அரசியல் அலசல்

அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

1 month ago

அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும்

September 30, 2025

அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும்

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர்  தங்களுக்கு இனிமேலும் கூட அரசியலில் ‘மீட்சி’ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். 

தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை’ தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை  ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். 

அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் பிரமாண்டமான  அரசாங்க  மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தனக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ‘அரசியல் பயங்கரவாதத்தில்’ ஈடுபடுவதாகவும்  கூறி மக்கள் மத்தியில் மீண்டும்  தனக்கு ஆதரவைப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் (கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் )  வைக்கப்பட்டிருந்தபோது  அனேகமாக சகல  எதிர்க்கட்சிகளுமே அவருக்கு ஆதரவாக குரலெழுப்பின.   அவருடன் கடுமையான அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்  அரசியல்வாதிகளும் கூட அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.

அந்தவேளையில்  எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த உத்வேகத்தை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டலைச் செய்யலாம் என்று விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகளும் நம்பினார்கள்.  ஆனால், அந்த உத்வேகம் ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே  தணிந்துவிட்டது. அதற்கு பிறகு கடந்த வாரம் (செப்டெம்பர் 20)  நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79 வது வருடாந்த மகாநாட்டை எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதில் விக்கிரமசிங்க அக்கறை காட்டினார்.

ஆளும் தேசிய மக்கள் சக்தியை தவிர பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட சுமார் 40 கட்சிகள் மகாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தன. அழைக்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும்,  தங்களது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவருமான சஜித் பிரேமதாச மகாநாட்டுக்கு வரவில்லை. ஆனால்,  பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மூத்த அரசியல்வாதிகள் பலர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர். பிரேமதாசவின் செய்தியை மத்தும பண்டார மகாநாட்டில் வாசித்தார். 

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவோ அல்லது  தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவோ மகாநாட்டுக்கு வரவில்லை.  பொதுச் செயலாளர் சாகர காரியவாசம்  மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  ஐக்கிய மக்கள் சக்தியுடன் அணிசேர்ந்து நிற்கும்  சகல தமிழ், முஸ்லிம் கட்சிகளினதும் தலைவர்கள் மகாநாட்டில் கலந்துகொண்ட அதேவேளை, அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும்,  வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் எவரும் பங்கேற்கவில்லை. 

வழமையாக ஐக்கிய தேசிய கட்சியின் மகாநாடுகளில் அதன் முன்னாள் தலைவர்களுக்கே அஞ்சலி செலுத்தி கௌரவம் அளிக்கப்படும். ஆனால் இந்த தடவை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கு மேலதிகமாக,  முன்னாள் பிரதமர்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கும் முக்கியமான அரசியல் தலைவர்களாக விளங்கிய என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி சில்வா, பீற்றர் கெனமன், டி.ஏ. ராஜபக்ச, ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே.வி. செல்வநாயகம்,  சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆர். சம்பந்தன் ஆகியோருக்கும் நினைவஞ்சலி செய்யப்பட்டது.

மகாநாட்டில் விக்கிரமசிங்க நிகழ்த்திய உரை கடந்த மாதம் கைது செய்யப்பட்டதற்கு பிறகு பொதுவெளியில்  அவரின் முதன் முதலான உரையாக அமைந்தது. வழமைக்கு மாறாக வித்தியாசமான முறையில் தனது கட்சியின் வருடாந்த மகாநாடு இந்த தடவை நடத்தப்பட்டதற்கு பிரதான காரணம் தனது கைது என்பதை அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். 2023 செப்டெம்பரில் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் மேற்கொண்ட விஜயத்துக்கு பிறகு நாடு திரும்பும் வழியில்  ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றதும் கூட உத்தியோகபூர்வ விஜயமே என்று  தனதுரையில்  அவர் விளக்கினார்.

கட்சியைப் பற்றி பேசுவதை விடவும் நாட்டில் இன்று உருவாகி வருகின்ற அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பாடுபடவேண்டியதே அவசியமானது என்று விக்கிரமசிங்க வலியுறுத்தினார். மகாநாட்டில் பேசிய வேறு பல அரசியல்வாதிகளும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் கண்காணிப்பில் இன்று நாட்டில் அரசியலமைப்புச் சர்வாதிகாரம் ஒன்று உருவாகிவருவதாக குறிப்பிட்டனர்.

அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டல்களைச் செய்வதற்கு எதிரணி கட்சிகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால், விக்கிரமசிங்க அவரது கைதுக்கு பிறகு கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கக்கூடிய அளவுக்கு பலம் பொருந்திய ஒரு தலைவராக மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. 1975 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராவும்  நடத்தியதைப் போன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரம் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மாகாநாட்டில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அத்தகைய கூட்டங்களை முன்னின்று நடத்தக்கூடிய அளவுக்கு அவரது கட்சி பலம்பொருந்தியதாக இல்லை. தற்போதைய முக்கியமான எதிர்க்கட்சிகளில் எந்தவொன்றுமே பிரமாண்டமான கூட்டங்களை நடத்தக்கூடியதாக வலுவான கட்டமைப்புக்களை கொண்டவையாக இல்லை. அதன் வரலாற்றிலேயே மிகவும் மோசமான அளவுக்கு பலவீனப்பட்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அணிதிரளுவதற்கு மற்றைய கட்சிகள் முன்வரக்கூடிய சாத்தியம் இல்லை.

மகாநாட்டில் உரையாற்றிய மற்றைய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் இதை தெளிவாக உணர்த்துகின்றன.

ஐக்கிய தேசிய கட்சியுடன் தங்களுக்கு எந்தவிதமான இணக்கப்பாடும் கிடையாது என்றும் ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் மத்தும பண்டாரவும் பெ்துஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் காரியவாசமும் மகாநாட்டில் அறிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற பழைய முக்கியமான கட்சிகள் எல்லாமே பல குழுக்களாக பிளவடைந்திருக்கின்றன. அவை இன்றைய சூழ்நிலையில் அரசியலில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடிக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக என்று கூறப்படுகின்ற முயற்சிகளில் வலிந்து பங்கேற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. 

கடந்த மாதம் விக்கிரமசிங்கவின் கைதுக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அதன் ஆதரவை கட்டியெழுப்புவதற்கு இரு முனைகளில் முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஒருபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதியில் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதும்  மறுபுறத்தில், மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து  பரந்தளவிலான அரசாங்க எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைப்பதுமே அவர்களது நோக்கம். 

சஜித் பிரேமதாசவை பொறுத்தவரை, ஐக்கிய தேசிய கட்சியின் இந்த பொறியில் வீழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறார். விக்கிரமசிங்க தலைமைத்துவத்தில் இருந்து விலகும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தனக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்குமானால் பிரேமதாச இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கு இணங்கக்கூடும். ஆனால், முன்னாள் ஜனாதிபதி கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்தோ அல்லது அரசியலில் இருந்தோ விலகுவதற்கான அறிகுறி ஏதுவுமில்லை. அதனால் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியில் தனது தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதிலேயே அக்கறை காண்பிப்பார். அத்துடன் அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூட அண்மையில் அறிவித்தார்..

மற்றைய எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை, ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டினாலும் கூட தேர்தல் கூட்டு ஒன்றைச் செய்து கொள்வது சாத்தியமில்லை. பலம்பொருந்திய ஒரு கட்சியை மையமாக வைத்து கூட்டணியை அமைத்தால் மாத்திரமே தேர்தலில் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி அத்தகைய ஒரு நிலையில் தற்போது இல்லை என்பது மாத்திரமல்ல, அண்மைய எதிர்காலத்திலும் அதன் மக்கள் ஆதரவு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை.

கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டாமல் விக்கிரமசிங்கவின் கைது போன்ற விடயங்களை முன்னிறுத்தி ‘ அரசியலமைப்புச் சர்வாதிகாரத்துக்கு ‘ எதிராக அணிதிரளுமாறு விடுக்கப்படும் அழைப்பு மக்களின் கவனத்தை எந்தளவுக்கு ஈர்க்கும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.

இது இவ்வாறிருக்க,  முன்னாள் ஜனாதிபதிகள் இதுகாலவரை அனுபவித்துவந்த மட்டுமீறிய வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்காக பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தொடர்ந்து கொழும்பில் உள்ள அரச மாளிகையில் இருந்து வெளியேறி தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையின்  தங்காலைக்கு சென்றிருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அரசியல் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டுகிறார். 

தங்காலை வாசஸ்தலத் துக்கு தினமும் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் மாத்திரமல்ல, கொழும்பில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அவரை சந்தித்து வருகிறார்கள். கொழும்பு மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாமல் போனதால் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அரசாங்கம் அவருக்கு அநீதி இழைத்துவிட்டது என்றும் நாட்டு மக்கள் நினைக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி நம்புகிறார் போலும். போரை முடிவுக்கு கொண்டு வந்ததால் தனக்கும் குடும்பத்தவர்களுக்கும் சிங்கள மக்கள் என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச ‘ அறகலய ‘ அனுபவத்துக்கு பின்னரும் கூட விடுபடவில்லை. 

இன்றைய அரசியல் நிலைவரத்தில் உள்ள விசித்திரம் என்ன வென்றால் ரணில் விக்கிரமசிக்கவும் மகிந்த ராஜபக்சவும் தங்களுக்கு அரசியலில் ஒரு ‘ மீட்சி’ இருக்கிறது என்று நம்புவதுதான்!

https://arangamnews.com/?p=12346

நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்

1 month ago

நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்

Published On: 29 Sep 2025, 7:47 AM

| By Minnambalam Desk

Rajan.jpg

ராஜன் குறை 

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நெகிழவைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களின் உதவியுடன் கல்வியிலும், வாழ்விலும் ஏற்றம் பெற்றதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அது அமைந்தது அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்தது.

Rajan-6-1024x536.jpg

அந்த மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் வகையில் கரூரில் சனிக்கிழமையன்று பெருந்துயரம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக சனிக்கிழமை தோறும் செய்யும் பரப்புரைப் பயணத்தில் அன்றைக்கு நாமக்கல்லிற்கும், கரூரிற்கும் சென்றார். மாலை ஏழரை மணி அளவில் அவர் கரூரில் பேசும்போது கூட்ட த்தில் ஏற்பட்ட கட்டுங்கடங்காத நெரிசலில் சிக்கி 40 பேர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மரணமடைந்தனர். 

இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்டு அழுக்காறு கொள்ளும் கூட்டம் உடனே இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா, சினிமா மோகத்தில் சிக்கிச் சீரழியும் நாடு அது என்றெல்லாம் பேசத்துவங்கியது. இன்னொரு கூட்டம் வழக்கம் போல தி.மு.க-தான் சினிமாவையும், அரசியலையும் கலந்தது என்று பிலாக்கணம் வைக்கத் துவங்கியது. இதுதான் பெரியார் மண்ணா, நடிகனைக் காணப்போய் மடிந்துபோகிறார்கள் என்று பொங்குகிறார்கள். 

உலகின் எந்த பெரிய தீர்க்கதரிசியும், மகானும், சிந்தனையாளரும் தாங்கள் பிறந்த மண்ணை முற்றாக பொன்னுலகாக மாற்றியதில்லை. காந்தி பிறந்த, பெருமளவு வாழ்ந்த குஜராத் மண்ணில்தான், இந்தியாவில்தான் மதவாத வன்முறை பேயாட்டம் போட்டது. இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அதற்காக சமகால இந்தியாவை உருவாக்கியதில் காந்திக்கு பெரும்பங்கு இல்லையென்று சொல்ல முடியாது. பெரியாரே இந்தியாவிற்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டுமென்று கூறினார். 

முதலில் நாம் திராவிட இயக்கத்திற்கும், சினிமாவிற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் நாயக நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறுவது எப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பதில் உள்ள அரசியல் போதாமை என்ன, ஏன் இந்த உயிரிழப்பு கரூரில் நிகழ்ந்தது என்பதை பிரித்தறிந்து புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான தத்துவார்த்த மானுடவியல் புரிதல் உருவாக வேண்டும் என்றால் சற்றே பொறுமையாக வரலாற்றை அணுகவேண்டும். 

இருபதாம் நூற்றாண்டில் சினிமாவும், அரசியலும்

உலகின் பல நாடுகளிலும் சினிமா அதன் துவக்கம் முதலே அரசியல் பிரசாரத்திற்கு, அல்லது தேசிய கருத்தியலை உருவாக்க பயன்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இதாலி என பல நாடுகளைச் சொல்லலாம். இந்தியாவிலும் காலனீய எதிர்ப்பு தேசிய உணர்வு சினிமாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் சினிமாவிலும் கூட தேசிய விடுதலைக் கருத்தியல் பேசப்பட்டதை ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் தன்னுடைய Message Bearers நூலில் தொகுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் தேசிய விடுதலை தவிர சமூக நீதிக் கருத்துக்களும் சினிமாவில் புகுந்தன. இதற்கு பல காரணங்கள் இருந்தன. நாடகம், சினிமா இரண்டிலுமே புராணக் கதைகளே ஆக்கிரமித்திருந்த நிலையில் சமகால சமூகக் கதைகளை நாடகமாக்க வேண்டும், சினிமா ஆக்கவேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருந்தது. ஆனால் தமிழ் உரைநடை என்பது ஒருபுறம் எழுத்தில் பண்டிதத்தனமாகவும், மற்றொருபுறம் வடமொழி கலந்ததாகவும், பேச்சு வழக்கில் ஜாதீய கொச்சைகள் நிறைந்ததாகவும் இருந்தது. 

இந்த நிலையில்தான் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பலர் மக்களூக்கு அணுக்கமான ஒரு புதிய உரைநடையை பேச்சிலும், எழுத்திலும் உருவாக்கினர். அதையே நாடகங்களிலும், பின்னர் சினிமாவிலும் வசனமாக பயன்படுத்தினர். அந்த மொழி நடை அடுக்குமொழியாகவும், ஓசை நயமிக்க சொல்லணியாகவும் அமைந்த தால் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றது. அந்த மொழிநடையுடன் சமூக நீதிக் கருத்துக்களையும் இணைத்ததால் நாடகங்களும், சினிமாவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 

அந்த திராவிட தமிழ் அலையில் உருவான நட்சத்திரங்கள்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். அதில் சிவாஜி குணசித்திர நடிகராகவும், எம்.ஜி.ஆர் தார்மீக சாகச கதாநாயகனாகவும் இணைந்து தமிழ் நவீன தன்னிலையின் இருபகுதிகளாக மாறியதில் பெரும் சமூக முக்கியத்துவம் பெற்றனர். சிவாஜி தி.மு.க-வில் ஒரு பகுதியினரின் எதிர்ப்பால் விலகிச் சென்று காமராஜருக்கும், காங்கிரசிற்கும் நெருக்கமானார். எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணித்தார். கட்சியுடன் சேர்ந்து வளர்ந்தார். கட்சியின் கருத்தியலை திரைக் கதையாடல்களாக மாற்றினார். இருபதாண்டு காலம் கட்சியுடன் பிணைந்த நாயக நடிகராக கட்சியின் கருத்துக்களை வசன ங்களிலும், பாடல்களிலும் வெளிப்படுத்தி அத்துடன் முழுவதுமாக அடையாளப் படுத்திக்கொண்டார். எழுத்தறிவு பரவாத சமூகத்தில் திரைப்படங்களே வெகுஜனக் கல்வி வடிவமாக விளங்கியது எனலாம். அது தமிழ் சமூகத்தின் தன்னுணர்வை செழுமைப்படுத்தியது என்பதே உண்மை.

எம்.ஜி.ஆர் ஏழ்மையில் வளர்ந்தவர் என்பதால் அடித்தட்டு சமூகத்தை அறிந்தவர். அண்ணா மறைவிற்குப் பின் அவர் கலைஞருடன் முரண்பட்டு கட்சியைப் பிளந்து புதிய கட்சியை உருவாக்கியபோது அவருக்கு மாநிலம் முழுவதும் கட்சிக் கட்டமைப்பும். தொண்டர் பலமும் உடனே கிடைத்தது. நாவலர் உட்பட பல இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருடன் இணைந்தனர். 

Rajan-4-1-1024x669.jpg

நாயக நடிகர்கள் நேரடியாக அரசியல் தலைவராக முடியுமா? 

திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையாகச் செல்வாக்கு பெற்றிருந்த சிவாஜி கணேசனால் அரசியல் தலைவராக முடியவில்லை. ஏனெனில் அவரது கதாநாயக பிம்பம் குணசித்திர வார்ப்பாக இருந்தது. அவரும் சாகசப் படங்களில் நடித்தாலும் அவரது சிறப்பம்சம் அவர் ஏற்கும்  கதாபாத்திரமாகவே மாறுவதாக இருந்தது. எம்.ஜி.ஆர் தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டதைப் போல, சிவாஜியால் செய்ய முடியவில்லை. இந்த உண்மை எம்.ஜி.ஆர் என்ற நாயக நடிகர் கட்சித் தலைவராக, முதல்வராக மாறியது பிறரால் பின்பற்ற இயலாதது என்பதை உடனடியாகத் தெளிவாக்கியது. 

எம்.ஜி.ஆர் போல வெற்றிகரமாக கட்சித் தலைவராக, முதல்வராக மாறிய மற்றொருவர் என்.டி.ஆர் எனப்பட்ட என்.டி.ராமராவ். இவர் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லாத நிலையில் அதில் கடும் கோஷ்டிப் பூசல் நிலவியதால் அந்த கட்சியின் தலைவர்கள் பலரை ஈர்த்துதான் தன் கட்சியைக் கட்டிக் கொண்டார். அவர் மருமகன் சந்திரபாபு நாயுடுவே காங்கிரஸ் அமைச்சராக இருந்தவர்தான்; சஞ்சய் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். 

என்.டி.ஆர் புராணப் படங்களில் கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வ வேடங்களைத் தாங்கியவர் என்பதுடன், பல படங்களில் எம்.ஜி.ஆர் போல தார்மீக சாகச நாயகனாகவும் நடித்தவர். இளமைக்கால வாழ்வில் சமூக அமைப்பை நன்கு பழகி அறிந்தவர். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்று இல்லாத சூழ்நிலையில் அந்த கட்சியின் ஒரு பகுதியினரைக் கொண்டுதான் அவர் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் தெலுங்கு சினிமாவில் பெரும் சாகச நாயகனாக புகழ்பெற்ற சிரஞ்சீவியால் கட்சியைத் துவங்கி வெற்றி பெற முடியவில்லை.  

இந்த உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது ஒரு நாயக நடிகரின் பிம்பம் எப்படிப் பட்டது, அவர் தலைமை ஏற்க ஏற்கனவே உருவான ஒரு  கட்சியின் கட்டுமானம் கிடைக்குமா, அவர் தலைவராகும் சூழ்நிலை நிலவுமா என பல்வேறு காரணிகளை வைத்துதான் ஒரு நாயக நடிகர் வெற்றிகரமான கட்சித் தலைவராக, முதல்வராக மாற முடியும் என்பது தெளிவாகிறது. ஓரளவு சிறிய கட்சிகளை உருவாக்கி, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சில தொகுதிகளில் வெல்லலாமே தவிர எம்.ஜி.ஆர் போலவோ, என்.டி.ஆர் போலவோ முதல்வராக வெல்வது சாத்தியமில்லை எனலாம். ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்து, அவரால் கட்சியில் இணைக்கப் பட்ட தால் தன்னை அவருடைய வாரிசாக நிறுவிக்கொண்டு அவர் கட்சிக் கட்டுமானத்தை கைப்பற்ற முடிந்தது.

எம்.ஜி.ஆர் போல ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி புதிதாக கட்சி தொடங்கிய பிரபல கதாநாயகர்கள் யாருக்கும் சாத்தியமாகவில்லை என்பதே உண்மை. பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், கமல்ஹாசன் என பலர் முயற்சித்துள்ளனர். யாருமே ஒரு கட்சிக் கட்டுமானத்தை உருவாக்கி அரசியலில் ஒரு முக்கியத் தலைவராக, முதல்வர் வேட்பாளராக பரிணமிக்க முடியவில்லை. விஜய்காந்த் பத்து சதவீத வாக்கு வரை பெற்றாலும் அவரால் தொடர்ந்து கட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பத்தே ஆண்டுகளில் முதல்வர் வேட்பாளராக அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். 

Vijays lust for power and the lives lost in Karur

விஜயின் பதவி மோக அரசியல் 

மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கி, ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது உண்மைதான். நாயக நடிகர்கள் தலைவராகலாம் என்பதும் உண்மைதான். ஆனால் எத்தகைய களப்பணி செய்து அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. களத்திற்கு செல்லாமல், மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கட்சிக் கட்டமைப்பை வேர் மட்ட த்திலிருந்து உருவாக்காமல், தன் நாயக பிம்ப வெளிச்சத்தை வைத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பதைத்தான் பதவி மோக அரசியல் என்று கூற வேண்டியுள்ளது. அதாவது அரசியல் என்பதே நேரடியாக முதல்வராக பதிவியேற்பதுதான் என்று எண்ணுவது அப்பட்டமான பதவி மோகமே தவிர அரசியல் ஈடுபாடு அல்ல. அரசியல் ஈடுபாடு என்பது மக்கள் பணிதானே தவிர ஆட்சி ஆதிகாரமல்ல. 

உண்மையில் மக்கள் பணி செய்ய விருப்பமிருந்தால் ஒரு நாயக நடிகர் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடையே பழக வேண்டும். அவர்கள் தேவைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். தன்னை பின்பற்றுவர்களைக் கொண்டு கட்சிக் கிளைகளை உருவாக்க வேண்டும். அந்த வேர்மட்ட செயல்பாட்டாளர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களிலிருந்து தங்கள் செயல்பாடுகள் மூலம் தலைமைப் பண்புடன் வெளிப்படுபவர்களைக் கொண்டு கட்சியின் இரண்டாம் கட்ட தலைமையை உருவாக்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் கட்சிக்குள் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், சமூக முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து, தன் தலைமைப் பண்பை நிறுவ வேண்டும். பின்னர்தான் தேர்தல், ஆட்சி எல்லாம் சாத்தியப்படும். 

இவ்வாறு தானே கட்சியை வேர்மட்ட த்தில் கட்ட முடியாது என்றால், வேறொரு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தன்னை தலைமைப் பொறுப்பிற்கு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதிலும் பத்திருபது ஆண்டுகள் பயணமே ஒருவரை பக்குவப்படுத்தும். ஆனால் அப்படி யாருடைய தலைமையையும் ஏற்று பணியாற்ற முடியாது, நான் பிரபல கதாநாயகன் என்பதால் நேரடியாக முதல்வராகத்தான் பதவி ஏற்பேன் என்பது சாத்தியமற்ற ஒரு வேட்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

வாரிசு அரசியல் தலைமை என்பதும் சுலபமானதல்ல. கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். கட்சி கட்டமைப்பின் வேர் மட்டம் வரை சென்று பரிச்சயம் கொள்ள வேண்டும். பல்வேறு முரண்பாடுகளை, சிக்கல்களை தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கெட்ட பெயர் ஏற்பட்டு நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். எல்லா வாரிசு தலைவர்களும் கட்சியினர் ஆதரவையும், அவர்கள் மூலம் மக்கள் ஆதரவையும் பெற்றுவிடுவதில்லை என்பதால் வாரிசு தலைமை என்பதும் ரோஜாப் பூக்களாலான பாதையல்ல. முழுப் பொறுப்பையும் தன் தோளில் ஏற்கும் முன் நிறைய பக்குவப்பட வேண்டும்.  

Rajan-2-7.jpg

கூட்டக் காட்சி அரசியல் 

விஜய்க்கு ஆட்சி செய்ய ஆசை இருக்குமளவு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஏனெனில் அப்படி இருந்தால் அரசியல் குறித்து நிறைய பேசுவார். செய்தியாளர்களை சந்திப்பார். பிற அரசியல் தலைவர்களைச் சந்திப்பார். கட்சிக்காரர்களுடன், பல்வேறு மக்கள் பிரிவினருடன் தொடர்ந்து விவாதிப்பார். ராகுல் காந்தி பதினைந்து ஆண்டுகளாகத் தீவிரமாக இவ்விதம் இயங்கி வருகிறார். அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே அவர் ஆழ்ந்த கவனத்துடன் உரையாடுவதாக, பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக வியப்புடன் கூறுவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி தன்னை ஒரு தேசியத் தலைவராக செதுக்கிக் கொண்டு வருகிறார்.  

விஜய் அப்படி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. அவருடன் ஆலோசனையில் பங்கேற்றதாக எந்த சமூக சிந்தனையாளரும் கூறுவதில்லை. மாறாக ஒரு சில தொழில்முறை அரசியல் ஆலோசகர்கள் தயாரிக்கும் நிகழ்வுகளில் அவர்கள் கூறியபடி செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. உதாரணமாக அவர் நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு சென்றபோது தரையில் அமரும்படியும், அனிதாவின் சகோதரர் தோளில் கை போடும்படியும் சொல்லி அனுப்பியதாக மணிகண்டன் வீராசாமி என்பவர் கூறுகிறார். 

கட்சி அமைப்பை உருவாக்குவதையே விஜய் அவுட்சோர்ஸிங் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என சிலரிடம் அவர் அந்த பொறுப்புகளைக் கொடுத்து விட்டார். அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்கிறார். மக்கள் திரளைக் கூட்டி கூட்டக்காட்சி (crowd optics) ஏற்பாடு செய்துவிட்டால் மக்களெல்லாம் தான் சொல்பவர்களுக்கு எல்லா தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறார். அப்படி கூட்டக் காட்சி நடக்கும்போது ஏதோ பேச வேண்டுமே என்று தயாரிக்கப்பட்ட உரைகளை தப்பும் தவறுமாக வாசிக்கிறார். அந்த உரைகளில் இடம்பெறும் தகவல் பிழைகளை யார் சுட்டிக் காட்டினாலும் அவர் கவலைப் படுவதில்லை. 

ரசிகர்கள், பாமர மக்கள் மனோநிலை

இத்தகைய உள்ளீடற்ற பதவி மோக அரசியலில் விஜய் ரசிகர்கள் சிக்கி சீரழிவதுதான் வேதனை. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் புதிய வரலாறு படைப்பதாக நம்புகிறார்கள். கல்லூரி ஸ்டிரைக்கில் பங்கெடுத்த அனுபவம் உள்ளவர்களுக்கு அந்த மனநிலை புரியும். என்னுடைய கல்லூரி நாட்களில் ஒருமுறை ஸ்டிரைக் செய்த போது என் சக மாணவன் ஒருவன் பிரின்ஸிபல் அறைக்குத் தீவைக்கலாமா என்று கேட்டான். விடுதியில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றுதான் ஸ்டிரைக். ஆனால் அதை ஏதோ யுகப்புரட்சி போல நினைக்கும் விடலைப் பருவம். 

பாமர மனிதர்கள் எல்லா காலங்களிலும் தங்கள் குறைகள் தீர்க்கப் படவில்லை என்ற ஏக்கத்துடன்தான் இருப்பார்கள். அடித்தட்டு மக்களுக்கு நிறைய குறைகள் இருக்கும். அதனால் யாரேனும் ஒரு மீட்பர் உருவாகி பொன்னுலகை படைப்பார்கள் என்ற ஏக்கம் அல்லது கனவு இருக்கும். எவ்வளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகத்திலும் ஒரு சாராருக்கு இதுபோல யுகப்புரட்சி கனவுகள் இருக்கும். அது மதவாத வடிவமெடுக்கலாம்; புரட்சிகர வடிவமெடுக்கலாம். அல்லது ஏதோவொரு தற்செயலான கவர்ச்சிகர பிம்பத்திற்கு பின்னால் செல்லலாம்.  

Vijays lust for power and the lives lost in Karur

உலகிலேயே நவீன மக்களாட்சி சமூகங்களில் மூத்த சமூகம் அமெரிக்காதான். அங்கே மக்களாட்சிக் குடியரசு உருவாகி இருநூற்றைம்பது ஆண்டுகள் ஆகப் போகிறது. அந்த சமூகத்தில் டொனால்ட் டிரம்ப் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் வியாபாரி, வெகுஜன ஆதரவுடன் அதிபராகி உலகையே கிலியில் ஆழ்த்தி வருவதைப் பார்க்கிறோம். அவருக்கு மன நிலை சரியாக உள்ளதா என்பதைக் குறித்தே பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். 

இத்தாலியை எடுத்துக்கொண்டால் குடியரசுத் தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்த நாடு அது. ரோமப் பேரரசின் காலத்திலும் சரி, பதினைந்தாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்திலும் சரி, இத்தாலி பல அரசியல் தத்துவங்களின் பரிசோதனைக் களமாக இருந்தது. அத்தகைய நாட்டில் பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, 1936-2023) என்ற எதேச்சதிகாரி வெகுஜன ஆதரவுடன் கோலோச்சியதையும் பார்த்தோம். எனவே தமிழ்நாட்டில் விஜய் போன்ற நடிகர் பின்னால் முதிரா இளைஞர்கள் சிலரும், எளிய மக்கள் சிலரும் திரள்வது அதிசயமல்ல. 

நம்முடைய அரசியல் முதிர்ச்சி அவரை விமர்சன ரீதியாக எதிர்கொள்வதன் மூலம், கண்டிப்பதன் மூலம் இத்தகைய துர்ச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்காக நாம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள திராவிட தமிழர் என்ற முற்போக்கு அரசியல் சமூகத்தை குறைகூறத் தேவையில்லை. எந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தாலும் திராவிட அரசியலைக் குறைகூறும் பார்ப்பனீய சமூக நினைவிலி மனதை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்.    

கட்டுரையாளர் குறிப்பு:  

Vijays lust for power and the lives lost in Karur - Article in Tamil By Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

https://minnambalam.com/vijays-lust-for-power-and-the-lives-lost-in-karur/


விஜய்;கமல்;போராளிகள்;தேர்தல்? - நிலாந்தன்

1 month ago

விஜய்;கமல்;போராளிகள்;தேர்தல்? - நிலாந்தன்

27int-india-stampede-superJumbo-1024x683

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் கட்சி தொடர்பாக அண்மையில் நடிகர் கமலஹாசன் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தார். கூட்டத்துக்கு வருபவர்கள் எல்லாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற பொருள்பட அக்கருத்து அமைந்திருந்தது. அது விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும் பொருந்தும் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார். சமூகத்தில் வெவ்வேறு துறைகளின்மூலம் தாங்கள் பெற்ற பிரபல்யத்தை,செல்வாக்கை தேர்தலில் முதலீடு செய்வது என்பது தேர்தல்மைய அரசியலில் ஒரு பிரதான போக்கு. ஆனால் அதற்காக ரசிகர்கள் எல்லாருமே வாக்களிப்பார்கள் என்று இல்லை. மாணவர்கள் எல்லாருமே ஆசிரியருக்கு வாக்கு போடுவார்கள் என்று இல்லை.  சமூகத்துக்காக தியாகம் செய்தவர்கள் எல்லாரும் தேர்தலில் வெல்வார்கள் என்று இல்லை.

உதாரணமாக, தமிழ்த் தேசிய அரசியலில் ஆசிரியர்கள்  வரதராஜன்,ஐங்கரநேசன், அருந்தவபாலன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக வரதராஜன் தேர்தல் கேட்ட பொழுது மற்றொரு ஆசிரியர் என்னிடம் சொன்னார் “அவருடைய மாணவர்கள் வாக்களித்தாலே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்து விடுவார். ஆனால் மாணவர்களாக இருப்பது வேறு வாக்காளர்களாக இருப்பது வேறு. எல்லா மாணவர்களும் ஆசிரியருக்கு வாக்களிப்பார்கள் என்று இல்லை” என்று.

அப்படித்தான் இந்தியாவில் மணிப்பூரில் இரோம் ஷர்மிலா என்ற பெண் செயற்பாட்டாளர் அங்கு அமுலில் இருந்த சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 15 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மணிப்பூரின் “இரும்புப் பெண்மணி” என்று அழைப்பார்கள். பின்னர் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு 2017ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எந்த மக்களுக்காக அவர் 15 ஆண்டுகள் உண்ணாமல் போராடினாரோ,அதே மக்கள் அவரைக் குரூரமாக நிராகரித்தார்கள். அவருக்கு 100 வாக்குகள்கூட கிடைக்கவில்லை. கட்டுப்பணமும் இல்லை.

தமிழ் தேசியப் பரப்பில்,ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் பின்னர் தேர்தல் கேட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருகிறார்கள். எனினும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நீண்ட காலம் ஈடுபட்ட அமைப்பாகிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே கடந்த 16 ஆண்டுகளிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகளை பெற்றதில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்றபின் கட்சிகளைத் தொடங்கியவர்களும் வெற்றி பெறவில்ல்லை. ஏனைய கட்சிகளில் இணைந்து போட்டியிட்டவர்களுக்கும் வெற்றிபெறவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு பெண், போரில் காலை இழந்தவர்,வன்னியில் போட்டியிட்டார். அவரை வெற்றிபெற வைப்பதற்காக அவருடைய நண்பர்கள் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குப் போய் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அவருக்கு கிடைத்தது இரண்டு ஆயிரத்த்துச்  சொச்சம் வாக்குகள்தான்.

தமிழ்த் தேசியப் பரப்பில் ஏனைய கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எல்லாப்  போராட்டங்களிலும் பொன் மாஸ்டர் காணப்படுவார். அவர் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர். அவர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் கேட்டிருக்கிறார். ஆனால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக வரத் தேவையான வாக்குகளைக் கூட மக்கள் அவருக்குக் கொடுக்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தன்னை கொள்கையில் விட்டுக் கொடுப்பற்ற ஒரு கட்சியாகக் கூறிக் கொள்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியத்தை விட்டுக்கொடுப்பின்றி பின்பற்றும் ஒரு கட்சியாகவும் அது தன்னைக் காட்டிக் கொள்கிறது. அப்படியென்றால் ஒவ்வொரு மாவீரர் நாளின் போதும் துயிலுமில்லங்களில் சிந்தப்படும் கண்ணீர் யாவும் அந்தக் கட்சிக்குத்தானே வாக்குகளாகத் திரள வேண்டும்? ஏன் அப்படி நடக்கவில்லை?

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களால் ஏன் தேர்தல்களில் பெரு வெற்றி பெற முடியவில்லை? அவர்களுக்கு தேர்தல் மொழியில் பேசத் தெரியவில்லையா? அல்லது அவர்களைச் சமூகம்  போர்க்களத்துக்கு மட்டும் உரியவர்களாகப் பார்க்கின்றதா? தேர்தல் களத்துக்கு உரியவர்கள் அல்ல என்று கருதுகின்றதா?

இதே  கேள்விகளைச் சிங்கள வாக்காளர்களை நோக்கியும் கேட்கலாம். ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் அடித்தளமாக இருந்தவர்கள் என்று கருதப்படுகின்ற அமைப்புக்களில் ஒரு பகுதி ஒன்றாகத் திரண்டு குடைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டன. ஆனால் அவர்களுக்கு அற்பசொற்ப வாக்குகள்தான் கிடைத்தன. நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 11 ஆயிரம் வாக்குகள் ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட 30,000 வாக்குகள். அதேசமயம் போராட்டங்களின் விளைவுகளை தேர்தல் மொழியில் கவர்ச்சியாக மொழிபெயர்த்த ஜேவிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மையப் பெற்று இப்பொழுது நாட்டை ஆட்சி செய்கின்றது.

அப்படியென்றால் சிங்கள மக்கள் தங்களுக்காக வீதியில் இறங்கிப் போராடியவர்களை அல்லது அந்தப் போராட்டங்களைப் பின்னிருந்து ஊக்குவித்தவர்களை ஏன் தோற்கடித்தார்கள் ?

போராளிகள் வேறு அரசியல்வாதிகள் வேறு என்று மக்கள் கருதுகின்றார்களா? போராளிகள் அரசியல்வாதிகளாக மாறுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லையா ? அல்லது போராளிகளுக்கு தங்கள் போராட்டத்தை தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியவில்லையா? அல்லது உண்மையான அர்ப்பணிப்புக்கும் நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் தியாகத்துக்கும் தேர்தல் அகராதியில் இடமில்லையா ?

ஆனால் ஜேவிபியும் முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் குரூரமாக நசுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் அவர்கள் தேர்தல் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்து விட்டதனால்தான் இம்முறை ஆளுங்கட்சியாக வர முடிந்திருக்கின்றது. ஜேவிபி தன்னை எம்பிபியாக உருமாற்றிக் கொண்டது. அதன் விளைவாகத்தான் இப்பொழுது நாட்டை ஆள்கின்றது.

ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தியாகங்கள்,இரோம் சர்மிளா போன்றவர்களின் தியாகம் என்பவற்றோடு நடிகர் விஜயின் செல்வாக்கை ஒப்பிட முடியாது. ஆனால் இங்கு இந்த கட்டுரையின் குவிமையம் என்னவென்றால் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்கான தகமைகள் எவை எவை என்ற கேள்விதான். மிக உயர்வான தகமைகள் என்று கருதப்படும் தியாகம், அர்ப்பணிப்பு,நேர்மை போன்றவற்றைத் தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியாத போராளிகள் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறார்கள். அரசியலில் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் தொடர்ந்து பின் தள்ளப்படுவார்கள். மாறாக அரசியலை ஒரு  பிழைப்பாக முன்னெடுப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

தமிழகத்தில் நல்லகண்ணு என்று ஒர் இடதுசாரி இருக்கிறார். நேர்மையானவர், கண்ணியமானவர், ஒரு சன்னியாசியைப் போன்றவர், அர்ப்பணிப்பு மிக்கவர். ஆனால் அவர் தேர்தலில் வென்றதில்லை. இது தேர்தல் ஜனநாயகத்தில் உள்ள அடிப்படைப் பலவீனம்.

nallakannnu-2.jpg

வாக்காளர்களின் நாடித்துடிப்பை  நன்கு அறிந்தவர்கள்,தேர்தல் அரசியலின் கள்ளத்தனங்களை விளங்கிக் கொண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இங்கு வெற்றியைத் தீர்மானிப்பது வாக்காளர்களின் அறியாமையா? அல்லது அறிவா? அல்லது விழிப்பற்ற பொதுப் புத்தியா ?அல்லது குறிப்பிட்ட வேட்பாளரின் அதிர்ஷ்டமா? ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய,அரசியல் செயற்பாட்டாளராகிய எம்மா கோல்ட்மன் கூறுவதுபோல, “”வாக்களிப்பு எதையாவது மாற்றுமாக இருந்தால்,அவர்கள் தேர்தலைச் சட்டவிரோதமாக்கி விடுவார்கள்” என்பதுதான் சரியா ?

https://www.nillanthan.com/7802/

இது போர்க்களமல்ல; அரசியற் களமே! — கருணாகரன் —

1 month ago

இது போர்க்களமல்ல; அரசியற் களமே!

September 29, 2025

இது போர்க்களமல்ல; அரசியற் களமே!

— கருணாகரன் —

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாணசபைகளுக்கு மேலான (13+) அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் இதுவரையிலும் வலியுறுத்திக் கொண்டிருந்தன தமிழ்த்தேசியக் கட்சிகள். இதற்காக இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் கோரிக் கொண்டிருந்தன. இந்தக் கோரிக்கையோடு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரலாயத்துக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்துக்கும் பல தடவை சென்று முறையிட்டும் பேசியும் வந்திருக்கிறார்கள். 23.09.2025 அன்று கூட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் இதற்காக இந்தியத் தூதரைச் சந்தித்திருக்கின்றனர்.

ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தமிழ்க் கட்சிகள் அதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்காமல், வழமையைப்போல “தனித்தவில்” வாசிக்கின்றன. இது ஏன்? குறைந்த பட்சம் தமிழ்பேசும் கட்சிகளாகக் கூட ஒருங்கிணைந்த கூட்டுக் கோரிக்கையாக இதனை மாற்ற முடியாமல் இருப்பது ஏன்? 

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தென்னிலங்கைக் கட்சிகள் எல்லாம் இலங்கை அரசை (NPP அரசாங்கத்தை) மட்டும் கேட்கவில்லை. இந்திய அரசையும் கேட்டுள்ளன. இதற்கான சந்திப்பு ஒன்றுகூட கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சந்தியின் எம்பிக்களுக்கும் இந்தியத்தூதுவருக்குமிடையில் நடந்துள்ளது. அப்பொழுது எல்லாக் கட்சிகளும் கூடி ஒன்றாக வாருங்கள். அப்போதுதான் இந்தக் கோரிக்கைக்கு வலுக் கூடும் என்று சொல்லியிருக்கிறார் இந்தியத் தூதர். 

இவ்வளவு காலமும் மாகாணசபைகளுக்கான அதிகாரத்தைப் பகிர்வதில் பின்னடித்த கட்சிகள் (சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன உள்ளிட்டவை) எல்லாம் மாகாணசபைகளைப் பற்றியே பேசுகின்ற – பேச வேண்டிய ஒரு காலம் வந்துள்ளது.  அப்படியான ஒரு அரசியல் நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது. 

இதற்குக் காரணம், ஜனாதிபதி, பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றம் போன்ற அதிகார மையங்களை NPP கையகப்படுத்தி வைத்திருக்கிறது. ஏனைய கட்சிகள் வரலாற்றில் முதற்தடவையாக அதிகாரமற்ற தரப்புகளாக மாறியுள்ளன. இதனால்  மாகாணசபைகளிலாவது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக அதற்கான தேர்தலைக் கோருகின்றன. தேர்தலை  நடத்தினால் எப்படியாவது மாகாணசபைகளைக் கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையோடிருக்கின்றன. 

அப்படித் தேர்தலை நடத்தி மாகாணசபைகளைக் கைப்பற்றினால், பிறகு இந்தக் கட்சிகளால் அடுத்த கட்டப்போராட்டம் மாகாணசபைகளுக்கான அதிகாரத்துக்காக  நடத்தப்படும். ஏனென்றால், அதிகாரமற்ற மாகாணசபைகளை வைத்துக் கொண்டிருப்பதால் இவற்றுக்கு என்ன பயன்? எனவே சிங்களக் கட்சிகளே மாகாண அதிகாரத்தைக் கோருகின்ற, அதற்காகப் போராடுகின்ற ஒரு காலம் கனிந்துள்ளது. 

இவ்வாறு கனிந்துள்ள நல்வாய்ப்புச் சூழலைப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றித் தமிழ்த்தேசியக் கட்சிகளிடத்திலும் சரி, தமிழ்த்தேசியம் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்காத ஏனைய தமிழ்க்கட்சிகளும் (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, கிழக்குத் தமிழர் ஒன்றியம், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சி போன்றவை) சரி அக்கறையற்றே உள்ளன. அல்லது இதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றன. 

மாகாணசபைகளைப் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் முதற்கட்ட அனுகூலங்களைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்று மெய்யாகவே இந்தக் கட்சிகள் நம்பினால், இப்பொழுது உருவாகியிருக்கின்ற மாகாணசபைகளின் மீதான அனைத்துத் தரப்பின் கரிசனைச்  சூழலைக் கையாளக் கூடிய கட்டமைப்பையும் பொறிமுறையையும் உருவாக்க முயற்சித்திருக்கும். அதற்கான சந்திப்புகளையும் உரையாடல்களையும் வடக்குக் கிழக்கு தெற்கு மேற்கு மத்தி என அனைத்துப் பரப்பிலுமுள்ள சக்திகளுடன் நடத்துவதற்கான தயாரிப்புகள் நடந்திருக்கும். மாகாணசபைகளைப் பற்றிச் சிந்திக்கின்ற அனைத்து தரப்பையும் ஒருங்கிணைந்த ஒரு Net Work இல் கொண்டு வந்திருக்கும்.

இதில் அரசியற் கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்துச் சூழலிலும் உள்ள ஊடகவியலாளர்கள், ஜனநாயக விரும்பிகள், மாகாணசபைகளைப் பற்றியும் அதிகாரப் பகிர்வு பற்றியும்  சாதகமாகப் பேசி வரும் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டு முன்னணியாக மாற்ற வேண்டும். இதைச் சாத்தியமாக்குவது ஒன்றும் கடினமே இல்லை. ஏனென்றால், இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளதைப்போல, எல்லாத் தரப்பும் மாகாணசபைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அதற்கான கட்டமைப்பை உருவாக்குவது எளிதல்லவா! 

முதற்கட்டமாக கொழும்பில் இதற்கென ஒரு தொடர்பாடல் மையத்தையும் தொடர்பாடற் குழுவையும் உருவாக்க வேண்டும். அதிலிருந்தே விடயங்களைக் கையாளலாம். 

இதில் கவனிக்க வேண்டியது, இந்த விடயத்தில் படிப்படியாகவே விடயங்களை நகர்த்த வேண்டும். முதலில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு அரசிடம் கூட்டாகக் கேட்பது, அழுத்தம் கொடுப்பது. குறிப்பாக கால எல்லையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்துவது. இதற்கு அரசாங்கம் சரியான பதிலளிக்கவில்லை என்றால், போராட்டங்களை நடத்துவதைப் பற்றிச் சிந்திப்பது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவது என்பது, ஜனாநாயக அடிப்படையிலான கோரிக்கையாகும். அதை வலியுறுத்துவது ஜனநாயக அடிப்படையிலானது. எந்த நிலையிலும் எதன் பொருட்டும் அரசாங்கம் ஜனநாயக மறுப்பைச் செய்யக் கூடாது என்பதாக இந்தப் போராட்டங்களும் கோரிக்கைகளும் அமைய  வேண்டும். 

அரசாங்கம் இணங்கியோ உடன்பட்டோ மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், அதை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி ஆராயலாம். இது ஒன்றும் முக்கியமானதல்ல. ஏனென்றால், மாகாணசபைகளுக்கான தேர்தல் வெவ்வேறு சூழலைக் கொண்ட பிராந்தியங்களின் தேர்தலாக இருப்பதால், அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவாறே தேர்தலை எதிர்கொள்ளும் நடைமுறைகளும் இருக்கும். ஆனாலும் அதைக் குறித்தும் சிந்திக்கலாம். 

அடுத்தது முக்கியமானது. அதுதான் அதிகாரங்களை வலுப்படுத்துவதாகும். மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைக் கோருவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதுமாகும். இதற்கான கலந்துரையாடல்களு பொறிமுறையும் வேணும். ஆனால், அதை இப்பொழுது எக்காரணம் கொண்டு செய்யவே கூடாது. அப்படி அவரசப்பட்டு அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேச முற்பட்டால், மாகாணசபைகளுக்கான தேர்தல் கோரிக்கையே விடுபட்டுப் போகக் கூடிய சூழல் உருவாகி விடும். மட்டுமல்ல, தொடக்கத்திலேயே தேவையற்ற விவாதங்கள் உருவாகி எல்லாமே பாழாகி விடும். அது அரசாங்கத்துக்கே நல்வாய்ப்பை அளிக்கும். 

ஆகவே இந்த விடயத்தை மிக நுட்பமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டிய கூடுதல் பொறுப்பு தமிழ்க்கட்சிகளுக்கு உள்ளது. தமிழ்த்தரப்பு அல்லது தமிழ் பேசும் சமூகங்கள்தான் இதனால் (மாகாணசபைகள் முடக்கப்பட்டதால்) கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றன. 

எனவே கூடிய கரிசனையை எடுக்க வேண்டியது தமிழ் பேசும் தரப்பினரே. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களிடமிருந்து இன்னும் அழுத்தம் திருத்தமான ஒரு அபிப்பிராயத்தையும் அல்லது நிலைப்பாட்டையும் காண முடியவில்லை. எனவே தமிழ்தரப்பு முக்கியமாக முஸ்லிம் கட்சிகளோடு பிரத்தியேகமாகப் பேச வேண்டும். 

தேர்தல் கூட்டுகளை வைப்பதற்கு ஆலாய்ப் பறந்து இரவு பகலாகச் சிந்திக்கின்ற – சந்திப்புகளை நடத்துகின்ற, கூட்டுகளை உருவாக்குகின்ற அரசியற் கட்சிகள், அதை விட முக்கியமான மாகாணசபை விடயத்தில் ஆர்வமற்றிருப்பது ஏன்?

மாகாணசபைகளைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசி வருகிறோம். அப்படியிருக்கும்போது அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை என்று எப்படிக் குற்றம் சாட்ட முடியும் என்று சில கட்சியினர் கேட்கலாம். எதையும் பேசுவது வேறு. அவற்றைச் செயலாக்கமாக வெற்றியடையச் செய்வது வேறு. இப்பொழுது பேசுவதை விட செயற்படுவதற்கான சூழல் தானாகவே வந்திருப்பதால், அதை வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றே இங்கே வலியுறுத்தப்படுகிறது. மாறாக எவரையும் குற்றப்படுத்தி நிந்திப்பதற்காக அல்ல. ஆனால், மந்த கதியில் எதையும் செய்ய  முயற்சித்தால், அது எதிர்விளைவுகயே – பின்னடைவுகளையே தரக் கூடிய சாத்தியமுண்டு. அரசியலில் அபூர்வமாகவே வாய்ப்புகள ஏற்படுவது. அதைக் கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதே நிபுணத்துவமும் சாணக்கியமுமாகும். 

இப்போது உருவாகியிருக்கும் மாகாணசபைகளுக்கான தேர்தல் குறித்த பல தரப்பின் குரல்களுக்காக அரசாங்கம் அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவதாகப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியுள்ளது. ஆனால், அதற்கான கால எல்லையை அது சொல்லவில்லை. மந்த கதியில் அல்லது தனித்த நிலையில் இந்தக் கோரிக்கை இருக்குமாக இருந்தால், அரசாங்கம் இதை இழுத்தடித்து, வேறொரு சூழ்நிலைக்குத் தள்ளி விடவும் வாய்ப்புண்டு. அப்பொழுது இந்தக் கோரிக்கையைக் கை விட்டுத் தென்னிலங்கைக் கட்சிகள் வேறு பிரச்சினையில் தாவி விடவும் கூடும். 

ஆகவேதான் தாமதிக்காமல் விரைவில் இது தொடர்பாக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது மாகாண சபைகளை இயங்க வைப்பதற்காக வேலை செய்வதற்கு வாய்ப்பான சூழல். இதில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தவணை முறையில் மரணமே!

தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடக்கம் அனைத்துத் தமிழ் பேசும் தரப்பினரும் தங்களுடைய அடையாளத்துக்கு ஏற்பவும் மாகாணசபைகளைக் கொண்டு வருவதற்கு முன்னின்றவர்கள் என்ற அடிப்படிக் காரணத்துக்காகவும் விரைந்து களத்தில் இறங்க வேண்டும். இது ஒன்றும் போர்க்களமல்ல. அரசியற் களமே!

https://arangamnews.com/?p=12343

நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும் - ராஜன் குறை 

1 month ago

நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்

29 Sep 2025, 7:47 AM

Rajan.jpg

ராஜன் குறை 

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நெகிழவைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களின் உதவியுடன் கல்வியிலும், வாழ்விலும் ஏற்றம் பெற்றதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அது அமைந்தது அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்தது.

Rajan-6-1024x536.jpg

அந்த மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் வகையில் கரூரில் சனிக்கிழமையன்று பெருந்துயரம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக சனிக்கிழமை தோறும் செய்யும் பரப்புரைப் பயணத்தில் அன்றைக்கு நாமக்கல்லிற்கும், கரூரிற்கும் சென்றார். மாலை ஏழரை மணி அளவில் அவர் கரூரில் பேசும்போது கூட்ட த்தில் ஏற்பட்ட கட்டுங்கடங்காத நெரிசலில் சிக்கி 40 பேர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மரணமடைந்தனர். 

இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்டு அழுக்காறு கொள்ளும் கூட்டம் உடனே இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா, சினிமா மோகத்தில் சிக்கிச் சீரழியும் நாடு அது என்றெல்லாம் பேசத்துவங்கியது. இன்னொரு கூட்டம் வழக்கம் போல தி.மு.க-தான் சினிமாவையும், அரசியலையும் கலந்தது என்று பிலாக்கணம் வைக்கத் துவங்கியது. இதுதான் பெரியார் மண்ணா, நடிகனைக் காணப்போய் மடிந்துபோகிறார்கள் என்று பொங்குகிறார்கள். 

உலகின் எந்த பெரிய தீர்க்கதரிசியும், மகானும், சிந்தனையாளரும் தாங்கள் பிறந்த மண்ணை முற்றாக பொன்னுலகாக மாற்றியதில்லை. காந்தி பிறந்த, பெருமளவு வாழ்ந்த குஜராத் மண்ணில்தான், இந்தியாவில்தான் மதவாத வன்முறை பேயாட்டம் போட்டது. இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அதற்காக சமகால இந்தியாவை உருவாக்கியதில் காந்திக்கு பெரும்பங்கு இல்லையென்று சொல்ல முடியாது. பெரியாரே இந்தியாவிற்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டுமென்று கூறினார். 

முதலில் நாம் திராவிட இயக்கத்திற்கும், சினிமாவிற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் நாயக நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறுவது எப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பதில் உள்ள அரசியல் போதாமை என்ன, ஏன் இந்த உயிரிழப்பு கரூரில் நிகழ்ந்தது என்பதை பிரித்தறிந்து புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான தத்துவார்த்த மானுடவியல் புரிதல் உருவாக வேண்டும் என்றால் சற்றே பொறுமையாக வரலாற்றை அணுகவேண்டும். 

இருபதாம் நூற்றாண்டில் சினிமாவும், அரசியலும்

உலகின் பல நாடுகளிலும் சினிமா அதன் துவக்கம் முதலே அரசியல் பிரசாரத்திற்கு, அல்லது தேசிய கருத்தியலை உருவாக்க பயன்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இதாலி என பல நாடுகளைச் சொல்லலாம். இந்தியாவிலும் காலனீய எதிர்ப்பு தேசிய உணர்வு சினிமாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் சினிமாவிலும் கூட தேசிய விடுதலைக் கருத்தியல் பேசப்பட்டதை ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் தன்னுடைய Message Bearers நூலில் தொகுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் தேசிய விடுதலை தவிர சமூக நீதிக் கருத்துக்களும் சினிமாவில் புகுந்தன. இதற்கு பல காரணங்கள் இருந்தன. நாடகம், சினிமா இரண்டிலுமே புராணக் கதைகளே ஆக்கிரமித்திருந்த நிலையில் சமகால சமூகக் கதைகளை நாடகமாக்க வேண்டும், சினிமா ஆக்கவேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருந்தது. ஆனால் தமிழ் உரைநடை என்பது ஒருபுறம் எழுத்தில் பண்டிதத்தனமாகவும், மற்றொருபுறம் வடமொழி கலந்ததாகவும், பேச்சு வழக்கில் ஜாதீய கொச்சைகள் நிறைந்ததாகவும் இருந்தது. 

இந்த நிலையில்தான் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பலர் மக்களூக்கு அணுக்கமான ஒரு புதிய உரைநடையை பேச்சிலும், எழுத்திலும் உருவாக்கினர். அதையே நாடகங்களிலும், பின்னர் சினிமாவிலும் வசனமாக பயன்படுத்தினர். அந்த மொழி நடை அடுக்குமொழியாகவும், ஓசை நயமிக்க சொல்லணியாகவும் அமைந்த தால் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றது. அந்த மொழிநடையுடன் சமூக நீதிக் கருத்துக்களையும் இணைத்ததால் நாடகங்களும், சினிமாவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 

அந்த திராவிட தமிழ் அலையில் உருவான நட்சத்திரங்கள்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். அதில் சிவாஜி குணசித்திர நடிகராகவும், எம்.ஜி.ஆர் தார்மீக சாகச கதாநாயகனாகவும் இணைந்து தமிழ் நவீன தன்னிலையின் இருபகுதிகளாக மாறியதில் பெரும் சமூக முக்கியத்துவம் பெற்றனர். சிவாஜி தி.மு.க-வில் ஒரு பகுதியினரின் எதிர்ப்பால் விலகிச் சென்று காமராஜருக்கும், காங்கிரசிற்கும் நெருக்கமானார். எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணித்தார். கட்சியுடன் சேர்ந்து வளர்ந்தார். கட்சியின் கருத்தியலை திரைக் கதையாடல்களாக மாற்றினார். இருபதாண்டு காலம் கட்சியுடன் பிணைந்த நாயக நடிகராக கட்சியின் கருத்துக்களை வசன ங்களிலும், பாடல்களிலும் வெளிப்படுத்தி அத்துடன் முழுவதுமாக அடையாளப் படுத்திக்கொண்டார். எழுத்தறிவு பரவாத சமூகத்தில் திரைப்படங்களே வெகுஜனக் கல்வி வடிவமாக விளங்கியது எனலாம். அது தமிழ் சமூகத்தின் தன்னுணர்வை செழுமைப்படுத்தியது என்பதே உண்மை.

எம்.ஜி.ஆர் ஏழ்மையில் வளர்ந்தவர் என்பதால் அடித்தட்டு சமூகத்தை அறிந்தவர். அண்ணா மறைவிற்குப் பின் அவர் கலைஞருடன் முரண்பட்டு கட்சியைப் பிளந்து புதிய கட்சியை உருவாக்கியபோது அவருக்கு மாநிலம் முழுவதும் கட்சிக் கட்டமைப்பும். தொண்டர் பலமும் உடனே கிடைத்தது. நாவலர் உட்பட பல இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருடன் இணைந்தனர். 

Rajan-4-1-1024x669.jpg

நாயக நடிகர்கள் நேரடியாக அரசியல் தலைவராக முடியுமா? 

திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையாகச் செல்வாக்கு பெற்றிருந்த சிவாஜி கணேசனால் அரசியல் தலைவராக முடியவில்லை. ஏனெனில் அவரது கதாநாயக பிம்பம் குணசித்திர வார்ப்பாக இருந்தது. அவரும் சாகசப் படங்களில் நடித்தாலும் அவரது சிறப்பம்சம் அவர் ஏற்கும்  கதாபாத்திரமாகவே மாறுவதாக இருந்தது. எம்.ஜி.ஆர் தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டதைப் போல, சிவாஜியால் செய்ய முடியவில்லை. இந்த உண்மை எம்.ஜி.ஆர் என்ற நாயக நடிகர் கட்சித் தலைவராக, முதல்வராக மாறியது பிறரால் பின்பற்ற இயலாதது என்பதை உடனடியாகத் தெளிவாக்கியது. 

எம்.ஜி.ஆர் போல வெற்றிகரமாக கட்சித் தலைவராக, முதல்வராக மாறிய மற்றொருவர் என்.டி.ஆர் எனப்பட்ட என்.டி.ராமராவ். இவர் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லாத நிலையில் அதில் கடும் கோஷ்டிப் பூசல் நிலவியதால் அந்த கட்சியின் தலைவர்கள் பலரை ஈர்த்துதான் தன் கட்சியைக் கட்டிக் கொண்டார். அவர் மருமகன் சந்திரபாபு நாயுடுவே காங்கிரஸ் அமைச்சராக இருந்தவர்தான்; சஞ்சய் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். 

என்.டி.ஆர் புராணப் படங்களில் கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வ வேடங்களைத் தாங்கியவர் என்பதுடன், பல படங்களில் எம்.ஜி.ஆர் போல தார்மீக சாகச நாயகனாகவும் நடித்தவர். இளமைக்கால வாழ்வில் சமூக அமைப்பை நன்கு பழகி அறிந்தவர். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்று இல்லாத சூழ்நிலையில் அந்த கட்சியின் ஒரு பகுதியினரைக் கொண்டுதான் அவர் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் தெலுங்கு சினிமாவில் பெரும் சாகச நாயகனாக புகழ்பெற்ற சிரஞ்சீவியால் கட்சியைத் துவங்கி வெற்றி பெற முடியவில்லை.  

இந்த உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது ஒரு நாயக நடிகரின் பிம்பம் எப்படிப் பட்டது, அவர் தலைமை ஏற்க ஏற்கனவே உருவான ஒரு  கட்சியின் கட்டுமானம் கிடைக்குமா, அவர் தலைவராகும் சூழ்நிலை நிலவுமா என பல்வேறு காரணிகளை வைத்துதான் ஒரு நாயக நடிகர் வெற்றிகரமான கட்சித் தலைவராக, முதல்வராக மாற முடியும் என்பது தெளிவாகிறது. ஓரளவு சிறிய கட்சிகளை உருவாக்கி, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சில தொகுதிகளில் வெல்லலாமே தவிர எம்.ஜி.ஆர் போலவோ, என்.டி.ஆர் போலவோ முதல்வராக வெல்வது சாத்தியமில்லை எனலாம். ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்து, அவரால் கட்சியில் இணைக்கப் பட்ட தால் தன்னை அவருடைய வாரிசாக நிறுவிக்கொண்டு அவர் கட்சிக் கட்டுமானத்தை கைப்பற்ற முடிந்தது.

எம்.ஜி.ஆர் போல ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி புதிதாக கட்சி தொடங்கிய பிரபல கதாநாயகர்கள் யாருக்கும் சாத்தியமாகவில்லை என்பதே உண்மை. பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், கமல்ஹாசன் என பலர் முயற்சித்துள்ளனர். யாருமே ஒரு கட்சிக் கட்டுமானத்தை உருவாக்கி அரசியலில் ஒரு முக்கியத் தலைவராக, முதல்வர் வேட்பாளராக பரிணமிக்க முடியவில்லை. விஜய்காந்த் பத்து சதவீத வாக்கு வரை பெற்றாலும் அவரால் தொடர்ந்து கட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பத்தே ஆண்டுகளில் முதல்வர் வேட்பாளராக அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். 

Vijays lust for power and the lives lost in Karur

விஜயின் பதவி மோக அரசியல் 

மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கி, ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது உண்மைதான். நாயக நடிகர்கள் தலைவராகலாம் என்பதும் உண்மைதான். ஆனால் எத்தகைய களப்பணி செய்து அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. களத்திற்கு செல்லாமல், மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கட்சிக் கட்டமைப்பை வேர் மட்ட த்திலிருந்து உருவாக்காமல், தன் நாயக பிம்ப வெளிச்சத்தை வைத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பதைத்தான் பதவி மோக அரசியல் என்று கூற வேண்டியுள்ளது. அதாவது அரசியல் என்பதே நேரடியாக முதல்வராக பதிவியேற்பதுதான் என்று எண்ணுவது அப்பட்டமான பதவி மோகமே தவிர அரசியல் ஈடுபாடு அல்ல. அரசியல் ஈடுபாடு என்பது மக்கள் பணிதானே தவிர ஆட்சி ஆதிகாரமல்ல. 

உண்மையில் மக்கள் பணி செய்ய விருப்பமிருந்தால் ஒரு நாயக நடிகர் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடையே பழக வேண்டும். அவர்கள் தேவைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். தன்னை பின்பற்றுவர்களைக் கொண்டு கட்சிக் கிளைகளை உருவாக்க வேண்டும். அந்த வேர்மட்ட செயல்பாட்டாளர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களிலிருந்து தங்கள் செயல்பாடுகள் மூலம் தலைமைப் பண்புடன் வெளிப்படுபவர்களைக் கொண்டு கட்சியின் இரண்டாம் கட்ட தலைமையை உருவாக்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் கட்சிக்குள் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், சமூக முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து, தன் தலைமைப் பண்பை நிறுவ வேண்டும். பின்னர்தான் தேர்தல், ஆட்சி எல்லாம் சாத்தியப்படும். 

இவ்வாறு தானே கட்சியை வேர்மட்ட த்தில் கட்ட முடியாது என்றால், வேறொரு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தன்னை தலைமைப் பொறுப்பிற்கு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதிலும் பத்திருபது ஆண்டுகள் பயணமே ஒருவரை பக்குவப்படுத்தும். ஆனால் அப்படி யாருடைய தலைமையையும் ஏற்று பணியாற்ற முடியாது, நான் பிரபல கதாநாயகன் என்பதால் நேரடியாக முதல்வராகத்தான் பதவி ஏற்பேன் என்பது சாத்தியமற்ற ஒரு வேட்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

வாரிசு அரசியல் தலைமை என்பதும் சுலபமானதல்ல. கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். கட்சி கட்டமைப்பின் வேர் மட்டம் வரை சென்று பரிச்சயம் கொள்ள வேண்டும். பல்வேறு முரண்பாடுகளை, சிக்கல்களை தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கெட்ட பெயர் ஏற்பட்டு நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். எல்லா வாரிசு தலைவர்களும் கட்சியினர் ஆதரவையும், அவர்கள் மூலம் மக்கள் ஆதரவையும் பெற்றுவிடுவதில்லை என்பதால் வாரிசு தலைமை என்பதும் ரோஜாப் பூக்களாலான பாதையல்ல. முழுப் பொறுப்பையும் தன் தோளில் ஏற்கும் முன் நிறைய பக்குவப்பட வேண்டும்.  

Rajan-2-7.jpg

கூட்டக் காட்சி அரசியல் 

விஜய்க்கு ஆட்சி செய்ய ஆசை இருக்குமளவு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஏனெனில் அப்படி இருந்தால் அரசியல் குறித்து நிறைய பேசுவார். செய்தியாளர்களை சந்திப்பார். பிற அரசியல் தலைவர்களைச் சந்திப்பார். கட்சிக்காரர்களுடன், பல்வேறு மக்கள் பிரிவினருடன் தொடர்ந்து விவாதிப்பார். ராகுல் காந்தி பதினைந்து ஆண்டுகளாகத் தீவிரமாக இவ்விதம் இயங்கி வருகிறார். அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே அவர் ஆழ்ந்த கவனத்துடன் உரையாடுவதாக, பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக வியப்புடன் கூறுவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி தன்னை ஒரு தேசியத் தலைவராக செதுக்கிக் கொண்டு வருகிறார்.  

விஜய் அப்படி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. அவருடன் ஆலோசனையில் பங்கேற்றதாக எந்த சமூக சிந்தனையாளரும் கூறுவதில்லை. மாறாக ஒரு சில தொழில்முறை அரசியல் ஆலோசகர்கள் தயாரிக்கும் நிகழ்வுகளில் அவர்கள் கூறியபடி செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. உதாரணமாக அவர் நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு சென்றபோது தரையில் அமரும்படியும், அனிதாவின் சகோதரர் தோளில் கை போடும்படியும் சொல்லி அனுப்பியதாக மணிகண்டன் வீராசாமி என்பவர் கூறுகிறார். 

கட்சி அமைப்பை உருவாக்குவதையே விஜய் அவுட்சோர்ஸிங் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என சிலரிடம் அவர் அந்த பொறுப்புகளைக் கொடுத்து விட்டார். அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்கிறார். மக்கள் திரளைக் கூட்டி கூட்டக்காட்சி (crowd optics) ஏற்பாடு செய்துவிட்டால் மக்களெல்லாம் தான் சொல்பவர்களுக்கு எல்லா தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறார். அப்படி கூட்டக் காட்சி நடக்கும்போது ஏதோ பேச வேண்டுமே என்று தயாரிக்கப்பட்ட உரைகளை தப்பும் தவறுமாக வாசிக்கிறார். அந்த உரைகளில் இடம்பெறும் தகவல் பிழைகளை யார் சுட்டிக் காட்டினாலும் அவர் கவலைப் படுவதில்லை. 

ரசிகர்கள், பாமர மக்கள் மனோநிலை

இத்தகைய உள்ளீடற்ற பதவி மோக அரசியலில் விஜய் ரசிகர்கள் சிக்கி சீரழிவதுதான் வேதனை. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் புதிய வரலாறு படைப்பதாக நம்புகிறார்கள். கல்லூரி ஸ்டிரைக்கில் பங்கெடுத்த அனுபவம் உள்ளவர்களுக்கு அந்த மனநிலை புரியும். என்னுடைய கல்லூரி நாட்களில் ஒருமுறை ஸ்டிரைக் செய்த போது என் சக மாணவன் ஒருவன் பிரின்ஸிபல் அறைக்குத் தீவைக்கலாமா என்று கேட்டான். விடுதியில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றுதான் ஸ்டிரைக். ஆனால் அதை ஏதோ யுகப்புரட்சி போல நினைக்கும் விடலைப் பருவம். 

பாமர மனிதர்கள் எல்லா காலங்களிலும் தங்கள் குறைகள் தீர்க்கப் படவில்லை என்ற ஏக்கத்துடன்தான் இருப்பார்கள். அடித்தட்டு மக்களுக்கு நிறைய குறைகள் இருக்கும். அதனால் யாரேனும் ஒரு மீட்பர் உருவாகி பொன்னுலகை படைப்பார்கள் என்ற ஏக்கம் அல்லது கனவு இருக்கும். எவ்வளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகத்திலும் ஒரு சாராருக்கு இதுபோல யுகப்புரட்சி கனவுகள் இருக்கும். அது மதவாத வடிவமெடுக்கலாம்; புரட்சிகர வடிவமெடுக்கலாம். அல்லது ஏதோவொரு தற்செயலான கவர்ச்சிகர பிம்பத்திற்கு பின்னால் செல்லலாம்.  

Vijays lust for power and the lives lost in Karur

உலகிலேயே நவீன மக்களாட்சி சமூகங்களில் மூத்த சமூகம் அமெரிக்காதான். அங்கே மக்களாட்சிக் குடியரசு உருவாகி இருநூற்றைம்பது ஆண்டுகள் ஆகப் போகிறது. அந்த சமூகத்தில் டொனால்ட் டிரம்ப் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் வியாபாரி, வெகுஜன ஆதரவுடன் அதிபராகி உலகையே கிலியில் ஆழ்த்தி வருவதைப் பார்க்கிறோம். அவருக்கு மன நிலை சரியாக உள்ளதா என்பதைக் குறித்தே பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். 

இத்தாலியை எடுத்துக்கொண்டால் குடியரசுத் தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்த நாடு அது. ரோமப் பேரரசின் காலத்திலும் சரி, பதினைந்தாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்திலும் சரி, இத்தாலி பல அரசியல் தத்துவங்களின் பரிசோதனைக் களமாக இருந்தது. அத்தகைய நாட்டில் பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, 1936-2023) என்ற எதேச்சதிகாரி வெகுஜன ஆதரவுடன் கோலோச்சியதையும் பார்த்தோம். எனவே தமிழ்நாட்டில் விஜய் போன்ற நடிகர் பின்னால் முதிரா இளைஞர்கள் சிலரும், எளிய மக்கள் சிலரும் திரள்வது அதிசயமல்ல. 

நம்முடைய அரசியல் முதிர்ச்சி அவரை விமர்சன ரீதியாக எதிர்கொள்வதன் மூலம், கண்டிப்பதன் மூலம் இத்தகைய துர்ச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்காக நாம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள திராவிட தமிழர் என்ற முற்போக்கு அரசியல் சமூகத்தை குறைகூறத் தேவையில்லை. எந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தாலும் திராவிட அரசியலைக் குறைகூறும் பார்ப்பனீய சமூக நினைவிலி மனதை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்.    

கட்டுரையாளர் குறிப்பு:  

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

நோக்கம் திசை மாறாமல் இருக்கட்டும்

1 month ago

நோக்கம் திசை மாறாமல் இருக்கட்டும்

லக்ஸ்மன்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆவது அமர்வில் கடந்த 25ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை உலகத் தலைவர்களுக்கு ஒப்புவித்ததாகவே நோக்க முடிகிறது.

இலங்கையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.போதைப்பொருள் பிரச்சினையும், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளே இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.

அதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழையுங்கள், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுபோன்ற தொனியில் தன்னுடைய உரையினை நிகழ்த்திவிட்டு, ஜப்பானுக்குப் பயணமாகியிருக்கிறார்.

அங்கு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற ‘எக்ஸ்போ 2025’ கண்காட்சியில் 
பங்கேற்றார். ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
ஜனாதிபதியின் இந்த உரையானது மக்கள் மத்தியில், குறிப்பாக, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கவலையான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நோக்கம், திசைமாறுதல் என்பது சாதாரணமானதுதான், ஆனால், நம்பிக்கை கொண்டவர்களின் நோக்கம் திசை மாறுவது கவலையானது. இலங்கையில் தமிழ் மக்களின் நோக்கம் ஒரு இடது சாரிச் சிந்தனையுள்ள அரசாங்கமானது நீண்டகாலமாக இருந்து வருகின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் தீர்வினை வழங்கும் என்றே நம்பிக்கை கொண்டிருந்தனர். 

ஆனால், நடப்பதென்னவோ பழையதைப் போலவே இருப்பது அவர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது.ஒவ்வொரு வருடத்திலும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகின்ற வேளைகளில், தமிழ் மக்கள் தம்முடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவே நினைத்துக் கொள்வர்.

ஆனால், அது நிறைவுக்கு வருகையில் ஏமாற்றமாகிப்போவதே வழமையானது. இம்முறை நடைபெறுகின்ற 60ஆவது கூட்டத் தொடரிலும்கூட பொறுப்புக்கூறலின் அவசியமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசரமும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், ஏதுமற்று நிறைவுக்கு வரும்.

இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் அவசியம் தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகிறது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான விரிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்துமாறும், உடனடி நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தாமதமும் இன்றி நடத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் 
தமிழர் தரப்பு, சர்வதேசத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் கோரி வருகிறது. 

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், ரோம் சாசனத்தில் கையொப்பமிடுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் போன்றவற்றைத் தவிர இனப்படுகொலை, இனப் படுகொலைக்கான நோக்கம் ஆகியவற்றினைக் குறிக்கும் ஆதாரங்களைக் குறிப்பாக சேகரிக்க வேண்டும்.

இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தில் இந்த ஆதார சேகரிப்பு முக்கியமான விடயமாகும். இந்தச் செயற்றிட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். 

என்று பல கடிதங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அனுப்பப்பட்டன.இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் நடைபெற்றன. இவை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு மனித உரிமைப் போரவையிலும் கொண்டுவரப்படும் பிரேரணைகளும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் காணாமல் போகின்றன. இம்முறையிலும் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொண்டுவரப்பட்ட 30-1 பிரேரணைக்கு அன்றைய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீரவின் முன்மொழிவுடன் இலங்கை இணை அனுசரணை வழங்கியது. அதிலிருந்து தொடங்கப்பட்ட பொறுப்புக்கூறல் விவகாரம் இன்னமும் நிறைவுக்கு வரவில்லை.

ஆனால், காலம் கடத்தல் மாத்திரம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாட்டின் அவசியத்தை தமிழர் தரப்பு வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஆனால் நடைபெறுவது ஒன்றுமில்லை என்றே ஆகிப்போகின்றது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் அக்கறையற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

இந்தப் போக்கானது முன்னைய அரசாங்கங்களின் செயற்பாட்டைப் போன்றதாகவே இருக்கிறது, பொறுப்புக்கூறல் விடயத்தில் இந்த அரசாங்கம் பொறுப்பாக நடந்து கொள்ளும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர்.

இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடாக தீர்வு முன்வைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்த போதும் இன்னமும் பொறுப்புக்கூறல் விடயத்திலோ அல்லது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு விவகாரத்திலோ உரிய அக்கறை காண்பிக்கப்படவில்லை. இருந்தாலும் பரவாயில்லை, என்றிருந்த தமிழ் மக்கள் ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகள் சபை உரையுடன் முழுவதுமாக ஏமாந்திருப்பர் என்றே கூறலாம்.

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்குப் பயணமாவதற்கு முன்னர் மன்னார் காற்றாலை மின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.

அதன் எதிரொலியாக, வெள்ளிக்கிழமை அந்த திட்டத்திற்கெதிராகப் போராடியவர்கள் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இது நாட்டில் மக்களாட்சி உறுதிப்படுத்தப்படும் என்று கூறிக்கொண்டு ஆட்சி பீடமேறிய இன்றைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஆயுதப்படைகளைக் கொண்டு அடக்க முனைவது “இவர்களும் அவர்கள்” தானா என்று கேட்கத் தோன்றுகின்றது என்கிற விமர்சனத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

இந்த நடவடிக்கை வன்மையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. காற்றாலை செயற்திட்டத்திற்கெதிராக மக்கள் மேற்கொண்ட ஜனநாயக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்கள், மத குருக்கள் உட்பட சகலரையும் பொலிஸார் அடித்துக் கலைத்தது காற்றாலை இயந்திர பாகங்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்ததிருக்கின்றனர்.

மக்களின் உணர்வுகளை காவல்துறையினரின் ‘பூட்ஸ்’களால் நசுக்கியிருக்கின்றமையானது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இல்லாமல் செய்கிறோம், பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிகளைக் குறைக்கிறோம், நாட்டில் ஊழலை ஒழிக்கிறோம் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துகிறோம்.

நிலைபேறான அபிவிருத்திகளுக்கு முயற்சிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, அதே நேரத்தில், மக்களின் உரிமைகளை மறந்து செயற்படுவதானது ஒருபோதும் நற்போக்காக பார்க்கப்படாது.கடந்தகால செயற்பாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்படுவது தொடர்பில் பல்வேறு தரப்புகளாலும் விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மக்களால் தங்களது நலன் சார்ந்து விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு வழங்கப்படும் பதில்கள் அவர்களைத் திருப்திப்படுத்துவதாக இல்லை என்ற உணர்வு மேலோங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதற்கேற்ற வகையிலேயே அரசாங்கத்தின் அடுத்த அடுத்த நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

இந்த இடத்தில்தான், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் உள்ளக் குமுறல்களையும் நன்கு அறிந்து செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,
முன்னைய அரசாங்கங்களைப் போன்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பதான அபிப்பிராயத்துக்குள் அடக்கப்படும் நிலைமை நிலைப்பாடாக மாற்றமடையத் தொடங்கியிருக்கிறது.

இந்தத் தொடக்கம் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பினை அதிகரிப்பதோடு, எதிர்மறையான சிந்தனைகளையும் உருவாக்கும் எனலாம்.  கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகள் மீது வெறுப்புக்கொண்டிருந்த மக்கள், தேசிய மக்கள் சக்தியைக் கடந்த தேர்தல்களில் ஒரு மாற்றுச் சக்தியாகவே கருதினர்.

ஜனாதிபதித் தேர்தலைவிட, பாராளுமன்றத் தேர்தலில் பேராதரவு கிடைத்திருந்தது. இந்தப் பேராதரவைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களது ஆதிக்கப் பிரயோகத்துக்கான ஆணையாகக் கொள்வது தவறாகும்.

மொத்தத்தில், தங்களது நோக்கம் வேறாக இருந்தாலும் மக்களது நோக்கத்தினை சரியாகப் புரிந்து கொண்டு அவர்களது நோக்கத்தின் பாதையில் ஆட்சியின் நகர்த்தலை மேற்கொள்வதே சிறப்பானது என்பதனையே அவர்கள் அடையாளம்
கண்டுகொள்ள வேண்டும். இருந்தாலும், நோக்கம் திசைமாறாமலிருக்கட்டும் 
என்று எண்ணிக்கொள்வோம.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நோக்கம்-திசை-மாறாமல்-இருக்கட்டும்/91-365485

அநுரவின் 12 மாதகால ஆட்சி

1 month ago

Published By: Vishnu

29 Sep, 2025 | 09:43 PM

image

ஆர்.ராம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த முதலாவது ஆண்டானது, அரசாங்கத்தின் முயற்சிகள், எச்சரிக்கையான செயற்பாடுகள், முக்கிய பொருளாதார விடயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வியூகங்கள் என்று பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதொரு காலகட்டமாகும்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவின் முதலாவது ஆட்சிக்காலத்தினை நோக்கும்போது அரசியல் ரீதியாக அதன் அடைவுமட்டங்களை பார்ப்பதிலும், பொருளாதார ரீதியான அடைவுமட்டங்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும்.

ART_02__1_.jpg

ஏனென்றால் அரசாங்கம், அரசியல் ரீதியான விடயங்களை விடவும், சமூக, பொருளாதார ரீதியான விடயங்களுக்கே தாங்கள் முக்கியத்துவம் அளிப்பாக ஆட்சியைப் பொறுப்பெடுத்த முதல்நாளில் இருந்தே தெரிவித்து வந்திருந்தது.

பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, சுற்றுலா, ஏற்றுமதிகள், தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மற்றும் கையிருப்பு ஆகியவற்றுடன் சில காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அந்தவகையில், முதலாவதாக, பணவீக்க விடயத்தினைப் பார்க்கின்றபோது, பணவீக்கம் என்பது சாதாரணமாக குடும்பம் மிக விரைவாக உணரக்கூடியதான விடயமாகும்.  அந்தவகையில், 2024ஆம் ஆண்டு நெருக்கடியான கலகட்டத்தில்  ஜூலையில் 2.4சதவீதமாக இருந்தது. அக்காலப்பகுதியுடன் ஒப்பீடும்போது, உணவுப் பொருட்களின் விலைகள் 0.8சதவீதம் உயர்வடைந்துள்ளன. உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 0.4சதவீதம் உயர்வடைந்துள்ளன. 

மாதாந்த அடிப்படையில், பார்க்கின்றபோது 1.85 சதவீதம் குறைவாக காணப்படுகின்ற அதேசமயம் பணவீக்கம் 4.4 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாகக் குறைந்ததுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பணவீக்கமான குறுகிய காலத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பின்னர் இலக்கை நோக்கி படிப்படியாக நகரும் என்றும் எதிர்பார்த்தது.

எனினும் நாட்டின் பணவீக்கத்தின் போக்கானது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாறியிருக்கின்றது. ஒருவருட இடைவெளி காணப்படுகின்றபோதும் பணவீக்கம் 1.2 சதவீதமாக நேர்மறையாக மாறியுள்ளது. இதனால், ஜூலையில் இருந்த விலைகளில் 0.3 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி, உணவுப்பொருட்களின் விலைகள் 2 சதவீதமாக உயர்ந்ததுள்ளதோடு உணவு அல்லாத உணவுப் பொருட்கள் அல்லாதவற்றின் விலைகள் 0.8 சதவீதமாக நேர்மறையாக மாறியது. மாதாமாதம் குறியீடு சற்று குறைந்தாலும், உணவு அல்லாத பொருட்கள் சிறிய உயர்வைச் சந்தித்தன. 

முக்கிய பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரித்தது. இதனடிப்படையில், 2024 இல் வீழ்ச்சியடைந்த விலைகள் 2025 இல் மீண்டும் மிதமான அளவில் உயரத் தொடங்கியுள்ளன. ஆகவே பணவீக்கத்தின் அடிப்படையில் குடும்பங்கள் மகிழ்ச்சியான மாற்றத்தினைக் காணவில்லை. 

அடுத்ததாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை எடுத்துக்கொண்டால், 2024இன் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5சதவீத வளர்ச்சி கண்டது. விவசாயம் 3சதவீதமாகவும், தொழில் 10.8சதவீதமாகவும், மற்றும் சேவைகள் 2.6சதவீதமாகவும் வளர்ச்சியைக் கண்டன. கட்டுமானத் துறை, சுரங்கத் தொழில் மற்றும் பல்வேறு உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால் தொழில்துறை உயர்வுக்கு வந்தது. தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் வர்த்தகத்தின் மூலம் சேவைகள் துறைகளும் வளர்ந்தன.

எனினும், 2025இன் இரண்டாம் காலாண்டில் மெத்த உள்நாட்டு உற்பத்தியானது, 4.9சதவீதமாகவே வளர்ந்துள்ளது, இது பொருளாதா மீட்சிக்கான விரிவாக்கத்தின் எட்டாவது தொடர்ச்சியான காலாண்டாகும். அதன்படி, விவசாயம் 2சதவீதம், தொழில்துறை 5.8சதவீதம், மற்றும் சேவைகள் 3.9சதவீதம் அதிகரித்தன. ஆடை, உலோகங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம் உள்ளிட்ட பல துறைகளில் உற்பத்தி வளர்ந்தது.

ஒட்டுமொத்தமாக, 2024 இன் பிற்பகுதியில் 5.5சதவீதமாக இருந்த இருந்த வளர்ச்சி 2025 இன் நடுப்பகுதியில் 4.9சதவீதமாக சற்றுக் குறைவாக வெளிப்படுத்தப்பட்டாலும் கட்டுமானம், உற்பத்தி மற்றும் விரிவடையும் சேவைகள் ஆகியவற்றால் தொடர்ந்து பலமாக இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாட்டின் வருமாணத்தில், சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியன அந்நிய செலாவணிக்கான முக்கியமான மூலமாக காணப்படுகின்ற நிலையில் இந்தாண்டில் அவற்றின் முன்னேற்றம் காத்திரமாக உள்ளது.  2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 1.3 மில்லியனாக இருந்தது.

ஆனால் 2025 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்துவிட்டது. இத்துறை 2025ஆம் ஆண்டிற்கான இலக்கை மூன்று மில்லியன் பார்வையாளர்களாக நிர்ணயித்துள்ளமை முக்கிய விடயமாகும். 

விசேமாக, 2025 ஆகஸ்ட்டில் முதல் 13 நாட்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 17.1சதவீதமாக அதிகரித்திருந்தது. இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதோடு அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை அடுத்த இடத்தில் உள்ளன. 

அடுத்ததாக, 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ஆடைத்துறை, தேயிலை, இறப்பர் சார்ந்த பொருட்கள், தேங்காய் சார்ந்த பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் உதவியுடன் மொத்த ஏற்றுமதி 10.6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. 2024 ஆகஸ்ட்டில் ஆடைத்துறை இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 500 மில்லியன் டொலர்கள் என்ற வரம்பைக் கடந்துள்ளது. 

அதேபோன்று 2025 ஆகஸ்டில் ஏற்றுமதி வலிமையடைந்ததை அடுத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஆகிய இரு துறைகளையும் இணைத்து மொத்த ஏற்றுமதி 1,607.58 மில்லியன் டொலர்களை கடந்துள்ளது. 2024 ஆகஸ்ட்டை விட 2.57சதவீதம் அதிகமாகும். 

அடுத்ததாக, பணப்பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு விடயத்தினைப் பார்கிக்கின்றபோது,  ஜனவரி முதல் 2024 ஆகஸ்ட் வரையில் தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மொத்தம் 4,288 மில்லியன் டொலர்களாகும். இது 2023 இல் இதே காலகட்டத்தில் 3,863 மில்லியன் டொலர்களில் இருந்தை விடவும் அதிகரிப்பாகும். 

இவ்வாறான நிலையில் 2025 ஜூலை வரையிலான தரவுகள் தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் ஆண்டு இன்றுவரை 4,435.2 மில்லியன் டொலர்களைக் காட்டுகின்றன. மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2025 ஜூலையின் இறுதியில் 6.1 பில்லியன் டொலர்களாக இருந்தது. 

அந்தவகையில், புதிய ஆட்சி நிர்வாகத்தின் முதலாண்டைப் பற்றி கருத்துவெளியிட்டள்ள பெஸ்ட் கப்பிற்றலின் தலைமையாராய்ச்சி மற்றும் மூலோபாய அதிகாரியான திமந்த மாத்யூ, ஸ்திரத்தன்மை அடையப்பட்டிருந்தாலும், முக்கிய சவால்கள் இன்னும் உள்ளன என்று குறிப்பிட்டார்.

அத்துடன் சீர்திருத்தங்களின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சி ஓரளவுக்கு அடையப்பட்டுள்ளது. முடிக்கப்பட வேண்டிய மறுசீரமைப்பு செயன்முறை தொடரப்பட்டு, அதன் மூலம் ஒருவித ஸ்திரத்தன்மை அடையப்பட்டுள்ளது. கையிருப்பு இலக்குகள் போன்ற பெரும்பாலான பொருளாதார குறிகாட்டிகளும் அதிகநிலையான மட்டத்தில் நிலைபெற்றுள்ளன. என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முன்னேற்றத்தைப் பொறுத்தவரை, வரவுசெலவுத் திட்டத்தின் செலவினப் பக்கத்தில் மூலதனச் செலவினத்தில் மந்தநிலை இருப்பதாகத் தெரிகிறது, என்றும் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து வெளியே வருவதால், வளர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு சில அரசாங்க ஆதரவு தேவையாக உள்ளது என்றும் கூறினார்.

ஆவரின் கூற்றுப்படி, மூலதனச் செலவினத்தின் மந்தநிலை வளர்ச்சியைப் பாதிக்கத் தொடங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சற்றுக் குறைந்து வருகிறது, மேலும் இது வரவிருக்கும் காலாண்டுகளில் மிகவும் தெளிவாகத் தெரியக்கூடும். அதனை உரியவாறு கையாள வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக அரச நிறுவனங்களில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் அவசியமாக முன்னெடுக்கப்பட  வேண்டியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இலங்கை மின்சார சபையில் சில சீர்திருத்தங்கள் நடந்துள்ளன, ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டிற்கு ஏற்ப இன்னும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இதை வெற்றிகரமாக அடைவது, நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், பொருளாதாரம் மீண்டும் நெருக்கடிக்குள் செல்லாமல் இருக்கவும் பாதுகாப்புகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அடுத்த ஆண்டுக்கான சவால், இந்த வேகத்தை மேலும் கட்டியெழுப்புவதாக உள்ளதோடு பணவீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதுடன், பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் ஈட்டுவதற்கான துறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தான் தங்கியுள்ளது.  

ஆக மொத்தத்தில் அநுரவின் முதலாவது ஆண்டு பொருளாதார ரீதியாக முதலாவது படியை அடைந்திருந்தாலும் அது அழுத்தமாக பதிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/226442

காற்றாலையும் என்பிபியும்!

1 month 1 week ago

npp.webp?resize=750%2C375&ssl=1

காற்றாலையும் என்பிபியும்!

மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலைக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் சில கிழமைகளுக்கு முன்பு அரசுத் தலைவரை சந்தித்து உரையாடி இருந்தார்.

அதில் அவர் பேசிய மற்றொரு விடயம் பின்னர் ஊடகங்களில் சர்ச்சைக்குரியதாக மாறியது.மன்னார் மாவட்ட வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்காக அதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆயர் கேட்டதாக ஒரு தகவல் ஊடகங்களில் வெளிவந்தது. அந்த ஆஸ்பத்திரி மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் வருகிறது. அதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது ஏற்கனவே தரப்பட்ட அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய அரசாங்கத்திடம் தாரை வார்த்து கொடுக்கும் ஒரு முயற்சி என்று அதை விமர்சித்தவர்கள் கூறினார்கள். மன்னாரில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.ரவிகரனும் சத்தியலிங்கமும் அதை எதிர்த்துப் பேசியதாகவும் தெரிகிறது. மாகாண அதிகாரத்தில் கீழ்வரும் ஒரு வைத்தியசாலையை மத்தியிடம் கொடுப்பது என்பது என்பது காற்றாலை, கனிமவள அகழ்வு என்பவற்றிற்கு எதிரான போராட்டங்களையும் பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன

மன்னார் மறைமாவட்ட ஆயர் வெளிநாட்டில் இருந்த காலத்தில் இந்த விமர்சனங்கள் மேலெழுந்தன. ஆனால் அதே காலப்பகுதியில் இந்தியா அந்த ஆஸ்பத்திரியின் அபிவிருத்திக்கு வேண்டிய நிதி உதவியைச் செய்வதற்கு முன் வந்திருக்கிறது.அந்த ஆஸ்பத்திரியைத் தரமுயர்த்துவதற்கு பெருந்தொகையான பணத்தைத் தருவதற்கு இந்தியா முன் வந்திருப்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர் பின்னர் உறுதிப்படுத்தினார்.

ஆஸ்பத்திரி தொடர்பான செய்திகளின் பின்னணியில்,ஆயர் வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரவும் வெளிநாட்டில் இருந்த ஒரு காலகட்டத்தில்,காற்றாலை தொடர்பான மக்களின் எதிர்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு காற்றாலைகளை நிறுவுவது என்ற முடிவை அரசாங்கம் அறிவித்தது.

அந்த முடிவை எதிர்த்து காற்றாலை நிறுவுவதற்கான உபகரணங்களை தீவுக்குள் கொண்டுவர விடாமல் தடுத்து மின்னார் மக்கள் நடாத்திய போராட்டத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் பலத்தைப்  பிரயோகித்திருக்கிறது.அதில் கத்தோலிக்க மதகுருமார் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மன்னார் மக்கள் நாளை அதாவது வரும் திங்கட்கிழமை கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக மன்னார் மக்கள் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலுக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள். இப்போராட்டங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களோடு இணைந்திருக்கிறார்கள். வெளிமாவட்டங்களிலும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக இப்போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை அண்மையில் கொழும்பு வரை விஸ்தரித்து இருந்தார்கள்.

கனிமவள அகழ்வுக்கு எதிரான மின்னார் மக்களின் கோரிக்கைகளை யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் காற்றாலை தொடர்பான விடயத்தில் எதிரும் புதிருமான கருத்துக்கள் உண்டு. மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை. காற்றாலையும் சூரிய மின்கலங்களும் உலகின் பல பாகங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஐரோப்பாவில் காற்றாலைகள் தொடர்பான விமர்சனங்களை கவனத்தில் எடுத்து புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காற்றாலைகளில் உள்ள விசிறிகளில் பட்டு பறவைகள் இறப்பது தொடர்பாகவும் அவை அதிக இரைச்சலை எழுப்புவது தொடர்பாகவும் விமர்சனங்கள் உண்டு.

இந்த விமர்சனங்களை உள்வாங்கி தன்னைத் தானே சுற்றும் விசிறி இல்லாத காத்தாடிகளை ஐரோப்பா உருவாக்கிக் கொண்டிருக்கிறது.ஜெர்மன் இந்த விடயத்தில் முன்னோடியாக காணப்படுகிறது. மேலும் அண்மையில் கிடைத்த ஓர் ஆய்வு முடிவின்படி காத்தாடிகளின் செட்டைகளில் பட்டு இறக்கும் வலசைப் பறவைகளின் இழப்பு விகிதத்தை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் வெற்றியளித்திருக்கின்றன. அதன்படி காற்றாலைகளின் ஒரு சட்டையை கறுப்பாக்கினால் கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கையை 70% ஆக குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காற்றாலை மின்சாரம் தொடர்பாக எழுப்பப்படும் விமர்சனங்களை உள்வாங்கி ஐரோப்பா புதிய முன்னேற்றகரமான காற்று மின்சக்தி திட்டங்களை உருவாக்கிக் கொண்டு வரும் ஒரு பின்னணியில், மன்னாரில்  காற்றாலை மின்சக்தி திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடுவது குறித்து தமிழ் மக்கள் மத்தியிலேயே ஒரு பகுதியினர் கேள்வி எழுப்புவதுண்டு.

காற்றாலை மின் சக்தியை மன்னார் மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்குரிய காரணங்களைத் தனியாக விவாதித்துக் கொள்ளலாம். ஆனால் காற்றாலை மின்சக்தி திட்டம் எனப்படுவது சூழல் நேய அபிவிருத்தித்  திட்டங்களில் ஒன்று. சூழல் நேயம் என்பது என்ன? சுற்றுச்சூழல் என்பது அஃறிணைகள் மட்டுமல்ல. உயர்திணைகளும்தான். அதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதே மனிதனின் நோக்கு நிலையில் இருந்து உண்டாகிய ஒரு சிந்தனைதான். பூமியைக் குறித்த எல்லா வியாக்கியானங்களும் மனிதனின் நோக்கு நிலையிலிருந்து உருவாக்கப்பட்டவைதான். சுற்றுச்சூழல் என்பது அஃறினை,உயர்திணை அனைத்தும் அடங்கியது. எனவே ஒர் அபிவிருத்தித் திட்டம் குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு நேயமன ஒர் அபிவிருத்தி திட்டம் என்பது அப்பகுதி மக்களால் வரவேற்கப்பட வேண்டும். அப்பகுதி மக்களின் பங்கேற்போடு அதனை உருவாக்க வேண்டும்.அப்பொழுதுதான் அது ஆகக்கூடிய பட்சம் சுற்றுச்சூழலுக்கு நேயமனதாக இருக்கும்.

மன்னார் மாவட்டத்தில் காற்றாலைகளுக்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மட்டும் வரவில்லை கத்தோலிக்க திருச்சபையினர் மத்தியில் இருந்து மட்டும் வரவில்லை கொழும்பில் தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் மத்தியில் இருந்தும் வந்தது. காலி முகத்திடலில் “கோட்டா கோகம” கிராமத்தில் ஒரு பதாகை காணப்பட்டது. அதில் அதானி குழுமத்தின் முதலீட்டுக்கு எதிராக வாசகங்கள் காணப்பட்டன. அது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மதகுருவோடு ஒரு தமிழ் செயற்பாட்டாளர் உரையாடினார்.

போராட்டங்களில் முன்னணிகள் காணப்பட்ட ஆக்கத்தோலிக்க மதகுரு கூறினார் “ஆம் நாங்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும்” என்று. அப்பொழுது அந்தத் தமிழ் செயற்பாட்டாளர் அவரிடம் கேட்டிருக்கிறார் “அப்படியென்றால் ஜேவிபியின் கொள்கைகளில் ஒன்று ஆகிய இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்த்தல் என்ற கொள்கை இப்பொழுதும் நடைமுறையில் உள்ளதா? அந்த இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகளாக மலையக மக்களை பார்க்கும் நிலைமை இப்பொழுதும் உண்டா? இந்தப் போராட்டம் மலையக மக்களுக்கும் எதிரானதா?” என்று.அதற்கு அந்த கத்தோலிக்க மதகுரு சொன்னார் “இல்லை.. இல்லை அது அதானி குழுமத்தின் முதலீட்டுக்கு எதிரானது. எல்லா விஸ்தரிப்பு வாதங்களுக்கும் எதிரானது”. என்று. “அப்படியென்றால் அம்பாந்தோட்டையிலும் கொழும்புத் துறைமுகத்திலும் சீன விஸ்தரிப்பையும் எதிர்த்து நீங்கள் பதாகைகள் போடுவீர்களா?” என்று அந்தத் தமிழ் செயற்பாட்டாளர் அந்தக் கோட்டா கோகம மதகுருவிடம் கேட்டிருக்கிறார்.

அந்தப் போராட்டத்தில் அதிகமாகக் காணப்பட்ட முக்கியஸ்தர்களில் அந்த மத குருவும் ஒருவர். அந்தப் போராட்டங்களின் நேரடி விளைவுதான் இப்போது இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆகும். அதாவது காலிமுகத் திடலில் கோட்டா கோகம கிராமத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக சுலோகங்களை ஏந்திக்கொண்டு நின்ற ஒரு போராட்டத்தின் குழந்தையாகிய என்பிபி அரசாங்கம் எந்தக் காற்றாலைத் திட்டத்தை இந்திய விஸ்தரிப்பு வாதம் என்று கூறி நிராகரித்ததோ, அதே காற்றாலைத் திட்டத்திற்கு எதிராகப் போராடிய மன்னார் மக்களையும் குறிப்பாக கத்தோலிக்க மத குருக்களையும் பலத்தைப் பிரயோகித்து அகற்றியிருக்கிறது.

மன்னாரில் சூரிய மின்கல திட்டங்களுக்கு தாங்கள் எதிர்ப்பு இல்லை என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்களும் கூறுகிறார்கள்.ஆனால் மன்னர் தீவுக்குள் காற்றாலைகள் நிறுவப்படுவதைத்தான் அவர்கள் எதிர்க்கின்றார்கள்.அதுதொடர்பான அவர்களுடைய கவலைகளைக் கேட்டு அதுதொடர்பான துறைசார் நிபுணர்களையும் உள்ளடக்கிய ஆழமான உரையாடல்களை நடத்தி இறுதி முடிவை எடுக்கலாம்.ஒரு சூழல் நேயத் திட்டம் அப்பகுதி மக்களால் எதிர்க்கப்படுகிறது என்றால் அதனை பலவந்தமாக அமல்படுத்த முடியாது என்பது அது ஒரு சூழல் நேயத்திட்டம் என்பதனாலேயே அடிப்படையான ஒரம்சம்.

இப்பொழுது மக்களுக்கு எதிராகப் பலம் பிரயோகிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் எதிர்ப்பு மேலும் விஸ்தரிக்கப்படும் நிலைமைகளே தெரிகின்றன. நேற்று நடந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகச் சந்திப்பில் இது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான கட்சிகள் இந்த விடயத்தில் போராடும் மக்களோடு நிக்கக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன.எனவே இந்தப்போராட்டம் எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படலாம்.

இந்த விடயத்தில் கட்சிகள் தலையிட வேண்டும் என்று போராடும் மக்கள் பல மாதங்களுக்கு முன்னரே கேட்டு வந்தார்கள்.அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அதுதொடர்பாக உரத்த குரலில் எதிர்க்கவில்லை என்றும் ஒரு விமர்சனம் அவர்களிடம் இருந்தது. இத்தகையதொரு பின்னணியில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பெருங்கூட்டம் மின்னார்  நகரப் பகுதியில் நடந்தது. அதில் பேசிய சிவில் சமூகப் பிரதிநிதி காற்றாலை, கடல் அட்டை இரண்டிலும் அப்பகுதி மக்களுடைய விருப்பம் கேட்டுப் பெறப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்திப் பேசினார். காற்றாலை,கடலட்டை இரண்டும் தமிழ் மக்களின் நிலத்தின் மீதான உரிமையைக் குறிப்பவை. எனவே தமது நிலத்தின் மீது தமிழ் மக்களுக்குள்ள உரிமையைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் காற்றாலை மற்றும் கடல் அட்டை  தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தமிழ் மக்களுக்கு வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இப்பொழுது அந்த விடயம் பெரும்பாலான கட்சிகள் பேசும் ஒரு விடயமாக,பெரும்பாலான செயற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ளும் ஒரு விடயமாக, ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை போராடிய மக்கள் மீது பலம் பிரயோகிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் இந்தப் போராட்டம் மேலும் பல மடையும்.

https://athavannews.com/2025/1448738

அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி!

1 month 1 week ago

அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி!

September 28, 2025 12:09 am

அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி!

*சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று கூறப்படும் நிலையில், அநுரவுடன் கைகோர்க்கும் ஐநா…

*தமிழ்த் தரப்பில் ஒருமித்த குரல் செயற்பாடுகள் அற்ற தன்மையை சாதகமாக பயன்படுத்தும் சர்வதேசம்…

*கனடா அரசின் இராணுவ நிபுணர் கொழும்பில் பயிற்சி வழங்கியுள்ளார்.

அ.நிக்ஸன்-

—  —  —

ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை என்று தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வரும் பின்னணில், ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பை காப்பாற்றும் முயற்சியிலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன.

அத்துடன், 1920 இல் ஆரம்பித்த சிங்கள – தமிழ் முரண்பாடுகள், முப்பது வருட அஹிம்சைப் போராட்டத்தின் மூலமும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும் தீர்க்க முடியாமல் போன சந்தர்ப்பங்களில், 2009 இற்குப் பின்னரான கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் என தமிழர்கள் கோருகின்றனர்.

இப் பின்புலத்தில், மேற்கு – ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் பக்கம் நிற்பதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

ரசிய – உக்ரெய்ன் போர், இஸ்ரேல் – காசா போர் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வரிகள் உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு மத்தியில் உலக அரசியல் சமநிலை தற்போது குழப்பமடைந்துள்ளது.

இதன் காரண – காரயமாக சிறிய நாடு ஒன்றைக் கூட தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தியை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் வகுத்துள்ளன.  டொனால்ட் ட்ரம்ப்பும் அந்த நிலைப்பாட்டில் தான் இயங்குகிறார்.

1-400x257.png

இங்கே, வல்லரசுகளின் இப் போட்டித் தன்மைகளை சிங்கள அரசியல் தலைவர்கள் நன்கு புரிந்து கையாளுகின்றனர்.

பாலஸ்தீனம் தனிநாடு அதாவது இரு அரசுத் தீர்வு முறைக்கு எப்போதோ அங்கீகாரம் பெற்றுவிட்டது. ஆனாலும், அமெரிக்க அழுத்தங்கள் மற்றும் சர்வதேச புவிசார் அரசியல்  நலன்கள் அடிப்படையில் பாலஸ்தீன விவகாரம் முடிவின்றி நீடிக்கிறது என்பதே உண்மை.

அதேநேரம் பாலஸ்தீன விவகாரத்துக்கு இரு அரசுத் தீர்வு என ஏற்கனவே கூறிய சர்வதேச நாடுகள் கூட மனதளவில் அதனை முழுமையாக விரும்பவில்லை என்பது மற்றொரு உண்மை.

இந்த ஊடாட்டங்களுக்கு மத்தியில் சர்வதேச அரசியல் நலன்கள் என்ற தன்மையை ஆழமாக அறிந்து குறிப்பாக சமகால புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிச் சூழலுக்கு ஏற்ப, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐநாவில் கூறியிருக்கிறார்.

மகிந்த ராஜபக்சவும் அவ்வாறு கூறியிருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என கூறப்பட்ட மைத்திரி – ரணில் ஆட்சியிலும் பாலஸ்தீனம் பற்றி அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், அது இலங்கை அரசின் பாலஸ்தீனம் பற்றிய உண்மையான அரசியல் பார்வையல்ல.

இருந்தாலும், பாலஸ்தீனம் தனி நாடு ஆக வேண்டும் என கூறுவது ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பின் ஒரு உத்தி. அதாவது, ஈழத் தமிழர் விவகாரத்தில் அமெரிக்க – இந்திய அரசுகளை தொடர்ந்து தம் பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கையாளப்படும் அரசியல் அணுகுமுறை அது.

குறிப்பாக, அமரிக்கா போன்ற மேற்கு நாடுகளும் அயல் நாடான இந்தியாவும் இஸ்ரேல் ஆதரவு நிலையில் செயற்படும் பின்னணியில், சிறிய நாடான இலங்கைத்தீவின் ஜனாதிபதி ஒருவர் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என பேசியிருப்பது அரசியல் ரீதியான தேவைகளின் அடிப்படை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உலக அரசியல் ஒழுங்குகள் குழப்பமடைந்து வரும் ஒவ்வொரு சூழலிலும் இலங்கை ஜனாதிபதிகள் அவ்வாறான இராஜதந்திர பேச்சை முன்னெடுப்பது வழமை. இதற்கு அநுரகுமார திஸாநாயக்கவும் விதிவிலக்கல்ல.

anura-un.jpg

அதற்கான பிரதான காரண – காரியம் என்பது, ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்து உள்ளக விசாரணை பொறிமுறையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கமாகும். அதற்கு மேற்கு – ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு  அவசியம். அதுவும் இந்தியா மிகவும் தேவையான ஒரு நாடு.

ஆகவே, சர்வதேச அளவில் அந்த நாடுகள் தற்போது கொண்டுள்ள பாலஸ்தீனம் தொடர்பான தற்போதைய அரசியல் கொள்கைக்கு மாறான கருத்து ஒன்றை உலக அரங்கில் பகிரங்கப்படுத்தினால், உடனடியாக அந்த நாடுகள் இலங்கையை நோக்கி அவதானம் செலுத்தும் என்ற நம்பிக்கை சிங்கள அரசியல் தலைவர்களிடம் உண்டு.

இந்த அவதானம் என்பது, இலங்கை ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என விரும்பும் சிங்கள அரசியல் தலைவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற மேற்கு – ஐரோப்பிய நாடுகள் இந்தியா ஊடாக காய் நகர்த்த முற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்கும்.

கடந்த காலங்களிலும் சிங்கள அரசியல் தலைவர்கள் இவ்வாறான அரசியல் காய் நகர்த்தல்களை கன கச்சிதமாகச் செய்திருக்கின்றனர்.

இதனை மேலும் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதானால், 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பெரும் வெற்றிக் கோசத்துடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட காலம் முதல், இன்றைய அநுரகுமார திஸாநாயக்க வரையும் நீட்சியடையும் பிரதான அரசியல் உத்தி இது.

ஏனெனில், தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்பதில் இந்திய மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை. சீனாவை மையப்படுத்திய இந்தோ – பசுபிக் விவகாரத்தில், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவுடன் பனிப் போர் நிலவினாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் அந்த நாடுகள் இந்தியாவை கடந்து எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாது என்பதற்கு கடந்த கால செயற்பாடுகள் உதாரணமாகும்.

இவற்றையெல்லாம் அறிந்தே சிங்கள அரசியல் தலைவர்கள் செயற்படுகின்றனர். கட்சி அரிசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மகிந்த சமரசிங்க, அமரர் மங்கள சமரவீர, ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் பீரிஸ், மிலிந்த மொறகொட போன்றவர்கள் சிங்கள அரசியல்வாதிகள் என்பதற்கும் அப்பால், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் மிக நுட்பமாக கையாளும் சிறந்த இராஜதந்திரிகளாவர்.

இந்தியாவைக் கையாள மிலிந்த மொறகொட வகுத்துள்ள அரசியல் உத்திகளையே அநுரகுமார திஸாநாயக்க தற்போது நன்கு பயன்படுத்துகிறார் என்பது வெளிப்படை.

Moragoda1.jpg

இதனை மையமாகக் கொண்டே அநுரகுமார திஸாநாயக்கா பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை துணிந்து ஐநாவில் கூறியிருக்கிறார். இது மேற்கு – ஐரோப்பிய  நாடுகளுக்குப் புரியாத புதிர் அல்ல.

ஆனாலும், இந்தோ – பசுபிக் விவகாரத்தில் இலங்கைத்தீவு முக்கிய ஒரு தளமாக இருப்பதை கருத்தில் கொண்டு சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சி கட்டமைப்பை நியாயப்படுத்தும் அரசியல் செயன்முறைகளுக்கு ஆதரவு வழங்கக் கூடிய ஏற்பாடுகளை செய்வார்கள் என்பதே உண்மை.

உதாரணமாக, வடக்கு கிழக்கில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரி ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறிக்கு இலங்கை இராணுவம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

கொழும்பில் உள்ள அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் இந்த மாதம் 8 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட பாடநெறியின் நிறைவு விழா இந்த மாதம் 19 இடம்பெற்றிருக்கிறது.

இன அழிப்பு அல்லது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடுகளின் இராணுவத்தினர் ஐநாவின் இப்படியான பாடநெறிகளுக்குத் தெரிவு செய்யப்படுவதில்லை. ஆனால், இலங்கை இராணுவம் 2009 இற்குப் பின்னரான சூழலில் பல சந்தர்ப்பங்களில் இப் பாட நெறிகள் மற்றும் சர்வதேச கூட்டு பயிற்சிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றன.

இருந்தாலும், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் இலங்கை இராணுவம் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றன. ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பயணத் தடைக் கூட விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட பயணத் தடை விதித்திருக்கின்றன.

ஆகவே, மிலிந்த மொறகொட, பேராசிரியர் ரொஹான் குணவர்த்த போன்றவர்கள் சர்வதேச அளவில் இலங்கை இராணுவம் தொடர்பாக மேற்கொள்ளும் தொடர் பிரச்சாரங்களில் ஐநா நம்பிக்கை கொண்டுள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக, தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாகின்றனர் என பிரகடனப்படுத்தியுள்ள கனடா அரசின் டிரேசி மார்டினோ என்ற இராணுவ நிபுணர் பயிற்சிக் குழுவுக்கு தலைமை தாங்கியமை அதனை கோடிட்டுக் காண்பிக்கிறது.

இப் பாடநெறியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 20 அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், பங்களாதேஷ், ஃபிஜீ, இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 09 வெளிநாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அர்ஜென்டீனாவைச் சேர்ந்த திரு. விக்டர் மானுவல் நுனேஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல்  நரேஷ் சுப்பா ஆகியோர் பிற பாட நிபுணர்களாகப் பணியாற்றினர்.

ஆகவே, அநுர அரசாங்கத்தை முன்னேற்றி, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தமது புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுவதே மேற்கு – ஐரொப்பிய நாடுகளின் நோக்கமாக உள்ளன.

ஐநா இலங்கையின் நலன்களுக்கு ஏற்ப ஒத்துழைப்பு வழங்கும் என, ஐநாவின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ், அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவான சில நாட்களில் சந்தித்தபோது கூறியதை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அத்துடன், அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையை ஐநா எப்போதும் கையாளும். ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட இனமாக ஒருமித்த குரலில் தமது அரசியல் உரிமை பற்றிய செயற்பாடுகளை உரிய முறையில் செயற்படுத்த தவறினால், ஐநா போன்ற சர்வதேச அமைப்புகள் அந்த இனத்தை ஒடுக்கும் அரசுகளுடன் கைகோரக்கும் ஆபத்து உருவாகும்.

ஆகவே 2009 இற்குப் பின்னரான தமிழர்களின் செயற்பாடுகளில் ஒருமித்த செயற்பாடுகள் அற்ற தன்மை மேலோங்கி வருவதால், ஐநா போன்ற அமைப்புகளும் சர்வதேச நாடுகளும், இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த மக்கள் என்ற அடிப்படையில் “இலங்கை அரசு” என்ற கட்டமைப்புடன் மாத்திரம் உறவை பேணி அபிவிருத்தி அரசியலை புகுத்துகின்றன.

இதனை அநுரகுமார அல்ல, வேறு எந்த ஒரு சிங்கள தலைவரும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

https://oruvan.com/anuras-un-speech-and-international-background/

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க

1 month 1 week ago

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க

September 21, 2025

ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு  செவ்வாய்கிழமையுடன் (23/9) சரியாக ஒரு வருடம் நிறைவடைகிறது. 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் நேரடியாக முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 வாக்குகளை பெறாவிட்டாலும், இலங்கையில் இடதுசாரி அரசியல் இயக்கத்தின் தலைவர் ஒருவர் ஜனநாயக தேர்தலின் மூலம் முதற்தடவையாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த சந்தர்ப்பமாக அது இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. 

அதேவேளை, தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக ஆயுதக் கிளர்ச்சியொன்றை நடத்திய இடதுசாரி அரசியல் இயக்கம் ஒன்று  தேர்தலின் மூலம் அதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாகவும் திசநாயக்கவின் அந்த வெற்றி இலங்கையை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது. முன்னென்றும் இல்லாத வகையில் இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியை (2022 அறகலய) தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதியாக வந்த திசநாயக்கவிடமும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும் மக்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள். 

தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக அதன் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர்கள் தாங்கள் உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான ஆசனங்களை தந்தால் போதும் என்று வெளிப்படையாகவே கேட்டபோதிலும் கூட, நாட்டு மக்கள் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்தை வழங்கினார்கள். அதுவும் குறிப்பாக ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தாங்கள்  மட்டுப்பாடில்லாத அதிகாரத்தை மக்களிடம் இருந்து கேட்கவில்லை என்றும் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைப் பலத்தை தந்தால் போதுமானது  என்றும் கூறினார்.  

“புதிய அரசியல் கலாசாரத்தையும் முறைமை மாற்றத்தையும்” கொண்டுவரப்போவதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல்களின்போது வழங்கிய வாக்குறுதியை  மக்கள் எந்தளவுக்கு நம்பினார்களோ தெரியவில்லை. ஆனால், பழைய பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீது தங்களுக்கு இருந்த கடுமையான வெறுப்பையும் ஆத்திரத்தையும் தேர்தல்களில் அவர்கள் தெளிவாக  வெளிப்படுத்தினார்கள். 

இத்தகையதொரு பின்புலத்திலேயே, ஜனாதிபதி திசநாயக்கவின் ஒரு வருடகால ஆட்சியின் செயற்பாடுகளை நோக்க வேண்டும்.

கடந்த வருடம் இரு தேசிய தேர்தல்களிலும்  நாட்டு மக்களுக்கு தாங்கள் வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளின் நடைமுறைச் சாத்தியமற்ற தன்மையை ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் இப்போது ஒரு வருடம் கடந்த நிலையில் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்பலாம்.  பொருளாதார இடர்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கு விரைவான நிவாரணங்களை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த சனத்தொகையில் அதிகப்  பெரும்பான்மையானவர்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு  நடவடிக்கைகளின் விளைவாக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் அந்த உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்போவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது. ஆனால், அதே உடன்படிக்கையின் நிபந்தனைகளை எந்த விதமான மாற்றமும் இன்றி பின்பற்றுவதை தவிர, புதிய அரசாங்கத்துக்கு வேறுவழி இருக்கவில்லை. 

உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து நேர்மறையான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்ற போதிலும், சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரங்களில் உருப்படியான எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை. 

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகளையே தொடர்ந்து முன்னெடுக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் சொந்த பொருளாதாரக் கொள்கைகளை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது எவருக்கும் தெரியவில்லை. முன்னைய ஆட்சியாளர்களை மக்கள்  வெறுத்து ஒதுக்கிய காரணங்களை நன்கு உணர்ந்தவர்களாக ஜனாதிபதி திசநாயக்கவும் அரசாங்க தலைவர்களும்  தங்களது நிருவாகம் ஊழலுக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுகிறா்கள். கடந்த கால ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதிலும் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகிறது. மற்றைய முனைகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு மந்தநிலை காணப்படுகிறது.

பதவிக்காலத்தின் முதல் வருடத்தில் ஒரு அரசாங்கத்திடமிருந்து நாம் எதிர்பார்பார்க்கக்கூடியவற்றுக்கு  ஒரு மட்டுப்பாடு இருக்கிறது என்ற போதிலும், தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தின் ஒரு வருடகால செயற்பாடுகள் அதன் எதிர்காலத் திசைமார்க்கத்தை மதிப்பிடுவதற்கு ஓரளவுக்கேனும் போதுமானது என்பது நிச்சயம். ஜே.வி.பி.யின் கடந்தகால அரசியல் குறித்த பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், ஜனநாயக தேர்தல்களின் மூலமாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த கட்சி தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறைகளையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

பழைய பாரம்பரிய அதிகார வர்க்க அரசியல் கட்சிகளின்  அரசாங்கங்களுக்கு சேவை செய்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு முறைமை மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது நடைமுறையில் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பதை ஜே.வி.பி.யின் தலைவர்கள் தற்போது தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். தங்களது கொள்கைகளின் பிரகாரம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பில் சீற்றமடைந்த ஜே.வி.பி.யின் முக்கிய அமைச்சர்கள் அண்மைக்காலங்களில் வெளியிட்ட கருத்துக்கள் அவர்களின் அந்த புரிதலின் வெளிப்பாடேயாகும். அடுத்த சுனாமி உயர்மட்ட அதிகாரிகளையே தாக்கும்  என்று கூட ஒரு அமைச்சர் கூறினார். பழைய அரசு இயந்திரத்தைப் பொறுப்பேற்று நிருவகிப்பதையே ஒரு வருடகாலமாக தேசிய மக்கள் சக்தி செய்து வருகிறது. 

இரு வாரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சி, முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மாபெரும்  வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு முன்னெடுத்த அரசியலமைப்புச் சீர்திருத்த மற்றும்  ஜனநாயக பரீட்சார்த்தங்களின் தோல்வியை உலகிற்கு அம்பலப்படுத்தியது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கடந்த நூற்றாண்டில் இரு தசாப்தகால இடைவெளியில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஒரு இடதுசாரி அரசியல் இயக்கம் என்ற வகையில் ஜே.வி.பி. நேபாள நிகழ்வுகளை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

இலங்கையை பொறுத்தவரை, புதிய அரசியல் கலாசாரம் என்பது ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியல் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதுடன் மாத்திரம் நின்று விடுவதல்ல.  இனத்துவ உறவுகளிலும் முன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு காணப்பட வேண்டிய அரசியல் தீர்வுக்கான அணுகுமுறையிலும்  ஏற்படவேண்டிய முக்கியமான  மாற்றத்தை பிரதிபலிப்பதாக அந்த புதிய அரசியல் கலாசாரம் அமைய வேண்டும். 

முன்னைய ஆட்சியாளர்களைப் போலன்றி ஜனாதிபதி திசநாயக்க சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக வடபகுதி தமிழர்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதில் கூடுதல் அக்கறை காட்டுகிறார். பதவியேற்ற ஒரு வருடகாலத்தில் அடிக்கடி யாழ்ப்பாணத்துக்கு அவர் விஜயங்களை மேற்கொண்டிருக்கிறார்.  சகல சமூகங்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களது கொள்கை என்றும் ஓயாது பிரகடனம் செய்கிறார். 

ஆனால், கடந்த காலத்தில் அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட இனப்பாகுபாட்டுக் கொள்கைளினாலும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளினாலும்  பாதிக்கப்பட்டு வந்திருக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் முகங்கொடுக்கும்  பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு ஒரு இடைக்காலத் தீர்வுகளையேனும் காண்பதில் அக்கறை காட்டாமல் சகலரையும் சமத்துவமாக நடத்துவதாக பிரகடனம் செய்வதில் அர்த்தமில்லை என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ளவேண்டியது  அவசியம்.

ஜே.வி.பி.யை பொறுத்தவரை, இனப்பிரச்சினைக்கு  அரசியல் தீர்வு காண்பதற்கு குறிப்பாக அதிகாரப்  பரவலாக்கத்தை செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த ஒரு கசப்பான கடந்த காலத்தைக் அது கொண்டிருக்கிறது.  ஆட்சியதிகாரத்துக்கு  வந்த பின்னராவது அந்த கடந்த காலத்தில் இருந்து வேறுபட்ட ஒரு போக்கை கடைப்பிடிப்பதில் தங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை  ஜே. வி.பி. தலைவர்கள் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. ஜனாதிபதி திசநாயக்க போன்றவர்களை இனவாதிகள் என்று கூறுவதை விடவும் இனவாதத்தின் கைதிகள் என்று அழைப்பதே பொருத்தமாகும். அந்த இனவாதச் சிறைக்குள் இருந்து அவர்கள் வெளியில் வரவேண்டும். 

இனத்துவ உறவுகளும் தேசிய இனப்பிரச்சினையும் இதுகாலவரையில் சிங்கள அரசியல் சமுதாயத்தினாலும் தமிழ் அரசியல் சமுதாயத்தினாலும் கையாளப்பட்ட நடைமுறைகள்  காரணமாக இலங்கையின் இனப்பிளவு தொடர்ந்தும் ஆழமானதாகவே இருந்துவருகிறது. இனத்துவ உறவுகளுடன் தொடர்புடைய விவகாரங்களில் வடக்கும்  தெற்கும் இரு வேறு உலகங்கள் போன்றே காணப்படுகின்றன. அத்தகைய கவலைக்குரிய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கு சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது  மாத்திரமல்ல,  பெரும்பான்மைச் சமூகத்தையும் பழைய சிந்தனைப் போக்கில் இருந்து விடுபட வைக்கக்கூடிய மார்க்கத்தில் பயணம் செய்வதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் இனிமேலாவது தயாராக வேண்டும். 

https://arangamnews.com/?p=12333

வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம் — கருணாகரன் —

1 month 2 weeks ago

வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம்

September 21, 2025

— கருணாகரன் —

“மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் பின்னடிப்பது ஏன்? விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தி, மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாதபோது ஆளுநர்கள் எழுந்தமானமாகச் செயற்படுகிறார்கள். கண்டபாட்டுக்கு நிதியைச் செலவு செய்கிறார்கள்..” என்று ஒரு நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலை எதிர்க்கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சுமத்தியுள்ளன. 

அதிகாரத்திலிருக்கும் NPP ஆட்சிக்கு வர முன்பே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் முந்திய ஆட்சியாளர்கள் காலத்தைக் கடத்தி வந்தனர். 2017 க்குப் பிறகு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேயில்லை. அப்போதும் மாகாணசபைத் தேர்தலை நடத்தும்படி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகள் பொருட்படுத்தப்படவில்லை.

இப்பொழுது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு கோருகின்ற தரப்புகள்தான் அப்பொழுது ஆட்சியிலிருந்தன. எனவே அவர்களுக்கே இந்தத் தவறில் கூடுதல் பொறுப்புண்டு. அவர்களே இந்தத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்துத் தாமப்படுத்தி, இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள். அவர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் விட்ட தவறை இப்பொழுது அறுவடை செய்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, மக்களும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. 

முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வடக்கு, கிழக்கு  மாகாணசபைகள் சீரழிவு நிலைக்குள்ளாகி விட்டன. அதிலும் வடக்கு மாகாண சபையின் நிலை இன்னும் மோசம். மாகாணசபை சீரழிந்துள்ளது என்றால், அதனுடைய நிர்வாகம் பாழடைந்துள்ளது என்றே அர்த்தமாகும். நிர்வாகம் பாழந்துடைந்துள்ளது என்றால். அதற்குப் பொறுப்பானவர்கள் தங்களுடைய பொறுப்பைச் செய்யவில்லை. அல்லது பொறுப்பைச் செய்யக் கூடிய ஆளுமையுடன் இல்லை என்பதே அர்த்தமாகும். இதற்கு வலுவான ஆதாரமாக, “பல அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் மக்களுக்குச் சரியான முறையில் தங்களுடைய பணிகளைச் செய்யவில்லை.” என்று தொடர்ச்சியாக ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கவலை தெரிவித்து வருவதைச் சொல்லலாம். ஆளுநர் சொல்வதில்  உண்மையுண்டு. ஒரு தொகுதி உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் உரிய முறையில் தங்களுடைய பணிகளைச் செய்வதில்லை. அதனால் மக்கள் அலைச்சல்களுக்குள்ளாக வேண்டியுள்ளது. மக்களுடைய தேவைகள் நிறைவேற்றுப்படாமல் காலதாமதமாகிறது. அதனால் அவர்களுக்குப் பாதிப்பும் சிரமமும் ஏற்படுகின்றன. அபிவிருத்திப் பணிகளிலும் இந்த மாதிரி தாமதங்களும்  பின்னடைவுகளும் ஏற்படுகின்றன. மருத்துவத்துறை, கல்வித்துறை போன்றவை சீர்குலைவைச் சந்திக்கின்றன. இப்படியே சொல்லிக் கொண்டு – பட்டியலிட்டுக்கொண்டு போகலாம். 

தொடக்கத்தில் ஆளுநர் சொல்வதையிட்டுப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஏனென்றால், மாகாணசபை நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆளுநர் அவதானித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிலைமை புரிகிறது. குற்றவாளிகளுக்கும் தவறிழைப்போருக்கும் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றார். அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வதற்கும் மாற்றிக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை – வாய்ப்பை அளிக்கிறார் என்றே பலரும் கருதினர். அத்துடன், புதிய NPP அரசாங்கமும் ஆட்சியில் இருப்பதால், நிச்சயமாக பெரிய மாற்றங்கள் – முன்னேற்றம் – ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நிலைமை வேறு விதமாகியது. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக வரவர நிலைமை மோசமாகத் தொடங்கியது. ஆளுநர் பிரச்சினைகளையும் குறைபாடுகளையும்  சொல்கிறாரே தவிர, அவற்றுக்குத் தீர்வைக் காண்பதாகக் காணோம் என்ற குரல்கள் எழத் தொடங்கின. ஆளுநர் நல்லவர், நேர்மையானவர். பண்பானவர். ஆனால், நிர்வாக ரீதியாக நடவடிக்கைகளை எடுப்பதில், தவறிழைப்போருக்கான தண்டனைகளை அளிப்பதில் போதிய உற்சாகத்தைக் காட்டவில்லை. ஏனோ தயக்கம் காட்டுகிறார். இதனால் குறைபாடுகள் அதிகரிக்கின்றன. தவறிழைப்போரும் பொறுப்பற்று நடப்போரும் எந்த வகையான அச்சமும் இல்லாமல் அதேவிதமாக நடக்கின்றனர்.  ஆளுநர் குறைபாடுகளையும் பிரச்சினைகளையும் சொல்கின்றவர் இல்லை. அவர் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர். தவறுகளை இழைப்போரையும் பொறுப்பற்று நடப்போரையும் நிர்வாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அது ஏன் செய்யப்படாதிருக்கிறது? என்ற விமர்சனங்களும் கேள்வியும் பரவலாகியுள்ளது. 

இப்பொழுது வடக்கு மாகாணத்தில் பல புகார்களோடு (முறைப்பாடுகளோடு) ஆளுநர் பணிமனைக்கு பெரும்பாலானோர் செல்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிலவற்றைப் பார்க்கலாம். 

1.   ஆளுநரிடம் தெரிவித்தால் – முறையிட்டால் – தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

2.   ஆளுநரைச் சந்திக்கக் கூடிய நிலை உள்ளதால்.

3.   ஆளுநரைத் தவிர வேறு யாரிடம் இதை முறையிடலாம் என்ற நிலையில். 

4.   ஏனைய இடங்களில் அளவுக்கு அதிகமான முறையீனங்களும் பிரச்சினைகளும் பெருகியுள்ளதால், ஆளுநரிடம் முறையிட வேண்டும், தீர்வைக் கோர வேண்டும் என்பதால். 

5.   ஆளுநரே எந்த நிலையிலும் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும். அல்லது நடவடிக்கைக்கு ஆணையிட வேண்டும் என்ற காரணத்தினால்.

ஆனாலும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உறங்கு நிலையிலேயே தள்ளி வைக்கப்படுகின்றன. சில விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக அதற்குரிய அதிகாரிகளோடு நேரடியாக ஆளுநர் களத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளைக் குறித்து ஆராய்ந்து நடவடிக்கைக்குப் பணிப்பதும் நடக்கிறது. அப்படிப் பணித்தாலும் காரியங்கள் எதுவும் உரிய முறையில் நடப்பதாக இல்லை. ஏதோ சாட்டுப்போக்குகள் சொல்லப்பட்டு இழுத்தடிக்கப்படுகின்றன. அல்லது செயலாக்கம் நடைபெறாமல் அப்படியே கை விடப்படுகிறது.

இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அண்மையில் பல ஊடகங்களில் வந்து பொதுக் கவனத்தைப் பெற்ற ஒரு விவகாரம், கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மகப்பேற்று மற்றும் பெண்கள் நோயியல் தடுப்பு – குணமாக்கல் பிரிவை இயங்க வைப்பதற்கான முயற்சியாகும்.

இந்த விடயம் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் ஆளுநரை நேரில் சந்தித்துப் பேசியது. 

அதனையடுத்து ஆளுநர் குறித்த மருத்துவனைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளோடு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். 

ஒரு மாதம் சென்ற பிறகும் எந்த விடயமும் நடக்கவேயில்லை. பதிலாக அந்தப் பிரிவு இயங்காமல் உள்ளதாகக் குறிப்பிட்டு, அங்குள்ள மருத்துவ உபகரணங்கள் வேறு மருத்துவமனைகளுக்கு இடமாற்றுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றன.

இதனையடுத்து நோயாளர் நலன்புரிச்சங்கம் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தச் சூழலில் உடனடியாக மருத்துவமனை நிர்வாகமும் வடமாகாண சுகாதார அமைச்சும் ஆளுநர் தலைமையில் ஒரு அவசர கூட்டத்தைக் கூட்டி குறித்த விடயம் தொடர்பாக மீண்டும் ஆராய்ந்தது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர், மாகாண  சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நோயாளர் நலன்புரிச் சங்கமும் அழைக்கப்பட்டிருந்தது. 

கலந்தாராய்வின்போது குறித்த பிரிவை இயக்குவதற்கான தேவைகளின் பட்டியலை மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்தார். அந்தப் பட்டியலின் அடிப்படையில் அவ்வளவு வளங்களையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியாது என்று சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்து, முதற் கட்டமாக மருத்துவப் பிரிவை அங்கே இயக்க வைப்பதாகவும் படிப்படியாக அதற்கான வளங்களை நிறைவு செய்ய முடியும் என்றும் பேசப்பட்டது. அதற்கமைய தீர்மானமும் எடுக்கப்பட்டது. 

அதற்குப் பிறகு 20 நாட்கள் கடந்து விட்டன. 

நிலைமையில் துளி முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இதற்குப் பிறகு யாரிடம் பேசுவது? எதைப் பேசுவது? 

இப்படித்தான் அதே மாவட்டத்தில் உள்ள மாவட்டப் பேருந்து நிலையக் காணியில் தவறான முறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தை (கடைகளை) அகற்றுவது தொடர்பாக ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இதற்கான கூட்டமும் நடந்தது. ஊடகங்களிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. 

ஆனால், நிலைமையில் முன்னேற்றத்தைக் காணவேயில்லை.

இப்படித்தான் பாடசாலைகளில் அதிபர் நியமனங்கள், ஆசிரிய இடமாற்றங்கள், காணிப் பகுதிகளில் தாதமங்கள் என ஏராளம் குறைபாடுகளும் பிரச்சினைகளும் மலிந்துள்ளன. 

காணிப்பிரச்சினை எனும்போது ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு காணிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவருக்கு ஆவணத்தை புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகம் வழங்கியுள்ளது. 

அந்தக் காணியில் குறித்த நபரும் அவருடைய தாயார் மற்றும் சகோதரிகளும் 30 ஆண்டுகளுக்கு மேலாகவே குடியிருந்து வருகின்றனர்.

இருந்தாற்போல கொழும்பில் இருக்கும் அந்தக் குடும்பத்தைச்  சேர்ந்த ஒருவர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சிபாரிசுக் கடிதத்தோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மேலதிக சிபாரிசையும் பெற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலரையும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலரையும் சந்தித்துத் தனக்கும் அந்தக் காணியில் பாதியை உரிமை கோரியிருக்கிறார். இவ்வளவுக்கும் குறித்த நபர் ஒருபோதுமே புதுக்குடியிருப்பிலோ முல்லைத்தீவு மாவட்டத்திலோ குடியிருந்ததே இல்லை. ஆனால், குறித்த சிபாரிசுக் கடிதத்துக்காக மாவட்டச் செயலரும் பிரதேச செயலரும் நீண்டகாலமாகவே காணியில் குடியிருப்பவரை அழைத்து, பாதிக் காணியை வழங்குமாறு பணித்துள்ளனர். காணிக்குரியவர் அதனை மறுக்கவே அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். மட்டுமல்ல, பாதிக்காணியை வழங்க வேண்டும் என்று உத்தியோகபூர்வமாக கடிதமும் எழுதியுள்ளனர். இதனை ஆட்சேபித்து பாதிக்கப்பட்டவர் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து இன்னும் உரிய பதில் வரவில்லை. ஆனால், பிரதேச செயலகத்திலிருந்து ஏகப்பட் அழுத்தங்கள் அதற்கிடையில் காணி உரித்தாளருக்கு வந்து கொண்டிருக்கின்றன. 

இப்படி அரச திணைக்களங்கள் தொடக்கம் தனியார் பிரச்சினைகள் வரையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கூட பிரச்சினைகள் பேசப்படுகின்றனவே தவிர, தீர்வுகள், நடவடிக்கைள், முன்னேற்றங்கள் என்பது போதாத நிலையிலேயே உள்ளது. 

இந்த நிலையில்தான் மாகாணசபைகளுக்கான தேர்தலைப் பலரும் கோருகிறார்கள். தேர்தல் வந்தாலும், அதில் வெற்றியீட்டினாலும் விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபையைப் போல இன்னொரு நிர்வாகம் வந்தால் அதனால் என்ன பயன்? அதை விட தேர்தலே வேண்டாம். அதையும் விட ஆளுநரும் வேண்டாம் என்றுதான் சனங்கள் எண்ணுகிறார்கள். அப்படியென்றால் என்னதான் வேணும் என்பதே கேள்வி. 

https://arangamnews.com/?p=12331

திலீபன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது எதனை? - நிலாந்தன்

1 month 2 weeks ago

திலீபன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது எதனை? - நிலாந்தன்

facebook_1758375914873_73751631332583744

திலீபனின் நாட்களில் யுத்த களத்தில் வெற்றிகள் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கை ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலங்களில் இருந்தது. அவருடைய நினைவு நாள் ஒன்றில் யாழ் கோட்டை வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்து அந்த நம்பிக்கை  தோன்றியது. திலீபனின் பசிக்கும் தாகத்துக்கும் அவ்வாறு அபரிதமான சக்தி உண்டு என்ற ஒரு நம்பிக்கை.

ஆனால் 2009க்கு பின்னர் திலீபனின் நாட்களில் திலீபன் யாருக்கு சொந்தம்? அல்லது திலீபனை யார் யார் நினைவு கூரலாம்? என்று கேட்டு மோதும் நிலைமை காணப்படுகிறது.

கடந்த 16 ஆண்டுகளிலும் நினைவு கூர்தலை அரசாங்கம் தடுக்கும் போதெல்லாம் தமிழ்க் கட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுபட்டு அவற்றை அனுஷ்டிப்பதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திலீபனின் ஒளிப்படம் தாங்கிய ஊர்தியை நகர்த்திய பொழுது திருகோணமலையில் அந்த வாகனம் தாக்கப்பட்டது. அந்தச் சம்பவம் தமிழ்த் தேசியக் கட்சிகளை கட்சி கடந்து ஒன்றாக்கியது. ஆனால் அரசாங்கம் நினைவு கூர்தலை தடுக்காது தளர்வாக நடந்து கொள்ளும் போதெல்லாம் குறிப்பாக திலீபனின் நாட்களில் திலீபன் யாருக்கு சொந்தம்? நினைவுத் தூபியில் யார் யார் நினைவு கூரலாம்? என்று கேட்டு மோதல்கள் வெடிக்கின்றன. சில சமயம் இந்த மோதல்கள் ஊடகச் சந்திப்புகள் வரை வருகின்றன.

திலீபன் உண்ணாவிரதம் இருந்தது நல்லூர் வளாகத்துக்குள். ஆனால் அது ஒரு கோயில் வளாகம் என்பதனால் அங்கே நினைவுத் தூபியை வைக்க அனுமதிக்கப்படாத காரணத்தால் அது நல்லூர் வளாகத்துக்கு வெளியே இப்போது இருக்கும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. அது திலீபன் உயிர் நீத்த இடம் அல்ல. எனவே திலீபனை நினைவு கூர முற்படுபவர்கள் அந்த இடத்துக்குத்தான் வரவேண்டும் என்று இல்லை. அந்தச் சூழலில் பல காணிகள் உண்டு மண்டபங்கள் உண்டு. அதனால் திலீபனை மெய்யாக விசுவாசமாக நினைவுகூர வேண்டும் என்று கருதும் கட்சியோ செயற்பாட்டாளர்களோ இடத்துக்காக அடிபடத் தேவையில்லை. இங்கு இடம் ஒரு பிரச்சினையே அல்ல. திலீபனை எப்படி நினைவு கூரலாம்? அதன்மூலம் அவருடைய நினைவுகளை எப்படி மக்கள் மயப்படுத்தலாம்? அதன் மூலம் அவருடைய தியாகத்தின் ஆன்ம பலத்தை எப்படி நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உந்து சக்தியாக மாற்றலாம்? என்று சிந்திப்பதுதான் இங்கு முக்கியம்.

திலீபனின் நினைவு நாளில் அவருடைய ஒளிப்படம் ஏந்திய வாகனத்தை வடக்கு கிழக்காக நகர்த்துவது ஒரு நல்ல ஏற்பாடு. நல்லூரில் அவருடைய நினைவுகளை பகிரும் ஒளிப்படக் காட்சியை வைப்பதும் ஒரு நல்ல ஏற்பாடு. குருதிக் கொடையும் நல்லது. இவற்றைவிட புதிதாகவும் யோசிக்கலாம். இப்பொழுது தமிழ் மக்களுக்குத்  தேவையாக இருப்பது தமிழ் மக்களின் கவனத்தையும் குறிப்பாக ரிக்ரொக்  தலைமுறையின் கவனத்தை, கொழும்பின் கவனத்தை, உலகத்தின் கவனத்தை ஈர்க்கத்தக்க படைப்புத்திறன் மிக்க அறவழிப் போராட்ட வடிவங்கள்தான்.

549024865_24922885857307090_536262300265

கடந்த 15ஆம் திகதி திலீபனின் நினைவு நாளுக்கு முன்னதாக கொழும்பில் சிங்களப் படைப்பாளியான சந்தரசி சுதுசிங்க எழுதிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. திலீபன் என்று பெயரிடப்பட்ட அந்த நூலில்,இரண்டு அத்தியாயங்கள்  திலீபனை மையமாக வைத்து எழுதப்பட்ட படைப்புகளைக் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியப் பரப்புக்கு வெளியே வேறு இனங்களும் திலீபனைக் கொண்டாடுவது திலீபனுக்கு மகிமையே. தமிழ் மக்களின் போராட்டத்துக்கு மகிமையே. அமைச்சர் சந்திரசேகரன்  திலீபனின் நினைவுத்  தூபிக்கு அஞ்சலி செலுத்துவது திலீபனுக்கு  மகிமையே. திரைப்படக் கலைஞர் சோமிதரன் முகநூலில் கூறியது போல  “அஞ்சலி செலுத்த வந்தவரும் ஓர் அரசியலைச்  செய்ய வருகிறார். அவரைத் தடுத்து நிறுத்தியவர்களும் தங்களுக்கான அரசியலைச் செய்கிறார்கள்” என்பதே உண்மை.

திலீபன் ஓர் ஆயுதப் போராளி. ஆனால் அவர் உயிர் நீத்தது ஓர் அறவழிப் போராட்டத்தில். அவருடைய வழியை விசுவாசமாகப் பின் தொடர்கிறவர்கள்தான் அவரை அஞ்சலிக்கலாம் என்றால், கடந்த 16 ஆண்டுகளாக அவரைப் போல சாகும்வரை உண்ணாமல் இருக்க எத்தனை பேர் தயாராக இருந்திருக்கிறார்கள்? உணவோ நீரோ இன்றி எத்தனை நாள் இருக்கலாம் என்பது உபவாசம் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலிருந்து தப்பினாலும் அதனால் உடல் உறுப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களில் இருந்து தப்ப முடியாது.

கடந்த 16 ஆண்டுகளாக குறிப்பாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பெற்றோர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். எனினும் அப்போராட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்டன. அது சரி. ஏனென்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள்தான் திரும்பத்திரும்ப தியாகம் செய்ய வேண்டும் என்றில்லை. கட்சிகளும் செயற்பாட்டாளர்களுந்தான் அவர்களுக்காகப் போராட வேண்டும்.

திலீபனைப்போல உயிர் பிரியும் வரை உண்ணாமலும் துளி நீரும் அருந்தாமலும் போராட எத்தனை பேரால் முடியும்? கடந்த 16 ஆண்டுகளாகத்  தாங்கள் செய்ய முடியாத அல்லது தாங்கள் செய்யத் தயாரில்லாத தியாகங்களுக்கு உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தாங்கள் செய்யத் தயாராக இல்லாத ஒரு தியாகத்துக்கு உரிமை கோருபவர்களால்தான் உண்மையான தியாகம் கொச்சைப்படுத்தப்படுகிறது. தியாகம் செய்ய வேண்டிய காலங்களில் தப்பிப் பிழைத்தவர்கள் எல்லாம் இப்பொழுது தியாகத்தைப்பற்றி வகுப்பெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.

இந்தக் கட்டுரை யாரையும் சாகச் சொல்லிக் கேட்கவில்லை. யாரும் சாகவும் வேண்டாம். செத்தது போதும். ஆனால் செய்யத் தயாராக இல்லாத தியாகங்களுக்கு உரிமை கோரக்கூடாது. மாறாக அந்தத் தியாகங்களின் மகிமையை,நினைவுகளை எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்திக்கலாம். அதிலாவது உண்மையாக இருக்கலாம். தியாகிகளை  அஞ்சலிக்கும்போது விளக்கு கொளுத்துவது மலர்களை வைப்பது போன்றவை வழமையான வழிகள்.வாகன ஊர்தி,ஒளிப்படக் காட்சி,குருதிக் கொடை போன்றன ஒப்பீட்டளவில் வித்தியாசமானவை.ஆனால் இவற்றுக்கும் அப்பால் புதிய படைப்புத்திறன் மிக்க வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

547526614_4237757343171811_1858271620800

உதாரணமாக தியாகியின் நாட்களில் ஊர் ஊராக அவருடைய நினைவுகளைப்  பரவலாக்கும் விதத்தில் என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம். நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்துவதிலும் மக்கள் மயப்படுத்துவதிலும் கலை பண்பாட்டுச் செயற்பாடுகள் பெரிய பங்காற்ற முடியும்.எனவே புதிய கலை வடிவங்களைப் பற்றிச் சிந்திக்கலாம். தியாகிகளின் நாட்களில் இசை நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்தி இசை அஞ்சலிகளை இசை வேள்விகளைச் செய்யலாம். அந்த இசை வேள்விகளுக்குப் பிராந்திய,அனைத்துலகக் கலைஞர்களைக் கொண்டு வரலாம். இது ஒரு வழி.

இரண்டாவது வழி, தியாகியின் பெயரால் போட்டிகளை ஒழுங்குபடுத்தலாம். கவிதைப் போட்டி,கட்டுரைப் போட்டி,ஓவியப் போட்டி, நாடகப் போட்டி,விவாதப் போட்டி,விளையாட்டுப் போட்டிகள்…

மூன்றாவது வழி,தியாகிகளின் நாட்களில் அரசியல் கருத்தரங்குகளை வைத்து அந்த தியாகத்துக்கு பின்னால் இருக்கும் அரசியலை ஆழமாக ஆராயலாம்.

நாலாவதுவழி, தியாகிகளின் பெயரால் தொண்டு செய்யலாம். ஊர் ஊராக சிரமதானங்களைச் செய்யலாம். ஊர்க் குளத்தை,நீரோடும் வாய்க்கால்களைத் தூர் வாரலாம்.ஊரைத் துப்புரவாக்கலாம். மரம் நடலாம். இப்படித் தியாகியின் பெயரால் பசுமைத் திட்டங்களை முன்னெடுக்கலாம்.

ஐந்தாவது வழி,தியாகிகளின் பெயரால் இலவச மருத்துவ முகாம்களை ஒழுங்குபடுத்தலாம்.மருத்துவத் துறை ஒரு இண்டஸ்ட்ரியாக மாறி ஏழைகளுக்குத் தூரமாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில்,இலவச மருத்துவ முகாம்களை தியாகிகளின் பெயரால் ஒழுங்கமைக்கலாம். உதாரணமாக அரச பொது மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில சத்திர சிகிச்சைகளுக்காகக் காத்திருப்பவர்களின் தொகை ஆயிரக்கணக்கானது என்று கூறப்படுகிறது. அவ்வாறான சத்திர சிகிச்சைகளை இலவசமாக தியாகிகளின் பெயரால் செய்யலாம்.

அதாவது தியாகிகளை நினைவு கூர்வது என்பது தொண்டு செய்வது; தன்னாலியன்ற தியாகத்தைச் செய்வது.இவ்வாறு தியாகிகளை நினைவு கூரும் விடயத்தில் படைப்புத்திறனோடும் தியாக சிந்தையோடும் சிந்தித்தால் புதிய வழிகள் திறக்கும். அவ்வாறு புதிய கற்பனைகள் தோன்றும்போது நினைவு கூர்தல் ஒரு சடங்காக மாறுவது தடுக்கப்படும்.எங்கே நினைவு கூர்தல் ஒரு சடங்காக மாறுகிறதோ அங்கே நினைவுகூர யாருக்கு உரிமை அதிகம் என்று கேட்டுச் சண்டைகளும் அதிகரிக்கும்.

https://www.nillanthan.com/7795/

சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்

1 month 2 weeks ago

சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்

September 21, 2025 11:26 am

சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்

2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு-

இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு–

அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா?  மறுத்து நிராகரித்த கஜேந்திரகுமார்…

அ.நிக்ஸன்-

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில்  பெருமையுடன் வலியுறுத்திக் கூறியுள்ளது.

ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழத் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்றிருப்பதாகவும், முழுமையான சமஸ்டி ஆட்சி முறைமை ஒன்றையே தமிழர்கள் விரும்புவதாகவும் காரசாரமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரத்தை தமிழர் தரப்பு கையாள வேண்டுமே தவிர, சிங்கள கட்சிகள் அல்ல என்ற கடும் தொனியையும் கஜேந்திரகுமார் வெளிப்படுத்தினார்.

சுவிஸ்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் மற்றும் சுவிஸ்லாந்தில் உள்ள தமிழ் இளையோர் அமைப்பினரும் பங்குபற்றியிருந்தனர்.

சுவிஸ்லாந்தில் நடைமுறையில் உள்ள சமஸ்டிமுறை கொண்ட அரசியல் யாப்பு மற்றும் சுவிஸ்லாந்தில் அரசியல் நிர்வாக அமைப்பியல் முறைமைகள் தொடர்பாக அங்கு ஆராயப்பட்டது. சுவிஸ்லாந்து வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சுவிஸ்லாந்தின் முக்கிய இராஜதந்திரிகள் இக் கருத்தரங்கில் பங்குகொண்டு விளக்கமளித்தனர்.

WhatsApp-Image-2025-09-20-at-12.26.25_a2

சிங்கள  தமிழ் பிரதிநிதிகளின் நியாயமான நீண்ட விளக்கங்களை செவிமடுத்ததாக இக் கட்டுரையாளருக்கு ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழர்கள் சமஸ்டி முறையிலான ஆட்சியை விரும்புவதாகவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை எவரும் எதிர்க்கவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.

சுவிஸ்லாந்து அரசியல் நிர்வாக முறைமை பற்றிய விளக்கங்களின் பின்னணியில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே உடனடித் தீர்வு என்று வலியுறுத்திய சுஸே் பிரேமச்சந்திரன், அதற்கு மேலான அதிகார முறைகள் பற்றி அலோசிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.

எவ்வாறாயினும கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழர் தரப்பினரில் அதிகமானோர், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையை விரும்பவில்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தினர். குறிப்பாக சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினா் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு முறைக்கு எதிரான விளக்கங்களை முன்வைத்தனர்.

கஜேந்திரகுமார் பொன்னம் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றை விபரமாக எடுத்துக் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொண்ட சுவிஸ்லாந்தின் இளையோர் அமைப்பினர், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ‘இரு அரசு’ முறையிலான தீர்வு பொருத்தமமானது எனவும் கடந்தகால ஆட்சியாளர்களினாலும் இலங்கை இராணுவத்தினராலும் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தனர்.

ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றுப் பட்டறிவுகள் மூலமாக இரு அரசு தீர்வு தான் பொருத்தமானது என்ற கருத்தில், இளையோர் அமைப்பினர் வலியுறுத்தினர்.

இக் கருத்துக்கு மாற்றுக் கருத்தை வெளிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை தாம் பெற்றுள்ளதாகவும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஐந்து உறுப்பினர்களையும் வடக்கு கிழக்கில் மொத்தமாக எட்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றியும் எடுத்துக் கூறினர். புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் பொருத்தமான தீர்வு பரிந்துரைக்கப்படும் எனவும் அவர்கள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

ஆனால், அநுர அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய அரசியல் தொடர்பாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்த் தரப்பு உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. அந்த புதிய யாப்பு தொடர்பாக சரியான புரிதல் அற்ற தன்மை காணப்படுவதாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

1686107239-Gajendrakumar-Ponnambalam-MP-

மைத்திரி – ரணில் அரசாங்கத்தின்போது புதிய அரசியல் யாப்புக்காக அனைத்துக் கட்சிகளானாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை தொடரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்தார்.

மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் நாடாளுமன்றம், அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு ஆறு உப குழுக்களாக ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தலைப்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அடங்கலாக பரிந்துரைகள் முன்மொழியப்பட்டு அவை அறிக்கைகளாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, அந்த விடயங்களை தொடர்ச்சியாக தமது அரசாங்கமும் ஆராய்ந்து, அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் மேலும் சில அதிகார முறைகளை உள்ளடக்கி புதிய யாப்பை சமர்ப்பிக்கும் ஏற்பாடுகளை செய்யவுள்ளதாகவும் நிஹால் அபயசிங்க அங்கு விளக்கமளித்திருந்தார்.

ஆனால், இந்த விளக்கம் தொடர்பாக பரிசீலித்த தமிழ்தரப்பினர் குறிப்பாக கஜேந்திரகுமார், தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பங்கள் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

அதேநேரம், வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ செயற்பாடுகள் பற்றி கஜேந்திரகுமார் நீண்ட விளக்கமளித்தார். அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள 13 ஐ முழுமையாக செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது. ஆனால் அதற்கு தமிழ்த்தரப்பின் ஒத்துழைப்பு அவசியம் என கோருவது மிகவும் தவறான அரசியல் கற்பிதம் என்ற தொனியை கஜேந்திரகுமார், அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார்.

அநுர அரசாங்கம் தையிட்டில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை கூட அகற்ற விரும்பவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய போது, அது முன்னைய அரசாங்கம் செய்த வேலைத் திட்டம் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தமக்குள் முனுமுனுத்துக் கொண்டதாக கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ்ப் பிரதிநிதி ஒருவர் இக் கட்டுரையாளரிடம் தெரிவித்தார்.

அதேநேரம் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை என்ற தமிழர்களின் ஆழமான கருத்துக்குப் பதிலளித்த நிஹால் அபயசிங்க, ஜேவிபி இலங்கைத்தீவில் நடத்திய 1972 – 1987 / 88 ஆம் ஆண்டு கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் – யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் பல அவலங்களைத் தாங்கள் சந்தித்தாகவும் விளக்கினார்.

சிங்கள – தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலைகளை எதிர்கொண்ட காரண – காரியங்கள் ஆழமானவை. ஆனால், அவ்வாறு இழைக்கப்பட்ட அநீதிகளை தற்போதைய சூழலில் கைவிட்டு, புதிய அரசியல் பாதையை நோக்கி பயணிக்க கைகோர்க்க வேண்டும் என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கருத்தரங்கில் கேட்டுக் கொண்டனர். ஜேவிபியின் போராட்ட கால அநீதிகளை கூடுதலாக சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, இக் கட்டுரையாளரிடம் பேசிய ஏற்பாட்டார் ஒருவர் இக் கருத்தரங்கு தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்ற நோக்கில், கருத்தரங்கு தொடர்பான  விடயங்ளை அதிகாரபூர்வமாக அறிக்கையிட வேண்டும் என கேட்டபோது, சுவிஸ்லாந்து இராஜதந்திரிகள் அதனை விரும்பவில்லை என தெரிவித்தார்.

இருந்தாலும், இக் கருத்தரங்கில் பேசப்பட்ட விடயங்களை அதிகாரபூர்வமாக அறிக்கையிடுவது பற்றி சுவிஸ்லாந்து அரசாங்கத்திடம் கோரவுள்ளதாகவும் அந்த ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

shutterstock_1333120163.jpg

அதேவேளை மூன்று நாட்கள் இடம்பெற்ற கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஆனால், கருத்தரங்கு முடிவடைந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கமளித்தார்.

சுவிஸ்லாந்து சமஸ்டி முறை பற்றி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு நன்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், சுவிஸ்லாந்தை விட்டு வெளியேறிச் செல்லும்போது விமான நிலையத்தில் அந்த சமஸ்டி ஆட்சி முறைச் சிந்தனையை கைவிட்டுச் செல்லக் கூடாது எனவும் சத்தியலிங்கம் கிண்டலாகச் சுட்டிக்காட்டினார்.

2009 இற்குப் பின்னர் இலங்கைத்தீவில் ஊழல்மோசடி – அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பொருளாதார குற்றங்கள் மாத்திரமே உள்ளது என்ற தொனியில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறிப்பாக அதன் செயலாளர் நிஹால் அபயசிங்க கருத்தரங்கில் தமது தரப்பு நியாயங்களை அவ்வப்போது வெளியிப்படுத்தியிருந்தார் எனவும், ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பல விளக்கவுரையில் சிங்கள – தமிழ் முரண்பாட்டுத் தன்மையின் ஆழத்தை அவர்களினால் நிராகரிக்க முடியாத நிலமை இருந்தது எனவும் தமிழ் இளையோர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கட்டுரையாளரிடம் விபரித்தார்.

இக் கருத்தரங்கின் முடிவுரை தெளிவில்லை எனவும் அந்த இளையோர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் முன்மொழியப்பட்ட ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி ஆட்சி என்ற அதாவது ஏக்கிய இராஜ்ஜிய என்ற முறையிலான அரசியல் யாப்பு ஒன்றையே அநுர அரசாங்கமும் முன்வைக்கவுள்ளது என்பதை இக் கருதரங்கு வெளிப்படுத்தியதை அறிய முடிகிறது.

அதேநேரம் இக் கருத்தரங்கில் போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணை தொடர்பாக தமிழர் தரப்பு வலியுறுத்தியிருந்தாலும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி அவசியம் என்பது குறித்து பேசப்படவில்லை எனவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

https://oruvan.com/switzerland-seminar-what-happened/

ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன்.

1 month 2 weeks ago

Questen.png?resize=750%2C375&ssl=1

ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன்.

அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதலாவது, இலங்கைதீவின் நல்லிணக்க முயற்சிகள் இப்பொழுது நோர்வே நாட்டின் முன்னுரிமை பட்டியலுக்குள் உள்ளன என்பது.  இரண்டாவது, தமிழ் மக்கள் ஒருமுகமாக உலக சமூகத்தை அணுகுவதில்லை என்பது.

இதில் இரண்டாவது விடயம்,அதாவது தமிழ் ஐக்கியத்தைப் பற்றிய விடயம்.அதனை நோர்வே மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகம் மட்டுமல்ல,உலகில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் பொழுது அல்லது தமிழ்ச் சிவில் சமூகங்களைச் சந்திக்கும் போதெல்லாம் சுட்டிக்காட்டுவதுண்டு.இவ்வாறு சுட்டிக்காட்டுவதன் மூலம் தமிழ்த் தரப்பை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கலாம். நீங்கள் முதலில் ஐக்கியப்படுங்கள் அதன் பின் உங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுங்கள் என்ற ஒரு தொனி அங்கே உண்டு.

ஆனால் இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் மக்கள் மட்டுமல்ல, எல்லாச் சமூகங்களிலும் பல்வேறு அபிப்பிராயங்கள், பல்வேறு அடுக்குகள் இருக்க முடியும்.ஜனநாயக வழிமூலம் தலைமைகள் தெரிவு செய்யப்படும் ஒரு சமூகத்தில் ஆகப்பெரிய மக்கள் ஆணையைப் பெற்ற கட்சியை அழைத்துப் பேசுகிறார்கள்.ஆயுதப் போராட்டங்கள் நடக்கும் இடங்களில் வலிமையான இயக்கத்தை அழைத்துப் பேசுகிறார்கள். கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்களைப் பொறுத்தவரை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு பிரதிநிதித்துவமாக இருந்தது.ஆனால் அது படிப்படியாக உடைந்து போய் இப்பொழுது தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் பெரிய கட்சியாக இருக்கின்றது.

உள்ளதில் பெரிய மக்கள் அணையை பெற்ற கட்சியோடுதான் வெளிநாடுகள் பேசும். ஆனால் அதற்காக அந்தக் கட்சி மட்டும்தான் அந்த மக்கள் கூட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பதல்ல. அது ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்களின் ஆணையைப் பெற்றிருக்கிறது என்று பொருள்.

எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பிடம் ஒற்றுமை இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் வெளிச் சமூகமானது, பொறுப்புக்கூறலில் தனக்குள்ள பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கு அதை ஒரு சாட்டாக முன்வைக்கின்றதா? என்பதையும் ஆழமாக பார்க்க வேண்டும்.

ஆனால் இப்பொழுது தமிழ்மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் பெரிய ஆணையைப் பெற்ற தனிக் கட்சி எது?தமிழ்ப் பகுதிகளில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி பெற்ற அதே அளவு ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி அதாவது அரசாங்கமும் பெற்றிருக்கிறது. அதாவது தமிழ்மக்களின் ஆணை எனக்கும் உண்டு என்று அரசாங்கம் சொல்லக்கூடிய ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது.அதை ஒரு பெருமைக்குரிய அடைவாக அரசாங்கம் ஜெனிவாவில் வைத்து கூறுகிறது;புதுடில்லியில் வைத்து கூறுகிறது;ஏனைய உலக தலைநகரங்களில் வைத்துக் கூறுகிறது.இது கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத ஒரு தோற்றப்பாடு.

எனவே இப்பொழுது தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக, நல்லிணக்கம் தொடர்பாக, பொறுப்புக்கூறல் தொடர்பாக,இறுதித் தீர்வு தொடர்பாக நாங்களும் பேசுவோம்; எங்களுக்கும் உரிமை உண்டு என்று அரசாங்கம் சொல்லும்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சிறீதரன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அமைச்சர் பிமல் ரட்நாயக்க என்ன சொன்னார் என்பது அந்தத் துணிச்சலில் இருந்துதான் வருகிறது.

தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளின் விகிதத்தை வைத்துக் கணக்குக் காட்டலாம். ஆனால் வெளித் தோற்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியானது தமிழரசு கட்சிக்கு நிகரான ஆசனங்களை பெற்றிருக்கிறது. தேர்தல் வெற்றிகளுக்கு பின்னால் இருக்கும் உட் கணக்குகள் அரசியல் விமர்சகர்களுக்கு உரியவை. ஆனால் சாதாரண மக்களுக்கும் உலக சமூகத்திற்கும் வெளியே காட்டப்படுவது இத்தனை ஆசனங்கள் என்பதுதான்.இந்தக் கணக்கை மாற்றுவதற்குத்தான் கஜேந்திரகுமார் ஒர் ஐக்கிய முயற்சியில் ஈடுபட்டார்.ஆனால் தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கவில்லை.

தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க தமிழ் தேசியக் கட்சிகளே பொறுப்பு.தமிழ்த் தேசிய கட்சிகள் விட்ட பிழைகளின் விளைவு அது.யார் என்றே தெரியாத வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமை அதனால்தான்

அதே தவறு இப்பொழுதும் தொடர்கிறது.முன்னைய ஐநா கூட்டத் தொடர்களைப் போலன்றி தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பின்னரான ஐநா கூட்டத் தொடர்களில் தமிழ்த் தரப்பின் நிலைமை பலவீனமாக இருக்கிறது என்பதனை தமிழ்க் கட்சிகள் நன்கு அறியும்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை வருகைக்குப் பின் அவர் கூறிய கருத்துக்களிலிருந்தும் அதை உணரக்கூடியதாக இருந்தது.

ஆனால் தமிழ்ப் பகுதிகளில் என்பிபி பெற்ற வெற்றிகளுக்குப் பின் ஐநாவை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளிடம் குறிப்பாக தமிழரசுக் கட்சியிடம் ஒன்றிணைந்த வியூகம் எதுவும் இல்லை.அதாவது தோல்விகளிலிருந்து அவர்கள்,குறிப்பாக தமிழரசு கட்சி,கற்றுக் கொள்ளவேயில்லை.விளைவாக இம்முறை ஐநாவுக்கு தமிழ்த் தேசியப் பேரவை ஒரு கடிதம் அனுப்பியது.தமிழரசுக் கட்சி ஒரு கடிதம் அனுப்பியது. போதாக்குறைக்கு சிவில் சமூகங்களும் இரண்டாகப் பிரிந்து நின்று கடிதம் அனுப்பின.கட்சிகளுக்கு இருந்த நோய் சிவில் சமூகங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது. இவை தவிர புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஐநாவுக்கு கடிதங்களை அனுப்பின.ஆனால் தாயகமும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் இணைந்து கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்து ஒரே கடிதத்தை அனுப்ப முடியவில்லை.அதாவது ஜெனிவாவில் அரசாங்கம் தனக்கும் தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று கூறுகின்ற ஒர் அனைத்துலகச் சூழலில்,தாயகத்தில் தமிழ்க் கட்சிகள் தொடர்ந்து தங்களுக்கிடையே பிடுங்குப்படுகின்றன; சிவில் சமூகங்களும் பிடுங்குப்படுகின்றன.

தமிழ் ஊடகங்களை மட்டும் நுகரும் தமிழ் மக்கள், தமிழ் சமூக வலைத்தளங்களை மட்டும் நுகரும் தமிழ் மக்கள், செம்மணி என்ற உணர்ச்சிப் புள்ளிக்கூடாக ஐநாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஐநாவோ அல்லது இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய சமூகமோ நிகழும் ஐநா கூட்டத் தொடரை செம்மணிக்கூடாகப் பார்க்கவில்லை. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைகளில் செம்மணியைப் பற்றிய சில வாசகங்கள் உண்டு. அவ்வளவுதான். அதற்குமப்பால் அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றுதான் ஐநா சிந்திப்பதாகத் தெரிகிறது.நிகழும் ஐநா கூட்டத்தொடர் அதைத்தான் உணர்த்துகின்றது. கடந்த ஒன்பதாம் திகதி வெளியிடப்பட்ட உத்தேச தீர்மான வரைபு-இது இறுதியானது அல்லவெனினும் -அதைத்தான் உணர்த்துகின்றது.

நிகழும் ஐநா கூட்டத்தொடரில் இந்தியா வழமை போல 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறது.ஏறக்குறைய ஐநாவின் நிலைப்பாடும் அதுதான் என்று ஊகிக்கத்தக்க விதத்தில்தான் ஐநாவின் உத்தேச தீர்மான வரைபு காணப்படுகிறது.இந்தியாவையும் ஐநாவையும் கவர்வதற்காகவும்,ஐநாவிற்குரிய வீட்டு வேலைகளைச் செய்வதன்மூலம் தனது நிலைப்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்காவும் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வரும் ஆண்டில் நடத்தக்கூடும். அப்படி ஒரு நிலைமையை முன்னுணர்ந்து தமிழ்க் கட்சிகள் ஏதாவது தயாரிப்புடன் காணப்படுகின்றனவா?

இப்போதுள்ள ஒப்பிட்டளவில் பெரிய கூட்டு ஆகிய தமிழ்த் தேசியப் பேரவை ஈடாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டுக்குள் காணப்படும் மற்றொரு கூட்டு ஆகிய டிரிஎன்ஏயில் அங்கம் வகிக்கும் ஈபி.ஆர்.எல்.எப் 13ஆவது திருத்தம் குறித்த கருத்தரங்குகளைத் தமிழ்ப் பகுதிகளில் நடத்தி வருகிறது.இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஈபி.ஆர்.எல்.எப்இற்கும் இடையிலான முரண்பாடுகளை ஆழமாக்கக்கூடியது. அது அதன்விளைவாக டிரிஎன்னேக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் இடையிலான முரண்பாடுகளையும் ஆழமாக்கக்கூடியது.

தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியானது டி.ரி.என்.ஏயை நெருங்குவதாகவும் தெரிகிறது.வவுனியாவில் நடந்த 13ஆவது திருத்தம் குறித்த கருத்தரங்கில் சுமந்திரன் கலந்து கொண்டார். சுமந்திரனைத் தனிமைப்படுத்த அல்லது தமிழரசுக் கட்சியைத் தனிமைப்படுத்தத்தான் தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டு உருவாக்கப்பட்டது என்று தமிழரசுக் கட்சி கருதுகின்றது. எனவே அதற்கு எதிர் வியூகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு சுமந்திரன் டி.ரி.என்.ஏயை நெருங்கிவரும் வாய்ப்புகள் அதிகமுண்டு.

எதிர்கால தேர்தல்களில் யாரோடு நின்றால் கூடுதலான வெற்றிகளைப் பெறலாம் என்று டிரிஎன்னே-வழமைபோல-சிந்திக்குமாக இருந்தால் அனேகமாக தமிழ்த் தேசியப் பேரவை உடையக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம்.

தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கிய பொழுது கஜேந்திரக்குமார் ஒரு வசனம் சொன்னார்.இந்தக் கூட்டு உடையுமானால் அதைத் தமிழ் மக்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று. அதில் அரைவாசி உண்மை உண்டு.முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்த மக்களுக்கு இதுபோன்ற கூட்டுக்கள் உடைவது பெரிய இழப்பில்லை. ஆனாலும் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தக்கூடிய உடைவுகள்,சிதறல்கள் போன்றன ஒப்பீட்டளவில் இழப்புகள்தான். அதை நிகழும் ஐநா கூட்டத்தொடரில் உணரக்கூடியதாக உள்ளதல்லவா?

https://athavannews.com/2025/1447938

கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம்

1 month 2 weeks ago

கொஞ்சம் கொஞ்சமாக மாறும் கொடூரமான முகம்

முருகானந்தம் தவம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியினால்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க முடியாதென சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்ததன் மூலமும், அதன் பின்னர் சபையில் அரச தரப்பினர் நடந்து கொண்ட முறை மூலமும் நாட்டின் உயர் பீடமும் சட்டவாக்க சபையுமான பாராளுமன்றத்தில்  ஜே.வி.பி. -தேசிய மக்கள் சக்தி  அரசின் சர்வாதிகாரத்தனம் தலைவிரித்தாடுகின்றதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னர் ஆட்சி  புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன. எதிர்க்கட்சி  தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின. எதிர்க்கட்சிகளின்   கருத்துக்களைச் செவிமடுத்தன. பேச்சு, கருத்து சுதந்திரம் கொடுத்தன.

சிறப்புரிமைகளை அங்கீகரித்தன. ஆனால், தற்போதைய  அனுரகுமார அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடக்கி ஆளுகைகளையும் முன்னெடுத்து தமது இயலாமைகளையும் ஆட்சியின் அவலட்சணத்தையும்   மூடி மறைக்க முற்படுகின்றது என்றவாறாக  கடும் விமர்சனங்கள் வெளிக் கிளம்பியுள்ளன.

கட்சிக்குள் பிளவுகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பின்னடைவு, மக்கள் ஆதரவில் வீழ்ச்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமை, எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை கொழும்பிலுள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேற்றியமை  போன்றவற்றால் அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பாளிகள், மீண்டெழும் ராஜபக்‌ஷக்கள், ஊடகங்களின் கடும் விமர்சனம் வரவுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் என பலமுனை பிரச்சினைகளிலும் சிக்கல்களிலும், நெருக்கடிகளிலும்  சிக்கித் தவிக்கும் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.- தேசிய மக்கள்  சக்தி அரசு இவற்றை எதிர்கொண்டு சமாளிக்கவே   தற்போது  ‘சர்வாதிகாரம்’ என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

இவ்வாறான நிலையில்தான் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக ஏற்கெனவே சில தடவைகள் அரசின் சர்வாதிகாரம் பாய்ந்த நிலையில், அவர்களின் குரல் ஒடுக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்  பிரேரணையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி மீதும் அரசின் சர்வாதிகாரம் பாய்ந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை 
காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சபை கூடிய நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தனது அறிவிப்பை விடுத்தார்.

அதில்,  “அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்பதை அரசியலமைப்பு தெளிவாக அங்கீகரிக்கிறது. அதேநேரத்தில், பிரதமர் அல்லது ஒரு தனிப்பட்ட அமைச்சரவை அமைச்சர் மற்றும்  எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை முன்னுதாரணமாக அங்கீகரிக்கிறது.

ஆனால், பிரதி அமைச்சருக்கு எதிராக அத்தகைய தீர்மானத்திற்கு எந்த ஏற்பாடும் இல்லை. எனவே, இன்று அத்தகைய தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், 
அது அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற  முன்னுதாரணங்களுக்கு முரணான ஒரு விரும்பத்தகாத முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். 

எனவே, பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒழுங்கற்றது. அதன் தற்போதைய வடிவத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்த சபைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு  எதிராக  எதிர்க்கட்சி  கொண்டுவந்த  நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரிப்பதற்குக் காரணமாக சபாநாயகர் எடுத்துக்   கொண்ட சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளரின்  பணியாற்தொகுதியின் அறிக்கையைச் சபைக்குச் சமர்ப்பிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தியபோதும் அவற்றைச் சமர்ப்பிக்காது சந்தித்தன முறையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு நிராகரித்ததுடன்  சபையில் சபாநாயகர், சபைமுதல்வர் ஆகியோர் நடந்து கொண்ட முறைதான் நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தின் சுயாதீனத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், அரசின் சர்வாதிகாரத்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை கொண்டுவரும் முறை ஒன்று நிலையியற் கட்டளையில் இல்லை என்று தெரிவித்தே அரசு அதனை நிராகரித்தது. அதேவேளை, நம்பிக்கையில்லாப்  பிரேரணையை  யாருக்குக் கொண்டுவர முடியும் யாருக்குக் கொண்டுவர முடியாது எனவும்  நிலையியற் கட்டளையில் இல்லை. அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சர் இல்லாத சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்படும் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்  பிரேரணை கொண்டுவர முடியாது என தெரிவிப்பதில் எந்த நியாயமும் இல்லையென்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக இருந்தபோதும், சபை முதல்வரே  சபைக்கு உதவாத வார்த்தைப் பிரயோகங்களை  மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்குவதில் தீவிரமாகவும் சண்டித்தனப் போக்குடனும் நடந்து கொண்டார்.

சபை முதல்வர்  எதிர்க் கட்சிகளை கடுமையாக சாடியும் கிண்டலடித்தும் எச்சரித்தும் ஒரு கட்டத்தில் உங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எமது மேல் மாகாண எம்.பிக்களை  மட்டும் வைத்தே எம்மால் தோற்கடிக்க முடியும் எனக்கூறியதுடன் எமது பக்கத்துக்கு எம்.பிக்களையும்  எழுந்து நிற்க வைக்கவா?. உங்களால் மட்டுமல்ல எங்களினாலும்  முடியும் என மிரட்டும் தொனியிலும் பேசினார்.

அதுமட்டுமன்றி, இவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்காமல் சபையை முன்னெடுத்துச் செல்லவேண்டும் சபாநாயகரை எச்சரிக்கும் தொனியில் அறிவுறுத்தியதுடன், எதிர்க்கட்சி எம்.பிக்களை  பார்த்து சபைக்கு உதவாத  வார்த்தைகளையும்  பயன்படுத்தினார்.

எதிர்க்கட்சி எம்.பிக்கள்  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் சபைக்கு உதவாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்குமாறு சபாநாயகரை வலியுறுத்தி   சபைக்கு  நடுவுக்கு வந்த நிலையில்,   சபை முதல்வருக்கு அவரின் கூற்றை வாபஸ் பெறுமாறு முதலில் கூற   தடுமாறிய சபாநாயகர் பின்னர்  சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பார்த்து,  குறித்த  தகாத வார்த்தையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு  கூறியபோதும் சபைமுதல்வரான பிமல், அது தொடர்பில் காதில் வாங்காது சபாநாயகருக்கு உத்தரவிடும்வகையில் சில கருத்துக்களைக்கூறினார் , சபாநாயகருக்கு சபையை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது போன்று வகுப்பெடுத்து சர்வாதிகாரிபோன்றே  செயற்பட்டார்.

இறுதிவரை அந்த சபைக்குதவாத வார்த்தையை   சபைமுதல்வரான  அமைச்சர் பிமல் ரத்நாயக்க வாபஸ் பெறவில்லை, எனினும், எதிர்க்கட்சிகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதனை வாபஸ் பெறவேண்டும். அந்த வார்த்தை ஹன்ஸாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என விடாப்பிடியாக நின்றதால்  சபையைக் கொண்டு நடத்தமுடியாத நிலையில்,   இறுதியாகச் சபாநாயகர் அந்த வார்த்தையை ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு உத்தரவிட நேரிட்டது.

அந்தளவுக்கு சபாநாயகரைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காத  நிலையில், சபை முதல்வர் சபையில் செயற்பட்டதுடன், சர்வாதிகாரத்தனத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்தமையும்  கடும் விமர்சனங்களை  ஏற்படுத்தியுள்ளது .
மாற்றம், மக்களாட்சி, ஜனநாயகம், இன, மத, நல்லிணக்கம், சுதந்திரம் என்ற கோஷங்களோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறியவர்கள் ஒரு வருடத்திற்குள்ளேயே  ஆட்டம் காணத் தொடங்கியதனால் நிறைவேற்றதிகாரம், சர்வாதிகாரம், இன, மத நல்லிணக்க  விரோதம் என்ற ஜனநாயக ஆட்சிக்கு  முரணான புதிய திசையில்  பயணிக்கத் தொடங்கியுள்ளனர். முன்னைய அரசுகளும் இந்த வழியில் பயணித்தாலும் கூட நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தில் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்த வில்லை.

ஆனால், மாற்றம் என வந்தவர்கள் அதிலும் மாற்றம் செய்து நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்திலும்  சர்வாதிகாரத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. - தேசிய மக்கள் சக்தி அரசு தான் தற்போது  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை உள்ளது என்ற தலைக்கனத்தில் நாட்டிலும்    சட்டங்களை இயற்றும்  உயர் பீடமான பாராளுமன்றத்திலும் சர்வாதிகார ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதாவது,  தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியோடு உள்ள ஜே.வி.பி. தனது ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்கச் சிறிது சிறிதாகத் தனது கொடூரமான பழைய முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொஞ்சம்-கொஞ்சமாக-மாறும்-கொடூரமான-முகம்/91-364872

கச்சதீவை உடைமையாக்குவது அல்ல, இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதே பிரதான பிரச்சினை

1 month 2 weeks ago

18 Sep, 2025 | 09:13 AM

image

பெரும் எண்ணிக்கையில் மீன்பிடிப் படகுகள் ஒரு தொகுதியாக எல்லைமீறி பிரவேசித்து எமது மீனை, இறாலை, கணவாயை, நண்டுகளை பிடிப்பது என்பது இந்த இந்திய ஊடுருவலின் ஒரு அம்சம் மாத்திரமே. அத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக கட்டுப்பாடற்ற முறையில் ஒரு நிரந்தரமான முறையில் அழிவுகளை ஏற்படுத்துவது மற்றைய மிகவும் ஆபத்தான அம்சமாகும். பெரும்பாலான இந்திய மீன்பிடிப் படகுகள் இழுவை மீன்பிடியில் ஈடுபடும் படகுகளாகும் (Bottom trawlers). இழுவைப்படகுகள் மீனையும் கூனி இறால்களையும் இலக்கு வைப்பதற்கு மேலதிகமாக , கடற்படுக்கையில் இருந்து மீன்முட்டைகள், சிறிய மீன்வகைகள், கடல் தாவரங்கள் என்று சகலதையும் வாரி அள்ளக்கூடிய மிகப் பெரிய வலைகளைக் கொண்டவையாகும்.

மேலும் வாசிக்க

banner

https://www.virakesari.lk/article/225381

மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்

1 month 2 weeks ago

மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்

Veeragathy Thanabalasingham

September 16, 2025

09int-Nepal-Protests-Leadall-03-tzgk-vid

Photo, NY TIMES

தெற்காசியாவில் மூன்று வருடங்களில் மூன்று அரசாங்கங்களை மக்கள் கிளர்ச்சிகள் பதவி கவிழ்த்திருக்கின்றன. முதலாவதாக, 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாவதாக, 2024 ஆகஸ்டில் பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் அரசாங்கத்தை கவிழ்த்தது. மூன்றாவதாக, கடந்த வாரம் அதேபோன்ற மக்கள் கிளர்ச்சி நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்கிறது.

இலங்கையினதும் பங்களாதேஷினதும் கிளர்ச்சிகளின்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் ஷேய்க் ஹசீனாவும் நாட்டை விட்டு தப்பியோடினார்கள். ஆனால், கடந்த வாரம் பதவியில் இருந்து விலகிய நேபாளப் பிரதமர் இராணுவத்திடம் பாதுகாப்பைத் தேடிக் கொண்டார். நாட்டை விட்டு வெளியேறிய கோட்டபாய சில வாரங்களில் நாடுதிரும்பிய அதேவேளை, ஷேய்க் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். அவரை பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்கு உட்படுத்துவதற்காக நாடுகடத்துமாறு பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்ற போதிலும், இந்தியா அதற்கு இணங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை.

இலங்கையில் மக்கள் கிளர்ச்சிக்கு இரு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற தேசிய தேர்தல்களில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மக்களின் பேராதரவுடன் பதவிக்கு வந்ததன் மூலம் அதிகார மாற்றம் அமைதியான முறையில் இடம்பெற்றது. அந்த மாற்றம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடதுசாரிக்கட்சி ஒன்று ஜனநாயக தேர்தல்கள் மூலம் முதன் முதலாக அதிகாரத்தைக் கைப்பற்றிய ‘சாதனையாக’ பதிவாகியிருக்கிறது. பங்களாதேஷில் நோபல் சமாதானப் பரிசாளரான முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவிருக்கிறது. கடந்த வாரத்தைய கிளர்ச்சியை அடுத்து நேபாளத்திலும் இடைக்கால அரசாங்கம் ஒன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறது.

தெற்காசியாவின் இந்த மூன்று மக்கள் கிளர்ச்சிகளையும் பொறுத்தவரை, பங்களாதேஷிலோ அல்லது நேபாளத்திலோ இடம்பெற்ற படுமோசமான வன்முறைகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் கிளர்ச்சி பெருமளவுக்கு அமைதியான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தில் மக்கள் கிளர்ச்சி மூலம் அரசாங்கத்தை கவிழ்த்த முதல் நாடாக இலங்கை வரலாற்று முக்கியத்துவம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.

சகல கிளர்ச்சிகளிலும் மாணவர்களும் இளைஞர்களுமே முன்னரங்கத்தில் நிற்பது இயல்பு. ஆனால், கடந்த வாரத்தைய நேபாளக் கிளர்ச்சியில் இளைஞர்களின் பங்கேற்பு முன்னென்றும் இல்லாத வகையில் ஒரு குறிப்பிட்ட தலைமுறை இளைஞர்களின் போராட்டமாகவே முதலில் அடையாளப்படுத்தப்பட்டது. 1900 களின் பிற்பகுதிக்கும் 2010 களின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்த இளைஞர்கள் ‘இஸற்’ தலைமுறையினர் என்று வர்ணிக்கப்படுகின்றனர். குறிப்பாக 1997ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்த இவர்கள் 13 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

நேபாளத்தில் இடம்பெற்ற கிளர்ச்சி ‘ஜென் இஸற் இயக்கம்’ ( Gen. Z movement) என்றே பிரபல்யமாக அழைக்கப்படுகிறது. அந்தத் தலைமுறையினரின் சார்பில் பரந்தளவிலான அரசியல் சீர்திருத்தங்களை வேண்டிநிற்கும் ‘ஹமி நேபாள்’ (நாங்கள் நேபாளியர்கள்) என்ற இயக்கமே போராட்டத்துக்கு தலைமை வகித்தது. நேபாளம் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் புதிய நாடு அல்ல. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலமாக மாவோவாத கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் புரட்சியினால் பெரும் இழப்புக்களையும் அழிவுகளையும் நேபாளம் சந்தித்தது.

ஆனால், குறிப்பிட்ட வயதைச் சேர்ந்த  இளைய தலைமுறையினர் நேபாளத்தின் வீதிகளில் தற்போது எதற்காக  இறங்கினார்கள்?

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) தலைமையிலான அரசாங்கம் சகல சமூக ஊடகங்களையும் (2023 சமூக ஊடக பயன்பாட்டு ஒழுங்கு விதிகளின் கீழ்) ரெலிகோம் அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒருவார காலக்கெடு விதித்து ஆகஸ்ட் 28ஆம் திகதி அறிவித்தது. முக்கியமான சமூக ஊடகளில் எதுவும் அந்த அறிவிப்பை கருத்தில் எடுக்காத நிலையில் செப்டெம்பர் 4ஆம் திகதி அரசாங்கம் (பேஸ்புக், எக்ஸ், வட்ஸ்அப் உட்பட ) 26 சமூக ஊடகங்களை தடைசெய்தது. சுமார் மூன்று கோடி சனத்தொகையை கொண்ட நேபாளத்தில் ஒரு கோடியே 65 இலட்சம் பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.

சமூக ஊடகங்கள் மீது அரசாங்கம் விதித்த தடையை மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் ஒரு தணிக்கையாகவும் தகவல்களைப் பெறுவதற்கான ஒரு கட்டுப்பாடாகவுமே பார்த்தார்கள். சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் இணையத்தை பெருமளவுக்கு பயன்படுத்துகின்ற ஒரு நாட்டில்  இத்தகைய தடைவிதிப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்கவில்லை.

செப்டெம்பர் 8ஆம் திகதி வீதிக்கு இறங்கிய இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளில் 19 பேர் பலியானதுடன் நூறுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். அதையடுத்து தலைநகர் காத்மண்டுவில் மாத்திரமல்ல, நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள்.

செப்டெம்பர் 9ஆம் திகதி சமூக ஊடகங்கள் மீதான தடையை அரசாங்கம் நீக்கிய போதிலும் போராட்டங்கள் தணியவில்லை. நேபாளத்தில் கடந்தகாலப்  போராட்டங்களின்போது  இடம்பெறாத அளவுக்கு படுமோசமான வனமுறைகள் கடந்த வாரம் இடம்பெற்றன. அரசியல் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உயர்நீதிமன்றம் உட்பட பெருவாரியான அரசாங்கச் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தார்கள். சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராக இளைய தலைமுறையினர் அமைதியான முறையில் முன்னெடுத்த போராட்டம் இறுதியில் அரசாங்கத்தை கவிழ்த்த மாபெரும் மக்கள் வன்முறைக் கிளர்ச்சியாக மாறியது.

வன்முறைகள் தீவிரமடைந்து சிறையுடைப்புச் சம்பவங்களும் இடம்பெற்றன. ஆனால், நேபாள இராணுவம் ஓரிரு நாட்களில் அராஜக நிலைவரத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. கடந்த வார வன்முறைகளில் குறைந்தது 51 பேர் பலியானதாகவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தாகவும் செய்திகள் தெரிவித்தன. முன்னாள் பிரதமர் ஒருவரின் மனைவி உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவமும் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியின் தலைவர் (பிரதமர்) கே.பி. சர்மா ஒலி, நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் டியூபா மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோவாத நிலையம்) கட்சியின் தலைவர் பிரசண்டா ஆகியோருக்கு எதிராக ஏற்கெனவே கடுமையாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. கோட்பாடுகளைப் பொறுத்தவரை, பெருமளவுக்கு ஒத்துப்போகாத இந்தத் தலைவர்களை ஊழலே பிணைத்து வைத்திருந்தது என்று கூட விமர்சனங்கள் வெளியாகின.

ஆட்சியாளர்களின் குடும்பங்கள் ஆபாசத்தனமான ஆடம்பரத்தில் வாழ்வதைக் கண்டு கொதித்துக் கொண்டிருந்த இளைஞர்களும் மக்களும் அரசாங்கத்தை விரட்டுவதற்கு எடுத்த முடிவை எவராலும் தடுக்க முடியவில்லை. முடியாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தை குடும்ப அதிகாரமாகவும் ஆட்சிமுறையை தனிப்பட்ட நலன்களுக்கான சாதனமாகவும் மாற்றியதைக் கண்டு சீற்றமடைந்த ஒரு தலைமுறையின் முழக்கம் நேபாளத்தை உலுக்கியிருக்கிறது.

நேபாள அரசியல் தலைமைத்துவம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டாட்சி (சமஷ்டி) ஜனநாயக குடியரசின் புதிய அரசியல் முறைமை மக்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்தது. ஆனால், இறுதியில் மக்கள் அரசியல் உறுதிப்பாடின்மை, மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊழலையே சந்தித்தார்கள். கடந்த 15 வருட காலப்பகுதியில் நேபாளத்தில் 17 அரசாங்கங்கள் பதவியில் இருந்தன. மாவோவாத ஆயுதக்கிளர்ச்சிக்குத் தலைமைதாங்கிய தலைவர்களும் மற்றைய கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட பிரதமர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் பெரிய வெளி இருந்தது.

முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மக்கள் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆட்சிகளினால் நேபாள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாமல் போனமையும் இறுதியில் அவர்களுக்கு எதிராகவே மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தில் இருந்து அவர்களை விரட்டியிருப்பதையும்  ‘அறகலய ‘ மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றங்களின் விளைவாக தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிக்குவந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனத்தில் எடுப்பது அவசியம்.

பங்களாதேஷைப் போன்றே அடுத்த கட்ட அரசியல் செயன்முறைகளை தீர்மானிப்பதில் நேபாளத்தில் இராணுவம் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கிறது. இளைய தலைமுறையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத்துடன் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நேபாளத்தின் முன்னாள் பிரதம நீதியரசரான 73 வயதான சுசீலா கார்கி இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக வெள்ளிக்கிழமை ( செப்டெம்பர் 12) பதவியேற்றிருக்கிறார்.

நேபாளத்தின் முதல் பெண் பிரதம நீதியரசரான கார்கி  (2016 – 2017), அந்த நாட்டின் நிருவாகத்துக்கு தலைமை தாங்கும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்ற இளைய தலைமுறை இயக்கத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கிக் கொண்டதன் பின்னரே கார்கியின் நியமனம் சாத்தியமாகியது. இடைக்கால நிருவாகத்தில் ‘ஹமி நேபாள்’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால அரசாங்கம் ஆறு மாத காலத்திற்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியிருக்கிறது.

முடியாட்சியின் முடிவுக்குப் பின்னரான கடந்த சுமார் 20 வருடகால ஜனநாயக பரீட்சார்த்தம் கண்டிருக்கும் தோல்வி நேபாளத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து குழப்பம் தரும் கேள்விகளை எழுப்புகிறது. தற்போதைய நெருக்கடியை நேபாளத்தின் குழப்பகரமான ஜனநாயக மாற்றத்தின் பரந்த பின்புலத்திலேயே விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இரண்டு வெற்றிகரமான மக்கள் போராட்ட இயக்கங்கள் (1990 & 2006) விரிவான அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை மற்றும் கூட்டாட்சி குடியரசு ஆட்சிமுறை ஆகியவற்றுக்குப் பின்னரும் கூட சாதாரண மக்களுக்கு அர்த்தபுஷ்டியான மாற்றத்தை நேபாளம் கொண்டுவரவில்லை. இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற முடியாட்சிக்கு ஆதரவான சக்திகளும் இருக்கின்றன.

தெற்காசியாவின் மூன்று மக்கள் கிளர்ச்சிகளையும் பொறுத்தவரை, இலங்கையில் மாத்திரமே இடைக்கால அரசாங்கங்கள் நியமிக்கப்படவில்லை.கோட்டபாய நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பிறகு அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். பிறகு 2024 செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியது. ஜனாதிபதியாக திசாநாயக்க பதவியேற்று இன்னமும் சில நாட்களில் ஒரு வருடம் நிறைவடையப்போகிறது.

பங்களாதேஷில் அடுத்த வருட முற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அந்தத் தேர்தல்கள் அமைதியான அதிகார மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் தற்போது வெளிக்கிளம்புகின்ற அரசியல் மாற்றுச் சக்திகள் புதிய நெருக்கடியை கையாளுவதற்கு கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறைகளிலேயே அந்த நாட்டின் எதிர்கால அரசியல் தசைமார்க்கம் தங்கியிருக்கிறது.

பொதுவில் மக்கள் அரசியல் வர்க்கத்தின் மீது கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பதையே இந்த தெற்காசியக் கிளர்ச்சிகள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.

Thanabalasingam-e1742967550320.jpg?resizவீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12303

பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?

1 month 3 weeks ago

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1982ம் ஆண்டில் பிரபாகரன் முதலும் கடைசியுமாக அப்போதைய மெட்ராஸுக்கு வந்தார்

கட்டுரை தகவல்

  • ரெஹான் ஃபசல்

  • பிபிசி ஹிந்தி

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.

2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் இன்றும் அதனை ஏற்க மறுக்கின்றனர்.

இப்படியான சூழலில், பிரபாகரனின் கடைசி தருணங்கள் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் 2008ம் ஆண்டு, நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையே அவருடைய கடைசி உரையாக பதிவாகியுள்ளது.

அதற்கடுத்த சில மாதங்களில் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று யாரும் நினைக்கவில்லை, ஆனால் அவருடைய வாழ்வின் கடைசி தருணம் வரை அவருடைய மனோபாவம் மாறவே இல்லை.

1976-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தொடங்கினாலும் கூட பிரபாகரன் நீண்ட காலமாக பெரிதும் அறியப்படாத ஒருவராகவே திகழ்ந்தார்.

1982 மே மாதம் சென்னையில் முதலும் கடைசியுமாக பிரபாகரன் பிடிபட்ட போது, இந்திய அரசு அவர் மீது அதிக கவனம் செலுத்தவில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவத்திற்கு சவால் விடுவதற்கும் தயங்காத வகையில், பிரபாகரனின் செல்வாக்கு மற்றும் நம்பிக்கை அபரிமிதமாக அதிகரித்தது.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் ராணுவ சக்திக்கு சவால் விடுக்கும் அளவுக்கு பிரபாகரனின் செல்வாக்கு இருந்தது

பிரபாகரனின் பாணி

இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தில் சிங்களர்கள் கொலைக்குப் பிறகு, பிரபாகரன் குறித்து பெரும் விவாதம் எழுந்தது.

அதன்பிறகு, இலங்கையில் போட்டி தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இது, தமிழர்கள் மத்தியில் தனிப்பெரும் தலைவராக உருவாவதற்கான முயற்சியாகவே நம்பப்பட்டது.

பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி தன்னுடைய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' (The Route of Prabhakaran) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஒவ்வொரு வார்த்தையும் சட்டம் போன்றது. அவரை யாரும் சவால் செய்ய முடியாது. அவருக்கு முன் தலை தாழ்ந்து, அவர் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, உங்களால் தமிழ் ஈழத்துக்காக போராட முடியும்," என எழுதியுள்ளார்.

"அவருடன் உடன்படவில்லையென்றால், ஒன்று நீங்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேற வேண்டும், அல்லது உலகை விட்டு நீங்க வேண்டும். அவரை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர் 'துரோகி' என அறிவிக்கப்படுவார். சோவியத் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தன்னுடைய எதிரிகளை எப்படி நடத்தினாரோ, அவர் அப்படி நடத்தப்படுவர்."

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், konark

படக்குறிப்பு, பிரபல பத்திரிகையாளர் எம்கே நாராயண் சுவாமி எழுதிய 'தி ரௌட் ஆஃப் பிரபாகரன்' புத்தகம்

அடுத்தடுத்து நடந்த கொலைகள்

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் குறிப்பிட்ட சிலருக்கு குறிவைத்தது. பிரபாகரனுக்கோ அல்லது விடுதலைப் புலிகள் அமைப்புக்கோ சில சமயங்களில் உதவியிருந்தவர்களும் கூட இலக்காயினர்.

பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அனிதா பிரதாப், தன்னுடைய 'ஐலாண்ட் ஆஃப் பிளட்' (Island of Blood) எனும் புத்தகத்தில், "பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து புத்தகம் எழுத திட்டமிட்டிருந்த நபர் ஒருவர், பாரிஸில் தன்னுடைய இல்லத்தின் முன்பாக சுட்டு கொலை செய்யப்பட்டார்." என எழுதியுள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார். வெளியுறவு அமைச்சர் (தமிழர்) ஒருவர் நீச்சல் குளத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இலங்கை ஜனாதிபதி ஒருவரும் மே தின பேரணியில் உரையாற்றியபோது கொலை செய்யப்பட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது தற்கொலை தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்.

ராஜிவ் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜிவ் காந்தி கொலையிலும் பிரபாகரன் தொடர்புபடுத்தப்படுகிறார்.

பிரபாகரனின் சரிவு

ஒரு கட்டத்தில், இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரபாகரனின் கட்டுப்பாடு ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கு சுருங்கும் நேரம் வந்தது.

"முதன் முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பு போராளிகளின் கண்களில் நான் பயத்தை பார்த்தேன். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளை நெருங்கி பார்த்துவரும் எனக்கு இது முற்றிலும் புதிய விஷயமாக இருந்தது," என பெயர் குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

"மே 17 அன்று, பிரபாகரன் தன் நெருங்கிய கூட்டாளிகளிடையே, தான் போர்க்களத்திலிருந்து ஓடவோ அல்லது ஆயுதங்களை கைவிடவோ மாட்டேன் என்றும், யாராவது போராட்டத்திலிருந்து விலகிக்கொள்ள விரும்பினால், அதை அவர்கள் தாராளமாக செய்யலாம் என்றும் கூறினார். குடிமக்களுடன் இணைய யாராவது விரும்பினால், அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அங்கே செல்லலாம். எதிரியின் கைகளால் வீழ்த்தப்படுவதை தவிர்க்கும் விதமாக யாரேனும் இறக்க விரும்பினால், சயனைடை உட்கொண்டு இறக்கலாம்."

சூரிய கடவுளின் அவதாரம் என்றும் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்றும் தன் ஆதரவாளர்களால் அழைக்கப்பட்ட ஒருவருக்கு இது மோசமான பிரியாவிடையாக இது இருந்தது.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல.

பிரபாகரனும் எட்டாம் எண்ணும்

தான் விரும்பிய அனைத்தையும் சொல்வதற்கு மே 17-ஆம் தேதியை பிரபாகரன் தேர்ந்தெடுத்தது தற்செயல் நிகழ்வு அல்ல.

பிரபாகரனின் பழைய கூட்டாளியான ராஜேஷ் குமார் பிரிட்டனில் வசிக்கிறார், அவர் தற்போது ராகவன் எனும் பெயரில் அறியப்படுகிறார்.

அவர் கூறுகையில், "பிரபாகரன் 8 எனும் எண்ணை துரதிருஷ்டவசமான எண்ணாக கருதினார். பிரபாகரன் எந்தவொரு வேலையையும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் செய்வதை தவிர்ப்பார், அது எதிர்காலத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என கருதினார். இந்த நாட்களில் மறைவிடத்திலேயே நாள் முழுவதும் பதுங்கியிருந்து அடுத்த நாளே வெளியில் வரும் அளவுக்கு அவருக்கு அதன் மீது வலுவான மூடநம்பிக்கை இருந்தது" என்றார்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெய்க்காப்பாளருடன் பிரபாகரன்

தோல்விகளால் குலைந்த மன உறுதி

2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மன்னார் மாவட்டம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பின், நவம்பர் மாதத்தில் விடுதலைப் புலிகள் வியூக ரீதியாக தங்களின் முக்கிய இடங்களான பூநகரி மற்றும் மாங்குளத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

2008-ஆம் ஆண்டு மே மாதம், விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதி கந்தையா பாலசேகரன் எனும் பால்ராஜ் மாரடைப்பில் இறந்தது பிரபாகரன் பெரும் பின்னடைவாக அமைந்தது.

பாலசேகரனின் நினைவாக மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்தது. பாலசேகரன் இறந்திருக்காவிட்டால், இலங்கை ராணுவத்துடனான போரின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும் என, அந்த அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் நம்புகின்றனர்.

2009-ஆம் ஆண்டுவாக்கில் பிரபாகரன் மேலும் அதிகமான பின்னடைவுகளை சந்திக்க ஆரம்பித்தார். இலங்கை அரசுப் படைகள், முதலில் பரந்தன் நகரத்தையும் பின்னர் அதன் அருகிலுள்ள கிளிநொச்சியையும் கைப்பற்றின. இதில், கிளிநொச்சி, விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்படும் பகுதிகளின் தலைநகரமாக கருதப்பட்டது. கிளிநொச்சியில் தோல்வியடைந்தது, விடுதலைப் புலிகள் அமைப்பினரின் மன உறுதியை கடுமையாக குலைத்தது.

இந்த நகரத்தில் தான் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பிரபாகரன் சந்தித்தார்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விடுதலைப் புலிகளின் மிகவும் அனுபவம் வாய்ந்த ராணுவப் பிரிவு தலைவராக கந்தையா பாலசேகரன் இருந்தார்.

இலங்கைக்கு அமெரிக்கா நெருக்கடி

விடுதலைப் புலிகளின் முக்கியமான ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த வேலாயுதன் தயாநிதி எனும் தயா மாஸ்டர் மற்றும் பிரபாகரனின் உரைகளை மொழிபெயர்த்த குமார் பஞ்சரத்னம் எனும் ஜார்ஜ் இருவரும் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததால் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது.

அப்போது ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸவும், அவரது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைமை வகித்தார்.

எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்காவிடமிருந்து கோட்டாபய ராஜபக்ஸ பெரும் அழுத்தத்தை சந்தித்தார். அமெரிக்க குடியுரிமையையும் கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க பிரதிநிதிகளிடம் எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை. எனினும், இதுதொடர்பான தன்னுடைய கவலைகளை ராணுவ தளபதிகளிடம் மே 14-ஆம் தேதி பகிர்ந்துகொண்டார்," என எழுதியுள்ளார்.

"இன்னும் எவ்வளவு காலம் இந்த போர் தொடரும் என அவர் கேள்வியெழுப்பினார். இந்த போர் கூடிய விரைவில் வெற்றியுடன் முடிவுற வேண்டும், இல்லையெனில், அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்கொள்வது கடினமாகிவிடும்."

கோட்டாபய ராஜபக்ஸ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அப்போது கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்

சண்டையை தொடர பிரபாகரன் முடிவு

மே 16 அன்று, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளின் கடைசி கட்ட பாதுகாப்பையும் அழித்தது.

ஜி-11 மாநாட்டில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த செய்தியை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, விடுதலைப் புலிகளை ராணுவம் வெற்றி கொண்டதாக முன்கூட்டியே அறிவித்தார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்கள் தலைவர் குமரன் பத்மநாதன் எனும் கேபி, கோலாலம்பூரில் அதே நாள், "சண்டை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. எங்களது துப்பாக்கிகளை கைவிடுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்." என தெரிவித்தார்.

பிரபாகரன் இந்த சண்டையை தொடர முடிவெடுத்ததால், மஹிந்த ராஜபக்ஸவும் குமரன் பத்மநாதனும் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.

விடுதலைப் புலிகள் பல நாட்களாக குளிக்கக் கூட முடியாத அளவுக்கு சண்டை கடுமையானதாக இருந்தது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன. விடுதலைப் புலிகளின் கொரில்லா படையினர் (எதிரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்துபவர்கள்) சிலர், இலங்கை படையினரால் பிடிக்கப்படக் கூடாது என்பதற்காக, தற்கொலை செய்துகொண்டனர்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது.

கடைசியாக உயிருடன் பார்க்கப்பட்டது எப்போது?

மே 17 அன்று இரவு, விடுதலைப் புலிகளின் கடைசிப் படைகளை 1600 சதுர மீட்டருக்குள் இலங்கை ராணுவம் நெருக்கியது. இலங்கை ராணுவம் மூன்று புறங்களில் சூழ்ந்திருந்தது. நான்காவது பக்கத்தில், இலங்கை கடற்படை தொடர்ந்து கண்காணித்து வந்த நந்திக்கடல் இருந்தது.

மே 17 அன்று விடுதலைப் புலிகளின் பல தளபதிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதையடுத்து, அந்நாள் அந்த அமைப்புக்கு மிகவும் துரதிருஷ்டவசமான நாளாக அமைந்தது.

விடுதலைப் புலிகளின் கொரில்லா படையை சேர்ந்த 'எஸ்கே' பின்னொரு நாளில் அளித்த நேர்காணலில், "மே 17 அன்று கடைசியாக பிரபாகரன் உயிருடன் காணப்பட்டார். 6 மணிக்கு பிரபாகரன் இருந்த இடத்தை நான் அடைந்தேன். எங்களுடைய உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது" என்றார்.

"நம்பினால் நம்புங்கள், தமிழ் ஈழம் எனும் கனவு சிதைய போகிறது என்பதை உணர்ந்திருந்த போதிலும், பிரபாகரன் மிகவும் சாதாரணமாகவே காணப்பட்டார்."

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

பிரபாகரனின் மகன் மரணம்

அடுத்த நாள், மீதமுள்ள விடுதலைப் புலிகள், ராணுவ முற்றுகையை தகர்க்க முயற்சித்தனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தனர், ஆனால், 30 நிமிடங்களில் இலங்கை படையினர் மீண்டும் குழுக்களாக இணைந்தனர்.

இந்த முறை இலங்கை படையின் எதிர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் படையை சேர்ந்த தளபதிகள் பலரும் பிரபாகரனின் 24 வயது மகன் சார்லஸ் ஆண்டனியும் கொல்லப்பட்டார்.

ஆண்டனியின் உடலை இலங்கை படையினர் தேடியபோது, அவரிடம் 23 லட்சம் இலங்கை பணம் இருந்ததை கண்டறிந்தனர்.

53வது பிரிவின் படைத்தளபதியாக இருந்த கமல் குணரத்ன, அச்சமயத்தில் பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் சூசை தவிர விடுதலைப் புலிகளின் தலைமை பொறுப்பில் இருந்த பலரும் அழிக்கப்பட்டதாக கூறினார்.

இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரன் குறித்த செய்தி வரும் வரை சண்டை தொடரும் என தெளிவாக கூறினார்.

பிரபாகரனின் கடைசி தருணம் எப்படி இருந்தது? - ஓர் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி (வலதுபக்கம் உள்ளவர்)

பிரபாகரன் மரணம் குறித்த செய்தியை பெற்ற குணரத்ன

மே 19 அன்று வரை பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற செய்தி மேஜர் குணரத்னவுக்கு சிறிதும் தெரியவில்லை. இதையடுத்து, நந்திக்கடல் பகுதியின் சேறு நிறைந்த உவர் நீரில் கடுமையான சண்டை வெடித்ததாக இளநிலை அதிகாரி ஒருவர் அவரிடம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளை சேர்ந்த பலரும் அங்கே சிக்கியிருந்தனர். அவர்களுள் யாரும் ஆயுதத்தைக் கைவிட தயாராக இல்லை.

இறுதியில் சண்டை முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, தான் காத்திருந்த செய்தி குணரத்னவுக்கு கிடைத்தது.

தன்னுடைய 'தி கேஜ், தி ஃபைட் ஃபார் ஸ்ரீ லங்கா அண்ட் தி லாஸ்ட் டேஸ் ஆஃப் தமிழ் டைகர்ஸ்' (The Cage, The Fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers) எனும் தன் புத்தகத்தில் கார்டன் வெய்ஸ், "கர்னல் ரவிப்ரியா மேஜர் ஜெனரல் குணரத்னவிடம், 'சார், நாங்கள் பிரபாகரனை கொலை செய்துவிட்டோம்'. என கூறினார்," என எழுதியுள்ளார்.

ஆச்சர்யமடைந்த குணரத்ன, 'உறுதியாக கூறுகிறீர்களா' என கேட்டதற்கு, 'ஆமாம், உறுதியாக,' என பதிலளித்துள்ளார்.

ஆனால், குணரத்ன இதனை உறுதியாக அறிய விரும்பியதால், கர்னல் லலிந்த கமகேவை சம்பவ இடத்துக்கு அனுப்பினார். சில நிமிடங்களிலேயே கமகேயின் குரல் ராணுவ தொலைபேசியில் ஒலித்தது: 'சார், அது சரியான செய்திதான், பிரபாகரன் தான்.' என தெரிவித்தார்.

பிரபாகரனின் உடல் கண்டறியப்பட்டது

ஜெனரல் சரத் ஃபொன்சேகா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெனரல் சரத் பொன்சேகா

முற்றிலும் உறுதிப்படுத்திய பின் குணரத்ன இந்த செய்தியை ராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பினார். அதற்கு முன்பு, பிரபாகரனின் உடலை கொண்டு வருமாறு படையினரை கேட்டுக்கொண்டார்.

எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அந்த சமயத்தில் இலங்கை படையினர் சுமார் மூவாயிரம் பேர் பிரபாகரனின் உடல் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் திரண்டிருந்தனர். சேறு நிறைந்த ஆழமற்ற நீரில் இறங்கி படையினர் உடலை வெளியே எடுத்தனர்." என குறிப்பிட்டுள்ளா.

"பிரபாகரனின் உடலை படையினர் பார்த்த உடனேயே, அவர்கள் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர். படையினரை ஒருங்குபடுத்த அதிகாரி முயற்சி மேற்கொண்டார், ஆனால் அவரின் வார்த்தைகளுக்கு பயனில்லாமல் போனது."

ஜெனரல் பொன்சேகா இந்த செய்தியை அறிந்தபோது இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தார். பொன்சேகாவிடம் குணரத்ன சிங்கள மொழியில் தொலைபேசியில், 'மஹா எஸ் இவராய்' என்றார், அதாவது, 'பெரியவன் முடிந்து விட்டான்'.

அடையாள அட்டை

பிரபாகரனின் அடையாள அட்டை

பட மூலாதாரம், Ministry of Defence Sri Lanka

படக்குறிப்பு, பிரபாகரனின் அடையாள அட்டை

பிரபாகரன் சுமார் 9.15 மணியளவில் இறந்தார். அவருக்கு அப்போது வயது 54.

எம்ஆர் நாராயண் சுவாமி எழுதுகையில், "அவருடைய நெற்றியில் பெரிய காயம் இருந்தது, இதனால் அவருடைய தலை இரண்டு பாகங்களாக பிளவுபட்டிருந்தது. அவருடைய வாய் திறந்திருந்தது, அவருடைய கண் மேல் நோக்கி இருந்தது. அவருடைய தாடி வெள்ளை நிறத்தில் இருந்தது." என எழுதியுள்ளார்.

"குணரத்ன அவருடைய உடலை தொட்ட போது, அது இன்னும் சூடாக இருந்தது. அவருடைய நெற்றி தவிர வேறெங்கும் துப்பாக்கி குண்டு காயம் இல்லை. பிரபாகரன் அப்போது ராணுவ உடையில் இருந்தார். அவருடைய பாக்கெட்டில் தேடியபோது, 001 எனும் வரிசை எண்ணுடன் விடுதலைப் புலிகளின் அடையாள அட்டை கண்டறியப்பட்டது, அந்த அடையாள அட்டை ஜனவரி 1, 2007 அன்று வழங்கப்பட்டது."

இதுதவிர, நீரிழிவு மருந்துகள் சிலவும் கண்டறியப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து வாங்கப்பட்ட திராட்சை மணத்துடன் கூடிய லோஷனும் (hand lotion) இருந்தது. அவரின் தலையில் இருந்த காயம் நீல நிற துணியால் மூடப்பட்டிருந்தது.

கார்டன் வெய்ஸ் எழுதுகையில், "12.7 எம்எம் தோட்டாவால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனின் ராணுவ உடையை கழற்றுமாறு உத்தரவிட்டார். இலங்கை படையினரை தவிர, ராணுவ உடையணிய யாருக்கும் உரிமை இல்லை என்பது அவரின் வாதமாக இருந்தது.

பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்டது

நாராயண் சுவாமி எழுதுகையில், "பிரபாகரனின் உடலை அடையாளம் காண கர்னல் கருணா மற்றும் தயா மாஸ்டர் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களை அனுப்புவதாக பொன்சேகா குணரத்னேவிடம் தெரிவித்தார்." என குறிப்பிட்டுள்ளார்.

"இருவரும் ராணுவ விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அந்த உயிரற்ற உடலை அடையாளம் காண அவர்கள் ஒரு நொடி கூட எடுத்துக்கொள்ளவில்லை."

பிரபாகரனின் மரணத்தால் தமிழ் ஈழத்துக்கான ஆயுத போராட்டமும் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gvrppzdgno

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன்

1 month 3 weeks ago

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன்

facebook_1757217343241_73703037316274215

கடந்த வாரத்துக்கு முதல் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. பெற்றோரும் உறவினர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை முகநூலில் பகிர்ந்து கொண்டாடினார்கள். இந்த இடத்தில் எனது நண்பர் ஒருவர் கூறிய உரையாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த உரையாடல் நடந்த இடம் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யமான  தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் வாசலில். புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் தங்கள் பிள்ளைகளுடைய வகுப்பு முடியும் வரையிலும் தனியார் கல்வி நிறுவனத்தின் வாசலில் காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையிலான உரையாடல் அது. இந்த உரையாடலை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனது நண்பரும்  ஒரு கட்டத்தில் அந்த உரையாடலில் ஈடுபட்டார். அந்த உரையாடல் வருமாறு…

பெற்றோர்-1-“இந்தச் சின்ன வயதில் எங்கட பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டி இருக்கு? அஞ்சு மணிக்கு எழுப்ப வேணும்”.

பெற்றோர்-2-“அப்படியே? அஞ்சு மணிக்கு எழும்பி எத்தனை மணி மட்டும் படிக்கிறது?”

பெற்றோர்-1-“அஞ்சு மணியிலிருந்து ஆறு மணி மட்டும் வீட்டில படிப்பு. ஆறிலிருந்து ஏழு மட்டும் ரியூஷன். ரியூசன் முடிஞ்ச கையோட வீட்ட வந்து சாப்பிட்டிட்டு பள்ளிக்கூடத்துக்குப் பறக்க வேணும்”.

பெற்றோர் -2 -”பள்ளிக்கூடத்தால வந்து?”

பெற்றோர்-1- “வந்த வேகத்தில் சாப்பிட வேணும்.பிறகு ஒரு சின்னத் தூக்கம். பிறகு இரண்டிலிருந்து நாலு மணி மட்டும் ரியூஷன். பிறகு நாலரையில இருந்து இந்த டியூஷன்.பிறகு ஏழில இருந்து ஒன்பது மட்டும் வீட்டில தாய் படிப்பிப்பா”.

பெற்றோர் -2- “அப்ப பிள்ளை எப்ப நித்திரைக்குப் போகும்?”

பெற்றோர் -1- “10 மணிக்கு .. நாலரைக்கு எழும்ப வேணுமே ?எங்கட பிள்ளையள் எவ்வளவு வருந்திப் படிக்க வேண்டி இருக்கு?”

இந்த உரையாடல் போய்க்கொண்டிருக்கும்போது வகுப்பு முடிந்து பிள்ளைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. எனவே முதலாவது பெற்றோர் தனது பிள்ளையை ஏற்றிக்கொண்டு சென்று விட்டார். இரண்டாவது பெற்றோர் இப்பொழுது எனது நண்பரோடு கதைக்கிறார்….

“பாத்தீங்களே  பிள்ளைய எப்பிடிப் படிப்பிக்கினம் என்று? அவர் சொன்னது உண்மை எண்டு நம்புறீங்களே ?”

எனது நண்பர் – “ஏன் பொய்யே?”

பெற்றோர் -2- “ஓம்.அது பொய்.அவர் சொன்னவர் பிள்ளை அஞ்சு மணிக்கு எழும்புது என்று. அது பொய். பிள்ள மூன்று மணிக்கு எழும்புது. அது பத்து மணிக்கு நித்திரைக்குப் போறதில்ல. 11 மணிக்குத்தான் போகுது”.

நண்பர்- “உண்மையே? ஏன் அப்பிடிப் பொய் சொன்னவர்?”

பெற்றோர் -2- “ஏனெண்டால் தன்ர பிள்ள அவ்வளவு நேரம் படிக்குது எண்டு சொன்னா நீங்களும் உங்கட பிள்ளைய அப்படிப் படிப்பீங்கள்.போட்டியில உங்கட பிள்ளை முன்னுக்கு வரலாம்.அதுதான் தன்ர பிள்ள படிக்கிற நேரத்தக் குறைச்சுச் சொன்னவர்”…..

இது அந்தத் ரியூட்டரி வாசலில் நடந்த ஓர் உரையாடல். புலமைப் பரிசில் பரீட்சையின் போட்டி மனோநிலையை அது காட்டுகிறது. பரவலாக விமர்சிக்கப்படுவதுபோல அது பிள்ளைகளின் பரீட்சை அல்ல. நடுத்தர வர்க்கப் பெற்றோரின் பரீட்சைதான். அதுவும் படித்த நல்ல உத்தியோகம் பார்க்கும் பெற்றோர். ஆனால் பிள்ளைகளிடம் அவ்வாறான போட்டி மனோநிலை இருக்கும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி ஒரு போட்டி மனோநிலைக்குரிய வயது அதுவல்ல.

எனக்குத் தெரிந்த ஓர் ஆசிரியரின் பிள்ளை பரீட்சை எழுதிய பொழுது கல்வியதிகாரியான அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார்… “பரீட்சை எழுதப் போகும்போது பிள்ளைக்கு உறிஞ்சிக் குடிக்கும் ஒரு தண்ணீர்ப் போத்தலை வாங்கி கொடுங்கள். பரீட்சைச் சூழலில். பதட்டத்தில் பிள்ள மூடியைத் திறக்கும்போதோ அல்லது மூடும்போதோ நீரைச் சிந்தி விடக்கூடும்”….. என்று. தண்ணீர்ப் போத்தலின் மூடியை பதட்டத்தில் சரியாக மூட முடியாத ஒரு வயதில் இப்படி ஒரு தேசிய மட்டப் பரீட்சை தேவையா? இந்தக் கேள்வி இந்த நாட்டில் ஏற்கனவே பல மனநிலை மருத்துவர்களாலும் கல்வியியலாளர்களாலும் கேட்கப்பட்டுவிட்டது. ஆனால் மாற்றம் நடக்கவில்லை.

அந்தப் பரீட்சையின் போட்டித் தன்மை காரணமாக அந்தப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக வருவாயீட்டும் தொழிற் துறையாக வளர்ந்து விட்டன. அங்கே இலவசக் கல்வி கேள்விக்குள்ளாகிறது. அங்கே வசூலிக்கப்படும் காசு ஏனைய தேசியமட்டப் பரீட்களுக்காகப் படிக்கும் பிள்ளைகளிடம் வசூலிக்கப்படும் காசைவிட அதிகமாகவும் இருப்பதுண்டு. பரீட்சை பெறுபேறுகளின் பின் ஆசிரியர்கள் கௌரவிக்கப்படும் விதத்திலும் பெற்றோரின் மனோநிலை தெரிகிறது. சில ஆசிரியர்களுக்கு தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் ஒரு தகப்பன் ஆசிரியருக்கு ஒரு காரை வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் இதில் சித்தி பெற்ற பிள்ளை பின்னர் வரக்கூடிய சாதாரண தரம் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் வெற்றி பெறும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவர் சொன்னார்….மேல் மாகாணத்தில் அவருக்கு நியமனம் கிடைத்தது. நியமனம் கிடைத்ததும் அவர் முதலில் போனது கொரனவில் உள்ள தக்க்ஷிலா மத்திய கல்லூரிக்கு. அங்கேதான் புலமைப் பரிசில் பரீட்சையில் நாட்டிலேயே முதற் தடவை 200 புள்ளிகளைப் பெற்ற பிள்ளை படித்துக் கொண்டிருந்தது. அந்தப் பிள்ளையின் ஆறாவது ஆண்டு தவணைப் பரீட்சைகளின் பெறுபேறுகளை அவர் தொகுத்துப் பார்த்திருக்கிறார். அந்தப் பிள்ளை முன்னணியில் நிற்கவில்லை.

அதாவது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற எல்லா பிள்ளைகளுமே கல்விப் பொது சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் பிரகாசிக்கும் என்றில்லை. ஒரு தேசிய பரீட்சையின் முக்கியத்துவத்தை உணர முடியாத வயதில் பிள்ளைகளை பந்தயக் குதிரைகளாக மாற்றுவது பெற்றோர்தான். இந்த பந்தயக் குதிரை மனோபாவம் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கின்றது. அதேயளவுக்கு அவர்களுடைய உளப்பாங்கையும் தீர்மானிக்கின்றது. உலகின் முன்னேறிய கல்வி முறைமையைக் கொண்டிருக்கும் நாடுகளில், குறிப்பாக யப்பானில் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயதுவரை பரீட்சைகள் இல்லை. அதற்குக் கூறப்படும் விளக்கம் என்னவென்றால், உளப்பாங்கு உருவாகும் ஒரு காலகட்டத்தில் போட்டிப் பரீட்சைகளை வைத்தால் அது  பிள்ளைகளின் உளப்பாங்கில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிறு பிராயத்திலேயே உருவாக்கப்படும் போட்டிச் சூழல் பிள்ளைகளை சுயநலமும் பேராசையும் பொறாமையும் கள்ளத்தனமும் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது.

“பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் கடினமான சுமையை கொடுக்கிறார்கள். புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சிறந்த வியாபாரமாகவும் மாறிவிட்டது. உண்மையில், குழந்தைகள் இன்னும் இந்த சுமையை புரிந்து கொள்ளும் அளவு முதிர்ச்சி அடையவில்லை. எனவே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் பிள்ளை சித்தி அடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், கல்வியின் பெறுமதியை பற்றிய அவர்களின் புரிதல் காலப்போக்கில் தெரிய ஆரம்பிக்கும்.கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும் சூழலை அவர்களுக்கு உருவாக்குங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள்,பெரியவர்கள் மற்றும் பிறருக்கு மரியாதை கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள், ஏனெனில் இந்த பண்புகள் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிக முக்கிய பங்களிக்கும்”என்று கூறுகிறார், பேராதனைப் பல்கலைக்கழக,பொறியியற் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி. நவரட்ணராஜா.

போட்டிபோட்டுப் படித்து பட்டம் பெற்று, முன்னிலைக்கு வந்த பலர் சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பொருளாதார நெருக்கடி தோன்றிய பொழுது நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்கள். இந்த போட்டி மனோநிலை முன்னேறுவதில் மட்டுமல்ல தப்பிச் செல்வதிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும் நன்கு தெரிந்த  ஒருவர் பிரதமராகவும் கல்வி அமைச்சராகவும் உள்ள அரசாங்கத்தால்கூட  புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பொருத்தமான முடிவை  எடுக்க முடியவில்லை. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் கொழும்பில் தேசிய கல்வி ஆனைக்குழுவை சந்தித்த பிரதமர் ஹரினி இந்த  விடயதைப் பற்றியும் உரையாடியுள்ளார். புலமை பரிசில் பரீட்சையை இப்போதைக்கு அவர்கள் நீக்கப் போவதில்லை என்று தெரிகிறது. சிலசமயம் அவர்களுடைய ஆட்சிக்காலம்  முடிவதற்கு இடையிலாவது நீக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான். சிறு பிள்ளைகளுக்கான ஒரு தேசிய  பரீட்சையை நீக்கும் விடயத்தில்  சமூகத்தின் கூட்டு உளவியலை மீறிப்போகப் பயப்படும் ஒர் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு,யுத்த வெற்றி நாயகர்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தலாமா இல்லையா? போன்ற இதயமான பிரச்சினைகளில் துணிந்து முடிவெடுக்கும், ரிஸ்க் எடுக்கும் என்று எப்படி நம்புவது?

https://www.nillanthan.com/7764

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம்

1 month 3 weeks ago

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம்

main photo

76 வருட ஆட்சியின் "அபிவிருத்தி" என்ற பழைய அணுகுமுறை மீணடும்

சாத்தியக்கூற்று - சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி

பதிப்பு: 2025 செப். 13 19:14

யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் (Cricket) விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், தொழில் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டதா என்பது தொடர்பான சந்தேகங்கள் எழுகின்றன. சாத்தியக்கூற்று அறிக்கைகள் (Feasibility Report) சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் (Environmental Report) எதுவும் இன்றி வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர் 'தமிழ் மக்களுக்கு நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்' என்பதை உலகிற்கு காண்பிக்கும் நோக்கில் மாத்திரமே அபிவிருத்தி என்ற மாயை உருவெடுத்திருக்கிறது.
 

மாறாக நூறு வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் போராட்டம் ஒன்றை நடத்தி வரும் ஈழத் தமிழ்ச் சமூகம், தனது அரசியல் விடுதலை விவகாரத்தில் பொருத்தமான தீர்வு கிடைக்காத ஒரு பின்னணியில் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்விகளுக்கு சிங்கள தலைவர்களிடம் இருந்து பதில் இல்லை.

வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் நகர்வுகள் மிக நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை.

அபிவிருத்தி செய்தால் அரசியல் தீர்வு அவசியம் இல்லை என்ற தவறான கற்பிதம் ஒன்றை இலங்கை ஒற்றையாட்சி அரசு அன்று முதல் நுட்பமாக கட்டமைத்துள்ளது.

1949 ஆம் ஆண்டு கிழக்கில் கல்லோயா குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களுக்கு முதலிடம் வழங்கப்பட்ட ஒரு பின்னணியில் தான், 1956 ஆண்டு கல்லோயா இன அழிப்பு மோதல் ஏற்பட்டது.

இப் பின்புலத்தில்தான், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்றொரு அபிவிருத்திகளை வடக்கு கிழக்கில் அவதானிக்க முடிகிறது.

இதற்கு சந்திரிகா, மகிந்த, மைத்திரி - ரணில் மற்றும் கோட்டாபய என்று தொடர்ச்சியாக உற்று நோக்கினால், அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த நுட்பங்களை அவதானிக்க முடியும்.

அதேநேரம் அரசியல் நோக்கிலும் ஆட்சி செய்யும் கட்சிகள் தமது செல்வாக்கை தமிழ் மக்களிடம் வேரூன்ற செய்து, தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்தள்ளும் நோக்கில் வடக்கு கிழக்கில் பெரும் ஆடம்பரமாக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பின்னர் கைவிடப்பட்ட சம்பவங்களும் உண்டு.

உதாரணமாக மண்டைதீவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என பிரச்சாரம் செய்யப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

ஆனால், 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் அரசாங்கத்தில் யாழ்.மண்டைதீவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை.

யாழ் மாவட்ட செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலகம் முன்னெடுத்த நடவடிக்கை பொருத்தமானதாக அமையவில்லை.

சுமார் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தால் மண்டைதீவு சுற்றுலா மையத்தின் வேலை திட்டத்திற்கான நிதி விடுவிப்பு செய்யப்பட்டது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேலனை பிரதேச செயலகம் மற்றும் வேலனை பிரதேச சபை இணைந்து மண்டைதீவு சுற்றுலா மையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த நிலையில், குறித்த திட்டம் பொருத்தமான முறையில் முடிவுறுத்தப்படவில்லை.

எந்தவிதமான ஆய்வுகளும் செய்யப்படாமல் அரசியல் நோக்கில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பிரதமராக இருந்த ரணில் ஆகியோருடைய படங்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை மண்டைதீவில் நாட்டப்பட்டிருந்தது.

திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கடற்பிரதேசம் ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணப்படும் நிலையில் படகுச் சவாரிகளை மேற்கொள்ள, குறித்த கடல் பிரதேசத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் எழுந்தன.

ஆகவே, சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் இது பற்றிய சாத்தியக் கூற்று ஆய்வுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்திருக்க வேண்டும்.

ஆனால்,அவ்வாறு எந்த ஒரு ஆய்வுகளும் இல்லாமல் அரசியல் நோக்கில் எடுத்த எடுப்பில் கொழும்பு அரசியல் நிர்வாகம் தமிழ் மக்களை தம் வசப்படுத்த வேண்டுமென்ற ஒரே ஒரு நோக்கில் வடமாகாண அதிகாரிகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ஏனைய தீவுப் பகுதிகளான சாட்டி, காரைநகர் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருந்த ஒரு நிலையில், ஏன் குறித்த திட்டத்தை மண்டைதீவில் செயற்படுத்தினார்கள் என்ற நியாயமான கேள்விகளுக்கு கொழும்பு அரசியல் நிர்வாகத்தினால் இன்றுவரை பதிலளிக்க முடியவில்லை.

ஆகவே, கொழும்பு மைய சிங்கள அரசியல் கட்சிகளுக்கு குடை பிடிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் தமிழ் முகவர்கள் முன் யோசனைகள் எதுவுமின்றி பெயர் பலகையை நாட்டுவது, அடிக்கல் நாட்டுவது போன்ற நிகழ்வுகளை பெரும் பிரச்சாரமாக காண்பித்து வாக்கு அரசியலில் ஈடுபடுகின்றனர் என்பது மாத்திரம் இங்கே பகிரங்கமாக தெரிகிறது.

மக்களின் வரிப்பணத்தில் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் மண்டதீவு சுற்றுலா மையம் தற்போது உரிய முறையில் செயற்படுத்தப்படாமல் கவனிப்பாரற்று உள்ளமை அரசியல் வேடிக்கை.

இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் மண்டைதீவு சுற்றுலா மையத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதற்கு யார் பொறுப்பு?

யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் இத் திட்டத்தை செயற்படுத்தினாலும், கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் அழுத்தங்களும் அரசியல் நோக்கங்களும் இருந்தன என்ற பின்னணியில் யாழ் செயலக அதிகாரிகள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கொழும்பு நிர்வாகமே முன்வைக்கும் ஆபத்துகள் உண்டு.

கொழும்பு நிர்வாக அரசியல் செல்வாக்குகளின் ஊழல் மோசடிகளை மூடி மறைக்கும் நோக்கில் தான் சமீபகாலமாக வடமாகாண அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன.

ஆகவே, இப்படி ஓர் அபிவிருத்தித் திட்டம் தான், மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானமும் என்ற முடிவுக்கு வரலாம்.

ஏனெனில், மைதானம் அமைப்பதற்குரிய சாத்தியக் கூற்று ஆய்வுகள், சுற்றுப்புறச் சூழல் ஆய்வுகள் செய்யப்பட்டமை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அல்லது வெளியிடப்படாமல் இருக்கலாம்.

இந்த அறிக்கைகள் வடமாகாணத்தை பிரதானப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டதா? அல்லது துறை சார்ந்தவர்களுடன் அது பற்றிய உரையாடல் நடத்தப்பட்டதா?

மைதானம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் கூட, இதுவரை ஆய்வு அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

அதேநேரம் மண்டைதீவு பிரதேசம் விவசாய நிலம் என்றும் அங்கு கடல் வாழ் உயிரினங்கள் இருப்பதாக யாழ் மாவட்ட செயலகம் 2022 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு அறிக்கை ஒன்று செயலகத்தின் இணையத்தில் உண்டு.

பா.ராஜ்குமார் என்ற ஆய்வாளர் மண்டை தீவுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.

அதனைவிட மண்டைதீவு விவசாய நிலம் என்றும், ஆனாலும் தொழில்நுட்ப ஆய்வுகள் செய்யப்பட்டு அதற்குத் தேவையான மேலதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவிகள் 2018 இல் செய்த ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், மண்டைதீவின் நில பயன்பாடுகள் பற்றிய ஆய்வு ஒன்றை 2020 இல் செய்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் அந்த நிலப்பகுதி விவசாயத்திற்குரியது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மாத்திரம் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவது இதற்கான காரணம்

மண்டைதீவில் மூலிகைகள் அதிகம் காணப்படுகின்றன. 2009 இற்குப் பின்னர், யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் அங்கு சென்று தாவரவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுண்டு.

ஆகவே, மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுத்தவர்கள் இது பற்றியெல்லாம் கவனம் செலுத்தினார்களா?

வெறுமனே அரசியல் நோக்கில் ஆய்வுகள் எதுவுமின்றி நிலம் ஒன்றை தெரிவு செய்து மைதானத்தை அமைத்த பின்னர் அதில் உள்ள பக்க விளைவுகள் பாதிப்புகள் போன்றவற்றை எதிர்கொள்ளப் போவது மண்டைதீவு பிரதேச மக்கள் தான்.

ஆகவே, உண்மையில் மக்கள் நலன் நோக்கில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதா? அல்லது ஜனாதிபதியை மேன்மைப்படுத்தி அபிவிருத்தி என்ற மாயைகளை காண்பித்து, 'அரசியல் விடுதலை' என்ற உணர்வுகள் கோரிக்கைகளை தமிழ் மக்களிடம் இருந்து மடைமாற்றும் உத்தியா?

இவ்வாறான உத்திகளையே மகிந்த, மைத்திரி, கோட்டாபய, ரணில் ஆகியோர் செய்தார்கள். ஆகவே, 76 ஆண்டு கால ஆட்சி முறைகளில் இருந்து மாற்றம் என்று மார்தட்டிக் கொண்டு பதவிக்கு வந்த அநுர அரசாங்கமும் முன்னய சிங்கள அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பகட்டு அரசியலை முன்னெடுக்கிறது என்ற உணர்வு சாதாரண மக்களிடம் மேலோங்கியுள்ளது.

இதனை யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் முகவர்கள் புரிந்திருப்பர்.

அதேநேரம் அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் - பெண்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வேலனை பிரதேச சபை தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றி இருந்தது. தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், மண்டைதீவில் உள்ள பல பாழடைந்துள்ள கிணறுகளில் எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டு கிணறுகளுக்குள் வீசப்பட்டதாகவும் அத்தீர்மானத்தில் உண்டு.

மண்டைதீவில் மனித புதைகுழிகள் இருப்பதாகவும் சாட்சியங்கள் இன்னும் உண்டு எனவும் உறுப்பினர் பிரகலாதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இராணுவம் பொதுமக்களின் காணிகளை அபகரித்து பாரிய முகாம்களை அமைத்துள்ளது என்றும் காணிகளை இழந்த மக்கள் வேறு பிரதேசங்களில் வாழ்வதாகவும் வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முன்னர் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகள், அந்த மக்களின் உள்ளூர் சுய தொழில் முயற்சிகள் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். குடிதண்ணீர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும்.

மைதானம் அமைக்கப்பட்டால் பிரதேச மக்களுக்கு முதலில் அங்கு தொழில்வாய்ப்பு என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆகவே, வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும், தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையிலும் அநுர அரசாங்கம் செயல்படுகின்றமை பகிரங்கமாக தெரிகிறது.

மைத்திரி - ரணில் ஆட்சி காலத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் மேற்படி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதன் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஆகவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவில்லை என்பது வேறு. ஆனால் 13 இன் கீழ் உள்ள மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாணங்களின் அரைகுறை அதிகாரங்களை கூட மீறும் வகையில் அநுர அரசாங்கம் செயல்படுகிறது என்ற முடிவுக்கு வரலாம்.

அத்துடன் காணி அதிகாரங்கள், கட்டிட நிர்மாண அனுமதி அதிகாரங்கள் அனைத்தும் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் இந்த மண்டைதீவு சர்வதேச மைதான விவகாரம் எடுத்துக் காண்பிக்கிறது.

1981 ஆம் ஆண்டு அமரர் ஜேஆர் ஆட்சியின் போது, யாழ் கல்லுண்டாய் வெளி சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த முறைகள் பற்றியும் ஞாபகப்படுத்த வேண்டும்...

https://www.koormai.com/pathivu.html?therivu=2610&vakai=5

Checked
Thu, 11/06/2025 - 15:04
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed