புதிய பதிவுகள்2

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 weeks 6 days ago
The great explanation. சிக்கலான விடயங்களை மற்றயவர்களுக்கு புரிய வைக்கும் வகையில் கூறும் திறமையில் உங்களுக்கு நிகர் நீங்களே என்று கூறுமளவுக்கு பொருத்தமான உதாரணங்களுடன் தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி . இதைக் கூட புரியவில்லை என்று கூறுபவர்கள் நடிகர் திலகங்களே.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
நான் அயர்லாந்தையும் தெரிவு செய்திருந்தால், இந்த மூன்று போட்டிகளிலேயே ஒரு ஹாட்ரிக் அடித்து விடுவேன் போல..............🤣. அடிமுடி, இதில் ஏதோ ஒன்று, இப்பவே தெரியுதே..................😜.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 weeks 6 days ago
இன்னும் 11 மாதம் இருந்தாலும் இதை இந்த ஆண்டின் சிறந்த நகைசுவையாக நான் முன்மொழிகிறேன். 2009 மேயில் சம்பந்தரிடமோ அல்லது வேறு எந்த ஈழ தமிழரிடமோ.., கோட்டையும் இருக்க வில்லை… ஒரு.. கொ….கொத்தளமும் இருக்கவில்லை. நாம் பலமாக இருந்தது 1983-2009 வரை மட்டுமே. பங்கு வர்தகத்தில் exit strategy என்பார்கள். பங்குகளிம் விலை கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் வாங்கிய விலைக்கு கீழேயும் போய் விடும். நல்ல exit strategy இருப்பவர்கள், பங்குகள் விலை கட்டம் கட்டமாக கூடும் போது, கட்டம் கட்டமக குறித்தளவு பங்குகளை விற்று நல்ல இலாபத்தை நிரந்தரமாக்கி கொள்வார்கள். மிகவும் பேராசை உள்ளோர், அல்லது அதீத தன்னம்பிக்கை உள்ளோர் - பங்குகள் எப்போதும் விலை கூடிக்கொண்டே இருக்கும் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்பவைத்து - கடைசி வரை எந்த பங்கையிம் விற்காமல், சின்ன இலாபத்தை கூட நிரந்தரமாக்காமல் - கம்பெனி திவாலாகும் போது போட்ட முதலீடு அனைத்தையும் இழப்பார்கள். ஒரு இனமாக நாம் வாங்கிய பங்குகள் 1983 - 2005 டிசம்பர் வரை ஏறுமுகமாகின. இந்த காலகட்டத்தில் கொஞ்சம் இலாபத்தை நிரந்தரமாக்கி கொண்டு, மேலும் முன்னேற சில exit points வந்து போயின. ஆனால் - எமது exit strategy யோ பங்கு விலை கூடி கொண்டே போகும், அது சாத்தியமில்லாத உச்ச புள்ளியை (தமிழ் ஈழம்) அடையும் மட்டும் நாம் ஒரு பங்கைதானும் விற்பதில்லை என்பதாக இருந்தது. ஆனால் நாம் நினைத்த உச்ச புள்ளியை பங்கு விலை அடைய முன்பே, நாம் பங்குகளை வாங்கிய கம்பெனி (போராட்டம்) திவாலாகி விட்டது. இப்படி திவாலாகி விட்ட கம்பெனியில் அதிக பங்குகளை வைத்திருந்த்த ஒரு ஐந்து சதம் பெறுமதியில்லாத portfolio வைத்தான் மே 2009 இல் சம்பந்தர் பொறுப்பெடுத்தார். பிகு அப்படி ஒரு நாசமாய் போன portfolio வை உலக தமிழரை இணத்து மீட்க சம்பந்தர் வினைதிறனாக செயல்படவில்லை, கதிரை அரசியல் செய்யார் என்றால் - அது நியாயம். Portfolio வையே 2000-2009 வரை சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாக்கி வைக்கப்பட்டிருந்த சம்பந்தர்தான் போட்டடித்தார் என்பது நகைப்புக்கிடமானதும், உண்மைக்கு புறம்பானதும்.

அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

2 weeks 6 days ago
பிகு கொம்பேறி மூக்கன் விசமா? இல்லையா? சின்னதில் இது விச பாம்பு எண்டும், கொத்தினால் சவம் எடுக்கும் வரை மரத்தில் (கொம்பில்) இருந்து பார்க்கும் என்றும் கிலியை வர வைத்தனர். ஆனால் அண்மையில் ஒருவர் அது லுலுலா பாம்பு என சொல்லி, கையில் அசால்டாக பிடித்து விளையாடும் வீடியோ பார்த்தேன். யாராவது ஜஸ்டின் அண்ணாக்கு @ போட்டு விடவும். இதே போல் - இலங்கையில் உள்ள விச பாம்புகள் எவை? நாகம், பறவை நாகம், புடையன் என்று ஏதேதோ சொல்வார்கள்.

அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

2 weeks 6 days ago
என்னது கண்ணை பார்ப்பதா… தலை தெறிக்க வேணா ஓடலாம்….😂 கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்… அந்தியேட்டி என்று அர்த்தம்😂.

Different types of boats used by Tamils historically

2 weeks 6 days ago
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represents an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

2 weeks 6 days ago
இந்த வழக்கும் வைகோதான் போட வேண்டும். ஆனால் பாலியல் புகாரில் இருந்து தப்ப டெல்லி உச்ச நீதிமன்று வரை பிஜேபி வக்கீல்களை வைத்து வாதாட முடியும் 😂.

'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

2 weeks 6 days ago
கோபால் ஊழலற்ற ஆட்சி என்றீர்களே கோபால்…. அதெல்லாம் பொய்யா கோப்ப்ப்ப்பால்ல்ல்…😂. வருமான வரியை கட்டாமல் கையில் காசை வாங்கி விட்டு, அதை ஒத்துக்கொண்டும் விட்டு…. அபராதம் போட தாமதமாவிட்டது என கோர்ட்டை அணுகியுள்ளார்🤦‍♂️. 1.5 கோடி விஜைக்கு பெரிய காசில்லை. ஆனால் இதை செய்தியாக்கி அதனால் வந்த நன்மதிப்பிழப்பு பலகோடி பெறும்.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 weeks 6 days ago
லாம் லாம் லாம் ..... ஆனால் உண்மை என்னவென்று கடைசிவரை நின்றவன் சொல்லணும். அவர்கள் எவரும் அவ்வாறு இதுவரை சொன்னதில்லை. இனியும் இல்லை. ஏனெனில் சிங்களம் தன்னை மாற்றிக் கொள்ளாது. மாற்றவும் போவதில்லை. ஒன்றாக சாகலாம் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கப்படலாம். நேற்றைய ஊர்வலம் சொல்லும் செய்தியும் அது தான். டொட்.

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

2 weeks 6 days ago
நன்றி நன்னி. இந்த கதை வந்த நாள் தொட்டு உண்மையில் ஆமை ஓட்டை இப்படி பாவிக்கலாமா, ஆமை ஓடு மிதக்குமா என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்தது. யாழிலும் அதை கேட்டபோது ஆமையின் ஆதரவாளர் கூட ஒழுங்காக பதில் சொல்ல இயலவில்லை. ஆக, இப்படி தெப்பம் போல பாவிக்கலாம் என்பது தெரிகிறது. ஆனால் இது இரெண்டாம் உலக யுத்த காலத்தில் (பலாலி கட்டிய சமயம்), மிகவும் பிந்தங்கிய நிலையில் இருந்த குப்பிளான் பகுதியில் பாவனையில் இருந்துள்ளது. அப்போ யாழின் பிரதான வாகனம் மாட்டு வண்டி. இந்த கதையை கேட்டு விட்டுத்தான் அண்ணன் - லேண்ட்குரூசர்கள், பஜ்ரோக்களில், வானூர்த்திகளில் புலிகள் பறந்த காலத்தில், ஆமை ஓட்டில் போனார்கள் என கதை அதை நான் கண்டேன் என கப்ஸா அடித்துள்ளார். இதை 100 வருடம் முந்திய கதை என சேரலாதன் போன்றோர் சொல்லி இருக்க கூடும் - சினிமா கூத்தாடி அதை படமாக்கி விட்டார்😂.

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

2 weeks 6 days ago
sordSetonp:2alga0tif6,161rt tgéga1hr052600imefu1av0t35c 581f · அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. "அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்" என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா. போப்பாண்டவர் சொன்னார், "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!" தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து "உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்றார். "என்ன கேட்டாலும் தருவீர்களா" என்று கேட்டார் அண்ணா. "கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர். "போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா. போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், "யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே" என்று கேட்டார். "அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, "நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. உடைந்து போன ரானடே, "நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்" என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர் தான் நம் அறிஞர் அண்ணா. #anna57

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

2 weeks 6 days ago
குறிப்பிட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கதை குறித்த விளக்கத்திற்கு நான் வரவில்லை. ஆனால் இந்த ஆமையோடு உண்மை. இஞ்சேர், நான் இப்பதான் இதைக் கண்டுபிடிச்சன். உண்மையிலேயே எங்கட நாட்டிலை ஆமையோட்டிலை பயணம் செய்திருக்கிறார்கள். நாளேடுகளிலும் செய்தி வந்துள்ளது. https://noolaham.net/project/190/18958/18958.pdf page 9 கீழ்க்கண்ட செய்தி தமிழீழத்தின் வெள்ளிநாதத்தில் (11 - 17 - 6 - 2004) வந்தது: "பலாலி, வசாவிளான் வளலாய், பகுதிகளில் வேலைக்கமர்த்தப்பட்டனர். இவர் கள் கல்லுக்கிளறும் இடங்கள் 'மொண்டி' என அழைக்கப்பட்டது. பலாலி தெற்கு தெழுந்தை மொண்டி, வசாவிளானிலுள்ள போயிட்டி மொண்டி (தற்போதைய சுந்தரபுரம்) குப்பிளான் மொண்டி வளலாய் மொண்டி, நிலாவரை மொண்டி என்பவற்றில் பலாலி ஓடுபாதைக் குரிய கற்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மாரிகாலத்தில் தெல்லிப்பளைக்குப் பயணம் செய்பவர்கள் குரும்புசிட்டியை சுற்றிச் செல்லநேர்ந்தது. விமான ஓடுபாதைக்கு திட்டமிடப்பட்ட தென்பகுதி மாரியில் இயல்பாகவே குளமாகுவது வழக்கம். சிலர் வாழைக்குற்றிகளை பிணைத்துக்கட்டியும், ஆமையோடுகளையும் தெப்பமாகப்பாவித்து கட்டுவன்கரை சென்றனர். இப்பகுதிகள் பின்பு மொண்டிகளில் எஞ்சும் கல்லும் மண்ணும்கொண்டு நிரப்பட்பட்டன."

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
அப்கானிஸ்தான் நியுசிலாந் விளையாட்டு நாளை விறுவிறுப்பாக‌ இருக்கும் ம‌ற்ற‌ இர‌ண்டு விளையாட்டும் சும்மா பார்க்க‌ ச‌ரி..............................

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

2 weeks 6 days ago
அப்படியா? அப்படி அழிக்கவில்லை. இலங்கை சுதந்திரம் அமைந்த நாளில் இருந்து 1981 வரை இலங்கையில் தமிழர் சனத்தொகை மற்றய மாவட்டங்களுக்கு இணையாக அதிகரித்து சென்றதையே புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 1983 கு கிறகு தான் வடக்கின் சனத்தொகையில் பாரிய வீழ்சசி கண்டது. அதுவும் 2009 இன் யுத்தத்ம் முடிந்த பின்னர் வளர்சசி கண்டு வருவதாகவே இலங்கையின் சனத்தொகை கண்கெடுப்பு புள்ளிவிபரம் காட்டிநிற்க முற்றாக அழித்ததாக நீங்கள் எங்கிருந்து புள்ளிவிபரங்களை பெற்றீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா?

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

2 weeks 6 days ago
இங்கே வெளிநாடுகளில் புலிவால்களாக இருந்த பலர் இப்போ ஒன்றரை வருடமாக அனுரகுமார திசநாயக்கவின் தீவிர இரசிகர்களாக மாறியதை போன்று அந்த ஆமை கறி விருந்து புளுகு மோசம் துணிந்து புளு இருக்கின்றார் தானே

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்.

2 weeks 6 days ago
Trump won’t apologize for sharing since-deleted racist video depicting Obamas as apes on Truth Social. தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2020 ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் குறித்த 62 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொளியின் இறுதியில் ஒபாமா தம்பதியை குரங்குகளாக இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த காணொளி நீக்கப்பட்டது. இது குறித்து வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த விவகாரத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கூறினார். "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த காணொளியின் தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். தேர்தல் முறைகேடு அதன் பிறகு எனது ஊழியர்களிடம் கொடுத்து பதிவிடச் சொன்னேன்," என்று அவர் கூறினார். "தினமும் நான் ஆயிரக்கணக்கான விடயங்களைப் பார்க்கிறேன். அந்த காணொளியின் தேர்தல் முறைகேடு குறித்த செய்தி எனக்குப் பிடித்திருந்தது. அதன் இறுதியில் இத்தகைய காட்சிகள் இருப்பது எனது ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை நீக்கியிருப்பார்கள்," என்றும் அவர் விளக்கமளித்தார். இந்த காணொளியை "மிகவும் இனவெறித்தனமானது" என்று விமர்சித்திருந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott), இதனை நீக்க வலியுறுத்தியிருந்தார். மற்றொரு குடியரசுக் கட்சிப் பிரதிநிதியான மைக் லாலர், இது தற்செயலாக நடந்திருந்தாலும் "மிகவும் வருந்தத்தக்கது மற்றும் அநாகரீகமானது" என்று கூறி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இந்தச் சர்ச்சை அமெரிக்காவில் நிலவும் இனப் பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இழிவுபடுத்தும் காட்சிகள் 2020 ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் குறித்த 62 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொளியின் இறுதியில் ஒபாமா தம்பதியை குரங்குகளாக இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த காணொளி நீக்கப்பட்டது. இது குறித்து வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த விவகாரத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று கூறினார். "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த காணொளியின் தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். அதன் பிறகு எனது ஊழியர்களிடம் கொடுத்து பதிவிடச் சொன்னேன்," என்று அவர் கூறினார். "தினமும் நான் ஆயிரக்கணக்கான விடயங்களைப் பார்க்கிறேன். அந்த காணொளியின் தேர்தல் முறைகேடு குறித்த செய்தி எனக்குப் பிடித்திருந்தது. அதன் இறுதியில் இத்தகைய காட்சிகள் இருப்பது எனது ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை நீக்கியிருப்பார்கள்," என்றும் அவர் விளக்கமளித்தார். இந்த காணொளியை "மிகவும் இனவெறித்தனமானது" என்று விமர்சித்திருந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott), இதனை நீக்க வலியுறுத்தியிருந்தார். மற்றொரு குடியரசுக் கட்சிப் பிரதிநிதியான மைக் லாலர், இது தற்செயலாக நடந்திருந்தாலும் "மிகவும் வருந்தத்தக்கது மற்றும் அநாகரீகமானது" என்று கூறி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இந்தச் சர்ச்சை அமெரிக்காவில் நிலவும் இனப் பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. Tamilwinஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்ல...தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங...

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

2 weeks 6 days ago
இங்கு அடிமைகள் மற்றவர்களை அடிமைகள் ஆக இருக்க சொல்ல வேண்டாம் அதற்கு யாழை ஒரு ஊது குழல் ஆக்க வேண்டாம் தமிழ் தேசியம் தமிழர் என்பது உண்மையான தமிழனின் இயல்பு .அடிமையான மொக்கு கூட்டங்களுக்கு பலமுறை எடுத்து சொன்னாலும் விளங்காது என்பது எமக்கும் புரியும் எடுத்ததுக்கெல்லாம் யாழில் புலியை திட்டாது விட்டால் அன்றைய இரவுக்கு நித்திரை வராவிட்டால் ஒழுங்கான வைத்தியர் இடம் நித்திரை குளுசை வாங்கி போடுவது அடிமை விசுவாசிகளுக்கு மிகவும் நல்லது அதை விட்டு இந்த புனிதமான யாழை உங்கள் இஷடத்துக்கு அசிங்கம் பண்ண வேண்டாம் .
Checked
Sat, 02/28/2026 - 14:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed