புதிய பதிவுகள்2

வேலணையில் தீ!

1 month ago
கலப்படம் இல்லாத சிறிதளவு மிளகாய்த்தூள்,கொஞ்ச ஆனையிறவு உப்பு,ஆமணக்கு எண்ணை கலந்து பச்சை மட்டை அடித்த இடங்களில் தடவ வேண்டும். ஏழேழு ஜென்மத்திற்கும் எந்த தவறும் செய்ய மாட்டார்கள்.

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
வெளியே சொல்லப்படாத,ஆதாரங்கள் இல்லாத உண்மை என்றால் நீங்கள் எழுதியதுதான். ஆனால் வெளியே ஆதாரத்தோடு சொல்லப்பட்ட காரணம் வேறு. சதாம் ஹுசைனும்,கடாபியும் ஈரோ நாணயத்தை கையில் எடுத்ததுதான் பெரியண்ணருக்கு எரிச்சலை ஊட்டியது. பெரியண்ணர் நேட்டோ எனும் போர்வையில் லிபியா மீது போர் தொடுத்து தன் எரிச்சலை தீர்த்து விட்டார்.அந்த நேரம் புட்டின் ஆட்சியில் இருந்திருந்தால் கடாபிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் பேசிக்கொள்ளப்பட்டது.

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary

1 month ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Manually Powered Paddle Boards - Under construction 1 Most likely not named, as they have not moved out of the construction yard - '6 different types of boards can be seen' Not much is known about this board as it's unfinished Most likely not named, as they have not moved out of the construction yard 8

இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.

1 month ago
சாலை விதிகளை பொருட்படுத்தாமல் ஓடினால் அல்லது தெரியாமல் ஓடினால் லொறியும் கவிழும். ஹொரவப்பொத்தானையில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிர் இழந்தனர் https://www.virakesari.lk/article/223640

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
🤣 ஹிற்லர் 33% ஜேர்மனியினரின் வாக்குகளைப் பெற்று, கம்யூனிஸ்ட்களை மட்டும் அழிக்கிறேன் என்று ஆரம்பித்து, பின்னர் யூதர், கத்தோலிக்கர், ஓர் பாலினத்தவர், உடல் ஊனமுற்றோர் என்று 10 மில்லியன் பேரைக் கொன்றொழித்தது, primary தகவலா அல்லது இன்னொருவர் எழுதி வைத்து விட்டுப் போன இரண்டாம் நிலைத் தகவலா? இது போன்ற பதிவான சம்பவங்களையே "இரு பக்கம் இருக்கிறது, பல பக்கங்கள் இருக்கின்றன" என்று சமாளிப்பது ஒன்றும் தெரியாமல் இருக்கும் ஆட்கள் செய்யும் வேலையை விட ஆபத்தான சகஜமயப்படுத்தல் எனக் கருதுகிறேன். ஓடாமல் நின்ற கடிகாரத்தை விட, தொடர்ந்து பிழையாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரத்தின் விளைவு நேர/கால நாசம் என்பார்களே? அது போன்ற நிலை உங்கள் இந்த அரை வேக்காட்டு மதிமேல் பூனை நிலை!

முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்

1 month ago
முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும் Thursday, August 28, 2025 கட்டுரை முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் உட்­பட நாட்டின் தனியார் சட்­டங்களில் சர்­வ­தேச தரத்­திற்கு ஏற்­ற­வாறு திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இது தொடர்பில் கடந்த திங்கட் கிழமை வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்­கை­யி­லேயே மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் நீதி­ய­ரசர் எல்.ரி.பி. தெஹி­தெ­னிய இவ்­வாறு தெரி­வித்துள்ளார். முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தில் உள்ள பாகு­பாடு காட்டும் மற்றும் சர்­வ­தேச தரங்­க­ளுக்கு முர­ணான விதி­களில் உட­ன­டி­யாக திருத்தம் தேவை என வலி­யு­றுத்­தி­யுள்ள ஆணைக்­குழு, நாட்டின் தேசிய சட்­டங்கள் சர்­வ­தேச மனித உரி­மைகள் தரங்­க­ளுடன் ஒத்­துப்­போ­வதை உறுதி செய்யும் கடமை தமக்கு உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் மற்றும் சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களை மேற்­கோள்­காட்­டி­யுள்ள ஆணைக்­குழு, நாட்டில் பெண்­களின் சுகா­தாரம் மற்றும் கல்­வியில் முன்­னேற்றம் இருந்­தாலும், பாகு­பாடு மற்றும் பாலின அடிப்­ப­டை­யி­லான வன்­முறை பிரச்­சி­னைகள் இன்னும் நில­வு­வ­தாகக் குறிப்­பிட்­டுள்­ளது. கண்­டியச் சட்டம், முஸ்லிம் திரு­மணச் சட்டம் மற்றும் யாழ்ப்­பாண திரு­மண உரி­மைகள் மற்றும் மர­பு­ரிமைச் சட்டம் போன்ற தனியார் சட்­டங்­களில் சீர்­தி­ருத்தம் தேவைப்­படும் பல விதிகள் உள்­ள­தாக ஆணைக்­குழு தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தில் காணப்­படும் பல்­வேறு பாகு­பாடு காட்டும் விதி­களை ஆணைக்­குழு அடை­யாளம் கண்­டுள்­ளது. அவை­யா­வன: 1. இந்தச் சட்­டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்கள் மட்­டுமே பதி­வா­ளர்­க­ளா­கவும், காதி­க­ளா­கவும் (நீதி­ப­திகள்) நிய­மிக்­கப்­பட முடியும். 2. ஆண்­க­ளுக்கும், பெண்­க­ளுக்கும் விவா­க­ரத்­துக்­கான நிபந்­த­னைகள் வேறு­ப­டு­கின்­றன. ஒரு கணவர் காரணம் கூறாமல் ‘தலாக்’ விவா­க­ரத்து செய்ய முடியும். ஆனால் ஒரு மனைவி ‘பஸ்ஹ{‘ விவா­க­ரத்து கோரும்­போது, திரு­மண முறி­வுக்­கான கார­ணத்தை நிரூ­பிப்­ப­துடன், இரு சாட்­சி­களால் அதனை உறு­திப்­ப­டுத்­தவும் வேண்டும். கணவர் தனது மனை­வியால் தொடங்­கப்­பட்ட விவா­க­ரத்தை மேல்­மு­றை­யீடு செய்ய முடியும், ஆனால் மனை­விக்கு அந்த உரிமை இல்லை. 3. திரு­மண சம்­மதம்: திரு­ம­ணத்தின் போது மண­ம­களின் கையொப்பம் சம்­ம­தத்­திற்­கான சான்­றாகக் கோரப்­ப­டு­வ­தில்லை. ஆனால் ஒரு ஆண் பாது­கா­வ­லரின் (வாலி) கையொப்பம் கட்­டா­ய­மாகும். 4. முஸ்லிம் சட்­டத்தில் பல­தார மணம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. இது பெண்­களின் உரி­மை­யையும், ஊநு­னு­யுறு உடன்­ப­டிக்­கை­யையும் மீறு­வ­தாக ஆணைக்­குழு கரு­து­கி­றது. பல­தார மணங்­களில் உள்ள பெண்கள் பெரும்­பாலும் உள­வியல் ரீதி­யான அழுத்தம், கைவி­டுதல் மற்றும் வன்­மு­றையை எதிர்­கொள்­கி­றார்கள். 5. முஸ்லிம் திரு­மணச் சட்­டத்தில் திரு­ம­ணத்­திற்­கான குறைந்­த­பட்ச வயது குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஒரு காதியின் அனு­ம­தி­யுடன் பன்­னி­ரண்டு வய­துக்­குட்­பட்ட ஒரு பெண்ணின் திரு­ம­ணத்தைப் பதிவு செய்ய இந்தச் சட்டம் அனு­ம­திக்­கி­றது. பெண் குழந்­தை­களின் திரு­மணம் உடல் மற்றும் மன ரீதி­யான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வதால் இது உட­ன­டி­யாக சீர்­தி­ருத்­தப்­பட வேண்டும் என ஆணைக்­குழு வலி­யு­றுத்­து­கி­றது. 6. காதி நீதி­மன்ற அமைப்­பா­னது பல குறை­பா­டு­களை கொண்­டுள்­ளது. பெண்­க­ளுக்கு இந்த அமைப்பின் மீது நம்­பிக்கை இல்லை. காதி நீதி­ப­திகள் நிய­ம­னத்­திற்கு முறை­யான தகு­திகள் அல்­லது பயிற்சி வரை­ய­றுக்­கப்­ப­ட­வில்லை. இந்த அறிக்­கையில் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் முக்­கிய பரிந்­து­ரை­க­ளையும் முன்­வைத்­துள்­ளது. 1. அர­சி­ய­ல­மைப்பின் 12(1) மற்றும் 12(2) பிரி­வு­க­ளுடன் முரண்­படும் அனைத்து முஸ்லிம் திரு­மணச் சட்ட விதி­க­ளையும் திருத்த வேண்டும். 2. அனை­வ­ருக்கும் குறைந்­த­பட்ச திரு­மண வயதை 18 ஆக நிர்­ண­யிக்க வேண்டும். 3. காதி அமைப்பின் நேர்­ம­றை­யான அம்­சங்­களைத் தக்­க­வைத்­துக்­கொண்டு, பாகு­பாடு அற்ற, புதிய குடும்பச் சட்ட நீதிமன்ற அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும். 4. பெண் காதிகளை நியமிக்க அனுமதிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும். 5. பலதார மணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சீர்திருத்தம் தொடர்பான கலந்தாலோசனைகள் முஸ்லிம் பெண்கள் உட்பட பரந்த சமூகத்தின் பங்களிப்புடன் விரைவாகவும், உள்ளடக்கியதாகவும் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli வைச்சாண்டா ..பெரிய ஆப்பு...இனி சனத்தொகை குறையுமோ..

தமிழரசுக் கட்சியின் கடிதம்.பத்திரிகை ஆசிரியர் நிக்ஸன்

1 month ago
தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதம்! ------- --- ---------- *சமகால அரசியல் புத்துணர்ச்சி *செம்மணியை உள்ளடக்கிய இன அழிப்பு விசாரணைக்கு முக்கியத்துவம்... *சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி... *"on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டதா? --- --- --- ----- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சி நான்கு விடயங்களை பிரதானப்படுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இக் கடிதத்தின் ஆங்கில பிரதி ஒன்றை கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். ஆச்சரியம் என்னவென்றால்... ”இன அழிப்பு” என்ற விடயத்தை மற்றும் சில அரசியல் காரணிகளின் அடிப்படையிலும், கட்சிக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டிருந்த ஒரு பின்னணியில், இக் கடிதத்தின் உள்ளடகத்தை நோக்கினால், ஏதோ ஒரு புள்ளியில் ஈழத்தமிழர்கள் சார்ந்து இவர்கள் ஒன்றிணைந்திருக்கின்றனர் என்பது புரிகிறது. என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் சிலரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் இவர்களை மாற்றியிருக்கலாம். இன அழிப்பு என்பது ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிற பேரவலம். இதை, உட்கட்சிப் பூசலுக்கும் கட்சிகளுக்கிடையிலான மோதல்களுக்கும் உட்படுத்தி அரசியல் ஆக்க வேண்டாம் என்று எழுதி வந்துள்ளோம். இது எங்கோ சுவறியுள்ளது போல் தெரிகிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை ஆணையாளருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனங்களும், தமிழரசுக் கட்சியின் அரசியல் போக்கில் மாற்றத்தைத் தூண்டியிருக்கலாம். “வரவேற்க வேண்டியது“ - “குறை கூற வேண்டியது” என்ற இரண்டு விடயங்கள் கடிதத்தில் உண்டு. முதலில் வரவேற்பது என்றால்--- A) ”இன அழிப்பு” என்பதை போர்க் குற்றங்கள் - மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற இரு வகைக் குற்றங்களில் இருந்தும் வேறுபடுத்திக் காண்பித்துள்ளமை என்பது, தமிழரசுக் கட்சியின் சமகால அரசியல் புத்துணர்ச்சி. B) ஒஸ்லாப் எனப்படும் (OHCHR Sri Lanka Accountability Project - OSLAP) விசாரணைப் பொறிமுறையை விரைவாக முடிவுறுத்த வேண்டும் என்பதுடன், அதற்கு முன்னதாக இனப் படுகொலை மற்றும் இனப் படுகொலை நோக்கத்தைச் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் சேகரிப்பதை விரைந்து செய்ய செய்வது பற்றி ஆராயத் தலைப்பட வேண்டும் என கேட்டிருப்பது... குறைபாடுகள் - மன்னிக்க முடியாத விடயங்கள் என்பது---- 1) (International, Impartial and Independent Mechanism - IIIM) என்ற விசாரணைப் பொறிமுறை கோரவில்லை. 2) ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் போதும் என்ற மன நிலை... 3) புதிய யாப்பு தொடர்பான மயக்கமான விளக்கம் இம் மூன்றும் தமிழரசுக் கட்சியின் பழைய போக்கையும் ஞாபகப்படுத்தியுள்ளது என்ற முடிவுக்கும் வரலாம்.. எவ்வாறாயினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதத்துக்கும், தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதத்துக்கும் “இன அழிப்பு” என்ற விடயத்தில் கணிசமான வேறுபாடு உண்டு. அதாவது, இன அழிப்புக்கான அரச பொறுப்பு சர்வதேச நீதிமன்றில் (International Court of Justice - ICJ) விசாரிக்கப்பட வேண்டும் என்பதை மியான்மார் அரசுக்கு செய்ததைப் போன்று ”தீவிரமாக பரிசீலித்தல்” என்பதை கடித்தின் முதலாவது கோரிக்கையாக தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இக் கோரிக்கையை 2021 ஆம் ஆண்டில் இந்த இரண்டு கட்சிகளும் அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தவில்லை. ஆனால், இம் முறை தமிழரசுக் கட்சி இதை வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியப் போரவை முதலாவது கோரிக்கையின் இறுதி வரியில், பட்டும் படாமலும் சொல்லிச் சென்றிருக்கிறது. குறிப்பாக செம்மணியை மையப்படுத்தி தமிழரசுக் கட்சி மாத்திரமே, இன அழிப்புக்கான நோக்கம் என்ற சொற் பிரயோகத்தை பயன்படுத்தி அதற்கான ஆதாரங்களை ஒஸ்லாப் பொறிமுறை திரட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால், தமிழ்த் தேசிய பேரவையோ, ஒஸ்லாப் எல்லாம் போதும், தனி நபர் குற்றவியல் விசாரணையை பாதுகாப்புச் சபை ஊடாக ஐசிசிக்கு பாரப்படுத்தினால் போதும் என்று மிகவும் பலவீனமாக கடிதத்தில் கையாண்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் தமிழ்த் தரப்புடன் பேசிய விடயங்கள் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ள நான்காவது கோரிக்கை மயக்கமாகவுள்ளது. அதாவது, தமிழ்த் தரப்புடன் ஏற்கனவே பேசப்பட்ட விடயங்களா? அல்லது இனிமேல்தான் தமிழ்த்தரப்புடன் பேசி முடிவெடுக்கவுள்ள விடயங்களா? என்பது குழப்பமாகவுள்ளது. அதன் ஆங்கில மூலப் பிரதி----- Continue to persuade Sri Lanka to enact a new federal constitution with extensive power sharing in the North-East on newly negotiated agreement with the Tamil People as a measure of non – recurrence. As an immediate step urge the Sri Lankan state to hold the provincial council elections without any further delay. இதற்கு தமிழரசுக் கட்சியின் செய்திகளை பிரத்தியேகமாகவும், உடனுக்குடனும் வழங்கும் ”மாலை முரசு என்ற மின் இதழில் நேற்று புதன்கிழமை வெளிவந்த தமிழாக்கம் பின்வருமாறு உள்ளது--- “மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக தமிழ் கட்சிகளுடன் புதிதாக பேச்சு நடத்தி இணக்கம் கண்டு வடக்கு கிழக்கில் விரிவான அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய புதிய சமஷ்டி அரசியல் யாப்பை உருவாக்க இலங்கைக்கு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்” ”உடனடி நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்” இங்கே பிரச்சினை என்னவென்றால்---- தமிழில் இனிமேல்தான் புதிதாக உடன்படிக்கை செய்ய வேண்டும் என தெளிவாக சொல்லப்படுகின்றது. ஆனால், ஆங்கிலத்தில் ”Power sharing in the North-East on newly negotiated agreement” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆங்கிலத்தில் "on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டுள்ளதா என்ற வினர எழுகிறது... கடிதத்தின் முகவுரையில்----- *ஈழத்தமிழர்களின் அரசியல் விவகாரங்களை குறிப்பாக ஐரோப்பிய இனவத்தவர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் இலங்கைத்தீவில் மூன்று இராஜ்ஜியங்கள் இருந்ததன. *தமிழர்களுக்கு தனி இராஜ்ஜியம் இருந்தது என்பதை மையப்படுத்தி தொலைந்துபோன இறைமையை (Sovereignty) தான் தமிழர்கள் மீள் உருவாக்கம் செய்வது தமிழர்களுக்கான பாதுகாப்பு என்ற நல்ல கருத்து வெளிப்படுகிறது. அதாவது, 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்று நேரடியாக சுட்டிக்காட்டாமல், 1976 இல் இருந்து என்று அந்த ஆண்டைக் குறிப்பிட்டு, தமிழர்கள் தொலைந்து போன இறைமையை தேடுகிறார்கள் என்று கடிதத்தில் பொருள் கோடல் செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்புக்குரியது--- அதேநேரம்---- இன அழிப்பு நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதையும் கடிதம் கனதியாகக் காண்பிக்கிறது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க ஐநா பாதுகாப்புச் சபை ஊடாக மாத்திரமே போக வேண்டும் என, தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. அதேநேரம், ஆயர்கள் - சைவ மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது நிலையினர் ஆகியோர் இணைந்து அனுப்பிய கடிதத்தில் IIIM என்ற விசாரணைப் பொறிமுறை முதன்மையாக இருந்தது. அக் கடிதத்தில் 2002 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆணையாளர் அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ள முன்னோடி அறிக்கையில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டவில்லை. ஓகஸ்ட் 4 ஆம் திகதி தமிழ்த் தேசியப் பேரவை அனுப்பிய கடிதத்துக்கு அதற்கு அடுத்த நாளே ஆணையாளர் பதில் வழங்கியிருந்தார். அவரது பதில் கடிதத்திலும் அவர் உள்ளக விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனால், தமிழ்த் தேசியப் பேரவை இன்று வரை, அவரது பதிலுக்கு எந்தவித மறுப்போ கவலையோ தெரிவித்து பதில் கடிதம் எழுதவில்லை. இது ஏன் என்ற கேள்வி எழுகின்றது... அதேபோன்று---- தமிழரசுக் கட்சியின் கடிதத்தில் எந்த ஒரு இடத்திலும் ஆணையாளரின் கடிதத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக் காண்பிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட ஓஎம்பி (Office on Missing Persons -OMP) எனப்படும் காணாமல் போனோர் அலுவலகத்தை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் உறவினர்களும் நிராகரித்துள்ளனர். ஆனால், ஆணையாளரின் கடிதத்தில் அந்த அலுவலக செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது - இதனை தமிழரசுக் கட்சியின் கடிதமும் ஏற்றுக் கொள்கிறது. இந்த ஏற்பு வேடிக்கையானது. *ரோம் சாசன கையொப்பம் சாத்தியமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதற்கான ரோம் சாசனத்தில் கைச்சாத்திட வேண்டும் என ஆணையாளரின் அறிக்கையும் தமிழரசுக் கட்சியின் அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை அவ்வாறு கைச்சாத்திட்டாலும், 2002ஆம் ஆண்டுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கும் இடையில் நடைபெற்ற எந்தக் குற்றங்களும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது. அதற்கான விசேட ஒழுங்கு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அதை ஆணையாளரும் சொல்லவில்லை, தமிழரசுக் கட்சியின் கடிதமும் சொல்லவில்லை. இது கவலைக்குரியது... இந்தியா கூட இதுவரை இணையாமல் இருக்கும் ரோம் சாசனத்தில் இலங்கை இணையும் என்று எதிர்பார்க்க முடியுமா? பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதிகளை பெறும் நோக்கில், சிலவேளை இலங்கை ரோம் சாசனத்தில் கைச்சாத்திடலாம். அவ்வாறு இலங்கை இணைந்துவிட்டால், அந்த மகிழ்ச்சியில் மனித உரிமைச் சபையும் உறுப்பு நாடுகளும் அமைதியாகிவிடும் ஆபத்தும் உண்டு... இரு கட்சிகள் பற்றிய விளக்கக் குறிப்புகள்--- 1) ஒட்டுமொத்தமாக இன அழிப்புக்கான அரச பொறுப்புக் கூறலுக்கான நீதியை குறிப்பாக கோருவதில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய பேரவையை விட ஒருபடி மேலே சென்றுள்ளது... 2) தனிநபா் பொறுப்புக் கூறலை கோருவதில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய பேரவையை விட ஒருபடி கீழே இறங்கியுள்ளது. 3) எப்போது இந்த இரண்டு கட்சிகளும் ஒத்திசைந்து உயர்வான பணியில் ஒன்றாக ஏறி நிற்கப் போகின்றன என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/share/p/1JZNefTxvF/?mibextid=wwXIfr

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
வரலாறுகள் முழுமையாக தெரியும் என கூறினால் அது பொய்யாகிவிடும், யாரோ கூறியது! வரலாறு என்பது கற்பனைகள் நிறைந்தது என; ஒவ்வொரு விடயங்களையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதிலேயே இருக்கிறது பிரச்சினை, அவை வெளியில் இல்லை எம்மிடமே இருக்கும். திரைப்படங்களில் ஒருவரை கதாநாயகனாகவும் இன்னொருவரை மிக மோசமான வில்லனாகவும் காட்டுவார்கள் அது மனித மனதினை இலகுவாக கவர்கிறது. யாதார்த்தத்தில் A இல்லாவிட்டால் B ஆகத்தான் இருக்கவேண்டும் என சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள், இது தீவிரமான இரு துருவ சிந்தனை, ஆனால் சம்பவங்கள் யதார்த்தத்தில் அப்படி இருப்பதில்லை. பிழையான புரிதலுடன் ஒன்றை அணுகி அது பிழை என தெரிந்த பின்னும் அதனை விட்டு நகரமால் அதன் மேல் அதிக ஆர்வம் காட்டுவதனை Doubling down என்பார்கள் மனம் ஒரு விந்தையானது, நடைமுறை வாழ்க்கையில் அது அதிக வலியினை கொடுக்கும் தேவையற்ற விடயம் (நானும் விதிவிலக்காக இருந்ததில்லை). ஒவ்வொரு விடயத்திற்கும் இரண்டு பக்கமல்ல பல பக்கங்களும் இருக்கலாம், நாம் எமக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்துகொள்கிறோம் அவ்வளவுதான் வித்தியாசம்.

வேலணையில் தீ!

1 month ago
பச்சை மட்டையை…. சூடாக்காமல், ஆசனப் பக்கம் போட்டாலே… ஜென்மத்துக்கும் உந்த ஊத்தைவாளி வேலையை செய்ய மாட்டார்கள்.

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

1 month ago
எப்படிப் பட்ட "மானமுள்ள" தமிழன்? இலங்கை வகேஷன் போவதற்கு ஒரு மாதம் முன்னரே அனுர காவடி தூக்கி விட்டு, நவதுவாரங்களையும் மூடிக் கொண்டு போய் வந்த வகையிலான "மானமா" சார்😇?

வேலணையில் தீ!

1 month ago
இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடவருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர்கதையாகி இருக்கின்ற நிலையில்..... ஒரு வேளை பற்றைகள் மறைவில் சட்ட விரோத செயற்பாடுகள் நடப்பதால் கொழுத்தி விடடார்களோ ? பாவம் பனைமரங்கள் அழிந்துபோக போகின்றன ,

வேலணையில் தீ!

1 month ago
யாரைய்யா இந்த விசமிகள்? இப்படியான இடங்களை Droneகள் மூலம் கண்காணிக்கலாம். தீ மூட்டியவர்களை பிடித்து தகுந்த தண்டனை வழங்கவேண்டும். பச்சை மட்டையை சூடாக்கி ஆசனப்பக்கமாய் நாலு போட்டால் திருந்துவார்கள்.

போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய்

1 month ago
போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய் August 28, 2025 1:42 pm தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் எடுத்து செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்ததாக பரப்பப்பட்ட செய்தி போலியானது என தமிழகத்தின் பிரபல யூடியுபர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மக்களை ஏமாற்றும் பல உத்திகளை கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ள மாரிதாஸ், அப்பட்டமாக மக்களை ஏமாற்று பணியில் விஜய் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். குறித்த காணொளி பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் பகிரும் இன்ஸ்டாகிராம் காணொளிக்கு நிகராக மக்களை சென்றடைந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் மத்தியில் போலி செய்திகளை பகிர்ந்துள்ளதாக மாரிதாஸ் கூறியுள்ளார். குறித்த காணொளியை இன்ஸ்டாகிராமில் ஒரு கோடி பேர் வரை லைக் செய்துள்ளனர். ஆனால், அவர்களில் 1 சதவீதமானவர்கள் மாத்திரமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று அவர் புலனாய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் விஜய் யாரென தெரியாதவர்கள் எவ்வாறு அவரது காணொளிக்கு லைக் செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள அவர், விஜய் தமிழகத்திலா வடமாநிலங்களிலா கட்சி நடத்துகிறார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். லைக்களை பெற்றுக்கொடுக்கும் இணைய நிறுவனங்களுக்கு பணம் செலுத்து இவ்வாறு லைக்களை நடிகர் விஜய் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மாரிதாஸ், இது முற்றிலும் தமிழக மக்களை ஏமாற்றும் செயல்பாடு எனக் கூறியுள்ளார். https://oruvan.com/vijay-has-deceived-the-people-of-tamil-nadu-by-showing-fake-likes/

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

1 month ago
சுத்துமாத்து சுமந்திரனுக்கு, பத்தடுக்கு பாதுகாப்பு கொடுக்கும் சிங்கள பேரினவாதம். தமிழனுக்கு விரோதமான செயலை செய்தால்.... சிங்களம் சுத்துமாத்தை பாதுகாக்க வேண்டித்தான் வரும். இல்லை என்றால்... பச்சை பனை மட்டையால், முதுகிலை நாலு சாத்து சாத்தி.. கொழும்புக்கு பார்சல் பண்ணி விடுவான் மானமுள்ள தமிழன். 😂

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

1 month ago
அய்யா இப்படி சொல்லுவாரு ...இவைக்கு பிணைகொடுக்க நீதவானும் ...பிணைகேட்க 10 சட்டத்தரணிகளும், போதாக்குறைக்கு வருத்தம் சொல்ல வைத்தியரும் இருக்க அச்சம் ஏன்

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

1 month ago
1) இது மோசமான ஊழல். விசாரிக்கப் பட வேண்டும். 2) அப்படியெதுவும் சுமந்திரன் செய்ததாக "யூ ரியூப் அலட்டலாளர்கள்" தவிர வேறெவரும் நிரூபிக்கவில்லை. 3) இது எப்ப நடந்தது😂?

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

1 month ago
1) பார் சிறி 2) ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளக விசாரணை போதும் என்று சிங்களத்துக்கு சேர்டிபிக்கட் வாங்கி கொடுத்த சுமந்திரன் 3)மக்களுக்காகவே என்று கோடிக் கணக்கான ரூபாய்களை ரணிலிடம் பெற்றுக் கொண்ட சாணக்கியன் இவர்கள் மூவரும் பகிரங்க விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

கொடவாய கப்பற் சிதைவு: இலங்கையின் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துக்காட்டும் அமெரிக்க - இலங்கை கண்காட்சி

1 month ago
28 Aug, 2025 | 05:20 PM இலங்கையின் மிக முக்கியமான கடல்சார் பாரம்பரியங்களில் ஒன்றான கொடவாய கப்பற் சிதைவிலிருந்து மீட்கப்பட்ட அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH ) நடைபெறவுள்ளது. அமெரிக்கத் தூதரகமும், மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி, BMICH Cinema Lounge இல் செப்டம்பர் 3 முதல் 5 வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பழமையான கப்பல் தெற்கு இலங்கையில் உள்ள கொடவாய மீன்பிடிக் கிராமத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 2,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கப்பல் சிதைவு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பழமையான மரக்கப்பல் சிதைவு என அறியப்படுகிறது. கி.மு. 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கப்பல், இந்து சமுத்திரத்தில் பண்டைய காலத்தில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் கடல்வழிப் பயணங்கள் குறித்த அரிய தகவல்களை வெளிப்படுத்துகின்றது. அமெரிக்காவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு விடயமான இறையாண்மை உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அமைதியினையும், பாதுகாப்பினையும் பராமரிப்பதில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் வகிக்கும் முக்கிய பங்கினை இந்தக் கண்காட்சி நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் பங்களிப்பு இந்த திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியம் (AFCP) நிதியளித்துள்ளது. இந்த நிதியுதவியின் மூலம், களிமண் மட்பாண்டங்கள், அரைக்கும் கற்கள், கண்ணாடி மற்றும் உலோக பாளங்கள், கார்னிலியன் மணிகள் உள்ளிட்ட பல தொல்பொருட்கள் நிபுணர்களால் மீட்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகள், பிராந்திய வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் பண்டைய காலத்தில் இலங்கை வகித்த முக்கிய பங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கண்காட்சியின் நோக்கம் இந்தக் கண்காட்சி மற்றும் ஆய்வரங்கம், கொடவாய தளத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, இலங்கையின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இக்கண்காட்சி செப்டம்பர் 3 ஆம் திகதி காலை 11:00 மணிக்கு பொதுமக்களுக்காகத் திறக்கப்படும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும். கண்காட்சிக்குப் பின்னர், மீட்கப்பட்ட தொல்பொருட்கள் காலியில் உள்ள கடல்சார் தொல்பொருள் நூதனசாலையில் காட்சிப்படுத்தப்படும். இந்தப் புதிய முயற்சி, பாரம்பரியங்களைப் பாதுகாப்பதிலும், எதிர்கால ஆராய்ச்சியை மேம்படுத்துவதிலும் அமெரிக்கா மற்றும் இலங்கை இடையே நிலவும் நீடித்த கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது. மேலும், அமைதி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மை உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய பங்கை நினைவூட்டுவதாகவும் இக்கண்காட்சி அமைகிறது. கொடவாய கப்பற் சிதைவு: இலங்கையின் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துக்காட்டும் அமெரிக்க - இலங்கை கண்காட்சி | Virakesari.lk
Checked
Tue, 09/30/2025 - 12:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed