3 months 1 week ago
ரகசியப்பொலிஸ் .........! 😂
3 months 1 week ago
2024, சனத்தொகை கணிப்பீட்டில் ஈழத்தமிழர்கள் நிலை..! 🔺வடமாகாணம்: 1.யாழ்ப்பாணம். தமிழர்கள். 2012, 98.9%~2024,98.6%. (.3% குறைவு) சிங்களவர்,2012,0.4% -2024,0.6% ( .2% அதிகரிப்பு) முஷ்லிம்:2012,0.4%- 2024,0,7% ( .3% அதிகரிப்பு) மலை. தமிழர்:2012,0.3%- 2024,0.1%. (.2% குறைவு) 2.கிளிநொச்சி. தமிழர்கள். 2012,97.3% - 2024,97.3% ( சமன்) சிங்களவர்,2012,1.2% - 2024,1.2% ( சமன்) முஷ்லிம்,2012,0.6% - 2024,0.9% (.3% அதிகரிப்பு) மலை. தமிழர். 2012,0.9% -2024,0.5% (.4% குறைவு) 3.மன்னார். தமிழர்கள். 2012,80.4% -2024,72.7%. (7.7% குறைவு) சிங்களவர்.2012,2.3% - 2024,0.5% (1.8% அதிகரிப்பு) முஷ்லிம்.2012,16.5% -2024,26.5%. (10% அதிகரிப்பு) மலை.தமிழர்.2012,0.7% - 2024,0.3% ( 0.4% குறைவு) 4.வவுனியா. தமிழர்கள், 2012,82.0% - 2024,78.4% ( 9.6% குறைவு) சிங்களவர்,2012,10.0% -2024,10.8% ( .8% அதிகரிப்பு) முஷ்லிம்,2012,6.8% - 2024,10.8% ( 4% அதிகரிப்பு) மலை. தமிழர்,2012,1.1% - 2024,0.9% ( 0.2% குறைவு) 5.முல்லைத்தீவு. தமிழர், 2012,85.8% - 2024, 88.1% ( 2.6% அதிகரிப்பு) சிங்களவர்,2012,9.7% - 2024, 9.1% (.6% குறைவு) முஷ்லிம், 2012,2.0% - 2024, 2.5% (.5% அதிகரிப்பு) மலை.தமிழர்,2012,2.5% -2024,0.2% ( 2.3% குறைவு) 🙌🏿வடமாகாணத்தில் 2012, கணக்கெடுப்புடன் 2024 ஒப்பீடு செய்தால்.. தமிழர் 20.2 வீதம் குறைவடைந்துள்ளது, சிங்களவர் 2.8, வீதம் அதிகரித்துள்ளது. முஷ்லிம்கள்,15.1வீதம் அதிகரித்துள்ளது. மலை.தமிழர்,3.5, வீதம் குறைவடைந்துள்ளது. 🔺கிழக்குமாகாணம்: 1.மட்டக்களப்பு. தமிழர்.2012, 72.3% - 2024,71.3% ( 1% குறைவு) சிங்களவர்,2012,1.3% -2024,1.2%. ( ,1% குறைவு) முஷ்லிம்,2012, 25.4% - 2024, 26.9% ( 1.5% அதிகரிப்பு) மலை. தமிழர்,2012,0.4% - 2024, 0.2% ( 0.2% குறைவு) 2.அம்பாறை. தமிழர்,2012, 17.3% - 2024, 16.9% ( 0.4% குறைவு) சிங்களவர்,2012,30.9% - 2024,37.1% ( 6.2% அதிகரிப்பு) முஷ்லிம்,2012,43.4% - 2024,45.6% ( 2.2% அதிகரிப்பு) மலை. தமிழர்,2012,0.1% - 2024, 0.1% ( சமன்) 3.திருகோணமலை. தமிழர், 2012, 30.7% - 2024, 28.9%. (1.8% குறைவு) சிங்களவர்,2012, 26.7% - 2024, 24.5% ( 2.2% குறைவு) முஷ்லிம்,2012,41.8% - 2024, 46.1% ( 4.4% அதிகரிப்பு) மலை. தமிழர்,2012, 0.3% - 2024, 0.2% (0.1% குறைவு) 🙌🏿கிழக்கு மாகாணத்தில் 2012, கணக்கெடுப்புடன் 2024, ஒப்பீடு செய்தால்.. தமிழர் 3.5, வீதம் குறைவு. சிங்களவர் 4.3, கூடியுள்ளது. முஷ்லிம்கள் 13,3, வீதம் கூடியுள்ளது. மலை தமிழர் 0.3, வீதம் குறைவு ♨️வடகிழக்கில் 2012,ஆண்டுடன் 2024, கணக்கெடுப்பை ஒப்பீடு செய்தால் தமிழர்கள் 23.4% வீதம் குறைவு. சிங்களவர் 7,1% வீதம் கூடியுள்ளனர். முஷ்லிம்கள் 28.3% வீதம் கூடியுள்ளனர். மலை தமிழர் 3.8% வீதம் குறைவு. வடகிழக்கு தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டியது 2012, ல் இருந்த தமிழர் தொகையைவிட 2024, ல் குறைந்தும், ஏனைய சிங்கள, முஷ்லிம் மக்கள் தொகை கூடியும் உள்ளது 12, வருடங்களில் ஏற்பட்ட மாற்றம். காரணங்கள் பல கூறலாம். இடப்பெயர்வு, பொருளாதார வறுமை, தொழில் இன்மை, இவைகளுடன் தமிழரின் பிறப்பு வீதம் ஏனைய சமூகத்துடன் ஒப்பிடும்போது குறைவடைந்து செல்கிறது என்பதும் உண்மை. -பா.அரியநேத்திரன். 01/11/2025
3 months 1 week ago
பனி மலர் · Venkatesan Vellore ·Sdtrsnpoeo0i809egio8,mtii u661t722h3470i56uh34:7m2l1ub5rico · சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்...! கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்.. கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள். பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல். இது ஒரு கல்லோ அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்... இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்... அந்த கல்லும் 80 டன்... அந்த சதுரக் கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி... ஒவ்வொரு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் மொத்த எடை 80 டன்.. இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்.. இது என்ன விந்தை...! அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..? நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்... பெரியகோவில் உயரம் 216 அடி... முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்.. இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு அமையும்...? குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும் புகை மண்டலமாகத்தான் இருக்கும்... ஆனால்... பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடிதான்... மேலும் ஒரு வியப்பு... இது எப்படி சாத்தியம்..?! இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது...! பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள் இணைக்கப்பட்டதை... “இலகு பிணைப்பு” என்கிறார்கள்... அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்.. எதற்காக ? நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பிணைப்பு... லூஸாகத்தான் இருக்கும்... அதன் மேல் ஆட்கள் உட்காரும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்... கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது... இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் .. லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று, அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி மிக பலமான இணைப்பை பெறுகின்றன... இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட, ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி.. அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசயம் இது...!!! எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்... சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்க்காது...!!! Voir la traduction
3 months 1 week ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 பழமொழி - remix பழசு: பல் போனா சொல் போச்சு புதுசு:‘cell’ போனா சொல் போச்சு😄" பழசு: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!! புதுசு: பேலன்ஸ் இருக்கும் போதே பேசிக்கொள்..😃" பழசு: இளங்கன்று பயமறியாது..!! புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது..😃" பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!! புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்😄" பழசு: நாய் வாலை நிமிர்த்த முடியாது..!! புதுசு: நெட்வொர்க்கை திருத்த முடியாது..😃" பழசு: குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..! புதுசு: கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..😃" பழசு: வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!! புதுசு: செல்போன் ஒண்ணு.. சிம்மு ரெண்டு.😃" பழசு: ஆழம் தெரியாமல் காலை விடாதே..!! புதுசு: கேமரா இல்லாமல் போனை வாங்காதே..😃" பழசு: தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்..!! புதுசு: போன எடுத்தவன், பொழுதுக்கும் நோண்டாமல் இருக்க மாட்டான்..😃" பழசு: பேராசை பெருநஷ்டம்..!! புதுசு: பாஸ்வேர்ட் மறந்தா பெருங்கஷ்டம்.. கொஞ்சம் சிரிங்க பா.... Voir la traduction......!
3 months 1 week ago
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை sachinthaOctober 30, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியின் தெற்கில் எழிற்சூழலில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பெருமாகடவைப் பிள்ளையாரின் விழிகள் நிலைக்கின்ற இடத்தில் பிணக்கைக்குளம் விரிந்து கிடக்கிறது. மாரி காலத்தில் இக்குளம் நீரால் நிரம்பி வழியும் இக்குளத்தைச் சுற்றியுள்ள வயல்களுக்கு போதிய நீரை அக்காலத்தில் இக்குளத்தின் வழியாகவே வழங்குவார்கள். இது தென்புறமாக சிறு நதி ஒன்றினூடாக கடலை அடைகின்றது. அந்த நதி தான் யாழ்ப்பாணத்தின் ஒரே ஆறு! எழிலாறு! வழுக்கி ஆறு. அகத்தியர் முனிவர் காவேரி நதியை கமண்டலத்திலே அடைத்து வைத்திருந்தார். விநாயகர் காக உருவில் பறந்து சென்று கமண்டலத்தை கவிழ்த்து விட காவேரி நதி பொங்கி பெருகிப் பாய்ந்தது. அதைப்போலத் தான் இந்த வழுக்கி ஆறும் விபீசணன் இலங்கையை ஆண்ட காலத்திலே பெருமாலியன் என்ற ஒரு அரக்கன் வழுக்கி ஆற்றை மறித்து யாழ்ப்பாணத்தை வெள்ளத்துக்குள் ஆழ்த்த நினைத்தான். அப்போது பிள்ளையார் வந்து அவனை கொன்று வழுக்கி ஆற்றினைப் பாயவிட்டார் என்பது புராணக்கதை. யாழ்ப்பாண பெரும் வரலாற்றோடு இணைந்த இவ் ஆற்றை கந்தரோடை அரசர்கள் வெட்டிய கடல்கால் என்றும் கூறுவார்கள். பிணக்கை குளத்தை பெருமாலியன் மறித்த போது, நீர் தேங்கியது. அக்குளத்துக்கு பக்கத்திலேயே பிள்ளையாரும் காவலாக இருந்து விட்டார் அவர்தான் பெருமாகடவைப் பிள்ளையார். உண்மை பொய் எதுவோ பிணக்கைக் குளத்தில் மழைக்காலத்தில் ஊர் வெள்ளம் எல்லாம் நிறைகின்றது. அதனால் மழைக்காலத்தில் வழுக்கி ஆறு பொங்கிப் பெருகி வழிகின்றது. ஆனி, ஆடி மாதத்தில் மழை குறைவு என்பதால் வழுக்கியாறு வறண்டு காணப்படுகின்றது. வழுக்கி ஆற்றுப் படுகையில் புட்களும், முட்செடிகளும் பரவிக் கிடக்கின்றன. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இந்த ஆற்றைப் பார்க்க வேண்டும். வெள்ளம் கரை புரண்டு ஓடும். வெள்ளத்துக்கு மேலால் தலையை தூக்கி படி பயிர்கள் நிற்கும். வழுக்கி ஆற்றின் இருகரைகளிலும் நீர் இறைப்புமேடைகள் காணப்படுகின்றன. ஆற்றில் நீர் பாயும் போது வயல்களில் காய்கறிப் பயிர்கள் பயிரிட்டால் நீரைக் குறைத்துப் பாய்ச்சுவார்கள். நீர் இறைப்பு மேடைகளைப் போலவே ஆற்றின் படுகையில் குறுக்கு அணைகள் கதவுடன் காணப்படுகின்றன. பெருமாகடவைப் பிள்ளையார் கோயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் பிணக்கைக் குளம் காணப்படுகின்றது அக்குளத்தின் தென்கிழக்கு மூலையில் தான் வழுக்கி ஆறு பிணக்கைக் குளத்தை விட்டு வெளியேறுகின்றது. அவ் ஆற்றுவரப்பில் நடந்து சென்றால் வழுக்கியாற்றின் போக்கில் உப்புக்குளம் குறுக்கிடும். வழுக்கி ஆறு போகின்ற பாதையில் உள்ள பல குளங்களை இணைத்துக் கொண்டே செல்கின்றது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றால், ஆற்றுக்குக் குறுக்கே ஒரு வீதி செல்கின்றது. அதுதான் கந்தரோடை- மாசியப்பட்டி வீதி. அதில் கந்தரோடை குளமும் நான்கு கோயில்களும் உள்ளன. அதாவது, வழுக்கியாற்றின் இடது பக்கத்தில் பிள்ளையார், மீனாட்சி, நாகம்மாள், கண்ணகி ஆகிய தெய்வங்களின் கோயில்களும், குளம் மற்றும் வயலும் உள்ளது. இவ்வாறு அளவெட்டி- கந்தரோடையை கடந்தால் சிறு வாய்க்கால் ஒன்று வழுக்கி ஆற்றுடன் இணைகின்றது. அந்த இடத்தை தாண்டிச் சென்றால். சங்குவேலி, சண்டிலிப்பாய் ,கட்டுடை அதில் வழுக்கை ஆற்றின் பாதையில் குறுக்கிடும் பெரிய மதகு உள்ளது. இதனை ஐந்துகண் மதகு என்று கூறுவார்கள். இதில் 5 வாசல்கள் உள்ளன. இதனால் வெள்ளமானது வேகமாக பாயக்கூடிய வகையில் காணப்படுகின்றது. அதற்கு முன்னால் சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயமும் உள்ளது. அளவெட்டி – கட்டுடை வரை வயல்களும் கோயில்களும் காணப்படும். கட்டுடைக்கு அப்பால் வயல்களும், சுடலைகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் மூலம் இறைவனை மறக்காமல் வாழ்ந்து இறுதியில் மயானத்தை அடைந்தால் பேரின்ப கடலை ஈற்றில் சேரலாம் என்பது புலப்படும். இவ்வாறே சென்றால் வழுக்கி ஆற்றின் போக்கில் சில மாறுதல்கள் புலப்படும். வழுக்கி ஆற்றின் படுகை இரு மடங்காக அகலிக்கின்றது. அத்தோடு ஆற்றின் இரு மருங்கும் தென்னந் தோட்டங்களும் காணப்படும். இவ்வாறு கட்டுடையைத் தாண்டி நவாலியை அடையலாம். நவாலியைத் தாண்டிச் சென்றால் அராலிப் பாலத்துடன் கிட்டத்தட்ட 16 கிலோமீற்றர் தொலைவில் கடலோடு இணைந்து வழுக்கியாறு தனது நீண்ட பிரயாணத்தை முடிக்கின்றது. யாழ்ப்பாண மக்களின் நீர் வளத்தில் பிரதான ஒரு இடத்தை வழுக்கியாறு பெறுகின்றது. விலங்குகளுக்கு பல சமயங்களில் தாகம்தீர்க்கும் வகையில் செயற்பட்டுள்ளது. அத்தோடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சாணியாகவும் இருக்கின்றது. இவ் ஆறு பருவகால மழைவீழ்ச்சி குறைவினாலும், காலநிலை மாற்றங்களினாலும் நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. வெயில் காலத்தில் ஆற்றுப்படுகை முழுமையாக வரண்டு விடுகின்றது. உவர்நீர் ஊடுறுவல் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், சனத்தொகை அதிகரிப்பு, கழிவுகளைக் கொட்டுதல் போன்றவற்றால் இவ் ஆறு மாசடைந்து வருகின்றது. சமையல் கழிவுகளை மக்கள் கொட்டுவதனால் அவை ஆற்றோடு கலந்து ஆற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. இவ்வாறாக பலவகையில் இவ் ஆறானது மாறுபடுகின்றது. யாழ்ப்பாணத்தின் உயிர்நாடியில் ஒன்றான வழுக்கி ஆற்றினை மீள மாற்றியமைக்கும் வகையில் கழிவு மறுசுழற்சி ஊக்குவிப்பு, நீர்மட்டம் மற்றும் நீர்த்தரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்ற ஊக்குவிப்பு செயற்பாடுகள் மூலம் இதனைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் எமது தொன்மங்களை ஒப்படைக்கலாம். பானுஷா நிமல்… ஊடகக் கற்கைகள் துறை, யாழ் பல்கலைக்கழகம் https://www.thinakaran.lk/2025/10/30/featured/161276/மறந்து-போனோமா-வழுக்கி-ஆற/
3 months 1 week ago
James Vasanthan · பெண்கள் க்ரிக்கெட் என்றால் நமக்கு (ஆண்களுக்கு) கொஞ்சம் இளக்காரம்தான். அது மந்தமாக இருக்கும் என்கிற பொதுவான கருத்து. இதை எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் விளையாடுகிற திடல்களில் இருக்கிற சொற்பமான கூட்டத்தைப் பார்த்துதான். அது ஒருபுறம் இருக்கட்டும். நேற்று இரவு நடந்த Women's World Cup Semifinals போட்டியை மட்டும் ஒரே ஒருமுறை பார்த்துவிடுங்கள். India-Australia போட்டி. பெண்கள் க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இதுவரை நடந்தவை 12. ஆஸ்ட்ரேலியா வென்றது 7 முறை. தற்போதைய champion அவர்கள்தான். முரட்டுத்தனமான அணி. அந்நாட்டு ஆண்கள் அணி போலவே மேட்டிமை மனப்பான்மையும், செருக்கும் இயல்பாகவே கொண்டவர்கள். அவர்கள் உடல்மொழியே சொல்லும் "எங்களை மிஞ்ச ஆட்கள் இல்லை" என்று. நேற்று அதை விளையாட்டிலும் நிரூபித்தார்கள். இந்திய பந்துவீச்சாளர்களை திடலின் எல்லா திசைகளிலும் ஓடவிட்டுத் தெறிக்கவிட்டு 338 ரன்கள் குவித்தார்கள். பலரைப்போலவே நானும் இது முடிந்த கதை என்றுதான் நினைத்து Paris Masters Tennis பார்க்கப் போய்விட்டேன். நிச்சயம் நம் அணி மகளிரும் கொஞ்சம் ஆடித்தான் போயிருப்பர் உள்மனதில். ஆனால், பெண்களின் மனஉறுதி நேற்று இன்னொரு முறை நிரூபணமானது. தொடக்க ஆட்டக்காரரில் பொதுவாக புயலாக அசத்தும் ஸ்ம்ருதி நேற்று 24-ல் ஆட்டமிழக்க, ஷஃபாலியும் 10-ல் வெளியேற ஹர்ப்ரீத் (தலைவி) வந்து பொறுப்புடன் மிரட்டலாக விளையாடி 84 சேர்க்க, மறுமுனையில் இந்தியாவின் ரட்சகியாக வந்த ஜெமீமா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் குவித்து ஒரு புதிய சாதனையையும் படைத்து, வெற்றியையும் பெற்றுத் தந்திருக்கிறார். Breaking News-ல் இதைப் பார்த்து பின்பு Highlights பார்த்துப் பரவசமடைந்தேன். ஆஸ்ட்ரேலிய batters அடிக்கும்போது இந்தத் திறமையை நாம் எதிர்கொள்ள முடியாது என்று நினைத்திருந்தேன் - நம் வீராங்கனைகள் ஆடியதைக் காணும் வரை. நம் பிள்ளைகள் ஆடும்போது அவர்கள் முகத்தில் இருந்த வெறியும் வைராக்கியமும் ஒரு புது எழுச்சியை நம் உணர்வுகளில் கொண்டுவந்ததை உணரமுடிந்தது. இறுதி ஷாட்டில் வெற்றியைப் பெற்றவுடன் ஜெமிமா ஓடிவந்து எதிர்முனையில் தனக்கு ஆதரவாக விளையாடிய கவுரை தூக்கிக் கொண்டாடி, பின் தரையில் முகங்குப்புற முழங்காலிட்டு குலுங்கி அழுது தன் உணர்வுகளைக் கொட்டியது நம்மை கண்கலங்க வைத்துவிட்டது. இதற்கு மேல் நான் சொல்லமாட்டேன். நேரத்தை செலவழித்து எப்படி அந்த இமாலய 338-ஐ எளிதாகக் கடந்து இந்த சாதனை வெற்றியை இவர்கள் ஈட்டினர் என்பதை நீங்கள் பார்த்தேயாக வேண்டும். இதன் தாக்கம் இன்னும் பலநாட்கள் நம்மை உத்வேகப்படுத்தும்.......! Voir la traduction
3 months 1 week ago
தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி ! 01 Nov, 2025 | 01:49 PM தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சித் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டதால், எதிர்க்கட்சியை நசுக்கும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema) கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். தலைநகர் டார் எஸ் சலாமில் சுமார் 350 பேரும், மவான்ஸா (Mwanza) நகரில் 200-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டதாகவும், பிற பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சேர்த்து, மொத்த பலி எண்ணிக்கை சுமார் 700 ஆக இருக்கலாம் என்றும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அவர்கள் இந்த உயிரிழப்பு விவரங்களை வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் மூலமாகக் கட்சி உறுப்பினர்களின் வலையமைப்பு மூலம் சேகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாகவும், மொத்த எண்ணிக்கை 700 முதல் 800 வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகமும் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து கவலை தெரிவித்ததுடன், பாதுகாப்புப் படைகள் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கிடைத்த தகவல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னரே பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டனர். இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையைக் கட்டுப்படுத்த நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை குறித்த தகவல்களைச் சரிபார்க்க முடியாத அளவிற்கு நாடு முழுவதும் இணையத்தள சேவை துண்டிக்கப்பட்டிருப்பதும் தகவல் சரிபார்ப்பை கடினமாக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/229225
3 months 1 week ago
சுலபமாய் செய்யக்கூடிய சுவையான பிரியாணி ........! 🙂
3 months 1 week ago
வெற்றிலை துப்ப முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு adminNovember 1, 2025 யாழ்ப்பாணத்தில் கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த வேளை தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் அச்செழு பகுதியை சேர்ந்த மேசன் தொழிலாளியான சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை வெளியில் மழை பெய்து கொண்டிருந்தமையால் , மேல் மாடியில் இருந்து கீழே வெற்றிலையை துப்ப முயன்ற வேளை கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். https://globaltamilnews.net/2025/222148/
3 months 1 week ago
வஞ்சிசிட்டு நெஞ்சை தொட்டு ......... ஜெய்சங்கர் & பிரமீளா ........! 😍
3 months 1 week ago
வணக்கம் வாத்தியார் . .......! பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பிஜாய் ஆண் : அம்மா என் அம்மா நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா ஓ அம்மா என் அம்மா என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே பேசிட கூடுமோ தெய்வம் இங்கே ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா ஆண் : விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே உனை தாண்டி உலகம் ஏதிங்கே ஆண் : நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன் தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்.. ஆண் : {விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே} (3) தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா.........! --- ஒருமுறை என்னை பாரம்மா ---
3 months 1 week ago
3 months 1 week ago
மாவீரர் வாரம் வருகிறதாம் இந்தக்கதையை நம்பட்டாம். யார் திட்டமிட்டு செய்கிறார்களோ, அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்கள் எதிர்பார்க்கிறார்கள்.
3 months 1 week ago
இங்கிலாந்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் ஆண்ட்ரூவின் வெளியிடப்பட்ட மின்னஞ்சல்! இங்கிலாந்து மன்னரின் சகோதரர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தி உயிரிழந்த வர்ஜீனியா கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஆண்ட்ரூ மீது “விசாரணை” நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து வரும் நிலையில் இது குறித்த கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. குழந்தை பாலியல் குற்றவாளி நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் “நேரில் சந்திப்பது நல்லது” என்று கூறி ஆண்ட்ரு அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த குற்றத்துடன் தொடர்புடைய குற்றவாளியான சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டீன், கடந்த 2009 ஆண்டு ஜூலை விடுவிக்கப்பட்டார். அந்த மாத இறுதியில் இங்கிலாந்தின் அமெரிக்க வங்கியாளர் ஜெஸ் ஸ்டாலியைச் சந்திக்க வேண்டும் என்று பரிந்துரைத்து 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று அப்போதைய இளவரசருக்கு அவர் மின்னஞ்சல் அனுப்பினார். இதேவேளை, அந்த திகதியில் தான் இங்கிலாந்தை விட்டு வெளியேறுவதாகவும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நியூயார்க்கிற்கு “வர” முயற்சிப்பதாகவும் ஆண்ட்ரூ பதிலளித்திருந்தார். இதில் கோடைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரை நேரில் சந்திப்பது நல்லது என்றும் அவர் ஆண்ட்ரு அந்த மின்னஞ்சலில் கூறியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அவர் குறித்த குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிவித்து அவரை மாளிகையை விட்டு வெளியேற்றியதுடன் அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வர்ஜீனியா கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஆண்ட்ருவை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1451719
3 months 1 week ago
கடைசி வரையும் உங்கள் அனுபவத்தைச் சொல்லேலையே. 😁
3 months 1 week ago
Published By: Vishnu 01 Nov, 2025 | 02:27 AM பின்தங்கிய சமூகங்களுக்கும் முக்கிய சமூக, பொருளாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 90 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சு கைச்சாத்திட்டுள்ளது. பின்தங்கிய பிரதேசங்களுக்கான சுமார் 500 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி, காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்றவாறானதும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு நேயமான வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றுக்கு இந்தக் கடன் நிதி பயன்படுத்தப்படும். அத்தோடு இந்நிதி தேசிய ரீதியில் சுமார் 21 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகளின் புனரமைப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீற்றர் வீதிகளின் பராமரிப்பு என்பவற்றுக்கும் உதவும் என நிதியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேற்படி கடன் உதவிக்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கை;கான அதன் பணிப்பாளர் டக்காஃபுமி கடானோவும் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229201
3 months 1 week ago
பட மூலாதாரம், Getty Images 31 அக்டோபர் 2025 பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும். அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம். ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும். பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது. ஆனால், இந்த ஈசல்கள் எப்போதும் மழை நேரத்தில் மட்டுமே வருவது ஏன்? அவற்றின் மொத்த ஆயுளே ஒருநாள்தான் என்பது உண்மையா? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா? அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பூச்சியியல் ஆய்வாளர்களிடம் பேசினோம். பட மூலாதாரம், Getty Images ஈசல்கள் எங்கிருந்து வருகின்றன? ஈசல் என்பது ஒரு தனிப்பட்ட பூச்சியினம் கிடையாது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உண்மையில், இறக்கைகள் முளைத்த கரையான்களே ஈசல்கள். அவ்வளவு ஏன், கரையான்களின் அடுத்த சந்ததிகள் பிறப்பதற்கே ஈசல்கள்தான் அடிப்படைக் காரணமாகத் திகழ்கின்றன. கரையான்கள், எறும்புகளைப் போலவே ஒரு சமூகமாக வாழும் பண்புடையவை. ஒரு புற்றில் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை என்ற எண்ணிக்கையில் கரையான்கள் வாழக்கூடும். தேனீக்கள், எறும்புகள் போன்ற கூட்டு சமுதாய வாழ்க்கை முறையைக் கொண்ட பிற பூச்சிகளைப் போலவே கரையான்களிலும் ஒரு புற்றில் ராணி, ராஜா, வேலைக்கார கரையான்கள், காவல்கார கரையான்கள் ஆகிய நான்கு பிரிவுகளாக அவை வாழ்கின்றன. அதில், அந்தப் புற்று உருப்பெறக் காரணமாக இருக்கும் ராணி கரையான் நிமிடத்திற்கு 25 முட்டைகள் முதல் நாளொன்றுக்குச் சில ஆயிரம் முட்டைகள் வரை இடுகின்றன. படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன் தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக வாழ்வுமுறை கொண்ட பிற பூச்சிகளில் இல்லாத ஒரு தனித்துவம் கரையான்களுக்கு உள்ளது. "பொதுவாக, இனப்பெருக்க செயல்பாடுகள் முடிந்தவுடன் ஆண் எறும்பு அல்லது ஆண் தேனீ இறந்துவிடும். ஆனால், கரையான்களைப் பொறுத்தவரை ராணி, ராஜா இரண்டும் சேர்ந்துதான் ஒரு புற்றையே உருவாக்குகின்றன" என்றார், பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன். மேலும், "ராணி கரையானின் உடலில் விந்தணுவை சேகரித்து வைக்கும் தன்மை இல்லை என்பதால், ராஜா கரையான் அதனுடனே இருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்" என்றும் விளக்கினார். அதுமட்டுமின்றி, ஒரு புற்றில் முதன்மையாக ராணி, ராஜா இருப்பதைப் போலவே, இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் சில ஆண் மற்றும் பெண் கரையான்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். "ஒருவேளை புற்றின் முக்கிய அங்கமாக இருக்கும் ராஜாவோ, ராணியோ இறந்துவிட்டால், அவர்களின் இடத்தை நிரப்பிக் கொள்வது இந்த இரண்டாம் நிலை ஆண், பெண் கரையான்களின் வேலையாக இருக்கும். அதன்மூலம், ஒரு புற்று பல்லாண்டுக் காலத்திற்குப் பற்பல சந்ததிகளைக் கொண்டு செழுமை பெற அவற்றின் சமூகக் கட்டமைப்பு உதவுகிறது." பல கரையான் புற்றுகள் நன்கு உயர்ந்து நிற்பதைப் பல இடத்தில் பார்த்திருப்போம். இனி அதைப் பார்க்கையில், அந்தப் புற்று அவ்வளவு அதிகமான சந்ததிகளைப் பார்த்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட சுவாரஸ்யமான கரையான் புற்று உருப்பெறுவதில் முக்கியப் பங்கு வகிப்பதே மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வீடுகளை மொய்க்கும் ஈசல்கள்தான். பட மூலாதாரம், Getty Images ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? முனைவர் பிரியதர்ஷனின் கூற்றுப்படி, ஒரு புற்றில் அதன் தோற்றம் மற்றும் நீட்சிக்குக் காரணமாக இருக்கும் ராணி, ராஜா கரையான்கள் மட்டுமின்றி, மேலும் பல ஆண், பெண் கரையான்கள் இனப்பெருக்க திறனுடன் இருக்கும். அவை, "மழைக் காலத்தின்போது வெளியேறி வந்து உயரப் பறந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அப்படி இறக்கைகளுடன் புற்றுகளில் இருந்து வெளியேறி வரும் கரையான்களையே ஈசல்கள் என அழைக்கிறோம்," என்று விவரித்தார் அவர். இதுகுறித்து விரிவாகப் பேசிய பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா, "இனப்பெருக்கம் செய்து புதிய புற்றுகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஈசல்கள் தாங்கள் ஏற்கெனவே வாழ்ந்து வந்த புற்றுகளை விட்டு வெளியே வருகின்றன," என்றவர், அவை அதற்கு உகந்த காலமாக மழைக் காலத்தை தேர்வு செய்வது ஏன் என்பது குறித்தும் விளக்கினார். மழைக்காலம் மிகவும் ஈரப்பதம் நிறைந்திருக்கும். ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் கலவை அவற்றுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதாகக் கூறுகிறார் சஹானாஶ்ரீ. மழைக்காலம் ஈசல்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலான உயிரினங்களின் இனப்பெருக்க காலமாகவும் இருக்கிறது. மழையின்போது அதிகளவில் உணவு கிடைப்பதும் அதற்கான ஒரு காரணமாக இருக்கிறது. இவற்றோடு ஈசல்களைப் பொறுத்தவரை, "மழைக்குப் பிறகு நில அமைப்பு ஈரப்பதம் கொண்டு, மண் நிறைவுற்று இருக்கும். அதன் விளைவாக மண் மென்மையான தன்மையில் இருப்பதால், புதிதாக இணைந்த கரையான் ஜோடிகள் துளையிட்டுப் புதிய புற்றைக் கட்டுவது எளிதாகிறது," என்று விவரித்தார் சஹானாஸ்ரீ. அவரிடம் ஈசல்களின் ஆயுள் ஒருநாள்தான் என்று கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அது உண்மையில்லை" என்று தெரிவித்தார். "பொதுவாக பல ஆயிரம் ஜோடிகள் புற்றை விட்டு இனப்பெருக்கம் செய்யக் கிளம்பினாலும், இறப்பு விகிதம் அதிகம் என்பதால் அதில் குறைந்த அளவிலானவையே உயிர் பிழைத்து, புற்று அமைக்கின்றன. எனவே பல நூறு ஈசல்கள் விரைவில் மடிவதைப் பார்த்ததன் அடிப்படையில் இந்தக் கட்டுக்கதை உருவாகியிருக்கலாம்." படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா ஈசல்களை மக்கள் உணவாகச் சாப்பிடலாமா? புற்றை விட்டு வெளியே வரும் ஈசல்களின் இறப்பு விகிதம் அதிகளவில் இருப்பதற்கு, பறவைகள், வேட்டையாடிப் பூச்சிகள், தவளை போன்ற வேட்டையாடி உயிரினங்கள் பலவும் காரணமாக இருக்கின்றன. அதேவேளையில் அவற்றின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு மனிதர்களும் ஒரு காரணம் என்கிறார் பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன். இந்தியாவின் பல பகுதிகளில் ஈசல்களை உணவாகக் கொள்ளும் பழக்கம் பல்வேறு கலாசாரங்களில் இருப்பதாகக் கூறுகிறார் சஹானாஸ்ரீ. "மழை நேரத்தில் ஈசல்கள் அதிக எண்ணிக்கையில் வெளியே வரும்போது அவற்றை உணவுக்காக கிராமப்புறங்களில் மக்கள் சேகரிப்பார்கள். சில இடங்களில், அவற்றை உலர்த்தி, வறுத்து கொள்ளுப் பருப்பு போன்ற தானியங்களுடன் கலந்து பயன்படுத்துவது உண்டு." ஈசல்கள் ஒரு காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த, சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டது எனக் கூறும் சஹானா, "இது கிராமப்புற உணவு மரபுகளுக்கும் நிலையான புரத மூலங்களுக்கும் இடையிலுள்ள ஆழமான தொடர்பைப் பிரதிபலிப்பதாக" குறிப்பிட்டார். ஈசல்களை உணவாகச் சாப்பிடுவது நல்லதா, அவை உண்மையாகவே புரதம் நிறைந்த உணவுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்காவிடம் கேட்டபோது, "அவற்றை உணவாக உட்கொள்ளும் பழக்கம் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் உள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றைச் சாப்பிடுவது போலத்தான் இவையும். எனவே, ஈசல்களை சுகாதாரமான முறையில் உட்கொள்வதால் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அதோடு அவை புரதம் மிக்க உணவு எனச் சொல்லப்பட்டாலும், அதுகுறித்த அறிவியல்பூர்வ ஆய்வுகள் இந்தியாவில் இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை," என்று தெரிவித்தார். இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களில் இன்றளவும் ஈசல்களை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y938124ylo
3 months 1 week ago
குறித்த ஒரு மதத்தின் பெயரால் நான் கூட அவரை ஒரு குழுமமாக பார்த்துள்ளேன், இது எமது பார்வை தவறு, ஒரு இரண்டு வார காலத்திற்கு முன்னர் எனது வங்கிக்கு சென்றிருந்தேன், வங்கியில் எனது கணக்கின் பெயர் மாற்றத்திற்காக. அங்கு புதிதாக ஒரு இளைஞ்சருக்கு அந்த செயற்பாட்டை கொடுத்திருந்தனர், அவருக்கு பயிற்சியாளர் என்பதால் சில கட்டுப்பாடுகள் காணப்பட்டதால் ஒரு தாடி வைத்த இந்திய தோற்றம் உள்ள 🤣 ஒருவரை அணுகினார், அவருக்கு அந்த நடைமுறை பற்றிய புரிதல் இல்லாமல்; வர்த்தக ஒருங்கிணைப்பு அமைப்பிடம் பேசினீர்களா என கேட்டார் (அந்த அமைப்பினால் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்டாயிற்று, ஆனால் வங்கிக்கணக்கில் மாற்றப்படவில்லை) அதனை கூறிய போது அது புரியாமல் அந்த இளைஞ்சரிடம் கூறினார் " இந்த மனிதர்களை நம்பாதே, பின்னர் நீதான் சிக்கலில் மாட்டிவிடுவாய் என்றார்", அவர் கூறியது என்னை பாதித்தது பின்னர் வேறு வங்கியில் கணக்கினை ஆரம்பித்துள்ளேன்.
3 months 1 week ago
அண்ணை, குடும்ப கட்டுப்பாடு திட்டமிட்டமுறையில் பகிரங்கமாக வெளியே தெரியாமல் நடைபெறுவதாக வாசித்த நினைவு உள்ளது.
3 months 1 week ago
நன்றி! இது ஒரு பொழுதுபோக்கான விடயம் சீரியசாக பார்ப்பதற்கு எதுவும் இல்லை, அதே போல உங்கள் கருத்துக்களையும் தாராளமாக கூறுங்கள்.
Checked
Thu, 02/12/2026 - 20:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed