கோடிகளில் புரளும் சிறிதரன் எம்.பி
சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு செய்தவரிடமே பேட்டி
சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு செய்தவரிடமே பேட்டி
05 AUG, 2025 | 10:09 AM
![]()
ஆர்.ராம்
2022இல் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக தானே அறிவித்ததன் பின்னரான சூழலில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள மக்கள் கூட்டத்தினர் ஏதோவொரு வகையில் நெருக்கடிக்குள் வாழுகின்ற நிலைமைகள் தோற்றம் பெற்றிருந்தன.
குறித்த அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளாகின்றபோதும் சாதாரண மக்கள் மத்தியில் மீளெழுச்சி அடைந்த நிலைமைகள் இன்னமும் தோற்றம் பெற்றிருக்கவில்லை என்பதே கள யதார்த்தமாக உள்ளது.
கள ஆய்வுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்கள் ஏதோவொரு வகையில் தமது செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காக போராடிக்கொண்டிருக்கும் நிலைமைகள் தொடர்கின்றன. குறிப்பாக, வாழ்வாதாரத்துக்கான போராட்டம் நீண்டதாக இருப்பது முக்கியமான விடயமாகின்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் குடும்பக் கடனும், அதன் மூலமான வறுமை மட்டமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டில் உள்நாட்டு வறுமை வீதம் 23-26 சதவீதம் வரையில் காணப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறுபான்மை மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் இந்த தாக்கம் மேலும் தீவிரமாக உள்ளதாக உலக வங்கியின் அறிக்கையிலும், தனியார் ஆய்வு அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த நிலைமையில் இருந்து மீண்டெழ முடியாமைக்கான பிரதான காரணமாக ‘நிதிக்கல்வி’ கிராமிய மட்டங்களுக்கு அவசியம் என்ற விடயம் வெகுவாக உணர்த்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவை குடும்பக் கடன்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக ‘நிதி கல்வி’ போதியளவில் காணப்படாதுள்ளமை அடையாளப்படுத்தியுள்ளன.
குறிப்பாக, பெண்கள் மற்றும் கிராமப்புற மக்கள் உத்தியோகபூர்வமான வங்கி சேவைகளை பயன்படுத்துவதில் பின்தங்கி இருப்பதோடு அதிக வட்டிவீதத்தை வசூலிக்கும் தனியார் கடன் தருநர்களிடம் சிக்கிக்கொள்கின்ற நிலைமைகளையும் அவதானிக்க முடிகின்றது.
இதனை வலுப்படுத்தும் வகையில், குடும்பப் பாதிப்புகளுக்கு நிதி கல்வியறிவின்மை ஒரு முக்கிய காரணியாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா குறிப்பிட்டுள்ளதோடு வீட்டுக்கடன் பல பரிமாண பாதிப்புகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருப்பதால், கடன் வாங்குபவர்களிடையே, குறிப்பாக பெண்களிடையே நிதி கல்வியறிவு இல்லாதது ஒரு முக்கிய கவலையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் குடும்பத்தை மையப்படுத்தி பெண்கள் பெற்றுக்கொள்கின்ற கடன்கள் பெண்களின் நிலையற்ற சூழல்களை ஏற்படுத்தி தொடர்ச்சியாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கான மூலகாரணியாக இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பல பரிமாண பாதிப்புக் குறியீட்டு அறிக்கையின் தரவுகள், இலங்கையில் 33.4 சதவீதமான மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் 2024ஆம் ஆண்டுக்கான பல பரிமாண பாதிப்புக் குறியீட்டு அறிக்கையின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 57 சதவீதம், வடக்கு மாகாணத்தில் 41 சதவீதம் மற்றும் வட மத்திய மாகாணத்தில் 40 சதவீதம் மக்கள் கடன் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமையானது, அப்பகுதி மக்கள் வறுமை வட்டத்திலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளமையை வெளிப்படுத்தி நிற்பதோடு அவர்களுக்கு கடனில் இருந்து மீள்வதற்கான வழிகட்டலின் அவசியத்தை வெளிப்படுத்துகிறது.
களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறையின் பேராசிரியர் நவரத்ன பண்டா கருத்து வெளியிடும்போது, “உள்நாட்டில் குடும்பக்கடன் நிலையும், வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்களின் நிலைமையும் உயர்வாகவே காணப்படுகின்றது. இதற்கு நிதிக் கல்வி நிலை மிகவும் குறைவாக இருக்கின்றமையே பிரதான காரணமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், அவர் “கிராமப்புறங்களில் வங்கி சேவைகளைப் பற்றிய அறிவின்மை காரணமாக மக்கள் தனியார் கடனாளிகளிடம் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. பல விவசாயிகள் விதை, உரம் முதலியவற்றிற்காக கிராமிய தனியார் நிறுவனங்களில் அதிக வட்டியில் கடன் வாங்குகிறார்கள். வங்கிகளில் கடன் பெறுவதற்கு ஆவண நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் கடினமாக இருப்பதாலேயே அவர்கள் உத்தியோக பூர்வமான அமைப்புகளை தவிர்க்கின்றனர்” என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் வறுமைக்கோட்டுக்குள் உள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்காக ‘அஸ்வெசும’ திட்டத்தை முன்னெடுகின்றது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்த நிதி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டின் நடுப்பகுதி வரையில் 622,495 பேர் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த எண்ணிக்கையானது தற்போது 1.7மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரச தரவுகள் குறிப்பிடுகின்றன.
குறித்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பயனாளிகள் தெரிவில் இன்னமும் சிக்கல்கள் தீர்க்கப்படாத நிலைமைக்ள நீடிக்கின்றன. இதற்கு அரசியல், அரச அதிகாரிகளின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
இதேநேரம், ‘அஸ்வெசும’ பயனாளிகளின் உதவித்தொகை பயன்பாடு தொடர்பான அண்மைய ஆய்வுகளின்படி, குறித்த தொகையானது பெரும்பாலான நேரங்களில் அன்றாடச் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுகிறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இத்தொகையைப் பெறுகின்ற பயனாளிகளில் 78 சதவீதமானவர்கள் அதனை உணவுக்கே செலவிடுகிறார்கள் என்பதோடு இதுவொரு நீண்டகால தீர்வுத்திட்டம் அல்ல என்பதும் உறுதியாகின்றது.
மறுபக்கத்தில் இலங்கை மத்திய வங்கியானது, 2024-2028 காலப்பகுதிக்கான நிதிக்கல்வி வழி வரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘வங்கியோடு நட்பு’ திட்டம் என்ற தொனிப்பொருளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டமானது, கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்காக கொண்டுள்ளது.
விசேடமாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து பெண்கள் தலைமையிலான தொழில் முயற்சிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி கல்வியை ஊக்குவிக்கும் செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட நிதி கல்வி பயிற்சியின் பின், 74சதவீதம் பேர் குறைந்த வட்டி வங்கிக் கடன்களை பயன்படுத்தி அன்றாட வாழ்க்கையையும், தொழில் முயற்சிகனையும் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, உள்நாட்டில் நிதி அறிவு இருந்தாலும் நிதிப் பழக்கவழக்கங்களில் குறைபாடுகள் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளதோடு மோசமான செலவழிப்பு பழக்கம், குறைவான சேமிப்பு மற்றும் நிதி மோசடிக்கு ஆளாகும் நிலைமைகள் தொடர்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுள்ளார்.
இதேநேரம், சமூக பாதுகாப்பு அமைச்சர் உபாலி பன்னிலகே, தற்போது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிகள் செயல்படுத்தப்பட்டாலும், நிதிக் கல்வி குறித்த தனித்துவமான திட்டங்கள் எதுவும் உள்நாட்டில் இல்லை என்பதே முக்கிய குறைபாடாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக, அமைச்சர் உபாலி பன்னிலகே இளைஞர், யுவதிகளின் பாதுகாப்பு சமூக மீட்சிக்கு வழிசமைக்கும் என்பதையும் வறுமையிலிருந்து பெண்களின் மீட்சி சமூக மேம்பாட்டின் அடித்தளமாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்டை நாடான இந்தியாவில் ‘மகிளா சக்தி மிஷன்’, வங்கிக் கணக்குகளை திறப்பதன் மூலமும் குறைந்த வட்டி தொழில் முனைவு கடன்களை வழங்குவதன் மூலமும் கிராமப்புறங்களில் கடன் பெறும் நிலைமையானது 22 சதவீதமாக குறைந்திருக்கின்றது.
பங்களாதேஷில் கிராம வங்கிகளில் சிறப்பு திட்டங்கள் ஊடாக பெண்களின் வருமானத்தை ஆண்டு 37 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டது. வியட்நாமில் கடன் கடன்பெறும் நிலைமையானது 40 சதவீதமாக குறைந்ததோடு 5 ஆண்டுகளில் வங்கி கணக்குகள் 35 சதவீதமாக அதிகரித்தன.
அந்தவகையில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், இலங்கை மத்திய வங்கயின் தரவுகளும் இந்தியா உள்ளிட்ட முன்னுதாரணங்களும் ஒருங்கிணையும் போது, உள்நாட்டில் குடும்பங்கள் கடன்பொறியில் சிக்கும் நிலைமைகளை ஒழிக்க முடியும் என்பதோடு நிலையான நிதி கல்வி மற்றும் விரிவான நிதி விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாக சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.
https://www.virakesari.lk/article/221841
கிராம அபிவிருத்தி சங்கங்களூடாக சுழற்சிமுறைக் கடன் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
எமது கிராமத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் பெற்றால் மாதாந்தம் 5250 ரூபா வீதம் பத்து மாதத்தில் 52500 ரூபாய் கட்டி முடித்தால் மீள ஒரு லட்சம் ரூபா கடன் எடுக்கலாம், மாதாந்தம் 10500 ரூபா வீதம் பத்து மாதத்தில் 105000 ரூபா கட்டி முடியும். தேவை ஏற்பட்டால் மீளவும் பெற விண்ணப்பிக்கலாம்.
இனப்படு*கொ*லை | முன்னணியின் மூடிமறைப்பு அரசியல் .
19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட மனிதாபிமான பணியாளர்கள் ; மூதூர் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தடுத்த இராணுவத்தினர் ; வீதியை மறித்த கும்பல் ; ஆதாரங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டாத பொலிஸார்
Published By: Rajeeban
04 Aug, 2025 | 03:40 PM
![]()
ஏசிஎவ் அமைப்பின் அறிக்கையிலிருந்து --

ஜூலை 31 ஆகஸ்ட் முதலாம் திகதி காலை பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் மூதூர் நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கள் திட்டங்களை முன்னெடுப்பதற்காக புறப்பட்டு சென்றனர்.
பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்துவதற்காகவும் மூதூரில் ஒரு அலுவலகத்தை கொண்டிருந்தது.

ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் கடல்வழியாக மீண்டும் திருகோணமலை திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தனர், ஆனால் அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் கிளர்ச்சி படையினர் மூதூரை இலக்குவைத்து தாக்குதலொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக அரசசார்பற்ற அமைப்பின் 17 பணியாளர்களும் அங்கேயே நிற்கவேண்டிய நிலையேற்பட்டது.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் மூண்ட மோதல்காரணமாக மூதூரை சுற்றியுள்ள வீதிகள் பயணம் செய்வதற்கு பாதுகாப்பற்றவையாக மாறியதால் படகு போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கொழும்பிலும் பிரான்ஸ் தலைநகரிலும் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் 17 பணியாளர்களையும் மோதல்கள் முடிவிற்கு வரும்வரை மூதூர் அலுவலகத்திலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்வது என தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்த பகுதி முழுவதும் கடும் மோதலில் சிக்குண்டிருந்தது, எனினும் திருகோணமலை அலுவலகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகள் பேணப்பட்டன. மூதூரில் உள்ள அலுவலகத்தில் 17 பணியாளர்களையும் தங்கியிருக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் அந்த தருணத்தில் சிறந்ததாக தோன்றியது.
ஆகஸ்ட் 2ம் திகதி மூதூரில் நிலைமை மேலும் மோசமடைந்தது, மனிதாபிமான பணியாளர்களை வெளியேற்றுவது சாத்தியமற்ற விடயம் போல தோன்றியது.
இதன் காரணமாக அந்த அலுவலகம் வெளியில் உள்ளவர்களின் கண்ணிற்கு தென்படுவதை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதனை அரசசார்பற்ற அலுவலகம் என அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மறுநாள் மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த பணியாளர்களை படகு மூலம் வெளியேற்றுவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முயற்சிகளை எடுத்தது , ஆனால் அது சாத்தியமாகவில்லை.மோதலில் ஈடுபட்டிருந்த தரப்பினரிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை சர்வதேச செஞ்சிலுவை குழுவினால் பெற முடியாமல் போனதால் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் சாத்தியமாகவில்லை.
மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த 17 பேரையும் அகதிகளிற்கான முகாமிற்கு கொண்டுபோய் சேர்ப்பது குறித்தும் ஆராயப்பட்டது. எனினும் தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள் காரணமாக தங்களால் தங்கள் அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை காணப்படுவதாக மனிதாபிமான பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த உரையாடல் இடம்பெற்று 20 நிமிடத்தின் பின்னர் அகதிமுகாம் எறிகணை தாக்குதலிற்குள்ளானது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த காலப்பகுதியில் ஏசிஎவ் - பட்டினிக்கு எதிரான அமைப்பு இராணுவத்தினர் கடற்படையினர் பொலிஸாரை தொடர்புகொண்டு மனிதாபிமான பணியாளர்கள் நகரில் இருப்பதை தெரிவித்தது, அவர்களின் அலுவலகத்தின் ஜிபிஎஸ் விபரங்களை வழங்கியது. இந்த தகவல்கள் தங்கள் பணியாளர்கள் தங்கியுள்ள கட்டிடம் தற்செயலாக எறிகணை தாக்குதலிற்குள்ளாவதை தடுப்பதற்கு உதவும் என பட்டினிக்கு எதிரான அமைப்பு நம்பியது.
இறுதியில் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் எனவும் ஏசிஎவ் நம்பியது.
ஏசிஎவ் குழுவினருக்கும் மூதூரில் சிக்குண்டிருந்த அதன் பணியாளர்களிற்கும் இடையிலான இறுதி தொடர்பாடல் நான்காம் திகதி காலை 7 மணிக்கு இடம்பெற்றது.
ஆனால் அவர்கள் அன்றைய தினம் உயிருடன் இருந்தார்கள் என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரமற்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
மூதூர் பணியாளர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டதும் அந்த அலுவலகத்திற்கு தரை மூலமாக செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம், ஆனால் மூதூரிலிருந்து பத்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள இராணுவசாவடியில் உள்ளவர்களால் அது தடுத்துநிறுத்தப்பட்டது.
ஆகஸ்ட் ஐந்தாம் திகதி பல தரப்பினரும் மூதூரில் உள்ள ஏசிஎவ் அலுவலகத்தில் 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.
இரண்டாவது அணியொன்று திருகோணமலையிலிருந்து தோப்பூரிற்கு சென்று இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரை சந்தித்தது அவர்களும்; மூதூருக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பான பயணத்திற்கு அனுமதி மறுத்ததால் அந்த முயற்சியும் கைகூடவில்லை.
எனினும் அன்றைய தினம் மூதூர் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக காண்பிப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் பத்திரிகையாளர்கள் குழுவினரை மூதூருக்கு அழைத்து சென்றிருந்தனர்.
ஆறாம் திகதியளவில் மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த எமது பணியாளர்களை உயிருடன் பார்ப்போம் என்ற நம்பிக்கை குறைவடைய தொடங்கிவிட்டது.
எனினும் ஏசிஎவ் மூதூர் சென்று நிலைமையை கண்டறிவதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து தரைவழிப்பயணத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எனினும் கிராமமொன்றை சேர்ந்த கும்பல் வீதியை மறித்து எங்களை தடுத்ததால் எங்கள் முயற்சி மீண்டும் தடைப்பட்டது.
படகு சேவை மீண்டும் இயங்கியதும் படகு மூலம் அங்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். எனினும் படகின் முன்னால் எறிகணைகள் விழுந்து வெடித்ததால் அந்த முயற்சியும் கைகூடவில்லை.
எனினும் அதேகாலப்பகுதியில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பு மூதூரை சென்றடைந்திருந்தது. தரைவழியாக மூதூர் சென்ற அவர்கள் ஏசிஎவ் பணியாளர்கள் சிக்குண்டிருந்த அலுவலகத்தை சென்றடைந்தனர்.
அவர்கள் அங்கு சென்றவேளை முன்வாசலிலேயே 17 மனிதாபிமான பணியாளர்களும் உயிரிழந்த நிலையில் காணப்படுவதை பார்த்தனர்.

கொலைகளை எங்களிற்கு அவர்கள் உறுதிப்படுத்தினார்கள், குற்றம் இடம்பெற்ற இடத்தின் படங்கள் எடுக்கப்பட்டன.
பெருமளவிற்கு ஏசிஎவ்வின் திருகோணமலை பணியாளர்கள் இடம்பெற்றிருந்த குழுவினரே உடல்களை சேகரித்தனர்.
மூதூருக்கு சென்றதும் நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர்கள் தாங்கள் உடல்களை சேகரிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஐந்து பொலிஸார் அவர்களை மூதூர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர், படங்கள் எடுக்ககூடாது, தொலைபேசி அழைப்பில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர்.
பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தை படமெடுத்தனர், ஆனால் உடல்களை சேகரிப்பதில் உதவவில்லை. ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை.
என்ன நடந்தது என்பதை கண்டறிவது குறித்து அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இது காணப்பட்டது.
வாழ்வோரும் இறந்தோரின் எலும்புகளும் நீதியையே, மாற்றத்தையே விரும்புகின்றன

— கருணாகரன் —
யாழ்ப்பாணம் – செம்மணிப்பகுதியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகளிலிருந்து இதுவரை(30.07.2025) 115 க்கு மேற்பட்டமனித எலும்புக்கூடுகள்(எச்சங்கள்) மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்கள், குழந்தைகள் அல்லது சிறார்களின் எலும்புத் தொகுதிகளும் இனங்காணப்பட்டுள்ளன. இதயத்தை உலுக்கும் விதமாக இருப்பது, இந்த எலும்புக்கூடுகளோடு குழந்தைகளின் பாற்புட்டிகளும் விளையாட்டுப்பொருட்களும் சேர்ந்து கிடப்பது. அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இன்னும் இன்னும் என்னென்னவெல்லாம் மீட்கப்படுமோ? என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை. இந்த மீட்பில் ஒரு கூட்டுக் கொலை நடந்திருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இருந்தாலும் இதையிட்டு அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் நாம் உடனடியாக வந்து விடமுடியாது. காரணம், இது முறைசார் ஆராய்ச்சிக்குரியது. முறையான ஆராய்ச்சிக்குப் பின்னரே தெளிவான முடிவுகளை- தீர்வை நோக்கிச் செல்லமுடியும். மட்டுமல்ல, சட்டம், நீதி, நீதிகோரல் எனப் பல அடுக்குகளோடு தொடர்புபட்டது. என்பதால் நிதானமாகவே இதைக் கையாள வேண்டும்.
இதுவரையில் மீட்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் சில உண்மைகளைச் சொல்லவிளைகின்றன. சம நேரத்தில் சில கேள்விகளையும் எழுப்புகின்றன.
உண்மைகள்:
1. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். செம்மணியில் பலர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர் என்று நீண்டகாலமாகவே தெரிவிக்கப்பட்டு வந்த உண்மை நிரூபணமாகியுள்ளது.
2. மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளோடு அடையாளம் காணப்பட்டுள்ள உடை, பிள்ளைகளின் விளையாட்டுப்பொருட்கள் போன்றவை எந்தக் காலகட்டத்துக்குரியவை என்பதைச் சொல்கின்றன. அல்லது அவற்றை வைத்து காலகட்டத்தை ஓரளவு தீர்மானிக்கலாம். முறைசார் ஆய்வுகளுக்கு இவையும் வலுச்சேர்க்கக்கூடியன. ஆகவே கொலைகள் நடந்த காலத்தைத் தெளிவாக அடையாளம் காண முடியும்.
3. இவை அரசியல் ரீதியான படுகொலைகள்.
4. இந்தக் கொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
5. மிகப் பெரிய துயரம். மிகப் பெரிய அநீதி. மிகப்பெரிய அவலம். மிகக்கொடிய செயல். மனச்சாட்சியை உலுக்கும் இந்த விடயம்.
6. கொல்லப்பட்டவர்களை வெறுமனே இறந்தவர்கள் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. அப்படிச்சேர்த்தால், அப்படிச் சேர்ப்பதற்கு அனுமதித்தால் அது கொல்லப்பட்டோருக்கு இழைக்கும் அநீதியாகும். கொலைகளுக்கு உடந்தையாகும்.
7. இது மிக மோசமானமனித உரிமை மீறல் செயல். மக்களின் வாழும் உரிமை மறுதலிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் வழங்க வேண்டும்.
இப்படி இந்த உண்மைகளின் பட்டியல் நீள்கிறது. அடுத்த்தாக இது குறித்து எழுகின்ற கேள்விகள் –
1. இந்தப் புதைகுழிகளைக் குறித்து சமூகத்தின் புரிதல் என்ன? இந்தக் கேள்வி ஏன் எழுகின்றதென்றால், தினமும் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் வெறுமனே புள்ளிவிவரங்களாக முடிந்து விடுவதாகவே தெரிகிறது. அதைக் கடந்து, இவை சமூகத்தில் வேறு எத்தகைய உணர்வலைகளையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. அரசியற்கட்சிகள், ஊடகங்கள், மனிதஉரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் போன்ற தரப்புகளும் சரியான அவதானத்தைக் கொள்ளாமலே உள்ளன. அல்லது இது குறித்து எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது? இந்தப்பிரச்சினையை எப்படிக்கையாள்வது என்பது தொடர்பில் அவற்றுக்குக் குழப்பங்கள் இருக்கலாம். ஆனாலும் இந்தத் தடுமாற்றமும் குழப்பமும் தாமதமும் ஏன்?
2. புதைகுழிகளில் மீட்கப்படும் என்புக்கூடுகள் சொல்லுகின்ற சேதிகளின் அடிப்படையில் நோக்கினால், இவற்றில் குடும்பங்களாகக் கொல்லப்பட்டிருக்கக் கூடிய சூழலும் உண்டு. அல்லது, தாய் அல்லது தந்தை அல்லது கொல்லப்பட்டோருடன் கூட இருந்த சிறுவர்கள், குழந்தைகளும் சேர்த்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், அது யார்? அதைக் கண்டறிவதில் ஏன் தாமதங்கள்? குடும்பங்களாகக் கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட விவரங்களைத் தேடினால் இதைக் கண்டறியக்கூடியதாக இருக்கும். ஆனால், அப்படியான சம்பவங்கள் கடந்த காலத்தில் பெருமளவில் நடந்திருக்கிறதா? அதற்கான முறைப்பாடுகள் எங்காவது பதிவு செய்யப்பட்டுள்ளனவா? என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. அப்படியில்லை என்றாலும், அவ்வாறு காணாமலாக்கப்பட்டோர் அல்லது கைது செய்யப்பட்டோர் பற்றி சம்மந்தப்பட்ட உறவினர்கள் எவராவது இப்போது கூட முறையிடலாம். விவரங்களை வெளியிடலாம். அது ஏன் நிகழாதிருக்கிறது?
3. இந்தப் புதைகுழி விடயம்1996 லிருந்து நீடிக்கிறது. அதாவது, செம்மணிப்பகுதியில் 600 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. ஏறக்குறைய அது மெய்யென இன்றைய இந்த எலும்புத்தொகுதிகளின் மீட்புகள் உரைக்கின்றன. என்றால், இதைச் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் நீதிக்கான கோரிக்கையாக ஏன் முன்னிறுத்த முடியாமலுள்ளது?
4. 100 க்கு மேற்பட்ட மனித எலும்புத்தொகுதிகளும் அவற்றோடான எச்சங்களும் மீட்கப்பட்டன என்ற சேதிக்கு அப்பால், இது தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவுள்ளது? இந்த அகழ்வுக்கு அரசாங்கம், நீதி அமைச்சின் வழியாக ஒரு தொகை பணத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது. என்றால், இந்த அகழ்வை அரசாங்கம் ஆதரிக்கிறது என்றே அர்த்தமாகும். அப்படியென்றால், அடுத்த கட்டமாக இதைப்பற்றிய முறைசார் ஆய்வுக்கும் அரசாங்கம் ஒத்துழைக்கும் எனத் தெரிகிறது. அந்த முறைசார் ஆய்வு சர்வதேச நிபுணத்துவத்துடன் நடக்குமா? உள்நாட்டு மட்டத்தில் நடக்குமா? என்பது கேள்வியே! சரி, அப்படித்தான் ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வந்தால், அடுத்த கட்டமாக இவற்றோடு தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். முக்கியமாக கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது எந்தளவுக்குச் சாத்தியமாகும்? இதைச்சாத்தியப்படுத்துவது எப்படி? அதில் எத்தகைய பங்களிப்புகளை – தூண்டல்களை – யாரெல்லாம் செய்யவேண்டும்?
5. செம்மணிப் புதைகுழியை மட்டும் கவனப்படுத்தப்பட வேண்டுமா? மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் கிழக்குமாகாணத்தில் பல்வேறு இடங்கள் என அடையாளம் காணப்பட்ட – சந்தேகிக்கப்படும் புதைகுழிகளைப் பற்றிய கரிசனைகள் எந்தளவுக்கு உள்ளன? அவற்றில் புதைக்குப்பட்ட உண்மைகளுக்கும் புதைக்கப்பட்டோருக்குமானா நீதி என்ன? அதை எப்படிப் பெறுவது? அதற்கான குரல்கள் ஏன் கூட்டாக முன்னெடுக்கப்படாமல் உள்ளன?
6. இந்த மாதிரியான புதைகுழிகளைக் குறித்து சிங்கள, முஸ்லிம், மலையக மக்களின் புரிதல் – அக்கறைகள் என்ன? சிங்கள, ஆங்கில ஊடகங்களின் கவனம் எப்படியுள்ளது? ஏன் இவை கவனிக்கப்படாமல் உள்ளன? அல்லது மந்தமாக இருக்கின்றன?
7. சர்வதேச சமூகம் என்று சொல்லப்படும் தரப்புகள் இவற்றைக் குறித்து எந்தளவுக்கு அக்கறை கொள்கின்றன? அந்த அக்கறையின் அளவும் பயனும் என்ன?
இப்படிப் பல கேள்விகள்எழுகின்றன.
இப்பொழுது நம்முன்னுள்ள பிரச்சினை, இந்த உண்மைகளை நாம் எப்படி முன்கொண்டு செல்லப்போகிறோம்? அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியாக இதை எப்படி மாற்றப்போகிறோம்? இரண்டாவது, இந்தக் கேள்விகளுக்கான பதிலை எப்படிக் காணப்போகிறோம்? இதற்கு ஏனைய தரப்புகளை எப்படி ஒருங்கிணைக்கலாம்? அதற்கான பொறிமுறைகள், செயற்பாட்டுத்திட்டங்கள் என்ன?
போர் முடிந்து விட்டது. ஆட்சிகள்பல மாறி விட்டன. காலம் நீண்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டன. தீர்வுக்கான பரிந்துரைகள் பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டன. பல்வேறு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. ஆனாலும் துயரும் பிரச்சினைகளும் முடியவில்லை.
போர் முடிந்தால் நாட்டின் பிரச்சினைகள் எல்லாம் தீரும் என்றே பெரும்பாலான மக்களும் நம்பினார்கள். அல்லது அப்படி நம்ப வைக்கப்பட்டனர். குறிப்பாக தென்பகுதி மக்களின் நம்பிக்கை அதுவாகவே இருந்தது.
ஆனால், போர் முடிந்த பிறகும் பிரச்சினைகள் தீரவில்லை. எல்லாமே கொதிநிலையில்தான் உள்ளன. குண்டுகளும் துப்பாக்கிகளும் வெடிக்கவில்லை. கொலை மற்றும் உயிர் பற்றிய அச்சம் குறைந்துள்ளதே தவிர, இதற்கு அப்பால் வேறெதுவும் நடக்கவில்லை. பொருளாதார நெருக்கடி தணியவே இல்லை. அரசியற் பிணக்குகள் – அதிகாரப் போட்டிகள், அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன.
அப்படியென்றால், அடிப்படையில் பெருங்கோளாறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்? உண்மையும் அதுதான்.
இலங்கையை மீட்க வேண்டுமானால், இலங்கையை சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றால், அடிப்படைகளைச் சரியாக்க வேண்டும். அடிப்படைகள் பல வழிகளிலும் தகர்க்கப்பட்டுள்ளன. அதைச் சரிப்படுத்தாத வரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் – முன்னேற்றம் – தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை.
செம்மணிப் புதைகுழி உள்ளிட்ட விடயங்கள் அப்படிச் சீர்ப்படுத்த வேண்டியவற்றில் ஒன்று. இப்படி ஒவ்வொன்றாகச் சீர்ப்படுத்தினால்தான் நாட்டில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக நீதியுணர்ச்சி வலுத்து, நடைமுறையாக வேண்டும். அரசியலில் நீதியுணர்ச்சி என்பதற்கு ஏராளம் வியாக்கியானங்கள் உண்டு. அப்படி ஒன்று இல்லை என்ற கருத்தும் உண்டு. ஆனாலும் சட்டமும் நீதியும் மக்களின் நம்பிக்கையோடும் நாட்டின் நலனோடும் சம்மந்தப்பட்டது. அதை நோக்கிச் செல்ல வேண்டும் என்றே செம்மணி என்புக்கூடுகளும் வலியுறுத்துகின்றன.
ஆம், உயிரோடு உள்ளவர்கள் மட்டுமல்ல, இறந்தவர்களின் (கொல்லப்பட்டவர்களின்) எலும்புக்கூடுகளும் நீதியை – மாற்றத்தை – யே விரும்புகின்றன. அதுவே தேவை.
மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன்
நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை கொழுவி அந்த கம்பியில் குப்பைகளைக் கழுவி வைத்திருப்பார்கள். ஏனென்றால்,குப்பை அகற்றும் வண்டி உரிய நேரத்துக்கு வருமா வராதா என்ற சந்தேகம். அது வரத் தவறினால் நிலத்தில் வைக்கும் குப்பைகளை நாய்கள் குதறிவிடும். கட்டாக்காலி நாய்களை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதி.
இன்னொரு பகுதி குரு நகரில். “தாங்கள் தொழில் செய்யும் கடலிலேயே அப்பகுதி மக்கள் கழிவுகளை கொட்டுகிறார்கள்” என்று ஒரு மதகுரு தெரிவித்தார். அப்பகுதியில் சூழலில் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் சொன்னார் குருநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கடலில் இருந்து தொடங்கி குறிப்பிடத்தக்களவு தூரம் அவ்வாறு கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும் உட்பட அனைத்து விதமான கழிவுகளையும் காணக்கூடியதாக இருக்கும் என்று. சில சமயம் செத்த நாயை கொண்டு வந்து போடுகிறார்கள். சில சமயம் பழைய ஆடைகள் கடலில் மிதக்கும். இவற்றோடு வழமை போல பிளாஸ்டிக் கழிவுகளும் காணப்படும் என்று.
மேற்குறிப்பிட்ட மதகுரு சொன்னார், “கரையோரக் குடியிருப்புகளில் வீடுகளுக்கு முன்னாலும் நிலம் இல்லை பின்னாலும் நிலம் இல்லை. எனவே வீட்டுக் கழிவுகளை அவர்கள் எங்கே கொட்டுவது? சாப்பாட்டுக் கழிவுகளை வீட்டுக்குள் வைத்தால் சில நாட்களில் அவை புழுக்கத் தொடங்கி விடும். எனவே இந்த கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு பொருத்தமான வழிமுறை வேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு நாள் தான் கழிவு அகற்றும் வண்டி வரும் என்றால் ஏனைய நாட்களில் கழிவுகளை எங்கே கொட்டுவது? ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கழிவு வருந்தானே?” என்று.
ஒவ்வொரு நாளும் கழிவை அகற்றுவதற்கு போதிய வாகனங்கள் இல்லை என்று மாநகர சபை நிர்வாகம் கூறுகின்றது. மாநகர சபையில் மட்டுமல்ல இந்த பிரச்சினை உள்ள எல்லா உள்ளூராட்சி சபைகளிலும் அதுதான் நிலைமை. போதிய அளவு வாகனங்கள் இல்லை வளங்களும் இல்லை.
கழிவை முகாமை செய்வதற்கு போதிய அளவுக்கு பொருத்தமான வளங்கள் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கழிவை முகாமை செய்வது என்பது தனிய உள்ளூராட்சி சபையின் பொறுப்பு மட்டுமல்ல. அது மக்களுடைய பொறுப்பும் தான் என்று அண்மையில் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியிருந்தார்.
சுத்தமாக இருப்பது ஒர் ஒழுக்கம். தமது சூழலை சுத்தமாக வைத்திருப்பது என்பது ஒரு பொறுப்பு; ஒரு பண்பாடு. வட்டாரங்கள்தோறும் கழிவை சேகரிக்கும் மையங்களை உருவாக்க வளங்கள் இருக்கின்றதோ இல்லையோ அவ்வாறு உருவாக்கப்படும் மையங்களில் மக்கள் கழிவுகளை எவ்வாறு போடுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தொட்டிகளில் பக்குவமாகக் கழிவைக் கொண்டு போய்ப் போடுவது எத்தனை பேர்? பதிலாக வாகனத்தில் நின்றபடியே தொட்டியை நோக்கி அதை வீசுபவர்கள் எத்தனை பேர்? இதற்கு முன்பு அவ்வாறு கழிவு சேகரிக்கும் மையங்களை உருவாக்கிய பொழுது அந்தப் பகுதியையே குப்பையாக்கிவிட்டார்கள். யாழ்ப்பாணத்தில் முறையற்ற கழிவகற்றல் உயிர் பல்வகமைக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி கஜபதி.
இது ஒரு சமூகப் சமூகப் பொறுப்பு. தன் வீட்டுக்கு குப்பையை மற்றவரின் தலையில் கொட்டுவது.தான் சுத்தமாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படியும் அழுகி நாறட்டும் என்ற சிந்தனை. இந்த சுயநலம் இருக்கும்வரை ஒருவர் மற்றவரை நேசிக்க முடியாது. ஒரு சமூகமாகத்தானும் திரள முடியாது.
இதற்கு சட்டம் இயற்றி கமராவைப் பூட்டி எத்தனை நாட்களுக்கு கண்காணிப்பது? தண்டனைகளின் மூலம் மட்டும் சமூகப் பொறுப்பை, கழிவு முகாமைத்துவப் பண்பாட்டை உருவாக்க முடியுமா?
அண்மையில் பொது இடங்களில் வெற்றிலை துப்பியதற்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். பெரும்பாலான சந்தைகளில் மூலைகளில் வெற்றிலை துப்பல்களை பார்க்கலாம். அது மட்டுமல்ல வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே வாகனத்தின் சாரதி அல்லது பேருந்தில் பயணிப்பவர்கள் வெற்றிலையைத் துப்புவார்கள் அது காற்றில் பறந்து வந்து உங்களுடைய முகத்தில் படும். எச்சில் நெடி அன்றைய நாளையே அருவருப்பானதாக ஆகிவிடும்.
இங்கே இந்த இடத்தில், இலங்கைத் தீவின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு கிடைத்த ஒரு அனுபவத்தைக் குறிப்பிட வேண்டும். பிரேமதாச ஊரில் அதிகம் பிரபல்யமாகாத ஒருவராக இருந்த காலத்தில் தன்னுடைய முதலாவது நேர்முகத் தேர்வுக்காக புதிய ஆடைகளை அணிந்து கொண்டு பேருந்தில் ஏறுவதற்கு மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கிறார். அங்கே நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் இருந்த ஒருவர் தன் வெற்றிலை எச்சிலை வெளியே துப்பியிருக்கிறார். அது பிரமதாசாவின் முகத்திலும் தலையிலும் சட்டை முழுவதிலும் பட்டிருக்கிறது. திகைத்துப்போன பிரேமதாச துக்கத்தோடு தாயாரிடம் திரும்பி ஓடி வந்திருக்கிறார். தாயார் மகனைத் தேற்றி நம்பிக்கையூட்டியிருக்கிறார். நீ முழுகிவிட்டு வா நான் இருப்பவற்றில் நல்ல உடுப்பை அயர்ன் பண்ணித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். தாய் கொடுத்த உற்சாகத்தோடு வேறு ஓர் உடுப்பை அணிந்து கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போன பிரேமதாச அங்கே நூலக உதவியாளராக தெரிவு செய்யப்படுகிறார். அங்கிருந்துதான் அவருடைய அரசியல் வாழ்வு தொடங்குகிறது.
பேருந்தில் பயணம் செய்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னலுக்கு வெளியே துப்புகிறார்கள். மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துப்பிவிட்டுப் போகிறார்கள். அது காற்றில் பறந்து வந்து பின்னால் வருகிறவரின் முகத்தில் துர் நெடியோடு படியும். எவ்வளவு அருவருப்பு? அது இப்பொழுது தண்டனைக்குரிய குற்றம். தன் குப்பையை மற்றவர்களின் தலையில் கொட்டுவதும் குற்றம்.
தண்டனைகளால் மட்டும் அவ்வாறான சமூகப்பொறுப்பை பண்பாட்டை உருவாக்க முடியுமா? திருநெல்வேலி சந்தைக்குள் காறித் துப்பும் ஒருவர் தன் வீட்டுக்குள் அதைச் செய்ய மாட்டார். ஏனென்றால் அது அவருடைய சொந்த வீடு. தான் சுத்தமாக இருந்து கொண்டு மற்றவர்கள் வாழும் சூழலை அசுத்தமாக்குவது ஒரு நாகரிகம் அடைந்த மக்கள் கூட்டம் செய்கிற வேலையல்ல.
கழிவை அகற்றுவது என்பதற்கு பதிலாக கழிவை முகாமை செய்வது என்று சிந்திப்பதே பொருத்தமானது என்று சமூகச் செயற்பாட்டாளராகிய செல்வின் கூறினார். கழிவு முகாமைத்துவத்தை வளர்ச்சியடைந்த நாடுகள் லாபகரமான ஒரு தொழிலாக மாற்றி விட்டன. அங்கெல்லாம் கழிவு விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது; மீள சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகிறது.
எனவே கழிவு முகாமைத்துவத்தை எப்படி வணிகப் பண்புடையதாக மாற்றலாம் என்று சிந்திக்கலாம். அது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஆனால் அந்த கூட்டுப் பொறுப்பை மக்களுக்கு உணர்த்துவது யார்? உள்ளூர்த் தலைவர்கள் உள்ளூர் முன்னுதாரணங்களாக மாறினால்தான் அவ்வாறு கூட்டுப் பொறுப்பைக் கட்டியெழுப்பலாம். உள்ளூர்த் தலைவர்கள் முதலில் பிரதேச சபைக்குள் தமது கூட்டுப் பொறுப்பை நிரூபிக்க வேண்டும். குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்துக்குள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து முடிவெடுக்க வேண்டிய விடையங்களில் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் கூட்டுப் பொறுப்பை நிரூபிக்குமாக இருந்தால் மக்களிடமும் கூட்டுப்பொறுப்பை எதிர்பார்க்கலாம். குப்பை விடயத்தில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் கூட்டுப் பொறுப்பை எதிர்பார்க்கலாம். தலைவர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழி.
03 Aug, 2025 | 11:44 AM
![]()
ஆர்.ராம்
இந்திய எதிர்ப்புவாதத்துக்கு முன்னதாக ஜே.வி.பி. தமிழ் மக்களின் சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நிராகரித்துள்ளதோடு அதனை தொடர்ச்சியாகவும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பட்ட இராஜதந்திரியான கலாநிதி. தயான் ஜயத்திலக்க கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் பிற்போக்குத்தனமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதன்பின்னர் 1983ஜுலைக்குப் பின்னர் தெற்கு நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய ஒன்றோடொன்று இணைந்த ஆனால் வேறுபடுத்தக்கூடிய இரண்டு அரசியல் நிகழ்வுகள் இருந்தன. ஆதிலொன்று தமிழ் கேள்விக்கான அரசியல் தீர்வுக்கான கவன மாற்றம் இரண்டாவது இந்தியாவின் வளர்ந்து வரும் வகிபாகமாகும்.
கறுப்பு ஜுலை தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு தேவை என்பதை வெளிப்படுத்தியது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கில் அரை தன்னாட்சி அதிகார சுய-நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டதாக 1957இல் பண்டாரநாயக்க மற்றும் செல்வநாயகம் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
1983நிகழ்வுகளுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஜே.வி.பி. எந்தப் பக்கத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர 1983 மற்றும் 1984 இல் தனது தலைமறைவுக் காலத்தில் கட்சியின் மத்திய குழுவில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார், அது 1985 இல் தமிழீழப் போராட்டத்திற்கு என்ன தீர்வு என்ற தலைப்பில் 350பக்கங்களைக் கொண்ட புத்தகமாக இரகசியமாக வெளியிடப்பட்டது.
அதில் அவர் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான கேள்விக்கு ஒரு தீர்வாக எந்தவொரு சுயாட்சி முறைமையையோ அல்லது அதிகாரப்பகிர்வையோ ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அவ்விதமான கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்து எதிர்த்திருந்தார். அவரது வெளிப்படையான நிராகரிப்பில் அவரது கட்சி 1981இல் போட்டியிட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகளைக்கூட உள்ளடக்கப்பட்டிருந்தது.
ஜே.வி.பி.யின் அதிகாரப் பகிர்வுக்கு எதிரான நிலைப்பாடு இந்திய இராணுவத் தலையீட்டிற்கு எதிர்வினையாக ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு முன்னரேயே இருந்தது. ஜுலை கலவரத்துக்குப் பின்னர் ஜி பார்த்தசாரதி தலைமையிலான தூதுக்குழு விஜயத்துடன் இந்திய இராஜதந்திர வகிபாகம் ஆரம்பித்திருந்தாலும் ஜே.வி.பி. அதற்கு முன்னராகவே தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் இந்திய தலையீட்டையும் ஜே.வி.பி எதிர்த்தது.
ஜே.வி.பி.இடதுசாரித்து சிந்தனைகளைக் கொண்டது என்ற அடிப்படையில் சமஷ்டியை ஏற்காது விட்டாலும் சீன மற்றும் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வெளிப்படையான ஒற்றையாட்சி அரசின் கீழ் இன-பிராந்திய சுயாட்சியை ஏற்றிருந்தன. ஆனால் ஜே.வி.பி.அதற்கு கூட தயாரக இல்லை. இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக, தமிழ்த் தேசியப் பிரச்சினை சம்பந்தமாக விஜேவீர 1985இல் வெளியிட்ட புத்தகத்தில் வெளிப்படுத்தி நிலைப்பாடுகளில் இருந்து தற்போது வரையில் அக்கட்சி மாறவில்லை.
அக்கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வாகவோ அல்லது தற்காலிகமான தீர்வாகவோ அல்லது பகுதியளவிலான தீர்வாகவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்-பிராந்திய சுயாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய பிரச்சினையை ஒரு தனித்துவமான அரசியல் கோரிக்கையாகக்கூட அங்கீகரிக்கவில்லை. லெனினின் கோட்பாட்டில் பார்க்கின்றபோது ஜே.வி.பியானது சொல்லில் சோசலிசத்தைக் கொண்டிருந்தாலும் செயலில் பெருமிதத்தையே (இனவாதத்தையே)கொண்டிருக்கின்றது என்ற வரையறைக்குள்யே காணப்படுகின்றது.
விசேடமாக அரைச்சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களைக் கூட அங்கீகரிப்பதற்கு முன்வராது விட்டாலும் கூட, 13ஆவது திருத்தச்சட்டத்தினைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் முடக்கப்பட்டு 68ஆண்டுகள், ஜூலை கலவரம் நிகழ்ந்து 42 ஆண்டுகளாகின்றன, மாகாண சபைகளுக்கு முதன்முதலாக தேர்தல் நடைபெற்று பிறகு 35 ஆண்டுகளாகின்றன, வடக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட தேர்தல் முடிவiடைந்து 12ஆண்டுகளாகின்றன. ஆனால் தற்போதும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து மௌனமாக உள்ளார்.
தமிழ் தேசியப் பிரச்சினை குறித்த அரசியல் உரையாடல், தற்போது 1957க்கு முந்தைய காலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசியல் வெற்றிடம், தமிழ் புலம்பெயர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க புதிய இனப்படுகொலைக்கு நீதி கோரும் தலைமுறைக்கு எதிராக அநுர அரசை அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் பாதுகாப்பற்றதாக விட்டுவிடும். அரசுக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகள் மற்றும் முதலமைச்சர்களைக் கொண்டுள்ளோம் என்று பகிரங்கமாக கூறுவதற்கு முடியாது விட்டால் தெற்கில் சிங்கள பெரும்பான்மை இனப்படுகொலை'என்ற விடயத்தினைப் பயன்படுத்தி அதிதீவிர தேசியவாதத்துடன் பதிலளிக்கும் நிலைமையே உருவாகும். இது இனங்களுக்கு இடையிலான துருவமயமாக்கலை மேலும் அதிகரிக்கும். இந்த விடயம் சம்பந்தமாக ஜே.வி.பிக்கு கவலைகள் காணப்படவில்லை என்பது வெளிப்படையான விடயமாகும்.
ஜே.ஆர்.ஜயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய ஜனாதிபதிகளின் கீழாக மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. உலகளாவிய இடதுசாரி-தாராளவாதிகளின் வெறுப்பின் சின்னமாக இருந்த மஹிந்த கூட தனது முதல் மற்றும் இரண்டாவது பதவிக்காலங்களில் இரண்டு தடவைகள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் போலியான முற்போக்கு நிர்வாகம், மற்றும் அதனை ஆதரிக்கும் பிரதான ஜனநாயகக் கட்சிகளும் தலைவர்களும் 1980களில் நிகழ்ந்தேறிய துன்பத்தின் முக்கிய முற்போக்கான கட்டமைப்பு விளைவான தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளை, மௌனமான புறக்கணிப்பால் அகற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழர்களுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை, அவர்கள் திரண்ட மக்களாக வாழும் அருகருகே உள்ள பகுதிகளை இணைக்க முடியாதவாறு ஜே.வி.பி பறித்துவிட்டது. அத்தகைய ஜே.வி.பியினர் தற்போது என்.பி.பிஆக இருந்தாலும் மகாண சபைகளுக்கான தேர்தல் விடயத்தில் எதிர்-சீர்திருத்தவாதிகளாகவே காண்பிப்பதோடு, ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை விட மிகவும் பிற்போக்குத்தனமானவர்களதக உள்ளது என்றார்.

தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன்.
செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது.
ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்வத்தை தூண்டி வருகின்றன. குறிப்பாக முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான நடவடிக்கையானது பொறுப்புக் கூறத் தொடர்பில் அரசாங்கம் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றது என்பதைக் காட்டுகின்றன. பகிரங்க சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்பதும் இந்த உள்நோக்கத்தை கொண்டதுதான்.
செம்மணியில் அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்ற ஒரு பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டியெழுப்புவதன் மூலம் உள்நாட்டு நிதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது என்ற தனது நிலைப்பாட்டை கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக தெரிவித்த பின் அரசாங்கம் அதிகம் உற்சாகமடைந்திருப்பதாகத் தெரிகிறது.
கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் அரசாங்கத்தின் ஓர் அலகு போல செயல்படுகின்றது என்ற பொருள்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விமர்சித்து வரும் ஒரு பின்னணிக்குள், அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் முடிவுகளை தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய விதத்தில் அரசாங்கம் திட்டமிட்டு உழைக்கின்றது என்பதைத்தான் செம்மணி விசாரணைகளில் அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் நமக்கு உணர்த்துகின்றது.
இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு என்ன செய்யப் போகின்றது? முதலாவதாக செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண்பதற்கும் அந்த விடயத்தில் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உதவக்கூடிய விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு;தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உண்டு; தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கு உண்டு.
நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் உரிய முறைப்படி திரட்டி,உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்கூடாக முன்னெடுப்பதுதான்.
இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் குடிமக்கள் அமைப்புகளிடமும் நீண்ட கால அடிப்படையிலான பரந்தகன்ற,வேலைத் திட்டம் ஏதாவது உண்டா? குறிப்பாக ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவதற்கும் அப்பால் பரிகார நீதியை நோக்கி நிலைமைகளை புத்திசாலித்தனமாக நகர்த்தக்கூடிய வழி வரைபடம் ஏதாவது உண்டா ?
இந்த விடயத்தில் முன்கை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டியது பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான்.2015 இலிருந்து 2018 வரையிலும் அக்கட்சி நிலைமாறு கால நீதியின் பங்காளியாக செயற்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் நிலைமாறு கால நீதியை நிராகரித்து பரிகார நீதியைக் கோரினார்கள்.
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதை சட்டத்துறை சார்ந்த வார்த்தைகளில் சொன்னால் நிலை மாறு கால நீதிக்கானது. தமிழரசுக் கட்சி காலகட்டத்தில் நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயல்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஐநாவோடும் இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்து செயல்பட்டார்கள்.
நிலைமாறு கால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிசோதனை செய்தோம். அந்தப் பரிசோதனை தோற்றுப் போய்விட்டது “என்று சுமந்திரன் சொன்னார். அவர் இதைச் சொன்னது வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில். அந்த சந்திப்பு முக்கியமானது. 2021 ஆம் ஆண்டு மன்னாரைச் சேர்ந்த சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு அது. ஜெனிவாக கூட்டத் தொடரை முன்னிட்டு ஐநாவுக்குக் கொடுக்க கடிதம் ஒன்றை ஏழுதுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது சந்திப்பு அது. சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். அந்த சந்திப்பில்தான் சுமந்திரன் மேற்கண்டவாறு சொன்னார்.அந்த சந்திப்பின் பின் நிகழ்ந்த மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்,சென் திரேசாள் மண்டபத்தில் இடம் பெற்றது.அதில்தான் ஒரு கூட்டுக் கடிதம் இறுதி செய்யப்பட்டது.
வவுனியாவில் சுமந்திரன் சொன்னதை இன்னொரு விதமாகச் சொன்னால் இலங்கை தீவில் நிலை மாறுகால நீதியை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் அதாவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் ஐநா தோற்றுப் போய்விட்டது என்றும் சொல்லலாம்.
2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்காளிகள்.ஆட்சி மாதத்தைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் கூடாது தொடர் செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. அப்பொழுது உருவாக்கப்பட்ட ரணில் மைத்திரி அரசாங்கமானது ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியதுதான் நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானம் ஆகும். அதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட எல்லா தீர்மானங்களிலும் அப்போது இருந்த இலங்கை அரசாங்கங்கள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அரசாங்கம் ஐநா தீர்மானங்களுக்கு எதிராக விவாக்களித்தது.ஏன் அதிகம் போவான்? புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகிய விகித ஹேரத் கடந்த ஐநா கூட்டத்தொடரில் பேசும் பொழுது ஐநா தீர்மானங்களுக்கு எதிராகவும் அனைத்துலக பொதுமுறைக்கு எதிராகவுமே பேசியிருக்கிறார்.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஏற்கனவே ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும் ஆகப்பிந்திய அனுபவங்களின் பின்னணியில்,ஒரு புதிய அரசாங்கம் கொழும்பில் ஆட்சி செய்யும் ஒரு பின்னணியில்,கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது.
அக்கட்சியானது சிவில் சமூகத்தோடு இணைந்து ஒரு கடிதத்தைத் தயாரித்து அந்த வரைபை தமிழரசுக் கட்சிக்கும் அனுப்பியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சி கூடியது. முடிவில் கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று சுமந்திரன் அறிவித்திருக்கிறார்.
எனினும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் நிகழ்வு ஒன்றில் சுமந்திரன் கஜேந்திரகுமார் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அச்சந்திப்பில் சுமந்திரனுக்கும் கஜனுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு தகவல்.கடிதம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் முடிவை சுமந்திரன் அறிவித்திருக்கும் ஒரு பின்னணியில் அந்தச் சந்திப்பு இனி நடக்குமா இல்லையா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் கட்சியின் பதில் தலைவர், பொதுச் செயலாளருக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று சிவஞானமும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்களிடமிருந்து கழட்டி எடுத்து கடிதத்தில் அவர்களுடைய கையெழுத்தை வாங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதற்குள் மறைந்திருக்கிறது.
இந்தக் கூட்டுக் கடித விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழரசுக் கட்சியினர் மத்தியில் உண்டு.கடிதத்தின் பிரதிகள் தனித்தனியாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டமையை மேற்சொன்ன சந்தேகத்துக்கு ஊடாகத்தான் தமிழரசுக் கட்சி பார்க்கின்றது என்று தெரிகிறது.
எனவே ஐநாவுக்கு அனுப்பப்படப் போகும் கூட்டுக் கடிதம் மெய்யான பொருளில் ஒரு பலமான கடிதமாக அமைவதற்கான வாய்ப்புகள் இனிமேல்தான் உருவாக வேண்டும். தமிழரசுக் கட்சியின் கூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் அக்கடிதத்தில் தமிழ்த் தேசியப் பேரவைச் சேர்ந்த கட்சிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மட்டும்தான் கையெழுத்திடுவார்கள் போல் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்று சொன்னால் அந்த கூட்டுக் கடிதத்துக்கு அங்கீகாரம் குறைவாகவே இருக்கும்.
இந்த விடயத்தில் கூட்டுக் கடிதத்தின் அங்கீகாரத்தைக் கூட்டுவதா? அல்லது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதா? என்ற இரண்டு தெரிவுகளில் எதனை தமிழ்த் தேசிய பேரவை எடுக்கப் போகிறது ?

கட்டுரை தகவல்
ரஞ்சன் அருண் பிரசாத்
பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணபட்டு வருகின்ற நிலையில், அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இம்மாதம் 03ம் மற்றும் 04ம் தேதிகளில் அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த ஸ்கேன் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக, குறித்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
''இந்த இடத்தை ஸ்கேன் செய்வதற்காக முறைக்கு செல்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்ட வகையில் பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட அனுமதிக்கு, கருவியை பயன்படுத்த அனுமதிக்காத சந்தர்ப்பத்தினால், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் வருகின்ற திங்கட்கிழமை அதே வகையான ஸ்கேன் கருவியை கொண்டு இந்த பிரதேசம் ஸ்கேன் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.'' என ரனிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.
சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி

யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 118 எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இதுவரை 105 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஏனைய மனித எலும்பு கூடுகளை அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் அவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதேவேளை, குறித்த பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குழந்தைகளில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் கண்டெடுக்கப்பட்ட வருகின்றன.
புதைகுழிகளில் புத்தகப்பை

அண்மையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, பெரிய நபரொருவரின் எலும்புக்கூடொன்றை, சிறிய குழந்தையொன்றின் எலும்புக்கூடு கண்டி அரவணைத்த படியான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
''ஒரு பெரிய மனித எலும்புத் தொகுதியோடு, ஒரு சிறிய குழந்தையினுடைய மனித எலும்புத் தொகுதி அரவணைக்கப்பட்ட விதத்தில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சுத்தப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. '' என அவர் குறிப்பிடுகின்றார்.
குறித்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களுடையது என சந்தேகிக்கப்படும் பால் போத்தல், புத்தக பை, பொம்மைகள், பாதணி, ஆடைகள் உள்ளிட்ட பொருட்களையும் அகழ்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
குறிப்பாக போர் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா அண்மையில் பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர் வெளியிட்டிருந்தார்.
எனினும், இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
சம்பூர் மனிதப் புதைக்குழி - மயான பூமிக்கான ஆதாரம் இல்லை

திருகோணமலை - சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியானது, ஒரு மயான பூமி என்ற கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் கிடையாது என தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் உரிமையாளர்கள் உயிரிழந்தமைக்கான காரணங்களை கண்டறிவதற்கான காரணத்தை கண்டறிய மேலும் ஆழமான ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டும் என சட்ட மருத்துவ அதிகாரி, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
திருகோணமலை - சம்பூர் கடற்கரை அருகில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரித்தானியாவை தளமாக கொண்ட நிறுவனத்தினால் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த விடயம் நீதிமன்ற விசாரணைகளுக்கு சென்றிருந்தது.
இந்த நிலையில், குறித்த மனித எச்சங்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதவான், சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சட்ட மருத்துவ அதிகாரி கடந்த 30ம் தேதி இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்துள்ளார்.
மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மனித புதைக்குழி இருந்ததா அல்லுது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியா என்பது தொடர்பில் துல்லியமாக உறுதிப்படுத்துவதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு நடத்தப்படுமா?
இந்த மனித எலும்பு எச்சங்கள் மிக நீண்ட காலத்திற்கு உட்பட்டவையாக இருக்கலாம் என திருகோணமலை சட்ட மருத்துவ அதிகாரி, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மனித எச்சங்கள் தொடர்பான சரியான தகவல்களை அறிவிந்துக்கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்திற்கு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 6ம் தேதி நீதிமன்றம் விசாரணைகளை நடாத்தவுள்ளது.
1990ம் ஆண்டு இலங்கை ராணுவத்தினால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியை அண்மித்த பகுதியில் இருந்தே இந்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கையில் ஏற்கனவே 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகள் கண்டுபி;டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சில மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் சரியாக 35 வருடங்களாகின்றன. அன்றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனை நினைவு கூரும் முகமாக காத்தான்குடியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்குமிடையிலான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகளின் உச்சபட்சமே இந்த பள்ளிவாசல் படுகொலையாகும். கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அன்று புலிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதன் காரணமாக காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் படுகொலை, அளிஞ்சிப்பொத்தானை படுகொலை, குருக்கள்மடம் கடத்தலும் படுகொலையும், பல்வேறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள், அவ்வப்போதான ஆட்கடத்தல்கள், கல்விமான்களை இலக்கு வைத்த படுகொலைகள் என அக் காலப்பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர். இவ்வாறான வன்முறைகளால் சுமார் 7000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை முஸ்லிம்கள் இழந்துள்ளனர். இதன் காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தில் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மிக நெருக்கமாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது பல்வேறு சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்த நாட்டை பிரிவினையிலிருந்தும் பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பாரிய விலையைக் கொடுத்துள்ளனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து எவ்வாறு விரட்டப்பட்டதன் மூலம் தமது வாழ்வையே தொலைத்தார்களோ அதேபோன்று கிழக்கு முஸ்லிம்களும் மேற்குறிப்பிட்ட வன்முறைகளால் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இருப்பினும் இவற்றுக்கு இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தவித நஷ்டயீடுகளையோ நீதியையோ அவர்கள் பெறவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
கடந்த காலங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம்களைத் தனித்தரப்பாக அங்கீகரிக்குமாறும் இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குமாறும் கோரிக்கைவிடுத்தும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்லிம்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றுக்கு எவரும் உரிய பதிலளிப்பதாகத் தெரியவில்லை.
முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட கடந்த காலங்களில் கிழக்கு முஸ்லிம்களின் அவலங்களை வைத்தே அரசியல் செய்து அதிகாரங்களுக்கு வந்தனர். முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் இந்த இழப்புகளை சந்தைப்படுத்தியும் அவற்றுக்கு தீர்வு தருவதாகவும் கூறியே அரசியல் செய்தன. இன்றும் செய்து வருகின்றன. எனினும் மக்களுக்கு எந்தவித நீதியும் கிடைத்ததாக இல்லை.
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது தோண்டப்பட்டுக் கொண்டிருக்கும் செம்மணியில் சுமார் 100 வரையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. அதேபோன்றுதான் கிழக்கில் குருக்கள்மடம் பகுதியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடங்களும் தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. யுத்த காலத்தில் இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற அநீதிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் இதுவரை போதுமான கவனம் உள்நாட்டிலோ அல்லது சர்வதேச நீதிப் பொறிமுறைகளிலோ செலுத்தப்படவில்லை. எதிர்வரும் காலங்களிலாவது இதற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறைகள் நிறுவப்பட வேண்டும். யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அப்பாவி மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli
Published By: RAJEEBAN
01 AUG, 2025 | 04:01 PM
![]()
ஜூலை மாத நடுப்பகுதியில் பொதுமக்களை போராளிகளுடன் வித்தியாசப்படுத்தி பார்க்காத காசாவின் சுகாதார அமைச்சு யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் பெயர்களையும் வயதினையும் வெளியிட்டது.
காசாவின் சுகாதார அமைச்சின் பட்டியல் மாத்திரமே கொல்லப்பட்டவர்கள் குறித்த உத்தியோகபூர்வமான ஆவணம்.

மிக நீண்ட இந்த ஆவணத்தில் சிறுவர்களின் பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. 900க்கும் அதிகமானவர்கள் தங்கள் முதலாவது பிறந்த நாளிற்கு முன்னர் கொல்லப்பட்டவர்கள்.
இஸ்ரேல் பொதுமக்களின் உயிரிழப்பினை குறைக்க முயல்வதாக தெரிவிக்கின்றது.
ஹமாசின் உறுப்பினர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் செயற்படுகின்றனர் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது, மருத்துவமனைகள், வீடுகள், பாடசாலைகள் இடம்பெயர்ந்தவர்களிற்கான முகாம்களை இலக்குவைப்பதை நியாப்படுத்துவதற்கு இஸ்ரேல் கூறும் காரணம்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹமாசின் பிரசன்னத்தை காரணம் காட்டி பொதுமக்களை பெருமளவில் கொல்லும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் தெரிவிக்கின்றன.
ஒக்டோர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட பயங்கரமான தாக்குதலை நான் மீண்டும்மீண்டும் கண்டித்துவந்துள்ளேன் என தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆனால் மிகப்பெருமளவு உயிரிழப்புகளையும் அழிவையும் எவற்றாலும் நியாயப்படுத்த முடியாது,சமீபகாலத்தில் நாங்கள் சந்தித்த எதனையும் விட இழப்புகள் அளவில் மிகப்பெரியவை என அவர் தெரிவித்துள்ளார்.
சிலர் உறக்கத்தில் படுக்கையில் கொல்லப்பட்டார்கள், சிலர் விளையாடிக்கொண்டிருந்தவேளை கொல்லப்பட்டார்கள்.பலர் தாங்கள் நடைபழகுவதற்கு முன்னரே புதைக்கப்பட்டார்கள்.
உலகிலேயே சிறுவர்களிற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா என ஐக்கியநாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவிக்கின்றது.
யுத்தத்தின் போது பாலஸ்தீன சிறுவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருவருக்கும் அதிகம் என்ற அளவில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு வகுப்பில் நிறைந்திருக்கும் மாணவர்கள் இரண்டு வருடங்களாக ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதை நினைத்து பாருங்கள் என யுனிசெவ்வின் நிறைவேற்று இயக்குநர் கதரின் ரசல் இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தெரிவித்தார்.

சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து கேட்டவேளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாங்கள் சிறுவர்களையும் போரில் நேரடி தொடர்பற்றவர்களையும் இலக்குவைக்கவில்லை என தெரிவித்தது.பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கின்றோம்,சர்வதேச சட்டங்களை பின்பற்றியே இஸ்ரேலிய இராணுவம் செயற்படுகின்றது என அவர்கள் தெரிவித்தனர்.
போரின்; போது கொல்லப்பட்டவர்களின் பட்டியை தயாரிப்பதற்கு காசாவின் சுகாதார அமைச்சு மருத்துவமனை மற்றும் பிரேத அறை தகவல்களை பயன்படுத்துகின்றது.கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகங்களின் தகவல்களை ஆராய்ந்து அவற்றையும் சேர்த்துக்கொள்கின்றது.காசாவின் மருத்துவ கட்டமைப்பு முற்றாக சிதைந்துபோயுள்ளதால் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்களை பெறுவது மிகவும் கடினமான விடயம்.
ஒவ்வொரு மரணத்தையும் பதிவு செய்வது சாத்தியமற்றது என்றாலும் காசாவின் சுகாதார அமைச்சு வழமைக்கு மாறான உயர்தர உடனடி இறப்பு பதிவினை மேற்கொள்கின்றது என லண்டன் பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் மைக்கல் ஸ்பகட் தெரிவிக்கின்றார்.
இவர் ஆயுதமோதல்களின் உயிரிழப்புகளை பதிவு செய்யும் சர்வதேச அமைப்பின் உறுப்பினராக உள்ளார்.
காசாவின் சுகாதார அமைச்சு உயிரிழப்புகள் பதிவினை மிகவும் கவனமாகவும் கடுமையான விதத்திலும் முன்னெடுக்க முயல்கின்றது என அவர் தெரிவிக்கின்றார்.
காசாவின் சுகாதார அமைச்சு ஜூலை 15ம் திகதி வெளியிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த வோசிங்டன் போஸ்ட் அவற்றை வயதின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தியது.
மொவீன் சுகைல்பருக்கு ஆறு வயது அவன் எதிர்காலத்தில் யுத்தத்தில் காயமடைந்த சிறுவர்களிற்கு சிகிச்சை வழங்கும் சிறுவர்கள் நல மருத்துவராக வரவிரும்பினான்.ஆடம்பர கார்களை வைத்திருக்கும் வர்த்தகராகவும் வர ஆசைப்பட்டான், உறவினர்களை பொறுத்தவரை அவன் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் சிந்தனையும் உடைய ஒருவன்.

நவம்பர் 2023 இல் தொடர்மாடியொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் இவன் கொல்லப்பட்டான், அந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் என அந்த சிறுவனின் உறவினரான அட்காம் சுகேபெர் தெரிவித்தார்.
அவன் தனது காதுகளை மூடிக்கொண்டே தனது இறுதி மூச்சை விட்டான் என நான் நினைக்கின்றேன் ஏன் என்றால் விமானங்களின் சத்தத்தை கேட்கும் ஒவ்வொரு தடவையும் அவன் அவ்வாறே செய்வான் என சுகேபெர் தெரிவித்தார்.
மேலும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையையே முற்றாக மாற்றியுள்ள காயங்களை சந்தித்துள்ளனர்.

காசாவில் பல மருத்துசேவையில் தொண்டராக ஈடுபட்ட அமெரிக்காவை சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் சமெர் அட்டெர் தான் அடையாளம் காணமுடியாதபடிகருகிய சிறுவர்களின் உடல்களை பார்த்துள்ளதாக தெரிவிக்கின்றார். ஏனையவர்கள் அங்கங்களை இழந்துள்ளனா அல்லது தலையில் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர் என தெரிவித்த அவர் 'இந்த காயங்கள் உடல்ரீதியாக செயல் இழக்கச்செய்பவை, உணர்வுரீதியாக பெரும் அச்சத்தை ஏற்படுத்துபவவை" என தெரிவித்தார்.
ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பத்தில் காசா நகரத்தில் உள்ள மருத்துமவனையில் தாக்குதலொன்றின் பின்னர் பெருமளவு நோயாளர்கள் தரையில் காணப்படுவதை பார்த்ததை நினைவுகூர்ந்தார் அத்தார், அந்த மருத்துவமனையில் நோயாளர்களிற்கான படுக்கை வசதிகள் முற்றாக தீர்ந்துவிட்டன. 30 வயது நோயாளியின் வாய் மூக்குதுவாரத்திலிருந்து குருதி வெளியேறிக்கொண்டிருந்ததையும் அவர் தனது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்ததையும் பார்த்தாக குறிப்பிட்ட அத்தார்,ஒரு சிறுவனி மண்டையோடு பிளந்திருந்தது வயிற்றிலும் பெரும் காயங்கள்,அந்த சிறுவனிற்கு அருகிலிருந்த அவனது இரண்டு சகோதாரர்கள் சிறுவனை காப்பாற்றுமாறு மன்றாடிக்கொண்டிருந்தார்கள், நான் அவர்களில் ஒருவரின் கரத்தை இறந்துகொண்டிருந்த சிறுவனின் கரங்களில் எடுத்துவைத்தேன் மற்றைய சிறுவனின் கரத்தினை அந்த சிறுவனின் நெஞ்சில் எடுத்துவைத்துவிட்டு மன்னிக்கவேண்டும் அவன் இறக்கப்போகின்றான் அவனது உயிர் பிரியும் வரை இங்கே இருங்கள் என தெரிவித்தேன் என நினைவுகூர்ந்த அத்தார் தான் காயப்பட்ட மற்றைய நோயாளியை பார்க்க சென்றதாக குறிப்பிட்டார்.
ஜூலை 13ம் திகதி மத்திய காசாவில் குடிநீரை சேகரிப்பதற்காக நின்றிருந்தவர்கள் மீது இஸ்ரேல் வான்தாக்குதலை மேற்கொண்டது, பத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் அனேகமானவர்கள் சிறுவர்கள்.
இந்த தாக்குதலுக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்த இஸ்ரேலிய இராணுவம் வெடிபொருள் இலக்கிலிருந்து சற்று தொலைவில் விழுந்தது என குறிப்பிட்டது.
தாகத்துடன் நீர் எடுக்கப்போன சிறுவர்கள் உயிரற்ற சடலங்களாக தங்கள் வீடுகளிற்கு திரும்பினார்கள் என அந்த பகுதியில் வசிக்கும் சம்பவத்தை நேரில் பார்த்த ரமடான் நசார் தெரிவித்தார்.
தமிழில் - ரஜீவன்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES
படக்குறிப்பு, எக்ஸ்-பிரஸ் கப்பல் விபத்துக்குப் பிறகு கொழும்பு கடற்கரையில் பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) மற்றும் பிற குப்பைகளை அகற்ற இலங்கை கடற்படை வீரர்கள் பணியாற்றினர். புகைப்படம்: மே 2021
கட்டுரை தகவல்
எழுதியவர், லியானா ஹோசியா & சரோஜ் பதிரானா
நீர்கொழும்பு, இலங்கை
28 ஜூலை 2025
நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒரு சரக்குக் கப்பல் விபத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய பிளாஸ்டிக் கசிவுக்கு பிறகு, இன்னும் இலங்கை கடற்கரைகளின் மணலில் இருந்து நச்சுத் தன்மை கொண்ட சிறிய பிளாஸ்டிக் உருண்டைகளை (நர்டுல்ஸ்-nurdles) தன்னார்வலர்கள் பிரித்தெடுத்து வருகிறார்கள்.
2021 ஆம் ஆண்டு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்), டன் கணக்கில் எரிபொருள், அமிலம், காஸ்டிக் சோடா, ஈயம், செப்புக் கழிவு, லித்தியம் பேட்டரிகள், எபோக்சி பிசின் ஆகியவை கடலுக்குள் சிதறியதாகக் கருதப்படுகிறது. இவை அனைத்தும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானவை.
அந்த விபத்தினால் ஏற்பட்ட சேதம் உடனடியாகத் தெரிந்தது. பிளாஸ்டிக் துகள்கள் கடற்கரையை வெண்மையாக மாற்றின. இறந்த ஆமைகள், டால்பின்கள், மீன்கள் கரையோரத்தில் ஒதுங்கத் தொடங்கின.
ஆனால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு முன்பு நினைத்ததைவிட, மிக நீண்ட காலம் நீடிக்கலாம் என விஞ்ஞானிகள் தற்போது எச்சரிக்கின்றனர்.
அதிகரிக்கும் நச்சுத்தன்மை
இதுவரை கோடிக்கணக்கான பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) அகற்றப்பட்டிருக்கலாம். ஆனால், மணலில் ஆழமாக மறைந்திருக்கும் பயறு அளவிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களைக் கண்டுபிடிப்பது இப்போது மிகவும் கடினமாக உள்ளது.
மோசமான விஷயம் என்னவென்றால், இந்த பிளாஸ்டிக் துகள்கள் இன்னும் அதிக நச்சுத்தன்மையுடையதாக மாறுவதாக புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
"அவை கடலின் மாசுபாட்டை உறிஞ்சும் ஒரு பெரிய ரசாயன ஸ்பாஞ் போல இருக்கின்றன," என்று மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் டேவிட் மெக்சன் கூறுகிறார்.
நர்டில்கள் என்பது பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க உருக்கப்படும் மூலப்பொருட்கள். உலகளாவிய பிளாஸ்டிக் விநியோகத்தில் இவற்றைப் பெரிய அளவில் கொண்டு செல்வது, வழக்கமான ஒன்று தான்.
துபாய் துறைமுகத்திலிருந்து மலேசியாவின் போர்ட் கிளாங்கிற்குப் பயணிக்கும்போது, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரிக் அமிலம் கொண்ட ஒரு கொள்கலன் கசிந்து உலோகப் பெட்டியை அரிப்பதாக குழுவினர் கண்டனர்.
ஆனால், புகையை வெளியிடுகின்ற , கசியும் கொள்கலனை நிறுத்த கத்தார் மற்றும் இந்திய துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.
2021ம் ஆண்டு,மே 19ம் தேதி இரவு , அக்கப்பல் இலங்கை கடற்பரப்பில் நுழையும்போது, அதில் உள்ள கொள்கலன் எட்டு நாட்களாக மணிக்கு ஒரு லிட்டர் வீதம் அமிலம் கசிந்து கொண்டிருந்தது.
பின்னர் அக்கப்பல் அவசரமாக துறைமுகத்தில் நிறுத்தப்பட அனுமதி கோரியது, ஆனால் காலையில் சிங்கப்பூர் கொடியுடைய அந்தக் கப்பல் தீப்பிடித்தது.
அந்தக் கப்பலின் குழுவினர், இலங்கை அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்களின் தீயணைப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், தீ முழுக் கப்பலுக்கும் பரவியது.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு கப்பல் மூழ்கியது.
அதன் சரக்குகள் மற்றும் எரிபொருள், இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து, ஒன்பது கடல் மைல் தொலைவில், தலைநகர் கொழும்புக்கும் வடக்கே நீர்கொழும்புக்கும் இடையில் கடலில் சிந்தியது.

படக்குறிப்பு, இலங்கையின் கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்ட சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்களை முதித கட்டுவாலா காட்டுகிறார்.
"போர் திரைப்படத்தைப் போல இருந்தது"
"அடுத்து நடந்தது ஒரு போர் திரைப்படத்தைப் போல இருந்தது," என்று சுற்றுச்சூழல் ஆர்வலரும், பேர்ல் ப்ரொடெக்டர்ஸ் என்ற உள்ளூர் அரசு சாரா அமைப்பின் நிறுவனருமான முதித கட்டுவாலா கூறினார்.
இந்த அமைப்பு, இலங்கை அரசு அதிகாரிகள் நடத்திய, கப்பல் உரிமையாளர்களின் நிதியுதவியுடன் இயங்கிய துப்புரவுப் பணியில் தன்னார்வமாக பங்கேற்றது.
"அதே மாதிரியான பாதிப்புகளுடன் ஆமைகள் கரையோரத்தில் ஒதுங்கத் தொடங்கின. அவற்றின் தோலில் இருந்த தீக்காயங்கள் உரிந்து கொண்டிருந்தது. அவற்றின் மூக்கும் கண்களும் சிவந்து வீங்கி இருந்தன. டால்பின்களும் கரை ஒதுங்கின. அவற்றின் தோலும் சிவந்து உரிந்து இருந்ததை நாங்கள் பார்த்தோம்" என்றார் முதித கட்டுவாலா.
கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் , "பனி போல" இருந்தன. "அதைப் பார்க்கவே பயமாக இருந்தது," என்றும் அவர் கூறினார்.
அதனை சுத்தம் செய்யும் பணி தீவிரமாகத் தொடங்கியது. தொடக்கத்தில், கட்டுவாலாவும் அவரது சக தன்னார்வலர்களும் சேர்ந்து, ஒவ்வொரு நாளும் "300–400 கிலோ நுண்துகள்களை" சேகரித்தனர்.
காலப்போக்கில், துப்புரவுப் பணியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் உருண்டைகளின் (நர்டுல்ஸ்) அளவு இரண்டு மணி நேரத்தில் 3-4 கிலோவாகக் குறைந்தது.
"பிளாஸ்டிக் உருண்டைகள் சிதறிக் கொண்டிருந்தன. மணலில் புதைந்து போனதால் அவற்றைப் பார்ப்பதே கடினமாக இருந்தது," என்று அவர் குறிப்பிடுகிறார்.
தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது இனி பயனளிக்காது என முடிவு செய்யப்பட்டது. எனவே, அவர்களின் பணி நிறுத்தப்பட்டு, அரசு ஏற்பாடு செய்த உள்ளூர் துப்புரவுக் குழுக்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அதே நேரத்தில், பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) விலங்குகளுக்கு ஏற்கனவே தீங்கு விளைவிப்பதோடு, கசிவு அல்லது வேறு மாசு மூலங்களால் இன்னும் அதிகமான நச்சுத்தன்மை பெற்று மாசடைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர்.
அடுத்த சில ஆண்டுகளில், அவர்கள் மாதிரிகளைச் சேகரித்து, காலப்போக்கில் ஏற்படும் தாக்கங்களைக் கண்டறிய முயன்றனர்.

படக்குறிப்பு, தீயில் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் உருண்டைகள் தான் மிகவும் அதிகமாக மாசுபட்டவை என்று தடயவியல் வேதியியலாளர்கள் கூறுகின்றனர்.
பிபிசி நடத்திய புலனாய்வு
2024 நவம்பரில், பிபிசி மற்றும் வாட்டர்ஷெட் புலனாய்வுகள் 20க்கும் மேற்பட்ட மாதிரிகளை மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் வேதியியலாளர்கள் குழுவிற்கு அனுப்பின.
தீயில் எரிந்த பிளாஸ்டிக் உருண்டைகள் மிகவும் மாசுபட்டிருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். அவை ஆர்சனிக், ஈயம், காட்மியம், தாமிரம், கோபால்ட், நிக்கல் போன்ற நச்சுத்தன்மையுள்ள உலோகங்களை வெளியிடுகின்றன. இவை நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானவை.
"இன்னும் சுற்றி வரும் துகள்கள் சுற்றுச்சூழலில் இருந்து மாசுபாட்டை உறிஞ்சி, மேலும் நச்சுத்தன்மையுடையதாக மாறுகின்றன" என்றும், "அவற்றை கடல்வாழ் உயிரினங்கள் உட்கொள்ளும் போது, மாசுபாட்டை அவற்றுக்குள் பரப்பும்"என்றும் மெக்சன் கூறுகிறார்.
பேரழிவை ஏற்படுத்திய கப்பல் விபத்து நடந்த இடம் மற்றும் அதற்கு அருகிலுள்ள நீர்கொழும்பு தடாகத்தில் பிடிக்கப்பட்ட மீன்களில், கப்பலின் சரக்குகளிலும், பிளாஸ்டிக் உருண்டைகளிலும் இருந்த அதே மாசுபாடுகள் கண்டறியப்பட்டன.
அதேபோல் அந்த விபத்தின் போது கண்டுபிடிக்கப்பட்ட அபாயகரமான உலோகங்கள் சிலவும் மீன்களில் காணப்பட்டன. அவை பாதுகாப்பான வரம்பை மீறியிருந்தன.
இந்தப் பேரழிவு மாசுபாட்டின் மூலமாக இருக்கலாம்.
ஆனால் அதை நேரடியாக உறுதிப்படுத்த முடியாது. ஏனென்றால், மீன்கள் பிளாஸ்டிக் உருண்டைகளை உண்டனவா, எத்தனை உருண்டைகளை உண்டன, அல்லது மாசுபாடு வேறு மூலங்களில் இருந்து வந்ததா என்பது தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"ஆனால் அந்த கடல் சூழலில் ஏற்கனவே உள்ள மாசுபாட்டுடன் சேரும்போது, இது சுற்றுச்சூழலுக்கும், அந்த கடலில் வாழும் உயிரினங்களை உணவுக்கான ஆதாரமாக நம்பியிருக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று மெக்சன் கூறுகிறார்.
உள்ளூர் மீனவர்கள் கூறுவது என்ன?
உள்ளூர் மீனவர்கள் இந்த பேரழிவிற்கும், மீன்களின் எண்ணிக்கை குறைவதற்கும் தொடர்பு உள்ளது என்று நம்புகிறார்கள்.
"எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து இங்கு வரைக்கும், புதிய இளம் மீன்கள் கிடைப்பதே இல்லை," என்று மீனவர் ஜூட் சுலந்தா கூறுகிறார்.
ஆனால், கடலில் மூழ்கிய கப்பல் மற்றும் குப்பைகளை அகற்ற 130 மில்லியன் டாலருக்கும் மேல் செலவிட்டோம் என கப்பலின் உரிமையாளரான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் லிமிடெட் கூறுகிறது.
மேலும் கடற்கரையில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காகவும், மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கு 20 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளதாகவும் அது கூறுகிறது.
கரையோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுள்ளது என்றும், அந்த செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.
ஆனால், பிரிட்டன் கடல்சார் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால் வரம்பிடப்பட்ட, கப்பல் உரிமையாளர் செலுத்திய தொகை நீண்டகால சேதத்தை ஈடுசெய்யப் போதாது.
எனவே, அந்த வரம்பை நீக்கவும், இன்னும் அதிகமான இழப்பீடு பெறவும் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
கடந்த வியாழக்கிழமையன்று , இலங்கை உச்ச நீதிமன்றம், பேரழிவால் நாடு அனுபவித்த நீண்டகால பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களுக்கு ஆரம்பகால இழப்பீடாக 1 பில்லியன் டாலர்களை நிறுவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவுக்கு வரம்பு உள்ளது. ஏனெனில், எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் உள்ள சிங்கப்பூர் மீது உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.
மறுபுறம், இந்தத் தீர்ப்பால் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கையை மதிப்பிடுவதற்காக தங்கள் சட்ட ஆலோசகர்கள், காப்பீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் அதை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தெரிவித்துள்ளது.
கப்பல் நிறுவனம் கூறுவது என்ன?
வனவிலங்குகளின் இழப்பு, சுற்றுலா, மீன்பிடித்தல் மற்றும் கப்பல் எரிந்தபோது வெளியான நச்சுப் புகையால் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தப் பேரழிவின் மதிப்பு 6 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று சேதத்தை மதிப்பிடுவதற்கான விஞ்ஞானிகள் குழுவிற்குத் தலைமை தாங்கிய ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிரசாந்தி குணீர்தேனா கூறுகிறார்.
"வளிமண்டலத்தில் டையாக்ஸின் மற்றும் ஃபுரான்" என்ற புற்றுநோய் உண்டாக்கும் நச்சுப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. "இவை சுமார் 70 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்" என்கிறார் பேராசிரியர் குணீர்தேனா.
ஆனால் கப்பல் நிறுவனம் இந்த மதிப்பீட்டை நிராகரிக்கிறது.
கடலில் ஏற்பட்ட கசிவுகளை மதிப்பீடு செய்யும், கப்பல் துறையால் நிதியளிக்கப்படும் அமைப்பான சர்வதேச டேங்கர் உரிமையாளர்கள் மாசுபாடு கூட்டமைப்பை (ITOPF) இந்த விவகாரத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு, "இந்த அறிக்கை தெளிவாக இல்லை, அதில் சரியான தகவல்களும் இல்லை. நம்பத்தகுந்த அறிவியல் ஆதாரமின்றி உள்ளது" என தெரிவித்துள்ளது.
தானும், அதன் குழுவினரும் "அமில கசிவை கையாள்வதில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியதாகவும், அதே நேரத்தில் அனைத்து பாதுகாப்பு மற்றும் அவசரகால நெறிமுறைகளையும் பின்பற்றியதாகவும்" கப்பல் உரிமையாளர் கூறியுள்ளார்.
மறுபுறம், கப்பல் தங்கள் கடற்பரப்பை வந்தடையும் வரை, அதன் பிரச்னைகள் குறித்து தெரியாது எனவும், தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை எனவும் கொழும்பு துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

படக்குறிப்பு, பல உள்ளூர் மீனவர்கள் இப்போது தங்கள் படகுகளை விற்று வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சிப்பதாக ஜூட் சுலந்தா கூறுகிறார்.
இலங்கை எனும் தீவு தேசத்தின் உயிர்நாடியாக இருப்பது கடல்.
அதன் அழகிய தங்க நிறக் கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றன, மேலும் பல தலைமுறைகளாக மீன்பிடித் தொழில் அந்நாட்டிற்கு உணவளித்து வருகிறது.
ஆனால், தனது தொழிலுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று கவலைப்படுகிறார் மீனவர் சுலந்தா.
"பலர் தங்கள் படகுகளை விற்று வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார்கள். பலர் சோர்வடைந்துவிட்டனர். உண்மையில், என் மகன் தான் தற்போது என்னுடன் வேலை செய்கிறார். அவனும் ஒரு மீனவர்"என்று கூறும் சுலந்தா,
"ஆனால் அவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பல வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும் என்றால், இந்நேரம் கிடைத்திருக்கும்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மறையாத ஜூலைக் கலவர வடு
லக்ஸ்மன்
இலங்கையில் இனப் படுகொலைக்கான ஏதுக்கள் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது முதல் காணப்பட்டிருந்ததாகக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
அதற்கான ஆதாரங்களாக சுதந்திரத்துக்குப் பின்னர் நடைபெற்ற 1956 கலவரம், 1983 கறுப்பு ஜூலைக் கலவரம், தொடர்ச்சியாக நடைபெற்ற யுத்த கால வன்முறைகள், படுகொலைகள் மற்றும் வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள் போன்ற ஆதாரங்கள் பட்டியலிடப்படுகின்றன.
தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனப்படுகொலையின் வரலாற்றுப் பூர்வ சாட்சிகள் காணப்பட்டாலும் அவற்றினை எந்தவித பொறுப்புக்கூறலுமின்றி, கடந்து செல்கின்ற நிலைப்பாட்டினையே இலங்கை நாட்டின் அரசாங்கங்கள் கொண்டிருக்கின்றன.
இதில் மாற்றத்தினை ஏற்படுத்திவிடலாம் என்று தமிழர் தரப்பு மேற்கொள்ளாத முயற்சியில்லை எனும் அளவிற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், ஆயுத யுத்தம் ஓய்ந்து 16 வருடங்களாகியும் அதற்கான வாய்ப்புக்கள் எதுவும் கனிந்ததாக இல்லை.
இதற்கு புதிதாக அமைந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்கானதல்ல என்பதே காலம் உணர்த்தும் உண்மை.
1983 ஜூலையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற இராணுவத்தினர் மீதான தாக்குதலையடுத்து கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் ஆரம்பித்து நாடு பூராகவும் பரவி பெரும் கொடுமையை நடத்திமுடித்த கலவரமானது வெறுமனே கடந்து போகக்கூடிய ஒன்றல்ல.
அத்துடன், இந்தக் கலவரமானது தன்னிச்சையாக ஏற்பட்ட ஒரு கலவரம் அல்ல, மாறாக சிங்களப் பேரினவாத, அரசின் ஊக்குவிப்புடனேயே இனவெறியால் தூண்டப்பட்ட ஒரு இனப்படுகொலையாகவே பார்க்கவேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருந்தாலும் இதுவரையில் ஜூலைப் படுகொலைக்கான சரியானதொரு நீதி கிடைக்காமை என்பது கவலையானது எனலாம்.
1983 ஜூலை 24 அன்று, அரசு படைகளின் ஆதரவுடன் சிங்களக் கும்பல்கள் தமிழ் மக்களுக்கு எதிராகத் தீவிரமான தீ வைத்தல், சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் கொலை சொத்துக்களைச் சேதப்படுத்தல், கொள்ளையிடுதல் ஆகியவற்றைத் தொடங்கின.
அது ஒரு வார காலமும் தொடர்ந்தது. இக் கலவரத்தில், 3,000க்கும் அதிகமான தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்துக்கும் அத்கமானவர்கள் வீடுகளை இழந்தனர்.
53 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டனர். அம்னஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மேலும் பல மனித உரிமை அமைப்புகள் இக் கலவரம் தொடர்பான ஆவணப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளன.
அத்துடன், வெளிநாட்டு ஊடகங்களின் நிருபர்களின் புகைப்படங்கள் மற்றும் நேரடி ஒளிப்பதிவுகள் பல இதற்கான ஆதாரங்களாக உள்ளன.
யூலைக் கலவரக் காலத்தில், அரசுப் படைகள் கலவரத்தினை நடத்திய கும்பல்களை வழிநடத்தின.
டெய்லி நியூஸ் போன்ற சிங்கள செய்தித்தாள்கள் தமிழர்களுக்கு எதிரான தூண்டுதலான பிரச்சாரத்தை மேற்கொண்டன. பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள தேசியவாத அமைப்புகள் கலவரங்களில் தீவிர பங்கு வகித்தன
என்பவையெல்லாம் குற்றச்சாட்டுக்களாக இருக்கின்றன. இருந்தாலும் அதற்கான தண்டனையளிப்புகள், விசாரணைகள் போன்ற பலனைத் தரவில்லை என்பதே உண்மையாகும்.
இந்தக் கலவரமானது முழு தமிழ் மக்களையும் பயமுறுத்தவும் அழிக்கவும் என மேற்கொள்ளப்பட்ட 42 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இருந்தாலும், அதன் பிறகும், கறுப்பு ஜூலையின் வலி தமிழ் மக்களுடைய மனங்களிலிருந்து நீங்காதிருப்பதானது அக் கலவரத்தின் கொடூரத்தையே காட்டிநிற்கிறது.
இக் கலவரம் குறித்து கருத்துப் பகர்கின்ற ஆய்வாளர்கள் இது வரலாற்றின் ஒரு இருண்ட அத்தியாயம் மட்டுமல்ல - இது முறையான அநீதிக்கு ஒரு உயிரோட்டமான சான்று மற்றும் நீடித்த பொறுப்புக்கூறலைக் கோரும் ஒரு அழைப்பு என்று குறிப்பிடுகின்றனர்.
கலவரங்களும், படுகொலைகளும் இனப்படுகொலையினை அடிப்படையாகக் கொண்டவை என்ற அடிப்படையில், 1948இல் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல், இலங்கை அரசு சட்டரீதியான மற்றும் கட்டமைப்பு ஒடுக்குமுறை மூலம் தமிழர்களை இலக்காக்கத் தொடங்கியது
என்று பலரும் கருத்துப் பகர்வதுண்டு. இதற்கான அரசியல் நடவடிக்கை 1948ல் உருவாக்கப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டம் மூலமாக இந்தியத் தமிழர்களின் குடியுரிமையை பறித்ததில் இருந்து தொடங்கியது.
அதேநேரம், 1956, சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு சிங்களத்தை ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இலங்கை அரசு அறிவித்தது. அத்துடன், 1972 குடியரசு யாப்பில் பௌத்தம் இலங்கை அரசாங்கத்தின் பிரதான மதமாக அறிவிக்கப்பட்டது. இவற்றினை அரசியலமைப்பு ரீதியான செயற்பாடுகளாகச் சொல்லலாம்.
அதே நேரத்தில், தமிழர்களுக்கு எதிரான வன்முறை, கலவரங்கள் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை 1977 தொடக்கம் 1983 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக சிந்திக்கத் தூண்டியது என்றே கூறலாம். அத்துடன் தமிழர்களை அடக்குவதற்கென்றே கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் குற்ப்பிடப்பட வேண்டும்.
சுதந்திர இலங்கையின் தொடக்க காலம் அகிம்சைப் போராட்டமாக இருந்த போதிலும், இவ்வாறான கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாகத் தமிழர்கள் அமைதியான ஜனநாயகப் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். அவை அரசினதும் பேரினவாதிகளாலும் வன்முறைகளால் நசுக்கப்பட்டன. அதுவே ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது எனலாம்.
பேரினவாதத் தரப்பின் வன்முறைகள் காரணமாகவும், ஒடுக்குமுறைகள் காரணமாகவும், நெருக்குதல்கள் காரணமாகவும் படிப்படியாகத் தமிழ் மக்களின் உளவியலில் ஏற்பட்ட மாற்றம் அவர்களையும் வன்முறைகளில் ஈடுபடத் தூண்டியதன் வெளிப்பாடு கொடுமைகளையே கொண்டுவந்தது.
ஆனால் தீர்வின்றியே அப்பயணம் தொடர்கிறது என்பது மாத்திரம் கவலைக்குரியது. இவ்வளவையும் கடந்த பின்னரும் அமைதியான சர்வதேசத்தின் பதில் இவற்றின் மீதான செயலற்ற தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றன. அரசாங்கத்தின் சமாளிப்புகளையும் இராஜதந்திரத்தையும் நம்புகின்ற நிலைமை மோசமானதாகும்.
மிக மோசமான இனக் கலவரம், இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் நடந்து முடிந்து தமிழ் மக்கள் நீதியைக் கோருகின்ற போது ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகம் போன்றவை இந்த இனப்படுகொலைகளைக் குற்றங்களாக அங்கீகரிக்கத் தவறி வருவது ஒரு உரிமை மீறலாகவே பார்க்கப்படவேண்டும்.
இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் காலங்கடத்தல்களையும், தட்டிக்கழித்தல்களையும் நம்பி ஏமாறுவது சர்வதேச நீதி சார் அமைப்புக்களுக்கு ஏற்றதா என்பது இந்த இடத்தில் கேள்விதான்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது முதல் திம்பு பேச்சுமூலம் உள்ளே நுழைந்த இந்தியா, மாகாண சபை முறைமையை ஏற்படுத்தியதைத் தவிர, தமிழர்களைப் பாதுகாக்க எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்போது குற்றச்சாட்டாக வரத் தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், இப்போது தமிழ் அரசியல் தரப்பினர் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதில் எந்தப் பயனுமில்லை என்பதே வெளிப்படை.
அந்தவகையில்தான், தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை அழிக்க இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகளால் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் தமிழர்களை ஒரு ஒருமிப்புக்கு கொண்டுவந்திருந்தது. வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் முன்னெப்போதையும் விட அதிக எண்ணிக்கையில் ஒன்றுபட்டிருந்தனர்.
ஆனால், இப்போதும் அது தொடரவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு.இப்போதும் தமிழர் தங்களுடைய உரிமைகளை அடைந்து கொள்வதற்காக அரசுக்கெதிரான போராட்டங்கள், கவனஈர்ப்புகள், சர்வதேச எதிர்ப்புப் போராட்டங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் என நடத்திக் கொண்டே காலங்கடத்துவதைத் தவிர வேறில்லை என்றாகிப் போயிருக்கிறது.
தமிழ்த் தேசிய உணர்வு வலிமையானது, உறுதியானது மற்றும் உலகளவில் இணைக்கப்பட்டது என்றெல்லாம் பிரச்சாரப்படுத்திக் கொண்டு அநீதிக்கெதிரான போராட்டத்தைத் தொடர்கிறோம் என்று கொக்கரிப்பதில் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது என்ற கவலையே பலருக்குத் தொற்றியிருக்கிறது.
கறுப்பு ஜூலை ஒரு நினைவை மட்டும் மீட்டுக் கொண்டு முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவுபடுத்திக் கொண்டு, படுகொலை நாட்களை நினைவுகூர்ந்து கொண்டு நகர்வதால் எத்தனை தலைமுறைகளைத் தமிழர்கள் அழித்துவிடப் போகிறார்களா என்பதுதான் இன்னமும் கேள்வியாக இருக்கிறது.
இருந்தாலும், தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைக்கான அங்கீகாரம் மற்றும் நீதிக்கான கோரிக்கைக்கான தீர்ப்பு நான்கு தசாப்தங்களுக்குப் பிறகும், வெறும் கோரிக்கைகளாகத்தான் இருந்து வருகின்றன என்றால் இது யாருடைய தவறு என்று ஆராய வேண்டும். இந்த ஆராய்தலைத் தமிழர்கள் செய்தல் வேண்டும்.
ஆனால், கறுப்பு ஜூலை இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட, கண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழர்கள் ஜூலை கலவரத்தின் வடுவையேனும் மறப்பார்களா என்பதுதான் நிலைமை.
https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மறையாத-ஜூலைக்-கலவர-வடு/91-361918
Published By: DIGITAL DESK 2
27 JUL, 2025 | 12:41 PM
![]()
(லியோ நிரோஷ தர்ஷன்)
தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், இங்கு ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் அவசியத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அவற்றால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை விவரித்த அவர், உலகளாவிய மோதல்கள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளின் தாக்கம் குறித்து குறிப்பிட்டார்.
தாய்வானில் போர் ஏற்பட்டால் அது இந்தியப் பெருங்கடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதிக்கான பிராந்தியம் என்பதை புவிசார் அரசியல் போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும், இங்கு ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது என்றார்.
மேலும், சமீபத்திய ஈரானிய-இஸ்ரேலிய மோதலைக் குறிப்பிட்ட அவர், எமது பிராந்தியத்திற்குள் ஊடுறுவி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. எந்தவொரு நாடும் அணுசக்தி ஆயுதங்களை வைத்திருப்பதோ அல்லது கையாள்வதோ ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.
அணு ஆயுதப் பரவல் தடுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் இறுதிக் கட்டத்தில் உள்ளதா என்ற கேள்விக்கு, 'அவ்வாறானதொரு நிலையில் ஈரான் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே ஈரான் மீது தீர்மானத்தை எடுத்தது யார்?' எனக் கேள்வி எழுப்பினார்.
இது, சர்வதேச சட்டங்களுக்கு புறம்பான அல்லது ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டையும், பிராந்திய இறைமை குறித்த அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கொள்கையினால் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள் எதிர்கொள்ளும் வர்த்தகச் சவால்களையும் ரணில் விக்கிரமசிங்க அடிகோடிட்டு காட்டினார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கொள்கையினால் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட வேண்டிய சூழலில் உள்ளன.
இது, இலங்கையும் அமெரிக்காவுடன் வரிக் குறைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமானதாகும். வர்த்தகத் தடைகள் பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்பதையும், புதிய வர்த்தகக் கூட்டணிகளை உருவாக்குவதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது.
ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கருத்துக்கள், உலகளாவிய மோதல்கள், அணு ஆயுதப் பரவல் மற்றும் சர்வதேச வர்த்தகக் கொள்கைகள் ஆகியவை இலங்கை போன்ற சிறிய நாடுகளின் உள்நாட்டு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த இலங்கையின் வெளிப்படையான கவலைகளை பிரதிபலிக்கின்றன.
இந்தியப் பெருங்கடல் ஒரு அமைதி மண்டலமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவரது வலியுறுத்தல், இலங்கையின் நீண்டகால வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் உள்ளது.
மீண்டும் ஐநாவுக்கு ஒரு கடிதம்? - நிலாந்தன்
கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் எடுத்திருந்தார். குறிப்பாக கருத்துருவாக்கிகளை அழைக்கும் பொழுது அவர் அனைத்துலகை விசாரணைப் பொறிமுறை தொடர்பாகக் கதைக்கப் போகின்றோம் வாருங்கள் என்று அழைத்திருந்தார். அதோடு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாகவும் கதைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
எண்பதுக்கும் குறையாதவர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த்தேசியப் பேரவையைச்சேர்ந்த கட்சித்தலைவர்கள்,பிரமுகர்கள், குடிமக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காப் போராடும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், அணையா விளக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தவர்கள்,மத குருக்கள்…என்றிவ்வாறாக பலதரப்பட்டவர்களும் அங்கே வந்திருந்தார்கள். முதலில் கஜேந்திரக்குமார் பேசினார். தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்கள் பேசினார்கள்.
ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமார் அந்தக் கூட்டத்தின் நோக்கம் ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவது என்று சொன்னார். வரும் செப்டம்பர் மாதம் வர இருக்கும் கூட்டத்தொடரை முன்னிட்டு ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும். அந்தக் கடிதம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட கடிதத்தின் தொடர்ச்சியாகவும், அந்தக்கடிதத்தில் ஏற்கனவே கூறப்பட்டவற்றை வலியுறுத்தியும் எழுதப்பட வேண்டும் என்று கஜேந்திரகுமார் கூறினார்.அவரைத் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி குருபரனும் அதே கருத்தைக்கூறி அந்த நோக்கத்துக்காகத்தான் அந்த சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது என்று கூறினார்.ஆனால் அழைக்கப்பட்ட ஒரு பகுதியினருக்கு அது பொதுவாக சர்வதேசப் பொறிமுறையைக் குறித்து ஆராய்வதற்கு என்றுதான் கூறப்பட்டது. ஜெனிவாவுக்கு கடிதம் எழுதுவதற்காக என்று தெளிவாகக் கூறப்படவில்லை.
அதனால் அந்தச் சந்திப்பில் சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான பரந்துபட்ட வேலைத்திட்டம் தொடர்பாக ஆழமாக உரையாடப்படவில்லை. இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட சுரேஷ் பிரேமச்சந்திரன்,சிறீகாந்தா, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர்.. போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும் அப்பால் சந்திப்பு பெருமளவுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்போகும் கடிதத்தை நோக்கியே குவி மையப்படுத்தப்பட்டது.
இந்த இடத்தில் அதற்கு முன் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதத்தைப்பற்றிச் சுருக்கமாகக் கூறவேண்டும். அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் வேலையை முதலில் தொடங்கியது மன்னாரைச் சேர்ந்த சிவகரன்.அதன்பின் அவர் இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட வேறு சிலரையும் அதற்குள் ஈர்த்துக் கொண்டார். முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது.இரண்டாவது சந்திப்பு வவுனியாவில். மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்.இந்த மூன்றாவது சந்திப்பின் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்தக்கூட்டுக் கடிதத்தில் பிரதான அம்சங்கள் இரண்டு.ஒன்று,பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பது.அதாவது இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கான அந்தப் பொறிமுறையை ஐநா மனித உரிமைகள் பேரவை என்ற மட்டுப்படுத்தப்பட்ட ஆணையைக் கொண்ட ஒரு கட்டமைப்புக்குள் வைத்துக் கொண்டிருக்காமல் ஐநா பொதுச் செயலர் பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவையிடமிருந்து தன்னிடம் எடுத்துக்கொண்டு,அதனை பன்னாட்டு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை.
இரண்டாவது கோரிக்கை,போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு பொறிமுறையை உருவாக்குமிடத்து அதற்கு கால வரையறை இருக்க வேண்டும் என்பது. அதன்படி கஜேந்திரக்குமார் 6 மாத காலம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.ஆனால் ஏனைய கட்சிகள் குறைந்தது ஒரு வருடமாவது வழங்கவேண்டும் என்று கேட்டன. முடிவில் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து கூட்டுக்கடிதம் எழுதப்பட்டது. 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து அவ்வாறு உலக நிறுவனம் ஒன்றுக்கு ஒற்றுமையாக ஒரு கூட்டுக்கடிதம் எழுதியமை என்பது அதுதான் முதல் தடவை.
ஆனால் அந்த கடிதத்திற்கு ஐநா பெருமளவுக்கு சாதகமாக பதில் வினையாற்றவில்லை.பொறுப்புக்கூறலை அவர்கள் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கியதோடு, சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பும் மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு உட்பட்டதாக, அணையாளருடைய அலுவலகத்துக்குள் இயங்கும் ஓர் அலுவலகமாக உருவாக்கப்பட்டது. அதற்குரிய கால எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை. இன்றுவரை அது செயல்படுகிறது.
அதாவது அந்த கடிதத்தில் முன் வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் ஐநாவானது தமிழ் மக்கள் திருப்திப்படத்தக்க விதத்தில் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் இந்த செப்டம்பர் மாதம் வரவிருக்கும் ஐநா கூட்டத் தொடருக்கு முன்னதாக தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதே டில்கோ சந்திப்பின் நோக்கம் என்று கூறப்பட்டது.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போயிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் கொழும்பில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு உடன்படாதவைகளாகக் காணப்படும் ஒரு பின்னணியில், கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் தெரிவிக்கும் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டத் தவறியிருக்கும் ஒரு பின்னணியில்,இலங்கை அரசாங்கமானது சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக கஜேந்திரகுமார் அந்தச் சந்திப்பில் தெரிவித்தார்.
அந்தக் கட்டமைப்பானது நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையின் நம்பகத்தன்மையைப் பலப்படுத்தும் நோக்கத்தை கொண்டது.இது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உள்நோக்கத்தை கொண்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களமானது அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருப்பதனால் அதன் சுயாதீனப் பண்பு குறித்து கேள்விகள் உண்டு.எனவே உத்தேச சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சுயாதீனமானது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்,அதுபோன்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை பலப்படுத்தும் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தவேண்டும் என்றும் கஜேந்திரக்குமார் கேட்டுக்கொண்டார்.
சந்திப்புக்குத் தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்டிருந்த போதிலும் அது வந்திருக்கவில்லை. அண்மையில் அக்கட்சியின் பதில் தலைவர் சிவஞானம், ஐநாவுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.எனினும் சில நாட்களின் பின் சிவஞானம் நடத்திய ஊடகச் சந்திப்பில்,தமது கட்சி அனுப்பிய கடிதம் உள்நாட்டுப் பொறிமுறையைக் கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஐநாவுக்கு கடிதம் எழுதவேண்டும்.அதில் சந்தேகம் இல்லை.தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை பேசுவதற்கு திறக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கம் அதுதான்.அது பலவீனமானது.காஸாவில் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலைத் தடுக்க முடியாத ஐநா தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுத்தரும் என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம்.
எனினும், தமிழ் மக்கள் ஐநாவுடன்தான் ”என்கேஜ்” பண்ணவேண்டும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், ஐநா பொறுப்புக்கூறலை அனைத்துலகை நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஒரு கடிதத்தைக் கூட்டாக எழுதுவதால் மட்டும் அது நடக்கப் போவதில்லை என்பதைத்தான் கடந்த நான்கு ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.
டில்கோ சந்திப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மா ஒருவர் தெரிவித்ததுபோல தமிழ் மக்கள் ஐநாவில் முடிவுகளை எடுக்கும் நாடுகளை நோக்கி லொபி செய்ய வேண்டும். ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக்கொள்ள வேண்டும்.அவ்வாறு அனைத்துல சமூகத்தைத் தம்மை நோக்கித் திரட்டிக் கொள்வது என்றால், அதற்கு முதல் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். இது டில்கோ சந்திப்பில் இக்கட்டுரை ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டது.ஆனால் அத்தகைய பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் அச்சந்திப்பில் பெரிய அளவுக்கு விவாதிக்கப்படவில்லை.அவை ஒரு சந்திப்பில் மட்டும் கூடி முடிவெடுக்கக்கூடிய விடையங்கள் அல்ல.
முன்னைய கடிதத்தின் தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த் தரப்பு தாயகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு உழைத்திராத ஒரு பின்னணிக்குள்,ஐநா தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டா விதத்தில் விடயங்களை நகர்த்திக் கொண்டுவரும் ஒரு பின்னணியில், மீண்டும் ஒரு கடிதம் எழுதுவதை எப்படிப் பார்ப்பது?
அதிலும் குறிப்பாக அக்கடிதத்தில் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை என்றுசொன்னால் அந்த கடிதத்துக்கு ஒப்பீட்டளவில் பெரிய அங்கீகாரம் இருக்காது.தமிழரசுக் கட்சி அவ்வாறு ஒரு கூட்டுக்கடிதத்தில் கையெழுத்து போடக்கூடிய நிலைமைகள் இல்லை என்பதைத்தான் டில்கோ சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு சிவஞானம் கூறிய பதிலுக்கூடாக உணரக்கூடியதாக உள்ளது.ஆயின், தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்கிறது என்று பொருள். இவ்வாறு தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்பது என்பது தமிழ் மக்களைப் பிரித்துக் கையாள விரும்புகின்ற வெளிச் சக்திகளுக்கு வாய்ப்பானது.
ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து அனுப்பிய கடிதத்திற்கே ஐநாவின் பதில்வினை சாதகமாக இல்லாத ஒரு பின்னணிக்குள், மீண்டும் ஒரு கடிதத்துக்கு, அதிலும் உள்ளதில் பெரிய கட்சி கையெழுத்திடாத ஒரு கடிதத்துக்கு ஐநாவின் பதில்வினை எப்படியிருக்கும்?.
அதிலும் குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு நிகராக அரசாங்கத்துக்கும் ஏழு ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே தமிழ் மக்களின் விவகாரங்களைக் கையாள்வதற்குத் தனக்கும் ஆணை உண்டு என்று அரசாங்கம் கூறக்கூடிய நிலைமைகள் அதிகமுடைய அரசியல் மற்றும் ராஜீயச் சூழலில், தமிழ்த் தரப்பில் பிரதான,பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?
முதலாவது கடிதத்தின் பின் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டவற்றை நோக்கி அனைத்துலக சமூகத்தை உந்தித்தள்ளும் விதத்தில் தாயகத்தில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய நிர்ணயகரமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.அதன் விளைவாகவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கொழும்பில் வைத்து அரசாங்கத்துக்கு நோகாமல் கருத்துக் கூறிவிட்டுப் போயிருக்கிறார்.இந்நிலையில்,மீண்டும் ஒரு கடிதத்தை தமிழ்த் தரப்பு எழுதப் போகிறது. கடிதம் எழுத வேண்டும்.ஆனால் அதோடு மட்டும் நிற்கமுடியாது.அனைத்துலக சமூகத்தில் ஆதரவு சக்திகளைத் திரட்ட வேண்டும்.இதுதான் முன்னைய கடிதத்திற்குப் பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட பாடம்.

42 ஆண்டுகளாகக் கற்றுக்கொள்ளாத ஒரு தீவு – நிலாந்தன்.
முதலாவதாக 83 ஜூலை ஒர் இனக்கலவரம் அல்ல. இனக்கலவரம் என்றால் பரஸ்பரம் மோதிக்கொள்ள வேண்டும். அது இன அழிப்பு.நிராயுத பாணிகளாக இருந்த கொழும்பில் வசித்த தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட ஒரு தாக்குதல். அது திட்டமிடப்பட்டது என்பது முதலாவது. பின்னணியில் அரசு தரப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் இருந்தார்கள் என்பது இரண்டாவது. எனவே அது தன்னெழுச்சியாக தோன்றவில்லை. அதற்குப்பின் திட்டமிட்டு ஒரு தரப்பு உழைத்தது. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ஒர் உள்நோக்கம் அங்கே இருந்தது. அதோடு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி காரணமாக தூண்டப்பட்ட பொறாமையை தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. இவ்வாறு எல்லாக் காரணிகளும் இணைந்த பொழுது நன்கு திட்டமிட்டு, தேவையான தகவல்கள் திரட்டப்பட்டு, தேவையான ஆட்கள் திரட்டப்பட்டு,அரசாங்கத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கை அது.எனவே அதனை தன்னியியல்பான கலவரம் என்றெல்லாம் அழைக்க முடியாது. அது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு இன அழிப்புச் செயற்பாடு.
ஆனால் அந்தப் பழிவாங்கல் அல்லது இன அழிப்பு நடவடிக்கை நாட்டை எங்கே கொண்டு வந்து விட்டது ?
முதலாவதாக, நாடு வெளிச் சக்திகளுக்கு திறந்து விடப்பட்டது.முதலில் இந்தியா தலையிட்டது. இந்தியா ஒருபுறம் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளின் ஊடாக இலங்கைக்கு விசேஷ தூதுவர்களை அனுப்பியது. இன்னொருபுறம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பான உளவியலின் பின்னணியில் அங்கு ஏற்கனவே காணப்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகளை இந்தியா ஊக்குவித்தது. தமிழகத்தை ஈழப் போராட்டத்தின்பின் தளமாக திறந்துவிட்டது. அதன் விளைவாக ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சியும் ஏனைய வசதிகளும் அங்கு கிடைத்தன. அதனால் ஈழப் போராட்டம் திடீரென்று வீங்கியது. இங்கு வீக்கம் என்ற சொல் என்னுடையது அல்ல. அது ஏற்கனவே விமர்சகர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். 70களில் தொடங்கி 83 வரையிலும் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் படிப்படையாக மெல்ல மெல்ல வளர்ந்துவந்தது. ஆனால் 83 ஜூலைக்குப் பின் அந்த வளர்ச்சி இயல்பானதோ அல்லது படிப்படியானதோ அல்ல. அது அசாதாரணமான ஒரு வளர்ச்சி. அதனால்தான் அதனை வீக்கம் என்று அழைக்க வேண்டி இருக்கிறது. அந்த வீக்கத்தின் விளைவுதான் போராட்டத்தில் பின்னர் ஏற்பட்ட பல குழப்பங்களும் வீழ்ச்சிகளும் ஆகும்.
இவ்வாறு ஈழப் போராட்டத்தில் முதலாவது பிராந்தியத் தலையீடு ஏற்பட்டது 83 ஜூலையின் விளைவாகத்தான். அங்கிருந்து தொடங்கி கடந்த 42 ஆண்டுகளாக இலங்கைத் தீவு வெளியாருக்கு திறந்து விடப்பட்ட ஒரு தீவாகத்தான் காணப்படுகின்றது. முதலில் இனப்பிரச்சினை பிராந்தியமயப்பட்டது. அடுத்த கட்டமாக அது அனைத்துலக மயப்பட்டது. இப்பொழுது இனப்பிரச்சினை அனைத்துலக மயப்பட்ட ஒரு பிரச்சினை. இலங்கை அரசாங்கம் கடந்த 16 ஆண்டுகளாக ஐநாவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஓர் அரசுடைய தரப்பாக அதனை அவர்கள் சமாளிக்க முடிகிறது.உள்நாட்டுப் பொறி முறையை வலியுறுத்துவதன் மூலமும் ஐநா தீர்மானங்களை நிராகரிப்பதன் மூலமும் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினையை அனைத்துலக மய நீக்கம் செய்ய முற்படுகிறது.ஆனாலும் யதார்த்தத்தில் இனப்பிரச்சினை அனைத்துலக மயப்பட்டு விட்டது. இதை அதன் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் இலங்கை வெளிச் சக்திகளுக்கு திறந்து விடப்பட்டு விட்டது.
முதலில் அப்போது இருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தன மேற்கத்திய கூலிப்படைகளை நாட்டுக்குள் இறக்கினார். மேற்கத்திய ஆயுத தளபாடங்களை நாட்டுக்கு இறக்கினார். மேற்கத்திய ராணுவ ஆலோசகர்களை நாட்டிற்குள் இறக்கினார். அதேசமயம் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவை நோக்கிச் சென்றார்கள். ஐரோப்பாவெங்கும் படர்ந்து சென்றார்கள். முதலாம் கட்டமாக ஈழப் போர் பிராந்திய மையப்பட்டதன் விளைவாக இந்திய அமைதி காக்கும் படை நாட்டுக்குள் இறங்கியது. இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்டது.
இரண்டாம் கட்டம், ஈழப்போர் அனைத்துலக மயப்பட்டது. நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது ஸ்கன்டினேவிய நாடுகளைச் சேர்ந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவினர் நாட்டுக்குள் இறக்கப்பட்டார்கள்.உலகின் வெவ்வேறு தலைநகரங்களில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.
அடுத்த கட்டம் 2009க்கு பின். கடந்த 16 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் ஐநாவுக்கு பொறுப்பு கூற வேண்டியிருக்கிறது.
இப்பொழுது ஈழப் போர் இல்லை. ஆனால் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையின் எச்சமாகிய 13ஆவது திருத்தம் யாப்பில் உண்டு. இது முதலாவது விளைவு. இரண்டாவது விளைவாக சீனா இச்சிறிய தீவுக்குள் இறங்கிவிட்டது.அம்பாந்தோட்டையிலும் இலங்கைத் தீவின் தலைநகரக் கடலில் சீனப்பட்டினத்தில் சீனா நிரந்தரமாகக் காலூன்றி விட்டது.
புவிசார் அரசியலின் அடிப்படையில் இந்த பிராந்தியம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் காணப்படுகிறது. ஆனால் இந்தப் பிராந்தியத்தில் இலங்கைத் தீவில் இருந்து 400 கடல் மைல் தொலைவில் உள்ள சீனா தீவுக்குள் இறங்கிவிட்டது.எனவே பிராந்தியத்துக்குள் தனது மேலாண்மையைப் பேணவேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு பிராந்தியத்தில் உள்ள இரண்டு பேரரசுகளின் இழு விசைகளுக்குள் இப்பொழுது இலங்கை சிக்கியிருக்கிறது. அதாவது இலங்கை இப்பொழுது இறைமை உடைய ஒரு தீவு அல்ல. அது பிராந்திய மற்றும் பூகோள பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு தீவு. கலைத்துவமாகச் சொன்னால் பேரரசுகளால் பங்கிடப்படும் ஓர் அப்பம்.
யுத்தத்தை வென்று அதன் அடுத்த கட்டமாக யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கிய ராஜபக்ச குடும்பத்தை அவர்களுக்கு வாக்களித்த சொந்த மக்களே ஆட்சியில் இருந்து அகற்றித் துரத்தினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது சிங்கள மக்கள் அதிகமாக புலம் பெயர்ந்தார்கள்.லட்சக்கணக்கான சிங்கள மக்கள் இதுவரை புலம்பெயர்ந்து விட்டார்கள்.யுத்தத்தின் விளைவே பொருளாதார நெருக்கடு.இப்பொழுது யுத்தத்தில் வென்றெடுத்த நாடு தமிழ் மக்களுக்கும் சொந்தமில்லை; சிங்கள மக்களுக்கும் சொந்தமில்லை; முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமில்லை.
2009 க்குப் பின் முஸ்லிம்களுடைய சொத்துக்களும் முதலீடுகளும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. 83 ஜூலை போல. அதன் விளைவாக முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரு வணிகர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.அல்லது தங்களுடைய முதலீடுகளை வெளியே நகர்த்தி விட்டார்கள். தொடர்ந்து வந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் முஸ்லிம்கள் இந்த நாடு தங்களுக்கு பாதுகாப்பானது என்ற உணர்வை இழந்து விட்டார்கள்.
எனவே தொகுத்துப் பார்த்தால், யுத்தத்தில் வென்ற நாடு ஏனைய எல்லாவற்றிலுமே தோற்றுவிட்டது. மிகக்குறிப்பாக அதன் இறைமையை இழந்து விட்டது. இப்பொழுது அது ஒரு பேரரசுகள் பங்கிடும் அப்பம். 83 ஜூலையிலிருந்து இந்திய தலையீட்டில் தொடங்கி இப்பொழுது அம்பாந்தோட்டையிலும் நாட்டின் தலைநகரத்திலும் சீனா நிரந்தரமாக தங்கி விட்டது. இன்னொரு புறம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பொறுப்புக் கூற வேண்டிய நிலை.
இது முதலாவது. இரண்டாவது, ஜூலை 83 விளைவாக தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் விரிவடைந்தது.ஒரு கட்டத்தில் நாட்டில் இரண்டு அதிகாரம் மையங்கள் இருந்ததை ஏற்றுக்கொண்டு ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை செய்ய வேண்டி வந்தது. அதாவது 83 ஜூலையில் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும், தமிழ் மக்களை பழிவாங்க வேண்டும்,என்று சிந்தித்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பானது தமிழ் மக்களை மேலும் கொதித்து எழச் செய்ததே தவிர அவர்களைப் பணிய வைக்கவில்லை. விளைவாக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும் ஒரு யுத்த களம் திறக்கப்பட்டது. அனைத்துலக அரங்கில் இலங்கைத் தீவு அவமதிக்கப்பட்டது.தேரவாத பௌத்தத்தின் ஒரே சேமிப்பிடம் என்று தன்னைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் ஒரு தீவு இந்த நூற்றாண்டின் முதலாவது பெரிய இன அழிப்புக் களமாக மாறியது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடைய ஒரு தீவாக மாறியது.இந்த நாட்டின் முக்கிய படைத் தளபதிகளும் யுத்தத்தில் வென்ற குடும்பமும் அமெரிக்க கண்டத்துக்கு போக முடியாது. பிரித்தானியாவுக்கும் போக முடியாது.அதாவது 83 ஜூலை எந்த நோக்கத்தில் அடிப்படையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.இது இரண்டாவது விளைவு.
மூன்றாவது விளைவு,போரின் விளைவாக தமிழ் மக்கள் புலம்பெயர்ந்தார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். இது தமிழ் மக்களின் மொத்த ஜனத்தொகைக்குள் மூன்றில் ஒன்றுக்கு கிட்ட வரும். விளைவாக ஈழத் தமிழ் சமூகம் கடந்த இரண்டு தசாப்தங்களிலும் படிப்படியாக உலகில் மிகப் பலமான, மிகத்துடிப்பான, வினைத்திறன் மிக்க ஒரு புலம்பெயர் சமூகமாக எழுச்சி பெற்றிருக்கிறது.
2009க்குப் பின் தோல்வியை ஒப்புக் கொள்ளாது தொடர்ந்து போராடும் ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது. நிதி ரீதியாக பலம் வாய்ந்த, சில நாடுகளின் முடிவெடுக்கும் ராஜதந்திரிகள் மத்தியில் செல்வாக்குமிக்க, ஒரு சமூகமாக புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் வளர்ந்து வருகின்றது.
புலப்பெயர்ச்சியின் விளைவாக எழுச்சிபெற்ற தமிழ் முதலாளிகள் தமிழகத்தின் திரைத்துறை மையமாகிய கோடம்பாக்கத்தில் முதலீடு செய்யும் ஒரு வளர்ச்சியைப் பெற்று விட்டார்கள்.உலகம் முழுவதிலும் அவர்கள் வெற்றிகரமான முதலீட்டாளர்களாகத் தங்களைத் தொடர்ந்து ஸ்தாபித்து வருகிறார்கள்.அவர்களிற் சிலர் இலங்கைக்குள்ளும் திரும்பி வந்து விட்டார்கள். இங்கே அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் வங்குரோத்தாகி வரும் சொத்துக்களை விலைக்கு வாங்கி வருகிறார்கள். இலங்கை ரூபாய்களோடு காணப்பட்ட தமிழர்களை கொழும்பிலிருந்து அகற்றுவதற்கு 83 ஜூலை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அதே தமிழர்கள் இப்பொழுது டொலர்களோடும் பவுன்ஸ்சோடும் யூரோக்களோடும் நாட்டுக்குள் திரும்பி வருகிறார்கள். அவர்கள் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் முதலீடு செய்யக்கூடிய, நிதிப் பலமிக்க ஒரு சமூகமாக எழுச்சிபெற்று விட்டார்கள்.
அதாவது தமிழ் மக்களின் பொருளாதார எழுச்சியைக் கண்டு, புத்திசாலித்தனத்தைக் கண்டு,கெட்டித்தனத்தை கண்டு, பொறாமை கொண்டு தென்னிலங்கையில் அவர்களுடைய சொத்துக்களை அழித்தார்கள். ஆனால் 42 ஆண்டுகளின் பின் இப்பொழுது தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வங்குரோத்தான சிங்கள முதலாளிகளின் சொத்துக்களை வாங்கும் ஒரு வளர்ச்சிக்கு வந்து விட்டார்கள். இது 83 ஜூலை மாதம் இன அழிப்பை செய்தவர்கள் எதிர்பாராத ஒரு வளர்ச்சி. அவர்கள் தென்னிலங்கையில் இருந்து துரத்திய மக்கள் இப்பொழுது உலகம் முழுவதும் படர்ந்து,பலம் வாய்ந்த ஒரு சமூகமாக,நிதிப் பலம் மிக்க ஒரு சமூகமாக எழுச்சி பெற்று விட்டார்கள்.இது மூன்றாவது முக்கிய விளைவு.
எனவே 83 ஜூலை விளைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் இலங்கைத் தீவு பெற்றவைகளை விட இழந்தவைகளே அதிகம். அது இழந்தவைகளுக்குள் அதன் இறைமையும் அடங்கும்.
Published By: VISHNU
20 JUL, 2025 | 06:08 PM
![]()
ஆர்.சேதுராமன்
இலங்கையில் முதலீடு செய்வதில், ஜப்பானிய நிறுவனங்கள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மீள நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு, ஊழலை ஒழிப்பதும் நல்லாட்சியும் அவசியமான முன்நிபந்தனைகளாக உள்ளன என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா அண்மையில் கூறியுள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலங்கை தீவிரமாக முயன்றுவரும் நிலையில், ஜப்பானிய தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற 4 ஆவது ஜப்பானிய –இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு கொள்கை உரையாடலின்போது அவர் இதனை கூறினார்.
ஜப்பான் வெளியுறவு பிரதி உதவி அமைச்சரும், ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு பணியகத்தின் இஷிசுகி ஹிடியோ, இலங்கை நிதியமைச்சின் புதிய செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.
இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்ட ஜப்பான்
இலங்கையின் அபிவிருத்திக்கு நீண்ட காலமாக கைகொடுத்துவரும் ஜப்பான், இலங்கையில் ஊழல்களை ஒழிக்க வேண்டியதை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது. ஊழல் ஒழிப்புக்காக பல்வேறு உதவிகளையும் இலங்கைக்கு ஜப்பான் வழங்கிவருகிறது.
கடந்த மே மாதம் கொழும்பில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்குபற்றிய ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா, இலங்கையில் நிலவிய ஊழல்களால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக ஜப்பான் உள்ளதாக குமுறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதலீடுகளைச் செய்வதில் ஜப்பானிய நிறுவனங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அகியோ இசோமாட்டாவுக்கு முன்னர், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக பதவி வகித்த மிஸுகோஷி ஹிடேக்கியும் இலங்கையில் ஊழல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல தடவைகள் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக் ஷ காலத்தில், ஜப்பானிய நிறுவனமொன்றிடம் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேவேளை, சர்வதேச அபிவிருத்திக்கான ஜப்பானிய முகவரத்தின் (ஜெய்க்கா) உதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான, இலகு ரயில் திட்டத்தை கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் ஒரு தலைபட்சமாக இரத்து செய்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து ஜப்பான் கடும் அதிருப்தி கொண்டிருந்தது. அதன்பின் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜப்பானிய உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கியிருந்தன.
2023 மே மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டோக்கியோவுக்கு விஜயம் செய்து ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடாவை சந்தித்தபோது, மேற்படி திட்டம் இரத்துச் செய்யப்பட்டமைக்காக இலங்கை சார்பில் மன்னிப்பு கோரினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர், இலங்கையில் 11 அபிவிருத்தித் திட்டப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக ஜப்பான் அறிவித்தது.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என்பதை அப்போதைய ஜப்பானிய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி மீள உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒக்டோபர் முற்பகுதியில் 'ஜப்பானிய அபிவிருத்தி வரலாறும் இலங்கைக்கான செய்திகளும்' என்ற தலைப்பில் சொற்பொழிவுவொன்றை நிகழ்த்திய அப்போதைய தூதுவர் மிஸுகோஷி ஹிடேக்கி, இலங்கையின் ஊழல்களை பற்றிய தனது அவதானிப்பை வெளியிட்டார்.
'இலங்கைக்கு நான் வந்தது முதல் அவதானித்ததில் இருந்து, இலங்கையில் ஊழல் தொடர்பில் இரு விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதலாவதாக, ஊழலானது தலைவர்கள் மீது நாட்டு மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஒரு காரணமாகிறது.
தலைவர்கள் ஊழலில் ஈடுபடும்போது மக்கள் நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக இருப்பதை ஊக்கப்படுத்துவதை அது தடுக்கிறது. இது வரி செலுத்துவோருக்கு வரி ஏய்ப்பு செய்ய வசதியான சாக்குப்போக்குகளை வழங்குகிறது.
இரண்டாவதாக, இலங்கை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க விரும்பும்போது இது மிகவும் தீங்கு விளைவிக்கிறது' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
'ஜப்பானிய நிறுவனங்கள் அவற்றின் கடப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றி வருகின்றன அதனால் அவை இலஞ்சம் வழங்கமாட்டா. இலங்கையில் ஊழல் கலாசாரம் தொடர்ந்தால், இங்கு ஜப்பானிய முதலீடுகள் வருவதற்கான சாத்தியம் இல்லை' எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
ஊழலை ஒழிப்பதற்கு உறுதி பூண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நாட்டின் புதிய தலைவராக இலங்கை மக்கள் தெரிவுசெய்துள்ள நிலையில், நீண்ட காலமாக நாட்டை சீர்குலைத்துள்ள ஊழலை ஒழிப்பதற்கு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது எனவும் முன்னாள் தூதுவர் ஹிட்டேக்கி அப்போது கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக பதவியேற்ற அக்கியோ இசோமாட்டாவும், இலங்கையில் ஊழல்களின் பாதிப்புகள் குறித்து காரசாரமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
ஊழல் ஒழிப்புக்காக 2.5 மில்லியன் டொலர் உதவி
ஊழலை ஒழிப்பதற்கு உதவும் ஜப்பானின் திட்டங்களின் வரிசையில், இலங்கையில் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்தவும், பொது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கவும் மூன்றாண்டுத் திட்டத்துக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்கும் ஒப்பந்தமொன்று கொழும்பில் கடந்த முதலாம் திகதி கையெழுத்திடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (யூ.என்.டி.பி) உதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு ஜப்பான் நிதி அளிக்கிறது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா மற்றும் யூ.என்.டி.பி.யின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நீதி அமைச்சர் ஹர்ஷா நாணயக்கார, சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க, இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கே.பி. ராஜபக் ஷ, சேதிய குணசேகர, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க குமநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இத் திட்டமானது ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவன திறனை மேம்படுத்துதல், பொது நிர்வாகம், முதலீடுகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல், திறமையான வழக்கு விசாரணை மற்றும் பொது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இத்திட்டம், நிறுவனங்களில் ஊழலைத் தடுப்பதற்கு ஆளுகை பொறிமுறைகளை வலுப்படுத்துதல், விசாரணை நடைமுறைகளை மேம்படுத்துதல், பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், குடிமக்களை மேம்படுத்துதல், மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் தரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இது குறிப்பாக இளைஞர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் குடிமக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் முயல்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (யூ.என்.டி.பி.) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, ‘‘இலங்கை ஊழலை எதிர்கொள்ள தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஜப்பனிய அரசு, மக்களின் தாராளமான நிதியுதவியுடன் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுடனான இந்த கூட்டாண்மை, நல்லாட்சியை நோக்கிய எமது கூட்டு பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. இந்தத் திட்டத்தின் தொடக்கம், நிறுவனங்களை வலுப்படுத்துவது மட்டுமல்ல, இது பொது நம்பிக்கையை மீட்டெடுப்பது, குடிமக்களை மேம்படுத்துவது, அனைவருக்கும் சமமான வாய்ப்பை உருவாக்குவது தொடர்பானது. 2025 – 2029 காலத்துக்கான இலங்கையின் தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், நிலையான வளர்ச்சிக்கு அமைப்பு ரீதியான தடைகளை அகற்றி, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் கலாசாரத்தை வளர்க்கும் ஒரு சமூக அளவிலான அணுகுமுறையை ஆதரிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்லாமல், மாற்றத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய, தேசிய பங்காளிகளுடன் இணைந்து யூ.என்.டி.பி. தொடர்ந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது’’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த காலங்களிலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு ஊழல் ஒழிப்பு தொடர்பான பயிற்சிகள், செயலமர்வுகளை நடத்துவதற்கும் ஜப்பான் உதவியிருந்தது.
பாலியல் இலஞ்சம் தொடர்பாகவும் இலங்கையின் மருத்துவ, சட்டத்துறையினருக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் உதவியளித்திருந்தது.
பல நாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கு உதவ முன்வந்த நிலையில், இலங்கையில் ஊழல்களை வேரறுக்க உதவுதற்கும் ஜப்பான் ஆர்வம் செலுத்துகின்றது.
ஈரான்-இசுரேலிய போருக்கான தேவை என்ன?
23 Jul 2025, 6:30 AM

பாஸ்கர் செல்வராஜ்
எந்த முகாந்திரமும் இன்றி தான்தோன்றித்தனமாக உலக சட்ட விதிமுறைகளை மதிக்காமல் இன்னொரு நாட்டின் இறையாண்மையை மீறி திடீரென ஈரானின் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது இசுரேல். உளவு அமைப்புகள் மூலம் அந்நாட்டுக்குள் ஊடுருவி புரட்சிப் பாதுகாப்புப் படை மற்றும் அணு விஞ்ஞானிகள் அறுபது பேரைப் படுகொலை செய்தது. சிரியாவை அடுத்து ஈரானில் ஆட்சி மாற்றமா? என்று குழம்பிய நிலையில் ஈரானின் பதிலடி தொடங்கியது.
தொடர்ந்த போரின் போது ஈரானின் ஏவுகணைகளைச் செலுத்தும் ஏவூர்திகள் (launchers) பெரும்பாலானவற்றை அழித்து விட்டதாகவும் எஞ்சிய மலைக்குகைக்கு அடியில் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் மையங்களை மட்டுமே அழிக்கவேண்டும் என்றும் அமெரிக்காவிடம் எடுத்துச் சொல்லி அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த மையங்களின் மீது உலகின் மிகப்பெரிய குண்டுகளை வீசினார்கள். இறையாண்மையும் முதுகெலும்பும் இருந்த நாடுகள் இதனைக் கண்டித்தன. ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நவகாலனிகள் உழப்பும் வார்த்தைகள் பேசி ஆதரித்தன.
அடுத்த அமெரிக்காவின் மேற்காசியப்போர் வெடிக்கப்போகிறதோ என்று உலகமே பதற்றத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரசியாவின் முன்னாள் அதிபர் மற்ற நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதம் வழங்கலாம் என்று ஒரு மறைமுக செய்தியைப் பகிந்தார். இசுரேல் உலகுக்கு அறிவிக்காமல் அணு ஆயுதம் வைத்திருப்பது அனைவரும் அறிந்த இரகசியம். ஈரான் அப்படி அறிவிக்காமல் வைத்திருக்கிறதா என்று எவரும் அறியாத நிலையில் ரசிய பாதுகாப்பு உயர்மட்ட குழு உறுப்பினரான இவரின் அறிவிப்பு ஈரானின் அடுத்த நகர்வுக்கு முறைமுக ஆதரவும் வழிகாட்டி உதவுவதாகவும் இருந்தது.

பின்பு ஈரானின் வெளியுறவு அமைச்சர் ரசியா சென்று புதினின் உதவிக்கான உறுதிமொழியைப் பெற்றுவந்த பிறகு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இதுவரையில் நடைமுறையில் இருக்கிறது. ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் சீனா சென்று பேசி இருக்கிறார். இது குறித்த அரசியல் அக்கப்போர்கள், இராணுவக் கருவிகளின் நுட்பங்கள், அமெரிக்க அரசியல் கோமாளியின் உளறல்கள் குறித்த செய்திகள், காணொளிகள் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே இவற்றைத் தவிர்த்து இந்தப் போரின் அரசியல் பொருளாதாரம் குறித்து மட்டும் பார்ப்போம்.
உலகப் போர்களைப் பொருத்திப் பார்க்கும் சட்டகம் (Frame)
இரத்தம் சிந்தி செய்யும் போர் அரசியலை அதனைச் சரியான சட்டகத்தில் வைத்துப் பார்த்துப் புரிந்துகொள்வது உலகுடன் ஒத்திசைந்து செல்ல வேண்டிய நமது பாதையைச் செவ்வனே செதுக்கிக் கொள்ள உதவும். மேற்காசியா என்றால் எரிபொருளும் ஆசிய-ஐரோப்பிய வணிகப் பாதையும். அதில் அமெரிக்காவின் தலையீடு என்றால் பெட்ரோ டாலரும் ஆசிய ஐரோப்பிய வணிகக் கட்டுப்பாடும்தான்.
பெட்ரோடாலர் உலகப்பொருள் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப மூலதனப் பொருள்களின் மதிப்பைத் தெரிவிக்கிறது. இந்த எரிபொருள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான உற்பத்திக்கு டாலரைக் கொண்டே இவற்றை வாங்க வேண்டும் என்பதால்தான் அதற்கான தேவை சந்தையில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தக் கட்டமைப்பை நிலைப்படுத்தும் விதிகள் கொண்ட உலக ஒழுங்கு நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த ஒழுங்கு ரசியா, ஈரான், வெனிசுவேலா ஆகிய நாடுகள் உலகின் மிகப்பெரிய எரிபொருள் இறக்குமதியாளரான சீனாவுக்கு டாலர் தவிர்த்த சொந்த நாணயங்களில் எரிபொருளை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய நாள் முதல் உடைப்பைச் சந்திக்க தொடங்கியது. இதோடு முந்தைய மரபான எரிபொருள் தொழிநுட்ப உற்பத்தி மரபுசாரா மின்னணு தொழில்நுட்ப உற்பத்திக்கு மாறி வருகிறது. மாறிக் கொண்டிருக்கும் நவீன மின்னணு மாற்று எரிபொருள் உற்பத்திக்கான நுட்பங்களைச் சீனா அடைந்தது. இது மேலும் டாலர்மைய உலக ஒழுங்கை உடைத்து டாலர் இல்லாமலும் பொருள் உற்பத்தி, வணிகம் செய்யலாம் என்ற சூழலை ஏற்படுத்தியது. அந்த உடைப்பை அமெரிக்கர்கள் சரிசெய்ய போராடிக் கொண்டிருந்தபோது வந்த கொரோனாவினால் உலக உற்பத்தி மேலும் நிலைகுலைந்து நின்றது. அந்த உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களும் அந்த சொத்துக்களின் மீது கட்டப்பட்ட பங்குச்சந்தை மாய மாளிகையும் மதிப்பு குறைந்து உடைந்து இருக்க வேண்டும்.
அப்படி அனுமதிக்காமல் அந்த சொத்துக்களின் மதிப்பைச் செயற்கையாக டாலர் பணத்தை உற்பத்திசெய்து நிலைநிறுத்தியதால் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கான டாலர் சுழற்சியின்றியும் இப்படி டாலரை அச்சடித்ததாலும் சந்தையில் டாலர் மிகைமூலதனம் திரண்டது. அதாவது சொத்தின் விலையை உயர்த்திக் காட்டி டாலரின் மதிப்பு நீர்க்க வைக்கப்பட்டது. இப்போது நீர்த்து பெருகிப்போன டாலருக்கு ஏற்ப அதற்கு எதிராக மதிப்பிடப்பட்ட மற்ற உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு மாறவேண்டும். பொருள்களைவிட அதிகமாக உற்பத்தி செய்த டாலர் அதன் மதிப்பை அடைய உலகம் முழுக்க பாய்ந்து சொத்துக்களின் தேவையைக் கூட்டி விலையை உயர்த்தியது. பொருள் உற்பத்தியின்றி ஏற்பட்ட அந்த விலை உயர்வுக்கு ஏற்ப மற்ற நாடுகளில் ஏற்பட்ட பணத்தின் பெருக்கம் இயல்பாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பைக் குறைத்தது. அது பணத்தில் இயங்கும் தொழிலாளிகள், விவசாயிகள், சிறுகுறு உற்பத்தியாளர்களின் வருவாய் மற்றும் செல்வத்தை மறைமுகமாக நீர்க்கச் செய்து குறைத்தது. இப்படி பணக்காரர்களின் சொத்தின் மதிப்பு கூடும் அதேவேளை மற்றவர்களின் வருமானம் சொத்து ஆகியவை மறைமுகமாக குறைக்கப்பட்டது.
அப்போது செய்த முதலீடுகள் கொரோனாவிற்குப் பிறகான பொருளாதார உற்பத்தி பெருக்கத்தை எதிர் நோக்கி இடப்பட்டவை. அந்த மதிப்பு வருங்கால உற்பத்தி மீதான உத்தேச மதிப்பு; உண்மை மதிப்பு அல்ல. உண்மை மதிப்பு பின்னர் பொருளை உற்பத்தி செய்து விற்று முதலையும் இலாபத்தையும் அடைவதில் இருக்கிறது. உத்தேச மதிப்பை உண்மையாக்க அதிக விலையில் பொருளை விற்றதால் இலாபம் பெருகி ஜிடிபியும் உயர்ந்தது. ஆனால் ஏற்கனவே பணத்தின் மதிப்பைத் திரித்ததால் வருவாயை இழந்த மக்கள் மேலும் அதிக விலை கொடுத்து பொருளை வாங்கியதால் அவர்களின் வாங்கும் திறன் குறைந்து விற்பனை சரிந்து வருகிறது. அதற்கு ஏற்ப பொருள்களின் விலை வீழ்ந்து சொத்துக்களின் மதிப்பு இப்போது சரியவேண்டும். அதாவது தொடங்கிய இடத்திற்கே முதலாளித்துவம் வந்து நிற்கிறது. அதுதான் அதனுடைய இயல்பு.
இல்லையேல் மதிப்புமிக்க புதிய சொத்தையும் அதற்கான சந்தையையும் டாலர் நிதிமூலதனம் அடையவேண்டும். ஆனால் அப்படியான மாற்று உற்பத்தி இவர்களிடம் இல்லை. எனவே அந்த உற்பத்தியை வைத்திருக்கும் சீனர்களின் சொத்தை வழக்கம்போல ஆட்டையைப் போடுவதுதான் ஒரேவழி. கொரோனாவின் போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைப்போல டாலருக்கு சந்தையைத் திறந்து விடாமல் மூடிக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கி சந்தையை சீனர்கள் விரிவாக்கி இருக்கிறார்கள். அந்த சொத்தை டாலர் மூலதனம் அடைவது அல்லது அதனை உடைத்து பழைய எரிபொருள் தொழில்நுட்ப உற்பத்தியை மையப்படுத்திய டாலர்மைய ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவது ஒன்றே அமெரிக்கர்களின் நெருக்கடியைத் தீர்க்க இருக்கும் ஒரே வழி. இந்த பொருளாதாரத் தேவைக்கான
1. பழைய உற்பத்தி ஒழுங்கை உடையாமல் காப்பது,
2. புதிய உற்பத்தியில் உருவாகும் சொத்தைத் டாலர் நிதிமூலதனம் அடைவது
ஆகிய இரண்டு நோக்கத்தின் பொருட்டும் நடக்கும் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது.
போருக்கு முந்தைய ஈரான்-இசுரேலிய சூழல்

5ஜி தொலைத்தொடர்பு மற்றும் மின் மகிழுந்துகள் உள்ளிட்ட மாற்று உற்பத்தி நுட்பங்களைக் கொண்டிருக்கும் சீனர்களின் புதிய உற்பத்தி தொழில்நுட்ப சொத்துக்களை டாலர் நிதிமூலதனம் அடைய செய்த வணிகப்போர், தொழில்நுட்ப போர், மிரட்டல்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. டாலரின் வழியான பழைய எரிபொருள் உற்பத்தி வணிக உடைப்பைத் தடுக்கும் பொருட்டு உக்ரைன் பிரச்சனையைத் தூண்டி ரசியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருள் கனிமவளங்களைக் கைப்பற்றும் முயற்சியும் தோல்வி. ஆனால் அதனிடம் இருந்த ஐரோப்பிய எரிபொருள் சந்தை வெற்றிகரமாக உடைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான எண்ணெய் எரிவாயு அளிப்பை விலை அதிகமான அமெரிக்க உற்பத்தி கொண்டு மட்டும் செய்துவிட முடியாது.
ரசியாவை அடுத்து அதிகமான எரிவாயு வளத்தை ஈரான்-கத்தார் எரிவாயுவைக் கொண்டு செல்வதிலும் சிக்கல். ஈரானும் ரசியாவும் இணைந்து எரிவாயு தளத்தை கூட்டணி (strategic partnership) அமைத்து ஆசிய-ஐரோப்பிய எரிபொருள் சந்தையைத் தங்களுக்குள் தக்கவைத்துக் கொள்ளும் திசையில் சென்றன. அமெரிக்காவை விலக்கி ஆசிய ஐரோப்பிய எரிபொருள் சந்தையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சரக்கு போக்குவரத்துக்கான புதிய உலக வடக்கு தெற்கு போக்குவரத்து மண்டலத்தை (INSTC) ஏற்படுத்தின. இந்தக் கூட்டணியில் சீனாவோடு இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் இணையும்போது அமெரிக்கர்களை வெளியேற்றி இந்த மண்டலத்தைத் இவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
அதனைத் தடுக்க இக்கூட்டணியில் இருந்து இந்திய, ஐரோப்பிய நாடுகளைப் பிரிக்கும் வகையில் இதற்கு மாற்றாக பாலஸ்தீன பகுதியில் இருக்கும் எரிவாயுவையும் எதிர்காலத்தில் கத்தாரின் எரிவாயு ஏற்றுமதியையும் இணைக்கும் இசுரேலை மையப்படுத்திய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தை (IMEC) அறிவித்தது அமெரிக்கா. அந்த நகர்வுக்கு ஹமாசின் இசுரேல் மீதான தாக்குதல் பாலஸ்தீன பிரச்சனையை உலகின்முன் கொண்டுவந்து தடையை ஏற்படுத்தியது. இந்தத் தடையைப் பாலஸ்தீன இனத்தை அழித்து வெளியேற்றி உடைக்க முற்பட்டது இசுரேல்.

ஈரான் தனது பொருளாதார நலனைக் காக்கும் நோக்கில் தனது ஆதரவு ஹிஸ்புல்லா, கவுத்தி இயக்கங்களின் வழியாக அமெரிக்க, இசுரேலிய நாடுகளின் நோக்கத்தை அடையாவிடாமல் அரசியல் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. இந்தப் போருக்கான நோக்கத்தில் அமெரிக்கா தோல்வியடையும் பட்சத்தில் இசுரேலின் இருப்பும் தேவையும் கேள்விக்குள்ளாகும். போருக்கு செலவிட்ட சுமையும், உடைபட்ட பொருளாதார நெருக்கடியும் பாதுகாப்பின்மையும் அங்கே அரசியல் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். எனவே இது இசுரேலிய ஆளும்வர்க்கத்துக்கு வாழ்வா சாவா போராட்டம்.
எனவே தனது அனைத்து வலிமையையும் நீண்டகால தயாரிப்புகளையும் பயன்படுத்தி ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத் தலைமைகளைக் கொன்றும் லெபனான் மீது போர்தொடுத்தும் கவுத்தி இயக்கத்தைத் தாக்கியும் ஈரானின் அரசியல் வலிமையை உடைத்தும் வந்தார்கள். உச்சமாக அலாவைத் சிறுபான்மை ஆளும்வர்க்கத்துக்கு எதிராகப் பெரும்பான்மையைத் தூண்டிவிட்டு துருக்கி ஆதரவு கூலிப்படையின் மூலம் சிரியாவில் ஆட்சிக் கவிழப்பை நிகழ்த்தி தன் மீதான ஈரானின் இசுரேலிய சுற்றிவளைப்பை வெற்றிகரமாகத் தகர்த்தார்கள். ஈரானின் மீது சிரிய, ஈராக் வான்வெளி வழியாக தாக்குதல் நடத்த இருந்த தடை இதன்மூலம் நீங்கியது.
கணக்கை மாற்றிப் போட்ட அமெரிக்கா

இதனிடையில் ஆட்சிக்கு வந்த குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் முந்தைய சனநாயகக் கட்சியின் ரசிய, சீன சொத்துக்களை மொத்தமாகக் கைப்பற்றி சந்தையை ஆதிக்கம் செய்யும் முயற்சியில் கண்ட தோல்வியை ஒப்புக்கொண்டு ஏற்றத்தாழ்வுடன் இவர்களுடன் பலனைப் பகிர்ந்து கொள்ளும் பாதைக்கு வந்தது. முந்தைய பைடன் நிருவாகத்தின் சில்லுகளுக்கான தொழில்நுட்ப போரின் தோல்வியை ஒப்புக்கொண்டு இப்போது சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் தனக்கு இசைவான ஒரு பொருளாதார ஒப்பந்தத்துக்குள் கொண்டுவரும் வகையில் உலக நாடுகளின் மீது வரிவிதிப்பு போரை அறிவித்தது. ரசியாவுடன் சமரசம் செய்துகொண்டு ஐரோப்பிய நலனைப் பலிகொடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொள்ள பேரம் பேசியது.
எதிர்பாராத விதமாக சீனர்களின் எதிர் வரிவிதிப்பு தாக்குதலினால் அமெரிக்கா வரிவிதிப்பு போர் ஆரம்பத்திலேயே அமெரிக்கர்களைத் திருப்பித் தாக்கியது. வேறுவழியின்றி பின்வாங்கியது ட்ரம்ப் நிருவாகம். தனது நலனை விட்டுக் கொடுக்காத ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் வழியாக அந்த சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியதால் ரசிய கூட்டு முயற்சியிலும் தோல்வியைத் தழுவியது. ரசியர்களும் இறங்கிவர அடம்பிடித்த நிலையில் ரசிய-சீன-ஈரானிய கூட்டணி பலத்தை உடைக்கும் வகையில் எந்த ஈரான் உடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து முன்பு விலகினாரோ அதே ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மிரட்டினார் டிரம்ப். அதன்மூலம் ஈரானிய எரிபொருளைப் பெற்று ரசியர்களை வழிக்குக் கொண்டுவர முயன்றது அவரது நிர்வாகம்.
ஈரானில் இருக்கும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வம் காட்டினாலும் புரட்சிக்குப் பிறகு உருவான தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் கட்டுப்பாடு, ரசியாவுடனான எரிவாயு கூட்டணியை உடைத்து அனுகூலம் அடையத் துடிக்கும் அமெரிக்கர்களின் நோக்கம் ஆகியவை காரணமாக அனைவரின் ஒத்துழைப்புடன் கவனமாகக் காய்களை நகர்த்தியது ஈரான். இந்த இக்கட்டை இன்னும் இறங்கி விட்டுக் கொடுத்து தீர்க்கலாம் இல்லையேல் ரசிய, சீன நாடுகளுடன் ஒப்பிட பலகீனமான ஈரானைத் தாக்கி அந்நாட்டு வளத்தை ஓட்டுமொத்தமாகக் கைப்பற்றுவதன் மூலம் பேச்சுவார்த்தை அரசியலின் திசையையே மாற்றலாம்.

இரண்டாவதைத் தெரிவு செய்தார் அமைதி விரும்பியாக வேடமிட்ட டிரம்ப். எனினும் அமெரிக்க தளங்களை இழக்கும் ஆபத்தைத் தவிர்க்க இசுரேலை ஏவிவிட்டு சிரியாவைப் போன்று ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது திட்டமாக இருந்திருக்கிறது. ஈரானுடனான ஒப்பந்தம் அந்தப் பகுதியில் இசுரேலின் ஏகபோகத்தை உடைத்து ஈரானின் இடத்தை உறுதிசெய்யும் என்பதால் இசுரேல்முனைப்புடன் ஈரானை முடிக்க களமிறங்கியது.
மன்னர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் நிழலில் உருவான தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்க உருவான ஈரானிய இராணுவம், இசுலாமிய புரட்சிக்குப் பிறகு உருவான புதிய தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்கும் புரட்சிப் பாதுகாப்புப்படை என இரண்டாக பிரிந்திருக்கும் அந்நாட்டின் ஆளும் வர்க்க அரசியலைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள்.
தேசிய வர்க்கத்தின் புரட்சிப் பாதுகாப்பு படைப்பிரிவின் தலைமைகளை கொன்றொழித்து அதன் தொடர்புகளைத் துண்டித்து ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஏவுகணைகளை ஏவும் வலிமையை குண்டுவீசி அழித்தும் அவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் போது தரகு முதலாளித்துவ வர்க்கம் இவர்களிடம் மண்டியிட்டு சேவை செய்யத் தயாராகிவிடும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
நேர்த்தியான இந்தத் திட்டத்தைச் சிறப்பாக முதல் இரண்டு நாட்களில் செயல்படுத்தவும் செய்தார்கள். ஆனால் சிறிய இடைவேளையில் மீண்டு எழுந்த தேசிய வர்க்க புரட்சிப் பாதுகாப்புப்படை இழந்த தொடர்புகளை மீட்டு வெற்றிகரமாக பதிலடியைத் தொடங்கி இவர்களின் திட்டத்தை உடைத்ததன் மூலம் ஈரானின் ஆட்சி மாற்றத்தைத் தவிர்த்து இருக்கிறது.
இதன்பிறகு நடந்தது என்ன?!
https://minnambalam.com/iran-that-avoided-the-regime-change-what-next-1/
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் இல்லை
முருகானந்தன் தவம்
இலங்கை வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள்.
இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் கொளுந்து விட்டெறிந்த தமிழர் சொத்துக்களும், இதயங்களை உறைய வைத்த கொடூர தாக்குதல்களும் உயிருடன் கொளுத்தப்பட்டவர்களின் கதறலும், காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை தலைநகர் வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்?
வருடத்தின் 12 மாதங்களில் ‘கறுப்பு ஜூலை’யாக தமிழர் குருதி குடித்த மாதமாகத் தமிழர் மனங்களில் ஆழமாகவும் ஆறாத ரணமாகவும் பதிந்துவிட்ட அந்த தமிழினப் படுகொலை நடந்து ஜூலை 23ஆம் திகதியுடன் 42 ஆண்டுகள் ஆகிவிட்டன.
வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள், வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் சிங்களக் கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்ட,
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரங்களும் கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்களும் இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைத்து விடும். தமிழ் மக்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் பேரினவாதிகளினதும், பேரின ஆட்சியாளர்களினதும் ஆசிர் வாதத்துடன் முன்னெடுக்கப்பட்ட இனக் கலவர வன்முறைச் சம்பவங்களின் போக்கில், அடுத்த கட்டமாகவே, 1983 கறுப்பு ஜூலை இனக்கலவர படுகொலைகள்
அரங்கேற்றப்பட்டன.
1983 ஜூலை 23, 24, 25, 26 ஆகிய தினங்களில் திட்டமிட்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘ஜூலைக் கலவரம்’ எனப்படும் தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக, தீராத வலியாகக் கனன்று கொண்டிருக்கின்றது.
இந்த ஜூலைக் கலவரம் நடந்தேறி 42 வருடங்கள் கடந்து விட்டாலும் அது தமிழரின் மனத்தோடு ஆழமாகப் பதிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் வரும்போதும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 83இன் தமிழர்களின் இரத்தக் கறைபடிந்த கறுப்பு ஜூலை நினைவிற்கு வந்து கலங்க வைப்பதைத் தவிர்க்க முடியாது.
ஜனநாயகத்தின் அடிப்படையில், இனங்களுக்கிடையில் வேறுபாட்டை நோக்காத நேர்மையான சிங்களவர்களின் மனசாட்சிகளை இருளாக்கிய அந்த ‘ஜூலைக் கலவரம்’ எனப்படும் தமிழினப்படுகொலையே 30 வருட யுத்தத்துக்கு வழிகோலி இலட்சக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்ததுடன், உடைமைகளை அழித்து இலட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக்கி, சிங்களவர், தமிழர்களை இன்றுவரை பரம எதிரிகளாகவும் இணக்கப்பாட்டுக்கு வர முடியாதவர்களாகவும் வைத்திருக்கின்றது.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இந்த தமிழினப்படுகொலை அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது.
தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பு நகரின் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள் மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன .
வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி ஆயிரக்கணக்கானோர் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர்.
தீயிட்டு எரிக்கப்பட்டனர். தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிங்களக் காடைக்கூட்டத்துக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ, பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரக்கால சட்டம் பயன்படுத்தப்பட்டது.
அது மட்டுமன்றி, கொலை செய்யப்பட்டவர்களை மரண அல்லது நீதி விசாரணை இல்லாமல் தகனம் செய்ய பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன.
தமிழினப் படுகொலைகளைத் தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார் செய்யப்பட்டது. இதற்காகவே யாழ்., திருநெல்வேலியில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்படுமென அரசு அறிவித்தது. அது சிங்களக் காடையர்கள் தமிழினப் படுகொலைக்காக அணிதிரள விடுக்கப்பட்ட அரசின் ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாகவே இருந்தது.
ஜூலை 23ஆம் திகதியில் இருந்து காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து தமிழினப் படுகொலைகளில் ஈடுபட்ட பொலிஸாரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாகத் தமிழர்களைத் தேடித் தேடிக் கொல்லவும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், தமிழர் சொத்துக்களை அடியோடு அழிக்கவும் இடமளித்ததன் பின்னர், ஜூலை 25ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கே ஜனாதிபதி கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று மாலை 6 மணிக்கே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது .
முதலில் கொழும்பிலும் பின்னர் மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், சிங்களக் காடையர்கள் மாகாணங்களுக்குள் ஊடுருவி தமது படுகொலைகளை முன்னெடுக்க வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகவே இருந்தது.
ஜூலை 26ஆம் திகதி கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருநாகல், இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத்தனங்களை அரங்கேற்றினர். திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது.
சிங்களவர்களின் அரக்கத்தனம் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் பின்னர். ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில் என தொடர்ந்து ஏழு நாட்களாக அரங்கேற்றப்பட்டன.
அது மட்டுமன்றி, கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் பொலிஸார், சிறைக் காவலர்களின் ஒத்துழைப்புடன் சிங்களக் கைதிகள் , காடையர்களினால் கண்கள் தோண்டப்பட்டும் கொடூர சித்திரவதைகள் செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த தமிழினப்படுகொலையால் தலைநகரில் உள்ள பாடசாலைகள், கோவில்கள் தமிழ் அகதிகளால் நிரம்பி வழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கப்பலேற்றி ‘’உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்’’ என கூறி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டும் வெளியேறினர்.
ஜூலை 23இல் ஆரம்பித்த தமிழினப்படுகொலை மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்றது. 83 கலவரம் என்ற பெயரில் நடந்த தமிழினப் படுகொலையில் 3,000 பேர் வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்களின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனவும், கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன எனவும் தரவுகள் கூறுகின்றன.
தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டமையும் பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியமையும் இன்றும் தமிழர்களால் நன்றியுடன் நோக்கப்படுகின்றது.
இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், இராணுவத்தினர் உயிரிழந்தமைக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சமபவங்களுக்கு அளிக்கப்படவில்லை. அந்த சம்பவங்கள் பற்றிய தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன.
அதனால் ஊடகங்களின் ஊடாக உண்மை நிலைமையை உடனுக்குடன் அறிய முடியா சூழல் ஏற்பட்டிருந்தத்து. அப்போது கொழும்பில் இருந்த வெளிநாட்டு செய்தியாளர்கள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டார்கள்.
அவர்கள் தங்களுடைய ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியில் வருவதற்கும் சில நாட்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .
இந்த 1983 ஜூலை கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலையே பல வரலாறுகளை எழுதியது. பல வரலாறுகளை மாற்றியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் விடுதலைப்புலிகள் தலைமையில் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது.
தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல், சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்தனர். இந்த நாட்டிலே சிங்களவர்-தமிழர்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது. அந்த நிலைதான் இன்றுவரை தொடர்கின்றது.
கறுப்பு ஜூலையின் பின்னர் தேசிய பிரச்சினை என்பது இலங்கை அரசியலில் ஏனைய விடயங்களை விட பிரதான பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. 42 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்காதது போலவே இலங்கையின் தேசியப் பிரச்சினையாக மாறிய தமிழ்மக்களின் பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புக்களும் இல்லை.
கறுப்பு ஜூலையை விடவும் பெரிய வெட்கக்கேடு!

— வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்கு பிறகு சரியாக 42 வருடங்கள் உருண்டோடி விட்டன.
ஒரு வாரத்துக்கு மேலாக தலை விரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை.
1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலை புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய ஜெயவர்தன அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்த வன்செயல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு ‘வசதியாக’ அமைந்தது.
இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று மீண்டும் எதுவுமே இருக்காது என்பதை நிறுவிய அனர்த்தங்கள் நிறைந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா ‘கறுப்பு ஜூலை’ (BLACK JULY ) என்று வர்ணித்தார். அந்த ஜூலைக்கு பிறகு இலங்கையில் சகலதுமே கறுப்பாகத்தான் இருக்கிறது என்று எழுதிய சிங்களப் பத்திரிகையாளர்களும் இருந்தார்கள்.
அரசாங்கத்தின் மனநிலை:
கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக (11 ஜூலை 1983) லண்டன் ரெலிகிராவ் பத்திரிகையின் செய்தியாளர் கிரஹாம் வார்ட்டுக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.
“இப்போது நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி அல்லது அவர்களது உயிர்களைப் பற்றி அல்லது எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி இப்போது எங்களால் சிந்திக்க முடியாது. வடக்கு மீது எந்தளவுக்கு நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்றோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று ஜெயவர்தன கூறினார்.
அந்த நேர்காணலுக்கு பெருமுக்கியத்துவம் கொடுத்து (17 ஜூலை 1983) அரசுக்கு சொந்தமான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகை மறுபிரசுரம் செய்தது..
ஜெயவர்தனவின் அந்த கருத்துக்கள் கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள் ஆவேசமடைந்ததால் மாத்திரம் மூண்டதல்ல, இனவாதச் சக்திகள் நீண்ட நாட்களாக தீட்டி வந்த திட்டத்தின் விளைவானது என்பதை அம்பலப்படுத்தியது.
தமிழர்களை கொடுமைப்படுத்தினால் சிங்களவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று கூறிவிடமுடியாது. ஆனால், சிங்களவர்களைப் பற்றி அவ்வாறு ஒரு கணிப்பீட்டை ஜெயவர்தன கொண்டிருந்தார் என்பதே உண்மை.
உள்நாட்டுப்போரில் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களும் உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விடவும் விபரிக்க முடியாத அளவுக்கு அதிகமானவை என்றபோதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப்போரை மூளவைத்தது. அதனால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் கறுப்பு ஜூலைக்கு என்றென்றும் மறையாத — பித்தியேகமான எதிர்மறைக் குறியீடு ஒன்று இருக்கிறது.
கறுப்பு ஜூலை வன்செயல்களில் நாடுபூராவும் சொல்லொணா அவலங்களைச் சந்தித்து ஆயிரக்கணக்கில் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தையையேனும் கூறுவதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை.
வன்செயல்களை நியாயப்படுத்திய ஜனாதிபதி:
வன்செயல்கள் மூண்டு நான்கு நாட்களுக்கு பிறகு ஜூலை 28 வியாழக்கிழமை அரச தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தன அந்த வன்செயல்களை தமிழ் அரசியல்வாதிகளின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று கூறி நியாயப்படுத்தினாரே தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கிஞ்சித்தேனும் நினைக்கவில்லை.
வன்செயல்களை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிசாரும் வன்முறைக் கும்பல்களுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர். பல சம்பவங்களில் அவர்களே முன்னின்று வன்செயலிலும் ஈடுபட்டனர். அரசாங்க அரசியல்வாதிகள், பல அமைச்சர்களும் கூட தங்கள் பகுதிகளில் முன்னணியில் நின்று தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டி விட்டார்கள்.
வன்முறைக் கும்பல்களைக் கலைக்க படையினர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்று ஜெயவர்தனவிடம் பி.பி.சி. பேட்டியொன்றில் கேட்கப்பட்டபோது “படையினர் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் பெருமளவுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன். கலவரங்களில் ஈடுபட்ட சிங்களவரைச் சுடுவது சிங்கள சமூகத்துக்கு விரோதமான செயலாக இருக்கும் என்று படையினர் உணர்ந்திருக்கக்கூடும். சில இடங்களில் கலகக்காரர்களை படையினர் உற்சாகப் படுத்தியதையும் கண்டோம்” என்று பதிலளித்தார்.
வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக கடுமையான உத்தரவுகளை ஏன் பிறப்பிக்கவில்லை என்று ஜெயவர்தனவிடம் கேட்டபோது அவர், “மிகவும் கடுமையான வேகத்துடன் காற்று வீசும்போது அதை தடுத்துநிறுத்த முடியாது. வளைந்துகொடுக்க மாத்திரமே எம்மால் முடியும். கடும் வேகக்காற்று எப்போதும் வீசப்போவதில்லை. அது தணிந்தவுடன் வளைந்து கொடுத்த மரங்கள் வழமை நிலைக்கு வரும்” என்று எந்த விதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் அமைதியாக பதிலளித்ததாக பல பிரதர்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் செயலாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றிய அண்மையில் காலமான மிகவும் மூத்த நிருவாகசேவை அதிகாரி பிரட்மன் வீரக்கோன் “Rendering unto Caeser” என்ற தலைப்பிலான தனது சுயசரிதையில் கூறியிருந்தார்.
ஜெயவர்தனவின் அந்தப் பதில் தனக்கு அதிர்ச்சியைக் கொடுத்த போதிலும், நீண்டகால அனுபவம்கொண்ட விவேகமிக்க அரசியல் தலைவரிடமிருந்து வந்த பதில் என்று நினைத்துக் கொண்டதாக வீரக்கோன் குறிப்பிட்டிருந்தார்.
வெலிக்கடை தமிழ்க் கைதிகள் படுகொலை
கொழும்பில் வன்செயல்கள் முழு அளவில் பரவத் தொடங்கிய முதல் நாளான 25 ஜூலை 1983 (திங்கட்கிழமை) வெலிக்டைச் சிறைச்சாலையில் முதலில் இருபதுக்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளினாலும் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட காடையர்களினாலும் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாவது தடவையாக ஜூலை 27 அதே சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து மொத்தமாக 53 தமிழ்க் கைதிகள் பலியாகினர்.
வன்செயல்கள் தணிந்து முதற்தடவையாக 4 ஆகஸட் 1983 பாராளுமன்றம் கூடியபோது சிறைச்சாலைப் படுகொலைகளை தடுத்துநிறுத்த அரசாங்கம் தவறியது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டன. அதற்கு பதிலளித்த பிரதமர் பிரேமதாச “சிங்களக் கைதி ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார்” என்று பதிலளித்தார்.
கறுப்பு ஜூலை வன்செயல்களுக்காக ஜெயவர்தனவோ அல்லது அன்று பிரதமராக இருந்து பிறகு ஜனாதிபதியாகவும் வந்த ரணசிங்க பிரேமதாசவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் இருந்த அரசியல்வாதிகளில் எவருமோ உயிருடன் இருந்தவரை தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை.
மன்னிப்புக் கோரிய சந்திரிகா
பின்னாளில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரமே இலங்கை அரசின் சார்பில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
கறுப்பு ஜூலையின் 21 வது வருட நினைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், “அந்த வன்செயல்களுக்காக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கூட்டாக குற்றப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இலங்கை அரசு மற்றும் இலங்கையின் சகல குடிமக்கள் சார்பிலும் மன்னிப்புக்கோரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
இந்தியத்தலையீடு
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு கறுப்பு ஜூலை வழிவகுத்தது. அன்றைய இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தி நிலைவரங்களை அவதானிக்க தனது வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பினார்.
நரசிம்மராவ் வந்திறங்கிய தினமான (29 ஜூலை 1983) கொழும்புக்கு விடுதலை புலிகள் வந்துவிட்டதாக புரளியைக் கிளப்பிய இனவாதச் சக்திகள் தமிழர்கள் மீது மீண்டும் படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டன. அன்றைய தினமே பெருமளவு கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுவதுண்டு. தமிழர்கள் சார்பில் இந்தியா தலையீடு செய்வதற்கு சிங்களவர்களின் எதிர்ப்பை வெளிக்காட்டவே அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கொழும்பில் இருந்தவேளை இனவாதச் சக்திகள் மீண்டும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை.
1984 அக்டோபர் 31 ஆம் திகதி பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்க்காவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா பூராவும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகள் மூண்டன. அந்த வன்முறைகளுடன் கறுப்பு ஜூலையை ஜனாதிபதி ஜெயவர்தன ஒப்பிட்டுக் கருத்து தெரிவித்தார்.
தாயாரின் கொலையை அடுத்து பிரதமராக அன்றைய தினமே பதவியேற்ற மகன் ராஜீவ் காந்தி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டனம் செய்து “இந்த பைத்தியக் காரத்தனத்தை உடனடியாக நிறுத்துங்கள்”( Stop this madness ) என்று வன்முறைச் சக்திகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால், கறுப்பு ஜூலை வன்முறைச் சக்திகளை ஒருபோதுமே கண்டிக்காத, தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கேட்காத ஜெயவர்தன திருமதி காந்தியின் கொலைக்கு பின்னரான தன்னியல்பான வன்செயல்களையும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் ஒப்பிடுவதில் எந்த அசௌகரியத்தையும் எதிர்நோக்கவில்லை.
கறுப்பு ஜூலைக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் (மலையக தமிழர்களைப் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டது) கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி திசாநாயக்க இந்தியா இலங்கை மீது படையெடுத்தால் 24 மணித்தியாலங்களுக்குள் தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆவேசமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டு மறுபுறத்தில் இராணுவத் தீர்விலேயே அக்கறை காட்டின. ஐரிஷ் குடியரசு அரசியல்வாதியும் சின் ஃபீன் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஜெரி அடம்ஸ் வட அயர்லாந்து நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பில் ஒரு தடவை கருத்து வெளியிட்டபோது “சமாதான முயற்சிகள் வேறு மார்க்கங்களிலான போர் நடவடிக்கைகளே” (Peace process are war by other means) என்று மிகவும் பொருத்தமான முறையில் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் சமாதான முயற்சிகளும் அவ்வாறே அமைந்தன என்பதை அனுபவ வாயிலாக நாம் கண்டோம்.
போர்ப்பிரமை
சிங்கள அரசியல் தலைவர்கள் அடிப்படையில் தமிழர் பிரச்சினை தொடர்பிலான தங்களது சிந்தனையில் ‘போர்’ பற்றிய ஒரு பிரமையைக் கொண்டிருந்தார்கள். இதற்கு இரு உதாரணங்களை நினைவுபடுத்துவது உகந்ததாக இருக்கும்.
1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஜெயவர்தன பிரதமராக பதவியேற்ற சில வாரங்களில் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்செயல்கள் மூண்டன. அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் காலஞ்சென்ற அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்.
அந்த வன்செயல் நாட்களில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜெயவர்தன அமிர்தலிங்கத்தை நோக்கி “சமாதானம் என்றால் சமாதானம். போர் என்றால் போர்” என்று கூறினார்.
அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் 1956 ஜூன் 5 பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்ததை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கத்தின் தூண்டுதலுடன் காடையர்கள் பொலிசார் பார்த்துக்கொண்டு நிற்க சத்தியாக்கிரகிகளை கொடூரமாக தாக்கினார்கள்.
அந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரான அமிர்தலிங்கம் தலையில் தனது காயத்துக்கு கட்டுப் போட்டுக்கொண்டு பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது அவரை விளித்து “கௌரவ போர்க் காயங்களே” (Honourable Wounds of War) என்று பண்டாரநாயக்க பேசினார்.
தமிழர்கள் ஆயுதத்தை கையிலெடுப்பதற்கு வெகு முன்னதாகவே தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் ஒரு போர் மனோபாவத்துடனேயே நோக்கினார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இறுதியில் அந்தப் போர் வருவதை எவராலும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதற்கு பின்னரானவை அண்மைக்கால வரலாறு.
இராணுவத்தீர்வு
இலங்கையின் சகல ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்காக அரசியல் தீர்வைப் பற்றி பேசினார்களே தவிர, இராணுவத்தீர்வை காணும் முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்துவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேசத்தின் பங்களிப்போ இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பதிலாக இராணுவத்தீர்வை நோக்கிய செயன் முறைகள் முனைப்படைந்து இறுதியில் முழுவீச்சில் போர் தீவிரப்படுத்தப்படுவத உறுதிசெய்ததையே காணக்கூடியதாக இருந்தது.
சர்வதேச அரசியல் நிகழ்வுப்போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்கச் செய்தன. போரில் அரசாங்கப் படைகள் வெற்றி பெறுவதற்கு உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று உரிமைகோரிய ராஜபக்ச போர்வெற்றியை மையப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தார்.
பேரினவாத அரசியலின் தோல்வி.
இராணுவவாத அணுகுமுறையுடன் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த ராஜபக்சாக்கள் இறுதியில் தங்களது தவறான ஆட்சிமுறை, ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப் பட்டார்கள். அவர்களின் வீழ்ச்சி உண்மையில் பெரும்பான்மை இனவாத அரசியலின் தோல்வியை பறைசாற்றியது. ஆனால், நாட்டுக்கு அழிவைத் தந்த அதே பாதையிலேயே — பேரினவாதத்தின் மூலமாக மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியும் என்று இன்னமும் நம்பவதை அவர்களின் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசு என்று கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் காணக்கூடியதாக இருக்கிறது.
நாட்டு மக்கள் எதிர் நோக்கும் பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் தவறான ஆட்சிமுறையை மூடிமறைக்கவும் இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணி திரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே இலங்கை வரலாறு காணாத படுமோசமான பெ்ருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உணர்த்திய முக்கிய படிப்பினையாகும்.
கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களில் நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகள் குறிப்பாக, சிங்கள தேசியவாத சக்திகள் இனவாதத்தைப் பயன்படுத்தி மீண்டும் தலையெடுப்பதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றன.
மீண்டும் இனக்கலவரம் பற்றிய பேச்சுக்கள்
தற்போது யாழ்ப்பாணம் செம்மணியில் புதைகுழிகளில் கண்டெடுக்கப்படும் மனித எலும்புக்கள் இலங்கையின் போர்க்கால மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் மீது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பெருமளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் தென்னிலங்கை சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் அந்த புதைகுழிகள் தொடர்பில் இனவாதப் பிரசாரங்களை முன்னெடுத்திருப்பதுடன் மீண்டும் இனக் கலவரங்கள் மூளக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இத்தகைய பிரசாரங்களின் முன்னரங்கத்தில் நிற்கிறார்கள்.
இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஓயாது சூளுரைக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் இனக்கலவரங்கள் குறித்து பொறுப்பற்ற முறையில் எச்சரிக்கை செய்யும் இந்த இனவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை.
13 வது திருத்தத்துக்கு எதிர்ப்பு
இதே இனவாதிகள் முன்னரும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தினால் இலங்கை இதுவரை காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்றும் சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்றும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேசினார்கள்.
இத்தகைய பின்னணியிலே, மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கறுப்பு ஜூலையில் இருந்தும் அதற்கு பின்னரான நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் நெருக்கடிகளில் இருந்தும் சிங்கள அரசியல் சமுதாயம் பெரும்பாலும் எந்த படிப்பினையையும் பெறவில்லை.
தமிழ் மக்களின் இன்றைய நிலை
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது பதினாறாவது வருடமாகும். இந்த கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது? நான்கு தசாப்தங்களிலும் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் புலம் பெயர்ந்து நவீன யூதர்கள் போன்று வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளில் உள்ள செல்வாக்குமிக்க ஆசிய புலம்பெயர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினராக இலங்கை தமிழர்கள் விளங்குகிறார்கள்.
இலங்கையில் வந்து முதலீடுகளைச் செய்து தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமாறு அரசாங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுக்கின்ற அளவுக்கு புலம்பெயர் இலங்கை தமிழர்களில் பலர் பொருளாதார ரீதியில் வலிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் குறி்ப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை இடையறாது ஈர்க்கும் அரசியல் செயற்பாடுகளிலும் அவர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்கள் ஈடுபட்டுவருகின்றன. ஆனால், அவற்றில் சில அமைப்புக்கள் இலங்கையில் சில தமிழ் அரசியல் கட்சிகள் தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு பொருத்தமான முறையில் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு ஊக்கம் கொடுக்கின்ற ஒரு நிலைவரத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த புலம்பெயர்ந்த சக்திகள் தமிழ்த் தேசியவாத அரசியல் களம் முன்னென்றும் இல்லாத வகையில் ஊழல் மயப்படத்தக்கதாக நிதியுதவிகளையும் அள்ளி வீசுகின்றன. நிலைவரத்துக்கு பொருத்தமான முறையில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளில் அக்கறை காட்டும் தமிழ் அரசியல்வாதிகளை ஓரங்கட்டுவதற்கு ஊக்கம் கொடுக்கும் செயற்பாடுகளுக்கும் வெளியில் இருந்து பணம் வருகிறது.
வடக்கு,கிழக்கில் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபடமுடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்கு பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாத சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
தொல்பொருள் ஆராய்ச்சி, வனப்பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது.
கறுப்பு ஜூலைக்கு பிறகு இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் 38 வருடங்கள் கடந்தும் கூட முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சகல அரசாங்கங்களுமே உறுதி செய்துகொண்டன .
இந்தியாவினால் கூட அது விடயத்தில் இலங்கையை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. சமாதான உடன்படிக்கைக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் தீர்வை நோக்கிய பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் 1991 மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, திருமதி குமாரதுங்கவின் ஆட்சியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2000 புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 2006 பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் மைத்திரிபால — ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னெடு்க்கப்பட்ட செயன்முறை ஆகியவையே அவையாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த காலஞ்சென்ற இரா.சம்பந்தன் அவர்கள் அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பல சந்தர்ப்பங்களிலும் இந்த முயற்சிகளைப் பற்றி திரும்பத்திரும்ப விளக்கிக் கூறிவந்தார். இறுதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் கூட சம்பந்தன் அவற்றை வலியுறுத்தினார். ஆனால், எந்த ஆட்சியாளரும் அவற்றில் அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இருக்கவில்லை.
ரணில் விக்கிரமசிங்க 2022 ஜூலையில் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாகக் கூறிக்கொண்டு சில முயற்சிகளை எடுத்து சர்வகட்சி மகாநாடு என்ற பெயரில் ஒருசில தடவைகள் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். 13 வது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்ப டுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று யாழ்நகரில் ஒரு தைப்பொங்கல் விழாவில் வைத்து அவர் அறிவித்தார்.
பொலிஸ் இல்லாத பதின்மூன்று
ஆனால், தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து அவர் பதின்மூன்றைப் பற்றி பேசுவதை தவிர்த்துக் கொண்டார். தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய சந்தர்ப்பம் ஒன்றில் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விக்கிரமசிங்க யோசனை முன்வைத்தார். அதை தமிழ்க்கட்சிகள் அடியோடு நிராகரித்ததை தொடர்ந்து
இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை மீண்டும் எவ்வாறு தொடங்குவது என்பது ஒரு சிக்கலாகவே இருக்கிறது.
கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்து வரும் ஒரு திருத்தத்தைக் கூட கைவிடவேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
கடந்த வருடம் மக்களின் அமோக ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்த ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தேசிய இனப்பிரச்சினையை பொறுத்தவரை, மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரம்பரிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபட்ட முறையில் சிந்தித்துச் செயற்படத் தயாராக இல்லை. தங்களது பழைய கொள்கைகளில் பலவற்றை சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவாக மாற்றிவிட்டதாக கூறும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் மாத்திரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை.
தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜே.வி.பி. இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு என்று முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த ஒரு கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக “இந்திய விஸ்தரிப்புவாதம்” என்பது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்ளைகளில் ஒன்றாக விளங்கியது. ஆனால், இன்று அதிகாரத்துக்கு வந்த பிறகு அதன் தலைவர் திசாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறது. ஆனால், இனப்பிரச்சினை விடயத்தில் மாத்திரம் இந்திய அரசாங்கம் முன்வைக்கின்ற கோரிக்கைக்கு இணங்குவதற்கு தயாராயில்லை.
13 வது திருத்தம் தொடர்பாக சர்ச்சை மூண்ட ஒரு சந்தர்ப்பத்தில் எதிரணியில் இருந்த திசாநாயக்க, “மாகாணசபைகள் கூட தமிழ் மக்கள் போராட்டத்தின் மூலமாகப் பெற்றவையே. தங்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வாக 13 வது திருத்தத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், எங்களுக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறினார். ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர் 13 வது திருத்தத்தைப் பற்றி பேசுவதே இல்லை. தென்னிலங்கை தேசாயவாத சக்திகளிடமிருந்து தனிமைப்பட ஜனாதிபதி விரும்பவில்லை.
புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும் வரை, மாகாணசபைகள் முறை தொடர்ந்து இருக்கும் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எட்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிய வில்லை. அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியும் அதற்கு ஒரு காரணம். 2024 பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்திக்கு முன்னென்றும் இல்லாத வகையில் பெருமளவில் வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை விளங்கிக்கொண்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேர்மறையான அணுகுமுறைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க முன்வருவதாக இல்லை.
சகல இனங்களையும் சமூகங்களையும் சமத்துவமான முறையில் நடத்துவது என்பது மேலோட்டமாக நோக்குகையில் உன்னதமான கோட்பாடாக தெரியும். ஆனால், வடக்கு, கிழக்கு மக்களுக்கு இருக்கக்கூடிய பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டால் மாத்திரமே ‘சகலருக்கும் சமத்துவம்’ என்ற கோட்பாட்டை தமிழ் மக்களால் திரும்பிப் பார்க்க முடியும் என்பதை ஜனாதிபதி திசநாயக்க உட்பட அரசாங்க தலைவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம்.
முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவரப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்து அதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி இலங்கையின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையில் முன்னைய தவறான போக்குகளில் இருந்து விடுபட்டு, சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை மதிக்கும் ஆரோக்கியமான கொள்கையை கடைப்பிடிக்க முன்வராத பட்சத்தில் முறைமை மாற்றம், புதிய அரசியல் கலாசாரம் என்பதெல்லாம் வெற்றுச் சுலோகங்களாகவே இறுதியில் முடியும்.
கறுப்பு ஜூலைக்கு பிறகு 42 வருடங்கள் கடந்தபோன பின்னரும் கூட இனப்பிரச்சினைக்கான தீர்வு நழுவிக் கொண்டு போவது இலங்கை அரசியல் சமுதாயம் வெட்கப்பட வேண்டிய ஒரு நிலைவரமாகும். உண்மையில், கறுப்பு ஜூலையை விடவும் அது பெரிய வெட்கக்கேடு!