்றாலும், ஹைபிரிட் அரிசியை முழுமையாக கெடுதல் என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார் அவர். அதுவே இந்தியாவின் பெரும்பான்மையான உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிடுகிறார் .

இதில் எந்த அரிசியாக இருந்தாலும் பட்டை தீட்டப்படாத அரிசி என்பதே உடலுக்கு நல்லது என்கிறார் அவர்.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும்.

அரிசியின் சத்துக்கள் எப்படி காணாமல் போகிறது?

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அரிசியில் கலோரி, புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), நார்ச்சத்து, மினரல்கள், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

"ஆனால், இந்த சத்துக்கள் அனைத்தும் அரிசியை பட்டைதீட்டும் போது வெளியேறி விடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். முதல் அடுக்கு நாம் மேலே பார்க்கும் உமி. அடுத்த அடுக்கு பிரான்(Bran) என்று அழைக்கப்படும் தவிடு. இதை நீக்காமல் கிடைக்கும் அரிசிதான் ப்ரவுன் அரிசி. மூன்றாவது அதுக்குதான் endosperm என்று அழைக்கப்படும் மாவுச்சத்து நிறைந்த நடுப்பகுதி. மற்ற அனைத்தையும் நீக்கிவிட்டு வெள்ளை நிறத்தில் நாம் உட்கொள்ளும் பகுதியும் இதுவே."

"இப்படி மேலே இருக்கக்கூடிய புரதங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை நீக்கும்போது மக்கள் அதிக மாவுச்சத்து நிறைந்த அரிசியை உண்ண வேண்டிய சூழல் வருகிறது. இதன் நீட்சியாக உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்டவை ஏற்பட வழிவகுக்கிறது" என்று கூறுகிறார் மருத்துவர் மருதராஜ்.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கருப்புகவுனி அரிசி

கருப்பு கவுனி அரிசி என்றால் என்ன?

சமீப காலமாகவே பலரும் கருப்பு கவுனி அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் பேசி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக இது தீர்க்காத நோயை கூட தீர்த்து விடும் என்பது போன்றெல்லாம் வீடியோக்கள் பரவி வருகின்றன. உண்மையில் அதன் பயன் என்ன என்று மருத்துவர் மருதராஜிடம் கேட்டோம்.

அதற்கு பதிலளித்த அவர், “கருப்பு கவுனி அரிசி அந்த நிறத்தில் இருக்க காரணம் ஒருவகை நிறமிதான். அதற்கு சாதாரண அரிசியை விட 15% கூடுதல் நலன்கள் இருக்கிறதே தவிர, அதன் மூலம் எந்த நோயையும் சரிப்படுத்த முடியாது. கருப்புகவுனி அரிசியில் கூடுதல் ஆன்டிஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அது உடலுக்கு ஒரு சில நன்மைகளை தரும் அவ்வளவுதான்” என்கிறார்.

மற்றபடி 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் இருக்கும் மாவுச்சத்தின் அளவில் இருந்து ஓரிரண்டு கிராம்களே கருப்பு கவுனி அரிசியில் குறைவாக இருக்கிறது என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

அதே போல் 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் 1-2 கிராம் நார்ச்சத்து இருந்தால், கருப்பு கவுனியில் 4-5 கிராம் நார்ச்சத்தே காணப்படுகிறது.

 
அரிசி

பட மூலாதாரம்,AATHICHOODI

படக்குறிப்பு,

மருத்துவர் மருதராஜ்

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?

சமீப காலமாக அரிசி கொடுத்து தேடப்படும் முக்கியமான தகவல்களில் செறிவூட்டப்பட்ட அரிசியும் (Fortified rice) ஒன்று.

இதுகுறித்து கேட்டபோது, “உணவுச்சந்தை என்பது மிகப்பெரிய கடல். இதில் உணவை விற்பதற்காக சொல்லப்படும் பல பரப்புரைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் மருத்துவர் மருதராஜ்.

அவரது கூற்றுப்படி, செறிவூட்டப்பட்ட அரிசி என்பது இயற்கையாகவே ஊட்டச்சத்துகளோடு விளைவிக்கப்படும் அரிசியில், செயற்கை முறையில் கூடுதல் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் செயல்முறை ஆகும்.

இதில் ரசாயனம் அல்லது எந்த முறையில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகிறது என்று தெரியாததால் அது நல்ல அரிசியா என்று தீர்மானிப்பது கடினம் என்கிறார் அவர்.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ்.

சீரக சம்பா vs மாப்பிள்ளை சம்பா வித்யாசம் என்ன?

தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளில் இந்த சம்பா வகை அரிசிகளும் ஒன்று. இதில் இந்த சீரக சம்பா அரிசி அளவில் சிறியதாகவும் அதே சமயம் நறுமணம் வாய்ந்ததாகவும் இருக்கும்.

மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். அந்த காலங்களில் புதுமணம் முடிந்து வரும் மணமகனுக்கு இந்த அரிசி சோறுதான் பரிமாறப்படுமாம். அதனால் தான் இந்த பெயர் பெற்றதாகவும் கூறுகிறார் அவர்.

“இதன் நிறம் காரணமாக இதில் வைட்டமின் ஏ மிக அதிகமாக இருக்கும். ஆனால், இதை சமைக்கும் செயல்பாடு நீண்டதும், அதிக நேரம் எடுக்க கூடியதும் ஆகும்.”

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும்

காட்டுயானம் அரிசி என்றால் என்ன? அது உடலுக்கு நல்லதா?

பாரம்பரிய அரிசியை விரும்பி உண்பவர்களில் பலர் கூட இந்த காட்டுயானம் அரிசி குறித்து கேள்விப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

இதன் உயரம் பெரிது என்பதால் காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும். கருப்பு கவுனி அரிசியை போலவே இதையும் குறைந்தது 10 மணிநேரமாவது ஊற வைத்து சமைக்க வேண்டும்.

இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் இதர அரிசிகளில் காணப்படும் சத்துக்களும் உள்ளன.

இதுவும் மலச்சிக்கல் தீர்வு, வயதான தோற்றத்தை தாமதப்படுத்தல், ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்துதல், ரத்த சர்க்கரையை உயராமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பலன்களை கொண்டுள்ளது.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

"பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்கள் நீங்காமல் இருக்கும்”

ரேஷன் அரிசி நல்லதா?

பொதுவாகவே மக்கள் மத்தியில் அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. காரணம் அதன் நிறம். ஆனால், அது பழுப்பு நிறத்தில் இருக்க காரணம் அதை பெரியளவு பட்டை தீட்டாததே காரணம் என்கிறார் மருத்துவர் மருதராஜ்.

“மக்கள் பெரும்பாலும் வெள்ளை அரிசிதான் நல்லது என்று வாங்கி உண்ணும் அரிசியில் பெரியளவு மாவுச்சத்து மட்டுமே உள்ளது. ஆனால், இது போன்ற பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்களும் நீங்காமல் இருக்கும்” என்கிறார் அவர்.

எனவே ரேஷன் அரிசி தரமானது தான். அதை மக்கள் தாராளமாக உண்ணலாம் என்கிறார் மருதராஜ்.

 
அரிசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம்" என்கிறார் மருதராஜ்.

எந்த அரிசியை தேர்வு செய்வது?

இன்றைய காலகட்டத்தில் அரிசியிலும் வெவ்வேறு வகைகளில் தொடங்கி, வித விதமான கலப்படங்கள் வரை வந்துவிட்டன. இந்நிலையில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மக்கள் எந்த அரிசியை உண்ண வேண்டும் என்று மருதராஜிடம் கேட்டோம்.

இதற்கு பதிலளித்த அவர், “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம். ஆனால், அளவாக உண்ண வேண்டும். அது கருப்பு கவுனியோ அல்லது எந்த வகை அரிசியாக இருந்தாலும் எல்லை மிகாமல் சாப்பிட வேண்டும்.”

“அதில் பட்டை தீட்டப்படாத அரிசியாக இருந்தால் உடல் நலத்திற்கு கூடுதல் நல்லது. ஆனால், அதுவும் உங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்களை தருமே தவிர, உங்களது நோய்களை போக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்”

https://www.bbc.com/tamil/articles/c3gj24ql6x4o

ஆரோக்கியமான சமையல் எண்ணெய் எது? மருத்துவர்கள் கூறுவது என்ன?

1 month 2 weeks ago
  • சமையல் எண்ணெய்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    கட்டுரை தகவல்
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்
    • 27 மார்ச் 2024, 02:42 GMT

    இந்திய சமையலில் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெயும், தென் பகுதியில் கடலை மற்றும் நல்லெண்ணெயும், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் தேங்காய் எண்ணெயும் பல வருடங்களாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தந்த பகுதிகளின் புவியியல் அமைப்பு, சீதோஷண நிலை, கலாச்சாரம், உணவு மற்றும் சமைக்கும் முறை போன்ற அம்சங்களின் அடிப்படையில் மக்கள் இந்த எண்ணெய்களுக்கு பழகி விட்டனர்.

இவை தவிர்த்து, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்பட்ட சூரிய காந்தி எண்ணெய், செம்பனை எண்ணெய் (Palm oil), ஆலிவ் எண்ணெய் போன்றவையும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

உணவின் சுவையை தீர்மானிப்பதே எண்ணெய் தான் என சொல்லப்பட்டாலும் கூட, பெரும்பாலானோருக்கு கொழுப்பு என்றவுடன் உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் தான் நினைவுக்கு வருகிறது. அதிலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டோர் பலர் எண்ணெய் கலந்த உணவு என்றாலே சற்று விலகி நிற்கிறார்கள்.

எண்ணெய் பயன்படுத்தாத உணவு என்பது வேகவைத்த உணவு மட்டுமே, ஆனால் அவை தினமும் எடுத்துக்கொள்வதற்கு ஏற்றதாகவும், அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்ததாக இருக்குமா என்றால் இல்லை என்று தான் ஆய்வுகள் சொல்கின்றன.

சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது நல்லது? எண்ணெய் என்றால் கொழுப்பு மட்டும் தானா? ரீஃபைண்டு எண்ணெயை விட செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லதா? எண்ணெய் கலந்த உணவுகளைப் பார்த்து அச்சம் கொள்வது அவசியமா? போன்ற கேள்விகளுக்கான விடையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran) போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன

எண்ணெயில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு என்னென்ன?

தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் என எடுத்துக்கொண்டால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகியவற்றை சொல்லலாம். இந்த மூன்று எண்ணெய்களிலும் என்னென்ன கொழுப்புகள் உள்ளன, அவை உடலுக்கு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.

எண்ணெய்களில் உள்ள கொழுப்பை மூன்று வகைகளாக பிரிக்கலாம், சாச்சுரேட்டட் (Saturated), மோனோ அன்சாச்சுரேட்டட் (monounsaturated), பாலி அன்சாச்சுரேட்டட் (Poly unsaturated). தேங்காய் எண்ணெய், பாமாயில், நெய், வெண்ணையில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம். மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆலிவ் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது.

நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran) போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன.

1. தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிக அதிகம் (82%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (6%), பாலி அன்சாச்சுரேட்டட் இன்னும் குறைவு (2%).

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். உயர்- வெப்ப சமையலுக்கு இந்த எண்ணெய் உகந்ததாக இருக்கும்.

அதே வேளை, தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகளால், அதை அதிகம் எடுத்துக் கொண்டால் கெட்ட கொழுப்பு உருவாகி, இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. தேங்காய் எண்ணெயில் கலோரிகளும் மிக அதிகம்.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது, இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

2. நல்லெண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு மிகக் குறைவு (14%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (42%), பாலி அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (40%).

எள் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளும் நிறைந்துள்ளன, இது உடலின் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.

3. பாமாயிலில் சாச்சுரேட்டட் சற்று அதிகம் (49%), மோனோ அன்சாச்சுரேட்டட் மிதமான அளவு (37%), பாலி அன்சாச்சுரேட்டட் மிகக் குறைவு (9%)

பொதுவாக பாமாயிலை எடுத்துக்கொண்டால், அது மலிவானது என்றும், ஆரோக்கியமற்றது என்ற எண்ணமும் உள்ளது. ஆனால் இதில் வைட்டமின் இ எனப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இந்த எண்ணெய் ஆரோக்கியமற்றது, கெடுதலானது என்பதற்கு போதிய மருத்துவச் சான்றுகள் இல்லை.

சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரீஃபைண்டு எண்ணெயாக பாமாயில் பெறப்படுவதால் அதற்குரிய சில சிக்கல்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. எனவே பாமாயிலை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ரீஃபைண்டு எண்ணெய் என்றால் என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

பாமாயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் ரீஃபைண்டு எண்ணெயாக பாமாயில் பெறப்படுவதால் அதற்குரிய சில சிக்கல்கள் உள்ளன

செக்கு எண்ணெய் Vs ரீஃபைண்டு எண்ணெய்.

செக்கு எண்ணெய் என்பது மிகவும் பழமையான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய். பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் முறைப்படி, மாடுகள் கொண்டு இழுக்கப்படும் ஒரு செக்கில், எண்ணெய் விதைகள் அரைக்கப்பட்டு, எண்ணெய் எடுக்கப்படும். சில நாடுகளில் குதிரைகளும், ஒட்டகங்களும் கூட செக்கிழுக்க பயன்படுகின்றன.

இவ்வாறு செக்கில் அரைக்கப்பட்டு கிடைக்கும் எண்ணெய் கோல்ட் பிரஸ்டு ஆயில் (Cold pressed oil) என்று அழைக்கப்படுகிறது. அதாவது செக்கில் அரைக்கப்படும் போது, உள்ளிருக்கும் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு மேல் செல்லாது.

குறைவான வெப்பநிலையில் செக்கில் விதைகள் அரைக்கப்படுவதால், அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் இயற்கையான வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் (Anti oxidants) என எல்லாம் அதன் அசல் வடிவில் இருக்கும். இதனால் எண்ணெயில் மனம் மற்றும் சுவை அதிகமாக இருக்கும்.

இதனால் தான் செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எண்ணெயின் தயாரிப்பு செலவு அதிகம். காரணம், செக்கின் மூலமாக விதைகளில் இருக்கும் 30 முதல் 40% எண்ணெயை மட்டுமே பிரித்தெடுக்க முடியும். இதனால் கழிவு அதிகமாக இருக்கும்.

செக்கு எண்ணெய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுவே இயந்திரத்தால் அரைக்கப்பட்டு எண்ணெய் தயாரிக்கும் போது (Expeller pressed oil), 80 முதல் 90% எண்ணெயை பிரித்தெடுக்க முடியும். ஆனால் உள்ளிருக்கும் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என்பதால் எண்ணெயின் இயற்கை தன்மை மாறிவிடும்.

இதற்கு பிறகு வந்த முறைதான், சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு. விதைகளை நன்றாக அரைத்து, பின்னர் அதனுடன் எக்சேன் (Hexane) எனப்படும் வேதியியல் பொருளைக் கலக்கப்படும். விதைகளில் உள்ள 100% எண்ணெயை இந்த எக்சேன் எடுத்துவிடும். பின்னர் அடுத்த கட்டத்தில் எண்ணையில் கலந்துள்ள எக்சேன் பிரிக்கப்படும்.

பின்னர் பல்வேறு வேதியியல் முறைகள் மூலமாக அந்த எண்ணெய் சுத்திகரிக்கப்படும். இறுதியாக மனமும் சுவையும் அதிகம் இல்லாமல், சுத்தமாக, தண்ணீர் போல நமக்கு கிடைப்பதே ரீஃபைண்டு எண்ணெய்.

கடந்த சில வருடங்களாக மக்களால் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் (Rice bran oil) போன்றவை எக்சேன் பயன்படுத்தி எடுக்கப்படும் ரீஃபைண்டு எண்ணெய்களே.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்
படக்குறிப்பு,

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறையின் தலைவருமான எஸ்.சந்திரசேகர்.

செக்கு எண்ணெய் தான் நல்லதா?

“சந்தேகமே வேண்டாம், செக்கு எண்ணெய் தான் நல்லது. அறிவியல் ஆய்வுகள் மூலம் நமக்கு தெரியவருவது அதுதான்” என்கிறார் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறையின் தலைவருமான எஸ்.சந்திரசேகர்.

தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாகவே சீதோஷண நிலை, வாழ்வாதார நிலை, உணவுப் பொருட்களுக்கு ஏற்றவாறு எண்ணெய் வகை மற்றும் அளவு மாறும். எல்லா வகை எண்ணெய்களிலும் நல்ல கொழுப்பும் உள்ளது, அது உடலுக்கு கண்டிப்பாக தேவை." என்றார்.

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நமது சீதோஷண நிலைக்கு ஏற்ற எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய் தான். ஆனால் எவ்வளவு எண்ணெய் சேர்க்கிறோம் என்பது முக்கியம். ஒருவருக்கு இதய நோய், கொழுப்பு பிரச்னை, உயர்ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தால் எண்ணெய் அளவு மாறுபடும்” எனக் கூறுகிறார் சந்திரசேகர்.

“நல்லெண்ணெய் தவிர்த்து ஆலிவ் எண்ணெய் சிறிதளவு பயன்படுத்தலாம். பொரிப்பதற்கு ரைஸ் பிரான் எண்ணெய் பயன்படுத்தலாம், வறுப்பதற்கு கடலை எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை குறைவாக எடுத்துக்கொள்ளலாம்."

"எனவே ஒரு எண்ணெய் மட்டுமில்லாமல் எல்லா எண்ணெய்களையும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக ஒரு நாளுக்கு ஒருவருக்கு 15 மில்லிலிட்டர் எண்ணெய் போதுமானது. ஒரு மாதத்திற்கு 450 முதல் 500 மில்லிலிட்டர் என்பது உகந்தது” என்கிறார்.

“எண்ணெய்யை அறவே தவிர்ப்பது என்பது நல்லதல்ல. அவ்வாறு தவிர்த்துவிட்டு வெறும் வேகவைத்த உணவுகளை சாப்பிடுவதால், உடலில் பல மாற்றங்களும் சத்துக்குறைபாடும் ஏற்படும். எனவே எண்ணெய் மனித உடலுக்கு என்பது மிகவும் அவசியம், ஆனால் எவ்வளவு எண்ணெய்யை எந்த உணவுப் பொருளுடன் எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார் மருத்துவர் எஸ்.சந்திரசேகர்.

 
ஆரோக்கியமான சமையல் எண்ணெய்
படக்குறிப்பு,

ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

எந்த சமையல் எண்ணெய் உடலுக்கு நல்லது?

இது குறித்து பேசிய ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன், “தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நல்லெண்ணெய் தான் சிறந்த எண்ணெய், ஏனென்றால் அதில் தான் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அதிகம் எடுத்துக்கொண்டால் நல்லதல்ல என்பதைத் தாண்டி, நல்லெண்ணெயில் ஆபத்துகள் பெரிதாக இல்லை. பெயருக்கு ஏற்றாற்போல இது நல்ல எண்ணெய் தான்” என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், “அதோடு சேர்த்து கடலை எண்ணெய் மற்றும் ரைஸ் பிரான் எண்ணெய்யையும் நான் பரிந்துரை செய்வேன். பாமாயிலையும் பயன்படுத்தலாம், ஆனால் நல்லெண்ணெய் அளவுக்கு நல்லதல்ல” என்கிறார்.

ஆனால் எந்த எண்ணெயாக இருந்தாலும், ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும் என்பதையும் அவர் விளக்கினார்.

“ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தினால் அது நிறைவுறாக் கொழுப்புகளாக மாறும். இதனால் இதய நோய்கள், புற்றுநோயை ஏற்படுத்தும். ஒருநாளைக்கு 3 ஸ்பூன் அளவிலான எண்ணெய் என்ற அளவைத் தாண்டி அதிகமான எண்ணெய்யை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் அதிகரித்துவிடும். உடல் எடை கூடுவதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகளுக்கு அது வழிவகுத்துவிடும்” என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

https://www.bbc.com/tamil/articles/c8v3lqd5j2eo

அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா?

2 months 1 week ago
நோ ஆயில், நோ பாயில்: அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா?
உடல்நலம்: ‘நோ ஆயில், நோ பாயில்’ - சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

2 மார்ச் 2024

முருங்கை கீரையை வைத்து வடை, வாழைக்காயை வைத்து கட்லெட் தொடங்கி, அரிசியே இல்லாமல் சோறு, எண்ணெய் இல்லாத ஃபிரைட் ரைஸ், மைதா இல்லாமல் நூடுல்ஸ் என, ‘நோ ஆயில், நோ பாயில்’ என்ற கான்செப்ட் தான் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாக உள்ளது.

அடுப்பு தேவையில்லை, ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் சமைக்காமலேயே சில முறைகளைப் பயன்படுத்தி, பதப்படுத்தி இந்த வகை உணவுகள் தயாரிக்கப்படும் வீடியோக்கள் சமீப நாட்களாக வைரலாகி வருகின்றன.

அரிசிக்குப் பதிலாக ஊறவைத்த அவல்தான் சோறு. இதனால், அடுப்பில் வைக்காமலேயே சோறு தயாராகிவிடும். தவிர, அடுப்பில் வைக்காமலேயே சாம்பார், ரசம், புளிக்குழம்பு, பொறியல், தயிர் இல்லாத மோர்க்குழம்பு, இனிப்பு வகைகள் என ஒரு ‘முழு சாப்பாடு’ இந்த முறையில் சமைக்கப்படுகிறது.

’ஆதிகாலத்தில் இப்படித்தான் சாப்பிட்டோம்’, ‘இந்த முறையில் சாப்பிட்டால் உடலுக்கு உணவின் முழு சத்தும் கிடைக்கும்’ என்பதே இம்முறை சமையலின் ஆதரவாளர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

இந்த முறை உணவுகள் எப்படி தயார் செய்யப்படுகின்றன, சமைக்காமலேயே காய்கறிகளைச் சாப்பிடலாமா, அவை எல்லோருக்கும் ஏற்றதா? இவ்வகை உணவுகளால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

எப்படி தயார் செய்யப்படுகின்றது?
உடல்நலம்: பயர் வகைகள், காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களும் விளைவுகளும்

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

கோயம்புத்தூரில் உள்ள ‘படையல்’ உணவகத்தை நடத்தி வரும் சிவக்குமார், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சுமார் 2,500 உணவு வகைகளை உருவாக்கியுள்ளதாக பிபிசியிடம் கூறுகிறார்.

அவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். முழுக்க காய்கறி சார்ந்த ‘வீகன்’ உணவுகள்தான் இங்கு கிடைக்கும். பால், தயிர் உள்ளிட்டவையும் தாவர அடிப்படையிலானதே. இங்கு ’மயோனீஸ்’ முந்திரியால் செய்யப்படுகிறது. இதே முறையில் உணவு வழங்கும் சில உணவகங்கள் சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

’நறுக்குதல், ஊற வைத்தல், கலத்தல்’ - இந்த சமையல் முறையின் மூன்று அடிப்படை செயல்முறைகள் இவைதான். ஒவ்வொரு காய்கறியையும் என்ன உணவு வகையோ அதற்கேற்ப நறுக்கிக் கொள்கிறார்கள். பின்னர், காய்கறிகளின் தன்மைக்கேற்ப தண்ணீர், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேங்காய் பால், இளநீர் உள்ளிட்டவற்றில் ஊற வைக்கின்றனர். "இப்படி 12 ஊற வைக்கும் முறைகள் உள்ளன” என்கிறார், சிவகுமார். பின்னர்தான் இந்த உணவு வகைகள் தயாரிக்கப்படுவதாகக் கூறுகிறார் அவர்.

அரிசியைப் பொறுத்தவரை பாரம்பரிய அரிசி வகைகளை அவலாக மாற்றி, பின் ஊறவைத்து சோறு தயாரிக்கின்றனர். “இவ்வகை உணவுகளால் சத்துகள் அப்படியே கிடைக்கும். நம் குடல் நுண்ணுயிரிகளுக்கு நல்லது” என்கிறார் சிவகுமார். இவ்வகை உணவுகள் அனைவருக்கும் ஏற்றது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஆனால், சென்னையைச் சேர்ந்த சத்துணவு நிபுணர் தரணி கிருஷ்ணன் அனைத்து உணவுகளையும் இப்படியாக சமைக்காமல் சாப்பிட முடியாது என்கிறார்.

 
சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?
உடல்நலம்: ‘நோ ஆயில், நோ பாயில்’ - சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

சென்னையைச் சேர்ந்த சத்துணவு நிபுணர் தரணி கிருஷ்ணன் பிபிசியிடம் இதுகுறித்துப் பேசினார். அவர் சொன்ன தகவல்கள்:

  • நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான வைட்டமின் சி (நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை) மற்றும் வைட்டமின் பி (கீரை வகைகள், பச்சைப் பட்டாணி) ஆகியவை மற்றும் காய்கறிகளைச் சமைக்கும்போது நிச்சயமாக சத்துகள் சிறிதளவு குறையத்தான் செய்யும். ஆனால், எவற்றையெல்லாம் சமைக்காமல் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்.
  • புரதம், கொழுப்புச் சத்து, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களை வேக வைப்பதால் எந்த பிரச்னையும் வராது.
  • எல்லாவற்றையும் சமைக்காமல் சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படும். வயிற்றுப்போக்கு, சிலவகை சத்துக் குறைபாடு உள்ளிட்டவை ஏற்படலாம்.
  • ஹீமோகுளோபின் குறைபாடு வரலாம். ஏனெனில், ஹீமோகுளோபினில் ‘ஹீம்’ என்பது இரும்புச்சத்து, ’குளோபின்’ என்பது புரதச் சத்து. உணவுப் பொருட்கள் சரியாகச் செரிக்காமல் போனால் இந்த சத்து குறைபாடுகள் ஏற்படலாம்.
  • நார்ச்சத்து மிகுதியான சிறுதானியங்களை எடுத்துக்கொண்டால், கேழ்வரகை மட்டும்தான் முளைக்கட்ட வைத்துச் சாப்பிட முடியும். கம்பு முளைகட்டினாலும் நம்மால் சாப்பிட முடியாது. சாப்பிட முடிந்தாலும் அதனால் பயனில்லை. நாள்போக்கில் உணவு மீது வெறுப்பு ஏற்படும்.
 
சமைக்காமல் சாப்பிடுவது தவறா?
உடல்நலம்: ‘நோ ஆயில், நோ பாயில்’ - சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?

பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM

படக்குறிப்பு,

’படையல்’ சிவகுமார்

இந்தக் கேள்விக்கு மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி பதிலளித்தார். அவரது கூற்றின்படி, சமைக்காமல் சாப்பிடுவது தவறல்ல. நிச்சயமாக சில வகை காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிடுவதால் நன்மைகள் உண்டு. அதேநேரம், சமைத்தாலும் காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து கிடைக்கும் வகையிலான காய்களும் உண்டு.

"மாவுச்சத்து இருக்கும் பொருட்களைச் சமைத்துச் சாப்பிட்டால் நன்றாக அதில் அச்சத்து இறங்கியிருக்கும். அரிசி வகைகளை அவலாக்கிப் பின் ஊறவைத்து சாப்பிடலாம். முழு பருப்பு வகைகளை ஊறவைத்து பின் சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்."

ஆனால், எல்லோராலும் எல்லாவற்றையும் சமைக்காமல் சாப்பிட முடியும் என்பது தவறு. அது ஒவ்வொருவரின் செரிமான அமைப்பைப் பொறுத்தது என்கிறார் புவனேஸ்வரி.

காய்கறிகளை நறுக்கியபின் சிறிது நேரம் ஆகிவிட்டாலோ, கைப்பட்டாலோ கிருமிகள் வர வாய்ப்புண்டு, பாக்டீரியா தொற்று ஏற்படலாம் எனக் கூறும் அவர், காலிஃபிளவர், பிரக்கோலி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

 
'டிரெண்டிங் பின்னால் செல்லக்கூடாது'
கு.சிவராமன்
படக்குறிப்பு,

கு.சிவராமன்

எண்ணெய் இல்லாமல் சமைக்கப்படும் இவ்வகை உணவுகளால் பல நன்மைகள் உண்டு எனக் கூறுகிறார், சித்த மருத்துவர் கு.சிவராமன்.

”எண்ணெய் இல்லாமல் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் உண்டு. கொழுப்பு என்பது எண்ணெய் இல்லாமலேயே கிடைக்கும். ஆனாலும் சில வைட்டமின்கள் எண்ணெயில் மட்டும்தான் உறிஞ்சப்படும். வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்றவை எண்ணெயில்தான் இருக்கும். தாளிப்பதற்கு எண்ணெய் சேர்ப்பதால் பெரிய பிரச்னைகள் இல்லை. சுத்தமாக எண்ணெயே இல்லையென்றால் இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றார்.

மேலும், ”எந்தவொரு உணவுத் திட்டமும் பொதுவானது அல்ல. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப மாறுபடும். டிரெண்டிங்கின் பின்னால் செல்லக்கூடாது. உடலுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சாப்பிட வேண்டும்,” என்றார்.

"என்றைக்கு நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதிருந்து சமைத்தல் என்பது உண்டு." அவித்தல், இட்டல், தாளித்தல், பொறித்தல் ஆகியவை தமிழர் உணவு முறையில் பலகாலமாக இருந்திருப்பதாகக் கூறுகிறார் கு.சிவராமன். உடலுக்கு உள்ளேயும் அதே சூடுதான் உணவுப் பொருட்களைப் பக்குவப்படுத்துகிறது என்றும் அவர் கூறுகிறார்.

இவ்வகை உணவுகளை ஒரு கலவையாக எடுத்துக்கொண்டு வாரம் ஒருமுறை, இருமுறை சாப்பிடலாம் எனக் கூறும் அவர், எல்லா வேளையிலும் அதையே எடுப்பது நல்லதல்ல எனத் தெரிவித்தார்.

இந்த உணவுமுறையில் இருக்கும் இத்தகைய பிரச்னைகளுக்கு விளக்கமளித்த ‘படையல்’ சிவகுமார், “இவ்வகை உணவுகளில் எதுவுமே பச்சையானது அல்ல. காய்கறிகளோ, அரிசியோ எதுவாக இருந்தாலும் அதற்கென குறிப்பிட்ட முறையில் பதப்படுத்தித்தான் கொடுப்போம். ஆனால், இவை சமைக்காத உணவுகள். கேரட், பீட்ரூட், வெங்காயம், தக்காளி, வெண்டை உள்ளிட்ட பலவகை காய்களை நாம் சமைக்காமலேயே உண்ண முடியும். சில வகை கிழங்குகள், காய்கறிகளை அப்படியே உண்ண முடியாது. அவற்றை மிருதுவாக்கவும் அதிலுள்ள கிருமிகளை நீக்கவும் சில முறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்றார்.

உணவுப் பொருட்களைக் கைகளாலேயே கலக்கும்போது நம் உடலின் சூட்டால் அவை பதப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார் கு.சிவகுமார். கலவைகளில் சேர்க்கப்படும் கடலை வகைகள், நட்ஸ்கள் போன்றவை அந்தச் சூட்டால் எண்ணெயைப் பிரிப்பதால் வடை, கட்லெட் பதம்கூட கிடைப்பதாக அவர் கூறுகிறார். எண்ணெயை நேரடியாகப் பயன்படுத்தாமல் வேர்க்கடலை, எள், தேங்காய் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களாக இவ்வகை உணவுகளில் பயன்படுத்தப்படுவதாக சிவகுமார் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c88xlvz2n95o

இன்றைய ஸ்பெசல்

3 months ago

சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத.   த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம்.

நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம்.

பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம்.

இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன்.

காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான்.

https://postimg.cc/gallery/zBh4N83

IMG-0278.jpg

IMG-0277.jpg

IMG-0281.jpg

சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு கல்யாண விருந்து குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிவராமன் & மாதம்பட்டி ரங்கராஜ் பேட்டி

3 months 1 week ago
Doctor சிவராமன் சார் வீட்டு கல்யாணம் எப்படி இருக்கு பாருங்க! அசத்தல் MENU! வாயடைத்து போன சம்பவம்

 

Checked
Thu, 05/16/2024 - 02:50
நாவூற வாயூற Latest Topics
Subscribe to நாவூற வாயூற feed