2 months ago
மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - உதவிக்கு சென்ற முதியவர்கள் மீது சித்திரவதை 17 Dec, 2025 | 02:58 PM யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து அட்டகாசம் புரிந்த வன்முறை கும்பலிடம் இருந்து இளம் தாயையும் குழந்தையையும் மீட்க சென்ற முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மண்டைதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றின், கணவர் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற நிலையில் , மனைவியும் அவர்களது சிறு குழந்தையும் வீட்டில் தனியாக இருந்த போது நள்ளிரவு வேளை மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர். வீட்டில் இருந்த பெண் , அபயக்குரல் எழுப்பிய வேளை உதவிக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் முதியவரும், மற்றுமொரு வீட்டில் வசிக்கும் வயோதிப தம்பதிகளும் விரைந்துள்ளனர். அதன் போது முதியவர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட போது, அவரது கை விரல் ஒன்று துண்டாட்டப்பட்டுள்ளது. அத்துடன் வயோதிப தம்பதியினரில் முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்டு, தம்பதியினரை முழங்காலில் இருந்தியுள்ளனர். வீட்டினுள் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நின்று அட்டகாசம் புரிந்த பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் கடற்படை இணைந்து கடமையில் நிற்கும் நிலையில் மண்டைதீவுக்குள் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, வன்முறைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாதை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/233639
2 months ago
அவர் சொல்லாமலேயே போய் விட்டார், ஏராளன். முறைக்காமல் விட்டதே பெரிய விசயம் போல..................🤣. நாக்கு இடைக்கிடை புத்தியை முந்தி விடுகின்றது.............😜. பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவம் மட்டும் என்னவாம் என்று பாண்டியராஜன் ஒரு படம் எடுத்தார். மரப்பாவம் மட்டும் சும்மாவா.............. அவருடைய காரை காப்புறுதி நிறுவனம் திருத்திக் கொடுத்தார்கள் என்று நினைக்கின்றேன்.............
2 months ago
ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் 5 வீரர்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபு தாபியில் நடந்து முடிந்தது. மொத்தம் 77 பேர் வாங்கப்பட்ட இந்த ஏலத்தில் சில வீரர்களுக்கு கோடிகளில் பணத்தை அணிகள் அள்ளிக் கொடுத்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் தவிர, சர்வதேச போட்டிகளே ஆடியிராத சில இந்திய உள்ளூர் வீரர்களும் எதிர்பாராத அளவுக்கு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் போன முதல் 5 வீரர்கள் யார்? அவர்களுக்கு அவ்வளவு பெரிய தொகையை அணிகள் வாரியிறைக்க என்ன காரணம்? 1. கேமரூன் கிரீன் - ரூ 25.2 கோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பெரிய தொகையோடு ஏலத்துக்குள் நுழைந்ததால், கிரீன் பெரும் தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போலவே அந்த இரண்டு அணிகளும் இவருக்காக கடுமையாகப் போட்டியிட்டன. இறுதியில் அவரை 25.2 கோடி ரூபாய்க்கு நைட் ரைடர்ஸ் வாங்கியது. பெரிய தொகை வைத்திருந்த அணி என்றாலும், கொல்கத்தாவுக்கு கிரீன் தேவைப்பட்டதன் காரணம் அவர்கள் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்ட்ரே ரஸ்ஸலின் வெற்றிடத்தை நிரப்ப வேண்டியிருந்தது. இந்த ஏலத்தில் அவர்கள் அதைச் செய்திருக்கிறார்கள். ரஸ்ஸலைப் போல் அதிரடியாக பெரிய ஷாட்கள் ஆடக்கூடியவர் கிரீன். ஒருசில ஓவர்களும் வீசக்கூடியவர் என்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நைட்ரைடர்ஸ் அணியில் அவர் முக்கிய அங்கமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் கொல்கத்தா இவ்வளவு பெரிய தொகையை அவர் மீது முதலீடு செய்திருக்கிறது. கிரீன் 25.2 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருந்தாலும், அவருக்கு சம்பளமாக 18 கோடி ரூபாயே கிடைக்கும். மினி ஏலத்தில் வாங்கப்படும் வெளிநாட்டு வீரர்கள், மெகா ஏலத்தின் அதிகபட்ச ஏலத்தொகை அல்லது அதிகபட்ச ரிடன்ஷன் தொகையை விட அதிகமாக ஊதியம் பெற முடியாது என்று ஐபிஎல் புதிய விதி வகுத்திருக்கிறது. அதன்படி கேமரூன் கிரீன், மெகா ஏலத்தின் அதிகபட்ச ரிடன்ஷன் தொகையான 18 கோடி ரூபாயை ஊதியமாகப் பெறுவார். மீதமிருக்கும் 7.2 கோடி ரூபாய் பிசிசிஐ வீரர் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடவில்லை 2. மதீஷா பதிரனா - ரூ 18 கோடி வழக்கமாக வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் அதிக கிராக்கி இருக்கும். அதிலும், அதிவேகமாகப் பந்துவீசக் கூடியவர்களாகவோ, டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாகவோ அறியப்பட்டால் அவர்கள் மீது அணிகள் கூடுதல் ஆர்வம் காட்டுவார்கள். பதிரனா டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாகப் பந்துவீசிய அனுபவம் உடையவர் என்பதால் அவர் மீது பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கடந்த சீசனில் அந்த இடம் நைட்ரைடர்ஸ் அணிக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. அவர்கள் 2024 சீசனில் கோப்பை வென்றபோது மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணாவுடன் இணைந்து டெத் ஓவர்களில் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அது 2025ல் கிடைக்காததால், அதை சரிசெய்ய பதிரனாவை வாங்கியிருக்கிறார்கள். அவரின் சமீபத்திய ஃபார்ம், காயமடைந்த வரலாறு பரவலாகப் பேசப்பட்டாலும், அவர் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் காரணமாக அவரை நம்பியிருக்கிறது நைட் ரைடர்ஸ். பட மூலாதாரம்,Getty Images சரியாக ஏலத்துக்கு முந்தைய நாள், ஐஎல்டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காக 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார். பவர்பிளேவில் ஒரு ஓவர் வீசியவர், அதை மெய்டனாக்கி விக்கெட்டும் எடுத்தார். தொடர்ச்சியான ஏமாற்றமான செயல்பாடுகளுக்குப் பிறகு இந்த ஆட்டம் அவர் மீது அணிகளின் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம். 3 & 4. கார்த்திக் சர்மா & பிரஷாந்த் வீர் - ரூ 14.2 கோடி ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவுக்கும், உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரஷாந்த் வீருக்கும் தலா 14.2 கோடி கொடுத்திருக்கிறது சூப்பர் கிங்ஸ். இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 'அன்கேப்டு' வீரர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரின் அடிப்படை விலையுமே 30 லட்ச ரூபாயாக இருந்தது. விக்கெட் கீப்பர் பேட்டரான கார்த்திக் சர்மாவுக்கு இப்போது 19 வயது தான் ஆகிறது. உள்நாட்டு டி20 போட்டிகளில் சிறப்பான ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். ஏலத்துக்கு முன்பாக பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன் "கார்த்திக் சர்மாவின் அதிரடி ஆட்டம் பல அணிகளின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. அவர் மிகப் பெரிய ஷாட்கள் அடிக்கிறார்" என்று கூறியிருந்தார். இந்த ஏலத்தின்போதும் அது வெளிப்பட்டது. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என பல அணிகளோடு போட்டியிட்டுத்தான் சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கியது. அதேபோல், ஆல்ரவுண்டரான பிரஷாந்த் வீரும் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். கிரிக்பஸ் தரவுகளின்படி 2025 யுபி டி20 லீக்கில் 10 போட்டிகளில் ஆடிய அவர், 320 ரன்கள் அடித்திருக்கிறார். அதை 155.34 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும், 64 என்ற சராசரியிலும் அடித்திருக்கிறார். பந்துவீச்சிலும் 21.75 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இடது கை பேட்டரும், இடது கை ஸ்பின்னருமான அவரை ஜடேஜாவுக்கான மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் பார்க்கிறது என்று பிபிசி தமிழிடம் கூறினார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ. இவரை வாங்க மும்பை, லக்னோ, ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் சென்னையோடு போட்டியிட்டன. அதனால், அவரின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தது. கடந்த சீசன் ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், பிரெவிஸ் போன்ற இளம் வீரர்கள் பெருமளவு சோபித்ததால், அவர்கள்மீது அதிகம் முதலீடு செய்ய சிஎஸ்கே முடிவு செய்திருக்கலாம் என்கிறார் நானீ. 5. லிவிங்ஸ்டன் - ரூ 13 கோடி இந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டருக்கு பல அணிகள் போட்டியிடுவார்கள் என்று ஏலத்துக்கு முன்பு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதிரடி பேட்டர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டுமே வீசக் கூடியவர் என்பதால், நிறைய அணிகளுக்கு அவர் தேவைப்படுவார் என்று கருதப்பட்டது. ஆனால், முதல் சுற்றில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. பல அணிகளும் இளம் வீரர்களையும் வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர்களையும் வாங்குவதற்காக தங்கள் தொகையை அப்படியே வைத்திருந்ததால், தொடக்க கட்டத்தில் பல வீரர்கள் ஏலம் போகவில்லை. அதில் லிவிங்ஸ்டனும் ஒருவராகவே இருந்தார். ஆனால், ஏலத்தின் கடைசி கட்டத்தில் இவர் வர, 13 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு ஆர்சிபி அணியோடு ஐபிஎல் பட்டம் வென்றிருந்தார் லியாம் லிவிங்ஸ்டன் பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தின் கடைசி கட்டத்தில் வரும் ஒருசில வீரர்கள் இப்படி அதிக தொகைக்கு ஏலம் போவது வழக்கம். ஒருசில அணிகளுக்கு பெரிய தொகை மீதமிருக்கும். ஆனால், ஒருசில வீரர்களே தேவையாக இருக்கும். அப்படியிருக்கும் போது வரும் சில வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள். உதாரணமாக 2024 சீசனுக்கான ஏலத்தில், கடைசி கட்டத்தில் ரைலி ரூஸோ 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். லிவிங்ஸ்டன் விஷயத்தில் அதுவே நடந்தது. சன்ரைசர்ஸ், சூப்பர் ஜெயின்ட்ஸ் இரு அணிகளுக்குமே கடைசி கட்டத்தில் பெரும் தொகை மீதமிருந்ததால், லிவிங்ஸ்டனுக்கு அந்த அணிகள் சண்டையிட்டு 13 கோடி ரூபாய் வரை கொண்டு சென்றன. ஏற்கெனவே பலமான பேட்டிங் ஆர்டர் கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை ஒரு ஃபினிஷராகப் பயன்படுத்தக் கூடும். "ஒருவேளை அணியின் ஒட்டுமொத்த பேலன்ஸ் கருதி இரண்டாவது வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரைக் களமிறக்க நினைத்தால், லிவிங்ஸ்டன் வெளியே கூட அமர வைக்கப்படலாம்" என்கிறார் நானீ. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7vmqz3e183o
2 months ago
பரா ரூமி Farah Rumy
2 months ago
"போர்க்கால பாதுகாப்பு முஸ்லிம் குடிபெயர்வு!" வாவ்😂! என்ன ஒரு "சொற் சிலம்பம்" நெடுக்கர். முஸ்லிம்கள் "தாமாகவே சொத்துக்களை விட்டு விட்டு போர் சூழலில் இருந்து குடி பெயர்ந்தனர்" என்று எதிர்காலத்தில் எழுதுவார்கள் என நினைக்கிறேன்😂.
2 months ago
யாழ் களத்தில். படம் இணைபதில். வல்லவர்கள். பலர். இருக்கிறார்கள்.
2 months ago
வாழ்த்துக்கள்! இவரது பெயரை முன்னரும் கேள்விப் பட்டிருக்கிறேன். சுவிசில் மேல் மட்ட அரசியல் பதவிகளுக்கு வருவது என்பது பிரிட்டன், அமெரிக்காவில் இருப்பது போல இலகுவான காரியமல்ல!
2 months ago
மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு தனிமைப்படுத்தல். Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:40 - 0 - 32 தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து டிசம்பர் 6 ஆம் திகதி காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி 10 நாள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனகொண்டா குட்டி, அடைத்து வைக்கப்பட்டிருந்த சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அலுமாரியில் ஒரு டிராயருக்கு அடியில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். காணாமல் போனதிலிருந்து மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் பகல்நேர தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர், அதே நேரத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேர தேடல்கள் தொடங்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார். அனகொண்டா குட்டி அதன் அடைப்பில் உள்ள மிகச் சிறிய துளை வழியாக தப்பித்து அலமாரி டிராயருக்குள் மறைந்திருந்ததாக பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர விளக்கினார். குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மலைப்பாம்பு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பொதுவாக வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உணவளிப்பதாகவும், எனவே இளம் அனகொண்டா காணாமல் போன காலத்தில் எந்த உணவுப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அனகொண்டா குட்டி இப்போது கண்காணிப்புக்காக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சமரசேகர மேலும் கூறினார். Tamilmirror Online || மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு தனிமைப்படுத்தல்
2 months ago
17 Dec, 2025 | 03:24 PM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார். அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு, ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என தெரிவித்தார். இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கிய நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்யுமாறு 15-12-2025 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதித்து மட்டு.மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேரருக்கு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தேரர் இன்று புதன்கிழமை 3 சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சரணடைந்ததையடுத்து, நீதிபதி தேரை தலா ஒரு இலட்சம் ரூபாய் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதேவேளை பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் கொண்ட பெரும் படையுடன் நீதிமன்றத்துக்கு தேரர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிணை | Virakesari.lk
2 months ago
17 Dec, 2025 | 03:13 PM இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகரித்துள்ளது. அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்று இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம், ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகியவற்றின் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்திருந்தது. ஜெர்மனியிடமிருந்து 5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களும், லக்ஸம்பேர்க் அரசிடமிருந்து கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு கொண்டுவரப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக, இலங்கைக்கான ஜேர்மனியின் பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத் (Sarah Hasselbarth), ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிப்போன் (Pierre Tripon) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்! | Virakesari.lk
2 months ago
17 Dec, 2025 | 05:21 PM மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை மீண்டும் இன்று புதன்கிழமை (17) அச்சுப் பிரதியாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (16) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து இன்றையதினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மீண்டும் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (17) சமர்பித்திருந்தனர். இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெறவேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்டைதீவு புதைகுழி விவகாரம் ; வழக்கு விசாரணை 2026 மார்ச் 31 ஆம் திகதிக்கு | Virakesari.lk
2 months ago
17 Dec, 2025 | 05:08 PM கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை வியாழக்கிழமை (18) வானிலை முன்னறிவிப்பு குறித்து இன்று புதன்கிழமை (17) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி! | Virakesari.lk
2 months ago
பாடசாலை படிப்பு மட்டும் வாழ்வைக் கொடுக்காது.
2 months ago
Turkish Airlines flight from Colombo to Istanbul, which was forced to return to Bandaranaike International Airport (BIA) due to a technical issue with its landing gear, departed again this evening after repairs were completed, Airport and Aviation Services (Sri Lanka) (Private) Limited said. They said the flight departed BIA at 5.41 p.m today. Flight TK 733 had taken off from BIA at 10.00 p.m. last night carrying 51 passengers, but developed a landing gear malfunction shortly after departure from Katunayake. As a precaution, the pilot returned the aircraft to BIA, where the runway was prepared for an emergency landing with fire engines, ambulances and emergency response teams placed on standby. The aircraft, which was carrying 202 passengers and 10 crew members at the time, carried out a precautionary fuel dump over the sea prior to landing to reduce risk. It subsequently landed safely at BIA. Airport authorities said several outbound flights experienced delays due to the incident. All passengers were safely evacuated after landing and accommodated at nearby hotels while arrangements were made to repair and reposition the aircraft. https://www.dailymirror.lk/breaking-news/Turkish-Airlines-flight-resumes-journey-after-technical-issue-at-BIA/108-328118 முதலில் 202 பயணிகளுடன் போன விமானத்தில் திருத்த வேலைகள் முடிந்து போகும்போது 51 பயணிகளே போயுள்ளனர். மிகுதிப் பயணிகள் என்ன ஆனார்கள்?
2 months ago
கந்தையா அண்ணா அவா புர்க்கா போடாத பெண் ஆனபடியயால் பயப்பட வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் படத்தை இணைக்க முயற்ச்சித்தேன் முடியவில்லை.
2 months ago
இனி. சுவிஸ. முஸ்லிம். நாடாக. மாறிவிடும். வாழ்த்துகள்.
2 months ago
தலைப்பு. நோட்டோ வில். இணையமாட்டோம். என்றிருக்கிறது. ஆனால். அதன். கீழ் வரும். செய்தி. நோட்டோ. பாதுகாப்பு. வழங்கினால். நோட்டோ வில் இணையமாட்டோம். என்று. உள்ளது. இதையே. நோட்டோவிலுள்ள. எல்லா. நாடுகளும். சொன்னால் நோட்டோ. என்ற. ஒன்றே இருக்காது. அப்படி. என்றால். யார். பாதுகாப்பு. வழங்குவது ? மேலும் உக்கிரேன். அதிபரின் முடிவு. அமுல்படுத்தப்படுவது. நோட்டோ. தான் தீர்மானிக்க. முடியும் மாறாக. உக்கிரேன். அதிபர் இல்லை. அதை. அவரே. மறைமுகமாக. சொல்லி. உள்ளார். தலைப்பு. பிழையாக. இருக்கும் போது. அதனைப்பார்த்து. எழுதும் கருத்துகளும். பிழையாகத் தான். இருக்க. முடியும் மொத்ததில். உக்கிரேன். நோட்டோவில். இணைவது அல்லது இணைவதில்லை. என்பதை. நோட்டோ. தான். தீர்மானிக்க. முடியும். மாறாக. உக்கிரேன். அதிபர். இல்லை. அவரால். நோட்டோவின். பாதுகாப்பு. தேவையில்லை. என்று. சொல்ல முடியுமாயின். நோட்டோவில. இணையவில்லை என்று கூற. முடியும். பாதுகாப்பு. தாருங்கள் என்று கூறும்போது. நோட்டோவில. இணையவில்லை. என்று. கூறும். தகுதியை. உக்கிரேன் அதிபர். இழந்துவிட்டார். அது. நோட்டோவிடம். ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதற்க்கு. சரியான. தீர்வு. பழைய. சோவியத் யூனியனை. உருவாக்குவது. தான். அவ்வாறு. உருவாகும்போது புட்டினின். வேலிக்குள். நோட்டோ. இருக்க மாட்டாதா ? இன்று. உக்கிரேன். நோட்டோவில். இணந்தால். வேலிக்குள் நோட்டோவந்து விடும் என்று. கூறுவது. ஏன். ?
2 months ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
2 months ago
மருந்துகள் ஒருபுறம் மருத்துவர்கள் மற்றும் தாதியரின் தவறுகள் மறுபுறமாக மனிதநலவாழ்வுக்கான மருத்துவத்துறை நிச்சயமற்றதாகி வருகிறது. சில தினங்களின் முன் கிளிநொச்சியில் ஒரு உயிரிழப்பு. அது தாதியரின் தவறால் என்று உரையாடல் இடம்பெற்றதாக இறந்தவரது உறவுகள் ஊடாக அறிந்தேன். எல்லாம் பணமயமாகிவிட்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
2 months ago
மலையக தமிழ் மக்களின் நில உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுதலித்து மலையக தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரின இனச்சுத்திகரிப்டஸ்ரீபுக்க துணை போவதே இந்த அழைப்பின் உண்மை நோக்கம். போர் கால பாதுகாப்பு முஸ்லிம் குடிபெயர்வை இனச்சுத்திகரிப்பு என்றவர் இந்த இன சுத்திகரிப்புக்கு தெரிந்தும் துணை போவது ஏன்?? அ. திட்டமட்ட கருத்தடை ஆ. மக்கள் நல அபிவிருத்தி இன்மை இ. உழைப்புக்கு ஏற்ற ஊதியமினமை ஈ. பாதுகாப்பற்ற வாழ்விடங்கள் உ. நீர்தேக்க விரிவாக்கம் என்ற போர்வையில் வாழிட நிலப்பறிப்பு ஊ. நிர்வாகம் கல்வி கலாசாரம் சிங்கள பௌத்த மயமாக்கம் எ. விகிசாதார கல்வி வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு ஏ. தோட்ட மக்களின் நவீன தேவைகளுக்கு பிற நகரங்களை தங்கி இருக்கரசெய்தல் ஐ. திட்டமிட்ட இனக்கலவரங்கள் சொத்தழிப்பு ஒ. இயற்கை அனர்த்தங்களுக்கு சரியான நிவாரணமின்மை.. எதிர்கால அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க நீண்ட கால திட்டங்கள் செயற்படுத்தாமை. இவற்றோடு இயற்கை அனர்த்த அழிவை பயன்படுத்தி மலையக தமிழ் மக்களை துரித இனச்சுத்திகரிப்பு செய்ய நிற்கும் ஜேவிபிக்கு இவர் ஏன் அடி எடுத்து கொடுக்கிறார்????
Checked
Mon, 02/23/2026 - 13:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed