2 months 1 week ago
இலங்கையின் 20% நிலப்பரப்பு நீரில் மூழ்கியது - ஐ.நா. அறிக்கை Dec 9, 2025 - 01:23 PM 25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, அவர்களது புதிய புவியியல் பகுப்பாய்வின்படி, புயலால் ஏற்பட்ட வெள்ள நீர் 1.1 மில்லியன் ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பை பாதித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 20 சதவீதம் அல்லது ஐந்தில் ஒரு பங்கு நீரால் மூழ்கியுள்ளதுடன், வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளமையும் இதில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் 'டித்வா' சூறாவளி காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண்கள் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmiyaacge02jxo29nvdz25k6s
2 months 1 week ago
உயர் தரப்பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில் Dec 9, 2025 - 04:35 PM கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmiyh4l2e02k9o29ngoalfbok
2 months 1 week ago
இந்தியாவின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது! 09 Dec, 2025 | 03:59 PM இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (9) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 600 கிலோ எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்திய அரசாங்கத்தினால் அனர்த்த நிவாரண சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கத்தினால் மேலும் பல அனர்த்த நிவாரண சேவைகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232883
2 months 1 week ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 60 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சம் என்பது ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவு மட்டுமே, வேறு எதுவும் இல்லை!' அத்தியாயம் 22: வசபா மன்னர் [வசபன் / king Vasabha] பல புத்த கட்டிடங்களையும், நீர்ப்பாசனப் பணிகளையும் கட்டினார். அவர் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். வசபாவின் மகன் திஸ்ஸன் [வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் / Vankanasika Tissa, also known as Vakunaha Tiss] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவரது மகன் முதலாம் கஜபாகு [Gajabahu I, also known as Gajabahuka Gamani] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவன், பிரபல சேர (இன்றைய கேரள) மன்னன் செங்குட்டுவன் அழைப்பின் பேரில் இந்திர விழாவில் பங்கேற்க தமிழகம் சென்றார். அவர் திரும்பியவுடன் பத்தினி வழிபாட்டைக் இலங்கைக்கு கொண்டுவந்து, பத்தினி கண்ணகியைப் போற்றும் வகையில் பெரஹெரா விழாவைத் [Perahera festival] தொடங்கினார். சயாமிலிருந்து [தாய்லாந்து / Thailand அல்லது முன்னர் சயாம் / Siam ] வந்த துறவிகளின் தூண்டுதலின் பேரில் 1775 கி.பி.க்குப் பிறகுதான் புத்தரின் பல் தாது [Buddha’s tooth relic] திருவிழாவுடன் தொடர்புடையது. பதினெட்டு நூற்றாண்டு பழமையான பத்தினி வழிபாடு மற்றும் பெரஹெரா திருவிழாவுடன் ஒப்பிடும் போது, இந்த பிக்குகள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அத்தியாயங்களை மிக சமீபத்தில் தான் உருவாக்கினர். தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் பெரஹெரா விழா முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிய இராச்சியத்தின் தமிழ் மன்னன் சயாமிலிருந்து (தாய்லாந்து) இந்த துறவிகளை அழைத்தார் என்றும் மற்றும் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பிரிவுகளின் துறவிகள் தான் பெரும்பாலும் அடுத்தடுத்து இலங்கை அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்ட தமிழர் விரோத படுகொலைகளில் கொடூரமான பங்கைக் கொண்டிருந்தனர் என்பது அண்மைய வரலாற்று உண்மை. கஜபாகுக்க காமினி அல்லது முதலாம் கஜபாகுவின் [Gajabahukagamani or Gajabahu I ] மாமனார் மகல்லக்க நாகன் [Mahallaka Naga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். கஜபாகுவின் மகன் பதிக திச்சன் [Bhatika Tissa] இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதன் பின், பதிக திச்சனின் இளைய சகோதரர் திஸ்ஸ (கன்னிததிஸ்ஸ / Kanittha Tissa) பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது மகன் குச்சநாகன் அல்லது சூளநாகன் [Cula Naga, or Khujjanaga, also known as Kuhun Na] தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது இளைய சகோதரர் குடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் [Kuda Naga or Kunchanaga] தனது சகோதரனைக் கொன்று ஓராண்டு ஆட்சி செய்தார். முதலாம் சிறிநாகன் [Sirinaga] குஞ்சநாகாவை தோற்கடித்து பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் மகன் அபயா [Abhaya] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் [22 - 37. The son of Sirināga, the royal lord called Abhaya, .... 38. ... This king governed twenty-two years.] அவரது இளைய சகோதரர் திச்சன் [திஸ்ஸாக / Tissaka] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [22 - 39. His younger brother, known as king Tissaka, ... 45. This royal ruler governed twenty-two years.] . திஸ்ஸாகவின் மகன் இரண்டாம் சிறிநாகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [46. Tissa’s own son, known by the name of Sirināga, reigned full two years over the Island.]. ஆனால், மகாவம்சத்தில், முதலில் திஸ்ஸாக [Tissaka] வையும் அடுத்ததாக அபயா [Abhaya] வையும் ஆட்சி செய்ததாக கூறுகிறது? இரண்டாம் சிறிநாகனின் மகன் விசயகுமாரன் [Vijaya Kumara] தந்தை இறந்த பின் ஒரு வருடம் ஆட்சி செய்தார். முதலாம் சங்க திச்சன் [Sangha Tissa I] நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார். இவன், விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் முதலாமானவன் ஆவான். அதன் பிறகு விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த மற்ற இரு அமைச்சர்களான சிறிகங்கபோதி [Siri Sangha Bodhi I, also known as Siri Sanghabodhi] இரண்டு ஆண்டுகளும், அதன் பின் மற்ற அமைச்சரான கோதாபயன் அல்லது மேகவண்ணாபயன் அல்லது அபய மேகவன்னா [Gothabhaya, also known as Meghavannabhaya, Gothakabhaya, Abhaya Meghavanna and Goluaba,] பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவருடைய மகன் ஜெத்ததிஸ்ஸ [சேட்டதிச்சன் / Jettha Tissa I also referred to as Detu Tiss, Kalakandetu Tissa, and Makalan Detu Tissa] பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். சேட்டதிச்சனின் தம்பியான மகாசேனன் [Mahasena, also known in some records as Mahasen] இருபத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவரது ஆட்சியில் ஒருவித மத மோதல்கள் நடந்தன. உதாரணமாக, மகாசேனன் மற்றும் முதலாம் சேட்டதிச்சன் ஆகிய சகோதரர்கள் இருவரும் சங்கமித்ரர் என்ற சோழ நாட்டு மகாயான பௌத்தம் என்ற பௌத்தப் பிரிவு மதத்தலைவரின் சீடர்களாவர். சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான முதலாம் சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான். அதனால் சங்கமித்ரர் முதலாம் சேட்டதிச்சனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார். ஆனால் மகாசேனனோ தன் அண்ணன் போல் அல்லாமல் சங்கமித்ரர் மகாயான பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு பேருதவிகளை செய்தான். சங்கமித்ரர் கையாலேயே இவனுக்கு முடிசூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவன் காலத்தில் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. மேலும் மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக்கோயில்களை இடித்து அழித்திருக்கிறான். இன்னும் ஒன்றையும் கவனியுங்கள் இங்கு சங்கமித்ரர், தமிழ் பேசும் ஆண் புத்த பிக்கு, இவரின் பெயர் பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா வுடன் தொடர்பு படுகிறது. அந்த நேரம் தமிழர்களும் மகாயான பௌத்த தழுவியவர்கள் என்பதும் வெள்ளிடை மலை. இதை இலங்கையில், வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வு என்று இன்று ஈடுபடும் முழுக்க முழுக்க சிங்கள நபர்களைக்கொண்ட ஆய்வாளர்களுக்கு புரியாதது எனோ? அல்லது அவர்களுக்கு சரியான நேர்மையான அறிவு இல்லையா ? யாம் அறியேன் பராபரமே! ஆனால் ஒன்று மட்டும் உண்மை, மகாசேனன் மாதிரி, சைவக் கோயில்களை இடித்து அழிப்பதில் மட்டும், பச்சை, நீலம் அல்லது சிவப்பு கொடிகளை ஏந்தினாலும், கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். மொத்தம் 105 பக்கங்களில், அத்தியாயம் 18 முதல் அத்தியாயம் 22 வரை உள்ள சுமார் 16 1/2 பக்கங்களில் மட்டுமே மொத்தம் 61 மன்னர்களில் 54 மன்னர்கள் பற்றி, அதாவது சுமார் 89 சதவீத மன்னர்கள் பற்றி பேசுகிறது. மீதமுள்ள, ஆரம்ப ஆட்சியாளர்கள், நாம் முன்பே விளக்கமாக கூறியது போல, கண்டுபிடிக்கப்பட்ட மன்னர்களாக இருக்க வேண்டும்? எனவே தான் அதற்கான கதைகளை சோடிப்பதற்காக, பல பக்கங்களை எடுத்துள்ளார்கள் போலும்? மேலே காட்டப்பட்டுள்ள அரசர்களில் பெரும்பாலோர், பெயர்களின் அடிப்படையில், ஏற்கனவே விவரிக்கப்பட்ட வாறு, தமிழர்களுடன், தமிழ் பண்பாட்டுடன் தொடர்பு உடையவர்களாகவே தெரிகிறது. மேலும் தீபவம்சத்தின் பெரும்பாலான பக்கங்கள் வரலாற்றை விட, நம்பிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. அதனால்த் தான் மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க் [Hermann Oldenberg] தீபவம்சத்தை "ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவுகள்" என்று அழைக்கிறார். இது பௌத்தத்திற்கு ஆதரவானதே தவிர, என்றும் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. இருபதாம் நூற்றாண்டின் அல்லது அதற்குப் பிறகு, பெரும்பாலான மிகவும் பேராசை கொண்ட துறவிகளும் அரசியல்வாதிகளும், இந்த விசுவாசப் பதிவை, விஷமிகுந்த தமிழர் விரோதமாக மாற்றினார்கள் என்றே தோன்றுகிறது. இதற்கு அடியெடுத்து கொடுத்தது, இதன் பின் 150 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட மகாவம்சமாக இருக்கலாம்? Part: 60 / Appendix – Dipavamsa / 'The Dipavamsa is just an ancient Buddhist historical record & nothing else!' Chapter 22: The king Vasabha constructed many Buddhist buildings, and irrigation works. He ruled forty four years. The son of Vasabha, Tissa, ruled for three years. His son, Gajabahukagamani, ruled twenty two years. He went to Tamilnadu to participate in the Indra Vill(zz)a festival on the invitation of the famous Chera (present day Kerala) king Senggutuvan. He brought the Pattini cult on his return and initiated the Perahera festival to honour the Pattini, Kannagi. Buddha’s tooth relic came to be associated with festival only after 1775 A. D. on the instigation of the monks who came from Siam. These monks formed the Malwatte and the Askiriya Chapters of very recent origin when compared with the eighteen century old procession of the Pattini worship, and the Perahera festival. Perahera festival is first recorded in the Tamil Epic Silappthikaram. Ironically, the Tamil king of Kandyan kingdom invited these monks from Siam (Thailand) and the monks of the Malwatte and the Askiriya Chapters played diabolical role in the anti Tamil pogrom perpetrated by the successive Sri Lankan Governments. Mahallakanaga, father in law of Gajabahukagamani, ruled for six years. His, Gajabahu’s, son, Bhatutissa, ruled for twenty four years. Younger brother of Bhatutissa, Tissa (Kannithatissa), ruled for eighteen years. His son Khujjanaga ruled for two years after the death of his father. His younger brother Kunjanaga put his brother to death and ruled for one year. Sirinaga defeated Kunjanaga and ruled for nineteen years. His son Abhaya ruled for twenty two years. His younger brother Tissaka ruled for twenty two years. His son Sirinaga ruled for two years. His son Vijayakumara ruled for one year after death of his father. Samghatissa reigned for four years. The king Samghabodhi reigned for two years. Abhaya Meghavanna ruled for thirteen years. His son Jetthatissa ruled ten years. Mahasena, the younger brother of Jetthatissa, ruled for twenty seven years. Some sort of religious conflict took place in his reign. About 16 pages and a half page, from the Chapter 18 to the Chapter 22, out of the 105 pages speaks about 54 kings out of 61 kings, about 89 percent of the kings. The rest, the purported initial rulers, must be invented kings. Quite a large proportion of the kings, as shown above, are Tamils. The most of the pages of the Dipavamsa are devoted to the Faith than to the history. That is why the translator, Hermann Oldenberg, calls the Dipavamsa as “An ancient Buddhist Historical Records”. It is pro Buddhism, but not anti Tamil. Avaricious and greedy monks and the politicians of the twentyieth century and afterwards without any compunction turned this record of Faith into venomous anti Tamil hatred. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 61 தொடரும் / Will follow துளி/DROP: 1934 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60] https://www.facebook.com/groups/978753388866632/posts/32744509148530976/?
2 months 1 week ago
ரம்பின் பேச்சு மாற்றி ஒலிபரப்பியதன் பின்னர் பிபிசியின் பக்கச்சார்பற்ற தன்மை கிழிந்து தொங்குகிறது
2 months 1 week ago
இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற குற்ற வரலாறு இவருக்கு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக பணியிலிருந்து நீக்கம் சுமித் குணசேகர என்ற சந்தேகநபர் 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர் என்றும், அதில் ஒரு சிறுவருடன் தொடர்புடைய பாலியல் குற்றத்தை புரிந்ததாக அவரே ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், 2004 ஆம் ஆண்டிலும் ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். குணசேகர மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருந்தபோதிலும், கனடாவில் செய்த குற்றங்களால், அமெரிக்காவில் சட்டப்படி இருக்க இவருக்கு உரிமை இல்லை என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தத் தகவல் தெரியவந்தவுடன், ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் அவரை உடனடியாகப் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. "பாலியல் குற்றவாளி ஒருவர் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியது மிகவும் வேதனை அளிக்கிறது" என்று அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். Tamilwinஇலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது...இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால்...
2 months 1 week ago
உக்கிரேன் இரஸ்சிய போரின் பின்னர் ஒரு தரப்பு செய்திகளை மட்டும் பார்க்கின்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது, அது சமூக ஊடகங்களில் கூட அதே நிலை, நீங்கள் கூறியது உண்மைதான், அப்போது உங்களைப்போல பலரும் கூறியிருந்தார்கள், ஆனாலும் எமது Perception ஐ வலிந்து உருவாக்கப்படும் ஒரு தரப்பு செய்திகளால் கட்டமைக்கப்பட்டிருந்த நிலையில் எமது புரிதல்கள் செய்திகளினடிப்படையிலேயே இருந்தது, ஆனால் மேற்கு லிபரல் கொள்கை என கூறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதேச்சாதிகார நிலைகளை புதிய அமெரிக்க கொள்கை மறைமுகமாக எதிர்க்கின்ற நிலை உருவாகியது எதனால் என கருதுகிறீர்கள், அமெரிக்கா நேரடியாக சீனாவினையும் இரஸ்சியாவினையும் எதிர்க்கின்றது ஆனால் மறைமுகமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தினை கேள்விக்குள்ளாக்குகிறது என கருதுகிறேன். இந்த புதிய கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் முன்னிலைப்படுத்தப்படுவது(நல்ல முறையில் அல்ல) போல கருதுகிறேன்.
2 months 1 week ago
2 months 1 week ago
உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்க ஐரோப்பிய தலைவர்கள் முடிவு! உக்ரேனுக்கான ஆதரவை அதிகரிக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கவும் “இப்போது ஒரு முக்கியமான தருணம்” என்று ஐரோப்பிய தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரேன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே கடந்த வாரம் வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் அண்மைய பதிப்பு குறித்து விவாதிக்க உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரை திங்களன்று (08) லண்டனில் சந்தித்தார். ரஷ்யாவுடன் விரைவான ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அமெரிக்கா கெய்வ் மீது அழுத்தம் கொடுப்பதால், உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு மேலதிக பணிகள் தேவை என்று ஐரோப்பியத் தலைவர்கள் இதன்போது கூறினர். நேட்டோ அதிகாரிகளைச் சந்திக்க பிரஸ்ஸல்ஸுக்குச் சென்ற ஜெலென்ஸ்கி, செவ்வாயன்று (09) உக்ரேன் அமெரிக்காவுடன் திருத்தப்பட்ட திட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் என்றும் கூறினார். கடந்த வாரம், உக்ரேனிய அதிகாரிகள் புளோரிடாவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் மூன்று நாட்கள் செலவிட்டு, ரஷ்யாவிற்கு சாதகமாகக் கருதப்படும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைக் கோரினர். https://athavannews.com/2025/1455703
2 months 1 week ago
தாய்லாந்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்துவதாக கம்போடியா சபதம்! தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையே இரண்டாவது நாளாகவும் மோதல்கள் தொடரும் நிலையில், கம்போடியாவின் சக்திவாய்ந்த செனட் தலைவர் ஹுன் சென் (Hun Sen) இன்று (09) தாய்லாந்திற்கு எதிராக தனது நாடு கடுமையான போராட்டத்தை நடத்தும் என்று சபதம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு தாய் சிப்பாய் கொல்லப்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலானது மீண்டும் தொடங்கியது. இது கடந்த ஜூலை மாதம் ஐந்து நாட்கள் நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்தின் கீழான பலவீனமான போர்நிறுத்த்தையும் தடம் புரளச் செய்தது. இதன் விளைவாக இரு தரப்பிலும் பல பொது மக்களும், இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர், மேலும் 100,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புதிய மோதலின் விளைவாக ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் கம்போடியாவின் இராணுவம் இன்று அறிவித்தது. அதேநேரம், கம்போடியாவின் அண்மைய தாக்குதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் தாய் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1455724
2 months 1 week ago
ரஷ்யாவின் நிதியுதவியுடன் கூடிய போலி செய்தி வலையமைப்பு ஐரோப்பாவில் தேர்தலை சீர்குலைக்க எவ்வாறு நோக்கமாகக் கொண்டுள்ளது - பிபிசி விசாரணை 21 செப்டம்பர் 2025 பகிர் சேமிக்கவும் ஓனா மரோசிகோ & சீமஸ் மிரோடன் , பிபிசி கண் விசாரணைகள் மற்றும் ரோவன் இங்ஸ் , பிபிசி குளோபல் தவறான தகவல் பிரிவு பிபிசி எங்கள் ரகசிய படப்பிடிப்பால் பிடிக்கப்பட்ட நெட்வொர்க் ஒருங்கிணைப்பாளர் அலினா ஜுக் (இடது), தவறான தகவல் பிரச்சாரம் குறித்த வழிமுறைகளைக் கேட்கிறார். கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெறவிருக்கும் ஜனநாயகத் தேர்தல்களை சீர்குலைக்க ரஷ்ய நிதியுதவியுடன் கூடிய ரகசிய வலையமைப்பு முயற்சிப்பதாக பிபிசி கண்டறிந்துள்ளது. செப்டம்பர் 28 ஆம் தேதி நாட்டின் நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, ரஷ்ய சார்பு பிரச்சாரத்தையும், மால்டோவாவின் ஐரோப்பிய ஒன்றிய சார்பு ஆளும் கட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் போலி செய்திகளையும் வெளியிட்டால், பங்கேற்பாளர்களுக்கு பணம் செலுத்துவதாக நெட்வொர்க் உறுதியளித்ததை ஒரு ரகசிய நிருபரை நாங்கள் கண்டுபிடித்தோம். மால்டோவாவின் ரஷ்ய ஆதரவு எதிர்ப்பின் ஆதரவாளர்களைக் கண்டுபிடித்து ரகசியமாகப் பதிவு செய்வதற்கும் - வாக்கெடுப்பு என்று அழைக்கப்படுவதை நடத்துவதற்கும் பங்கேற்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது இல்லாத ஒரு அமைப்பின் பெயரில் செய்யப்பட்டது, இது சட்டவிரோதமானது. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரியின் முடிவுகள், தேர்தலின் முடிவை கேள்விக்குள்ளாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கக்கூடும் என்று நெட்வொர்க்கின் ஒரு அமைப்பாளர் கூறினார். ஆளும் கட்சி தோற்கும் என்று கூறும் இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில், ஜனாதிபதி மையா சாண்டுவால் நிறுவப்பட்ட ஆளும் கட்சியான அதிரடி மற்றும் ஒற்றுமை (PAS) தற்போது ரஷ்ய சார்பு தேசபக்த தேர்தல் தொகுதியை (BEP) விட முன்னிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. "கிரெம்ளினின் தீய செல்வாக்கு நடவடிக்கைகளுக்காக" அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட மால்டோவன் தன்னலக்குழு தலைவரான இலன் ஷோர் மற்றும் ரகசிய வலையமைப்பிற்கு இடையேயான தொடர்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம், மேலும் அவர் தற்போது மாஸ்கோவில் தப்பியோடி உள்ளார். ஊழல் குற்றச்சாட்டிற்காக இங்கிலாந்தும் அவருக்கு தடை விதித்துள்ளது. நெட்வொர்க்கிற்கும் எவ்ராசியா எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பிற்கும் (என்ஜிஓ) இடையேயான தொடர்புகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். எவ்ராசியாவுக்கு திரு. ஷோருடன் தொடர்புகள் உள்ளன, மேலும் கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு எதிராக வாக்களிக்க மால்டோவா குடிமக்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்பட்டதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அவர் தடை செய்யப்பட்டார். இணைவது குறித்த வாக்கெடுப்பு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது . "2024 ஆம் ஆண்டில் [இலன் ஷோரின்] பிரச்சாரத்தின் கவனம் பணமாக இருந்தது. இந்த ஆண்டு கவனம் தவறான தகவல்களாகும்" என்று மால்டோவாவின் காவல்துறைத் தலைவர் வியோரல் செர்னாட்டியானு பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார். எங்கள் விசாரணை முடிவுகளுக்கு பதிலளிக்குமாறு இலன் ஷோர் மற்றும் எவ்ராசியாவிடம் கேட்டோம் - அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. UKக்கு வெளியே YouTube இல் பாருங்கள் மால்டோவா சிறியதாக இருக்கலாம், ஆனால் உக்ரைனுக்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் ருமேனியாவிற்கும் இடையில் இணைக்கப்பட்டுள்ளது, இது ஐரோப்பாவிற்கும் கிரெம்ளினுக்கும் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு தகவல் தெரிவிப்பவர் எங்களுக்கு அனுப்பிய இணைப்பு மூலம், டெலிகிராம் என்ற செய்தியிடல் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்ட, உலக சேவை நெட்வொர்க்கிற்குள் ஊடுருவியது. இது ஒரு ஜனநாயக விரோத பிரச்சார வலையமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஒரு முக்கியமான நுண்ணறிவை எங்களுக்கு வழங்கியது. எங்கள் ரகசிய நிருபர் அனா மற்றும் 34 புதிய பணியாளர்கள், "செயல்பாட்டாளர்களை" தயார்படுத்தும் ரகசிய ஆன்லைன் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். "உங்கள் சமையலறையிலிருந்து தேசியத் தலைவருக்கு எப்படிச் செல்வது" போன்ற தலைப்புகளுடன், அவர்கள் ஒரு சரிபார்ப்பு செயல்முறையாகச் செயல்பட்டதாகத் தோன்றியது. அனாவும் மற்றவர்களும் தாங்கள் கற்றுக்கொண்டவற்றின் மீது வழக்கமான சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டியிருந்தது. பின்னர் எங்கள் நிருபரை அலினா ஜக் என்ற நெட்வொர்க் ஒருங்கிணைப்பாளர் தொடர்பு கொண்டார். திருமதி ஜக்கின் சமூக ஊடக சுயவிவரம், அவர் மாஸ்கோவிற்கு விசுவாசமான கிழக்கு மால்டோவாவின் பிரிவினைவாதப் பகுதியான டிரான்ஸ்னிஸ்ட்ரியாவைச் சேர்ந்தவர் என்று கூறுகிறது, மேலும் அவரது இன்ஸ்டாகிராம் கடந்த சில ஆண்டுகளாக அவர் ரஷ்யாவிற்கு பல முறை பயணம் செய்ததைக் காட்டுகிறது. தேர்தலுக்கு முன்னதாக டிக்டோக் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளை தயாரிப்பதற்கு மாதத்திற்கு 3,000 மால்டோவன் லீ ($170, £125) சம்பளம் வழங்கப்படும் என்றும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வங்கியாகவும், இலன் ஷோரின் நிறுவனங்களில் ஒன்றில் பங்குதாரராகவும் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ரஷ்ய அரசுக்குச் சொந்தமான வங்கியான ப்ரோம்ஸ்வியாஸ்பேங்கிலிருந்து (PSB) பணம் அனுப்பப்படும் என்றும் திருமதி ஜூக் அனாவிடம் கூறினார். ஆனா மற்றும் பிற புதியவர்களுக்கு ChatGPT-ஐப் பயன்படுத்தி சமூக ஊடக இடுகைகளை உருவாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. "படத்தில் சில நையாண்டிகள் இருந்தால்... யதார்த்தத்தை விட அதிகமாக இருந்தால் உள்ளடக்கம் மக்களை ஈர்க்கும்" என்று அவர்களிடம் கூறப்பட்டது, ஆனால் இடுகைகள் "ஆர்கானிக்" என்று உணரப்படுவதை உறுதிசெய்ய அதிகப்படியான AI தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர்களிடம் கூறப்பட்டது. டெலிகிராம் குழுவிற்குள், பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்ட முந்தைய வழிமுறைகளை அனா மற்றும் பிபிசி அணுக முடிந்தது. ஆரம்பத்தில், மால்டோவா வரலாற்றில் வரலாற்று நபர்களைப் பற்றிய தேசபக்தி பதிவுகளை அவர்களிடம் கேட்டிருந்தனர் - ஆனால் படிப்படியாக கோரிக்கைகள் வெளிப்படையாக அரசியல் ரீதியாக மாறின. மால்டோவாவின் தற்போதைய அரசாங்கம் தேர்தல் முடிவுகளை பொய்யாக்க திட்டமிட்டுள்ளது, மால்டோவாவின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் தகுதி, அந்நாட்டின் குடிமக்கள் தங்கள் "பாலியல் நோக்குநிலையை" LGBTக்கு மாற்றுவதைப் பொறுத்தது, மற்றும் ஜனாதிபதி சாண்டு குழந்தை கடத்தலை எளிதாக்குகிறார் என்பது உள்ளிட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இடுகையிடுமாறு அனாவிடம் கேட்கப்பட்டது. தவறான தகவல்களை உருவாக்க நெட்வொர்க் வழங்கிய வழிமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு - "[ஜனாதிபதி] சாண்டுவின் ஆட்சி குழந்தைகளை ஒரு வாழ்க்கை நாணயமாகப் பயன்படுத்துகிறது" மற்றும் "சாண்டுபாஸ் [ஆளும் கட்சியைக் குறிக்கும் குறிப்பு] மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளது" போன்ற ஆதாரமற்ற சொற்றொடர்களைப் பகிருமாறு பங்கேற்பாளர்களுக்கு இது கூறுகிறது. சமூக ஊடக பிரச்சாரங்கள் இப்போது தேசிய தேர்தல்களின் மையமாக உள்ளன. மால்டோவாவின் ஆளும் கட்சியான PAS ஐ ஆதரிக்கும் சமூக ஊடக இடுகைகளை நாங்கள் கண்காணித்தோம், ஆனால் வெளிப்படையான தவறான தகவல் பிரச்சாரம் எதையும் கண்டறியவில்லை. நெட்வொர்க்குடனான எங்கள் ரகசியப் பயிற்சி முழுவதும், உண்மைக்கு ஏற்றவாறு துல்லியமான பதிவுகளை மட்டுமே நாங்கள் பகிர்ந்து கொண்டோம், மேலும் அவற்றின் எண்ணிக்கையை நாங்கள் குறைத்தோம். நாங்கள் ஊடுருவிய குழுவைப் போன்ற பல குழுக்களைக் கொண்டிருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்ததால், அந்த நெட்வொர்க்கில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினோம். எங்கள் டெலிகிராம் அணுகல் மூலம் கண்காணிக்கக்கூடிய பிற கணக்குகளிலும் இதேபோன்ற செயல்பாட்டின் வடிவங்களைத் தேடினோம். இந்த நெட்வொர்க்கில் குறைந்தது 90 டிக்டாக் கணக்குகள் உள்ளன - சில செய்தி ஊடகங்களாக மாறுவேடமிட்டு - ஜனவரி முதல் 23 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 860,000 விருப்பங்களையும் கொண்ட ஆயிரக்கணக்கான வீடியோக்களை இவை வெளியிட்டுள்ளன. மால்டோவாவின் மக்கள் தொகை வெறும் 2.4 மில்லியன் மட்டுமே. எங்கள் கண்டுபிடிப்புகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி ஆய்வகத்துடன் (DFRLab) பகிர்ந்து கொண்டோம், மேலும் அதன் பகுப்பாய்வு நெட்வொர்க் இன்னும் பெரியதாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது என்று அது எங்களிடம் கூறியது. ஜனவரி முதல் டிக்டோக்கில் பரந்த நெட்வொர்க் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளதாக DFRLab கண்டறிந்துள்ளது. கெட்டி இமேஜஸ் தன் மீதான தாக்குதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான தாக்குதல் என்று ஜனாதிபதி மையா சாண்டு கூறுகிறார். அந்த நெட்வொர்க் தவறான தகவல்களை மட்டும் பதிவிடவில்லை. மால்டோவாவின் தலைநகரில் உள்ள மக்களிடம் தேர்தலில் அவர்கள் விரும்பும் வேட்பாளர்கள் குறித்து நேர்காணல் செய்து, அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பை நடத்துவதற்காக, திருமதி ஜூக் அனாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 மால்டோவன் லீ ($12, £9) ரொக்கத்தையும் வழங்கினார். இந்தப் பணியை மேற்கொள்வதற்கு முன், வாக்களிக்கப்படுபவர்களை எவ்வாறு நுட்பமாக வற்புறுத்துவது என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. ரஷ்ய ஆதரவு எதிர்ப்பை ஆதரிப்பதாகக் கூறிய நேர்காணல் செய்பவர்களின் பதிவுகளை ரகசியமாக பதிவு செய்யும்படியும் அவர்களிடம் கேட்கப்பட்டது. "வாக்கில் மோசடி செய்வதைத் தடுப்பதற்காக" இது செய்யப்பட்டது என்று திருமதி ஜூக் வெளிப்படுத்தினார், பாஸ் வெற்றி பெற்றால், அது நியாயமற்ற முறையில் வென்றதற்கான சான்றாகக் கருதப்படும் வகையில் கணக்கெடுப்பு முடிவுகளும் ரகசிய பதிவுகளும் பயன்படுத்தப்படும் என்று அவர் பரிந்துரைத்தார். எங்கள் நிருபர் இணைந்த நெட்வொர்க் ரஷ்யாவிலிருந்து வங்கியால் மாற்றப்படுவதாகவும் எங்கள் சான்றுகள் தெரிவிக்கின்றன. மாஸ்கோவிலிருந்து தொலைபேசியில் அலினா ஜுக் பணம் கேட்பதை அனா கேட்டு - படம் பிடித்தார். "கேளுங்கள், மாஸ்கோவிலிருந்து பணம் கொண்டு வர முடியுமா... நான் என் மக்களுக்கு அவர்களின் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும்," என்று அவள் சொல்வதை நாங்கள் படம் பிடித்தோம். அவளுக்கு யார் பணம் அனுப்புவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் எவ்ராசியா என்ற அரசு சாரா நிறுவனம் மூலம் அந்த நெட்வொர்க்குக்கும் இலன் ஷோருக்கும் இடையேயான தொடர்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கெட்டி இமேஜஸ் இந்த நெட்வொர்க் மால்டோவன் தன்னலக்குழு இலன் ஷோருடன் இணைக்கப்பட்டுள்ளது, அவர் 2019 இல் இங்கு பிரச்சாரம் செய்து இப்போது மாஸ்கோவில் தப்பியோடியவராகக் காணப்பட்டார். எங்கள் விசாரணை முடிவுகளுக்கு இலன் ஷோர் மற்றும் எவ்ராசியா பதிலளிக்கவில்லை. எவ்ராசியாவின் வலைத்தளத்தில் அனாவின் கையாளுநரான அலினா ஜூக்கின் புகைப்படங்களை பிபிசி கண்டறிந்தது - மேலும் அனா சேர்க்கப்பட்ட டெலிகிராம் குழுக்களில் ஒன்று "எவ்ராசியா தலைவர்கள்" என்று அழைக்கப்பட்டது. "மோல்டோவாவில் ஊழல் நிறைந்த தப்பியோடிய தன்னலக்குழு இலன் ஷோரின் சார்பாக... மால்டோவா ஜனநாயகத்தை சீர்குலைக்க" எவ்ராசியா செயல்படுகிறது என்று இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் கூறுகிறது. எங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க அலினா ஜூக்கைக் கேட்டோம் - அவர் பதிலளிக்கவில்லை. தேர்தலுக்கு முன்னதாக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளதாகவும், "ஏமாற்றும் நடத்தையை தீவிரமாக எதிர்கொள்வதாகவும்" டிக்டாக் தெரிவித்துள்ளது. எங்கள் கண்டுபிடிப்புகளுக்கு பேஸ்புக்கின் உரிமையாளர் மெட்டா பதிலளிக்கவில்லை. இங்கிலாந்தில் உள்ள ரஷ்ய தூதரகம், போலிச் செய்திகள் மற்றும் தேர்தல் தலையீட்டில் ஈடுபடுவதை மறுத்ததுடன், மால்டோவாவின் தேர்தலில் தலையிட்டது ஐரோப்பிய ஒன்றியம் தான் என்றும் கூறியது. கூடுதல் அறிக்கை: மால்வினா கோஜோகாரி, ஆண்ட்ரியா ஜிடாரு, ஏஞ்சலா ஸ்டான்சியு How Russian-funded fake news network aims to disrupt Euro...An undercover reporter discovers a network is offering to pay for social media posts undermining Moldova’s ruling party.
2 months 1 week ago
அரசாங்க நிவாரண நிதிக்கு சந்திரிக்காவால் 250 மில்லியன் ரூபா நிதியுதவி DilukshaDecember 9, 2025 10:30 am 0 பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபா நிவாரண உதவியை வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் வழங்கியுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதே இந்த நிதியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையின் பணிப்பாளர்கள் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிதி சீரற்ற வானிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மறுகட்டமைப்பு மற்றும் உதவிக்காக பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். https://oruvan.com/chandrika-donates-rs-250-million-to-government-relief-fund/
2 months 1 week ago
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை! 09 Dec, 2025 | 11:52 AM நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களையும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களையும் பார்வையிட சென்றிருந்த போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தினால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சாதாரண மக்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதனால் அரசாங்க ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். விசேடமாக நுவரெலியாவில் உள்ள ஆசிரியர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வீடுகள் இன்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232852
2 months 1 week ago
“டித்வா” சூறாவளியால் காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம் “டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத் திணைக்களம், இந்த அனர்த்தத்தினால் எவரேனும் ஒரு நபரின் உறவினர் அல்லது நண்பர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பின், அத்தகைய காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது. தேசிய அனர்த்தப் பகுதிகள், நிர்வாக மாவட்டங்கள் அடிப்படையில் இறப்பைப் பதிவு செய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. அதற்கமைய, இந்த அனர்த்தத்தின் கீழ் காணாமல் போன நபர் ஒருவரின் இறப்பைப் பதிவு செய்யக் கோரும் நபர், அந்த நபர் வழக்கமாக வசித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் தகவல்களுடன் கூடிய விண்ணப்பப் படிவத்தையும், அத்தகவல்களை உறுதிப்படுத்தும் சத்தியக்கடதாசியையும் சமர்ப்பிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர் இந்தக் கோரிக்கையைப் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிப்பார் என்பதுடன், பிரதேச செயலகத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலும் இரண்டு வார காலத்திற்கு ஆட்சேபனைகளுக்காக இது காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சேபனைகள் இல்லையெனில், பிரதேச செயலாளரால் அனுமதிக்காகப் பதிவாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட வலயத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டால், அது குறித்து விசாரணை நடத்திப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. இதன் கீழ், நபர் ஒருவர் காணவில்லை என்பதற்கான சான்றிதழ் கோரப்பட்டிருக்கும் போது, மேற்கூறியவாறு விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, உரிய விசாரணைகளை மேற்கொண்டு, பிரதேச செயலாளரால் ‘காணவில்லை என்பதற்கான சான்றிதழை’ வெளியிடவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது. இதற்கிடையில், கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பல ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய சுவடிகூடம் (National Archives) தெரிவிக்கிறது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான சேதம் ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நதீரா ரூபசிங்க குறிப்பிட்டார். https://www.samakalam.com/காணாமல்-போனோர்-மற்றும்-உ/
2 months 1 week ago
அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு Dec 9, 2025 - 09:37 AM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்" என சுமணரத்ன தேரர் தெரிவித்திருந்தார். இவரது இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக, 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், குறித்த தேரரை கைது செய்யுமாறு கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை வழக்கு தொடுநர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனையடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், அவரை இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கட்டளையிட்டார். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmiy26w9e02jmo29n0ad10ot6
2 months 1 week ago
சர்வதேச மனிதாபிமான உதவிகளைக் கண்காணிக்க பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் உயர்மட்ட தேசியக் குழு Published By: Vishnu 09 Dec, 2025 | 04:26 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த வாரம் தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக நிவாரண உதவிகள் கிடைக்கின்றன. அந்த மனிதாபிமான உதவிகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு மக்களிடம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஓர் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த இயற்கை அனர்த்தங்களால் இதுவரையில் 22 மாவட்டங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக உதவிகள் கிடைத்து வருகின்றன. அனர்த்தத்துக்கு பின்னரான நடவடிக்கைகள் அனர்த்த நிவாரண மத்திய நிலையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கப் பெறும் நிவாரணங்கள் முறையாக மக்களை சென்றடைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமையவே இவற்றை முகாமைத்துவம் செய்து கண்காணிப்பதற்காக என்னுடைய தலைமையில் உயர்மட்ட தேசியக் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் முப்படை மற்றும் பொலிஸ் உட்பட துறைசார் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவர். உணவு, சுகாதாரம், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் வெளிநாடுகளிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை எவ்வாறு முகாமைத்துவம் செய்து மக்களுக்கு விநியோகிப்பது என்பதற்கான ஆலோசனை இக்குழுவால் உரிய தரப்பினருக்கு வழங்கப்படும். மாகாண ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என இந்த வலையமைப்பின் கீழ் அனர்த்த நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படும். இவை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கப்படுவதை எமது குழு உறுதி செய்யும். அதற்கு கொள்கை ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும். வாரத்தில் 3 நாட்கள் இக்குழு கூடி, நிவாரணப்பணகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/232832
2 months 1 week ago
3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை Dec 9, 2025 - 08:28 AM வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (09) காலை 7.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (10) காலை 7.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதுடன், இதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பலத்த மழையுடன் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmixzqwa702jlo29n6qp7k6z3
2 months 1 week ago
ஆங்கிலேயரை வெல்ல முடியும் என்று காட்டிய ஹைதர் அலி கடைபிடித்த போர் வியூகம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மைசூர் மன்னர் ஹைதர் அலி கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபஸல் பதவி,பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1757-ஆம் ஆண்டு பிளாசிப் போரில் வெற்றி பெற்ற பத்தாண்டுக்குள், இந்திய மன்னர்களின் ராணுவத் திறன் விரைவாக அதிகரித்து வருவதையும், பிளாசி போன்ற வெற்றியை மீண்டும் பெறுவது கடினம் என்பதையும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் உணர்ந்தனர். ஐரோப்பியர்களின் ராணுவத் தொழில்நுட்பத் திறனுக்கு இணையாக இந்திய சுதேச சமஸ்தானங்கள் வர வெறும் பத்தாண்டுககள் மட்டுமே ஆனது. 1760-களின் நடுப்பகுதிக்குள், அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான ராணுவ பலத்தின் இடைவெளி கிட்டத்தட்ட குறைந்துவிட்டதாகத் தெரிந்தது. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் சந்தித்த முதல் சவால் ஹைதர் அலியிடமிருந்துதான் வந்தது. லெவின் பி. போரிங் தனது 'ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான்' (Hyder Ali and Tipu Sultan) என்ற புத்தகத்தில், "18-ஆம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தின் மையமாக மைசூர் இருந்தது. உலகின் கிழக்கு வரலாற்றுப் பகுதியில் மைசூர் மிகத் துணிச்சலான மற்றும் பரபரப்பான நடவடிக்கைகளின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்த பகுதியில்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் மிகவும் ஆபத்தான எதிரியை எதிர்கொண்டனர். இந்தப் பகுதியின் தலைவரின் பெயர் ஹைதர் அலி." என எழுதினார். ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சி வெறும் 38 ஆண்டுகளே நீடித்தாலும், இந்த குறுகிய காலத்தில் நடந்த சம்பவங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே உலுக்கியது. பட மூலாதாரம்,Pharos Book இயல்பிலேயே ஒரு போர் வீரர் ஹைதர் அலி மைசூர் படையில் உயர் பதவியில் இருந்தார். 1776-ஆம் ஆண்டில் மைசூர் உடையார் மன்னரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவர் மைசூர் ராணுவத்தை விரிவுபடுத்தி, சிறிய அண்டை சமஸ்தானங்களைக் கைப்பற்றத் தொடங்கினார். இர்ஃபான் ஹபீப் தனது 'ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழ் எதிர்ப்பு மற்றும் நவீனமயமாக்கல்' (Resistance and Modernization Under Hyder Ali and Tipu Sultan) என்ற புத்தகத்தில், "ஹைதர் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க பிரெஞ்சு தளபதிகளை அழைத்து வந்தார். ஸ்ரீரங்கப்பட்டினத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரெஞ்சு பொறியாளர்களின் உதவியை நாடினார். ஹைதர் தனக்கென கடற்படையை உருவாக்கவும் முயற்சி செய்தார். 1766-ஆம் ஆண்டில் அவரிடம் 2 பெரிய போர்க் கப்பல்கள், 7 சிறிய போர்க் கப்பல்கள் மற்றும் 40 சிறிய படகுகள் இருந்தன. இந்த அனைத்திற்கும் ஸ்டெனெட் (Stennett) என்ற ஐரோப்பியரே தளபதியாக இருந்தார்," என எழுதுகிறார். ஹைதர் அலி இயல்பிலேயே ஒரு போர் வீரராக இருந்தார் என்று கூறப்படுகிறது. அவர் குதிரை சவாரி செய்வதில் மட்டுமல்ல, வாளை கையாள்வதிலும் மற்றும் துப்பாக்கி சுடுவதிலும் திறமையானவராக இருந்தார். லெவின் போரிங் எழுதுகிறார்: "ஹைதருக்கு சோர்வை சகித்துக் கொள்ளும் அபார சக்தி இருந்தது. படைகளுக்குத் தலைமை தாங்கும்போது தன் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைப் பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை, அதனால்தான் அவரது வீரர்கள் அவருக்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராக இருந்தனர். ஹைதரின் சிறப்பு அம்சம், போரின் போது அமைதியாக இருந்து வேகமாக, திடீர் தாக்குதல்களைத் தொடுப்பது ஆகும், இதில் அவர் பெரும்பாலும் வெற்றி கண்டார்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹைதர் அலி குதிரையேற்றத்திலும், துப்பாக்கிச் சுடுதலிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஹைதரின் அன்றாட வாழ்க்கை மேஸ்தர் லா டூர் தனது 'ஹைதர் மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானின் வரலாறு' (The History of Hyder and His Son Tipu Sultan) என்ற புத்தகத்தில், ஹைதர் சுமார் 5 அடி ஆறு அங்குல உயரம் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மாநிறம் கொண்டவராகவும், கரடுமுரடான முகத்தைக் கொண்டவராகவும் இருந்தார். அவர் மைல்கள் கணக்கில் நடந்தோ அல்லது குதிரை மீது பயணம் செய்தோ கடக்கும் திறன் கொண்டவர். அவர் வெள்ளை மஸ்லின் ஆடைகள் மற்றும் தலைப்பாகை அணிய விரும்பினார். "அவருக்கு ஆபரணங்கள் மீது ஆர்வம் இல்லை. பார்க்க கவர்ச்சியாக இல்லாவிட்டாலும், அவரது தோற்றம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது. அவர் தினமும் நள்ளிரவில் தூங்கச் சென்று, காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவார்." "மைசூர் மன்னரான பிறகு, அவர் தனது முகத்தில் இருந்த அனைத்து முடிகளையும் சவரம் செய்து கொண்டார். அவருக்கு தாடி, மீசை, இமைமுடிகள் அல்லது புருவங்கள் இல்லை. காலை 8 மணி முதல் 9 மணிவரை அவர் அரண்மனையில் இருந்து அரசவைக்கு வருவார், அதன்பிறகு பால்கனியில் ஏறி யானைகள் மற்றும் குதிரைகளின் மரியாதையை ஏற்றுக்கொள்வார். ஹைதர் படிப்பறிவில்லாதவர். தன் பெயரின் முதல் எழுத்தை (ஹை) எழுதுவதைக் கூட அவர் மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொண்டார்." ஹைதர் அலியால் கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் மொழிகளை சரளமாகப் பேச முடிந்தது. அவருக்கு பாரசீகம் மற்றும் அரபு மொழியைப் பற்றி எதுவும் தெரியாது. படிப்பறிவில்லை என்றாலும், அவருக்கு அபார நினைவாற்றல் இருந்தது. பல பத்தாண்டுகளுக்கு முன் சந்தித்த ஒருவரை அடையாளம் காணும் அபார திறன் அவரிடம் இருந்தது. பட மூலாதாரம்,Getty Images ஹைதரின் சகிப்புத்தன்மை ஹைதரின் ஆட்சிக் காலத்தில் மத விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 1610-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வந்த மைசூரின் புகழ்பெற்ற தசரா திருவிழாவைத் தொடர அவர் அனுமதித்தார். அவர் தசரா திருவிழாவில் நேரடியாகப் பங்கேற்றார். விஜயதசமி நாளில் நடைபெறும் ஊர்வலத்தில் யானை மீது ஏறிச் செல்வதில் அவர் முன்னணியில் இருப்பார். மார்க் வில்க்ஸ் தனது 'மைசூர் வரலாற்றைக் கண்டறியும் முயற்சியில் தென்னிந்தியாவின் வரலாற்று ஓவியங்கள்' (Historical Sketches of the South of India in an Attempt to Trace the History of Mysore) என்ற புத்தகத்தில் "முஸ்லிம் மன்னர்கள் அனைவரிலும் ஹைதர் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர். அவருக்கு தனது மதப்படி பிரார்த்தனை செய்யவோ, நோன்பு இருக்கவோ தெரியாது, அவருக்கு கற்றுக்கொடுக்கப்படவும் இல்லை. அனைத்து மதங்களும் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்றும், கடவுளின் பார்வையில் அனைத்து மதங்களும் சமம் என்றும் அவர் பொதுவில் அறிவித்தார்." எழுதியுள்ளார். ஏ.கே. சாஸ்திரி தனது 'சிருங்கேரி தர்மஸ்தானின் பதிவுகள்' (The Records of the Sringeri Dharmasthan) என்ற புத்தகத்தில் "ஹைதர் 1769, ஏப்ரல் 27 அன்று சிருங்கேரி மடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ஹைதர் ஜகத்குருவுக்கு ஒரு யானை, ஐந்து குதிரைகள், ஒரு பல்லக்கு, ஐந்து ஒட்டகங்கள் மற்றும் தேவி சாரதா அம்பாளுக்கு ஒரு புடவை, இரண்டு சால்வைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் கொண்ட பணப்பையை பரிசாக அனுப்பியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஜகத்குருவை ஒரு சிறந்த மற்றும் புனிதமான ஆத்மா என்று குறிப்பிட்டுள்ளார்." என்று தெரிவித்துள்ளார். ராக்கெட் பயன்பாட்டின் முன்னோடி பட மூலாதாரம்,Gyan Publishing House 1767ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹைதர் அலி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போரை அறிவித்தார். அப்போது ஹைதரின் படையில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இந்த அளவுக்கு ஹைதரிடம் நவீனப் படை உள்ளது என்பது கம்பெனிக்கு அப்போது தெரியாது. ஹைதரின் வீரர்களின் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் அதிநவீன பிரெஞ்சு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்திருந்தன. அவரது பீரங்கிகளின் திறன் மற்றும் வீச்சு கம்பெனியின் படைகளை விட அதிகமாக இருந்தது. பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஜீன் மேரி லாஃபோன் தனது 'இண்டிகா: இந்தோ-பிரெஞ்சு உறவுகளில் கட்டுரைகள் 1630-1976 ' (Indica: Essays in Indo-French Relations 1630-1976) என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "பல விஷயங்களில், ஹைதரின் வீரர்கள் ஆங்கிலேய வீரர்களை விட அதிக புத்திசாலித்தனமாகவும், தந்திரோபாய ரீதியாக சிறந்தும் விளங்கினர். எதிரிப் படைகளைக் கலைக்க ஒட்டகங்களில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதில் அவர்கள் திறமை பெற்றிருந்தனர். தனது படைகளை நகர்த்துவதற்கும் தளவாடங்களை வழங்குவதற்கும் ஹைதர் காளைகளைப் பயன்படுத்தினார், அது அக்காலத்தில் ஒரு புதிய விஷயமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்களும் அதைப் பின்பற்றினர்." இறுதியில், ஆங்கிலேயர்கள் ஹைதருடன் சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், ஆங்கிலேயர்களைப் போரில் தோற்கடிக்கவும் ஆச்சரியப்படுத்தவும் முடியும் என்பதை இந்தியாவின் பல மன்னர்கள் உணர்ந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராக்கெட்டுகளை முதன்முதலில் பயன்படுத்தியது ஹைதர் அலிதான் ஆங்கிலேயர் மீது தாக்குதல் 1780 பிப்ரவரி 7 அன்று, வட்காவ் ஒப்பந்தத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு, மராட்டியத் தலைவர் நானா பட்நாவிஸ் தனது பழைய எதிரியான ஹைதர் அலிக்குக் கடிதம் எழுதினார். அதில், ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு மாதத்திற்குள் ஹைதராபாத் நிஜாமும் ஹைதருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தார். கோடைக்காலம் வந்தபோது, இந்த மூன்று சக்திகளும் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கான திட்டத்தில் பணியாற்றத் தொடங்கின. ஒரு மாதம் கழித்து ஹைதருக்கு பிரான்சிலிருந்து பெரிய அளவிலான ஆயுதங்கள் வந்து சேர்ந்துவிட்டதாக ஆங்கிலேயர்களின் தளமான மதராஸிற்கு (சென்னை) ஒரு செய்தி கிடைத்தது. இறுதியாக, 1780 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று, ஹைதர் அலி மீண்டும் ஆங்கிலேயர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த முறை அவரிடம் முன்னர் இருந்ததை விட இரண்டு மடங்கு பெரிய படை இருந்தது. அவரது படையில் 60 ஆயிரம் குதிரைப்படை வீரர்கள், 35 ஆயிரம் காலாட்படை வீரர்கள் மற்றும் 100 பீரங்கிகள் இருந்தன. ஆவணங்களின்படி, மதராஸைப் பாதுகாக்க கம்பெனியின் 30 ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட வேண்டும், ஆனால் உண்மையில் அந்த மாதம் எட்டு ஆயிரம் வீரர்களை மட்டுமே திரட்ட முடிந்தது. மார்க் வில்க்ஸ் தனது 'தென்னிந்தியாவின் வரலாற்று ஓவியங்கள்' புத்தகத்தில், "ஹைதர் முன்னேறிய வேகம் ஆங்கிலேய வீரர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்தது. இவர்களில் பல வீரர்களின் குடும்பங்கள் ஆற்காட்டில் வசித்து வந்தனர். தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, இந்த வீரர்கள் ஆங்கிலேயர்களை விட்டு விலகினர். அவர்கள் ஹைதரிடம் சரணடைந்தனர் அல்லது லஞ்சம் பெற்றுக்கொண்டு தங்கள் நிலைகளின் கதவுகளைத் திறந்து விட்டனர். மதராஸ், வேலூர் மற்றும் ஆற்காட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தீ வைத்து, கம்பெனியின் தளவாட விநியோகத்தை ஹைதர் முழுவதுமாக அழித்தார்." என குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,Getty Images முன்ரோ மற்றும் பெய்லியின் படைகள் சேரும் முயற்சி தோல்வி 1780ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, தென்னிந்தியாவில் ஹைதரின் படைகளை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய படை மதராஸிலிருந்து காஞ்சிபுரத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கியது. இந்தப் படைக்கு தளபதி ஹெக்டர் முன்ரோ தலைமை தாங்கினார். இவர்தான் 15 ஆண்டுகளுக்கு முன் பக்சர் போரில் சுஜா-உத்-தௌலாவைத் தோற்கடித்தவர். இந்த முறை அவரது படையில் ஐந்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர், அவர்களுக்கு மாதக் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் ஹைதரின் ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட மாபெரும் படையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு 30 மைல் வடக்கே இருந்த கர்னல் வில்லியம் பெய்லிக்கு, தனது படைகளுடன் முன்ரோவின் படையுடன் இணையுமாறு உத்தரவு கிடைத்தது. குலாம் ஹுசைன் கான் தனது 'சைர் முதாக்கரின்' (Sair Mutakhareen) என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். "சமுத்திரத்தின் கோப அலைகளைப் போல முழு நிலத்தையும் மூடியிருக்கும் அளவு ஹைதரிடம் அவ்வளவு வீரர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் வந்த பீரங்கிப்படைக்கு முடிவே இல்லாததுபோல் தெரிந்தது. இதற்கிடையில், பலத்த மழை பெய்யத் தொடங்கியது, பெய்லியின் வீரர்கள் கொற்றலையார் ஆற்றைக் கடக்க பதினொரு நாட்கள் ஆனது. இந்த நேரம் ஹைதரின் மகன் திப்பு சுல்தானுக்கு, முன்ரோ மற்றும் பெய்லியின் படைகளுக்கு இடையில் தனது 11 ஆயிரம் வீரர்களை நிறுத்த போதுமானதாக இருந்தது." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் பெய்லியின் படையைச் சூழ்ந்த ஹைதரின் படை இரு படைகளுக்கும் இடையே முதல் மோதல் செப்டம்பர் 6-ஆம் தேதி நடந்தது. கேப்டன் முவாத் தனது 'போலிலூர் தோல்வியின் அறிக்கை' (Account of the Defeat of Pollilur) என்ற கட்டுரையில், "தொடர்ந்து பெய்த மழையில், நெல் வயல்களில் முழங்கால் அளவு தண்ணீரில் சண்டையிட்ட பெய்லியின் படையின் பலவீனங்கள் முழுமையாக வெளிப்பட்டன, அவர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது. இரு படைகளும் நேருக்கு நேர் சண்டையிடவில்லை, மாறாகத் தொலைவில் இருந்தே போரிட்டன." எனக் குறிப்பிடுகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்களுக்குச் சற்று முன்னால் எக்காளங்கள் மற்றும் மேளங்களின் சத்தம் கேட்டது. முன்ரோவின் வீரர்கள் தங்களுக்கு உதவ வருகிறார்கள் என்று பெய்லி கருதினார். அந்த வீரர்கள் நெருங்கி வந்தபோது, ஹைதர் தனது 25 ஆயிரம் வீரர்களுடன் தங்கள் முன் வந்துள்ளார் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். பின்னர் பெய்லியின் இளைய சகோதரர் போலிலூர் அறிக்கையில் குறிப்பிடுகையில், "நாங்கள் ஹைதரின் குதிரைப் படையால் சூழப்பட்டோம். அவர்களுக்குப் பின்னால் அவரது பீரங்கிகள் இருந்தன. சுமார் 50 பீரங்கிகள் எங்கள் சுற்றி ஒரு அரை வட்டத்தை உருவாக்கின. ஹைதர் சிறிது நேரம் சண்டையை நிறுத்த உத்தரவிட்டார். பின்னால் வந்த தனது பெரிய பீரங்கிகளை முன்னே கொண்டு வந்தார். அவர்களுக்கு எதிராக எங்களுக்கு அங்கே எந்த வாய்ப்பும் இல்லை." எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images ஆங்கிலேயர் தோல்வி தன்னிடம் இருந்த அனைத்து வெடிமருந்துகளும் தீர்ந்த பிறகு, சரணடைய முயற்சிக்கும் விதமாக பெய்லி தனது வாளால் ஒரு கைக்குட்டையைக் கட்டி மேலே காட்டினார். பெய்லி தனது வீரர்களை ஆயுதங்களைக் கீழே போடுமாறு உத்தரவிட்டார், ஆனால் சில வீரர்கள் அவரது உத்தரவைக் கேட்க முடியாமல் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர். இதன் விளைவாக, ஹைதர் சரணடைதலை ஏற்க மறுத்துவிட்டார். அவரது குதிரைப்படை, போரில் தோற்ற ஆங்கிலேயப் படையை கொல்லத் தொடங்கியது. ஆலன் ட்ரைடன் தனது 'புலி சண்டை போட்ட போது' (When the Tiger Fought the Thistle) என்ற புத்தகத்தில், 73வது ஹைலேண்ட் ரெஜிமென்ட்டின் லெப்டினன்ட் ஒருவரின் கூற்றை இவ்வாறு பதிவு செய்கிறார்: "மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு எழுந்து நின்றனர். சிலர் மூச்சுத் திணறினார்கள். சிலர் தங்கள் சக வீரர்களின் சடலங்கள் மீது விழுந்ததால் நகர முடியாமல் இருந்தனர். சிலர் யானையின் காலடியில் நசுக்கப்பட்டனர். சிலரின் உடைகள் கிழிந்துபோயின, அவர்கள் கொதிக்கும் வெயிலில் தாகத்துடன் கிடந்தனர், எளிதில் காட்டு விலங்குகளுக்கு இரையாயினர். ஆங்கிலேயப் படையில் இருந்த 86 அதிகாரிகளில், 36 பேர் கொல்லப்பட்டனர், 34 பேர் காயமடைந்தனர், மற்றும் 16 பேர் சிறைப்பிடிக்கப்பட்டனர்." பெய்லி தலையிலும் முதுகிலும் காயமடைந்தார். அவர் தனது ஒரு காலையும் இழந்தார். இறுதியாக, பெய்லி ஒரு பீரங்கி வண்டியில் கட்டப்பட்டு ஹைதரின் முன் கொண்டு வரப்பட்டார், மற்ற கைதிகளுடன் தரையில் அமர வைக்கப்பட்டார். தோல்வியடைவது மற்றும் கைதி ஆவதன் பொருள் என்ன என்பதை கம்பெனி வீரர்கள் முதல்முறையாக உணர்ந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கர்னல் பெய்லி ஹைதர் அலியிடம் சரணடைதல். ஆங்கிலேய கைதிகள் கூறியது என்ன? சுமார் ஏழு ஆயிரம் ஆங்கிலேய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஜேம்ஸ் ஸ்கரி என்ற கைதி தனது 'ஜேம்ஸ் ஸ்கரியின் சிறைப்பிடிப்பு, துன்பம் மற்றும் தப்பித்தல்' (The Captivity, Suffering and Escape of James Scurry) என்ற புத்தகத்தில் "பத்து ஆண்டுகள் ஹைதரின் சிறையில் இருந்த பிறகு, நாற்காலியில் எப்படி உட்காருவது, கத்தி மற்றும் முள் கரண்டியால் எப்படிச் சாப்பிடுவது என்பதை நான் முற்றிலும் மறந்துவிட்டேன். ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதையும் நான் மறந்துவிட்டேன். என் தோல் கருப்பாகிவிட்டது, ஐரோப்பிய ஆடைகளை அணிய நான் விரும்பவில்லை." என்று கூறியுள்ளார். மாயா ஜாசனோஃப் தனது 'பேரரசின் யுகம்: கிழக்கில் வெற்றி மற்றும் சேகரிப்பு 1750-1850' (Age of the Empire Conquest and Collecting in the East 1750-1850) என்ற புத்தகத்தில், "பெய்லியின் தோல்விக்குப் பிறகு ஹைதர் சண்டையைத் தொடர்ந்திருந்தால், ஆங்கிலேயர்களின் மன உறுதி இழந்த நிலையில், செயின்ட் ஜார்ஸ் கோட்டையை அவர் கைப்பற்றுவதில் தோல்வி அடைந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஹைதர் தனது வீரர்களைப் பாதுகாக்க விரும்பியதால், கம்பெனிக்கு அது அதிர்ஷ்டமாக அமைந்தது. அவர் கம்பெனியுடன் நேரடியாக மோதும் கொள்கையை விட்டுவிட்டு, தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி விட்டுத் தப்பிக்கும் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கினார்." எனத் தெரிவிக்கிறார். அடுத்த சில மாதங்களில், கவர்னர் ஜெனரல் ஹேஸ்டிங்ஸ், மராட்டியர்களுடனான ஹைதரின் கூட்டணியை உடைப்பதில் வெற்றி பெற்றார். ஹேஸ்டிங்ஸ் மராட்டிய தளபதி மஹாத்ஜி சிண்டேயுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார், இதன் கீழ் மராட்டியர்கள் ஆங்கிலேயர்களின் நண்பர்களாக மாறினர். இதன் விளைவாக, ஆங்கிலேயர்களுக்கு எதிரான அடுத்த போரில் ஹைதரால் தனது வெற்றியை மீண்டும் பெற முடியவில்லை. வில்லியம் டால்ரிம்பிள் (William Dalrymple) தனது 'தி அனார்க்கி' (The Anarchy) என்ற புத்தகத்தில், "1780-இல் ஹைதர் மற்றும் அவரது கூட்டாளிகள் கம்பெனி மீதான அழுத்தத்தைக் குறைக்காமல் இருந்திருந்தால், ஆங்கிலேயர்கள் அதேநேரத்தில் இந்தியாவிலிருந்து என்றென்றும் வெளியேறியிருப்பார்கள். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தத் தவறியதற்காகப் புனே மற்றும் மைசூர் அரசுகள் பின்னர் எப்போதும் வருந்தின." எனக் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,Bloomsbury முதுகு புற்றுநோயால் மரணம் 1782-ஆம் ஆண்டில், ஹைதருக்கு முதுகில் ஒரு கட்டி தோன்றியது. மெதுவாக அந்தக் கட்டியின் அளவு அதிகரித்தது, பின்னர் அது முதுகு புற்றுநோய் என்று தெரியவந்தது. இரண்டாவது ஆங்கிலோ-மைசூர் போரின் போது ஹைதரின் இந்த தீவிர நோய் அவரது பலத்தையும் வேகத்தையும் வெகுவாகக் குறைத்தது. ஒரு சாதாரண நிலையிலிருந்து உச்சிக்கு உயர்ந்த இந்த நபர், 1782 டிசம்பர் 7-ஆம் தேதி 60 வயதில் காலமானார். ஷாமா ராவ் தனது 'ஆரம்பம் முதல் 1868 வரை நவீன மைசூர்' (Modern Mysore from Beginning to 1868) என்ற புத்தகத்தில் "ஹைதரின் மரணம் இந்தியாவின் வரலாற்றில் ஒரு சாதாரண நிகழ்வு மட்டுமல்ல என்று கூறுவது மிகையாகாது. அவரது மரணம் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரத்தின் அடித்தளத்தை அமைத்தது, இது அவர் உயிருடன் இருந்திருந்தால் சாத்தியமாகியிருக்காது." என்று குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev8ze8wyn1o
2 months 1 week ago
டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை Published By: Vishnu 09 Dec, 2025 | 04:14 AM (எம்.மனோசித்ரா) தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடி மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறக்க வேண்டியேற்படும் என்பதால், தற்போது அவை சிறியளவில் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த வாரம் முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலையால் நேற்று திங்கட்கிழமை மாலை வரை 635 பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 512 123 குடும்பங்களைச் சேர்ந்த 1, 766, 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5325 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 81 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. எனினும் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருகிறது. அந்த வகையில் 22 218 குடும்பங்களைச் சேர்ந்த 69 861 பேர் 690 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ள. காலநிலை நாடளாவிய ரீதியில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்ககப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கோந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலாபத்திலிருந்து புந்தனம் மற்றும் காங்கோந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது. கடல் நிலை சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் காங்கோத்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓhளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை, காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டியில் ஹதரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பஹஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்டை, பூஜாபிட்டிய, கங்கா இஹல கோரள, பன்வில, கங்வத்த கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொலுவ, தும்பனை, அக்குரனை, உடுநுவர மற்றும் பஹததும்பர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலையில் கேகாலை, கலிகமுவ, மாவனல்ல, புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, ஹட்டியாந்தோட்டை, ரம்புக்கனை மற்றும் வரகாலப்பொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருணாகலில் மாவத்தகம, மல்லவபிட்டி மற்றும் ரிதீகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளையில் நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்க கோரள, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை மற்றும் யட்டவத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232830
2 months 1 week ago
பண்டாரநாயக்க நிதியம் 250 மில்லியன் ரூபா நிதியுதவி Dec 8, 2025 - 11:32 PM இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. இந்த நிதியை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிந்தும சுனில் சேனவி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmixglft002jfo29n5mf85vaa
Checked
Sun, 02/22/2026 - 10:22
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed