புதிய பதிவுகள்2

வாழைப்பூ வடை

2 months 1 week ago
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தின் தென் பகுதிகளில் சில வாழைத் தோட்டங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன், அண்ணா. கலிஃபோர்னியாவின் தென் பகுதிகளிலும் வாழை நன்றாகவே வருகின்றது. என்னுடைய வீட்டில் வாழைகள் குட்டிகளும், குலைகளுமாக வருடம் முழுவதும் நிற்கின்றன. ஆனால் இங்கு கலிஃபோர்னியாவில் வாழைகளை தோட்டங்களாக நான் பார்த்ததில்லை. அமெரிக்காவின் வாழைத் தோட்டம் தான் தென் அமெரிக்கா. அமெரிக்க நிறுவனங்கள் தென் அமெரிக்க நாடுகளில் காடுகளை எரித்து வாழைத் தோட்டங்களை அமைத்து, அந்த நாடுகளைச் சூறையாடினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. உலகில் வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுபவர்கள் ஜேர்மனியர்களே என்றும் ஞாபகம். அமெரிக்க நிறுவனங்கள் தென் அமெரிக்காவை எரித்து எடுத்த வாழைப்பழங்களை ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்தார்கள்................... First banana, Second banana (முதல் போக வாழைப்பழம், இரண்டாம் போக வாழைப்பழம்) என்னும் குறியீடும், இவை ஒரு வகையான தர அளவீடுகள், இங்கிருந்தே வந்தன. காட்டை எரித்தவுடன் செய்யப்படும் முதல் போகத்தில் விளையும் வாழைப்பழங்கள் பெரிதாகவும், அடுத்த அடுத்த போகங்களில் சிறிதாகவும் ஆகும் என்று சொல்லப்படுகின்றது. இங்கு தொழில்முறை விளையாட்டு வீரர்களை இந்த குறியீட்டால் குறிப்பிடுவார்கள். மிகச் சிறந்த வீரர்கள் - First banana, அடுத்த நிலை வீரர்கள் - Second banana ,....................

வாழைப்பூ வடை

2 months 1 week ago
மிக்க நன்றி அல்வாயன். சில இன்றைய செய்திகள் அல்லது நிகழ்வுகள் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்துவிடுகின்றன, அல்வாயன். அப்படியே மனம் போன போக்கில் அலைந்து அலைந்து எழுதுகின்றேன் போல.................... அவனின் முடிவு பெரும் துயரமே..........

வாழைப்பூ வடை

2 months 1 week ago
இது எங்கள் தமிழ் ஆட்களிடம் தனித்துவமாக இருக்கும் கிரகிப்புக் குறைபாடோ தெரியவில்லை. மருத்துவர்கள் "வாழைத் தண்டிலும் பூவிலும் நிறைய நார்த்தன்மை இருக்கிறது, எனவே கிளைசீமிக் இண்டெக்ஸ்" குறைவு, அதனால் சாப்பிட்டாலும் சுகர் ஏறாது" என்று எழுதினால், வாசிப்போர் "வாழைத்தண்டு, வாழைப்பூ சுகர் வருத்தத்தைக் குணப் படுத்தும் மருந்து" என்று பெருப்பித்து விளங்கிக் கொள்கிறார்கள்! சுகர் வருத்தத்திற்கான மருந்து என்பது இன்சுலின் சுரப்பையோ அல்லது சுரக்கும் இன்சுலின் தொழில்பாட்டையோ அதிகரிக்கும் வேலையைச் செய்தால் மட்டுமே அது சுகர் வருத்தத்திற்கான மருந்து. தற்போதைக்கு மெற்போமின் போன்ற ஆங்கில மருந்துகள் மட்டும் தான் இந்த வேலையைச் செய்கின்றன. வேறெந்த மந்திர மாயமும் நாட்டு வைத்தியமும் இந்த வேலையைச் செய்வதாக ஆதாரங்கள் இல்லை! இந்த கிரகிப்புக் குறைபாட்டை வேறு பல வடிவங்களிலும் காண்கிறேன். அண்மையில் ஒரு நண்பர் தான் வொட்கா குடிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். "நீங்கள் அல்கஹோல் குடிப்பதில்லையே, இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கிறீர்களா?" என்று கேட்ட போது "வொட்கா குடித்தால் இரத்த சுகர் ஏறாது என்பதால் குடிக்கிறேன்" என்றார்😂. நடந்தது என்னவென்றால், "உடலில் சுகரை ஏற்றாமல் எந்த மதுபானத்தைக் குடிக்கலாம் டொக்ரர்?" என்று எங்கள் தமிழ் நோயாளிகள் கேட்கும் போது சில டொக்ரர் மார் "வொட்காவில் சுகர் இல்லை, எனவே கொஞ்சம் குடிக்கலாம்" என்று பதில் சொல்கிறார்கள். இதனைத் தான் "வொட்கா குடித்தால் சுகர் ஏறாது" என சிலர் விளங்கிக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது.

வாழைப்பூ வடை

2 months 1 week ago
அண்ணா, ஏறக்குறைய இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் அப்படியே நடந்தவை. அந்தக் கடைசி ஒரு வரி போலவே நண்பனின் வாழ்க்கை அவசரமாக, அநியாயமாக முடிந்தது. சொல்ல முடியாத சோகம் எந்த நாளில் நினைத்துப் பார்த்தாலும். நான் இதை கொஞ்சம் அழுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தே அப்படி ஒரு (கடைசி) வரியில் முடித்தேன். மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் கல்வித் தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து மட்டுமே பெறப்படவேண்டும் என்பதே இதன் சாரம், அண்ணா.

தமிழர்களின் படுகொலைகள் 1956-2008 (OCR PDF)

2 months 1 week ago
https://archive.org/download/B00HWW43EI_Massacres_of_Tamils_1956_2008/Massacres%20of%20Tamils%201956-2008%20%28OCR%20in%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%29.pdf இந்த புத்தகம் 1956 - 2008 க்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த படுகொலைகளை முதல்நிலைத் தகவல்களிலிருந்து சிரமமின்றி பதிவு செய்கிறது. புத்தகம் முழுமையடையவில்லை என்றாலும், சமகால வரலாற்றின் ஒரு பகுதியை எதிர்கால வரலாற்றாசிரியர்களுக்கு விட்டுவிடாமல் தொகுப்பாளர்கள் ஒரு பாராட்டத்தக்க வேலையைச் செய்துள்ளனர். "தமிழர்களின் படுகொலைகள், 1956 - 2008", 2009 இல் (ISBN 978-81-909737-0-0) வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்துடன் (NESOHR) இணைந்து சென்னையை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அறக்கட்டளை "மனிதம் பப்ளிஷர்ஸ்" வெளியிட்டது. இந்த புத்தகம் 52 வருட காலப்பகுதியில் 171 சம்பவங்களை பதிவு செய்துள்ளது மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. NESOHR ஆல் சேகரிக்கப்பட்ட தரவு, இந்த நேரத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களின் விமர்சனப் பதிவாக விளங்குகிறது. காப்புரிமை தகவல்: © 2019 மனித உரிமைகள் தொடர்பான வடக்கு-கிழக்கு செயலகம் (NESOHR). "தமிழர்களின் படுகொலைகள் 1956-2008" ("வேலை") என குறிப்பிடப்படாவிட்டால், கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன்-நான் கமர்ஷியல்-ஷேர்அலைக் 4.0 இன் படி நீங்கள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தவும் விநியோகிக்கவும் அந்தந்த ஆசிரியர்களால் உரிமம் பெற்றுள்ளது. விநியோகத்துடன் தொடர்புடைய ஏதேனும் அச்சிடுதல் செலவுகளை ஈடுசெய்யும் பணி; (2) வேலையைத் தழுவுவதற்கான உங்கள் உரிமை, 2008-க்கு முந்தைய வேலை தொடர்பான உள்ளடக்கத்தைச் சேர்ப்பதில் மட்டுமே உள்ளது; (3) 2008 க்குப் பிந்தைய உள்ளடக்கத்தைச் சேர்க்க நீங்கள் வேலையை மாற்றியமைக்கக்கூடாது; (4) படைப்பை மாற்றியமைப்பதற்கான உங்கள் உரிமையில், படைப்பை பிற மொழிகளில் மொழிபெயர்க்கும் உரிமையும் அடங்கும். CC-B-NCSA-4.0 உரிமத்தின் இயல்புநிலை விதிமுறைகளை நீங்கள் இங்கே குறிப்பிடலாம்: https://creativecommons.org/licenses/by-nc-sa/4.0

உரையாடலில் சேரவும்

2 months 1 week ago
Twitter / X உரையாடலில் சேரவும் 🟢 | https://nitter.net/_outisk 🟢 | http://nitter.net/senior_tamilan 🟢 | http://nitter.net/ampanai 🟡 | http://nitter.net/praneshnelson 🟡 | http://nitter.net/itskeeran 🟡 | http://nitter.net/Jeya2002 🟢 | http://nitter.net/TEGP__ 🟢 | http://nitter.net/tamilguerilla https://x.com/i/flow/signup Reddit உரையாடலில் சேரவும் https://www.reddit.com/r/Ilankai/wiki/index/eezham https://www.reddit.com/r/Eezham https://www.reddit.com/r/TamilNation YouTube https://youtube.com/@politicalmoothevi

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 months 1 week ago
மேல் முகநூல் பதிவில் போய் பின்னூட்டங்களைப் பார்த்தால், கொண்டையை மறைக்கவும் முடியாமல், வெளிக்காட்டவும் முடியாமல் சில யாழ்ப்பாணத் தமிழ் பதிவர்கள் படும் பாடு சிரிப்பை வரவழைக்கிறது😂. எதற்கும் யாழ் களத்தில் இருக்கும் "குறுந்" தமிழ் தேசியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்! அனேகமாகக் கள்ள மௌனம் தான்! NB: சுமந்திரனின் பெயரைக் கேட்டவுடன் தூக்கம் கலைக்கும் இரண்டு உறவுகளையும் கூட இங்காலப் பக்கம் காணவில்லை😎!

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

2 months 1 week ago
நீங்கள் குறிப்பிடும் "பின் கதவால் வெளியேறிய" சம்பவம் முகநூல் ஊடகங்களிலும், தமிழ் வின் எனும் ரொய்லெற் ஊடகத்திலும் வந்த விபரிப்புகள். உண்மையில் நூலகத்தின் உள்ளே விக்கியர், சுமந்திரன் உட்பட்டவர்களுடன் கமெரூனுடன் சந்திப்பு நடந்தது. அனந்திக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிருக்கவில்லை. எனவே வெளியே நின்று ("ஒரு பெண்ணாக இருந்த போதும்"😂- உங்கள் வரிகளில்) ஓடிப் போய் மகஜர் கொடுத்தார். நான் இணைத்த படத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் கடந்து போய் விட்டு முகனூல் அலட்டல்களை உண்மைச் செய்திகள் போல இன்னும் தூக்கித் திரிகிறீர்கள்! உங்களுடைய இந்த உண்மை காண விரும்பாத கண்மூடித் தனத்தைத் தான் சுட்டிக் காட்ட விளைகிறேன். உங்களுக்குப் பச்சை போட்டவருக்கும் இதே "கண் மூடிப் பாசம்" சுமந்திரன், சாணக்கியன் மேல் இருக்கிறது. இதை உங்கள் பாரதக் கருத்துகளை வாசிப்போர் அறிய வைப்பதே என் நோக்கம்! உங்களுக்கெல்லாம் ஆதாரம் தேடி நிரூபித்து கண் திறக்க வைக்கும் "நாய் வால் நிமிர்த்தும்" வேலைக்கு என்னிடம் நேரமில்லை😎!
Checked
Sun, 02/22/2026 - 16:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed