அரசியல் அலசல்

1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்

1 month 1 week ago

Published By: RAJEEBAN

23 MAY, 2025 | 02:39 PM

image

tamilguardian

67 ஆண்டுகளிற்கு முன்னர் இந்த நாளில் இலங்கையில் சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள், பாலியல்வன்முறைகளில் ஈடுபட்டார்கள், கொலை செய்தார்கள். தமிழ் மக்களிற்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரமான இனவன்முறைகளில் ஒன்றாக இந்த வன்முறை வரலாற்றில் பதிவாகயிருந்து.

தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் அன்றைய நாட்களில் 300 முதல் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது. பலர் காயமடைந்தனர், சூறையாடல்கள் தமிழர்களின் வீடுகளை வர்த்தக நிலையங்களை அழித்தல் போன்றனவும் இடம்பெற்றன.

1958ம் ஆண்டு மே மாதம் 27 திகதி இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது.

1956ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் முதலாவது இன அடிப்படையிலான கலவரம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் இந்த வன்முறைகள் இடம்பெற்றன.

முதலில் 22ம் திகதி பொலனறுவையிலேயே வன்முறைகள் ஆரம்பமாகின. வவுனியாவில் இடம்பெறவிருந்த சமஸ்டி கட்சிக்கு சென்றுகொண்டிருந்த தமிழர்களை சிங்கள காடையர்கள் தாக்கியதை தொடர்ந்தே இந்த வன்முறைகள் வெடித்தன..

அதன் பின்னர் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு பரவின. கொழும்பில் இந்து மதகுரு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். கொழும்பு வீதிகளில் அலைந்து திரிந்த சிங்கள காடையர்கள் தங்களை கடந்து செல்பவர்களால் சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியுமா என பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியாதவர்கள் தாக்கப்பட்டனர்/கொல்லப்பட்டனர்.

அரசாங்கம் ஐந்து நாட்கள் காத்திருந்துவிட்டு அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது அரசியல் வாழ்க்கையை தீர்மானித்தது 1958ம் ஆண்டு இனக்கலவரம் என ஒருமுறை தெரிவித்திருந்தார். மார்ச் 1984 இல் பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

'நான் பாடசாலை மாணவனாகயிருந்தவேளை இடம்பெற்ற 1958ம் ஆண்டு இனக்கலவரம் என் மீது கடும் தாக்கத்தை செலுத்தியது. சிங்கள இனவாதிகளால் எங்கள் மக்கள் எப்படி ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன்.

"எனது நண்பரின் குடும்பத்தை சேர்ந்த விதவைபெண் ஒருவரை ஒருமுறை நான் சந்தித்தேன், அவர் இனவெறியர்களின் படுகொலை குறித்து விபரித்தார். இனக்கலவரத்தின் போது சிங்கள காடையர்கள் கொழும்பில் உள்ள அவரது வீட்டை தாக்கினார்கள். அவர்கள் கணவனை கொலை செய்தார்கள், வீட்டிற்கு தீ வைத்தார்கள். அவரும் அவருடைய பிள்ளைகளும் கடும் காயங்களுடன் தப்பினார்கள், அவரது உடலில் காணப்பட்ட காயங்களை பார்த்தவேளை நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்."

"சுடுதாரில் குழந்தைகளை வீசியது குறித்து நான் கேள்விப்பட்டேன். அவ்வாறான ஈவிரக்கமற்ற இதுபோன்ற கொடுமையான கதைகளைக் கேட்டபோது என் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்த இனவெறி அமைப்பிலிருந்து என் மக்களை மீட்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் என்னை ஆட்கொண்டது. நிராயுதபாணிகளான அப்பாவி மக்களுக்கு எதிராக ஆயுத பலத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பை எதிர்கொள்ள ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரே வழி என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன்" என விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவித்திருந்தார்.

எமர்ஜென்சி '58: சிலோன் இனக் கலவரங்களின் கதையில் படுகொலை பற்றி எழுதுகையில் டார்சி விட்டாச்சி இவ்வாறு குறிப்பிட்டார்.

கலவரங்கள் தன்னிச்சையாக நடக்கவில்லை என்று கவர்னர் ஜெனரல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்தார் என குயின்ஸ் மாளிகையிலிருந்து செய்தி கசிந்தது.

அவர் கூறியது: ‘ஜென்டில்மேன் இது தன்னிச்சையாக வகுப்புவாதத்தின் வெடிப்பு என்று உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதை உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடலாம்.

இதை கவனமாகத் திட்டமிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சரியாக அறிந்தவர்களின் பின்னால் இருந்த ஒரு சூத்திரதாரியின் வேலை இது. இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட ஒரு டைம்- பொம், இப்போது வெடித்துவிட்டது.

1958 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கை மக்கள் அனுபவித்த பயங்கரமும் வெறுப்பும் அந்த அடிப்படைத் தவறின் விளைவாகும். நம்மிடம் என்ன மிச்சம்? இடிந்து விழுந்த ஒரு தேசம் நாம் மறக்க முடியாத சில கொடூரமான பாடங்கள் மற்றும் ஒரு முக்கியமான கேள்வி: சிங்களவர்களும் தமிழர்களும் பிரியும் நிலையை அடைந்துவிட்டார்களா?

https://www.virakesari.lk/article/215500

காணி நிலம் வேண்டும்! நிலாந்தன்.

1 month 1 week ago

Kani-nilam.jpg?resize=520%2C300&ssl=1

காணி நிலம் வேண்டும்! நிலாந்தன்.

காணி நிலம் வேண்டும்! நிலாந்தன்.

காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் நாலாம் பிரிவின் கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலானது இலங்கைத் தீவின் இன முரண்பாடுகள் தொடர்பில் ஆகப் பிந்திய தலைப்புச் செய்தியாக மாறியிருக்கின்றது.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5.940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத் துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத் தப்படும் என மேற்படி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து வடமராட்சி கிழக்கு வரையிலுமான நீண்ட பிரதேசத்துக்குள் காணப்படும் காணிகளைக் குறித்த மேற்படி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகளில் கிட்டத்தட்ட அரைவாசிக்கும் குறையாதவை அடர் காடுகள், திறந்த வெளிச் சதுப்பு நிலங்கள், குளங்கள், ஆறுகள்,நீர்த் துளைகள்,வண்டில் பாதைகள்…என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆறுகள், குளங்கள், அடர் காடுகள்,சிறுகாடுகள் சதுப்பு நிலங்கள், வண்டில்பாதைகள் போன்றவற்றுக்கு யார் யார் உரிமை கோருவார்கள்?

மூன்று தசாப்தங்களுக்கு மேலான யுத்தம் ஈழத் தமிழர்களை ஆவணம் காவிகளாக மாற்றியது.ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும்,ஏன் புலப்பெயர்ச்சியின் போதும் கூட, ஈழத் தமிழர்கள் ஆவணங்களைக் காவுகின்றார்கள்.இறுதிக் கட்டப் போரில் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்தவர்களுக்கு ஐநா முதலில் வழங்கிய பொருட்களில் ஒன்று ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான பிளாஸ்டிக் ஃபைல் பைகள் ஆகும். எனினும் இடப்பெயர்வின் அகோரம் காரணமாக ஈழத் தமிழர்கள் எல்லா ஆவணங்களையும் காவ முடிந்ததில்லை. இறுதிக் கட்டப் போரில் வன்னியில் வாழ்ந்தவர்கள் பலரிடம் அவர்களுடைய வீட்டில் நடந்த நல்லவைகள் கெட்டவைகள் தொடர்பான ஒளிப்பட ஆல்பங்கள் அனேகமாக இல்லை.

ஒரு பகுதியினரிடம் தமது தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இல்லை. தொடர்ச்சியான இடப்பெயர்களின் போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவதா அல்லது ஆவணப் பையைக் காவுதா என்று கேள்வி வரும் பொழுது, ஆவணங்கள் கைவிடப்படுகின்றன. இவ்வாறு கைவிடப்பட்ட ஆவணங்களில் காணி உறுதிகளும் உட்பட காணி தொடர்பான ஆவணங்கள் பல அடங்கும். இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெயர்வுக்கு உள்ளான ஒரு மக்களிடம் காணி தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வந்து குறிப்பிட்ட கால எல்லைக்குள் தமது உரித்தை நிரூபிக்குமாறு மேற்சொன்ன வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டது போல கோவகணத்தோடு வந்த மக்களிடம் காணி உறுதி உண்டா என்று கேட்கும் வர்த்தமானி அது.

ஒருபுறம் இடப்பெயர்ச்சி, புலப்பெயர்ச்சி காரணமாக தமிழ்க் கிராமங்களும் வாழிடங்களும் இடம் மாறியுள்ளன. ஒரு பகுதி தமிழர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். இது மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி வரும். இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் பலருடைய காணிகளை அவர்கள் பராமரிப்பது இல்லை. நாட்டில் உள்ள உறவினர்கள் சிலர் பராமரிக்கிறார்கள். ஆனால் அதுவும் இப்பொழுது பல இடங்களில் சிக்கலாகி நீதிமன்றம் வரை வந்துவிட்டது. காணிகளைப் பராமரிக்கும் இரத்த உரித்துச் சொந்தங்களே அந்த காணிகளை அபகரிக்க முற்பட்டு அதனால் வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொந்தச் சகோதரர்களின் காணிகளை அபகரிக்க முற்படும் வழக்குகளும் இதில் அடங்கும்.

புலம்பெயர்ந்த நாட்டில் செற்றில் ஆகிவிட்ட தமது உறவினர்கள் திரும்ப வரப்போவதில்லை, திரும்பி வந்து காணிகளையும் வீடுகளையும் ஆண்டு அனுபவிக்கப் போவதில்லை என்பதனால் அவற்றை நாங்கள் திருடினால் என்ன அபகரித்தால் என்ன என்று இங்குள்ள ஒரு பகுதி சொந்தங்கள் சிந்திக்கின்றன. இது தமிழ்ச் சமூகத்தின் சீரழிந்த பகுதிகளில் ஒன்று. இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மேற்சொன்ன அரச வர்த்தமானியானது 5940 காணிகளை மூன்று மாத கால அவகாசத்துக்குள் உரிய ஆவணங்களோடு வந்து உரிமை கோருமாறு அறிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பலாலியில் ஒரு காணி விடுவிப்பு நிகழ்வின் போது ஒரு படைத்தளபதி பேசிய விடயத்தை ஒரு சமயப் பெரியார் எனக்குச் சுட்டிக் காட்டினார். அந்தத் தளபதி கூறினாராம், தமிழர்கள் காணிகளை விடுவிக்குமாறு போராடுகிறார்கள். ஆனால் விடுவித்த காணிகளில் வந்து குடியமர்வது குறைவு என்று.

ஆனால் பலாலி என்ற கிராமமே இப்பொழுது வரைபடத்தில் மட்டும் தான் உண்டு,அது நடைமுறையில் இல்லை என்று பலாலியில் பிறந்தவர்களும் பலாலியில் வாழ்ந்தவர்களும் கூறுகிறார்கள். ஏனென்றால் அது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஒரு படைத்தளத்தின் பகுதியாக மாற்றப்பட்டு விட்டது. வடக்கு கிழக்கில் உள்ள கணிசமான படைத்தளங்கள் தனியார் காணிகளையும் சுவீகரித்துக் கட்டி எழுப்பப்பட்டவைதான்.

ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் முக்கிய ஐந்து அம்சங்களில் ஒன்று தாயகம்.பாரம்பரிய தாயகம். அதாவது நிலம். அந்த நிலத்தின் மீதான ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் ஒரு மக்கள் கூட்டம் தேசமாகவே இருக்க முடியாது.நிலம் இல்லையென்றால் கடல் இல்லை. நிலமும் கடலும் இல்லையென்றால் சனமும் இல்லை. எனவே நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவது;பேணுவது என்பது அரசியல் அதிகாரத்தின் பிரதான பகுதி.

இலங்கை அரசாங்கம் காணிகளை, அளந்தாலோ அல்லது காணிகள் தொடர்பான விவரங்களை ஒரு மையத்தில் சேகரிக்க முற்பட்டாலோ தமிழ் மக்கள் அதைக் கண்டு அச்சப்படுகிறார்கள். ஏனென்றால் உரித்தாளர் இல்லாத காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கலாம் என்ற பயம். தமது மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி புலம்பெயர்ந்திருக்கும் ஒரு பின்னணியில்,ஈழத் தமிழர்களிடம் அப்படிப்பட்ட அச்சம் எழுவது இயல்பானதே. ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழ் மாகாணங்களுக்குள்ள வரையறுக்கப்பட்ட காணி அதிகாரத்தின் கீழ்,நிலப் பறிப்புக்கு எதிராகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் நியாயமான பயம் அது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக அமெரிக்காவின் மில்லீனியம் உதவித் திட்டம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இந்த உதவி திட்டத்தின்படி பெருமளவு நிதியை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கப் தயாராக இருந்தது. அது கடன் அல்ல, தானம். ஆனால் அதற்காக அமெரிக்கா நாட்டின் கேந்திரமான பகுதிகள் சிலவற்றின் நிலம் தொடர்பான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஆவணங்களைத் தருமாறு கேட்டது. அவ்வாறு ஒர் உதவித் திட்டத்துக்காக உதவியைப் பெறும் நாட்டின் நிலம் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களைக் கேட்பது சரியா? என்று ஒர் ஊடகவியலாளர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரி ஒருவரைக் கேட்டபொழுது, அவர் சொன்னாராம், ஏன், அதில் என்ன தவறு? என்று. பின்னர் அந்தத் திட்டத்தை கோத்தாபய அரசாங்கம் நிராகரித்துவிட்டது. பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணம் என்று ரணிலின் ஆதரவாளர்கள் முன்பு கூறி வந்தார்கள்.

அதாவது ஓர் உலகப் பேரரசு, சிறிய நாடு ஒன்றுக்கு உதவி செய்யும் பொழுது அந்த நாட்டின் நிலம் தொடர்பான ஆவணங்களை தன் கையில் வைத்திருக்க விரும்புகிறது என்றால், அந்த உதவிக்கு பதிலாக நிலத்தை தன் கண்காணிப்புக்குள் வைத்திருக்க விரும்புகிறது என்று பொருள்.

1998 இல் அப்போதிருந்த இலங்கை அரசாங்கம் ‘பிம்சவிய’ என்ற பெயரில் காணி உரித்து பதிவுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. நாட்டில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தமது காணி உரித்துக்களை உறுதிப்படுத்தி புதிய, ஒரே ஒரு பக்கத்தில் அச்சிடப்பட்ட ஆவணத்தைப் பெற வேண்டும் என்று பிம்சவிய திட்டம் அறிவுறுத்தியது.

இப்படிப்பட்டதோர் உலகளாவிய மட்டும் உள்ளூர் அரசியல் பின்னணியில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு தேவையான ஆகப் பிந்திய பிடியைக் கொடுத்திருக்கின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில், குறிப்பாக ஏப்ரல் மாதக் கடைசியிலும் மே மாதத்தின் தொடக்கத்திலும் இந்த விடயம் சூடான பேசுபொருளாக மாறியது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் திகதி மார்ச் 28. ஆனால் அது தமிழ் அரசியலில் சூடான பேசு பொருளாக மாறியது ஏப்ரல் கடைசியில். அதை தலைப்புச் செய்தியாக மாற்றியவர் சர்ச்சைக்குரிய விடையங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் ஊடகவியலாளர்களில் ஒருவர்.முன்பு யாழ் மாநகர சபையின் உறுப்பினராக இருந்தவர்.கெட்டிக்காரர்.அவர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர் என்று ஒர் அபிப்பிராயம் பரவலாக உண்டு.

அது உண்மையோ பொய்யோ, அந்த வர்த்தமானியை வைத்து சுமந்திரன் தன்னை தமிழ் அரசியலிலும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் பலப்படுத்தி வருகிறார். அந்த வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெறுவதற்கு இம்மாதம் 28ஆம் திகதி வரையிலும் அவர் கால அவகாசம் வழங்கியுள்ளார். இந்த விடயத்தை அரசுக்கு எதிரான ஒரு பெரிய போராட்டமாக மாற்றப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.இந்த விடயத்தில், நிலப் பறிப்பு தொடர்பில் சுமந்திரனின் நடவடிக்கைகள் தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்துபவை.

தேசிய மக்கள் சக்திக்கு எதிரான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை மேற் சொன்ன வர்த்தமானி ஒன்றாக்கியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் அதை ஒரு பேசு பொருளாக மாற்றினார்கள்.அதன் விளைவாக அரசாங்கம் தன் நிலைப்பாட்டில் இருந்து ஓரளவுக்குக் கீழிறங்கி வந்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ஹரிணி இது சம்பந்தமாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளை சந்தித்திருக்கிறார். சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய காணிகளை சுவிகரிக்கும் உள்நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என்று கூறியுள்ளார்.எனினும் குறிப்பிட்ட வர்த்தமானி இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் மீளப் பெறப்படவில்லை. அடுத்த அமைச்சரவைக்கு கூட்டத்தில் அது தொடர்பில் பேசி முடிவெடுக்கப் போவதாக ஹரிணி கூறியுள்ளார்.

https://athavannews.com/2025/1433124

மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் — வீரகத்தி தனபாலசிங்கம் —

1 month 1 week ago

மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும்

May 25, 2025

மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாணசபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள்  தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாணசபை தேர்தல்கள் ஏழு வருடங்களாக  நடத்தப்படாமல் இருக்கின்றன. 

உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி காரணமாக மாகாணசபை தேர்தல்களை தற்போதைக்கு நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டாது  என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அரசாங்கம் மாத்திரமல்ல, எதிர்க்கட்சிகளும் கூட மாகாணசபை தேர்தல்களை விரைவில் சந்திப்பதற்கு விரும்பப் போவதில்லை. அதனால், அந்தத் தேர்தல்களை  நடத்துமாறு தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடமிருந்து அரசாங்கத்துக்கு நெருக்குதல் வரப்போவதில்லை. 

அதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும் பல வருடங்களாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்தி மாகாணங்களின் நிருவாகத்தை  மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருவதில்லை. இந்திய தலைவர்கள் கொழும்பு வருகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுடனான சந்திப்புகளில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு  நெருக்குதலை கொடுக்குமாறு வேண்டுகோள் விடுப்பதை வழக்கமாகக்  கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  அரசாங்கத்துடன் நேரடியாக அதைப் பற்றி கவனம் செலுத்துவதில்லை.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வருட இறுதியில் புதுடில்லிக்கு  மேற்கொண்ட விஜயத்தின்போது இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன்  மாகாணசபை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி  அதே வேண்டுகோளை கடந்த ஏப்ரலில் கொழும்புக்கு விஜயம் செய்த வேளையிலும்  முன்வைத்தார். அவருக்கு  எந்த பதிலையும் வெளிப்படையாக கூறாத ஜனாதிபதி திசாநாயக்க மாகாணசபை தேர்தல்கள் குறித்து தற்போது எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் இப்போது பெரும்பாலும் தேசிய இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசுவதில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள்  தொடர்பில் தனது அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் தென்னிலங்கை தேசியவாத சக்திகளை தங்களிடமிருந்து அன்னியப்படுத்திவிடக் கூடாது என்பதில் மாத்திரமே அவர் எச்சரிக்கையாக இருக்கிறார் என்று தெரிகிறது. 

இத்தகைய ஒரு பின்புலத்தில், தென்னிலங்கையை சேர்ந்த இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஒரு  முன்னாள் இராஜதந்திரியும் மாகாணசபைகள் குறித்து அண்மையில் வெளியிட்ட  கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாக இருக்கின்றன. 

மாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும் என்று இடையறாது வலியுறுத்திவரும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா மக்களினால் தெரிவு செய்யப்படும் மாகாணசபைகளை வலுப்படுத்துவதன் மூலமாக அதிகாரப் பகிர்வுக்கு புத்துயிரளிக்க வேண்டும் என்றும் மாகாணசபைகள் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு தடையாக இருக்கும் ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்றும்  எழுதியிருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டதை போன்ற அமைச்சர்கள் மட்டத்திலான இன்னொரு குழுவை மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்க வேண்டும் என்றும் தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. உண்மையில் இந்தக் கோரிக்கை தமிழ்க் கட்சிகளிடம் இருந்தே வந்திருக்க வேண்டியதாகும். 

தற்போது இந்திய வெளியுறவுச் செயலாளராக இருக்கும் விக்ரம் மிஸ்றி பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்த நாட்களில் அவருடனான சந்திப்பு ஒன்றின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் ஆளுநர்களுக்கு இருக்கும் அளவுகடந்த  அதிகாரங்கள் காரணமாக மாகாண முதலமைச்சர்களினால் பயனுறுதியுடைய முறையில் செயற்பட முடியவில்லை என்றும் மாகாணசபைள் மூலமாக  தமிழ் மக்களால்  எந்த பயனையும் அடைய முடியாமல் இருக்கிறது என்றும் கூறினார்கள். அதற்கு பதிலளித்த அவர் ஆளுநர்களின் அதிகாரங்களில் கணிசமானவற்றை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் அரசியல்வாதிகள்  முன்வைத்து அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார். ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனறும் அவர் கேட்டார். 

ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்க வேண்டியதன் அவசியத்தை கலாநிதி ஜெகான் பெரேரா வலியுறுத்தியிருக்கும் நிலையில், விக்ரம் மிஸ்றி கொழும்பில்  அன்று தெரிவித்த கருத்தை நினைவுபடுத்துவது பொருத்தமானது.

 பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து உள்ளூராட்சி தேர்தல்களில் மீண்டு விட்ட தமிழ்க் கட்சிகள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு தடையாக இருக்கும் விடயங்களை பாராளுமன்றத்தின் மூலமாக அகற்றி விரைவாக அந்த தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஒன்றிணைந்து அரசாங்கத்தைக் கோருவதே தற்போதைய தருணத்தில் விவேகமான செயலாக இருக்கும் என்று முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக கூறியிருக்கிறார். 

அந்த கோரிக்கைக்கு தென்னிலங்கையிலும் சர்வதேச சமூகத்திலும் ஆதரவைப் பெறக்கூடியதாக இருக்கும் என்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான எந்தவொரு பேச்சுவார்த்தையும் புதிதாக தெரிவு செய்யப்படும் மாகாணசபைகளுக்கும் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிருவாகத்துக்கும்  இடையிலானதாகவே இருக்க முடியும் என்றும் அவர் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பின்னரான சூழ்நிலைகள் குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தைகளின் விளைவுகளை சர்வகட்சி வட்டமேசை மகாநாடு ஒன்றில் சமர்ப்பித்து நீண்டகால அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை நோக்கிப் பயணிக்க முடியும் என்பது தயானின் கருத்தாக இருக்கிறது. 

அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு தொடர்பாக முடிவற்ற பேச்சுவார்த்தைகளை நடத்துவது சிங்கள அரசியல் அதிகார வர்க்கம் கவனத்தை திசைதிருப்புவதற்கு காலங்காலமாக கடைப்பிடித்து வருகின்ற ஒரு அணுகுமுறை என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் தயான் அத்தகைய ஒரு பொறியில் தமிழ்க் கட்சிகள் விழப்போகின்றனவா என்று  கேள்வியெழுப்புகிறார். 

தேசிய இனப்பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வைக் கண்டு அதில் இருந்து நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்பது குறித்து பேசிவரும் தமிழ்க்கட்சிகள் அதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள் குறித்து சிந்திப்பதில்லை.  சாத்தியமாகக்கூடியதும் இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் ஆதரவைப் பெறக்கூடியதுமான  இடைக்கால ஏற்பாடுகள் குறித்து தமிழ்க்கட்சிகள் அக்கறை செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்களின் கருத்துக்கள் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. 

உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்ட  பிறகு நிறைவடையாமல் இருக்கும் எல்லை நிர்ணயச் செயன்முறைகள் மாகாணசபை தேர்தல்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. எல்லை நிர்ணயச் செயன்முறைகள் நிறைவுசெய்யப்பட்டால் அல்லது முழுமையாக விகிதார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தை திருத்தினால் மாத்திரமே மாகாணசபை தேர்தல்களை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ஆர்.எம்.ஏ.எல். இரத்நாயக்க சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். 

அதை ஆட்சேபித்து  அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கும் சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான குசல் பெரேரா தற்போதைய சட்டக்கட்டமைப்பை ஆணைக்குழுவின் தலைவர் தவறாக வியாக்கியானம் செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். எல்லை நிர்ணயச் செயன்முறைகள் நிறைவு செய்யப்படாவிட்டாலும் கூட மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஆணைக்குழுவுக்கு எந்த தடையும் கிடையாது என்று பெரேரா வாதாடுகிறார். 

சட்டத்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது எல்லை நிர்ணயச் செயன்முறையை நிறைவுசெய்வதற்கு பாராளுமன்றம் தவறுவதனால் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணசபைகள் தேர்தல் சட்டம் செல்லுபடியற்றதாகப் போய்விடுவதில்லை என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் பெரேரா, புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்ட பிறகு சபாநாயகர் கைச்சாத்திடும் வரை, நடைமுறையில் உள்ள சட்டங்கள் செல்லுபடியாகக் கூடியவை என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்றும் ஆணைக்குழு மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசின் எந்த நிறுவனத்திடமிருந்தும் அனுமதியைப் பெறவேண்டிய தேவை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு சிலரிடமிருந்தாவது   இத்தகைய கோரிக்கைகளும் கருத்துக்களும்  வருகின்ற அதேவேளை தமிழர் தரப்பில் அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசியல் ஆய்வாளர்களிடமிருந்தோ மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் மாகாணசபைகளின் நிருவாகங்களை மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அக்கறை வெளிப்படுவதில்லை என்பது ஒரு விசித்திரமான அம்சமாகும். 

மாகாணசபைகளின் மூலமாகவோ அல்லது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவோ தேசிய இனப்பிரச்சினைக்கு நிலைபேறான அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிட முடியும் என்று இந்த கட்டுரையாளர் நம்புவதாக எவரும் கருதவேண்டியதில்லை. ஆனால், போரின் முடிவுக்கு பிறகு 16 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட தமிழ் மக்கள் பெருமளவக்கு ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருப்பதால் அவர்களின் பிரச்சினைகளை கையாளுவதற்கான அணுகுமுறையை எங்கிருந்து தொடங்குவது என்ற தெளிவு தமிழ் அரசியல் சமுதாயத்திடம் இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. 

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் தென்னிலங்கையைச் சேர்ந்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது என்று கூறிக்கொண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ்க்கட்சிகள் கூடுதலான வாக்குகளைப் பெற்றுவிட்டதால் நிலைவரத்தில் எந்த மாற்றமும்  வந்துவிடவில்லை. தங்களுக்கு கிடைத்த வாக்குகள் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியவாத அரசியல் இலட்சியத்தை கைவிடவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டதாக தமிழ் அரசியல்வாதிகள் திருப்தியடைந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அவர்களால் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு இன்னமும் வரமுடியவில்லை. தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் மாத்திரம்தான் அவர்களால் ஒன்றுபட்டு நிற்கமுடிந்தது.

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ. சுமந்திரன் வடமாகாண சபை தேர்தலில் தனது கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தினார். 

அது தொடர்பாக ஊடக சந்திப்பில் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் செய்தியார்கள் கேட்டபோது மாகாணசபை தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதே தெரியாமல் இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி பேசுவது அவசியமற்றது என்று அவர் பதிலளித்தார். மாகாணசபை தேர்தலைப் பற்றிக்கூட பேச வேண்டாம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொணடார். 

யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த வாரம் நேர்காணல் ஒன்றை வழங்கிய சிறீதரனிடமும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது குறித்து  சுமந்திரன் வெளியிட்ட விருப்பம் தொடர்பாக  கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்  சுமந்திரன் பற்றி சில விமர்சனங்களை முன்வைத்ததுடன் மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். எல்லை நிர்ணயம் தொடர்பிலான  சட்ட இழுபறியை அதற்கு சிறீதரன் ஒரு காரணமாகவும் சொன்னார்.

முதலமைச்சராக யார் போட்டியிடுவது என்பது தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம். ஒரு அரசியல்வாதி என்ற வகையில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சுமந்திரன் விரும்புவதிலும் தவறில்லை. தமிழரசு கட்சி தற்போது அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், அவருக்கு எதிராக அனேகமாக சகல தமிழ்க்கட்சிகளும் செய்த படுமோசமான  பிரசாரங்களுக்கு மத்தியிலும்  வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் மக்கள் தமிழரசு கட்சிக்கே கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். அதனால், அவர் மீதான வெறுப்புப் பிரசாரங்களை தமிழ் மக்கள் தற்போது எவ்வாறு நோக்குகிறார்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழரசு கட்சிக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கலாம் என்ற நம்பிக்கையை சுமந்திரனுக்கு கொடுத்திருக்கலாம். அது வேறு விடயம்.

ஆனால், சிவஞானமும் சிறீதரனும் செய்தியாளர்கள்  சுமந்திரன் தொடர்பாக  எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறுவதை விடுத்து முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சினைக்கு அப்பால் மாகாணசபை தேர்தல்களை விரைவில் நடத்தவேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுப்போம் என்றுதான் கூறியிருக்க வேண்டும். அத்தகைய அரசியல் பக்குவத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. தனிப்பட்ட ஆளுமை மோதல்களுக்கு அப்பால் மக்களின் நலன்களில் அக்கறை காட்டும் மனோபாவம் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது. 

தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்கள் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புக்கள்  இருக்கும் என்றால் மாகாணசபை தேர்தல்களே வேண்டாம் என்றுகூட  எமது அரசியல்வாதிகள் கூறிவிடுவார்கள் என்று அல்லவா எண்ண வேண்டியிருக்கிறது.

https://arangamnews.com/?p=12044

NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் — கருணாகரன் —

1 month 1 week ago

NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும்

May 24, 2025

NPP யின் தடுமாற்றங்கள்:  குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும்

— கருணாகரன் —

மிகச் சிறப்பான மக்கள் அங்கீகாரத்தையும் அரசியல் ஆணையையும் பெற்றிருக்கும் NPP,  தீர்மானங்களை எடுப்பதில் குழப்பத்துக்கு – தடுமாற்றத்துக்கு- உள்ளாகியிருப்பது ஏன்? 

இன்றைய இலங்கையில் அனைத்துச் சமூகத்திலும் ஜனவசியம் மிக்க ஒரே தலைவராக இருக்கிறார்  அநுரகுமார திசநாயக்க. ஆனாலும் அந்த மக்களுடைய நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியாதிருப்பது எதற்காக? 

NPP க்குப் பின்னிருக்கும் அல்லது அநுரகுமார திசநாயக்குவுக்குப் பின்னுள்ள சக்திகள் எவை? யாருடைய நிகழ்ச்சி நிரலில் NPP  இயங்குகிறது? அல்லது அநுரகுமார திசநாயக்க இயங்குகிறார்? 

ஜே.வி.பி தவிர்ந்த வெளிச்சக்திகளின் பின்னணியோ பிடியோ இல்லாமல் தனித்துச் சுயாதீனமாக NPP  இயங்குவதாக இருந்தால், அந்த அடையாளம் என்ன? 

இவ்வாறான கேள்விகள் NPP அரசாங்கத்தைக் குறித்தும் அநுரகுமார திசநாயக்கவைக் குறித்தும் எழுகின்றன. இவ்வாறான கேள்விகள் எழும் என்பதை NPP யும் புரிந்து கொள்ள வேண்டும். அநுரகுமார திசநாயக்கவும் புரிந்து கொள்ள வேண்டும். NPP யின் ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

00

இலங்கையின் சீரழிந்த அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவே -மாற்றுச் சக்தியாகவே NPP ஐ மக்கள் பார்த்தனர்; இன்னமும் பார்க்கின்றனர்.  மக்கள் மட்டுமல்ல, வெளியுலகமும் அப்படித்தான் எதிர்பார்க்கிறது.

NPP யும் அப்படிச் சொல்லித்தான் அதிகாரத்துக்கு வந்தது. குறிப்பாக முறைமையில் மாற்றம் (System Change) செய்வதாக. 

முறைமையில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நடைமுறையில் மாற்றம் ஏற்படும். இதனால்தான் முறைமையில் மாற்றம் செய்வதற்கான அதிகார பலத்தை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் NPPக்கு மக்கள் கொடுத்தனர். இல்லையெனில் 60 ஆண்டு வரலாற்றில் அப்படியொரு வெற்றியை NPP யோ JVP யோ பெற்றிருக்க முடியாது. இதனை JVP யும் NPP உம் புரிந்து கொள்வது அவசியம்.

ஆகவே முறைமை மாற்றத்தின் (System Change) மூலம் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பையும் NPP செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், முறைமை மாற்றத்தை (System Change) செய்வதற்குத் தயக்கம் கொள்கிறது NPP. அப்படியென்றால் இதைச் செய்யக் கூடிய ஆற்றல் NPP க்கு இல்லையா? அல்லது அதிகாரத்துக்கு வந்த பிறகு முறைமை மாற்றத்தை NPP விரும்பவில்லையா? அல்லது முறைமை மாற்றம் (System Change) தொடர்பாக  NPP க்குள் குழப்பங்களும் இழுபறிகளும் நிகழ்கின்றனவா?

NPP க்குள் குழப்பங்கள் நிகழ்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. என்பதால்தான் ஜனாதிபதியின் கருத்துகளுக்கும் நிலைப்பாட்டுக்கும் மாறான முறையில் அமைச்சர்களின் கருத்துகளும் நடவடிக்கைகளும் உள்ளன. ஜனாதிபதி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்போடு உள்ளதாகக் காட்டுகிறார். அநுரவின் உரைகளும் முயற்சிகளும் இதைச் சொல்கின்றன. அவரிடம் நிதானமும் மென்போக்கும் யதார்த்தத்தைப் புரிய வைக்கும் முனைப்பும் உள்ளது. 

பௌத்த பீடங்களுடன் அநுரகுமார நெருக்கத்தைக் காட்டுவது கூட தன்னுடைய கடினமான நோக்கினை நிறைவேற்றுவதற்கான ஒரு வகையான அரசியல் உத்தியாகவே படுகிறது. அதாவது தனக்கும் சிங்கள பௌத்தத்துக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக அந்தத் தரப்பினர் உணரக் கூடாது. அப்படி உணர்ந்தால் அது தன்னுடைய மாற்று அரசியலை – முறைமை மாற்றத்தோடு கூடிய அரசியலை மேற்கொள்வதற்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதியே பௌத்த பீடங்களுடன் நெருக்கத்தைக் காட்டுவதாக தெரிகிறது. 

ஏறக்குறைய பிரதமர் ஹரிணியும் இந்த அலைவரிசையில்தான் உள்ளார். NPP யின் முகமே பிரதானமாக இவர்கள்தான்.  

ஆனால், அரசாங்கத்தரப்பிலுள்ள ஏனையவர்கள் (NPP யின் ஏனைய ஆட்கள்) JVP யின் அடையாளத்தையே பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் இன்னும் இனவாதச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை. 

என்பதால்தான்  இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணும் உளநிலை (கரிசனை) NPP க்கு இல்லை என்பதை அமைச்சர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வரும் கருத்துகள் சொல்கின்றன. இது எவ்வளவு கவலைக்கும் வெட்கத்துக்கும் உரியது! இனவாதத்தைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும் வரையில் JVP யினால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியவில்லை. இனவாதத்துக்கு வெளியே வந்து NPP யாக அது முகம் காட்டியபோதுதான் அதற்கு அங்கீகாரமும் அதிகாரமும் கிடைத்தது.  தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவை NPP பெற்றதும் இனவாதமற்ற போக்கை அது கொண்டிருக்கிறது என்றபடியாற்தான்.  

JVP யினர் NPP யைப் பிடித்துப் பின்னோக்கி இழுப்பதற்குக் காரணம், அவர்கள்  இயல்பில் இனவாத சிந்தனையில் ஊறியவர்கள் என்பதே. ஆனால், அதிலிருந்து விலகி, மீறி வரவேண்டும் என்பதே வரலாற்றின் நிபந்தனையாகும்.

ஆனாலும் இந்த விடயத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் வழித்தடத்திலேயே NPP யும் பயணிக்க முயற்சிக்கிறது. அல்லது NPP ஐ அப்படிப் பயணிக்க வைக்க JVP முயற்சிக்கிறது. 

தன்னுடைய நிறைவேற முடியாதிருந்த நீண்டகாலக்கனவுகளை NPP யின் மூலம் நிறைவேற்றுவதற்கு JVP விரும்புகிறது. 

அதனால் அது  NPP யில் அழுத்தத்தைப் பிரயோகிக்க முயற்சிக்கிறது. என்பதால்தான் NPP க்குள் குழப்பங்களும் தடுமாற்றங்களும் நீடிக்கின்றன. NPP க்குள் குழப்பங்களும் தடுமாற்றங்களும் உள்ளவரை அதனால் முறைமை மாற்றத்தை (System Change) மட்டுமல்ல மக்கள் எதிர்பார்க்கின்ற எதையும் செய்யவே முடியாது. 

இதுதான் இப்போது NPP மீதான விமர்சனங்களாகவும் நம்பிக்கையீனமாகவும் மேற்கிளம்புகின்றன. 

இதொரு புறமிருக்க, தமிழ் பேசும் சமூகத்தினர் நம்பிக்கை கொள்ளக் கூடிய அளவுக்கு NPP யின் எந்தச் செயற்பாடுகளும் அமையவில்லை. பதிலாக அவர்களுடைய நம்பிக்கையைச் சிதைக்கும்படியாகவே அமைச்சர்களின் பேச்சுகளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் உள்ளன. 

இதனால்தான் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது தமிழ் பேசும் மக்களிடம் NPP க்கான ஆதரவில் இறக்கம் நிகழ்ந்தது. ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஆதரவையும் விட உள்ளுராட்சித் தேர்தலில் கூடுதலான ஆதரவு கிட்டும் என்றே NPP எதிர்பார்த்தது. இதற்காக வடக்குக் கிழக்கு மற்றும் மலையகமெங்கும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எனப் பலரும் கிராமங்களுக்குக் கூடச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் 17 சபைகளையும் NPP யே கைப்பற்றும் என்று அமைச்சர் சந்திரசேகரன் உள்பட NPP பலரும் வெளிப்படையாகவே சொன்னார்கள்;  நம்பினார்கள். ஆனால், ஒரு சபையைக் கூட NPP யினால் கைப்பற்ற முடியவில்லை. (இதற்குப் பிரதான காரணம் அமைச்சர் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் போன்றோரின் பொறுப்பற்ற அதிகாரத்தனமான பேச்சுகளும்  கேலிக்குரிய நடத்தைகளுமாகும் என்று சொல்கிறார்கள் வடக்கிலுள்ள NPP ஆதரவாளர்கள்).

வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் வெவ்வேறு விதமாக NPP  மீதான கேள்விகள் எழுந்துள்ளன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை NPP க்கு. இதனால்தான் தாம் ஆட்சியமைக்கக் கூடிய சபைகளில் தாம் ஆட்சியமைப்பதற்கு யாராவது இடையூறு விளைவித்தால் – இடைஞ்சலாக இருந்தால் –கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி நிதானமிழக்க நேர்ந்தது. 

இந்த நிதானமிழப்பை NPP யின் அமைச்சர்கள் பலரிடத்திலும் கூடக் காண முடிகிறது. 

அவர்கள் நிதானமிழந்தால் அவர்களுக்கும் NPP  க்கும்தான் நட்டம்; பாதிப்பு. மக்களுக்கும் பாதிப்புண்டுதான். ஆனால், அவர்கள் வரலாற்றின் ஓட்டத்தில் இன்னொரு மாற்றத்துக்காக முயற்சிப்பார்கள். ஒரு காலம் ராஜபக்ஸக்களை ஏற்றுக் கொண்ட மக்கள், இன்னொரு காலச் சூழலில் அவர்களை விரட்டி அடித்த்தைப்போல, NPP யை விட்டு விட்டு இன்னொரு சக்தியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.  

ஆகவே மக்களைத் தம்மோடு வைத்துக் கொள்வதா இல்லையா என்பதை NPP தான் முடிவு செய்ய வேண்டும். மக்களைத் தம்முடன் வைத்துக் கொள்வதென்றால், அவர்களுடைய நியாயமான தேவைகளை நிறைவேற்ற வேண்டும். நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். 

இதற்கு முறைமை மாற்றம் (System Change) அவசியம். அதைச் செய்வதற்கு காலம் தாழ்த்தவே கூடாது. காலம் தாழ்த்தினால் எதிர்த்தரப்புகள் பலமடையும். இலங்கை போன்ற நாடுகளில் எளிதாக மாற்றத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கான வரலாற்றுச் சூழல் எப்போதும் அமைவதல்ல. NPP அது கிடைத்துள்ளது. நாட்டுக்கும் அது வாய்த்திருக்கிறது.

இப்பொழுது –  கடந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே -எதிர்த்தரப்புகள் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மேலெழத் தொடங்கி விட்டன. மறுவளத்தில் NPP எதிர்த்தரப்புகளின் அரசியல் அழுத்த்ததிற்குப் பணியும் நிலையில் உள்ளது.  தடுமாற அல்லது குழம்பத் தொடங்கி விட்டது.  அதனால்தான் லால்கந்த, விஜித ஹேரத், ஹந்துன் நெத்தி போன்றவர்களெல்லாம் இனவாதத்தைத் தூக்க முற்படுகிறார்கள். இனவாதத்தைத் தூக்கினால்தான் ஆட்சியில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்கள். 

இனவாதத்தை தமது அரசியலாக – அரசியல் முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்திய சுதந்திரக் கட்சி, ஐ.தே.க மற்றும் ராஜபக்ஸக்களின் பெரமுன போன்ற சக்திகளை வரலாறு புறமொதுக்கித் தோற்கடித்து விட்டது.  மட்டுமல்ல, இனவாதத்தை அரசியல் மூலதமாக்கியதால்தான் அந்தக் கட்சிகள் தோற்றதோடு, நாடும் அழிவடைந்தது. பல்லாயிரம் மக்கள் உயிரிழக்க நேர்ந்தது. பல்லாயிரம் பேர் அங்கவீனர்களாயினர். பெருமளவு சொத்துகளும் இயற்கை வளமும் அழிந்தது. நாடு தாங்கவே முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. அந்திய சக்திகளிடத்திலும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் கால்களில் விழ வேண்டியேற்பட்டது. 

வரலாறு இதை JVP க்கும் NPP க்கும் மக்களுக்கும் தெளிவாக உணர்த்தியுள்ளது. இதை JVP – NPP புரிந்து கொள்ளத் தவறினால் இவர்களும் வரலாற்றின் குப்பைக்குள்தான் வீசப்படுவர்.

முடிவாக, அரசியலமைப்பு மாற்றம் உள்பட அனைத்திலும் திருத்தங்களை NPP தாமதிக்காமல் செய்ய வேண்டும். இலங்கையில் இப்போதுள்ளது காலனித்துவ ஆதிக்கச் சிந்தனைமுறையும் கட்டமைப்புகளுமேயாகும். இதை மாற்றியமைப்பதைப் பற்றி அரசாங்கமும் எதிர்த்தரப்புகளும் சிந்திக்க வேண்டும். அதாவது காலனித்துவச் சிந்தனையிலிருந்தும் கட்டமைப்புகளிலிருந்தும் (Decolinize) விடுபட வேண்டும். இதற்கான ஒரு புதிய அரசியற் பண்பாட்டைக் கொண்ட முன்னெடுப்பும் அதற்கான கட்டமைப்பும் அவசியமாகும். 

எதிர்ச்சக்திகள் ஏற்படுத்தும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும்  மீறி எழுந்து, நாட்டுக்குத் தேவையானதை, சரியானதைச் செய்வதே அரசியல் ஆளுமையின் பணியாகும். அநுரகுமார திசநாயக்க அந்தத் தலைமைப் பாத்திரத்தை வகிக்க வேண்டும்.  அதற்கான அங்கீகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கிருக்கிறார்கள். மக்களுடைய ஆணைக்கும் அங்கீகாரத்துக்கும் மதிப்பளிப்பதே ஜனாதிபதிக்கான முதற்கடமை. அதற்குப் பின்புதான் அவர் தன்னுடைய கட்சிக்கான இடத்தை அளிக்க வேண்டும்.  கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக மக்கள் வழங்கிய வாய்ப்பையும் அங்கீகாரத்தையும் பாழடிக்கக் கூடாது. 

வரலாறு எப்போதும் ஒரு சுழலுக்குள் நிற்பதில்லை. அப்படி நின்றிருந்தால் உலகில் முன்னேற்றமோ வளர்ச்சியோ, மாற்றமோ ஏற்பட்டிருக்காது. ஒரு காலம் மேற்கு நாடுகளில் மிக மோசமான பிற்போக்குத்தனமும் வெறித்தனமும் இருந்தது. விளைவாகப் பெரும் போர்கள் கூட நடந்தன. பேரழிவுகள் ஏற்பட்டன. அதிலிருந்து படித்துக் கொண்ட பாடங்களின் அடிப்படையில்தான் அவர்கள் முன்னேற்றத்தை அடைந்தனர். மாற்றங்களை உருவாக்கினர். 

எனவே NPP செய்ய  வேண்டியது அறுவைச் சிகிச்சையே தவிர, புண்ணைத் தடவிக் கொடுத்தல் அல்ல. அதாவது தற்காலிக சுகமளித்தல் அல்ல. JVP யின் உருவாக்கம், அதனுடைய 60ஆண்டுகால அரசியல் முன்னெடுப்பு, NPP யின் 10ஆண்டுகால அரசியல் எல்லாம் System Change ஐ அடிப்படையாகக் கொண்ட அரசியல் மாற்றம் – ஆட்சி மாற்றமே. மக்களின் ஆணையும் அதற்கானதே. அதைச் செய்யவில்லை என்றால் எதற்காக NPP? ரணில், மைத்திரி, சஜித் போன்றவர்கள் போதுமே. அவர்களுடைய போதாமை – தவறுகளுக்கு – மாற்றுத்தானே அநுரவும் NPP யும்.

https://arangamnews.com/?p=12041

போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும்

1 month 1 week ago

போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும்

மீநிலங்கோ தெய்வேந்திரன்

May 23, 2025 | Ezhuna

இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்டும்; அதுசார் வினாக்கள் எழுப்பப்பட வேண்டும். இலங்கையின் சமகாலம் குறித்த பெரும்பான்மையான எமது உரையாடல்கள் கவனம் குவிக்கத் தவறும் விடயங்களையும் அமைதியாகக் கடந்து செல்லும் களங்களையும் ‘சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள்’ எனும் இத்தொடர் பேசமுனைகிறது.

தொடக்கக் குறிப்புகள்

இலங்கையில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. போருக்குப் பிந்தைய இக்காலப்பகுதியில் தமிழ்ச்சமூகம் எதிர்நோக்கிய முக்கிய சவால் அறம் பற்றியது. அது அரசியலில், ஆக்க இலக்கியத்தில், பொருளாதாரத்தில், அன்றாட சமூக அசைவியக்கத்தில் என அனைத்திலும் தாக்கம் செலுத்திய ஒன்றாக – இன்னும் சரியாகச் சொல்வதாயின் விமர்சனத்திற்குரியதாக – இருந்து வந்திருக்கிறது. ஒருவருக்கு அறமாகத் தெரிகின்ற ஒன்று இன்னொருவருக்கு அறமாகத் தெரிவதில்லை. ஒருவர் அறமற்றதாகக் கருதும் ஒரு செயலை இன்னொருவர் அறம் என்ற வியாக்கியானத்தோடு நியாயப்படுத்துகிறார். இதுவே போருக்குப் பிந்தைய கடந்தகால அனுபவமாகும்.

நாட்டின் வடக்குக் கிழக்கில் போருக்குப் பிந்தைய ஒன்றரைத் தசாப்தகாலத்தில் மேற்கொண்ட பல்வேறு களஆய்வுகளில் பல்வேறு தரப்பினர் பல்வேறு சூழ்நிலைகளில் அறம் என்கிற வினாவைத் தொடர்ச்சியாக எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதில் பெரும்பான்மையானவை அரசியல் அறம் சார்ந்த கேள்விகள். ஆனாலும் அதற்குமப்பால் சமூகம்சார்ந்த, பொருளாதாரம்சார்ந்த அற நிலைப்பாடுகள், விழுமியங்கள், நெறிமுறைகள் குறித்த வினாக்கள், விசாரணைகள் மக்களிடமிருந்து எழுந்துள்ளன. ஆனால் அவை கவனத்திற்குரியனவாக அமையவில்லை. அக்கேள்விகளை, விசாரணைகளை இக்கட்டுரை கவனத்திற்கொள்கிறது.

இரண்டு கேள்விகளுடன் இதைத் தொடங்குவது பொருத்தம். போருக்குப் பிந்தைய சமூகங்களில் அறம்சார் சிக்கல்கள் ஏன் குறிப்பாக சர்ச்சைக்குரியதாகின்றன என்ற வினா முக்கியமானது. இரண்டாவது, அறம்சார் வேறுபட்ட வியாக்கியானங்கள் எவ்வாறு சமூகத்தின் மீள்எழுச்சியைப் பாதிக்கின்றன. இவ்விரண்டு வினாக்களும் சற்று விரிவான விளக்கத்தை வேண்டுவன.

போருக்குப் பிந்தைய சமூகங்கள் பெரும்பாலும் கடுமையான மோதல்களின் காலகட்டங்களிலிருந்து உருவாகின்றன; உடைந்த சமூகங்கள், சிதைந்த நம்பிக்கை மற்றும் நீதி மற்றும் ஒழுக்கம் பற்றிய முரண்பாடான கதைகளை விட்டுச்செல்கின்றன. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காரணிகளால் அறம் என்பது சிக்கலுக்குரியதாகிறது. இதற்கு அடிப்படையாக நான்கு காரணிகளை நாம் இனங்காணலாம்.

1. தார்மீகத் தெளிவின்மை மற்றும் அதிர்ச்சி: போர் பெரும்பாலும் சரிக்கும் தவறுக்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்குகிறது; ஏனெனில் போர்க்காலங்களில் உயிர்வாழ்வது என்பது தனிநபர்களையும் குழுக்களையும் அமைதிக்கால நெறிமுறை விதிமுறைகளுக்கு முரணான செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, சியரா லியோன் உள்நாட்டுப் போரில் (1991–2002) குழந்தைப் போராளிகள் பாதிக்கப்பட்டவர்களாகவும் குற்றவாளிகளாகவும் இருந்தனர்; இது பொறுப்புக்கூறல் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளைச் சிக்கலாக்கியது. இலங்கை நிலவரத்தில் விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் போராளிகளாகப் பயன்படுத்தியமை, தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் அக அறச்சங்கடங்களை உருவாக்கியதால், போர் தார்மீகக் கோடுகளை மங்கச் செய்தது. அதே நேரத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை போன்ற அரசு அட்டூழியங்கள் அறம்சார் அவலத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துரைத்தன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு மற்றும் அரசாங்க வன்முறைக்கு இடையில் சிக்கிய தமிழ்ப் பொதுமக்கள், உயிர்வாழ்வினால் இயக்கப்படும் தார்மீக சமரசங்களை எதிர்கொண்டனர்; பொறுப்புக்கூறலைச் சிக்கலாக்கினர்.

2. போட்டியிடும் கதையாடல்கள்: வெவ்வேறு குழுக்கள் – பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் பார்வையாளர்கள் – நீதி மற்றும் பொறுப்புக் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். நிறவெறிக்குப் பிந்தைய தென்னாபிரிக்காவில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் தண்டனை நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுடன் மறுசீரமைப்பு நீதியைச் சமநிலைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டது, மன்னிப்புக்கும் பழிவாங்கலுக்கும் இடையிலான பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்குள், விடுதலைப் புலிகள் மீதான மாறுபட்ட கருத்துகள் – சிலரால் சுதந்திரப் போராளிகளாகவும், மற்றவர்களால் ஒடுக்குமுறையாளர்களாகவும் – அறம்சார் பதட்டங்களை உருவாக்குகின்றன. வெளிப்புறமாக, சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசின் ‘வெற்றி’ மற்றும் போர்க்குற்றங்களை மறுப்பது பற்றிய கதையாடல்கள் இதை இன்னொரு தளத்திற்கு நகர்த்துகின்றன.

3. வளப் பற்றாக்குறை: போருக்குப் பிந்தைய சமூகங்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வளங்களை எதிர்கொள்கின்றன. புனரமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு அல்லது இழப்பீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் கடினமான தேர்வுகளைக் கட்டாயப்படுத்துகின்றன. போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு சிங்களவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்புகள், புத்த விகாரைகளின் கட்டுமானம் மற்றும் தொல்லியல்துறை மூலம் அரசு ஆதரவுடன் ‘சிங்களமயமாக்கல்’ மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்ச் சமூகங்களுக்கான வரையறுக்கப்பட்ட வளங்கள் பொருளாதார மீட்சிக்கு எதிராக நீதிக்கு முன்னுரிமை அளிப்பதைவிட அறம்சார் விவாதங்களை அதிகரிக்கின்றன.

4. நிறுவனரீதியான அவநம்பிக்கை: போர் பெரும்பாலும் நிர்வாகக் கட்டமைப்புகளை அழித்து, அறம்சார் முடிவெடுப்பதில் சட்டபூர்வமான தன்மை இல்லாத ஒரு வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது. குறிப்பாக போரின் முடிவு ஒரு தரப்புக்கு வெற்றியைத் தருகின்றபோது தோல்வியடைந்த தரப்பின் மக்கள்கூட்டம் நிறுவனரீதியாக ஒதுக்கப்படுகிறது. அதிகளவான இராணுவப் பிரசன்னம், கண்காணிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தன்னிச்சையான கைதுகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை உள்ளிட்டவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்கிறது. இது அரசு நிறுவனங்கள் மீதான நம்பிக்கையைச் சிதைத்து, அறம்சார் நிர்வாகத்தை மழுப்பலாக்குகிறது.

அகமுரண்பாடுகள்சார் அறம்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகம், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், ஆழமான அறம்சார் சவால்களை எதிர்கொண்டுள்ளது. போருக்குப் பிந்தைய சூழலில் தார்மீகத் தெளிவின்மை, போட்டியிடும் கதையாடல்கள் மற்றும் திட்டமிட்ட ஓரங்கட்டல் ஆகியவை பல்பரிமாணரீதியில் அறம் என்கிற விடயத்தை  ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாற்றியுள்ளது. தமிழ்ச்சமூகத்தில் நிலவும் அக முரண்பாடுகளைப் புற முரண்பாடுகள் மேவியுள்ளதால், அகமுரண்பாடுகள் சார்ந்த விடயங்கள் பேசப்படுவது குறைவு. இந்த விடயங்கள் மூன்று முக்கியமான தளங்களில் சிக்கலானவை. இதனாலேயே தமிழ்ச் சமூகம் அறம்சார் அம்சங்களைச் சவாலுக்குட்படுத்தும் உள் முரண்பாடுகளுடன் போராடுகிறது:

1. விடுதலைப்புலிகளின் மரபு மற்றும் பொறுப்புக்கூறல்: விடுதலைப் புலிகளின் எதேச்சதிகாரத் தந்திரோபாயங்கள், எதிர்ப்பை அடக்குதல் மற்றும் அவர்களின் அரசியல் எதிராளிகளை – தமிழர்களை குறிவைத்தல் உட்பட்டவை ஒரு சிக்கலான சித்திரத்தை வழங்குகின்றன. இது அவர்களின் போராட்டத்தை மகிமைப்படுத்துவதற்கும் அவர்களின் துஷ்பிரயோகங்களை ஒப்புக்கொள்வதற்கும் இடையிலான அறம்சார் கேள்விகளை எழுப்புகின்றன. எடுத்துக்காட்டாக, 1980களில், போட்டியாளர்களான தமிழ்ப் போராளிக் குழுக்களை விடுதலைப்புலிகள் ஒழித்தது; இது சமூகத்திற்குள் தொடர்ந்து பிளவுகளை உருவாக்கியது. இந்த முரண்பாடுகள் ஒரு பகிரப்பட்ட அறம்சார் கட்டமைப்பைச் சுற்றி ஒன்றிணைவதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்குகின்றன.

2. சாதி மற்றும் பாலினம்: சாதிப் படிநிலைகள் மற்றும் ஆணாதிக்க விதிமுறைகள் போன்ற உட்சமூகக் கட்டமைப்புகள், அறம்சார் பதட்டங்களை உருவாக்குகின்றன. போருக்குப் பிந்தைய காலத்தில், தமிழ்ப் பெண்கள், குறிப்பாக முன்னாள் போராளிகள், களங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 49% பேர் பதட்டத்தையும் 42% பேர் மனச்சோர்வையும் அனுபவிக்கின்றனர். இது பெரும்பாலும் சமூக எதிர்பார்ப்புகளால் அதிகரிக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்குள் சாதி அடிப்படையிலான பாகுபாடு, ஒற்றுமையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அதேவேளை போருக்குப் பிந்தைய சமூகத்தில் சாதிய மீளெழுச்சி சிக்கலான சமூகக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

3. புலம்பெயர்ந்தோர்/ உள்ளூர் முன்னுரிமைகள்: புலம்பெயர்ந்த தமிழரில் ஒரு தொகுதியினர், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் இனப்படுகொலை அங்கீகாரத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால் உள்ளூரில் தமிழ் மக்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருத்தாலும்கூட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நில உரிமைகள் போன்ற உடனடித் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த வேறுபாடு கவனத்திற்குரியது. இது யாருடைய நலன்கள் முக்கியமானவை, யார் யாருக்காகப் போராடுவது போன்ற அறம்சார் விவாதங்களை உருவாக்குகிறது.

இந்தப் பின்புலம் மிகவும் முக்கியமானது. இம்மூன்று விடயங்களும் இன்றும் தமிழ் மக்களின் அறம்சார் செயலின்மைகளின் மையமாக உள்ளன. ஒரு சமூகமான எமது கடந்தகாலத்தை சுயவிமர்சன நோக்கில் பார்ப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற வினாவை இங்கு எழுப்புவது முக்கியமானது. போரின் முடிவின் 16 ஆண்டுகளின் பின்னர் ஈழத்தமிழரின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்பதை யோசித்தால் அரசியல் அரங்கிலும் பொருளாதார அரங்கிலும் அதற்கான பதிலைப் பெறுவது சிரமம் என்பதை நாமறிவோம். அதற்கப்பால் அறம்சார்ந்த சமூகமாக, அகமுரண்பாடுகளை அடையாளங்கண்டு ஏற்றுக்கொண்ட சமூகமாக நாம் இல்லை என்பதே இன்றைய முக்கிய சவாலாகும். இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் பேசுவதற்குச் சிரமமான சங்கடமான ஒரு விடயமாகும்.

தமிழ்த் தேசியத்தின் எதிர்காலமும் தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலமும் பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்குக் கடந்தகாலம் பற்றிய தெளிவான புரிதல் தேவை என்பதையும், விடுதலைப் புலிகளைப் பற்றிய விவாதங்கள் தவிர்க்க இயலாதன என்பதையும் நாம் ஏற்கவேண்டும். அதேவேளை நடந்து முடிந்த அனைத்தையுமே விடுதலைப் புலிகளின் சாதனைகளாகவோ மாறாக அவர்களது குற்றங்களாகவோ நோக்குகின்ற தன்மையினின்று விடுபடுவதும் முக்கியமானது. இது முக்கியமான ஒரு சமூகச் சவாலாகும். அறம் குறித்த பார்வைகள் இங்கு ஆழமான நேர்மையான பார்வையை வேண்டி நிற்கின்றன.

விடுதலைப் புலிகளை போராட்டத்தின் மையச்சக்தியாக ஆக்கிய அகக் காரணிகளையும் புறக் காரணிகளையும் விளங்கிக் கொள்வது முக்கியமானது.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனங்களை, மூர்க்கத்தனமான, நேர்மையற்ற நியாயப்படுத்தல்களைத் தவிர்த்து நோக்க வேண்டியுள்ளது. இதை வழிப்படுத்துவதற்கு அறம்சார்ந்த பார்வை முக்கியமானது.  ‘இன ஒற்றுமை’ என்ற கருத்தாக்கம் விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு மிக முந்தியது. இது தமிழ்த்தேசிய அரசியலின் முக்கிய கருவியாகும். இது அகமுரண்பாடுகளை மறைத்து தமிழர் என்ற பொது இனத்துவ அடையாளத்துக்குள் அனைத்தையும் கரைக்கும் ஒரு தந்திரமாகவே செயற்பட்டது என்பது உண்மை. அதேவேளை மாற்று அரசியல் ஒன்று உருவாவதற்கெதிராகப் பழமைவாதம் ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கருவியைப் பலவாறாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. அதன்விளைவாக, மக்கள் அரசியல் என்ற கருத்தாக்கம் தமிழ் அரசியற் பரப்பில் வேரூன்றத் தவறியது. அதைவிடவும் சாதி, பால், பிரதேசம் என்பன சார்ந்த முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அப்பிரச்சினைகளை இல்லை என மறுப்பதுடன் அவற்றைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் என வாதிப்பதும் தமிழ்த் தேசியவாதிகட்கு வழமையாகிவிட்டது. அவற்றை மறுத்ததால் அவை இல்லாமல் போய்விடவில்லை. இன்று அவை, முன்பு நாம் அறிந்திருந்த அதேயளவு உக்கிரத்துடன் தொடருவதை நாம் அறிவோம்.

ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அதன் அக முரண்பாடுகளைப் புறக்கணித்து வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாது என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். தேசியத்தினுள் செயற்படும் உயர் வர்க்க, சாதிய, ஆணாதிக்க, பிரதேச மேலாதிக்கச் சிந்தனைகள் சரிவரக் கையாளப்படாதபோது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் போராட்டத்தை மட்டுமன்றித் தேசிய இன அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்க இயலும் என்பது நம் கவனத்துக்குரியது. விடுதலைப் புலிகளின் போரின்போது தமது உயிர்களை ஈந்தோரும் வேறுபலவாறான தியாகங்களைச் செய்தோரும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளுமே. அவர்களது வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தோரே இன்று தமது வீடுகட்டும் நிலங்கட்கும் தொழில்கட்கும் மீள இயலாமல் அல்லற்பட்டுக்கிடப்போரில் பெரும்பாலானோராக உள்ளனர். இவை ஒவ்வொன்றும் ஆழமாகப் பேசப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும். விடுதலைப் போராட்டம் என்பது அறம்சார்ந்தது என்ற புரிதலை நோக்கி நகர்தலும் அதை ஆழமாக விமர்சன நோக்கில் பார்க்கப் பழகுதலும் இன்றைய சூழலில் தவிர்க்கவியலாதது.

சமூக அசைவியக்கங்களில் அறம்சார் கேள்விகள்

போருக்குப் பிந்தைய ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அறம் குறித்த பார்வைகள் மிகவும் சிக்கலானவை. போரின் வீரமரபையும் விடுதலைப்போராட்டத்தையும் மையப்படுத்திய அறம்சார் பார்வை ஒருபுறமும், சமூகத்தின் பண்பாடு, மாண்பு, மானம், மரியாதை நோக்கிலான அறம்சார் பார்வை மறுபுறமுமாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஏராளமான வினாக்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. ஆனால் இவ்வினாக்கள் ஒரு விடயத்தைத் தொடர்ச்சியாகத் தவறவிடுகின்றன. அது களயதார்த்தம் பற்றியது; அம்மக்களின் வாழ்நிலை பற்றியது. நீண்டகாலமாகப் பழக்கப்பட்ட சிந்தனைமுறை பற்றியது. ஆழமாக ஊறிப்போன பண்பாட்டு வரைமுறைகள் பற்றியது. 

முன்னாள் போர் வலயங்களுக்கு மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு சில ஆண்டுகள் கடந்திருந்த நிலையில் கள ஆய்வுக்காக கிளிநொச்சியில் இருந்து அரச பேரூந்தில் பயணமொன்றை மேற்கொண்டிருந்தேன். ஒரு தரிப்பிடத்தில் பேரூந்து நின்றது. இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் பேரூந்தில் முன்பக்கமாக ஏறினார்கள். அவர்களின் தோற்றம் ஏழ்மையை உறுதிசெய்தது. வாடி மெலிந்த தேகம், ஆனால் முகத்தில் நம்பிக்கையும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளும் இருந்தன. யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தார்கள். எனக்குப் பின்னால் இரண்டு ஆண்குரல்களின் உரையாடலைத் தற்செயலாகக் கேட்கக் கிடைத்தது. அந்த உரையாடல் இவ்வாறு தொடர்ந்தது:

“இதுகள் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருந்திருக்கலாம். போராடப் போறம் என்று போய் எல்லாத்தையும் சீரழிச்சு இண்டைக்கு நடுத்தெருவில நிக்கிதுகள்.”

“இவயின்ர அப்பா, அம்மாவைச் சொல்லோனும். அவையள் எல்லோ கண்டிச்சிருக்கோணும்”.

“அப்படிச் சொல்லேலா, இவையளுக்கு அறிவெங்க போனது.”

“இதுகள் இயக்கத்துக்குப் போகேக்க 16 வயதுகூட இராது”.

“எல்லாம் முடிஞ்சுபோச்சு. இப்ப இவையளுக்கு யாருமில்லை”.

இதற்கு மேல் அந்த உரையாடலைக் கேட்க மனமில்லாமல், அவ்விடத்தில் இருந்து எழுந்து பேரூந்தின் பின்னால் நடக்கத் தொடக்கினேன். அப்போது அக்குரல்களுக்கு உரியவர்கள் யார் என்பதை அறியும் நோக்கில் அவர்களை நோட்டமிட்டேன். அக்குரல்களிற்குரியவர்கள் கிட்டத்தட்ட 60 வயதை உடையவர்கள்; உள்ளூர்க்காரர்கள்; சாரமும் பழைய சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். அவர்களுக்கு இப்பெண்களை நன்கு தெரிந்திருந்தது என்பதையும் என்னால் உணர முடிந்தது.

I-1-19.jpg

இந்நிகழ்வு அறம்சார் கேள்விகள் பலவற்றை எழுப்புகிறது. முதலாவது, இந்தப் பெரியவர்களின் விமர்சனத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது. அந்தப் பெரியவர்கள் வெளிநபர்கள் அல்லர். அவர்களும் போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து, மீளக்குடியேறி அதேசமூகத்தில் வாழ்பவர்கள். அவர்களின் கருத்துகள்தான் அச்சமூகத்தின் பொதுக்கருத்து என்று எடுத்துக்கொள்வதா? அல்லது இரண்டு தனிநபர்களின் கருத்து என்று ஒதுக்கிவிடுவதா? விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு இருந்தது என்ற கருத்தை இந்த உரையாடல் தகர்க்கிறது. அவ்வாறு இருந்திருக்குமாயின், இவ்வாறான குரல்கள் எழுந்திருக்காதல்லவா? விடுதலைப் போராட்டம் குறித்த மக்களின் எண்ணவோட்டம் என்னவாக இருந்தது? இன்றும் பெண்கள் குறித்த எம்சமூகத்தின் பார்வை என்ன?

இரண்டாவது, முன்னாள் போராளிகள் இவ்வாறு அனாதரவாய் விடப்பட்டமையை எவ்வாறு புரிந்துகொள்வது. உலகெங்கும் கோலாகலமாக ஈழத்தமிழர்கள் நிகழ்வுகளைச் செய்கிறார்கள். மாவீரர் தினங்கள், மே 18 எனப்பல நிகழ்வுகள் நடக்கின்றன. மில்லியன் கணக்கான பணம் சேர்க்கப்படுகிறது. ஆனாலும் வன்னி நிலப்பரப்பில் வாழும் ஒரு தொகுதி மக்கள் இவ்வாறு திக்கற்றவர்களாக விடப்பட்டிருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? இவ்விடத்தில் அறத்தின் அளவுகோல் என்ன? வன்னியில் ஒருதொகுதி மக்கள் அன்றாட வாழ்வுக்கே அல்லலுறும்போது, இவ்வாறான கொண்டாட்டங்கள் அறமா? அல்லது இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டுமா? பொறுப்புக் கூறவேண்டியவர்கள் புலம்பெயர்ந்த தனிமனிதர்களா? அமைப்புக்களா? அல்லது விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளைத் தொடர்ந்து பேணுகிறோம் என்று அறிவித்துக் கொண்டவர்களா?

இந்த உதாரணம் அறம்சார்ந்த அம்சங்களின் சிக்கல்தன்மையைப் புலப்படுத்துகிறது. அதேவேளை இந்தக் கேள்விகளுக்கு நாம் சமூகமாக முகம் கொடுத்தாக வேண்டும். இந்த மனநிலை ஈழத்தமிழரிடம் இல்லை என்று அப்பால் நகர்ந்துவிட முடியாதபடியே நிகழ்வுகள் நடக்கின்றன. அதை நாம் ஏற்றாக வேண்டும். போரின் வடுக்களைச் சுமந்த ஒரு சமூகத்தின் அடிப்படை அறம் யாது? அதன் அளவுகோல்கள் என்ன? அவை சரியானவையா? போன்ற பதிலில்லாக் கேள்விகள் இன்றும் எம்மிடமுண்டு.

மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டபோது உயர் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்ந்துவந்த காலப்பகுதியில் அம்மக்கள் குறித்த ஏராளமான கதைகள் உலாவின. அவை கதைகள் என்பதைவிட நிகழ்வுகளின் பொதுமைப்படுத்தல்கள் என்று சொல்வது பொருத்தம். அவ்வாறான ஒரு கதைதான் ‘மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களில் வலுவற்றோர் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்’ என்பது. இந்தக்கருத்து பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக புலம்பெயர்தேசங்களில் இது பாரிய பேசுபொருளானது. இது மிகக்கொடுமையான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இதன் செயற்படு தன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று நினைத்தேன். எனது பணியிடத் தேவையின் பொருட்டு, இந்த விடயத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக, அதன் ஆழ – அகலங்களை விளங்கிக்கொள்வதற்காக வன்னிக்குச் சென்றேன்.

எனக்கு நன்கு பழக்கமான மனிதாபிமானப் பணியாளர்கள் பலரைச் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் சொன்ன ஒரு விடயம், ‘இது பேசப்படுவதைவிட மிகச் சிக்கலான ஒன்று’. ஒற்றைப் பரிமாணத்தில் இதைப் பார்க்க முடியாது. அதேவேளை பலர் இது குறித்து விரிவாகப் பேசுவது சரியாக இராது என்று கருதினர். இன்னும் சிலர், இராணுவப் பிரசன்னத்தை அகற்றுவதற்கு இந்தக் கதையாடல் அவசியமானது, எனவே இப்போது சொல்லப்படுகின்ற அதேகதையாடல் தொடர வேண்டும் என்று விரும்பினர். பெரும்பாலானோரது கருத்து, ‘இந்த அதிர்ச்சி வைத்தியம் ஏற்படுத்தும் கவனயீர்ப்பு ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு முக்கியமானது’ என்பதாகும். அவர்கள் குறித்த விடயத்தை ஆழமாக ஆராயாமல் இப்படியே விட்டுவிடுவது நல்லது என்று கருதினர்.

சிலருக்கு அதில் மாற்றுக்கருத்து இருந்தது. உண்மை முக்கியமானது. அதேவேளை திரிக்கப்பட்ட உண்மை, நன்மையைவிடத் தீமையையே அதிகம் செய்யவல்லது என்று அவர்கள் கருதினர். ஒரு நண்பர் என்னிடம் சொன்னார், “நான் உங்களை இதனோடு தொடர்புடைய சிலரிடம் அறிமுகப்படுத்துகிறேன். அவர்களுடன் நீங்கள் பேசுங்கள். பிறகு நீங்களே முடிவெடுங்கள்.” அதன்படி பலருடன் பேசக் கிடைத்தது. அதில் ஒரு உரையாடல் மட்டும் இன்றும் மனதை உலுக்கும் ஒன்றாக இருக்கிறது. அதைமட்டும் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

I-2-19.jpg

அது வன்னியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு வீடு. அதை வீடு என்று சொல்வதைவிட தங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக இருப்பிடம் என்று சொல்வது பொருத்தம். மரம், தடிகள், தகரம் கொண்டு அமைக்கப்பட்டது. அங்கு ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் இருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு வயதல்ல. 25 வயதினைத் தாண்டியிருக்காது. அப்பெண் மிகவும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசினார். வாழ்க்கை குறித்த அச்சவுணர்வு அப்பெண்ணிடம் இருக்கவில்லை. அப்பெண் சொன்னவற்றைச் சுருக்கமாகத் தருகிறேன்:

“நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சண்டை மீண்டும் தொடங்கிவிட்டது. இயக்கம் மீண்டும் ஆள்சேர்க்கத் தொடங்கியிருந்தது. என்னையும் கூட்டிப்போய்விடுவார்கள் என்று அப்பா பயந்தார். கலியாணம் கட்டிவைத்தால் பாதுகாப்பு என்று கருதினார். எனக்குத் திருமணம் நடந்தது. எனது கணவர் சிறுவியாபாரமும் விவசாயமும் செய்துவந்தார். மெதுமெதுவாக இடப்பெயர்வுகள் தொடங்கின. திருமணமானவர்களையும் இயக்கத்தில் இணைக்கத் தொடங்கினர். அதிலிருந்து தப்புவதற்காக நான் கர்ப்பமானேன். எனது கணவரை அழைத்துச் சென்றுவிட்டார்கள். யுத்தம் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் திரும்பி வந்தார். நாம் ஒன்றாகப் பாதுகாப்புத்தேடி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள்மீது விழுந்த குண்டில் எனது கணவர், எனது அப்பா, அம்மா என எல்லோரும் கொல்லப்பட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக நான் உயிர்தப்பிவிட்டேன். எனது குழந்தையை முகாமில் பெற்றெடுத்தேன். என் அம்மாவுக்கு சொந்தமான நிலத்தில் மீளக்குடியமர்ந்தேன். தரப்பாள் வீடுதான். எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனது பிள்ளையை யாரிடமும் விட்டுவிட்டு கனதூரத்திற்கு வேலைக்குப் போகவும் இயலாது. கொஞ்சக்காலம் நிறுவனங்களின் உதவியில் வாழ்ந்தேன். பின்னர் வறுமையில் வீழ்ந்தேன். எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. ஆண்துணையற்ற பெண்ணாக குழந்தையோடு வாழ்வது மிகவும் பாதுகாப்பற்றது. எனது சமூகமே என்னை ஒதுக்கியது. எனது ஊர் ஆண்களே என்னை அணுகினார்கள். உதவி செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னால் இருந்த நோக்கம் இரகசியமானதல்ல. ஒவ்வொரு இரவும் அச்சத்துடனேயே கழிந்தது. யாராவது இரவில் வலுக்கட்டாயமாக வந்துவிடுவார்களோ என்ற பதட்டம் இருந்தது. எங்கள் ஊர் ஆண்கள் ஒருபுறம் என்றால் இராணுவச் சிப்பாய்கள் மறுபுறம். அவர்களின் பார்வையும் விசாரணைகளும்கூட உறுத்தலாய் இருந்தது. ஒருநாள் குழந்தையுடன் நான் நடந்துசெல்லும்போது, தற்செயலாக எமது பகுதிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி என்னைக்கண்டார். என்னைப் பற்றி விசாரித்தார். குழந்தைக்கு உணவு வாங்கும்படி சிறுதொகைப் பணத்தைத் தந்துவிட்டுப் போனார். இப்போதும் அடிக்கடி அவர் என் வீட்டுக்கு வருகிறார். என்னை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அவர் என்னிடம் வருவதால் ஏனைய இராணுவச் சிப்பாய்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நலவிசாரிப்புகள் இல்லை. அவ்வளவு பயம். எங்கள் ஊர் ஆண்களின் சொறிச்சேட்டைகள் இல்லை. நான் இப்போதுதான் பாதுகாப்பாக உணர்கிறேன்.”

இது ஆழமான அதேவேளை பேசப்படாத, பேசப்படவிரும்பாத ஒரு பேசுபொருளை உடையது. சமூக அறம், மானம், போன்ற மறைப்புகளுக்கு அப்பால் போரின் பின்னான சமூகங்களில் வாழ்வோரின் நித்திய போராட்டத்தின் ஒரு சிறுதுளிதான் இது. இந்த விடயத்தில் அறம்சார் உயர்நிலை என்ற பெயரில் அந்தப் பெண்ணைக் குற்றம் சொல்லமுடியமா? இதைப் பாலியல்தொழில் என்ற வரையறைக்குள் கொண்டுவர இயலுமா? அந்தப் பெண்ணையோ, அவரின் நடத்தையையோ மதிப்பிடும் அதிகாரத்தை யார் தந்தது? இவ்வாறு பல கேள்விகளைத் தொடர்ச்சியாக நாம் எழுப்பிய வண்ணமே இருக்கலாம்.

போருக்குப் பிந்தைய சூழலில் அறம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதைப் புரிந்துகொள்ள மேற்சொன்ன இரு உதாரணங்களும் போதுமானவை. இந்தப் பின்புலத்திலேயே தமிழ்ச் சமூகத்தின் அறம் பாடுதல், அறம் பறைதல் ஆகிய இரண்டையும் நோக்கியாக வேண்டும்.

போருக்குப் பிந்தைய சூழலில், பல குழுக்கள் தங்களது கொடுமைகளை, நஷ்டங்களை மற்றும் நினைவுகளை தம்மோடு சுமந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒருவரோ ஒரு குழுவோ “நாங்கள் அறமானவர்கள்” என்று கூறுவது மற்றவர்களுக்கு எரிச்சலையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தலாம். இது உணர்வுபூர்வமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே அறம்சார் உயர்நிலையை எடுப்பதென்பது சிக்கலானது. அதேவேளை இது பல சமயங்களில் அதிகாரமிக்கவர்களின் ‘மதிப்பீட்டுச் சிதைவான பார்வை’ (Biased perception) ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்; இது நீதிக்கு எதிரானதாகவும் இருக்கலாம். போரினால் சிதறுண்ட சமூகங்களில் பலநிலை உண்மைகள் (Multiple truths) உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். போர்க்காலங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு சமூகத்துக்கும், குழுவுக்கும் தங்கள் பார்வை இருக்கிறது. “நாங்கள்தான் நியாயம் பேசுகிறோம்” என்று ஒருபக்கம் சொல்வது, மற்ற உண்மைகளை நிராகரிப்பதாகவும், புறக்கணிப்பதாகவும் கொள்ளப்படும். “நாங்கள் அறத்தோடு இருக்கிறோம்” என்று ஒருவர் சொல்வது, உண்மையான வருத்தங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்கும். இது சமூகப் பிணைப்பைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

நிறைவுக் குறிப்புகள்

மோதல்களால் பாதிக்கப்பட்ட பிளவுபட்ட சமூகங்களில் போருக்குப் பிந்தைய சூழலில் அறம்சார் நிலைப்பாட்டை எடுப்பதானது பல முக்கிய சவால்களைக் கொண்டது. போருக்குப் பிந்தைய சமூகங்களில், வெவ்வேறு குழுக்களுக்கு இடையே ஆழமான நம்பிக்கையின்மை இருக்கும். அறவிழுமியம்சார் நிலைப்பாடு எடுக்க முயல்பவர்கள், ஒரு தரப்பினரால் சந்தேகத்துடன் பார்க்கப்படலாம் அல்லது அவர்களது நோக்கங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இது ஒரு தரப்பை மற்றொரு தரப்பிடமிருந்து மேலும் தனிமைப்படுத்தலாம்.

போருக்குப் பிந்தைய சமூகங்களில், அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், மற்றும் பாதுகாப்பு ஆகியன முன்னுரிமையாக இருக்கும். இதனால், உயர்ந்த அற நிலைப்பாட்டை எடுப்பது பல சமயங்களில் அடிப்படைத் தேவைகளையே கேள்விக்குட்படுத்தும். இந்நிலையில் அறமா? உணவா” என்ற கேள்வி எழும்போது, உணவே பிரதானம். இந்த நிலைப்பாட்டை எடுத்தவர்களை அறமற்றவர்கள் என்று சொல்ல முடியுமா?

இலங்கைச் சூழலில் போருக்குப் பிந்தைய தமிழ்ச்சமூகம் மீது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் ஒருபிரிவினர் வைக்கிற ஒரு குற்றச்சாட்டு, ‘இவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்கள், மாறிவிட்டார்கள், விடுதலைப் போராட்ட உணர்வற்றவர்கள்.’ இந்தப் பிரிவினர் சோறா, சுதந்திரமா? என்ற வினாவுக்கு சுதந்திரமே பிரதானம் என்பவர்கள். ஆனால் வன்னியில் மக்களைப் பொறுத்தவரை முதலில் சோறு. ஏனெனில் அன்றாட உயிர்வாழ்க்கையே அவர்களுக்குச் சவாலானதாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, அறம்சார் உயர்ந்த நிலைப்பாடு எடுப்பது ‘பயனற்ற’ அல்லது ‘எதார்த்தமற்ற’ ஒன்றாகவே கருதப்படுகிறது.

தமிழ்ச்சமூகமாக நாம் கேட்கவேண்டிய சில கேள்விகள் உண்டு. நாம் அறம்பாட முதல் இந்த வினாக்களுக்கு இதயசுத்தியுடன் பதில்தேட விளைவது பயனுள்ளது:

போருக்குப் பிந்தைய இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்கு, ஏன் அறம்சார் சிக்கல்கள் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன?

தமிழ்ச் சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் மீட்சிக்கு எவ்வகையான உள் மற்றும் வெளிப்புற அறப்பிரச்சினைகள் சவால் விடுகின்றன?

தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ள அக முரண்பாடுகள் அறம்சார் நெறிமுறைகளை எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகின்றன?

அறம்சார் முன்னுரிமைகளை வடிவமைப்பதில் நீதி, நல்லிணக்கம் மற்றும் வள ஒதுக்கீடுகள் எவ்வகையான பங்கை வகிக்கின்றன?

தமிழ்ச் சமூகத்திற்குள் ஒற்றுமை மற்றும் குணப்படுத்துதலை வளர்ப்பதற்கு, தமிழ்ச் சமூகம் இந்த அறம்சார் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?


About the Author

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

https://www.ezhunaonline.com/post-war-morality/

ஜேர்மனியின் நான்காவது சாம்ராஜ்ய ஆரம்பம்?

1 month 1 week ago

Screen-Shot-2025-05-24-at-3.45.08-AM.png

ஜேர்மனியின் நான்காவது சாம்ராஜ்ய ஆரம்பம்?

சிவதாசன்

இரண்டாம் உலக யுத்தத்தில் தோல்வியடைந்து ஏறத்தாழச் ‘சிறைப்படுத்தப்பட்டுக் கிடந்த’ இரண்டு நாடுகளான யப்பானுக்கும் ஜேர்மனிக்கும் விடுதலை கிடைத்துவிட்டது. இதில் முரண்நகை என்னவென்றால் இரண்டாம் போரில் இந்நாடுகளைத் தோற்கடித்து சிறைப்படுவதற்குக காரணமான சோவியத் குடியரசின் பதாங்கமான ரஸ்யாவே அவற்றுக்கு இந்த இந்த விடுதலையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஹிட்லரின் விஸ்தரிப்பைத் தடுத்து மேற்கைக் காப்பாற்றுவதற்காக சேர்ச்சில் வைத்த பொறியில் வீழ்ந்த ஸ்டாலின் இதற்காக காவு கொடுத்தது 9 மில்லியன் சோவியத் படைகளையும் 18 -19 மில்லியன் பொதுமக்களையும். மீண்டுமொரு தடவை கோர்பச்சேவ் வடிவத்தில் மேற்கின் பொறியில் சோவியத் வீழ்ந்து தன்னையே சிதலம் செய்து இன்று பலமிழந்த ரஸ்யாவாக மேற்கின் படையெடுப்பை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த தடவை மேற்கின் படையெடுப்பிற்கு தலைமை தாங்குவதன் மூலம் ஜேர்மனி ரஸ்யாவைப் பழிவாங்கப் போகிறதா? பட்சி அப்படித்தான் சொல்கிறது.

ஹிட்லரின் ஜேர்மனியை (ஜனவரி 30, 1933 – மே 8, 1945) ‘மூன்றாம் இராச்சியம்’ (Third Reich) என்பார்கள். முதலாவது ரோம் சாம்ராஜ்யமும் அதற்குப் பின்னர் ஜேர்மன் சாம்ராஜ்யம் இரண்டாவதாகவும் இருந்தன. தற்போது ஜேர்மனியின் அதிபராக வந்துள்ள ஃப்றைடிக் மேர்ஸ் வந்ததும் வராததுமாக உலக நீதிமன்றத்தினால் கைதாணை விடுக்கப்பட்ட இஸ்ரேலின் நெட்டன்யாஹுவைத் தனது விருந்தாளியாக அழைத்து உலக அபிப்பிராயம் எனக்குத் தேவையில்ல்லை என்பதுபோல அவரை உலக நாயகனாக அங்கீகரித்தமை ஹிட்லரின் மீள்வருகைக்குக் கட்டியம் கூறியமை போல இருந்தது. ஜேர்மனி நான்காவது சாம்ராஜ்யமாக உருவாகுவது இவரது காலதில் தான் ஆரம்பமாகும் என்பது எனது கணிப்பு.


லிதுவேனியா முன்பு சோவியத் குடியரசில் இருந்து கோர்பச்சேவ் புண்ணியத்தில் பிரிந்துபோன ரஸ்யாவின் எல்லை நாடு. அதன் சனத் தொகை 2.87 மில்லியன் மட்டுமே. கோர்பச்சேவுடனான ஒப்பந்தத்தின்படி பேர்லினைத் தாண்டி நேட்டோ ஒரு அங்குலமும் நகராது என்ற சத்தியத்தையும் மீறி நேட்டோ இப்போது லிதுவேனியா, ஃபின்லாந்து உட்பட பல ரஸ்ய எல்லை நாடுகளில் நிரந்தரமாகத் தளங்கள் அமைத்து விட்டது. ரஸ்யாவின் கலினின்கிராட் நகரினதும், ரஸ்யாவின் நடு நாடான பெலாறுஸ் நாட்டிநதும் எல்லைகளில் இருக்கிறது லிதுவேனியா. யூக்கிரெய்னிலும் இதே உத்தியை நேட்டோ கையாள முற்பட புட்டின் அதற்கு மறுத்தான் போட்டதன் விளைவே இன்றைய ரஸ்ய – யூக்கிரெய்ன் போர். இப்போரை நிறுத்தி ரஸ்யாவுக்கு ஒரு இடைவேளை வாங்கித்தர ட்றம்ப் முயற்சித்தமை நேட்டோவின் தலைமையை அமெரிக்காவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியம் பிடுங்கிக்கொள்ள வாய்ப்பாகி விட்டது. அத்தோடு கனடா போன்ற நேட்டோ நாட்டுடனான தீர்வைச் சண்டையும் ஐரோப்பிய தலைமையை ஊக்குவிக்கும் கார்ணியின் தலைமையும் உலகின் அடுத்த அதிகார மையமாக ஐரோப்பாவைவையே முந்தள்ளி விட்டிருக்கிறது. எனவே ரஸ்ய – யூக்கிரெய்ன் போர் விரைவில் உக்கிரமடையும் இதில் நேட்டோ உறுப்பினர் என்ற வகையில் ஜேர்மனி தலைமையை எடுக்கும் என உறுதியாக நம்பலாம். இதற்கு காரணம் பிரித்தானியா, பிரான்ஸ், கனடா போன்ற பலமான நாடுகளை விட ரஸ்ய எல்லைக்கு மிக நெருக்கமான நாடு ஜேர்மனி மட்டுமே என்பது தான்.

இதை உறுதிப்படுவதுபோல், கடந்த வியாழனன்று (மே 22) லிதுவேனியாவில் ஜேர்மனியின் 45 ஆவது கவசப் படையணியை வரவேற்று தலைநகர் வில்னியஸில் லிதுவேனியா கொண்டாடியிருக்கிறது. இது ஒரு நீண்டகால நிலைகொள்ளல் எனவும் ரஸ்யாவிடமிருந்து ஐரோப்பாவையும் நேட்டோவையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. யூக்கிரெய்னை ரஸ்யா வெற்றி கொண்டால் அது அத்தோடு நிற்காமல் மீதமுள்ள சிறிய நாடுகளையும் கபளீகரம் செய்துவிடுமென்ற காரணத்தினால் தான் இந்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது.

லிதுவேனியாவை நோக்கிய இந்த ஜேர்மானிய படை நகர்வு இவ்விரு நாடுகளும் தம்மிடையே மேற்கொண்ட இணக்கப்பட்டின் விளைவு இதில் இதர நேட்டோ நாடுகளின் பங்கு என்ன என்பது இன்னமும் தெரியவில்லை என்கிறார்கள்.

இரண்டாம் போரில் ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டபோது நேச நாடுகளால் அதன் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் முக்கியமானவை மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பலம், உற்பத்தித்துறை ஆகியவையாகும். இருப்பினும் ரஸ்ய – யூக்கிரெய்ன் போர் ஆரம்பித்ததும் (2022) ஜேர்மனியின் இராணுவ விஸ்தரிப்பின் மீதான கட்டுப்பாட்டை நேட்டோ தளர்த்தியிருந்தது. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ஃப்றைட்றிக் மேர்ஸ் “ஜேர்மனியின் இராணுவத்தை ஐரோப்பாவின் பலமான இராணுவமாக மாற்றுவேன்” எனச் சபதமெடுத்தது மட்டுமல்லாது அதற்காக மிதமான செலவீனத்தையும் ஒதுக்கியிருக்கிறார்.

லிதுவேனியாவில் தற்போது 500 ஜேர்மன் இராணுவம் நிலைகொண்டுள்ளது. 2027 இல் இதை 5,000 இராணுவத்தினரும் சிவிலியன்களும் சேர்ந்த பலமான படையொன்றாக உருவாக்கவிருப்பதாகவும் கேர்மனி தரப்பில் கூறப்பட்டுள்ளது. லிதுவேனியாவில் அமெரிக்க படைகளும் நிலைகொண்டுள்ளனரெனினும் ட்றம்ப் நிர்வாகத்தில் அவர்கள் ஐரோப்பிய சகாக்களிடமிருந்து விலகியே இருப்பதாகவும் இதன் காரணமாகவே லிதுவேனியா ஜேர்மனியின் உதவியை நாடியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

தனது எல்லையில் இருக்கும் லிதுவேனியாவில் நேட்டோ வந்தமர்ந்தபோதோ அல்லது கடந்த சில ஆண்டுகளில் ஃபின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோவில் இணைந்தபோதோ புட்டின் எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்காது யூக்கிரெய்னில் மட்டும் தனது எதிர்ப்பைக் காட்டியதற்கு முக்கிய காரணம் யூக்கிரெய்னில் வாழும் கணிசமான ரஸ்ய மொழி பேசும் மக்கள் மீது யூக்கிரெய்ன் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட வன்முறை எனபதும் கிரீமியா உடபட யூக்கிரெய்னில் அடங்கும் பல பிரதேசங்கள் ஒரு காலத்தில் ரஸ்யாவினால் தானமாக வழங்கப்பட்டமை என்பதுமே காரணம்.

யாவில் ஜேர்மனி படைகள் நிலைகொள்வது விரைவில் நேட்டோ ரரஸ்ஸ்யா மீது பாரிய போரொன்றுக்குத் தயாராகுவதாகவே அவதானிகள் கருதுகின்றனர். பொருளாதாரத் தடகள் மூலம் பலமிழந்திருக்கும் நிலையில் ரஸ்யா நேட்டோவின் உக்கிரமான தாக்குதலை எதிர்கொள்ள இயலாத பட்சத்தில் அது தனது அணுவாயுதங்களைப் பாவிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. இரண்டாம் உலகப் போரிலும் ஐரோப்பிய நேசநாடுகளுக்கு உதவியாகக் களமிறங்க அமெரிக்கா தயங்கியபோது சேர்ச்சில் தான் தனது தந்திரத்தால் அதைச் சாதித்தார். இப்போது ட்றம்பின் ஆட்சியில் அவர் நடுநிலையாக இருப்பாரானால் ரஸ்யா ஓரளவு தாக்குப் பிடிக்க வாய்ப்புண்டு.

மறுபக்கத்தில் ட்றம்பின் இறக்குமதித் தீர்வை விவகாரத்தால் குழம்பிப்போயிருக்கும் உலக பொருளாதாரம் யப்பான், தென் கொரியா, சீனா போன்ற எதிரி நாடுகளிடையே ஒரு இணக்கப்பாட்டைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

உலக மீளொழுக்கிற்கான காலம் நெருங்கி விட்டது. போரொன்றே அதைச் சாத்தியமாக்கும் போலிருக்கிறது.

https://marumoli.com/%e0%ae%9c%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be/

ஹமாசை முற்றாக அழித்தல்; இலங்கை விடுதலைப்புலிகளை தோற்கடித்ததிலிருந்து சில பாடங்கள் - ஜெருசலேம் போஸ்ட்

1 month 1 week ago

22 MAY, 2025 | 02:52 PM

image

PELED ARBELI

பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்றவற்றின் கடும் கண்டனங்களிற்கு மத்தியில் இஸ்ரேல் காசா மீது புதிய சர்ச்சைக்குரிய தாக்குதலிற்கு தயாராகிவரும் வேளையில், இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியும், பாதுகாப்பு ஆய்வாளருமான கேர்ணல் கலாநிதி மோசே எலாட் ஹமாசினை ஒழிப்பதற்கு இலங்கை இறுதி யுத்தத்தில் கையாண்ட வழிமுறைகளை இஸ்ரேல் பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஹமாசை ஒழிப்பதற்கும் காசாவில் அதன் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் இஸ்ரேல் பெரும் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த தருணத்தில் தெற்கு லெபனான் மண்டலத்தில் உள்ள டைர் மற்றும் பின்ட் பெய்ல் மாவட்டங்களின் முன்னாள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான நிபுணருமான மொசே எலாட் பயங்கரவாத அமைப்புகளை வெற்றிகரமாக அழிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மாரிவ் உடன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளை அழிப்பது உண்மையிலேயே சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக சர்வதேச அனுபவங்களை பயன்படுத்தியுள்ள அவர் மேற்குலக நாடுகள் விவாதிக்க தயாராகயிருக்கும் ஒரு விடயம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளை முற்றாக செயல் இழக்க செய்ய முடியுமா? முழுமையான வெற்றி சாத்தியமா என்ற சர்வதேச விவாதம் ஹமாஸ், ஹெஸ்புல்லா, பாலஸ்தீன ஜிகாத் போன்றவற்றின் சூழமைவில் பெருமளவிற்கு தீர்வுகாணப்பட்டதாக காணப்படுகின்றது.

காசா மக்களை பட்டினிபோடுதல், தென்லெபனான் கிராமங்களை அழித்தல், இஸ்ரேலின் ஒவ்வொரு தடையையும் மனிதாபிமான நெருக்கடி என முத்திரை குத்துதல், போன்றவற்றால் இஸ்ரேல் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள், இஸ்ரேல் முழுமையான இராணுவ வெற்றியை பெறுவதற்கு தடையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவரது வார்த்தைகளில் 'நாங்கள் நேர்மையாக பேசுவோம், உலகம் இஸ்ரேல் முழுமையான வெற்றியை பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது"

israel_army_2025_1.jpg

பல்வேறு வழிகளில் மிகவும் திறமையாக அழிக்கப்பட்ட நான்கு பயங்கரவாத அமைப்புகளை அவர் வரலாற்றிலிருந்து உதாரணம் காட்டினார்.

இராணுவ மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் அழிக்கப்பட்ட ஜாரிஸ்ட் ரஸ்யாவின் பிளக் ஹன்ட்ரட்ஸ், பெருவின் சைனிங் பாத் 1990களில் கிட்டத்தட்ட முற்றாக அழிக்கப்பட்டது, தானாகவே முன்வந்து கலைந்துபோன ஜேர்மனியின் செம்படை அரசியல் அமைப்பாக மாறி சின்பெய்னுடன் இணைந்த ஐரிஸ் விடுதலை இராணுவம்.

எலாட் ஐந்தாவது அதிகம் விவாதிக்கப்படாத உதாரணத்தையும் சுட்டிக்காட்டினார் - இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்தது. தென்னாசியாவில் பல தசாப்தங்களாக மிகவும் உறுதியான ஆயுத அச்சுறுத்தலாக விளங்கிய அமைப்பு.

வெற்றியின் விரிவான தன்மை, மற்றும் அதனை சாத்தியமாக்க பயன்படுத்தப்பட்ட தீவிரமான, பெரும்பாலும் தார்மீக ரீதியிலான நடவடிக்கை காரணமாக இலங்கை அனுபவம் விதிவிலக்கானது என அவர் விவரித்தார்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் சுதந்திர தமிழ் தேசத்தை உருவாக்குவதற்காக அந்த அமைப்பு 26 வருடங்களாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டது.

ltte_women.jpg

இந்த குழு அதிநவீன இராணுவதிறன்களை வளர்த்துக்கொண்டது, தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கியது, அவர்களில் சிலர் பெண்கள் சிறுவர்கள்.

2005 இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இலங்கை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண்பதை கைவிட்டு விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை முன்னெடுத்தது.

இலங்கை தமிழ் புலிகளை தோற்கடித்தது எப்படி? இது இஸ்ரேலிற்கு ஏன் முக்கியமானது?

2006க்கும் 2009க்கும் இடையில் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையில் இறங்கியது. இராணுவத்தை கணிசமான அளவு விரிவுபடுத்தவும், மேம்பட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்யவும், ஆயிரக்கணக்கான புதிய வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் வளஙகள் ஒதுக்கப்பட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் பல முனைகளில் இராணுவநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன, எதிரியின் பகுதிகளிற்குள் ஊடுருவி விசேட படைப்பிரிவுகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

அதற்கு சமாந்திரமாக விடுதலைப்புலிகளிற்கு வெளிநாடுகளில் இருந்து ஆதரவு கிடைப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் வெற்றிகரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்தது. புலம்பெயர்ந்தவர்களின் நிதி சேகரிப்பை இலக்குவைத்தது. குறிப்பாக கனடா, பிரிட்டன், ஸ்கன்டினேவியன் நாடுகளில் விடுதலைப்புலிகளை உத்தியோகபூர்வதாக பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு பல மேற்குலக நாடுகளை அரசாங்கம் கேட்டுக்கொண்டது. இதன் மூலம் அந்த அமைப்பின் ஆதரவு கட்டமைப்புகள் பலவற்றை மூடியது.

உளவியல் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளிற்கும் தமிழ் மக்களிற்கும் இடையில் அதிருப்தியை அதிகரிப்பதற்காக தவறான தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அமைப்பிலிருந்து விலகியவர்கள் ஒற்றர்களாக தகவல் வழங்குபவர்களை சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தோல்வியில் முக்கிய பங்கை வகிக்கவில்லை என்கின்றார் எலாட்.

இறுதி அடி என்பது மிகவும் சர்ச்சைக்குரியதாக விளங்கும் வழிமுறை மூலம் சாத்தியமானது. யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், பலர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட ஆனால் கடும் குண்டுவீச்சு இடம்பெற்ற பகுதியில் கொல்லப்பட்டனர்.

srilanka_army.jpg

சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் மருத்துவமனைகளை இலக்குவைப்பது பொதுமக்களை பணயக்கைதிகளாக பயன்படுத்தியது, தடுத்துவைக்கப்பட்டவர்கள் காணாமல்போனது போன்ற இலங்கை இராணுவத்தின் மனித உரிமைகளை ஆவணப்படுத்தியுள்ளன.

தமிழ் புலிகள் வெறுமனே பின்வாங்கச்செய்யப்படவில்லை. அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டனர் என்கின்றார் எலாட். அவர்களிடமிருந்த பகுதி மீள கைப்பற்றப்பட்டது, தலைமைத்துவம் அழிக்கப்பட்டது, 2009ம் ஆண்டின் பின்னர் மீள எழுச்சி பெறுவதற்கான எந்த அறிகுறியையும் அந்த அமைப்பு வெளிப்படுத்தவில்லை.

2011 ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் மதிப்பீடுகள் குறிப்பாக ஜனவரி மற்றும் மே 2009 க்கு இடையில் நடந்த சண்டையின் இறுதி மாதங்களில் 40000 முதல் 70000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. இலங்கை அரசாங்கம் இந்த எண்ணிக்கையை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகள் போராளிகள் என்று வலியுறுத்துகிறது.

மனிதாபிமான அமைப்புகள் மோதல் வலயங்களிற்குள் மண்டலங்களுக்குள் நுழையத் தடுக்கப்பட்டதாகவும் பத்திரிகையாளர்கள் தடை செய்யப்பட்டதாகவும் சாட்சிகள் வாயடைக்கப்பட்டதாகவும் அல்லது நாடுகடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் தார்மீக மற்றும் சட்ட மதிப்பீடுகள் சிக்கலாகின. பொதுமக்களின் இறப்புகளின் அளவு மோதலின் முடிவில் மிகவும் பிரச்சினைக்குரிய  அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

சர்வதேச  மௌனமாக இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் மனித உரிமைக் குழுக்களிடமிருந்து சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்புகள் வந்த போதிலும் இலங்கை அரசாங்கத்தால் அவை வெறுமனே நிராகரிக்கப்பட்டன. இதனால் அரசாங்கம் சில விளைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

இதனை பயங்கரவாத அமைப்பொன்று முற்றாக அழிக்கப்பட்ட மிகவும் வழமைக்கு மாறான தருணம் என தெரிவித்தார். ஆனால், பெரும் மனிதாபிமான விலை காரணமாக அது சர்ச்சையில் சிக்குண்டது.

நீதியை விட புவிசார் அரசியலே மேற்குலகின்  பதிலை தீர்மானித்தது என்கின்றார் அவர்

செப்டம்பர் 11க்கு பின்னர் இலங்கை தனது நடவடிக்கைகளை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக முன்னிறுத்தியதால் பல நாடுகள் அதற்கு ஆதரவாகயிருந்தன.

அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அழுத்தம் கொடுக்கவும் தமிழ் புலம்பெயர்ந்தோர் குழுக்களின் முயற்சிகள் குறைந்த வெற்றியையே அடைந்தன. கனடா மற்றும் இங்கிலாந்து மட்டுமே மிதமான தடைகளை விதித்தன, அல்லது உதவியை நிறுத்தி வைத்தன. விரிவான சர்வதேச விசாரணை எதுவும் பின்பற்றப்படவில்லை.

hamaz_33.jpg

இலங்கையும் மோதலை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாக வெற்றிகரமாக சித்தரித்தது, அதன் நடவடிக்கைகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்க அவசியமானவை என்றும் இன அழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அல்ல என்றும் வாதிட்டது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குப் பிறகு தங்கள் சொந்த வெளியுறவுக் கொள்கை சோர்வை எதிர்கொண்ட மேற்கத்திய நாடுகள் மோதலை விட கட்டுப்படுத்தலையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்தன. இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய இருப்பிடமும் சீனாவுடனான வளர்ந்து வரும் உறவுகளும் மேற்கத்திய அரசாங்கங்களை உண்மையான அழுத்தத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்திருக்கலாம்.

https://www.virakesari.lk/article/215402

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின்  மனச்சாட்சியும்

1 month 1 week ago

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின்  மனச்சாட்சியும்

May 21, 2025

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின்  மனச்சாட்சியும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை  கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து  விலகி 1965  மே 14 ஆம் திகதி ஜே.வி.பி. யை தாபித்தார். 

அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து இரத்தக் களரிகளை கடந்து வந்த ஜே.வி.பி.  ஜனநாயக அரசியலில் பிரவேசித்த பிறகு அதன் ஐந்தாவது தலைவரான அநுரா குமார திசாநாயக்கவின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரமாக கடந்த வருடம் ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவசியமான 50 சதவீதத்துக்கும் அதிகமான  வாக்குகளை பெறாமல்  திசாநாயக்க  நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்த போதிலும், இரு மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. 

இலங்கை அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தை அமைத்த  முதல் இடதுசாரி கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜே.வி.பி. அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆறு தசாப்தங்கள்  காத்திருக்க வேண்டியிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் மூண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் கிளர்ச்சியே தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வருவதற்கு வசதியான  அரசியல்  நிலைவரத்துக்கு வழிவகுத்தது.  தெற்காசியாவில் நேபாளத்துக்கு பிறகு  ஆயுதக் கிளர்ச்சி செய்த அரசியல் இயக்கம் ஒன்று ஜனநாயக தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாக இலங்கை விளங்குகிறது.

தலைமறைவாக இயங்கிய புரட்சிகர இயக்கம் என்ற நிலையில் இருந்து மக்களினால் தெரிவு செய்யப்பட்ட  ஆளும் கட்சி என்ற நிலைக்கான  ஜே.வி.பி.யின் பயணம் இலங்கையின் அரசியல் நிலக்காட்சியை மாற்றியமைத்தது. அதன் வெற்றி நாட்டின் அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புடைபெயர்வை பிரதிபலித்தது. இத்தகைய ஒரு  பின்புலத்தில், ஏழு மாதகாலமாக பதவியில் இருந்தவரும் நிலையில் ஜே.வி.பி. அதன் 60 வது வருட நிறைவை கடந்த வாரம் கொண்டாடியது. 

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி திசாநாயக்க ஜே வி.பி. ஒரு அரசியல் சக்தியாக தொடருவதற்கு மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அரசியல் அறிவு ஆகியவை முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்று குறிப்பிட்டிருந்தார். தனது கட்சியின் கொந்தளிப்பான பயணம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாக இருக்கின்றன.

“ஜே.வி.பி.யின்  வரலாறு பூராவும் எமது மனச்சாட்சியே எமக்கு சரியான பாதையை காட்டியது. மனச்சாட்சியே எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும்  எமக்கு துணிச்சலை கொடுத்தது. எமது மனச்சாட்சியின் காரணமாகவே உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சகலரையும்  விடவும் நாம் மேம்பட்டு நிற்கிறோம். எமது மனச்சாட்சியின் அடிப்படையிலேயே நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 

“துரோகங்களுக்கு மத்தியிலும் கூட எமது மனச்சாட்சியின் அடிப்படையில் பணியாற்றுவோம் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு நாம் வழங்குகிறோம். மற்றைய எந்தவொரு அரசியல் முகாமிடமும் இல்லாத வெல்லமுடியாத துணிச்சல் எமது கட்சியிடம் இருக்கிறது. குறைபாடுகளையும் தவறுகளையும்  ஒத்துக்கொண்டு எம்மைத் திருத்திக் கொள்வதற்கு போதுமான துணிச்சல் எம்மிடம் இருக்கிறது. சொல்லொணா இடர்பாடுகளுக்கும் சிக்கல்களுக்கும் மத்தியில் பணியாற்றுவதற்கான துணிச்சல் எம்மிடம் இருக்கிறது.

“எமது அரசியல் பயணத்தை  நிறுத்துவதற்கு வழிவகுத்த பல சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால், பயணத்தை இடைவிடாமல் தொடருவதற்கு எமக்கு துணிச்சல் இருந்தது. கொந்தளிப்புகளின்  ஊடாக எமது கட்சியின் வெற்றிக்கு துணிச்சலே வழிவகுத்தது. அத்தகைய வலிமை வேறு எந்த கட்சியிடமும் கிடையாது.  எமது முகாம் வெற்றியை நோக்கிய  பயணத்தை தொடருவதற்கு  நடைமுறை அறிவும்  முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தது. வெற்றி தொலைவில் இருப்பதாக தோன்றிய ஒரு நேரத்தில் அதைச் சாதிப்பதற்கு நடைமுறை அறிவு எமக்கு உதவியது.

“சவால்களை எதிர்நோக்கவேண்டி வந்தாலும் கூட கொந்தளிப்புக்கு மத்தியிலும் கப்பல் சரியான பயண இலக்கை அடையும். எமது கட்சியின் உறுப்பினர்கள் பெரும் கொடுமைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானார்கள். எமது கட்சி  மனிதகுலத்தின் நன்மைக்காக தியாகங்களைச் செய்த வரலாற்றைக் கொண்டது.  உண்மைக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயாராயிருப்பதால், எமது முகாம் வெல்ல முடியாத ஒரு சக்தியாக மாறியிருக்கிறது. வெற்றிக்காக சளைக்காமல் பணியாற்றுவதற்கு நாம் தயாராயிருக்கிறோம்” என்று ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி  கூறியதை சுருக்கமாகச் சொல்வதானால், மனச்சாட்சியும் துணிச்சலும் நடைமுறை அறிவுமே ஜே.வி.பி.யின் வெற்றியின் தூண்கள். இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஜே.வி.பி. அதிகாரத்துக்கு வரக்கூடியதாக இருந்தது உண்மையிலேயே ஒரு வரலாற்று சாதனை என்பதை மறுக்க இயலாது. ஆனால், அது இன்று எந்தளவுக்கு இடதுசாரி இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றுகின்றது என்ற ஒரு முக்கிய கேள்வி இருக்கிறது. 

முதன்முறையாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த ஒரு இடதுசாரிக் கட்சி என்ற வகையில் ஜே.வி.பி. தலைமையிலான  அரசாங்கத்தின் ஏழு மாதகால நிருவாகத்தை அதன் முழுமையான செயலாற்றலையும் மதிப்பிடுவதற்கு அளவுகோலாக பயன்படுத்ததுவது பொருத்தமானதல்ல. ஆனால், அதன் இதுவரையான ஆட்சி எதிர்காலத்தில்  அது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் எந்தளவுக்கு  வல்லமையைக் கொண்டதாக செயற்படும் என்பதை மதிப்பிடுவதற்கு ஓரளவுக்கு போதுமானது  எனலாம். 

இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் போன்று நாட்டின் சகல இனமக்களினதும் சகல பிராந்தியங்களினதும் பெருமளவு ஆதரவுடன் வேறு எந்தவொரு அரசாங்கமும் முன்னர் பதவிக்கு வந்ததில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் கூடுதலான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியதைப் போன்று முன்னர் எந்தவொரு தென்னிலங்கை கட்சியும்  சாதித்துக் காட்டியதில்லை. நாடு தழுவிய ஆணையை தாங்கள் பெற்றிருப்பதாக ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் எப்போதுமே பெருமையாகக் கூறுவதற்கு தவறுவதில்லை. 

ஆனால், தங்களுக்கு கிடைத்திருப்பது ஒரு பல்லின சமூகத்தின் ஆணை என்பதை மானசீகமாகப்  புரிந்து கொண்டு அரசாங்க தலைவர்கள் எந்தளவுக்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு ஆட்சிமுறையை முன்னெடுப்பதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. இந்த இடத்தில் தங்களது அரசியல் பயணத்தை வழிநடத்தியதாக ஜனாதிபதி திசாநாயக்க கூறும் மனச்சாட்சி குறித்து நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

பாரம்பரியமான இடதுசாரி இயக்கத்தின் மீதான அதிருப்தியும் 1960 களின் நடுப்பகுதியில் ஜே.வி.பி.யின் தோற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணி என்று கூறப்படுவதுண்டு. அதே போன்று பாரம்பரியமான அதிகார வர்க்க அரசியல் கட்சிகள் மீதான மக்களின் வெறுப்பே அறுபது வருடங்களுக்கு பிறகு ஜே.வி.பி.யை ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த ஆறு தசாப்த காலகட்டத்தில் நாட்டைச் சின்னாபின்னப்படுத்திய முக்கியமான சகல நெருக்கடிகளில்  இருந்தும் முறையான படிப்பினையை பெற்றுக் கொண்டவர்களாக ஜே.வி.பி.யின் தலைவர்கள் தங்களது அரசாங்கத்தின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் வகுக்க வேண்டும். அது விடயத்தில் அவர்களிடம் பாரிய கரிசனைப்  பற்றாக்குறை காணப்படுகிறது. 

முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவரப் போவதாகவும் இனவாதத்தையும் மதத்தீவிரவாதத்தையும் மீண்டும் தலைகாட்ட அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறுவதை கேட்கும்போது இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், தீர்மானங்களை மேற்கொள்ளும் அரசாங்க அமைப்புகளுக்கு நியமனங்களைச் செய்வதற்கு கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை தொடக்கம் சிறுபான்மைச் சமூகங்களின்  பிரச்சினைகளை கையாளுவது வரை அரசாங்கத்திடம் ஆரோக்கியமான மனமாற்றத்தை காணமுடியவில்லை. 

மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த  சிக்கலான தேசிய இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினால் குறுகிய காலத்திற்குள் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த பிரச்சினைக்கு நாளடைவில் அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு முன்னைய அரசாங்கங்களை விடவும் வேறுபட்ட அணுகுமுறையை  புதிய அரசாங்கம் கடைப்பிடிப்பதில் நாட்டம் காட்டும் என்பதற்கான எந்தவிதமான அறிகுறியையும் கூட காணமுடியாமல் இருப்பது கவலைக்குரியது. 

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து இன்றுடன் சரியாக பதினாறு வருடங்கள் நிறைவுபெறுகின்றன. அந்த கொடிய போரின் விளைவாக வடக்கு, கிழக்கில் தோன்றிய பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளை கையாளுவதில் கூட தேசிய மக்கள் சக்தியிடம் வேறுபட்ட ஒரு அணுகுமுறையைக் காணமுடியாமல் இருக்கிறது. 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இதுவரையான சகல முயற்சிகளையும் எதிர்த்துநின்ற ஒரு கடந்த காலத்தை ஜே. வி.பி. கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை காலமும் அந்த பிரச்சினை தொடர்பில் கடைப்பிடித்துவந்த கொள்கைகளிலும் அணுகுமுறைகளிலும் மாற்றங்களைச்  செய்யாமல்  புதிய அரசியல்  கலாசாரம் பற்றி உரத்துப் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

பாரம்பரியமாக தமிழ் தேசியவாத கட்சிகளுக்கு வாக்களித்துவந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவற்றை பெருமளவுக்கு நிராகரித்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தார்கள். அந்த  மக்களுக்கு எதிர்காலம் குறித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி திசாநாயக்க சரியான சமிக்ஞையைக் காண்பிக்காததன் விளைவை உள்ளூராட்சி தேர்தல்களில் காணக்கூடியதாக இருந்தது. இந்த கருத்தை தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் நிராயப்படுத்துவதாக வியாக்கியானம் செய்யத் தேவையில்லை. 

ஆனால், தென்னிலங்கையில் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதற்காக எவ்வளவு காலத்துக்குத்தான் இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான ஒரு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பில் அரசாங்கங்களும் பெரும்பான்மையின சமூகமும் மாறாத நிலைப்பாட்டுடன் நியாயமற்ற முறையில் நடந்துகொள்ளப் போகின்றன? சிறுபான்மைச் சமூகங்களின் நியாபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக தென்னிலங்கைச் சமூகத்தில் காணப்படும் கடுமையான உணர்வுகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய அணுகுமுறைகளை அல்ல,  இனப்பிரச்சினைக்கு  தீர்வைக் காணவேண்டிய அவசியத்தை அந்த மக்களுக்கு உணர்த்துவதற்கும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்குமான நடவடிக்கைகளிலலேயே தேசிய மக்கள் சக்தி இறங்க வேண்டும். அதற்கு முதலில் ஜே.வி.பி. தலைவர்கள் தங்களது பழைய  நிலைப்பாடுகளை மாற்ற வேண்டும். இந்த இடத்தில் மீண்டும் மனச்சாட்சி குறித்து அவர்களுக்கு  நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

தென்னிலங்கையில் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் மீண்டும் வலுவான முறையில் வெளிக்கிளம்புவதற்கு  சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட  பெரும்பான்மையினவாத அணிதிரட்டல்கள் இறுதியில்  தென்னிலங்கைச் சமுதாயத்துக்கும் கூட பாதகமாக அமைந்த வரலாற்றுப் பாடத்தை  அடிப்படையாகக் கொண்டு  மக்களுக்கு  சரியான பாதையைக்  காட்டுவதற்கு  தேசிய மக்கள் சக்தி அரசியல் துணிச்சலை வெளிக்காட்ட வேண்டும்.  தங்களை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை இந்த விடயத்திலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளிக்காட்ட வேண்டும். 

இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலைகாட்டுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க மீண்டும் நாட்டின் இனப்பிளவின் இருமருங்கிலும்  தேசியவாத அரசியல் உணர்வுகள் கூர்மையடையக்கூடிய  சூழ்நிலை தோன்றியிருப்பதை கவனத்தில் எடுத்து மீண்டும் இனமோதல்களுக்கு வழிவகுக்கக்கூடிய நிகழ்வுப்போக்குகளை தடுப்பதற்கான தலையாய  பொறுப்பைக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜே.வி.பி.யை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி,  துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை பயன்படுத்த வேண்டும். கிடைக்கின்ற  வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறவிட்ட  தலைவர்களின் வரிசையில் அவரும் இணைந்துவிடக் கூடாது.

https://arangamnews.com/?p=12035

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில் பொருளாதார வழித்தடம் அவசியம்; தரைவழி தொடர்பு முக்கியம் - ரணில்

1 month 1 week ago

21 MAY, 2025 | 03:30 PM

image

ரொபட் அன்டனி

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் உருவாக வேண்டியது அவசியமாகும். இலங்கை இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கப்படுவதை தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை. ஆனால் பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையில் தொடர்புகளை வலுப்படுத்தாமல் பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

2050ஆம் ஆண்டாகும்போது இந்தியா 30 ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். அப்போது அந்த வளர்ச்சியில் பல்வேறு நாடுகள் நன்மை பெறும். இதற்காக நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது தொடர்புகள் என்ன ? எவ்வாறான தொடர்புகளை மேற்கொண்டு நாங்கள் இந்த நன்மையை அடையப்போகிறோம் என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

பார்த் பைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த ஐந்தாவது வங்காள விரிகுடா மாநாடு நேற்று (20) கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகைலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டில் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சிந்தனை குழாம் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு இது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. ஆரம்ப ஆய்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எனினும் தற்போதைய அரசாங்கம் அதனை விரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்,

வங்காள விரிகுடா தொடர்பான மாநாடு மிகவும் தீர்க்கமான கட்டத்தில் நடைபெறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடுகளுக்கு தீர்வை வரிகளை விதித்திருக்கின்றார். உலகமயமாதல் செயல்பாடு மாற்றமடையாது. ஆனால் அது தொடர்பான முறையில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதாக தெரிகிறது. ஆனால் நாம் என்ன செய்யப்போகிறோம்? நாம் ஒரு பிராந்திய அமைப்பாக முன்வரப் போகின்றோமா?

அப்படியானால் எந்த அமைப்பு இதற்கு தலைமை தாங்கும்? பீம்ஸ்டெக் அல்லது பட்டுப்பாதை (BRI) அல்லது ஆசியான் அமைப்பு இவற்றில் எது இந்த மாற்றத்தை நோக்கி நகர்வதில் தலைமைத்தும் வகிக்கப்போகிறது? நாம் ஒரு பிராந்தியமாக செயல்படுவதா? போன்று கேள்விகள் எம்முன் எழுகின்றன.

அமெரிக்கா ஜனாதிபதி இந்த தீர்வை வரிகளை விதித்தவுடன் இந்தியா ஜப்பான் சீனா கொரியா போன்ற நாடுகள் அந்த நாட்டுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் இலங்கை போன்ற நாடுகள் அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தின.

இந்நிலையில் எமது இந்த வங்காள விரிகுடா நாடுகள் எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போகின்றன? எதிர்வரும் 2050ஆம் ஆண்டில் இந்தியா 30 ட்ரில்லியன் டொலர்களுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க போகிறது. இந்தோனேசியா நான்காவது பொருளாதாரமாக உருவெடுக்கும்.

பங்களாதேஷ் தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகள் முதல் 30 நாடுகளுக்குள்ளே வந்துவிடும். இந்த இடத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம்?

எவ்வாறு இந்த அபிவிருத்தியை நாம் பயன்படுத்த போகிறோம் என்பது எமன் இருக்கின்ற கேள்வியாகும். இதில் இந்த பீம்ஸ்டேக் அமைப்பு அல்லது வங்காள விரிகுடா நாடுகள் என்ன செய்யப் போகின்றன? நாம் ஒரு பிராந்தியமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

தற்போது நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் மிக முக்கியத்துவம் மிக்கதாக இருக்கின்றன. பொருளாதார வழித்தடங்கள் அவசியமாகின்றன. சீனா - சிங்கப்பூருக்கு இடையில் தொடர்பு காணப்படுகிறது.

சீனா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு இடையில் ரயில் பாதை தொடர்பு காணப்படுகிறது. இந்தியா மியான்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் ரயில்வே துறையுடன் ஒரு பொருளாதார வழித்தடம் காணப்படுகிறது.

இந்நிலையில் நாம் எவ்வாறு எமது தொடர்புகளை வலுப்படுத்த போகிறோம் என்பது முக்கியமாக இருக்கின்றது. என்னை பொறுத்தவரையில் தெலுங்கானா ஆந்திரா தமிழ்நாடு இலங்கை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு பொருளாதார வழித்தடம் அவசியமாகின்றது. அதன் ஊடாகவே நாம் எமது பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

மேலும் இலங்கை தற்போது மிக முக்கியமாக ஆடை துறையில் தங்கியிருக்கிறது. அதிலிருந்து நாங்கள் வெளியே வர வேண்டும்.

இலங்கை பிராந்திய ரீதியான வர்த்தகங்களை செய்கின்ற ஒரு தளமாக மாற்றமடைய வேண்டும். இதற்கு நாங்கள் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று புதிய துறைமுகத்தை உருவாக்குவது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டும்.

எமது பொருளாதார ஐந்து முதல் பத்து வீத வளர்ச்சி அடைய வேண்டுமானால் வருகின்ற கொள்கலன்களை எங்கே நாம் தரையிறக்குவது? அதற்கான வசதிகள் எம்மிடம் இருக்கின்றதா?

இலங்கை இந்திய தரை தொடர்பு தொடர்பாக நாம் நடவடிக்கைகள் எடுத்திருந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரித்திருக்கிறது. ஆனால் இந்தியா இலங்கைக்கு இடையிலான பாலம் உருவாக வேண்டும். அதற்கு முன்னர் பொருளாதாரம், கலாசாரம், அரசியல் மற்றும் சுற்றாடல் ரீதியான விடயங்கள் ஆராயப்பட்டு பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டி இருக்கின்றது. புதிய வர்த்தக தொடர்பை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/215333

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?!

1 month 1 week ago

20 MAY, 2025 | 12:46 PM

image

டி.பி.எஸ். ஜெயராஜ்

ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் இன்றைய நாட்களில் பெரிதும் பேசப்படுபவராக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு தலைவரான 'பொட்டு அம்மான்'  என்ற சண்முகநாதன் சிவசங்கர் விளங்குகிறார். பெரிதும் அஞ்சப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே மாதத்தில்  இறந்துவிட்டார் என்ற போதிலும், ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒரு குழுவினர் பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வெளியில் வந்து இயக்கத்துக்கு புத்துயிரளித்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்றும் 'பொய்ச்செய்தியை'  பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்” என்ற மாயைக்கு பின்னால் இருக்கும் குழுவே விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உயிருடன் இருக்கிறார் என்ற பொய்ச்செய்திப் பிரசாரத்தில் ஏற்கெனவே ஈடுபட்டது என்று அறியவருகிறது. பிரபாகரனும் அவரது மனைவி மதிவதனியும் கூட உயிருடன் இருக்கிறார்கள் என்ற மாயையையும் இந்த குழுவே பிரசாரம் செய்தது. ஐரோப்பாவில் இருக்கும் மதிவதனியின் சகோதரர்கள் உட்பட  பல்வேறு நபர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் விடுதலை புலிகளின் முக்கியமான ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் போன்றவர்களும் இந்த 'உயிருடன் இருக்கும்' புரளிக்கு ஆதரவளித்தார்கள்.

905cc18c-b5a0-43f4-84be-9b0dd6f2a0ae.jpg

போலி துவாரகா, பிரபாகரன் மற்றும் மதிவதனியை கொண்டுவருவதற்கான நடவடிக்கை 'தலைவரின்' குடும்பத்தின் எளிதில் ஏமாற்றப்படக்கூடிய ஆதரவாளர்களிடம் இருந்து நிதி சேகரிப்பதற்கு ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் புலிகளினால் முன்னெடுக்கப்படும் ஏமாற்று வேலையின் ஓர் அங்கமாகும். இதைப் பற்றி நான் 2023 மார்ச்சில் 'பிரபாவையும் குடும்பத்தையும் பயன்படுத்தி போலிச்செய்தி மோசடி' என்ற தலைப்பில் விரிவாக எழுதினேன். பெரும் ஆரவாரத்துடன் தொடங்கிய அந்த மோசடி வேலை பரிதாபத்துக்குரிய சிணுங்கலாக இப்போது தணிந்துபோய்விட்டது. துவாரகாவாக பாசாங்கு செய்தவர் அஞ்சி நடுங்கி தற்போது வெளியில் தலைகாட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

விடுதலை புலிகளின் பெருமளவு ஆதரவாளர்களை ஏமாற்றி அவர்களது யூரோக்களை, பிராங்குகளை, குரோனர்களை, ஸ்ரேர்லிங் பவுண்களை கறந்த மோசடிக்காரர்கள் பொன்முட்டையிடும் அந்த வாத்தை கைவிட்டுவிடத் தயாராக இல்லை. இப்போது அவர்கள் பொட்டு அம்மானை பிடித்திருக்கிறார்கள். அவர் உக்ரெயின் நாட்டில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். பொட்டு அம்மானின் 'மீள்வருகைக்கும்' அதைத் தொடர்ந்து நிதி திரட்டலுக்குமான களம் அமைக்கப்படுகிறது. ஆனால், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில விவேகமுள்ள, அக்கறையுடைய உறுப்பினர்கள் இவ்வாரம் பொட்டு அம்மானின் வாழ்வையும் மரணத்தையும் பற்றிய ஒரு நூலை வெளியிடுவதன் மூலம் இந்த பாசாங்கை அம்பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேவேளை, இந்த நிகழ்வுப் போக்குகளினால் குழப்பமடைந்த சில நபர்கள் உண்மை நிலையை எழுதுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். இவ்வாறு வேண்டிக்கொண்டவர்களில் பலர் ஐரோப்பாவில் வளர்ந்த இளைஞர்களே. அவர்களில் சிலர் பொட்டு அம்மானை பற்றி அறியவும் விரும்புகிறார்கள். அதனால் இந்த பின்புலத்தில், இந்த கட்டுரை முன்னைய எனது எழுத்துக்கள் சிலவற்றின் உதவியுடன் பொட்டு அம்மான் மீது கவனம் செலுத்துகிறது.

பொட்டு அம்மான் என்ற சண்முகநாதன் சிவசங்கர் விடுதலை புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக 2009ஆம் ஆண்டில் மரணமடையும் வரை 21 வருடங்கள் செயற்பட்டார். விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நேரத்தில் பொட்டு அம்மான் நடப்பின்படி அந்த இயக்கத்தின் இரண்டாவது பெரிய தலைவராக இருந்தார். உரிமைப்படி மூப்பின் அடிப்படையில் பிரபாகரனுக்கு அடுத்த தலைவர் என்றால் அது பேபி சுப்பிரமணியமே. ஆனால், இரண்டாவது தலைவராக நடைமுறையில் பொட்டு அம்மானே செயற்பட்டார். பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக சட்டப்படியாக அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவரது சடலமோ அல்லது எச்சங்களோ ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால்தான் அவர் இறக்கவில்லை என்று சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன.

a9240536-f25f-4cf6-9782-b49df3bd5374.jpg

பொட்டுவும் குடும்பமும்  உயிருடன் இல்லை

இந்த கட்டத்தில் நான் பொட்டு அம்மானின் மரணத்துடன் தொடர்புடைய விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்துக்கு நேர்ந்ததைப் போன்றே பொட்டு அம்மானும் அவரது குடும்பத்தினரும் கூட இறந்துவிட்டனர். பிரபாகரனும் மனைவி மதிவதனி, பிள்ளைகள் சார்ள்ஸ் அந்தனி, துவாரகா மற்றும் பாலச்சந்திரனும் போரின் இறுதிக்கட்டத்தில் மரணமடைந்தனர். அதேபோன்றே பொட்டு அம்மானும் அவரது மனைவி வத்சலா, மகன்களான பார்த்திபன், அருள்வேந்தன் மற்றும் கலைக்கண்ணன் ஆகியோரும் இன்று உயிருடன் இல்லை.

பொட்டுவின் மூத்தமகன் பார்த்திபனும் இரண்டாவது மகன் அருள்வேந்தனும் விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இணைந்து ஆயுதப் பயற்சிகளை பெற்றனர். போர்க்களத்தில் முன்னரங்கத்தில் நின்று போராடிய அவர்கள் இருவரும் வெவ்வேறு சண்டைகளில் கொல்லப்பட்டனர். இருவரும் 2009 ஜனவரிக்கும் மேயிற்கும் இடைப்பட்ட மாதங்களிலலேயே கொல்லப்பட்டனர். திகதிகளை அறியக்கூடியதாக இல்லை.

இளைய மகன் கலைக்கண்ணன் 2009 மே 13ஆம் திகதி கொல்லப்பட்டான். ஒன்பது வயதான அவன் தாயுடன் சேர்ந்து மறைந்திருந்த பதுங்குகுழியில் இருந்து வெளியேறி அருகாமைப் பதுங்குகுழியில் இருந்த நண்பர்களுக்காக தண்ணீர் எடுக்கச் சென்றான். அந்தவேளை ஹெலிகொப்டரில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவன் இரத்தம் சிந்திய நிலையில் தாயாரின் கரங்களிலேயே உயிர்விட்டான். பொட்டுவின் மனைவி வத்சலா 2009 மே 16ஆம் திகதி மரணமடைந்தார். ஆட்டிலறி ஷெல் வெடிப்பு ஒன்றிலேயே அவர் கொல்லப்பட்டார். அவரது சடலத்தை கணவர் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.

பொட்டு 2009 மே 18ஆம் திகதி மரணமடைந்தார். வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட அங்கி அணிந்திருந்த அவர் அதை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. தான் தூள்தூளாகப் போவதை உறுதிசெய்வதற்காக பொட்டு தனது அங்கியில் மிகையான அளவுக்கு வெடிபொருட்களை நிரப்பியதாகவும் தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது உதவியாளர்களையும் மெய்க்காவலர்களையும் வேறிடத்துக்கு செல்லுமாறு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. பலத்த வெடிச்சத்தத்தை கேட்டு திரும்பிவந்து பார்த்த அவர்கள் சிதறிய பொட்டுவின் உடலில் எஞ்சிக்கிடந்தவற்றை அழித்தனர்.

முன்னர் குறிப்பிட்டதை போன்று பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் மூன்று பிள்ளைகள். தங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் இருவரும் பெயர்களைச் சூட்டியதிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பிரபாகரன் - மதிவதனி தம்பதியரின் மூத்த மகனுக்கு பிரபாகரனின் சிறந்த நண்பனும் மூத்த இராணுவ தளபதியுமான - சாவகச்சேரி மீசாலையில் இறந்த சார்ள்ஸ் அந்தனியின் பெயர் சூட்டப்பட்டது. அவர்களின் மகளுக்கு துவாரகன் (மயூரன்) என்ற அவரின் மிகுந்த விருப்பத்துக்குரிய மெய்க்காவலரின் நினைவாக துவாரகா என்று பெயர் சூட்டப்பட்டது. இளையமகனுக்கு விடுதலை புலிகளில் இணைந்து சண்டையில் உயர்துறந்த மதிவதனியின் சொந்தச் சகோதரன் பாலச்சந்திரனின் பெயர் சூட்டப்பட்டது.

பொட்டு அம்மானும் வத்சலாவும் தங்களது மூத்த மகனுக்கு பாரத்திபன் என்று பெயர் சூட்டினார்கள். 1987ஆம் ஆண்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த திலீபனின் உண்மையான பெயர் பார்த்திபன். அவர் சிறந்த ஒரு சதுரங்க விளையாட்டு விற்பன்னர். அதேபோன்றே பொட்டுவின் மகன் பார்த்திபனும் சதுரங்கத்தில் திறமையுடையவர். இரண்டாவது மகனுக்கு அவர்கள் கொழும்பில் தன்னைத்தானே வெடிக்கவைத்து இறந்த ஒரு கரும்புலியின் நினைவாக அருள்வேந்தன் என்று அவர்கள் பெயர் வைத்தனர். பொட்டுவின் பிரதி கேணல் சார்ள்ஸும் கூட விடுதலை புலிகள் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கும் இயக்கத்தை ஆரம்பித்தபோது தனக்கு அருள்வேந்தன் என்று இயக்கப்பெயரை வைத்துக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

பொட்டு தம்பதியர் தங்களது இளையமகனுக்கு சண்டையில் இறந்த மேஜர் கண்ணனின் பெயரைச் சூட்டினர். கண்ணன் வத்சலாவின் தாய்மாமனும் கூட. 2000ஆம் ஆண்டில் பிறந்த கலைக்கண்ணனுக்கும் அவரது மூத்த சகோதரர்கள் பார்த்திபன், அருள்வேந்தன் ஆகியோருக்கு இடையில் நீண்ட வயது வித்தியாசம். அதேபோன்றே பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கும் அவரது மூத்த சகோதரர்கள் சார்ள்ஸ் அந்தனி, துவாரகா ஆகியோருக்கும் இடையில் நீண்ட வயது வித்தியாசம். பாலச்சந்திரன் 1997ஆம் ஆண்டில் பிறந்தவர்.

பொட்டுவின் சகோதரி கெப்டன் அருந்ததி

இரு மகன்களுக்கும் புறம்பாக பொட்டு குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து சண்டையில் இறந்தார். பொட்டுவின் இளைய சகோதரி காப்டன் அருந்ததி என்ற சிவரஞ்சனி சண்முகநாதனே அவராவார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் தச்சன்காடு பகுதியில் 1990 நவம்பரில் நடைபெற்ற மோதல்களில் அவர் கொல்லப்பட்டார். சிவரஞ்சனியின் இயக்கப்பெயர் அருந்ததியாக இருந்தபோதிலும், பொட்டுவின் சகோதரி என்பதால் தோழர்கள் அவரை 'பொட்டு' என்றே அழைத்தார்கள். பல வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துவிட்ட பொட்டுவின் மூத்த சகோதரர் அண்மையில் காலமானார். அவரின் இளைய சகோதரரும் வத்சலாவின் ஒரு உடன்பிறப்பும் லண்டனில் வசிக்கிறார்கள்.

பொட்டு இரு தசாப்தங்களுக்கும் மேலாக விடுதலை புலிகளின் பலம் பொருந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மிகவும் முக்கிய பொறுப்பில் செயற்பட்டார். அவர் 1962ஆம் ஆண்டில் பிறந்தார். 1981ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பொட்டு சுமார் 30 வருடங்கள் இயக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்தார். 1983 ஜூலை 23ஆம் திகதி விடுதலை புலிகள் திருநெல்வேலியில் இலங்கைப் படையினர் மீது தாக்குதல் நடத்தியபோது இயக்கத்தில் 23 முழுநேர உறுப்பினர்களும் ஏழு பகுதிநேர உதவியாளர்களும் மாத்திரமே இருந்தனர். பொட்டு இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் 30 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியாலை - நாயன்மார்கட்டு 

அவரது குடும்பம் யாழ்ப்பாணத்தில் நாயன்மார்கட்டில் வசித்தபோதிலும், அவர்கள் அயல் அரியாலையைச் சேர்ந்தவர்கள். சிறுவர் பராயத்தில் இருந்தே அரியாலையில் இருந்த தனது வயதையொத்த சிறுவர்களுடன் பொட்டு நெருங்கிப் பழகி நாயன்மார்கட்டையும் விட கூடுதலான நேரத்தை அரியாலையிலேயே கழித்தார்.

சிவசங்கரின் தந்தையார் சண்முகநாதன், சண்முகலிங்கம் என்றும் அறியப்பட்டிருந்தார். கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் பல வருடங்களாக ஒரு எழுதுவினைஞராக அவர் பணியாற்றினார். பிள்ளைகளின் கல்விக்காக குடும்பம் யாழ்ப்பாணத்திலேயே வசித்தது.1990 களின் பிற்பகுதி வரை பொட்டுவின் தந்தையார் மலையகத்திலேயே தொடர்ந்து வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொட்டுவைப் பற்றி இலங்கை அதிகாரிகளுக்கு பெரிதாக எதுவும் தெரியாத காரணத்தால் தந்தையாருக்கு ஆபத்து எதுவும் நேராது என்பதில் மகன் மிகுந்த நம்பிக்கை உடையவராக இருந்தார்.

பொட்டு மகேஸ்வரி வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்ரான்லி கல்லூரி) மன்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைப் பெற்றார். மிகவும் உயரமான, அழகான தோற்றமுடைய பொட்டு அவரது நண்பர்கள் மத்தியில் பிரபலமானவராக விளங்கினார். கல்வியிலோ அல்லது விளையாட்டுகளிலோ அவர் சிறந்து விளங்கவில்லை. ஆனால், பெருமளவு கட்டுரைப் போட்டிகளில் அவர் பரிசுகளை வென்றார். விடுதலை புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியான பஷீர் காக்காவினாலும் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தளபதியான சந்தோசம் மாஸ்டரினாலுமே சிவசங்கர் இயக்கத்தில் சேர்க்கப்பட்டார். இது 1981ஆம் ஆண்டில் நடந்தது.

முதலில் அவர் பகுதிநேர உதவியாளராகவே செயற்பட்டார். முழுநேர உறுப்பினராக மாறியதும் சிவசங்கருக்கு குமணண் என்ற இயக்கப்பெயரே கொடுக்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அவர் பொட்டு என்ற அறியப்படலானார். பாடசாலை நாட்களில் இருந்து அவரை நண்பர்கள் பொட்டு என்றே அழைத்தார்கள்.

பொட்டு என்ற பெயரின் தோற்றுவாய்

பொட்டு என்ற பெயரின் தோற்றுவாய் மிகவும் சுவாரஸ்யமானது. பொட்டு என்பது நெற்றியில் வைத்துக் கொள்வது. கோவில்களில் அல்லது சுப வைபவங்களில் பொட்டு வைப்பதற்கு சந்தனம் அல்லது குங்குமமே பயன்படுத்தப்படும்.

தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியவாதக் கொள்கையுடைய இலங்கை தமிழ் அரசு கட்சியினதும் பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் எழுச்சி போராட்டம் மற்றும் தியாகம் என்ற கோட்பாடுகளின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. இதன் ஒரு தீவிரப்போக்கின் வெளிப்பாடாக இரத்தத் திலகமிடும் பழக்கம் வந்தது. தமிழ் அரசியல் தலைவர்களினால் உணர்ச்சிவசப்படுத்தப்பட்ட இளைஞர்கள் மேடைகளில் ஏறி தங்களது விரல்களை குத்தி அதில் இருந்து வெளிவரும் இரத்தத்தால் தலைவர்களின் நெற்றியில் பொட்டு வைத்து தங்களது இரத்தத்தையும் உயிரையும் தமிழ் இலட்சியத்துக்காக அர்ப்பணிப்பதாக சூளுரைப்பார்கள்.

இளம் சிவசங்கரும் ஒரு சந்தர்ப்பத்தில் உணர்சிவசப்பட்டவராக மேடையில் ஏறி பிளேட்டினால் தனது கையைக் கிழித்து தலைவர்களான அப்பாபிள்ளை அமிர்தலங்கம், வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோரின் நெற்றிகளில் பொட்டு வைத்தார். தமிழர் அரசியலில் மிகவும் உணர்ச்சிவசமான பிரசாரங்களைக் கண்ட 1977 பொதுத்தேர்தலின் போதே இது நடந்தது. அப்போது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தனித்தமிழ்நாட்டு கோரிக்கையை முன்வைத்து மக்களிடம் வாக்குக் கேட்டது. யோகேஸ்வரன் அந்த தேர்தலில் கூட்டணியின் யாழ்ப்பாணம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

சிவசங்கரின் இந்த உணர்ச்சிவசமான சைகை அவரது நண்பர்களினால் பெரும் வேடிக்கையாக நோக்கப்பட்டது. அதற்கு பிறகு அவர்கள் அவரை சீண்டிக் குறும்பு செய்து பொட்டு என்று அழைக்கத் தொடங்கினர். அந்தப் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பிறகு புதிய தோழர்களும் அவரை பொட்டு என்று அழைக்கத் தொடங்கினர்.

இயக்கத்தில் அவரின் மூப்புநிலை அதிகரிக்கவே பொட்டுவுடன் 'அம்மான்' என்ற விகுதியும் சேர்ந்து கொண்டது. விடுதலை புலிகள் மத்தியில் மூப்புநிலையில் இருந்தவர்களை 'அண்ணன்', 'மாஸ்டர்' அல்லது 'அம்மான்' என்று அழைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. பொட்டுவின் சர்வதேச வானொலி சமிக்ஞை 'பாபா ஒஸ்கார் ' (Papa Oscar) என்பதாகும். விடுதலை புலிகள் தலைநகர் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக குண்டுகளை வெடிக்கவைக்கத் தொடங்கிய பின்னரான வருடங்களில் விடுதலை புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் போன்ற இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சிலர் பொட்டு அம்மானை கிண்டலாக 'வெடியரசன்' என்று அழைத்தனர்.

உத்தர பிரதேசத்தில் முதல் பயிற்சி அணி 

1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக நாடுபூராவும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத அட்டூழியமும்  அதன் விளைவுகளும் தமிழர் அரசியலில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அன்று 'பொடியன்கள்' என்று அறியப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கான ஆயுதப்பயிற்சியை வழங்கியதன் மூலம் இந்தியா துடிப்பான பாத்திரம் ஒன்றை வகித்தது. விடுதலை புலிகளின் முதலாவது அணியின் ஒரு உறுப்பினராக  ஆயுதப் பயிற்சிக்காக வட இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்துக்கு சிவசங்கர் சென்றார்.  முதலாவது அணி பயிற்சி பெறுனர்களில் இயக்கத்தின் பழைய உறுப்பினர்களும் புதிதாக சேர்க்கப்பட்டவர்களும் கலந்திருந்தனர்.

இந்தியாவில் பயிற்சியைப் பெற்ற பிறகு குறுகிய காலம் பொட்டு பிரபாகரனின் மெய்க்காவலராக பணியாற்றினார். அந்த காலப்பகுதியில்தான் பொட்டு தனது தலைவரின் வெறிபிடித்த ஒரு சீடராக மாறினார். அடிமைத்தனமான அர்ப்பணிப்புடன  தனது தலைவருக்கு பொட்டு சேவை செய்தார். பிரபாகரன் மீதான பொட்டுவின் விசுவாசம் தடுமாற்றம் இல்லாததும் கேள்விக்கு இடமின்றியதுமாகும்.  என்றாலும் பொட்டுவின் புலனாய்வு ஆற்றலே அவரை மேல்நிலைக்கு கொண்டுவந்தது.  முன்னாள் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்கு லவ்னெனிற்றி பேரியா போன்று பிரபாகரனுக்கு பொட்டு இருந்தார்.

சீட்டாட்டம் 

சீட்டாட்டத்தில் பொட்டுவின் நிபுணத்துவம் அவரது ஆற்றலுக்கும் திறமைக்குமான அடையாளமாக இருந்தது. சீட்டாட்டத்தில் அவர் மிகுந்த பிரியம் கொண்டவர். சீட்டாட்டத்துக்காக பொட்டுவை இரவில் நித்திரையில் இருந்துகூட எழுப்ப முடியும் என்று அவரின் முன்னாள் இயக்கச் சகா ஒருவர் என்னிடம் கூறினார். எந்த நேரத்திலும் சீட்டாடுவதற்கு பொட்டு தயாராயிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், இராணுவத்தின் ரோந்து அணியொன்று நெருங்கி வந்துகொண்டிருந்த காரணத்தால் மறைவிடம் ஒன்றில் இருந்து விடுதலை புலிகள் தப்பியோட வேண்டியிருந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரனேட்டுகள் அடங்கிய பையொன்றை தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்த பொட்டு சீடடுப்பக்கெட்டை எடுத்துச் செல்ல மறக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் தலைவராக இருக்கவில்லை.

பொட்டு 'திறீ நோட் ஃபோர்' விளையாட்டில் வியத்தகு திறமைசாலி. ஒரு குறுகிய நேரத்திற்குள் தன்னுடன் சீட்டாடிக் கொண்டிருப்பவர்களிடம் எந்த வகையான சீட்டுக்கள் இருக்கின்றன என்பதை அவர் கண்டு பிடித்துவிடுவார். அதன் பிரகாரம் விளையாட்டில் அவர் தனது சீட்டுக்களை பயன்படுத்துவார். ஏமாற்றி வீம்பு பேசுவதிலும் எதிராளிகளை அம்பலப்படுத்துவதிலும் பொட்டு இயற்கைமீறிய திறமையைக் கொண்டிருந்தார். அவரது இந்த குணாதிசயம் புலனாய்வு தலைவராக திறமையுடன் செயற்படுவதற்கு உதவியது.

1985ஆம் ஆண்டில் பொட்டு கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்பட்டார். வெவ்வேறு காலப் பகுதிகளில் கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பாக பஷீர் காக்கா, அருணா, குமரப்பா ஆகியோர் இருந்தபோது அவர்களின் முக்கியமான ஒரு தோழராக பொட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்டார்.

பொட்டு கிழக்கில் செயற்பட்ட காலப்பகுதி நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. மட்டக்களப்பில்தான் பொட்டு வத்சலாவை சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார். வத்சலா மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாதுறையைச் சேர்ந்தவர். அவரது பெற்றோரில் ஒருவர் மகழடித்தீவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவர் எஸ். சம்பந்தமூர்த்தியின் உறவினர்கள்.முன்னாள் கல்குடா பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகர், சம்பந்தமூர்த்தியின் மனைவியின் தந்தையார்.

மட்டக்களப்பில் செயற்பட்ட காலத்தில் பொட்டு அம்மான் தனது திறமையை நிரூபித்தார். மாங்கேணி முகாம், கறுத்தப்பாலம் சோதனை நிலை மற்றும் பொலன்னறுவை வீதியில் இராணுவ ரோந்துப் பிரிவு மீதான தாக்குதல்கள் போன்ற குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளுக்கு பொட்டு தலைமை தாங்கினார். ஒரு தடவை காரைதீவில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது பொட்டு அகப்பட்டுக்கொண்டார். ஆனால், சாரம் அணிந்திருந்த அவர் படையினரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், பொட்டு அம்மான் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் புவியியலை தனது பிறங்கையைப் போன்று அறிந்திருந்தார். படுவான்கரை என்று அறியப்பட்ட மட்டக்களப்பு வாவியின் மேற்குப் பகுதியில் நடமாடித் திரிந்தபோது அவர் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டியையே பயன்படுத்தினார். பணத்தைப் பெறுவதற்காக தனவந்த நிலச்சுவாந்தார்களையும் வர்த்தகர்களையும் கடத்துவதில் பொட்டு ஈவிரக்கமற்றவராக நடந்துகொண்டார். அது விடயத்தில் அவர் பன்குடாவெளியில் அரிசி ஆலை மற்றும் நகைக்கடை உரிமையாளரான சின்னத்தம்பி (சம்பந்தமூர்த்தியின் தந்தையார்) உட்பட வத்சலாவின் உறவினர்களைக் கூட விட்டுவைக்கவில்லை.

1987 அக்டோபரில் இந்திய இராணுவத்துடன் போர் மூண்டபோது பொட்டு அம்மான் மட்டக்களப்பில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து விநியோகங்கள் இடையூறின்றி வந்து சேருகின்றனவா என்பதை மேற்பார்வை செய்வதற்காக தென்னிந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

பதில் யாழ்ப்பாண தளபதி 

பிறகு யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்ததும் பொட்டு இந்திய இராணுவத்துக்கு எதிரான கெரில்லா தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் இம்ரான், பாண்டியன்  மற்றும் மதி ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்ததை அடுத்து அவர் ஒரு குறுகிய காலத்துக்கு  பதில்  யாழ்ப்பாணத் தளபதியாக செயற்பட்டார். இந்திய இராணுவத்தினருடனான சண்டையொன்றில் பொட்டு வயிற்றில் ஏற்பட்ட காயத்துக்கு வன்னியில் சிகிச்சை பெற்றார்.  பிரபாகரனும் அப்போது வன்னிக்கு நகர்ந்திருந்தார் .

அதற்கு பிறகு மேலதிக மருத்துவச்  சிகிச்சை பெறுவதற்காக பொட்டு இரகசியமாக தமிழ்நாட்டுக்கு சென்றார்.  இலங்கை மண்ணில் இந்திய இராணுவத்துடனான மோதல்களில் காயமடைந்த விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் இரகசியமாகச் சிகிச்சை பெறக்கூடியதாக இருந்தது உண்மையில் ஒரு விசித்திரமாகும். வத்சலாவும் தமிழ்நாட்டுக்கு சென்றார். அங்குள்ள இந்துக்கோவில் ஒன்றில் இருவரும் வைபவரீதியாக தாலிகட்டித்  திருமணம் செய்து கொண்டனர்.  முன்னதாக அவர்கள் மட்டக்களப்பில் பதிவுத் திருமணமே  செய்திருந்தனர்.

புலனாய்வு தலைவர் 

முழுமையாக குணமடைந்து பொட்டு இலங்கை திரும்பிய பிறகு விடுதலை புலிகளின் புலனாய்வுப் பிரிவை நிருவகிக்கும் பொறுப்பு 1988 பிற்பகுதியில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பிரிவு புலிகளின் பாதுகாப்பு புலனாய்வுச் சேவை  (Tiger Organization Security Intelligence Service or TOSIS) என்று அழைக்கப்பட்டது. அந்த பிரிவின் தலைவராக இருந்த வசந்தன் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

புலனாய்வுப் பிரிவை பொறுப்பேற்ற பிறகு பொட்டு அம்மான் அதை முற்றாக மாற்றியமைத்து 21 வருடங்களாக தலைவராக இருந்தார். வருடங்கள் கடந்தோட அவர் மிகவும் அஞ்சப்படுகிற ஒருவர் என்ற 'புகழைப்'  பெற்றார்.  இயக்கத்திற்குள்ளும் அவரின் அந்தஸ்து வளர்ந்தது. அதற்கு பிறகுதான் அவர் பொட்டு அம்மான் என்று அழைக்கப்படலானார்.  விடுதலை புலிகளின் தலைவரை சென்றடைய வேண்டிய விடயங்கள் பொட்டுவின் ஊடாகவே தெரியப்படுத்தப்படுகின்ற அளவுக்கு அவரது நிலை படிப்படியாக உயர்ந்தது. ஒரு வாரத்தில் பொட்டு பிரபாகரனை குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து தடவைகள் சந்திப்பார்.

விடுதலை புலிகளின் மூத்த தலைவர்களினால் சந்திக்க முடியாதவராக பிரபாகரன் மாறிய ஒரு காலகட்டம் வந்தது. ஆனால்,  எந்த நேரத்திலும் பொட்டுவினால் பிரபாகரனைச் சந்திக்க முடியும்.  ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு விடுதலை புலிகளின் தலைவரை  சந்திக்கக்கூடிய ஒரேயொரு இயக்கத் தலைவராகவும் பொட்டு விளங்கினார். மற்றவர்கள் எல்லோரும் தங்களின் ஆயுதங்களை கையளித்த பின்னரே பிரபாகரனைச் சந்திப்பதற்கு அரிதாக  அனுமதிக்கப்பட்டனர்.

சகல வல்லமையும் கொண்ட பொட்டு

பிரபாகரனுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டதால் அந்த நிலைமை ஏற்பட்டது. 'உள்ளேயிருக்கக்கூடிய எதிரிகள்'  பற்றிய அச்சம்  விடுதலை புலிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து பிரபாகரன் பெருமளவுக்கு அன்னியப்பட்டவராக மாறும் நிலையை தோற்றுவித்தது. பொட்டு அம்மான் சசகல வல்லமையும்  பொருந்தியவராக மாறினார். ஒரு கட்டத்தில் தலைவரின் அன்றாட நடவடிக்கைகளை 'கட்டுப்படுத்துபவராக' அவர் விளங்கினார்.

https://www.virakesari.lk/article/215215

வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன்

1 month 2 weeks ago

வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன்

May 19, 2025

ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது.

‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் தாராளமாகவே மீறப்பட்டு முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 16வருடங்களாக பேரவலத்துக்கான நீதி கோரிய போராட்டமும் இனவிடுதலைக்கான பயணத்தில் பின்னிப்பிணை ந்து தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது.

தமிழின விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தகாலம் முதல், தாயகக் கோட்பாட்டிற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் ஆட்சியிலிருந்த சிங்கள, பௌத்த மையவாத அரசாங்கங்கள் ஆட்சியில் ஆரம்பத்தில் இசைவதும், அரியாசனத்தில் அமர்ந்த பின்னர் ஏமாற்றுக்கதைகளைக் கூறுவதும், நேரடியாகவே மறுதலிப்பதும் தொடர்ந்தது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் னர், தமிழின அபிலாசைகளை நிராகரித்தது மட்டுமன்றி, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலையும் ஒருங்கே நிராகரிக்கும் போக்கே நீடிப்பதோடு மட்டுமன்றி, மனித உரிமை மீறல்கள் நடைபெறவே இல்லையென்று முழுமையாக நிராகரிக்கும் தீவிரமான போக்கும் காணப்பட்டது.

இந்நிலையில், சிங்கள, பௌத்த தேசிய மையவாத அரசியல் கட்சிகளின் தேசிய அரசியல் ஆதிக்கம் கடந்த ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி இரண்டு தடவைகள் கிளர்ச்சிகளைப் புரிந்து பின்னரான காலத்தில் சிங்கள, பௌத்த மையவாத ஆட்சியாளர்களுக்கு முண்டு அதன்பின்னர் தாங்கள் தனித்துவமானவர்கள் இடதுசாரித்து கொள்கைவாதிகள் என்று பிரகடனப்படுத்திச் செயற்பட்ட ‘ஜே.வி.பி.’ தேசிய மக்கள் சக்தி என்ற பரிநாமத்துடன் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தது.

ஜே.வி.பி.ஆரம்பிக்கப்பட்டு ஆறுதசாப்த போராட்டத்தின் பின்னர் தான் அத்தரப்பினருக்கு மக்கள் ஆணை கிடைத்தது. மக்கள் ஆணையைப் பெறும் வரையில், சகோதரத்துவம், சமத்துவம், மனிதாபிமானம், உள்ளிட்ட சொல்லாடல்களை கவர்ச்சிகரமாக வெளிப்படுத்தியது ஜே.வி.பி. ‘அரகலய’ மக்கள் எழுச்சியின் பின்னர் தேசிய மக்கள் சக்தி என்ற தோற்றப்பாட்டில் நாடாளவிய ரீதியில் உள்ள பல்லின மக்களையும் ஆரத்தழுவும் அளவுக்கு அத்தரப்பினர் நடந்து கொண்டபோதும் பதவிக்கு வந்து முதலிரண்டு மாதத்திலேயே தமிழினத்தின் நீதிகோரல் போரட் டத்தினை முழுமையாக நிராகரித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 59ஆவது மனித உரிமைகள் பேர வையில் வாய்மூலமாக வலியுறுத்தப்பட்ட இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்களை உடனடியாகவே நிராகரித்தார் ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க.

அத்தோடு நின்றுவிடாது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவை, ஐ.நாவின் அனைத்து பரிந்துரைகள், குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதோடு தேசிய பொறிமுறையில் உள்நாட்டில் விடயங்கள் கையாளப்படும் என்று தீர்மானம் எடுத்து அது வெளிவிவகார அமைச்சின் ஊடாக பகிரங்கமாக சர்வதேசத்துக்கு அறிவிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில், தமிழினப் படுகொலை நினைவகம் கனடாவின் பிரம்டன் மாநகரில் மேயர் பற்ரிக் பிரவுனின் ஒத்துழைப்பு டன் தற்போது நிறுவப்பட்டு கடந்த 10ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழினம் தன்நிலத்தை இழந்து, மாற்றான் தேசத்தில் மாடாய் உழைத்து தனது நினைவுகளை ஆற்றுப்படுத்துவதற்காக நினைவகத்தை திறந்து மன நிம்மதி அடைந்திருக்கிறது. ஆனால், ஆட்சியில் உள்ள ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கமோ, அந்த நினைவகம், இலங்கையில் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக இருக்கின்றது என்று கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷை அழைத்து கடுந்தொனியில் சாடுமளவிற்கே நிலைமைகள் காணப்படுகின்றன. இந்தச் செயற்பாடானது, தமிழினத்தின் வலிகளை நாட்டுக்கு வெளியில் கூட வெளிப்படுத்துவதற்கு விரும்பவில்லை என்ற செய்தியை மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றது.

அதுமட்டுமன்றி, பொறுப்புக்கூறல் விடயத்தில் சிங்கள,பௌத்த மையவாத தேசிய கட்சி களை மையப்படுத்திய அரசுகளை விடவும் ஒருபடி மேலேயே ஆட்சியில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் பேசிய இடதுசாரித்துவ தோழ மையாளர்கள் இருக்கின்றார்கள் என்பதும் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உடைமைகளை, உறவுகளை கண்ணுக்கு முன்னால் இழந்த உறவுகள் தங்களது வலிகளை வடுக்களாகச் சுமந்துகொண்டு எஞ்சிய தமது வாழ்க்கை காலத்தில் நீதிக்காக குரல்கொடுத்து எதிர்பார்ப்புடன் இருக்கையில் அந்த எதிர் பார்ப்புக்கள் அனைத்தும் கானல்  நீராகவே போகும் என்பதை ஜே.வி.பி.தலைமையிலான அரசாங்கத்தினர் ஆட்சிப்பீடமேறி ஆறுமாத காலத்துக்குள்ளேயே வெளிப்படுத்தி விட்டனர்.

ஆக, பொறுப்புக்கூறல் என்பது அநுரவும் அவரது தோழர்களாலும் ஒருபோதும் செய்யப் படாதவொரு விடயமாகவே இருக்கும் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண் டியது தவிர்க்க இயலாதவொன்றாகிறது.

நிலைமைகள் இப்படியிருக்க, கடந்த மே 14ஆம் திகதியன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஜே.வி.பி.யின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்சியின் தலைவர் என்ற வகையில் உரையொன்றை ஆற்றினார்.

அந்த உரையானது, பொறுப்புக்கூறலை நிராகரித்து, அரசியல் உரிமைகளை ஏற்க மறுக் கின்ற ஜே.வி.பியின் அடிப்படை ஜனநாயக மறுப்பை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆம், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர் தல் முடிவுகள் ஆளும் கட்சியாக இருக்கும் ஜே.வி.பிக்கு பலத்த அடியை வழங்கியிருக்கின்றது. அந்தப் பின்னணியில்  அநுரகுமார வெளிப் படுத்தியிருக்கும் கருத்துக்கள் ஜனநாயக அடிப் படைகளை பெயர்த்திருக்கின்றன.

ஜனநாயகவாதிகள் என்று தங்களை வெளிப்படுத்தி வந்த அநுரவினதும் தோழர்

களினதும் உண்மையான முகத்தை வெளிப் படுத்தியிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி என்ற சாயம் வெளுத்திருக்கிறது. அநுரகுமார தனது உரையில் என்னி டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது, நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது. சட்டத்தை மாற்றுவதன் மூலம் எதையும் செய்ய முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

ஏன் இவ்வாறு கூறினார் என்று பார்க்கின்ற போது, 339 உள்ளுராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெற் றிருப்பது, 152 சபைகளில் மாத்திரமே. அங்கு ஆட்சி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. முதல் நாளிலேயே அவர்களால் ஆட்சியமைக்க முடியும். ஆனால் 115 உள்ளுராட்சி சபைகளில் தொங்கு நிலை காணப்படுகிறது.

தொங்கு நிலையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. அதற்கான பேச்சுக்கள் நடைபெறுகின்றன. இதில் கொழும்பு மாநகர சபை பிரதானமானது.

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்டவற் றில் இரண்டாவது இடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அங்கும் சுயேச்சைக்குழு அங்கத்தவர்களை வளைத்துப்போட்டு ஆட்சி அமைக்கவே முயற்சிக் கிறது.

அதுமட்டுமன்றி, வடக்கு,கிழக்கில் தமிழர் கள் செறிவாகவுள்ள ஏதாவது ஒரு சபையில் ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த பின்னணியில் தான், எதிரணிகளை அநுரகுமார எச்சரிக்கும் வகையில் தனது உரையில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். இது ஜனநாயக முறைமைக்குள் பிறள்வானதொரு அரசியல் செயற்பாடாகும்.

தேசிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில், தாங்கள் கூடுதலாக ஆசனங்களை பெற்ற 267 உள்ளுராட்சி சபைகளிலும் தங்களுக்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்பது தான் வாதமாக இருக்கின்றது.

அவ்வாறான இடங்களில் தாங்கள் ஆட்சி அமைப்பதை வேறு தரப்புகள் தடுக்கக் கூடாது – குழப்பக் கூடாது என்று எதிர்பார்க்கிறது. அதனை வெளிப்படையாகவும் கூறுகின்றது. ஆனால் அந்தத் தொனி அதிகாரத்தின் அடிப்படையிலானது.

உலகில் உள்ள  ஜனநாயக வழக்கத்தில் அவ்வாறானதொரு போக்கு எங்குமில்லை. எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக ஆட்சி அமைக்கின்ற வழக்கம், எல்லா நாடுகளிலும் உள்ளது. அதிக ஆசனங்களை பெற்ற கட்சிக்கு மாத்திரமே மக்கள் ஆணை வழங்கப்பட்டது என்று அர்த்தம் கற்பிக்க முடியாது. அதிக வாக்குகளை பெற்று விட்டதால், அல்லது அதிக ஆசனங்களைப் பெற்று விட்டதால், தேசிய மக்கள் சக்தி தான் மக்கள் ஆணை பெற்ற கட்சி என்று கருத முடியாது.

ஏனைய கட்சிகளுக்கும் வாக்குகள் அளிக் கப்பட்டிருக்கின்றன. அந்த கட்சிகளும் உறுப் பினர்களை பெற்றிருக்கின்றன. ஆனால், அவற்றை மக்கள் ஆணையில்லாத கட்சிகளாக அடை யாளப்படுத்த முனைகின்றனர் அநுரவும் அவரது சகாக்களும்.  பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்ட ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர, மற்ற எல்லா அதிகாரமும் தன்னிடம் இருக்கிறது என்று அப்போது கூறியிருந்தார்.

இப்போது அநுரகுமார திசாநாயக்க உள்ளு ராட்சி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை, எதிர்க்கட்சிகள் பறிக்கின்ற நிலை ஏற்பட்டால், தன்னிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கிறது, அதை கொண்டு சட்டத்தை மாற்றுவேன். நிறைவேற்று அதிகாரமும் தனக்கு துணையாகவுள்ளது என்று எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமன்றி, வடக்கில் தமிழ்க் கட்சிக ளுக்கே மக்களாணை வழங்கப் பட்டுள்ளது என்பதை ஏற்க மறுக்கிறார் அநுர. தங்களுக்கு வடக்கில், இரண்டாவது அதிக வாக்குகள் கிடைத்திருப்பதால், மக்கள் தங்களை நிராகரிக்கவில்லை என்றும் கணித பெறுமானங் களை ஒப்பிட்டு பார்க்காது கருத்துக்களை வெளிப் படுத்துகிறார். அவரது வெளிப்படுத்தலும், தர்க்கமும் சிறுபிள்ளைத் தனமானது. ஆதிகார மோகத்தின் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே கொள்ள வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி இந்தத் தேர்தலில் 4,503,930 இலட்சம் வாக்குகள் தான் கிடைத்திருக்கின்றன. அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 43.26 சதவீதம் மாத்திரமே.

அப்படியானால் எஞ்சிய 57 சதவீத வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கே அளிக்கப்பட்டி ருக்கின்றன. அதனடிப்படையில் பார்க்கின்றபோது பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கியிருக்கவில்லை. அவர்கள் அந்த கட்சியை நிராகரித்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தங்களுக்கு மாத்தி ரமே மக்கள் ஆணை வழங்கப்பட்டிருக்கிறது என்று அநுரகுமரவால் எவ்வாறு உரிமை கோர முடியும்? அடிப்படைகளற்ற நிலையில் அவரது தர்க்கமானது வெறுமனே அதிகாரத்தை மையப்படுத்தியது.

அந்த அதிகாரத்துக்காக, தன்னிடமுள்ள நிறைவேற்று அதிகாரத்தையும், பாராளுமன்ற பெரும்பான்மை அதிகாரத்தையும் பயன்படுத்து வதற்கு துணிவது அதிகார மோகத்தின் அதியுச்சம். ஆகவே, அநுரவும் அவரது சகோதரர்களும் இப் போது கிராமிய அதிகாரத்தையும் தமதாக்கி ஒட்டுமொத்த அதிகார கட்டமைப்பையும் தமக் குள் வைத்திருக்கவே முனைகின்றனர்.

தனிக்கட்சியாக, அதிகாரக்குவிப்பைச் செய்யவே விளைகின்றனர். அதற்காக ஜனநாக அடிப்படைகளை மறுதலிக்கின்றனர். பகிரங்க மாகவே மிரட்டுகின்றனர், அச்சுறுத்துகின்றனர்.இவையெல்லாம் அவர்களின்  சுயத்தை அம்பலப் படுத்தி நிற்கிறது. இதற்கு மேல் அவர்களிடத்தில் எதனை எதிர்பார்க்க முடியும்?

https://www.ilakku.org/வலிசுமந்த-மாதத்தில்-அம்ப/

பதினாறாவது மே பதினெட்டும் உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

1 month 2 weeks ago

பதினாறாவது மே பதினெட்டும் உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன்.

adminMay 18, 2025

1000263578-1024x576-1.jpg

ஆரியகுளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் போனது உண்மை. புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதியினர் போனது உண்மை. புதுக்குடியிருப்பில் ஆயிரக்கணக்கில் போய் படைத்தரப்பு வழங்கிய குடிபானங்களையும் அன்னதானத்தையும் வாங்கியதும் உண்மை.

அதேசமயம் கடந்த வாரம் தாயகம் முழுவதிலும் ஆங்காங்கே பரவலாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி கொடுக்கப்படுவதும் உண்மை. மக்கள் பரவலாக அதை வாங்கி அருந்துவதும் உண்மை. இன்று முள்ளிவாய்க்காலில் பெருந்திரளாக மக்கள் திரள்வார்கள் என்பதும் உண்மை.

ஒரு தேசம் என்பது அப்படித்தான் இருக்கும். தேசங்கள் எப்பொழுதும் தட்டையாக ஒற்றைப் பரிமாணத்தில் இருப்பதில்லை. வெசாக் பந்தல்களைப் பார்க்க போனவர்கள் எல்லாருமே படையினரின் நண்பர்களும் அல்ல. பொழுது போக்காகப் போனவர்களும் உண்டு. விடுப்புப் பார்க்கப் போனவர்களும் உண்டு. ஆனால் அவர்களின் பலர் பின்னர் கஞ்சி வாங்கிக் குடித்திருப்பார்கள். முள்ளிவாய்க்காலுக்கும் போயிருப்பார்கள். ஒரு தேசம் என்றால் அப்படித்தான். எல்லாத் தரப்புக்களும் இருப்பார்கள். யார் அதிகமாக இருக்கிறார்கள் என்பது தான் இங்கே முக்கியம். நாடு மே 18ஐ நினைவுகூரும் என்பதுதான் இங்கு முக்கியம்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கான தயாரிப்புகளை கடந்த வாரம் முழுவதும் செய்து வருகிறார்கள். கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் செய்கிறார்கள். நீதி கிடைக்காத அல்லது நீதியை நோக்கி மெதுமெதுவாக ஊர்ந்து போகின்ற 16ஆவது ஆண்டு இது.

அமெரிக்கக் கண்டத்தில் இன அழிப்பு செய்தவர்களுக்கு எதிராக தடைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன; தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த வாரம் கனடாவில் ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டிருக்கிறது. தாயகத்துக்கு வெளியே அதிக தொகை ஈழத் தமிழர்கள் வாழ்வது கனடாவில்தான். சில வாரங்களுக்கு முன்பு பிரித்தானியாவும் இனஅழிப்பு செய்தவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்திருக்கிறது.

இப்படிப்பட்டதோர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழலில், தாயகத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ஒருபுறம் கஞ்சி காய்ச்சுகிறார்கள்;இன்னொருபுறம் புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மே 18 முடிந்த இரண்டு வாரங்களில் புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

தமிழ்ப் பகுதிகளில் உள்ள மொத்தம் 56 சபைகளில் ஆறு சபைகளில் மட்டும்தான் நிச்சயமான அறுதிப் பெரும்பான்மை உண்டு. எதிர்க்கட்சிகள் இணைந்து தோற்கடிக்கப்பட முடியாத பெரும்பான்மை. ஏனைய பெரும்பாலான எல்லாச் சபைகளிலுமே தொங்கு நிலைதான். மொத்தம் 36 சபைகளில் வீடு முன்னிலை வகிக்கின்றது. மூன்று சபைகளில் சைக்கிள் முன்னிலையில் நிற்கின்றது. ஒரு சபையில் சங்கு. ஒரு சபையில் வீணை. ஒரு சபையில் காரைநகரில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை.

அதாவது நினைவு கூரும் மாதம் ஒன்றில் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கு வழங்கிய ஆணை என்பது பெருமளவுக்கு தொங்கு சபைகள்தான். அந்த மக்கள் ஆணைக்குள் மறைமுகமாக ஒரு செய்தி உண்டு. ஒன்றுபடுங்கள் என்பதுதான் அது. ஒன்றுபடாவிட்டால் பெரும்பாலான சபைகளை நிர்வகிக்க முடியாது.

மேலும்,உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கு மட்டுமல்ல. அதற்குமப்பால் அடுத்து வர இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கும் அதுமிக அவசியமானது. ஏனென்றால் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளின் படி,தமிழ்ப் பகுதிகளில் என்பிபி பெரும்பாலும் இரண்டாம் இடத்தில் நிற்கின்றது. அது பெரும்பாலும் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் வளர்ச்சியைப் பெறவில்லைத்தான். ஆனால் 6 மாதங்களில் ஒரு தென்னிலங்கைக் கட்சி பெற்ற வளர்ச்சி என்பது தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி போன்றது. மாகாண சபைத் தேர்தல்களை நோக்கி ஏதோ ஓர் ஒருங்கிணைப்புக்குப் போகத் தவறினால் தேசிய மக்கள் சக்தி உற்சாகமாக உழைக்கும்.

தேசிய மக்கள் சக்தி மட்டுமல்லை தமிழ் வாக்காளர்களும் நம்பிக்கையூட்டும் எதையாவது காட்டினால்தான் ஆர்வத்தோடு,உற்சாகமாக வாக்களிக்க வருவார்கள். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள் வந்து விட்டன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வாக்களிப்பு வீதம் குறைவதற்குக் காரணம் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டமை மட்டுமல்ல. தமிழ் வாக்காளர்கள் மத்தியில் சோர்வு அல்லது தளர்வு ஏற்பட்டதும் ஒரு காரணம்.

யாழ்ப்பாணம் ஈவினைப் பகுதியில் நடந்த ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். அங்கு வாக்களிப்பில் கலந்துகொள்ள ஆர்வமின்றிக் காணப்பட்ட முதியவர்களை வாக்களிப்பு நிலையங்களை நோக்கிச் செல்லுமாறு தூண்டுவதற்கு சில கட்சிசாரா பெண் செயற்பாட்டாளர்கள் முயற்சித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக அவர்கள் முயற்சித்த பொழுது, ஒரு கட்டத்தில் முதியவர்கள் சொன்னார்களாம், “எங்களுக்கு வாக்களிப்பில் ஆர்வம் இல்லை. இவர்கள் ஒற்றுமைப்படட்டும் நாங்கள் உற்சாகமாகப் போய் வாக்களித்து விட்டு வருவோம். நீங்கள் எவ்வளவுதான் தூண்டினாலும் நாங்கள் வாக்களிக்க வரவே மாட்டோம்” என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்களாம்.

இப்படி எத்தனை கிராமங்களில் வாக்காளர்கள் சோர்ந்து போய்,ஆர்வமின்றி வாக்களிக்க வராமல் இருந்திருப்பார்கள்? தமிழ்த் தேசிய வாக்களிப்புப் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை வாக்களிப்பு அலை ஒன்று தோன்றும் போதுதான் அதிக ஆசனங்கள் கிடைக்கும். வாக்களிப்பு அலை என்பது பெரும்பாலும் ஒரு தமிழ்த் தேசிய அலைதான். அதைத் தூண்டுவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் படைப்புத்திறனோடு சிந்திக்க வேண்டும். ஐக்கியப்பட்டுச் சிந்திக்க வேண்டும்.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மே18இன் பின் இரண்டே வாரங்களில் அமைக்கப்படவிருக்கும் உள்ளூராட்சி சபைகளில் எவ்வாறு தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் நிர்வாகத்தை அமைப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆழமாக உரையாடி வருகின்றன.

வவுனியாவில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியோடு உடன்படிக்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. அது போல எல்லாச் சபைகளிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் அல்லாத கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுப்பது என்ற அடிப்படையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஐக்கியப்படலாம். அல்லது பகை தவிர்ப்பு உடன்படிக்கைக்குப் போகலாம்.

497587631_1221053569385513_3336019669176

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை ஒரு கொள்கை விடயத்தைத் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகிறது. தீர்வு விடயத்தில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி “எக்கிய ராஜ்ய”வைக் கைவிட வேண்டும் என்று அந்தக் கூட்டு கேட்கின்றது. இறுதித் தீர்வு என்று வரும்பொழுது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அது தொடர்பான சமரசங்களுக்கும் இடமிருக்கக் கூடாது. ஆனால் ஒரு தீர்வை நோக்கிய யாப்புருவாக்க முயற்சிகள் இப்போதைக்குத் தொடங்குமா?

எப்பொழுது தொடங்கும் என்று தெரியாத ஒரு யாப்புருவாக்க முயற்சியை நோக்கி ஐக்கிய முயற்சிகளை ஒத்திவைப்பதா? அல்லது உடனடிக்கு உருவாக்கப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளை நோக்கிச் சிந்திப்பதா? அது போல மாகாண சபைத் தேர்தல்களை நோக்கிச் சிந்திப்பதா? எது சரி?

இரண்டுமே சரி. தீர்வு முயற்சிகளை நோக்கி நீண்ட கால நோக்கில் கொள்கைத் தெளிவோடு இருக்க வேண்டும். அதேசமயம் தமிழ்த் தேசியக் கட்சிகள் அல்லாத கட்சிகள் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதைத் தடுப்பது என்பதும் தமிழ்த் தேசியக் கொள்கையின் ஒரு பகுதிதான். பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைவது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி வரக்கூடிய மாகாண சபை தேர்தலில் என்பிபி புதிய சவால்களை ஏற்படுத்தக்கூடும். அதை நோக்கித் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆழமாக உரையாட வேண்டும். பொது எதிரிக்கு எதிரான தேசிய ஐக்கியத்தைப் பற்றி ஆழமாக உரையாட வேண்டும். இல்லையென்றால்,அதாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து நின்றால், உள்ளூராட்சி சபை தேர்தல்களில் விழுந்தது போல வாக்குகள் விழுமாக இருந்தால், அல்லது வாக்குகள் விழாமல் போனால், அது என்.பி.பிக்கு அனுகூலமாக முடியலாம்.

என்பிபிக்கு தமிழ் மக்களின் ஆணை கிடைக்குமாக இருந்தால் தீர்வு விடயத்தில் அவர்கள் தமிழ்த் தேசிய கட்சிகளைப் பொருட்படுத்தப் போவதில்லை. எனவே, என்பிபிக்கு மக்கள் ஆணை கிடைக்கக்கூடாது என்பதும் ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை தடுப்பதற்கு அவசியமான உத்திகளில் ஒன்றுதான்.இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

தேர்தல்களை நோக்கி அதாவது உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது என்ற அடிப்படையில் ஐக்கியத்தைப்பற்றி பேச முடியாது என்ற நிலைப்பாடு சரி. அதேசமயம் தேர்தல்களின் மூலம் தேசிய மக்கள் சக்தி மக்கள் ஆணை பெறுவதைத் தடுக்கவும் வேண்டும் என்பதும் மிக முக்கியம். எனவே ஐக்கியத்திற்காக உழைக்கும் போது இறுதித் தீர்வு தொடர்பாக தெளிவான திட்டவட்டமான கொள்கைகளை முன்வைத்து உடன்படிக்கைகளை எழுதலாம். எது வேண்டாம் என்று கேட்பதற்குப் பதிலாக இதுதான் வேண்டும்;இது அல்லாத வேறு எந்தத் தீர்வை நோக்கியும் போக முடியாது;அந்தத் தீர்வு வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும்;உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டால், அது ஒற்றையாட்சிப் பண்புடையது என்று உச்சநீதிமன்றம் பொருள் கோட முடியாததாகவும் இருக்க வேண்டும் என்பதனை எழுத்தில் போட்டால், அதை மீறும் கட்சியை மக்கள் முன் அம்பலப்படுத்தலாம்.

இப்போதுள்ள கட்சி நிலவரங்களின்படி, உள்ளூராட்சி சபை நிர்வாகத்தை நோக்கியோ அல்லது மாகாண சபைத் தேர்தல்களை நோக்கியோ முழுமையான தமிழ் ஐக்கியத்துக்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல,ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியை நோக்கி அதிகம் சாய்வதாகத் தெரிகிறது. சங்குச் சின்னத்தின் கீழ் பொது வேட்பாளரை ஆதரித்தவர்களுக்கு எதிராக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும் ஒரு கட்சி, அதே சங்குச் சின்னத்தின் கீழ் பொது வேட்பாளரை ஆதரித்த கட்சிகளோடு உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கிறது. அதுதான் தேர்தல் அரசியல். இதன்மூலம் தமிழ்த் தேசியப் பேரவையைத் தனிமைப்படுத்தலாம் என்றும் அவர்கள் சிந்திக்கக் கூடும்.

எதுவாயினும், இன அழிப்பை நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில்,தியாகிகளையும் கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூரும் ஒரு காலகட்டத்தில்,உயிரைக் கொடுத்தவர்களின் ஆத்மாக்களை மகிழ்விக்க கூடிய ஒரு முடிவை எடுக்கா விட்டாலும் பரவாயில்லை ஆகக்குறைந்தது மாகாண சபைத் தேர்தலில் என்பிபிக்கு தமிழ் மக்களின் ஆணை கிடைப்பதைத் தடுப்பதற்காவது ஏதாவது செய்ய வேண்டும்.

https://globaltamilnews.net/2025/215612/

16ஆவது மே 18இல் நீதிக்கான போராட்டம் – நிலாந்தன்.

1 month 2 weeks ago

may-18-1.jpg?resize=720%2C375&ssl=1

16ஆவது மே 18இல் நீதிக்கான போராட்டம் – நிலாந்தன்.

நீதி கிடைக்காத 16ஆவது ஆண்டு.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலை நீதிக்கான போராட்டம் என்று வர்ணிக்கின்றார்கள். ஆனால் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டமானது தொடர்ச்சியானதாக, செறிவானதாக பெருந் திரள் மயப்பட்டதாக இல்லை.அவை அவ்வப்போது தொடர்ச்சியாக நிகழும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் போராட்டங்களாகத்தான் காணப்படுகின்றன.

கடந்த 16 ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டும்தான். அவர்களுடைய போராட்டம்தான் ஒப்பீட்டளவில் தொடர்ச்சியானது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்க்கத்தக்க விதத்தில் தென்னிலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அல்லது தென்னிலங்கைக்கு நோகக் கூடிய விதத்தில் எவ்வளவு தூரம் போராடியிருக்கிறார்கள்?

சில “எழுக தமிழ்கள்”,ஒரு “பி ரு பி”,அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்கள், தமிழ்ப் பொது வேட்பாளர் போன்றவை… தவிர நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தொடர்ச்சியானதாகவோ அல்லது தென்னிலங்கையை அசைக்கக் கூடியதாகவோ இல்லை. ஏன் ?

ஏனென்றால் கடந்த 16 ஆண்டு கால தமிழ் அரசியலானது பெருமளவுக்கு கட்சிகள் மைய அரசியலாகத்தான் இருக்கின்றது.தேர்தல் மைய அரசியல்தான். பெருமளவுக்குத் தேர்தலை நோக்கியே கட்சிகள் உழைக்கின்றன .அதேசமயம் பொதுமக்கள் போராடும்போது அல்லது பாதிக்கப்பட்டவர்கள் போராடும் போது அல்லது மக்கள் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது கட்சிகள் அவற்றில் இணைக்கின்றன.நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையான ஒரு அரசியல் பேரியக்கம் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னை ஓர் அரசியல் இயக்கம் என்று கூறிக் கொண்டது. தமிழ்த் தேசியப் பேரவையையும் அது அவ்வாறு தான் தன்னை அழைக்கின்றது. ஆனால் நடைமுறையில் அவை தேர்தல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான். பொது வேட்பாளருக்காக உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பும் ஒரு பேரியக்கமாக அடுத்தகட்ட வளர்ச்சியைப் பெறவில்லை. இவ்வாறு தமிழ்மக்கள் மத்தியில் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத ஒரு வெற்றிடத்தில், கட்சி மைய அரசியலுக்கு ஊடாக நீதிக்கான போராட்டத்தை முழு அளவுக்கு தாக்கமானதாகவும் செறிவானதாகவும் தொடர்ச்சியானதாகவும் முன்னெடுக்க முடியாத ஒரு நிலைமைதான் காணப்படுகிறது.

தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும் போராடவில்லை என்று இல்லை. ஆனால் அந்தப் போராட்டங்கள் ஒரு மையத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்படவில்லை. எல்லாப் போராட்டங்களையும் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கும் மையக் கட்டமைப்பு இல்லை.

தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நிலைமை அப்படித்தான். அங்கேயும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லை. கடந்த 16 ஆண்டுகளிலும் நீதிக்கான போராட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அடைவுகளைப் பெற்றிருப்பது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான்.

இன அழிப்புக்கு எதிரான தடைகள்,தீர்மானங்களை நிறைவேற்றியதிலும் சரி; இன அழிப்பு நினைவுச் சின்னங்களை நிறுவியதிலும் சரி; இன அழிப்பை அனைத்துலக மயப்படுத்தியதிலும் சரி; இன அழிப்பை நோக்கி ஐநாவும் உட்பட மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தை குவிய வைப்பதிலும் சரி; இன அழிப்பு ஆவணங்களை வெளியிடுவதிலும் சரி; ஒப்பீட்டளவில் அதிகம் உழைப்பதும் முன்னணியில் நிற்பதும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான்.

புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தாயகத்தோடு ஒப்பிடுகையில் அதிகம் சுதந்திரமான,செல்வச் செழிப்புள்ள ஒரு சூழலுக்குள் வாழ்கின்றது. சுதந்திரமான ஒரு சூழலுக்குள் வாழ்வதால் அவர்கள் இன அழிப்புக்கு எதிராக தாயகத்தை விடவும் ஒப்பீட்டளவில் வினைத்திறனோடு போராடக்கூடியதாக உள்ளது. அதனால் நீதிக்கான ஈழத் தமிழர்களின் கடந்த 16 ஆண்டு காலப் போராட்டத்தில் போராட்டத்தின் கூர்முனை போல காணப்படுவது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான்.

ஆனால் அங்கேயும் ஒருங்கிணைவு இல்லை. மைய அமைப்பு இல்லை. தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் நிலைமைகளுக்கு ஏற்பவும் தமது கொள்ளளவுக்கு ஏற்பவும் அங்குள்ள தனிப்பட்ட நபர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு போன்றவற்றுக்கு ஏற்பவும் வெவ்வேறு பரிமாணங்களில் நீதிக்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

அங்கே ஒரு மைய அமைப்பு கிடையாது. ஐநா மையச் செயற்பாடுகளிலும் சரி ராஜதந்திர மட்டச் செயற்பாடுகளிலும் சரி இன அழிப்புக்கு எதிரான ஏனைய எல்லாச் செயற்பாடுகளிலும் அங்கே ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படாத நிலைமைதான் காணப்படுகிறது. இந்த விடயத்தில் தாயகத்தின் தொடர்ச்சியாகத்தான் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பும் காணப்படுகின்றது.

அது மட்டுமல்ல, மேற்படி செயல்பாடுகளில் ஒரு அடிப்படையான தலைகீழ் பொறிமுறை உண்டு. அது என்னவெனில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன அழிப்புக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்தும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் யதார்த்தத்துக்கு ஏற்ப முன்னெடுக்கப்படுகின்றவை.அவை தாயகத்திலிருந்து வழிநடத்தப்படுகின்றவை அல்ல. மாறாக இன அழிப்புக்கு எதிரான நீதிக்கான போராட்டம் என்பது தாயகத்திலிருந்துதான் வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் நடைமுறை அவ்வாறு இல்லை. அதற்கு ஒரு பலமான காரணம் உண்டு. தாயகத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் உண்டு. அரசாங்கமும், ஏன் எதிர்க்கட்சிகளும்கூட நாட்டில் நடந்தது இன அழிப்பு என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அண்மையில் கனடாவில் இன அழிப்பு நினைவுச் சின்னம் நிறுவப்பட்ட பொழுது அதற்கு எதிராக மஹிந்த குடும்பத்தின் சார்பாக நாமல் ராஜபக்ஷ என்ன சொன்னார்? ராஜபக்சகளின் வழக்கறிஞரும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஆகிய அலி சப்ரி என்ன சொன்னார்?

எனவே இன அழிப்புக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாயகத்தில் உள்ள கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் சில அடிப்படையான வரையறைகள் உண்டு. இது காரணமாகவே அவ்வாறான நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதிகம் வினைத்திறனோடு முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் விளைவாகவே அமெரிக்கக் கண்டத்தில் இன அழிப்புக்கு எதிரான தடைகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தாயகத்துக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிக தொகையில் வாழ்வது கனடாவில் ஆகும். அதனால் அங்கு சக்தி மிக்க தமிழ் வாக்காளர் தொகுதி ஒன்று எழுச்சி பெற்று வருகிறது. இது கனடாவின் வெளியுறவுத் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு வளர்ச்சியை எதிர்காலத்தில் பெறக்கூடும்.சில மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவும் அவ்வாறு தடைகளை விதித்திருக்கின்றது.

இவ்வாறாக கடந்த 16 ஆண்டுகளாக இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ராஜதந்திர வெற்றிகளை புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் சமூகம் பெற்றிருக்கின்றது. எனினும் அவை முழுமையானவை அல்ல.

இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். கடந்த 16 ஆண்டுகளிலும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் மெது மெதுவாகவே தமிழ் மக்கள் முன்னேறி வருகிறார்கள். ஐநா இன்றுவரையிலும் இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.மேலும், நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தாயகத்திலிருந்து வழிநடத்தப்படவில்லை. தாயகத்திலும் அதை வழிநடத்தத்தக்க மைய அமைப்பு இல்லை. இதனால் கடந்த 16 ஆண்டு கால நீதிக்கான போராட்டத்தில் பொருத்தமான ஒருங்கிணைப்புகள் இல்லை.

நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் உலக சமூகத்தை தங்களை நோக்கித் திரட்ட வேண்டியவர்களாகக் காணப்படுகிறார்கள். உலகில் தமக்கு நட்பாக உள்ள நாடுகளின் ஆதரவையும் நிறுவனங்களின் ஆதரவையும் திரட்ட வேண்டியவர்களாகக் காணப்படுகிறார்கள். அவ்வாறு உலகத்தைத் திரட்டுவது என்றால் முதலில் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஒரு தேசமாகத் திரட்டி கொள்ள வேண்டும்.ஆனால் தமிழ் மக்கள் தாயகத்தில் தங்களை ஒரு பலமான மக்கள் கூட்டமாக, தேசமாகத் திரட்டுமளவுக்கு தமிழ் தேசியக் கட்சி அரசியல் இல்லை.நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளும் அதன் பின்னரான அரசியல் உரையாடல்களும் அதைத்தான் காட்டுகின்றன. வாக்களிப்பில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத்தான் நிற்கிறார்கள்.ஆனால் கட்சிகள் அவர்களை வாக்காளர்களாகப் பிரித்து வைத்திருக்கின்றன. இதுதான் 16 வது மே 18 இல் ஈழத்தமிழ் சமூகத்தின் கள யதார்த்தம்.

https://athavannews.com/2025/1432176

கார்ணியின் மந்திரிசபை

1 month 2 weeks ago

Screen-Shot-2025-05-15-at-4.59.59-AM.png

கார்ணியின் மந்திரிசபைசிவதாசன்

கனடிய மத்திய அரசைக் கைப்பற்றி லிபரல் கட்சியின் தலைவர் கார்ணி மந்திரிசபையை இவ்வாரம் அறிவித்திருக்கிறார். அதில் இரு தமிழர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. துர்ப்பாக்கியமாக அமைச்சர் கெரி ஆனந்தசங்கரியுடன் நான் எடுத்துக்கொண்ட படம் எதுவும் கைவசம் இல்லாமையால் அதை இக்கட்டுரையில் இணைத்துக்கொள்ள முடியவில்லை.

தேர்தலுக்குப் பின் சற்றே ஒதுங்கியிருந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பொய்லியேவ் கார்ணியின் மந்திரிசபை அறிவிக்கப்பட்டதும் மீண்டும் முனக ஆரம்பித்திருப்பது பரிதாபமாகவிருக்கிறது. பாவம், பின்னாலிருந்து முதுகில் இடி விழுகிறது போல; ஏதாவது சொல்லியாகவேண்டும் என்பதற்காகச் சொல்கிறார் போலிருக்கிறது. “இந்த மந்திரிசபையில் பலர் ட்றூடோவின் அமைச்சர்கள்” என மனம் வெதும்பி அழுதிருக்கிறார் பொய்லியேவ். அடுத்த தடவை ஆட்சி அமைக்கவேண்டுமென்றால் கன்சர்வேட்டிவ் கட்சி இப்போதே வேறு தலைவரைப் பார்ப்பது நல்லது.

தமிழ்ப் பூர்வீகத்தைக் கொண்ட இருவருக்கு கார்ணியின் மந்திரிசபையில் முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டிருப்பது தமிழருக்குப் பெருமை. ஆனாலும் இவ்விரு பதவிகளும் மிகவும் ஆபத்தானவையும் கூட. வந்ததும் வராததுமாக வெளிவிவகார அமைச்சர் அனித்தா ஆனந்த் பாலஸ்தீன விடயத்தை இழுத்து இஸ்ரேலைக் கண்டித்திருக்கிறார். பாலஸ்தீன விடயத்தில் ட்றூடோ அரசு இருதலைக் கொள்ளி எறும்பாக அலைந்து திரிந்தது என்றாலும் ட்றூடோ பதவி விலகுவதற்கு முன்னர் “நான் ஒரு சயோனிஸ்ட்” எனப் பிரகடனப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார். தேர்தலுக்கு முன்பிருந்தே கார்ணி “இரு நாட்டுக் கொள்கையை” ஆதரித்ததன் மூலம் பாலஸ்தீனப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டைப் பிரகடனப்படுத்தியிருந்தார். அமைச்சர் ஆனந்தின் ‘இஸ்ரேல் எச்சரிக்கை’ இவ்விடயத்தில் கார்ணி அரசு எப்படியான நகர்வுகளை மேற்கொள்ளலாம் என்பதைக் காட்டியிருப்பது நல்லது.

மறுபக்கத்தில் தெற்கின் மகாராஜா தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை அரேபியாவுக்கு மேற்கொண்டிருப்பது நெட்டன்யாஹுவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கலாம். அரபுக்களிடமிருந்து ‘மிதக்கும் அரண்மனையைப்’ பரிசாகப் பெற்றுக்கொண்ட மகாராஜா விடப்போகும் அடுத்த வாண வேடிக்கை எப்படியாக இருக்கப்போகிறதோ தெரியாது. ஆனாலும் கார்ணி அரசு அமெரிக்காவைவிட ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது நெருக்கத்தை சொல் மூலமும் செயல் மூலமும் காட்டி வருவதே அமைச்சர் ஆனந்தின் இந்த அறிக்கை எனவே நம்ப வேண்டியிருக்கிறது. அமைச்சர் ஆனந்தின் இக்கொள்கை நகர்வு அவருக்கு எதிராகத் திருப்பிவிடப்படுமானால் அவரது பதவிக்கு நீண்ட ஆயுள் இருக்க வாய்ப்பில்லை. இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சராகவிருந்த மெலனி ஜோலி “இப்பதவி தனக்கு வேண்டாம்” எனக்கூறி வேறு பதவியைப் பெற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். ட்றம்பின் உலகில் இப்பதவி இலகுவான ஒன்றல்ல என்பதை ஜோலி உணர்ந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண அரசில் முதல்வராகப் பதவியேற்பதற்குப் பலர் பின்னடித்த நிலையில் ‘இதோ நானிருக்கிறேன் பார்’ என வந்து குதித்தவர் உஷால் டொசாஞ் எனப்படும் ஒரு சீக்கிய வம்சாவளியினர். அப்போது ஒரு வலதுசாரிப் பத்திரிகையொன்றில் ” வேறொருவரும் முன்வராத போது அப்பதவிக்கு எங்காவது இருந்து ஒரு இந்தியர் வருவார்” என நக்கலடித்திருந்தது. அமைச்சர் ஆனந்த் விடயத்திலும் இப்படியொரு நையாண்டி அறிக்கை வராது என நம்புவோமாக.

அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி விடயத்திலும் நிலைமை இலகுவானதான ஒன்றல்ல. உள்நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தமான அமைச்சு இது. வெளிநாடு அரசுகளின் தலையீடுகள் பற்றி ட்றூடோ அரசுக்கு தொடர்ந்து தலையிடி கொடுத்து வந்தது கன்சர்வேட்டிவ் கட்சி. கனடிய பாராளுமன்றத்தில் இருக்கும் வெளிநாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் பூர்வீக நாடுகளோடு மென்போக்கைக் கடைப்பிடிப்பது வழக்கம். பல கனடிய யூதர்கள் இவ்விடயத்தில் இஸ்ரேல் நட்பைப் பேணுவதும் அதற்காகக் கனடிய அரசை வற்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கம். சீன அரசுக்குச் சார்பானவர்கள் பலர் இரண்டு பிரதான கட்சிகளிலும் இருக்கிறார்கள். காளிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானவர்களும், இந்திய அரசுக்கு ஆதரவானவர்களும், தமிழீழ விடுதலைக்கு ஆதரவனாவர்களும் என பலதரப்பட்டவர்கள் கனடிய பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அமைச்சர் ஆனந்தசங்கரியின் தமிழராதரவு நிலைப்பாடு வெளிப்படையானது. இந்நிலையில் அவருக்கு உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கோவிட் காலத்து பாரவண்டி ஓட்டுனர்களின் ஒட்டாவா நகர முற்றுகையைக் கையாண்ட விதம் ட்றூடோவின் வீழ்ச்சிக்கு முக்கியமானதொரு காரணம். அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை, ஒரு வகையில், ‘உருவாக்கப்பட்ட பிரச்சினைகளாகவே’ (manufactured crisis) இருக்க வாய்ப்புண்டு. அனுபவமும் முதிர்ச்சியும் அவர் பக்கமிருந்து , வரக்கூடிய பிரச்சினைகளைக் கையாளும் வல்லமையுமிருப்பின் அவரும் தப்பிப் பிழைக்க வாய்ப்புண்டு.

கார்ணி அமைச்சின் இன்னுமொரு முள்ளாக வந்திருப்பது, பல வகைகளிலும் புத்தம் புதியவரான, அமைச்சர் எவன் சொலொமன். ‘செயற்கை விவேகம் மற்றும் டிஜிட்டல் ஏதோ…’ என ஒரு அமைச்சு புதிதாக உருவாக்கப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எவன் சொலொமன் முன்னர் சீ.பீ.சீ. தொலைக்காட்சியிலும் பின்னர் சீ.ரீ.வி. தொலைக்காட்சியிலும் பணியாற்றிய ஒரு ஊடகவியலாளர். சீ.பி.சீ. யில் முக்கிய பதவியில் இருக்கும் போது பெறுமதி வாய்ந்த ஓவியமொன்றை விற்றார் எனவும் இதன் பின்னால் ஏதோ ஒரு திருகுதாளம் இருந்ததெனவும் குற்றச்சாட்டப்பட்டு ஒரே நாளில் இவர் பதவி நீக்கப்பட்டார். அந்த ஓவியத்தை வாங்கியவர் வேறு யாருமல்ல தற்போதைய பிரதமர் கார்ணியே. இந்த நட்பின் ரீதியாவே அவர் பாதுகாப்பான ஒரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு , பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு இப்போது புதியதொரு அமைச்சையும் நிறுவி அவருக்குத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். இது கார்ணி மீது ஒட்டிக்கொண்டிருக்கும் பெரியதொரு அழுக்கு.

இவர்களை விட ‘பிரம்டன் வாசிகள்’ பலரும் அமைச்சரவையில் உலவுகிறார்கள் எனக் கேள்வி. காளிஸ்தான் கோட்டையாக விளங்கும் பிரம்டன் மாநகரம் கார்ணியின் அரசுக்கு, குறிப்பாக அமைச்சர் ஆனந்தசங்கரிக்கு பல தலையிடிகளைக் கொண்டுவர வாய்ப்புண்டு.

இதற்கிடையில் பாராளுமன்றத்தில் 168 ஆசனங்களுடன் பயணத்தை ஆரம்பித்த கார்ணி அரசு தனது ஆசனங்களை இப்போது 170 ஆக அதிகரித்திருக்கிறது. பெரும்பான்மைக்கு (172) இன்னும் இரண்டு ஆசனங்கள் தேவை. இன்னும் இரண்டு தொகுதிகளில் வாக்குகள் மீள எண்ணுப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்விரண்டையும் அபகரிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளிடமிருந்து இரண்டைப் பறிப்பதற்கான முயற்சிகள் / பேச்சுவார்த்தைகள் குச்சு ஒழுங்கைகளில் நடைபெற வாய்ப்புண்டு. அது தவறின் கார்ணியின் ஆட்சி நான்கு வருடங்களுக்கு இழுக்காது எனக் கன்சர்வேட்டிவ் கட்சி உறுதியாக நம்புகிறது. அதைச் சாத்தியமாக்கும் வேலைகளை கன்சர்வேட்டிவ் கட்சி ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதாகவும் கேள்வி.

எல்லாப் புகழும் பிரம்டனுக்கே!

வடக்கு- கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கூறும் செய்தியும் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலமும்

1 month 2 weeks ago

வடக்கு- கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கூறும் செய்தியும் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலமும்

தமிழ் மக்களின் இன்றைய நிலை – ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரல் – எமது பலம் – சர்வதேச சக்திகளின் நிலைப்பாடும் – தீர்வுநோக்கி முன்னேறவுள்ள சாத்தியப்பாடுகள் – போன்றவற்றை மனம்விட்டு வெளிப்படையாகப் பேசி கூட்டு முடிவை எடுக்க தமிழரசும் காங்கிரசும் தயாராக வேண்டும். எனவே புதிய கூட்டிணைவு என்பது வெறுமனே சபைகளை கைப்பற்றுவதோடு நிற்க முடியாது. மாறாக தீர்வு நோக்கி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டும் – தொடர வேண்டும்.

கலாநிதி க.சர்வேஸ்வரன்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலானது வெறுமனே உள்ளூராட்சிக்கான வினைத்திறன் மிக்க நிர்வாகத்தை நடத்தவல்ல வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கானதாக மட்டுமின்றி அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எதிர்நோக்கப்பட்டது. இதன் முடிவுகள் தமிழ்த்தேசிய அரசியல், அதன் போக்கு ஆகியவற்றில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தவல்லதாக அமைய வேண்டும் என்பது ஒன்று.

தமிழ்த் தேசிய நீரோட்டத்தை திசைதிருப்பி மடைமாற்றி வலுவிழக்கச் செய்யும் நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் சிங்கள – பௌத்த மேலாதிக்க சக்திகள் வடக்கு – கிழக்கில் காலூன்றுவதை தடுப்பதாக அமைய வேண்டும் என்பது மிக முக்கியமான இன்னோர் எதிர்பார்ப்பாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதித்துவதற்கு ஈடாக சிங்கள – பௌத்த மேலாதிக்கக் கொள்கையை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி முகமூடியணிந்த ஜே.வி.பி.யும் தேர்வு செய்யப்பட்டது.

இது இனமோதல் என்ற ஒன்று இல்லை என்ற மூடி மறைப்பு பிரச்சாரத்துக்கும் பலத்த எதிர்ப்பின்றி சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பை வடக்கு – கிழக்கில் தொடர்வதற்கும், தமிழர் தாயக நிலங்களை அபகரிப்பதற்கும், இனமோதல் தீர்வு தொடர்பில் பேசவல்ல சர்வதேச சக்திகளின் வாயை அடைக்கவும் ஏதுவாக அமைந்தது. இப்பலமான மக்கள் ஆதரவு தமிழ்த் தேசியத் தலைமைகளின் குரலையும் பலவீனப்படுத்தியது. பலவீனப்படுத்துகிறது. எனவேதான் இவ்வுள்@ராட்சித் தேர்தலான நாடாளுமன்றத் தேர்தலில் தவறாகத் தமிழ் மக்கள் எழுதிய விதியைத் திருத்தி எழுதும் முக்கிய சந்தர்ப்பமாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் தேர்தல் முடிவுகளை நோக்கலாம். ஒட்டுமொத்தமாக நோக்கின் இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னூறுக்கு மேற்பட்ட ஆசனங்களையும் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தேசிய மக்கள் சக்தி இன்னமும் வலுவாக உள்ளன. மூன்றாவது இடத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்று நூற்றி ஆறு ஆசனங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இவை தவிர அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 80 இற்கு மேலான ஆசனங்களைப் பெற்று நாலாம் இடத்தில்” உள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்கு அதிகரிப்பை பொறுத்தவரை இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் ஆகியன ஏறத்தாழ இரட்டிப்பான வாக்குகளை வடக்கிலும் இரட்டிப்பிற்கு சற்றுக் குறைவாக கிழக்கிலும் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் விட்ட தவறை மக்கள் குறிப்பிடத்தக்க அளவு திருத்தி எழுத்தியுள்ளார்கள்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தி குறிப்பிடத்தக்களவு தனது வாக்குகளை இழந்துள்ளது. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் ஏழத்தாழ 16000 வாக்குகள் கடந்த தேர்தலை விட குறைந்துள்ளது. எனவே தமிழ்த் தலைமைகள் எதிர்பார்த்ததற்கு கிட்டவாகவே மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளது.

அதேவேளை இம்முடிவுகள் இரண்டு முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. ஒன்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்குகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்த போதும் வடக்கு – கிழக்கில் ஒரு சில சபைகள் தவிர்ந்த எந்த சபையிலும் எந்த ஓர் கட்சியும் தனியாக ஆட்சியமைக்கும் வகையில் முடிவுகள் அமையவில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டணியாக ஆட்சியமைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இம்முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரிந்து நின்ற தமிழ்க்கட்சிகளைத் தண்டிப்பது போல் அமைந்ததென எடுத்துக்கொண்டால் இத் தேர்தல் முடிவுகள் நீங்கள் ஒன்றுபட்டாக வேண்டும்.

ஒன்றுபட்டு இனமோதல் தீர்வு விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் இடத்தில் இன்னமும் ஜே.வி.பி. வைக்கப்பட்டுள்ளமையானது தமிழ்த் தேசியத் தலைமைகள் இணைந்து கூட்டாக உள்@ராட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து வினைத்திறனுடன் செயற்பட முடியாவிட்டால் மீண்டும் இனமேலாதிக்க சக்திகள் வளர்வதற்கான தளங்கள் அழிக்கப்படவில்லை என்ற எச்சரிக்கையையும் இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆகவே பந்து இப்போது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் எல்லைக்குள் போடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை இவ்விடயத்தில் இரண்டு முக்கிய சவால்களை எதிர்நோக்கியுள்ளன.

ஒன்று: கூட்டு என்பது தமிழ்த் தேசியக் கட்சிகளுடனானதாக இருக்க வேண்டும். எந்த ஓர் சிங்களக் கட்சிகளுடனும் இருக்க முடியாது.

இரண்டு: சபைகளை நிர்வகிக்கும் கூட்டாக மட்டும் அமையுமா? கொள்கையிலும் கூட்டிணைவு ஏற்படுமா? கள யதார்த்தங்களை நோக்கினால் தமிழரசுக்கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன மட்டுமே வடக்கு – கிழக்கு முழுவதும் பரவலாக போட்டியிட்டு ஆசனங்களைக் கொண்டுள்ளன. தமிழ்க் காங்கிரசைப் பொறுத்தவரை யாழ். மாவட்டத்தில் மட்டுமே குறிப்பிடும்படியாக உள்ளது.

அதற்கு வெளியே அக்கட்சியின் வாக்குகள் குறிப்பிடும் படியாக இல்லை. இங்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருமளவு சபைகளின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. எனவே யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்க் காங்கிரஸ் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவை நாடும் நிலையும் பொதுவாக வடக்கு – கிழக்கிலும் குறிப்பாக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவை தமிழரசு நாடி நிற்பதும் தற்போதைய நிலையாகும்.

சிங்கள – பௌத்த மேலாதிக்க சக்திகள் உள்ளூராட்சிகளில் எவ்வகையிலும் பலம்பெற்று விடக் கூடாது என்ற அடிப்படை நிலைப்பாட்டில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுதியாகவுள்ளது. அதேவேளை யாழ். மாவட்டத்தில் காங்கிரசுடனும் ஏனைய மாவட்டங்களில் தமிழசுடனும் இணைத்து செயற்படுவதென்பது சரியாக அமையாது என்ற நோக்கிலும் நியாயமுண்டு.

இதுவரை கால அனுபவமானது பல கட்சிகளின் கூட்டாக பலமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது தமிழரசுக் கட்சியே. அதேபோல் ஏனைய அனைவரும் துரோகிகள் இந்திய முகவர்கள் என பட்டம் வழங்கி யாருடனும் சேர்த்தியங்க மாட்டோம் அதுபற்றிப் பேசவே வரமாட்டோம் என அடம்பிடித்து வந்தது தமிழ்க்காங்கிரஸ் கட்சி.

இப்போது இவ்விரு தரப்பும் ஒன்றுபட்டு ஆட்சியமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தாலும் அக்கோரிக்கைகள் அடிப்படையில் தாம் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரும் தொனியிலானதே தவிர எதிர்காலத்தில் இணைந்து தொடர்ந்து செயற்படுவது என்ற தொனியில் இல்லை.

தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை நாங்கள்தான் தாய்க்கட்சி. எனவே ஏனையவர்கள் எம்முடன் எமது நிபந்தனைகளுக்குள் இணைந்து செயற்படலாமே தவிர நாம் ஏனையவர்களுடன் இணைய முடியாது என்ற நிலைப்பாட்டையும் நாங்கள் ஆலமரம் இணைந்து செயற்படுபவர்கள் குருவிச்சைகள் என்ற வகைப்படுத்தலையும அடிக்கடி வெளிப்படுத்தி வருபவர்கள். இதுவே கூட்டமைப்பின் தமிழரசு தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான யாப்பு, பெயர், பொதுச் சின்னத்தைக் கொண்டு சட்டப்படியாக கட்டமைக்கப்பட்ட கூட்டணியாக செயற்பட காரணமானது என்ற அண்மைய வரலாற்றுண்மையை மறந்து விட முடியாது.

எனவே மேற்கண்ட தமது நிலைப்பாடுகளை விடுத்து தமது நிலைப்பாட்டின்பால் மற்றவர்களைக் கொண்டு வரும் முரட்டு பிடிவாதங்களை விடுத்து உள்ளூராட்சி அதிகாரத்தில் உரியவர்களுக்கு உரிய மதிப்பளித்து ஆட்சியதிகாரங்களை நியாயமாக மங்கிட்டு இணைத்து ஆட்சிப்பொறுப்பேற்க முன்வருவார்களா?

அதேபோல் இவ்வொற்றுமை சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்ற மட்டும்தானா? இனமோதல் தீர்விலும் ஒன்றுபட்டு செயற்படத் தயாரா? இனமோதல் தீர்வில் அனைவரதும் இறுதி இலக்கு கூட்டாட்சி அல்லது சமஷ்டி என்பதாக இருந்தாலும் அதனை அடையும் வழிமுறை என்பதில் அர்த்தமற்ற முரண்பாடுகளை வெளிப்படுத்தி வருவதையும் மாற்ற வேண்டும்.

13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாகாணசபைத் தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கட்டமைப்பின் நிலைப்பாடு தர்க்க ரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் யதார்த்தமானதும் அவசியமானதுமான வழிமுறையாகும்.

இவ்விடயத்தில் தமிழரசைப் பொறுத்தவரை 13ஐ நாம் தீர்வாக ஏற்கவில்லை. ஆனால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாமானது. நடைமுறைப்படுத்த தயங்கும் சிங்கள மேலாதிக்க சக்திகளின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் அதேவேளை ஏனைய கட்சிகள் 13ஐ இறுதித் தீர்வாக ஏற்றுக்கொண்டவை போன்ற பிழையான பிம்பத்தை ஏற்படுத்தும் தன்மையானது.

தமிழ்க் காங்கிரசைப் பொறுத்தவரை 13ம் திருத்தத்தையும் மாகாணசபைகளையும் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டோம். அதை கிண்டுபவர்கள் ஒன்றையாட்சியை ஏற்றுக்கொண்டவர்கள். இந்திய அடிவருடிகள் என வசைபாடும் அதேவேளை இந்தியா 13 பற்றி பேசாதிருக்க வேண்டும் எனக்கூறும் அளவிற்கு மந்தமான நிலைப்பாட்டையே இன்றும் கொண்டுள்ளனர். 13ஐயே அழித்தொழிக்க முயலும் சிங்கள பேரினவாதத்திடம் சம~;டியை பெறுவதற்கு பலமான சர்வதேச ஆதரவு தேவை. அதற்கான வழிவரைபடமோ திட்டமோ, சமிக்ஞைகள் கூட இல்லாத நிலையில் அதனை வேண்டாம் என்பது எந்தவகை அறிவைச் சாரும்?

எனவே இந்த முரட்டு நிலைப்பாடுகளைவிடுத்து தமிழ் மக்களின் இன்றைய நிலை – ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரல் – எமது பலம் – சர்வதேச சக்திகளின் நிலைப்பாடும் – தீர்வுநோக்கி முன்னேறவுள்ள சாத்தியப்பாடுகள் – போன்றவற்றை மனம்விட்டு வெளிப்படையாகப் பேசி கூட்டு முடிவை எடுக்க தமிழரசும் காங்கிரசும் தயாராக வேண்டும். எனவே புதிய கூட்டிணைவு என்பது வெறுமனே சபைகளை கைப்பற்றுவதோடு நிற்க முடியாது. மாறாக தீர்வு நோக்கி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டும் – தொடர வேண்டும்.

இத்தகைய அர்த்தபுஷ்டியான ஆரோக்கியமான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஜனநாயகபூர்வமானதும் அரசியல் நாகரீகத்தின்பாற்பட்டதுமான எழுத்துபூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டு சபைகளைக் கையேற்பதும் ஒன்றுபட்டு இனமோதல் தீர்வு நோக்கிய திட்டங்களைச் செயற்படுத்துவதும் அமைய வேண்டும். இந்த அணுகுமுறை விரைவாகவே வடக்கு – கிழக்கில் இருந்து சிங்கள கட்சிகளை அகற்ற ஏதுவாகும் என்பதுடன் தமிழ்த் தேசியத்தின்பால் அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரட்டும். தீர்வு நோக்கிய பயணம் ஆரோக்கியமாக நம்பிக்கையூட்டுவதாகவும் அமையும்.

https://thinakkural.lk/article/317926

சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.

1 month 2 weeks ago

சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.

கட்சியில் வெற்றி பெற்றவர்களும் வாக்காளர்களும் விரும்பியவர்களை விட சுமந்திரனின் ஆதரவாளர்களை பதவியில் அமர்த்த முற்பட்டவேளை கூட்டம் நுச்சல் குழப்பமாக இருந்தது.

இந்தியா - பாகிஸ்த்தான்: எப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டது?

1 month 2 weeks ago

எப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டது?

-ச.அருணாசலம்

hq720-3.jpg

அமெரிக்காவின் நிர்பந்தமா? பாகிஸ்தான் பின்னணியில் சீனா இருந்ததால் ஏற்பட்ட தயக்கமா? நமது ரபேல் ராணுவ விமானங்களை சீனாவின் PL-15E ஐ பயன்படுத்தி பாகிஸ்தான் முறியடித்ததால், சீனாவின் ஆயுத வியாபாரத்திற்கு சர்வதேச மவுசு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அமெரிக்காவின் பதட்டமா..? ஒரு அலசல்;

பெஹல்காம் படுகொலையைத்தொடர்ந்து, இந்திய அரசு , பாகிஸ்த்தான் நாட்டில் ஒன்பது இடங்களை குறி வைத்து தாக்கி தாக்குதலை (போரை) தொடங்கி வைத்தது.

அண்டை நாட்டு மீதான இத்தாக்குதலை இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என அழைத்தாலும், இது ஒரு மட்டுபடுத்தப்பட்ட, பொறுப்பான, அளவான, பிரச்சினையை விரிவாக்காத தாக்குதல் என இந்திய அரசு  வருணித்தது! இத்தாக்குதல் பாகிஸ்த்தான் இராணுவத்தின் மீதான தாக்குதலோ, பாகிஸ்த்தான் குடிமக்கள் மீதான தாக்குதலோ அல்ல என்றும் இந்திய அரசு விளக்கம் அளித்தது! பயங்கரவாத முகாம்களின் மீதான தாக்குதலே என இந்திய அரசு கூறியது.

ஆனால், பாகிஸ்த்தான் அரசோ இத்தகைய எல்லை தாண்டிய தாக்குதல் பாக் இறையாண்மை மீதுஇந்தியா தொடுக்கும் போர் என்றும் இதற்கு தக்க பதிலடி உரிய நேரத்தில் பாகிஸ்த்தான் கொடுக்கும் என மே மாதம் 7. தேதியே அறிவித்தது!

இந்திய ஊடகங்களும் , அனைத்து கட்சிகளும் இந்திய ராணுவத்தின் இத்தாக்குதலை , தேச பற்று , பயங்கரவாத்த்திற்கெதிரான தேச ஒற்றுமை என்பதின் பெயரால் வெகுவாக வரவேற்றன!

தேச பற்றின் மொத்த குத்தகைதாரரான பாரதீய ஜனதா கட்சியோ, இத்தாக்குதலை பயங்கரவாத்த்தை வேரோடு சாய்க்கும் மோடியின் அரசின் அஸ்திரம் எனக் கூறியது. பாகிஸ்த்தான் நொறுங்கியது என குதூகுலத்தில் கோடி மீடியாவும் வலது சாரி சமூக ஊடகவியலாளர்களும் கூப்பாடு போட்டனர்.

ஆனால், இந்த ‘மகிழச்சி’ யை தவிடுபொடியாக்கியது போல் ஐந்து இந்திய விமானங்களை – ரஃபேல் விமானம் உட்பட – பாக் விமானப்படை சுட்டு வீழ்த்திய செய்தியை பாக் ராணுவம் வெளியிட்டது. இந்திய அரசு இதை ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், இச்செய்தியை மறுக்கவும் இல்லை என்பது நெருடலாக இருந்தது. சர்வதேச ஊடகங்களான ராய்ட்டர், சி.என் என். மற்றும் பி.பி.சி, வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், பிரென்ச் பத்திரிக்கையான லே மாண்ட் போன்றவையும் இத்தகவலை உறுதி செய்ததால் ஒரு ‘ தர்ம சங்கடமான’ சூழல் இந்திய அரசியல் தலைமையை கவ்விக்கொண்டது என்றால் அது மிகையல்ல.

sddefault.jpg

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களின் இடையே 7.8 பில்லியன் யூரோ (சுமார் 62,000 கோடி ரூபாய்) பெறுமான ரஃபேல் விமானங்களை பிரான்சு நாட்டு தஸால்ட் நிறுவனத்திடமிருந்து மோடி அரசு வாங்கியது. அத்தகைய விலை உயர்ந்த , அதி நவீன போர் விமானமான ரஃபேலை பாகிஸ்த்தான் மிக குறைந்த விலையே உள்ள

J10 CE என்ன சீன விமானத்தின் மூலம், சீன ஏவுகணை PL-15E ஐ கொண்டு முறியடிக்கும் என்று கனவிலும் மோடி நினைத்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் அது தான் நடந்தது. விலை உயர்ந்த மூன்று ரஃபேல் விமானங்களை குறைவான விலை கொண்ட சீன விமானமும்,ஏவுகணையும் மட்டமான பாகிஸ்த்தான் ராணுவத்தினரால் இந்திய வான் எல்லைப்பகுதியலேயே, மே 6-7 தேதி இரவே சுட்டு வீழ்த்தப்பட்டது, அகில உலகையும் ஆச்சரியப்பட வைத்தது!

இந்தியா வேண்டுமானால் , ‘சண்டை என்று வந்தால் இழப்புகள் இல்லாமலா இருக்கும் என கடந்து சென்றாலும், இந்நிகழ்வு உலக ராணுவ தளவாடங்களின் சந்தையையே ஒரு குலுக்கு குலுக்கியுள்ளது. தஸால்ட் பங்குகள் சரிந்ததும், சீன நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததும் இதனால் தான் ஏற்பட்டது.

எங்களது தாக்குதல் இதற்கு மேல் தொடராது என்ற நிலையிலிருந்த இந்திய ராணுவம் இந்த இழப்பிற்கு பின்னர் ஆளில்லா விமானங்கள் ( drones) மூலம் பாக். எ்லையை கடந்து லாகூர் போன்ற ராணுவ தளங்களின் மீது தாக்குதலை நடத்தியது. இதனை – இத்தாக்குதலை 70 விழுக்காடு ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன் மூலம் முறியடித்ததாக பாக். ராணுவம் கூறியது, இதை மீறி சில இடங்களில் தாக்குதல் நடந்து சேதங்கள் விளைந்தன என்பதை பாக் ராணுவம் ஒத்துக் கொண்டது, வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்களை படமெடுத்து வெளியிட்டது பாக் ராணுவம்.

1093067_1.jpg

எல்லை பகுதியில் ஷெல்லிங் எனப்படும் பீரங்கி தாக்குதலில் இரு நாட்டு ராணுவமும் முழுமையாக ஈடுபட்டிருந்தன. இதனால் இந்திய எல்லைப்பகுதியில் உள்ள காஷ்மீர் மக்களே வெகுவாக – ஏனைய எல்லைப் பகுதி மக்களை விட வெகுவாக – பாதிப்படைந்தனர்.

இந்திய ராணுவ முகாம்களின் மீதான தனது தாக்குதலை பாக். ராணுவம் மே 9 அன்று தொடுத்தது. 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பாக். ராணுவம் பயன்படுத்தியதாக இந்தியா கூறியது. உதம்பூர், அமிர்தசரஸ் பாரமுல்லா, பெரோஸ்பூர், குஜராத்திலுள்ள பூஜ் போன்ற இடங்கள் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்திய மெயின்ஸ்டரீம் டி வி ஒளிபரப்புகள் குறிப்பாக ரிப்ப்ளிக் டி வி, ஆஜ் தக், நியூஸ் 18 டி வி போன்றவை லாகூரை இந்திய ராணுவம் கைப்பற்றி விட்டது, கராச்சி மீது ஐ என் எஸ் கப்பல்

குண்டு வீசி தாக்கி கராச்சி நகரத்தையே சுற்றி வளைத்ததாகவும், ராவல்பிண்டி சரண்டைந்ததாகவும்,பாக் ராணுவ தலைமை தளபதி முனீர் ஓடி விட்டார் என்றும் உண்மைக்கு புறம்பான, ஒருதலை பட்சமான  தகவல்களை தொடர்ந்து பரப்பி வந்தன. வெறுப்பு உணர்வுகளை பரப்பி அதில் குளிர்காய முனைந்தனர். இதனால் இந்திய ராணுவத்தையும் இக்கட்டுக்கு உள்ளாக்கின இந்த ஊடகங்கள்! .

போர் வந்தவுடன் முதலில் மடிவது உண்மை தான் என்பதற்கேற்ப வதந்திகளை பரப்புவதையே முழு நோக்கமாக கொண்டு இந்திய ஊடகங்கள் செயல்பட்டன என்பது வெட்ககேடு. இந்திய ஆட்சியாளர்களோ பொய் செய்திகளை ஒடுக்குகிறேன் என்று கூறிக்கொண்டு 8000 x அக்கவுண்டுகளையும், செய்தி இதழ்களான தி வயர், மற்றும் பி பி சி (உருது) மற்றும் நூற்றுக்கணக்கான யூ ட்யூப் இதழ்களையும் சானல்களையும் முடக்கினர். இதில் பல கலைஞர்களும், பாடகர்களும் அடக்கம். ஆனால், வதந்திகளையும் பொய்களையும், வன்மத்தையும் பிளவு வெறியையும் தூண்டும் டி வி சானல்களை இந்திய அரசு கண்டிக்க கூட இல்லை!

இப்படியாக நடந்த சண்டை மே 10 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது என்று டிரம்பே தனது ட்ரூத் என்ற சமூக ஊடக பதிவில் வெளியிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

222india-pakistan-trump-ceasefire-comp.j

பாக். மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் உலக நாடுகள் அதை ஆதரிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இரு நாடுகளை சமாதானம் செய்யவோ, காஷ்மீர் பிரச்சினையில் பிற நாடுகள் (மூன்றாவது நாடு) மத்தியஸ்தம் செயவதையோ இந்தியா விரும்பவில்லை என்ற “விசித்திரமான” நிலையை கடைபிடிக்கும் இந்திய அரசு டிரம்பின் இத்தகைய அறிவிப்பால் மேலும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியது எனலாம்.

நிலைமையை சமாளிக்க இந்திய அரசு அதிகாரபூர்வமான மறுப்பை தெரிவிக்காமல் மழுப்பலாக இந்திய அரசு மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஒத்துக் கொள்ளவில்லை என்ற செய்தியை “நம்பகமான செய்தியாக” கசியவிட்டது.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற இருதலை பாம்பாக மோடி மவுனத்தை கடைபிடித்து வருகிறார். போர் நிறுத்தத்தை வரவேற்ற பாகிஸ்த்தான் பிரதமர் ஷெரீப் , டிரம்பிற்கு நன்றி கூறுகையில் மோடியோ இம்முயற்சி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் (டி ஜி எம் ஓ- Director General of Military Operations) முடிவாக முன்னிறுத்தி ஒதுங்கி இருப்பது வேடிக்கையாக உள்ளது.

இதன்மூலம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கடைபிடித்துவரும் – இந்திய பாக் . இடையேயான பிரச்சினைகளை இரு நாடுகளும் பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ளுவது, இதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை, மத்தியஸ்தத்தை இரு நாடுகளும் ஏற்காது என்ற நிலை பாட்டை- இப்பொழுது மோடி அரசு கைவிட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிரம்பின் தலையீடும், மே 12 ல் பொதுவான இடத்தில் பிரச்சினைகளை பேச முடிவு செய்திருப்பதை மீண்டும் டிரம்ப் இன்று உறுதி செய்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

333india-pakistan-conflict.jpg

இதற்கிடையில் ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்றும், பயங்கரவாத செயல் இனி நடந்தால் பாக். மீது தாக்குதல் தொடரும் என இந்திய ராணுவம் கூறி வருவதும், இந்திய பிரதமர் அலுவலக அதிகாரி (PMO) ‘ சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது தொடரும் ‘ என்று கூறுவதும் இந்த போர் நிறுத்த்தை பற்றிய தெளிவு இந்திய ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா அல்லது சரியான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றனரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

முதலில் எதற்காக இந்திய அரசியல் தலைமை போரை துவக்கியது? புல்வாமா பாலகோட் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களை மறந்துவிட்டு, பாலக்கோட்டை விட பெரிய தாக்குதல் தொடுத்தால்தான் தமது ‘இமேஜ் ‘ காப்பாற்றபடும் என தலைமை எண்ணியதா?

பாக்கித்தானை போலவே இந்துக்களின் பாரம்பரியத்தை பற்றியும் மேன்மை பற்றியும் பேசும் மோடி , இந்து விரோதிகள் எங்கிருந்தாலும் கொன்றொழிப்பது என்ற கொள்கையை பாக்கித்தானிலும் காட்ட முடியும் என்ற இறுமாப்பா?

பாக் சமூகத்தில் ராணுவத்திற்கும் சிவில் சமூகத்திற்கும் உள்ள பிணக்குகள் முற்றியுள்ள நிலையில, பயங்கரவாதிகளான தெரீக் ஈ தாலிபான் அமைப்பினர் மற்றும் பலுச்சிஸ்தான் விடுதலை படை ஆகியவற்றின் பயங்கரவாத தாக்குதல்களில் சிக்கி சிதிலமடைந்துள்ள பாக் ராணுவமும் , பொருளாதார சிக்கலில் மூழகியுள்ள சமூகமும் இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாது என இந்திய ஆட்சித்தலைமை எண்ணியதா?

அல்லது இந்திய அரசியலிலும், வரும் தேர்தல்களிலும் தமது செல்வாக்கை நிலை நாட்ட இது உதவும என்ற கணக்கிலா ?

எதை மனதிற்கொண்டு இத்தகைய ( தாக்கும்) முடிவை எடுக்க முப்படைகளையும் நிர்ப்பந்தித்து இந்திய அரசியல் தலைமை?

இன்று நிலை என்ன?

இந்தியா இஸ்ரேலும் அல்ல , அமெரிக்காவும் அல்ல என்பது விளங்கி விட்டதா?

பாக்கித்தான் ஹமாஸ் அல்ல என்பது புரிந்து விட்டதா?

ஊருக்கெல்லாம் ஆருடம் கூறி வேவு பார்க்கும் இந்திய உளவுதுறை, பாக் ராணுவமும் சீனத்தின் பி எல் ஏ வும் (PLA) 2019க்குப்பிறகு மிக மிக நெருக்கமாக தங்கள் பிணைப்பை ,கூட்டுச் செயலாற்றலை வளர்த்துள்ளனர் என்ற உண்மை புரியாமல் போனதா?

அல்லது அரசியல் தலைமையின் அகங்காரமும், அதிகாரவெறியும் இவற்றை மறைத்தனவா?

எதை மனதிற்கொண்டு போரை தொடுத்தனர்? என்ன சாதித்தனர்?

பாக்கித்தானுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் பொதுவான இடமெதற்கு என கேள்வி கேட்கும் அதிகாரி உண்மையில் இந்திய ஆட்சித் தலைமையின் எண்ணத்தை பிரதிபலித்தால் இன்று ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் யாருடைய வற்புறுத்தலால் ஏற்பட்டது?

hq720-1-2.jpg

யாருடைய உத்தரவின் பேரில் இந்திய ராணுவ அதிகாரி (DGMO) இந்த ஒப்பந்தத்தை ஏற்று கொண்டார் என்ற கேள்விகள் எழுகின்றன?

பயங்கரவாத செயலை பாக் செய்திருந்தால் போரை நிறுத்த இந்தியா முன்வந்தது ஏன்?

இந்தியாவிற்கெதிரான பயங்கரவாத செயல்களில் இனி பாக். ஈடுபடாது என்ற உறுதி மொழியை அமெரிக்கா ஏன் பாக்.கிடமிருந்து பெறவில்லை?

அப்படி பெறுவதை இந்தியா ஏன் வற்புறுத்தவில்லை?

அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் இந்தியா பகிர்ந்திருக்கிறதா?

தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தால் சகஜ நிலைமை திரும்புமா?

நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதால் சிம்லா ஒப்பந்தத்தை பாக்கித்தான் ஏற்காது என்ற நிலைபாட்டை இந்தியா எப்படி எதிர் கொள்ள போகிறது? உலக நாடுகள் காஷ்மீர் பிரச்சினையில்மூக்கை நுழைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளதா?

காஷ்மீரில் பாக்கித்தான் தலையீடு கூடாது என்ற சரியான முடிவை இந்தியா வலியுறுத்தும் நேரத்தில், பலுச்சித்தான் பிரச்சினையிலும் இந்தியா தலையிடாது என்ற உறுதிமொழியை கொடுக்குமா?

சண்டை நடந்தாலும் இன்னல், சண்டை ஓய்ந்தாலும் ராணுவத்தினால் இன்னல் என்ற நிலையில் உள்ள காஷ்மீர் மக்கள் தங்களது உரிமைகளை பெறுவார்களா?

இரு நாடுகளின் ராணுவ குவிப்பிலிருந்து காஷ்மீர் பகுதி மீட்கபடுமா ?

காஷ்மீர் மக்களின் எண்ணம் பற்றி யாருக்காவது எந்த நாட்டிற்காவது உண்மையில் அக்கறை உள்ளதா? என்பன போன்ற பல கேள்விகள் இந்த போர் நிறுத்த அறிவிப்பின் மூலம் எழுகின்றன.

இதற்கு யார் விடை கூறுவது?

இதற்கிடையே சில அரசியல் பிரமுகர்களும் தலைவர்களும் இந்தியா ஏன் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொண்டது? பாக்கித்தானிற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டாமா என்று விசனப்படுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ச்ச்சின் பைலட் பாக் வசமுள்ள காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்றம் 1994ல் நறைவேற்றிய தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளதை நோக்குங்கால் இந்திய கட்சிகள் உண்மையில் காஷ்மீர் பிரச்சினையை புரிந்து உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.

மக்களை , மக்களது உணர்வுகள், மற்றும் உரிமைகளை மதிக்காத எந்த தேசீயவாதமும் வென்றதில்லை.

மத அடிப்படையிலான தேசீயவாதமும் வெல்ல முடியாது என்பதை பாக்கித்தான் நேற்றுவரை உணர்த்தி வந்தது. இன்று இந்தியாவில் மோடி அரசின் செயலும் நோக்கமும் மத அடிப்படை தேசீயவாதம் விரும்பத்தக்கதல்ல என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது!

ச.அருணாசலம்

https://aramonline.in/21516/india-pakistan-ceasefire-2025/

“சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் ; காலம்” ? - நிலாந்தன்

1 month 3 weeks ago

“சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் ; காலம்” ? - நிலாந்தன்

GqfD4QuW0AAQ2aW-cc.jpgஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்… “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு” என்று. அதற்கு கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் முன்பு பிரதேச சபை உறுப்பினராக இருந்தவரும், இப்பொழுது சுமந்திரனின் தீவிர விசுவாசியுமான ஒருவர் பதில் எழுதினார் “யாழ்ப்பாணம் சுமந்திரனோடு” என்று. இது ஒரு சமூக வலைத்தளக் காட்சி.

இரண்டாவது காட்சி, தேர்தல் வெற்றிகள் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், “தமிழரசுக் கட்சி பலவீனமடையவில்லை. தமிழ்த் தேசியக் கூடடமைப்பாக சேர்ந்து இருந்ததைவிட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கிறது” என்று கூறியுள்ளார். எனினும், இது ”நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய நேரம்;காலம்” என்றும் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற கட்சிகளை நோக்கிய மறைமுக அழைப்பு ஒன்று அதில் உண்டு. எனினும் தனது பலத்தை நிரூபித்துக் காட்டிய பின் அந்தப் பலத்தின் அடிப்படையில்தான் அந்த அழைப்பு வந்திருக்கிறது.

ஆனால் மூத்த அரசியல் செயற்பாட்டாளர் ஆகிய பஷீர் காக்கா அண்மையில் ஊடகச் சந்திப்பு ஒன்றை வைத்து அதில் தமிழரசுக் கட்சிக்குள் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் என்ற பொருள்பட கருத்துத்  தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தேர்தல் முடிவுகளின் பின் கருத்துத் தெரிவித்த கஜேந்திரக்குமார், தமிழரசுக் கட்சி ‘எக்கிய ராஜ்ய’ என்ற தீர்வைக் கைவிடுமாக இருந்தால் தாங்கள் அக்கட்சியோடு இணைந்து செயற்படத் தயார் என்று கூறியுள்ளார். அந்த நிபந்தனையைத் தமிழரசுக் கட்சி ஏற்காவிட்டால் உள்ளூராட்சி சபைகளை தமிழரசுக் கட்சியோடு இணைந்து நிர்வாகிப்பதற்கு முன்னணி தயாராக இல்லை என்ற பொருள் அதில் உண்டு.

மேற்கண்டவைகள் யாவும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரான தோற்றப்பாடுகளின் தொகுக்கப்பட்ட காட்சி. இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் தெளிவான சித்திரம் என்ன? தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்ததைப் போலவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஒரு தேசமாக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் கட்சிகள்தான் ஆளுக்காள் பிரிந்து நிற்கின்றன. இனிமேலும் பிரிந்து நிற்கப் போகின்றன?

தமிழரசுக் கட்சியின் வெற்றி என்பது ஒரு வகையில் சுமந்திரனின் வெற்றியும் சிறீதரனின் வெற்றியும்தான். அதாவது அது தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே காணப்படும் பிளவைக் கூர்மையாக வெளிப்படுத்தும் ஒரு வெற்றி. அப்படியென்றால் நீதிமன்றத்தில் இருந்து கட்சியை வீட்டுக்குக் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் இப்போதைக்கு கிடையாதா? தன் கட்சிக்குள்ளேயே ஒருமைப்பாட்டை,ஐக்கியத்தைப் பேண முடியாத தலைமைகள் கட்சிக்கு வெளியே தேசிய ஐக்கியத்தை எப்படிப் பேண முடியும்?

தேர்தல் வெற்றிக்குப் பின் சுமந்திரனின் ஆதரவாளர்களும் முன்னணியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் தேசம் தொடர்ந்தும் கட்சிகளாகப் பிரிந்து நிற்கப் போகிறது என்றே தெரிகிறது. சுமந்திரனின் விசுவாசிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபையின் பிரதான வேட்பாளரும் உட்பட பல பிரதானிகள் தங்கள் சொந்த வட்டாரங்களில் தோற்கடிக்கப்பட்டிருப்பதை ஏளனத்தோடு சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஆனால் சுமந்திரனுடைய தாய்க் கிராமத்திலேயே, குடத்தனையில் தமிழரசுக கட்சி ஒரு முன்னாள் இயக்கத்தவரால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது என்ற விடயத்தை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.

கட்சிகளுக்கு இடையிலான, கட்சிகளுக்கு உள்ளேயான இந்த ஆழமான பிளவுகளை தனக்குச் சாதகமான ஒரு தோற்றப்பாடாக என்பிபி கருதுகின்றது. அதனால்தான் கூறுகிறது, வடமகாணத்தில் தனக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன என்று. யாழ்ப்பாணத்தில் அதுதான் இரண்டாவதாக நிற்கிறது. வவுனியாவில், மன்னாரில் முதலாவதாக நிற்கிறது. மட்டக்களப்பில் இரண்டாவதாக நிக்கிறது. வன்னியில் இரண்டாவதாக நிற்கிறது.

தமிழரசுக் கட்சிக்கு 75 வயது.கொங்கிரஸ் கட்சிக்கு அதைவிட அதிக வயது.இந்த இரண்டு கட்சிகளையும் தனித்தனியாக எடுத்து அவற்றோடு என்பிபியை ஒப்பிட்டுப் பார்த்தால், 6 மாதங்களில் ஒன்றுமே இல்லாமல் இருந்த ஒரு கட்சிக்கு, தென்னிலங்கை மைய கட்சிக்கு,எவ்வளவு வாக்குகள் கிடைத்திருக்கின்றன?

அதே சமயம் எல்லாத் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் என்பிபி பின் தள்ளப்பட்டு விடும்.அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அதே சித்திரம்தான் மீண்டும் கிடைத்திருக்கின்றது.

இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் கட்சிகளுக்கு உணர்த்துபவை.இந்தச் சித்திரமே தொடர்ந்தும் காணப்படுமாக இருந்தால் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதில் குழப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

கஜேந்திரகுமார் இறந்த காலத்தில் இருந்து நிறையப் படித்திருப்பதும் அந்த அடிப்படையில் நெகிழ்வாக நடந்து கொள்வதும் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப உதவும். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு அவர் உரையாடியதாகவும் அவர்களிடமிருந்து இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் பதில் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள சில கட்சிகள் ஏற்கனவே பழைய கூட்டமைப்பை மீண்டும் புதுப்பிக்கும் விருப்பத்தோடு காணப்படுகின்றன.கிளிநொச்சியில் சந்திரக்குமாரை அவர்கள் உள்வாங்கியதன் மூலம் அவர்கள் தெளிவாக சுமந்திரனை நோக்கிச் சாய்ந்தார்கள்.எதிர்காலத்தில் கூட்டமைப்பாக செயல்படும் உள்நோக்கம் இருந்தால் அக்கட்சி முன்னணியை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உள்ளூராட்சி சபைகளில் என்பிபிக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் ஒரு தேசமாகத் திரளும் வாய்ப்புக்கள் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் பிரகாசமாக இல்லை.அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில் நிச்சயமற்ற தலைமைத்துவம்தான் இருக்கும்.

முன்னணிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையிலான பிளவு கொள்கை அடிப்படையிலானது என்று முன்னணி கூறுகிறது.ஆனால் ‘எக்கிய ராஜ்ய’ என்ற தீர்வு சுமந்திரனின் விருப்பமா அல்லது முழுக் கட்சியினுடையதும் நிலைப்பாடா என்ற கேள்விக்கு விடை வேண்டும்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றிகளின் மூலம் தமிழரசுக் கட்சியின் மீதான சுமந்திரனின் பிடி முன்னரை விடப் பலமானதாகவும் இறுக்கமானதாகவும் மாறியிருப்பதனால், அவர் தனது நிலைப்பாட்டைக் கட்சியின் நிலைப்பாட்டாக மாற்றுவார் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால்,எக்கிய ராஜ்ய என்பது தமிழரசுக் கட்சியின் ஒட்டுமொத்த நிலைப்பாடு அல்ல.கட்சியின் பதில் தலைவர் சிவஞானமும் உட்பட கிளிநொச்சியில் பெரு வெற்றி பெற்ற சிறீதரன், வன்னியில் ரவிகரன், கிழக்கில் சாணக்கியனைத் தவிர பெரும்பாலான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாருமே வெளிப்படைத் தன்மை மிக்க சமஸ்டிக்குத்தான் ஆதரவாக உள்ளார்கள். ஒற்றையாட்சிப் பண்புமிக்க தீர்வுப் பொதி ஒன்றுக்கா தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள்? இல்லை.எனவே இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியை சுமந்திரனின் கட்சியாகப் பார்க்க முடியாது.இது தொடர்பாக அதாவது எக்கிய ராஜ்ய தொடர்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒரு பகிரங்க மேடையில் அமர்ந்து வெளிப்படைத் தன்மை மிக்க ஓர் உரையாடலைச் செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பரப்புரைகளின் போது கஜேந்திரகுமார் ஒரு விடையத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். இது தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என்று. தமிழ் மக்கள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு முடிவை தேர்தலில் வெளிப்படுத்தி விட்டார்கள்.அந்த முடிவின் அடிப்படையில், பொது எதிரிக்கு எதிராக எப்படித் தேசமாகத் திரளலாம் என்றுதான் சிந்திக்கலாமே தவிர மீண்டும் கட்சிகளாகச் சுருங்கவோ சிதறவோ முடியாது.அதிலும் குறிப்பாக இறந்தவர்களை நினைவு கூரும் ஒரு மாதத்தில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணை அது.அதற்குத் தமிழ்க் கட்சிகள் கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால் மாகாண சபை தேர்தலின் போதும் மீண்டும் இது தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என்று கூற வேண்டியிருக்கும்.ஏனென்றால் என்பிபி தமிழர் தாயகத்தில் பெரும்பாலும் இரண்டாம் இடத்தில் நிற்கிறது.

https://www.nillanthan.com/7366/

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன்.

1 month 3 weeks ago

Local-Election-District.jpg?resize=750%2

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன்.

எதிர்பாக்கப்பட்டதைப் போலவே உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே இணங்கிச் செயற்படத் தயாராக இருந்தால் சபைகளை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும்.

எனவே தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் கட்சிகள் பின்வரும் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுவது போல, உள்ளூராட்சி சபைகள் உள்ளூர் நிலைமைகளுக்கானவை என்ற போதிலும் அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் வழியில் அடிப்படையானவை. கீழிருந்து மேல் நோக்கித்தான் தேசத்தைக் கட்டியெழுப்பலாம். அந்த அடிப்படையில் தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது உள்ளூராட்சி சபைகளில் இருந்து தொடங்குகின்றது. எனவே முதலாவதாக, தேசத்தைக் கட்டி எழுப்புவது என்ற அடிப்படையில் உள்ளூராட்சி சபைகளை எப்படிக் கட்டியெழுப்புவது என்று முடிவெடுக்க வேண்டும்.

இப்போதுள்ள நிலைமைகளின்படி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் பொதுவான ஐக்கியத்திற்கு உடன்படப் போவதில்லை. எனினும் குறைந்தபட்சம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு வெளியே உள்ளூர் அதிகாரம் செல்வதைத் தடுப்பது என்ற அடிப்படையிலாது அவர்கள் தந்திரோபாயமாக ஒன்றிணைலாம். அதேபோல தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கு நிலையிலிருந்துதான் உள்ளூர் அதிகாரத்தைக் கையாள வேண்டும் என்ற விடயத்திலும் ஒரு புரிந்துணர்வுக்கு வரலாம்.

அப்படி ஒரு புரிந்துணர்வு ஏற்படுமாக இருந்தால், உள்ளூராட்சி சபைகளை இரண்டு தளங்களில் கட்டி எழுப்ப வேண்டியிருக்கும். முதலாவதாக, உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவது.இரண்டாவதாக, உள்ளூர் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது.

உள்ளூர்த் தலைமைகளையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் அவற்றுக்கேயான தனித்துவங்களோடு கட்டி எழுப்பும் அதே சமயம் அவை தேசத்தைக் கட்டி எழுப்பும் பரந்தகன்ற நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாக அமைவதை உறுதிப்படுத்த வேண்டும்.

முதலாவதாக, உள்ளூர்த் தலைமைகளை எப்படிக் கட்டி எழுப்புவது? கிராமங்கள் தான் தேசத்தின் இதயம். அதேசமயம் கிராமங்களில்தான் அதிகம் முரண்பாடுகளும் அசமத்துவங்களும் அதிகம். தமிழ்க் கிராமங்களில் சாதி சமய பால் முரண்பாடுகளும் அசமத்துவங்களும் அதிகம். உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட பலரும் சாதி அடிப்படையில் அல்லது சமய அடிப்படையில் அல்லது உள்ளூர் செல்வாக்கின் அடிப்படையில்தான் தெரிவு செய்யப்பட்டு இருப்பார்கள். அவர்களில் பலர் சாதி உணர்வுகளுக்கும் சமய உணர்வுகளுக்கும் உட்பட்டவர்களாக இருப்பர். பால் சமத்துவம் தொடர்பில் விழிப்பில்லாதவர்களாக இருப்பர். எனவே தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து அவர்களை வார்த்தெடுக்க வேண்டும்.

சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. மதவெறியர் தேசிய வாதியாக இருக்க முடியாது.ஆண் மேலாதிக்கவாதி அல்லது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர், உள்ளூர்த் தலைவராக இருக்க முடியாது. தேசியவாதியாகவும் இருக்க முடியாது. எனவே உள்ளூர்த் தலைவர்களிடம் தேசியப் பண்புகளை எப்படி வளர்த்தெடுப்பது என்று சிந்திக்க வேண்டும். அங்கிருந்து தொடங்கினால்தான் மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் முடிவில் தாயக மட்டத்திலும் தேசியப் பண்புமிக்க தலைமைகளைக் கட்டி எழுப்பலாம். கீழிருந்து மேல் நோக்கி. இது முதலாவது.

இரண்டாவதாக, தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் பொருளாதாரத்தை எப்படிக் கட்டியெழுப்புவது?

ஒவ்வொரு உள்ளூராட்சி சபையும் அதன் எல்லைக்குட்பட்டு பொருத்தமான பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். அது தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் பிரிக்கப்படுவியலாத பகுதியாகவும் இருக்க வேண்டும். அதாவது தேசத்தைக் கட்டி எழுப்புவதன் ஒரு பகுதியாக கிராமங்களைக் கட்டி எழுப்புவது. மறுவளமாகச் சொன்னால், தேசத்தைக் கட்டி எழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தை கிராமங்களைக் கட்டி எழுப்புவதில் இருந்தே தொடங்க வேண்டும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையும் அதற்கேயான தனித்துவம் மிக்க பொருளாதாரத் தரிசனத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

உள்ளூர் அதிகார சபை என்று அது அழைக்கப்பட்டாலும் அதற்குள்ள அதிகாரங்கள் வரையறைக்குட்பட்டவை. தையிட்டி விகாரை ஆகப்பிந்திய உதாரணம். எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச அதிகாரங்களைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் இணைத்துக் கொண்டு எப்படிக் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைப் பிரதேசத்தின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது என்று திட்டமிட வேண்டும். பொதுவாகச் சொல்லுவார்கள், உள்ளூராட்சி சபைகள் பிரசவத்தில் இருந்து மரணம் வரையிலும் உள்ளூர் நிலைமைகளின் மீது தலையிடக்கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன என்று. நடைமுறையில் அந்த அதிகாரங்கள் போதாமல் இருக்கலாம். ஆனால் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப உள்ளூர்ப் பொருளாதாரத்தைத் தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகக் கட்டி எழுப்புவதற்கு வேண்டிய தீர்க்கதரிசனம் மிக்க திட்டமிடல்கள் வேண்டும்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசுத் தலைவர் அனுர கூறியதாகக் கூறப்படும் ஒரு விடயம் அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகியது. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் சபைகளுக்கு நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு நிதிகளை வழங்குவோம் என்ற பொருள்பட அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவித்தன. அரசு தரப்பு அதை மறுத்திருந்தது. ஆனால் அரசுத் தலைவர் பேசும் ஒரு கூட்டத்தில் அவருடைய பேச்சின் மொழிபெயர்ப்பை அப்படித்தான் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பிரதேச சபைகளுக்குத்தான் அவர்கள் நிதியைத் தடையின்றி வழங்குவார்கள் என்று பொருள் கொள்ளத்தக்க ஒரு பேச்சு.

எனவே அரசாங்கம் நிதியை வழங்குமோ இல்லையோ, புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளை உள்ளூர் கள நிலைமைகளுக்கு ஏற்ப எப்படிப் பெற்றுக் கொள்வது? உள்ளூரில் இருக்கக்கூடிய வளங்களை எப்படி உச்சமாகப் பயன்படுத்துவது?

புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை எப்படிப் பெற்றுக் கொள்வது என்ற விடயத்தில் புதிய தரிசனங்கள், புதிய திட்டமிடல்கள் வேண்டும். பெரும்பாலான தமிழ்க் கிராமங்களில் யாரோ ஒருவர் அல்லது பல புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வழிகளிலும் உதவிகளைச் செய்து வருகிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் இவ்வாறு உதவிகளைச் செய்து வருகின்றார்கள். இந்த உதவிகளை உள்ளூராட்சி சபைகள் பொருத்தமான விதங்களில் ஒருங்கிணைக்கலாம்.

அடுத்தது முக்கியமாக,எப்படிப்பட்ட திட்டங்களை வகுத்தாலும் அந்தத் திட்டங்கள் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் பசுமைத் திட்டங்கள் ஆக இருக்க வேண்டும். மிகக் குறிப்பாக சமூகப் பங்களிப்புடன் கூடிய பசுமைத் திட்டங்கள் ஆக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு கிராமத்தை ஒரு பசுமை பூங்காவாக மாற்றக்கூடிய பொருளாதாரத் தரிசனங்களைக் கொண்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தனித்துவமிக்க பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் மருத்துவ அதிகாரியாக இருந்தவர். அவர் ஓர் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் கூட. தன்னுடைய துறைக்கு வெளியே சென்று, ஆயிரக்கணக்கான மரங்களை நடுவித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக, காரைநகர்ப் பகுதியில் நாலுக்கும் மேற்பட்ட குளங்களை அவர் புணரமைத்தார். குளங்களை நோக்கிச் செல்லும் நீரோடும் வாய்க்கால்களைப் புனரமைத்தார். இரண்டு புதிய குளக்கட்டுகளையும் அவர் கட்டியிருக்கிறார். இத்தனைக்கும் அது அவருடைய மருத்துவ நிர்வாகச் செய்முறைக்கு அப்பாற்பட்ட விடயம். அவர் தன்னார்வமாக அந்தப் பசுமைத் திட்டங்களை முன்னெடுத்தார். அவர் ஒரு முன்னுதாரணம்.

இந்தியாவில் இதுபோன்று பல முன்னுதாரணம் மிக்க மனிதர்களைக் கிராமங்கள் தோறும் காண முடியும். தமது சொந்தச் செலவில் பாலத்தை கட்டியவர்கள், தமது சொந்த உழைப்பினால் சிறு காடுகளை உருவாக்கியவர்கள், தமது சொந்த உழைப்பினால் குளங்களைத் தூர் வாரியவர்கள், வாய்க்கால்களைப் புதுப்பித்தவர்கள்…. என்று பலரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் பார்க்கின்றோம். அவ்வாறான தன்னார்வமாக இயங்குகின்ற உன்னதமான சமூகத் தொண்டர்களை உள்ளூராட்சி சபைகள் ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பலத்தையும் போதிய வளங்களையும் கொடுத்து அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.அதாவது யார் முதலில் பசுமைக் கிராமங்களைக் கட்டியெழுப்பப் போகிறார்கள் என்ற போட்டிதான் இருக்க வேண்டும்.மாறாக எந்தக் கட்சியைக் கட்டியெழுப்புவது? எந்தத் தலைவருக்கு விசுவாசிகளை, வாலாட்டிகளைக் கட்டியெழுப்புவது? என்ற போட்டி இருக்கக்கூடாது.

https://athavannews.com/2025/1431563

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைவராக வருவாரா?

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 2

08 MAY, 2025 | 10:04 AM

image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

இலங்கை தமிழ் அரசியல்  களத்தில்  தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார் என்பது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கும்.

வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள் வெளிக்கிளம்பி ஆதிக்கம் செய்த தோற்றப்பாடு இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றின்  எடுத்துக்காட்டான ஒரு அம்சமாகும். பொன்னம்பலம் சகோதரர்கள் இராமநாதனும் அருணாச்சலமும், அருணாச்சலம் மகாதேவா , ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோர் வெவ்வேறு காலப்பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய ஜனநாயக தலைவர்களாக விளங்கினர். தமிழ் ஆயுதப் போராளிகளின் எழுச்சி மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவ தோற்றப்பாடு  இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நிகழ்வுப் போக்குகளாகும்.

மேற்குறிப்பிட்ட அளவுகோலின்படி உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் 2010 ஆம் ஆண்டு தொடக்கி 2024 ஆம் ஆண்டுவரை இராஜவரோதயம் சம்பந்தனின் தலைமைத்துவக் காலப்பகுதி என்று கருதப்படுகிறது.

இறுதி ஒரு சில வருடங்களில் அவரின் பிடி தளர்ந்துவிட்ட போதிலும், சம்பந்தன் உயர்த்தியிலும் அடையாள அடிப்படையிலும் கேள்விக்கு இடமின்றிய இலங்கை தமிழ் தலைவராக விளங்கினார். அவரது வாழ்வின் அந்திமக் காலத்தில் சம்பந்தன் " பெருந்தலைவர் " என்று அழைக்கப்பட்டார்.

கடந்த வருடம் சம்பந்தனின் மறைவுக்கு பிறகு தமிழ்த் தேசியவாத அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் மிகவும் முனைப்பாக தெரிந்தது.

மதுபான அனுமதிப் பத்திர சர்ச்சைக்கு பிறகு கடந்த வருடம் சி.வி. விக்னேஸ்வரனின் அரசியல் ஓய்வு மற்றும் இவ்வருட தொடக்கத்தில்  சோமசுந்தரம் மாவை சேனாதிராஜாவின் மறைவு ஆகிய காரணிகள் தலைமைத்துவ வெற்றிடம் மேலும் விரிவடைவதற்கு பங்களிப்புச் செய்தன.

இத்தகைய சூழ்நிலையில்,  தமிழ்த் தேசியவாத தலைமைத்துவ "சிம்மாசனத்துக்கு ஆர்வப்படும் ஒருவரை மேம்படுத்துவதற்கு  தன்னல அக்கறைச் சக்திகளும் கட்சிகளும் ஒன்றுபட்டுத் திட்டமிட்டு தீவிர முயற்சிகளை முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

அது வேறு எவருமல்ல, சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமேயாவார். கஜன் என்று பொதுவாக அறியப்படும் அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராகவும் இருக்கிறார்.

முதலில் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டுவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  2020 ஆம் ஆண்டில்  மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாக தற்போதும் தொடருகிறார்.

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கஜேந்திரகுமார் இலங்கை தமிழரசு கட்சியுடனும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் செயற்பாட்டு உறவுமுறை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சி எடுத்தார்.

தமிழரசு கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறீதரனுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தையும் அவர் சந்தித்தார். 

ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிதிரண்டு புதிய அரசியலமைப்பு யோசனைகளை முன்வைக்க வேண்டியது அவசியம் என்ற நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் எடுத்தார்.

அவரின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. வழமை போன்று அவர் அதற்கு தனது அரசியல் எதிரியான  தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ . சுமந்திரனையே குற்றம் சாட்டினார்.

ஐக்கியப்பட்டு செயற்படுவதை நோக்கிய ஒரு நகர்வாக தனது முயற்சிகளை கஜேந்திரகுமார் காண்பித்தார் என்ற போதிலும், அதற்குள் இருக்கக்கூடிய அந்தரங்க அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை கூர்மதியுடைய அரசியல் அவதானிகளினால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது.

தனது தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டணி ஒன்றை உருவாக்குவதன் மூலம் கஜேந்திரகுமார் நடைமுறையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தலைவர் என்ற அந்தஸ்தை அடைவதில் கண்வைத்தார்.  2004  ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக இரா. சம்பந்தன் அவர்களே இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படையான  முயற்சி

உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், அதியுயர் தமிழ் அரசியல் தலைவராக வருவதற்கான முயற்சி மிகவும் வெளிப்படையானதாக தெரிய வந்திருக்கிறது.

கஜேந்திரகுமாரை இலங்கை தமிழர்களின் எதிர்காலத் தலைவராக காட்சிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அப்பட்டமான முயற்சிகள் அரசியல் அவதானிகளை குழப்பத்துக்குள்ளாக்கியிருப்பது மாத்திரமல்ல, அவர்கள் அதை வேடிக்கையாகவும் நோக்குகிறார்கள்.

அரசியல் கூட்டங்களில் கஜேந்திரகுமாரின் புகழ்பாடப்படுகிறது. பல மூத்த தமிழ் அரசியல்வாதிகள் கஜேந்திரகுமாரின் அரசியல் உறுதிப்பாட்டுக்காக அவரை பாராட்டுவதுடன் அவரே அதியுயர் தமிழ்த் தலைவர் என்றும் அறிவிக்கிறார்கள்.

சுமார் அறுபது வருடங்களாக அரசியலில் இருந்து வரும் மூத்த சட்டத்தரணி ஒருவர் கஜேந்திரகுமாரின் தலைமையில் தமிழர்களின் எதிர்காலம் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அரசியலில் இருந்து மகிழ்ச்சியுடன் ஓய்வுபெறலாம் என்று அண்மையில் கூறியிருந்தார்.

அதனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு அதியுயர் தமிழ்த் தலைவராக கஜேந்திரகுமாரை முதன்மைப்படுத்தும் நோக்கில்  மிகவும் வலுவான முறையில் குரலெழுப்பப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.

கஜனின் விசுவாசிகளில் சிலர் அவரை விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிறகு " தமிழ்த் தேசியத் தலைவர் " என்று வர்ணிக்கத் தொடங்கினார்கள். கண்டனக் குரல்கள் கிளம்பியதன் விளைவாக அந்த முயற்சி பிசுபிசுத்துப் போனது.

ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு தமிழ்த் தேசியவாதத்தின் தலைவராக கஜேந்திரகுமாரை முதன்மைப்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது பெரிதும் சாத்தியம்.

அதனால், இத்தகைய பின்புலத்தில், இந்த  கட்டுரை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதும் தமிழ்த் தலைமைத்துவத்துக்கான அவரின் வாய்ப்புக்கள் மீதும் கவனம் செலுத்துகிறது. எனது முன்னைய எழுத்துக்கள் சிலவற்றின் உதவியுடன் கஜனின் அரசியல் பின்னணியை சுருக்கமாக விளக்க முனைகிறேன்.

தமிழ் அரசியல் வம்சம்

தமிழ் அரசியல் அரங்கில்  " வம்ச மரபுக்கு "  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரகாசமான ஒரு உதாரணமாகும். அவர் அரசியலில் பொன்னம்பலங்களின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்.( சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஆகியோருடன் இந்த பொன்னம்பலங்களை குழம்பிக்கொள்ளத் தேவையில்லை)

ஜீ.ஜீ  பொன்னம்பலம்

கஜேந்திரகுமாரின் தந்தைவழிப் பாட்டனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம் என்று அறியப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தாபக தலைவரான கணபதி காங்கேசர் பொன்னம்பலம் ஆவார்.

அவர் தனது காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய சில வழக்குகளில் தனித்துவமான திறமையுடன் ஆஜரான   சிறப்புவாய்ந்த ஒரு வழக்கறிஞராவார்.

ஜீ ஜீ. பொன்னம்பலம் பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும் சுதந்திரத்துக்கு பின்னருமாக சுமார் இரு தசாப்த காலமாக இலங்கைத் தமிழர்களின் முடிசூடா அரசியல் தலைவராக விளங்கியவர்.

1934 ஆம் ஆண்டு தொடக்கம் 1947 ஆம் ஆண்டு வரை அரசாங்க சபையில் (  State Council ) பருத்தித்துறை தொகுதியை பிரதிநிதித்துவம் செய்த பொன்னம்பலம் முதலில் 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1960 ஆம் ஆண்டு வரையும் பிறகு 1965 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரையும் யாழ்ப்பாணத் தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார்.

பிரதமர்கள் டி.எஸ். சேனநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களில் (1947 - 1953 ) பொன்னம்பலம் கைத்தொழில் , கைத்தொழில் ஆராய்ச்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

"ஐம்பதுக்கு ஐம்பது " என்று பிரபலமாகச் சொல்லப்படுகின்ற சமநிலையான பிரதிநிதித்துவ அரசியல் கோரிக்கையை முன்வைத்ததால் ஜீ.ஜீ. மிகவும் பிரபல்யமானார்.

சமநிலையான பாராளுமன்றத்தில் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருக்கு 50 சதவீத ஆசனங்களும் சகல சிறுபான்மைச் சமூகங்களுக்கும் 50 சதவீதமான ஆசனங்களும் இருக்க வேண்டும் என்று ஜீ.ஜீ. விரும்பினார்.

குமார் பொன்னம்பலம் 

ஜீ.ஜீ  பொன்னம்பலத்தின் மகன் காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம் அல்லது ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஜூனியர். ஆனால், அவர் குமார் பொன்னம்பலம் என்றே பிரபல்யமாக அழைக்கப்பட்டார்.

அவரே கஜேந்திரகுமாரின் தந்தையார்.  ஒரு முன்னணி சட்டத்தரணியான குமார் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட பல தமிழ் இளைஞர்களின் வழக்குகளில் அவர்களுக்காக இலவசமாக வாதாடினார். 

அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட குமார் தந்தையின் மறைவுக்கு பிறகு தமிழ் காங்கிரஸுக்கு தலைமை தாங்கினார். அரசியலில் பிரபலமானவராக இருந்தபோதிலும், குமார் தனது வாழ்நாளில் ஒருபோதுமே அரசியல் பதவி எதற்கும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. 

1977 ஜூலை பொததுத்தேர்தலில் ( பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையின் கீழ் ) யாழ்ப்பாணம் தொகுதியில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டு தோல்வி கண்டார். 1989 பெப்ரவரி பொதுத்தேர்தலில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் குமாரின் தலைமையில் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  மீண்டும் தோல்வியடைந்தனர். 

1994 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சகலரையும் தமிழராகக் கொண்ட சுயேச்சை வேட்பாளர்கள்  பட்டியலுக்கு குமார் தலைமை தாங்கினார். 

ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இலங்கையின் முதல் ஜனாதிபதி தேர்தல் 1982 அக்டோபரில் நடைபெற்றது. அதில் போட்டியிட்டதை அடுத்து குமார் தேசிய ரீதியில் பிரபல்யமானார்.  ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்த ஜனாதிபதி தேர்தலில் 173, 000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று குமார் நான்காவதாக வந்தார்.

பின்னர் குமார் பொன்னம்பலம் விடுதலை புலிகள் இயக்கத்தை வெளிப்படையாகப் புகழத் தொடங்கினார். கொழும்பில் வாழ்ந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆத்திரமூட்டக்கூடிய வகையில் விடுதலை புலிகளுக்கு ஆதரவான அறிக்கைகளை அவர் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

குமார் கொழும்பில் 2000 ஜனவரி 5 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். துப்பாக்கி ரவைகள் துளைத்த அவரின் உடல் வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் வாகனத்திற்குள் கிடக்கக்காணப்பட்டது.

அவரது கொலைக்கு ஒரு சில தினங்கள் முன்னதாக குமார் பொன்னம்பலம் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியிருந்தார்.

" ஒரு தமிழ் ஈழவன் என்ற முறையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். விடுதலை புலிகளின் அரசியல் கோட்பாட்டின் கலப்பற்ற, பச்சாதாபப்படாத ஒரு ஆதரவாளனாவும் அந்த நம்பிக்கையுடன் தென்னிலங்கையில் வாழ்கின்ற ஒருவனாகவும் இதை எழுதுகிறேன்.

இந்த நிலைப்பாட்டை இலங்கையில் மாத்திரமல்ல அதற்கு வெளியிலும் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்துகின்ற ஒருவனாக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்" என்றே அவர் கடிதத்தை தொடங்கினார். விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குமாரின் மறைவுக்கு பிறகு " மாமனிதர் " என்ற கௌரவத்தை வழங்கினார்.

ஜீ.ஜீ.யின் பேரன், குமாரின் மகன்

ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் பேரனும் குமார் பொன்னம்பலத்தின் மகனுமான கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம் 1974 ஜனவரி 16 ஆம் திகதி பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியையும் இரண்டாம்  நிலைக் கல்வியையும் கொழும்பு றோயல் கல்லூரியிலும்  கொழும்பு சர்வதேச பாடசாலையிலும் பெற்றுக்கொண்ட கஜேந்திரகுமார் மூன்றாம் நிலைக் கல்விக்காக லண்டன் சென்றார். 

லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய மற்றும் ஆபிரிக்க கற்கைகளுக்கான பாடசாலையில் சட்டத்தைப் படித்த அவர் சட்டமாணி (எல்.எல்.பி.) பெற்றார்.  பிறகு லிங்கன்ஸ் இன்னில் ஒரு பாரிஸ்டராக சேர்ந்து கொண்டார்.

கஜேந்திரகுமார் 1997 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.  அதற்கு பிறகு அவர்  இலங்கையில் ஒரு சட்டத்தரணியாக தகுதி பெறுவதற்காக கொழும்பில் சட்டக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டில் இலங்கையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார். 

தனது தந்தையாரின் மறைவுக்கு பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிர அரசியலில் பிரவேசித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி. ஆர்.எல்.எவ்.) ஆகிய நான்கு தமிழ்க் கட்சிகள் 2001 ஆம் ஆண்டில் தமிழ்  தேசிய கூட்டமைப்பாக ஒன்றிணைந்தன.

கஜேந்திரகுமார் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.2004 ஆம் ஆண்டில்  மீண்டும் அவர்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஒரு கட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் விருப்பத்துக்குரியவராக கருதப்பட்ட கஜேந்திரகுமாருக்கு கூட்டயைப்புக்குள் பிரகாசமான அரசியல் எதிர்காலம் ஒன்று இருக்கும் என்ற பலரும் எதிர்வு கூறினர்.  ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.

கஜேந்திரனும் பத்மினியும்

சுயாதீனமானதாக தோற்றம் பெற்றிருந்த போதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிறகு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 2004 பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பட்டியலை   பூர்த்தசெய்த விடுதலை புலிகள் தேர்தலில் முறைகேடுகளையும் செய்தனர்.

இரு தேசியப்பட்டியல் ஆசனங்கள் உட்பட கூட்டமைப்பு 24 ஆசனங்களை வென்றெடுத்தது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் விடுதலை புலிகளின் உயர் தலைமைத்துவத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தனர். கஜேந்திரனும் பத்மினி சிதம்பரநாதனுமே அவர்கள்.

அவர்கள் இருவருக்கும் மிகவும் நெருக்கமானவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்தார். 2004 பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பொறுத்தவரை, செல்வராஜா  கஜேந்திரன் முதலாவதாகவும் ( 112, 077 ) பத்மினி இரண்டாவதாகவும் ( 68,240) கஜேந்திரகுமார் மூன்றாவதாகவும் (60, 770) வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், 2009 மே மாதத்துக்கு பிறகு நிலைவரங்கள் மாறின. 2010 பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நிலைவரம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஏற்கெனவே விடுதலை புலிகளின் தலைமைத்துவத்துக்கு நெருக்கமானவர்களாக கஜேந்திரனும் பத்மினியும் இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை எதிர்த்து நிற்கவும் மலினப்படுத்தவும் அவர்களினால் " செல்வாக்கை" பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

பரமசிவன் கழுத்து நாகபாம்பு கருடனைப் பார்த்து நலமா என்று கேட்பதைப் போன்று அவர்கள் இருவரும் விடுதலை புலிகளிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை அவமதித்தனர்.யாழ்ப்பாணத்தில் பல கல்விமான்களையும் துறைசார் நிபுணர்களையும் கூட  அவர்கள் இருவரும் அலட்சியம் செய்தனர்.

கஜேந்திரனும் பத்மினியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியலிலும் ஈடுபட்டிருந்தனர். விடுதலை புலிகளுக்கு சார்பாக பட்டதாரி மாணவர்களை அரசியல்மயப்படுத்துவதிலும்  தொடர்ச்சியான " "பொங்குதமிழ்" நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதிலும் அவர்கள் முன்னணியில் செயற்பட்டனர்.

பாலஸ்தீனத்தின் " இன்ரிபாடா " போராட்டத்தின் வழியில் மாணவர்களை வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் மாணவர்களை தூண்டினர்.

ஆனால், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ப்துகாப்பு செயலாளராகவும் வந்த பிறகு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.

யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவான சக்திகளுக்கும் எதிராக வழமையான மார்க்கங்களிலும் வழமைக்கு மாறான வழிமுறைகளிலும் அரசாங்கம் பெருமளவில் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது.

விடுதலை புலிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளினால் பல்கலைக்கழக மாணவர்களில் சில பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால்,  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பக்கபலமாக செயற்பட கஜேந்திரனும் பத்மினியும் அங்கே நிற்கவில்லை. அவர்கள் இருவரும் முதலில் வன்னியிலும் பிறகு வெளிநாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். 

2010 தேர்தல் 

ஆனால், 2010 பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது கஜேந்திரனும் பத்மினியும் நாடு திரும்பி மீண்டும்  போட்டியிடுவதற்கு தயாராகினர்.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் இவர்களுக்கு இடம்கொடுக்க தயாராக இருக்கவில்லை. மேலும், யாழ்ப்பாண மாணவர்களில் கணிசமான பிரிவினர்  இவர்கள் இருவரையும் வேட்பாளர்களாக நியமனம் செய்வதை வரவேற்கப்போவதில்லை என்று கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அமைதியான முறையில் தெரியப்படுத்தினர். அதற்கு பிறகு நடந்தவற்றை எதிர்வரும் கட்டுரையில் பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/214154

Checked
Thu, 07/03/2025 - 12:01
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed