புதிய பதிவுகள்2

மரப்பாவம்

2 months ago
அடுத்ததாக 'உங்கள் பாவம்.......' என்ற தலைப்பில் ஒன்றை எழுதலாம் என்று நினைக்கின்றேன்......................🤣. இதற்கு முன்னர் எழுதிய சில ஆக்கங்கள் இறுதியில் துயரமாக முடிந்து இருந்ததால், இந்த ஆக்கத்தை ஒரு இலகுவானதாக எழுத வேண்டும் என்று நினைத்தே இப்படியான ஒன்றை தெரிவு செய்திருந்தேன்..............

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 months ago
சம்பந்தனின் “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு” ஜவ்வு மிட்டாய் போல… மலையகமக்களை தோட்டங்களிலேயே ராஜாவாக்குவோம்.. என இங்கே சில அறை கூவல்களை கேட்க கூடியதாக உள்ளது. ராசாமார்….உங்களுக்கு சிங்களவன் தமிழ் ஈழம் கூட தருவான்…ஆனால் இதை செத்தாலும் செய்யமாட்டான்…. இது உங்களுக்கும் தெரியும். ஆனால் நேரடியா மலையக மக்கள் எம் ஊரில் வேண்டாம் என சொன்னால் இமேஜ், டமேஜ் ஆகிவிடும் என்பதால், இப்படி ஒரு சம்பந்த வியாக்கியானம் கொடுக்கிறீர்கள். ஆப்கானிய, எகிப்திய, ஜோர்தானிய, லெபனானிய இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் துன்புற்ற யூதர்களை இஸ்ரேல், உள்ளே எடுத்து, வீடும் காணியிம், தொழிலும் கொடுத்தத்து. இப்படி செய்யதால் அது இனச்சுத்தீகரிப்பாகிவிடும்…எனவே நீங்கள் அங்கேயே கிடந்து மாளுங்கள் என சக யூதர்களை அவர்கள் விட்டு விடவில்லை. ம்ம்ம்…அவன் யூதன்…கூர்ப்பில் முன்னேறியவன். நாங்கள் பெயருக்குத்தான் ஜப்னா ஜூ 😂. மூலோபாய சிந்தனை அறவே அற்ற கூட்டம்.

மரப்பாவம்

2 months ago
மரங்களை பராமரிப்பது கடினமானதும், உடனடிப் பிரயோசனம் அற்றதுமான ஒன்று என்றே பலரும் நினைக்கின்றார்கள் போல. வீடுகளில் முன்னும், பின்னும் இருக்கும் நிலங்களை காங்கிரீட் அல்லது டைல்ஸ் அல்லது அழகான கற்களால் மூடி விடுவதும் இங்கு ஒரு வழமையாகிவிட்டது. நிலமும் மூச்சு விடக்கூடாது.............🤣. இந்தப் பக்கம் முழுவதும் வீட்டுத்தோட்ட வேலைகளை செய்வதும் அவர்களே. அவர்கள் தங்களுக்கு ஆங்கிலம் தேவையில்லை என்று கூடி முடிவெடுத்து இருக்கின்றார்கள் போல. முன்னர் ஒரு அயலவர் இருந்தார். அப்பவே வயதான ஒரு இந்தியர். அவர் எந்த மரத்தை, செடியை அவர் வீட்டில் வைத்தாலும், அது வளருவதேயில்லை. ஆனால் அங்கு தோட்டவேலைகள் செய்பவர் அந்த வீட்டில் எதை வைத்தாலும் அது நன்றாக வளர்ந்தது. அவர்கள் ஒரு செடியை அல்லது மரத்தை தலைகீழாக நட்டாலும் அவை துளிர்க்கும், அவர்களின் கைராசி அப்படி என்று அவர் அடிக்கடி சொல்லுவார். என் வீட்டில் மனைவி சில செடிகளை அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று இடம் மாற்றுவார். ஒரு நாள் அந்த அயலவர் என்னைக் கூப்பிட்டு, 'மரங்களும் மனிதர்கள் போலவே. மண்ணுடன் ஒட்டினால் மட்டுமே அவை பிழைக்கும். அடிக்கடி இடம் மாற்றினால் அவை எங்கும் ஒட்டாமல் போய் விடும்................' என்றார். அவர் செடிகளைத் தான் சொன்னார், ஆனால் அதுவே எங்கள் வாழ்க்கையின் பாடமும் கூட.................

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 months ago
அண்ணை யாரும் யாரையிம் அடியோடு புடுங்க, கேட்காமல் இழுத்து வர கேட்கவில்லை. அவர்கள் எமம்முடன் வந்து வாழும் ஏது நிலையை உருவாக்குவோம்… முதலில் ஒரு சிலர் வரட்டும்…அவர்களை கைதூக்கி விடுவோம்… அதன் பின் அவர்கள் ஏனையோரை அழைப்பர்…அடித்தடுத்த சந்ததி..அவர்களுக்கு அவர்களே வழிகாட்டுவார்கள். இப்படித்தானே அண்ணை, கொழும்பையே காணாத, ஊரில் காலை எழுந்ததும் பனங்கூடலுக்க ஒதுங்கின ஆட்களை எல்லாம் இலண்டன், பரிஸ், கனடா எண்டு எடுத்து விட்டு…இப்ப அவை எல்லாம் செருப்பு போடாமல் நடக்க முடியாது எண்டு சொல்லும் அளவுக்கு “முன்னேறி” இருக்கினம். 2026 இல் 50 குடும்பங்களை, 200 தனி ஆண்களை இப்படி எடுத்து விட்டால், ஆண்டு 9+ படிக்கும் பிள்ளையள் 200 பேரை எமது பள்ளிகளில், பள்ளிக்கு 20 பேர் என ஹொஸ்டலில் சேர்த்து விட்டால்—- 2056ம் வருடத்தில் லைன், தேயிலை பறிக்கும் தொழில் எதுவும் இருக்காது. தேயிலை ஒன்றில் சிங்களவர் பறிக்கலாம், அல்லது அதற்குரிய சம்பளத்தில் சகல இனத்தவரையும் வேலைக்கு அமர்த்தலாம் அல்லது தானியங்கிகளை அறிமுகம் செய்யலாம். வளைவு, கோபுரம், கோவில், விளையாட்டு மைதான சுற்று மதில், அம்மா, அப்பா பெயரில் அன்னதானம்… #இன்ன யாவிலும் புண்ணியம் கோடி புண்ணியம் மட்டும் இல்லை, வடக்கும் தொடர்ந்து தமிழர் நிலமாக நிலைக்கும்😂. அதாவது மாவட்டம்/மாகாணத்துகுரிய வழமையான 100% சுயநலத்துடன் சிந்தித்தால் கூட இது நல்ல விடயமே😎.

நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!

2 months ago
எனக்கும் இது பெரிய ஆச்சரியமாக உள்ளது. 5-10 பேர் என்றால் பயத்தில் திரும்ப போகவில்லை என்று சொல்லலாம். கோசான் பொறுத்த நேரத்தில் இலங்கை பயணம் மேற்கொண்டு இருக்கிறீர்கள். எதுவித துன்பமும் இல்லாமல் சுகமாக திரும்ப வந்தது சந்தோசம். இந்த தடவை முக்கியமான பயணமாக இருந்திருக்கும். எனவே நேரமிருந்தால் உங்கள் பயணத்தை நேரடி அனுபவங்களை எழுதுங்கள்.

நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!

2 months ago
பயணிகள் என்ன ஆனார்கள்? வீரகேசரி ஆதவனுக்கு தமிழ் திக்குவது போல டெய்லி மிரருக்கு ஆங்கிலம் திக்கி உள்ளது. இரண்டு பந்தியும் முதலாவது (திரும்பி வந்த) பறப்பைத்தான் சுட்டுகிறன. ஆனால் ஒரு இடத்தில் 202 என்றும் மற்ற இடத்தில் 51 எண்டு அடித்துள்ளனர். டைப்போ என நினைக்கிறேன்.

மரப்பாவம்

2 months ago
வேற என்ன வாழைமரம் தான். காருக்கே இவ்வளவு சேதம் என்றால் வீட்டின் மேல் விழுந்தால் வீடே நசிந்திருக்கும்.

மரப்பாவம்

2 months ago
அயலவர் உங்களுக்குத்தானே தொல்லை தந்தார். அப்படிப் பார்த்தால் அது உங்கள் பாவம் என்றுதானே ஆகிவிடும். அயலவர்கள் தொல்லை எல்லா இடங்களிலும் உண்டு. மரப்பாவம் பொல்லாதது என்று நீங்கள் சொல்வதால் மரங்களை நட்டு இயற்கையைப் பாதுகாப்போம். வழமைபோல் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.👏

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்

2 months ago
ஐபிஎல் 10 அணிகளின் முழு விவரம் - எந்த அணியில் எந்த வீரர்கள்? பட மூலாதாரம்,Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் அபுதாபியில் நடைபெற்ற ஏலத்திற்குப் பிறகு, 2026 ஐபிஎல் அணிகள் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடரின் 19-வது சீசனில் 10 அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. *வெளிநாட்டு வீரர்களைக் குறிக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் எம்.எஸ் தோனி அன்ஷுல் கம்போஜ் குர்ஜப்னீத் சிங் ஜேமி ஓவர்டன்* முகேஷ் செளத்ரி நேதன் எல்லிஸ்* நூர் அகமது* ராமகிருஷ்ணா கோஷ் சஞ்சு சாம்சன் ருதுராஜ் கெய்க்வாட் ஷிவம் துபே ஸ்ரேயாஸ் கோபால் கலீல் அகமது ஆயுஷ் மாத்ரே டெவால் ப்ரெவிஸ்* உர்வில் படேல் கார்த்திக் ஷர்மா பிரசாந்த் வீர் ராகுல் சஹர் மேட் ஹென்றி* அகீல் ஹொசைன்* மேத்யூ ஷார்ட்* ஸாக் ஃபோக்ஸ்* சர்ஃபராஸ் கான் அமன் கான் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் டெல்லி கேபிடல்ஸ் அபிஷேக் பொரெல் அஜய் மண்டல் அசுதோஷ் சர்மா அக்‌ஷர் படேல் துஷ்மந்தா சமீரா கருண் நாயர் கே.எல் ராகுல் குல்தீப் யாதவ் மாதவ் திவாரி மிட்செல் ஸ்டார்க்* முகேஷ் குமார் நிதிஷ் ராணா சமீர் ரிஸ்வி டி. நடராஜன் திரிபுரானா விஜய் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்* விப்ராஜ் நிகம் ஆகிப் நபி தார் பதும் நிசன்கா* கைல் ஜேமிசன்* லுங்கி இங்கிடி* பென் டக்கட்* டேவிட் மில்லர்* பிரித்வி ஷா சாஹில் பராக் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முகமது சிராஜ் குஜராத் டைட்டன்ஸ் அனுஜ் ராவத் கிளென் ஃபிலிப்ஸ்* குர்னூர் சிங் ப்ரார் இஷாந்த் சர்மா ஜெயந்த் யாதவ் ஜோஸ் பட்லர்* ககிசோ ரபாடா* குமார் குஷாக்ரா மானவ் சுதார் முகமது சிராஜ் முகமது அர்ஷத் கான் நிஷாந்த் சிந்து பிரசித் கிருஷ்ணா ஆர். சாய் கிஷோர் ராகுல் திவாதியா ரஷித் கான்* சாய் சுதர்சன் ஷாருக் கான் சுப்மன் கில் வாஷிங்டன் சுந்தர் ஜேசன் ஹோல்டர்* டாம் பேன்டன்* அஷோக் சர்மா லூக் வுட்* பிரித்விராஜ் யார்ரா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அஜிங்க்யா ரஹானே அங்க்ரிஷ் ரகுவன்ஷி அனுகுல் ராய் ஹர்ஷித் ராணா மனிஷ் பாண்டே ரமன்தீப் சிங் ரிங்கு சிங் ரோவ்மன் பவல்* சுனில் நரைன்* உம்ரான் மாலிக் வைபவ் அரோரா வருண் சக்கரவர்த்தி கேமரூன் கிரீன்* மதீஷா பதிரனா* முஸ்தபிஸுர் ரஹ்மான்* தேஜஸ்வி சிங் ரச்சின் ரவீந்திரா* ஃபின் ஆலன்* டிம் செய்ஃபர்ட்* ஆகாஷ் தீப் ராகுல் திரிபாதி தக்‌ஷ் கம்ரா சர்தக் ரஞ்சன் பிரசாந்த் சோலங்கி கார்த்திக் தியாகி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரிஷப் பண்ட் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அப்துல் சமத் எய்டன் மார்க்ரம்* ஆகாஷ் சிங் அர்ஜுன் டெண்டுல்கர் அர்ஷின் குல்கர்னி ஆவேஷ் கான் ஆயுஷ் பதோனி திக்வேஷ் ராத்தி ஹிம்மத் சிங் மணிமாறன் சித்தார்த் மேத்யூ ப்ரீட்ஸ்கி* மயங்க் யாதவ் முகமது ஷமி மிட்செல் மார்ஷ்* மோசின் கான் நிக்கோலஸ் பூரன்* பிரின்ஸ் யாதவ் ரிஷப் பண்ட் ஷாபாஸ் அகமது ஜாஷ் இங்கிலிஸ்* முகுல் செளத்ரி அக்‌ஷத் ரகுவன்ஷி ஆண்ரிக் நோர்க்யா* வனிந்து ஹசரங்கா* நமன் திவாரி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அல்லா கசன்ஃபர்* அஷ்வனி குமார் கார்பின் பாஷ்* தீபக் சஹர் ஹர்திக் பாண்ட்யா ஜஸ்ப்ரித் பும்ரா மயங்க் மார்கண்டே மிட்செல் சான்ட்னர்* நமன் திர் ரகு ஷர்மா ராஜ் அங்கத் பாவா ராபின் மின்ஸ் ரோஹித் சர்மா ரயன் ரிக்கில்டன்* ஷர்துல் தாக்கூர் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்* சூர்யகுமார் யாதவ் திலக் வர்மா டிரென்ட் போல்ட்* வில் ஜாக்ஸ்* குவின்டன் டி காக்* மயங்க் ராவத் அதர்வா அங்கோலேகர் முகமது இஸார் டேனிஷ் மலேவர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அர்ஷ்தீப் சிங் அஸ்மதுல்லா ஓமர்சாய்* ஹர்னூர் பண்ணு ஹர்பிரீத் ப்ரார் லாகி ஃபெர்குசன்* மார்கோ யான்சன்* மார்கஸ் ஸ்டாய்னிஸ்* மிட்ச் ஓவன்* முஷீர் கான் நேஹல் வதேரா பிரப்சிம்ரன் சிங் பிரியான்ஷ் ஆர்யா பைலா அவினாஷ் ஷஷாங்க் சிங் ஸ்ரேயாஸ் ஐயர் சூர்யான்ஷ் ஷெட்கே விஷ்ணு வினோத் வைஷாக் விஜய்குமார் சேவியர் பார்ட்லெட்* யஷ் தாக்கூர் யுஸ்வேந்திர சஹால் பென் த்வார்ஷுயிஸ்* கூப்பர் கானலி* விஷால் நிஷாத் பிரவின் துபே பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,யஷஸ்வி ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் துருவ் ஜூரெல் டானவன் ஃபெரீரா* ஜோஃப்ரா ஆர்ச்சர்* க்வேனா மஃபாகா* லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்* நாண்ட்ரே பர்கர்* ரவீந்திர ஜடேஜா ரியான் பராக் சாம் கரண்* சந்தீப் ஷர்மா ஷிம்ரான் ஹெட்மயர்* ஷுபம் துபே துஷார் தேஷ்பாண்டே வைபவ் சூர்யவன்ஷி யஷஸ்வி ஜெய்ஸ்வால் யுத்வீர் சரக் ரவி பிஷ்னோய் ஆடம் மில்ன்* ரவி சிங் சுஷாந்த் மிஸ்ரா குல்தீப் சென் பிரிஜேஷ் ஷர்மா அமன் ராவ் பெரலா விக்னேஷ் புத்தூர் யஷ் ராஜ் புஞ்சா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபிநந்தன் சிங் புவனேஷ்வர் குமார் தேவ்தத் படிக்கல் ஜேக்கப் பெதல்* ஜிதேஷ் ஷர்மா ஜாஷ் ஹேசல்வுட்* க்ருனால் பாண்டியா நுவான் துஷாரா* ஃபில் சால்ட்* ரஜத் படிதார் ரசிக் தார் ரொமாரியோ ஷெப்பர்ட்* சுயஷ் சர்மா ஸ்வப்னில் சிங் டிம் டேவிட்* விராட் கோலி யாஷ் தயாள் வெங்கடேஷ் ஐயர்* மங்கேஷ் யாதவ் ஜோர்டான் காக்ஸ்* கனிஷ்க் சௌஹான் விஹான் மல்ஹோத்ரா விக்கி ஓஸ்ட்வால் சாத்விக் தேஸ்வால் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,விராட் கோலி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபிஷேக் சர்மா அனிகேத் வர்மா பிரைடன் கார்ஸ்* இஷான் மலிங்கா* ஹர்ஷ் துபே ஹர்ஷல் படேல் எய்ன்ரிக் கிளாசன்* இஷான் கிஷன் ஜெய்தேவ் உனத்கட் கமிந்து மெண்டிஸ்* நிதிஷ் குமார் ரெட்டி பேட் கம்மின்ஸ்* ஸ்மரன் ரவிச்சந்திரன் டிராவிஸ் ஹெட்* ஜீஷன் அன்சாரி லியாம் லிவிங்ஸ்டன்* ஜாக் எட்வர்ட்ஸ்* சலில் அரோரா ஷிவம் மாவி கிரைன்ஸ் ஃபுலேத்ரா பிரஃபுல் ஹிங்கே அமித் குமார் ஓன்கர் டார்மலே சகிப் ஹுசேன் ஷிவாங் குமார் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y9xl8exk5o

மரப்பாவம்

2 months ago
வீடுகளில் மரங்களை வைக்கும், அல்லது இருக்கும் மரங்களைப் பேணும் பழக்கம் அருகி வருகிறது. இரு வீடுகளின் எல்லையில், எங்கள் காணிக்குள் நின்ற ஒரு Pin Oak மரம் இறந்து வரும் அறிகுறிகள் தெரிவதாக அயல் வீட்டுக் காரர் என்னிடம் சொன்னார். முறைப்பாடுகள் செய்யாத நட்பான மனிதர். வெட்டும் செலவில் அரைவாசியை தான் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி, அவரே மரம் தறிக்கும் கம்பனி ஒன்றையும் ஏற்பாடு செய்தார். ஆங்கிலத்தில் ஒரு சொல்லும் தெரியாத மெக்சிக்கன் வேலையாட்கள் வந்து சர சரவென்று 2 மணி நேரங்களில் சாய்த்து விட்டுப் போனார்கள். வீட்டின் முன் பக்கம் நிழல் பெரிய இழப்புத் தான் என்றாலும், புயல் காற்றில் வீட்டின் மேல் சாய்ந்திருந்தால் பெரிய வேலையாக முடிந்திருக்கும். எப்போதாவது வரும் புயல், மரம் வீழ்தல், காப்புறுதி என்று வலு சீரியசாக யோசிக்கும் இந்திய அமெரிக்க அயலவர்கள் வீடு வாங்கியவுடன் செய்யும் முதல் பணிகளில் ஒன்று சுற்றி நிற்கும் மரங்களை வெட்டிச் சாய்ப்பது தான்.

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

2 months ago
19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை துவம்சம் செய்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா Published By: Vishnu 17 Dec, 2025 | 01:10 AM (நெவில் அன்தனி) துபாய், தி செவன்ஸ் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண ஏ குழு போட்டியில் மலேசியாவை துவம்சம் செய்து 315 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இந்தியா, தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது. அபிக்யான் அபிஷேக் குண்டு குவித்த ஆட்டம் இழக்காத இரட்டைச் சதம், வேதாந்த் த்ரிவேதி பெற்ற அரைச் சதம், தீப்பேஷ் தேவேந்திரன் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது. அபிக்யான் அபிஷேக் குண்டு ஆட்டம் இழக்காமல் 208 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 90 ஓட்டங்களையும் வைபவ் சூரியவன்ஷி 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முஹம்மத் அக்ரம் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். 409 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 32.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. மத்திய வரிசையில் ஹம்ஸா பங்கி 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். பந்துவீச்சில் தீப்பேஷ் தேவேந்த்ரன் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் உதாவ் மோகன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: அபிக்யான் அபிஷேக் குண்டு virakesari.lk/article/233584#google_vignette

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025

2 months ago
பொண்டி தாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட 3 ஆவது ஆஷஸ் போட்டியில் அலெக்ஸ் கேரி அபார சதம் 17 Dec, 2025 | 05:19 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு கிழக்காக அமைந்துள்ள பொண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 15 பேருக்கு கௌரவஞ்சலி செலுத்தும் முகமாக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (17) காலை ஆரம்பமாவதற்கு முன்னர் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வீரர்கள், மத்தியஸ்தர்கள், பார்வையாளர்கள் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர். இரண்டு அணிகளினதும் வீரர்கள் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர். இந்தப் போட்டி ஆரம்பமாவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் ஸ்டீவன் ஸ்மித் விலகிக்கொண்டார். தலைச்சுற்று, குமுட்டல் காரணமாக நாணய சுழற்சிக்கு சற்று முன்னர் ஸ்டீவன் ஸ்மித் விலகிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக விளையாடும் பதினொருவர் அணியில் உஸ்மான் கவாஜா இணைத்துக்கொள்ளப்பட்டார். இன்று ஆரம்பமான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ட்ரவிஸ் ஹெட் (10), ஜேக் வெதரோல்ட் (18), மானுஸ் லபுஸ்ஷேன் (19) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். ஐபிஎல் ஏல வரலாற்றில் சாதனைமிகு 25.20 கோடி இந்திய ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் வாங்கப்பட்ட கெமரன் கிறீன் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். எனினும் அணிக்கு மீளழைக்கப்பட்ட உஸ்மான் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டார். உஸ்மான் கவாஜா 82 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ஜொஷ் இங்லிஸுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 59 ஓட்டங்களை கேரி பகிர்ந்தார். ஜொஷ் இங்லிஸ் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அணியில் இணைந்த அணித் தலைவர் பெட் கமின்ஸ் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். (271 - 7 விக்.) இந் நிலையில் அலெக்ஸ் கேரி 8ஆவது விக்கெட்டில் மிச்செல் ஸ்டார்க்குடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்களைக் கடக்க உதவினார். அலெக்ஸ் கேரி 143 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 106 ஓட்டங்களைப் பெற்றார். மிச்செல் ஸ்டார்க் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/233663

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

2 months ago
19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கை சாதனையை இந்திய வீரர் அபிக்யான் சமப்படுத்தினார் 16 Dec, 2025 | 05:02 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய மத்திய வரிசை வீரர் அபிக்யான் அபிஷேக் குண்டு ஆட்டம் இழக்காமல் 209 ஓட்டங்களைக் குவித்து, தனிநபருக்கான ஆசிய கிண்ண துடுப்பாட்ட சாதனையை சமப்படுத்தினார். கோலாலம்பூரில் 13 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் கத்தாருக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வீரர் சௌம்யா சர்க்கார் 209 ஓட்டங்களைக் குவித்து தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கை சாதனையை நிலைநாட்டியிருந்தார். அத்துடன் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையையும் சர்க்கார் நிலைநாட்டியிருந்தார். அவரது சாதனையையே 17 வயதுடைய அபிக்யான் அபிஷேக் குண்டு இன்று சமப்படுத்தினார். 125 பந்துகளை எதிர்கொண்ட அபிக்யான் அபிஷேக் குண்டு 17 பவுண்டறிகளையும் 9 சிக்ஸ்களையும் குண்டுமாரி பொழிவதுபோல் விளாசித் தள்ளினார். அவரது இரட்டைச் சத உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது. அத்தடன் அப் போட்டியில் அபிஷேக் குண்டு 3ஆவது விக்கெட்டில் வேதாந்த் த்ரிவேதியுடன் 212 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டார். தொடர்ந்து கனிஷ்க் சௌஹானுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 87 ஓட்டங்களை அபிஷேக் குண்டு பகிர்ந்தார். அதிரடிக்கு பெயர்பெற்ற இளம் புயல் வைபவ் சூரியவன்ஷி 50 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 90 ஓட்டங்களையும் பெற்றனர். இப் போட்டியில் இந்தியா குவித்த 408 ஓட்டங்களானது 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் பதிவான இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். நான்கு தினங்களுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிராக இந்தியா 6 விக்கெட்களை இழந்து குவித்த 433 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். பந்துவீச்சில் மொஹம்மத் அக்ரம் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். 409 ஓட்டங்கள் என்ற நினைத்துப்பார்க்க முடியாத இமாலய வெற்றி இலக்கை நோக்கி மலேசியா துடுப்பெடுத்தாடி வருகிறது. https://www.virakesari.lk/article/233564

போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.

2 months ago
அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு ; துப்பாக்கிதாரி மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு Published By: Digital Desk 3 17 Dec, 2025 | 12:32 PM அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரு துப்பாகிதாரிகளில் உயிர் பிழைத்த துப்பாகிதாரி நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது. மற்றொரு துப்பாக்கிதாரியான அவரது 50 வயதுடைய தந்தை சஜித் அக்ரம், சம்பவ இடத்தில் பொலிஸார் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். சிட்னி நகரின் மிகவும் பிரபலமான போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை யூதர்களின் ஹனுக்கா நிகழ்வில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் சிறுமி ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 40 பேர் காயமடைந்தனர். 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவாகும் என குறிப்பிடப்படுகிறது. https://www.virakesari.lk/article/233622

இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி!

2 months ago
இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி ! Published By: Digital Desk 3 17 Dec, 2025 | 04:50 PM வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டுள்ளது. அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற நிலைமையும் காணப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். இதன் காரணமாக தற்பொழுது நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை இரவு முதல் (18) வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் கிழக்கு ஊவா, மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. காற்றுச்சுழற்சி இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருப்பதனாலும் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல உறுதியற்ற தன்மையினாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இன்று முதல் (17) எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சற்று கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை மாவட்டங்களில் கனமழையோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் மழை தொடர்ந்து கிடைத்து வருவதாலும் கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை கிடைக்கும் என்பதனாலும் கிழக்கு மாகாணத்தில் குளங்களுக்கு நீரை கொண்டு வருகின்ற நீரேந்துப் பிரதேசங்களுக்கும் மழை தொடரும் என்பதனாலும் கிழக்கு மாகாண குளங்களுக்கு அதிகளவான நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற மிதமான மற்றும் கனமான மழை காரணமாக வடக்கு மாகாணத்தில் பல குளங்கள் வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகின்றது. எனினும் நாளை (18) இரவு முதல் வடக்கு மாகாணத்திற்கு மழை குறைவடையும் வாய்ப்புள்ளது. அதேவேளை கடந்த சில நாட்களாக நிலவிய குளிர் மீண்டும் நாளை மறு தினம் (19) முதல் அதிகரிக்கும் என்பதோடு இந்த குளிரான வானிலை 26 ஆம் திகதி வரைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/233662

டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர்

2 months ago
டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் 17 Dec, 2025 | 04:11 PM டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பேரழிவு குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த உப தலைவர் , பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அனர்த்த சமயத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா இலங்கைக்கு வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவியையும் அவர் மனப்பூர்வமாக பாராட்டினார். குறிப்பாக சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அத்தோடு இலங்கை எதிர்கொண்ட அனர்த்த நிலைமை மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் குறித்து சீன பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதே அரசாங்கத்தின் பிரதான பிரயத்தனமாக இருந்தாகவும் பின்னர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அவர்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக திட்டமிடப்பட்ட வகையில் பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வள பாதுகாப்பு குழுவின் தலைவரான LU XINSHE, வெளிநாட்டலுவல்கள் குழுவின் உப தலைவரும் தேசிய மக்கள் காங்கிரஸின் சீன-இலங்கை நட்புறவுக் குழுவின் உப தலைவருமான WANG KE, சமூக அபிவிருத்திக் குழுவின் உப தலைவரான TAN TIANXING, நிலைக்குழுவின் பொதுச் செயலகத்தின் வெளியுறவுக் குழுவின் உப பணிப்பாளர் TANG JIAN,வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரத் திணைக்கள ஆலோசகர் YANG YIN , வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரத் திணைக்கள மூன்றாவது செயலாளர் SHA LONG மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் QI ZHENHONG ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/233645
Checked
Mon, 02/23/2026 - 13:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed