புதிய பதிவுகள்2

விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை

1 month 3 weeks ago
சிலோன் மருமோனும் உலக நடிகருமான விஜய் அவர்களின் அதீர வளர்ச்சியையும், அவரது நற்பணி சேவைகளையும் கண்டு எரிச்சலும் பொறாமையும் கொண்டவர்களின் செயலாகத்தான் இது இருக்குமென நான் நினைக்கின்றேன். என் வன்மையான கண்டனங்கள். தள்ளி விடுறதெல்லாம் என்ன பழக்கம்?

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

1 month 3 weeks ago
ஈழத்தமிழர் அரசியலில் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளியாகவும், பின்னர் செல்வாக்குமிக்க மத்திய அமைச்சராகவும் திகழ்ந்த டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணம் தற்போது கர்மாவின் பிடியில் சிக்கியுள்ளது. அவரது எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்த சுருக்கமான தொகுப்பு இதோ: 1957-இல் பிறந்த கதிரவேலு தேவானந்தா, தனது இளம் வயதிலேயே இடதுசாரி மற்றும் தமிழ் தேசியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஈரோஸ் (EROS) அமைப்பில் இணைந்து 'டக்ளஸ்' என்ற பெயரில் லெபனானில் இராணுவப் பயிற்சி பெற்றார். பின்னர் ஈபிஆர்எல்எஃப் (EPRLF) அமைப்பில் இணைந்து அதன் இராணுவத் தளபதியாகச் செயல்பட்டார். தேவானந்தாவின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகளால் சூழப்பட்டிருந்தது. இவரது ஆரம்பகால நடவடிக்கைகளை மீட்டுபார்க்கையில் 1980-களில் இலங்கையில் பலமுறை சிறை வைக்கப்பட்டார். 1983 வெலிக்கடை சிறைப்படுகொலையில் தப்பிப் பிழைத்து, மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியோடி இந்தியா சென்றார். சென்னையில் தங்கியிருந்தபோது, சூளைமேடு பகுதியில் ஒரு வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் கடத்தல் புகார்களில் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்கத் தம்பதியினர் கடத்தல் மற்றும் நிதி திரட்டுவதற்காகச் சொந்த மக்களையே கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. 1990-களில் ஈபிடிபி (EPDP) கட்சியைத் தொடங்கிய அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்தார். ஒரு துணை இராணுவக் குழுவாகச் செயல்பட்டு, யாழ்ப்பாணத் தீவுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 1994 முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல அரசாங்கங்களில் சக்திவாய்ந்த அமைச்சராகவும் பதவி வகித்தார். புலிகளின் பத்து கொலை முயற்சிகளில் இருந்தும் அவர் உயிர் தப்பினார். 1990-களில் இலங்கை அரசுடன் இணைந்த பிறகு, EPDP ஒரு துணை இராணுவக் குழுவாகச் செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் நெடுந்தீவு உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள் EPDP-யின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீது கப்பம் கோருதல், சித்திரவதை மற்றும் தன்னிச்சையான கொலைகள் செய்தார். 2006-2007 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 'வெள்ளை வேன்'களில் கடத்தப்பட்ட சம்பவங்களில் EPDP-யினருக்குத் தொடர்பிருப்பதாக Human Rights Watch மற்றும் Amnesty International போன்ற அமைப்புகள் சுட்டிக்காட்டின. யாழ்ப்பாணத்தில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் EPDP உறுப்பினர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டாலும், போதிய ஆதாரங்கள் இன்றி விடுவிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தியதாக ஈபிடிபி மீது பல புகார்கள் உள்ளன. குறிப்பாக 2011-ல் யாழ்ப்பாணத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலப்பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. அரசியல் ரீதியாகப் பல சவால்களைச் சந்தித்த தேவானந்தாவின் வீழ்ச்சி, 2025-ஆம் ஆண்டின் இறுதியில் உச்சகட்டத்தை எட்டியது. தனது தனிப்பட்ட துப்பாக்கியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் கைகளுக்குச் செல்ல அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டில், 2025 டிசம்பர் 26 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) அவர் கைது செய்யப்பட்டார். ஒரு காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கத்துடன் நின்ற அவர், தற்போது அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு 72 மணிநேரத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஒரு போராட்ட இயக்கத்தின் தளபதியாகத் தொடங்கி, அதிகாரமிக்க அமைச்சராக வலம் வந்த டக்ளஸ் தேவானந்தா, இன்று சட்டவிரோத கும்பல்களுடனான தொடர்பு மற்றும் ஆயுதக் கையாளுதல் புகார்களால் சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவின் இந்தத் திடீர் கைது, அவரது தசாப்த கால அரசியல் ஆதிக்கத்தின் வீழ்ச்சியாகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், ஒரு பிரபஞ்ச நீதியையும் உரக்கச் சொல்லியிருக்கிறது. "நீ விதைத்த வினையெல்லாம் உன்னை ஒருநாள் வேரறுக்கக் காத்திருக்கும்" என்ற முதுமொழிக்கு அவரும் விதிவிலக்கல்ல என்பதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அடக்குமுறைகளும், சர்ச்சைக்குரிய கடந்த காலச் செயல்பாடுகளும் இன்று ஒரு சுழற்சியைப் போல அவரிடமே திரும்பி வந்துள்ளன. விதியை மதியால் வெல்லலாம் என்று நினைத்தாலும், ஒரு மனிதன் செய்த வினைகள் காலத்தின் கணக்கில் ஒருபோதும் தப்புவதில்லை என்பதற்கு டக்ளஸின் இன்றைய நிலையும், இந்தத் திடீர்ச் சரிவும் ஒரு வரலாற்றுச் சான்றாக மாறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

1 month 3 weeks ago
அதற்கிடையில் மதுஷின் மண்டையில் போட்டுவிட்டார்கள். கையில் விலங்குடன் இருந்த மதுஷ், போலீசாரை தாக்க முற்பட்டபோது போலீசார் திருப்பி தாக்கியதில் மதுஷ் கொல்லப்பட்டார். அவரோடு பல அரசியல்வாதிகளின் ரகசியங்களும் மறைந்தன. இப்போ, டக்கியார் தொடர்வார் மதுஷ் விட்டு இடத்திலிருந்து அல்லது அவரும் மதுஷ் போன இடத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார். டக்கிளசுக்கு தன் முடிவு எப்படியானது எனத் தெரிந்திருக்கும், அவரே பலருக்கு முடிவுகளை எடுத்தவராயிற்றே. இராணுவம், போலீசில் பல ஊழல்வாதிகளும் கொலைகாரரும் முன்னைய அதிபர் விசுவாசிகளும் உள்ளனர். கம்மன்பில தனது சட்டத்தரணி மேலங்கியை சலவைக்கு கொடுத்துள்ளாராம், அது வீட்டுக்கு வந்தவுடன் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவஞானமும் சுமந்திரனும் மிகுந்த வேதனையில் உள்ளனராம், டக்கிளஸ் குற்றமற்றவர் என வெளியில் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன என ஊர்க்குருவி ஒன்று சொல்லிச்சு. டக்கிளஸ் இவர்களை மாட்டி விட்டாலும் விடலாம் யாரறிவார்? அரசியலில் எதுவும் எந்நேரத்திலும் நிகழலாம். என்னவோ... புது வருடத்தில் நல்ல செய்திகள் வரட்டும்! செய்த "தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கர்மம் காத்திருந்து கழுத்தறுக்கும்." ஓமோ, இல்லையோ?

விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை

1 month 3 weeks ago
இவர் நம்ம ஆள்..... அதனால் தண்ணீரில் சறுக்கி விழ வாய்ப்பில்லை... தள்ளுப்பட்டுத்தான் விழுந்திருப்பார் 😂 பனையாலை விழுந்தவனை மாடு ஏறி மிதித்த மாதிரி பனையூர் செல்லும் வழியில் இன்னொரு விபத்தால் 🤣சங்கடமாம்

மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.

1 month 3 weeks ago
சாதாரணமாக ஒரு குழந்தை விழப்போகுதே என்று குழந்தையைப் பிடித்தவருக்கு ஒருவாரமாக கம்பி எண்ணியிருக்கிறார். சிலவேளை இவர் ஒரு வெள்ளையராக இருந்திருந்தால் இவர்களால் மிகவும் பாராட்டப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் படிப்பினையாக வைத்து என்ன தான் நடந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியுமா?

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

1 month 3 weeks ago
கூட்டிக்கழித்து கல்கியூலேட்பண்றபோது உங்க ஊர் சங்கரத்தை எண்டு வருது! புஹா…ஹ.ஹா😂

விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை

1 month 3 weeks ago
கோலாலம்பூரில் பல்லாயிரகணக்கான மக்கள் ஆதரவுடன் ஜனநாயகன் இசை வெளியீட்டை நடத்தியபின் சென்னை திரும்பிய விஜையை பார்க்க பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டு, இதில் காரில் ஏறும் போது விஜை தடக்கி வீழ்ந்துள்ளாராம். பிகு நாளைக்கு ரசிகர் குஞ்சுகள் யாரும் தற்கொலை செய்யாதவரை ஓக்கே.

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

1 month 3 weeks ago
வோட்டை மக்கள் தராது விடினும் … ஆமை ஓட்டை வைத்தே ஆட்சியை பிடிப்பேன்…. புஹா…ஹ.ஹா😂

இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த என் நண்பனின் கதை இது - கண்டிப்பாக வாசிக்கவும் - நிழலி

1 month 3 weeks ago
நன்றி நிழலி பகிர்தலுக்கு... இதை பார்த்தவுடன் பக்கத்தில் இருந்த மகளிடம் (மருத்துவம் கடைசி வருடம்) என்னையும் மனைவியையும் உடனே பதியும்படி சொன்னேன். தமிழர்கள் செய்வது அரிது. உடனே தன்னையும் சேர்த்து செய்வதாக சொன்னார்.

மகேந்திர படேல்-கரோலின் மில்லர்-வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டு.

1 month 3 weeks ago
அட்லாண்டா (WANF/கிரே நியூஸ்) - வால்மார்ட் கடையில் ஒரு குழந்தையைக் கடத்த முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தனது வாழ்க்கை தலைகீழாக மாறியதாகக் கூறி, ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒருவர் அக்வொர்த் நகராட்சி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் கழித்தார், மேலும் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பு மிரட்டல்களையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. செப்டம்பரில் நகராட்சிக்கு அனுப்பப்பட்ட ஒரு முன் அறிவிப்பின்படி, மகேந்திர படேல் அவதூறு, மானநஷ்டம், கவனக்குறைவு, தவறான சிறைவைப்பு, மன உளைச்சல் மற்றும் பல காரணங்களுக்காக அக்வொர்த் நகராட்சியிடம் இருந்து 25 மில்லியன் டாலர் இழப்பீடு கோருகிறார். மார்ச் மாதம் வால்மார்ட் கடையில் ஒரு குழந்தையைக் கடத்த முயன்றதாக படேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு எதிரான அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளும் ஆகஸ்ட் மாதம் கைவிடப்பட்டன. படேலின் வழக்கறிஞர் ஆஷ்லே மெர்ச்சன்ட், இந்த முழு சம்பவத்தையும் ஒரு தவறான புரிதல் என்று கூறினார். தனது கட்சிக்காரர், கைகளில் நிறைய பொருட்களை வைத்திருந்த ஒரு தாய்க்கு உதவ மட்டுமே முயன்றார் என்றும் அவர் தெரிவித்தார். படேல் தனது வயதான தாய்க்கு டைலெனால் மருந்து வாங்குவதற்காக கரோலின் மில்லர் என்ற வால்மார்ட் வாடிக்கையாளரிடம் உதவி கேட்டபோது இந்தச் சம்பவம் தொடங்கியதாக மெர்ச்சன்ட் கூறுகிறார். கண்காணிப்பு வீடியோவில், மில்லர் தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் ஒரு மொபிலிட்டி ஸ்கூட்டரில் பயணிப்பது தெரிகிறது. மில்லர் மருந்தைச் சுட்டிக்காட்ட எழுந்தபோது, தன் மடியில் இருந்த குழந்தையை கீழே விழாமல் தடுக்க படேல் குனிந்ததாக மெர்ச்சன்ட் கூறுகிறார். 30 நிமிடங்களுக்குப் பிறகு, மில்லர் அக்வொர்த் காவல் துறைக்குத் தொலைபேசி செய்து, கடத்தல் முயற்சி குறித்துப் புகார் அளித்ததாகப் பதிவுகள் காட்டுகின்றன. தனது குழந்தையை இழுத்துச் செல்வதில் நீண்ட நேரம் நடந்த ஒரு போராட்டத்திற்குப் பிறகு படேல் அங்கிருந்து சென்றுவிட்டதாக அவர் அந்தச் சம்பவத்தை விவரித்தார். தன் குழந்தைகளுக்கு உதவுவதை மில்லர் விரும்பவில்லை என்பதை உணர்ந்ததும் படேல் அங்கிருந்து சென்றுவிட்டதாக மெர்ச்சன்ட் கூறுகிறார். அவர் தேடிக்கொண்டிருந்த டைலெனால் மருந்தை கண்டுபிடித்து, அதை வாங்கி, அந்தச் சம்பவம் நடந்த சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு கடையை விட்டு வெளியேறிவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, படேல் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவருக்குப் பிணை வழங்கப்படுவதற்கு முன்பு அவர் 46 நாட்கள் சிறையில் இருந்தார். https://www.kbtx.comMan accused of trying to kidnap toddler from Walmart sues...The man's lawyer called the whole thing a misunderstanding, saying her client was merely trying to help a mother who had her hands full.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 3 weeks ago
@Eppothum Thamizhan தலைவா நீங்கள் இல்லாமலா? கடைசி ஆளாக குதிப்பது நீங்கள் தான். இம்முறை கிருபனுக்கு வேலை கூடுதலாக இருப்பதால் நேரத்தோடு பதிந்தால் அவருக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 3 weeks ago
போட்டியில் கலந்து கொண்டவர்களில் கீழே உள்ளவர்களின் பதில்கள் இதுவரை தரவேற்றப்பட்டுள்ளது. 1 செம்பாட்டான் 2 ஏராளன் 3 வசீ @புலவர் ஐயா, பல கேள்விகளுக்குப் பதில்கள் சரியாக இல்லை! உங்கள் பதில்களை திரும்பச் சரிபார்த்து புதிய பதிவாக பதில்களைப் போட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 3 weeks ago
சிறப்பு. பார்ப்போம் எவ்வாறு நடக்கப் போகின்றது என்று. மக்களே உங்கள் உதவி கிருபனுக்குத் தேவை. சிரத்தை எடுத்துப் பதியுங்கள். எல்லோரும் கலந்து கொள்ளுங்கள்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 3 weeks ago
இறுக்கமான validation செய்து, தவறான பதிலுக்குப் "பிழை" காட்டச் செய்யலாம். ஆனால் கூகிள் ஷீற்றைப் பாவிக்காமல் நேரடியான பதில்களைத் தரக்கூடும். அது எனக்கு இன்னமும் அதிகவேலையைக் கொடுக்கும். இப்போது கூகிள் ஷீற்றில் சிவப்பு வர்ணத்தில் மேலதிக விளக்கம் கொடுத்துள்ளேன். வாசித்தால் விளங்கும் என்று நினைக்கின்றேன்!
Checked
Wed, 02/25/2026 - 07:41
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed