2 months ago
இருவரும் "படம், படம்" என்கிறீர்கள், ஆனால் படமெதையும் காணவில்லை? இதுவும் "வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திக்காமல் பின்கதவு வழியாக ஓடினார்" என்று நீங்கள் விட்ட கரடி போல ஒன்றா அல்லது உண்மையிலேயே ஒரு "படம்" இருக்கிறதா😎?
2 months ago
இந்த சம்பவத்துக்கு புல்லாதான் முதல் காரணி...முழு தமிழின் எதிர்ப்பை காட்டியவர்...ரணிலின் தயவால் பறித்த கம்ம்பசையும் கைப்பற்ரி...கக்கிமின் உதவியால் எம் பியும் ஆகி வெள்ளை வேட்டி கள்வன்...இன்று பார்லிமென்டில்...முழு ஊழல்வாதி ..இப்ப அனுரவின் வீட்டில் சுகபோகம் ..
2 months ago
ஆம், ரஸ்சியவின் (உலகில் மிக கூடிய மேற்கு பொருளாதார தடை கொண்ட) பொருளாதார பலத்தை gdp மறைக்கிறது.
2 months ago
https://youtu.be/7g505MXqnec?si=5qVCOqusRuu7It7M நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண்டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந்தருள்வாயே ..
2 months ago
அவர் மன்னார் ஆள் உயர உயர உயரத்திற்கு சென்றுவிட்டார் நீங்கள் தரையில் என்ற பொறாமை தான் உங்களுக்கு 🤣
2 months ago
தகவலுக்கு நன்றி. இந்த படம் பார்க்க தொடங்கி இருக்கிறேன் 😀 விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்பு நடிக்காததினால் அவரின் பழைய படம் ஒன்று வந்ததாம் ரசோதரன் அண்ணா சொன்னது போல இலங்கையில் தமிழர்களின் திருமணங்கள் சகோதர மொழி பேசுபவர்களுடன் (இனி இப்படி தான் சொல்ல வேண்டுமாம் ) எதிர்காலத்தில் அதிகரிக்கும் ஆனால் சொந்த மொழி பேசும் முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர்களுடன் நடைபெறவேபெறாது.
2 months ago
இன்னும் மூன்று வருசத்ததாலை... 2028´ம் ஆண்டும் இந்தப் படம் ஓடும். 😂 🤣
2 months ago
இந்தியாவில் ஒரு நாளைக்கு பாலியல், வரதட்ஷனை, பெண்பிள்ளை பெற்றதால், கள்ளக்காதலால் இறக்கும் பெண்களின் பதியப்பட்ட தொகை அதிகரித்து வருகிறது. பதியப்படாமலேயே எவ்வளவோ இருக்கிறது. நேற்று ஒரு செய்தி; கர்நாடகாவில் தர்மசாலா எனும் இடத்தில் கொன்று புதைக்கப்பட்ட சிறு பெண்களின் உடல்கள் அறுநூறு அல்லது அதற்குமேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு தேவஸ்தானத்தில் நடந்த படு பயங்கரம். மோடி எங்கு கைகூப்பி, யாரை வணங்குகிறாரோ, அங்கெல்லாம் பாலியல் துஸ்பிரயோகம், கொலை, புதைப்பு.
2 months ago
2015 Day 12 Highlights, Hingis & Mirza vs Makarova & Vesnina final....... ! 😍
2 months ago
சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டு பிடிப்பு. அல்வாயனுக்கு ஒரு பதிவிட்டிருந்தேன். "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது." நான் யாரையும் பிடிக்கவில்லை என்று சிலவற்றை சுட்டிக்காட்டி ஒரு சொல்லில் எழுதினால், ஆதாரம் இருக்கா? வெறும் காழ்ப்புணர்ச்சி என்று சொல்வார்கள். ஆதாரங்களை சேர்த்து எழுதினால், அதற்கு மறுத்து ஆதாரம் வைக்க தெரியாவிட்டால், முடியாவிட்டால் பந்தி எழுதுகிறேன் என ஒரு குற்றச்சாட்டு என்மேல் உண்டு. அதனாலேயே ஒரு சில வரிகளுடன் விட்டேன். வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதும் நன்று என்று இன்று தெரிகிறது. கிழக்கில் இத்தனை கொடூரங்களும் யாரால், ஏன் நிறைவேற்றப்பட்டது என்பதும் மெல்ல மெல்ல திரை விலகுகிறது. அன்று, தாம் பதவியை கைப்பற்ற முஸ்லிம்களை வைத்து தாக்குதலை நடத்தினர். இன்று புலிகளை சாட்டி ஒரு கலவரத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். துப்பாக்கியையும் கொடுத்து, போலீசாருக்கும் அறிவித்து, நான் நினைக்கிறன் பயத்தில் தடுமாறுகிறார்கள் என்று. அன்று அனுரா சிறிய பையன். இவர்களின் திரிப்புகளை உண்மையென நம்பியிருக்கலாம், இப்போ வெளிவருபவை உண்மைகளை வெளியே கொண்டுவருகின்றன. அன்று பூட்டிய அறைகளுக்குள் காதோடு காதாக பேசியவை, ரகசியமாக செய்தவை இன்று பகிரங்கப்படுத்தப்படுகின்றன. இனிமேலும் பித்தலாட்டம் ஆட வெளிக்கிட்டால்தாங்களாகவே பொறியில் சிக்குவார்கள். கிழக்கில் முஸ்லிம்களை பலிகொடுத்து, தமிழரை பலி எடுத்து ஆடிய ஊழியாட்டம் வெளியில் வர இருக்கிறது. எத்தனை பலம், படை இருந்து, தமிழரின் நிலங்களை, உயிர்களை, கோயில்களை பறிக்க அதிகாரம் இருந்ததென்றால்; அந்த முஸ்லிம்களை காக்க முடியவில்லையா? அப்போ எந்த அதிகாரத்தினால் இதை சாதித்தேன் என்று சவால் விட்டார் ஹிஸ்புல்லா? முஸ்லீம் அரபு நாடுகளிடம் முதலில் உதவி கேட்டு சென்றபோது முஸ்லிம்களுக்கு அங்கு ஒரு ஆபத்துமில்லை ஆகவே உதவி செய்ய தயங்கிய அந்த நாடுகளிடம், புலிகள் முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்கிறார்கள் ஆகவே உதவி செய்யுங்கள் என்று மீண்டும் போனால்; அங்கு என்ன நடந்திருக்கு என்று சொல்லாமலே புரியும். எந்த நாடும் இந்த நாட்டில் முதலிடலாம், வியாபார, கல்வி, சமய கருமங்களை ஆற்றலாம். ஆனால் தமிழருக்கு இடமில்லை, அவர்களை அழிக்க உதவுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள் என்றால்; இவர்களின் தந்திரோபாயத்தை என்னவென்று சொல்லலாம்? எத்தனையோ சாட்சிகளை கொலை செய்திருக்கிறார்கள், இன்னும் சிலருக்கு அதிகாரிகள் வற்புறுத்தி பொய் சாட்சி சொல்ல வைத்தார்கள் என்று கதை எழுதினார்கள். ஒன்றை மறைக்க பல கொலைகளை அஞ்சாமல் செய்து காரியத்தை சாதித்தார்கள். இப்போ அதற்கான விலை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. சாட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும், விசாரணை அதிகாரிகள், நீதிபதிகள், ஜனாதிபதி போன்றவர்களும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அரசியல்வாதிகளின் பாதுகாப்பை குறைத்து இவர்களுக்கு அளிக்கப்படவேண்டும். இந்த குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முடியாது, பழைய கொலைகலாச்சாரத்தை அரங்கேற்றுவார்கள். காலம் எப்படி சுற்றி வளைத்திருக்கிறது பாருங்கள்!
2 months ago
2 months ago
2 months ago
2 months ago
2 months ago
2 months ago
ஆமா.... துல்லியமான தகவல் வழங்கி, எதை தடுத்தீர்கள்? தகவல் கிடைத்தும் தடுக்கத்தவறியவர்கள் குற்றவாளிகளே. அது கூடத்தெரியாத இதெல்லாம் வக்கீலாமெல்லே! இந்த இரத்தக்காட்டேரி ஏன்இப்போ பதறுது? சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்படவில்லை, அவர் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை என்றார், இப்போ இப்படி புலம்புகிறார். ஒருநாள் வக்கீல் சட்டையை மாட்டி விட்டு சட்டம் தெரிந்ததுபோல் அலப்பறை பண்ணக்கூடாது. ஏதோ ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்படுவர், வேறு ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டாரா என விசாரிக்கும்போது எல்லாமே வெளியில் வரும், சம்பந்தப்பட்டவரின் குற்ற வரலாற்றை பார்க்கும்போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும். ஏன் கிரிசாந்தி வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டவர் மற்ற கொலைகள் பற்றி தெரிவிக்கவில்லையா? இவர் எல்லாம் சிறைக்குள் போய் குற்றவாளியை சந்திப்பதற்காக வக்கீல் சட்டை மாட்டுபவர். ரொம்பதான் துடிக்கிறார், சிறைக்கு போவதற்காகவோ?
2 months ago
என் செய்வேன்… நான் எடுத்தது சி டி பி பஸ். உண்மையில் விமானி ஆவது டாக்டர் எஞ்சினியர் ஆவதை விட மிக இலகு. சாதாரண தரத்தில் மிக சாதாரண சித்தி இருந்தால் போதும். செலவாகும் பணம் கூட ஒரு டாக்டரோடு ஒப்பிடும் போது குறைவுதான். இங்கே பிரிடிஷ் ஏர்வேஸ், ரோயல் ஏந்ர் போசில் பயிற்றுனராக சேர்ந்து காசு கட்டாமல் ஐந்து வருடத்தில் விமானியாகலாம், சம்பளமும் தருவார்கள். இந்தியாவில் படிப்பது இன்னும் இலகு. ஆனால் பெரும்பாலும் ஒரு விமானியாக பல மணி நேர பயிற்ற்சி பறப்பை பெற்ற ஒருவர் எடுக்கும் சம்பளத்தை விட இலண்டன் underground tube ஓட்டுனர், ஒரு வருட பயிற்சியின் பின் எடுக்கும் சம்பளம் அதிகம். ரிஸ்கும் குறைவு. வீட்டை விட்டு போய் வேலை செய்ய தேவையில்லை, ஒரு மூடிய பெட்டிக்குள் 18 மணத்தியாலம் வரை இருக்க தேவையும் இல்லை. இப்படி விமானி தொழிலில் பல பிரதிகூலங்கள் இருப்பதாலே மக்கள் அதை நாடுவதில்லை. இங்கே வழங்கல் அல்ல பிரச்சனை, விமானி தொழிலுக்கு எம் மக்களிடம் கேள்வி இல்லை என்பதே உண்மை. உண்மையில் இலண்டனில் bin collection செய்யும் வேலைக்கு ஓரளவு நல்ல சம்பளம். ஆனால் நம்மவர் எவரும் செய்வதில்லை. அதனால் தமிழர் ஒருவர் rubbish truck ஓட்டும் உரிமம் எடுத்தால் அதை ஆதவனில் செய்தியாகவா போடுவார்கள். இதெல்லாம் ஒரு செய்தியா என்பதே கேள்வி - தவிர இதில் பொறாமை பட என்ன இருக்கிறது? அத்தோடு இந்த இலகு ரக பறப்பு உரிமம், அவுஸ் அமேரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் சாதாரண பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளர்களே வைத்திருப்பது.
2 months ago
அப்ப கருத்து எழுதின ஆட்கள் வேறை, இப்ப கருத்து எழுதிற ஆட்கள் வேறை. எல்லோருடைய கருத்தையும் நாடி பிடித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். 😁😂
2 months ago
மட்டு. வவுணதீவு பொலிஸார் இருவர் படுகொலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது 23 JUL, 2025 | 10:17 AM மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவலை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை திங்கட்கிழமை (21) குற்றபுலனாய்வு பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைதான பொலிஸ் பரிசோதகர் மட்டு. மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பின்னர் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவர் என பொலிஸ் உயர் அதிகாரி மேலும் ஒருவர் தெரிவித்தார். இது பற்றி தெரியவருவதாவது, கடந்த 2018 நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த பொலிஸ் சாஜன்ட் மற்றும் பொலிஸ் கொஸ்தாபர் ஆகியோரை இனந் தெரியாதோர் இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கத்தியால் வெட்டியும் கொலை செய்துவிட்டு பொலிஸார் இருவரின் துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளிவந்த வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பாவித்து வந்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அரச மற்றும் புலனாய்வு பிரிவினர் அறிக்கையிட்டதையடுத்து அவரை கடந்த 2018 நவம்பர் 30 ம் திகதி பொலிஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள குற்ற புலனாய்வு திணைக்களத்தின் நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் 2019 ஏப்பிரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சஹரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹரானின் சாரதி உட்பட நால்வரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர். இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைபற்றியதையடுத்து இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு திங்கட்கிழமை (21) அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 8ம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/220695
2 months ago
இங்கிலாந்தின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கட்டுரை தகவல் தினேஷ்குமார் கிரிக்கெட் விமர்சகர் 23 ஜூலை 2025, 01:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரின் நான்காவது டெஸ்ட், இன்று மான்செஸ்டரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் பெரும்பான்மை செசன்களில் ஆதிக்கம் செலுத்தியும், முக்கியமான தருணங்களை கோட்டைவிட்டதால் இந்திய அணி 2–1 என பின்தங்கியுள்ளது. சுமாரான அணியாக இருந்தபோதும், ஸ்டோக்ஸ், ரூட், ஆர்ச்சர் என மேட்ச் வின்னர்கள் தக்க சமயத்தில் தோள் கொடுப்பதால், இங்கிலாந்தின் கை தற்சமயம் ஓங்கியுள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், இந்தியாவுக்கு என்றைக்கும் சாதகமான ஒன்றாக இருந்ததில்லை. 1936 முதல் இதுவரை 9 டெஸ்ட்களில் இந்திய அணி, மான்செஸ்டரில் விளையாடியுள்ளது. ஆனால், ஒருமுறை கூட வெற்றிக்கோட்டை தொடவில்லை. டெஸ்ட் மட்டுமல்ல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியாவுக்கு நல்ல நினைவுகள் என்று எதுவுமில்லை. 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா மண்ணைக் கவ்வியது இங்குதான். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருகாலத்தில் தாறுமாறாக சீறிய ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம், மறுகட்டுமானத்துக்கு பிறகு தட்டையாக மாறிவிட்டது. ஆகவே, லார்ட்ஸ் டெஸ்ட் போலவே இந்த டெஸ்ட்டும் 'லோ ஸ்கோரிங் திரில்லர்' ஆக (Low scoring thriller) மாறுவதற்கு வாய்ப்பதிகம் உள்ளது. சுழலுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், 'சைனா மேன்' சுழலர் குல்தீப் யாதவ் லெவனில் இடம்பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், யார் இடத்தில் குல்தீப் விளையாடப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. காயத்தால் தொடரில் இருந்து விலகிய ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சேர்க்கலாம். ஒருவேளை, நிதிஷ் இடத்தில் மற்றொரு ஆல்ரவுண்டர் ஷார்துலை கொண்டுவர அணி நிர்வாகம் விரும்பினால், ஆஃப் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்தான் குல்தீப்புக்கு வழிவிட்டாக வேண்டும். நீண்ட பேட்டிங் வரிசையை விரும்பும் இந்திய அணி நிர்வாகம், தற்காப்பு பேட்டிங்கில் வித்தரான சுந்தர் தலையில் கை வைக்குமா என்பது சந்தேகம். ஒன்று, இரண்டு, ஐந்தாம் நாள்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், பும்ரா–சிராஜ், மூன்று சுழலர்கள் என இந்தியா களமிறங்கவும் வாய்ப்புள்ளது. 1956 மான்செஸ்டர் டெஸ்டில் மழையால் பாதிக்கப்பட்ட இதே மைதானத்தில், இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் 19 விக்கெட்களை எடுத்து உலக சாதனை படைத்தார் என்பதை மறந்துவிட முடியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஸ்க் எடுப்பதற்கான சமயம் இதுவல்ல என்று குல்தீப்பை எடுக்காமல், 3 வேகப்பந்து வீச்சாளர், 2 ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர்கள் (சுந்தர், ஜடேஜ்) என இந்தியா களமிறங்கவும் தயங்காது. காயத்தால் அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் விலகியதாலும் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சு எடுபடாததாலும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக கம்போஜ் களமிறங்கலாம். ஷான் பொல்லாக் பாணியில் 5–15 செமீ லெங்த்தில் தையலை (seam) பிடித்து பந்துவீசும் கம்போஜ், இங்கிலாந்து மண்ணுக்கு என்றே அளவெடுத்து செய்தது மாதிரியான ஒரு பவுலர். பேட்டிங் வரிசையில் மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் திணறும் கருண் நாயருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்ப்பார்கள். ஸ்லிப் பிராந்தியத்தில் கருணுக்கு நிகரான ஒரு ஃபீல்டர் இப்போது அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக கூடுதல் பேட்ஸ்மேனாக சுதர்சனை அணியில் சேர்க்கவும் அணி நிர்வாகம் தயங்காது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் காம்பினேஷன் எப்படி இருக்கப் போகிறது என்பது தெளிவில்லாத நிலையில், வழக்கம் போல ஆட்டத்துக்கு முன்பே லெவனை அறிவித்துவிட்டு இங்கிலாந்து களம் காண்கிறது. காயத்தால் ஆஃப் ஸ்பின்னர் பஷீர் விலகிய நிலையில், இடக்கை சுழல் ஆல்ரவுண்டர் லியாம் டாசனை இங்கிலாந்து உள்ளே கொண்டுவந்துள்ளது. ஆஷ்லி கைல்ஸ், பனேசர் பாணியில் தற்காப்பு இடக்கை சுழற்பந்து வீச்சில் கை தேர்ந்தவர் இவர். பல் பிடுங்கப்பட்ட இங்கிலாந்து பந்துவீச்சுக்கு, கேப்டன் ஸ்டோக்ஸ் ஒருவர்தான் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார். 4.5 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை நிகழ்த்திய ஆர்ச்சர், லார்ட்ஸில் தூள்பரத்தினாலும், பவுன்ஸ் அதிகமில்லாத ஓல்ட் டிராஃபோர்டில் அவருடைய பாட்சா பலிக்காது என்கிறார்கள் விமர்சகர்கள். அதுமட்டுமின்றி, ஆர்ச்சரின் பணிச்சுமையையும் கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடி இங்கிலாந்துக்கு உள்ளது. அனுபவ வீரர் வோக்ஸ் பந்துவீச்சு இந்த தொடரில் சுத்தமாக எடுபடவில்லை. கடந்த டெஸ்டில் கார்ஸ் நம்பிக்கை அளித்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இங்கிலாந்தின் பந்துவீச்சு படை பலவீனமானவே தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'சமர்த்து பையன்கள்' என வலம்வரும் இங்கிலாந்து அணியினர், கடந்த டெஸ்டில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சேசிங்கின் போது ஸ்லிப் பிராந்தியத்தில் நின்றுகொண்டு புரூக் உள்ளிட்ட வீரர்கள், இந்திய அணியின் டெயில் எண்டர்களை கடுமையாக வசைபாடினர். கில் தலைமையிலான இந்திய அணியும் தன் பங்குக்கு களத்தில் சீற்றத்தை வெளிப்படுத்தியதை பார்த்தோம். ஆனால், கில்லின் ஆக்ரோஷம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்காததோடு அவருடைய பேட்டிங் ஃபார்மையும் பாழ்படுத்தியது. இந்தமுறை, கோலியை அப்படியே போலச் செய்ய முயலாமல், கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷத்தை கில் கையில் எடுப்பார் என நம்புவோம். இங்கிலாந்து பேட்டிங் வரிசையை பொருத்தமட்டில், கிராலி, போப் ஆகியோரின் ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளது. லீட்ஸ் டெஸ்டில் சதமடித்த போப், 3 டெஸ்டில் மொத்தமாக 186 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 21.33 சராசரியில் ஒரு அரைசதத்துடன் 128 ரன்கள் மட்டுமே தொடக்க வீரர் கிராலி அடித்துள்ளார். புரூக் நிறைய ரன்கள் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு (Nip backer) இந்த தொடர் முழுக்க அவர் திணறுவதை பார்க்கலாம். அதிர்ஷ்டமும் அவருக்கு சிலமுறை கைகொடுத்ததை சொல்லியாக வேண்டும். முக்கியமான சமயங்களில் கேப்டன் ஸ்டோக்ஸ் அணியை தாங்கிப் பிடித்தாலும், ஜேமி ஸ்மித், பென் டக்கெட்டையே இங்கிலாந்து அணி பேட்டிங்கில் பெரிதும் நம்பியுள்ளது. பாஸ்பால் பாணியில் இருந்து வெளியே வந்து விளையாட முடியும் என நிரூபித்த இங்கிலாந்து, ஃபார்முக்கு திரும்பியுள்ள ஜோ ரூட்டை பெரிதும் நம்பியுள்ளது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறினால், ரூட்டின் விக்கெட் ஆட்டத்தை தீர்மானிக்கும் ஒன்றாக மாறும். ரூட்–பும்ரா இடையிலான ஆடுபுலி ஆட்டமும், குல்தீப் விளையாடும் பட்சத்தில் ரூட்–குல்தீப் இடையிலான உள்ளே வெளியே ஆட்டமும் ஒரு தனி நிகழ்வாக (Event) பரபரப்பை கூட்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES நிதிஷ் குமார் ரெட்டி விலகியது, அணியின் சமநிலையை பாதித்தாலும் இந்தியாவின் பேட்டிங் வரிசை வலிமையாகவே உள்ளது. கேஎல் ராகுல், தனது கிரிக்கெட் வாழ்வின் ஆகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த டெஸ்டில் தவறான ஷாட் விளையாடி, விமர்சனத்துக்கு ஆளானாலும் ஜெய்ஸ்வாலும் முதலிரு டெஸ்ட்களில் ரன்கள் குவித்ததை மறுக்க முடியாது. டிரைவ், கட் ஷாட் ஆடும்போது கவனத்தை குவித்து, சூழலுக்கு ஏற்ப வேகத்தை கூட்டியும் குறைத்தும் விளையாடினால், அவர் ஆட்டம் மீண்டும் மிளிரும். பிராட்மேன் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில், கவனம் தொலைத்ததால் அழுத்தத்துக்கு ஆட்பட்டு கடந்த டெஸ்டில் சறுக்கினார். 2 சதங்களுடன் 425 ரன்கள் குவித்துள்ள பந்த், முழு உடற்தகுதியுடன் விக்கெட் கீப்பர்– பேட்ஸ்மேனாக களமிறங்குவதில் பிரச்சினை இருக்காது என கூறப்படுகிறது. ஒரு ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு முழு தகுதி கொண்டவர் என்றாலும், விக்கெட் கீப்பிங் பொறுப்பை பந்த் ஏற்காவிட்டால், அணியின் காம்பினேஷன் அடிவாங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த தொடரில் தனது கடைசி டெஸ்டில் விளையாடும் பும்ரா, ரூட், புரூக் உள்ளிட்ட முக்கிய விக்கெட்களை குறிவைத்து நிச்சயம் வியூகம் வகுத்திருப்பார். இந்த டெஸ்டை இந்தியா வென்றால், மூன்று டெஸ்ட் மட்டும்தான் அவர் விளையாட வேண்டும் என்ற விதியை தளர்த்தி, கடைசி டெஸ்டில் பும்ராவை கம்பீர் விளையாட வைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிராஜ், ஆகாஷ் தீப் இல்லாத நிலையில் பவுன்ஸ் குறைவான ஆடுகளத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அவசியம். மணிக்கட்டு ஸ்பின்னரான குல்தீப்பை ரிஸ்க் எடுத்து இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்தால், நிச்சயம் பலனுண்டு. 1993 இல், இதே ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்தான் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த பந்தை வீசினார் என்பது வரலாறு. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜடேஜா உள்பட கீழ் வரிசை பேட்ஸ்மேன்களும் நம்பிக்கையுடன் உள்ளதால், இந்தியாவின் பேட்டிங் படை வலுவாக உள்ளது. மிகச் சிறப்பான கிரிக்கெட் விளையாடியும், பின்தங்கியுள்ளதற்கு இந்திய அணியின் தைரிய குறைபாடும் ஒரு காரணம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். லார்ட்ஸ் டெஸ்டில் 9 விக்கெட்கள் விழுந்தவுடன் ஜடேஜா, தாக்குதல் பாணி கிரிக்கெட்டை கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், விதியின் மீது பாரத்தை போட்டுவிட்டு சிராஜுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து குருவி போலச் சிறுக சிறுக ரன் சேர்த்தார். 2019 ஆஷஸ் தொடரில் ஹெடிங்லி டெஸ்டில் இதே போன்றதொரு சூழலில், ஸ்டோக்ஸ் ரிஸ்க் எடுத்து விளையாடி விதியை மாற்றி எழுதி ஆட்டத்தை வென்றார். இந்திய அணி தேவையற்ற வாய்ச் சவடாலை தூக்கி கடாசிவிட்டு, பயமறியாமல் ஆட்டத்தை அணுகினால் இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdx51vx59p9o
Checked
Sun, 09/28/2025 - 06:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed