2 months ago
25 JUL, 2025 | 06:44 PM ஆர்.சேதுராமன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு அரசியலில் மஸ்க்கின் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன. 'டெஸ்லா' மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ்' எனும் ரொக்கெட் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனங்களின் அதிபரான இலோன் மஸ்க், உலகின் முதல்நிலை கோடீஸ்வரராக விளங்குகிறார். அவரின் செல்வ மதிப்பு 400 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் பிரசாரத்துக்காக 277 மில்லியன் டொலர்களை இலோன் மஸ்க் செலவிட்டார். அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவராக இலோன் மஸ்க் பதவியேற்ற பின்னர் வெளிநாடுகளுக்கான நிதியுதவிகளை குறைத்தல், அரச நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல் உட்பட கடுமையான திட்டங்களை மஸ்க் அறிமுகப்படுத்தினார். வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க முகவர் நிறுவனமான 'யூ.எஸ்.எயிட்' நிறுவனத்தையே மஸ்க்கின் ஆலோசனையைடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் இழுத்து மூடினார். மஸ்க்கின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவரின் டெஸ்லா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. அதேவேளை, தனது சிக்கன நடவடிக்கைகள் மூலம் அரசின் செலவுகளை குறைத்த போதிலும், ட்ரம்பின் வரி, செலவின சட்டமூலம் காரணமாக பெருந்தொகை நிதி வீணாகிறது என குற்றம் சுமத்திய மஸ்க், கடந்த மே மாதம் அவர் அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். 'ஒரு பெரிய அழகிய சட்டமூலம்' என ஜனாதிபதி ட்ரம்பினால் வர்ணிக்கப்பட்ட மேற்படி சட்டமூலத்துக்கு குடியரசுக் கட்சி காங்கிரஸ் (பாராளுமன்ற) உறுப்பினர்கள் ஆதரவளித்தால் 3 ஆவது அமெரிக்கா கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக மஸ்க் அறிவித்திருந்தார். அச்சட்டமூலம் ஜூலை 4 ஆம் திகதி காங்கிரஸில் 218 : 214 விகித வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 4 ஆம் திகதி, ஜனாதிபதி ட்ரம்ப் அச்சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். மறுநாள் 'அமெரிக்கா கட்சியை' (America Party) ஸ்தாபிக்கப்போவதாக இலோன் மஸ்க் அறிவித்தார். எனினும், புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்து. அதன் இலக்குகளில் அடைவதில் இலோன் மஸ்க் வெற்றிபெற முடியுமா என்பதில் விவாதங்கள் உள்ளன. தென் ஆபிரிக்காவில் பிறந்த இலோன் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. தனது 'அமெரிக்கா கட்சி' குறித்த தனது அறிவிப்பையடுத்து, புதிதாக ஸ்தாபிக்கப்படும் கட்சி 2 அல்லது 3 செனட் ஆசனங்களிலும் 8 முதல் 10 பிரதிநிதிகள் சபை ஆசனங்களிலும் கவனம் செலுத்தலாம் என இலோன் மஸ்க் தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குரிய சட்டமூலங்கள் தொடர்பில் தீர்மானகரமான வாக்குகளாக விளங்குவதற்கு இந்த ஆசனங்கள் போதுமானவை என்கிறார் மஸ்க். அத்துடன், காங்கிரஸ் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கு தான் முதலில் திட்டமிடுவதாகவும், ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் சாத்தியம் நிராகரிக்கப்படக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் தாக்கம் செலுத்துவது மஸ்கின் திட்டமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இரு கட்சிகள் முறைமை அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளே தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், அந்நாட்டில் தேசிய ரீதியாகவும், மாநிலங்கள் ரீதியாகவும் பதிவுசெய்யப்பட்ட ஏராளமான கட்சிகள் உள்ளன. 'அமெரிக்கன் கட்சி' (American Party) என்ற பெயரிலும், 1969 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியொன்று ஏற்கெனவே உள்ளது. ஆனால், 3 ஆவது கட்சியாக குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தக்கூடிய கட்சி பலமான எதுவும் இல்லை. கடந்த பல தசாப்தங்களில், அமெரிக்க கோடீஸ்வரர்கள் பலர் வலுவான 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பதற்கு முயன்று வந்தனர். ஆனால், இரு கட்சி ஆதிக்க முறைமையை அவர்களால் அசைக்க முடியவில்லை. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கடந்த நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய 3 ஆவது கட்சி வேட்பாளர்களாக தியோடர் ரூஸ்வெல்ட், ரொபர்ட் லா பொலெட், ரொஸ் பெரோட் முதலானோர் விளங்குகின்றனர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தியோடர் ரூஸ்வெல்ட் 1901 முதல் 1909 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அவர் 1912 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்கு கட்சியின் சார்பில் போட்டியிட்டு 27.4 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றார். 1924ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் லா பொலெட் 16.6 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார். 1992ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சுயேச்சையாக போட்டியிட்ட ரொஸ் பெரோட் எனும் கோடீஸ்வரர் 18.9 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார். வேர்மன்ட் மாநிலத்தில், செனட்டர் பதவிக்கான தேர்தலில் பேர்னி சான்டர்ஸ் 2006 ஆம் ஆண்டு முதல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றியீட்டி வருகிறார். ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிட்டாலும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு அவருக்கு உள்ளது. செனட் சபைத் தேர்தலில் பேர்னி சான்டர்ஸுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதில்லை. பிரதான கட்சிகளுக்கு சார்பான சட்டங்கள் அமெரிக்க மாநிலங்களின் சட்டங்கள், இரு பெரிய கட்சிகளுக்கும் சார்பானவை, 3 ஆவது கட்சியொன்று தலைதூக்குவதற்கு அச்சட்டங்கள் சிரமங்களை ஏற்படுத்துகின்றன எனவும் விமர்சனங்கள் உள்ளன. புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான விதிகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்தைப் பொறுத்தவரை, அம்மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 0.33 சதவீதத்தினரின் அதாவது சுமார் 75,000 பேரின், கையொப்பத்தை சேகரித்தாலேயே புதிய கட்சியொன்று அங்கீகரிக்கப்படும். அதன் பின்னர் அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மாநில ரீதியான தேர்தல்களில் குறைந்தபட்சம் 2 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அல்லது 0.33 சதவீத பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவில் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் என்பதால் அவர் கட்சி ஆரம்பித்து, தாராளமாக நிதி அளிக்க முடியாது. அதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளன. தேசிய ரீதியிலான இலட்சியங்களுடன் அரசியல் கட்சியொன்றை கட்டியெழுப்புவது மேலும் சிரமமானது. அதற்கு அதிக காலமும் தேவைப்படும். புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக இலோன் மஸ்க் பேசிவந்த போதிலும், அவர் குடியரசுக் கட்சியினருக்கும் தொடர்ந்து ஆதரவாக உள்ளார். குறிப்பாக, அக்கட்சியில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரானவர்களை இலோன் மஸ்க் ஆதரிக்கிறார். ட்ரம்பின் 'பெரிய அழகிய சட்டமூலத்துக்கு' எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் தோமஸுக்கு உட்கட்சித் தேர்தலில் ஆதரவு வழங்குவதாக மஸ்க் அறிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலோன் மஸ்க் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டால் அவரால் சில தாக்கங்களை ஏற்படுத்த முடியும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் ஒரு தரப்பினரை இலோன் மஸ்க் கவரமுடியும். சொற்ப வித்தியாசங்களில் குடியரசு முன்னிலை வகிகக்கூடிய தேர்தல்களில் இலோன் மஸ்க்கின் கட்சி வாக்குகளை உடைக்க முடியும். இது குடியரசுக் கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அமெரிக்கவரின் குய்னிபியாக் பல்கலைக்கழகம் தேசிய ரீதியில் கடந்த மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் 62 சதவீதமான குடியரசுக் கட்சி வாக்காளர்கள் இலோன் மஸ்க்குக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடையே அவருக்கான ஆதரவு வெறும் 3 சதவீதமாகவே இருந்தது. அதாவது, இலோன் மஸ்க் கட்சி ஆரம்பித்தால் அது, ஜனநாயகக் கட்சியினரைவிட குடியரசுக் கட்சியினருக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஒரு 3ஆவது கட்சியை ஸ்தாபிப்பது அபத்தமானது என தான் கருதுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளர். “குடியரசுக் கட்சியுடன் நாம் பிரமாண்ட வெற்றியீட்டுகிறோம். ஜனநாயகக் கட்சி அதன் இலக்கை தவறவிட்டுள்ளது. ஆனாலும் அது எப்போதும் இரு கட்சி முறைமையாகவே இருக்கும். 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பது குழப்பதையே அதிகரிக்கும் என எண்ணுகிறேன். “அமெரிக்காவில் 3 ஆவது அரசியல் கட்சி வெற்றியீட்டியதில்லை என்ற உண்மைக்கு மத்தியிலும் மஸ்க் 3 ஆவது கட்சியை ஸ்தாபிக்க விரும்புகிறார். அமெரிக்க முறைமை அவற்றுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பபடவில்லை” என்கிறார் ட்ரம்ப். https://www.virakesari.lk/article/220954
2 months ago
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், இன்று (25) மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி, புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என அடையாளம் காணப்பட்ட இவர், தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஜெமீல் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார். கிளிநொச்சி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmdiwtuw301ncqp4k14uojezy
2 months ago
உலகப்புகழ் பெற்ற கீழக்கரை தொதல் அல்வா .......... ! 😀
2 months ago
இங்குதான் திருப்புமுனை....அரசின் ஆட்டம் தொடங்கியிருக்கிறது....அதாவது பிரேத பரிசீதனையின் பின்...தொடங்கிட்டாங்க...இனி இது சுடலைப் பிணங்கள் ...புலனாய்விடம் பொறுப்பு கொடுக்கும்போதே யோசித்தேன் ..இனி சுபம்
2 months ago
"உள்ளக பொறிமுறைக்கு ஆதரவான ஐநா மனித உரிமை ஆணையாளரின் கருத்து ஏமாற்றமளிக்கின்றது" - சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி வடக்குகிழக்கு சமூகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் 25 JUL, 2025 | 04:59 PM உண்மைக்கும் நீதிக்குமான இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் உள்ளகபொறிமுறை குறித்து நம்பிக்கையில்லை சர்வதேச பொறிமுறையையே நாங்கள் வேண்டிநிற்கின்றோம் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காக நாளை வடக்குகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்குகிழக்கின் சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இலங்கை விஜயத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் உள்ளகப்பொறிமுறையை வலியுறுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்தமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் வடக்குகிழக்கின் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ் சிவில் சமூக அமையத்தின் பொன்சிங்கம் மெய்நிகர் கலந்துரையாடலில் இது குறித்து தெரிவித்துள்ளதாவது ஏன் தற்போது இந்த போராட்டம் என்ற கேள்வி எழக்கூடும். 2009 இல் தங்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அழிப்பிற்கு வன்முறை, கொலை, பாலியல்வன்முறை போன்றவற்றிற்கு பலவழிகளில் நீதி கோரி தமிழனம் தோற்றுப்போயுள்ளது. இந்த அடிப்படையில் சர்வதேசநீதியை கோரிநிற்கின்றோம். செம்மணி மீண்டுமொருமுறை சர்வதேச பொறிமுறையின் அவசியத்தை உணர்த்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் மறை முயல்கின்றது என தமிழ் மக்கள் கருதுகின்றனர். அப்படியாயின் நீதியான விசாரணைகள் நடப்பது சாத்தியமில்லை. தமிழ் மக்கள் கடந்தகாலங்களில் பல விசாரணைகளில் ஆஜராகியிருந்தார்கள். ஆனால் எந்த பொறிமுறையும் நம்பகதன்மை மிக்கதாக அமையவில்லை. ஐநா மனித உரிமையாளர் இலங்கை வருகின்றார் என்றவுடன் இந்தவிடயம் உரத்துப்பேசப்பட்டது. தமிழ்மக்கள் நீதி கோரி நின்றார்கள். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் உள்நாட்டு பொறிமுறையை ஊக்குவிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்த விடயத்தில் இயன்ற பல விடயங்களை செய்வதாக தெரிவித்துள்ளார். இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பல கேள்விகளையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இந்த பொறிமுறையில் எங்களிற்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம். 26ம் திகதி வடகிழக்கு சமூக இயக்கம் ஒரு பெரும் எதிர்ப்பு போராட்டத்தை வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. உள்நாட்டு பொறிமுறை ஏற்புடையதல்ல என்பதை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். தமிழ் சிவில் சமூக அமையம் அவர்களிற்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றது. வடக்குகிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லவகுசராசா தெரிவித்துள்ளதாவது இனப்படுகொலை இடம்பெற்ற செம்மணியை பார்த்த பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஊடகங்களிற்கு தெரிவித்த கருத்துக்கள் வடக்குகிழக்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதற்கு மறுநாள் இலங்கைக்கான ஐநாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி தெரனவிற்கு தெரிவித்த கருத்துக்களும் பாரிய ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது. உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம். கடிதங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். 26ம் திகதி வடக்குகிழக்கில் உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கையில் என்பதை தெரிவித்து சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி நாம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளோம். யுத்தம் நிறைவடைந்த 16 வருடங்களில் எங்கள் ஆதரவை வெளியிடாவிட்டாலும் உள்ளக பொறிமுறை ஊடாகவும் நாங்கள் நீதியை பெற முயற்சி செய்தோம். உள்ளக பொறிமுறை மூலம் நீதி கிடைக்கும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. குமாரபுரம் தீர்ப்பு உள்ளக பொறிமுறை எவ்வாறு இயங்கும் என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம். 2016 ஜூலைமாதம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட அனைவருக்கும் உள்ளக பொறிமுறை மீது நம்பிக்கையில்லை. இதனை வெளிப்படுத்தவே ஆர்ப்பாட்டம். சட்டத்தின் ஆட்சி என்பது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களிற்கு சாதகமாக உள்ளது. தங்கமுலாம் பூசப்பட்ட ரி56 துப்பாக்கியை வைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனைத்து விடயங்களும் ஒரு பக்கசார்பாகவே கையாளப்படும் நிலை காணப்படுகின்றது. இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை வெளியில் எடுத்து பொதுச்சபையில் பாரப்படுத்தவேண்டும். ஆகவே மேற்கூறப்பட்ட காரணங்களால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களிற்காக குரல்கொடுக்கும் சிவில் சமூகத்தினராகிய நாங்களும் சர்வதேச பொறிமுறையை வேண்டிநிற்கின்றோம். வெளிநாட்டு தரப்பினர் இது குறித்து எதிர்காலத்தில் ஆராய்வதே பொருத்தமாகயிருக்கும். https://www.virakesari.lk/article/220932
2 months ago
பாவம் பார் சிறி விசிறிகள்!🙈
2 months ago
எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுகுறித்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை பாராளுமன்றத்தின் மேனாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அமரர்.இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமாகி ஒருவருடம் நிரம்பியுள்ள சூழலிலும், அவரது மறைவினால் தமிழ்த்தேசிய அரசியற் தளத்தில் ஏற்பட்ட இடைவெளியை உணர்ந்த ஒருவனாக, இந்தச் சபையில் அவரின் மறைவுக்கான ஆழ்ந்த துக்கத்தையும் மரியாதையுடனான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் மக்களின் நீண்டகால இன விடுதலைப் பயணத்தில், அறம், அரசியல் நுண்ணறிவு, அனுபவம் என்பவற்றின் முழுமையான ஆளுமை வடிவமாகத் திகழ்ந்த சம்பந்தன் ஐயா அவர்கள், 1933 பெப்ரவரி 5ஆம் திகதி தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் பிறந்து, தமது கல்வியை திருகோணமலையிலுள்ள புனித வளனார் தமிழ் பாடசாலையில் ஆரம்பித்து, யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி, குருநாகல் புனித ஆன்ஸ் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பயின்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கற்கையைப் பூர்த்திசெய்து, தனது தொழில்முறை வாழ்க்கையை சட்டவாளராக ஆரம்பித்த போதும், 23 வயது நிரம்பிய 1956 ஆம் ஆண்டிலேயே தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து, தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளர், உப தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியையும் அலங்கரித்ததோடன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், 2015 முதல் 2018 வரையான காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, தமிழின விடுதலைப் போரியல் காலகட்டத்திலும், தமிழர்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்ட 2010 முதல் 2024 வரையான கடந்த 14 ஆண்டுகளிலும் சம்பந்தர் என்கின்ற அரசியல் பேராளுமை ஆற்றிய செயல்களின் கனதி மிகப் பெறுமதியானது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து முழுமையாக இருபத்தொரு ஆண்டுகளின் பின்னர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதன் மூலம், தனது நேரடி அரசியற் பிரதிநிதித்துவத்தை ஐயா ஆரம்பித்திருந்தார். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், தனிநாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983இன் இதே ஜுலை மாதத்தில், மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மூன்று மாதங்கள் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் புறக்கணித்ததால் பதவியிழந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராக, சம்பந்தன் அவர்களும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 செப்டம்பர் 7 இல் இழந்தார். அதன்பிற்பாடு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களது மறைவின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தின் அடிப்படையில், 1997 இல் மீளவும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட சம்பந்தன் அவர்கள், 2001.10.20ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்ற அதே காலப்பகுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக 2004, 2010, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அத்தனை பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட அவரை திருகோணமலை மாவட்ட மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் அரசியற்தலைவராக அவரது பிரதிநிதித்துவம் மிகப்பெரியது. இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக 1984இல் நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டிலும், 1985இல் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையிலும் தமிழர் பிரதிநிதியாக கலந்து கொண்டமை, ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு குறித்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருடன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டமை, பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக பங்கேற்றமை, இந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் பலருடன் சந்திப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டமை, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பிலும், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களின் பலவீனங்கள் குறித்தும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை வரைவதில் முக்கிய பங்காற்றியமை உள்ளிட்ட விடயங்கள் அவரது அரசியல் வாழ்வின் மிக முக்கிய செயற்பாடுகள் எனலாம். இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'பிராந்தியங்களின் ஒன்றியம்' என்ற தீர்வுத் திட்ட வரைவினை வடிவமைப்பதில் அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களுடன் சம்பந்தன் ஐயாவின் பங்கும் இருந்திருக்கிறது. இவற்றுக்கு மேலாக 2010 - 2015வரையான காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலங்கையின் அரச தரப்புகளோடு நடைபெற்ற 14 பேச்சுவார்த்தைகளையும், மைத்திரிபால - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலமான 2015 - 2019வரையான காலத்தில் நடைபெற்ற அனைத்துப் பேச்சு வார்த்தைகளையும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவோடு திரு.சம்பந்தன் அவர்களே தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். விடுதலைப் போராட்ட மௌனிப்பின் பின்னர் திக்குத் தெரியாதிருந்த ஈழத்தமிழர்களின் அரசியல் ஆபத்பாந்தவனாக காலத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சம்பந்தன் அவர்களின் தலைமைத்துவ முதிர்ச்சிதான், இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுப் பயணத்திற்கு அடித்தளமிட்டிருந்தது. அரசியல் வெறுமை சூழ்ந்த கடந்த 14 ஆண்டுகளை இராஜதந்திர ரீதியாக சரிவரக் கையாண்ட அரசியற் தலைவராகவும், அவரைப் பின்பற்றும் எங்களின் அரசியற் பயணத்திற்கான வழிவரைபடத்தை உருவாக்கித் தந்த ஒருவராகவும், சம்பந்தன் அவர்கள் சாணக்கியம் மிக்க அரசியற் தலைவராக தனது பயணத்தில் வெற்றிகண்டிருந்தார் என்பதே உண்மை. சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளால் மதிக்கப்பட்ட, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்தும் தமிழினப் படுகொலைக்கான நீதி விசாரணை குறித்தும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக அணுகத்தக்க அரசியற் தலைவராகவும் சம்பந்தன் அவர்களே அடையாளம் பெற்றிருந்தார். அது அவரது அரசியல் அனுபவத்திற்கும், தலைமைத்துவ ஆளுமைக்கும், இனம்சார் அரசியலில் அவர் ஆற்றிய வகிபங்குக்கும் கிடைத்த அடையாளமே. எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது. இருந்தபோதும் அவரது தடங்களைப் பின்பற்றும் ஒருவனாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இருப்பை உறுதிசெய்யவும், ஈழத்தமிழர்களது அரசியல் உரித்துக்கான தமிழ்த் தேசியப் பயணத்தில் எனக்கிருக்கும் தார்மீகப் பங்கை உறுதிசெய்யவும், இதயசுத்தியோடு பணியாற்றுவேன் என்ற உறுதியோடு ஐயாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து, அவரது குடும்பத்தினருக்கான அனுதாபங்களையும் பகிர்ந்து நிறைவுசெய்கிறேன்" என்றார். https://adaderanatamil.lk/news/cmdiptf1001n2qp4k3i340ksv
2 months ago
விசா கட்டணம் அறவிடப்படாத நாடுகள் இதோ! இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னர், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளுக்கு விசா கட்டணத்தை அறவிடாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்தத் திட்டத்தால் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்படலாம். விசா கட்டணம் அறவிடப்படாத நாடுகளின் பட்டியல்: 1.United Kingdom of Great Britain and Northern Ireland 2.Federal Republic of Germany 3.Kingdom of the Netherlands 4.The Kingdom of Belgium 5.The Kingdom of Spain 6.The Commonwealth of Australia 7.Republic of Poland 8.The Republic of Kazakhstan 9.The Kingdom of Saudi Arabia 10.The United Arab Emirates 11.Federal Democratic Republic of Nepal 12.People's Republic of China 13.The Republic of India 14.The Republic of Indonesia 15.The Russian Federation 16.The Kingdom of Thailand 17.The Federation of Malaya 18.Japan * 19.Republic of France 20.United States of America 21.Canada 22.Czech Republic (Czechia) 23.Republic of Italy 24.Swiss Confederation (Switzerland) 25.Republic of Austria 26.State of Israel 27.Republic of Belarus 28.Islamic Republic of Iran 29.Kingdom of Sweden 30.Republic of Finland 31.Kingdom of Denmark 32.Republic of Korea 33.State of Qatar 34.Sultanate of Oman 35.Kingdom of Bahrain 36.New Zealand 37.State of Kuwait 38.Kingdom of Norway 39.Republic of Türkiye 40.Pakistan https://adaderanatamil.lk/news/cmdiu1leu01n9qp4k4gh5shwc
2 months ago
திருகோணமலையில் நடைபெறவிருக்கும் மக்கள் போராட்டம் : சர்வதேச நீதியை வலியுறுத்தும் வடகிழக்கு சமூக இயக்கம் Published By: DIGITAL DESK 2 25 JUL, 2025 | 07:52 PM வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக காலை 10.00 மணியளவில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10.00 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழி பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையிலும், வவுனியாவில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப்பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையைக் கோரும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக “மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூக கூட்டிணைவு” கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பாக காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220930
2 months ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 29 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் ஆறு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஜூலை 24ஆம் தேதி கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கி இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும். இந்திய உடைகளும் ஆபரணங்களும் பிரிட்டனில் மலிவாகக் கிடைக்கும். இந்தியாவும் பிரிட்டனும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் பயனடையும் என நம்புகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தத்தால் யார் அதிக லாபம் அடைவார்கள் என்பதுதான் தற்போது எழுகின்ற கேள்வி. பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தைப் பாராட்டிய பிரதமர் மோதி, இந்த ஒப்பந்தத்தின் உதவியுடன், இந்தியாவின் ஆடைகள், காலணிகள், நகைகள், கடல் உணவுகள் மற்றும் பொறியியல் தொடர்பான பொருட்களை பிரிட்டிஷ் சந்தையில் எளிதாகப் பெற முடியும் என்று கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் காரணமாக, இந்தியர்கள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிக அளவில் பெறுவார்கள் என்றும், மருத்துவ சாதனங்கள் மற்றும் விண்வெளி பாகங்களை மலிவு விலையில் பெற முடியும் என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், இந்த ஒப்பந்தத்தை பிரிட்டனுக்கு கிடைத்த வெற்றி என்று கூறிய பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், இதனால் பிரிட்டனில் 2,200க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதோடு, பாதுகாப்பு, கல்வி, காலநிலை, தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாட்டு பிரதமர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவுக்கு என்ன பயன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா பயனடையும் என்று பிரதமர் மோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த வாரத் தொடக்கத்தில், மோதி அமைச்சரவை இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. அதே போல் இது நடைமுறைக்கு வருவதற்குக் குறைந்தது ஓர் ஆண்டு ஆகலாம். இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது. டெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின்(RIS) இயக்குநர் ஜெனரல் பிஸ்வஜித் தார், பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பிரிட்டனுடன் இந்த ஒப்பந்தத்தில் மிக விரைவாக கையெழுத்திட்டுள்ளது என்று கருதுகிறார். ஒப்பந்தத்தை அங்கீகரிக்க மூன்று ஆண்டுகள் ஆனதற்கான காரணத்தை விளக்கிய பிஸ்வஜித் தார், "இந்தியாவில் ஏராளமான சிறு விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த வகையான வர்த்தகத்தை சங்கடமானதாக, பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். இதை விளக்கி அவர்களைச் சமாதானப்படுத்த, அரசுக்கு நிறைய நேரம் எடுக்கும். அதனால்தான் பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய இந்தியா அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்" என்றார். மேலும், "மற்ற பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய இந்தியா எடுத்துக் கொண்ட நேரத்துடன் ஒப்பிடும்போது, இந்த வர்த்தக ஒப்பந்தம் மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்டுள்ளது. பதினெட்டு ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயன்று வருகிறது. பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய நமக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது" என்று பிஸ்வஜித் தார் விளக்கினார். ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும், இவற்றில் துணிகள் மற்றும் காலணிகள் அடங்கும். அதேபோல், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு மற்றும் உறைந்த இறால்களுக்கான வரிகளையும் இந்த ஒப்பந்தம் குறைக்கும். இதுதவிர, கார்கள் ஏற்றுமதி மீதான வரிகளும் குறைக்கப்படும். இந்த வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் மின்சார வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கு பிரிட்டன் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் இந்தியாவில் இருந்து சுமார் 11 பில்லியன் பவுண்டுகள் (சுமார் 1,285 பில்லியன் ரூபாய்) மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறது. தற்போது வரி குறைப்பு காரணமாக, பிரிட்டனுக்கான இந்திய ஏற்றுமதி மலிவாகும். அதே போல, இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் இருந்து பிரிட்டன் இறக்குமதி செய்வது அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறுகிறார் ஐசிஆர்ஏ (ICRA) லிமிடெட் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர். "கடந்த பத்து ஆண்டுகளில் பிரிட்டன் உடனான இந்தியாவின் வர்த்தக உபரி ஓரளவு அதிகரித்துள்ளது. ஜவுளி, உலோகங்கள், விவசாயப் பொருட்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும்," என்கிறார் அதிதி நாயர். அதோடு, "கட்டணக் குறைப்பு காரணமாக இந்திய நுகர்வோர் பயனடைவார்கள். உலோகம், ஆட்டோமொபைல், மருந்துகள், மதுபானங்கள், அழகுசாதனப் பொருட்கள் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்களும் இதன் மூலம் பயனடைவார்கள்" என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்க-வைர நகைகள், துணிகள் மற்றும் தோல் பொருட்களுக்கு பிரிட்டனில் வரி இருக்காது. "பாஸ்மதி அரிசி, இறால், மசாலாப் பொருட்கள் மற்றும் தேயிலை மீதான இறக்குமதி வரிகளையும் பிரிட்டன் குறைக்கும். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களால் பிரிட்டிஷ் சந்தைகளை எளிதாக அணுக முடியும். இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா நிறைய நன்மைகளை எதிர்பார்க்கிறது" என்று பிஸ்வஜித் தார் கூறுகிறார். "இந்தியாவுடனான ஏற்றுமதியை பிரிட்டன் கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பொம்மைகள் மற்றும் ஆடைகள் தொடர்பான துறைகளில் இந்தியா பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." "இந்தத் துறைகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இதுவே நமது மிகப்பெரிய தேவை. ஏனெனில் வேலைவாய்ப்பு அதிகரிக்காவிட்டால், வருமானம் அதிகரிக்காது" என்று பிஸ்வஜித் தார் விளக்குகிறார். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தால் இந்தியா எவ்வளவு பயனடையும் என்று கூறுவதற்கு சில காலம் தேவைப்படும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஷரத் கோஹ்லி. "ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அங்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள எதிர்க்கட்சி இதை எதிர்க்கிறது. பிரிட்டனின் பொருளாதார நிலை நன்றாக இல்லை. பொருட்களை வாங்க பணம் இல்லாததால் மக்கள் அங்கு பொருட்களை வாங்குவதில்லை" என்று ஷரத் குறிப்பிடுகிறார். சேவைத் துறையில் ஏற்படக்கூடிய மாற்றம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் ஐடி துறை பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளின் சேவைத் துறையும் பயனடையும் என்று பிரதமர் மோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். "இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் சேவைத் துறைக்கும், குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகளுக்கு பயனளிக்கும். இது வர்த்தகத்தை எளிதாக்குவதோடு, வணிகம் செய்வதற்கான செலவையும் குறைக்கும். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளிலும் முதலீட்டை அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்" என்று பிரதமர் மோதி கூறியுள்ளார். பிரிட்டனின் சேவைத் துறையால், குறிப்பாக ஐடி மற்றும் கல்வித் துறைகளால் இந்தியா பயனடையும் என்கிறார் அதிதி நாயர். இந்தத் துறைகளில் பிரிட்டனின் பங்களிப்புகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என அவர் நம்புகிறார். "இந்திய தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புக் கட்டணங்களில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கும் பெரிய நன்மைகள் ஏற்படக்கூடும்," என்று அவர் கூறினார். "மூன்று ஆண்டுகளுக்கு சமூகப் பாதுகாப்பு கட்டணங்களில் இருந்து இந்திய தொழிலாளர்களுக்கு விலக்கு அளிப்பது அவர்களின் செலவுகளைக் குறைக்கும். இது அங்கு செல்லும் அல்லது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பயனளிக்கும்" என்கிறார் பிஸ்வஜித் தார். "பிரிட்டனின் சேவைத் துறை மிகப் பெரியது. சேவைத் துறையில் பணியாற்ற அதிகமான இந்தியர்கள் அங்கு வருவதை பிரிட்டனும் விரும்புகிறது. வர்த்தக ஒப்பந்தம் அங்குள்ள இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்" என்று அவர் நம்புகிறார். பிரிட்டன் பயனடையுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டன் பொருளாதாரம் போராடி வருகிறது பல ஆண்டுகளுக்குப் பிறகு எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், பிரிட்டன் பொருளாதாரத்திற்கு 4.8 பில்லியன் பவுண்டுகள் அதாவது சுமார் ரூ.560 பில்லியன் நன்மை பயக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நம்புகிறது. பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இந்தியா சராசரியாக 15 சதவிதம் வரி விதித்திருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இது 3 சதவீதமாகக் குறைக்கப்படும். வரிக் குறைப்பு காரணமாக, பிரிட்டிஷ் நிறுவனங்கள் இந்தியாவில் வணிகம் செய்ய அதிக வாய்ப்புகள் உருவாக்கப்படும். முன்னதாக, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீது 150 சதவிகிதம் வரி இருந்தது. அது இப்போது 75 சதவிகிதமாகக் குறைக்கப்படும். மற்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விஸ்கியை விற்பனை செய்வதில் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு அதிக பயன் கிடைக்கக்கூடும். இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் என்ன நன்மையைப் பெறும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிஸ்வஜித் தார், "பொருளாதாரத்தில் இந்தியாவைவிட பிரிட்டன் பின்தங்கியுள்ளது. பிரிட்டன் பொருளாதாரம் முன்னேற வேண்டுமெனில், அது ஒரு பெரிய சந்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். சீனா தவிர, இந்தியா அளவுக்குப் பெரிய சந்தை எதுவும் இல்லை. இதன் மூலம் பிரிட்டன் பல துறைகளில் பயனடையப் போகிறது. அதில் ஒன்று ஆட்டோமொபைல் துறை. அதில் பிரிட்டன் மிகவும் பயனடையும்" எனக் குறிப்பிட்டார். வேறு நாடு ஏதேனும் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் உலகளாவிய வர்த்தகப் போரைத் தொடங்கி வைத்தார். அதன் காரணமாக, இந்தியா, பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ஷரத் கோஹ்லி நம்புகிறார். "டிரம்ப் தொடங்கிய வர்த்தகப் போரின் விளைவாக, உலகப் பொருளாதாரம் குழப்பத்தில் உள்ளது. அதனால் மற்ற நாடுகள் தங்கள் வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாக முடிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா வழங்கும் அச்சுறுத்தல்களால், தங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை, மற்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் ஈடு செய்ய முடியும் என்று உலகின் பல நாடுகள் நம்புகின்றன" என்று அவர் கூறினார். இந்தியா, பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியா, சீனா இடையிலான வர்த்தக உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், ஆனால் பிரிட்டன் உடனான வர்த்தகத்தில் சீனா இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஷரத் கோஹ்லி கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "சீனா, பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகம் இந்தியா, பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தைவிட இரு மடங்கு அதிகம். சீனாவில் இருந்து ஏராளமான மலிவு விலைப் பொருட்கள் பிரிட்டனுக்கு செல்கின்றன, அதில் ஆடைகளும் அடங்கும். ஆனால் இந்தியாவில் இருந்து ஆடைகள் மற்றும் காலணி பொருட்கள் பிரிட்டனுக்கு சென்றால், அவற்றுக்கு எந்த வரியும் இருக்காது. எனவே, சீனா கடுமையான சவாலை எதிர்கொள்ளப் போகிறது" என்று விளக்கினார். ஆனால், "இது இந்தியா, சீனா இடையிலான வர்த்தகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்தியா, சீனா இடையிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் நடந்தாலும் நடக்காவிட்டாலும், சீனா உடனான இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது" என்று குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3d1dm8e53zo
2 months ago
பால் போத்தலுடன் காணப்பட்ட குழந்தையின் எலும்புக் கூடு அகழ்ந்தெடுப்பு : இதுவரை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 81 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! Published By: VISHNU 25 JUL, 2025 | 08:03 PM செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக வெள்ளிக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழியில் வெள்ளிக்கிழமை இரண்டு மனித எலும்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. அத்துடன் ஏற்கனவே 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை (25) புதிதாக ஐந்து மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதுவரை மொத்தமாக 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே நேரம் இரண்டாவது அகழ்வு தளமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் சட்டரீதியாக புதைக்கப்பட்ட சடலம் ஒன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பாதுகாப்பாக மூடப்பட்டது. குறித்த சடலம் தொடர்பான ஆய்வுகளின் பிற்பாடு அதன் காலத்தை சொல்ல முடியும். அதை அகழ்தெடுக்கவில்லை. குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் புதைக்கப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்ததற்கமைய சடலம் மூடப்பட்டது. பாலுட்டும் போத்தலுடன் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் எலும்புக்கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டது. பாலூட்டும் போத்தல் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/220964
2 months ago
ஓட்ல்ட் ட்ரபோர்ட்டில் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இங்கிலாந்து அணி 433 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 121 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காம்ல் உள்ளனர். இங்கிலாந்து 75 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக பாவம் பாரத் அணி சகலவிக்கட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
2 months ago
கண்ணில பிரச்சனை இருக்காதண்ணை! எங்கட மூளை தான் தவறாக முன் அனுமானம் செய்கிறது, கொஞ்சம் பொறுமையாக வாசித்தால் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, எம்.ஆர்.ஐ எல்லாம் தெளிவாக புரிந்து கொள்வோம்.
2 months ago
இதுதான் எதிர்கால் சிரி லங்கா...அதைவிட்டு விட்டு நாம எதோ கற்பனையில் வாழுறம்..
2 months ago
நானும் இந்த club இல் இணைகின்றேன்.
2 months ago
2 months ago
2 months ago
சாத்தான், நீங்கள் சிங்களவரைப் பற்றி எழுதியிருப்பவையெல்லாம் சரி! ஆனால், வயதுக் கணக்கு பிழையல்லவா? தமிழர் ஒருவரை அப்பாவியாகக் காட்ட, அரிவரியில் படித்த எண்கணிதத்தை அப்படியே மறந்து விடுவோம் என்கிறீர்களா? இந்த முட்டாள் தனங்களால் சிங்களவன் அலறி அடித்துப் பயந்து விடுவான் என்கிறீர்களா அல்லது, உங்களைப் போன்ற தமிழர்கள் "புதுக் கணக்கு" சிஸ்ரத்தைக் கண்டு பிடிப்பார்கள் என்கிறீர்களா😂? உங்களிடமே முட்டாள் தனத்தையும், வெறுமையையும் வைத்துக் கொண்டு ஏனையோரை "பூச்சியங்கள்" என்று சொல்வதற்கும் ஒரு தனித்துவமான devil may care மனநிலை வேண்டும்! உங்களிடம் அது மட்டும் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன்😎!
2 months ago
2 months ago
எம்.ஆர்.ஐ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாதோரும், இந்த அறைகளுக்கு வெளியே சிவப்பு எழுத்தில் ஒட்டியிருக்கும் அறிவிப்பை வாசிக்க இயலாதோருக்கும் கூட எம்.ஆர்.ஐ எமன் தான்! ஆகவே, "ஆங்கிலம் ஒரு மொழியே ஒழிய அது அறிவல்ல" என்பதை மீள ஆராய வேண்டும்!
Checked
Sun, 09/28/2025 - 09:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed