1 month 3 weeks ago
ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில் Dec 30, 2025 - 11:05 PM சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் (250,000) நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜோஹான் பெர்னாண்டோ குருநாகலில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக பணச் சலவை தடுப்புச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம், அரசாங்கச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தல் மற்றும் குற்றவியல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (31) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இதே குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், அவர் தற்போது இருக்கும் இடத்தை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரைத் தேடிக் கைது செய்வதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjsvbkx103beo29n1jsw22ox
1 month 3 weeks ago
காரைநகர் பிரதேச செயலக திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் தற்போது உரையாடியபோது 55 குடும்பங்களுக்கு(புதிதாக திருமணமானவர்கள், பழைய வீட்டுத்திட்ட நிதிப்பற்றாக்குறையால் கட்டமுடியாதவர்கள்) புதிதாக மலசல கூடம் அமைக்க வேண்டும் என்ற தகவலை தெரியப்படுத்தினார். மேலும் 12 குடும்பங்களிற்கு மலசலகூடம் திருத்தவேலை செய்யவேண்டும் எனவும் கூறினார். முதலில் 5 குடும்பங்களின் விபரங்களை கோரியுள்ளேன்.
1 month 3 weeks ago
நல்லது அண்ணா. சில தகவல்களைப் பகிர்கிறேன், செய்யமுடியுமா எனப்பாருங்கள். நன்றி அண்ணா, தனி மனிதர்களால் எடுக்கப்படும் கூட்டு முயற்சி இது. அடம்பன் கொடியும்.... நல்லது அண்ணா. 1) காரைநகரில் வீட்டுத்திட்டம் ஒன்றுக்கு மலசல கூடம் கட்டித்தருமாறு எமது அமைப்பிடம் பிரதேச செயலகம் ஊடாக வாய்மொழியாக கேட்டுள்ளார்கள். வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன். 2) பொன்னாலையில் 3 பேர் எழுந்து நடமாடமுடியாத சகோதரர்களின் கொமட் உடைந்துவிட்டது, மலசலகூடக் குழி(பிற்) மூடப்பட்ட பிளாற் உடைந்துள்ளது, பாத்றூம் பிளாற் உடைந்துவிட்டது. புனரமைத்து தருமாறு அவசர வாய்மொழி வேண்டுகோள் வந்துள்ளது. வேண்டுகோள் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளேன். 3) அராலியிலும் மலசலகூடம் அமைத்து தருமாறு கேட்டவர்கள். போதிய விபரம் கிடைக்கவில்லை. முழு விபரம் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன். மேலும் சில விபரங்கள் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன்.
1 month 3 weeks ago
நீன்ட காலத்துக்குப் பின் யாழில் நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள்.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
1 month 3 weeks ago
நான் எழுதுவது ஒரு அனாதையான இனத்துக்கு மீட்பார் என்று சொல்லி பின்கதவால் வந்த வல்லூறு ஒன்றின் கதை . உங்களை போன்றவர்களுக்கு கிரிகெட் விளையாட்டாய் நக்கலாய் போய் விட்டது அந்த மக்களின் மவுன வலி. இந்த சுமத்திர வல்லூறு வடகிழக்கு தமிழருக்கு கடந்த 14 வருடங்களில் ஒன்றையும் கிழித்து போடவில்லை இனியும் கிழிப்பார் என்று பள்ளிக்கூடம் போனவர்கள் நம்ப மாட்டார்கள் .
1 month 3 weeks ago
உறவுகளே, இந்தியக் கடற்படையின் அதிரடிப்படையால் (MARCOS) குருநகர் துறைமுகம்(?) தாக்கப்பட்டது, ஒக்டோபர் 21,1987. இதன் போது என்னமாதிரியான அழிவுகள் ஏற்பட்டன? எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? ஏதேனும் படகுகள் தாக்கப்பட்டதா? உண்மையில் அங்கு துறைமுகம் என்று சொல்லுமளவிற்கு கட்டுமானங்கள் ஏதேனும் இருந்ததா? இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்னென்ன? வரலாற்றை ஆவணப்படுத்த உதவி செய்யுங்கள். நன்றி
1 month 3 weeks ago
பொது சனம் ஒராள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார், மன்னாரில். ( இரண்டாவது மறுமொழிப் பெட்டியில் தெளிவாக உள்ளது)
1 month 3 weeks ago
என்னுடைய ஞாபகத்தின்படி இந்திய இராணுவ வருகைக்கு சில (மாதங்கள்) காலங்களுக்கு முன்னமே ஊர் பெரியவர்கள், பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையிம் உள்ளடக்கி இப்படியான பிரஜைகள் குழு அமைக்கப்பட்டது. இலங்கை இராணுவ திடீர் படை இறக்கம், உளவாளிகள் ஊடுருவல், கிராம மட்டங்களில் நடக்கும் சிறிய சமூக பிரச்சினைகள் போன்றவற்றை அவதானித்து இயக்க பொறுப்பாளருடன் உரையாடி ஆலோசிப்பது அவர்களுக்கான ஒத்துழைப்பை , உதவிகளை வழங்குவது போன்ற செயல் பாடுகள் நடந்தன. நாவட்குழியில் நானும் நண்பர்களும், ஊர் பெரிசுகளும் சேர்ந்து இரவு நேர ஊர் காவல், நோட்டமிடல், சென்ரி, உணவு வழங்கள் போன்ற செயல்பாடுகளில் இருந்து இருக்கிறோம் . இது தவிர, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு மக்கள் அரசியல் செயல்பாடுகளாகவும் பிரஜைகள் குழு என்று ஒன்றும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இவர்கள் பலரை ராணுவ துணை குழுக்கள் கொலை செய்த்ததாகவும் செய்திகள் வாசித்த ஞாபகம் இருக்கிறது.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
அநீதி இழைக்கப்பட்டவர்கள் பக்கத்தில் உறுதுணையாக இருப்பதில் தப்பில்லை. காவி அணிந்தவரெல்லாம் முற்றும் துறந்த துறவிகள் என்ற காலம் மலையேறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. யாருடைய சங்கி மங்கி செயல்களுக்கும் ஆதரவளிக்க வேண்டியதில்லை.
1 month 3 weeks ago
ஏன் சிறியர், டக்கிலஸை கைது செய்து கொண்டு போகும்போது கையில் ஒரு கோப்புடன் போகிறாரே, அதில் என்ன இருக்கும்? தான் கொலை செய்தவர்களின் பெயர்ப்பட்டியலா, தன்னால் இன்னும் கொல்லப்பட வேண்டிய நபர்களின் பெயரா, அல்லது வழக்கு நடத்தப்போகும் சட்டத்தரணி தான் என நினைத்துக்கொண்டாரா? ஒரு வெட்கமேயில்லாமல் போகிறார். எல்லா கூட்டங்களிலும் வலிய புகுந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும், கருத்து சொல்லும் இந்த மனிதன், தன்னைப்பற்றி இப்படியொரு காணொளி வெளிவருமென எதிர்பார்த்திருப்பாரா? அறிவாளியாக இருந்திருந்தால் இதெல்லாம் செய்திருப்பாரா? மக்களை ஏமாற்றி, அழைத்து வந்து சிங்களத்திற்கு காணொளி அனுப்பி கப்பம் பெற்றவர், இனி அடிக்கடி வருவார் பாவம். தெற்கிலிருந்து, அரச தலைவர்களின் காவல் நா* என்று கருத்தெழுதுகிறார்களாம் இவரைப்பற்றி. தெற்கு மக்களும் இவரின் சாதனைகளை பற்றி அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். சிறையில் இவரது உயிருக்கு ஆபத்தென்றால், அது இவரின் எஜமானரின் ஏவல் பிராணிகளாற்தான் வரும்.
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் நிஷான் கனகராஜா பிரித்தானிய மன்னரின் 2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவப் பட்டியலில் 'நைட்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும் நிலையில் பட்டம் பெற்றுள்ளார். உயரிய விருது உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு மற்றும் சமூக உள்ளடக்கல் கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். மார்ட்டின் வீதியில் வளர்ந்தவர். யாழ். பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1985ஆம் ஆண்டு அந்தக் கல்லூரியின் தலைமை மாணவ தலைவராகவும் (Head Prefect) திகழ்ந்துள்ளார். இலங்கையில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தேசத்தின் சிறுவன் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பதவிகளை வகித்த அவர், 2019 ஆம் ஆண்டு லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார். பிரித்தானியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றை நிஷான் கனகராஜா வழிநடத்தி வருகினறார். இந்த கௌரவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்திலிருந்து வந்த ஒரு சிறுவன், இன்று அரச குடும்பத்தினால் கௌரவிக்கப்படுவது என்பது ஒரு வியக்கத்தக்க பயணம். கல்வியின் மாற்றும் சக்தியினாலும், அது வழங்கும் வாய்ப்புகளினாலுமே இது சாத்தியமானது" என உருக்கமாக தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
1 month 3 weeks ago
எந்த பக்கம் எண்டாலும் சுமனின் ஆட்கள் தானே வெளியில் எடுத்து விடுவது யாழ்ப்பாணத்தை போதை கலாசாரத்தை ஊக்குவிப்பது இந்த கபடவேடதாரி சுமத்திரன் தானே .
1 month 3 weeks ago
மக்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாத அவர்களின் பிரதிநிதிகளை விமர்ச்சிக்காதவர்கள், பிக்குகளின் அடாவடிகளை கண்டுகொள்ளாதவர்கள், யாராவது உண்மையின் பக்கம் நின்றால் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். நிஞாயம் என்பது; சந்தர்ப்பத்திற்கு, ஆளுக்கு, பதவிக்கு, இடத்திற்கு ஏற்ப மாறுபடுவதில்லை, அது எங்கேயும் எப்போதும் ஒன்றையே பேசும். அதுதான் நிஞாயம் நடுவுநிலைமை!
1 month 3 weeks ago
ம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் விசாரணையிலிருந்து தப்பி விடலாம், தண்டனை குறைவாக்கப்படும் என நினைக்கிறார்கள் போலும். அதற்காக சில வைத்தியர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். ஒரு துடிப்பான அரசியல், வெளிநாட்டு பிரயாணம் செய்த ஒருவரை, இதய வால்வுகள் பெலமிழந்து விட்டது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், சிங்கப்பூருக்கு மருத்துவத்திற்கு அனுப்பவேண்டும் என்றும் சிபாரிசு செய்து மருத்துவ சான்று கொடுத்தார், அவர் சாதாரண மருத்துவர் அல்ல. அவரும் படிக்காமல் அறையில் பரீட்சை எழுதி சித்தியடைந்த மருத்துவரோ தெரியவில்லை. ரணிலோ புத்தகம் வாசித்தார், இந்தியா பயணமானார், கூட்டங்கள் நடத்தினார், கட்சிகளை ஒன்று கூட்டி ஆலோசனை கொடுத்தார். தவறு இல்லாதவர்கள் ஏன் விசாரணையை விமர்சிக்கிறார்கள்? வைத்திய சாலையில் போய் படுத்து விசாரணையை தவிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அது இருக்கட்டும், டக்கிலஸின் உயிருக்கு சிறையில் ஆபத்தாம் என சுரேன் ராகவன் துடிக்கிறார். டக்கிலசோ அவரது சொந்த பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கியை போதை, பாதாள உலகத் தலைவன் மதுசிடம் கொடுத்துள்ளார். அப்போ, அவரது உயிருக்கு ஆபத்து இருந்தது என ராகவன் சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? துப்பாக்கி பெறுவதற்காக டக்கிளஸ் அவ்வாறு ஒரு நாடகத்தை நடத்தினாரா? ரணிலுக்கு பிரச்சனை என்றவுடன் நீதிமன்றம் போய், எதிர்க்கட்சி பதவியை இழந்தவர்கள், ரணிலை கைது செய்த போது கருத்து கூறி, விமர்சித்து கண்டித்தவர்கள் இப்போ, மாகாண சபை தேர்தலில் நம்பியிருந்த குதிரை, கட்டியணைத்த நண்பர், அவர்களும் இனத்துக்காக போராடியவர்கள் ஆகவே அவரையும் இணைத்துக்கொண்டு பயணம் செய்வோம் என கட்சியை இரண்டுபடுத்தியபவர்கள், எதுவும் பேசாமல் மௌனம் காப்பது ஏன்? டக்கிளஸ் ஒரு இனத்துரோகி என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது தாங்களும் அகப்பட்டு விடுவோம் என்பதற்காக தவிர்த்துக்கொள்கிறார்களா?
1 month 3 weeks ago
Oman: Jatinder Singh (c), Vinayak Shukla, Mohammad Nadeem, Shakeel Ahmad, Hammad Mirza, Wasim Ali, Karan Sonavale, Shah Faisal, Nadeem Khan, Sufyan Mehmood, Jay Odedra, Shafiq Jan, Ashish Odedara, Jiten Ramanandi, Hasnain Ali Shah. England [Provisional Squad]: Harry Brook (c), Rehan Ahmed, Jofra Archer, Tom Banton, Jacob Bethell, Jos Buttler, Sam Curran, Liam Dawson, Ben Duckett, Will Jacks, Jamie Overton, Adil Rashid, Phil Salt, Josh Tongue, Luke Wood iccAll the squads for ICC Men's T20 World Cup 2026 | ICC Men...The 20 teams set to feature in the ICC Men's T20 World Cup 2026 have started announcing their squads for the mega-event.
1 month 3 weeks ago
இங்கு, வேலன் சுவாமிகள் அரசியல் போராட்டம் நடத்தவில்லை, அவரால் வழிநடத்தப்படும் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, அந்த மக்கள் தங்கள் நிலங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து அதை மீட்க்கும் போராட்டத்தில் அமைதி வழியில் தமது நிலையை தெற்கிற்கும் உலகிற்கும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களோடு துணையாக வேலன் சுவாமிகள் நிற்பதில் என்ன தவறு? அப்போ சிங்கள குடியேற்றம், விகாரை கட்டுதல், மக்கள் நிலங்களை அபகரித்தல் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்பவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் அவர்களுக்கு இருந்தால், கொடுக்கட்டும் பாப்போம். அந்த சூழலில் உள்ள மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க இவர்களால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? அப்படி இருக்க முடியுமென்றால் ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்கள் இவர்கள்? மக்களின் ஏகோபித்த குரல் நாங்கள் என்று வாக்கு சேர்த்தவர்களும் மக்களோடு இல்லை, மக்களின் தேவைகளை விட அவர்களுக்கு வேறு என்ன முக்கியமான வேலை இருக்கிறது? மக்களோடு அவர்கள் பிரச்சனைகளில் அவர்களின் பிரதிநிதிகள் துணையாக நிற்க வேண்டுமோ இல்லையோ? மாகாண சபைத்தேர்தலில் யாரோடு கூட்டுச்சேர்ந்து யாரை வீழ்த்துவது என்று முடிவு செய்வதில் அவர்கள் கவனம். வேலன் சுவாமி போலீசாரை அடித்தாரா? ஆயுதம் தூக்கினாரா? அரசியல்தான் பேசினாரா? அன்று, தூஷண பிக்கர் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரை கன்னத்தில் அறைந்தபோது இங்கும் சிலர் அவர் செயலை ஆதரித்து கருத்து எழுதியிருந்தார்கள். இன்று சைவ தலைவருக்கு அவமரியாதை நடந்திருக்கிறது, தாக்கப்பட்டிருக்கிறார் அதுவும் சரியென்கிறார்கள். பௌத்த துறவி அரசியல் பேசுகிறார், சண்டித்தனம் செய்கிறார், நிலங்களை அபகரிக்கிறார், சட்டத்தை மீறுகிறார், அதை கண்டிக்க முடியவில்லை, தாக்கப்பட்டவர்களை கண்டிப்பது கோழைத்தனம். சைவ ஆலயங்கள் தகர்க்கப்படுகின்றன, மக்களின் வாழ்விடங்கள் வாழ்வாதாயங்கள் பறிக்கப்படுகின்றன, அதை கேட்பது தவறாம், இது என்ன நிஞாயம் என்று தெரியவில்லை. சரி தவறு என்பது என்றால் என்ன என்பது புரியாதவர்களா? தன் சார்ந்த மக்கள் தாக்கப்படும்போது, அவர்களுக்கு அநிஞாயம் நடக்கும்போது வேலன் சுவாமிகள் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமோ? அப்படியானால் சட்டம் கைகட்டிக்கொண்டு இருப்பதும் சரியே. வேலன் சுவாமியும் இந்த மக்களிடத்தில் இருந்து தோன்றி, மக்களுக்கு சேவை செய்ய, உண்மையை, நிஞாயத்தை, போதிக்க வந்தவரே. அவரும் மக்களோடு அவலங்களை சந்தித்து இடம்பெயர்ந்தவரே. சிங்களத்துக்கு தமிழரில் துறவியும் இல்லை, கிறிஸ்தவன் சைவன் பேதமுமில்லை, எல்லோரும் தமிழர், அழிக்கப்படவேண்டியவர்களே என்பது மட்டுமே அவர்கள் போதிக்கும், சுவாசிக்கும் மதம் பௌத்தம்.
Checked
Wed, 02/25/2026 - 10:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed