3 weeks 6 days ago
மனித உரிமை பற்றித் தேரருக்கு மட்டுமல்ல தமிழர் உட்பட இலங்கையில் பெரும்பாலானவர்களுக்கு என்னவென்று தெரியாது. கடவுள் பக்தி உள்ளவர்கள் மிருகங்களைப் பாதுகாப்பவர்கள் மனித உரிமையை மதிப்பவர்கள் என்று கூற முடியாது. முதலில் ஒரு மனிதனை அவனது இனம், மதம், சாதி, அந்தஸ்து எல்லாவற்றையும் தாண்டி சக மனிதனாக மதிக்கத் தெரிய வேண்டும். அது எம்மிடம் கிடையாது.
3 weeks 6 days ago
3 weeks 6 days ago
3 weeks 6 days ago
3 weeks 6 days ago
இந்த தாயின் பரிதவிப்பை நாங்கள் உணர்வதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்! இறுதிக்கட்டப்போரில் இலங்கை இராணுவம் மட்டும்தானே பங்குபற்றியது? பிரிகேடியர் வருண கமகே நழுவல் பதிலை கூறியுள்ளார்.
3 weeks 6 days ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Samuel Churchill ·ntoeoSdpsrf1i7955mi82ta98uth th2g3mlifhil70l7478107h0221clm5 · ......சங்கு கதை.... ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி. Voir la traduction.....!
3 weeks 6 days ago
செம்மணி விவகாரம்; விசாரணையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்து! யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) வலியுறுத்தியுள்ளது. சாட்சிகள் மற்றும் ஊடகங்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸாருக்கும், விசாரணையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவத்திற்கும் அது அழைப்பு விடுத்தது. சில நிறுவன நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்காக முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது. இந்த விசாரணையில் 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கும் அதிகமான உடல் பாகங்கள் ஆடைகள் இல்லாமல் கண்டெடுக்கப்பட்டு ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது. இது நீதிக்குப் புறம்பான கொலைகள் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2025/1445906
3 weeks 6 days ago
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்! நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில்04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வநதுள்ளன. இந்த விவரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1445900
3 weeks 6 days ago
விசா பிரச்சினையால் இலங்கை வீரர்களின் ஆசிய கராத்தே கனவு கலைந்தது! சீனாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நேற்று (02) புறப்படவிருந்த இலங்கை கராத்தே விளையாட்டு வீரர்கள் விசா பிரச்சினையை எதிர்கொண்டனர் இதனால், அவர்களால் திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொள்ள முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, திட்டமிடப்பட்ட விமான நேரம் இருந்தபோதிலும் விளையாட்டு வீரர்களுக்கு விசாக்கள் கிடைக்கவில்லை. இதன் விளைவாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்த அணியினர் மன உளைச்சலை எதிர் கொண்டனர். 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் செப்டம்பர் 5 முதல் 7 வரை சீனாவில் நடைபெற உள்ளது. இதில் 29 இலங்கை விளையாட்டு வீரர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளனர். விமான கட்டணம், விசா செயலாக்கம் மற்றும் பிற தளவாட ஆதரவு உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட இலங்கை கராத்தே-டோ கூட்டமைப்பு ஒவ்வொரு பங்கேற்பாளரிடமிருந்தும் ரூ. 580,000 வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கராத்தே-டோ கூட்டமைப்பின் அதிகாரிகள், விளையாட்டு வீரர்களை விமான நிலையத்திற்கு வருமாறு தெரிவித்து, இன்று காலைக்குள் விசாக்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இருப்பினும், சீனாவுக்கான விமானம் நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. மேலும் கூட்டமைப்பு தேவையான விசாக்களை சரியான நேரத்தில் பெறத் தவறியதால், விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு நம்பிக்கைகள் பொய்த்துப் போயின. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கராத்தே விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார். https://athavannews.com/2025/1445889
3 weeks 6 days ago
ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம்! சிக்கிய துப்பாக்கிதாரி. பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, ஊடகவியலாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் நேற்று மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார். இக் கொலைத் திட்டம், கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445853
3 weeks 6 days ago
பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பெண் வைத்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பெல்மதுல்லை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி தனியார் பேருந்து ஒன்றிலிருந்து தவறி வீழ்ந்த 32 வயதுடைய பெண் வைத்தியர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த வைத்தியர் பி. மதரா மதுஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு-கொழும்பு பிரதான சாலையில் தனியார் பேருந்தில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெல்மதுல்லை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குறித்த பேருந்தின் சாரதி எதிர்பாராத விதமாக திடீரென பிரேக் பிடித்ததால் அவர் பேருந்தில் இருந்து கீழே வீழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. https://athavannews.com/2025/1445883
3 weeks 6 days ago
3 weeks 6 days ago
அரசியல்.
3 weeks 6 days ago
3 weeks 6 days ago
கால் நடைகளின் உரிமைகளை யாரிடமிருந்து, எப்போது, எப்படி பாதுகாத்தார்கள்? சொந்த நாட்டு மக்களின் உரிமையை பாதுகாக்க தெரியாதவர்கள், பகிர்ந்து வாழ முடியாதவர்கள், அவர்களின் உரிமைகளையும் நிலங்களையும் பறித்தவர்கள் மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள். இவர்கள் குற்றம் புரியவில்லையென்றால் ஏன் துடிக்கிறார்கள்? இராணுவத்தை காட்டி பிச்சை எடுத்து அரசியல், சமயம் செய்பவர்கள்.
3 weeks 6 days ago
Indian Cinema Old · Suivre doonspretSu45o010a53017,0 fûm4073i71t4148 l4gu3h:3ahciihhilh · Lata Mangeshkar, Usha Mangeshkar and P. Susheela together in a single frame embody the timeless brilliance of Indian music and the extraordinary artistry of voices that became treasures for generations. Lata Mangeshkar, hailed as the nightingale of India, carried with her a divine quality that turned every song into an everlasting experience, while her sister Usha Mangeshkar created a niche of her own with her melodious renditions and remarkable versatility across different languages and genres. Alongside them stands P. Susheela, the legendary voice of South Indian cinema whose unmatched contribution in Tamil, Telugu, Kannada and Malayalam music made her a living icon of melody and devotion to her craft. The three of them together represent not only the power of music to transcend boundaries but also the harmony that unites diverse traditions of India into one golden thread of melody. This image reflects a historic confluence of extraordinary talent, reminding us that when such voices came together, they did more than just sing, they created moments of history that continue to inspire, uplift and resonate across time......!
3 weeks 6 days ago
அப்படி நடந்தால் அது மிகவும் நல்லது . ........ஒரு நாட்டின் மக்களை, குஞ்சு குருமான்களையெல்லாம் திட்டமிட்டு பட்டினி போட்டு கொல்வதை எந்த ஒரு நாகரீகமான சமுதாயமும் ஏற்காது ..........!
3 weeks 6 days ago
காட்டுப்பள்ளி கலவரம் : வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேருக்கு சிறை- போலீஸ் அதிரடி! காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எல்.என்.டி கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் துறைமுகம் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். காட்டுப்பள்ளி கலவரம் அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்ற நபர் கடந்த 35 நாட்களுக்கு வேலையில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அமரேஷ் பிரசாத் மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதையில் அவரின் வீட்டு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமரேஷ் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது மீட்டு உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் வைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் இதனையடுத்து உயிரிழந்த தொழிலாளி அமரேஷ் பிரசாத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திடீரென்று வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாகக் கூடுதல் காவல் ஆணையர் பவாணீஸ்வரி தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.. அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகக் காவல்துறையினர் மீது கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். புலம்பெயர் தொழிலாளர்கள் இதனால் காவல்துறையினர் வந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. மேலும் ஒரு சில காவலர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அதிரடியாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். அப்போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட புலம் பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்களை விரட்டி அடித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பிரச்சனை ஏதும் ஏற்படாத வண்ணம் அமைதி காத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆவடி கூடுதல் ஆணையர் பவானிஸ்வரி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளிகள் இதற்கிடையே உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளி அமரேஷ் பிரசாத் குடும்பத்திற்கு நிறுவனத்தின் சார்பில் 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. குறிப்பாகச் சம்பவத்தில் ஈட்டுப்பட்டக் காவல்துறையினரிடமும் வட மாநில ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தக் கலவரத்தால் திருவள்ளூரில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கல்வீசித் தாக்குதலில் ஈட்டுப்பட்ட 29 வடமாநிலத் தொழிலாளர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் காட்டுப்பள்ளி துறைமுகக் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காட்டுப்பள்ளி பகுதியில் காவலர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளது குறிப்பிடத்தகது. https://tamil.samayam.com/latest-news/state-news/thiruvallur-kattupalli-attack-northern-state-workers-vellore-jailed/articleshow/123669669.cm டிஸ்கி: குடி வெறியில் செத்தால் 5 லட்சம் இழப்பீடு ..? வட நாட்டவர்கள் அட்டகாசம் தாங்க முடியல.. நானும் ஊர காலி பண்ணிவிட்டு வேற நல்ல நாட்டில் செற்றில் ஆகலாம் என்டு இருக்கன்..
3 weeks 6 days ago
பல நாடுகள் தமது கொடிகளில் வாள், ஈட்டி, கோடரி, கேடயம் மற்றும் சூலம் போன்ற பழங்காலத்து ஆயுதங்களை கொண்டிருந்தாலும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாடு மட்டுமே உலகத்திலேயே தனது தேசியக்கொடியில் துப்பாக்கியின் படத்தை பயன்படுத்தி அமைத்துள்ளது. தமிழ் ஈழத்தின் புலிகொடி ஒரு விடுதலை இயக்கத்தின் அடையாளக்கொடி. காலப்போக்கில் அதுவே தேசியக்கொடியாக மாற்றப்பட்டது குறித்தும் அக்கொடி எதிர்கால நடைமுறைகளுக்கு சாத்தியப்படுமா என்பதிலும் பல சாராரால் சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்பட்டது. தமிழீழக் கொடி ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் கொடியாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கொடி முன்மொழியப்பட்ட தமிழீழ அரசின் விருப்பத்தின் அடையாளமாகவும், பிற நாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரால் பரவலாகப் பயன்படுத்தப்படும் அதே வேளையில், அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசைஅன்றி, அரசியல் இலக்கைக்கை மட்டுமே குறிக்கிறது. இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாததற்கான காரணம்: தமிழ் ஈழம் ஒரு இறையாண்மை கொண்ட அரசு இல்லை தமிழ் ஈழம் ஒரு இயற்பியல் அரசாக இல்லை, மேலும் அந்தக் கொடி அதற்கான அரசியல் விருப்பத்தை மட்டுமே குறிக்கிறது. அது ஒரு அரசியல் இயக்கத்தின் சின்னம். கொடி என்பது உலகளவில் தமிழர்களுக்கான கலாச்சார மற்றும் அடையாள சின்னமாகும், இது பெரும்பாலும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் அரசியல் பேரணிகளில் காட்டப்படும், ஆனால் அது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடியின் அந்தஸ்தைப் பெறவில்லை. கொடி 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்ட அரசின் தேசியக் கொடியாக நியமிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளால் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, இது அதன் பரந்த சர்வதேச ஏற்றுக்கொள்ளலை சிக்கலாக்குகிறது. சுருக்கமாக, தமிழீழக் கொடி புலம்பெயர்ந்தோருக்கு ஒரு குறிப்பிடத்தக்க சின்னமாகவும் அவர்களின் அரசியல் அபிலாஷைகளின் காட்சி பிரதிநிதித்துவமாகவும் உள்ளது, ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசின் கொடியாக அதற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை.
3 weeks 6 days ago
அப்படியே ஆகட்டும் தோழர் ..
Checked
Tue, 09/30/2025 - 21:57
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed