3 months 1 week ago
இந்தியா மகளிர் பவர் பிலேக்கை நல்ல ரன்ஸ் அடிச்சு இருக்கினம் இப்படியே போனால் 340க்கு கிட்ட அடிக்கலாம்...............
3 months 1 week ago
நான் முதன் முதலில் பார்க்கும் போது சீனோர் இழுத்து மூடிய நிலையில் இருந்தது. அப்படியே கொஞ்ச தூரம் போனால் நேவி காம்ப். சின்னவயதில் செங்கை ஆழியான் கடற்கோட்டை நாவல் வாசித்ததில் இருந்து அதன் மீது ஒரு அதீத காதல். எப்படியாவது காசு உழைத்து அதை வாங்கி, அதில் குடியேறி விட வேண்டும், போர்ட்டில் வேலைக்கு வந்து போகவேண்டும் எனவெல்லாம் கூட யோசித்தது உண்டு. ஜெட்டியில் போய் நின்று பார்த்து வருவதோடு சரி. அப்போ ஊர்காவற்துறை போகும் பாதையும் உடைந்து கிடந்தது. யுத்த முடிவில், கடற்கோட்டை உள் போய் பார்க்கவும், பாதையில் பயணிக்கவும் வாய்ப்புக்கிட்டியது.
3 months 1 week ago
Live Final (D/N), DY Patil, November 02, 2025, ICC Women's World Cup India Women (9.6/50 ov) 64/0 South Africa Women SA Women chose to field. Current RR: 6.40 • Last 5 ov (RR): 33/0 (6.60)
3 months 1 week ago
இந்தியாவின் தொடக்கம் மிக அருமை....................
3 months 1 week ago
தலைவர் அந்தப்பக்கமா என்று நீங்கள் கேட்டது வழுக்கை ஆற்றின் அந்தப்பக்கமா என்றா அல்லது எந்தப்பக்கம் என்று கேட்ட நீங்கள் 😃 ஓம் நானும் அந்தப்பக்கம் தான் ஆனால் இப்போது இந்தப்பக்கம் 😃 அந்தப்பக்கமாக இருந்தால் என்ன எந்தப்பக்கம் என்றாலும்😇 அந்தப்பக்கத்திற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும் அல்லவா 😃 அந்தப்பக்கம் தீவா நகரா என்ற இழுபறியில் இருக்கு அதுவரைக்கும் அந்தப்பக்கம் அந்தப்பக்கமாகவே இருக்கட்டும்🤣🤪 கோஷான் வேறை இந்தப்பக்கம் நிக்கிறாப்பல 😂
3 months 1 week ago
கட்புலனாகா அரங்கு கட்புலனாகாத போர்? - நிலாந்தன் கடந்த 30ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் அரசாங்கத்தின் போதைப் பொருளுக்கு எதிரான ஒரு செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரமுகர்கள் அமர்ந்திருந்த அரங்கிற்குள் திடீரென்று ஒருவர் மேடையை நோக்கி வேகமாக நகரத் தொடங்கினார். அங்கிருந்த பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகள் அவரைத் தடுக்க முயற்சித்தாலும் அவர் மேடையில் ஏறி விட்டார். உணர்ச்சிக் குழம்பாக காணப்பட்ட அந்த நபர் மேடையில் நின்று அரங்கில் இருந்தவர்களை நோக்கி அழுதழுது கதைக்கத் தொடங்கினார். இல்லை,நடிக்கத் தொடங்கினார் என்றுதான் சொல்லலாம். ஏனென்றால்,அது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நாடகம். கண்ணுக்குப் புலனாகாத அரங்கு “இன்விசிபிள் தியட்டர்” என்று அதை அழைப்பார்கள். போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட தனிநபர் நாடகம் அது. அதில் நடித்தவர் பிரேம் ஜெயந்த கபுகே என்ற கலைஞர். நல்ல விஷயம். நாடு முழுவதுக்குமான ஒரு முக்கியமான வேலைத் திட்டத்தை அவ்வாறு கலை உணர்வோடு அணுகியதும் அரங்கில் கூடியிருந்தவர்கள் எதிர்பாராத விதத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்பை ஏற்படுத்தியதும் பாராட்டத்தக்கவை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இதயமாக இருக்கும் ஜேவிபி ஓர் அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில் அது மக்கள் மத்தியில் எப்படிக் கருத்தை கொண்டுபோக வேண்டும் என்ற விடயத்தில் தெளிவாகச் செயல்படுகிறது. போதைக்கு எதிரான போரை அனுர கலை உணர்வோடு தொடங்கியிருக்கிறார். ஆனால் போதைக்கு எதிரான யுத்தம் ஒரு கலையா? நிச்சயமாக இல்லை. அது ஈவிரக்கம் இல்லாத ஒரு கொலை நிகழ்ச்சிச் திட்டம் என்பதற்கு அகப்பிந்திய உதாரணம் பிரேசில். பிலிப்பைன்ஸ்,சில லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் நிலைமை அதுதான். ஏனென்றால் போதையை ஒழிப்பது என்பது ஒரு வகையில் போர்தான். நிச்சயமாக அது இன்விசிபில் தியட்டர் அல்ல. அப்படி ஒரு போரைச் செய்ய அனுர தயாரா? அந்தத் தொடக்க நிகழ்வில் அவர் கூறுகிறார்… “நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக, தனிப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், தனியாக முடியாது. அரசாங்கத்தால் மட்டும் முடியாது. பொலிஸால் மட்டும் முடியாது. அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம்…..” அவருடைய உரையின்படி போதைக்கு எதிரான போராட்டத்தை முழு நாட்டுக்கும் உரியதாக அவர் வர்ணிக்கிறார். அதாவது தமிழ்ப் பகுதிகளையும் இணைத்து நாட்டை ஒரு முழு அலகாகக் கருதி அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால்,கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரக்குமார் தமிழ்ப் பகுதிகளில் உள்ள வேறு ஒரு யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் வடக்கில் விதைத்ததை தெற்கில் அறுவடை செய்கிறது என்ற பொருள்பட அவர் உரையாற்றினார். அதாவது தமிழ் மக்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து, போதைப்பொருள் வலையமைப்பை உருவாக்கி, தமிழ் மக்களைப் போதையில் மிதக்க விடுவது என்பது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் ஒரு நிகழ்ச்சி நிரல் என்று கஜேந்திரக்குமாரும் உட்பட பெரும்பாலான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கடந்த 16 ஆண்டுகளாகக் கூறிவருகிறார்கள். 2009க்குப்பின் தமிழ் இளையோர் இலட்சியவாதத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு திரளாக மாறுவதை தடுப்பதற்கு அவர்களைப் போதையால் திசைதிருப்பி போதையில் மூழ்கடிப்பதே அந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் ஆகும். அதன்மூலம் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் இனிமேலும் தலையெடுக்க முடியாதபடிக்கு அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்படும். அந்த அடிப்படையில் பார்த்தால் வடக்கு கிழக்கில் போதைப் பொருள் வலையமைப்பு எனப்படுவது ஒரு வகையில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் இன்விசிபிள் யுத்தத்தின்-கட் புலனாகா யுத்ததின் ஒரு பகுதி தான். கஜேந்திரக்குமார் அதனைத் தனது நாடாளுமன்ற உரையிலும் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் தெரிவித்திருக்கிறார். ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கூறியதாக ஒரு தகவலை அவர் சுட்டிக்காட்டுகிறார். பெருமளவு போதைப் பொருட்கள் வடக்குக்கிழக்கு கடல் வழியாகவே நாட்டுக்குள் வருவதாக அந்த மேஜர் ஜெனரல் கூறியிருக்கிறார். ஆனால் வடக்கு கிழக்கின் நீண்ட கடல் எல்லைகளை முழுக்க முழுக்க ஸ்ரீலங்கா கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. அப்படியிருக்க அவர்களை மீறி எப்படிப் போதைப் பொருள் உள்ளே வருகிறது? அதுபோலவே போதைப்பொருள் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை மக்கள் போலீசாருக்கு வழங்கும்பொழுது அத்தகவல் உடனடியாகவே குற்றவாளிகளுக்குச் சென்றுவிடுகிறது. கைது செய்யப்படுகின்ற குற்றவாளிகள் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். போன்ற குற்றச்சாட்டுக்கள் தமிழ் பகுதிகளில் நடக்கின்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், இந்நாள் ஆளுநர் வேதநாயகன் போன்றவர்கள் அதைக் குறித்து ஏற்கனவே பிரஸ்தாபித்திருக்கிறார்கள். அண்மையில் மாற்றம் அறக்கட்டளை நடத்திய ஒரு நூல் வெளியீட்டு விழாவிலும் ஆளுநர் வேதநாயகன் அதைச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மாற்றம் அறக்கட்டளை எனப்படுவது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரேயொரு அரசு சாராத போதைப்பொருள் புனர் வாழ்வு மையம் ஆகும். நீங்கள் வடக்கு கிழக்கில் விதைத்தவற்றைத்தான் தெற்கில் அறுவடை செய்கின்றீர்கள் என்ற பொருள்பட கஜேந்திரக்குமார் கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரை ஆற்றினார். அதைத்தான் முகநூலில் ஒரு மருத்துவர் எழுதினார் “வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான்” என்று. எனவே தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின் ஆளுநர்கள், போதையில் மூழ்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள்,ஊடகவியலாளர்கள்…போன்றவர்கள் தரும் தகவல்களின்படி தமிழ்ப்பகுதிகளில் போதைப் பொருள் வலையமைப்பு எனப்படுவது கட்டமைப்புசார் இன அழிப்பின் ஒரு பகுதிதான். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு இன்விசிபிள் போர். இந்தப் போரை அனுரவால் முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எந்தப் படைக் கட்டமைப்பையும் போலீஸ் கட்டமைப்பையும் வைத்துக்கொண்டு தெற்கில் அவர் போதையை ஒழிக்கப்போவதாக கூறுகிறாரோ,அதே கட்டமைப்புகள்தான் தமிழ்ப் பகுதிகளில் போதைப் பொருள் வலையமைப்பைப் பேணுகின்றன என்று தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே முழுநாட்டையும் இந்த விடயத்தில் ஒர் அலகாகக் கருதி தெற்கில் போதை வலை பின்னலை முறியடிப்பது போல வடக்கிலும் அதை முறியடிக்க முடியுமா? வடக்கில் அவ்வாறு செய்வது என்று சொன்னால் அனுர முப்படைகளின் தளபதியாக எந்தெந்தக் கட்டமைப்புகளுக்குத் தலைமை தாங்குகின்றாரோ அதே கட்டமைப்புகளுக்கு எதிராக அந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியிருக்கும். அப்படிப்பார்த்தால் தேசிய மக்கள் சக்தி வாக்களித்த மாற்றத்தை அதன் மெய்யான பொருளில் தமிழ் மக்களுக்குக் காட்டுவதற்குரிய ஒரு சோதனைக் களமாக அது அமையுமா? அல்லது இது எதிர்க்கட்சிகளைத் தலையெடுக்க விடாமல் முடக்கும் அல்லது தற்காப்பு நிலைக்குத் தள்ளும் ஒரு நடவடிக்கையாக முடிந்து விடுமா? கடந்த சில மாதங்களாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம், பாதாள உலகக் குழுக்களைக் கைது செய்யும் நடவடிக்கை போன்றன எதிர்க்கட்சிகளைப் பெருமளவுக்கு தற்காப்பு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன. ஒருபுறம் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதியும் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள்,அரச அதிகாரிகள்,முன்னாள் அமைச்சர்கள் என்று உயர் பதவி நிலைகளில் இருந்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறது. இன்னொருபுறம் பாதாள உலகக் குற்றவாளிகள், போதைப்பொருள் குற்றவாளிகள் என்று பெருந்தொகையானவர்களைக் கைது செய்து வருகிறது. பாதாள உலகம் எங்கேயோ ஓரிடத்தில் அரசியல்வாதிகளோடும் கட்சிகளோடும் தொடர்புற்றிருப்பதாகவே தெரிகிறது. எனவே இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு கட்சிக்கு அல்லது அரசியல்வாதிக்கு எதிரானவைகளாகத்தான் தெரிகின்றன. இதன்மூலம் ஏனைய கட்சிகள் யாவும் எங்கேயோ ஓரிடத்தில் குற்றக் கும்பல்களோடு தொடர்புடையவை என்ற ஒரு தோற்றம் மிகவும் கச்சிதமாகக் கட்டியெழுப்பப்படுகின்றது. இது அதன் தர்க்கபூர்விளைவாக தேசிய மக்கள்சக்தி அரசாங்கமானது சுத்தமானது, ஆனால் அதற்கு எதிரான எதிர்க்கட்சிகள் பெரும்பாலானவை குற்றக் கும்பல்களோடு தொடர்புடையவை என்ற ஒரு அரசியல் தோற்றத்தை கட்டியெழுப்புவதற்கு உதவுகின்றது. இதனால் எதிர்க்கட்சிகள் பதட்டம் அடைகின்றன; பெருமளவுக்குத் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இவ்வாறு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்ட எதிர்க்கட்சிகள் தவிர்க்க முடியாமல் ஒன்றுசேர வேண்டிய ஒரு தேவை; நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. “கூட்டு எதிரணியினரின் நுகேகொடைக் கூட்டம் வெற்றியளிக்கவேண்டும் எனப் பிராத்திக்கிறேன். ஏனெனில், பொதுமக்களுக்கு பயனற்ற ஒன்றாக அது உள்ளது. மேற்படி கூட்டத்தை நடத்துவதால் பாதாள உலகக் கோஷ்டியையோ அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தையோ தடுக்க முடியாது. எனவே அது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு விடயமாக இருக்காது” என்று அமைச்சர் லால்காந்த கூறியிருப்பதும் அதைத்தான். எனவே அரசாங்கம் போதை விலையமைப்பையும் பாதாள உலகம் வலையமைப்பையும் முழுமையாக ஒடுக்குமோ இல்லையோ இப்போதைக்கு எதிர்க்கட்சிகளைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அரசியல் யதார்த்தம் அதுவல்ல. சுகததாஸ உள்ளரங்கில் போதை ஒழிப்புத் திட்டத்தை கட்புலனாகா அரங்கின்மூலம் கவர்ச்சியாகத் தொடக்கி வைப்பது வேறு. தமிழ்ப் பகுதிகளில் தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாற்றுவதுபோல கட்டமைப்பு சார் இன அழிப்பின் ஒரு பகுதியாகத் தொடரும் கட்புலனாகாப் போரை நிறுத்துவது வேறு. ஏனென்றால் இங்கு அனுர போர் புரிய வேண்டியது முப்படைகளின் தளபதியாக தான் தலைமை தாங்கும் கட்டமைப்புக்கும் எதிராகத்தான். https://www.nillanthan.com/7885/
3 months 1 week ago
தென்னாப்பிரிக்காவை ஏன் இந்திய அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் சதமடித்த ஜெமிமா கட்டுரை தகவல் சஞ்சய் கிஷோர் பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 1983-ஆம் ஆண்டு ஆடவர் ஒருநாள் உலக கோப்பையைப் போலவே இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு முக்கியமான தருணம் இது. இன்று நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலககோப்பை இறுதிப் போட்டி வரலாற்று புத்தகங்களில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட உள்ளது. 2006-ஆம் ஆண்டு பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை தங்களின் குடைக்குள் எடுத்துக் கொண்டது. அப்போது மகளிர் கிரிக்கெட் இன்று அடைந்துள்ள உயரத்தை அடையும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். மகளிர் கிரிக்கெட்டின் ஆரம்ப காலகட்டத்தில் மைதானங்கள் காலியாக இருந்தன, தொலைக்காட்சிகளில் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய போராட வேண்டியிருந்தது. அந்தச் சூழல் தற்போது மாறிவிட்டது, வீராங்கனைகள் நட்சத்திரங்களாக மாறி உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகின்றனர். பெண்கள் கிரிக்கெட் பிரபலமடைந்துள்ளது. ஆனால் மைதானங்களுக்கு ரசிகர்களைக் கொண்டு வருவதில் வெற்றியடையவில்லை. இந்திய அணிக்குப் பின்னால் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ உள்ளது. அவர்களிடம் வளமும் கட்டமைப்பும் உள்ளது. ஆனால் கிரிக்கெட் என்பது பணத்தால் மட்டுமல்ல, தைரியத்தால் வெல்லப்படுகிறது என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. ரசிகர்களின் மனங்களை வெல்ல வேண்டுமென்றால் எந்த அணியும் கோப்பைகளை வெல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட்டின் பிம்பத்தையும் தலைவிதியையும் மாற்ற கபில் தேவின் அணி உலக கோப்பையை வெல்ல வேண்டியிருந்தது. தற்போது அதே போன்றதொரு சூழல் மகளிர் அணிக்கும் உருவாகியுள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டியில் மட்டும் விளையாடவில்லை, ஒரு கனவை நிறைவேற்றவும் விளையாடுகிறது. ஆனால் தென் ஆப்ரிக்க அணிக்கு இறுதிப் போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது தென் ஆப்ரிக்கா. இறுதி போட்டி வெற்றியைக் கொண்டாடுவாதற்காக டேன்சிங் ஷூக்களை எடுத்து வந்துள்ளனர். தென் ஆப்ரிக்க அணியின் இயக்குநர் ஈனோச் நிக்வே தனது அணியை "ஆர்டிஸ்டிக் ஹன்டர்கள்" என அழைக்கிறார். இரு 'உதய சூரியன்' அணிகளின் கதை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரை இறுதி போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தென் ஆப்ரிக்க அணி வரலாற்றை மாற்றும் இறுதி போட்டியாக இது அமைந்துள்ளது. முதல்முறையாக ஆஸ்த்ரேலியா, இங்கிலாந்து அல்லாமல் ஒரு புதிய அணி உலக சாம்பியனாக உள்ளது. இது, இந்தத் தொடரில் விட்டுக் கொடுக்காத உணர்வை வெளிப்படுத்திய இரு 'உதய சூரியன்' அணிகளின் கதைகளாகும். இந்திய அணி முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளை தோற்கடிக்காமல் நாக்-அவுட் சுற்றுக்கு வந்தது. அதன் பிறகு அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் வரலாற்று வெற்றி பெற்று இறுதி போட்டியை அடைந்தது. இந்த வெற்றி, இந்திய அணி அழுத்தமான சூழல்களுக்காக தயாராக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஜெமிமா ரோட்ரிகசின் சதம் (ஆட்டமிழக்காமல் 127 ரன்கள்) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுரின் 89 ரன்களும் இந்திய அணி எந்த இலக்கையையும் அடைய முடியம் என்பதை நிரூபித்தது. மறுபுறம் தென் ஆப்ரிக்க அணி இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் முறையே 69 மற்றும் 97 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததிலிருந்து மீண்டு வந்துள்ளது. அரை இறுதிப் போட்டியில் தங்களின் பரம எதிரியான இங்கிலாந்து அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது அவர்களின் அசாத்தியமான மன உறுதிக்குச் சான்றாக உள்ளது. இந்தப் போட்டி, தங்களின் கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து போராடி இந்தக் கட்டத்தை அடைந்திருக்கும் வீராங்கனைகளின் கனவுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இன்று வெற்றி என்பது வெறும் கோப்பையாக மட்டும் இருக்காது. மாறாக பொருளாதார சுதந்திரம், சமூக மாற்றம் மற்றும் அசாத்தியமானதை சாத்தியமாக்குவதாக இருக்கும். அணிகளின் நிலை மற்றும் முக்கியமான சவால்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்மிரிதி மந்தனாவின் அனுபவம் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி தேர்வு செய்த காம்பினேஷன் (ஆறு பந்து வீச்சாளர்கள் மற்றும் 8 வது வீரர் வரை பேட்டிங் ஆடுவது) தான் இறுதி போட்டிக்கும் உகந்ததாக இருக்கும் ஒபனிங் மற்றும் மிடில் ஆர்டர்: இந்திய அணிக்கு ஓபனிங்கில் ஸ்மிரிதி மந்தனா மற்றும் செஃபாலி வர்மா நல்ல தொடக்கம் தர வேண்டும் என்கிற அழுத்தத்தில் இருப்பார்கள். செஃபாலி கடந்த போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் அதிரடியான தொடக்கம் தருவதற்கான திறன் அவரிடம் உள்ளது. மிடில் ஆர்டர்: ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு அசைக்க முடியாத கூட்டணியாக உள்ளனர். ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவின் அனுபவமும் அமைதியான அணுகுமுறையும் இந்த அணியில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ரிச்சா கோஷின் அதிரடி ஃபினிஷிங் மற்றும் அமன்ஜோத் கவுரின் திறன்கள் நவீன கால கிரிக்கெட்டின் தேவைகளாக உள்ளன. சுழற்பந்து வீச்சு: தென் ஆப்ரிக்க அணியில் வலது கை பேட்டர்கள் அதிகமாக இருப்பதால் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவ் சிறந்த தேர்வாக இருப்பார். இந்த நகர்வு மிடில் ஓவர்களில் இந்தியா ரன்களைக் கட்டுப்படுத்த உதவும். வேகப்பந்து வீச்சு: கிராந்தி கவுட் மற்றும் ரேணுகா சிங் காம்பினேஷன் தொடக்க ஓவர்களில் விக்கெட் எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தற்போதைய தென் ஆப்ரிக்க அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. தென் ஆப்ரிக்க அணி சாம்பலில் இருந்து எழுந்து வந்துள்ளது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் மிக குறைவான ரன்களை எடுத்திருந்தாலும் 5 போட்டிகளில் தொடர்ந்து வென்று இறுதி போட்டிக்கு வந்துள்ளது. தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு நான்கு உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். உத்தி சார்ந்த செயல்திட்டம்: கடுமையான போட்டிகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய அணியின் பெர்ஃபார்மன்ஸ் வேகப்பந்து வீச்சை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை பொருத்து அமையும். இன்றைய போட்டியின் முடிவு சில முக்கியமான அம்சங்களால் தீர்மானிக்கப்படும். மந்தனா vs கப் - உலகின் நம்பர் 1 பேட்டரான ஸ்மிரிதி மந்தனா, கப்-இன் துல்லியமான ஸ்விங் பந்து வீச்சை இறுதிப் போட்டியின் அழுத்தத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். டி கிளார்க் vs இந்தியாவின் டெத் ஓவர் பவுலிங்: லீக் சுற்று தோல்வியை மறந்து இந்திய அணி டி கிளார்க்கை கட்டுப்படுத்த ஏதேனும் திட்டத்துடன் வருமா என்பதை கவனிக்க வேண்டும். தீப்தி சர்மா vs வோல்வார்ட்: தொடர்ச்சியாகவே வோல்வார்ட்டிற்கு எதிராக குறைவான ரன் ரேட்டை தீப்தி சர்மா கடைபிடித்து வருகிறார். இது மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கும். செஃபாலி வர்மா: அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் வந்துள்ள செஃபாலி வர்மாவுக்கு ஜொலிப்பதற்கான வாய்ப்பு இது. இத்தகைய பிட்ச் மற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் பெரிதாக சாதிக்க முடியும். நவி மும்பை எனும் கடுமையான போட்டிக்களம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நவி மும்பை மைதானம் நவி மும்பை மைதானம் 30,000 ரசிகர்கள், உப்பு கலந்த கடல் காற்று மற்றும் கணிக்க முடியாத வானிலையைக் கொண்டிருக்கும். டி.ஒய் பாட்டீல் மைதானம் இந்திய அணிக்கு சாதகமானதாகவே இருந்துள்ளது. இங்கு நடைபெற்ற கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இங்கு விளையாடுகிறது. இது இந்தியா அணிக்குச் சாதகமான அமையும். ஆனால் கணிக்க முடியாத வானிலை மற்றும் பனி டாஸ் ஜெயிப்பதை முக்கியமாக்குகிறது. மூன்றாவது முறை இந்திய அணிக்கு சாதகமாகுமா? பட மூலாதாரம், @ICC படக்குறிப்பு, மகளிர் உலக கோப்பை இந்திய மகளிர் அணிக்கு இந்த இறுதி போட்டி மூன்றாவது முயற்சியாக இருக்கும். 2005 (இங்கிலாந்திடம் தோற்றது) மற்றும் 2017-இல் (இங்கிலாந்திடம் தோற்றது) இந்திய அணி இறுதி போட்டியை அடைந்தது. மாறாக, தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் மூன்று முறை அரை இறுதி போட்டி வரை சென்றுள்ளது தென் ஆப்ரிக்கா. இப்போது மிகவும் தொழில்முறை அணியாக மாறியுள்ள தென் ஆப்ரிக்கா கடந்த 12 ஆண்டுகளில் நான்கு முறை ஐசிசி தொடர்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkzzkzl6ezo
3 months 1 week ago
பினலில் மழை காரனமாக விளையாட்டு தடை பட்டு இப்போது தென் ஆபிரிக்கா நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம் இண்டைக்கு இந்தியா கோப்பை வெல்லுது அந்த சந்தோசத்தில் யாழ்களம் அதிரனும்...............................
3 months 1 week ago
02 Nov, 2025 | 03:02 PM வடக்கில் இருந்து வெளியேற்றிய முஸ்லிம் மக்களை மீண்டும் வடக்கில் குடியேற வருமாறு பிரபாகரன் அழைப்பு விடுத்ததாக செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை தெரிவித்துள்ளார். வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கையொப்பமிட்ட ஒரே ஒரு ஆவணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணம் மட்டும்தான். சமாதான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில்கூட அன்ரன் பாலசிங்கம் கையொப்பமிட்டிருப்பார், தமிழ்ச்செல்வன் கையொப்பமிட்டிருப்பார், புலித்தேவன் கையொப்பமிட்டிருப்பார், அல்லது திட்டமிடல் பணிப்பகத்தின் பணிப்பாளர் கையொப்பமிட்டிருப்பார். ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த ஒருடத்திலும் கையொப்பமிடவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் "பிரபாகரன், இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் அனைவரையும் மீண்டும் குடியேறுவதற்கு வருமாறு அழைக்கின்றார்" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரவூப் ஹக்கீமுடன் புலிகள் கதைத்த நாட்கள் வலிமையுடனும் அங்கீகரிப்புடனும் இருந்த நாட்கள். தோற்றுப் போய் அழிவடைய போகின்றோம் எந்த நிலையில் இருந்து அவர்கள் கதைக்கவில்லை. சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மிகவும் பலமாக இருந்த நாட்களிலேயே கதைத்தார்கள். அப்போது யாழ்ப்பாண மாவட்டம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத யாழ்ப்பாணத்தில் குடியேறுங்கள் என்று சொல்வதற்கு புலிகளால் முடியாது. அந்தச் சூழலில் தங்களால், மீள குடியேறவுள்ள முஸ்லீம் மக்களுக்கு உத்தரவாதம் தர முடியாது என்பதே புலிகளின் சாராம்சமாக இருந்தது. முஸ்லிம் மக்கள் மதரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவுப், ஏனைய விடயங்கள் ரீதியாகவும் தனித்துவமானவர்கள். அவர்களது உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயம் அந்த ஒப்பந்த ஆவணத்தில் தெளிவாக கூறப்படுகிறது. யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது? குற்றம் செய்தவர் மன்னிப்பு கேட்பதா? அல்லது குற்றம் செய்தவர் சார்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் மன்னிப்பு கேட்பதா? அல்லது அந்த குற்றத்தை பார்த்த ஒருவர் மன்னிப்பு கேட்பதா? மன்னிப்பு என்பது தவறு செய்தவர் தான் உணர்ந்து செய்வதுதான் மன்னிப்பு என்றார். https://www.virakesari.lk/article/229292
3 months 1 week ago
IND Women vs SA Women, Final at Navi Mumbai, Women's World Cup, Nov 02 2025 Match delayed by a wet outfield Pitch Report: There is a nice breeze and that seems to have pushed the clouds away. Still quite muggy, though, with 79 percent humidity. The pitch is in the centre of the square. 66m straight hit, 56m and 57m square boundaries. Mel Jones thinks the pitch, being under covers, with the rain around, might interest swing bowlers such as Kapp and Renuka. Very similar to the one that saw the semi-final between India and Australia, although this strip was last used for the Ind-NZ game. Charani has been one of the few spinners to get the ball to turn at this venue, and it will be interesting to see how much purchase she can extract. India XI: Shafali Verma, Smriti Mandhana, Jemimah Rodrigues, Harmanpreet Kaur (capt), Richa Ghosh (wk), Deepti Sharma, Amanjot Kaur, Radha Yadav, Kranti Gaud, Shree Charani, Renuka Singh South Africa XI: Laura Wolvaardt (capt), Tazmin Brits, Anneke Bosch, Sune Luus, Marizanne Kapp, Annerie Dercksen, Sinalo Jafta (wk), Chloe Tryon, Nadine de Klerk, Ayabonga Khaka, Nonkululeko Mlaba
3 months 1 week ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் · 🔹" ஒரு பாம்பு அதன் மீது ஒரு கல் விழுந்தபோது உதவிக்காகக் கூக்குரலிட்டது, 🔸" ஒரு பெண் தூரத்திலிருந்து வந்து அதைக் காப்பாற்றினாள். 🔹" அதைக் காப்பாற்றிய பிறகு பாம்பு கூறியது எனக்கு உதவி செய்பவர்களைக் கடிக்கப் போவதாக நான் சத்தியம் செய்துள்ளேன் 🔸" அந்தப் பெண் நான் உனக்கு உதவி செய்தேன் அப்படி இருக்க நீ எப்படி என்னைக் கடிக்க விரும்புகிறாய் என்று கேட்டாள் 🔹" பாம்பு நான் உன்னை நிச்சயமாக கடிப்பேன் உனக்கு இரக்கம் காட்டவே மாட்டேன் அது என் இயல்பு என்ன நடந்தாலும் இயற்கை மாறாது என்று பதிலளித்தது 🔸" அந்தப் பெண் கூறினாள் நமது இந்த பாதையில் நாம் சந்திக்கும் முதல் விலங்கிடம் கேட்போம் அது என்னைக் கடிக்க உனக்கு உரிமை அளித்தால் அதைச் செய் என்றாள் 🔹" சிறிது தூரம் நடந்த பிறகு அவர்கள் ஒரு ஓநாயைச் சந்தித்தனர் அவர்கள் அவரிடம் முழு கதையையும் சொன்னார்கள் 🔸" ஓநாய் தந்திரமாக கூறியது நீங்கள் என் முன் அதே காட்சியை மீண்டும் நடித்து காட்டும் வரை நான் அதை நம்பவே மாட்டேன் 🔹" அதற்கு அந்தப் பெண் பாம்பின் மீது கல்லை வைத்து ஓநாயிடம் இப்படித்தான் நான் அதை ஆரம்பத்தில் பார்த்தேன் என்றாள் 🔸 ஓநாய் கூறியது கல்லுக்கு அடியில் ஆரம்பத்தில் இருந்தது போலவே விட்டுவிடுங்கள் 🔹 ஏனென்றால் நன்றி கெட்டவர்கள் ஒருபோதும் உதவிக்கு தகுதியற்றவர்கள் 🔸 உங்களிடம் கருணையை பெரும் அனைவரும் அந்த உதவியைப் பாராட்டுவதில்லை 🔹" நன்றி கெட்டவர்களாகப் பழகியவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் ஒருபோதும் மாற மாட்டார்கள் Voir la traduction ........!
3 months 1 week ago
அதுதானே அநியாயமாக பழி போட்டிருப்பார்கள். முஸ்லீம்களுக்கு வெடிகுண்டு துப்பாக்கி என்றால் என்னவென்றே தெரியாது என்று செத்துபோன சஹ்ரானில் இருந்து கமாஸ் ஹிஸ்புல்லா, தலீபான்வரை சொல்லியிருக்காங்க.
3 months 1 week ago
நேர்படப்பேசு மாத இதழ் · Sudha Srinivasan ·toodrnespS202l1l 6870370fgi9hhhmum5a2guha2fggf33cat2mm77at7u · பதிமூன்று வயதில் படிப்பு போச்சு.. வீட்டில் ஏழ்மை.. தொடர்ந்து பல நாட்களாக பசி... வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு... ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன். ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். பையனிடம், ”டேய் இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார். ஆஹாஸ இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்ஸ மகிழ்ந்தான். மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான். அதோடு விட்டானா... நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர். மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம். வாய்ப்புகளை பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்... Voir la traduction
3 months 1 week ago
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று .........நடிப்பு நாகேஷ் ......! 😍
3 months 1 week ago
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு ஏனிந்த சிரிப்பு…. ஆண் : ஒரு பாதை போட்ட நாயகன் அதை வேலிப் போட்டு மூடினான் மனம் வேலி தாண்டி போனது அதை தாலி வந்து கேட்டது… ஆண் : ஒரு பாதை போட்ட நாயகன் அதை வேலிப் போட்டு முடினான் மனம் வேலி தாண்டி போனது அதை தாலி வந்து கேட்டது… ஆண் : தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு இதயத்தின் பிணைப்பு இறைவனின் சிரிப்பு… ஆண் : ஒரு நீதி கூண்டில் நின்றது ஒரு நீதி சாட்சி சொன்னது ஒரு நீதி தெய்வம் ஆனது இதில் தர்மம் எங்கு போனது ஆண் : ஒரு பக்கம் இருட்டு ஒரு பக்கம் வெளிச்சம் ஒரு பக்கம் வழக்கு இறைவனின் சிரிப்பு….....! --- நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு ---
3 months 1 week ago
அப்போது என்ஜினியராக உதயகுமார் இருந்தவர்.....அவர் உயரமானவர் . .....இப்போ வேறு நாட்டில் இருக்கிறார் என நினைக்கிறேன் . ...... அநேகமாய் அங்கு வேலை செய்தவர்கள் எல்லாம் காரைநகர் , சுழிபுரம் , மானிப்பாய் , சண்டிலிப்பாய், ஊர்காவற்துறை, நாரந்தனை என்று அதைச்சுற்றியுள்ள ஆட்கள்தான் வேலை செய்தவை ........அப்படியே சீ . நோரிலும் அந்த சுற்றாடலை சேர்ந்தவர்கள்தான் படகுகள் கட்டுறது , மீன் , கணவாய் , றால் எல்லாம் பைக்கட் செய்வது + விற்பது .......நிறைய பெண்பிள்ளைகள் வேலை செய்தவை . ........ அங்கு சில்லறை வியாபாரமும் இருக்கும் .....நாங்கள் வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கொண்டு போவது வழக்கம் . .....!
3 months 1 week ago
அந்த காலத்தில் உங்கள் பிரதம எஞ்சினியராக ஒரு நெடு நெடு என வளர்ந்த மனிதர் இருந்தாரா அண்ணை? அதேபோல் போர்மென் உதவியாளராக கொஞ்சம் கட்டையாக நிறைய தலைமுடியோ கொஞ்சம் ரஜனி சாயலில் இன்னொருவர் இருந்தாரா? இப்பவும் எண்ணை மட்டும் அல்ல ரொம்ப சுவையான எள்ளுருண்டை தயாரிப்பும் வீட்டு கைத்தொழிலாக நடக்கிறது. பழக இனிமையான மக்கள்.
3 months 1 week ago
யாழ் பல்கலை கழக மணவர் தங்கும் விடுதியில் துப்பாக்கிகள் மீட்பு . முஸ்லீம் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு மேல் பகுதியில் இருந்து ரி56 வகை துப்பாக்கிகளும் சில வெடி பொருட்களும் மீட்பு. இவ்வாறு இந்த செய்தி அமைந்திருந்தால் இங்கு கருத்துக்கள் எவ்வாறு அமைந்திருக்கும். 😁
3 months 1 week ago
வாத்தியார் நீங்கள் அந்தப்பக்கமா . ........ நான் காரைநகர் இ . போ . ச வில் 5 வருடங்கள் ( அது ஜெற்றியில் இருந்த காலத்தில் இருந்து, பின் புது டிப்போ கட்டி குடிபுகுந்தனங்கள் . ......அப்போது தியாகராஜ என்பவர் சேர்மன் ஆக இருந்தவர் , அதேநேரத்தில் இன்னொரு தியாகராஜ பார்லிமென்ட் எம் . பி என்று நினைக்கிறேன் இருந்தவர் )வேலை செய்தனான் .......! கோஷன் - சே அவர்களே அது ஐந்துகண் உள்ள மதகுதான் ........அதற்கு முதலே வழுக்கியாறு இருந்திருக்கு . .....அதற்குத்தான் மதகு கட்டியது . ..... ஆணைக்கோட்டை எண்ணை உருட்டுற சில குடும்பங்கள் என் நண்பர்கள் + சீனியர்கள் . ..... அவர்களுடன் நான் சக மெக்கானிக்காக இருந்திருக்கிறேன் . .........அவர்கள் வழி வழியாக வரும் கதை சொல்லித்தான் எனக்குத் தெரியும் ........அவ்வளவுதான் . .......! 784..... கல்லுண்டாய் வெளியால் செல்வது . .....! 786 .....ஆணைக்கோட்டை நவாலியால் செல்வது . ......! 782..... மானிப்பாய், சங்கானை, சுழிபுரம் , மூளாய் வழியாக செல்வது ......!
3 months 1 week ago
டாக்டர்: சொல்லுங்க உடம்புக்கு என்ன பண்ணுது...? நோயாளி: கிரகணம் பிடிச்சிருக்கிற டைம்ல சாப்டக்கூடாதுன்னு பொண்டாட்டி தடுத்தும் வீம்புக்கு கொஞ்சம் பொங்கல சாப்ட்டு தொலைச்சிட்டேன் டாக்டர்... ம்... அப்புறம்...? அப்புறம் சாப்ட்டுட்டு ரிலாக்ஸா உட்க்காந்திருக்கும் போதே திடீர்னு படபடன்னு வந்திடுச்சி டாக்டர்... அப்புறம் கை காலெல்லாம் லைட்டா ஆட்டம் கொடுத்திருக்குமே...? ஆமா டாக்டர்...! அப்புறம்... லேசா தல சுத்திருக்குமே..? இல்ல... கொஞ்சம் வேகமாக சுத்துற மாதிரி ஃபீலிங் இருந்துச்சி டாக்டர்... ஓ... அப்புறம் உக்காந்திருக்கிற சோபால கொஞ்சம் ரிலாக்ஸா சரிஞ்சி உட்க்கார்ந்தா நல்லாருக்கும்னு தோனிருக்குமே...? அய்யோ... ஆமா டாக்டர்.... அப்புறம்... அதே சோபால சாய்ஞ்சாப்பல படுத்து தூங்கணும்னு தோனிருக்குமே...? ஆமா டாக்டர்... ஆமா டாக்டர்.... அப்படியே நேர்ல பாத்தமாதிரியே சொல்றீங்களே.... அப்புறம்... சோபால சரிஞ்சி படுத்தப் பிறகு நெஞ்சில யாரோ ஏறி மிதிச்சா மாதிரி இருந்திருக்கும்... பயந்து போய் என்ன பார்க்க வந்துட்டீங்க ரைட்டா...? டாக்டர்ர்ர்.... நீங்க ஜீனியஸ் டாக்டர்... எப்படி டாக்டர் அப்படியே சொல்றீங்க...? இந்த சிம்டெம்ஸ்லாம் எனக்கும் இருக்கு... ஐய்யோ டாக்டர் நீங்களும் கிரகணம் பிடிச்சிருந்த டைம்ல சாப்புட்டுட்டீங்களா...? இல்ல... உங்க வீட்டு 'பொங்கலை' முன்ன ஒரு தடவ நானும் சாப்ட்டிருக்கேன்...! Pulsar Thiyagu 😂 🤣
Checked
Fri, 02/13/2026 - 02:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed