புதிய பதிவுகள்2

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

2 months 1 week ago
Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 12:03 - 0 - 56 மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார். கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து மணலுடன் வந்த ரிப்பர் உந்துருளியை நோக்கி நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் மறுபுறம் ஓடியுள்ளார். அந்த சமயத்தில் ரிப்பர் குறித்த நபரின் மீது மோதியத்தில் அவர் ரிப்பரின் பின்பக்க சில்லுக்குள் சிக்குண்டதோடு மணலும் அவரின் மீது கொட்டியத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகளிலும் மேலே குறிப்பிட்டவாறே பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது ரிப்பர் சட்டவிரோத மணலுடன் காணப்பட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். திருவையாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவத்தில் இறந்தவர் தகவல் தெரிவித்து வருபவர் என்பதுடன் 119 க்கும் தகவல் வழங்கியவர் எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது என்றும் இது திட்டமிடப்பட்ட கொலையாகவே காணப்படுகிறது என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். Tamilmirror Online || சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்

2 months 1 week ago
தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள் Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். இதில் விசேஷம் என்னவென்றால், ஷாருஜன் தனது முன்னாள் கழகமான பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கன்னி சதத்தைக் குவித்தாகும். தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர் மறைந்த டோனி க்ரெய்கினால் 'லிட்ல் சங்கா' (குட்டி சங்கா) என வருணிக்கப்பட்ட சண்முகநாதன் ஷாருஜன் இப்போது அந்தப் பெயரை மெய்ப்பிக்கும் வகையில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார். எஸ்எஸ்சி மைதானத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஷாருஜனுக்கு இந்தப் புனைப்பெயரை எதேச்சையாக டோனி க்ரெய்க் சூட்டினார். அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹயூஸ் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது எஸ்எஸ்சி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் ஷாருஜன் ஒரு துடுப்பைக் கொண்டு (Bat) விதவிதமான அடிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சி கமராவில் 5 வயது சிறுவனின் துடுப்பாட்ட பாணியும் காட்டப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில்தான் சிறுவன் ஷாருஜனின் துடுப்பாட்ட பாணியைப் பார்த்து இரசித்த டோனி க்ரெய்க் அவருக்கு 'லிட்ல் சங்கா' என்ற புனைப்பெயரை சூட்டினார். இப்போது தமிழ் யூனியன் கழகத்திற்காக தனது 19ஆவது வயதில் விளையாடிவரும் சண்முகநாதன் ஷாருஜன் சதம் குவித்து அதனை மெய்ப்பித்து வருகிறார். கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சன்முகநாதன் ஷாருஜன், வார இறுதியில் சிசிசி மைதானத்தில் நடைபெற்ற பதுரெலியா கழகத்துக்கு எதிரான பி குழு போட்டியில் மிகுந்த அனுபவசாலிபோல் 230 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார். இந்த வருடம் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய நடுநிலையான மைதானங்களில் நடைபெற்றுவருகின்றன. ஒரு கட்டத்தில் தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால், பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன், 3 சிறந்த இணைப்பாட்டங்கள் உட்பட கடைசி 5 விக்கெட்களில் மொத்தமாக 235 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். 51 ஓட்டங்களைப் பெற்ற சச்சித்த ஜயதிலக்கவுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களைப் பெற்ற தரிந்து ரத்நாயக்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 21 ஓட்டங்களைப் பெற்ற கலன பெரேராவுடன் 9ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் கொண்ட சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியை பலமான நிலையில் இட்ட ஷாருஜன் கடைசி வீரராக ஆட்டம் இழந்தார். இதன் பலனாக தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மிகத் துல்லியமாக பந்துவீசி 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19 ஓவர்களில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமிழ் யூனியன் தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. 240 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா கழகம் திங்கட்கிழமை (08) மாலை ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது. இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் முதல் இன்னிங்ஸுக்கான வெற்றிப் புள்ளிகளை தமிழ் யூனியன் பெற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/232873

வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்

2 months 1 week ago
18 வயது வரை இலவசக் கல்வி தருவது, தெருக் கூட்டுவது, கான் கழுவுவது, தண்ணீர், மின்சாரம் வினியோகிப்பது போன்ற விடயங்களோடு அரசாங்கங்கள் மக்கள் சமூக ஊடகங்களில் endless scroll செய்யாமலிருக்கக் காவலும் இருக்க வேண்டுமென்கிறீர்களா😂? எப்படி இதைச் செய்யலாம்? இலங்கையில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அல்கோரிதம் வழியாக சமூகவலை ஊடகங்கள் பரப்பும் முட்டாள் தனங்களைக் கட்டுப் படுத்த இயலாது. Information is your responsibility என்பதன் படி பாவனையாளர்களே தங்களை உசாராக வைத்துக் கொள்ள வேண்டியது தான் வழி. இந்தச் சுய பொறுப்பை, வேறு யாரிடமும் ஒப்படைத்து விட்டு endless scroll செய்து கொண்டிருக்க முடியாது என நினைக்கிறேன்.

வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

2 months 1 week ago
Janu / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:10 - 0 - 40 பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமனசிறி குணதிலக்க Tamilmirror Online || வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம்

2 months 1 week ago
மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு மறுப்பு Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:11 - 0 - 41 கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலை மறுத்துள்ளது. அந்தக் குட்டி இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர் கசுன் ஹேமந்தா தெரிவித்தார். காணாமல் போன ஊர்வன இலங்கையில் உள்ள ஒரே மஞ்சள் அனகொண்டா குட்டி என்று கூறினார். “தெஹிவளை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். கன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. தேடுதல் வேட்டை இன்னும் நடந்து வருகின்றன,” என்றும் அவர் கூறினார். அடைப்பின் பூட்டு சேதப்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். இருப்பினும், விசாரணைகளின் போது, பாம்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து தப்பியிருக்கலாம் என்பதைக் குறிக்கும் ஒரு பகுதியை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். “விலங்கு திருடப்பட்டதா அல்லது அது தானாகவே தப்பித்ததா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நடந்து வரும் காவல்துறை விசாரணை மற்றும் துறை அளவிலான விசாரணைகளில் இருந்து உறுதியான பதில் கிடைக்கும்” என்று ஹேமந்தா குறிப்பிட்டார். காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி, தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு செப்டம்பர் 12 ஆம் திகதி அன்று சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பாம்புக் குழுவில் ஒன்றாகும். மூன்று இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகள் அடங்கிய இந்தப் பாம்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பறிமுதல் செய்யப்பட்டு, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டது. அது காணாமல் போகும் வரை, அந்தக் குட்டி ஊர்வன பூங்காவின் காட்சிப்படுத்தப்படாத இடத்தில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படாத விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது என்றார். Tamilmirror Online || மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு மறுப்பு

கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

2 months 1 week ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார். மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தர். இருவரும்2011 டிசம்பர் 10 ஆம் திகதியன்கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (10) ஆஜரான முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்தார். Tamilmirror Online || கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப்

2 months 1 week ago
10 Dec, 2025 | 01:30 PM நாட்டின் சுமார் 12,000 கிலோமீட்டர் நீளமுள்ள வீதி வலையமைப்பு தொடர்பான தகவல்களை கூகுள் மெப் புதுப்பித்திருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, A மற்றும் B தரத்திலான பிரதான வீதிகள் தொடர்பான தகவல்களை இணைத்து Google Map அதன் பாதை வரைபடங்களை புதுப்பித்துள்ளது. வீதி மூடல்கள், பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் போன்ற 6 குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை தகவல்களுடன் இந்த புதிய பாதை வரைபட அம்சம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது, பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மீதப்படுத்தவும், எதிர்பாராத போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும் மிகப் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த கூகுள் மெப் நடைமுறைக்கான முன்னோட்டம் இடம்பெறும் என்றும் Google Map செயலியை பார்த்து பாதுகாப்பாக பயணித்தை தொடர முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப் | Virakesari.lk

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

2 months 1 week ago
இது தேர்தலில் தோற்று (சில சமயங்களில் தோற்றபின்னர் "பின் கதவால்" - அ+து தேசியப் பட்டியலில் உள்ளே வந்த) யோசப் பரராஜசிங்கம், கஜேந்திரன், சசிகலா ரவிராஜ், மாம்பழம் கட்சியின் தலைவர்போன்றோருக்கும் பொருந்தும் என்கிறீர்கள்😂?

களப் பணியாற்றியபோது உயிரிழந்த விமானப்படை, கடற்படை வீரர்களுக்கு யாழில் அஞ்சலி

2 months 1 week ago
10 Dec, 2025 | 06:09 PM நாட்டில் ஏற்பட்ட பேரிடரின்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் மரணமான விமானிக்கும், சுண்டிக்குளம் பகுதியில் முகத்துவாரம் வெட்டச் சென்ற நிலையில் உயிரிழந்த 5 கடற்படையினருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் பதாதை கட்டப்பட்டுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது கடந்த 30ஆம் திகதி ஹெலிகொப்டர் ஒன்று கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது. அதன்போது, விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய (வயது 41) என்பவர் உயிரிழந்தார். அதேவேளை சுண்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் கடமையில் ஈடுபட்டிருந்தபோது 5 கடற்படையினர் உயிரிழந்தனர். களப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ஆறு வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய ஸ்ரான்லி வீதியில் பதாகை கட்டப்பட்டுள்ளது. களப் பணியாற்றியபோது உயிரிழந்த விமானப்படை, கடற்படை வீரர்களுக்கு யாழில் அஞ்சலி | Virakesari.lk

கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

2 months 1 week ago
கயிறு தடக்கி கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு! Dec 10, 2025 - 02:36 PM 'நெடுந்தாரகை' பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (10) காலை 6.10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் 'நெடுந்தாரகை' பயணிகள் படகில் ஏறுவதற்கு பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவர் முயற்சித்துள்ளார். இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார். அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சியை மேற்கொண்டபோதும் அவரை உயிருடன் மீட்க முடியமல் போயுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15 ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmizsc9xb02ljo29n6cxw2gch

வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்க போகின்றீர்களா?; து.ரவிகரன் எம்பி!

2 months 1 week ago
அதிகரித்துள்ள சிங்களக் குடியேற்றங்களால் வவுனியா வடக்கிலிருந்து வெளியேறும் தமிழர்கள்; 23 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு. 10 Dec, 2025 | 07:07 PM வுனியா வடக்கில் தற்போது அதிகரித்துள்ள சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் காணி அபகரிப்பு நெருக்கடிகள் காரணமாக வவுனியா வடக்கிலிருந்து அதிகளவில் தமிழ் மக்கள் வெளியேறியுள்ளதாகவும், கிராமங்களில் மக்கள் இன்மையினால் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 23பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், மேலும் சில பாடசாலைகள் மூடப்படும் நிலையிலும் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே வவுனியா வடக்கில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் அபகரிப்புக்களைத் தடுக்குமாறும், தமிழ்மக்கள் தமது பூர்வீக நிலங்களில் வாழும் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். வவுனிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அதிக பாடசாலைகள் மூடப்பட்ட கல்விவலயமாக வவுனியா வடக்கு கல்வி வலயம் காணப்படுகின்றது. அந்தவகையில் வவுனியா கல்வி வலயத்தில் 23பாசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகளவில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு காரணமென்ன? அந்தக்காரணத்தினை அதிகாரிகளான நீங்கள் எம்மிடம் தெரிவித்தாலேயே எம்மாலும் அந்தப் பாரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வவுனியா வடக்கில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதால் எமது மக்கள் வெளியேறுகின்றனர். அத்தோடு பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன. இந்தக் காரணங்களினாலேயே வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இவ்வாறு பாடசாலைகள் அதிகளவில் மூடப்பட்டுள்ளது - என்றார். இந்நிலையில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் இதன்போது பதிலளிக்கையில், எம்மைப் பொறுத்தவரைக்கும் வளப்பற்றாக்குறை காரணமாக எந்தப்பாடசாலைகளும் மூடப்படவில்லை. மாணவர்கள் இல்லாமையினாலேயே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில் வவுனியா வடக்கு கல்விவலயத்தில் மூடப்பட்ட 23பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளை, ஆளுனரையும் அழைத்துச்சென்று பார்வையிட்டிருந்தோம். அந்தவகையில் அந்தப்பகுதிகளில் மக்கள் இல்லாமையினாலேயே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் தொகை குறைவடைவதால் மூடப்படுகின்ற நிலையிலும் இன்னும் சில பாடசாலைகள் காணப்படுகின்றன - என்றார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு என்பது மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசமாகும். இங்கு சிங்கள குடியேற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள், காணிகள் அபகரிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புக்களினால் இந்தப்பிரதேசத்திலிருந்து எமது மக்கள் வெளியேறிவருகின்ற மிகமோசமான பாதிப்பு நிலை காணப்படுகின்றது. இந்தவிடயத்தில் ஆளுநரும், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் கவனஞ்செலுத்தவேண்டும். வவனியா வடக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் ஒரு மாதகாலத்திற்குள் ஆராயப்படுமென பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். அதனை விரைந்து மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். வவுனியா வடக்கில் சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் அபகரிப்பு நெருக்கடிகளைத் தடுத்து எமது தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களிலிருந்து வெளியேறாமல் வாழ்வதற்குரிய வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதனைவிட வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிக அதிகளவில் வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன. அதனை வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மறுக்கமுடியாது. எனவே வவுனியா வடக்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் வளப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கு வடமாகாணகல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதிகரித்துள்ள சிங்களக் குடியேற்றங்களால் வவுனியா வடக்கிலிருந்து வெளியேறும் தமிழர்கள்; 23 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு | Virakesari.lk

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

2 months 1 week ago
சாத்தான், பெருமாள் போன்ற உறவுகளைப் பொறுத்த வரை, ஆதாரம் தேடிக் கொடுக்க நான் நேரம் செலவழித்துப் பயனில்லை. மேலே ஏனையோர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், யாழிலேயே பகிரப் பட்ட செய்திகள் இருக்கின்றன. 2010 இல் இருந்து ஹன்சாட்டில் பதிவாக இருக்கும் உரைகள் இருக்கின்றன. அவர்களே தங்களுக்குத் தேவையானதைத் தேடிக் கொள்ளட்டும். ஒரு வர்ணக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால் "புலிகள் பயங்கரவாதிகள்" முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புப் செய்யப் பட்டார்கள்" "இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை" என இன்னும் பல வாக்கியங்களும் தட்டுப் படும். ஆனால், கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி நின்று முழு உரையையும், முழுப் பேட்டியையும் பார்க்கும் எவருக்கும் பின்னணியை உருவி விட்டு முகனூல் போராளிகள் தூக்கித் திரியும் துரும்புகள் இவை என்பது புரியும்!

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

2 months 1 week ago
இலங்கையில் ஒற்றை ஆட்சி முறை சிறப்பாகச் செயல்படுகின்றது போர்க் குற்றத்திற்கான விசாரணை உள்நாட்டுப் பொறிமுறையில் இடம்பெறவேண்டும் . போர்க் குற்றம் தொடர்பாக சிங்கள ராணுவம் மட்டுமல்ல விடுதலைப் புலிகளும் விசாரிக்கப்பட வேண்டும் இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வு புதிய அரசியலமைப்பின் பிரகாரம் ஏக்க ராஜ்ஜியத்தில் ஆராயப்படும் . இப்படியான செய்திகளைத் தான் அதிகமாக வாசிக்கக் கூடியதாக இருக்கின்றது .

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

2 months 1 week ago
இவர் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? தாம் இஸ்லாம் என கிறிஸ்தவ நாடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பவர்களின் அஜாரகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.... அவர்கள் கை கழுவும் தொட்டிகளில் காலை தூக்கி கழுவியிருக்கிறார்கள். அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.

ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்

2 months 1 week ago
உக்ரேனுக்கு இன்றைய அவசர தேவை ஜனாதிபதி தேர்தல். சர்வாதிகாரி செலென்ஸ்கி ஆட்சியிலிருந்து துரத்தப்பட வேண்டும்.

உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல்

2 months 1 week ago
பெண்கள் அழகிற்கு கைகால் நீளம்,விரல் நீளம் ,மூக்கு நீளம் எல்லாம் உன்னிப்பாக கவனிக்கப்படும். நீங்கள் சுட்டிக்காட்டிய மூவருக்கும் அது அறவே இல்லை. 😎

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

2 months 1 week ago
புட்டினின் உதவி,நிவாரணங்கள் பற்றி ஆபிரிக்க/தென்னமெரிக்க மக்களை கேட்டால் தெரியும். தனியே மேற்குலக செய்திகளை மட்டும் கேட்டு இன்புறுபவர்களுக்கு அந்த கடவுளிடமே மருந்து இல்லை. 😂

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

2 months 1 week ago
தந்தை செல்வா தொடக்கம் இன்றைய அர்ச்சுனா வரைக்கும் எல்லா தமிழ் அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களுக்காகத்தான் போராடியிருக்கின்றார்கள்.போராடுகின்றார்கள். இதில் அமரர் அமிர்தலிங்கம்,அமரர் சம்பந்தன்,காசி ஆனந்தன், அமரர் ஆனந்த சங்கரி,டக்ளஸ் தேவானந்தா,ஸ்ரீதரன் என பலர் இருக்கின்றார்கள்.இன்னும் பலர் இருக்கின்றார்கள். இப்ப ...... என்னெண்டால் இந்த ஜாம்பவான்களது தமிழ் அரசியல் போராட்டம் தமிழ் மக்களை இன்று எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது என்பதுதான் கேள்வி? சுமந்திரன் நல்லவர் வல்லவர் கெட்டிக்காரர் எண்டால் தமிழ்மக்கள் ஏன் இவரை தேர்வு செய்யவில்லை? இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்கானவர்களாக இருந்திருந்தால் அனுர எப்படி தமிழர்பகுதிகளில் வெற்றி ஈட்டுவார்?
Checked
Sun, 02/22/2026 - 10:22
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed