உலக நடப்பு

உலக அழிவை குறிக்கும் டூம்ஸ்டே கடிகாரம்: நள்ளிரவை நெருங்க 90 விநாடிகளே பாக்கி

2 months 3 weeks ago
டூம்ஸ்டே கடிகாரம்
படக்குறிப்பு,

அணு ஆயுதங்கள் மற்றும் பல்வேறு காரணிகளால் உலகம் அழிவின் விளிம்புக்குச் செல்லும் என்பதை அடையாளமாகக் காட்டும் எச்சரிக்கைக் கடிகாரமாக டூம்ஸ்டே கடிகாரம் அமைந்துள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜேன் கார்பின்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டூம்ஸ்டே கடிகாரம்: அணுசக்தி அழிவுக்கு உலகம் இன்னும் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டும் ஓர் அடையாளமாக இது உள்ளது. இந்தக் கடிகாரம் நள்ளிரவை நெருங்க இன்னும் தற்போது 90 விநாடிகள் மட்டுமே தேவை.

விஞ்ஞானிகள் அந்தக் கடிகாரத்தின் முட்களை "டூம்ஸ்டே"க்கு (அழிவு ஏற்படும் நாள்) மிக அருகில் நகர்த்தியிருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளனர். ஆனால் அந்த முட்களை மேலும் முன்னோக்கி நகர்த்துவதை நிறுத்திவிட்டனர்.

புதிய அணு ஆயுதப் போட்டியின் அச்சுறுத்தல், யுக்ரேன் போர் மற்றும் காலநிலை மாற்றக் கவலைகள் அனைத்தும் அழிவுக்கான காரணிகள் என்று அவர்கள் கூறினர். இந்தக் கடிகாரத்தின் நேரம் ஆண்டுதோறும் அணு விஞ்ஞானிகள் வெளியிடும் வருடாந்திர செய்தியை அடிப்படையாக வைத்து அமைக்கப்படுகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற புதிய, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபாயங்களின் தாக்கத்தையும், அத்துடன் மிகப்பெரிய அச்சுறுத்தலான அணு ஆயுதப் போரையும் கருத்தில் கொண்டு இந்தக் கடிகாரத்தின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமையன்று, 2024ஆம் ஆண்டுக்கான அணு விஞ்ஞானிகளிள் அறிக்கையில், சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் “தங்கள் அணு ஆயுதங்களை அதிகரிக்க அல்லது நவீனப்படுத்த" பெரும் தொகையைச் செலவழித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இது "அணு ஆயுதப் போர் குறித்துத் தொடர்ந்து நீடிக்கும் ஆபத்தை" சேர்த்தது.

யுக்ரேனில் நடந்த போர் "எப்போதும் இல்லாத அணுசக்தி அதிகரிப்பின் அபாயத்தை" உருவாக்கியுள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கையின் பற்றாக்குறை மற்றும் வளர்ந்து வரும் உயிரியல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் (AI) கருவிகளை "தவறாகப் பயன்படுத்துவதில்" தொடர்புடைய ஆபத்துகள் ஆகியவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

 
டூம்ஸ்டே கடிகாரம்
படக்குறிப்பு,

இந்தக் கடிகாரம் நிறுவப்பட்டதில் இருந்து அணுஆயுத ஆபத்துகள் அதிகரித்த போதெல்லாம் அதன் முட்கள் அணு விஞ்ஞானிகளால் நகர்த்தப்பட்டு வருகின்றன.

“டூம்ஸ்டே” கடிகாரம் 1947இல் ஜே ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மற்றும் அணுகுண்டை உருவாக்கிய சக அமெரிக்க விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டது.

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அதன் பேரழிவு விளைவுகளை அவர்கள் நேரடியாகக் கண்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பொது மக்களை எச்சரிக்க விரும்பினர் என்பதுடன் அணு ஆயுதங்கள் மீண்டும் பயன்படுத்தப்படாது என்பதை உறுதிப்படுத்த உலகத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினர்.

இந்தக் கடிகாரத்தின் முட்கள் 25 முறை நகர்த்தப்பட்டுள்ளன. 1947ஆம் ஆண்டில், அவை நள்ளிரவு முதல் ஏழு நிமிடங்களில் தொடங்கின. பனிப்போரின் முடிவில் 1991இல், கடிகாரத்தின் முட்களை அவர்கள் நள்ளிரவு முதல் 17 நிமிடங்கள் வரை முன்னோக்கித் திருப்பினர்.

அணு விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையின் தலைவர் ரேச்சல் ப்ரோன்சன் பிபிசியிடம் பேசுகையில், "பிரிட்டன் உட்பட ஒவ்வொரு பெரிய நாடும் அணு ஆயுதங்கள் மிக நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தக் கூடியது போல் தங்கள் அணு ஆயுதங்களில் முதலீடு செய்கின்றன. இது மிகவும் ஆபத்தான நேரம். தலைவர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை," எனக் கவலை தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரத்தை மாற்றியமைப்பதில் ஈடுபட்டுள்ள ரஷ்ய அணு ஆயுத நிபுணரான பாவெல் போட்விக், யுக்ரேன் படையெடுப்பிற்குப் பிறகு அதிபர் புதின் ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார்படுத்தியபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.

ரஷ்ய அதிபரின் அச்சுறுத்தலுக்கு உலகம் திகிலுடன் பதிலளித்தது. ஆனால் அவர் ஓர் எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டுமென்றே அதுபோன்று செய்ததாகத் தெரிகிறது.

"எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுதந்திரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தத்தான் எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன," என அவர் கூறியதாக போட்விக் கூறுகிறார்.

"ரஷ்ய அதிபர் இந்த அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் மேற்குலக நாடுகளை யுக்ரேன் போரில் தலையிடுவதைத் தடுக்க முடியும் என்று நம்பினார். இது சரியான கணக்கீடுதான். இவ்வாறுதான் அணு ஆயுதப் போர் தடுப்பு செயல்படுகிறது."

 
டூம்ஸ்டே கடிகாரம்
படக்குறிப்பு,

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை துல்லியமானது எனக் கருதமுடியாது.

பல தசாப்தங்களாக ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், உலகில் இன்னும் 13,000 அணு ஆயுதங்கள் உள்ளன, அவற்றில் 90% ரஷ்ய மற்றும் அமெரிக்க நாடுகள் வசம் இருக்கின்றன. பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகிய மற்ற ஆறு நாடுகள் அணுசக்தி நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலிடம் இந்த ஆயுதங்கள் இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான நவீன அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழித்ததைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தவை.

கடந்த 2021ஆம் ஆண்டில், பிரிட்டன் தனது போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை 225இல் இருந்து 260 ஆக உயர்த்தியது. மேலும் 35 போர்க் கப்பல்கள் உருவாக்கப்படும் சாத்தியமும், நாட்டின் அணுசக்தியும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன. யுக்ரேனில் போர் தொடங்கியதில் இருந்து, மாஸ்கோவின் அணு ஆயுதங்கள் பிரிட்டனுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்று அரசுடன் நெருங்கிய மூத்த ரஷ்ய பிரமுகர்களிடம் இருந்து எச்சரிக்கைகள் வெளிப்பட்டன.

பிரிட்டனின் அணு ஆயுதத் தடுப்புப் பிரிவுப் படை ஸ்காட்லாந்தின் மேற்கில் ஃபாஸ்லேன் ராணுவ தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு ‘வான்கார்ட்’ நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் அணு ஆயுதங்களை ஏந்திய டிரைடென்ட் ஏவுகணைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

 
டூம்ஸ்டே கடிகாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பிரிட்டனின் வான்கார்ட் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றான எச்எம்எஸ் விஜிலன்ட், ஃபாஸ்லேனில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஹெச்எம்எஸ் விக்டோரியஸ் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றிய முன்னாள் லெப்டினன்ட் சிடிஆர் ஃபியர்கல் டால்டன், டிரைடென்ட் ஏவுகணையை உண்மையில் ஏவிய ஒரு சில நபர்களில் ஒருவர். அது போலியாக உருவாக்கப்பட்ட போரின்போது சோதனை அடிப்படையில் ஏவப்பட்டது.

"எப்போதும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் 15 நிமிடங்களில் செயல்படுவதற்குத் தயாராக இருந்துகொண்டே இருக்கும்," என்று டால்டன் கூறுகிறார். "நாம் பேசுகையில், அங்கு ஒரு அணுசக்தி தடுப்புப் படை உள்ளது. உலகில் உள்ள விளாதிமிர் புதின் போன்றவர்களுக்கு அது எப்போதும் தயாராக இருப்பது நன்றாகவே தெரியும். அது நம்பகமான அமைப்பு என்பதுடன், தேவைப்பட்டால் அதை எப்போதும் பயன்படுத்தலாம்," என்றார்.

அணுகுண்டு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்த ஆயுதங்களுக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. 1980களில், கிரீன்ஹாம் பொது அமைதி முகாமைச் சேர்ந்த பெண்கள் அனைத்து அமெரிக்க அணுசக்தி ஏவுகணைகளையும் பிரிட்டன் மண்ணில் இருந்து அகற்றப் போராடினர் - எஞ்சிய கடைசி போர்க் கப்பல்களும் 2008ஆம் ஆண்டு வெளியேறின.

 
டூம்ஸ்டே கடிகாரம்
படக்குறிப்பு,

சஃபோல்க்கில் உள்ள ஆர்ஏஎஃப் லேகன்ஹீத்தில் அணு ஆயுத எதிர்ப்புப் போராளிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இருப்பினும், சஃபோல்க்கில் உள்ள ஆர்ஏஎஃப் லேக்கன்ஹீத்தில் (RAF Lakenheath) - இருக்கும் ராயல் விமானப் படைத் தளத்தில்- அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசாரம் காரணமாக இப்போது அமெரிக்க ஆயுதங்கள் மீண்டும் திரும்புவதற்கான சாத்தியக் கூறுகளும் குறைந்து வருகின்றன.

பென்டகன் ஆவணங்கள் - அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பால் முதலில் அறிவிக்கப்பட்டது - அமெரிக்க "சிறப்பு" ஆயுதங்களுக்கு என இருக்கும் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் எனக் கூறுகிறது.

அத்தகைய ஆயுதங்களை வீழ்த்தும் திறன் கொண்ட அமெரிக்க போர் விமானங்கள் 2021இல் லேக்கன்ஹீத்தை வந்தடைந்தன. மேலும் இந்தத் தளத்தில் அணுசக்தி பணியில் ஈடுபடுவதற்கு,போர் வீரர்களுக்கான தங்குமிடங்களை உருவாக்க அமெரிக்க விமானப்படை தற்போது திட்டமிட்டுள்ளது.

"நாங்கள் எங்கள் பக்கத்தில் பொதுக் கருத்தைப் பெற்றுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்," என்று அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த சோஃபி போல்ட் விளக்குகிறார் - அவரது சிறிய குழு, படைத்தளத்தின் சுற்றளவு வேலிக்கு அருகே முழக்கங்களை எழுப்பியது. "கிட்டத்தட்ட 60% மக்கள் பிரிட்டனில் அணுகுண்டுகளை வைத்திருக்க விரும்பவில்லை," என்கிறார் அவர்.

 
டூம்ஸ்டே கடிகாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆர்ஏஎஃப் லேகன்ஹீத், அமெரிக்க விமானப் படையின் 48வது போர் விமானப் பிரிவின் தளமாக இயங்குகிறது.

"இந்தத் தளத்துடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது," என்று மற்றொரு எதிர்ப்பாளர் ஆலன் ரைட் கூறுகிறார். "அடுத்த முறை மீண்டும் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நுழைந்தால், அவர் அணுகுண்டைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அவர் புதினைவிட பெரிய அளவிலான அணுசக்தியைப் பெற்றுள்ளார்."

எவ்வாறாயினும், டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே யுக்ரேனில் நடந்த போரை 24 மணிநேரத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறினார். இருப்பினும் அது எப்படி சாத்தியம் என்று அவர் விளக்கமளிக்கவில்லை. யுக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவு குறையக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கடந்த தசாப்தத்தில், அணு ஆயுத கிளப்பில் இணைந்த சமீபத்திய நாடான வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன், அணு ஆயுதப் போர் பற்றிய அச்சத்தையும் அதிகரித்துள்ளார். அமெரிக்காவை சென்றடையக்கூடிய அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்ததாக அவர் பெருமையாகக் கூறியுள்ளார்.

அணு விஞ்ஞானிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கும் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவின் முன்னாள் உறுப்பினரும், ‘டூம்ஸ்டே’ கடிகார ஆலோசகருமான சிக் ஹெக்கர், ஒரு அறிவியல் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக வட கொரியாவின் அணுசக்தி நிலையங்களை ஏழு முறை பார்வையிட்டுள்ளார். மேலும் வட கொரியாவிடம் இப்போது 50 முதல் 60 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று அவர் மதிப்பிடுகிறார்.

"அணு ஆயுதங்கள், அணு ஆயுத பயங்கரவாதம், அணு ஆயுத பரவல் - இவை அனைத்தும் தவறான திசையில் செல்கின்றன என்பது மட்டும் உண்மை," என்று அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/czd7pl23d0jo

நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்

2 months 3 weeks ago
நைட்ரஜன் வாயு மூலம் மரணதண்டனை, அமெரிக்காவின் முதல் கைதி ஸ்மித்.

பட மூலாதாரம்,ALABAMA DEPARTMENT OF CORRECTIONS

படக்குறிப்பு,

1988இல் செய்த கொலைக்காக மரணதண்டனையை எதிர்கொள்கிறார் ஸ்மித்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் பேட்மேன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 24 ஜனவரி 2024, 04:45 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் மரணதண்டனை முறைகளின் கிராஃபிக் விளக்கங்கள் உள்ளன, இது சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

அமெரிக்காவின் அலபாமா சிறையில் தனது இறுதி நாட்களைக் கழித்து வருகிறார் கென்னத் யூஜின் ஸ்மித், நைட்ரஜன் வாயு மூலம் மரணம் அடையப் போகும் அமெரிக்காவின் முதல் மரணதண்டனைக் கைதி.

இதுவரை பரிசோதனை செய்யப்படாத இந்த புதிய மரணதண்டனை முறை குறித்த எண்ணங்களால் நிம்மதியில்லாமல் தவிப்பதாக கூறுகிறார் ஸ்மித்.

கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு முதல்முறையாக தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்த போது, அலபாமா சிறையின் மரணதண்டனை நிறைவேற்றும் ஊழியர்களுக்கு அவரைக் கொல்ல பல மணிநேரம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

 
நைட்ரஜன் வாயு மூலம் மரணதண்டனை, அமெரிக்காவின் முதல் கைதி ஸ்மித்.

பட மூலாதாரம்,ASSOCIATED PRESS

படக்குறிப்பு,

ஸ்மித்துக்கு, ஹோல்மன் கரெக்ஷனல் ஃபெசிலிட்டியில் உள்ள ஒரு சிறிய அறையில் மரணதண்டனை நிறைவேற்றப்படும்.

'டெத் சேம்பர்' எனப்படும் மரண அறை

ஹோல்மன் கரெக்ஷனல் ஃபெசிலிட்டி எனப்படும் அலபாமா சிறையின் 'டெத் சேம்பர்' என்று அழைக்கப்படும் அறையில், மரணதண்டனை விதிக்கப்பட்ட ஸ்மித்தைக் கட்டி வைத்து, அவரது உடலில் ஒரு கொடிய ரசாயன கலவையை செலுத்த முயன்றனர்.

ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. காரணம், ஸ்மித்தின் உடலில் ரசாயனத்தை செலுத்த சரியான நரம்பை கண்டறிய முடியவில்லை. நேரம் நள்ளிரவைத் தாண்டியதால், அரசின் மரண உத்தரவு காலாவதியானது. ஊழியர்கள் முயற்சியைக் கைவிட்டனர். நரம்பைக் கண்டறிய எடுக்கப்பட்ட முயற்சிகளால், ஸ்மித்தின் உடலில் பல வெட்டுகள் ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.

இது நடந்தது நவம்பர் மாதம், 2022ஆம் ஆண்டில். இப்போது அலபாமா சிறை நிர்வாகம் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள்.

இம்முறை, ஸ்மித்தின் முகத்தில் காற்று புகாத முகமூடியை மாட்டி, அதன் மூலம் நைட்ரஜன் வாயுவை செலுத்தி சுவாசிக்க வைப்பது தான் திட்டம். நைட்ரஜன் வாயுவை சுவாசிப்பதன் மூலம், உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத் திணறி மரணமடையும் திட்டத்தை அங்கீகரித்துள்ளது அமெரிக்க அரசு.

ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் இதைப் பற்றி பேசுகையில், "இதுவரை பயன்படுத்தப்படாத இந்த தண்டனை முறை மிகவும் கொடூரமான, மனிதாபிமானமற்ற ஒரு இழிவான நடத்தையாகும், இது நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.

மரணதண்டனையை தடை செய்ய ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் வைத்த கோரிக்கையை அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் நிராகரித்தது. இறுதி மேல்முறையீட்டு தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. ஸ்மித்துக்கு வியாழக்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

 
நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை, அமெரிக்காவின் முதல் கைதி ஸ்மித்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்பு படம்

ஸ்மித் செய்த குற்றம் என்ன?

1989-இல் ஒரு போதகரின் மனைவியான எலிசபெத் சென்னட்டைக் கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற இருவரில் ஸ்மித்தும் ஒருவர். கூலிப்படை மூலமாக 1,000 டாலர்கள் கூலிக்காக கொலை செய்யப்பட்டார் எலிசபெத் சென்னட்.

அமெரிக்காவில் மரணதண்டனைக்கு இரண்டு முறை அழைத்துச் செல்லப்பட்ட ஒரே கைதி ஸ்மித். நைட்ரஜன் வாயு மூலம் மரணத்தை எதிர்கொள்ளும் முதல் நபரும் இவரே.

"உடலும் மனதும் மிகவும் பலவீனமாக, நொறுங்கி கிடப்பதைப் போல உணர்கிறேன். தொடர்ந்து எடை குறைந்து வருகிறது," என ஒரு இடைத்தரகர் மூலம் பிபிசி கேட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் ஸ்மித்.

அலபாமாவில் மரணதண்டனைக் கைதிகளை பத்திரிகையாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் நாங்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம், ஆனால் அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் நேர்காணலைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

"எனக்கு எப்பொழுதும் குமட்டல் உணர்வு இருக்கிறது. பேரச்சத் தாக்குகள் (Panic attacks) தொடர்ந்து உருவாகின்றன. இது நான் தினசரி எதிர்கொள்ளும் துன்பங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அடிப்படையில் இதுவே விகப்பெரிய சித்திரவதை," என்று அவர் எழுதினார். நிலைமை மேலும் மோசமாகும் முன் இந்த குறிப்பிட்ட மரணதண்டனை முறையை நிறுத்த அலபாமா அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

நைட்ரஜன் வாயுவை உடலில் செலுத்துவது விரைவில் சுயநினைவை இழக்கச் செய்யும் என்று அரசு கூறுகிறது, ஆனால் அதற்கு எந்த நம்பத்தகுந்த ஆதாரத்தையும் அரசு முன்வைக்கவில்லை.

நைட்ரஜன் வாயு மூலம் மரணதண்டனை, அமெரிக்காவின் முதல் கைதி ஸ்மித்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

நைட்ரஜன் கசிவின் அபாயங்கள்

இந்த மரணதண்டனை மூலம் பேரழிவு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதைக் குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் எச்சரித்துள்ளனர். வலிப்பு ஏற்பட்டு உயிர் போகாமல், கோமா நிலைக்குள் செல்வது முதல் முகமூடியிலிருந்து வாயு கசிந்து, ஸ்மித்தின் ஆன்மீக ஆலோசகர் உட்பட அறையில் உள்ள மற்றவர்களைக் கொல்லும் வாய்ப்பு கூட இருக்கிறது என எச்சரித்துள்ளனர்.

"ஸ்மித் இறப்பதற்கு பயப்படவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த மரண தண்டனை முறையின் மூலமாக தான் மேலும் சித்திரவதை செய்யப்படுவோமோ என அவர் பயப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்," என்று அவரது ஆன்மீக ஆலோசகர் மற்றும் ரெவ் டாக்டர், ஜெஃப் ஹூட் கூறுகிறார். நைட்ரஜன் கசிவின் அபாயங்களை பட்டியலிடும் மாநிலத்தின் சட்டப்பூர்வ பொறுப்புத் துறப்பு அறிக்கையில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

"நான் அவரிடமிருந்து பல அடி தூரத்தில் இருப்பேன், என் உயிரைப் பணயம் வைத்து இதைச் செய்கிறேன் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். குழாயில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், நைட்ரஜன் அறைக்குள் பரவுவதற்கு அது வழிவகுக்கும்" என்று டாக்டர் ஹூட் பிபிசியிடம் கூறினார்.

இந்த மரண தண்டனை முறை குறித்து விசாரணைக் குழு ஒன்று ஐ.நா.வுக்கு அறிக்கை அனுப்பியது. அதில் உறுப்பினராக உள்ள இணை ஆசிரியர் ஒருவர் இந்த முறை மிகவும் ஆபத்தானது என்று கூறுகிறார்.

எமோரி யுனிவர்சிட்டியின் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மயக்கவியல் துறையில் இணைப் பேராசிரியரான டாக்டர் ஜோயல் சிவோட், "அலபாமா சிறைச்சாலை அதிகாரிகள் 'கொடூரமான' மரணதண்டனைகள் மற்றும் அதன் மூலம் கிடைத்த 'பயங்கரமான' சாதனைகளுக்கு பெயர் போனவர்கள்" என்று குற்றம் சாட்டினார்.

"மொத்த அமெரிக்காவில் கென்னத் ஸ்மித் தான் மிக மோசமான மனிதர் என நாமே கற்பனை செய்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஏனென்றால் அலபாமா சிறைச்சாலை அவரைக் கொல்வதில் மிகவும் முனைப்பாக உள்ளது. அவரைக் கொல்லும் முயற்சியில் அவர்கள் மற்றவர்களைக் கொல்லக் கூட தயாராக இருக்கிறார்கள்" என்று டாக்டர் ஜோயல் பிபிசியிடம் கூறினார்.

"துப்பாக்கிச் சூடு மூலம் மரணதண்டனை பெறப்போகும் நபருக்கு அருகில் அனைத்து சாட்சிகளையும் அதிகாரிகளையும் வரிசையாக நிற்க வைப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அனைவரையும் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்று சொல்லி பொறுப்புத் துறப்பு பாத்திரத்தில் கையெழுத்திட சொல்கிறார்கள்"

"ஏனென்றால் துப்பாக்கியால் சுடப்போகும் நபர்களுக்கு சரியாகத் சுடத் தெரியாது. அதனால் அவர்கள் உங்களையும் சுட்டுக் கொல்லும் வாய்ப்பு உள்ளது என்று சொன்னால் எப்படி இருக்கும். இதுவே நைட்ரஜன் வாயு தண்டனை முறையில் நடக்கிறது" என்று அவர் கூறினார்.

"நைட்ரஜன் வாயுவைப் பற்றி நாம் அறிந்தது என்னவென்றால், ஆரோக்கியமான தன்னார்வலர்கள் கொண்டு நடத்தப்பட்ட தொடக்க ஆய்வில், கிட்டத்தட்ட அனைவருக்கும், வாயுவை சுவாசித்த 15 முதல் 20 வினாடிகளில் ஒரு வலிப்பு ஏற்பட்டது," என்று அவர் கூறினார்.

அத்தகைய சூழ்நிலையில், ஸ்மித் சுயநினைவை இழக்கலாம் அல்லது தொடர்ச்சியான மோசமான வலிப்புகளால் பாதிக்கப்படலாம்.

 
நைட்ரஜன் வாயு மூலம் மரணதண்டனை, அமெரிக்காவின் முதல் கைதி ஸ்மித்.
படக்குறிப்பு,

அலபாமாவில் உள்ள சிறையில் மரணதண்டனை பெற்று, தனது இறுதி நாட்களை கழித்து வருகிறார் ஸ்மித்.

தோல்வியில் முடிந்த மரணதண்டனை முயற்சிகள்

அமெரிக்காவில் அதிகபட்ச தனிநபர் மரணதண்டனை விகிதங்களை உடைய மாகாணங்களில் அலபாமாவும் ஒன்றாகும், தற்போது அங்கு 165 பேர் மரணதண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர்.

2018ஆம் ஆண்டு முதல், வெவ்வேறு கைதிகளுக்கு மூன்று முறை விஷ ஊசி மூலமாக மரணதண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு அரசு பொறுப்பேற்றுள்ளது. இத்தோல்விகள் ஒரு உள் ஆய்வுக்கு வழிவகுத்தது, அதன் முடிவில் கைதிகள் மீதே குற்றம் சாட்டப்பட்டது.

கடைசி நேரத்தில் மரணதண்டனையை நிறுத்தி வைப்பதற்காக, அவசர நீதிமன்ற மேல்முறையீடுகள் மூலம் கைதிகளின் உயிரைக் காப்பாற்ற வழக்கறிஞர்கள் முயன்றதாகவும் அந்த ஆய்வு கூறியது. இத்தகைய செயல்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஒரு 'தேவையற்ற காலக்கெடு அழுத்தத்தை' சிறை ஊழியர்களுக்கு ஏற்படுத்தியதாக கூறியது.

இப்போது ஸ்மித்தின் தண்டனையை நிறைவேற்ற அதிக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நீதித்துறை கொலைகளை நிறுத்தும் அதிகாரம் கொண்ட அலபாமா ஆளுநர் கே ஐவி, நிபுணர்கள் எச்சரிக்கைகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஐ.நா.வின் கவலைகள், கைதி ஸ்மித்தின் கவலைகள் போல் ஆதாரமற்றவை என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கூறியிருக்கிறது.

அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணை நீதிமன்றம் ஸ்மித்தின் கேள்விகளை ஆராய்ந்தது, பல மருத்துவ நிபுணர்களிடமிருந்து கருத்து கேட்டது, மேலும் நைட்ரஜன் ஹைபோக்ஸியா பற்றிய ஸ்மித்தின் கவலைகள் 'வெறும் ஊகம்' மற்றும் 'கோட்பாட்டு ரீதியிலானது' மட்டுமே என்று தீர்மானம் எடுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "ஜனவரி 25ஆம் தேதி அவரது மரணதண்டனையை நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம்" என கூறப்பட்டுள்ளது.

நைட்ரஜன் வாயு மூலம் மரணதண்டனையை அங்கீகரிக்க ஆதரவாக வாக்களித்த குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர் ரீட் இங்க்ராம், ஐ.நாவின் விமர்சனத்தை நிராகரித்தார்.

"இழிவுபடுத்துவது பற்றி எனக்குத் தெரியாது, மனிதாபிமானமற்றது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் தண்டனை முறையை நாங்கள் மேம்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன். கொல்லப்பட்ட பெண்ணிற்கு அவர் செய்ததை விட இந்த தண்டனை முறை சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

மேலும், "எங்கள் ஆளுநர் ஒரு கிறிஸ்தவர். அவர் இந்த முழு விஷயத்தை குறித்தும் தீவிரமாக விவாதித்தார். இது சரியான முறை தான் என அவர் நினைக்கிறார். இது சற்று மனதை உலுக்கும் கனமான முடிவு தான், ஆனால் அது தானே சட்டம்" என்று கூறினார் ரீட் இங்க்ராம்.

எலிசபெத் சென்னட்டின் குடும்பத்தினரை பிபிசி அணுகியது, ஆனால் வியாழக்கிழமை வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.

1996இல் ஒரு நடுவர் மன்றம் ஸ்மித்திற்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனையை பரிந்துரைத்தது, ஆனால் நீதிபதி அதை நிராகரித்து அவருக்கு மரணதண்டனை விதித்தார். வழக்கு விசாரணையில், எலிசபெத் கொல்லப்பட்டபோது உடனிருந்ததை ஒப்புக்கொண்ட ஸ்மித், ஆனால் அந்த கொலையில் தான் பங்கேற்கவில்லை என்று கூறியிருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cmmg411lpymo

உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது

2 months 3 weeks ago

உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது

சுமார் 65 உக்ரேனிய போர்க் கைதிகளை, கைதிகள் பரிமாற்றத்திற்காக பொல்க்ரொட் நகருக்கு அழைத்துவரும் வேளையில் ரஸ்ஸிய இராணுவ விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது. விமானம் விபத்திற்குள்ளானபோது 75 பேர் விமானத்தினுள் இருந்திருக்கிறார்கள்.

இன்னும் 80 உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த இரண்டாவது விமானம், திருப்பியனுப்பபட்டிருக்கிறது.

வீழ்ந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த விமானத்தை எஸ் 300 ரக ஏவுகணைகளை எடுத்துவர ரஸ்ஸியா பாவித்டதாக உக்ரேன் தரப்புச் செய்திகள் கூறுகின்றன. 

Live updates: Russian military plane crashes near Ukraine border (cnn.com)

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்

2 months 3 weeks ago
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப் Screenshot-2024-01-24-at-10.24.17%E2%80%

அமெரிக்காவின் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி உள்ளன. அந்நாட்டு அதிபராக ஜோ பைடன் செயல்பட்டு வருகிறார். அவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஈடுபட்டு வருகின்றன. அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கவும் அந்நாட்டில் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, அந்நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்கள் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க தனித்தனியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹெய்லி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதில் 52.5 சதவிகித ஆதரவு பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அதேவேளை, 46.6 சதவிகித ஆதரவு பெற்று நிக்கி ஹெய்லி 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் டிரம்ப் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேவேளை, நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=266498

உலகின் முதலாவது மலேரியா தடுப்பூசி திட்டம் கமரூனில் ஆரம்பம்

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3  23 JAN, 2024 | 04:59 PM

image

ஆபிரிக்க நாடான கமரூனில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்களன்று கமரூனின் தலைநகாரான யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 600,000 பேர் மலேரியாவால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 80 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கமரூன் அரசாங்கம், ஆறு மாதங்கள் நிறைவடைந்த அனைத்து குழந்தைகளுக்கும் RTS,S தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது.

மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மொத்தம் நான்கு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

எனவே, தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் முறையை  பெற்றோர்களுக்கு  இலகுப்படுத்தும் வகையில் மற்றைய வழக்கமான குழந்தை பருவ தடுப்பூசிகள் போடப்படும் அதே நேரத்தில் குறித்த தடுப்பூசியும் போடப்படும்  என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

கென்யா, கானா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அங்கு தடுப்பூசி மூலம் மலேரியா உயிரிழப்புகள் 13 சதவீதம்  குறைந்துள்ளது என யுனிசெப் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி குறைந்தது பாதிக்கப்பட்ட 36 சதவீதமானவர்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும் என்று அறியப்படுகிறது. அதாவது, மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தடுப்பூசி சந்தேகத்திற்கு இடமின்றி உயிர் காக்கும் ஒரு நிவாரணமாக இருந்தாலும், இது ஒரு மந்திர ஆயுதம் அல்ல என கென்யாவின்  மலேரியா நோய்த் தடுப்பு சபையின் வைத்திய நிபுணர் வில்லிஸ் அக்வாலே தெரிவித்துள்ளார். 

ஆனால் வைத்தியர்களுக்கு  இது மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் நுளம்பு  வலைகள் மற்றும் மலேரியா மாத்திரைகளுடன் ஒரு முக்கியமான மருந்தாகும். எனவே, இந்த மூன்றையும் ஒன்றாகப் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு மலேரியாவிலிருந்து 90 சதவீத பாதுகாப்பை அளிக்கும் என்று இங்கிலாந்து தலைமையிலான ஆய்வு ஒன்று மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"மலேரியா நோயாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் திறன் மற்றும் நோயை அகற்றுவதை துரிதப்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது" என  கமரூனில் தடுப்பூசி வெளியீட்டை வழிநடத்தும் வைத்தியர் ஷாலோம் என்டோலா தெரிவித்துள்ளார்.

RTS,S தடுப்பூசியின் தயாரிக்க பிரித்தானிய மருந்து தயாரிப்பாளரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கேவிற்கு 30 வருடங்கள் ஆகியுள்ளது.

நுளம்புகளால் பரவும் நோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் கமரூனில் தடுப்பூசி அறிமுகம் ஒரு வரலாற்று தருணம் என தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி உலக சுகாதார ஸ்தாபனம்  பாராட்டியுள்ளது.

இதேவேளை, இம்மாத தொடக்கத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு இடம் பெற்றுள்ளது. அதாவது, 50 வருட கால வரலாற்றில் உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக மலேரியா நோய் இல்லாத முதல் துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடாக கேப் வெர்டே அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/174612

ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்

2 months 3 weeks ago
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்

Vladimir Putin Net Worth 2018 - Why At $200 Billion Putin Thinks He's the  Richest Man in the World

2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புடின்.

இவரது ஆண்டு வருமானம் 1.4 இலட்சம் டொலர் என்றும் 800 சதுர அடியில் வீடு, 3 மகிழுந்துகள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புடினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளாடிமிர் புடினின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர் என குறிப்பிடப்படுகின்றது.

Putin's Palace (film) - Wikipedia

அத்துடன், கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 இலட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Putin's £1billion palace' is a building site and just 'one slab of  concrete', footage claims | Daily Mail Online

மேலும் குறித்த மாளிகையை பராமரிப்பதற்கு மாத்திரம் 2 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

White House proposes plan to sell Russian yachts for Ukraine aid

இதுதவிற 19 சொகுசு வீடுகள், 700 மகிழுந்துகள், 58 விமானங்கள் மற்றும் 6 இலட்சம் டொலர் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், தி ப்ளெயிங் என்ற விமானத்தில் தங்கத்தில் ஆன கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

spacer.png
spacer.png

https://thinakkural.lk/article/288992

லெனின் பிறப்பால் மேதையா? மூளையை 30,953 பாகங்களாக பிரித்து செய்த ஆய்வு முடிவு என்ன?

2 months 3 weeks ago
லெனின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

லெனின் மூளையை அவரது மரணத்திற்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அகற்றினர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒரு மேதை பிறக்கிறாரா அல்லது உருவாக்கப்படுகிறாரா?

இந்த மர்மம் பல நூற்றாண்டுகளாக தத்துவவாதிகளையும் விஞ்ஞானிகளையும் கவர்ந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்து இந்த மர்மத்தை அவிழ்க்க ஆய்வாளர்கள் முயன்றனர். சோவியத் ஒன்றியத்தின் நிறுவனரான லெனின் என்று அழைக்கப்படும் விளாடிமிர் இலிச் உல்யனோவின் மரணம் வாயிலாக ஆய்வாளர்கள் அக்கேள்விக்கு விடை தேட முயன்றனர்.

ஜனவரி 21, 1924. லெனின் மரணத்திற்குப் பிறகு, அவருக்கு சிகிச்சையளித்த சில மருத்துவர்கள், அவருடைய "மேதைமை" எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன், அவருடைய மூளையை அகற்றி பாதுகாக்கவும் ஆராயவும் யோசனை ஒன்றை முன்மொழிந்தனர்.

இந்த யோசனை சோவியத் உயர் மட்ட தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நோக்கத்துடன் நிறுவனமும் உருவாக்கப்பட்டது.

நூற்றாண்டுக்குப் பிறகு லெனினின் மூளை எங்கே உள்ளது, அந்த ஆய்வின் முடிவுகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க, இதுகுறித்து ஆய்வு செய்த வரலாற்றாசிரியர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் பிபிசி முண்டோ பேசியது.

லெனின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மூளை பற்றிய ஆய்வில் மிக முக்கியமான நிபுணர்களில் ஒருவராக இருந்த ஜெர்மன் மருத்துவர் ஆஸ்கர் வோக்ட், லெனின் மூளையை ஆய்வு செய்ய அழைக்கப்பட்டார்.

பதப்படுத்தப்பட்ட லெனின் மூளை

"சுகாதார அமைச்சர் நிகோலாய் செமாஷ்கோ மற்றும் ஸ்டாலினின் உதவியாளர் இவான் டோவ்ஸ்டுகா ஆகியோர், லெனின் மூளையை ஆய்வுக்காக பெர்லினுக்கு அனுப்ப முன்மொழிந்ததில் இருந்து இக்கதை தொடங்குகிறது," என்கிறார் அமெரிக்க வரலாற்றாசிரியர் பால் ரோட்ரிக் கிரிகோரி.

"லெனின் மூளை மற்றும் சோவியத் ரகசிய ஆவணக் காப்பகங்களிலிருந்து சில கதைகள்" (Lenin's Brain and Other Stories from the Soviet Secret Archives) என்ற புத்தகத்தை எழுதியுள்ள பால் ரோட்ரிக், லெனின் இறந்த நேரத்தில், ரஷ்யாவில் நரம்பியல் நிபுணர்கள் இல்லை என்று குறிப்பிட்டார்.

எனவே, பிரேத பரிசோதனையில் அகற்றப்பட்ட மூளை, ஃபார்மால்டிஹைடு எனும் ரசாயனம் சேர்த்து பதப்படுத்தப்பட்டது. லெனின் மூளையை ஆய்வு செய்ய சோவியத் அதிகாரிகள் ஜெர்மன் மருத்துவர் ஆஸ்கர் வோக்ட்டை (1870-1959) அழைத்தனர்.

வோக்ட் ஒரு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர். அவர் மூளை ஆராய்ச்சிக்கென பேரரசர் வில்லியம் இன்ஸ்டிட்யூட்-ஐ நிறுவினார்.

லெனின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

லெனின் மூளை 30,000-க்கும் மேற்பட்ட பாகங்களாக வெட்டப்பட்டு, அவை கண்ணாடித் தகடுகளில் வைக்கப்பட்டு, சில ஆய்வுக்காக சாயங்கள் பூசப்பட்டன.

"அப்போது ஜெர்மனியில் அறிவியல் துறை சிறந்து விளங்கியது. மேலும், நோபல் பரிசு பெற்றவர்கள் அதிகமாக இருந்தனர்" என்று சலமன்கா பல்கலைக்கழகத்தில் (ஸ்பெயின்) நியூரோபயாலஜி பேராசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

"அப்போது அந்த பணியை ஏற்க வோக்ட்டுக்கு சில தயக்கம் இருந்தபோதிலும், ஜெர்மன் அரசாங்கம் அப்பணியை ஏற்குமாறு அவரை வற்புறுத்தியது. அந்த நேரத்தில், ஜெர்மனி சோவியத் ஒன்றியத்துடன் நல்ல உறவைப் பேணுவதில் ஆர்வமாக இருந்தது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆயுதங்களை தயாரிப்பதில் ஜெர்மனிக்கு இருந்த தடையை நீக்க சோவியத் ஒன்றியத்தின் உறவு தேவைப்பட்டது," என்கிறார், தனது "ஹிஸ்டரி ஆஃப் பிரெய்ன்" (History of the Brain) புத்தகத்திற்காக இதுகுறித்து ஆய்வு செய்த ஜோஸ் ரமோன் அலோன்சோ.

இருப்பினும், லெனின் மூளையை பெர்லினுக்குக் கொண்டு செல்லும் திட்டம் கைவிடப்பட்டது.

"வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றால் தன்னால் இந்த ஆய்வை கட்டுப்படுத்த முடியாது என்பதால், அதில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை" என்று அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஹூவர் இன்ஸ்டிட்யூட் பேராசிரியர் கிரிகோரி விளக்கினார்.

 
சோவியத் ஒன்றியத்தின் சந்தேகங்கள்
லெனின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

லெனின் மேதையா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பணியை வெளிநாட்டவரின் கைகளில் விடுவது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை.

இதற்கு சோவியத் தலைமை தரப்பிலிருந்து ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், வோக்ட் இறுதியில் ஆய்வில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். மேலும், லெனின் மூளையின் பிரிக்கப்பட்ட 30,953 பாகங்களில் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. அதை ஜெர்மனியில் உள்ள தனது ஆய்வகத்திற்கு அவர் எடுத்துச் செல்லலாம் என்றும் கூறப்பட்டது.

பதிலுக்கு, அவர் நரம்பியல் துறையில் ரஷ்ய மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ரஷ்ய மூளை நிறுவனம் (இன்றைய ரஷ்ய மருத்துவ அறிவியல் அகாடமி) உருவாக்கத்தை வழிநடத்தவும் ரஷ்யா கேட்டுக்கொண்டது.

இருப்பினும், பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாஜி ஆட்சியுடன் வோக்ட் கொண்டிருந்த மோதல்களால், ஜெர்மனியில் தன் பதவிகளை இழந்தது மட்டுமல்லாமல், ஸ்டாலினை விட்டு விலகுவதற்கும் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க வரலாற்றாசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ கூறினார்.

வெளிநாட்டு தலையீடு பற்றிய சோவியத் சந்தேகங்கள் நியாயமானதாகத் தோன்றியது.

அதனால்தான், கிட்டத்தட்ட இரண்டாம் உலகப் போரின் முடிவில், வோக்ட்டின் கைகளில் இருந்த லெனினின் மூளையின் ஒரு பாகத்தை மீட்க மாஸ்கோ ஒரு ரகசிய நடவடிக்கையைத் தொடங்கியது என்று பெல்ஜிய ஆராய்ச்சியாளர்கள் எல். வான் போகார்ட் மற்றும் ஏ. டெவல்ஃப் தெரிவித்தனர்.

"வோக்ட் வைத்திருந்த லெனின் மூளையின் பாகம், அமெரிக்காவின் கைகளுக்கு சென்றுவிடும் என சோவியத் அஞ்சியது. அமெரிக்கா அதைப் பயன்படுத்தி, ’லெனின் சிபிலிஸால் அவதிப்பட்டார்’ அல்லது ’அவர் மேதையே இல்லை’ என்று கூறி அவரை இழிவுபடுத்தலாம் என சோவியத் சந்தேகித்தது" என்று பேராசிரியர் ஜோஸ் ரமோன் அலோன்சோ விளக்கினார்.

 
லெனின் மூளையில் என்ன இருக்கிறது?
லெனின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாஜிக்கள் லெனினை நோயுற்றவராகவும் குற்றவாளியாகவும் சித்தரித்து, அவரது மூளை ஓட்டைகளை கொண்டிருந்ததால் "சுவிஸ் சீஸ்" (Swiss Cheese) போல இருப்பதாகக் கூறினர்.

1920களின் பிற்பகுதியில், வோக்ட் தனது ஆய்வுகளின் ஆரம்ப முடிவுகளை ஐரோப்பாவில் தொடர்ச்சியான விரிவுரைகள் வாயிலாக வெளிப்படுத்தத் தொடங்கினார். "லெனின் பெருமூளைப் புறணியின் அடுக்கு III-ன் நியூரான்கள் விதிவிலக்காக பெரிதாகவும் ஏராளமானதாகவும் இருந்தன" என்று அவர் இந்த விரிவுரைகளில் கூறினார்.

இது லெனினின் "சுறுசுறுப்பான மனம்" மற்றும் "கருத்துகளை மிக விரைவாக தொடர்புபடுத்தும் திறன் மற்றும் அவரது யதார்த்த உணர்வை" விளக்குவதாக, வோக்ட் கருதினார்.

அதேசமயம், மூளையின் அடுக்கு நியூரான்கள் பெரிதாக இருப்பது, மன வளர்ச்சி குன்றிய தன்மையின் குணாதிசயங்கள் என்று அக்கால மற்ற வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக, கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் ஸ்டாலினை எச்சரித்திருந்தார்.

"வோக்ட்-ன் கண்டுபிடிப்புகள் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், லெனின் மூளை தனித்துவமானது மற்றும் விதிவிலக்கானது என, ரஷ்யர்கள் கேட்க விரும்புவதை அவர் சொன்னார் என்று நம்பப்படுகிறது" என்று அலோன்சோ கூறினார்.

"சோவியத் அதிகாரிகள் லெனின் சிறந்த மேதை என்று நம்பினர். மேலும், அவரது மூளைக்கு சிறப்புத் தன்மைகள் இருப்பதாகவும் , வேறு எந்த மனிதனைப் போலவும் அவருடைய மூளை இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப தனித்துவமான ஒன்று அதில் இருப்பதாகவும் அவர்கள் நம்பினர்" என்று ஜோஸ் ரமோன் அலோன்சோ கூறினார்.

மூளையின் அமைப்பு (அளவு மற்றும் வடிவம்) மற்றும் மக்களின் நுண்ணறிவுக்கு இடையே நேரடி தொடர்பு இருப்பதாக வோக்ட் நம்பினார்.

 
மூளைக்கும் அறிவுக்கும் தொடர்பு உண்டா?
லெனின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சோவியத் தலைவர்கள் லெனினை ஒரு மேதை என்றுகூறி அவரது மூளையை ஆய்வு செய்து அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முயன்றனர்.

மக்களைக் கட்டுப்படுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்தவர் அல்லது தன் தாயார் இறக்கும் வரை அவரை சார்ந்தே வாழ்ந்தவர் அறிவு ரீதியாக உயர்ந்தவராகக் கருதப்பட முடியுமா? சோவியத் குறித்த வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றை புறக்கணித்தாலும் அவர் சிறந்த நினைவாற்றல் கொண்டவர் என்றும் ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததாகவும், ஒரு மணிநேரத்தில் ஒரு செய்தித்தாளுக்கு கட்டுரை எழுதவும் அவரால் முடிந்தது என கூறுகின்றனர்.

லெனினின் "மேதைமை"யின் வேரைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்தன. ஏனென்றால், மற்ற மனித மூளைகளும் ஆய்வுக்குத் தேவையாக இருந்தது. அப்போதுதான் அவற்றை லெனின் மூளையுடன் ஒப்பிட முடியும்.

மருத்துவ அறிவியல் அகாடமியின் அலமாரிகளில் இப்போது லெனின் மூளை மட்டுமல்ல, உடலியல் நிபுணர் இவான் பாவ்லோவ், ஏரோநாட்டிகல் பொறியாளர் கான்ஸ்டான்டின் சியோல்கோவ்ஸ்கி மற்றும் எழுத்தாளர் மக்சிம் கார்க்கி ஆகியோரின் மூளையும் வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பத்து சாதாரண குடிமக்களின் மூளைகளுடனும் லெனின் மூளை ஒப்பிடப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

இது 63 பக்கங்கள் கொண்டது. தற்போது அறிக்கை மோசமான நிலையில் உள்ளது. மேலும், அதில் அறிவியல் ரீதியான பல வார்த்தைகள் உள்ளன. லெனின் நான்கு முறை பக்கவாதம் ஏற்பட்டிருந்தாலும், தன் இறுதி நாட்கள் வரை ஒரு மேதையாக இருந்தார் என அறிக்கை முடிவு செய்துள்ளது" என்று கிரிகோரி கூறினார்.

"இந்த ஆவணத்தைப் படிப்பது நகைச்சுவையாக இருந்தது. ஏனென்றால் ஆய்வாசிரியர்கள் தான் அடைய விரும்பிய முடிவுக்காக விஷயங்களை தேடியதாக தோன்றியது" என்று அவர் மேலும் கூறினார்.

 
லெனின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1922 முதல் லெனினுக்கு குறைந்தது நான்கு முறை பக்கவாதம் ஏற்பட்டது.

லெனின் மூளையில் சில தனித்தன்மை வாய்ந்த இயல்புகள் இருப்பதாக சோவியத் ஆய்வாளர்கள் உறுதியளித்தனர். அந்த இயல்புகள் "மிகுதியான அறிவுசார் திறன்கள்" கொண்ட ஒருவருக்கு தகுதியானவை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அலோன்சோ வோக்ட் அவருக்குப் பின் வந்தவர்களின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தார்.

"மூளையின் அளவு அல்லது வடிவத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பெரிய மூளை கொண்டவர்கள் சிறந்த கலை அல்லது அறிவியல் படைப்புகளை விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் சிறிய மூளை கொண்டவர்களும் உள்ளனர்” என்று அவர் விளக்கினார்.

“அறிவு என்றால் என்ன என்பதையே நாம் இக்காலத்தில் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் அலோன்சோ.

"(ஓவியர் வின்சென்ட்) வான்கா ஒரு கலை மேதையாகக் கருதப்படுகிறார், ஆனால் அவர் பல பிரச்னைகளைக் கொண்டவர். வரலாற்றில் சிறந்த விஞ்ஞானியாகக் கருதப்படும் ஐசக் நியூட்டனுக்கும் இதேதான் நடந்தது. அவருக்கு நண்பர்களே இல்லை. பணம் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட துன்பத்தில் வாழ்ந்தார்" என்று அலோன்சோ தெரிவித்தார்.

 
உருவ வழிபாட்டை ஆதரித்த தலைவர்கள்
லெனின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஷியன் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸில், லெனின் மூளையின் மாதிரி மெழுகு வடிவில் உள்ளது.

1991-ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, லெனின் மூளையைப் பாதுகாத்த அல்லது ஆய்வு செய்த சில விஞ்ஞானிகள் அதிகாரபூர்வ பதிப்பைத் தவிர வேறு சில கருத்துகளையும் வழங்கத் தொடங்கினர்.

"மூளைக்கு என சிறப்பு எதுவும் இல்லை என்று மட்டுமே நாம் இதிலிருந்து ஊகிக்க முடியும்” என்று லெனினின் மூளையை பாதுகாக்கும் மையத்தின் இயக்குநராக இருந்த டாக்டர். ஒலெக் அட்ரியானோவ் 1993-ல் ஒப்புக்கொண்டார்.

"அவர் ஒரு மேதை என்று நான் நினைக்கவில்லை" என்று ரஷ்ய விஞ்ஞானி பிரிட்டிஷ் பத்திரிகைகளிடம் தெரிவித்தார்.

சோவியத் ஒன்றியத்தின் நிறுவனர் வாரிசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஸ்டாலின் முயன்ற ஆயுதங்களில் லெனின் மூளை பற்றிய ஆய்வும் ஒன்றாகும் .

"லெனின் இறந்தவுடன் தொடங்கிய அதிகாரப் போராட்டத்தில் தனது நிலையை வலுப்படுத்த லெனின் மேதைமையை நிரூபிக்க நினைத்தார்" என்று கிரிகோரி மேலும் கூறினார்.

லெனின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தை பெறுவதற்கான ஸ்டாலினின் உத்தியின் ஒரு பகுதியாக லெனினின் இறவா நிலை இருந்தது.

ஆனால், லெனின் மூளையை மட்டும் ஸ்டாலின் அதிகாரத்திற்கான போரில் பயன்படுத்தவில்லை. தனது முன்னோடி மற்றும் அவரது குடும்பத்தினரின் விருப்பங்களைப் புறக்கணித்து, கிரெம்ளின் சுவர்களின் கீழ் கட்டப்பட்ட கல்லறையில் ஒரு துறவியின் உடலை போன்று லெனின் உடலை பாதுகாக்கவும், பகிரங்கமாகக் காட்டவும் முடிவு செய்தார். அந்த இடம் இன்றும் உள்ளது.

இருப்பினும், கியூப வரலாற்றாசிரியர் அர்மாண்டோ சாகுவேடா போன்ற வல்லுனர்கள், லெனினே தனது தெய்வீக செயல்முறைக்கு உயிர் கொடுத்தார் என்று நம்புகிறார்கள்.

"லெனின் சோவியத் சர்வாதிகார அரசை உருவாக்கியவர்" என்று அவர் கூறினார்.

"தலைவர்கள் சொல்வது ஒன்று, நடைமுறையில் நடப்பது இன்னொன்று. லெனின், பிடல் காஸ்ட்ரோ அல்லது மாவோ சே துங் போன்ற தலைவர்கள் அனைவரும் தங்களைச் சுற்றி ஆளுமை வழிபாட்டை விரும்பவில்லை என்று சொன்னார்கள். ஆனால், அது வெறும் வார்த்தைகள் தான். வாழ்நாள் முழுவதும் அவர்கள் தங்கள் உருவ வழிபாட்டை ஆதரித்தனர். அது அவர்களின் மரணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது," என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cek7z8pkyxvo

ஜேர்மனில் 5 வருடங்கள் வசிப்போருக்கு பிரஜாவுரிமை, இரட்டைப் பிரஜாவுரிமைக்கும் அனுமதி!

2 months 3 weeks ago
22 JAN, 2024 | 03:02 PM
image

ஜேர்மனியில்  பிர­ஜா­வு­ரி­மை­யைப் பெறு­வ­தற்­கான விதி­களை தளர்த்தும் புதிய சட்­டத்­தி­ருத்­தங்கள் அந்­நாட்டுப் பாரா­ளு­மன்­றத்­தினால் கடந்தவாரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன.

புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தின்­படி, ஜேர்­ம­னியில் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்கள் வசிப்போர் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடியும்.  இது­வரை 8 வரு­டங்­களின் பின்­­னரே பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யு­மாக இருந்­தது.

அதே­வேளை, விசேட ஒருங்­கி­ணைப்பு அடை­வு­மட்­டங்­களை பூர்த்தி செய்வோர் இது­வரை 6 வரு­டங்­களில் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க தகுதி பெற்­றி­ருந்­தனர். இக்­கா­ல­வ­ரம்பு தற்­போது 3 வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்­­டுள்­ளது.

இரட்டைப் பிரஜா­வு­ரிமை

அத்­துடன் இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மையைக் கொண்­டி­ருப்­ப­தற்­கான கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

இது­வரை ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் சுவிட்­ஸர்­லாந்தை தவிர்ந்த ஏனைய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஜேர்மன் பிர­ஜா­வு­ரிமையை பெறும்­போது தமது முந்­தைய நாட்டின் பிர­ஜா­வு­ரி­மையை கைவிட வேண்­டி­யி­ருந்­தது. சில சந்­தர்ப்­பங்­களில் மாத்­திரம் விதி­வி­லக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது இவ்­விதி தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் தம்­ப­தி­களில்  ஒரு­­வர் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்­கள் ஜேர்­ம­னியில் வசித்தால் அவர்­க­ளுக்குப் பிறக்கும் குழந்­தைக்கு ஜேர்மன் பிர­ஜா­வு­ரிமை கிடைக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மன் பாரா­ளு­மன்­றத்தில் இச்­சட்­ட­மூலம் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது, 639 எம்.பிகள் ஆத­ர­வா­கவும் 234 பேர் எதி­ரா­கவும்  வாக்­க­ளித்­தனர்.  23 பேர் வாக்­க­ளிப்பில் பங்­கு­பற்­ற­வில்லை.

ஜேர்மனி சான்ஸ்லர் ஒலாவ் சோல்ஸின் சமூக ஜன­நா­யகக் கட்சி, சுதந்­திர ஜன­நா­யகக் கட்சி மற்றும் கிறீன் கட்சி ஆகி­யன இணைந்த ஆளும் கூட்­டணி இப்­பு­திய சட்­ட­மூ­லத்­துக்கு ஆத­ர­வ­ளித்­தன.

பழை­மை­வாத கிறிஸ்­தவ ஜன­நா­யகக் கட்சி மற்றும் கிறிஸ்­தவ சமூக ஒன்­றியக் கட்சி, ஜேர்­ம­னிக்­கான மாற்றுக் கட்சி ஆகி­யன எதி­ராக வாக்­க­ளித்­தன.

இச்­சட்­ட­மூலம் அமு­லுக்கு வரு­வ­தற்கு ஜனா­தி­பதி பிராங் வோல்ட்டர் ஸ்டேய்ன் மேயர் கையெ­ழுத்­திட வேண்டும்.

தொழி­லாளர் பற்­றாக்­கு­றைக்கு மத்­தியில், திறன்­கொண்ட தொழி­லா­ளர்­களை ஈர்ப்­ப­தற்கு இச்­சட்­டத்­தி­ருத்­தங்கள் உதவும் என ஜேர்­ம­னியின் உள்­துறை அமைச்சர் நான்சி பயீசர் தெரி­வித்­துள்ளார்.

'உல­கெங்கும் உள்ள தகு­தி­யான மக்­க­ளுக்கு அமெ­ரிக்கா, கன­டாவைப் போன்று  நாம் வாய்ப்பு வழங்க வேண்டும்' என அவர் கூறி­யுள்ளார்.

எனினும், இச்­சட்­டத்­தி­ருத்­தங்­க­ளுக்கு எதிர்க்­கட்சிக் எதிர்ப்பு தெரி­வித்­துள்ன. இம்­மாற்­றங்கள் பிர­ஜா­வு­ரி­மையின் பெறு­ம­தியைக் குறைக்க வழி­வ­குக்கும் என எதிர்க்­கட்­சிகள் விமர்­சித்­துள்­ளன.

விரை­வான நாடு கடத்தல்

இதே­வேளை, புக­லிடக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களை விரை­வாக நாடு­க­டத்­து­வ­தற்­கான சட்­டத்­தி­ருத்­தங்­க­ளுக்கும் ஜேர்மனி பாரா­ளு­மன்றம் கடந்த வியாழக்கிழமை அங்கீகாரம் அளித்தது  

ஜேர்மனியில் வசிக்கும் 8.44 கோடி மக்களில் 1.2 கோடிக்கும் (14 சதவீதம்) அதிகமானோருக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை இல்லை எனவும், அவர்களில் 53 இலட்­சம் பேர் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் ஜேர்மனி­யில் வசிக்­கின்ற­னர் எனவும் ஜேர்­மனி அரசாங்கம் தெரி­வித்­துள்­ளது.

https://www.virakesari.lk/article/174514

சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்- மீட்புப்பணிகள் தீவிரம்

2 months 3 weeks ago
08.jpg

சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஜாவோடோங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான வீடுகள் மண்ணில் புதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

புதைந்த வீடுகளில் சிக்கியிருந்த 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 18 குடும்பங்களைச் சேர்ந்த 47க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் 200 மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

நிலச்சரிவுக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. குறித்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/288969

பாலத்தீனம்: அமெரிக்காவுடன் முரண்படும் இஸ்ரேல் - பைடன் யோசனையை நெதன்யாகு நிராகரித்தது ஏன்?

2 months 3 weeks ago
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மார்க் லோவென் ஜெருசலேமிலிருந்து மற்றும் சான் செடோன்
  • பதவி, பிபிசி
  • 21 ஜனவரி 2024

பாலத்தீன தனி நாட்டை உருவாக்கும் யோசனையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் நிராகரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனி பாலத்தீன நாட்டை உருவாக்கும் யோசனையை பெஞ்சமின் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

நெதன்யாகுவின் இக்கருத்துகள் அமெரிக்காவுடனான பிளவை ஆழப்படுத்துவதாகத் தோன்றுகிறது. பாலத்தீன பிரச்னையில் இரு நாடுகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இஸ்ரேல் - பாலத்தீன நீண்ட கால பிரச்னைக்கு ”இரு நாடுகள் தீர்வு” முன்வைக்கப்படுகிறது. இதில், பாலத்தீன தனிநாடு வலியுறுத்தப்படுகிறது. பாலத்தீன தனி நாட்டை அமைப்பது நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது என அமெரிக்கா நம்புகிறது.

ஆனால், இந்த விவகாரத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் “வெவ்வேறு விதங்களில் பார்ப்பதாக” கடந்த வாரம் வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டது.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு இரு தலைவர்களும் முதல் முறையாக தொலைபேசி வாயிலாக பேசினர். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் “இரு நாடுகள்” தீர்வு எட்டப்படுவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்தார்.

"இரு நாடுகள் தீர்வில் பல வகைகள் உள்ளன. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுக்கு சொந்த ராணுவம் இல்லை," என்று அவர் கூறினார்.

மீண்டும் உறுதிப்படுத்திய நெதன்யாகு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஆனால், தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியில், ‘இரு நாடுகள்’ தீர்வு மீது தனக்கிருக்கும் எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்தி வந்துள்ள நெதன்யாகு, மீண்டும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் அழிக்கப்பட்ட பின்னர், காஸா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது பாலத்தீன இறையாண்மை கோரிக்கைக்கு முரணானது. காஸா மீதான பாதுகாப்பு கட்டுப்பாட்டை இஸ்ரேல் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான உரையாடலில், பிரதமர் நெதன்யாகு தனது கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரைப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியான ஜோர்டானின் மேற்கே இஸ்ரேல் "பாதுகாப்புக் கட்டுப்பாட்டை" வைத்திருக்க வேண்டும் என்று சனிக்கிழமையன்று பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் நெதன்யாகுவின் அறிக்கை "ஏமாற்றம் அளிப்பதாக" இன்று (ஜன. 21) கூறினார். ஆனாலும் அவருடைய கருத்து ஆச்சரியமளிக்கவில்லை என கிரான்ட் ஷாப்ஸ் தெரிவித்தார்.

நெதன்யாகுவின் கருத்துகள், காஸா நெருக்கடியைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ள ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தைகளையும் அமைதி செயல்முறைகளுக்கான நம்பிக்கையையும் குறைக்க வழிவகுக்கும்.

காஸாவிற்குள் ஹமாஸால் பிடிக்கப்பட்ட இன்னும் 130 பணயக் கைதிகளின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், இஸ்ரேலில் சொந்த மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் மத்தியிலும் நெதன்யாகு போரை தொடர்வதை ஆதரிக்கிறார். இதன் மூலம் மற்ற நாடுகளிடமிருந்து இஸ்ரேல் தனிமைப்பட்டு வருவதையும் நெதன்யாகு அதிகரித்து வருகிறார்.

அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மேலும் 240 பேரை பணயக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது.

இன்னும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமையன்று டெல் அவிவில் கூடி, பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

 
இஸ்ரேல் மக்களின் கோரிக்கை
இஸ்ரேல் - பாலத்தீன விவகாரம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

பணயக்கைதிகளை விடுவிக்க தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு இஸ்ரேல் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அக்டோபர் 7-ம் தேதி பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட ஒருவரின் உறவினரான கில் டிக்மேன் கூறுகையில், "அன்புள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நீங்கள் அவர்களை (பணயக்கைதிகளை) மீண்டும் இங்கு கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார்.

"நீங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இஸ்ரேல் குடிமக்களுக்கு வெற்றியை கொண்டு வர முடியும் என்று எங்களுக்குத் தெரியும். பணயக்கைதிகளை இஸ்ரேலுக்கு அழைத்து வாருங்கள்" என்றார்.

கான் யூனிஸில் பதுங்கி இருப்பதாக நம்பப்படும் ஹமாஸின் உயர்மட்ட அதிகாரிகளைத் தேடுவதாகக் கூறி இஸ்ரேலியப் படைகள் தெற்கு காஸாவுக்குள் நுழைந்துள்ளன.

கான் யூனிஸில் பணயக்கைதிகளை வைத்திருக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சுரங்கப்பாதையை தாங்கள் சோதனை செய்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன. இருப்பினும் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்ட போது அவர்கள் அங்கு இல்லை.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் கவனம் இப்போது தெற்கு காஸாவை நோக்கி உள்ளது. இஸ்ரேல் தனது படையினரையும் பீரங்கிகளையும் தெற்கே முன்னேற்ற முயன்றபோது ஹமாஸ் குழுவினர் முன்னேறியதால், வடக்கு நகரமான ஜபாலியாவைச் சுற்றி மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இஸ்ரேல் காஸா மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்களில், ஹமாஸை விட மேம்பட்ட இஸ்ரேல் ராணுவம் இன்னும் அப்பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க எதிர்ப்பை எதிர்கொள்கிறது.

அக்டோபர் 7 முதல் அப்பிரதேசத்தில் 25,105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 60,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் காஸாவை நிர்வகிக்கும் ஹமாஸின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.

https://www.bbc.com/tamil/articles/c90458vykq7o

அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி.

2 months 4 weeks ago

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி | Death Toll From Cold Storm In Us Reaches

மீட்புப்பணிகள் முன்னெடுப்பு

இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயலில் சிக்கி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பலர் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  

https://tamilwin.com/article/death-toll-from-cold-storm-in-us-reaches-1705846071

இந்த ரென்னிசி மாநிலத்திலேயே சகோதரி @nilmini   வசிக்கிறா.

இரான் நடத்திய தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு சந்திக்கப் போகும் ஆபத்துகள்

2 months 4 weeks ago
பாகிஸ்தாான் மீது இரான் தாக்குதல்

பட மூலாதாரம்,IRANIAN ARMY/WANA/REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லீஸ் டூசெட்
  • பதவி, சர்வதேச தலைமை செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தற்போது நாம் இருக்கும் காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் காலம்.

கடந்த வாரம், இதுவரை நடந்திராத வகையில், இரான் தனது அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லையில் உள்ள சில பகுதிகளில் திடீரென ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதற்கு, பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. அப்போது, அது ஏற்கெனவே பதற்றமாக உள்ள எல்லை வழியாக இரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவம், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் ஏற்கெனவே பதற்றத்தால் சூழப்பட்டுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் பிரச்னையை அதிகரித்தது.

இதில், இரானின் நோக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. அது, இதன் மூலம் நாட்டிற்குள் உள்ள தனது மக்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதுதான்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களின் பேராசிரியரான வாலி நாஸ்ர் பேசுகையில், "இரான் தனது ராணுவத்தில் ஏவுகணைகள் இருப்பதை மட்டுமல்ல, அவற்றைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதையும் இந்தத் தாக்குதல்கள் மூலம் காட்டியுள்ளது," என்றார்.

"காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், இரானின் இந்தச் செயல்பாடு, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஒரு செய்தியாக இருக்கலாம்."

மற்ற ஆய்வாளர்களைப் போலவே, வாலி நாஸ்ரும், "இந்த நேரத்தில் இரான் மேலும் பதற்றத்தை அதிகரிக்க விரும்பாது,” என நம்புகிறார்.

 
பதற்றம் பரவுவதற்கான வாய்ப்பு
பாகிஸ்தான் மீது இரான் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்குதல்களை நடத்தியது. இந்த மோதல், மூன்று மாதங்கள் ஆகியும் நிற்கவில்லை. இதற்கிடையில், இந்தப் பதற்றம் இஸ்ரேல் மற்றும் காஸாவை தாண்டி அப்பகுதி முழுவதும் பரவக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்பட்டன.

இதற்கிடையில், லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடந்தன. ஏமனில் இருந்து ஹூத்தி ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கத் தொடங்கினர்.

ஆனால் இரானோ, அதன் முக்கிய நட்பு சக்தியான ஹிஸ்புல்லாவோ, இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவோ இந்த விஷயத்தை அதிகரிக்க விரும்பவில்லை. மத்திய கிழக்கில் உள்ள இரான், அதன் நட்பு சக்திகளைக் கொண்டு, ஒரு பிணாமி யுத்தமாக இந்த மோதலை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில், இரானின் நிலைப்பாடு மி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

அந்தப் பிராந்தியத்தில், பல்வேறு நாடுகளில் உள்ள ஆயுதக் குழுக்கள் இரானின் ஆதரவுடன் செயல்படுகின்றன. காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹூத்தி குழுக்கள், இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் ஆகியவை அனைத்தும் இரானின் ஆதரவுடன் இயங்கி வருகின்றன.

இந்தக் குழுக்களில் பெரும்பாலானனவை மேற்கத்திய நாடுகளால் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களின் ராணுவ பலமே இரான் வழங்கும் ஆயுதங்களும், பயிற்சிகளும்தான்.

இருந்தபோதிலும், இந்த ஒவ்வொரு குழுக்களுக்கும் தங்களுக்கென தனியான குறிக்கோள்களும், நோக்கமும் உள்ளன. சமீப காலமாக, இந்தக் குழுக்குள் அனைத்தும் தீவிரமாகச் செயல்படுகின்றன. இவை சில நேரங்களில், அந்தப் பிராந்தியத்தில் உள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.

அதனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பழிவாங்கும் நடவடிக்கையை அவர்கள் எதிர்கொள்ளாமல் இருக்க, இந்த அச்சுறுத்தல்களைக் குறைக்கவும் அவர்கள் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 
இரான்-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம்

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர் பாகிஸ்தானின் எல்லையை முதலில் தாக்கிய பின், அண்டை நாடுகளான இரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் தொடங்கியது.

இதில், இரான், பாகிஸ்தான் மீது மட்டும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தவில்லை. அது தனது நட்பு நாடுகளான இராக் மற்றும் சிரியா மீதும் தாக்குதல் நடத்தியது. இரான் அதைச் சுற்றியுள்ள நாடுகள்தான் எதிர்ப்பில் இருந்து காக்கும் நாடுகள் என்பதைப் புரிந்திருக்க வேண்டும்.

இரானின் இந்த அதிநவீன, அதி தீவிர படை, இராக்கின் வடக்கில் உள்ள சூர்திஸ்தான் பகுதியில் பல ஏவுகணைகளை ஏவியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் புலனாய்வு மையத்தைக் குறிவைத்துதான் இந்தத் தாக்குதல்களைள் நடத்தியதாக இரான் தெரிவித்துள்ளது.

அதைத் தவிர, ஐஸ்(இஸ்லாமிய அரசு) உட்பட சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், இரான் எதிர்ப்பு பயங்கரவாத குழுக்களைக் குறிவைத்ததாகவும் இரான் தெரிவித்தது. இரானின் கூற்றுப்படி, அதன் ஒவ்வொரு நடவடிக்கைக்குப் பின்னாலும், ஒரு எதிர்வினை காரணமாக இருந்தது.

பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு விளக்கமளித்த இரான், தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள இரான் வம்சாவளியைச் சேர்ந்த பலூச் கிளரச்சியாளர்களைக் குறிவைத்ததாக இரான் கூறியது.

"தாக்குதல் தவிர்க்க முடியாதது" என்று தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான செயத் முகமது மராண்டி கூறுகிறார். கடந்த மாதம் இரானின் சிஸ்தான்-பலூசிஸ்தானில் நடந்த தாக்குதலில் 22 இரான் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இரானின் தெற்குப் பகுதியில் பலூச் தேசியவாதிகளின் தளங்கள் இருப்பதாக இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அவற்றை 'பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்' என பாகிஸ்தான் கூறியது. பல தசாப்தங்களாக எல்லையின் இருபுறமும் பதற்றம் நீடித்தது, ஆனால் இப்போது அது அதன் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.

 
இரான் தலைவர்களுக்கு கடினமான காலம்
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இரான்

பட மூலாதாரம்,IRIB

இராக் மற்றும் சிரியா, காஸாவிற்கு அருகில் உள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது மோதல் நிலவி வருகிறது. பேராசிரியர் மராண்டி பேசுகையில், "இராக் மற்றும் சிரியாவில் நடந்த தாக்குதல்கள், கெர்மானில் நடக்கும் சம்பவங்களுக்கான பதில்" என்றார்.

கடந்த மாதம் அங்கு நடந்த ஒரு அரசியல் படுகொலையை அவர் குறிப்பிடுகிறார். இங்கே, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் மூத்த நபரான சையத் ராசி மொசாவி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த மாதத் தொடக்கத்தில் காசிம் சுலைமானியின் கல்லறை மீது இரட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராக்கில் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரானின் உயர்மட்ட தளபதி சுலைமானி.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றது. 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நடந்த மிக ஆபத்தான தாக்குதல் இது. இந்தப் பிராந்தியத்தைப் பற்றி விரிவான பகுப்பாய்வு செய்த அம்வாஸ் மீடியாவின் ஆசிரியர் முகமது அலி ஷபானி, "இந்தத் தாக்குதலுக்குக் கூடுதலாக, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இரான் மீது அழுத்தம் இருந்தது," என்றார்.

மேலும், இனிவரும் காலங்களில் மேலும் பதற்றமான சூழலை காண்போம், என்றார். இரானில் அதிகாரத்தில் இருக்கும் உச்ச மதத் தலைவர்களுக்கு இது கடினமான நேரம். ஏனெனில் நாட்டில் பெண்கள் அதிக சுதந்திரம் கோரி பெரிய இயக்கங்களை நடத்தினர்.

சர்வதேச தடைகளால் இரானின் பொருளாதாரமும் அழுத்தத்தில் உள்ளது. ஊழல் வழக்குகள் மற்றும் தவறான நிர்வாகத்தால் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இந்த மோதலில் பல முரண்பாடுகள் உள்ளன. அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் பதற்றம் கொண்டுள்ளது. இருவரும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

 
இப்போது இரானின் வியூகம் என்னவாக இருக்கும்?
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிரிப் படைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இரு தரப்பிலும் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

கடந்த வாரம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட முனைகளில் பதற்றம் ஏற்பட்டால், பிராந்தியத்தில் நீண்ட கால மோதல் ஏற்படலாம்.

இராக்கில் உள்ள இரான் தளங்கள் மீது அமெரிக்காவின் தாக்குதல்களால் இரானின் முக்கியமான உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செங்கடலில் முக்கியமான கடல் வழித்தடங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கையிருப்பில் நான்கில் ஒரு பங்கு அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருந்தபோதிலும், இரானும் அதன் நட்பு நாடுகளும் தோல்விகளைவிட வெற்றிகளைப் பெறுவதாக நம்புகின்றன. காஸாவில் பாலத்தீனர்களுடன் நிற்பது வளைகுடா நாடுகளில் இரானின் புகழை அதிகப்படுத்தியுள்ளது. ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களை தற்போது உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

சர்வதேச விவகாரங்கள் தொடர்பான சிந்தனைக் களமாகச் செயல்படும் சத்தம் ஹவுஸில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கான திட்ட இயக்குநராக இருக்கிறார் சனம் வகில், "இரான் ஒரு பரந்த விளையாட்டை விளையாடுகிறது. காஸாவை கைப்பற்றிய பிறகு இஸ்ரேல் இன்னும் ஆக்ரோஷமாக மாறக்கூடும் என்று உணர்கிறது. எனவே அதுவொரு நீண்ட போரை எதிர்பார்க்கிறது, தயாராகிக் கொண்டிருக்கிறது," என்றார்.

இரானின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று அமெரிக்காவை அதன் கொல்லைப்புறத்தில் இருந்து விலக்கி வைப்பது. மேலும், அது இஸ்ரேல், அமெரிக்காவுடன் நேரடி மோதலைத் தவிர்க்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/ce5j85rjl4no

காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம்

2 months 4 weeks ago

காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம்

ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் மீதான காசா யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதினாறு மயானங்களை இஸ்ரேலிய இராணுவ அழித்து நாசம் செய்திருப்பதாகத் தெரியந்திருக்கிறது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள மயானங்களின் நினைவுக் கற்கள் புரட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டு, மனித எச்சங்களும் வெளியே எடுத்து விச்சப்பட்டிருப்பதை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச்சேவை ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறது.
இறுதியாகக் கான் யூனிஸ் பகுதியில் அமைந்திருந்த மயானத்தை அழித்து, புதைகுழிகளைத் தோண்டிய இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலியர்களை ஹமாஸ் இங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்பதனால் மயானத்தை அழிக்கவேண்டி வந்ததாகக் கூறியிருக்கிறது. 

யுத்தத் தாங்கிகளையும், கனரக வாகனங்களையும் பாவித்தே இந்த மயானங்கள் இஸ்ரேலினால் அழிக்கப்பட்டிருக்கின்றன. 
காசாவினுள் இஸ்ரேலிய இராணுவம் புகுந்ததிலிருந்து மாயானங்களை அழிக்கும் கைங்கரியம் மிகவும் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டு வருவதை சி என் என் வைத்திருக்கும் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. சர்வதேச சட்டங்களின்படி மதத் தலங்களை அழித்தல், மயானங்களை அழித்தல் ஆகியவை குற்றங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இக்குற்றம் போர்க்குற்றம் ஆவதற்கான அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. 

மயானங்களை ஹமாஸ் அமைப்பு இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பதால் அவையும் தனது இராணுவத்தின் முறையான இலக்குகள்தான் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் நியாயப்படுத்தியிருக்கிறார். கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் இந்த மயானங்களில் புதைத்திருக்கலாம் என்பதனாலேயே அனைத்து மயானங்களும் தோண்டப்படுவதாகவும் அவர் கூறினார். அவ்வாறு தோண்டியெடுக்கப்படும் உடல்கள் இஸ்ரேலியர்களினுடையவை அல்ல என்று உறுதிப்படுத்துப்படுமிடத்து அவை மீளவும் அங்கேயே புதைக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். 

ஆனால், சி என் என் பெற்றுக்கொண்ட ஏனைய விபரங்களின்படி, மயானங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் தரைமட்டமாக உழப்பட்டு, அங்கே இராணுவத் தாங்கிகளும், ஆட்டிலெறித் தளங்களும் நிறுவப்பட்டு யுத்தத்திற்காகப் பாவிக்கப்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மயானங்களைச் சுற்றி பாரிய மதில்கள் அமைக்கப்பட்டு இராணுவ ஏவுதளங்களாக இவை மாற்றப்பட்டிருக்கின்றன. 

ஆனால், ஒரேயொரு மயானம் மட்டும் அப்படியே இருந்தது. அங்கே முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கொல்லப்பட்ட கிறீஸ்த்த‌வர்கள், யூதர்கள், மேற்குநாட்டவர்களின் கல்லறைகள் காணப்பட்டன. ஆகவே, அதனை இஸ்ரேலிய இராணுவம் அப்படியே விட்டு விட்டது. 


மரணித்தவர்களுக்கான மரியாதையினை தாம் வழங்குவதாகக் கூறிய பேச்சாளர், எதற்காக மயானங்களின் மீது தமது யுத்தத் தாங்கிகளும், ஆட்டிலெறித் தளங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்று கேட்டபோது எதனையும் கூற மறுத்துவிட்டார். 

இவற்றைப் பார்க்கும்போது நினைவிற்கு வருவது ஒரு விடயம்தான்.

தாயகத்தில் எமது செல்வங்களின் கல்லறைகள் சிங்கள மிருகங்களால் உழப்பட்டு, மாவீரர்களின் திருமேனிகள் தூக்கி வெளியே எறியப்பட்டு, எமது கல்லறைகளின் மீது சிங்களப் பேய்கள் இராணுவத் தளங்களை அமைத்து இறுமாப்புடன் எம்மை இன்றுவரை ஆக்கிரமித்து வைத்திருப்பதுதான். 

1980 களில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் சொல்லிக்கொடுத்த மிருகத்தனத்தை சிங்களப் பேய்கள் எம்மீது கட்டவிழ்த்துவிட்டன. இன்றோ சிங்களப் பேய்கள் 2009 இல் இருந்து செய்து வருபவற்றை இஸ்ரேலிய பயங்கரவாதிகள் பாலஸ்த்தீனத்தில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். 

சிரியாவில் தாக்குதலொன்றில் நான்கு ஈரான் இராணுவ அதிகாரிகள் பலி - இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

2 months 4 weeks ago
சிரியாவில் தாக்குதலொன்றில் நான்கு ஈரான் இராணுவ அதிகாரிகள் பலி - இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

 

image
 

சிரியாவில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் ஈரானின் நான்கு சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரிய தலைநகரில் இடம்பெற்ற விமானதாக்குதல் ஒன்றிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

iran33.jpg

இஸ்ரேலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

சிரிய தலைநகருக்கு தென்மேற்கில் உள்ள மசே பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்தும் விமானநிலையமொன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கியநாடுகள் அலுவலகமும் தூதரகங்களும் இந்த பகுதியிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரிய வெடிப்புச்சத்தங்களை கேட்டதாகவும் புகைமண்டலத்தை அவதானித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/174411

அழிவடையும் டொல்பின்களை பாதுகாக்க பிரான்ஸ் அதிரடி நடவடிக்கை

2 months 4 weeks ago

மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், வடக்கு கடல், ஆங்கில கால்வாய், அட்லான்டிக் கடல் மற்றும் மத்திய தரை கடலால் சூழப்பட்டுள்ளது.

சில வருடங்களாக அட்லான்டிக் கடற்கரை பகுதியில் பல டொல்பின்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கமான நிகழ்வாக இருந்தது.

மீன் பிடிக்க செல்பவர்களின் படகுகளின் எஞ்சின் கியர்களிலும், சிறு ரக கப்பல்களின் அடியிலும், வலைகளிலும், கயிறுகளிலும் டொல்பின்கள் சிக்கி உயிரிழப்பதாக நீண்ட காலமாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

Capture-1-9.jpg

ஆனால், அரசு இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அழிந்து வரும் டொல்பின்களின் இனத்தை காக்க அவர்கள் அந்நாட்டின் நீதிமன்றத்தை அணுகினர்.

அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, 2024 ஜனவரி 22 முதல் பெப்ரவரி 20 வரை அனைத்து விதமான வர்த்தக ரீதியான மீன்பிடி பணிகளை பிரான்ஸ் தடை செய்துள்ளது.

உள்ளூர் மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தடை தொடரும் என அரசு அறிவித்தது.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திற்கு பிறகு முதல் முறையாக பிரான்ஸ் மீன்பிடிக்கு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிஸ்கே விரிகுடா (Bay of Biscay) எனப்படும் பிரான்சின் வடமேற்கு கரையோர பிரிட்டனியில் உள்ள ஃபினிஸ்டியர் பகுதியிலிருந்து அண்டை நாடான ஸ்பெயினின் கடல் எல்லை வரை மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 450 சிறு ரக கப்பல்களும் இப்பகுதியில் பயணம் செய்ய முடியாது.

பல மில்லியன் யூரோக்கள் இதனால் கடல் வணிகத்தில் இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இழப்பை ஈடு செய்வதாக அரசு உறுதி அளித்துள்ளது.

https://thinakkural.lk/article/288799

கிரிசெல்டா பிளாங்கோ: பாப்லோ எஸ்கோபாரையே நடுங்க வைத்த போதைப்பொருள் ராணி

2 months 4 weeks ago
கிரிசெல்டா பிளாங்கோ

பட மூலாதாரம்,NETFLIX

படக்குறிப்பு,

கிரிசெல்டா பிளாங்கோவாக சோஃபியா வெர்கரா நடித்துள்ளார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

"நான் பயந்த ஒரேயொருவர் கிரிசெல்டா பிளாங்கோ என்ற பெண்மணி." இது வரலாற்றில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் பாப்லோ எஸ்கோபர் கூறியதாகச் சொல்லப்படும் சொற்றொடர்.

தன்னை மற்றவர்கள் பார்க்கும் விதம் பிடிக்கவில்லை என்பதற்காக, மக்களைக் கொன்ற இரக்கமற்ற ஒருவராக கிரிசெல்டா பிளாங்கோ அறியப்படுகிறார். 1970கள் மற்றும் 80களில் மியாமியில் மிகவும் அஞ்சப்படும் பெயர்களில் ஒருவராக பிளாங்கோ விளங்கினார்.

புகழ்பெற்ற போதைப்பொருள் கடத்தல்காரரான பிளாங்கோவின் கதை ஹாலிவுட் வரை சென்றிருக்கிறது. அவரின் கதையை ‘கிரிசெல்டா’ (Griselda) என்னும் பெயரில் நெட்ஃபிளிக்ஸில் தொடராக வெளியாகவிருக்கிறது. கிரிசெல்டா கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகை சோஃபியா வெர்கரா நடித்துள்ளார்.

ஆறு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடரில் கிரிசெல்டா, மோசமான குற்றவாளியாகக் காட்டப்பட்டுள்ள அதேவேளையில், புத்திசாலியான மற்றும் லட்சியப் பெண்ணாகவும் காட்டப்பட்டுள்ளார்.

தன் மூன்று கணவர்களின் கொலைக்குக் காரணமான, "கொக்கைன் தெய்வம்" என்று பெயர்பெற்ற கிரிசெல்டாவின் உண்மைக் கதை மிகவும் இருண்டது.

 
'என்னிடம் எதுவும் இல்லை'
கிரிசெல்டா பிளாங்கோ

பட மூலாதாரம்,NETFLIX

படக்குறிப்பு,

இந்தத் தொடரில் புத்திசாலியான மற்றும் லட்சியப் பெண்ணாக காட்டப்பட்டுள்ளார் கிரிசெல்டா.

கடந்த 1943இல் கொலம்பியாவில் பிறந்த பிளாங்கோ, 11 வயதிலிருந்தே குற்றச் செயல்களில் ஈடுபட்டார். ஒரு பணக்கார குடும்பத்தின் மகனைக் கடத்தி, சிறுவனின் பெற்றோர் பணம் வழங்க மறுத்ததால் அச்சிறுவனை பிளாங்கோ சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

தனது 21 வயதில் மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் சட்ட விரோதமாக 1964இல் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்து கஞ்சா விற்கத் தொடங்கினார்.

"கிரிசெல்டா தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது அவர் யார் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர் மூன்று குழந்தைகளை முற்றிலும் தனியாக வளர்த்து வந்த புலம் பெயர்ந்தவர். அவரிடம் கல்வியோ அல்லது வாழ்வாதாரமோ எதுவும் இல்லை," என்று சோஃபியா வெர்கரா பிபிசியிடம் கூறினார்.

கிரிசெல்டா பிளாங்கோவின் "சிக்கலான பாத்திரத்தை மனிதாபிமானப்படுத்த" விரும்புவதாகக் கூறுகிறார் தொடரின் தயாரிப்பாளரான எரிக் நியூமன். ஏனெனில், "ஒவ்வொரு நபருக்கும் தன் வாழ்க்கை குறித்த விளக்கம் இருக்கிறது. தவறான உறவில் இருந்து தப்பிக்கும் ஒரு தாய், சில நேரங்களில் யாரோ அடையாளம் காணக்கூடிய பாத்திரமாக இருக்கலாம்,” என்கிறார் அவர்.

"ஆண்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தும் உலகில் கோலோச்சிய பெண் அவர். அவர் தன்னை நிரூபிக்க பத்து மடங்கு கடினமாக உழைத்திருக்கிறார். மேலும், தன்னைச் சுற்றியுள்ள ஆண்களை விஞ்சுவதற்குத் தனது புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துகிறார். மக்கள் அவரை ஆதரிக்கத் தொடங்குகிறார்கள்," என்று இணை இயக்குநர் ஆண்ட்ரேஸ் பைஸ் கூறினார்.

 
'அரக்கியாக மாற்றிய அதிகாரம்'
கிரிசெல்டா பிளாங்கோ

பட மூலாதாரம்,NETFLIX

படக்குறிப்பு,

கிரிசெல்டா பிளாங்கோ கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இளம் பெண்களை உள்ளாடைகளில் கொக்கைனை மறைத்து வைத்து அனுப்பினார்.

போதைப்பொருள் கடத்தல் தீவிரமடைந்து, போட்டி கும்பல்களுடன் வன்முறை ஏற்பட்டதால் பிளாங்கோ மிகவும் இரக்கமற்றவராக ஆனார். 1975ஆம் ஆண்டில், தன் பணத்தைத் திருடுகிறார் என்ற சந்தேகத்தால் அவர் தனது கணவரையே சுட்டுக் கொன்றார். மேலும், 1983ஆம் ஆண்டில், தன்னுடைய மூன்றாவது கணவரையும் கொலை செய்துவிட்டு மகனுடன் மியாமியை விட்டு வெளியேறினார்.

அவருடைய மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற நடத்தைக்காக அவர் ‘பிளாக் ஸ்பைடர்’ (தன் ஆண் துணையையே கொன்று திண்ணும் அமெரிக்க சிலந்தி வகை) என அழைக்கப்படுகிறார். பிளாங்கோவின் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யம் செழித்து வளர்ந்தது. 1980களின் முற்பகுதியில் அவர் உலகின் பணக்கார, பலருக்கும் மிகவும் பயத்தை வரவழைக்கும் பெண்களில் ஒருவராக இருந்தார். அமெரிக்காவுக்கு ஒவ்வொரு மாதமும் 1.5 டன் கொக்கைன் கடத்தப்படுவதை மேற்பார்வையிட்டார்.

"கிரிசெல்டா முதன்முதலில் மியாமிக்கு குடிபெயர்ந்தபோது, தன் குடும்பத்தை கவனித்துக்கொள்வதுதான் அவருடைய நோக்கமாக இருந்திருக்கும் என நான் நம்புகிறேன். ஆனால், அந்தப் பயணத்தில் அவர் தொலைந்து போய்விட்டார். அதிகாரமும் பணமும் அவரை அரக்கியாக மாற்றிவிட்டது," என்று வெர்கரா பிபிசியிடம் கூறினார்.

பிளாங்கோ 1980-களின் முற்பகுதியில், தனது சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுப்பதற்காக போட்டி கடத்தல் கும்பலில் இருந்து வந்த 15 மில்லியன் டாலர்கள் வாய்ப்பை நிராகரித்தார்.

 
கிரிசெல்டா பிளாங்கோ

பட மூலாதாரம்,MIAMI-DADE POLICE

படக்குறிப்பு,

70களின் பிற்பகுதியில் கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு கொக்கைன் வழித்தடங்களின் மூளையாக இருந்தவர் கிரிசெல்டா பிளாங்கோ.

'ஆபத்தை உணர்ந்திருந்தார்'

சுமார் 20 ஆண்டுகளாக மியாமியில் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்தபோதிலும், கிட்டத்தட்ட ஆதிக்கம் நிறைந்த ஆண்களால் மட்டுமே நடத்தப்படும் ஒரு தொழிலில் ஒரு பெண்ணாக, தனது நிலை ஆபத்தானது என்பதை பிளாங்கோ நன்கு அறிந்திருந்தார்.

ஒரு கட்டத்தில், தன் வணிகத்தை ஓர் ஆண் நிர்வகிக்க அனுமதித்தார். ஏனெனில், அந்த நேரங்களில் “ஆணிடமிருந்து வரும் ஒப்பந்தங்களை மட்டுமே உள்ளூர் வணிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்."

ஒரு கொலைக்காக அவர் கைது செய்யப்பட்ட பிறகு, பிளாங்கோ போதைப்பொருள் வணிகத்திற்குத் தானே தலைமை தாங்க முடிவு செய்தார். வெளியாள் என்ற பிம்பத்தை அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்.

கடந்த 1980ஆம் ஆண்டில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், சுமார் 1,35,000 கியூபர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். மெரில்டோஸ் (Marielitos) என்று அழைக்கப்படும் அவர்களில் சிலர் ஏற்கெனவே குற்றப் பின்னணி கொண்ட கும்பல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலையாளிகளுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர்.

 
கிரிசெல்டா பிளாங்கோ

பட மூலாதாரம்,NETFLIX

படக்குறிப்பு,

பெண்ணாக இருந்ததால் இத்தகைய குற்றங்களில் இருந்து கிரிசெல்டா தப்பித்திருக்கலாம் என, சோபியா வெர்கரா கூறுகிறார்.

பிளாங்கோ இதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களைத் தன்னிடம் வேலைக்குச் சேர்த்தார். மற்றவர்களைக் கொலை செய்ய அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் செய்த கொலைகள், ‘மோட்டார் சைக்கிள் கொலைகள்’ எனப் பெயர் பெற்றன.

பிளாங்கோ "ஒரு வெளிநாட்டவர், அவர் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து வெளியாட்களையும் வேலைக்கு அமர்த்தினார்," என்று இணை இயக்குநர் ஆண்ட்ரேஸ் பைஸ் கூறினார். “மேலும் இத்தொழிலில் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதும் அதைக் காப்பாற்றுவதும் கடினம். அப்படியிருக்கும் நிலையில்தான் என்ன செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியும்,” என்கிறார் பைஸ்.

"தன் வேலையாட்களை கிரிசெல்டா தனது குடும்பத்தின் ஓர் அங்கமாக உணரச் செய்தார்" என்று பைஸ் மேலும் கூறினார்.

பிளாங்கோவின் அனுபவத்தில் தானும் சிலவற்றை உணர்ந்திருப்பதால் வெர்கரா, பிளாங்கோ மீது ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

"நான் கொலம்பியாவை சேர்ந்தவள், ஒரு தாய் மற்றும் வேறொரு நாட்டுக்குப் புலம்பெயர்ந்தவள். கிரிசெல்டா ஒரு பெண்ணாக மதிப்பிடப்பட்டார். இன்று என் உச்சரிப்பு காரணமாக நான் அதிகமாக வேலை செய்ய வேண்டும். மேலும், எனக்குக் குறைவான வாய்ப்புகள்தான் உள்ளன என்பதை நான் அறிவேன்," என்று அவர் கூறினார்.

 
'ஒரு பெண்ணால் ஒருபோதும் அவ்வளவு தீயவளாக இருக்க முடியாது'
கிரிசெல்டா பிளாங்கோ

பட மூலாதாரம்,NETFLIX

படக்குறிப்பு,

ஜூலியானா ஐடன் மார்டினெஸ் இந்தத் தொடரில் ஜூன் ஹாக்கின்ஸாக நடிக்கிறார்.

பிளாங்கோவின் குற்றவியல் சாம்ராஜ்யம் 1980-களின் நடுப்பகுதியில் நொறுங்கத் தொடங்கியது. கலிபோர்னியாவின் இர்வின் நகரில் அவர் கைது செய்யப்பட்டபோது அவரது சாம்ராஜ்யம் திடீரென முடிவுக்கு வந்தது.

ஆனால், இருபது ஆண்டுகளாக மியாமியை போதைப்பொருள் வணிகத்தின் கேளிக்கை பூங்காவாக பிடிபடாமல் மாற்றியது எப்படி? இந்தத் தொடரின் பின்னணியில் உள்ள குழுவினர் அதற்கு அவரது பாலினம் காரணம் என்று கூறுகின்றனர்.

"அவர் ஒரு பெண்ணாக இருந்ததால், அவரால் பல விஷயங்களில் இருந்து விடுபட்டு, அவருக்குத் தேவைப்படும்போது மறைந்துவிட முடியும். ஒரு பெண் அந்த அளவுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்துவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பெண் ஒருபோதும் அவ்வளவு தீயவளாக இருக்க முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள்," என வெர்கரா கூறினார்.

போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்க முடியாது என்று ஆண்கள் தலைமையிலான போதைப்பொருள் கும்பல்களே கூறியிருக்கலாம். இதனால், விசாரணையில் பிளாங்கோ சிக்காமல் இருந்திருக்கலாம்.

பணிநீக்கம் செய்யப்பட்டு, தனது சக ஊழியர்களுக்கு ஸ்பானிய மொழி பெயர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மியாமி காவல் துறையின் உளவுத்துறை ஆய்வாளரான ஜூன் ஹாக்கின்ஸ், 1970களின் நடுப்பகுதியில் இருந்து பிளாங்கோவை பிடிக்கும் நோக்கத்தில் இருந்தார்.

பிளாங்கோவின் கதையில் இன்றியமையாத பகுதியாக ஹாக்கின்ஸ் இருந்ததாக எரிக் நியூமன் கூறினார். "அவர் கிரிசெல்டாவின் கண்ணாடி, அவர் லத்தீன் வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இளம் தாய், பெண்களை இழிவுபடுத்தும் உலகில் அவர் பணிபுரிந்தார்," என்கிறார் நியூமன்.

 
கிரிசெல்டா பிளாங்கோவுக்கு என்ன ஆனது?
கிரிசெல்டா பிளாங்கோ

பட மூலாதாரம்,NETFLIX

படக்குறிப்பு,

கிரிசெல்டா பிளாங்கோவின் வாழ்க்கை சோகமான முடிவைக் கொண்டது.

பிப்ரவரி 17, 1985இல், பிளாங்கோ அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் கொக்கைன் தயாரித்தல், இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்ததற்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். கூடுதலாக, அவர் மீது மூன்று கொலை வழக்குகள் சுமத்தப்பட்டு இருபது ஆண்டுகளை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்தார்.

அவரது சிறை தண்டனையின்போது, அவரது மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2004இல் விடுவிக்கப்பட்டவுடன், அவர் கொலம்பியாவிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர் அமைதியான வாழ்க்கையை நடத்தினார்.

செப்டம்பர் 3, 2012 அன்று, அவர் தனது 69வது வயதில், மெடலினில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தன் குழுவினரால் பின்பற்றப்பட்டு வந்த கொலை பாணியின் படியே அவரும் கொல்லப்பட்டார்.

"அவருடைய கொலை அவர் மீதான வெறுப்பின் உண்மையான அளவைக் காட்டுகிறது. 2012இல், அவர் எந்தத் தீங்கும் செய்யாத ஒரு பெண்ணாக தனிமையில் வாழ்ந்தார். அவருடைய நான்கு குழந்தைகளில் மூன்று பேர் இறந்துவிட்டனர்," என்று நியூமன் பிபிசியிடம் கூறினார்.

"நம்ப முடியாத தருணங்களை அவர் அனுபவித்தார். இந்தக் கதை சோகங்கள் நிறைந்த ஒரு இழப்புடன் முடிவடைகிறது," என்றார் அவர்.

பிளாங்கோவின் வாழ்க்கை பெரும்பாலும் புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லை. போதைப்பொருள் கடத்தல் காலத்தில் கொலம்பியாவில் வளர்ந்த வெர்காரா கூட, "அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை" என்று கூறினார். மேலும், அவரது வாழ்க்கையைப் பற்றி அறிந்த பிறகு அது ஓர் உண்மைக் கதை என்று நம்புவதற்கு “சாத்தியமில்லை" என்று நினைத்தார்.

"அதனால்தான் நான் கிரிசெல்டாவாக நடிக்க விரும்பினேன். அவர் ஒரே நேரத்தில் தாய், வில்லி, காதலி, கொலையாளி என எல்லாமாக இருந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்கள் எவ்வளவு சிக்கலானவர்களாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறார்," என்றார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/cql1829d7pvo

சீனாவில் பாடசாலையில் தீவிபத்து – 13 பேர் பலி

2 months 4 weeks ago
20 JAN, 2024 | 11:15 AM
image
 

சீனாவில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹனான் மாகாணத்தின் யன்சான்பு கிராமத்தில் சிறுவர் பாடசாலையில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தனியார் பாடசாலையொன்றில் இந்த தீபத்து ஏற்பட்டது பாடசாலையின் முகாமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

ஒரு மணிநேரத்தின் பின்னர் தீயணைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/174375

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது : நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 5 ஆவது நாடானது ஜப்பான்

2 months 4 weeks ago
19 JAN, 2024 | 09:59 PM
image

நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் ஜப்பானால் அனுப்பப்பட்ட “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய 5 ஆவது நாடாக ஜப்பான் இடம்பிடித்தது.

இதற்குமுன்னர் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய நாடுகளாக ஐக்கிய அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையம், Smart Lander for Investigating Moon என்ற திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், H-IIA ரொக்கெட் செப்டம்பர் மாதம் ஜப்பானின் தெற்கு தீவான தனேகாஷிமாவிலிருந்து லேண்டரை சுமந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/174363

ஒரு பாட்டில் தண்ணீரின் விலை பல்லாயிரம் ரூபாயா? 'ஆடம்பர குடிநீர்' பற்றி தெரியுமா?

2 months 4 weeks ago
தண்ணீர்
படக்குறிப்பு,

ஒரு பாட்டில் ‘ஆடம்பர தண்ணீரின்’ விலை பல நூறு டாலர்கள் இருக்கும்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுனேத் பெரேரா
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 19 ஜனவரி 2024, 12:27 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒயின் மதுபானத்திற்கு பதிலாக 'ஆடம்பரமான தண்ணீரை' மெனுவில் வைத்துள்ள உணவகம் குறித்து நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா?

அல்லது மகிழ்ச்சிகரமான ஜோடிக்கு ஷாம்பைன் மதுபானம் அல்லது பழச்சாறுக்கு பதிலாக ‘ஆடம்பர H2O’ வழங்கப்பட்ட திருமணம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இந்த தண்ணீர் வழக்கமான மினரல் அல்லது குழாய் நீரை விட தரம் வாய்ந்தது என்கின்றனர். இந்த ஒருபாட்டில் தண்ணீருக்காக நீங்கள் பல நூறு டாலர்களை (பல ஆயிரம் ரூபாய்கள்) செலவழிக்க வேண்டியிருக்கும்.

வைன் போன்றே இந்த தண்ணீரை ஸ்டீக் (இறைச்சி உணவு) முதல் மீன் உள்ளிட்ட உணவு வகைகளுடன் சேர்த்து அருந்தலாம்.

செலவுமிக்க இந்த ஆடம்பர தண்ணீர் எரிமலை பாறைகளிலிருந்தும் பனிப்பாறைகளிலிருந்து ஐஸ் கட்டிகளை உருக்கியும் மூடுபனியிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. மேகங்களிலிருந்து நேரடியாகவும் இந்த தண்ணீரை பிரித்தெடுக்க முடியும்.

இந்த தண்ணீர் எதிலிருந்து வருகிறது என்பதைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடும். வழக்கமான தண்ணீரை போன்றல்லாமல் இது சுத்திகரிப்பு செய்யப்படாதது ஆகும்.

உலகம் முழுவதும் இதற்கென பல பிராண்டுகள் உள்ளன. இதுகுறித்து உங்களுக்கு அறிவுரை கூறுவதற்கென நிபுணர்களும் உள்ளனர்.

 
இந்த தண்ணீருக்கென தனி சுவை உள்ளதா?
தண்ணீர்
படக்குறிப்பு,

குழந்தைகளுக்கு தண்ணீரை சுவைத்துப் பார்ப்பதற்கென அமர்வுகளை நடத்தி வருகிறார் மிலின் படேல்.

எப்படி ஒயினைச் சுவைத்து பரிமாறுவதற்கென பணியாளர்கள் உள்ளனரோ அதேபோன்று இந்த தண்ணீரில் என்னென்ன தாதுக்கள் உள்ளன, அதன் சுவை எப்படி இருக்கும், அதன் சுவை நமது நாக்கில் எப்படி தனித்துத் தெரியும் என்பதையெல்லாம் பார்த்து சொல்வதற்கு பணியாளர்கள் இருப்பார்கள்.

”தண்ணீர் என்பது வெறும் தண்ணீர் அல்ல. உலகிலுள்ள ஒவ்வொரு தண்ணீரும் வித்தியாசமானது மற்றும் சுவை கொண்டது,” என தண்ணீர் ஆலோசகரும் லண்டனில் தற்காலிக சந்தை (pop-up store) நடத்தி வருபவருமான மிலின் படேல்.

குழாய் மற்றும் பாட்டில் தண்ணீர் உட்பட இத்தகைய தண்ணீர் வகைகளை அனுபவிக்க ஆசைப்படுபவர்களுக்கு அவற்றைச் சுவைப்பதற்காக பல அமர்வுகளையும் அவர் நடத்திவருகிறார்.

பலவித தண்ணீர் வகைகள் மற்றும் அவற்றின் சுவைகள் குறித்து மக்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு, கற்றுக்கொடுக்கும் பணியை செய்துவருவதாக மிலின் படேல் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பள்ளியில் நாம் ஆவியாதல், உறைதல், மழைப்பொழிவு என, இயற்கையான நீரியல் சுழற்சி முறைகள் குறித்து கற்றது நினைவிருக்கும். ஆனால், நாம் ஒன்றை தவிர்த்து விட்டோம். அதுதான் மறு கனிமமயமாக்கல்,” என்கிறார் அவர்.

“மழைநீர் மண்ணில் விழும்போது அந்நீர் நிலத்தில் வெவ்வேறு பாறைகள் மற்றும் மண்ணில் ஊடுருவி கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சிலிக்கா உள்ளிட்ட தாதுக்களை பெறும். இந்த செயல்முறைதான் தண்ணீருக்கு தாதுக்களின் சுவையை வழங்குகிறது,” என படேல் கூறுகிறார்.

 
தண்ணீர்
படக்குறிப்பு,

இந்த வகை தண்ணீரில் சில ஹவாயில் உள்ள எரிமலை பாறைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன; நார்வேயில் உருகும் பனிப்பாறைகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. டஸ்மானியாவின் காலை மூடுபனியின் துளிகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன.

பனிப்பாறைகள் அல்லது மழை ஆதாரங்களிலிருந்து பெறப்படும் தண்ணீர், நிலத்தில் இயற்கையாக ஊடுருவாது என்பதால் இவை, நீரூற்றுகள் மற்றும் கிணறுகளிலிருந்து பெறப்படும் தண்ணீரை விட குறைவாகவே மொத்த கரைந்த திடப்பொருட்களை (TDS - Total dissolved solids) கொண்டிருக்கும்.

உலகம் முழுவதிலுமிருந்து குழாய் தண்ணீர் முதல் ஒரு பாட்டிலுக்கு 318 டாலர்களுக்கு விற்கப்படும் ஆடம்பர தண்ணீர் வரை பலவித தண்ணீர் வகைகளை படேல் சேகரித்து வைத்துள்ளார். அவர் நடத்தும் அமர்வுகளில் மக்கள் அதனை சுவைத்த பின்னர், ஒவ்வொரு தண்ணீரின் சுவையும் எப்படி தனித்துவமானது என கூறுவர்.

"தண்ணீர் சுவையற்றது என்பதைத் தாண்டிப் பார்க்கும் வாய்ப்பை நாங்கள் மக்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் அதனை மனதுக்கு நெருக்கமாக அனுபவித்து அருந்தும்போது அதன் சுவையை வர்ணிக்க உருவாகும் புதிய சொற்களைக் கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்," என படேல் விவரிக்கிறார். "மென்மையானது, க்ரீமி, கூசுவது போன்ற உணர்வு, வெல்வெட் போன்றது, கசப்பு, புளிப்பு சுவையுடவை என பல அழகான சொல்லாடல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. இதனை நான் அக்வாடேஸ்டாலஜி என்பேன்," என படேல் கூறுகிறார்.

"பெரும்பாலானோர், ‘இது என்னுடைய இளமைக்காலத்தை நினைவுபடுத்துகிறது', 'என்னுடைய விடுமுறை நாட்களை நினைவுபடுத்துகிறது', 'என்னுடைய தாத்தா, பாட்டி வீட்டை நினைவுபடுத்துகிறது' எனக்கூறுவார்கள்," என்கிறார் அவர்.

தண்ணீரை சுவைக்கும் போட்டிகள்

'தி ஃபைன் வாட்டர் சொசைட்டி' ஒவ்வோர் ஆண்டும் பூடான் முதல் ஈக்வடார் வரை, உலகம் முழுவதிலுமிருந்து இத்தகைய தண்ணீர் உற்பத்தியாளர்களை வரவழைத்து சர்வதேச அளவில் தண்ணீரை சுவைக்கும் போட்டிகளை நடத்துகின்றது.

தொலைதூர பகுதிகளிலிருந்து தண்ணீர் உற்பத்தி செய்யும் குடும்ப தொழில்களை நடத்துபவர்களே இதில் அதிகம் கலந்துகொள்கின்றனர்.

 
தண்ணீர்
படக்குறிப்பு,

2018-ஆம் ஆண்டில் ஈக்வடாரில் சர்வதேச அளவில் தண்ணீர் சுவைக்கும் போட்டியை ஃபைன் வாட்டர்ஸ் நடத்தியது.

"இந்த போட்டிகள் ஆரம்பத்தில் மிக அபத்தமானதாக கருதப்பட்டது," என்கிறார் ஃபைன் வாட்டர் சொசைட்டி மற்றும் ஃபைன் வாட்டர் அகாடமியின் இணை நிறுவனர் டாக்டர் மைக்கேல் மஸ்சா.

"20 ஆண்டுகளுக்கு முன்பு நான் மது அருந்துவதை நிறுத்தியபோது இந்த செயல்பாடுகளைத் தொடங்கினேன்," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஒயின் என்னுடைய உணவு மேசையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் நான் அதனை சுற்றியும் பார்த்தேன். அப்போது நான் முன்பு பார்த்திராத வேறொரு பாட்டில் இருந்தது, அதுதான் தண்ணீர். ஒயினுக்கு பதிலாக தண்ணீரைச் சுவைக்கலாம் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது," எனவும் அவர் கூறுகிறார்.

இத்தகைய தண்ணீர் தாகத்தைத் தீர்ப்பதுடன் பலவற்றை வழங்குவதாக அவர் நம்புகிறார். தனித்துவமான ஒன்றை ஆராயவும் பகிரவும் மகிழ்வதற்கான வாய்ப்பை அவை வழங்குவதாகவும் ஒயின்-ஐ போன்றல்லாமல் இதனை நம் குழந்தைகளுடனும் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த தண்ணீருக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், ஆரோக்கியமான வாழ்வியலுக்காக மதுபானங்கள் மற்றும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை குறைவாக நுகரும் போக்கு குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே வளர்ந்துவரும் போக்கினால் இது நிகழ்வதாக அவர் கூறுகிறார்.

இந்த அரிதான, சுத்திகரிக்கப்படாத தண்ணீர், ’வின்டேஜ் ஒயின்’-ஐ போன்று ஓர் பின்னணி கதையுடன் சந்தைப்படுத்த முடியும் என்பதும் இதனை நோக்கி ஈர்க்கப்படுவதற்குக் காரணமாக உள்ளது.

 
தண்ணீரும் உணவும்
தண்ணீர்
படக்குறிப்பு,

வைன்-ஐ போன்று இவ்வகை தண்ணீரை உணவுடனும் சேர்த்து அருந்த முடியும்.

ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் உள்ள சில உணவகங்கள் இத்தகைய ஆடம்பரமான தண்ணீரை தங்கள் மெனுவில் மற்ற உணவுகளுடன் சேர்த்துள்ளன.

"நான் இப்போது அமெரிக்காவில் உள்ள மூன்று நட்சத்திர மிஷலின் உணவகத்திற்கு இந்த தண்ணீர் மெனுவை தயாரித்து வருகிறேன். உணவு மற்றும் சூழலுக்குத் தகுந்தவாறு கவனமாக தொகுக்கப்பட்ட 12 முதல் 15 தண்ணீர் வகைகளை மெனுவில் சேர்க்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்," என டாக்டர் மஸ்சா கூறுகிறார்.

"நீங்கள் மீன் சாப்பிடும் போது, மாட்டுக்கறியுடன் வழங்கப்படுவது போன்றல்லாமல் வேறுவிதமான தண்ணீர் வழங்கப்படும். மீனுடன் (சுவையுடன்) குறுக்கிடுவதைத் தவிர்க்கும் வகையில், குறைந்த கனிமத்தன்மையுடனான நீர் தான் அதற்கு தேவை," என்கிறார் அவர்.

மேலும், ஒயின் அறைகளுக்கு பதிலாக தண்ணீரை அருந்தும் அறைகளுடன் கூடிய மிக ஆடம்பரமான வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களிலும் மஸ்சா பணியாற்றி வருகிறார்.

மத காரணங்களுக்காக மதுபானங்களை தவிர்க்கும் கலாசாரங்களிலும் இவ்வகை தண்ணீர் பிரபலமாகிவருவதாக குறிப்பிடும் மஸ்சா, திருமணங்களில் இவை பிரபலமடைந்து வருவதாக கூறுகிறார். செலவுகரமான ஷாம்பைனுக்கு பதிலாக சிறந்த மாற்று பரிசாகவும் இது இருக்கும் என்கிறார் அவர்.

இந்த போக்குக்கு விமர்சனங்களும் உள்ளன.

 
'தார்மீக ரீதியாக தவறானது'
தண்ணீர்
படக்குறிப்பு,

ஐ.நா. அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் 220 கோடி பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் உள்ளனர்.

உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்க போராடிக்கொண்டு வரும் வேளையில், அடிப்படையான ஒன்றுக்கு இவ்வளவு பணம் செலவு செய்யும் இந்த யோசனை ஆபத்தானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஐ.நா. அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் 220 கோடி பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் உள்ளனர். அவர்களுள் 70.3 கோடி பேர் அடிப்படை தண்ணீர் விநியோகம் கூட இல்லாமல் உள்ளனர்.

இது ஏமாற்றுகர போக்கு என மற்ற விமர்சகர்கள் வாதிடுகின்றனர். தண்ணீர் என்பது வெறும் தண்ணீர் தான் என்றும் விலையை தவிர குடிக்கத்தகுந்த குழாய் நீர், பாட்டில் தண்ணீர் அல்லது 'ஃபைன் வாட்டர்' என்ற வித்தியாசமெல்லாம் இல்லை என்கின்றனர். எந்தவித பாட்டில் தண்ணீராக இருந்தாலும் அவை குப்பைகளாக மாறுவதால் அது நம் பூமிக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோடிக்கணக்கான பேர் சுத்தமான தண்ணீர் கிடைக்கப் போராடும் நிலையில், ஒரு பாட்டில் தண்ணீருக்கு பல நூறு டாலர்கள் செலவழிப்பது தார்மீகமற்ற செயல் என, லண்டனில் உள்ள கிரெஷாம் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் கரோலின் ராபர்ட்ஸ்.

"நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து இரவு உணவுக்கு செல்லும்போது உங்களின் செல்வசெழிப்பை காட்டுவது போன்றதுதான் இது. 'அண்டார்டிகா அல்லது ஹவாயிலிருந்து எங்கிருந்தோ பறந்து வந்த இந்த அழகான பாட்டில் தண்ணீருக்கு நான் செலவு செய்கிறேன்' என்று கூறுவதை மக்கள் சிறந்ததாக நினைக்கின்றனர். ஆனால், யதார்த்தத்தில் இதில் யாருக்கும் பலன் இல்லை. இது முழுக்க பணம் சார்ந்தது மட்டுமே," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"மேலும், முக்கியமாக இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். மைக்ரோபிளாஸ்டிக்காக சிதைவடையும் பிளாஸ்டிக், உற்பத்திக்கு புதைபடிவ எரிபொருட்களின் தேவை அல்லது தண்ணீர் அடைக்கப்படும் மிக கடினமான கண்ணாடி, தொலைதூரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்குக் கொண்டு செல்லப்படுதல் என, இவ்வகை தண்ணீர் கார்பன் உமிழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்கிறார் அவர்.

"எனவே இது பணத்தைச் சார்ந்தது மட்டுமல்ல. இவ்வகை தண்ணீர் சுற்றுச்சூழலில் ஏற்படும் சேதங்களையும் கவனிக்க வேண்டும்," என்கிறார் அவர்.

 
தண்ணீர்
படக்குறிப்பு,

ஒவ்வொரு நாளும் பிளாஸ்டிக் நிரப்பப்பட்ட 2,000 குப்பை லாரிகளுக்கு சமமான குப்பைகள் உலகின் பெருங்கடல்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் கொட்டப்படுகின்றன என்று ஐ.நா. கூறுகிறது

ஆனால், இவ்வகை தண்ணீர் பணக்காரர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படுவது அல்ல என்றும் வெறும் இரண்டு டாலர்களுக்கும் இத்தகைய தண்ணீர் கிடைப்பதாக டாக்டர் மஸ்சா கூறுகிறார். இயற்கையான இத்தகைய தண்ணீருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டும் அவர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்.

"குழாய் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைப்பது எந்த அர்த்தத்தையும் கொடுப்பதில்லை. நீங்கள் பல்பொருள் அங்காடிக்கு உங்களின் எஸ்.யூ.வி காரில் சென்றுவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை வீட்டுக்குக் கொண்டு வந்து அருந்திவிட்டு அதனை தூக்கியெறிந்து விடுவீர்கள். நம்ப முடியாத வகையில் அது வீண் தான்," என்கிறார் அவர்.

சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் நீரைவிட, குழாய் நீரை தாகத்தைத் தீர்க்க பயன்படுத்தலாம் என அவர் பரிந்துரைக்கிறார்.

"உண்மையிலேயே குடிநீர் குழாய் கொண்டிருப்பது, உலகெங்கிலும் உள்ள பலருக்குக் கிடைக்காத ஒரு பாக்கியம் தான் என்பதை நாம் மறந்து விடுகிறோம்," என அவர் முடித்தார்.

https://www.bbc.com/tamil/articles/ce7k7gkejp6o

புனரமைக்கும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் உக்ரைன்!

2 months 4 weeks ago
773054.jpg?resize=605,311&ssl=1 புனரமைக்கும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் உக்ரைன்!

உக்ரைன் – ரஷ்ய தாக்குதல் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் பணிகளை உக்ரைன் ஆரம்பித்துள்ளது.

அதன்படி உக்ரைனின் ட்ரொஸ்டியனெட்ஸ் நகரில் ரயில், பேருந்து நிலையங்களுக்கு இடையிலான இடிபாடுகளை அகற்றும் பணியில் அந்நாட்டு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ட்ரொஸ்டியனெட்ஸ் நகரம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் அரசாங்க நிதியுதவியுடன் மீண்டும் புனரமைப்பு பணி இடம்பெறவுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1366533

Checked
Fri, 04/19/2024 - 02:36
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe