புதிய பதிவுகள்2
ஆடி மாத சிரிப்புகள்.
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
அப்பலோ தனது வேலையை சரியாகவே செய்து முடிக்கும். நல்ல செய்திக்கு இடமுண்டு.
இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல்
இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல். இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் மேம்பாடு மற்றும் மூலோபாய முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று (22) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் AI Singapore திட்டத்துடன், இலங்கையின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கையெழுத்திட்டு, இந்த ஒத்துழைப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இடையே MoU ஒன்றை கையெழுத்திட ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த ஒத்துழைப்பு, இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமைவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440134
சீமான், விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி!
சீமான், விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி! தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. குறிப்பா அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அதிமுக-பாஜக கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்இ ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள்இ கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி. மு.க. இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 2026-ல்தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மக்களின் துன்பங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்” எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440105
காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் !
காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக இருந்தாலும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றார். காசா போர் 21 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும்,1,700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல உலக நாடுகள், இந்த மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. காசாவில் ஒரு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், பிராந்தியத்தில் அமைதி திரும்புவது கடினம் என்பதே சர்வதேச சமூகத்தின் பொதுவான கருத்தாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440098
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
அடுத்த முதல்வர் யார்.... கனிமொழியா, உதயநிதியா. நாளைக்கு... பங்காளி சண்டை வரக்கூடாது என்பதற்காக, இப்பவே உயில் எழுதி வைப்பது நல்லது.
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
அண்ணன் பார்த்தாலே ஆம்பிளை கூட கர்ப்பம் கன்பர்ம்டா 🔥🔥🔥 இவ்வண், தம்பிகள்
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
முப்பது வயதிற்குள் புலியில் போராடி, புனர்வாழ்வு அளித்து..... இவர்கள் கதை புனையும்போது மற்றவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து புனைகிறார்களா அல்லது முட்டாள்தனமாக புனைகிறார்களா? இவர்களது கதையை பார்க்கும்போது இவர்கள் தங்கள் முட்டாள் கதைகளை மற்றவர்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
கொஞ்சம் ரசிக்க
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
எங்களுக்கு இங்கு ஒரு இந்தியத் தமிழ் குடும்பம் அறிமுகமாகிப் பழகிவருகிறோம். இளம்குடும்பம், நேற்று அவர்கள் எங்களைச் சந்திக்க வந்தபோது இட்லி அவித்துக் கொண்டுவந்தார்கள் நான் 3இட்லி சாப்பிட்டேன். இது பொ்யாகவோ, கேலிக்காகவோ எழுதவில்லை. சத்தியமாக உண்மை.
சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்
ஆம் நான் இந்த இயந்திரத்தினுள் போயிள்ளேன். கட்டயம் உலோகங்கள் ஏதும் உடலில் இருந்தால் கலட்டி விடுமாறு அறிவுறுத்துவார்கள். 90களில் இருந்து வரும் இந்த படத்தில் உள்ள எல்ல பாகமும் பார்த்துள்ளேன். இது கடசியாக கடந்த மாதம் வந்தது. இங்கு கொழும்பில் பார்த்தேன்
காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள்
காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் 22 Jul, 2025 | 11:25 AM காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள் யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதையும் கண்டித்துள்ளனர். மனிதாபிமான உதவி பொருட்களை பெற முயன்ற 800 பொதுமக்கள் கொல்லப்பட்டமை பயங்கரமானது என தெரிவித்துள்ள 25 நாடுகளும் இஸ்ரேலிய அரசாங்கம் மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு பயன்படுத்தும்முறை ஆபத்தானது இது ஸ்திரமின்மையை உருவாக்குவதுடன் காசா மக்களின் மனிததன்மையை பறிக்கின்றது என தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/220603
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
அரசு இந்த முடிவு எடுக்க காரணம். யாரோ ஒரு பெண் குழந்தையை பெற்று வயல் வெளியில் வீசி விட்டு சென்றதினால் தான். மிருகங்கள் கூட இப்படி செய்யாதே. ஆண்சிங்கம், பெண்சிங்கம் என்ன்றில்லை. கிறிமினல் வேலை செய்ய ஆண் பெண் இருபாலரிலும் இருக்கின்றார்கள்.
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
ரமேஷ் என்பவருக்கு தற்போது 30 வயது என்று தெரிகிறது. இன்னமும் பால்குடி மறக்கவில்லையா.??🤔
கருத்து படங்கள்
"அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன் " ........... அதானியை அழைப்பானேன் ஐந்நூறை இழப்பானேன் .......... அவர்கள் வந்தாலும் நஷ்டம் சென்றாலும் நஷ்டம் ......... ! 😇
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி
இறுதியாக வந்த அமெரிக்கநுகர்வோர் விலை சுட்டெண் மீண்டும் அதிகரித்த போக்கினை காட்டுகிறது, இதனிடையே வட்டி விகிதத்தினை குறைக்கவேண்டும் என்பதற்காக மத்திய வங்கி ஆளுநருடன் முன்னர் ட்ரம்ப் முரண்பட்டிருந்தார், தற்போது மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கும் போக்கில் உள்ளது, அரச பாதீட்டின் பற்றாக்குறை 6.7% GDP உள்ள நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நிதிக்கொள்கைகளால் அரச வருமானம் குறைந்து, அதே நேரம் அரச செலவு குறைவதால் பொருளாதாரம் QT போன்ற பொருளாதார சூழ்நிலையினை உருவாக்கி பொருளாதார சுருக்கம் ஏற்படும், தற்போதய ட்ரம்பின் பெரிய அழகிய திட்டத்தின் மூலம் பெரும் நிறுவனங்கள் அதிகளவான நன்மையினை பெற சாதாரண மக்களின் நலன் ஒப்பீட்டளவில் மிக குறைவாக காணப்படுவதால் பொருளாதாரத்தினை தூண்டும் சாதரண மக்களின் செலவு குறைவாக இருப்பதுடன் அரச செலவு குறையும் போது அதிக பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. பல உலக நாடுகள் இதே போல ஒரு இக்கட்டான பொருளாதார நிலைக்கு செல்கின்ற நிலை தொடருகிறது, மக்கள் பற்றிய சிந்தனை அற்ற தலைவர்கள் உலக பொருளாதாரத்தினை பாதிப்பிற்குள்ளாக்க உள்ளார்கள்.
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
தமிழக முதல்வர் ஏன், அரசு ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கவில்லை. தமிழக முதல்வருக்கே... அரசு ஆஸ்பத்திரியில் நம்பிக்கை இல்லை என்றால்.. மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.
புதிய அரசின் பொறுப்புக்கூறல்?
புதிய அரசின் பொறுப்புக்கூறல்? லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாத கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு மற்றுமொரு அல்லது புதிய நெருக்கடியாக அமைய வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பாகும். அது சாத்தியமாவதும் இவ்லாமல் போவதும் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையிலேயே தங்கியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட பிரேரணைத் தீர்மானத்தின் காலம் முடிவடைய இருந்த நிலையில் கடந்த வருடத்தில் அத் தீர்மானம் ஒரு வருடகாலத்திற்கு நீடிக்கப்பட்டது. அது வருகிற செப்ரம்பரில் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், இவ்வருடத்தில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றினை பிரிட்டன் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிட்டனுடைய உறுதியான நிலைப்பாடாக இருப்பதாகவே இப்போது வரையில் அறியமுடிகிறது. கொண்டுவரப்படவுள்ள இந்தப் பிரேரணை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்படும் பொறுப்புக் கூறல் செயற்றிட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான ஏதுக்களைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமானது. மனித உரிமைப் பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள், அது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுதல் என்பன ஒன்றுக்கொன்று சமாந்தரமோ, பொருத்தப்பாடோ இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பதே நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் வருகின்ற செப்டெம்பர் மாதத்தில் ஏற்படுத்தப்படும் பிரேரணைத் தீர்மானமானது இவற்றினை உறுதிப்படுத்தும் வகையிலும் உரிய பிரேரணை தீர்மானங்கள் சிறப்பாக நிறைவேற்றப்படும் வகையிலும் இருப்பது அவசியமாகும். 2022ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணைத் தீர்மானத்தின்படி ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சாட்சியங்களைத் திரட்டும் பணியும் நீடிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் இதனை நீடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியானதுதான். அந்த ஒழுங்கில்தான் புதிய தீர்மானத்தின் கட்டாயம் மற்றும் அவசியம் உணரப்பட்டிருக்கிறது. சாட்சியங்களைத் திரட்டும் பணியை நாட்டுக்குள் மேற்கொள்வதற்கு இலங்கையின் கடந்த அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. என்ற வகையில் புதிய அரசாங்கத்திடமிருந்து இவ்வருடத்தில் அதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பது தெரியாமலிருக்கிறது. ஏனெனில் கடந்த வருடத்தின் கால நீடிப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தது. அந்த வகையில்தான், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டிய அவசியம் காணப்படுகிறது. அத்துடன், மனித உரிமைப் பேரவையின் பிரேரணைத் தீர்மானங்களின் காலத்தை நீடித்தல், புதிய பிரேரணைகளைக் கொண்டுவருதல் மூலம் இலங்கைக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து தங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளத் தமிழர் தரப்பு முயன்று வருகிறது. முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட யுத்தம் ஓய்ந்து 16 வருடங்கள் கடந்த போதிலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உரிய அக்கறையினை காண்பித்திருக்கவில்லை. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இதற்கான வலியுறுத்தல்களே இப்போது நடைபெற்று வருகின்றன என்பதுதான் உண்மை. 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது உள்ளக விசாரணைப் பொறிமுறை மூலம் பொறுப்புக்கூறலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால், அது நடைபெறவில்லை. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் செப்டெம்பர் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டது. அப்போது, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளகப் பொறிமுறையின் கீழ் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி ஆசையினால் அது நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்தவகையில், நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பொறுப்புக்கூறல் விடயமானது கைகூடாமல் போனது. இருந்தாலும், காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றுக்கான செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நம்பிக்கையீனம் காரணமாகத் தமிழ் மக்கள் இவற்றினை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், சர்வதேச விசாரணையையே பாதிக்கப்பட்ட மக்கள் கோரினர். ஆனால், உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்தமையினாலேயே தமிழ் தரப்பினர் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி வருகின்றனர். என்பதனை அரசாங்கம் உணர மறுப்பதே இந்த இடத்தில் சிக்கலாகும். இவ்வாறான சிக்கல்களுக்குள்தான் நல்லாட்சி அரசாங்கம் முடிவுக்கு வந்து புதிய அரசாங்கம் உருவானது. ஆனால், 2022ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து நல்லாட்சி காலத்தில் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களில் முக்கியமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைத்து அதன் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் அதுவும் நின்று போனது. இருந்த போதிலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி வழங்கியிருந்தார். என்பதும், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டும். நாட்டில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வினை கடந்த அரசாங்கங்கள் கால இழுத்தடிப்புடனேயே நகர்த்தின, கடந்து போயிருக்கின்றன. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது வெறுமனே பொறுப்புக்கூறலுடன் முடிந்து போகின்ற விடயமல்ல என்பதும் வெறுமனே வாக்குறுதிகளால் இதனைச் சரி செய்துவிடலாம் என்று எண்ணுவதும் புத்திசாலித்தனமானதல்ல. சீரான முன்னேற்றத்துடன் அது முன்னெடுக்கப்படவேண்டும். அந்த வகையில்தான் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செப்டெம்பர் மாத அமர்வில், இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை கொண்டுவரப்படவேண்டும். அதன் மூலம், இலங்கை அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உருவாகி வருகின்றன. பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வரை அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கும். பிரிட்டன் கொண்டுவரவுள்ள புதிய பிரேரணையானது பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணை அனுசரணை நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ளதாகவே இருக்கும். என்றவகையில், பலமானதொரு தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தமிழர் தரப்பிடம் இருக்கிறது. அந்த ஒழுங்கில்தான், இப்போது ஆட்சியிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றது என்ற குற்றச்சாட்டு வெளிவர ஆரம்பித்திருக்கிறது. அது தவிர்க்கப்படவேண்டுமாக இருந்தால், புதிய அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். இல்லாது போனால், நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் புதிய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை இழப்புக்கு அவர்களே காரணமாவார்கள். அத்துடன், அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டமைக்கு அது சமமானதாகும். அதே நேரத்தில், இலங்கையின் அரசாங்கங்கள் பொறுப்புக் கூறல் விடயத்தில் உரிய அக்கறை காண்பிக்காமையினாலேயே தமிழ் தரப்பு இப்போதும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றமையை மீண்டுமொருமுறை நிரூபிப்பதாகவும் இருக்கும். எது எவ்வாறானாலும், மனித உரிமைப் பேரவையின் செப்டெம்பர் அமர்வில் கொண்டுவரப்படும் பிரேரணையும், அதன் நிறைவேற்றமும் அதற்கு இலங்கை அரசாங்கம் காண்பிக்கும் பிரதிபலிப்பும்தான் இவற்றினைத் தீர்மானிக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புதிய-அரசின்-பொறுப்புக்கூறல்/91-361507
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed