2 months ago
😎யாரது? 1+1=11 என்று உயர்கணிதம் படிப்பித்த பெருமாளா இப்ப 30-16=6 என்ற அதியுயர் கணிதத்தை விளக்கியிருப்பது? விளக்க முடியாத விடயங்களை இலகுவாக இங்கே குப்பை போலக் கொட்டி விட்டுக் கடந்து போக ஒரு சாட்டுத் தான் "இவரோட நாங்கள் டூ, எனவே பதில் சொல்ல மாட்டம்!" என்ற சளாப்பல்! "பதில் இல்லை, அதனால் சொல்லவில்லை" என்று சொன்னால் உங்கள் "கௌரவம்" என்ன ஆகிறது😂? இந்த 30-16-=6 தியரிக்கு, அது பற்றிய பதிலுக்கு சிரிப்புக் குறி இட்டிருப்பது ஒரு மொரட்டுவ எந்திரி என்றால் இலங்கையின் இலவசக் கல்வி எவ்வளவு வீணடிக்கப் பட்டிருக்கிறது என்று புரிகிறது😂!
2 months ago
"எனக்கிருக்கும் ஒரு வாழ்க்கையில், நான் ஊர் என்னை "அண்ணாந்து பார்க்கும்" தொழிலைத் தான் தேர்வேன்!" என்று இருப்போர் இப்படி பல தொழில்களைக் கண்டு தூர ஓடத்தான் வேண்டும்! அப்படியே ஓடி ஓடி ஒரு நாள் விட்டு வந்த இடமும் வந்து சேர்ந்த இடமும் பிடிக்காமல் போய்ச்சேர வேண்டியது தான் அவர்கள் நிலையாக இருக்கும்! இது தான் உங்கள் வாழ்க்கைத் தத்துவம் போல தெரிகிறது😎. பி.கு: நுளம்பு மருந்து அடிக்கும் விமானம்?? யாழில் இருக்கும் சிறு பந்திகளையே தட்டுத் தடுமாறித் தான் வாசிக்கிறீர்கள்! எப்படி இவ்வளவு பிழையில்லாமல் தமிழில் எழுதக் கற்றுக் கொண்டீர்கள்😂?
2 months ago
ஸ்ரீலங்கா போறேனு ஒரு நண்பர் கிட்ட சொல்லவும் எப்படானு ஆரமிச்சு எப்ப வருவனு அவளோ பரவசமா ஆனான். ஏன் இப்ப இவன் சந்திரமுகில ஜோதிகா ஒட்டியாணத்த பாத்த மாதிரி இவளோ பரவசமாகுறான் ஒரு வேல சரக்கு வாங்கியார சொல்லுவான் போலனு மைன்ட்ல யோசிக்கறப்பயே..... வரும் போது மறக்காம தொதல் அல்வா வாங்கிட்டு வானு சொன்னான். அதென்னடா இங்கலாம் கிடைக்காத அல்வா அங்க ஸ்பெசலா? இங்கயும் நிறைய இடத்துல கிடைக்குது ஆனா அந்த டேஸ்ட் இங்க எங்கயுமே வரல வேற லெவல் வேற லெவல்னு யூடியூபர் மாதிரி ரிவியூ தந்துட்ருந்தான். வாங்கிட்டு வரலனா வெளுத்துவிட்ருவேன் பாத்துக்கனு வேற கொஞ்சம் ஓவராதான் பண்ணான். சர்ரா சர்ரா டியூட்டி ப்ரீல சரக்கு வாங்கி வர சொல்லும் நண்பர்களுக்கு மத்தியில் அல்வா வாங்கி வர சொல்ற நண்பர்களை சம்பாதிச்சு வைச்சுருக்க என்னை நினைத்து எனக்கே பெருமையா இருந்தது. சினிமாலலாம் அப்படியே கிராபிக்ஸ்ல 40-50 அடிக்கு உயர்வாங்களே அப்படி உயரமா தெரிஞ்சேன். நா ஊருக்கு கிளம்பறத நியாவகம் வைச்சு கிளம்ப முன்னாடி போன் வேற செஞ்சு நியாவகப்படுத்தினான். பேற நியாவகம் இல்ல அதெங்க நியாவகம் இருக்க போகுதுனு இங்கேந்து கிளம்பற முன்னயே நண்பர்கள்கிட்ட மெசேஜ் போட்டு வைச்சேன்...எங்க கிடைக்குமோ மறக்காம வாங்கி குடுத்துடுங்க இல்லனா இங்க என்ன ஒருத்தன் விடமாட்டான்னு. நினைத்தது மாதிரியே அந்த விஷயம் சுத்தமா மறந்து போச்சு. ஆனா நா சொன்னத நியாவகம் வைத்து நண்பர்கள் மறக்காம ஆளாளுக்கு வாங்கி தந்து குடுத்தப்ப ரொம்பவே ஆச்சரியமாருந்தது. ❤️ யாழ்பானம் ஏர்போர்ட் செக்கிங்ல கூட ஏதோனு பைய பிரிச்சு காட்ட சொல்ல தொதல் அல்வானு சொன்னதுமே சார் தொதல் அல்வாவாம் சார்னு சல்யூட் அடிக்காத குறையாக விட்டு விட்டனர். தொதல் அல்வா நம்மூர் ராமநாதபுரம் பக்கம் கீழக்கரை ஸ்பசலாம். இலங்கைலயும் ஸ்பெசல்....சும்மா சொல்லக்கூடாது அவளோ தரம்😋நிஜமா அவளோ சுவை.. திருநெல்வேலி அல்வால தேங்காய்ப்பால் ஊத்தின மாதியே இருந்தது அதோட சுவை😋 எனக்கு மட்டும் இல்லாம வீட்ல நான் தந்த நண்பர்கள்னு எல்லாருக்குமே அவளோ பிடிச்சுது.நல்லாருக்குனு இப்ப வரை சொல்லிட்டே இருக்காங்க. இப்ப என்னைய விட கேட்டத நியாவகம் வைச்சிருந்து மறக்காம வாங்கி தந்து அனுப்பிய அந்த நண்பர்கள் உயரமாக தெரிகின்றனர். படித்ததில் பிடித்தது.
2 months ago
என்ன செய்யிறது... சின்னனிலை கரட் சாப்பிடச் சொன்னவை. 🥕 நான்தான்... அதை சாப்பிடாமல் விட்டதால் வந்த வினை. 😂
2 months ago
அய்க்......ஆசை தோசை அப்பளம் வடை பாயாசம். அதுதான் இல்லையே..😂 ஜேர்மனி பலஸ்தீனத்தை அங்கீகரிக்க போவதில்லையாம்.ஏனெண்டால் அங்கீகரிப்பது பிழையான வேலையாம். உக்ரேனுக்கு முக்கி முனகுபவர்கள் பலஸ்தீன விடயத்தில் பாலுக்கு காவல் பூனைக்கும் தோழன் எண்ட கதைதான். இன்னொரு எத்தியோப்பியாவாக மாறி விட்ட பலஸ்தீனம்.☹️
2 months ago
நல்லாய் கிழிப்பார் போங்க. 😂
2 months ago
கால்தான் போச்சுது என்று பார்த்தால் கண்ணும் போச்சா.🫣
2 months ago
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என்றால் என்ன? Published By: RAJEEBAN 25 JUL, 2025 | 03:19 PM bbc பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிப்பது பெரும்பாலும் குறியீட்டு ரீதியான ஆனால் ஆழமான அரசியல் நடவடிக்கையாக காணப்படுகின்றது. இது ஒரு வலுவான செய்தியை சொல்வதாக அமைந்துள்ளது - மத்திய கிழக்கில் நிலையான அமைதியை அடைவதற்கான ஒரே வழி இரு அரசு தீர்வு இஸ்ரேல் அரசுடன் ஒரு பாலஸ்தீன அரசு. பிரான்ஸ் போன்ற ஒரு பெரிய ஐரோப்பிய சக்தி இந்த நடவடிக்கையை எடுக்கும்போது அது பாலஸ்தீனியர்களுக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமை உள்ளதை வெளிப்படுத்துகின்றது. மேலும் சிலருக்கு அவர்களின் பல தசாப்த கால ஆசை ஒரு நாள் வெற்றிபெறும் என்ற மங்கிப்போகும் நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஆனால் தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் திட்டவட்டமானது - பாலஸ்தீன அரசு என்பது அதனிடம் இல்லை. மே 2024 இல் ஸ்பெயின் நோர்வே மற்றும் அயர்லாந்தைத் தொடர்ந்து பிரான்சின் நடவடிக்கை இஸ்ரேலின் எதிர்ப்பை கடினமாக்கியுள்ளது மற்றும் எதிர்கால பாலஸ்தீன அரசின் நிலமான ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைப்பதற்கான அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது. அதனால்தான் பிரிட்டனின் பிரதமர் ஸ்டார்மர் "மிகப் பெரிய தாக்கத்தை" ஏற்படுத்தும் போது மட்டுமே இங்கிலாந்து அதைச் செய்யும் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால் பாலஸ்தீனிய துன்பம் தீவிரமடைந்து தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கும்போது பிரிட்டன் மற்றும் பிற உலக சக்திகள் மீது - அது மிகவும் தாமதமாகிவிடும் முன் - ஒரு நிலைப்பாட்டை எடுக்க அழுத்தம் அதிகரிக்கிறது. காலம்தான் எல்லாமே என்று அடிக்கடி கூறப்படுகிறது. பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் பல மாதங்களாக சூசகமாக கூறி வந்தது. காசாவில் நிலவும் அவநம்பிக்கையான சூழ்நிலை குறித்து அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதைத் தடுக்க முடியாததால் உலக வல்லரசுகளிடையே ஆழ்ந்த விரக்திக்கு மத்தியில் இறுதியாக தனது நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்துள்ளது. செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் இந்த நடவடிக்கையை முறையாக எடுக்கும்போது மற்ற உலக வல்லரசுகள் அதன் வழியைப் பின்பற்றும் என்று பிரான்ஸ் நம்புகிறது. நிச்சயமாக பெரும்பாலான நாடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன; மே 2024 இல் ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் நோர்வேயும் அங்கீகரித்தன. பிரான்ஸ் ஐநா பாதுகாப்பு சபை மற்றும் ஜி7 அமைப்பின் முதல் உறுப்பினர். பிபிசி ரேடியோ 4 இன் தி வேர்ல்ட் டுநைட் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் இதை ஒரு "பெரிய அறிவிப்பு" என்று கூறினார். இஸ்ரேல் அதை எப்படிப் பார்க்கிறது அங்கீகாரத்தை "பயங்கரவாதத்திற்கான வெகுமதி" என்று கண்டிக்கிறது. அமெரிக்காவிற்கும் இந்த நேரம் தவறானது மற்றும் "பொறுப்பற்றது". ஆனால் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் எதிர்காலம் நாளுக்கு நாள் இருண்டதாகத் தோன்றுவதால் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் சில இராஜதந்திர ஆயுதங்களில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் இப்போது அதிகரித்து வருகிறது. https://www.virakesari.lk/article/220918
2 months ago
கறுப்பு ஜூலை தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல் : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : கொல்லப்பட்ட தமிழர்களின் பல உடல்களை பார்த்தேன் என்கிறார் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:44 PM சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா தமிழ் மக்களிற்கான நீதி அவர்களின் அரசியல் அபிலாஷைகளிற்காக தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஒருவர். வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் இடங்களில் எல்லாம் பார்க்ககூடிய தென்பகுதி முகம் அவர். கறுப்புஜூலை குறித்த அவரின் மனப்பதிவுகள். அவ்வேளை நான் சட்டபீட மாணவனாகயிருந்தேன், 24ம் திகதி நாங்கள் சட்டபீடத்தில் இருந்தவேளை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரும் புகைமண்டலம் எழுந்ததை பார்த்தோம். என்ன நடக்கின்றது என்பது எங்களிற்கு தெரியாது,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. சந்திரஹாசனின் துணைவியார் அவ்வேளை எங்களின் சிரேஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவர். அவர் அச்சத்தினால் நடுங்கியது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது. நான் அவரிடம் சென்று என்ன பிரச்சினை என கேட்டேன், அதற்கு அவர் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன என தெரிவித்தார். அந்த நாட்களில் எங்களின் ஊடகங்களாக செய்தித்தாள்களும் வானொலிகளும் மாத்திரம் காணப்பட்டன, தொலைக்காட்சியின் ஆரம்ப நாட்கள். அன்று காலை முதல் நாள்( 23) 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்திருந்தோம். அதன் பின்னர் பௌத்தர்கள் கனத்தையில் கூடியது குறித்தும் சிங்கள காடையர்கள் தமிழர்களின் வீடுகளிற்கு தீ வைத்தது குறித்தும் கேள்விப்பட்டோம். எங்களை பல்கலைகழகத்திலிருந்து செல்லுமாறு கேட்டார்கள், பேருந்துகள் இல்லை, நான் எனது நண்பியுடன் காரில் எனது ஊரான வாதுவை நோக்கி பயணித்தேன். காரில் செல்லும் வழியில் நான் வெள்ளவத்தை தெகிவளை பகுதிகளில் ஏழு எட்டு உடல்களை பார்த்தேன். கடைகள் வீடுகள் எரிவதையும் உடல்களையும் பார்த்தேன் - நாங்கள் பயணித்த காரை அவர்கள் நிறுத்தினார்கள், யாராவது தமிழர்கள் இருக்கின்றார்களா என கேட்டார்கள் எங்களுடன் தமிழர்கள் எவரும் பயணிக்கவில்லை. இராணுவத்தினர் டிரக்குகளில் காணப்பட்டனர், ஆனால் அவர்கள் காடையர்களை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பு நான்கிலிருந்து தெகிவளை வரை 100க்கும் வீடுகள் கடைகள் எரிவதை பார்த்தேன். ஐக்கியதேசிய கட்சி அமைச்சர் சிறில்மத்தியு இதன் பின்னணியில் இருந்தார். எனது நகரான வாதுவையில் தமிழர்கள் அதிகம் வசிக்கவில்லை, ஆனால் தமிழர் ஒருவரின் சுருட்டுக்கடையிருந்தது. வயதான தமிழ் தம்பதியினர் அந்த கடையை நடத்தினார்கள். சிறுவயதிலிருந்தே அவர்களை எனக்கு தெரியும், அப்பாவிகள் அன்பாக நட்புடன் பழகுபவர்கள். அவர் எப்போதும் சாரம்தான் கட்டியிருப்பார். பகல் 12மணியளவில் அவரது கடை சிறிதளவு திறந்திருந்தது, ஆனால் பகல் மூன்று மணியளவில் அந்த சுருட்டுக்கடையை எரித்துவிட்டார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்தது, அந்த வயதான தமிழ் தம்பதியினர் அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது இனவெறியில்லை இனவெறி கலந்த சூறையாடல். அவ்வாறுதான் சம்பவங்கள் நடந்தன. அன்று மாலை ஜேஆர் ஜெயவர்த்தன உரையாற்றினார், ஊரடங்கை அறிவித்தார், மூன்று அரசியல் கட்சிகளை தடை செய்தார். 25ம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறையில் குட்டிமணி உட்பட தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்பதை அறிந்தோம், அவர்களின் கண்கள் தோண்டப்பட்டன. ஐக்கியதேசிய ஒரு கட்சியாக கறுப்பு ஜூலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லை, ஆனால் அந்த கட்சியின் இனவாத அணியின் சிறில்மத்தியு கறுப்பு ஜூலைக்கு தலைமை வகித்தார். மிகவும் திட்டமிடப்பட்ட முறையிலேயே இது இடம்பெற்றது. வாக்காளர் பட்டியலை வைத்தே தமிழர்களை அவர்களின் சொத்துக்களை தாக்கினார்கள், அது இல்லாமல் எப்படி அவர்களால் தமிழர்களை இலக்குவைத்திருக்க முடியும். ஆகவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விடயம், 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அவர்கள் இவ்வாறான ஒரு கலவரத்தை வன்முறையை முன்னெடுத்திருப்பார்கள், நான் கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியில் வசித்து வந்த எனது நண்பியொருவரை கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்த அகதிமுகாமிற்கு கொண்டுசென்று அங்கு விட்டுவிட்டு வந்தேன். அவர் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டார். அன்டசன் தொடர்மாடியிலிருந்த சிங்களவர்கள் அவருக்கு உதவினார்கள். அவ்வேளை வடக்கிற்கு தப்பிச்சென்ற தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பின்னர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தார்கள். தமிழ் புலம்பெயர் சமூகம் என்பது அப்படித்தான் ஆரம்பமானது, 1958 கலவரத்தின் பின்னர் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றவர்களும் உள்ளனர். ஆனால் 1983ம் ஆண்டின் பின்னரே பெருமளவானவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சியடைவதற்கு கறுப்பு ஜூலையே காரணமாக இருந்தது, பிரிந்து செல்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். இலங்கையின் வரலாற்றில் இதுவே மிகவும் இருண்ட பக்கம். ஆகவே இந்த நாளை நாங்கள் நினைவு கூருகின்றோம், இனிமேலும் இரத்தக்களறியில்லை. இனிமேலும் கறுப்பு ஜூலையில்லை என்ற கருபொருளில் கொழும்பில் நாங்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூரவுள்ளோம். கறுப்பு ஜூலை என்பது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல், தனித்தனியாக தமிழர்கள் தாக்கப்பட்டாலும் இது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல். நான் சிங்களவன் நானும் எனது குழுவினரும் அந்த நாட்களிற்காக எங்கள் கவலையை வேதனையை தெரிவித்துக்கொள்கின்றோம். எங்களை சேர்ந்தவர்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்காக வெட்கப்படுகின்றோம். https://www.virakesari.lk/article/220703
2 months ago
போதைப் பொருள் கடத்திய இந்த கனடா பிரஜை... சிங்களம் அல்லது முஸ்லீம் போலுள்ளது. அதுதான்... அவரின் பெயரை இருட்டடிப்பு செய்துள்ளார்கள். தமிழன் என்றால்... பெயர், ஊர், திருமணம் ஆனவர் என்றால் மனைவியின் பெயர், பிள்ளைகளின் பெயர், கனடா விலாசத்துடன், ஊர் விலாசத்தையும் சேர்த்தே பிரசுரித்து சுய இன்பம் காண்பார்கள், இந்த கிலிசு கெட்ட ஊடகங்கள்.
2 months ago
2 months ago
தாய்லாந்து, கம்போடியா மோதலின் பின்னணி என்ன? போர் மூளும் ஆபத்தா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்போடியாவின் ஒடார் மீஞ்சே மாகாணத்தின் ஒரு தெருவில் ரஷ்ய தயாரிப்பான பிஎம்-21 ராக்கெட் லாஞ்சரை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனம் கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி & கேவின் பட்லர் பிபிசி நியூஸ் 38 நிமிடங்களுக்கு முன்னர் தாய்லாந்து, கம்போடியா இடையே நிலவும் தொடர் பதற்றம் வியாழக்கிழமையன்று (ஜூலை 24) எல்லைப் பகுதியில் கடுமையான மோதலாக வெடித்தது. அதன் விளைவாகக் குறைந்தபட்சம் 12 தாய்லாந்து நாட்டவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் எனவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கம்போடியா தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா, எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவில்லை. இந்த மோதல் தொடங்கியதற்குக் காரணம் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு என்றும் இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றன. கம்போடியா ஏவுகணைகளை ஏவியதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது. கம்போடியாவின் ராணுவ நிலைகள் மீது தாய்லாந்து விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோதல் எப்படி ஏற்பட்டது? அது போராக உருவெடுக்கும் ஆபத்து உள்ளதா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, எல்லையை ஒட்டிய பகுதியில் ஜூலையில் சண்டை தொடங்கியது பதற்றத்திற்கு காரணம் என்ன? இது சமீபத்தில் தொடங்கிய சச்சரவு இல்லை. தாய்லாந்து, கம்போடியா இடையிலான சர்ச்சை ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே தொடங்கியது. அதாவது, கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தபோது, இரு நாடுகள் இடையே எல்லை வகுக்கக்கப்பட்டபோது, இந்த சச்சரவு தொடங்கியது. ஆனால், 2008ஆம் ஆண்டில்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பிரச்னை அதிகாரபூர்வமாக தீவிரமடைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் 11ஆம் நூற்றாண்டு கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதை, யுனெஸ்கோ பாரம்பரிய தலமாக பதிவு செய்வதற்கு கம்போடியா முயன்றதே அதற்குக் காரணம். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் அவ்வப்போது நடந்த மோதல்களில் இருதரப்பிலும் ராணுவ வீரர்கள், பொது மக்கள் எனப் பலர் கொல்லப்பட்டனர். கடந்த மே மாதம், மோதலில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பதற்றம், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளுமே பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்து வந்தன. தாய்லாந்தில் இருந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது. அங்கிருந்து பெறப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் நிறுத்தியது. அண்மை வாரங்களில் இரு தரப்பு எல்லைகளிலும் ராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ளன. அண்மைத் தாக்குதல் பற்றி தாய்லாந்து கூறுவது என்ன? பட மூலாதாரம்,BBC/LULU LUO படக்குறிப்பு, ஜோய் ஃபாசுவன் தனது இரு பேரக் குழந்தைகளுடன் தாய்லாந்தின் சுரின் மாகாண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார் ஜூலை 24ஆம் தேதி என்ன நடந்தது என்பது பற்றி தாய்லாந்தும் கம்போடியாவும் வேறு வேறு விளக்கங்களை அளித்துள்ளன. வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை சுமார் 07:30 மணிக்கு எல்லையில் உள்ள தாய்லாந்து ராணுவ நிலைகளை உளவு பார்க்க கம்போடிய ராணுவம் டிரோன்களை அனுப்பியதாக தாய்லாந்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது. அதன் பின்னர், "ஏவுகணைகளால் ஏவப்படும் எறிகுண்டுகளை ஏந்திய கம்போடிய வீரர்கள் எல்லையில் குவியத் தொடங்கினர். தாய்லாந்து தரப்பில் இருந்த வீரர்கள் கூக்குரலிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை" என தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அதோடு, கம்போடிய வீரர்கள் காலை சுமார் 08:20 மணிக்கு தாக்குதலைத் தொடங்கியதால் தாய்லாந்து தரப்பினர் பதில் தாக்குதல் நடத்த வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார். பிஎம்-21 ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்திருந்த வீடுகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பொது இடங்களையும் சேதப்படுத்தியதாக கம்போடியா மீது தாய்லாந்து குற்றம் சுமத்தியுள்ளது. தாய்லாந்தை குற்றம் சாட்டும் கம்போடியா ஆனால், தாய்லாந்து வீரர்கள்தான் காலை 06:30 மணிக்கு மோதலைத் தொடங்கியதாக கம்போடியா கூறுகிறது. அதாவது, முந்தைய ஒப்பந்தத்தை மீறிய தாய்லாந்து வீரர்கள், எல்லை அருகே இருக்கும் கெமர்-இந்து கோவில் வரை முன்னேறி வந்து முள்வேலி அமைத்ததாகவும் கம்போடியா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அதன் பின்னர் "தாய்லாந்து வீரர்கள் காலை 7:00 மணிக்குப் பிறகு ஒரு டிரோனை செலுத்தியதாகவும், சுமார் 08:30 மணிக்கு வானத்தை நோக்கி சுட்டதாகவும்" கம்போடியா தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாலி சோசியாட்டா தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES காலை 08:46 மணிக்கு, தாய்லாந்து படையினர் முன்னறிவிப்பின்றி கம்போடிய படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாலி சோசியாட்டாவை மேற்கோள் காட்டி ப்னோம் பென் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மேலும், "அதனால், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான உரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை" என அவர் கூறியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இவற்றோடு, தாய்லாந்து அதிகப்படியான படைகளைக் குவித்து, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, கம்போடிய பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சோசியாட்டா குற்றம் சாட்டினார். தாய்லாந்து, கம்போடியா இடையே போர் வெடிக்குமா? கம்போடியாவுடனான பிரச்னை "நுட்பமானது" என்றும், அதைக் கவனமாக, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டுத் தீர்க்க வேண்டும் என்றும் தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாச்சை கூறினார். இந்தப் பிரச்னையை அமைதியாக தீர்க்கவே கம்போடியா விரும்புவதாகவும், "ஆயுதப் படை ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் படை மூலம் பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்றும் அந்நாட்டுப் பிரதமர் ஹுன் மனெட் கூறினார். கடந்த காலங்களில் தீவிரமான துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று இருந்தாலும் பதற்றம் விரைவிலேயே தணிக்கப்பட்டது. அதே பாதை மீண்டும் தேர்வு செய்யப்படும் என பிபிசி செய்தியாளர் ஜோனதன ஹெட் கருதுகிறார். அதேவேளையில், தற்போது இந்த சண்டையில் இருந்து நம்பிக்கையுடன் பின்வாங்கத் துணியும் தலைவர்கள் இருதரப்பிலும் இல்லை என்றும் அவர் எச்சரிக்கிறார். தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு செல்வது பாதுகாப்பானதா? தற்போது வரை இந்த மோதல் குறிப்பிட்ட ஒரு பகுயில் மட்டுமே நடைபெறுகிறது. இருப்பினும், சமீபத்திய வாரங்களில் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளை இந்தப் பகுதியில் "குறிப்பாக பிரேஹ் விஹேர் கோவில், தா இக்வை கோவில், தா முயென் தோம் கோவில் போன்ற சுற்றுலாத் தலங்களில் கூடுதல் கவனம்" செலுத்துமாறு ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தாய்லாந்து எல்லையைத் தவிர்க்கும்படி கம்போடியாவில் இருக்கும் தனது குடிமக்களை சீனா வலியுறுத்தியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4e4z94129o
2 months ago
நாடாளுமன்றத்திலும் "இந்தியன்" திரைப்படத்தை ஒளிபரப்பி அங்கிருக்கும் ஊழல்வாதிகளை வெருட்ட வேண்டும்.🤣
2 months ago
Published By: VISHNU 20 JUL, 2025 | 06:08 PM ஆர்.சேதுராமன் இலங்கையில் முதலீடு செய்வதில், ஜப்பானிய நிறுவனங்கள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மீள நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு, ஊழலை ஒழிப்பதும் நல்லாட்சியும் அவசியமான முன்நிபந்தனைகளாக உள்ளன என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா அண்மையில் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலங்கை தீவிரமாக முயன்றுவரும் நிலையில், ஜப்பானிய தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற 4 ஆவது ஜப்பானிய –இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு கொள்கை உரையாடலின்போது அவர் இதனை கூறினார். ஜப்பான் வெளியுறவு பிரதி உதவி அமைச்சரும், ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு பணியகத்தின் இஷிசுகி ஹிடியோ, இலங்கை நிதியமைச்சின் புதிய செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் இலங்கையின் அபிவிருத்திக்கு நீண்ட காலமாக கைகொடுத்துவரும் ஜப்பான், இலங்கையில் ஊழல்களை ஒழிக்க வேண்டியதை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது. ஊழல் ஒழிப்புக்காக பல்வேறு உதவிகளையும் இலங்கைக்கு ஜப்பான் வழங்கிவருகிறது. கடந்த மே மாதம் கொழும்பில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்குபற்றிய ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா, இலங்கையில் நிலவிய ஊழல்களால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக ஜப்பான் உள்ளதாக குமுறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முதலீடுகளைச் செய்வதில் ஜப்பானிய நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அகியோ இசோமாட்டாவுக்கு முன்னர், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக பதவி வகித்த மிஸுகோஷி ஹிடேக்கியும் இலங்கையில் ஊழல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல தடவைகள் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார். கோட்டாபய ராஜபக் ஷ காலத்தில், ஜப்பானிய நிறுவனமொன்றிடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளை, சர்வதேச அபிவிருத்திக்கான ஜப்பானிய முகவரத்தின் (ஜெய்க்கா) உதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான, இலகு ரயில் திட்டத்தை கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் ஒரு தலைபட்சமாக இரத்து செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஜப்பான் கடும் அதிருப்தி கொண்டிருந்தது. அதன்பின் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜப்பானிய உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கியிருந்தன. 2023 மே மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டோக்கியோவுக்கு விஜயம் செய்து ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடாவை சந்தித்தபோது, மேற்படி திட்டம் இரத்துச் செய்யப்பட்டமைக்காக இலங்கை சார்பில் மன்னிப்பு கோரினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர், இலங்கையில் 11 அபிவிருத்தித் திட்டப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக ஜப்பான் அறிவித்தது. அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என்பதை அப்போதைய ஜப்பானிய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி மீள உறுதிப்படுத்தினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒக்டோபர் முற்பகுதியில் 'ஜப்பானிய அபிவிருத்தி வரலாறும் இலங்கைக்கான செய்திகளும்' என்ற தலைப்பில் சொற்பொழிவுவொன்றை நிகழ்த்திய அப்போதைய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி, இலங்கையின் ஊழல்களை பற்றிய தனது அவதானிப்பை வெளியிட்டார். 'இலங்கைக்கு நான் வந்தது முதல் அவதானித்ததில் இருந்து, இலங்கையில் ஊழல் தொடர்பில் இரு விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதலாவதாக, ஊழலானது தலைவர்கள் மீது நாட்டு மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஒரு காரணமாகிறது. தலைவர்கள் ஊழலில் ஈடுபடும்போது மக்கள் நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக இருப்பதை ஊக்கப்படுத்துவதை அது தடுக்கிறது. இது வரி செலுத்துவோருக்கு வரி ஏய்ப்பு செய்ய வசதியான சாக்குப்போக்குகளை வழங்குகிறது. இரண்டாவதாக, இலங்கை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க விரும்பும்போது இது மிகவும் தீங்கு விளைவிக்கிறது' என அவர் குறிப்பிட்டிருந்தார். 'ஜப்பானிய நிறுவனங்கள் அவற்றின் கடப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றி வருகின்றன அதனால் அவை இலஞ்சம் வழங்கமாட்டா. இலங்கையில் ஊழல் கலாசாரம் தொடர்ந்தால், இங்கு ஜப்பானிய முதலீடுகள் வருவதற்கான சாத்தியம் இல்லை' எனவும் அவர் எச்சரித்திருந்தார். ஊழலை ஒழிப்பதற்கு உறுதி பூண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நாட்டின் புதிய தலைவராக இலங்கை மக்கள் தெரிவுசெய்துள்ள நிலையில், நீண்ட காலமாக நாட்டை சீர்குலைத்துள்ள ஊழலை ஒழிப்பதற்கு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது எனவும் முன்னாள் தூதுவர் ஹிட்டேக்கி அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக பதவியேற்ற அக்கியோ இசோமாட்டாவும், இலங்கையில் ஊழல்களின் பாதிப்புகள் குறித்து காரசாரமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். ஊழல் ஒழிப்புக்காக 2.5 மில்லியன் டொலர் உதவி ஊழலை ஒழிப்பதற்கு உதவும் ஜப்பானின் திட்டங்களின் வரிசையில், இலங்கையில் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும் மூன்றாண்டுத் திட்டத்துக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்கும் ஒப்பந்தமொன்று கொழும்பில் கடந்த முதலாம் திகதி கையெழுத்திடப்பட்டது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (யூ.என்.டி.பி) உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு ஜப்பான் நிதி அளிக்கிறது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா மற்றும் யூ.என்.டி.பி.யின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நீதி அமைச்சர் ஹர்ஷா நாணயக்கார, சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க, இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கே.பி. ராஜபக் ஷ, சேதிய குணசேகர, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க குமநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இத் திட்டமானது ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவன திறனை மேம்படுத்துதல், பொது நிர்வாகம், முதலீடுகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல், திறமையான வழக்கு விசாரணை மற்றும் பொது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இத்திட்டம், நிறுவனங்களில் ஊழலைத் தடுப்பதற்கு ஆளுகை பொறிமுறைகளை வலுப்படுத்துதல், விசாரணை நடைமுறைகளை மேம்படுத்துதல், பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், குடிமக்களை மேம்படுத்துதல், மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் தரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இது குறிப்பாக இளைஞர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் குடிமக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் முயல்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (யூ.என்.டி.பி.) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, ‘‘இலங்கை ஊழலை எதிர்கொள்ள தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஜப்பனிய அரசு, மக்களின் தாராளமான நிதியுதவியுடன் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுடனான இந்த கூட்டாண்மை, நல்லாட்சியை நோக்கிய எமது கூட்டு பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. இந்தத் திட்டத்தின் தொடக்கம், நிறுவனங்களை வலுப்படுத்துவது மட்டுமல்ல, இது பொது நம்பிக்கையை மீட்டெடுப்பது, குடிமக்களை மேம்படுத்துவது, அனைவருக்கும் சமமான வாய்ப்பை உருவாக்குவது தொடர்பானது. 2025 – 2029 காலத்துக்கான இலங்கையின் தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், நிலையான வளர்ச்சிக்கு அமைப்பு ரீதியான தடைகளை அகற்றி, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை வளர்க்கும் ஒரு சமூக அளவிலான அணுகுமுறையை ஆதரிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய, தேசிய பங்காளிகளுடன் இணைந்து யூ.என்.டி.பி. தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது’’ எனவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த காலங்களிலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊழல் ஒழிப்பு தொடர்பான பயிற்சிகள், செயலமர்வுகளை நடத்துவதற்கும் ஜப்பான் உதவியிருந்தது. பாலியல் இலஞ்சம் தொடர்பாகவும் இலங்கையின் மருத்துவ, சட்டத்துறையினருக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் உதவியளித்திருந்தது. பல நாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கு உதவ முன்வந்த நிலையில், இலங்கையில் ஊழல்களை வேரறுக்க உதவுதற்கும் ஜப்பான் ஆர்வம் செலுத்துகின்றது. https://www.virakesari.lk/article/220488
2 months ago
அருணாச்சலம் பெயர் சர்ச்சை: திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது அண்மையில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் விவாதங்களை எழுப்பியது. இதற்கான எதிர்வினையைத் தொடர்ந்து அரசு உத்தரவுப்படி, பேருந்துகளில் மீண்டும் திருவண்ணாமலை என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது ஏன்? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? சர்ச்சையின் பின்னணி என்ன? தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வருகை தரும் ஆன்மீகத் தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. ஆண்டுதோறும் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா, மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி கிரிவலம் ஆகிய நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, தெலுங்கு பேசும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் திருவண்ணாமலை வருகின்றனர். கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் கடந்த சில மாதங்களாக தெலுங்கு மொழியில் அறிவிப்புகள் எழுதப்படும் அளவுக்கு அந்த மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சில அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையிலும் திருவண்ணாமலை என்பதற்குப் பதிலாக அருணாச்சலம் எனக் குறிப்பிடப்பட்டது. விழுப்புரம் பணிமனையில் இருந்து திருவண்ணாமலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்பட்ட சில பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப் பலகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக இது மாறவே, பலரும் தங்களது விமர்சனங்களை பதிவு செய்தனர். 'ஊர் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை' பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலையை வேறு பெயரில் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார் திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமதாஸ். "கடந்த ஒரு வருட காலமாகவே கோயில் உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அதைத் தாண்டி பேருந்துகளிலும் பெயரை மாற்றி அருணாச்சலம் என்று எழுதினார்கள். இதற்கு எதிராக அப்போதிருந்தே நாங்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றோம்," என்றார் அவர். கடந்த ஒரு வருடமாக தான் அருணாச்சலம் என்ற வார்த்தை அதிகமாக பயன்பாட்டில் உள்ளது என்று கூறும் ராமதாஸ், தனக்கு நினைவு தெரிந்து இதற்கு முன்பெல்லாம் திருவண்ணாமலை அவ்வாறாக அழைக்கப்பட்டது இல்லை என்றார். "கோவிலில் உள்ள பிரதான கடவுளான அருணாச்சலேஸ்வரர் பெயரால் அருணாச்சலம் என்று எங்கள் ஊர் அழைக்கப்படுகிறது என்றாலும், வணிக ரீதியாக திட்டமிட்டு தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் அருணாச்சலம் என்று எழுதியது தவறு," என்றார் திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் ஆனந்தன் அதே வேளையில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அந்த ஊர் மக்களுக்கு புரியும் வகையில் அருணாச்சலம் என்று எழுதுவதில் தவறேதும் இல்லை என்று தன்னுடைய கருத்தை முன்வைத்தார் ஆனந்தன். கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை திருவண்ணாமலை சர்ச்சை குறித்து தொல்பொருள் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில், "திருவண்ணாமலை கோவிலுக்கு உள்ளே கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஆதித்த சோழன் கால கல்வெட்டில், அண்ணாமலை உடைய நாயனார் என பொறிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிந்தைய கல்வெல்ட்டில் அதாவது 18-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலகட்டத்தில் அருணாச்சலம் என்ற பெயர் தெலுங்கு, வடமொழி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார். முகமது பின் துக்ளக்: மக்களை கொடூரமாக மிரட்டி டெல்லியை மொத்தமாக காலி செய்ய வைத்தது ஏன்? கன்வார் யாத்திரை: உ.பி.யில் முஸ்லிம் உணவகங்கள், ஊழியர்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு ஔரங்கசீப் பற்றி எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் என்சிஇஆர்டி செய்த மாற்றங்களால் சர்ச்சை அரியலூர் அருகே கோவிலில் பட்டியல் சாதியினருக்கு முட்டுக்கட்டை போடும் 'ஏழு வகையறா' யார்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு இதையடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசுப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திருவண்ணாமலை என்றே குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி பகுதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர் சிவசக்தி பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசியபோது, "இப்பொழுது எந்த பிரச்னையும் இல்லை. திருவண்ணாமலை என பேருந்துகளில் மாற்றி எழுதப்பட்டு விட்டது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyg8l17333o
2 months ago
தாய்லாந்து பௌத்த நாடு. கம்போடியா பௌத்த நாடு. இரு நாடுகளும் உரிமை கோருவது இந்து கோவிலை!!! காமெடியாக இல்ல? 😎
2 months ago
Published By: DIGITAL DESK 3 25 JUL, 2025 | 01:36 PM இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலைபாடசாலை ஒன்றில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாடசாலை வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 மாணவ, மாணவியர் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/220911
2 months ago
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது. https://adaderanatamil.lk/news/cmdi5df1o01m2qp4kmm93cckb
2 months ago
வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிசாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர். மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது. குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cmdim8yrk01muqp4kpwp2wnbv
2 months ago
பிரான்ஸ் அங்கீகரித்தால்... ஜேர்மனும் அங்கீகரிக்கும் என நினைகின்றேன். 🙂 ஜேர்மன் அங்கீகரித்தால்.... பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்தற்கு சமன். 😀 கடைசியாக இங்கிலாந்தும், அமெரிக்காவும்... வீணீர் வடித்துக் கொண்டு நிற்கப் போயினம். 😂 🤣
Checked
Sun, 09/28/2025 - 09:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed