புதிய பதிவுகள்2

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

2 weeks 6 days ago
oSeordtsnp1fl0m45rt é,f86reg55:hg0ct7a10v1i065ffmcu753657 0f · இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களிடம் அந்த ஊரை சேர்ந்த நபர்கள் கூறியிருக்கிறார்கள் அதாவது நீங்கள் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வந்துவிட்ட பிறகு உங்களால் இந்த ஊரில் வாழ முடியாது இந்த ராஞ்சி சிறிய நகரம் உங்களுக்கு இந்த ஊர் பிடிக்காமல் போய்விடும் நீங்கள் வேணும்னா பாருங்கள் நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வேறு நாட்டிற்கு அல்லது வேறு ஊருக்கு நீங்கள் செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள் அதனை அப்போது தோணி இல்லை நான் எவ்வளவு பெரிய ஆளாகினாலும் நான் இங்கே தான் இருப்பேன் என்று சொல்லி மறுத்து இருக்கிறார் அவர்களும் அப்போது அதனை ஏற்க மறுத்து விட்டனர் இப்போது தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் இதே ராஞ்சி நகரில் தான் இருக்கிறேன் என்னிடம் அப்போது கூறியவர்கள் இங்கே இருக்க மாட்டேன் என்று என்னை பார்த்து சொன்னார்கள் ஆனால் எனக்கு இந்த ராஞ்சி மிகவும் பிடிக்கும் இந்த ராஞ்சியில் தான் நான் பிறந்தேன் இந்த ராஞ்சி மண் என்னுடைய சொந்த ஊர் இது எனக்கு சொர்க்கம் தான் என்று நான் இங்கு விட்டு எங்கும் குடியேற மாட்டேன் மேலும் இங்கே சும்மா இல்லாமல் எனக்கு பிடித்தமான விவசாயம் செய்வதை மிகுந்த சந்தோஷமாக உணர்த்துகிறேன் மேலும் என்னுடைய உடல் நலத்திற்கு இது மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்றும் தோனி மனம் திறந்து கூறியிருக்கிறார் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் சொந்த ஊரில் வாழ்வது அவமானம் என்று நகரத்தை நோக்கி செல்பவர்கள் ஏராளம்..ஆனால் இங்கே தோனியின் இந்த செயல் அவரின் வாழ்வியல் பாராட்டுதலுக்குரியது தோனியின் ரசிகன் என்பதில் பெருமிதம் 😍"

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 6 days ago
பிள்ளையானை அனுரவுக்கு முன்பே உள்ளே தூக்கி போட்டு விட்டார்கள். அனுர தனது போர்கால அமைசரவை சகாவான டக்லஸ் மீது போட்டது “பாவாடை நாடாவை காணவில்லை” ரீதியிலான கண்துடைப்பு வழக்கு - முடிந்தால் யூ எஸ் ஸ்டேட் டிப்பார்ட்மெண்ட் சொன்னதன் அடிப்படையில் அல்லது நிமலராஜன் கொலைக்கு டக்லஸ் மீது வழக்கு போட சொல்லுங்கள் உங்கள் அனுர மஹானை. மாட்டார் - ஏன் என்றால் அப்படி செய்தால் இனவாதத்தின் கைக்கூலியை காட்டி கொடுப்பதாகிவிடும்.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 6 days ago
பால்காவடி…பன்னீர்காவடி…புஷ்பகாவடி…. பெண்ணுங்க எல்லாம் தூக்கி வந்தோம்… அனுர காவடி. ஐ ஆம் வெய்ட்டிங் மை சன்…. பதவிகாலம் முடியும் போது அனுர அப்படி என்னத்தை தமிழருக்கு அவித்து கொட்டிவிடுவார் என பார்க்கலாம்…. அசோக்….இந்த நாள உன்(ங்க) காலண்டர்ல குறித்துக்கோ😂. ஏன் என்றால் வேறு எவருக்கும் இப்படி முன்னாள் புலிவால்கள் யாழில் காவடி எடுத்ததில்லை.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
நியுசிலாந் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு..................... சில‌ கைச்சுக‌ள் பிடிப்ப‌து சிர‌ம‌ம் த‌லைவ‌ரே நேற்று வெஸ்சின்டீஸ் வீர‌ரும் ஒரு கைச்சை விட்டார்................. கிரிக்கேட்டில் கைச் முக்கிய‌ம்............. கேர‌ன் போலாட் சுரேஸ் ரெயினா ர‌வெந்திர‌ ஜ‌டேயா இவ‌ர்க‌ள் கைச் பிடிப்ப‌தில் கில்லிக‌ள்.....................

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 weeks 6 days ago
சுப்பர் சகோ சொல்ல வார்த்தைகள் இல்லை போராட்டத்தை வியாபாரத்துடன் ஒப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அந்த சிறிய லாபத்தை தந்தவுடன் நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற குட்டை மறைத்து விட்டீர்கள். ஆகா ஓகோ....

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

2 weeks 6 days ago
மக்களால்... நிராகரிக்கப் பட்ட, "பின் கதவு" சுமந்திரனுக்கு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்... என்ன அலுவல் ? நாடாளுமன்றத்துக்குள்... "காலடி" எடுத்து வைக்க வேண்டாம் என்று தானே.. தமிழ் மக்கள் இவரை, வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். சுத்துமாத்து சுமந்திரனுக்கு.. தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பதவியை, மத்திய குழு வழங்கவே இல்லை. வைத்தியர் சத்தியமூர்த்தியின் பதவியை அடாத்தாக எடுத்து... பதில் செயலாளர் என்று ஆரம்பத்தில் சுத்துமாத்து விட்டு, இப்போ... தமிழரசு கட்சியின் செயலாளர் என்று, தனக்குத்தானே "லேபிள்" ஒட்டிக் கொண்டு திரியும், இந்தக் குழப்பவாதிக்கு... தமிழ் மக்கள், விரைவில் பாடம் படிப்பிப்பார்கள். இந்த மனிதன் செய்யும்... "நரக" வேலைகளால், தமிழ் மக்களின் முக்கியமான பல விடயங்கள் மழுங்கடிக்கப் பட்டுக் கொண்டிருப்பது... இந்தப் "பைத்தியக்காரனுக்கு" இன்னும் விளங்கவில்லையா.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

2 weeks 6 days ago
சொல்லுறது புரியாமல் விட்டால் அப்படி தான் இருக்கும். 😂 உங்களுக்கு இனா ஈயன்னக்கு அங்கால கற்பிக்கும் கற்பித்தல் திறமை எனக்கில்லை.

டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை.

2 weeks 6 days ago
டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை. டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். TikTok மீதான விசாரணையின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்கள் போதைப்பொருளைப் போல பயனர்களை அடிமையாக்குவதை ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக எல்லையற்ற ஸ்க்ரோல் (Infinite Scroll) , தானாக இயங்கும் காணொளிகள் (Autoplay), புஷ் அறிவிப்புகள் (Push Notifications), தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை (Algorithms), இவை சிறுவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இது டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) மீறும் செயல் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. 2024 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட சில தரவுகளை ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் தோமஸ் ரெக்னியர் (Thomas Regnier) மேற்கோள் காட்டினார். 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் நள்ளிரவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாக TikTok உள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 7 சதவீதமானோர் நாளொன்றுக்கு 4 முதல் 5 மணிநேரம் வரை இந்தச் செயலியில் செலவிடுகின்றனர். “TikTok தனது வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறுவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்பத் தலைவர் ஹென்னா விர்க்குனென் (Henna Virkkunen) தெரிவித்துள்ளார். இதேவேளை, விதிகளை மீறும் பட்சத்தில், TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ (ByteDance) இன் உலகளாவிய வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் அச்சுறுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகளை முற்றாக மறுத்துள்ள TikTok செய்தித் தொடர்பாளர், “ஒன்றியத்தின் இந்த ஆரம்ப முடிவுகள் எமது தளத்தைப் பற்றிய தவறான மற்றும் தகுதியற்ற சித்தரிப்பாகும். இதனைச் சவாலுக்கு உட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1463654

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
ஆட்டங்கண்டது நியுசிலாந்து. அடுத்தடுத்த இரண்டு விக்கட்டுகள். அதுவும் அடித்தாடக்கூடிய இருவர். ஆப்கானிஸ்தானின் வாய்ப்புகள் பிரகாசமாயுள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
அப்கானிஸ்தான் வெல்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது போலவே உள்ளது, நியுசிலாந்திற்கு இது ஒரு கடினமான இலக்கு, ஆனால் நியுசிலாந்தில் நம்பிக்கையுள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
182 ஓட்டங்கள். நியுசிலாந்துக்கு இது பெரிய ஓட்டம். அவர்கள் 180க்கு மேல் துரத்தியதில்லை. ஆப்கானிஸ்தானைத் தெரிவு செய்த அவ்விருவரும் மகிழ்ந்திருப்பார்கள்
Checked
Sat, 02/28/2026 - 14:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed