அரசியல் அலசல்

அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்பு

1 month 3 weeks ago

Screen-Shot-2025-05-07-at-1.38.02-AM-800

அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்புசிவதாசன்

கனடிய பிரதமர் கார்ணியின் அமெரிக்க ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு நேற்று நடந்தது. யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல இதுவும் வெடித்துச் சிதறுமோ என ஐயப்பட்ட சிலருக்கு ஆறுதல். செலென்ஸ்கி சந்திப்பின் பின்னர் தேனீர் கூட் வழங்காமல் அவமதித்து அனுப்பியமைக்கும் கார்ணியின் சந்திப்பின் பின்னர் வெள்ளை மாளிகையில் விருந்து வைத்து அனுப்பியமைக்குமுள்ள வித்தியாசம்?: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! பாவம் செலென்ஸ்கி வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. ட்றம்ப் கார்ணியை உபசரித்து அனுப்பியமை ட்றூடோ, செலென்ஸ்கி உட்படப் பலருக்கு பாடம் புகட்டுவதற்காகவும் இருக்கலாம். இதைத் திட்டமிட்டுச் செய்யக்கூடியவர் ட்றம்ப்.

இரண்டாம் ஆட்சியில் ட்றம்ப் தன்னை ஒரு சக்கரவர்த்தியாகவே feel பண்ணத் தொடங்கிவிட்டார். சாமரங்கள், ஆலவட்டங்கள் இல்லையே தவிர மந்திரிகள், ஆலோசகர்கள் புடைசூழ அவர் முன் சமூகம் தரும் பிரதானிகள் – நெட்டன்யாஹு தவிர்ந்த – அனைவருக்கும் ஒரு protocol உண்டு. ட்றம்புடன் பேசுவதற்கென்று ஒரு மொழியுண்டு. செலென்ஸ்கிக்கு அது தெரியாது. மூக்குடைபட்டு அனுப்பப்பட்டார். கார்ணிக்கு அது தெரியும். “நீங்கள் பல சொத்துக்காரர். எல்லாச் சொத்துக்களும் விற்பனைக்கென்று வருவதில்லை. நீங்கள் இருக்கும் இந்த வெள்ளை மாளிகைகூட விற்பனைக்கில்லை. விரைவில் உங்களை அழைத்துக் கெளரவிக்கவிருக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையும் அப்படித்தான்” என ட்றம்பின் மொழியிலேயே நக்கலும் நளினமுமாகச் சிரித்துக்கொண்டே கூறினார் கார்ணி. “கனடாவின் சொந்தக்காரரோடு பேசிவிட்டுத்தான் வருகிறேன். அது ஒருபோதும் விற்பனைக்கு வரப்போவதில்லை” என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருந்தார்.

அதற்காக ‘கனடாவை அபகரிக்கும்’ திட்டத்தை ட்றம்ப் விட்டுவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் எடுத்த போதிருந்த ட்றம்ப் தான் இப்போதும் இருக்கிறார். அவருக்குத் தேவை அமெரிக்க உற்பத்தித் துறை அமெரிக்காவுக்கு மீள வேண்டும் என்பதே. அதில் அவரது பிடி தளரவேயில்லை. “கனடாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். தேர்தலுக்கு முன்னர் முன்வைத்த வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கிறார். “கொஞ்சக் காலத்துக்கு அமெரிக்கர்கள் கஷ்டப்படத்தான் போகிறார்கள். அது பரவாயில்லை” என எளிமையாகக் கடந்து போகிறார். எனவே அவரது மனதை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் கார்ணி அங்கு சென்றிருந்தால் அதில் அவருக்கு வெற்றியில்லை. ஆனால் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல “முற்றும்” போடப்படாமல் கார்ணியின் சந்திப்பு “தொடரும்” எனக்குறியிடப்பட்டிருப்பது கார்ணியின் வெற்றி.

கார்ணிக்கு முன்னிருந்த ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்க்கோ ரூபியோ போன்ற விகடகவிகள் கார்ணிக்கு முன் பவ்வியமாக இருந்தமை அவதானிக்கத்தக்கது. வாய்களைத் திறந்து அவமானப்பட அவர்களுக்கு விருப்பமில்லாமலிருக்கலாம். ஆனால் வழக்கமான ஊடகக் கொழுந்துகளில் ஒன்று வெடி ஒன்றைக் கொழுத்திப் போட்டது. அதைக் கார்ணி மிகவும் இலாவகமாகத் திருப்பி அவரிடமே கையில் கொடுத்துவிட்டார்.

நாடு திரும்பியதும் அவருக்கு நிறைய வேலை இருக்கிறது. நோஞ்சான் அரசாங்கத்தில் நல்ல, அனுபவமுள்ள மந்திரிகளை நியமிக்க வேண்டும். பொய்லியேவுக்கு அட்மிசன் கிடைக்குமட்டும் வகுப்பு அமைதியாகவிருக்கும். கடற்கரையில்லா அல்பேர்ட்டா மாகாணத்தின் முதல்வி பிரிந்துபோவதற்கான மக்கள் வேட்கையை அறிய கருத்துக்கணிப்பை நடத்தப் போகிறாராம். சில வேளைகளில் அல்பேர்ட்டாவை மனதில் வைத்துக்கொண்டுதான் ட்றம்ப் “51 ஆவது மாநில” கர்ச்சிப்பைச் செய்கிறாரோ என்னவோ. அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் எரிபொருள் பெரும்பாலும் இங்கிருந்துதான் போகிறது. என்னவோ இப்பெண்ணும் ட்றம்பின் மார்-எல்-லாகோ மாளிகைக்கு விஜயம் செய்து வந்தவர். எதையும் அறுதியாகக் கூற முடியாது.

சந்திப்பின் பாகம் -2 வரும் வரை..

https://veedu.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/?fbclid=IwY2xjawKImvFleHRuA2FlbQIxMQBicmlkETFJVWhyRnJkbXJMYU8wckF0AR4ZWz1Sy28_a0y8z08kf97PqvpvEm7xrH_fNN1CB0tjZql8TLo5kIoHkWiX_A_aem_SSjgb-vsIHTsLaBveiSCOQ

தேசிய மக்கள் சக்தியின் இனவாதமற்ற ஆட்சி பிரசாரமும் சிங்கள- பௌத்தமயமாக்கும் ஆட்சியும்

1 month 3 weeks ago

தேசிய மக்கள் சக்தியின் இனவாதமற்ற ஆட்சி பிரசாரமும் சிங்கள- பௌத்தமயமாக்கும் ஆட்சியும்

-ஐ.வி.மகாசேனன்-

கடந்த கால அரசியல்வாதிகளை இனவாதிகளாகவும், தம்மை தூயவாதிகளாகவும் அனுரகுமார திசாநாயக்க பிரசாரம் செய்திருந்தார். குறிப்பாக தம்மை இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக விழித்திருந்தார். கடந்த ஏழு மாத கால ஆட்சியிலும் இச்சொல்லாடலை அதிகம் விழித்திருந்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமது ஆட்சி இனவாதத்தை களைந்துள்ளதாக அடிக்கடி கூறி வருகின்றார்கள். எனினும் கடந்த ஏழு மாதங்களில் இனவாதத்தை களைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாது என்பதற்கு போதியமான விளக்கங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் காணப்படவில்லை.

ஜே.வி.பி. பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியலின் தேர்தல் யுக்திகள் தொடர்பிலான விமர்சனங்கள் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னரான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் அதிகளவில் வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதன் செயலாக்க தன்மைகள் தொடர்பில் சமகாலத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகள் நிறைந்துள்ளன.

இந்த பின்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களில் கடந்த காலங்களை இருண்ட காலமாகவும், பழையவர்களை சாத்தான்களாகவும் சித்தரித்து, தங்களை புறக்கணிப்பதனூடாக பழைய இருண்ட காலத்திற்குள் சாத்தானின் பிடிக்குள் செல்வீர்களென்ற எச்சரிக்கை அச்சுறுத்தல்களை முன்வைக்கின்றார்கள். தங்களின் கடந்த காலங்களுக்கு பொறுப்பு கூறாது, தங்களை மீட்பர்களாகவும் புனிதர்களாகவும், தங்கள் ஆட்சியை ஒளி நிறைந்ததாகவும் சித்தரிக்க முயல்கின்றார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஏழு மாதங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் அடையப்பட்ட விகிதங்களையாவது பொதுவெளியில் சொல்ல திராணியற்ற நிலைமையிலேயே உள்ளார்கள்.  

இக்கட்டுரை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2024-செப்டம்பர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் யாழ்ப்பாணத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் தன்மையை கடந்த ஏழு மாத கால ஆட்சியில் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

2024 செப்டம்பர்-05அன்று அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், கடந்த கால அரசாங்கங்களை (கடந்த கால பாதை) இனவாதிகளாகவும் தங்களை தூயவர்களாகவும், தங்களை மாத்திரமாகவே தூயவர்களாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பாக தமிழ் மக்களிடம் ஆழமாக நிறைந்துள்ள ராஜபக்ச எதிர்ப்பு வாதத்திற்கு தூபமிடும் வகையில் ராஜபக்சக்கனை சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் குறியீடாக சுட்டிக்காட்டி, ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன கூடாரத்தின் உறுப்பினர்களே ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச கூடாரத்தில் பரவி இருப்பதாகவும் விழித்திருந்தார்.

குறிப்பாக ஜி.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும போன்றவர்கள் ராஜபக்சக்களின் அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்ததையும் தற்போது சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூடாரத்தில் உள்ளமையை குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான பின்னணியில் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள் யாவரையும் இனவாதியாக விழித்திருந்தார். இது தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து நிலையாகவே அமைகின்றது. தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் இக்கருத்தையே முன்னிறுத்தியிருந்தார்கள். சாத்தான்களின் விகிதம் அல்லது தோற்றம் வேறுபடலாம். எனினும் சாத்தான்கள் என்பது நிதர்சனமாகும். அநுரகுமார திசாநாயக்கவும் விதிவிலக்கானவரில்லை என்பதையே கடந்த காலமும் நிகழ்கால ஆட்சியும் உணர்த்துகின்றது.

கடந்த காலங்களில் ராஜபக்சக்களுடன் இணைந்து பயணித்தவர்களின் பரவலை சுட்டிக்காட்டிய அனுரகுமார திசாநாயக்க, ஜே.வி.பி.யினதும் தனதும் கடந்த காலத்தை மறந்துள்ளார் அல்லது மறைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியாக பரிணாமமாகியுள்ள ஜே.வி.பி.யும் கடந்த காலங்களில் ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்பட்டிருந்த இனவாதிகள் என்பதை அனுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுப்புக்கூறவோ மறுத்திருந்தார்.

குறிப்பாக 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் அமைச்சராக கூட்டு சேர்ந்து செயற்பட்டிருந்தார். அதுமட்டுமன்றி மகிந்த ராஜபக்ச நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை பெற்றுக்கொள்வதில் 2005 ஆம் அண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சவின் பிரதான பங்காளியாக ஜே.வி.பியே காணப்பட்டது. அன்று ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினராக இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

எனவே, அன்றைய ஜே.வி.பி.யின் இனவாத செயற்பாடுகளுக்கு அனுரகுமார திசாநாயக்கவும் பொறுப்பாளி என்பதே நிதர்சனமாகும். தென்னிலங்கையின் ஏனைய அரசியல்வாதிகள் மீது அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த விமர்சனங்கள் யாவும் அவருக்கும் பொருத்தமானதாகவே அமைகின்றது.

கடந்த கால அரசியல்வாதிகளை இனவாதிகளாகவும், தம்மை தூயவாதிகளாகவும் அனுரகுமார திசாநாயக்க பிரசாரம் செய்திருந்தார். குறிப்பாக தம்மை இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக விழித்திருந்தார். கடந்த ஏழு மாத கால ஆட்சியிலும் இச்சொல்லாடலை அதிகம் விழித்திருந்தார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமது ஆட்சி இனவாதத்தை களைந்துள்ளதாக அடிக்கடி கூறி வருகின்றார்கள். எனினும் கடந்த ஏழு மாதங்களில் இனவாதத்தை களைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாது என்பதற்கு போதியமான விளக்கங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் காணப்படவில்லை. அமைச்சரவை சிங்களமயமாக்கம். குறைந்தபட்சம் சன விகிதாசாரப்படி கூட அமைச்சரவையில் ஏனைய இனங்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை.

தையிட்டி விகாரை விவகாரத்தில் முன்னைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிலிருந்து விலகி செல்லும் போக்கையே கடைப்பிடிக்கிறது. கடந்த கால ஆட்சி தவறானது, அவர்கள் இனவாதிகள், தாம் தூய்மையானவர்கள் என்று சொல்லியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. தற்போது கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளுக்கு நீதி வழங்காது செல்வதும் ஒரு வகையில் இனவாதத்திற்கு துணை போகும் செயற்பாடாகவே அமைகின்றது.

சட்டவிரோத தையிட்டி விகாரை நிர்மாண விவகாரத்திற்கு இனவாத கலப்பற்ற சரியான தீர்வை வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றமை இனவாத செயற்பாடாகவே அமைகின்றது. அதுமட்டுமன்றி, சட்டவிரோத தையிட்டி விகாரை கட்டிட தொகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலப்பகுதியில் புதியதொரு மண்டப கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரச காவல்துறை இயந்திரங்களாகிய பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பிலேயே குறித்த கட்டிடம் திறக்கப்பட்டது. முப்படைகளின் தலைவராகவும் நிறைவேற்றுத் துறை ஜனாதிபதியின் அரச இயந்திரத்தின் பாதுகாப்பில் சட்டவிரோத கட்டிடம் திறக்கப்பட்டுள்ளமைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கூற தவறுவது அவர்களின் போலியான முகத்தை தோலுரிப்பதாகவும், அவர்களின் இனவாத முகத்தை வெளிப்படுத்துவதுமாகவே அமைகின்றது.

மேலும், தமிழர்களின் அடையாளங்களை சிதைக்கும் முன்னைய ஆட்சியாளர்களின் இயல்பை தொடர்பவர்களாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணப்படுகின்றது. ஈழத்தமிழ் நிலப்பரப்பின் அடையாளங்களில் ஒன்றாகவே ஆணையிறவு உப்பு காணப்படுகின்றது. அதற்கான சிங்கள பெயரிடலை கடந்த கால ஆட்சியாளர்களின் தவறாகவும் தாம் ஒருவார காலப்பகுதிக்குள் அதனை சீர்செய்வதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

எனினும் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் இலங்கை பாராளுமன்ற அவைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க, ‘தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க வலியுறுத்துவதை இனவாதமாக விழித்துள்ளார்.’ பிமல் ரத்நாயக்கவின் உரையாடல் ஆணையிறவு உப்பிற்கு இடப்பட்டுள்ள சிங்களப் பெயர் நிலைப்பதற்கான எதிர்வுகூறல்களையே உருவாக்கியுள்ளது.

இந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தியின் ‘இனவாதமற்ற ஆட்சி’ எனும் பரப்புரை, சிங்கள இனத்தை தவிர்ந்த ஏனைய இனங்களின் அடையாளங்களை இலங்கையிலிருந்து அழித்து விடுவதனால், ஒரே இனம் எஞ்சிய நிலையில் இனவாத தேவைகள் இருக்கப்போவதில்லை என்பதாகவே அமைகின்றது. கடந்த கால ஆட்சியாளர்கள் சிங்கள-பௌத்த இனவாதத்தை பாதுகாக்க, எதிராக கூறி (நேபயவiஎந Pசழியபயனெய) செய்தவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நேராக கூறி (Pழளவைiஎந Pசழியபயனெய) செய்கின்றது. இரு தரப்பினதும் இறுதி விளைவு சிங்கள – பௌத்த இன இருப்பை பாதுகாப்பதாக மாத்திரமே அமைகின்றது.

கோத்தாபய ராஜபக்சவின் வியத்கம அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் நாலக கொடகே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் மனித உரிமைப் போராட்டத்திற்கு எதிராக செயற்படுவதாக அனுரகுமார திசநாயக்க ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முன்னர் சுட்டிக்காட்டியிருந்தார். இத்தகையோருக்கா  தமிழ் மக்கள் வாக்களிக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். அதே கேள்வி தேசிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கும் பொருத்தமுடையதாகவே அமைகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஐ.நா. மனித உரிமை பேரவை அரங்கில் தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைக்கு எதிராகவே உள்ளார்கள். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிராகரித்துள்ளதுடன், ஐ.நா. மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச நாடுகள் சுட்டிக்காட்டும் போர்க்குற்ற இராணுவ மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றனர். கோத்தாபய அரசாங்கத்தில் நாலக கொடகே செய்தவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொண்டு வருகின்றார். எனவே இத்தகையோருக்கா தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபைகளை வழங்க போகிறீர்கள் என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் கேள்விகளிலிருந்தே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

எனவே, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அளந்துவிட்ட பல வாக்குறுதிகளின் முன்னுரையாக ஒப்புவித்த ‘இனவாதமற்ற ஆட்சி’ என்பதையே கடந்த ஏழு மாதங்களில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது, கடந்த கால ஆட்சி இயல்புகளை தொடரும் நிலைமைகளே காணப்படுகின்றது.

ராஜபக்சக்கள் ‘மணலாற்றை’ ‘வெலி ஓயா’ என மாற்றிக்கொண்டார்களெனில், ஜே.வி.பி. பரிணாம தேசிய மக்கள் சக்தியினர் ‘ஆணையிறவு உப்பை’ ‘ரஜ லுணு’ என மாற்றிக் கொண்டுள்ளார்கள். இதனை தமிழ் மக்கள் சாதாரணமாக ஏற்றுக்கொள்வார்களாயின், நாளை ‘யாழ்ப்பாணத்தின்’ உத்தியோகபூர்வ பெயர் ‘யாபணய’ ஆகவும் மாறலாம். ‘திருகோணமலை’ ‘திகுணாமல’ ஆகவும் மாறலாம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாட்டு தன்மையை கடந்த ஏழு மாத கால அனுபவங்களில் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியினர் கொடுக்கப்படும் வாக்குறுதிகளுக்குள் செயற்படுபவர்கள் அல்ல. இலங்கையின் மரபார்ந்த மகாவம்ச மனோநிலையின் உச்ச செயற்பாட்டாளர்களாகவே உள்ளனர்.

உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதி, தையிட்டி விவகாரத்தை இலகுவாக தீர்க்கலாம். அதில் பொதிந்துள்ள இனவாதமே அதனை தீர்க்க தடையாகிறது எனக் கூறிவிட்டு, தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமான பௌத்த பிக்குவிடம் சென்று சமரசம் பேசி தையிட்டி விவகாரத்திற்கு தீர்வு காண பரிந்துரைக்கின்றார். இதுவே மகாவம்ச மனோ நிலை.

ஜனாதிபதியின் உரையில் உரிமைகளை கேட்கும் தமிழ் மக்களின் கோரிக்கையே இனவாதமாக காணப்படுகின்றது. மாறாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பௌத்த பிக்கு நீதவானாகின்றார். இத்தகைய தேசிய மக்கள் சக்திக்கா தமிழ் மக்கள் ஊரையும் நகரையும் வழங்கப் போகிறார்களா? என்பதை தமிழ் மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும்.

https://thinakkural.lk/article/317653

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பும் வாக்குகள் எண்ணப்படும் முறையும்!

1 month 4 weeks ago

உள்ளூராட்சித் தேர்தல்  வாக்களிப்பும் வாக்குகள் எண்ணப்படும் முறையும்!

ந.ஜெயகாந்தன்

கிராமங்களை அபிவிருத்தி செய்யும் உள்ளுராட்சி சபைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன.  இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்றும், அந்த வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்றும் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முறைமைகளை விடவும் உள்ளூராட்சித் தேர்தல் முறைமை முற்றிலும் வித்தியாசமானது என்பதனால் வாக்களிக்க முன்னர் மக்கள் இது தொடர்பில் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

அதாவது ஜனாதிபதித் தேர்தல் முழுநாடும் ஒரே தேர்தல் மாவட்டம் போன்று கணிக்கப்பட்டு வெற்றி பெற்றவர் தீர்மானிக்கப்படுவர்.  அதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் விகிதாசார அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு கிடைத்த வாக்கு விகித அடிப்படையில் ஆசனங்கள் பகிரப்பட்டு விருப்பு வாக்கினை அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

ஆனால்,  உள்ளூராட்சித் தேர்தல் அவ்வாறானது அல்ல.  உள்ளூராட்சி பிரிவு பல வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு கலப்பு விகிதாசார முறையிலேயே நடத்தப்படுகின்றது.  அதேபோன்று வாக்குச் சீட்டும் மற்றைய தேர்தல் வாக்குச் சீட்டுகளை போலல்லாது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் சுயேச்சைக் குழுவின் இலக்கம் மற்றும் சின்னம் ஆகியவற்றை கொண்டதாக மட்டுமே இருக்கும். ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் வாக்குச் சீட்டுகள் வித்தியாசப்படும்.

2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் விகிதாசார முறையில் விருப்பு வாக்கு அடிப்படையில் நடத்தப்பட்ட போதும், 2017 ஆம் ஆண்டு செய்யப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கமைய அதன் பின்னர் அந்தத் தேர்தல் கலப்பு முறையிலேயே நடத்தப்படுகிறது.

கலப்பு விகிதாசார முறை என்றால் என்ன?

ஏதேனும் ஒரு உள்ளூர் அதிகார சபையில் வட்டார மட்டத்திலும், விகிதாசார பட்டியல் அடிப்படையிலும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை கலப்பு விகிதாசார முறையாகும். குறிப்பாக வட்டார மட்டத்தில் 60 வீதமும் விகிதாசார அடிப்படையில் 40 வீதமும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

வட்டாரங்கள் மற்றும் வட்டாரங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை எவ்வாறு கணிக்கப்படும்?

சனத்தொகை மற்றும் நிலத்தின் அளவு என்பன தொடர்பாகவும்,  இன ரீதியான அடிப்படையிலும் குறித்த விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டு வட்டாரங்களும் உறுப்பினர் எண்ணிக்கைகளும் தீர்மானிக்கப்படுகின்றது. இதற்கமைய நாடு முழுவதும் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் அடங்கலாக 341 உள்ளூராட்சி சபைகளுக்காக 4919 வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வட்டாரங்களில் ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் தெரிவாகும் 4750 வட்டாரங்களும், இரண்டு உறுப்பினர் என்ற அடிப்படையில் தெரிவாகும் 165 வட்டாரங்களும், மூன்று உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தெரிவாகும் 4 வட்டாரங்களும் உள்ளன. இந்த வட்டாரங்களில் இருந்து மொத்தமாக 5092 உறுப்பினர்கள் (60 வீதம்) உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படுவர்.

இதேவேளை குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைக்கு சகல வட்டாரங்களிலும் கட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுக்கள் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு மிகுதி 3264 உறுப்பினர்கள் (40 வீதம்) உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படுவர்.

எனினும் இம்முறை கல்முனை மாநகர சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி சபைகளுக்காகவே மே 6 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.

வாக்குச் சீட்டின் தோற்றம் எவ்வாறு அமைந்திருக்கும்?

தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் பெயர்களும் சிங்கள மொழி அகராதியின் பிரகாரம் ஒழுங்குபடுத்தப்பட்டு வாக்குச் சீட்டில் மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.  அதற்கு கீழே தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட இலக்கங்களின் பிரகாரம் சுயேச்சைக் குழுக்களது இலக்கங்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வாக்குச் சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு முன்பாகவும், சுயேச்சைக் குழுக்களுக்கு முன்பாகவும் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள் அச்சிடப்படுவதுடன், அச்சின்னங்களுக்கு முன்பாக புள்ளடி இடுவதற்கான வெற்றுக்கூடும் காணப்படும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு வட்டார மட்டத்திலும் விகிதாசார மட்டத்திலும் தயாரிக்கப்பட்டுள்ள அட்டவணையின் கீழ் கட்சிகளது, சுயேச்சைக் குழுக்களது வேட்பாளர்களினதும் பெயர்ப்பட்டியல் வாக்காளர்களது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையுடன் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது தவிர குறித்த அட்டவணையில் உள்ளபடி கட்சிகளது, சுயேச்சைக் குழுக்களது வேட்பாளர் பெயர்ப்பட்டியல் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு குறித்த வாக்களிப்பு நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும். இதன் பிரகாரம் வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்படாவிட்டாலும், தமது வாக்கினை அளிக்கவிருக்கும் கட்சியின் அல்லது குழுவின் வேட்பாளர் தொடர்பாகவும், மேற்குறிப்பிட்ட அட்டவணையின் மூலம் தாம் விரும்பிய வேட்பாளர் யாரென்பதனையும் அறிந்து கொள்ள முடியும்.

இதன்படி தமக்குரிய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு தேவையான ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை காண்பித்த பின்னர், வழங்கப்படும் வாக்குச் சீட்டில் தாம் விரும்பும் கட்சிகளின் பெயர் அல்லது, சுயேச்சைக் குழுவுக்கு முன்பாக குறிப்பிடப்பட்டுள்ள சின்னத்திற்கு முன்பாக காணப்படும் வெற்றுக்கூண்டில் புள்ளடி இட்டு வாக்கை பதிவு செய்ய வேண்டும்.

வாக்கெண்ணும் நிலையங்கள் எவ்வாறு அமைக்கப்படும்?

ஒரு வட்டாரத்திற்கு ஒரு வாக்களிப்பு நிலையம் அமைந்திருக்குமிடத்து, அதே வாக்களிப்பு நிலையத்தில் வாக்கெண்ணல் நடத்தப்படும். ஒரு வட்டாரத்தினுள் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் அமைந்திருக்குமிடத்து, தெரிவத்தாட்சி அலுவலரால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு வாக்களிப்பு நிலையத்திலோ, அல்லது வாக்களிப்பு நிலையங்களிலோ வாக்குகள் எண்ணப்படும்.

உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பது எவ்வாறு?

இந்த தேர்தல் முறையின் கீழ் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படும் போது முக்கியமாக நான்கு விடயங்கள் கவனம் செலுத்தப்படும்.

இதன்படி ஒருமை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல், பன்மை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல், விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் மற்றும் பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல் என்பனவாகும்.

ஒருமை வட்டார மட்டத்திலான வட்டாரத்தின் சகல வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர்  குறித்த வட்டாரத்தில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் குறித்த வட்டாரத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதேபோன்று பன்மை வட்டாரமொன்றில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவர் அல்லது மூவர் அவ்வட்டாரத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

 விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

உள்ளுர் அதிகார சபை ஒன்றின் நிருவாகப் பிரதேசத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சகல அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் மொத்தக் கூட்டுத்தொகையை குறித்த உள்ளுர் அதிகார சபைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டு வரும் சராசரி அளவு தீர்க்கமான மதிப்பு ஆகும்.

இந்தத் தீர்க்கமான அளவினால் ஒவ்வொரு அரசியற் கட்சியும், சுயேச்சைக் குழுவும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் பிரிக்கப்படும் பொழுது குறித்த அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு உரிய முழு உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து அவர்கள் வட்டார மட்டத்தில் பெற்றுக்கொண்ட உறுப்பினர் எண்ணிக்கையைக் கழித்து வரும் எஞ்சிய எண்ணிக்கை குறித்த ஒவ்வொரு அரசியற் கட்சிக்கும், சுயேச்சைக் குழுவுக்கும் உரிய விகிதாசார அட்டவணைக்குரிய உறுப்பினர் எண்ணிக்கையாகக் கருதப்படும்.

ஏதேனுமொரு அரசியற் கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவிற்கு உரிய குறித்த எஞ்சி வரும் எண்ணிக்கை ஒற்றை மதிப்பெண்ணாக இருப்பின், அதாவது விகிதாசார முறைக்கு உரிய எண்ணிக்கையிலும் விட வட்டார மட்டத்தில் தெரிவு செய்யப்படும் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த மேலதிக எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளுர் அதிகார சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாகும்.

பெண் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

குறித்த உள்ளூர் அதிகார சபை நிருவாகப் பிரதேசத்திற்காகப் போட்டியிடும் அனைத்து அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் மொத்த வாக்காளர் எண்ணிக்கையின் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பினும், கட்சிகளது மூன்று உறுப்பினர்கள் அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள் குறைவாக இருப்பினும் அவற்றைக் கழித்து எஞ்சியுள்ள அதிகப்படியான வாக்குகள் பெற்ற உறுப்பினர்கள் குறித்த உள்ளூர் அதிகார சபைக்குத் தெரிவு செய்யப்படுவர். (25 சதவீதமான எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கை) பிரிக்கப்பட்டு வரும் சராசரி எண்ணிக்கையால் குறித்த கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைப் பிரித்து வரும் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

இதற்கு ஏற்றால் போன்று ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பாளர் பட்டியல்கள் வட்டார அடிப்படையிலும், விகிதாசார பட்டியல் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக அமைக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் நான்கு வருடங்களுக்கு பதவியில் இருக்கும்.

 இந்நிலையில் வட்டார முறையில் இந்தத் தேர்தல் நடைபெற்றமையினால் தெரிவாகும் உறுப்பினர் ஒருவர் இறந்தால் அல்லது கேட்டு விலகினால் அல்லது வேறேதேனும் காரணத்தினால் வெற்றிடம் ஏற்படுமிடத்து இடைத்தேர்தல் நடாத்தப்பட மாட்டாது என்பதுடன், வெற்றிடத்திற்காக ஒருவரைப் பெயர் குறித்து நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் செயலாளர் கொண்டுள்ளார். இதன்படி அந்த இடைவெளி நிரப்பப்படும்.

https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317505

ஈழத் தமிழர்களும் அவர்கள் இருப்பும்- பா.உதயன் 

1 month 4 weeks ago

 ஈழத் தமிழர்களும் அவர்கள் இருப்பும்- பா.உதயன் 


உலகத்தில் திருடர்கள் சரி பாதி 

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி 


பெளத்த மத முன்னுருமை சிந்தனையில் இருந்து மாறுவதோ அல்லது தமிழர் பிரச்சினைக்கான நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றோ இது வரை அனுரா அரசு முயற்சிற்ததாகவும் இல்லை இவை பற்றி எதுகும் தமிழர் தரப்புடன் பேசியதாகவும் இல்லை. அது வேண்டுமா உங்களுக்கு இது வேண்டுமா என்று அனுரா கேட்க்கிறாரே தவிர தமிழருக்கு எதை கொடுக்க வேண்டும் அவர்கள் இதுவரை எதற்காக போராடினார்கள் எத்தனை துயரம் எத்தனை உயிர் தியாகம் செய்தார்கள் எத்தனை தம் உறவுகளை இழந்தார்கள் என்று கூட ஒரு போராடத்தின் பாதையில் இருந்து வந்து ஆட்சி அமைத்தவர்களுக்கு புரியாமல் இருப்பது வேதனை தான். தமிழர்களின் அரசியல் தீர்வு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, தொலைந்து போனவர்களின் நீதி, காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை இப்படி பல முக்கியமான தமிழர் எதிர்பார்க்கும் தீர்வுகளை இந்த நாட்டில் பல காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்த முக்கிய பிரச்சினை குறித்து தமிழர் தரப்புடன் பேசுவதை தவிர்த்து வருகிறார்கள். ஒரு சில மாற்றங்களை தவிர பழையவைகள் தொடர்கின்றன.


மீண்டும் மீண்டும் தமிழ் கட்சிகள் தங்களிடையே மோதிக் கொள்வதையும் அவர்கள் திரட்சி ரீதியாக பலவீனம் அடைவதையும் அனுரா தலைமையிலான அரசு விரும்புகிறது அப்போது தான் தாம் வட கிழக்கை கை பற்றி தமிழர்கள் தம்மோடு தான் நிற்கிறார்கள் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அபிவிருத்தி மட்டுமே அன்றி அரசியல் தீர்வல்ல அதே போல் தமிழர் கோரும் சர்வதேச விசாரணை மற்றும் தொலைத்து போனவர்களுக்கான நீதி இவற்றை கூட நீர்த்து போக செய்யலாம் புலம்பெயர் தமிழர்களையும் இந்த வழியில் கொண்டு வரலாம் என்ற நிகழ்ச்சி நிரலோடு பயணிக்கிறது. தமிழர்களிடையே சில படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவரும் இதை ஆதரிப்பது பெரும் வெட்கமானது. அது அவர்கள் ஜனநாயக உரிமை என்று சொல்லிக்கொண்டாலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலை வேண்டியே இந்த மக்கள் போராடுகிறார்கள் என்பதை சிவப்பு தோழர்கள் உணர்ந்தால் நல்லது. அவர்கள் கூட ஒரு காலம் விடுதலை வேண்டிப் போராடியவர்களே. சமத்துவம் என்ற பார்வையை இவர்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லையே என எண்ணத் தோன்றுகின்றது. 


அண்மையில் இலங்கையில் அனுரா அரசால் நடாத்தப்படும் பெளத்த மதம் சார்ந்த சமய நிகழ்ச்சிகளும் அதன் பார்வையும் முன்னைய அரசுகள் போன்றே பெளத்த மதத்தை முன்னிலைப் படுத்திய பெரும் பேரினவாத சிந்தனை போன்றே அமைந்திருக்கிறது. எல்லா இனமும் மதமும் சமத்துவம் என்ற சிந்தனை வெறும் பேச்சோடு தான என எண்ணத் தோன்று கின்றது. உரிமைகளை கேட்பவர்களை இனவாதிகள் என்று சொல்லுவதே பெரும் இனவாதம். தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஏமாற்றப் படுபவர்களாகும் ஏமாறுபவர்களாகும் இருக்கக் கூடாது எனவே தமிழர் ஒரு திரட்சியாக தம் எல்லா தீர்வையும் வென்று எடுக்கும் வரை பலமாக இருக்க வேண்டும் தமிழர் வாக்கு சரியான எதிர்கால சிந்தனையோடு இருக்க வேண்டும் இதை எல்லா தமிழர் கட்சிகளும் உணர்ந்து செயல் பட வேண்டும் இல்லையேல் உங்கள் எதிர் காலமும் இருப்பும் கேள்விக் குறியதாகிவிடும்.


எது எப்படி இருப்பினும் தென் இலங்கையில் ஒரு சில மாற்றம் வந்ததன் மூலம் கொலைகள் ஊழல் உடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தால் நீதியை பொறுத்த வரையில் ஒரு மாற்றம் வரும். ஆதலால் அனுரா அரசு சரியான பாதையில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து சரியான பொருளாதார ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவத்திலேயே தான் இதன் எதிர் காலா வெற்றியும் தங்கியுள்ளது என்பதை உணர்ந்தால் நல்லது. அப்போது தான் நிலத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்கள் இலங்கையின் எல்லா அபிவிருத்தி வேண்டியும் உழைப்பார்கள் எதிர்காலத்திலும் உண்மையான சமத்துவதுடன் உங்களுடன் தமிழர் பயணிப்பார்கள்.


பா.உதயன் ✍️

யாருக்கு வாக்களிப்பது? -நிலாந்தன்.-

1 month 4 weeks ago

question.jpg?resize=750%2C375&ssl=1

யாருக்கு வாக்களிப்பது? -நிலாந்தன்.-

தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதும் தேசிய மக்கள் சக்தியை யாழ்ப்பாணத்தில் தோற்கடிப்பதற்கு. “இளங்குமரன் என்ன கதைக்கிறார் என்பது மற்றவர்களுக்கும் விளங்குவதில்லை அவருக்கு விளங்குவதில்லை” என்று சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.அது உண்மை. அவருக்கு தமிழும் சரியாக வருவதில்லை தகவல்களும் சரியாகத் தெரிவதில்லை. கதைக்கின்ற பாணியும் ஒரு தினுசானது.அடிக்கடி ஊடகங்களில் அவர் மீம்ஸ் ஆக்கப்படுகிறார். அவருடைய ஆகப்பிந்திய மீம்ஸ் “யாழ்ப்பாணம் தெல்லிப்பளைக்குள் இருக்கிறது” என்பதாகும்.

மற்றவர் ரஜீவன். இவர் இளங்குமரன் அளவுக்கு வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வதில்லை. அவர் முன்பு சுமந்திரனுக்கு நெருக்கமாக இருந்தவர். ஜனாதிபதித் தேர்தலையொட்டி அனுரவின் பக்கம் தாவினார்.சில கிழமைகளுக்கு முன் நீர்வேலியில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து “நீங்கள் தேசிய மக்கள் சக்திக்குத்தானே வாக்களிப்பீர்கள்? கைகளை உயர்த்திக் கூறுங்கள்” என்று அவர் கேட்டார். பெரும்பாலானவர்கள் கையை உயர்த்தவில்லை.அவர் கேட்டது கொமெடியாகியது.

மூன்றாவது உறுப்பினர் மருத்துவர்.அவர் ஒப்பீட்டளவில் நிதானம். ஆனால் கதைத்துப் பிரச்சினைக்குள் மாட்டுவதை விடவும் கதைக்காமல் இருப்பதே உத்தமம் என்று அவர் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. தையிட்டி விகாரை தொடர்பாக அப்பகுதியில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவர் தமது இயலாமையை வெளிப்படுத்தும் விதத்திலும், தாங்கள் சொல்லி அரசாங்கம் கேட்காது என்ற பொருள்படவும் தெரிவித்த கருத்துக்களுக்குப் பின் அதிகம் வாய் திறப்பதில்லை.அவ்வாறு கூறியதற்காக அவர் எச்சரிக்கப்பட்டரோ தெரியவில்லை.மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் வாயை இறுகப் பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவர்.

இவர்களைத்தவிர அமைச்சர் சந்திரசேகரனும் அடிக்கடி மீம்ஸ் ஆக்கப்படுகிறார்.அவருடைய உச்சரிப்பு,அவருடைய முகபாவம் எல்லாவற்றையும் வைத்து அவரை மீம்ஸ் ஆக்கி வருகிறார்கள். சாணக்கியன் அவரை மூக்கால் கதைப்பவர் என்று கூறினார். சுகாஷ் அவர் குறிக்கட்டுவான் துறைமுகத்தை ஜெற்றி என்று அழைப்பதற்கு பதிலாக ஜட்டி என்று அழைத்ததை வைத்து விமர்சித்தார்.ஜெற்றியை ஜட்டி என்று கூறியது தவறு.ஆனால் சந்திரசேகரன் தமிழை உச்சரிக்கும் விதத்தைக் கேலி செய்வது என்பது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையகத் தமிழர்களின் உச்சரிப்புக்களைக் கேலி செய்வதாக அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய தரப்புகள் பொறுப்பாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.சந்திரசேகரனின் அரசியலை விமர்சிக்கலாம். என்.பி.பியின் அமைச்சர் என்ற அடிப்படையில் அவரை விமர்சிக்கலாம். ஆனால் அவருடைய உச்சரிப்பை விமர்சிக்கத் தேவையில்லை.

இவ்வாறாக தேசிய மக்கள் சக்தியின் பிரமுகர்களே தேசிய மக்கள் சக்தியை யாழ்ப்பாணத்தில் ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றிவிட்டார்கள். மேலும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியானது தமிழ் மக்களின் பயங்களை நீக்கத் தவறியுள்ளது. தமிழ் மக்களின் பயங்களைப் போக்கும் விடயத்தில் என்பிபி பெரிய மாற்றம் எதையும் காட்டவில்லை

தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இது ஒரு வாய்ப்பான விடயம். தேசிய மக்கள் சக்தியை அல்லது ஜேவிபியை விமர்சிப்பதற்கு இது அதிகம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரச்சாரத்தில் ஒன்றாக நிற்கின்றன. தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடாது என்றுதான் பெரும்பாலான அரசியல் விமர்சகர்களும் எழுதி வருகிறார்கள்; பேசி வருகிறார்கள். ஏதாவது ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன்மூலம் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கட்சிகள் வேண்டுகோள் விடுகின்றன.

மணிவண்ணனின் அணியைச் சேர்ந்த ஒருவர் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தால் தனது வாக்குகளை வீட்டுக்கு வழங்குமாறு கூறியிருக்கிறார்.நல்லூர் பிரதேச சபையில் ஐங்கரநேசன் தன்னுடைய வாக்காளர்களை வீட்டுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்.அர்ஜுனா தான் போட்டியிடாத இடங்களில் சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்.

ஆனால் இங்கே உள்ள பிரதான கேள்வி எது என்றால், தமிழ் மக்கள் ஏன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கும் அர்ச்சுனாவுக்கும் வாக்களித்தார்கள்? என்பதுதான்.மிக எளிமையான பதில், தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையே காணப்பட்ட ஐக்கியமின்மைதான். அதனால் தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தைப் பரிசோதித்தார்கள்.

அதேசமயம் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூறுவதுபோல தலைக் கணக்கை எண்ணினால் அது தேசிய மக்கள் சக்திக்கு வெற்றிதான். ஆனால் வாக்களிப்புக் கோலத்தைத் தொகுத்துப் பார்த்தால் அது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்குத் தோல்வியல்ல.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மொத்தம் 80,000 சொச்சம். வாக்குகள் கிடைத்தன. தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்டு சுயேச்சைகளுக்கும் மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. அதாவது தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த வாக்குகளை விடவும் அதிக வாக்குகள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்கு கிடைத்திருக்கின்றன. எனவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இருந்து விலகி விட்டார்கள் என்பது பொருத்தமான ஒரு கருத்து அல்ல. தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திக்கிறார்கள் என்பது அந்த வாக்களிப்பில் தெரிகிறது. ஆனால் கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

அப்பொழுது மட்டுமல்ல, இப்பொழுதும் அதுதான் நிலைமை. தமிழ் மக்கள் கட்சிகளாகப் பிரிந்துதான் நிற்கின்றார்கள். தமிழ்த்தேசியக் கட்சிகள் நான்கு தரப்புகளாக நிற்கின்றன. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரே குரலில் பிரச்சாரம் செய்யும் இந்தக் கட்சிகள்,தங்களுக்கு இடையே மோதிக் கொள்கின்றன. ஒருவர் மற்றவரைத் துரோகியாக்குவது; ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்துவது;கூட்டத்தில் கைதட்டுகளை பெறுவதற்காக மற்றவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டுவது…. இப்படித்தான் இருக்கிறது தேர்தல் போட்டிக் களம். இதே நிலைமைதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் காணப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்விகளில் இருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக் கொள்ளவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓரளவுக்கு கற்றுக் கொண்டிருக்கிறது. அது ஒரு கூட்டை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அந்தக் கூட்டு ஏனைய மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் அர்ச்சுனாக்களுக்கும் எதிராக, தனிப்பெரும் சக்தியாக எழுச்சி பெறுமா? என்று பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.

முன்னணிக்கு முன்பை விட ஆதரவு கூடியிருக்கிறது. ஆனால் அது தமிழரசுக் கட்சியின் இடத்தைப் பிடிப்பதற்கு இன்னும் வளர வேண்டும். தமிழரசுக் கட்சி ஏனைய எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளை விடவும் வடக்கு கிழக்கு தழுவிய கிராமமட்ட அடிமட்ட வலைப் பின்னலைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி. அதுதான் அவர்களுடைய பலம். குறிப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவர்களுக்கு மிகவும் அனுகூலமான அம்சம் அது.

சுமந்திரன் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்ட பின் கட்சியின் கீழ்மட்ட வலையமைப்பை எப்படிக் கட்டியெழுப்புவது என்ற விடயத்தில் திட்டமிட்டு உழைக்கின்றார்.அவர் உள்ளூராட்சி சபையில் தமிழரசுக் கட்சியை தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கிறார் என்றுதான் ஒரு தோற்றம் கிடைக்கிறது.ஆனால் அந்த உழைப்புக்குப் பின்னால் வேறு ஒரு மறைமுக இலக்குகளும் உண்டு.அடுத்த கட்சித் தலைமைக்கான தேர்தலின்போது பொதுச்சபையில் தன்னுடைய ஆதரவுத் தளத்தைப் பாதுகாப்பது முதலாவது இலக்கு.உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கிராம மட்டங்களில் இறங்கி வேலை செய்யும் பொழுது கட்சியின் கீழ்மட்ட வலையமைப்பு பெருமளவுக்கு சுமந்திரனுக்கு விசுவாசமானதாக மாற்றப்படுகிறது. அது சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய கட்சித் தலைமைக்கான தேர்தல்களில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தலாம். இது முதலாவது இலக்கு.

இரண்டாவது இலக்கு, அவ்வாறு வெற்றி பெறுவதன் மூலம் சிறீதரணை ஓரங்கட்டலாம். சிறீதரனை கிளிநொச்சிக்குள்ளேயே சுருக்கி விடலாம். ஒரு கட்டத்தில் முடியுமானால் அவரைக் கட்சியில் இருந்தும் நீக்கலாம். எனவே உள்ளூராட்சி சபைகளுக்காக சுமந்திரன் உழைப்பது என்பது தனிய கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமல்ல.சிறீதரனை தோற்கடிக்க வேண்டும், அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடும்தான்.

இப்படிப்பட்ட உள்நோக்கங்களோடு மக்களைத் திரட்டும் அரசியல்வாதிகள் தேசத்தைத் திரட்ட உதவ மாட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள்தான் தேசத்தை உடைத்தன. இப்பொழுதும் அதே நிலைமைதான். இது தேசிய மக்கள் சக்திக்கு அனுகூலமானது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட உறுப்பினர்களும் அமைச்சரும் தமிழ் மக்கள் மத்தியில் கடுமையாக வேலை செய்கிறார்கள். ஆனாலும் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் தங்களுடைய மதிப்பை உயர்த்துவதற்குத் தவறியிருக்கிறார்கள்.இது தேசிய மக்கள் சக்திக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றி வாய்ப்புகளை பாதிக்கக்கூடியது. இந்த மாற்றம் தமிழ் தேசியக் கட்சிகளின் உழைப்பினால் கிடைத்த ஒன்று அல்ல. மாறாக தேசிய மக்கள் சக்தியின் இயலாமையின் விளைவு.

எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு இருந்த “புதியது; மாற்றத்தைக் காட்டுவது” என்ற கவர்ச்சி இப்பொழுது குறைந்துவிட்டது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களே அந்தக் கவர்ச்சியை குறைத்து விட்டார்கள். இது முதலாவது விடயம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு கிடைத்த பின்னடைவு ஐக்கியமின்மையால் கிடைத்தது. அது அப்படியே இப்பொழுதும் உண்டு. முன்னணி ஒரு மாற்றத்தைக் காட்டியிருக்கிறது அவ்வளவுதான்.இது இரண்டாவது விடயம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு வாக்களிப்புக் கோலத்தில் பிரம்மாண்டமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை.இது மூன்றாவது விடயம்.

சங்குக் கூட்டணி தெட்டம் தெட்டமாக வெற்றிகளைப் பெறக்கூடும். சந்திரகுமாரை இணைத்துக் கொண்டதால் கிளிநொச்சியில் அவர்களுக்கு ஒரு புதிய வாக்கு பரப்பு கிடைத்திருக்கிறது. இது நாலாவது.

இந்த நான்கு தோற்றப்பாடுகளையும் பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்தால் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் ஒரு பகுதி தேசிய மக்கள் சக்திக்குப் பாதகமானது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு தமிழ் தேசியத் தரப்புக்குச் சாதகமானது. ஆனால் முழுமையான தமிழ்த் தேசிய ஐக்கியம் இன்னமும் ஏற்படவில்லை. அந்த ஐக்கியத்துக்குள் தமிழரசுக் கட்சி வந்தால் தான் அது பிரமாண்டமானதாக மாறும்.

எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வென்றெடுக்கும் கூட்டு அரங்கில் இல்லை. அதே சமயம் என்பிபி அதன் கவர்ச்சியை இழந்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் என்பிபிக்கு வாக்களித்த காரணம் ஒப்பீட்டளவில் அப்படியே இருக்கிறது. ஆனால் அந்த வெற்றிக்கு என்பிபி தகுதி உடையது அல்ல என்பதனை வடக்கு கிழக்கில் உள்ள அதன் பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் விட்ட அதே தவறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் விடக்கூடாது என்று தமிழ்மக்கள் சிந்திப்பார்களாக இருந்தால் தாங்கள் ஒரு தேசம், ஒரு தேசிய இனம் என்பதை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டுவார்களா?

https://athavannews.com/2025/1430452

மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன்

1 month 4 weeks ago

மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன்

IMG-20241110-WA0008.jpg

492517612_122132255708790322_41275449898

உப்புக்குத் தட்டுப்பாடு. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. இத்தனைக்கும் இலங்கை ஒரு தீவு. சுத்திவர உப்புக்கடல்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரச்சாரத்திற்கு அள்ளிக் கொட்டுவதற்கு தாராளமாக நிதி இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரமாண்டமான கூட்டங்களை சிறீதரன் ஒருவரைத் தவிர தேசிய மக்கள் சக்திதான் ஒழுங்குபடுத்துகின்றது.

கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்கள் தமது இருப்பை காட்சிப்படுத்தும் விதத்தில் தமிழ்க் கட்சிகளிடம் இல்லாத ஓர் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பூட்டிக் கிடக்கும் ஒரு கடை அல்லது ஒரு மண்டபம் அல்லது ஒரு முழிப்பான இடம் போன்றவற்றில் கவிழ்த்து விடப்பட்ட பானா வடியில் ஒரு முகப்பை நிறுவுகிறார்கள். அல்லது தமது சுவரொட்டிகள் பதாகைகள் மூலம் அப்படியொரு வாசலை உருவாக்குகிறார்கள். அது தேசிய மக்கள் சக்தியின் வாசல் என்ற ஓர் உணர்வை மக்களுக்கு கொடுக்கும். அந்த முகப்பில் வாசலைத் தவிர ஏனைய எல்லாப் பரப்புகளையும் சுவரொட்டிகளால் நிரப்புகிறார்கள்.

தமிழ்க் கட்சிகள் இந்த அளவுக்குக் காசைக்கொட்டிப் பிரச்சாரம் செய்வதாகத் தெரியவில்லை. பெரிய கூட்டங்களை நடத்துவதற்குச் சத்தியற்றவைகளாக தமிழ்க் கட்சிகள் காணப்படுகின்றன.

குறுகிய கால இடைவெளிகளுக்குள் வந்த,வருகின்ற மூன்று தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளிடம் பெரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நிதி இல்லை என்பது அவதானிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி பெயராவிட்டால் பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது. இது தமிழரசியலின் அடிப்படைப் பலவீனம் ஒன்றைக் காட்டுகின்றது. எந்தவோர் அரசியல் நடவடிக்கைக்கும் நிதித் திட்டமிடல் வேண்டும். நிதியை எப்படிச் சேகரிப்பது? எவ்வளவு காலத்துக்குள் சேகரிப்பது? போன்றவை தொடர்பாக பொருத்தமான தரிசனங்கள் இருக்க வேண்டும். போதிய நிதி இருந்தால்தான் கட்சி நடத்தலாம்; அரசியல் செய்யலாம். முழு நேரச் செயற்பாட்டாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். அரை நேரச் செயல்பாட்டாளர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. அதுவும் இன அழிப்புக்கு எதிரான அரசியலைச் செய்ய முடியாது. பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுட முடியாது. காற்றைக் குடித்துக் கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

தமிழ்க் கட்சிகளிடம் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிகிறது. புலம்பெயர்ந்த தமிழ் கோப்பரேட்கள் சிலர் கடந்த இரண்டு தேர்தல்களிலும் உதவியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் பெருங்கூட்டங்களை நடத்தக்கூடிய அளவு நிதி பெயரவில்லை என்று தெரிகிறது. ஒப்பீட்டு ரீதியாக தமிழ்க் கட்சிகளின் நிதி ரீதியான பலவீனங்களை பிரச்சாரக் களம் உணர்த்துகின்றது.

அதே சமயம் ஆளுங்கட்சியான என்பிபி அரச பலத்தோடும் வளத்தோடும் அதிகளவு நிதியைக் கொட்டி ஒரு பிரச்சாரப் போரை நடாத்துகின்றது. அரச பிரதானிகள் அந்தப் பிரச்சார மேடைகளில் தோன்றுகிறார்கள். குறிப்பாக அனுர கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவரோடு கைகளைக் குலுக்கி கொள்வதற்காக தமிழ் ஆண்களும் பெண்களும் முண்டியடிக்கிறார்கள். சில சமயங்களில் குழந்தைகளும் அனுரவோடு செல்ஃபி எடுப்பதற்கு அழுகிறார்கள்.

இது கைபேசிகளின் காலம். மனிதர்களிடம் இயல்பாக உள்ள தன்மோகமானது செல்ஃபி யுகத்தில் ஒரு நோயாக மாறி வருகிறது. அறிவிற்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளியானது யூரியுப்பர்களின் காலத்தில் மேலும் ஆழமானதாகி வருகிறது. பிரபல்யமானவரோடு படம் எடுப்பது; கைகுலுக்குவது; செல்ஃபி எடுப்பது; பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி பெருமைப்பட்டுக் கொள்வது.

என்பிபி எந்தளவுக்கு டிஜிட்டல் ப்ரோமோஷனில் கவனமாக இருக்கிறது என்பதற்கு அண்மையில் நடந்த மே தின கூட்டத்தில், அனுர பேசும் போது,”லங்கா தீப” ஊடகவியலாளர் லஹிரு ஹர்ஷண எடுத்த ஒளிப்படம் தொடர்பான சர்ச்சை ஒரு சான்று. அந்த ஒளிப்படம் அனுரவை மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் ஒரு தலைவராக முன் நிறுத்தவில்லை. மாறாக எதையோ கண்டு மிரண்டு, நம்பிக்கையிழந்து, கையறு நிலையில் தன்னை காப்பாறுமாறு  பிராத்தித்திக்கின்ற ஒருவராகத்தான் அந்த படம் அவரை முன்னிறுத்துகிறது.அந்தப் படத்தை வெளியில் வரவிடாமல் என்பிபிக்காரர்கள் தடுத்திருக்கிறார்கள். அதாவது அனுரவின் எந்தப் படம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் என்பிபி கவனமாக இருக்கிறது.

ccccccc-1024x872.jpg

தமிழ்ப் பகுதிகளிலும் அப்படித்தான். வல்வெட்டித் துறையில் அனுரவை அணைக்கும் மூதாட்டி; கிட்டு பூங்காவில், வவுனியாவில் அனுரவை நோக்கிக் கைகுலுக்க அந்தரப்படும் ஆண்கள்,பெண்கள் போன்ற படங்களும், காணொளிகளும்; அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டியெழுப்பும் நோக்க முடியவை.

அனுர எளிதாக அணுகப்படக்கூடிய, தொட்டுப் பழகக்கூடிய, எளிமையான ஒருவராகக் காணப்படுகிறார். எனவே அவரோடு கை குலுக்கிப் படம் எடுப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் ஆர்வமாகக் காணப்படுகிறார்கள்.

பாவம் தமிழ் அரசியல்வாதிகள். அவர்களோடு கைகுலுக்கவோ அல்லது செல்பி எடுக்கவோ ஆட்கள் இல்லை. அப்படி எடுத்துக் கொண்டாலும் அதை டிஜிட்டல் ரோமோஷன் செய்வதற்கு அவர்களிடம் காசு இல்லை.

எனினும் ஒரு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒரே கூட்டில் நிற்கின்றன. என்பிபியை, அல்லது ஜேவிபியை அம்பலப்படுத்துவது, எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது என்ற ஒரு விடயத்தில் மட்டும் நான்கு தமிழ்த்தேசியத் தரப்புகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன. எனைய பெரும்பாலான விடயங்களில் தங்களுக்கு இடையே முட்டி மோதுகின்றன. அங்கே போட்டித் தவிர்ப்பிற்கான புரிந்துணர்வு இல்லை.

“நாங்கள்தான் பெரிய கட்சி, மற்றவை உதிரிக் கட்சிகள்” என்று கூறும் சுமந்திரன் “நாங்கள் ஏனைய கட்சிகளை விமர்சிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்”என்று கூறுகிறார். ஆனால் நடைமுறையில் உள்ளூரில் ஏனைய கட்சிகளுக்கு எதிராகத்தான் பிரச்சாரம் நடக்கின்றது.

ஏன் அதிகம் போவான்? தமிழரசுக் கட்சிக்குள்ளேயே கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சிக்குக் கிடைக்கும் வெற்றி மறைமுகமாக சுமந்திரனையும் பலப்படுத்தி விடுவோமா என்ற பயம் பல வேட்பாளர்களிடம் உண்டு. அண்மையில் ஒரு பெண் வேட்பாளர் அவ்வாறு கேட்டதாக சிறீதரன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் வைத்துக் கூறியுள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சுமந்திரனின் “எக்கிய ராஜ்ய”வை வைத்து அவரைத் தாக்குகிறது. தங்களுடையது மட்டும்தான் கொள்கைக் கூட்டு என்று கூறுகின்றது.

யாழ். மாநகர சபைக்கான தேர்தல் களத்தில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட காரணத்தால்  மணிவண்ணன் போட்டிக் களத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். ஒரு பிரதான போட்டியாளர் அவ்வாறு அகற்றப்பட்டிருப்பது ஏனைய கட்சிகளுக்கு அதிகம் வாய்ப்பானது. அங்கே அரசாங்கத்தின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள யாழ். பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் ,நீக்கலான மேல்வாய்ப் பல்லோடு, குழந்தைத்தனமான முகத்தோடு காணப்படுகிறார். நகரத் திட்டமிடல் தொடர்பில் தனக்குள்ள பாண்டித்தியத்தை நிரூபிக்கும் அறிக்கைகளை விடுகிறார். மணிவண்ணன் இல்லாத போட்டிக் களம் தனக்குச் சாதகமானது என்று நம்பி என்பிபி உழைகின்றது. அர்ஜுனாவுக்கும் மூன்று என்பிபிக்காரர்களுக்கும் வாக்களித்த மக்கள் இனி யாருக்கெல்லாம் வாக்களிக்கப் போகிறார்களோ?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்பிபிக்கும் அர்ஜுனாவுக்கும் கிடைத்த எதிர்பாராத வெற்றி என்பது தமிழ் ஐக்கியமின்மையினதும் தமிழ்த் தேசிய இயலாமைகளினதும்  விளைவு. அந்த ஐக்கியமின்மை இப்பொழுதும் உண்டு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையானது ஒரு புதிய ஐக்கிய முயற்சி.ஆனால் அது தமிழரசுக் கட்சியைப் பிரதியீடு செய்யும் வளர்ச்சியை இன்னும் பெறவில்லை.

இப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்குத்தான் தாயக அளவில், ஒப்பீட்டளவில் அதிக வெற்றி வாய்ப்புக்கள் தெரிகின்றன. முன்னணி முன்னரை விட முன்னேறி வருகிறது. இப்படிப்பட்ட பலமுனைப் போட்டிக்குள் நான்கு தமிழ்த் தேசியத் தரப்புகளில் யார் வென்றாலும் அது தேசிய மக்கள் சக்திக்குத் தோல்விதான். அதேசமயம் எந்த ஒரு தமிழ்த் தேசியத் தரப்பு தோற்றாலும் அந்த வாக்குகள் ஏனைய மூன்று தமிழ்த்தேசியத் தரப்புகளுக்கு போகுமாக இருந்தால் அதுவும் பாதுகாப்பானதே. அப்பொழுது மீன் கரைந்தாலும் சட்டிக்குள் இருக்கும்.மாறாக தமிழ்த் தேசியப் தரப்பிலிருந்து என்பிபிக்குத் திரும்பும் வாக்கு ஒவ்வொன்றும் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழும் வாக்குத்தான்.

https://www.nillanthan.com/7354/

கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்

1 month 4 weeks ago

carney-victory-speech-thumb-clean-800x44

கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்

சிவதாசன்

எதிர்பார்த்தபடியே லிபரல் கட்சி வெற்றீவாகை சூடியிருக்கிறது. அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும் இவ்வெற்றி மகத்தானது. நான்காவது தடவையாக அது ஆட்சியமைக்கப்போகிறது.

இத் தேர்தலில் பல திருப்பங்கள், அதிர்ச்சிகள் எதிர்பாராதவாறு கிடைத்திருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லியேவ் , கடந்த 20 வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த தொகுதியை இழந்திருக்கிறார். அது போலவே என்.டி.பி. கட்சித் தலைவர் ஜக்மீத் சிங்கும் தனது தொகுதியை இழந்திருக்கிறார். ட்றம்ப் என்ற புயல் வந்து இவர்களை ஒதுக்கியிருக்கிறது.

லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்ணி முன் பின் எதுவித அரசியல் அனுபவமுமில்லாதவர். கனடிய மக்கள் அவரிடம் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் ட்றம்ப் புயல் இன்னும் ஓயாமல் இருக்கும்போது. இது அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவா அல்லது பொய்லியேவ் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவா? தர்க்க ரீதியாகப் பார்த்தால் பொய்லியேவைப் பதவியிலிருந்தும் தொகுதியிலிருந்தும் துரத்தியிருப்பது பண்டம் காலம் கடந்துவிட்டது (product expired) என்பதனாலாகவிருக்கலாம்.

கனடியர் அனைவரையும் பிரதிநிதித்த்துவப்படுத்திக்கொண்டிருந்த புரோக்கிரஸ்சிவ் கன்சர்வேட்டிவ் கட்சியைப் பிராந்திய கன்சர்வேட்டிவ் கட்சியாக மேற்குக் கனடாவிற்குள் கொண்டுபோய் முடக்கியதிலிருந்து அக்கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கியிருந்தது. அக்கட்சியின் அதி தீவிரவாத அரசியல்வாதி ஸ்டொக்வெல் டே அவர்களின் அரசியல் வளர்ப்பு பிள்ளை தான் பொய்லியேவ். நீண்டகாலம அரசியலில் இருந்தாலும் எதையும் கற்காதவர். பலமான எதிரி முன்னர் அவரது பலவீனம் இனம்காணப்பட்டு விட்டது.

ட்றூடோ என்ற கண்ணன் அரசியலுக்கு வந்தபோது ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை. தனது வயதுக்கேற்ற இளம் தலைமுறையின் முற்போக்கு கொள்கைகளை, புரிந்தும் புரியாமலும், அவர் நடைமுறைப்படுத்தினார். கோவிட் வந்து குறுக்கே படுத்துக்கொண்ட்போதுதான் கண்ணனுக்கு விடயமே புரியவாரம்பித்தது. பொருளாதாரத்தைத் தக்க வைக்க வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் அள்ளிக்கொடுத்தார். பெரும்பாலான பணியாளர்களை வீட்டிலிருந்து பணிசெய்ய வசதி செய்து கொடுத்தார். கோவிட் முடிந்தபின் தொழில்களைத் தொடர்ந்து நடத்த கடன்களைப் பெறுவதற்காக வட்டி வீதத்தைக் குறைத்தார். பணியாளர்கள் பற்றாக்குறையைத் தவிர்க்க தற்காலிகம் என்ற பெயரில் குடிவரவாளர்களைக் கொண்டுவந்தார். கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கொடுத்த அழுத்தம் காரணமாக வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக இந்தியாவிலிருந்து , தருவித்து கடற்கரைகளை நாசப்படுத்தினார். இதற்கு ட்றூடோ மட்டும் காரணமல்ல. அவர் தொடர்ந்தும் தீராமல் விளையாடிக்கொண்டிருக்க அமைச்சரவை உதவிப் பிரதமர் தலைமையில் தமக்குள் ஒரு சிற்றரசை நடத்திக்கொண்டிருந்தது. 1 மில்லியன் புதிய குடிவரவாளர்கள் நாட்டுக்குள் வந்தது பற்றி குடிவரவு அமைச்சருக்கே தெரியாது என்ற நிலைமை. பஞ்சாப்பிலிருந்து படிக்கவென்று காணி பூமிகளை விற்று கனடா வந்த பலர் கனரக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்குள் சென்று விட்டார்கள். கனடாவில் வேலை வாய்ப்பு, வீட்டு வசதிகள் எல்லாம் கைக்கெட்டாமல் போனபோது பழி ‘இந்திய’ மாணவர்களின் தலைகளில் பட்டுத் தெறித்து ட்றூடோ தலையில் விழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் பொய்லியேவின் அம்புகள் சரமாரியாக வந்து ட்றூடோ கோட்டைக்குள் விழ அமைச்சர்கள் அவரை விட்டு ஓடிவிட்டனர். அவரைப் பதவியிலிருந்து இறக்கினால்தான் பொய்லியேவ் அம்புகளிலிருந்து தாம் தப்பிக்கலாம் என அவர்கள் கனவு கண்டார்கள். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

ஆனால் விதி வேறு திட்டத்தை வைத்திருந்தது. கோவிட்டினால் தூக்கியெறியப்பட்ட ட்றூடோவைக் காப்பாற்ற விதி ட்றம்பை அனுப்பியது. மார்க் கார்ணியைக் கொண்டு பொய்லியேவ் படையெடுப்பை மட்டுமல்ல உள்ளக சதிகாரர்களையும் ஏக காலத்தில் தகர்த்தெறிந்து தனது அவமானத்தைத் துடைத்துக்கொண்டார். ஒரு ராஜ தந்திரிக்குரிய ஞானம் இப்போது தான் அவருக்குப் பிறந்திருக்கும் என நினைக்கிறேன்.

இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடையவில்லை மாறாக அதன் தலைவரே படு தோல்வியை அடைந்திருக்கிறார். மக்கள் நிதானமாகச் சிந்தித்தே வாக்களித்திருக்கிறார்கள். அறியாத, தெரியாத, முன் பின் அரசியல் அனுபவமே இல்லாத ஒருவரிடம் ஆட்சியைக் கையளிக்கும்போது அதனைக் கண்காணிப்பதற்காக பலமான எதிர்க்கட்சியையும் சேர்த்தே மக்கள் பாராளுமன்றைத்தை அமைக்க அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த எதிர்க்கட்சியின் தலைவர் பொய்லியேவாக இருக்கக்கூடாது என்பதையும் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். எனவே கட்சித் தலைமையை வேறு யாராவது ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோற்றமைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஒன்ராறியோ மாகாண முதல்வர் ட்க் ஃபோர்ட்டைக் கட்சியும் அதன் முன்னரங்க காவலர்களும் வேண்டுமென்றே புறந்தள்ளியமையே முக்கியமான காரணமாகப் படுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரது உள்வட்டப் பரிவாரங்கள் சில இருக்கின்றன. இவைகளில் பலவற்றை அரசியலுக்குள் கொண்டு வந்ததே முதல்வர் டக் ஃபோர்ட் தான். அப்படி இருந்தும் நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணத் தேர்தலின்போது “மாகாண கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எந்தவித உதவிகளையும் யாரும் செய்யக்கூடாது” என பொய்லியேவ் மிகவும் இறுக்கமான கட்டளை இட்டிருந்தார் எனப்படுகிறது. டக் ஃபோர்ட்டைப் புறந்தள்ளுவது கனடாவில் அதிக ஆசனங்களைக் கொண்ட (122) ஒன்ராறியோ மாகாணத்தையே முற்றாகப் புறந்தள்ளுவதற்குச் சமன் என்பதை அறியாத முட்டாளாக அவர் இருந்திருக்கிறார் என்றால் அரசியலில் ஒரு ஞானசூனியம்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள நோர்த் ஐலண்ட்-பவல் றிவர் தொகுதியில் இந்த தேர்தலில் வெற்றியீட்டிய ஆரன் கண் என்பவர் ஒரு தீவிர வெள்ளைத் தீவிரவாதி. சுதேசிகளின் உரிமைக்கோரிக்கைகளை எள்ளிநகையாடும் இவரது தீவிரவாத கொள்கைகளுக்காக மாநில லிபரல் கட்சி இவரது கட்சி விண்ணப்பத்தை 2021 இல் நிராகரித்திருந்தது. 2025 இல் இவர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு விண்ணப்பித்தபோது இவரது விண்ணப்பத்தை நிராகரிக்கும்படி பல சுதேசிய தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் பொய்லியேவிடம் கோரிக்கை வைத்தன. ஆனால் அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டு இத்தீவிரவாதியை பாராளுமன்ற உறுப்பினராக்கியிருக்கிறார் பொய்லியேவ். எனவே கணிசமென்க் கூறமுடியாதெனினும் பல சுதேசியர்களின் வாக்குகளை அவர் இழந்திருக்கிறார்.

பாலஸ்தீன இனப்படுகொலை விடயத்திலும் யூதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பாலஸ்தீனியர்களைப் பயங்கரவாதிகள் எனவும் அவர்கள் தமது போராட்டங்களைக் கனடியத் தெருக்களுக்குக் கொண்டுவந்து இங்கும் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாகவிருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டுகிறார். இதன் மூலம் முஸ்லிம்கள் உட்படக் கணிசமான மிதவாதப் போக்குடையோர் லிபரல் சாய்வை எடுக்க பொய்லியேவே காரணமாக அமைகிறார்.

மேற்கூறிய காரணங்களை விடவும் பிரதான மாரணமான ட்றம்ப் என்ற எதிரியைத் தனது மானசீக குருவாக வழிபட்டதன் விளைவே பொய்லியேவை மக்கள் ஒரு ‘இன்ஸ்டண்ட்’ தேசத்துரோகியாக ஆக்கியமை. ட்றம்ப் பற்றவைத்தை கனடிய தேசிய எழுச்சியின் முன் ட்றூடோவின் மீது பொய்லியேவ் சுமத்திய அனைத்துப் பழிகளும் பொசுங்கிப்போகுமென பொய்லியேவ் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலுக்கு முன் சில நாட்களில் தான் அவரது கட்சியின் விஞ்ஞாபனமே வெளியிடப்பட்டது என்றால் அவரது தலைமை ட்றம்பைத் தாங்கக்கூடிய ஒன்றல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்தோரில் பலர் இளையோர் என்கிறார்கள். பொய்லியேவ் விற்ற வரிக்குறைப்பு – இமிகிரேஷன் – கிரைம் வாய்பாட்டை இவ்விளையோர் மனப்பாடம் செய்திருக்கலாம். அவர்கள் இன்னமும் தமது பெற்றோரின் வீடுகளில் வாழ்வதற்கு ட்றூடோவே காரணம் என அவர்கள் முற்றாக நம்பியிருந்திருக்கலாம். ஆனால் அப்பெற்றோரின் ஓய்வூதியங்களை வழங்குவதற்கான மூலம் இளையோர் இறுக்கும் வரியே தான் என்பதை அவர்களது முதிரா மூளைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ட்றூடோ லிபரல் கட்சியை வெகுதூரம் இடது பக்கம் தள்ளிப்போயிருந்தது உண்மை. உலகம் முழுவதும் woke கலாச்சாரம் ஃபாஷனாக வந்துகொண்டிருக்கும்போது லிபரல் கட்சியின் இடது கூடாரம் ட்றூடோவின் மிதவாதப் போக்கைச் சாதகமாகப் பாவித்து கட்சியை இடது பக்கத்திற்குத் தள்ளியது. கப்பல் கவிழப்போகிறது என அறிந்ததும் அவர்கள் ட்றூடோவைத் தள்ளி விழ்த்திவிட்டுத் தப்பப் பார்த்தனர். ஆனால் கப்பல் அவர்களை அமிழவிட்டு ட்றூடோவை மட்டும் காப்பாற்றி விட்டது.

மார்க் கார்ணி ஒரு practical man. அவரை உட்புகுத்தியது ட்றூடோவாக இருந்தாலும் இதன் சூத்திரதாரி, பணம் உட்பட, ஐரோப்பிய ஒன்றியம் தான். ட்றூடோ நகர்த்திய இடது பக்கத்திலிருந்து அவர் கட்சியை மத்திக்குக் கொண்டு வருவார். பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்த அவர் ஆசிய, ஐரோப்பிய சந்தைகளுக்கான பாதைகளைத் திறக்க வேண்டும். எரிபொருளும், கனிமங்களும் இப்புதிய சந்தைகளைச் சென்றடைவதற்கான பாதைகளை உருவாக்க சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் சில இணக்கப்பாடுகளைக் காணவேண்டும். கார்ணியின் முதல் நடவடிக்கையாக இருக்கப்போவது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது. இரண்டாவது அமெரிக்காவிடம் வாங்கிய பணமுறிகள் (Bonds), அடமானக் கடன்கள் (Mortgage Backed Securities) போன்றவற்றை மீளக் கையளித்து தமது முதலீடுகளைத் திரும்பப்பெறுவது. தற்போதுள்ள அமெரிக்காவின் கடனின் பெரும்பங்கு யப்பான், சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமுமே இருக்கிறது. இவற்றில் யப்பானைத் தவிர இதர நாடுகள் ஏககாலத்தில் தமது பணமுறிகளைக் காசாக்க முற்படுவார்களானால் அமெரிக்க பொருளாதாரம் ஓரிரவில் முடங்கிப்போவதற்குக காரணமாகலாம். இது மட்டும் தான் உடனடியாகப் பாவிக்கக்கூடிய கார்ணியின் துரும்புச் சீட்டு. ஏனையவற்றைப் பாவிக்க பத்து வருடங்கள் எடுக்கலாம். ஆனால் இவ்விடயத்தில் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடன் இணக்கப்பாடு கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. எனவே கார்ணி தன் துரும்புச் சீட்டைப் பாவித்தாரேயானால் ட்றம்ப் சீனாவுடன் சமரசத்திற்கு வரத் தயங்க மாட்டார். ஏனெனில் பொருளாதார ரீதியாக அமெரிக்கா அமிழும்போது அது ஏனைய நாடுகளையும் இழுத்துக்கொண்டுதான் போகும். எனவே கார்ணியின் இந்த துரும்புச் சீட்டு பலனளிக்கப் போவதில்லை.

சியலில் முன் பின் அனுபவமில்லாத கார்ணியின் இரைச்சல்களை உடனடியாக பகுத்துணர முடியாதுள்ளது. ஆனால் ஒன்று அவரது ஆட்சி முழுமையான நான்கு வருட ஆட்சியாக இருப்பதற்கான சாத்தியமில்லை. அதற்கடுத்த ஆட்சி கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியாக அமையவேண்டுமாகில் அதன் தலைமை மேற்கு கனடாவிடமிடமிருந்து பறிக்கப்பட்டு ஜான் ஷறே அல்லது பீட்டர் மக்கே போன்ற மிதவாதிகளிடம் கையளிக்கப்படவேண்டும். ட்றம்ப் நாட்டில் நடைபெறவிருக்கும் மத்திய தேர்தல்களைத் தொடர்ந்து அவரது சிறகுகள் கத்தரிக்கப்படும் வாய்ப்பு இருந்தால் கார்ணி நான்கு வருடங்களை இலகுவாகத் தாண்ட முடியும்.

இத்தேர்தல் மூலம் கிடைத்த இன்னுமொரு அதிர்ச்சி என்.டி.பி. கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்கின் தோல்வி. இதற்கு ஒரே ஒரு காரணம் பாலஸ்தீனம் பற்றிய இவரது நிலைப்பாடு. இறுதி விவாதத்தின்போதும் அவர் “பாலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை” என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தவர். இதே நிலைப்பாட்டை இவர் முன்னரும் தெரிவித்திருந்தார். 2023 இல் இவருக்கு வந்த கொலை மிரட்டலுக்கும் இவரது நிலைப்பாட்டிற்கும் சம்பந்தமிருக்கலாமோ என்று ஐயப்பட்டபோது இத் தோல்வி அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

கனடாவில் மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் மிகவும் கேவலமாக மதிக்கும் தொழிற் பட்டியலில் கடைசியாக இருப்பதுதான் அரசியல்வாதி. பழைய வாகன விற்பனையாளர்கூட அரசியல்வாதிகளைவிட மேன்மையாக மதிக்கப்படுபவர்கள். இனிமேல் ஜக்மீத் சிங்க் தலை நிமிர்ந்து வாழலாம்.

தமிழ் வேட்பாளர்களை / வெற்றியாளர்களைப் பற்றி எதுவும் இல்லையா என்கிறீர்கள். It’s party time. அடுத்தூர்வதகுதொப்பதில். (Image Credit: CNN)

https://veedu.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/?fbclid=IwY2xjawKDWHxleHRuA2FlbQIxMQBicmlkETFHVnJoVnk4S1ZyWFRQTTRqAR7-2fZVNQuGUbLJjeQKxeQL-myiMvWp9kYDt53dFRd5FwEgwClMhALb4kTiWQ_aem_8PA3MO0gSJ5VN88iQICCTA#google_vignette

இந்து சமுத்திரப் பிராந்திய பதட்ட நிலையும் இலங்கைக்கான சவால்களும்

2 months ago

இந்து சமுத்திரப் பிராந்திய பதட்ட நிலையும்  இலங்கைக்கான சவால்களும்

க.சர்வேஸ்வரன்

ஆசியாவின் சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பிரதேசமான பகங்காமின் கடந்த செவ்வாய்கிழமை லஷ்கர் இ தொய்பா என்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்பு 26 சுற்றுலாக்காரர்களை சுட்டுக்கொண்டுள்ளது. இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விடயத்தில் இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து (75 ஆண்டுகளாக) மோதல் நிலவி வருவது உலகறிந்த விடயம். காஷ்மீர் விடுதலை போரும் பல ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு பாகிஸ்தான் 75 ஆண்டுகாலமாக பயிற்சிகள் வழங்கி இந்தியாவிற்குள் அனுப்பி பல்வேறு காலகட்டங்களில் பெரியதும் சிறியதுமான தாக்குதல்களை நடத்தி வருவதும் இந்தியா பதில் நடவடிக்கைகள் எடுத்து வருவதும் அனைவரும் அறிந்ததே.

மேற்கண்ட பாகிஸ்தான் பயிற்சியளித்து அனுப்பிய லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் சுற்றுலா மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கொடுத்துள்ள பதிலடி யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானூடாக பாயும் சிந்து நதியை இந்தியா தடுக்காதிருப்பதற்கான ஒப்பந்தம் 1960களில் ஐ.நா. மேற்பார்வையின் கீழ் கையெழுத்தானது. சிந்து நதிநீர் பாகிஸ்தானை பொறுத்தவரை பெருமளவு மக்களுக்கான குடிநீராகவும் விவசாயத்திற்கான முதுகெலும்பாகவும் இருந்து வருகின்றது. இந்நிலையில் நடைபெற்ற இத்தாக்குதலுக்கு பதிலடியாக சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. மேலும் 26 நாடுகளின் இராஜதந்திரிகளை அழைத்து தமது இந்த முடிவுக்கு பாகிஸ்தானே முழுப்பொறுப்பும் என்ற விளக்கத்தை வெளியுறவுத்துறை விளக்கப்படுத்தியுள்ளது. முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகளுடனான சந்திப்புகளை வெளியுறவுத்துறை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வறிவிப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பங்குச்சந்தை வேகமாக சரிந்து வருகிறது. சிந்துநதி நீர்த் தடை என்பது பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தியில் மட்டும் 30 வீதம் வரையில் வீழ்ச்சி காணும் என பாகிஸ்தானிய பொருளியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியளவிலான தண்ணீர்ப் பஞ்சம் உட்பட சங்கிலித் தொடராக பாரிய பொருளாதாரத் தாக்கத்தை பாகிஸ்தான் சந்திக்க இருப்பதாக சர்வதேச பொருளியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே இலங்கையைப் போன்றே கடுமையான பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி பாரிய தாக்கத்தை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற வகையில் பெருமளவு இந்திய ராஜதந்திரிகளை பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதை இந்தியாவும் இரத்தத்திற்கு இரத்தம் என்ற வகையில் கையாளும் என எதிர்பார்க்கலாம். முற்றிவரும் இந்த முறுகல் நிலை சர்வதேச அளவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மேல் செல்லாமல் அதிகபட்ச பொறுமையை இரு தரப்பும் கடைப்பிடிக்குமாறு ஐ.நா.சபை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிந்துநதி நீர் விடயம் தமக்கு அறிவிக்கப்படவில்லையெ உலக வங்கி கூறியுள்ளது. இரண்டு நாடுகளும் அணுவாயுதத்தை தம்வசம் கொண்ட நாடுகள் என்ற வகையில் இம்மோதல் வெடித்தால் இப்பிராந்தியத்திற்கு ஏற்படக்கூடிய பாரிய அபாயங்களையும் அலட்சியம் செய்துவிட முடியாது. மொத்தத்தில் இந்தியாவின் நகர்வுகள் பாகிஸ்தானின் அடிமடியில் கைவைத்துள்ளமையும் பாகிஸ்தான் அதனை கையாள வல்லமையுள்ளதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

ஐ.நா. சபையின் மேற்பார்வையின் கீழ் கையெழுத்திடப்பட்ட சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறித் தற்காலிகமாக இந்தியா நிறுத்தி வைத்திருப்பதானது தன்னைச் சூழவுள்ள நாடுகள் தனது நலன்களை மதிக்காமல் செயற்பட்டால் என்னாகும் என்ற எச்சரிக்கையை விடுப்பதாகவும் நோக்க முடியும். பங்களாதேஷில் ஷேக் கஷினாவை வெளியேற்றிய சக்திகளும் இந்திய எதிர்நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் ஒன்றில் சீன சார்பாகவோ அல்லது அமெரிக்க சார்பாகவோ தான் உண்மையாக செயற்பட்டார்களே ஒழிய இந்தியாவின் நண்பர்களாக செயற்படவில்லை. வேறுவழியின்றி இந்தியாவிடம் அடங்கிப் போக வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருந்தனர்.

இன்று தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) என்ற பெயரில் ஆட்சி நடத்தும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இந்திய எதிர்ப்பு வாதத்தை தமது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகக் கொன்றது. இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதே அதன் சாராம்சமாகும். இந்திப் பிராந்தியத்தில் (தெற்காசியா) இந்தியா நிலப்பரப்பிலும் சரி மக்கள் தொகையிலும் சரி பொருளாதார வளத்திலும் சரி தொழில்நுட்பத்திலும் சரி பிராந்திய நாடுகளின் ஒட்டுமொத்தப் பலத்திற்கும் மேலானது. அதேவேளை இப்பிராந்திய நாடுகள் அனைத்தும் மொழியாலோ மதத்தாலோ ஏனைய கலாசாரப் பின்னணிகளாலோ இந்தியாவுடன் பின்னிப்பிணைந்தவை எனவே இவற்றைப் பயன்படுத்தி இந்தியா படிப்படியாக இலங்கை உட்பட இப்பிராந்திய நாடுகளை ஆக்கிரமிக்கும். எனவே இந்தியா இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது. தமிழர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலங்கை முகவர்கள். எனவே தமிழர்களும் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தானவர்கள். இது ஜே.வி.பி.யின் அடிப்படைக் கொள்கை. இதனால்தான் ஜே.வி.பி. நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக இந்திய எதிர்ப்பு ஓலங்களை ஆரம்பத்திலிருந்தே எழுப்பி வந்தது. அதேவேளை ஜே.வி.பி. ஓர் வலுவான சீன சார்ப்பு கட்சி என்பதும் இன்று அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு பின்பலமாக சீனாவே செயற்பட்டது என்பதும் அறிந்ததே.

அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி விஜயத்தின் போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தானது. மோடிக்கு அதியுயர் தேச மித்திர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இலங்கை மண்ணை இந்திய நலனுக்கெதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி அனுரகுமார பேசியிருந்தார். ஆட்சியில் இருப்பதனால் இந்தியாவை மகிழ்விப்பதற்கும் தமது ஆட்சிக்கு பங்கம் வந்துவிடாமல் பார்க்கவும் விருதுகள் அறிக்கைகள் பயன்படலாம். ஆனால் இந்தியாவின் தேவை அதன் பல்வேறு திட்ட முன்மொழிவுகளை செயல்வடிவம் பெற வைப்பதே. இலங்கை முன்னைய ஆட்சியாளர்களும் சரி தற்போதை ஆட்சியாளர்களும் சரி இந்திய திட்ட முன்மொழிவுகளை இழுத்தடிப்பது தொடர்கிறது. அதேவேளை இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வருகிறது. இது 13வது திருத்தத்திற்கு மேலாக வடக்கு – கிழக்கு நிரந்தர இணைப்பையும் உள்ளடக்கிய கோரிக்கையாகும். இந்த விடயத்திலும் முன்னைய ஆட்சியாளர் காலம் கடத்தினர். தற்போதைய ஆட்சியாளர் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக தென்னிலங்கை முழுவதும் வன்முறைப் போராட்டம் நடத்தி 60 ஆயிரம் பேர் கொல்லப்பட காரணமானவர்கள். 13வது திருத்தத்தையே நடைமுறைப்படுத்த விருப்பமற்றவர்கள் இணைந்திருந்த வடக்கு – கிழக்கை பிரித்தவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்றோ அரசியல் யாப்பில் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதன் மூலம் பொலிஸ், காணி அதிகாரத்தையும் வழங்குங்கள் என்ற இந்தியாவின் கோரிக்கையும் ஜே.வி.பி. ஆட்சியாளருக்கு வெறுப்பேற்றும் விடயமாகும்.

எனவே இந்திய நலன்களுக்கு இலங்கை இடையூறும் நிலை ஏதேனும் வகையில் ஏற்பட்டால் மட்டுமல்ல இந்தியாவின் திட்ட முன்மொழிவுகளை இலங்கை பின்னடிக்கும் அல்லது நிராகரிக்கும் பட்சத்தில் இந்தியா இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கு காட்டிய சமிக்ஞைகள் போலவோ சற்று மேலாகவோ காட்டக்கூடும். உதாரணமாக கச்சதீவு விடயம் இருதரப்பு ஒப்பந்தமே. இந்தியா கச்சதீவில் தனது கடற்படையை நிலைகொள்ள வைப்பது கடினமானதல்ல. அதன்மூலம் அது இலங்கையை கையாளவும் முடியும். உள்நாட்டு அரசியலில் பலம்பெறவும் முடியும். எனவே சிந்துநதி நீர் ஒப்பந்த நிறுத்தி வைப்பானது கச்சதீவு ஒப்பந்தத்திற்கும் ஏற்படலாம். அதுமாத்திரமன்றி இனமோதல் தீர்வின் மீதும் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பிராந்திய சர்வதேச அரசியல் காலநிலைகள் எப்போது எவ்வாறு மாறும் என்று கூறமுடியாது. ஆனால் அது எப்போது எவ்வாறு மாறினாலும் இனமோதல் தீர்விற்கு சார்பாக அம்மாற்றங்களை கையாள தமிழ்த் தலைமைகள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இத்தகைய உருப்படியான அரசியல் தூரப்பார்வையுடனான வெளிப்பாடான கலந்துரையாடல்களோ கொள்கைத் திட்டங்களோ அன்றி துரோகிகள் தியாகிகள் பட்டங்கள் வழங்கும் நிறுவனங்களாகவும் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் குறுகிய கூட்டத்திலான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களையுமே சில கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. யுத்த காலங்களில் எமது விடுதலை அல்லது அதிகாரப்பகிர்வு நோக்கிய பல சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. இனிமேலும் அவ்வாறு இருப்பது எம்மினத்தின் ஒட்டுமொத்த அழி;விற்கே இட்டுச்செல்லும். ஒருவர் மீது ஒருவர் பழிசொல்லவும் இழிவான பிரச்சாரங்கள் மேற்கொள்ளவும் எவருக்கும் அருகதையில்லை. கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் அரசியலை விடுத்து மக்கள் நலன்கருதி ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான களம் விரைந்து உருவாக்கப்பட வேண்டும். தீர்வு தொடர்பில் யாரும் முன்முனைப்பு எடுப்பார்கள். நாம் எதிர்வினையாற்றுவோம் என்ற வழக்கமான பல்லவியை விடுத்து நாம் ஒன்றுபட்டு சாத்தியமான மாற்றுத்திட்டங்களை வகுத்து இலங்கை அரசுடனும் சரி சர்வதேச சக்திகளுடனும் சரி இராஜதந்திர ரீதியான நகர்வுகளை மேற்கொள்ள எம்மைத் தயார் செய்ய வேண்டும்.

https://thinakkural.lk/article/317332

தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை

2 months ago

"தந்தை செல்வாவின் அரசியல் அணுகுமுறையும் அவரின் சொந்தக் குணாதிசயமும் ஒன்றாகவே இருந்தது. அவர் ஒத்து ஓடுகின்றவர் அல்லர். அதாவது அடம்பன்கொடி திரண்டு இருக்க வேண்டும் என்பதற்காகச் சேரக் கூடாதவர்களோடு சேருபவர் அல்லர்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தந்தை செல்வநாயகம் சென்தோமஸ் கல்லூரியில் கற்பிக்கும் வேளையிலே சகோதரனின் உடல்நிலை கருதி விடுமுறை கோரியபோது அதிபர் மறுத்தமையால் அன்றைய தினமே இராஜிநாமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

தந்தை செல்வா ஒத்து ஓடவும் இல்லை! சேரக் கூடாதவர்களோடு சேரவும் இல்லை : சுமந்திரன் | Thanthai Selva Remembrance In Trinco

அதன் பின்பு வெஸ்ரி கல்லூரியில் அவர் பணியாற்றும்போது ஆங்கிலேயர் ஆட்சியில் வேட்டி சால்வை அணிந்து பணியாற்ற முடியாது என்றபோது அங்கும் வேலையை இராஜிநாமா செய்துவிட்டு வெளியேறினார். அனைவரும் இணைந்து செல்வோமே என நினைத்தவர் அல்லர் தந்தை செல்வா. அவரது அரசியல் அணுகுமுறையும் அவரது தனிப்பட்ட குணாதிசயத்துடன் ஒத்ததாகவே இருந்தது.

இல்லையென்றால், 1947 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலத்தால் அழைத்து வரப்பட்டு காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட வைத்து வெற்றியீட்டினார். எனினும், நாடாளுமன்றம் வந்து ஓரிரு ஆண்டுகளிலேயே பொன்னம்பலம் தலைமையில் பொன்னம்பலம் அணி எனவும், உப தலைவர் செல்வநாயகம் தலைமையில் செல்வா அணி எனவும் இரண்டாகப் பிரிந்தது.

தேர்தலில் தோல்வி

பிரிய வேண்டும் என்பதற்காகத் தந்தை செல்வா பிரியவில்லை, பிரஜாவுரிமைச் சட்டத்தை அன்றைய இலங்கைத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க அறிமுகப்படுத்தியபோது அது தீங்கானது, அதனை ஆதரிக்க முடியாது, 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இலங்கை - இந்தியக் காங்கிரஸ் அந்த உறுப்பினர்களின் பிரஜாவுரிமையே அற்றுப்போகும் விதமாக அந்தச் சட்டம் இயற்றப்பட்டு கொண்டு வந்தபோது அதனை எதிர்க்க வேண்டும் எனக் கட்சிக்குள்ளேயே வாதாடினார். கட்சி அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

இதனால் கொள்கையின் நிமித்தம் கட்சியை இரண்டாகப் பிளந்தார். 101பேர் இருந்த நாடாளுமன்றத்தில் 6 பேர் கொண்ட கட்சியில் இருந்து 3 பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர். கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஒற்றுமை என்ற கோஷத்துக்காகத் தவறைச் செய்ய அவர் விரும்பவில்லை.

தந்தை செல்வா ஒத்து ஓடவும் இல்லை! சேரக் கூடாதவர்களோடு சேரவும் இல்லை : சுமந்திரன் | Thanthai Selva Remembrance In Trinco

ஒற்றுமை அல்ல, கொள்கையே முக்கியம், எங்களுடைய நிலைப்பாடு முக்கியம், எதற்காக மக்களுக்காக எழுந்து நிற்கின்றோம் என்பது முக்கியம், அதைச் செய்யத் துணிந்தார். 1949 ஆம் ஆண்டு புதிதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை அவர் ஆரம்பித்தார்.

வருட ஆரம்பத்தில் மாவிட்டபுரத்தில் அண்ணன் மாவை.சேனாதிராஜாவின் வீட்டுக்கு அருகிலே கட்சியின் அங்குரார்ப்பணம் நடந்தது. எனினும், டிசம்பரில் கொழும்பில்தான் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வை உத்தியோகபூர்வமாக அவர் நடத்தினார். அதற்கு முன்னர் பல முஸ்தீபுகள் இடம்பெற்றபோது அதைக் கற்கலால் எறிந்து குழப்பினார்கள், அடித்துத் துரத்தினார்கள்.

இவையெல்லாம் யாழ்ப்பாணத்திலேயே இடம்பெற்றன. அதனால்தான் 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி கொழும்பு - மருதானையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை அங்குரார்ப்பணம் செய்தார். பிடித்த கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார். அந்த வழியைத் தன்னுடைய மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். 3 ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலிலே போட்டியிட்டு தோல்வி கண்டார்.

தமிழரசுக் கட்சி சார்பில் கோப்பாயில் வன்னியசிங்கமும், திருகோணமலையில் இராஜவரோதயமும் மட்டுமே வெற்றியீட்டினர். முதல் தேர்தலிலேயே தமிழரசுக் கட்சியை வெற்றிகொள்ள வைத்த பெருமிதம் திருமலைக்கு உண்டு. ஆனாலும், கட்சி தோல்வியடைந்தது.

மக்கள் தனது கொள்கையைப் புறக்கணித்து விட்டார்கள் என அவர் விட்டுவிடவில்லை. அந்தத் தேர்தலிலே காங்கேசன்துறைத் தொகுதியில் தான் தோற்றபோது அவர் நீதிமன்றிலே வழக்கு ஒன்றைத் தொடுத்தார். தேர்தல் வெற்றி தவறானது, முடிவு தவறானது எனத் தானே வாதாடி வழக்கொன்றைத் தொடுத்தார்.

அந்த வழக்கிலேயும் அவர் தோற்றார். தோற்றது மட்டுமன்றி அன்று வழக்குச் செலவாக 40 ஆயிரம் ரூபாவையும் அவர் கட்ட வேண்டியும் இருந்தது. அதையும் செய்தார். ஆனால், 1956 ஆம் ஆண்டில் இருந்து இளையவர்களையும், புதியவர்களையும் கட்சிக்குள் சேர்த்தார். வேட்பாளர்களாக நிறுத்தியவர்கள் எல்லாம் 30 வயதுக்கும் குறைந்தவர்கள். பெரு வெற்றி கண்டார்.

தனி நாட்டுக் கோரிக்கை

அதற்குப் பிறகு இன்று வரைக்கும் அவர் வகுத்த சமஷ்டிக் கொள்கைக்குத் தமிழ் மக்கள் வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ச்சியாக வாக்களித்து வருகின்றார்கள். ஆகவே, அவரது அரசியல் அணுகுமுறையை அறிந்திருப்பது அல்லது பின்பற்றுவது அத்தியாவசியம். இந்த விடயத்திலே தந்தை செல்வா சொன்ன இரண்டு விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

தந்தை செல்வா ஒத்து ஓடவும் இல்லை! சேரக் கூடாதவர்களோடு சேரவும் இல்லை : சுமந்திரன் | Thanthai Selva Remembrance In Trinco

இதே மண்ணிலே தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாடு 1951ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது தந்தை செல்வாவின் பேருரையில் சொன்ன ஒரு வாசகம், "ஓர் இனம் அழியாமல் இருப்பதற்குப் பல ஏற்றம் தேவை. ஒன்று அந்த இனத்தின் எண்ணுத்தொகை குறையாமல் இருப்பது. இரண்டாவது அந்த இனம் வசிக்கும் பிரதேசம் பறிபோகாமல் இருப்பது." இந்த இரண்டும் இந்தத் தீவிலே எங்கள் இனம் அழியாமல் இருக்க வேண்டுமானால் நாம் எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும், நாம் வதியும் பிரதேசம் பறிபோகாமல் இருக்க வேண்டும்.

அப்படிச் செய்வதாக இருந்தால் நாம் வசிக்கும் பிரதேசத்தில் ஆட்சி முறை மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர் தனது சமஷ்டி கொள்கையை முன்வைத்தார். 1956 ஆம் ஆண்டிலேயே தனிநாட்டுக் கோரிக்கை எழுந்தது.

அடங்காத் தமிழன் சி.சுந்தரலிங்கம் ஈழம் என்று பெயர் கொடுத்தார். ஆனால், தந்தை செல்வா அதை அந்த வேளை ஏற்கவில்லை. தொடர்ச்சியாக பலர் தனியாகப் பிரிந்துபோவதுதான் ஒரே வழியெனக் கூறியபோதும் அவர் அதனை ஏற்கவில்லை.

1960 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூடியபோது வவுனியாவைச் சேர்ந்த சிற்றம்பலம் தனிநாடுதான் ஒரே வழி என்ற தீர்மானத்தை முன்வைத்தார். அப்போது தந்தை செல்வா சொன்னது "இது வன்முறையில் முடியும். ஆயுதப் போர் பிரச்சினையைத் தீர்க்காது" என்று கூறி அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடவில்லை.

11ஆவது மாநாடு உடுவிலே நடந்தபோது இளைஞர் அணி - அதாவது வாலிபர் முன்னணியினர் வந்து தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் எனச் சொன்னபோது அவர்களுக்கு அறிவுரை கூறி அதனை நீங்கள் முன்மொழிய வேண்டாம், இதனை நான் எதிர்த்தவன் அல்லன், இது எமது மக்களுக்குப் பாதகமாக முடியும் எனக் கூறி அதனையும் தந்தை செல்வா தடுத்தார்.

1970 ஆம் ஆண்டுத் தேர்தலிலே வி.நவரட்ணம் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கி தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலிலே போட்டியிட்டபோது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைப்பவர்களிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் சொல்லியிருக்கின்றோம். அதே தந்தை செல்வா 1972 ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு தொகுக்கப்பட்டபோது மாற்று யாப்பை முன்வைத்தார்.

சமஷ்டி அடப்படையிலே அந்த யாப்பு இருந்தது. எமது வெள்ளி விழா மலரிலும் அது இருக்கின்றது. அந்த யாப்பிலே பல விடயங்களை அவர் கோரியிருந்தாலும் இறுதியிலே எமது கட்சியின் சார்பில் வி.தர்மலிங்கம் 5 பிரேரணைகளை (நாடாளுமன்றத்தில்) முன்வைத்தார்.

அனைத்தும் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டபோது தந்தை சொன்னார், ''இனி, நாளையில் இருந்து நாம் இங்கே வர மாட்டோம். நாம் வெளிநடப்புச் செய்து இதனை ஒரு நாடகமாக மாற்ற விரும்பவில்லை. ஆனால், நாளையில் இருந்து நாம் இங்கு வரமாட்டோம்'' - என்று சொன்னார்.

அதனைத் தொடர்ந்து இராஜிநாமா செய்தார். இடைத்தேர்தலும் இரண்டரை ஆண்டுகள் இடம்பெறாமல் இருந்தது. 1975ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடைத்தேர்தலிலே அவர் பெருவெற்றியீட்டினார். அதன் பிறகுதான் தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்டது.

1976ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி வட்டுக்கோட்டை தனிநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், எமது கட்சி தனிநாடு ஒன்றை நிறுவ முனைகின்றது. இது இலேசான காரியம் அன்று, வில்லங்கமானது என்பதை நாம் அறிவோம்" - என்று அதனை விவரித்துச் சொல்லி விட்டு, எமது நடவடிக்கை சாத்வீகமானது எனச் சொன்னார்." - என்றார்.

https://tamilwin.com/article/thanthai-selva-remembrance-in-trinco-1714329010

கவனம் : பொய் வாக்குறுதிகளுடம் தகுதியற்ற வேட்பாளர்கள்! — கருணாகரன் —

2 months ago

கவனம் : பொய் வாக்குறுதிகளுடம் தகுதியற்ற வேட்பாளர்கள்!

May 1, 2025

கவனம் : பொய் வாக்குறுதிகளுடம் தகுதியற்ற வேட்பாளர்கள்!

— கருணாகரன் —

இது தேர்தற்காலம். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தற் பரப்புரைகள் நாடு முழுவதிலும் நடக்கிறது. பல்வேறு கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தற் பரப்புரைகளில் முழுமூச்சாக ஈடுபடுகின்றன. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என எல்லோரும் நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்று நிற்கிறார்கள். தேர்தற் களப்பணியை ஆற்றுகிறார்கள். 

இதைப்போல இவர்களெல்லாம் தேர்தலுக்குப் பிறகும் வந்து மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களுக்குப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று மக்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது. மக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பும் அதுதான். ஆனால், அப்படித் தேர்தலுக்குப் பின்னரும்  வரக்கூடியவர்கள் யார்? வெற்றியீட்டிய தரப்புகளிலிருந்து சிலவேளை யாரும் வரலாம். தோல்வியைச் சந்தித்த தரப்புகள் தமக்கு என்ன வேலை என்ற கணக்கில் ஒதுங்கிக் கொள்ளும். அதுவே வழமை. அவர்களெல்லாம் பிறகு, இன்னொரு தேர்தலின் போதுதான் மீண்டும் மக்களிடம் வருவார்கள். இதுதான் நமது சூழலிலுள்ள அரசியலின் நிலைமை. 

தேர்தல் திணைக்களத்தின் விதிமுறைகள், சட்டதிட்டங்களுக்கு அப்பால் சென்றே பெரும்பாலான பரப்புரைகளும் நடக்கின்றன. ஒரு வேட்பாளர் செலவழிக்க வேண்டிய நிதியின் வரையெல்லை குறிக்கப்பட்டாலும் அதற்குள் நின்று யாரும் தமது பரப்புரையை முன்னெடுப்பதைக் காண முடியவில்லை. நிதி மட்டுமல்ல, தேர்தற் பரப்புரைக்கென வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளையும் கடந்துதான் பலரும் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள். ஆட்களை வளைத்துப் போடுவதற்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய முயற்சிக்கின்றன சில தரப்புகள். அதற்காக அவர்கள் செல்லக் கூடிய எல்லை வரையில் செல்கிறார்கள். இப்போதே பலருக்கு உத்தரவாதங்கள் வழங்கப்படுகின்றன. தேர்தலில் வெற்றியீட்டினால் ஒப்பந்த வேலைகளை வழங்குவது தொடக்கம் அபிவிருத்திப் பணிகளுக்கான கொள்வனவில் சலுகை, முன்னுரிமை, வாய்ப்பளித்தல் என இந்த உத்தரவாதங்களின் பட்டியல் நீள்கிறது. 

இதொரு புறமென்றால், பரப்புரைகளின்போது ஒவ்வொரு தரப்பும் (கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும்) ஒவ்வொரு வேட்பாளரும் வழங்குகின்ற வாக்குறுதிகளும் முன்வைக்கின்ற திட்டங்களும் திகைப்பை உண்டாக்கும் விதமாகவே உள்ளன. அத்தனையும் பெருந்திட்டங்கள். மகத்தான திட்டங்கள். ஊர்களைச் சொர்க்கபுரியாக்கும் மாபெரும் ஐடியாக்கள்…

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கின்ற நாட்டில், இப்படியான பெருந்திட்டங்களுக்கு (இவர்களுடைய பார்வையில் இதெல்லாம் மகத்தான திட்டங்கள்) எப்படி நிதியைத் திரட்டுவது? எங்கேயிருந்து அதைப் பெறுவது? ஒன்றில், அரசாங்கம் அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். அதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பாலான சபைகளில் வெற்றியீட்டி, அவற்றைக் கைப்பற்றினாலும் கூட அதனால் சபைகளுக்குத் தேவையான நிதியை முழுமையான அளவில் ஒதுக்க முடியாது. அதிகம் ஏன், கிராமங்களிலுள்ள வீதிகளை முழுமையாகப் புனரமைப்புச் செய்வதற்கே அரசாங்கத்திடம் போதிய நிதிவளம் இல்லை. இதுதான் உண்மை. ‘வைத்துக் கொண்டு வஞ்சம் செய்வதாக’ யாரும் கருதத் தேவையில்லை. நாட்டில் (கஜானாவில்) பணமில்லை. வருவாய் குறைவு. அதுதான் உண்மை நிலவரம். 

அப்படியென்றால், சபைகள்தான் நிதியைத் திரட்ட வேண்டும். அதற்குரிய வழிவகைகளைக் காண வேண்டும். அதற்குக் கால அவகாசம் வேண்டும். தவிர, எல்லாச் சபைகளும் நிதியைப் பெருக்க்க் கூடிய – பெறக்கூடிய நிலையில் இல்லை. நகர்சார்ந்த சபைகளுக்கும் சுற்றுலாப் பிரதேசத்தையொட்டிய சபைகளுக்கும் நிதியைச் சேகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அதுவும் எவ்வளவு நிதியைத் திரட்ட முடியும் என்பது கேள்விக்குரியது. ஏனைய பல சபைகளுக்கு வரி அறவீட்டிற் கிடைக்கின்ற நிதியே குறைவு. குறிப்பாக கிராமங்களை மையப்படுத்திய பிரதேச சபைகளால் எதிர்பார்க்கப்படும் அளவுக்கு நிதியைப் பெருக்கவோ பெறவோ முடியாது. 

ஆகவே அங்கெல்லாம் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியே ஆதாரமாகும். அதை வைத்துக் கொண்டுதான் எதையும் செய்ய முடியும். முன்பு வெளிநாட்டு உதவிகள் அல்லது வெளிநாட்டு கொடை நிறுவனங்கள் –தொண்டு நிறுவனங்கள் – நிதி நிறுவனங்கள் அளிக்கின்ற நிதியைக் கொண்டே சில, பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவை எந்தளவுக்குத் தொடர்ந்து கிடைக்கும் என்பது சரியாகத் தெரியவில்லை. அதைச் செய்ய வேண்டியது (அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது) அரசாங்கத்தின் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.

இதுதான் உண்மையும் யதார்த்தமுமாகும். இந்த உண்மையையும் யதார்த்தத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களால் இதை உய்த்துணர முடியவில்லை என்றால், அதைச் செய்ய வேண்டியது (மக்களுக்கு இந்த நிலைமையை விளக்க வேண்டிய பொறுப்பு) ஊடகங்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் இளைய தலைமுறையினருமாகும். அவர்கள் இதைச் செய்யவில்லை என்றால், தாம் வெற்றியீட்டுவதற்கான வாக்குகளைச் சேகரிப்பதற்காக அரசியற் தரப்புகள் மக்களுக்கு அளிக்கின்ற பொய் வாக்குறுதிகளும் ஏமாற்றுத்திட்டங்களும் என்ற மோசடிக்கு இவர்களும் உடந்தை என்றே அர்த்தமாகும். 

ஆகவே தேர்தற் பரப்புகளை உன்னிப்பாக, ஊன்றிக் கவனித்து, அங்கே முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகக் கேள்விகளை எழுப்ப வேண்டும். அவை தொடர்பான விவாதங்களை முன்வைக்க வேண்டும். கடந்த காலத்தில் இவ்வாறான பணிகளைச் செய்யத் தவறியதன் அல்லது அதில் போதிய அளவுக்குச் செயற்படாததன் விளைவுகளே, பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் பிழையான (தவறான) தரப்புகளை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களுடைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் வீணடிக்கப்பட்டன – பாழாக்கப்பட்டன. மக்கள் எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக தவறான அரசியல் விளைவுகள் உருவாகின. நாடு மோசமான நிலையை (அழிவை) எட்டியது.

இந்தப் படிப்பினைகளிலிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம். அந்தக் கற்றுக் கொள்ளல் என்பது மீளவும் தவறுகள் நிகழாமல், தவறான தரப்புகளை தேர்வு செய்தல் நிகழாமல் தடுப்பதாக அமைய வேண்டும். அது நாட்டுக்கு, எதிர்காலத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய நன்மையாகும். 

நாட்டுக்கு நாம் மிகப் பெரிய அர்ப்பணிப்புகளைச் செய்ய முடியாது போகலாம். குறைந்த பட்சம் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவாவது வேண்டும். இந்த நாடு தவறுகளால், பிழைகளால்,  குற்றங்களால், மோசடிகளால், சூறையாடல்களால் பின்தள்ளப்பட்டது. இதைச் செய்த தரப்புகளை ஆதரித்ததன் விளைவே இதுவாகும். ஆகவே, இனியாவது இதை – இந்தத் தவறுகளைச் செய்யாமல் தடுத்துக் கொள்வோம்.

என்பதால், தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களின் தகுதி நிலை தொடக்கம், அவர்களும் அவர்களுடைய தரப்புகளும் முன்வைக்கும் வாக்குறுதிகள் வரையில் அனைத்தையும் கவனித்துப் பேச வேண்டியுள்ளது. பல வேட்பாளர்களும் தகுதி குறைந்தவர்களாக – பொருத்தப்பாடற்றவர்களாகவே – உள்ளனர். 

1.      உள்ளுராட்சி மன்று என்றால் என்ன, அதனுடைய அதிகாரம் என்ன என்று தெரியாதவர்களாக இருப்போர்.

2.      உள்ளுராட்சி சபைகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய எந்த விடயத்தையும் வேலைத்திட்டங்களையும் விளங்கிக் கொள்ளக் கூடிய ஆற்றல் குறைந்தவர்கள். 

3.      கடந்த காலத்தில் சபைகளில் இருந்து ஊழல் செய்தவர்கள், முறைகேடான முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தியவர்கள், தவறான தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள், சபையின் நிதியைப் பாழாக்கியவர்கள், பிழையான திட்டங்களை உருவாக்கியவர்கள்.

4.      சமூக அக்கறை, பிரதேசம் மீதான பற்று, அரசியல் உணர்வு, பொதுப்பணி ஆற்றிய அனுபவம் எதுவுமே இல்லாமல், கட்சிகளின் அல்லது சுயேச்சைக் குழுக்களின் தேவைக்காக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்போர். 

5.      தெரிந்தவர், உறவினர், குறித்த சாதி, சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வேட்பாளர்களாக்கப்பட்டோர்.

இப்படியானவர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு உள்ளுராட்சிகளை வளப்படுத்த முடியும்? ஆனால், இவ்வாறானவர்களால்தான் வேட்பாளர் பட்டியலே நிரம்பிப்போயுள்ளது. 

ஆகவே மக்களும் மக்களை வழிப்படுத்தக் கூடிய பொறுப்புகளில் உள்ளோரும் கட்சி அபிமானம், தலைமைத்துவ விசுவாசம் என்பதற்கு அப்பால் அறிவு பூர்வமாகச் சிந்தித்து செயற்படுவது அவசியமாகும். எதன்பொருட்டும் தவறுகள் நடக்க அனுமதிக்கக் கூடாது. இனம், மதம், சாதி, கட்சி என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு வகையான நியாயத்தை முன்னிறுத்த முயற்சிக்கும். அதற்கெல்லாம் இடமளித்து ஒவ்வொரு தேர்தலிலும் தவறுகளை விளைவிக்க முடியாது. ஒவ்வொரு தேர்தலிலும் தவறுகளை இல்லாதொழிக்க முற்பட வேண்டும். அப்பொழுதுதான் தவறான தரப்புகளை நீக்கம் செய்யலாம். 

அளிக்கப்படும் நம்பிக்கையும் முன்வைக்கப்படும் திட்டங்களும் உண்மையானவையாக – யதார்த்தமானவையாக – நடைமுறைக்குச் சாத்தியமானவையாக இருக்க வேண்டும். 

அரசியலிலும் சரி, தனி வாழ்க்கையிலும் சரி நம்பிக்கை அளித்தலுக்கு (Giving hope) நிகரானது அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதாகும் (Fulfilling hope). அரசியலில் இது இன்னும் கூடுதல் அழுத்தத்துக்குரியது. ஏனென்றால், அரசியலில் அளிக்கப்படும் நம்பிக்கை, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அளிக்கப்படுவது. அவர்களுடைய நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அளிக்கப்படுவது. 

அதை நிறைவேற்றவில்லை – காப்பாற்றவில்லை என்றால், அது அந்த நம்பிக்கையை ஏற்றுச் செயற்பட்ட – ஆதரவளித்த மக்களுக்கு அளிக்கப்படும் துரோகமாகும்; குற்றமாகும். 

அந்தக் குற்றத்துக்குரிய தண்டனையை நீதிமன்றங்கள் வழங்காது விடலாம். மக்கள் வழங்குவார்கள். வரலாறு வழங்கும். அதுதான் அரசியல் விதியாகும். வரலாறு முழுவதும் இப்படித்தான் நடந்துள்ளது. வரலாற்றிற்கு வெளியே எதுவுமே இல்லை. அப்படி ஒன்று புதிதாக அமையுமானால், அதுவும் வரலாற்றுடன் இணைந்து கொள்ளும். 

https://arangamnews.com/?p=11990

உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும்

2 months ago

உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும்

Veeragathy Thanabalasingham

on April 29, 2025

GoWHSxkXgAAIzsY.jpeg?resize=1200%2C550&s

Photo, @anuradisanayake

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்னமும் எட்டு தினங்கள் இருக்கின்றன. ஏழு மாதகால இடைவெளியில் மூன்றாவது தேர்தலை எதிர்கொள்வதனால் போலும் மக்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தைக் காணமுடியவில்லை.

கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களை விடவும் குறைவான தொகையினரே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார்கள். உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளக்கூடிய சாத்தியமே இருக்கிறது. மக்களின் மனநிலைக்கு அப்பால் நாடடின் தற்போதைய மிகவும் கடுமையான வெப்பநிலையும் கூட இதற்கு பெருமளவில் பங்களிப்புச் செய்யக்கூடும்.

ஆளும் தேசிய மக்கள் சக்தி மிகுந்த உத்வேகத்துடன் அதன் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தங்களுக்குப் பெற்றுத் தந்ததைப் போன்று உள்ளூராட்சி தேர்தல்களிலும் பெருவெற்றியைத் தரவேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அரசாங்கத் தலைவர்களும் நாட்டு மக்களைக் கேட்கிறார்கள்.

தென்னிலங்கை எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, கடந்த வருடத்தைய இரு தேசியத் தேர்தல்களிலும் அடைந்த தோல்வி, உள்முரண்பாடுகள் மற்றும் கட்சிக் கட்டமைப்புகளின் குறைபாடுகள்  காரணமாக அவற்றின் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரங்களை தலைமைதாங்கி முன்னெடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அதன் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்ததில் இருந்து அந்தக் கட்சியின் இன்றைய பரிதாபமான நிலையைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேயவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்ற ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவர்கள் நாட்டில் மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடி தோன்றும் என்றும் ரணில் விக்கிரமசிங்க மீணடும் ஜனாதிபதியாக ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் கதையளந்து கொண்டிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தனியொரு உறுப்பினராக இருந்துகொண்டு ஜனாதிபதியாக வந்த சூழ்நிலையைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் போன்று ஒருவிதமான மருட்சிக்கு இவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் குறைபாடுகளைப் பற்றி பேசுவதைத் தவிர, தேர்தல் பிரசாரங்களில் மக்களுக்கு முன்னால் சென்று கூறுவதற்கு உருப்படியாக எதுவும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ராஜபக்‌ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற மற்றைய எதிர்க்கட்சிகளைப் பற்றி பேசாமல் விடுவதே நல்லது.

எதிர்க்கட்சிகள் இத்தகையதொரு குழப்பமான நிலையில் இருப்பது ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பாக இருக்கின்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும், நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றி சிறிதேனும் சிந்திக்காமல் அள்ளிவீசிய எண்ணற்ற வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றமும் விரக்தியும் உள்ளூராட்சி தேர்தல்களில் கணிசமானளவுக்கு பிரதிபலிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.

புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அதன் அரசாங்கத்தின் கீழ் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலில் முன்னெடுக்கின்ற பிரசாரங்களை நோக்கும்போது அதில் முன்னைய அரசாங்கங்கள் நடந்துகொண்ட முறையில் இருந்து எந்த விதமான வேறுபாட்டையும் காணமுடியாமல் இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கிறது; மேலும் நான்கு இலட்சம் குடும்பங்களைச் சேர்த்து அஸ்வேசும சமூக நலன்புரித்திட்டம் விரிவாக்கப்படும் என்று ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளித்திருக்கிறார்; ஏற்கனவே ஊழியர்களால் நிரம்பி வழியும் அரசாங்க சேவைக்கு மேலும் 35 ஆயிரம் பேரைச் சேர்க்கப்போவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.

முன்னைய அரசாங்கங்கள் தேர்தல் காலங்களில் மேற்கொண்ட இத்தகைய அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தாங்கள் மிகவும் கடுமையாகக்  கண்டனம் செய்ததை ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர்கள் சுலபமாக மறந்து விட்டார்கள் போலும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மற்றைய அரசியல் கட்சிகளின் நிருவாகத்தின் கீழ் வரக்கூடிய உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளைச் செய்வது குறித்து அரசாங்கத் தலைவர்கள் அதுவும் குறிப்பாக ஜனாதிபதி திசாநாயக்க விடுத்திருக்கும் அச்சுறுத்தல் மிகவும் பாரதூரமான ஒரு சட்டமீறலாகும்.

தேசிய மக்கள் சக்தியின்  நிருவாகத்தில் இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கான  நிதித் தேவைகள் தாமதிக்கப்படும் அல்லது அந்தச் சபைகளினால் முன்வைக்கப்படும் நிதிக் கோரிக்கைகள் ஒன்றுக்கு பத்து தடவைகள் நுணுக்கமாகப் பரிசீலிக்கப்படும் என்று கூறிய ஜனாதிபதி திசாநாயக்க ஆளும் கட்சியின் நிருவாகத்தின் கீழ் வரக்கூடிய உள்ளூராட்சி சபைகளின் நிதிக் கோரிக்கைகளை அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனாதிபதியின் இந்தப் பேச்சு உள்ளூராட்சித் தேர்தல் ஒழுங்கு விதிகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருக்கும் எதிரணி அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்பு சிவில் அமைப்புக்களும் இதுவரையில் எட்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவ்வாறு ஜனாதிபதி பேசியதாக சுட்டிக் காட்டியிருக்கின்றன. ஆனால், அவற்றின் முறைப்பாடு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியான நடவடிக்கையை எடுப்பதில் உண்மையான அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

இதனிடையே, முன்னைய இரு தேசிய தேர்தல்களிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் இருக்கும் நிலையில் ஜனாதிபதி திசாநாயக்க தற்போது தேர்தல் பிரசாரங்களில் மேலும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்.

கடந்த வருடம் தேர்தல் பிரசாரங்களின்போது ஜனாதிபதி திசாநாயக்க பொருளாதார இடர்பாடுகளைத் தணிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முழு நாட்டு மக்களுக்கும் அளித்த வாக்குறுதிக்குப் புறம்பாக, இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பொதுமக்களின் காணிகள் திருப்பி கையளிக்கப்படுவதுடன் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்துச் செய்யப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தார். அவரின் கடந்த ஏழு மாதகால ஆட்சியில் அந்த வாக்குறுதிகளுக்கு நேர்ந்திருக்கும் கதி என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.

தையிட்டி விகாரை பிரச்சினை

இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் சர்ச்சைக்குரியதாக விளங்கும் தையிட்டி பௌத்த விகாரை பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் கூறிய யோசனை அந்தப் பிரச்சினையை அவர் ஒழுங்கான முறையில் கையாளுவதற்கு அவர் தயாராக இல்லை என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது.

தையிட்டி விகாரை பிரச்சினையைப் பயன்படுத்தி வடக்கிலும் தெற்கிலும் முன்னெடுக்கப்படும் இனவாத அரசியலை சம்பந்தப்பட்டவர்கள் கைவிட்டால், அந்த விகாரையின் பௌத்த மதகுரு அந்தப் பகுதி காணிகளின் உரிமையாளர்களுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்று வடக்கிற்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த திசாநாயக்க கூறினார்.

மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அந்த விகாரையை அகற்றக்கோரி போராட்டம் நடத்துகின்ற தமிழ் அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் நிலைப்பாட்டையும் அதே விகாரையை அகற்றக்கூடாது என்று தென்னிலங்கையில் குரலெழுப்பும் கடும்போக்கு தேசியவாத சக்திகளின் நிலைப்பாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஜனாதிபதி முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இரு நிலைப்பாடுகளையும் சமாந்தரமான இனவாதம் என்று அவர் அடையாளப்படுத்துவது உண்மையில் தவறு.

தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராடும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் அதை இடிக்க வேண்டும் என்று அண்மைக் காலங்களில் மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசினார்கள். அவ்வாறாக விகாரையை இடிப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு விபரீதமான முயற்சியினாலும் ஏற்படக்கூடிய பாரதூரமான  விளைவுகளில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்கக்கூடிய எந்த ஆற்றலும் இல்லாத தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற பேச்சுக்களை வட பகுதி மக்களே வெறுத்தார்கள். அது வேறு விடயம்.

ஆனால், கடந்தகால ஆட்சியாளர்களைப் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஆட்சியாளராக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி தமிழ்ப் பகுதிகளின் கலாச்சார தனித்துவத்தையும் குடிப்பரம்பலையும் மாற்றியமைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இனவாத, மதவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் தன்னை வேறுபட்டவராகக் காட்டிக்கொள்ள முன்வந்திருக்க வேண்டும்.

தையிட்டி விகாரை தங்களது ஆட்சிக் காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டு அதேவேளை முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுவிட்ட அந்த விகாரையை அகற்றுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறியிருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்களிடம் வருத்தத்தை தெரிவிப்பதுடன் அவர்களுக்கு மாற்றுக் காணிகளும் இழப்பீடும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனிமேல் தமிழ்ப் பகுதிகளில் சட்டவிரோதமாக பௌத்த விகாரைகளோ அல்லது வேறு மதத்தலங்களோ நிருமாணிக்கப்படுவதற்கு தனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி கூறியிருந்தால் அவர் உரத்துப் பேசும் புதிய அரசியல் கலாசாரத்துக்கு ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யக்கூடிய அரசியல் துணிச்சல் அவரிடம் இருக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்ததைப் போன்று வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிக்கக்கூடிய சாத்தியம் பெரும்பாலும் இருக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கடந்த ஏழு மாதகாலமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகளை வடக்கில் மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நிச்சயமாக பிரதிபலிக்கும் என்று  எதிர்பார்க்கலாம்.

இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு இனிமேல் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அரசாங்கத் தலைவர்கள் செய்துவரும் பிரகடனங்கள் மாத்திரம் நாட்டில் இனவாதத்தை ஒழித்துவிடப்போவதில்லை. கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இனவாத அரசியல் தோற்றுவித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் அரசியல் துணிச்சலை வெளிக்காட்ட வேண்டியது முக்கியமானதாகும். இனவாதத்தின் கைதிகளாக இருக்கும் நிலையில் இருந்து ஜனாதிபதியும் அரசாங்கத் தலைவர்களும் விடுபட வேண்டும். அத்தடன், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட காரணத்தினால்தான் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவில் வாக்களித்தார்கள் என்ற மருட்சியில் இருந்தும் அதன் தலைவர்கள் விடுபட வேண்டும்.

இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகள் அவற்றின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வதற்கு பெரும் போராட்டத்தை நடத்தும் ஒரு களமாக உள்ளூராட்சி தேர்தல்கள் மாறியிருக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு யானையைப் பார்த்த குருடர்கள் போன்று தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொரு காரணத்தைக் கூறினாலும் கூட, உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 16 வருடகாலத்தில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சமகால நிலைவரம் வேண்டி நிற்பதற்கு இசைவாக அடுத்த கட்டத்துக்கு நடைமுறைச் சாத்தியமான வழியில் நகர்த்துவதற்கு தவறியதே அந்த மக்களின் அதிருப்திக்குப் பிரதான காரணமாகும். தங்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்ட வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்பினார்கள் என்பதை சில தமிழ்த் தலைவர்கள் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்கள்.

இன்று சகல தமிழ்க் கட்சிகளுமே தேசிய மக்கள் சக்தியை ‘பொது அரசியல் எதிரியாகக்’ கருதி அதற்கு எதிராக தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்றன. ஆனால், அந்தப் பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்பட்டு ஓரணியில் நிற்பதற்கு அவற்றின் தலைவர்கள் தயாராக இல்லை. தமிழ்த் தேசியவாதத்தின் இருப்பை உறுதி செய்யவும் தேசியவாத உணர்வை தமிழ் மக்கள் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கவும் உள்ளூராட்சி தேர்தல்களில் தங்களுக்கே தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்கிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஒருபோதுமே நேர்மறையான கொள்கையையோ அல்லது அணுகுமுறையையோ கடைப்பிடிக்காத ஒரு தேசிய (தென்னிலங்கை) கட்சிக்கு வாக்களிப்பதில் இருந்து தமிழ் மக்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற பிரயத்தனங்கள் இன்றைய தமிழ்த் தேசியவாத அரசியல் தலைவர்களின் தோல்வியை அல்லவா அம்பலப்படுத்துகிறது?

தமிழ்க்கட்சிகள் அல்லது கூட்டணிகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்ற அதேவேளை, எதிர்காலத்தில் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆதிக்கம்  செலுத்துவதுவதற்கான  ஒரு ஆளுமைப் போட்டிக் களமாகவும் அவர்கள் இந்தத் தேர்தலை நோக்குகிறார்கள் என்பதை பிரசாரங்கள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்கின்ற அதேவேளை தங்களது கட்சிக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்றும் மறுபுறத்தில் அவர்கள் கூறுகிறார்கள்.

சகல சமூகங்களையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் சமத்துவமாக நோக்குவதே தங்களது கொள்கை என்று கூறுகின்ற ஜே.வி.பியின் தலைவர்கள் அதிகாரப்பரவலாக்கல் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் என்பது வரலாறு. அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கின் தமிழ்ப் பகுதிகளில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றினால், தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல் மூலமாகத் தீர்வொனறைக் காண்பதற்கு தமிழ் மக்கள் நடத்திவந்த நீண்டகாலப் போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த கோட்பாட்டுக்கு பெரிய பின்னடைவு ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை ஏற்கெனவே ஒரு தடவை சுட்டிக்காட்டியிருந்தோம்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை அதிகாரப்பரவலாக்கத்துக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முயற்சித்தார்களே தவிர, அந்த மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அரசியல் தீர்வைக் காண்பதிலோ அல்லது அதற்கான உகந்த சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கு தென்னிலங்கை பெரும்பானமையின மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதிலோ அக்கறை காட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தங்களது பல தசாப்தகாலப் போராட்டத்தின் அரசியல் நியாயப்பாட்டை மலினப்படுத்தக்கூடிய முறையில் உள்ளூராட்சி தேர்தல்களில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்தக்கூடாது. அதேவேளை, கற்பனாவாத சுலோகங்களில் தங்கியிருக்கும் பழையபோக்கை  மாற்றி, சமகால நிலைவரத்துக்கு ஏற்ற முறையில் தமிழ்க் கட்சிகள் தங்களை தகவமைத்துக் கொள்வதில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்பது முக்கியமான ஒரு கேள்வி.

தமிழ்த் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்வதற்கு உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் கேட்கும் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பெரும் எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து எதுவும் பேசுவதில்லை.

சொந்த மண்ணைக் காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு புலம்பெயர வேண்டாம் என்று எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததாக நாம் அறியவில்லை. அவர்களில் பலர் தங்களது குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வசதியாக குடியமர்த்திவிட்டே  தீவிரமாக தமிழ்த் தேசியவாதம் பேசுகிறார்கள்.

இலங்கையில் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாகாணமாக விளங்கும் வட மாகாணம் மிகவும் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்டதாக இருக்கிறது. வடக்கில் ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 131 பேர்தான் வாழ்கிறார்கள் என்று 2021 குடிசன மதிப்பீடு கூறுகிறது. மக்கள் இல்லாத மண்ணில் செய்யக்கூடிய அரசியலின் இலட்சணம் எத்தகையதாக இருக்கப் போகிறது?

சொந்த மண்ணில் தொடர்ந்தும் வாழ்ந்தால் தங்களுக்கும் தங்களது சந்ததிகளுக்கும் நல்ல எதிர்காலம் ஒன்று இருக்கும் என்ற வலுவான நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய நடைமுறைச் சாத்தியமான -விவேகமான அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது குறித்து தமிழ் அரசியல்வாதிகள் இனிமேலாவது சிந்திக்க வேண்டும். அதைச் செய்யத்தவறினால், ஏற்படக்கூடிய ஆபத்து தெளிவாகத் தெரிகிறது.

போரின் முடிவுக்குப் பின்னரான இன்றைய காலப்பகுதியில் நிலைவரங்கள் பெருமளவுக்கு மாறிவிட்டன என்பதை தமிழ்க் கட்சிகள் உணராத பட்சத்தில், உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை மாத்திரமல்ல, சகல தென்னிலங்கை கட்சிகளையும் நிராகரித்து தமிழ்க்கட்சிகளை மீண்டும் ஆதரிப்பதன் மூலம் ஆரோக்கியமான மாற்றம் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து  எழுகின்ற சந்தேகம் நியாயமானதே.

Thanabalasingam-e1742967550320.jpg?resizவீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12054

உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம்

2 months ago

உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம்

May 2, 2025 11:09 am

உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம்

‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’ என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது.

சூது காவலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்கு இவை அனைத்தும் துணைபோயின.

இவ்வாறு சூதுகவ்விய இரு துருவ, ஒரு துருவ காலத்தைத் தாண்டி பல்துருவ உலக ஒழுங்குக்குள் பயணிக்கப்போகின்ற தற்காலமும் எதிர்காலமும் ஈழத்தமிழர் தேசத்துக்குத் தர்ம வெற்றியை ஈட்டித் தர வேண்டுமானால் சிங்கள இடதுசாரிகளில் தங்கியிராத ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமும் பலமும் வாய்ந்த சமவுடைமை  மக்கள் இயக்கம் வடக்கு கிழக்கில் கட்டியெழுப்பப்படவேண்டும்.

Screenshot-2025-05-02-110853.jpg

இதுவரை காலமும் இலங்கைத் தீவுக்குள் வளர்வதும் தேய்வதுமாயிருந்த மார்க்சிய, கம்யூனிச, சமவுடைமைப் போக்குகள் தென் இலங்கைப் பேரினவாதத்துக்குப் பலிக்கடா ஆக்கப்பட்டது வரலாறு.

இதற்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களின் வரலாறே சாட்சி.

பேரினவாதச் சிந்தனை முன்போல இலங்கைத் தீவில் தற்போது இல்லை என்ற வாதத்தைப் போலித்தனமாகப் பலர் முன்வைத்துவருகிறார்கள். பலர் அதை நம்பியும் வருகிறார்கள்.

இதற்கான சூழலை இலங்கைத் தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதாரச் சிக்கல் உருவாக்கி விட்டது என்று ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் தாமாகவே நம்புவதும் அல்லது அவர்கள் அவ்வாறு நம்பவைக்கப்படுவதம் இறுதியில் ஈழத்தமிழர்கள் தம்மைத் தாமே ஏமாற்றுவதற்கும் ஏமாற்றப்படுவதற்குமே வழி கோலும்.

2022 இல் டைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2022 இல் இடம்பெற்ற காலிமுகத் திடல் போராட்டத்துடன் அமைப்பு மாற்றம் (System Change) என்ற கோசத்தில் தென்னிலங்கையில் நடந்திருப்பது என்னவென்றால், பேரினவாதத்துக்குத் தேவையான புதிய உலக ஒழுங்கைக் கையாளும் அரச கட்டுக்கோப்பு (Body Politic) உருவாக்கப்பட்டுள்ளமையே அன்றி வேறொன்றுமல்ல.

புவிசார் அரசியல் (Geopolitics) என்ற சொல்லை 1916 இல் அறிமுகப்படுத்திய சுவீடன் நாட்டு அரசறிவியலாளரும் புவியியலாளருமான யுகான் ருடோல்ப் செல்லேன் என்ற அறிஞர் உயிரியல் அரசியல் (Biopolitics) என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தியவர்.

புவிசார் அரசியலைக் கையாள்வதற்கு வேண்டிய உயிரியல் அரசியலை சிங்கள தேசம் தன்னகத்தே கொண்டுள்ளது. காலத்துக்கேற்ப உலக அரசியலைக் கையாளும் நோக்கோடு தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும் அது தீவுக்குள் அமைப்பு மாற்றம் ஊழல் எதிர்ப்பு போன்ற வேறு விதமான வெளிப்படுத்தல்களை அவ்வப்போது சூழலுக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளும்.

தென் இலங்கைப் பேரினவாதத்தின் உயிரியல் அரசியலையும் புவிசார் அரசியலையும் அரச கட்டுக்கோப்பையும் ஒரு சேர விளங்கிக்கொள்ளும் தன்மை ஈழத்தமிழர் தேசத்தினருக்கு அவசியம் தேவையானது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஏற்படுத்தவுள்ள தாக்கம் தென் இலங்கையுடன் ஈழத்தமிழர்கள் சேர்ந்து பயணிக்க முடியும் என்ற செய்தியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமையக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

தமிழர்கள் தென் இலங்கையுடன் சேர்ந்து வாழ முடியும் என்ற செய்தியை சர்வதேசத்துக்குச் சொல்ல கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட உத்திகளின் தொடர்ச்சிதான் இது. புதிதல்ல.

494643845_1268998574596369_7170440639995

ஆனாலும் தென் இலங்கைப் பேரினவாத சக்திகள் போலிச் சோஷலிசத்தை மார்க்சியவாதிகள் போல உள்வைத்து, தாராண்மைவாத மேற்குலகோடு ஒத்தியங்கும் மேலங்கியைப் போர்த்தி உலக அரசியலைக் கையாளத் தேவையான அரச கட்டுக்கோப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தான் தற்போது அனுரகுமார ஜனாதிபதி ஆகியுள்ளதற்கான விஞ்ஞான விளக்கம்.

அவ்வப்போது உண்மையான முற்போக்குவாதிகளாகத் தென்பட்ட சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்களில் பெருமளவினர் பேரினவாதத்துக்குப் பலியாகிவந்துள்ள வரலாறு தருகின்ற படிப்பினை என்னவென்றால், தென்னிலங்கை இடதுசாரியத்திலும் முற்போக்குத் தனத்திலும் தங்கியிராத தனித்துவத்தோடு ஈழத்தமிழருக்கான புரட்சிகர மக்கள் இயக்கம் ஜனநாயக வழியில் கட்டமைக்கப்படவேண்டும் என்பதாகும்.

அ.நிக்ஸன்

https://oruvan.com/colombos-strategy-for-manipulating-the-world-political-order-the-need-for-a-peoples-movement/

நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?

2 months ago

நீலமானின் மாயப்பொதிகள்

நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதியானது (அரசமைப்பு திருத்த வரைபுகள்) பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000 முறையே), பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப, கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அஃது முதன் முதலில் ஓகஸ்ட் 3 1995 அன்று சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவால் முன்மொழியப்பட்டது. (முன்மொழிவு)

எவ்வாறெயினும் இது தனது மெய்யான முன்மொழியப்பட்ட மிளிர்வில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான தீர்வுகளை எல்லாம் இழந்துதான் முழுமையடையாத வரைவுச் சட்டம் 1996 ஜனவரி 16 அன்று சிங்கள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்காக வெளியிடப்பட்டது.

பின்னர் நாடாளுமன்றத்திற்கு போன போது, மார்ச் 1997ம் ஆண்டு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் வடிகட்டல்களின் இறுதி அறிக்கை நிலுவையில் இருந்த நிலையில், சிறிலங்கா அதன் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு வரைவை வெளியிட்டது. பின்னர் ஒக்டோபர் 1997 அன்று முழுமையடைந்த வரைபு வெளியானது. 7 ஓகஸ்ட் 2000ம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இறுதித் தீர்வுப் பொதியானது (நீலன் சாக்கொல்லப்பட்ட பின்னர் வந்தது) அரைகுறையான ஒன்றாகும். அதையும் கூட சிங்களம் நிறைவேற்றவில்லை. மட்டுமின்றி சந்திரிக்காவின் முதன்மை அமைச்சரான ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதிலுள்ள ஒவ்வொரு வரியையும் மகாநாயக்க தேரர்களின் கருத்திற்குட்படுத்தியே செய்வோம் என்றார், 13 ஓகஸ்ட் 2000ம் ஆண்டு அன்று.

இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் "சமச்சீரான சமஸ்டி" என்ற நன்மை பயக்கக்கூடிய இதனது மூல வடிவம் என்றுமே தமிழரின் நிகராளிகளாக இருந்த விடுதலைப்புலிகளிடம் அலுவல்சாராக கையளிக்கப்படவில்லை. வெறும் நாளேட்டு செய்திகளாகவும் வாய்மொழி அறிவிப்புகளாகவுமே வெளியாகின. அவற்றையும் புலிகளும் தம் போக்கிற்கு அலுவல்சார் ஊடக வெளியீடுகள் மூலம் மறுதலித்தனர். ஆயினும் போர் நிறுத்தத்தை சிங்கள அரசு செய்தால் தொடர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை அப்போதே தெரிவித்துவிட்டனர்.

புலிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டதெனில்; குறிப்பாக இப்பொதிகளின் வரிசையில் முதல் பொதியின் அறிவிப்பு அலுவல்சாராக (official) வெளியாக முன்னரே சந்திரிக்கா மாமியை அப்போதைய சிங்கள அஸ்கிரிய பீடாதிபதி சிறி சந்தானந்த மகாநாயக்க தேரர் சந்தித்தார். அவர் இப்பொதியின் அலுவல்சார் அறிவிப்பினை வெளியிட முன்னர் விடுதலைப்புலிகளை தோற்கடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சந்திரிக்கா மாமியும் புலிகளை படைய நடவடிக்கை மூலம் "மண்டியிட" செய்த பின்னரே இத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்! இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் இதனை "படைய வடிவமைப்புகளை மறைக்க ஒரு அரசியல் முகமூடி" என்று 14 ஓகஸ்ட் 1995இல் அழைத்தனர். (இத்தகவல் அவர்களின் ஊடக வெளியீட்டில் உள்ளது).

(1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்தவொரு முன்மொழிவும் அரசாங்கம், பிரதான சிங்கள எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று முக்கிய கன்னைகளின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பீரிஸ் தெரிவித்தார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு புலிகள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பயங்கரவாத அமைப்பாக சாற்றாணைப் படுத்தப்பட்டதால் அதனுடன் எந்தவிதமான நடவடிக்கைகளும் குற்றமென வரையறைப்படுத்தப்பட்டு விட்டதாலும் இந்தப் பொதியை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியது.)

முன்மொழிவை புலிகளின் மதியுரைஞரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தொடக்க கட்டத்தில், 1995 ஓகஸ்ட் 11, மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். பின்னாளில் ,மார்ச் 13, 2003 ஆம் ஆண்டு,வணிகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் வழங்குகையில் இவ்வரைபின் "தொடக்க வடிவம்" ஏற்கக்கூடியது என்றார் (உதயன் 13/03/2003 பக் - I). அப்போது கூறியதாவது:

…..1995 ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம் அரசமைப்புத் திருத்த வரைபு ஒன்றை சமர்ப்பித்தார். அது சரியான வரைபு. அது ஏற்கக்கூடியது. ஆனால் பின்னர் 2000 ஆம் ஆன்டு அந்த வரைபின் அடிப்படையில் சந்திரிக்க ஒரு திருத்த வரைபை சமர்ப்பித்தார். அந்த வரைபு நீலன் திருச்செல்வத்தின் வரைபின் ஒரு அரைகுறையான ஒரு தொகுதியாகும். …….."

உந்த மூலப் பொதி நாடாளுமன்றத்தில் அதன் மிளிர்வான வடிவத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் எப்படியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய கூறுகளை நீக்கியிருக்கும் (1997ம் ஆண்டு செய்தது போன்றே). அதையும் தாண்டினால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளை பெற்றால்தான் மக்களிடம் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும். சிங்கள மக்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது செல்லுபடியாகும். இதெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் விடையங்களாகும்.

மேலும், இதில் தனி இனக்குழுவான முஸ்லிம்களின் தனியான வகிபாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. தமிழரோடு ஒன்றிணைந்த தீர்வொன்றிற்கு முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (ஜெனிவா பேச்சுவார்த்தையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்). தமக்கான தனி அலகு ஒன்றை எப்படியும் கேட்டிருப்பார்கள். அந்த விடயம் தொடர்பில் இத்தீர்வில் எதுவும் குறிக்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால், எந்த நீலனின் செல்வாக்கால் அரசமைப்பு திருத்த வரைபு கொண்டுவரப்பட்டதோ அதே நீலன் உயிருடன் இருக்கையில் அவர் கண்முன்னே தான் சில மாதங்களிலேயே அந்த அரசமைப்பு திருத்த வரைபு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைலாயம் கண்டவுடன் அது குப்பையில் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் உண்மையிலேயே தமிழருக்கு நன்மை செய்ய விரும்பியிருப்பின் தான் வரைந்ததை முற்றாக நிறைவேற்ற பாடாவது பட்டிருக்க வேண்டும். மாறாக அதை வைத்து சிங்களவர் ஏலுமான வழிகளில் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட மறைமுக ஆதரவு நல்கினார்.

அடுத்து, இதை வைத்து ஜி.எல். பீரிஸ் மற்றும் கதிர்காமர் ஆடிய திரு விளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்:

இந்தத் தீர்வுப் பொதியின் மிளிர்வான வடிவம் 1995ம் ஆண்டு வெளியானதும் கதிர்காமர் நாடு நாடாக சென்று தவறுத்தகவல் (disinformation) பரப்புரையில் ஈடுபட்டார். வெளிநாடுகளில் இருந்த தவிபு இன் வெளிநாட்டுக்கிளை அலுவலகங்களை மூட வைக்குமாறு அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்: புலிகளை தடை செய்யவும் கோரிக்கை விடுத்தார். தானொரு தமிழர் என்றும் சிங்கள அரசாங்கம் தமிழரிற்கான தீர்வினைக் கொண்டுவரப் போவதாகவும் எனவே இனிமேல் புலிகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்தார். தமக்கு அமைதிக்கான முறைமை ஒன்றைக் கொண்டுவர போர் வேண்டுமென்றும் புலிகளுடனான நெடுங்கால போரிற்கு தேவையான போர்த்தளவாடங்களை வழங்குமாறும் கோரிக்கைகளை விடுத்தார்.

அதே நேரம் சிங்கள ஊடகங்களும் போர் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன.

இவ்வாறு கதிர்காமர் ஆயுத திரட்டலிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இங்கால் பீரிஸோ (இதை தயாரித்தவர்களில் ஒருவர்) இந்த தீர்வுப் பொதியை பின்னடிக்க வைக்கும் தந்திரங்களை முன்னெடுத்தார். இப்பொதிக்கு ஒற்றையாட்சி சிறிலங்காவிற்குள் சிறுபான்மையினரின் கட்சிகள் அரசிற்கு ஆதரவு கொடுக்க பீரிஸோ அதை ஏலுமானவரை பிற்போடச்செய்ய எத்தனித்தார். குறிப்பாக 1999ம் ஆண்டில் இவர் எதிர்க்கட்சியான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பொதி முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிளிர்விழந்துவிட்ட தீர்வுப் பொதி வெளிவருவதற்கான கால அமையத்தை இவர் மேலும் நீடிக்கச் செய்தார்.

இவ்வாறாக தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க கொண்டுவரப்பட்ட இம்மாயப் பொதியை தோற்றுவித்த "கோழைத்தனமன வன்முறையாளரான" 😉 (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999, எஸ்.கே. ரத்தினம்) நீலன் திருச்செல்வம் என்பவர் இறுதிவரை எந்தவொரு நன்மையையும் தமிழருக்கு பெற்றுத்தவில்லை. மாறாக பொதி மூலம் சிங்களப் படைத்துறைக்கு போர்த்தளபாடங்கள் பெற்றுக்கொடுத்தலையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தாக்காட்டுதல் மூலம் சிங்களப் படைதுறைக்கு போதிய கால அமையம் வழங்கல் என்ற அரசியலையுமே தனது காலத்தில் செய்தார். மேலும் நேரடியில்லாமல் புலிகளின் படிமத்திற்கு உலக அரங்கில் சேறு பூசுவதில் பங்காற்றினார்.

நிறைவேறும் அச்சட்டத்தை புலிகள் ஏற்காமல் மறுக்க வெளிக்கிடும் போது அரசாங்கம் ஏற்கனவே மேலை நாடுகளில் செய்து கொண்டிருந்த இத்தீர்வு தொடர்பான பரப்புரையால் (இத்தீர்வு வெற்றுக் காகிதம் ஆகிய பின்னரும் மூல வரைபை காட்டியே கதிர்காமர் பரப்புரை மேற்கொண்டார்) ஆட்கொள்ளப்படும் நாடுகள் புலிகளுக்கு தடைவிதித்தும் சிங்கள அரசிற்கு போர்த்தளவாட உதவிகளை செய்தும் (அதைத்தான் கதிர்காமர் நாடு நாடாக சென்று கேட்டார்) புலிகளை அழிக்க துணை நிற்கும்.

அதாவது அரசு கொடுக்கும் "விடியல் தீர்வை" கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுக்கின்றனர் என்ற பரப்புரையை உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளும் வழியை உண்டாக்கிக்கொண்டிருந்தார்!

புலிகள் படைய வகையில் வலுவாக எழும்பிவிட்டிருந்த போது இத்தீர்வு முற்றாகவே நீர்த்து போயிருந்தது. உப்பச்சப்பில்லாத பயனற்ற ஒன்றைத்தான் எமக்கு தீர்வெனத் தர சிங்களவர் முன்வந்தனர். எனவே தான் அது நிறைவேறும் முன்னர் நீர்த்துப்போன இம்மாயத் தீர்விற்கு காரண கர்த்தாவாக தொடர்ந்தும் உழைத்துக்கொண்டிருந்த நீலனை புலிகள் அகற்றினர்.

இவர் சிங்களவர் வெற்றுச் சட்டம் ஆக்கிய பின்னராவது அதிலிருந்து பின்வாங்கி மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தி எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. மாறாக அவ்வெற்றுச் சட்டத்திற்கு சாகும்வரை ஆதரவு கொடுத்து விடுதலைப் போரை நீர்த்துப் போகச்செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். அதனால் தான் இவர் செத்தவுடன் தமிழர் தரப்பு கண்டுகொள்ளாததும், சிங்களவர் நீலிக்கண்ணீர் வடித்ததும் குறிப்பிடத்தக்கது.

வாழ்ந்த வரை சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் வேலையையே செய்து வந்தார். இவரது "செல்வாக்கான" என்ற காலத்திலேயே, 1996, யாழில் 812 தமிழர்கள் காணாமல் போயும் தீவெங்கும் பல்லாயிரம் தமிழர் கொத்துக்கொத்தாக செத்தொழிந்த போதும் வாயே திறக்காத இந்த நீலமானின் சாவால் தமிழராகிய நாங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. அதற்கு இவரது இழவு வீட்டிற்கும் தமிழர் பெருமெடுப்பில் செல்லவில்லை என்பதுவே சிறந்த சான்று.

மேலும், இவரது சாவிற்கு கூறப்படும் இன்னுமொரு காரணம்; இவர் அமெரிக்கவிற்கு ஏதோ ஒரு தேவைக்காக பயணப் பட காத்திருந்தாராம், 1999 ஓகஸ்ட்/ செப். அது பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றுகைக்கானது என்று கூறப்படுகிறது, அதே நேரம் இவர் நேரில் சென்று புலிகளுக்கு எதிரான செய்ய வேண்டிய பரப்புரையே அப்பயணத்தின் மெய்யான நோக்கம் என்றும் மறுத்துக் கூறப்படுகிறது.

மொத்தத்தில் திரு. லக்ஸ்மன் குணசேகர என்ற சிங்களவர் கூறியது போன்று "தமிழரின் கண்களில் நீலன் சிங்களவருடன் சேர்ந்த ஒரு 'உடனுழைப்பாளர்' " (Collaborator) ஆவார் (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999) . அவர்களிடமிருந்து நல்லவன் என்ற பெயரை மட்டும் உழைத்துக்கொண்டார். உலகெங்கிலும் உடனுழைப்பாளர்கள் அவரது சொந்த இனத்தாலேயேதான் கைலாயம் அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு!

பாவிக்கப்பட்ட முதன்மை உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு: 

நன்னிச் சோழன்

பண்டாரநாயக்கவும் செல்வநாயகமும் 1957 ஆம் ஆண்டில் பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் ஏன், எவ்வாறு கைச்சாத்திட்டார்கள்?

2 months ago

29 APR, 2025 | 09:47 AM

image

டி.பி.எஸ்  ஜெயராஜ் 

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை (எஸ். ஜே.வி.)  செல்வநாயகத்தின் 48 வது நினைவுதினம் ஏப்ரில் 26 ஆம் திகதி வந்துபோனது. தந்தை  செல்வா என்று அறியப்பட்ட செல்வநாயகம் இலங்கை தமிழரசு கட்சியை 1949 டிசம்பரில் வேறு தலைவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின்  தமிழர்களின் பிரதான அரசியல் கடசி என்று கருதப்படும்  தமிழரசு கட்சி தற்போது அதன் வைரவிழாவைக் கண்டிருக்கிறது.

செல்வநாயகம் சிங்கள பெரும்பான்மையின மேலாதிக்கத்துக்கு எதிரான தமிழ் அரசியல் எதிர்ப்பியக்கத்தை  பல வருடங்களாக முன்னெடுத்தார். அவர் தனது அரசியல் அணுகுமுறையில் போராட்டமும் பேச்சுவார்த்தையும் கலந்த தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்தார். தமிழரசு கட்சி ஒருபுறத்தில், பல்வேறு அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுத்த அதேவேளை, மறுபுறத்தில் சந்தர்ப்பம் வாய்க்கின்ற வேளைகளில் எல்லாம் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார். 

WhatsApp_Image_2025-04-29_at_8.18.50_AM_

 பண்டா - செல்வா ஒப்பந்தம்  என்று பொதுவாக அறியப்பட்ட இணக்கப்பாட்டில்  கைச்சாத்திட்டது  செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினால் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளில் ஒன்று. அது அதிகாரப்பகிர்வு கோட்பாட்டின் அடிப்படையில் அன்றைய பிரதமர் சொலமன் வெஸ்ற் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமாகும்.

பாரிய ஆற்றலைக் கொண்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்  நடைமுறைப் படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. அதன் ஆயுள் மிகவும் குறுகியதாகவே இருந்தது. இந்த பின்புலத்தில், இந்த கட்டுரை எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் பண்டா -  செல்வா ஒப்பந்தம்  68 வருடங்களுக்கு முன்னர் ஏன், எவ்வாறே கைச்சாத்திடப்பட்டது என்பதில் கவனம் செலுத்துகிறது.

ஆழமான துருவமயம் 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 1956 பொதுத்தேர்தல் சிங்கள சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையில் ஆழமான துருவமயமாதலை கொண்டுவந்தது. எஸ். டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ( மஹாஜன எக்சத் பெரமுன ) என்ற கூட்டணி சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிலங்கையின் ஏழு மாகாணங்களிலும் பெருவெற்றி பெற்றது. சமஷ்டி கட்சி என்றும் அழைக்கப்படுகின்ற தமிழரசு கட்சி வடமாகாணத்தில் ஒன்பது ஆசனங்களில் ஆறு ஆசனங்களையும் கிழக்கு மாகாணத்தில் ஏழு ஆசனங்களில் நான்கு ஆசனங்களையும்  கைப்பற்றியது.

சிங்களத்தை மாத்திரம் உத்தியோகபூர்வ மொழியாக்கியது புதிய அரசாங்கம் முதல் செய்த காரியங்களில் ஒன்று. அதை எதிர்த்து கொழும்பு காலிமுகத்திடலில் அமைதிவழியில் போராட்டம் நடத்திய சத்தியாக்கிரகிகளை குண்டர்கள் கொடூரமாகத் தாக்கியபோது அதை தடுக்காமல் பொலிசார் பார்த்துக்கொண்டு நின்றனர். நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்முறை மூண்டது. ஜூன் 15 தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் 56 -- 29 வாக்குகளால் நிறைவேறியது. 

தமிழரசு கட்சி அதன் மகாநாட்டை திருகோணமலையில் 1956 ஆகஸ்ட் 17 -- 19 நடத்தியபோது நாட்டில் பெரும் பதற்றம் நிலவியது.  அந்த மகாநாட்டில் பின்வரும்  நான்கு அடிப்படைக் கோரிக்கைகளை உள்ளடக்கியதாக ஒரு தீர்மானம் ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டது.

1) சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலான இலங்கைக்குள் மொழிவழியான சுயாட்சி கொண்ட  தமிழ் மாநிலம் அல்லது மாநிலங்களை நிறுவுதல்.

2) நாட்டின் ஒரு உத்தியோகபூர்வ மொழியாக சிங்களத்துடன் சமத்துவமானதாக தமிழ் மொழிக்கு உரித்தான அந்தஸ்தை நிலைநாட்டுதல். 

3) தற்போதைய குடியுரிமைச் சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலமாக பெருந்தோட்ட மாவட்டங்களில் உள்ள தமிழ்த் தொழிலாளர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் மீளப்பெறுதல் ; 

4) பாரம்பரியமாக தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்ற பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றும் சகல கொள்கைகளையும் உடனடியாக இல்லாமல் செய்தல்.

இந்த கோரிக்கைகளுக்கு சாதகமான முறையில் பதிலளிப்பதற்கு அரசாங்கத்துக்கு ஒரு வருடகால அவகாசத்தை வழங்குவது என்று மகாநாட்டு தீர்மானத்தில் கூறப்பட்டது. அரசாங்கத்திடம் இருந்து பதில் கிடைக்காத பட்சத்தில் ' நேரடி நடவடிக்கையாக ' அகிம்சைவழிப் போராட்ட இயக்கத்தை தமிழரசு கட்சி ஆரம்பிக்கவிருந்தது.  1957 ஆகஸ்ட் 20 வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.

வாகன இலக்கத் தகடுகளில்  'சிங்கள ஸ்ரீ ' எழுத்து தொடர்பான சர்ச்சையுடன் 1957 ஆம் ஆண்டு பிறந்தது. நாட்டின் சிலோன் (CEYLON ) என்ற பெயரில் இருந்து ஆங்கில எழுத்துக்களை  ( CE, CL, CN,EY, EN ) வாகன இலக்கத் தகடுகளில் பயன்படுத்துவதே முன்னைய நடைமுறையாக இருந்தது. புதிய அரசாங்கம் வாகன இலக்கங்கள் சிங்கள ஸ்ரீ யுடன் தொடங்க வேண்டும் என்று விரும்பியது. அதை சிங்களத் திணிப்பின் ஒரு வடிவம் என்று ஆட்சேபித்த  தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் ஸ்ரீ எழுத்தும்  இடம்பெறவேண்டும் என்று கோரிக்கை  விடுத்தனர். ஆனால்,  தமிழ் எழுத்துக்களில் ஸ்ரீ கிடையாது. தமிழில் பயன்படுத்தப்படும் ஸ்ரீ சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. 

ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் 

தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கில் ஜனவரி 16 ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் ஒன்றைத் தொடங்கியது.  இலக்கத் தகடுகளில் தமிழ் எழுத்துக்களுடன் வாகனங்கள் ஓடத் தொடங்கின. சிங்கள ஸ்ரீ சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்த ஸ்ரீ யினால் பதிலீடு  செய்யப்பட்டது. இலங்கையின் சதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை தமிழரசு கட்சி கரிநாளாக அனுஷ்டித்தது. ஹர்த்தால் வடக்கு,  கிழக்கில் வழமை வாழ்வை ஸ்தம்பிக்க வைத்தது. திருகோணமலையில் மணிக்கூண்டுக் கோபுரத்தில் கறுப்புக்கொடி ஒன்றைக் கட்டுவதற்கு ஏறிய நடராஜா என்ற தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கு,  கிழக்கில் நடைபெற்ற போராட்டங்களுக்கு எதிர்ப்போராட்டம் ஒன்று சிங்களப் பெரும்பான்மை மாகாணங்களில் தொடங்கியது. வீதிச் சமிக்ஞைகளிலும் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் எழுத்துக்களுக்கு தார் பூசப்பட்டது. சிறிய அளவிலான  இனமுறுகல் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றன. 'உத்தியோகபூர்வ' நோக்கங்களுக்காக  வடக்கு,  கிழக்கிற்கு விஜயம் செய்யும் அரசாங்க அமைச்சர்களையும் பிரதி அமைச்சர்களையும் பகிஷ்கரிக்குமாறும் தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அமைச்சர்கள் வருகைதரவிருந்த இடங்களில் சத்தியாக்கிரகிகள் குழுமிநின்று அவர்களின் நடமாட்டங்களுக்கு இடையூறு செய்தனர்.

இனப்பதற்றம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் , நாடு பெரும் இரத்தக்களரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது போன்று தோன்றியது. இலங்கையின் சகல பிரதமர்கள் மத்தியிலும் மிகுந்த புத்திஜீவி என்று கூறக்கூடிய எஸ்.டபிள்யூ. ஆர்.டி. நிலைவரத்தைக் கட்டுப்படுத்தி மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டார்.

தமிழ் மக்களின் மெய்யான மனக்குறைகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்து கொணடார். 1926 ஆம் ஆண்டில் சமஷ்டி முறையை ஆதரித்த பண்டாரநாயக்கவுக்கு  பயனுறுதியுடைய அதிகாரப்பகிர்வே ஒரே தீர்வு என்று தெரிந்தது. பிராந்திய சபைகளை (Regional Councils ) அமைப்பதன் மூலமாக விரிவான அதிகாரப் பன்முகப்படுத்தலுக்கான யோசனையை அவர் முன்வைத்தார்.

பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் ஒரு விளைவாக பிராந்திய சபைகள் திட்டம் பண்டாரநாயக்கவினால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றே பரவலாக நம்பப்படுகிறது. உண்மையில், பிராந்திய சபைகளுக்கான  சட்ட நகல் வரைவு ஒன்று 1957 மே 17  ஆம் திகதி வெளியிடப்பட்டது. பண்டா - செல்வா ஒப்பந்தம்  பிறகு ஜூலையிலேயே வந்தது. பிராந்திய சபைகள் சட்டமூலத்தை சமர்ப்பித்த பிறகு தமிழ்த் தலைவர்களுடன் புரிந்துணர்வு ஒன்றுக்கு வந்து அதை மேலும் மாற்றியமைக்க எஸ். டபிள்யூ. ஆர்.டி. விரும்பினார்.

சந்திப்புக்கான யோசனை 

அதேவேளை, தமிழரசு கட்சி ஆகஸ்ட் 20 ஆரம்பிப்பதற்கு திடடமிட்டிருந்த ' நேரடிப் போராட்ட '  இயக்கத்தை முன்னெடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அதற்கென்று 25,000 தொண்டர்கள் பதிவு செய்யப்பட்டனர்.  தமிழர்களின் போராட்ட இயக்கத்தை முறியடிக்க ஒரு இலட்சம் தொண்டர்களை அணிதிரட்டும் முயற்சி ஒன்றை சில சிங்களத் தலைவர்கள் தொடங்கினர். பெரிய பலப்பரீட்சை ஒன்று மூளுவதை தடுக்கமுடியாமல் போகலாம் என்று தோன்றியது. அப்போதுதான் நிதான புத்தி வந்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி.க்கும் எஸ்.ஜே.வி.க்கும் இடையில் சந்திப்புக்கு யோசனை முன்வைக்கப்பட்டது. அது பிரதமரின் சொந்த முயற்சியாகவே முன்னெடுக்கப்பட்டது.

இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை இரு தமிழ் வழக்கறிஞர்களான பி. நவரத்தினராஜா கியூ.சி.யும் ஏ.சி. நடராஜாவும் ஏற்பாடு செய்தனர். நவரத்தினராஜா எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யினதும் எஸ்.ஜே.வி.யினதும் ஒரு  தனிப்பட்ட நண்பர். நடராஜா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு  துணைத் தலைவர். இந்த பேச்சுவார்த்தையை ஊக்கப்படுத்துவதில் அரசாங்கத் தரப்பில் இருந்து அன்றைய நிதியமைச்சர் ஸ்ரான்லி டி சொய்சா மிகவும் மெச்சத்தக்க ஒரு பாத்திரத்தை வகித்தார்.

முதலாவது சந்திப்பு 

முதலாவது சந்திப்பு ஹொரகொல்லையில் உள்ள பிரதமரின் வாசஸ்தலத்தில் 1957 ஜூன் 22 ஆம் திகதி இடம்பெற்றது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. தானாகவே செல்வநாயகத்தின் காருக்கு அண்மையாக வந்து அவர் அதிலிருந்து இறங்கிவர உதவினார்.

இருவருமே அன்றைய நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை புரிந்துகொண்டனர் போன்று தெரிந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பில் அரசாங்கத் தரப்பில் இருந்து எஸ்.டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவும் ஸ்ரான்லி டி சொய்சாவும் தமிழரசு கட்சி தரப்பில் இருந்து எஸ். ஜே.வி. செல்வநாயகம், சி. வன்னியசிங்கம், என்.ஆர். இராஜவரோதயம், வீ.ஏ  கந்தையா, ஈ.எம்.வி. நாகநாதன், வி. நவரத்தினம் ஆகியோரும் மத்தியஸ்தராக  நவரத்தினராஜாவும் பங்கேற்றனர்.

முதலாவது சந்திப்பு மிகவும் சுமுகமான சூழ்நிலையில் இடம்பெற்றது. சிங்களம் உத்தியோகபூர்வ மொழியாக நடைமுறையில் வருவதற்கு பல வருடங்கள் செல்லும் என்று கூறியதன் மூலம் தமிழர்களின் அச்சத்தை தணிக்க எஸ்.டபிள்யூ. ஆர்.டி. முயற்சித்தார். பண்டாரநாயக்கவின் நிலைப்பாட்டை தமிழரசு கட்சி வரவேற்றது என்ற போதிலும், தமிழ் மொழியின் அந்தஸ்து தொடர்பில் இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அதை் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. ஒத்துக்கொண்டார்.

அதிகாரப்பகிர்வு விடயம் பரிசீலனைக்கு வந்தபோது சமஷ்டி அரசு ஒன்றுக்கான அதன் கோரிக்கையை தமிழரசு கட்சி முன்வைத்தது. சமஷ்டி முறையே சிறந்த தீர்வு என்று எஸ்.டபிள்யூ. ஆர்.டி. 1926 ஆம் ஆண்டில் முன்வைத்த கருத்தே சமஷ்டிக் கோரிக்கையை தமிழரசு கட்சி முன்வைப்பதற்கு உந்துதலாக இருந்தது என்று அதன் தலைவர்கள் சுட்டிக் காட்டினர். ஆனால், தான்  சமஷ்டி முறைக்காக அன்று குரல்கொடுத்த போதிலும்  பிறகு தனது மனதை மாற்றிக் கொண்டதாக எஸ்.டபிள்யூ. ஆர்.டி பதிலளித்தார். 

தவிரவும், சமஷ்டி முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஆணை தனக்கு கிடையாது என்றும் எஸ். டபிள்யூ. ஆர்.டி. கூறினார். தமிழர்களின் மனக்குறைகளுக்கு பரிகாரம் காண்பதற்கும் அவர்களது அபிலாசைகளை  நிறைவேற்றுவதற்கும் சமஷ்டி முறைக்கு குறைவான ஒரு மாற்றுத் தீர்வு குறித்து தமிழரசு கட்சியினால் சிந்திக்க முடியாதா என்று அவர் கேட்டார். பிரதமரின் நிலைமையை புரிந்துகொண்ட தமிழரசு கட்சி சமஷ்டித் தீர்வொன்றை வலியுறுத்தாமல் இருப்பதற்கு இணங்கிக் கொண்டது.

சமஷ்டிச் சுயாட்சி ' ( Federal autonomy )  இல்லாமல் ' பெருமளவு பன்முகப்படுத்தலை  ' (Massive decentralisation ) விதந்துரைக்கும் மாற்று யோசனைகளை தமிழரசு கட்சி முன்வைக்க வேண்டும் என்று அப்போது பிரதமர் யோசனை கூறினார். தமிழரசு கட்சியின் தலைவர்கள் அதற்கு இணங்கியவாறு அந்த சந்திப்பை முடித்துக் கொண்டனர். 

சட்டக்கல்லூரியின் முன்னாள் அதிபர் பிரிட்டோ முத்துநாயகத்துடனும் செல்வநாயகத்தின் மருமகன் அல்பிரட்  ஜெயரத்தினம் வில்சனுடனும்  தமிழரசு கட்சி ஆலோசனை நடத்தியது. அப்போது பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த வில்சன் பிறகு பேராதனை மற்றும் கனடாவின் நியூ புரூன்ஸ்விக் பல்கலைக் கழகங்களின் அரசியல் விஞ்ஞான பீடங்களின் தலைவராக பதவி வகித்தார். 

வட அயர்லாந்து 

இலங்கை பின்பற்றுவதற்கு பிரிட்டனில் வட அயர்லாந்துக்கு இருந்த அந்தஸ்து சிறந்த ஒரு முன்மாதிரி என்று பிரிட்டோ முத்துநாயகம் கருதினார் என்பது கவனிக்கத்தக்கது.  வட அயர்லாந்து பாராளுமன்றம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு கீழ்நிலையானது. ஆனால், சமஷ்டி முறைக்கு ஒப்பான பெருமளவு அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது.

வட அயர்லாந்து அரசியலமைப்புச் சடடத்தின் பிரதி ஒன்று சட்டக்கல்லூரி அதிபரினால் தமிழரசு கட்சிக்கு கொடுக்கப்பட்டது.  வில்சன் சமஷ்டி அமைப்பு முறையைக் கொண்ட பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளின் பிரதிகளை வழங்கினார்.

கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி. வன்னியசிங்கமும் தமிழரசு கட்சியின் செயலாளரான வி. நவரத்தினமும் மாற்றுத்திட்டம் ஒன்றை வரைவதில் ஈடுபட்டார்கள். மூன்று நாட்களில் அந்த பணியை நிறைவுசெய்த தமிழரசு கட்சியின் தலைவர்கள் நவரத்தினராஜா ஊடாக எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் பரிசீலனைக்கு வரைவை சமர்ப்பித்தார்கள். அல்ஸ்டர் வகை  மாதிரியின்  (Ulster model) செல்வாக்கு அந்த வரைவில் பெருமளவுக்கு பிரதிபலித்தது.

ஒரு சபையைக் கொண்ட (Unicameral legislature ) பாராளுமன்றத்தையும்  அமைச்சரவையையும் கொண்டதாக  கீழ்நிலைப்பட்ட   (Subordinate state )  வடக்கு கிழக்கு மாநிலம் அமையும். வெளிவிவகாரம், பாதுகாப்பு, நாணயம், முத்திரைகள், சுங்கம், பிராந்தியங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆகியவை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட நிதியை மாநிலங்களுக்கும் உள்ளூராட்சிகளுக்கும் (Block grants ) மத்திய அரசு வழங்கும் அதேவேளை உள்ளூர் வரியறவீடு வருவாய்க்கு  உதவக்கூடியதாக இருக்கும். மாநிலத்தின் பொறுப்பில் பொலிஸ் இருக்கும்.  தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக  மாநிலம் கொழும்பில் பிரதிநிதித்துவம் செய்யப்படும். தமிழ் விவகாரங்களுக்கு என்று மத்திய அமைச்சரவையில் அமைச்சர் ஒருவர் இருப்பார்.

இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள்

இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் கொழும்பு றொஸ்மீட் பிளேஸில் உள்ள எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அதில்  செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், நவரத்தினம் ஆகியோர் தமிழரசு கட்சியின் சார்பில் கலந்துகொண்டனர்.  யோசனைகள் சாராம்சத்தில் சமஷ்டி முறைக்கு ஒத்ததாக இருந்ததாக பண்டாரநாயக்க சுட்டிக் காட்டினார். நிருவாக பன்முகப்படுத்தலை வலியுறுத்தும் வகையில் திட்டத்தை தனித்தனி சுருக்கக்குறிப்பாக தருமாறு பண்டாரநாயக்க யோசனை கூறினார். அத்துடன்  'பாராளுமன்றம்', 'அமைச்சரவை' என்ற சொற்கள் ஒரு தனிஅரசை குறிப்பவை போன்று இருப்பதாக அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.

தமிழரசு கட்சி திரும்பிச் சென்று சுருக்க குறிப்புகளாக யோசனைகளை அமைத்து ஆவணத்தை மீளாய்வு  செய்தது. பிராந்திய சபைகள் கோட்பாடு பண்டாரநாயக்காவின் மூளையில் உதித்தவை என்பதால் தமிழரசு கட்சி ' பாராளுமன்றம் ' என்பதை ' பிராந்திய சபையினால் ' பதிலீடு செய்தது.  அமைச்சரவைக்கு (Cabinet )  பதிலாக பணிப்பாளர்கள் சபை (Board of directors) என்று குறிப்பிடப்பட்டது. மூலமுதல் யோசனைகளின் சாராம்சம் பெருமளவுக்கு உள்ளபடியே விடப்பட்டது.

அதற்கு பிறகு ஸ்ரான்லி டி சொய்சா, நவரத்தினரராஜா மற்றும்  தமிழரசு கட்சியின் தலைவர்களுக்கு இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவற்றில் பிரதமர் பங்குபற்றவில்லை. ஆனால், தனது பிரதிநிதியான ஸ்ரான்லி டி சொய்சா ஊடாக பல மாற்றங்களை முன்வைத்தார்.

மூலமுதல் யோசனைகளில் இருந்து ஓரளவுக்கு அவை தளர்த்தப்பட்ட போதிலும், அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு தமிழரசு கட்சியை இணங்கவைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், ஒரு விடயத்தில் தமிழரசு கட்சி உறுதியாக இருந்தது.வடக்கும் கிழக்கும் ஒரே தனியான பிராந்திய சபையாக அமையவேண்டும் என்று அது விரும்பியது. வடக்கு  தனியான அலகாக இருப்பதற்கு அனுமதிக்கத் தயாராக இருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டி. கிழக்கு இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான அலகுகளுடன் தனியானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

தமிழரசு கட்சியின் ' தங்கமூளை ' என்று வர்ணிக்கப்பட்ட அதன் மதியூகி வி. நவரத்தினம் இந்த விவகாரத்தில் மிகவும் விடாப்பிடியானவராக இருந்தார். இறுதியில் ஏ.சி. நடராஜா நவரத்தினத்தை இணங்க வைத்து விட்டுக்கொடுப்பு ஏற்பாடு  ஒன்றுக்கு வழிவகுத்தார்.  வடக்கும் கிழக்கும் தனித்தனியான சபைகளாக இருக்கும் அதேவேளை அவை விரும்பினால் இணைந்து கொள்ளலாம் என்பதே அந்த ஏற்பாடாகும்.

ஜூலை 25 - 26 இறுதிச் சந்திப்பு 

இறுதியும் தீர்க்கமானதுமான சந்திப்பு பழைய செனட் கட்டிடத்தில் அமைந்திருந்த பிரதமரின் அலவலகத்தில் 1957 ஜூூல 25 ஆம் திகதி இடம்பெற்றது. அதில் பல கபினெட் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழரசு கட்சியின் பல தலைவர்களும் பங்கேற்றனர். ' அனுசரணையாளரான ' நவரத்தினராஜாவும் பிரசன்னமாகியிருந்தார். பேச்சுவார்த்தைகள் இரவு 7 மணிக்கு தொடங்கின.

உத்தியோகபூர்வ மொழி என்ற வகையில் சிங்களத்தின் அந்தஸ்து குறைக்கப்படக்கூடாது என்று அமைச்சர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். நீண்ட கலந்தாலோசனைக்கு பிறகு வில்லியம் சில்வா தமிழை தேசிய சிறுபான்மைச் சமூகங்களின் மொழி என்று அங்கீகரிக்க வேண்டும் என்ற சமரச ஏற்பாட்டை முன்வைத்தார். வடக்கிலும் கிழக்கிலும் நிருவாக மொழியாகவும் தமிழ் இருக்கும்.

அலகு சம்பந்தப்பட விவகாரத்தில் வடக்கு ஒரு சபையாக இருக்கும் அதேவேளை  கிழக்கு ஒன்று அல்லது அதற்கும் கூடுதலான அலகுகளாக பிரிக்கப்பட வேண்டும் என்ற பிரதமரின் நிலைப்பாட்டுக்கு தமிழரசு கட்சி இணக்கம் தெரிவித்தது. சபைகள் விரும்பினால், மாகாண எல்லைகளையும் கடந்து இணைந்துகொள்ள முடியும். அவசியமானால், நடைமுறையில் இருந்த எல்லைகளை மீளவரையலாம்.

பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்களைப் பொறுத்தவரை, பிலிப் குணவர்தனவுடன் சேர்ந்து பல அமைச்சர்கள் தங்களது அதிகாரங்களை விட்டுக் கொடுக்க மறுத்தார்கள். அமைச்சர்கள் இந்த விவகாரத்தை ஆராய்ந்து கொண்டிருக்க தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் வேறு ஒரு அறைக்கு சென்று காத்திருந்தார்கள். இறுதியில் அமைச்சர்கள் தங்களது அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு இணக்கினார்கள்.

குடியேற்றங்களை நிறுத்துவதற்கு தயாராக இருந்த பிரதமர் காணி குடியேற்ற நடைமுறைகள் தொடர்பில் தமிழரசு கட்சியுடன் திருப்திகரமான ஏற்பாடொன்றுக்கு இணங்கிக் கொண்டார்.  குடியுரிமைப் பிரச்சினையை தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி தீர்த்து வைப்பதாக  பண்டாரநாயக்க கூறினார். அந்த பிரச்சினையை தமிழரசு கட்சி அவ்வாறே விட்டுவிட வேண்டும் என்றும் பிரதமர் யோசனை கூறினார்.  அதற்கு தமிழரசு கட்சி இணக்கியது.

அந்த வேளையில் நேரம் நள்ளிரவைக் கடந்து 1957 ஜூலை 26 அதிகாலை பிறந்துவிட்டது. எட்டப்பட்ட இணக்கப்பாட்டை  ஜூலை 26 அதிகாலை 2 மணிக்கு நவரத்தினம்  தனித்தனி சுருக்கக் குறிப்புகளாக வாசித்தார். இரு தரப்பினரும்  முறைப்படி இணங்கிக் கொண்டனர்.

மிகவும் பரபரப்பான செய்திக்காக காத்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் அதிகாலை 2.30 மணிக்கு  அமைச்சரவை அறைக்கு அழைக்கப்பட்டனர். கமராக்களின் வெளிச்சத்தில் பண்டாரநாயக்கா மிகவும் கண்ணியமான முறையில் " எனது அருமை நண்பர்களே, உங்களை நித்திரையின்றி காத்திருக்க வைத்ததற்காக வருந்துகிறேன். ஆனால், இது உங்களுக்கும் எங்களுக்கும் நாட்டுக்கும்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இரவு " என்று மன்னிப்புக் கோரினார்.

"உடன்படிக்கைக்கு வந்திருக்கிறோம் "

றஞ்சி ஹண்டி அப்போது ஒரு லேக் ஹவுஸ் பத்திரிகையாளர்.  பின்னாளில் அவர் திருமதி மைத்திரிபால சேனநாயக்கவாக மாறினார்.  கட்டுப்படுத்த முடியாதவரான அவர் "  முடிவுகளை எங்களுக்கு சொல்லுங்கள் "  என்று உரத்துக் கத்தினார். அப்போது ஸ்ரான்லி டி சொய்சா " நாம் இணக்கப்பாடு  ஒன்றை எட்டியிருக்கிறோம் " என்று அறிவித்தார்.

பிறகு எஸ்.ஜே.வி.யை  திரும்பிப் பார்த்தவாறு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. " செல்வநாயகம் நீங்கள் கூறுவதைக் கேட்க அவர்கள் விரும்புகிறார்கள் "  என்று கூறினார். இணக்கப்பாடு  ஒன்று எட்டப்பட்டிருக்கிறது, அதன் விபரங்கள் பிரதமரினால் வெளியிடப்படும் என்று செல்வநாயகம் கூறினார். பத்திரிகைகள் அச்சுக்கு போவதற்கான காலஅவகாசம் இன்னமும் இருக்கிறதா என்று பத்திரிகையாளர்களிடம் பண்டாரநாயக்க கேட்டார். அப்போது லேக் ஹவுஸ் பத்திரிகையாளரான ஜோ சிகேரா மிகுந்த உற்சாகத்துடன் " தாமதித்து பத்திரிகைகளை அச்சிடுவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எமக்கு உடனபடிக்கையின் முழு விபரங்களும் வேண்டும்" என்று கூறினார். வி.நவரத்தினத்தின் குறிப்புகளில் இருந்து பண்டாரநாயக்க விபரங்களை வாசித்தார்.

நீங்கள் திருப்தி அடைந்திருக்கிறீர்களா என்று தமிழரசு கட்சியின் தலைவர்களைப்  பார்த்து பத்திரிகையாளர்கள் கேட்டனர்.  நாகநாதன், வன்னியசிங்கம், இராஜவரோதயம்,  அமிர்தலிங்கம் ஆகியோர் 'ஆம் ' என்று பதிலளித்தனர். அப்போது செல்வநாயகம்  தமிழரசு கட்சி ஆகஸ்ட் 20  ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ' நேரடிப் போராட்ட ' இயக்கத்தைக் ஒத்திவைக்கும் என்று  கூறினார்.

காலையில் பத்திரிகைகள் வழமைக்கு மாறாக உடன்படிக்கையின் முழு விபரங்களுடன் வெளிவந்தன. மாலைப் பத்திரிகைகளும் வழமையை விடவும் முன்னதாக கூடுதல் விபரங்களைத் தாங்கி வெளிவந்தன.

ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்தாகவில்லை 

அந்த தருணத்தில் எந்த ஒப்பந்தமும்  பண்டாரநாயக்கவினாலோ அல்லது செல்வநாயகத்தினாலோ கைச்சாத்திடப்படவில்லை என்பது நம்புவதற்கு கஷ்டமான ஆனால் வேடிக்கையான ஒரு விடயமாக இருந்திருக்கலாம். பண்டா -- செல்வா ஒப்பந்தம் ஒன்று அங்கே இருக்கவில்லை. அது ஒரு கனவான் ஒப்பந்தத்தைப் போன்றது. நவரத்தினத்துடன் சேர்ந்து செல்வநாயகம் கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இணக்கப்பாடு  ஒன்று எட்டப்பட்டிருப்பதாக  எழுத்தில் உருப்படியாக ஒன்றும் இல்லை என்று நவரத்தினம் தான் சுட்டிக்காட்டினார். பத்திரிகை அறிக்கைகள் மாத்திரமே வந்திருக்கின்றன.

அப்போது நவரத்தினத்தை  சற்று ஓய்வெடுத்துவிட்டு காலையில் மிகுதி விடயங்களைை கவனிக்குமாறு செல்வநாயகம் கேட்டுக் கொண்டார். காலையில் நேரகாலத்தோடு எழுந்த நவரத்தினம் பண்டா -- செல்வா ஒப்பந்தம்  என்று பின்னர் அறியப்பட்ட இணக்கப்பாட்டின்  நிபந்தனைகள் மற்றும் பிரிவுகளை வரைந்து மூன்று பிரதிகளை எடுத்துக்கொண்டார். அது இரண்டு பாகங்களாக அமைந்தது. முதலாவது பாகம் பேச்சுவார்த்தைகளினதும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளினதும் சுருக்கமாக இருந்த அதேவேளை,  இரண்டாவது பாகம் உத்தேச பிராந்திய சபைகளின்  கட்டமைப்புகள், அதிகாரங்கள் மற்றும் உறுப்பாக்கங்கள் (Composition ) பற்றியதாக இருந்தது.

சொலமனும் சாமுவேலும் 

ஜூலை 26 நண்பகல் பிரதிகளை எடுத்துக்கொண்டு செல்வநாயகம் பிரதமரின் அலுவலகத்துக்கு சென்றார். அங்குதான் பழைய தோமியன்களான சொலமனும் சாமுவேலும் பண்டாரநாயக்க --  செல்வநாயகம் ஒப்பந்தம் என்று அறியப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இணக்கப்பாட்டை  அங்கீகரித்தார்கள். ஊடகங்களின் பரபரப்புகளுக்கு  அப்பால் மிகவும் அமைதியாக அது செய்யப்பட்டது. பண்டாரநாயக்கவிடமும் செல்வநாயகத்திடமும் ஒவ்வொரு பிரதிகள் இருந்தன.  அதன் ' வரைஞரான ' நவரத்தினம்  மூன்றாவது  பிரதியை தன்வசம் எடுத்துக் கொண்டார்.

பல வருடங்கள் கழித்து நவரத்தினம் தனது மகன் மோகனின் ரொறண்டோ  இல்லத்தில் இந்த கட்டுரையாளருடனான சம்பாஷணை ஒன்றின்போது தன்னிடமிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஒப்பந்தத்தின்  மூன்றாவது பிரதி இந்திய இராணுவத்தினர் வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்.) போராளிகளினால்  அழிக்கப்பட்ட சோகக் கதையைக் கூறினார். யாழ்ப்பாணத்தில் இருந்த நவரத்தினத்தின் வீட்டை அந்த போராளிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டபோது இது நடந்தது.

ஒப்பந்தத்தின்  சகல அம்சங்களும் தமிழரசு கட்சிக்கு திருப்தியைத் தரவில்லை, ஆனால் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறை உணர்வின் அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டது என்று பண்டா -- செல்வா ஒப்பந்தத்தின் பின்னால் இயக்குசக்தியாக விளங்கிய நவரத்தினம் என்னிடம் கூறினார். 1968 ஆம் ஆண்டில் தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து தமிழர் சுயாட்சிக் கழகத்தை தாபித்த அந்த முதுபெரும் தமிழ்த் தலைவர்  2006 ஆம் ஆண்டில் அவரது 97 வது வயதில் கனடாவின் மொண்ட்ரீயலில் காலமானார்.

 பின்னோக்கிப் பார்க்கும்போது, பண்டா -- செல்வா ஒப்பந்தம்  நாடு அதன் முழு ஆற்றல்களையும் வளங்களையும் பயன்படுத்தி முன்னேற வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டேயாக வேண்டும் என்பதை விளங்கிக்கொண்ட  இரு தலைவர்களினால் கைச்சாத்திடப்பட்ட ஒன்று என்று தோன்றுகிறது.  அதேவேளை நாட்டில் அதிகரித்துக் கொண்டிருந்த இனமோதல் சூழ்நிலையை  கட்டுப்படுத்துமுகமாக புரிந்துணர்வு ஒன்றுக்கு வரவேண்டிய அவசரமும் அவசியமும் உணரப்பட்டது. ஆனால், உடன்படிக்கை ஒருபோதுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கு பெருமளவு எதிர்ப்புகள் கிளம்பின.

எஸ்.டபிளயூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவினாலும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தினாலும் 1957 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் சுதந்திர இலங்கையின் அரசியல்  வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். அன்றைய பிரதமரும்  பெரிய தமிழக்கட்சியின் தலைவரும் கண்ட புரிந்துணர்வு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இனநெருக்கடியை  அதன் ஆரம்பக் கட்டங்களிலேயே கட்டுப்படுத்தி வைப்பதற்கு உதவியிருக்கக்கூடும்.

பண்டா - செல்வா ஒப்பந்தம் , தெற்கில் கிளம்பிய அரசியல் எதிர்ப்பு காரணமாக  செயற்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை.  சிங்கள பௌத்த மதகுருமார் மத்தியிலும் சாதாரண மக்கள் மத்தியிலும் கடும்போக்குடையவர்களிடமிருந்தும் அரசாங்கத்திற்குள்ளும் எதிரணிக்குள்ளும் இருந்த கடும்போக்கு சக்திகளிடமிருந்தும் ஒப்பந்தத்திற்கு  கடுமையான எதிர்ப்பு வந்தது.

தவறவிடப்பட்ட பொன்னான சந்தர்ப்பம் 

பண்டா -  செல்வா ஒப்பந்தம் தமிழ் தேசியப் பிரச்சினையை அதிகாரப் பரவல் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் இணக்கப்பாடு ஒன்றின் ஊடாக அதன் ஆரம்பக் கட்டங்களிலேயே தீர்த்துவைப்பதற்கு கிடைத்த ஒரு பொன்னான சந்தர்ப்பமாகும். ஆனால், அது ஒருபோதும் செயற்படவில்லை . செயற்பட அனுமதிக்கப்படவுமில்லை. இறுதியில் இனநெருக்கடி தீவிரமடைந்து போராக மாறி பல வருடங்களாக நாட்டில் இரத்த ஆறு ஓடிய  அனர்த்தத்துக்கே வழிவகுத்தது.

https://www.virakesari.lk/article/213218

கனடாவில் தேர்தல் - வாக்காளர்கள் டிரம்பின் வர்த்தக போரை கண்டிக்கும் பாதையை தெரிவு செய்கின்றார்கள்

2 months ago

Published By: RAJEEBAN

28 APR, 2025 | 04:40 PM

image

https://www.aljazeera.com/

கனடாவின் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க பிராச்சார மாற்றமொன்றின் மத்தியில் இன்று அந்த நாட்டு மக்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

ஜனவரி மாதத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் வெற்றியை நோக்கி பயணிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியிருந்தன.

எனினும் அதன் பின்னர் லிபரல் கட்சியினர் நிலைமையை தலைகீழாக மாற்றியுள்ளனர்.

canada_elec_2025.jpg

கடந்த சில வாரங்களில் வெளியான கருத்துக்கணிப்புகள் இரண்டு கட்சியினருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளன.

லிபரல் கட்சியினர் வெற்றி பெறப்போகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது என கனேடிய கருத்துக்கணிப்பு நிறுவனமான எகோஸ் ஆராய்ச்சியின்  தலைவரும் நிறுவனருமான பிராங் கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இது முற்றிலும் நினைத்துப்பாக்க முடியாததாகயிருந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இலையுதிர்காலத்தில் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே டிரம்ப் போன்ற ஒருவர் என கருதப்பட்டார். நீண்ட கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியின் கீழ் அதிகரித்த பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக மக்கள் ஆதரவு மிக்கவராக காணப்பட்டார்.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 6 ஆம் தேதி ட்ரூடோ பதவி விலகியபோது நிலைமை தலைகீழாக மாறியது. இது புதிய லிபரல் தலைமைக்கு வழி வகுத்தது. மேலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் நுழைந்தார், கனடாவின் பொருளாதாரத்தை வர்த்தகப் போரால் அச்சுறுத்தினார். திடீரென்று, கனடியர்கள் தங்கள் தேசிய அடையாளத்தைச் சுற்றியும், டிரம்பிசத்திற்கு எதிராகவும் ஒன்றுபட்டனர்.

ஊழல் நிறைந்த உயரடுக்கிடமிருந்து அதிகாரத்தை திரும்பப் பெற்று மக்களிடம் திருப்பித் தர வேண்டும் என்ற நம்பிக்கையான ஜனரஞ்சகவாதம், இங்கிலாந்தில் பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்கும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் தேர்தலுக்கும் வழிவகுத்தது. 

34 சதவீத கனடியர்கள் ஜனரஞ்சகக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர் என்று கண்டறியும் ஒரு ஆய்வறிக்கையை கிரேவ்ஸ் எழுதியுள்ளார். 

இந்தத் தேர்தலில். டிரம்ப் மீண்டும் பதவியேற்பதைப் பார்த்து கனடியர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டதாக கிரேவ்ஸ் கூறினார், "நாம் இந்த ஜனரஞ்சகப் பாதையில் செல்ல விரும்புகிறோமா?"

carney1.jpg

லிபரல்கள் வெற்றி பெற்றால், கனேடிய வாக்காளர்கள் டிரம்பிற்கு எதிராக நிற்கிறார்கள் என்று அர்த்தம் என்று அவர் தெரிவித்தார்"

இது நிச்சயமாக டிரம்பிற்கும், அவரது நிர்வாகத்தில் அவர்கள் காணும் மக்கள்தொகைக்கும் ஒரு கண்டனமாக இருக்கும்.

போட்டி  எப்படி மாறியது

அமெரிக்கத் தலைமையின் மாற்றம் அதன் அண்டை நாடான கனடாவில் வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பொய்லிவ்ரே சவாலற்ற பிரபலமாக காணப்பட்டார். 

கொரோனாவிற்கு பின்னர், மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் பதவியில் இருந்த தலைவர்கள், தொற்றுநோய் கட்டுப்பாடுகள், ஜூன் 2022 இல் 8.1 சதவீதத்தை எட்டிய பணவீக்கம், கட்டுப்படியாகாத வீட்டுவசதி மற்றும் அரசியல் துருவமுனைப்பு காரணமாக கடுமையான தேர்தல்களை எதிர்கொண்டனர். ட்ரூடோவும் இதற்கு விதிவிலக்கல்ல.

கனடாவில் பொய்லிவ்ரே டிரம்ப் போன்ற ஒரு நபராகக் காணப்பட்டார்; அமெரிக்காவை விட வாக்காளர்களில் ஒரு சிறிய பங்கைக் கொண்டிருந்த "வடக்கு மக்கள் தொகை"யை அவர் பயன்படுத்திக் கொண்டார், ஆனால் இன்னும் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக இருந்தார் என்று கிரேவ்ஸ் தெரிவித்தார்.

கனடாவின் கார்பன் வரி போன்ற அவரது செல்வாக்கற்ற கொள்கைகளை குறிவைத்து, பொய்லிவ்ரே ட்ரூடோவை தாக்கினார்.

நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென ராஜினாமா செய்தபோது ட்ரூடோவின் தலைமை குறித்த கேள்வி உச்சத்தை எட்டியது. 

ஒரு கடிதத்தில், வரவிருக்கும் டிரம்பின் "அமெரிக்கா முதலில்" பொருளாதார தேசியவாதம் மற்றும் அதிக வரிகளின் சவாலுக்கு ட்ரூடோ தயாராக இல்லை என்று கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் எழுதினார். 

pierree1.jpg

ட்ரூடோ ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இது லிபரல்களுக்கு தலைமைத்துவப் போட்டியைத் தூண்டியது.

கனடாவின் அரசியல் அமைப்பில், ட்ரூடோ பதவி விலகியது என்பது லிபரல்கள் இன்னும் அதிகாரத்தில் இருப்பதைக் குறிக்கிறது, ஆனால் இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட கட்சி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

கட்சி தலைமைப் போட்டியை நடத்தியபோது, டிரம்ப் பதவியில் நுழைந்து கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விரைவாக அறிவித்தார். அதே நேரத்தில், கனடா 51வது மாநிலமாக மாற வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கருத்து தெரிவித்தார்.

டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களுக்குள் லிபரல்களின் தலைமைப் போட்டி நடந்தது, மேலும் நிகழ்வுகளின் திருப்பம் கட்சியை "ட்ரூடோ அரசாங்கத்தின் செல்வாக்கற்ற தன்மைக்கு அப்பால் நகர்த்த உதவியது" என்று கால்கரி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் லிசா யங் கூறினார்.

கனடாவின் இறையாண்மை மற்றும் பொருளாதாரம் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், மார்ச் 9 அன்று லிபரல்கள் மார்க் கார்னியைத் தேர்ந்தெடுத்தனர், அவர் 2008 நிதி நெருக்கடியின் போது கனடா வங்கியின் ஆளுநராகவும், பிரெக்ஸிட் மற்றும் கொரோனாவின்  போது இங்கிலாந்து வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றிய பின்னர் பொருளாதாரத்தில் புத்திசாலி என்று கருதப்பட்டார்.

மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்னி, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட மிகக் குறுகிய தேர்தல் காலமான ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒரு திடீர் தேர்தலை அறிவித்ததன் மூலம் தனது புகழைப் பரப்பினார்.

கனடா டிரம்பின் வர்த்தகப் போரை எதிர்கொள்கிறது

டிரம்பின் திடீர் வரிகள் கனடாவின் பொருளாதாரத்தை நிச்சயமற்ற தன்மையில் ஆழ்த்தியுள்ளன. நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு செல்கின்றன, இதில் வாகன பாகங்கள், மரம் வெட்டுதல் விவசாய பொருட்கள் மற்றும் இரும்பு  ஆகியவை அடங்கும்.

"நாங்கள் அமெரிக்காவை மிகவும் நம்பியிருக்கிறோம்" என்று ஒன்ராறியோவில் உள்ள குயெல்ப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சில்வானஸ் குவாகு அஃபெசோர்க்போர் கூறினார். "கனடாவில் ஒரு பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும், ஏனெனில் நமது பொருளாதாரம் பெரும்பாலும் அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்துள்ளது.

மார்ச் மாதத்தில், கனடாவின் இரண்டாவது பெரிய இரும்பு உற்பத்தியாளரான அல்கோமா ஸ்டீல், டிரம்பின் வரிகளின் நேரடி விளைவாகதொழிலாளர்கள் பணி நீக்கத்தினை அறிவித்தது. 

ஒன்ராறியோவின் நெருக்கமான நகரமான சால்ட் ஸ்டீ மேரியில்இரும்பு ஆலை பிரதானமானது. மேலும் பணிநீக்கங்கள் சமூகம் முழுவதும் ஆழமாக உணரப்பட்டன. 

சால்ட் ஸ்டீ மேரி-அல்கோமா மாவட்டம் 2015 முதல் லிபரல்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இரும்பு தொழிற்சாலை எஃகுத் தொழிலாளர்களைப் போலவே, வரிகளால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள், வேலை இழப்பு ஏற்பட்டால் எந்தக் கட்சி சிறந்த பொருளாதார நிலைமையை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்பார்கள் என்று அஃபெசோர்க்போர் கூறினார்.

 "ட்ரம்ப் வரிகள் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், அதைத் தீர்க்க யார் சிறந்த நிலையில் இருப்பார்கள்?" என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு கட்சித் தலைவரும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் திறனை வாக்காளர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.

கனேடிய வாக்காளர்கள் பொருளாதாரத்தைப் பற்றி "அக்கறை கொண்டவர்கள்" என்றும், மந்தநிலையையும் டிரம்பின் வர்த்தகப் போரையும் கையாள முடியும் என்று அவர்கள் நம்பும் கட்சியைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அஃபெசோர்க்பர் கூறினார்.

வங்கித் துறையில் மார்க் கார்னியின் சாதனை காரணமாக வாக்காளர்கள் அவரை சிறந்த வேட்பாளராக உணரக்கூடும் என்றும் அவர் கூறினார். "அது தாராளவாதிகளுக்கான ஆதரவை நிறைய மாற்றியுள்ளது."

தாராளவாதிகள் முன்னிலை வகிக்கின்றனர்

கனடாவை நோக்கிய டிரம்பின் கொள்கைகள் வெறும் பொருளாதார தாக்கத்தை விட அதிகமாக இருந்தன. பல கனடியர்களுக்கு, இது அவர்களின் தேசிய அடையாளத்திற்கு அச்சுறுத்தலாக உணர்ந்தது.

டிரம்பின் வரி அறிவிப்புகளை அடிப்படையாக வைத்து அமெரிக்கா கனடாவை கைவிடுகின்றது என கனடா மக்கள் கருதினார்கள்.பின்னர் கனடாவை 51வது மாநிலமாக மாற்றுவது குறித்த ஜனாதிபதி டிரம்பின் கருத்துகளையும் நீங்கள் அதனுடன் சேர்க்கிறீர்கள். எனவே அது என் வாழ்நாளில் நான் பார்த்த எதையும் போலல்லாமல் கனேடிய தேசியவாதத்தின் அலையைத் தூண்டியது” என்று யங் அல் ஜசீராவிடம் கூறினார்.

போய்லீவ்ரேவுக்கு எதிர்பார்ப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை

“அது அடிப்படையில் அரசியல் ரீதியாக நிலப்பரப்பை மாற்றியுள்ளது ஏனென்றால் வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் ஜபோய்லீவ்ரேஸ டிரம்பைப் போலவே இருப்பதாக சந்தேகிக்கின்றனர்” என்று அவர் கூறினார்.

கிரேவ்ஸ் கருத்துக்கணிப்புகளில் "ஆழ்ந்த மாற்றத்தை" கண்டார். பிப்ரவரியில் தாராளவாதிகள் மற்றும் பழமைவாதிகள் அடிப்படையில் சமநிலையில் இருந்தனர் ஆனால் மார்ச் மாத தொடக்கத்தில் லிபரல்கள் ஐந்து ஆண்டு உச்சத்தை எட்டினர்

 கனடியர்கள் "டொனால்ட் டிரம்பிலிருந்து வரும் இந்த இருத்தலியல் அச்சுறுத்தலை நாங்கள் எவ்வாறு சமாளிப்பது?" என்று கேட்டனர்.

தேசியப் பெருமையின் எழுச்சி 

டிரம்ப் ஏற்படுத்திய கொந்தளிப்பின் மூலம் கனடாவை வழிநடத்தக்கூடிய வேட்பாளராகக் கருதப்பட்ட கார்னியை நோக்கி வாக்காளர்களைத் தள்ளியுள்ளது. " 

கனடிய வாக்காளர்கள் டிரம்பைக் கண்டிக்கத் தொடங்கினர்.

கணிக்கப்பட்டபடி தாராளவாதிகள் வெற்றி பெற்றால் டிரம்பிற்கு எதிராக கனடா தனது சொந்த பாதையை அமைத்துக் கொள்கிறது என்பதைக் குறிக்கும் என்று யங் கூறினார்.

https://www.virakesari.lk/article/213160

உள்ளூராட்சி சபைகள் யாருக்கு? நிலாந்தன்.

2 months ago

Questen.png?resize=750%2C375&ssl=1

உள்ளூராட்சி சபைகள் யாருக்கு? நிலாந்தன்.

நீண்ட இடைவெளிக்கு பின் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சிங்கள மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் விளைவாக கண்டிமா நகரை நோக்கி லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் குவிந்தார்கள். சன நெரிசலில் சிக்கி ஓர் இருதய நோயாளி இறக்க நேரிட்டது. பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருளுக்காக நின்ற மிக நீண்ட வரிசைகளுக்குப் பின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் வந்தார்கள். எதிர்பாராத இந்த ஜனத்தொகையினால் கண்டி மாநகரம் குப்பை மேடாகியது. நகரத்துக்குள் புதிதாக நுழையும் ஜாத்திரிகர்களை வரவேண்டாம் என்று கூறித் தடுத்து நிறுத்த வேண்டி ஏற்பட்டது. கண்டி மாநகரின் புவியியல் கொள்ளளவை மீறி யாத்திரிகர்கள் குவிந்தார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளையும் சுகாதார ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க மாநகர நிர்வாகத்தால் முடியவில்லை. இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் குப்பைகளை முழுமையாக அகற்ற முடியவில்லை.

எனது நண்பர் ஒருவர் சொன்னார், புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சாதாரண சிங்கள மக்களை அனுமதித்ததன்மூலம் சிங்கள பௌத்த கூட்டுணர்வை தன்னோடு வைத்துக் கொண்டிருக்க தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என்று. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இம்மாதம் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் உழைக்கின்றார்கள்.புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு மக்களை அனுமதித்தமை தேர்தல் உள்நோக்கங்களைக் கொண்டது என்று ஊகிக்கக்கூடியதாக உள்ளது என்றும் நண்பர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தியானது ஓர் ஆளுங்கட்சி என்ற அனுகூலங்களைப் பயன்படுத்தி, அரச வளங்களைப் பயன்படுத்தி அரச வைபவங்களை,பண்பாட்டு நிகழ்வுகளை தனது தேர்தல் பிரச்சாரக் களங்களாக திட்டமிட்டு மறைமுகமாகப் பயன்படுத்தி வருகிறது.

தென்னிலங்கையில் சிங்கள பௌத்த உணர்வுகளை ஒன்றுகுவித்து அதன் மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது. அதேசமயம் தமிழ்ப் பகுதிகளில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மையை அவர்கள் தங்களுக்குரிய பிரகாசமான வெற்றி வாய்ப்பாகக் கருதுகிறார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கியும் தமிழ் கட்சிகள் ஐக்கியப்படாத ஒரு பின்னணியில், தேசிய மக்கள் சக்தியானது தமிழ்ப் பகுதிகளில் உற்சாகமாக வேலை செய்கின்றது.பெரும் கூட்டங்களை ஒழுங்குப்படுத்தி தமிழ் மக்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் பெரிய கூட்டங்களை நடத்துவதற்கு நிதி இல்லையாம்.அதனால் அவர்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்களை மட்டும்தான் ஒழுங்குபடுத்தி வருகிறார்கள்.இது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் காணப்பட்ட ஒரு தோற்றப்பாடாகும். பெரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்தாவிட்டால் மக்கள் மத்தியில் நொதிப்பை ஏற்படுத்த முடியாது. அது தேசிய மக்கள் சக்திக்குத் தெரிந்திருக்கின்றது.

ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியில் தங்கி இருப்பவை.புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி பெரிய அளவில் கிடைக்கவில்லை என்றால் அவர்களால் பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாதா? புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதிப் பங்களிப்பு இல்லை என்றால் தாயகத்தில் கட்சிகளால் ஒரு கட்டத்துக்கு மேல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்பதைத்தான் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலும் பொது தேர்தலும் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் நமக்கு உணர்த்துகின்றனவா?

தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே ஒற்றுமைப்படா விட்டால் அல்லது குறைந்தபட்சம் பகை தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்றையாவது செய்திருந்திருந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் வாக்குகள் நான்குக்கு மேற்பட்ட தரப்புகளால் சிதறடிக்கப்படும் வாய்ப்புக்களைக் குறைத்திருக்கலாம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த பாடத்தின் அடிப்படையில் கற்றுக்கொண்டு தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே ஏதாவது ஒருங்கிணைப்புக்குப் போக வேண்டும் என்று பல்வேறு தரப்புகளும் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வலியுறுத்தியும் வந்தன. கடந்த பெப்ரவரி மாதம் ஐநா அதனுடைய 70ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தை யாழ். திண்ணை விடுதியில் கொண்டாடிய பொழுது அதில் சுமந்திரனும் வந்திருந்தார். அவர் என்னிடம் கேட்டார், அனுர அலை இப்பொழுது ஓய்ந்து விட்டதா? இல்லையா? என்று. நான் சொன்னேன், அது இப்பொழுது அனுர அலை மட்டும் அல்ல, ஆளுங்கட்சி அலை, அரசாங்க அலை. அரசாங்கம் என்ற அடிப்படையில் அரச வளங்களைப் பயன்படுத்தி அந்த அலையை அவர்கள் தட்டி எழுப்பலாம். எனவே அதை எதிர்கொள்வதற்கு தமிழ் தரப்பு ஏதாவது பகை தவிர்ப்பு உடன்படிக்கைக்கு போவதுதான் புத்திசாலித்தனமானது என்று. அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை. அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதே வைபவத்தில் மணிவண்ணனைக் கண்ட போதும் இந்த விடயத்தை நான் சொன்னேன். பகை தவிர்ப்பு உடன்படிக்கை தொடர்பாக அவர் அதிகமாகக் கேட்டறிந்தார்.அது அவசியம் என்பதனை அவர் உணர்ந்திருப்பதாகத் தெரிந்தது.ஆனால் துரதிஷ்டவசமாக அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. இதனால் யாழ்.மாநகர சபையில் ஏனைய கட்சிகளுக்கு ஒரு பெரிய போட்டியாளர் அகற்றப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு ஏதாவது ஒரு போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைக்கு போகுமாறு தமிழ்க் கட்சிகளுக்கு உரிய காலத்திலேயே கூறப்பட்டிருந்த போதிலும்,பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகள் அதனைக் கவனத்தில் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. அல்லது அதனை அவர்கள் தமது கட்சி நோக்கு நிலையில் இருந்தே அணுகினார்கள் என்று தெரிகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கி முதலில் ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது சங்குக் கூட்டணிதான். ஆனால் சந்திரகுமாரை உள்ளீர்த்த காரணத்தாலும் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து ரெலோ இயக்கம் வாக்களித்த காரணத்தினாலும் சங்குக் கூட்டணிக்குள் உடைவு ஏற்பட்டது. விளைவாக, இப்பொழுது சங்குக் கூட்டணி முன்னம் இருந்ததை விடவும் மெலிந்து போய் இருக்கிறது. எனினும் கிளிநொச்சியில் சந்திரகுமாருக்கு உள்ள வாக்குப் பலத்தை அவர்கள் அதிகம் நம்புவதாகத் தெரிகிறது.

தமிழரசுக் கட்சி கூட்டுக்குப் போகத் தயார் இல்லை.அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் சரியானவைகள் போல தோன்றலாம். ஆனால் யதார்த்தத்தில் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டி எழுப்ப அவர்கள் இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்பதுதான் உண்மை. தாங்கள் தனித்து நின்று வெல்லலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை காரணமாகத்தான் அவர்கள் ஐக்கிய முன்னணிகளை குறித்து அல்லது குறைந்தபட்சம் போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைகளைக் குறித்து தீவிரமாகச் சிந்திக்கவில்லை.

மூன்றாவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. கடந்த காலத்தில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் கற்றுக் கொண்டு அவர்கள் ஒரு கூட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அது நம்பிக்கையூட்டும் ஒரு விடயம். எனினும் தமிழ் வாக்காளர்களுக்கு அது நம்பிக்கையூட்டுமா இல்லையா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் இந்தக் கூட்டு ஏனைய மூன்று தமிழ்த் தேசியத் தரப்புகளோடு பகை தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்றுக்குப் போவதற்கு தயாரில்லை என்று தெரிகிறது. ஏனென்றால் அவர்களுடைய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்களில், கட்சிப் பிரமுகர்கள் பேசும் பேச்சுக்களைப் பார்த்தால் அவ்வாறு பகை தவிர்ப்புக்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை என்றே தெரிகிறது.

நான்காவது, விக்னேஸ்வரனின் மான் கட்சி. மணிவண்ணன் போட்டிக் களத்தில் இருந்து அகற்றப்பட்டமை அக்கட்சியைப் பொறுத்தவரை பெரிய வீழ்ச்சி.

இவ்வாறாக, தமிழ்த் தேசியத் தரப்பு இப்பொழுது நான்காக நிற்கின்றது. தேசிய மக்கள் சக்தி என்ற பொது எதிரிக்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்தில் மட்டும்தான் அவர்கள் ஒன்றாக நிற்கின்றார்கள். ஏனைய விடையங்களில் அவர்கள் தனித்தனியாகவே நிற்கிறார்கள்.என்.பி.பியை எதிர்ப்பதால் மட்டும் அதைத் தோற்கடித்துவிட முடியாது என்பிபிக்கு எதிராக ஒரே அணியில் நின்றால்தான் அதைத் தோற்கடிக்கலாம். அதுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கற்ற பாடம்.

தனித்தனியாக நின்றதன் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்களால் தேசத் திரட்சியைப் பாதுகாக்க முடியவில்லை.அதன் விளைவாகக் கிடைத்த வெற்றிகளின் அடிப்படையில்தான் அண்மையில் அமைச்சர் பிமல் ரட்டநாயக்க “நாங்கள் தான் இலங்கைத் தீவில் உள்ள மிகப்பெரிய தமிழ்க் கட்சி” என்று கூறியிருக்கிறார். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தங்களுக்குக் கிடைத்த ஆசனங்களின் அடிப்படையில் அங்கெல்லாம் தாங்கள்தான் பெரிய தமிழ்க் கட்சி என்று அவர் கூறுகிறார். இந்த அடிப்படையில் முழு இலங்கையிலும் தேசிய மக்கள் சக்திதான் மிகப்பெரிய தமிழ்க் கட்சி என்று அவர்கள் கூறத் தொடங்கி விட்டார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அவர்கள் தமது வெற்றி வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்வார்களாக இருந்தால், தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகக் கருதவில்லை, ஒரு தேசிய இனம் என்று கருதவில்லை, ஒரு தேசிய இனம் என்ற காரணத்தால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வை அவர்கள் கேட்கவில்லை,என்று கூறக்கூடும். அதை எப்படித் தமிழ்த் தேசியக் கட்சிகள் தடுக்கப் போகின்றன?

https://athavannews.com/2025/1429675

தமிழ் தேசியம் எதிர் என்பிபி? - நிலாந்தன்

2 months ago

தமிழ் தேசியம் எதிர் என்பிபி? - நிலாந்தன்

493272388_1265333268296233_8407611733756உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் வேட்பாளர் என்னிடம் கேடடார், ஒரு துண்டுப் பிரசுரத்தைத் தயாரிப்பதற்கு பின்வரும் கேள்விகளுக்கு கவர்ச்சியான விடைகள் வேண்டும் என்று. முதலாவது கேள்வி,தேசிய மக்கள் சக்திக்கு ஏன் வாக்களிக்க கூடாது? இரண்டாவது கேள்வி, மேற்படி வேட்பாளருடைய கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? மூன்றாவது கேள்வி, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

நான் அவரிடம் சொன்னேன், முதலிரண்டு கேள்விகளும் சரி மூன்றாவது கேள்வி பொருத்தமானதா? என்று. ஏனெனில் என்பிபிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே போட்டித் தவிர்ப்பிற்கு போவதன் மூலம்தான் வாக்குத் திரட்சியைப் பாதுகாக்கலாம். இல்லையென்றால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தது போல தமிழ் மக்கள் வாக்களிப்பார்களாக இருந்தால் என்பிபிக்குரிய வெற்றி வாய்ப்புகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே நேரத்தில் என்பிபிக்கு எதிராகவும் ஏனைய மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எதிராகவும்-ஆக மொத்தம் நான்கு தரப்புகளுக்கு எதிராகப்- போட்டியிட வேண்டி வரும்.

இது என்பிபிக்கு  உற்சாகமூட்டக்கூடிய ஒரு விடயம்.தேர்தல் களத்தில் ஒப்பீட்டளவில் என்பிபி அதிகம் உற்சாகமாக வேலை செய்கிறது என்றே தோன்றுகிறது. கிராமங்கள் தோறும் நகரங்கள் தோறும் அவர்கள் தாங்கள் “எங்கும் இருக்கிறோம்” என்ற ஒரு தோற்றம் வரத்தக்க விதத்தில் பிரச்சாரத்தை காட்சி மயப்படுத்துகிறார்கள். தமிழ்க் கிராமங்களிலும் நகரங்களிலும் கண் படுமிடமெல்லாம் அவர்களுடைய சுவரொட்டிகளும் பதாகைகளும் உண்டு. அது மட்டுமல்ல, ஏனைய எல்லாக் கட்சிகளையும் விட என்பிபிதான்   அதிக அளவில் பெருங்கூட்டங்களை ஒழுங்குபடுத்துகிறது. இக்கூட்டங்களில் அரச பிரதானிகள் கலந்து கொள்கிறார்கள்.

492517612_122132255708790322_41275449898என்பிபிக்கு அடுத்தபடியாகத்தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சியும் வேலை செய்கின்றன என்று தோன்றுகிறது. தமிழ்த் தேசிய கட்சிகள் இதுவரை குறிப்பிட்டுச் செல்லக்கூடிய பிரமாண்டமான கூட்டங்களை ஒழுங்குப்படுத்தியிருக்கவில்லை.வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்கள்தான் நடக்கின்றன. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ஒப்பிடப்பட்ட ஒரு விடயம். அப்பொழுதும் என்பிபிதான் அதிகம் பெருங் கூட்டங்களை ஒழுங்குபடுத்தியது. அதுவும் அது பெற்ற வெற்றிகளுக்கு ஒரு காரணம். தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களிடம் நிதி இல்லை என்று கூறுகின்றன. புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பெரிய அளவில் நிதி திரளவில்லை என்றும் தெரிகிறது. அவ்வாறு பெருங்கூட்டங்களை நடத்தாத ஒரு பின்னணிக்குள் தேசிய மக்கள் சக்தியானது அரங்கில் அதிகம் வேலை செய்யும் ஒரு கட்சி என்ற தோற்றம் எழுகிறது.

அண்மையில் நெடுங்கேணிப் பகுதிக்கு பிரதமர் ஹரிணி போனபோது, அங்கே அவரை வரவேற்று பதாகைகள் தொங்க விடப்பட்டன. அந்தப் பததைகளை ஒட்டியவர்களில் ஒருவர் தடுப்பிலிருந்து வந்த முன்னாள் இயக்கத்தவர் என்றும் மற்றவர் ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்டவரின் மகன் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தத் தகவல் சரியா பிழையா என்பது தெரியவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால் அவர்களில் குறிப்பிடத்தக்க அளவு தொகையினர் முன்பு தமிழ்த் தேசியக் கட்சிகளோடு நின்று உழைத்தவர்கள்தான்.

இங்கு யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு குறிகாட்டி எனலாம். ஒரு காலம் தமிழ்த் தேசிய ஆத்மாவை அடைகாத்த மையங்களில் அதுவும் ஒன்று. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் மிக ஆபத்தான அரசியல் சூழலில் பல விரிவுரையாளர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவாக வேலை செய்தார்கள். சிலர் கைது செய்யப்பட்டார்கள். சிலர் தலைமறைவாக நேரிட்டது. அப்படிப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களில் எத்தனை பேர் இப்பொழுது தமிழ்த் தேசியக் கட்சிகளோடு பகிரங்கமாக நிற்கின்றார்கள்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் இதுதான் நிலைமை. அப்பொழுது கிட்டத்தட்ட 15 விரிவுரையாளர்கள் ஒரு அறிக்கை விட்டிருந்தார்கள். அந்த அறிக்கையில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை நேரடியாகச் சொல்லத் தயங்கினார்கள். ஆனால் இப்பொழுது அவர்கள் வெளிப்படையாகவே தேசிய மக்கள் சக்தியின் மேடைகளில் தோன்றுகிறார்கள். அவர்களில் ஒருவர் யாழ்.மாநகர சபைக்குரிய பிரதான வேட்பாளர். மற்றொருவர் மொழிபெயர்ப்பாளராக தமிழ் அரசியற் சூழலிலும் இலக்கியச் சூழலிலும் நன்கு தெரியவந்த ஒருவர். எளிமையானவர். சைக்கிளில்தான் திரிவார். அனுரவின் நண்பர். பல ஆண்டுகளுக்கு முன்பு யாழ். வீரசிங்க மண்டபத்தில், விடுதலைப் புலிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட “மானிடத்தின் ஒன்று கூடல்” நிகழ்வில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். கிட்டு பூங்காவில் நடந்த அனுரவின் கூட்டத்தில் அவர்தான் மொழிபெயர்ப்பாளர்.

இத்தனைக்கும் யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்தான் அதிகம். ஆனால் அவர்கள் அமைப்பாக்கப்படவில்லை. தமிழ் மக்களின் பண்பாட்டுத் தலைநகரம் ஒன்றில் அமைந்துள்ள உயர் கல்வி நிறுவனமானது தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு கல்விச் சமூகமாக ஏன் வெளிப்படையாக இயங்கத் தயங்குகின்றது? ஆசிரியர்களும் சரி மாணவர்களும் சரி ஒரு சமூகமாக செயல்படத் தயாரில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் அரசறிவியல் துறைத் தலைவர் ஒருவர் மட்டும்தான் பொது வேட்பாளருக்கான அணியில் வெளிப்படையாகக் காணப்பட்டார். ஆசிரியர்களும் ஒரு சமூகமாக வரத் தயங்கினார்கள்; மாணவர்களும் உதிரிகளாகவே வந்தார்கள். அறிக்கைகள் விட ஆயிரம் அமைப்புகள் உண்டு. ஒரு பல்கலைக்கழகம் அறிக்கையோடு நின்றுவிட முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலோடு “தமிழ்த் தேசியமா?அல்லது என்பிபியா?” என்ற மோதல் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னணியில், ஒரு பகுதி விரிவுரையாளர்கள் வெளிப்படையாக என்பிக்கு ஆதரவாக நிற்கும் ஒரு பின்னணியில், பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு தமிழ்தேசியக் கட்சியோடு வெளிப்படையாக நின்று உழைப்பதற்கு ஏன் தயாரில்லை?

என்பிபிக்கு ஆதரவான விரிவுரையாளர்கள் வெளிப்படையாக வேலை செய்கின்றார்கள். அரசாங்கத்தோடு வேலை செய்வது பாதுகாப்பானது. அது உயர் கல்வியையும் பாதிக்காது பதவி உயர்வுகளையும் பாதிக்காது. ஆனால் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்பது ‘ரிஸ்க்’ ஆனது. அதனால்தான் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு வெளிப்படையாக நிற்பதற்கு பல்கலைக்கழகம் தயங்குகின்றது என்று ஒரு விளக்கம் தரப்படலாம்.

ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியும் அநுரவும் பெற்ற வெற்றிகளின் பின்னரும், ஒரு பண்பாட்டுத் தலைநகரத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனம் அவ்வாறு கூறிக் கொண்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக சிங்களபௌத்த மயமாக்கலை அதிகம் எதிர்கொள்ளும் ஒரு பல்கலைக்கழகம் அவ்வாறு ஓய்ந்திருக்க முடியாது. யாழ். பல்கலைக்கழகத்தின் சில துறைகளில் ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் அதிகம் சிங்கள பௌத்த மயப்பட்டு வரும் நிறுவனங்களில் யாழ். பல்கலைக்கழகமும் ஒன்று. அது கடந்த 15 ஆண்டு கால தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு குறி காட்டியாக நிற்கிறது.

489435393_980152007634551_77405731605141

தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களையும் கட்சிகளாக வளர்த்துக் கொள்ளவில்லை. தமிழ் மக்களையும் ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகள், கடந்த 15 ஆண்டுகளாக கட்டமைப்புக்களுக்கூடாகச் சிந்திக்கத் தவறிவிட்டன. மாணவ அமைப்புக்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவுஜீவி அமைப்புக்கள், மகளிர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில்சார் அமைப்புக்கள் போன்ற அமைப்புகளை உள்வாங்கி தமிழ்த்தேசிய அரசியலை கட்டமைப்புகளுக்கு ஊடாக கட்டியெழுப்பத் தவறி விட்டன. அந்த வெற்றிடத்திற்குள் கட்டமைப்புகளை உருவாக்கும் பயிற்சியும் அனுபவமும் மிக்க ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட என்விபி தீயாக இறங்கி வேலை செய்கின்றது. ஏனென்றால் அப்படிப்பட்ட கட்டமைப்புகளை இணைத்து உருவாக்கபட்டதுதான் என்பிபி.

கடந்த பொதுத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி எதிர்பாராத ஒன்று. ஆனால் இனி வரக்கூடிய தேர்தல்களில் அந்த வெற்றியை எப்படிப் பாதுகாப்பது?எப்படி அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் செல்வது? என்றுதான் அவர்கள் திட்டமிடுகிறார்கள். எனது நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியதுபோல தேர்தல் காலத்தில் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை மக்கள் தரிசிப்பதற்கு அனுமதித்ததன்மூலம் என்பிபி சிங்கள பௌத்த வாக்குகளைக் கவரப்பார்க்கிறது. அதனால் கண்டி மாநகரத்தின் தெருக்களில் எதிர்பாராத விதமாக குவிந்த யாத்திரிகர்கள் கண்டி மாநகரத்தை குப்பைத் தொட்டியாக்கி விட்டார்கள். தந்த தாதுவைக் காட்டப்போய் குப்பை கொட்டியதில் முடிந்து விட்டதா?

492506840_10161610305189141_297286704436என்பிபி யாழ்ப்பாணத்தில் பலாலி வீதியைத் திறக்கின்றது.சோதனைச் சாவடிகளை மூடுகின்றது, மாவிட்ட புரம் கந்தசாமி கோவிலுக்குப் போகின்றது. கண்டியில் தலதா மாளிகையைத் திறந்து விடுகிறது. எல்லாமே தேர்தல் உள்நோக்கத்தைக் கொண்டவை. கிட்டுப் பூங்காவில் அனுர வந்த பொழுது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்புக் காணொளி அதிகமதிகம் பகிரப்படுகின்றது. அவரை நோக்கி ஆண்களும் பெண்களும் தங்களுடைய கைகளை குலுக்குவதற்காக நீட்டுகிறார்கள். சிலர் உணர்ச்சி மேலிட்டால் அல்லது திட்டமிட்டு “ஜெய வேவ” என்று கோஷம் எழுப்புகிறார்கள். கடந்த பல தசாப்தங்களில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சிங்கள பௌத்த அரசுத் தலைவருக்கு இப்படி ஒரு வரவேற்புக் கிடைத்ததில்லை.இப்படி ஓர் ஈர்ப்பு இருந்ததில்லை.

‘அது திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட ஒரு கூட்டம். திட்டமிட்டு காட்சி மயப்படுத்தப்பட்ட ஒரு விடயம்`.என்று கூறிவிட்டுக் கடந்துபோக முடியாது. தமிழ்க் கட்சிகள் விட்ட வெற்றிடத்தில்தான் என்பிபி மேலெழுந்தது. அநுர மேலெழுந்தார். இப்பொழுதும் தமிழ் தேசியக் கட்சிகள் நான்காக நிற்கின்றன. இது தமிழ் மக்களைக் கவர உதவாது. அதேசமயம் அது என்பிபிக்கு உற்சாகமூட்டுவது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான ஒரு விடயம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான ஒரு புதிய மாற்றம் அது. எனினும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல, தமிழ்த் தேசியக் கட்சிகள் போட்டித் தவிர்ப்புக்கு போகக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரியவில்லை. பிரச்சாரக் கூட்டங்களிலும் ஒருவர் மற்றவரைத் தாக்கி வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ‘நான்;நான்’ என்று சிந்திக்கின்றது. ’நாங்கள்;தேசம்’என்று சிந்திப்பதாகத் தெரியவில்லை. நான்; நான் என்று ஒவ்வொரு வேட்பாளரும் சிந்திக்கும்போது அங்கே ” நாங்கள்”என்ற தேசியக் கூட்டுணர்வு ஏற்படாது. நான் நான் என்று சிந்தித்தால் போட்டித் தவிர்ப்பிற்குப் போக முடியாது. நாங்கள் என்று சிந்தித்தால்தான் போட்டித் தவிர்ப்புக்குப் போகலாம். ஆனால் தேசிய மக்கள் சக்தியோ ‘நாங்கள் இலங்கையர்கள்’ என்று சொல்லிக்கொண்டு தமிழ்க் கிராமங்களைக் கவ்விப் பிடிக்க முயற்சிக்கின்றது.

https://www.nillanthan.com/7342/

திருத்தந்தை பிரான்சிஸும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும்

2 months 1 week ago

திருத்தந்தை பிரான்சிஸும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும்

20200129T0803-POPE-AUDIENCE-BEATITUDES-6

Photo, Americamagazine

திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முயற்சிப்பது இயல்பானது. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸின் (ஆட்சிக்காலம்) காலத்தை புவிசார் அரசியல் பரப்பிலிருந்து ஆராயும் பார்வை அதிகரித்திருப்பதை நிராகரிக்க முடியாது. “திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியல்” என்ற நூல் 2019 இல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருந்ததையும் ஏனைய கட்டுரைகளையும் சாதாரண தேடல் மூலம் இணையத்தில் வாசிக்கலாம்.

தமிழ் வாசிப்பு ஆய்வுப்பரப்பில் திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியலைத் தழுவி பதிப்புக்கள் வெளிவந்ததாக அறிய முடியவில்லை. இக்கட்டுரை ஏற்கனவே வெளிவந்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வாசிப்புப் பரப்பில் உள்ள வெறுமையை நிரப்ப முனைவதாக அமையும்.

திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய இலத்தீன் அமெரிக்க புவிசார் அரசியலை விளங்கிக் கொள்வது அதிக தெளிவை கொடுக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருச்சபை, கத்தோலிக்க வெளியை நிலப்பரப்பு சார்ந்து புதுப்பித்தல் அல்லது மீளமைத்தல் செயன்முறைக்குள் போக நிர்ப்பந்திக்கப்பட்டது. புதிய உலக நோக்கிலிருந்தும், நிர்வாக ரீதியிலிருந்தும் இவை மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றிற்கொரு அரசியல் இருப்பதை மறுக்க முடியாது. சர்வதேச தொடர்பாடலில் யதார்த்தவாத கருத்தியலை முன்வைத்து உலக ஒழுங்கு நடைமுறையை ஆய்வு செய்பவர்கள் அரசியல் அதிகார வலுவையும் அவ்வலுவை தக்கவைப்பதற்கான போட்டியையும், இவ்விரண்டிற்கும் இடையேயான உரசலால் ஏற்படுகின்ற அரசியல் பண்பாடு உலக ஒழுங்கை  உருவமைப்பதில் காத்திரமான பங்களிப்பு செய்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதிலிருந்தே மத – புவிசார் அரசியல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். உரோமை மையமாகக் கொண்ட பேரரசுக் கட்டமைப்பு, வரலாற்றில் பேரரசுக் கட்டமைப்பை மறுசீரமைக்குட்படுத்தி தொடர்ந்தும் தனது அரசாங்கத்தன்மையை மேய்ப்புப் பணிக்கூடாக முன்னெடுத்து ஏனைய பல்துருவ, இருதுருவ, ஒருதுருவ உலக ஒழுங்கில் பேரரசை உருவாக்கி அரசியல் வலுவை ஒரு மையத்தை நோக்கிக் குவிக்க முற்பட்டவர்களுக்கு ஒரு பெரும் சவாலகவே இருந்து வந்துள்ளது.

தற்போதைய தேச – அரசு கட்டமைப்பிலிருந்து அணுகும்போது அவற்றின் நிலவெளி என்பது எப்போதுமே வரையறைக்குட்பட்டது. ஆனால், உரோமய திருச்சபையின் மேய்ப்புப் பணிவெளி மேற்குறிப்பிட்ட தேச – அரச எல்லைகளைக் கடந்து, அதன் அதிகார வரையறைகளையும் தாண்டிய அரசியல் வலுவைக் கொண்டிருந்தது என்பது நோக்கத்தக்கது. இதற்கு காலனித்துவத்தின் பங்கு மிகவும் காத்திரமானது. வரலாற்றில் ஐரோப்பிய – மைய அல்லது மேற்குலக மைய உலக ஒழுங்கை கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கை மறுதலிக்க முடியாது. அதேநேரத்தில் காலனித்துவமும், கிறிஸ்தவ மதமும் இணைந்து முன்னெடுத்த நவீனத்துவ நாகரிகமயமாக்குதலில் பல பழங்குடி/ பூர்வீக குடிகளின் இன அழிப்பு அரற்கேற்றப்பட்டதையும் திருச்சபை ஏற்றுக் கொண்டுள்ளது. திருச்சபையின் வரலாற்றுத் தவறுகளுக்காக திருத்தந்தை மன்னிப்பு கோரியுள்ளதும் நினைவுகூரப்பட வேண்டியது. மன்னிப்பு கோரியது மட்டும் தீர்வாகாது என்கின்ற உண்மையையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இக்கட்டுரை இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையின் கூட்டு அடையாள கட்டமைப்பையும், அது புவிசார் அரசியலில் செலுத்திய செல்வாக்கையும், இக்கட்டமைப்பிற்கு திருத்தந்தையாக வருமுன் ஜோர்ஸ் பெர்கோலியோவின் பங்களிப்பையும் அதனைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியல் கட்டமைப்பில் ஆசியமைய நகர்வையும் அவரது சிறிலங்கா திருப்பயணத்தையும் புவிசார் அரசியல் நோக்கிலிருந்து ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.

இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையும் புவிசார் அரசியலும்

திருத்தந்தை ஆறாவது அலெக்சாண்டரின் (1472-1503) ஆணை, Inter Cantera Divine பூகோளத்தை இரு துருவங்களாக்கியது. ஒரு துருவம் ஸ்பெயினிற்கும், மறு துருவம் போத்துக்கல்லுக்கும் வழங்கப்பட்டது. இவ் ஆணை ஐரோப்பிய கிறிஸ்தவ காலனித்துவத்திற்கு சமய/ சட்ட வலுவை வழங்கியது என்றால் மிகையாகாது. இவ்விரண்டு துருவங்களையும் கத்தோலிக்க திருச்சபையே ஒருங்கிணைத்தது. பேரரசுக்கட்டமைப்புகளைக் கடந்து கத்தோலிக்கர்களை ஒருங்கிணைக்கின்ற வலுவை திருச்சபை கொண்டிருந்தது.

பின் – காலனித்துவ அரசியல் வரலாற்றில் புதிய அரசுகளின் தோற்றம் உருவானதை அரசியல் வரலாறு ஆவணப்படுத்தியுள்ளது. இவ் அரசியல் சூழலில் மதச்சார்பற்ற உலகியல் வாதத்தை முன்வைத்து ஒரு அரசியல் கருத்தியல் வேகமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் அரசும், மதமும் வெவ்வேறானது என்ற பிரிப்பு கட்டமைக்கப்பட்டது. ஆனால், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கத்தோலிக்க திருச்சபை “மதச்சார்பற்ற அரசு” கோரிக்கைக்கூடாக அதாவது இறையியல் கோட்பாட்டுத் தன்மையில் விட்டுக்கொடுப்பிற்கு உடன்படாமல் அதன் அரசாங்கத் தன்மையில் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடித்து தனது அரசியல் வலுவைப் பயன்படுத்திக் கொண்டே வந்ததெனலாம். இதனது ஒரு அலகாக அல்லது உத்தியாக “இலத்தீன் அமெரிக்க மயமாக்கம்” அறிமுகப்படுத்தப்பட்டு, அது தேச – அரசுகளைக் கடந்த அடையாளத்திற்கூடாக மக்களை ஒன்றிணைத்தது. அதை ஓர் புவிசார் அரசியல் அலகாக அங்கீகரிப்பதன் மூலம் பெருநிலப்பரப்பிற்குரிய கண்டத்திற்குரிய தோற்றுவாயாக பரிணமித்தது.

அமெரிக்க கண்டமயமாக்கலுக்குள் இலத்தீன் அமெரிக்கா புவிசார்ந்து உள்வாங்கப்பட்டாலும் அது தனது தனித்துவத்தை தனக்குரிய இலத்தீன் அமெரிக்கமயமாக்கலுக்கூடான அடையாளத்தினூடு தக்கவைத்துக் கொண்டது. அரசியல் ரீதியாக இலத்தீன் அமெரிக்க திருச்சபை என்கின்ற கூட்டு, தேச – அரசுகளைக் கடந்து கூட்டு குழுமமான ஓர் அரசியல் வலுவாக கட்டமைக்கப்படத் தொடங்கியது,  அதுவே பின்னர் புவிசார் அரசியலில் மிகவும் அரசியல் செல்வாக்கான அங்கமாகியது. அடித்தள மக்கள் தொடக்கம் அரசியல் கொள்கை உருவாக்கம் வரைக்கும் இதனது செல்வாக்கை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலத்தீன் அமெரிக்க மயமாக்கம் மதத்தை கடந்து அந்த நிலப்பரப்பில் வாழுகின்ற அனைவருக்கும் புதிய அடையாளத்தையும், பரந்த குழுமத்தைச் சேர்ந்த ‘கூட்டு’ உணர்வையும் ஒருசேரக் குவித்து, ‘ஹிஸ்பானிக்’ அடையாளத்தை ஊக்குவித்து,  தனித்தன்மையை உறுதியாக உருவாக்க வழிவகுத்தது. மேற்குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக பல்வேறு இயக்கங்கள் உருவானதை அவதானிக்க முடிகின்றது. “ஹிஸ்பானிக்” அடையாள வலுவாக்கத்திலும், முன்னெடுப்பிலும் இலத்தீன் அமெரிக்க திருச்சபை மிக முற்போக்குள்ள நிலையை கடைப்பிடித்ததோடு, சமூக மறுசீரமைப்பிற்கும் வழிகோலியது. கருத்தியல் கட்டமைப்புக்கும் அதை அகவயப்படுத்துவதற்குமான செயன்முறைக்குமிடையே அதிக இடைவெளி இருந்ததாகத் தெரியவில்லை.

புதிய அடையாள ஏற்பை வலியுறுத்தி உருவான அமைப்புக்கள், காலனித்துவத்தை, பேரரசுக்கட்டமைப்பை, ஏகாதிபத்தியத்தை, பொருளாதாரச் சுரண்டலை, கட்டமைக்கப்பட்ட ஏழ்மை போன்றவற்றிற்கெதிராக போராடுகின்ற சூழலை உருவாக்கியது மட்டுமல்லாது; விளிம்புநிலை, தன்னுணர்வு, மாற்று “மூன்றாம் வழி”, அபிவிருத்தியடையாத வகையினை கட்டமைத்து, அபிவிருத்தியடையாத கூட்டை நோக்கி பயணிக்க ஏதுவாகியது. மூன்றாம் வழியான இலத்தீன் அமெரிக்க ‘அபிவிருத்தி’ உத்திக்கூடாக நகருவதற்கு காரணமாக அப்போதைய பூகோள அரசியல் சூழல் இருந்தது. அமெரிக்கா முதலாளித்துவத்தையும், சோவியத் ஒன்றியம் கம்யூனிசத்தையும் கையிலெடுத்து இருதுருவ பூகோள ஒழுங்கை கட்டமைத்தது. இவையிரண்டிற்குமிடையேயான மாற்றாக “மூன்றாம் வழி” கட்டமைக்கப்பட்டது. Justificialist என்கின்ற சமூக செயற்திட்டம் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினை வழங்கியிருந்தது. இக்காலத்தில் எழுந்த அனைத்து புரட்சிகர சமூகமாற்ற செயற்பாடுகளோடும் திருச்சபைத் தன்னை இணைத்திருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலத்தீன் அமெரிக்க திருச்சபை, அடிப்படையில் மாற்றம் தேவை எனக் கருதி பண்டுங் மாநாட்டிற்கு இணையான (Bandung Conference) பிராந்திய மாநாட்டு முன்னெடுப்புக்களை நோக்கி நகர்த்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் வலிந்து  தள்ளப்பட்டது. திருச்சபை ஐரோப்பிய மையவாதத்தைக் கொண்டது என விழித்தெழுந்த இலத்தீன் அமெரிக்க கூட்டு உளவியல் பிரக்ஞை ஐரோப்பிய – மையவாத நீக்கத்தை வலுவாக ஆதரித்து, விளிம்புநிலை மைய திருச்சபை கட்டமைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி அதற்கான வழிவரைபடத்தை தயாரித்துக் கொண்டதை அதன் பின்னர் வெளிவந்த மாநாட்டு ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் தொகைப் பெருக்கமும் அவர்கள் எதிர்நோக்கிய அரசியல் யதார்த்தமும், ஏழை மக்களின் வறுமையும், எண்ணிக்கையில் குறைந்த மேட்டுக்குடியினரின் அரசியல், அதிகார பொருளாதார சொத்துக் குவிவும் புதிய வழிமுறைகளைத் திறந்துவிட்டது. “மூன்றாம் உலக” (Third World) கருத்தியலின் உருவாக்கம் இவ் அரசியல் வரலாற்றுச் சூழமைவில்தான் வலுவடையத் தொடங்கியது.

ஜோர்ஜ் பெர்கோலியோ (பின்னாளில் திருத்தந்தை பிரான்சிஸ்) – விளிம்பிலிருந்து யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளல்

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் இலத்தீன் அமெரிக்க திருச்சபை தனக்கான புவிசார் அரசியல் கொள்கைகளை மிகத் தெளிவாக வரைந்து அதற்கான உத்திகளைத் தேர்ந்தெடுத்து நகரத் தொடங்கியது. பெருநிலப்பரப்பிற்குரிய/ கண்டத்திற்குரிய அகண்ட அடையாளம் இதற்கு அடித்தளமிட்டது. இதன் முன்னணியில் Juan Diego de Guadalupe குழுமம் மிக முக்கிய பங்காற்றியது. அக்குழுவின் முக்கிய செயற்குழு உறுப்பினராக ஜோர்ஜ் பெர்கோலியா இடம்பெற்றிருந்தார். இக்குழுமம் “பெர்கோலியா ஆய்வறிஞர்குழு” என்றும் அறியப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பெருநிலப்பரப்புவாதம் (Continentalism) அல்லது தலைநிலப்பகுதிவாதம் புவிசார் அரசியல் ஒரு கருத்தியலாகவே உருவாக்கப்பட்டு, இலத்தீன் அமெரிக்க தேசத்திற்கான ஒருங்கிணைக்கும் கருவியாக உபயோகப்படுத்தப்பட்டது. பெர்கோலியாவின் குழு பெருநிலப்பரப்புவாதக் கருத்தியலிற்கான அடிப்படைகளைக் கட்டமைத்தது மட்டுமல்லாது, இலத்தீன் அமெரிக்க திருச்சபை, பூகோளத் திருச்சபையில் எவ்வாறு தனித்துவ பங்களிப்பை வழங்க முடியும் என்கின்ற வழிவரைபடத்தையும் முன்னிறுத்தியது. இதில் குறிப்பாக Aparecida ஆவணம் திருச்சபையின் புவிசார் அரசியலின் போக்கை குறிப்பிடுகின்றது. உதாரணத்திற்கு வெளிநாட்டுக் கொள்கை இலத்தீன் அமெரிக்க ஒருங்கிணைப்பில் எவ்வாறு இருக்க வேண்டும் என அடிக்கோடிடுகிறது. ஒருங்கிணைவு வேறுபாட்டை ஊக்குவிக்கின்றது என்ற ஏற்பு ஏக பண்பாட்டை ஏற்றுக் கொள்வதல்ல.

மேற்குறிப்பிட்டதன் ஒரு அலகாகவே ”பொதுமக்கள் இறையியலை” நோக்க வேண்டும். பொதுமக்கள் இறையியல் மேய்ப்புப்பணி அரசாங்கத் தன்மையையும் (Pastoral Governmentality) புவிசார் அரசியலையும் ஒரே சட்டகத்திற்குள்ளிருந்து அணுக முயற்சிக்கின்றது. இவற்றிற்கு அடிப்படையான கருத்தியலாக மக்கள்-தேசம் (People Nation)  இருப்பதோடல்லாமல், மக்களை ஒருங்கிணைக்கின்ற வெளியை உருவாக்கி சுயநிர்ணய உரிமைக்கான விருப்புரிமையை வழங்குகின்றது. இது விளிம்புமைய கட்டமைப்பை மாற்றாக முன்வைக்கின்றது.

திருத்தந்தை பிரான்சிஸின் வரலாற்றுப் பரிணாமம் விளிம்புமைய புவிசார் அரசியலை உள்ளடக்கமாகக் கொண்டது. திருத்தந்தை பிரான்சிஸ் ஐரோப்பிய விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு நபராக இருந்ததை அவதானிக்க முடிவதோடு பல்வகைத் தன்மையை யதார்த்தமானதாக, இயற்கையானதாக அங்கீகரித்து; ஐரோப்பிய அல்லது ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்புகளின் ஏக பண்பாட்டு அரசியல் திட்டத்திற்கு ஒவ்வாததாக அதை மறுதலிக்கின்ற அல்லது அதற்கு மாற்றான ஒரு கருத்தியலை, ஒழுங்கை முன்னிறுத்தி நகர்வது துணிகரமிக்கது.

இச்செயற்திட்டம் மக்களை மக்களாகவே பார்க்கின்ற, அவர்களது கூட்டு இருப்பை உறுதி செய்வதாக அமைகின்றது. ஐரோப்பிய – மைய பார்வையை/ ஐரோப்பிய/ மேற்குலக மையத்திற்கூடாக நோக்குகின்ற பார்வைப் பரப்பு இல்லாது போதல்  என்பது ஏறக்குறைய ஏகாதிபத்திய பேரரசின் அலகுகளை இல்லாமற் செய்தலாகும். மூன்றாவது வழியூடாக அணுகுமுறையை மற்றமைகளை (Other) மையப்படுத்தி அவர்களை வரலாற்றின் கதாபாத்திரத்திரங்களாக உருவகித்து விடுதலையை உள்ளீடாகக் கொண்ட அணுகுமுறையை எல்லாவற்றிலும் விரிவுபடுத்துகின்றது.

திருத்தந்தை தற்போதைய அரசியல் உலக ஒழுங்கை கண்டித்திருக்கின்றார். ஜோன் ஜக்கென்பெறி குறிப்பிடுகின்ற “மூன்று உலகங்கள்”; மேற்கு, கிழக்கு, தெற்கு, உலக ஒழுங்கை வடிவமைக்கையில் எழுகின்ற போட்டி. இதில் குறிப்பிடப்படும் மேற்குலகு – ஐக்கிய அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் உள்ளடக்கியது. கிழைத்தேசம் – சீனாவையும் ரஷ்யாவையும், தெற்குலகு மேற்குலகல்லாத அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைக் குறிக்கின்றது. மேற்குலகு நவதாராளவாத ஜனநாயகத்தையும் கீழைத்தேசம், மேற்குலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமத்துவ இறைமையை, தனித்துவத்தை, பல்வகைமையை, அபிவிருத்தியை மனித உரிமையை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. இவ்விரண்டுமே ஏகாதிபத்திய அதிகாரத்திற்கான போட்டியை தெற்கு நோக்கியும், தெற்கில் மேலும் பரவலாக்குவதற்கு முயற்சிக்கின்றது. தற்போதைய  உலக ஒழுங்கு மிகை ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருப்பதை அவதானிக்கும் எவரும் அவற்றை கண்டிக்கத் தவற மாட்டார்கள். திருத்தந்தை பிரான்சிஸும் தற்போதைய உலக ஒழுங்கை கண்டித்திருக்கின்றார். அவர் கண்டிப்பதற்குரிய காரணத்தின் வரலாற்றுப் பின்னணி பற்றிய தெளிவு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

திருத்ததந்தை பிரான்சிஸ் தெற்குலகில் இருந்தே (ஆர்ஜென்டீனா) உதயமாகிறார். ஐரோப்பிய மைய திருச்சபைக்கு இது பெரும் சவாலாக இருந்திருக்கலாம். தனது பதவிக்காலத்தில் திருச்சபையை விளிம்பு மையத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தமை அவரது நியமனங்கள் எழுத்துக்கள் உரைகள், பயணங்களின் மூலம் தெரியவந்தன. அதேபோல் உலக யதார்த்தத்தையும் விளிம்புநிலை மையத்திலிருந்து நோக்க வேண்டிய தேவையை கற்பிதமாக  அறிமுகப்படுத்தியிருப்பது பிரளய மாற்றமாகக் கருத வேண்டியிருக்கும். விளிம்புநிலை மைய நோக்கு நிலை, ஏக பார்வையைத் தவிர்த்து பல்வகைமையை யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது, வேறுபாட்டை அச்சத்திற்குரியதாகக் கருதாமல் பாராட்டப்பட வேண்டியதாக அணுகுகின்றது. இவ்வாறான அணுகுமுறை காலனித்துவம், நவதாராளவாத முதலாளித்துவம் உருவாக்கும் மற்றைமைகளை(Others) கதாநாயகர்களாக அல்லது திருச்சபையின் மையமாக மாற்றுவது மேற்குலகு பார்க்க விரும்பும் யதார்த்தத்தையும், யதார்த்தத்தை ஆய்வுமுறைக்குட்படுத்தும் முறையியலையும் முற்றிலும் கேள்விக்குட்படுத்துகின்றது. இவ்வாறான முறையியலை அங்கீகரிப்பது மாற்றம் விளிம்பு நிலையிலிருந்து மட்டுமே வர முடியும் என்ற பட்டறிவிலிருந்து எழுகின்றது. அப்பட்டறிவு கோட்பாட்டு மையத்திலிருந்து விலகி மக்கள் மையத்திலிருந்து புறப்படுகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் இம்முறையியலை புவிசார் அரசியலுக்கும், இறையியலுக்கும் அவசியமானதாக மாற்றினார்.

புவிசார் அரசியலில் ஆசிய மையத்தின் முக்கியத்துவம்

திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியலில் ஆசியா இரு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றதாக Enrico Beltramini குறிப்பிடுகின்றார். முதலாவது, ஆசியாவின் அரசியல், சமூக, பொருளாதார, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளல். அதாவது, கட்டமைக்கப்பட்ட அநீதியின் விளைவையும் அதிலிருந்து மீளெழுந்த முயலும் மக்களின் வாழ்வும், அதேநேரத்தில் மேற்குலகின் அசிரத்தையும் உள்ளடக்கும். இரண்டாவது ஆசிய மையம் மேற்குலக ஏகாதிபத்தியத்தையும் மேற்குலக பேரரசுக் கட்டமைப்பையும் கேள்விக்குட்படுத்துகின்றது. விளிம்புமையத்தை நோக்கி நகர்தலிலே ஆசிய மையம் முக்கியத்துவம் பெறுகின்றது. திருச்சபையின் மையம் விளிம்பு நிலையில் இருக்க முடியுமே தவிர, மேற்குலக மையத்திலே அல்ல என்பது அவரது திடமான நம்பிக்கை. இந்நகர்வு ஆசிய பல்வகைத்தன்மையை அங்கீகரிப்பது  மட்டுமல்ல மேற்குலக இறையியல் அணுகுமுறையை அல்லது அறிவுசார் முறையியலை கேள்விக்குட்படுத்தி பூர்வீக முறையியலை, ஏற்கனவே ஆசியாவில் வெவ்வேறு நாகரீக மரபுகளுக்கூடாக வரும் முறையியலை ஊக்கப்படுத்துவதாகும். இம்முறையியல் அணுகுமுறை, விடுதலை, கிறிஸ்தவத்திலிருந்து மட்டும்தான் வரமுடியும் என்ற காலனித்துவ ஏக வழியை விடுத்து, ஆசியாவில் உள்ள பல் மதங்கள் கூறும் விடுதலை முறைமையையும் ஏற்றுக்கொள்வதாகும். இம்முறையியல் மேற்குலகு கட்டமைக்க முயலும் ஏக பேரரசுக் கட்டமைப்பைக் கட்டவிழ்க்கின்றது மட்டுமல்லாது, ஆசியாவை மேற்குலகு அடிமைப் பண்பாக கருதுகின்ற, அல்லது தனது நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்துகின்ற செல்நெறியை உடைக்கின்றது. இதன் மூலம் மேற்குலகின் வீழ்ச்சியையும், கீழைத்தேசத்தின் எழுச்சியையும் மறைமுகமாக சுட்டுவதாக அமையும். திருத்தந்தை பிரான்சிஸின் அடிக்கடி கோடிட்டுக் காட்டப்படும் வாசகமாக இருப்பது: “யதார்த்தத்தை மையத்திலிருந்து நோக்கவதைவிட விளிம்பிலிருந்து பார்ப்பது அதிக தெளிவைத் தரும்.”

காலனித்துவத்திலிருந்து மீளெழும் நாடுகளில் காலனித்துவத்தின் எச்சங்கள் தொடர்ந்தும் காலனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும். அவ்வாறான தன்மையை Coloniality  என்ற பதத்தினூடாக விளங்கிக் கொள்ள முடியும். Coloniality என்பதை காலனித்துவத் தன்மை என்று மொழிபெயர்த்தால், மேற்குலக அறிவு உருவாக்கம் மிக முக்கியம் பெறுகின்றது. மேற்குலக அறிவுக் கட்டமைப்பு அதற்கான முறையியலை கொண்டுள்ளது. அதையே அது ஏனையவற்றிலும் பார்க்க அதிக தரமுள்ளதாக கட்டமைத்து தர உயர்வாக வெளிக்காட்டுகின்றது. இம்முறையியல் ஏகாதியத்தியத்தை தக்கவைப்பதற்குரிய உத்தியாகப் பயன்படுத்தப்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஆசியாவை மையமாக நகர்த்தல், மேற்குலக அறிவுக் கட்டமைப்பு முறையியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இவ்வாறான செயற்திட்டம் மேற்குலக – கீழைத்தேச உரசல்களுக்கும், இறுக்கத்திற்கும் வழிகோலும் என்பது அறியாததல்ல.

“சீனாவின் எழுச்சியைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்ற திருத்தந்தையின் கூற்றும் அதைத் தொடர்ந்த கருத்துரையும், “மேற்குலகு கீழைத்தேசம், சீனா இவையெல்லாமே அமைதிச் சமநிலையைப் பேணுவதற்குரிய கொள்திறனையும் செயற்திறனையும் கொண்டிருக்கின்றன. நாங்கள் இதனை அடைவதற்கான உத்தியாக உரையாடலை பயன்படுத்த முடியும். கலந்துரையாடலைத் தவிர வேறு வழி கிடையாது.” அவர் சீனாவை தனது நண்பனாக கருதுவதாகவும் தொடர்ந்தும் உறவுகளையும் தொடர்புகளையும் பேண விரும்புவதாக காட்டிய அறிகுறி திருத்தந்தை பிரான்சிஸ் தூரநோக்கோடு  கட்டமைக்க விரும்பிய பல்துருவ உலக ஒழுங்கிலிருந்தே அவதானிக்கப்பட வேண்டும். இவ்வாறான அவதானிப்பு மேற்குலகு, சீனாவை அணுகும் விதத்திலிருந்து – வெறுமனே பொருளாதார அரசியல் வல்லரசாக அல்லாமல் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்டிருக்கின்றதை வலுப்படுத்தி சமத்துவத்தை ஆழப்படுத்துவதை சுட்டி நிற்கின்றது. வத்திக்கான் சர்வதேச தொடர்புகள் சார்ந்தும் புவிசார் அரசியல் சார்ந்தும் செப்ரெம்பர் 22, 2018 இல் (வத்திக்கானுக்கும் சீனாவுக்குமிடையில்) கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை ஒரு மைக்கல் ஆகும்.

இந்த உடன்படிக்கைக்கு எதிராக தாய்வான் போர்க்கொடி தூக்கியதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. தாய்வானுக்கும் ஐக்கிய அமெரிக்காவுமிடையிலான வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் இருக்கின்ற உறவுகளையும் அவதானிப்பது சிறந்தது.

ஒரு சில ஆய்வாளர்கள் Brics , Brics Plus இன் எழுச்சியையும் இதே கோணத்தில் பார்க்க விரும்புவர். மேற்கூறப்பட்டவற்றின் எழுச்சிக்கும் திருத்தந்தை பிரான்சிஸுக்குமிடையேயான நேரடித் தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாவிட்டாலும் திருத்தந்தை பிரான்சிஸ் Brics Plus இன் எழுச்சியை மாற்று உலக ஒழுங்கிற்கான அடிப்படையாக பார்க்கும் போது மகிழ்ச்சியடைந்திருக்கலாம் என்பது சிலரது கருத்து.

திருத்தந்தை பிரான்சிஸின் பயணங்களையும் அவர் கட்டமைக்க விரும்பிய பல்துருவ உலக ஒழுங்குக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுவது இலகுவாயிருக்கும்.

திருத்தந்தையின் பயணங்களை புவிசார் அரசியல் கோணத்திலிருந்து ஆய்வு செய்பவர்கள் முன்னிருந்த திருத்தந்தையர்களின் பயணங்களிற்கும் பிரான்சிஸின் பயணங்களிற்குமிடையேயான இடைவெளியை அவதானிக்கத் தவறுவதில்லை. அவற்றில் ஆசியாவை நோக்கிய பயணங்கள் மிக  அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில் 12 நாட்களாக தென்கிழக்காசியாவில் இந்தோனேசியா, பப்புவா, கியூகிளி, கிழக்கு தீமோர், சிங்கப்பூர் பயணங்கள் மிக அவதானிப்பு பெற்றவையாகக் கருதப்படுகின்றது.

சிறிலங்காப் பயணம்  

திருத்தந்தை பிரான்சிஸ் 2015 இல் சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவின் ஒற்றையாட்சி ஜனநாயக மாதிரி, மையத்தில் அதீத அதிகாரத்தைக் குவித்து வைத்துள்ளது. கொழும்பு சிறிலங்காவின் அதிகார மையமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. போரின் பின்னரான வரலாற்றுக் காலப்பகுதியில் ஒரு சில அரசியல் தலைவர்களைத் தவிர வேறு எவருமே வடக்கிற்குப் பயணித்ததில்லை. அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ பயணங்களும் பார்வையிடலும் கொழும்பை மையப்படுத்தியதாக வரையறைப்படுத்தப்பட்டிருக்கும். கொழும்பைத் தாண்டினால் அது பௌத்த விகாரையை பார்வையிடுவதாக அமைந்திருக்கும். கொழும்பு மையத்திற்கும், பௌத்த விகாரைக்குமான தொடர்புகள் சிறிலங்காவின் சிங்கள – பௌத்த அடையாளத்தை வலியுறுத்தி ஆழப்படுத்தப்படுவதற்கான முயற்சிகளாகவே இந்த இணைப்புக்களையும் இணைப்புக்களிலுள்ள  இடைவெளிகளையும் நோக்க வேண்டிய அவசியம் உள்ளது.

சிறிலங்காவின் அரசியல் அதிகாரம் மட்டும் கொழும்பில் மையப்படுத்தப்படவில்லை. சிங்கள கத்தோலிக்க மையமும் கொழும்பில்தான் மையப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவின் ஒற்றையாட்சி சொல்லாடலிற்குள் சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் உள்வாங்கப்பட்டது என்பதற்கான வரலாற்று சான்றுகள் நிறையவே உள்ளன. ஆனால் அவை ஒரு ஆய்வு நூல் ஆக இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒரு சில உதாரணங்களாக சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் ஒரு நாடு ஒரு தேசம் என்கின்ற ஏற்பு. நீர்கொழும்பு, சிலாபம், கரையோரங்களிலிருந்து தமிழ்ப்பாடசாலைகள் சிங்கள மயமாவதற்கு சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் பங்கு மிக முக்கியமானது.

2015 இற்கு முன்னர் வருகை தந்த திருத்தந்தையர்கள் கொழும்பை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தனர். திருத்தந்தையர்களின் கொழும்பை மையப்படுத்திய உத்தியாகபூர்வ பயணங்கள், சிங்கள கத்தோலிக்கர்கள் மத்தியில் சிறிலங்காவின் ஒற்றையாட்சித் தன்மையை இன்னும் அதிகமாக வலுப்படுத்தியது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்க முடியாது. 2015 திருத்தந்தையின் பயணம் போரின் பின்னர் தற்போதைய சிங்கள பௌத்த அரசின் அடிப்படை கருத்தியலான சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அப்போது பதவியிலிருந்தவர்களுக்கு தமிழ் இன அழிப்பின் பின்னரான அரசியல் சூழ்நிலையை சமநிலைப்படுத்துவதற்கு திருத்தந்தையின் பயணத்தை பயன்படுத்தியிருக்கலாம்/ பயன்படுத்தப்பட்டது. இது பற்றி வடக்கு கிழக்கிலிருந்தே தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் இப்பயணத்தின் ஆபத்தை வத்திக்கான பிரதிநிதியூடாக தெளிவுபடுத்தியிருந்தனர்.

தமிழ் இன அழிப்பு உச்சந்தொட்ட முள்ளிவாய்க்காலுக்கும் வருகைதர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலுக்கான வருகை வரலாற்றில் இடம்பெற்றிருந்தால் அதை தமிழ் இன அழிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கும் என்பதை அறிந்த கொழும்பு மைய கத்தோலிக்கத் திருச்சபை அப்போது அதிகாரத்திலிருந்த மஹிந்த குடும்பத்துடன்  இணைந்து நிச்சயமாக தடுத்திருக்க வேண்டும் என்று ஊகிப்பதைத் தவிர வேறு முன்னெண்ணம் கொள்ள முடியாது. அதே கொழும்புமைய திருச்சபைதான் மஹிந்தவையும் அவரது பரிவாரங்களையும் திருத்தந்தையை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது என்பதை வரலாறு ஆவணப்படுத்தியுள்ளது.

20150114__20150115_A18_ND15POPEp1-ezgif.

அப்போதிருந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் நெருக்குவார அழைப்பின் பேரிலேயே மடுவிற்கான திருத்தந்தையின் பயணம் அமைந்திருந்ததை மறுக்கவியலாது. திருத்தந்தை அப்போதிருந்த அரசியல் நிலைமையை ஓரளவிற்கு அவரது பட்டறிவிலிருந்து விளங்கிக் கொண்டிருந்தாலும் முழுமையாக விளங்கிக் கொண்டாரா அல்லது அது பற்றிய தெளிவு கொடுக்கப்பட்டதா என்பது தெரியாது. ஆனாலும் புவிசார் அரசியல் சார்ந்தும், திருத்தந்தை கொண்டிருந்த விளிம்புநிலை மைய நம்பிக்கையிலும் மடுப்பயணம் முக்கியம் பெறுகின்றது. மடுப்பயணம் கொழும்புமைய அதிகாரக் குவிப்பை கேள்விக்குட்படுத்தியதோடு விளிம்புநிலை நோக்கி சிறிலங்காத்திருச்சபை நகர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. சிறிலங்காத் திருச்சபை இன ரீதியில் பிளவுபட்டிருப்பது வெள்ளிடைமலை.

மடுவிற்கான பயணம் ஒரு வகையில் ஈழத்தமிழ் மைய திருச்சபையின் எழுச்சிக்கான அவசியத்தை கோடிட்டு அங்கீகரித்துக் கொண்டது என்ற உண்மை வரலாற்றுப் பதிவாகியது. தமிழ்த்தேச விடுதலை நோக்கிலிருந்து ஈழத்தமிழ் திருச்சபை எழுச்சி காண வேண்டும் என்கின்ற வேணவா போரின் பின்னான அரசியல் வெளியில் இன்னும் காத்திரமாக வலியுறுத்தப்பட்டது. நீதியை விடுதலையை மையப்படுத்தி ஈழத்தமிழ்த் திருச்சபை எழுச்சி காணவேண்டும் என்கின்ற கனவோடு திருத்தந்தையின் மடுப்பயணம் நிறைவுற்றிருக்கலாம்.

Elil-e1745580633651.jpg?resize=110%2C121அருட்தந்தை எழில் இராஜேந்திரம்

###

உசாத்துணைகள்:

  1. Allen. Jr, John L. ‘BRIC by BRIC, the Foundation for Pope’s Geopolitical Endgame Is Being Laid’. Crux, 27 August 2023. https://cruxnow.com/news-analysis/2023/08/bric-by-bric-the-foundation-for-popes-geopolitical-endgame-is-being-laid/.

  2. Barbato, Mariano P. ‘Geopolitics of Papal Traveling: (Re)Constructing a Catholic Landscape in Europe’. Religions 11, no. 10 (October 2020): 525. https://doi.org/10.3390/rel11100525.

  3. Beltramini, Dr Enrico. ‘The Church of the Periphery and the Catholic Pivot to the Indo-Pacific’, n.d.

  4. Beránek, Ondřej. ‘The Geopolitics of Pope Francis’ Latest Tour’. European Values Center for Security Policy (blog), 16 September 2024. https://europeanvalues.cz/en/the-geopolitics-of-pope-francis-latest-tour/.

  5. Ikenberry, G John. ‘Three Worlds: The West, East and South and the Competition to Shape Global Order’. International Affairs 100, no. 1 (8 January 2024): 121–38. https://doi.org/10.1093/ia/iiad284.

  6. Kratochvíl, Petr, and Jana Hovorková. ‘Papal Geopolitics: The World According to Urbi et Orbi’. In Modern Papal Diplomacy and Social Teaching in World Affairs. Routledge, 2019.

  7. Løland, Ole Jakob. ‘The Political Theology of Pope Francis: Understanding the Latin American Pope’. Routledge & CRC Press. Accessed 22 April 2025. https://www.routledge.com/The-Political-Theology-of-Pope-Francis-Understanding-the-Latin-American-Pope/Loland/p/book/9781032392882.

  8. ———. ‘The Solved Conflict: Pope Francis and Liberation Theology’. International Journal of Latin American Religions 5, no. 2 (1 December 2021): 287–314. https://doi.org/10.1007/s41603-021-00137-3.

  9. Lynch, Andrew P. ‘A Global Papacy: The International Travels of Pope Francis and Geopolitics’. In Research in the Social Scientific Study of Religion, Volume 30, 258–373. Brill, 2019. https://doi.org/10.1163/9789004416987_022.

  10. Mcaleer, Graham James. ‘Aquinas and the Geopolitical Thinking of Pope Francis’. Revista Portuguesa de Filosofia 79, no. 1/2 (2023): 531–48.

  11. Puntigliano, Andrés Rivarola. ‘The Geopolitics of the Catholic Church in Latin America’. Territory, Politics, Governance 9, no. 3 (27 May 2021): 455–70. https://doi.org/10.1080/21622671.2019.1687326.

  12. Raditio, JB Heru Prakosa and Klaus H. ‘Pope Francis, Power Rivalry and the Global Order’. Accessed 22 April 2025. https://asianews.network/pope-francis-power-rivalry-and-the-global-order/.

  13. SJ, Vladimir Pachkov. ‘BRICS Plus: An Alternative to the Current World Order? -’. LA CIVILTÀ CATTOLICA, 29 November 2023. https://www.laciviltacattolica.com/brics-plus-an-alternative-to-the-current-world-order/.

  14. Volder, Jan De, ed. The Geopolitics of Pope Francis. 1st edition. Leuven: Peeters, uitgeverij, 2019.

https://maatram.org/articles/12043

எஸ். ஜே.வி. செல்வநாயகம்; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய 'காந்தியவாத' தமிழ் அரசியல் தலைவர் (பகுதி - 1)

2 months 1 week ago

Published By: VISHNU

25 APR, 2025 | 09:43 PM

image

டி. பி.எஸ். ஜெயராஜ் 

" சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் இபோவில் பிறந்தார்.... மலேசியாவில் மிகவும் தூய்மையான  நகரம் என்று பெயரெடுத்தது இபோ. அதனால்தான் போலும் செல்வநாயகத்தின் வாழ்வு சமகால அரசியலில் அறியப்படாத ஒரு தூய்மையைக் குறித்து நின்றது." -- எஸ். ஜே.வி. செல்வநாயகத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது 1977 செப்டெம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி இவ்வாறு கூறினார். 

WhatsApp_Image_2025-04-25_at_19.55.27_de

அந்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றிய அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன, " செல்வநாயகம் உங்களை கைவிட்டு விடக்கூடியவர்  அல்லது ஏமாற்றிவிடக்கூடியவர்  என்று கூறிய ஒருவரை  எனது சமூகத்திலோ அல்லது வேறு எந்த சமூகத்திலோ நான் சந்தித்ததில்லை" என்று கூறினார். இந்த கருத்துக்கள் " நலிந்த உடலைக் கொண்டவரான   செல்வநாயகம் வடக்கின் முடிசூடா மன்னாகவே அறியப்படுகிறார். அவரின் நேர்மைக்கு அவரின் எதிரிகளும்  மனமுவந்து சான்றுரைப்பார்கள் " என்று பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா 1963 ஆம் ஆண்டில் எழுதியதை அங்கீகரித்து நின்றன. 

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் இபோ நகரில் 1898 மார்ச் 31 ஆம் திகதி பிறந்தார். கடந்த மார்ச் 31 ஆம் திகதி அவரது 127 வது பிறந்த தினமாகும். அவர் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையை சேர்ந்தவர். அவரது தந்தையார் விஸ்வநாதன் வேலுப்பிள்ளை மலேசியாவில் ஒரு வர்த்தகர். தாயார் ஹரியட் அன்னம்மாவின் கன்னிப்பெயர் கணபதிப்பிள்ளை.

பிள்ளைகள் சிறந்த  கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக செல்வநாயகத்துக்கு நான்கு வயதாக இருந்தபோது தந்தையாரை தவிர, குடும்பம் தெல்லிப்பழைக்கு குடிபெயர்ந்தது. புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரான செல்வநாயகம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியிலும் இறுதியாக கல்கிசை சென். தோமஸ் கல்லூரியிலும் (  அப்போது அது கொழும்பு முகத்துவாரத்தில் இருந்தது) தனது கல்வியைப் பெற்றார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர்  ஆனந்தநாயகம் பின்னர் ஒரு கட்டத்தில் சென்.தோமஸ் கல்லூரியின் வார்டனாக (அதிபர்)  பணியாற்றினார். செல்வநாயகமும் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவும் அந்த கல்லூரியில் ஏககாலத்தில் படித்தவர்கள். ஆனால்,  பிறகு அரசியலில் மோதிக்கொண்டார்கள்.

WhatsApp_Image_2025-04-25_at_19.55.27_e2

செல்வநாயகம் முதலில்  லண்டன் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக படித்து (பி.எஸ்.சி. )  பட்டதாரியானார். அதையடுத்து அவர் சென். தோமஸ் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு கொழும்பு லெஸ்லி கல்லூரியிலும் படிப்பித்த அவர் ஆசிரியராக இருந்துகொண்டு சட்டக்கல்வியை தொடர்ந்தார். அதில் சித்தியடைந்ததும் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சேர்ந்து கொண்டார். பிரதானமாக சிவில் வழக்குகளுடன் தனது சட்டத்தொழிலை மட்டுப்படுத்திக்கொண்ட அவர்  அதன் மூலமாக நன்கு சம்பாதித்தார். நன்கு மதிக்கப்ட்ட ஒரு சிவில் வழக்கறிஞரான அவர் நாளடைவில் இராணி அப்புக்காத்து (கியூ.சி.) ஆனார்.

செல்வநாயகம்  1927 ஆம் ஆண்டில் தெல்லிப்பழையின் மணியகாரர் ( நிருவாகப் பிரதானி ) ஆர்.ஆர். பார் குமாரகுலசிங்கியின் மகள் எமிலி கிறேஸ் பார் குமாரகுலசிங்கியை திருமணம் செய்து கொண்டார்.  ஆங்கிலக் கல்வியைப் பெற்ற அன்றைய மேட்டுக்குடியினர் வழக்கமாக அணியும் மேற்கத்தைய பாணி உடைக்குப் பதிலாக செல்வநாயகம்  தனது  திருமணத்தின்போது தமிழ்த்தேசிய ஆடையான வேட்டி,  சால்வையை அணிந்தார்.

தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலாசாரம் மீதான செல்வநாயகத்தின் பாசம் அரசியல் நோக்கங்களுக்காக செயற்கையான முறையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்று அல்ல.  அது ஆழமான இயல்புணர்ச்சியின் விளைவானது. அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக அவர் தன்னை யாழ்ப்பாணத்தவர் என்றே எப்போதும் சொல்வார். வீட்டில் சாத்தியமான அளவுக்கு அவர் வேட்டியையே கட்டியிருப்பார். சட்ட அல்லது உத்தியோகபூர்வ அலுவல்கள் அல்லது பல்வேறு சமூகத்தவர்கள் கலந்துகொள்ளும் ஒன்றுகூடல்களை தவிர மற்றும்படி செல்வநாயகம் தமிழர்களுடன் தமிழில் தான் உரையாடுவார். ஒரு தமிழ்க் கல்விமானாக இல்லாவிட்டாலும் கூட பண்டைய  தமிழ் இலக்கியங்களுடன் நன்கு பரிச்சயமானவராக விளங்கிய அவர் கர்நாடக சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும  நன்கு இரசிப்பார்.

தமிழ்க் கலாசாரத்துடன் இத்தகைய நெருக்கத்தைக் கொண்டிருந்த போதிலும், அதேயளவுக்கு கிறிஸ்தவ மதத்திலும் நம்பிக்கைகளிலும் பற்றுறுதி கொண்டவராக செல்வநாயகம் விளங்கினார்.  தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணப் பங்கின் ஒரு உறுப்பினரான அவர் கொழும்பில் அங்கிளிக்கன் தேவாலயத்தின் ஆராதனைகளில் பங்கேற்றார். ஆனால், வெள்ளவத்தையில் தென்னிந்திய திருச்சபை தேவாலயம் ஒன்றை திறந்த பிறகு கூடுதலாக அங்கு வந்து வழிபட்டார். அவரது கிறிஸ்தவம் அரசியல் பணிக்கு ஊக்கம் அளித்தது.

சாமுவேல் , ஜேம்ஸ் என்பவையே  செல்வநாயகத்தின் கிறிஸ்தவப் பெயர்களாக இருந்தபோதிலும், விவிலியத்தில் வரும் மோசஸ் தான் அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். பின்னரான நாட்களில் அவர் கொடுமைக்கு  உள்ளாக்கப்பட்ட தனது மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுத்து செழிப்புமிக்க --  வாக்களிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துச் செல்லும் ஒரு மோசஸாகவே தன்னைப்  கருதிக்கொண்டார்.

WhatsApp_Image_2025-04-25_at_19.55.26_14

செல்வநாயகத்தின் மறைவுக்கு பிறகு வெள்ளவத்தை தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் இடம்பெற்ற நினைவு ஆராதனையில் ஆயர் டி.ஜே. அம்பலவாணர் ' என் மக்களை போக விடு '  (let my people go) என்ற வேதாகம வசனத்தின் (Exodus 5.1) கீழ் மனதைத் தொடும் பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினார். குறிப்பிட்ட அந்த விவிலிய  வரிகள் மோசஸ் மற்றும்  பார்வோன் (Pharaoh) உடனும்  எகிப்தில் உள்ள இஸ்ரவேலருடனும் தொடர்புடைய பழைய ஏற்பாட்டில் உள்ளவையாகும்.

குறிப்பிட்ட சில அரசியல் பிரச்சினைகளைப் பற்றி சந்தேகம் வந்து உறுதியான  தீர்மானத்தை எடுக்கமுடியாமல் இருந்த நேரங்களில் செல்வநாயகம் அமைதியாக தியானத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபடுவார் என்று அவரது அரசியல் சகாக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது அவரது துணிவாற்றலை வலுப்படுத்தியது. பிரார்த்தனைக்கு பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்ததும் அதில் அவர் உறுதியாக இருப்பார். எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யமாட்டார்.

இந்துப் பண்புகள் மீதும் பற்று

இந்த கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மத்தியிலும் செல்வநாயகம் பெரும்பான்மையான ஒரு சைவச் சூழலில் இந்துப் பண்புகளையும் உள்வாங்கிக்கொண்டார். அவரது நெருங்கிய உறவினர்கள் பலர் இந்துக்களாகவும் இருந்தனர். தமிழ்க் கலாசாரம் மீதான அவரது பற்று இந்துப் பண்புகள் நோக்கி அவரை ஈர்த்தது. இதனால்  தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் தன்னை மதத்தால் கிறிஸ்தவர் என்றும் கலாசாரத்தால் இந்து என்றும் கூறக்கூடியதாக இருந்தது. அரசியல் அனுகூலத்துக்காக அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும். 

செல்வநாயகத்தின் பாராளுமன்ற தொகுதியான காங்கேசன்துறையிலும் தமிழ்ச் சமூகத்திலும் அதிகப் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே. இந்து தமிழர்கள் மீது அவர் அன்பைக் கொண்டிருந்தாலும் அரசியல் ஆதரவை வளர்த்துக் கொள்வதற்காக அவர் அவ்வாறு செயற்கையாக நடந்து கொண்டதில்லை. அரசியலுக்கு வருவது குறித்து நினைப்பதற்கு முன்னரேயே அந்த பண்புகளை அவர் மனதில் பதியவைத்துக் கொண்டார்.

அரசியல் பயன்களுக்காக செல்வநாயகம் மதக் கோட்பாடுகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதே உண்மை. அவரது ' கிறிஸ்தவத்தை ' அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தினார்கள். அவரது தமிழ் அரசியல் போட்டியாளர்கள் மதக்கூச்சலை தொகுதி மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல தடவைகள் கிளப்பினார்கள். இந்துக்களுக்கே உரித்தான தமிழ்த் தலைமைத்துவத்தை அபகரிக்க முயற்சித்த ஒரு கிறிஸ்தவ வெளியாளாக அவர் காண்பிக்கப்பட்டார். இலங்கை தமிழரசு கட்சி முதன் முதலாக போட்டியிட்ட 1952 பொதுத் தேர்தலில் அது தீவிரமாகக் கூறப்பட்டது. 1956 ஆம் ஆண்டுக்கு பிறகு பொருட்படுத்தக்கூடிய எந்தவொரு அரசியல்வாதியும் செல்வநாயகத்துக்கு எதிராக கிறிஸ்தவ விரோதக் கூச்சலை வெளிப்படையாக  கிளப்புவதற்கு துணிச்சல் கொள்ளவில்லை. ஆனால், மறைமுகமாக அது குசுகுசுக்கப்பட்டது.

மாவிட்டபுரம்  போராட்டம் 

1970 தேர்தலின்போது இது விடயத்தில் ஒரேயொரு விதிவிலக்காக  இருந்தவர்  பேராசிரியர் சி. சுந்தரலிங்கம் எனலாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில்  1968 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களின் ஆலயப் பிரவேசத்துக்கு எதிரான இயக்கம் ஒன்றை  அவர் முன்னெடுத்தார். அந்த இயக்கத்தில் அவரின் பாத்திரம் அவருக்கு காங்கேசன்துறை தொகுதிக்குள் வருகின்ற மாவிட்டபுரம் பகுதியில் சாதி அபிமானம் கொண்ட பல உயர்சாதி இந்துக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. 

அந்த சர்ச்சையில் இருந்து செல்வநாயகமும் தமிழரசு கட்சியினரும்  பொதுவில் விலகியே இருந்தனர். ஆனால், ஆலயப் பிரவேசத்துக்கு உரிமை கோரிப் போராடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அவர்கள் தார்மீக ஆதரவை வழங்கினர். காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், அந்த பிரச்சினையில் செல்வநாயகம் நேரடியாக  சம்பந்தப்படாததால் வெறுப்படைந்திருந்த பழமைவாதப் போக்குடைய தமிழ் வட்டாரங்கள் மத்தியில் தனக்கு ஆதரவைத் தேடுவதற்கு சுந்தரலிங்கம் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதில் நாட்டம் காட்டினார். அதனால் அவர் அப்பட்டமாகவே செல்வநாயகத்துக்கு எதிராக கிறிஸ்தவ விரோதப் பிரசாரத்தை தூண்டிவிட்டார்.

வெள்ளியிலான வேல் ஒன்றையும் மரத்தாலான சிலுவை ஒன்றையும் காங்கேசன்துறை தொகுதியெங்கும் சுந்தரலிங்கம் கொண்டுதிரிந்தது அந்த பிரசாரத்தின் ஒரு அட்டகாசமான அம்சமாகும். அவற்றை உயர்த்திக் காண்பித்து " வேலா சிலுவையா ? " என்று மக்களைப் பார்த்து சுந்தரலிங்கம் உரத்துக் கேட்டார். ஆனால்,  காங்கேசன்துறை தொகுதியின் அதிகப் பெரும்பானமையான இந்து வாக்காளர்கள் செல்வநாயகத்தை மீண்டும் தெரிவுசெய்து சுந்தரலிங்கத்துக்கு சரியான ஒரு பதிலைக் கொடுத்தனர்.

1956 தேர்தலில் மாத்திரம் தோல்வி 

இரு இடைவெளிகளை தவிர, 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டு வரை செல்வநாயகம் காங்கேசன்துறை தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். முதலாவது இடைவெளி 1952 -- 56 காலப்பகுதியாகும். 1952  பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சுப்பையா நடேசபிள்ளையிடம் செல்வநாயகம் தோல்வி கண்டார். இரண்டாவது இடைவெளி 1972 அக்டோபர் -- 1975 பெப்ரவரி காலப்பகுதி. 1972 ஆம் ஆண்டில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிவியில் இருந்து விலகிய செல்வநாயகம், 1972 அரசியலமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் ஒரு வழிவகையாக காங்கேசன்துறையில் இடைத்தேர்தலை நடத்துமாறு  அன்றைய பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்கவுக்கு சவால் விடுத்தார். நீண்ட கால தாமதத்துக்கு பிறகு இறுதியில்  1975 ஆண்டில் இடைத் தேர்தலை அரசாங்கம் நடத்தியது. அதில் செல்வநாயகம் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளினால் பெருவெற்றி பெற்றார். 

WhatsApp_Image_2025-04-25_at_19.55.25_00

1952  பொதுத்தேர்தலில் மாத்திரமே செல்வநாயகம் தோல்வி கண்டார். அப்போதுதான் தமிழரசு கட்சி வளர்ந்துகொண்டிருந்த நிலையில் தமிழ் வாக்காளர்கள் அதன் கொள்கைகளினால் பெரிதாக கவரப் பட்டிருக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜீ.ஜீ. பொன்னம்பலம் தொடர்ந்தும் தமிழர் அரசியலை ஆதிக்கம் செய்து கொண்டிருந்தார்.  புதிய கட்சியின் தலைவரான செல்வநாயகம் தான் போட்டியிட்ட தொகுதியை விடவும்  கட்சியின் சார்பில் மற்றைய தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்காக பிரசாரங்களில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்.

செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட நடேசபிள்ளை தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயமாக அமைச்சராக வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாக இருந்தது. இந்த காரணங்கள் எல்லாம்  சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான நடேசபிள்ளை தெரிவாவதற்கு அனுகூலமானவையாக அமைந்தன. அத்துடன் செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர் என்ற பிரசாரமும் தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் பயன்படுத்தப்பட்டது. 

தேர்தல் பிரசாரத்தின்போது தமிழரசு கட்சியின் சகல வேட்பாளர்களும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு  ஒரு  விசேட பூசைக்காக சென்றனர்.  செல்வநாயகமும் அங்கு சென்று மேலங்கி இல்லாமல் கைகளைக் கட்டிய வண்ணம் நின்றார்.  இந்து சமய முறைப்படி காளாஞ்சி வழங்கப்படும்போது செல்வநாயகம் அதனை ஏற்றுக்கொள்வதைப் படம்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வீ. நவரத்தினம் விரும்பினார்.

காங்கேசன்துறை தொகுதியில் நிலவிய கிறிஸ்தவ விரோத பதற்றத்தை தணிப்பதற்கான ஒரு முயற்சியாக, கிறிஸ்தவராக இருந்த போதிலும் செல்வநாயகம் இந்துச் சடங்காசாரங்களையும் அனுஷ்டிக்கும் ஒரு மனிதர் என்று காண்பிப்பிப்பதே நவரத்தினத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், படம் பிடிக்கப்படுவதற்கு மறுத்த செல்வநாயகம் இந்து மதத்தை தான் மதிக்கின்ற போதிலும், வாக்குகளுக்காக வழிபாட்டு பாசாங்குகளில் ஈடுபடுமளவுக்கு தாழ்ந்துபோக விரும்பலில்லை என்று கூறினார். அத்தகைய ஏமாற்று வேலைகளைச் செய்து வெற்றி பெறுவதிலும் பார்க்க தோல்வி காண்பது மேல் என்று அவர் கூறினார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.

கிறிஸ்தவ விரோத பிரசாரங்கள் 

மதம் ஒரு இடையூறாக இருந்ததனால் 1952 தேர்தலில் தோல்வி கண்ட அதே மனிதர் காங்கேசன்துறை தொகுதியில் தொடர்ச்சியாக ஆறிற்கு மேற்பட்ட தடவைகள் ( 1956, 1960 மார்சு, 1960  ஜூலை, 1965, 1970, 1975) வெற்றிபெற்றார். தனது மதக் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காமலும் மதரீதியான வாதங்களில் ஈடுபடாமலும் அவர் அந்த சாதனையை செய்து காட்டினார். 

இந்து பெரும்பான்மை தமிழர்களுக்கு தலைமை தாங்குவதில் செல்வாவுக்கு இருக்கும் உரிமையை கேள்விக்குள்ளாக்கி கிறிஸ்தவ பூச்சாண்டியைக் காட்டி தமிழரசு கட்சியின் நம்பகத்தன்மையை மலினப்படுத்தும் வகையிலான முயற்சிகளையும் அரசியல் எதிரிகள் முன்னெடுத்தார்கள். அத்தகைய பிரசாரங்களை செல்வாயகத்தின் ' இந்து ' தளபதிகள் உறுதியான முறையில் முறியடித்தார்கள். 

இன்னொரு கருத்துக் கோணத்திலும் கூட காங்கேசன்துறையில் ( 83 சதவீதம் இந்துக்கள், 16 சதவீதம் கிறிஸ்தவர்கள்) செல்வநாயகத்தின் தொடர்ச்சியான வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர் மக்களின் அன்றாட அலுவல்களை கவனிக்கும் ஒரு பாரம்பரியமான பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. தமிழ் மக்களின் பரந்தளவிலான அரசியல் சார்ந்த பிரச்சினைகள் மீதே அவர் பெருமளவுக்கு கவனம் செலுத்தினார். பிறகு உடல்நலம் குன்றத்தொடங்கியதும் அவர்  தொகுதிக்கும் அடிக்கடி வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்த போதிலும் கூட காங்கேசன்துறை வாக்காளர்கள் செல்வாவை தொடர்ந்து தெரிவு செய்தார்கள்.  முன்னாள் செனட்டரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவருமான (பொட்டர்) எஸ். நடராஜாவே அந்த மக்களின் நலன்களை கவனிக்கும் பணிகளைச் செய்து காங்கேசன்துறை தொகுதியின் உத்தியோகபூர்வமற்ற பாராளுமன்ற உறுப்பினர் போன்று விளங்கினார்.

செல்வநாயகத்தின் மதத்தை மக்கள் கருத்தில் எடுக்கவில்லை.தமிழரசு கட்சியே தொடர்ந்தும் முதன்மையான தமிழ் அரசியல் சக்தியாக விளங்கியது. கிறிஸ்தவ விரோத முயற்சிகள் நுணுக்கமான முறையில் தொடரவே செய்தன. அவற்றில் ஒன்று யாழ்ப்பாணத்தில் இந்து பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் காங்கிரஸின் கோரிக்கையாகும். திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் கோரிக்கைக்கு எதிராகவே அந்த கோரிக்கையை தமிழ் காங்கிரஸ் முன்வைத்தது. அது மத அடிப்படையில் தமிழரசு கட்சிக்கும் செல்வநாயகத்துக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதை மாத்திரமல்ல, யாழ்ப்பாண இந்து வாக்காளர்களை கவருவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமிட்ட ஒரு தந்திரோபாயமாகும். 

தமிழ் மக்களின் மதசார்பின்மை 

செல்வநாயகத்தை மலினப்படுத்தி தலைமைத்துவத்தில் இருந்து அவரை அகற்றுவதற்கு தமிழ்  அரசியல் போட்டியாளர்கள் ஒருபுறத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த அதேவேளை, சிங்களவர்கள் மத்தியிலும் குறிப்பிட்ட சில பிரிவினர் அவரின் தலைமைத்துவத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டார்கள். இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர்களுக்கு கிறிஸ்தவரான செல்வநாயகம் பொருத்தமான  ஒரு தலைவர் அல்ல என்று கூறி அவர்கள் அவருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதில் நாட்டம் காட்டினார்கள். இருந்தாலும் செல்வநாயகம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். மத அடிப்படையில் எந்த விதமான விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் தொடர்ச்சியாக அவர் காங்கேசன்துறை மக்களினால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு வந்தார். அவரின் வெற்றிகள் அடிப்படையில் தமிழ் மக்களின் மதசார்பற்ற மனோபாவத்துக்கும் இலங்கையில் இந்து மதத்தில் காணப்பட்ட சகிப்புத்தன்மைக்கும் கிடைத்த ஒரு மதிப்பாகும்.

இது தொடர்பில் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்றை நினைவுபடுத்த வேண்டியது பொருத்தமானதாகும். சிலோன் டெயிலி நியூஸ் பத்திரிகையில் 1970 அக்டோபர் 3  ஆம் திகதி வண. ஹேவன்பொல ரத்னசார தேரர் எழுதிய கடிதம் ஒன்றுக்கு பதிலளித்த செல்வநாயகம் ," என்னை கிறிஸ்தவன் என்று குறிப்பிட்டிருக்கும் நீங்கள் மதத்தால் பிரதானமாக இந்துக்களாக இருக்கும் தமிழர் தமிழர்களுக்கும் எனக்கும் ஒற்றுமை எதுவும் கிடையாது என்று கூறியிருக்கிறீர்கள். தங்களுக்கு தலைமை தாங்குவதற்காக எங்களது மதத்தை மாற்றிக்கொள்ளுமாறு என்னையோ அல்லது வேறு எந்த கிறிஸ்தவரையுமோ நிர்ப்பந்திக்கவில்லை என்பதற்காக இந்து மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்" என்று எழுதினார். இது " டொனமூர் பௌத்தர்கள் " என்ற ஒரு தோற்றப்பாட்டை பற்றிய குறிப்பு என்பது தெளிவானது. டொனமூர் அரசியலமைப்பின் கீழ் சர்வஜனவாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தங்களது தேர்தல் வெற்றி வாய்ப்புக்களுக்காக சில சிங்கள கிறிஸ்தவர்கள் பௌத்தர்களாக மாறினார்கள். 1960 -- 65 காலப்பகுதியிலும் கூட செல்வநாயகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இந்த அடிப்படையில் சில தொடர்பாடல்கள் இடம்பெற்றன.

தேசியவாத மறுமலர்ச்சி 

காலனித்துவத்துக்கு எதிரான சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் தேசியவாத மறுமலர்ச்சிகளில் குறிப்பிட்ட சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றின் முக்கியமான அம்சமாக மதமே  இருந்தது.அநகாரிக தர்மபாலவினாலும் ஆறுமுக நாவலரினாலும் முன்னெடுக்கப்பட்ட மறுமலர்ச்சிவாதம் மதத்தை அதாவது முறையே பெளத்தத்தையும் இந்துமதத்தையும் அடியொற்றியதாக அமைந்தது. ஆனால்,  காலனித்துவத்துக்கு பின்னரான இந்த மறுமலர்ச்சிவாத இயக்கத்தின் தொடர்ச்சி ஒரு பெரிய வேறுபாட்டைக் கண்டது. சிங்கள அரசியல் கருத்தாடல் சிங்கள பௌத்த தேசியவாத உணர்வுடன் தொடர்ந்தது. அதுவே சிங்கள மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய கோட்பாடாக விளங்கியது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களை சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக பார்த்தார்கள். அதனால் எதிர்வினை வேறுபட்டதாக இருந்தது. அது மதத்தையல்ல, மொழியை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. சிங்கள தேசியவாதத்துக்கு எதிராக தமிழ்த் தேசியவாதம் கிளம்பியபோது அது  பெருமளவுக்கு மதச்சார்பற்றதாக மாறியது.

அது ஒரு தமிழ் இந்துத் தேசியவாதமாக இருக்கவில்லை.  அதற்கு பல காரணங்கள் இருந்தன. எஸ். ஜே.வி. செல்வநாயகமும் தமிழ்க் கத்தோலிக்க கல்விமான் வணபிதா சேவியர் தனிநாயகம் அடிகளாரும் இதற்கு பங்களிப்புச் செய்த முக்கியமான இரு காரணகர்த்தாக்களாவர். உலகம் பூராவும் தமிழியல் ஆய்வு மீது அக்கறையை ஊக்கவிப்பதன் மூலம் தனிநாயகம் அடிகளார் ஒரு தமிழ்க் கலாசார மறுமலர்ச்சியை முன்னெடுத்தார். அவரின் பணிகள் தமிழர்களை அவர்களது புகழ்மிக்க பாரம்பரியம் குறித்து பெருமைப்பட வைத்தது.

செல்வநாயகம் சிங்களத் திணிப்புக்கு எதிரான தமிழ் அரசியல் இயக்கத்துக்கு தலைமைதாங்கி வழிநடத்தினார். தமிழ்க்கப்பலின் மகத்தான மாலுமியாக அவரது செயற்பாடுகள் மொழியை மையமாகக் கொண்ட மதசார்பற்ற தமிழ்த் தேசியவாதப்  பாதையொன்றை வகுத்தது. மொழியை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தின் முனைப்பு தமிழ் இந்துக்களையும் தமிழ் கிறிஸ்தவர்களையும் மாத்திரமல்ல " தமிழ்பேசும் மக்கள் " என்ற கோட்பாட்டின் கீழ் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களையும் உள்ளடக்குகிற அளவுக்கு வெற்றிகரமானதாக விளங்கியது. ஒரு பற்றார்வத்துடனும் குறிக்கோளுடனும் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மனிதர் தானாக விரும்பி அரசியலுக்கு வந்த ஒருவரல்ல.

உயர்நீதிமன்ற நீதிபதியாக வரவேண்டும் என்பதே செல்வநாயகத்தின்  ஆவலாக இருந்தது. அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் அல்லது அவர் கூறுவதைப் போன்று  கடவுளின் சித்தம்  அவரை அரசியலுக்கு கொண்டுவந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கான சந்தர்ப்பமும் தோன்றியது. செல்வநாயகம் தனது அரசியல் நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்பைச் செய்யாதவராக இருக்கப்போகிறார் என்பதை உணர்ந்து கொண்ட டி.எஸ். சேனநாயக்க அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவியைக் கொடுப்பதன் மூலமாக அரசியல் ரீதியில் ஒரு தடையை அகற்ற நினைத்தார். 

செல்வநாயகத்திடம் இரு தூதுவர்களை அனுப்பி தனது எண்ணத்தை  சேனநாயக்க தெரியப்படுத்தினார்.  தனக்கு நீதிபதி பதவியை வழங்குவதற்கு அவர்  விரும்பியதற்கான நோக்கத்தைப் புரிந்து கொண்ட செல்வநாயகம் அதை ஏற்க மறுத்து விட்டார். மேன்மையான ஆனால் இடைஞ்சல்கள் நிறைந்த அரசியல் இலட்சியப்பாதையில் செல்வதற்காக நீதிபதியாக வேண்டும் என்ற தனது வாழ்நாள் விருப்பத்தை அவர் கைவிட்டார்.

கொந்தளிப்பான டொனமூர் யுகத்தில் செல்வநாயகம் தமிழர் அரசியலில் இருந்து தூரவிலகியிருந்து கொண்டு அரசியல் நிகழ்வுப்போக்குகளை உன்னிப்பாக அவதானித்தார். 1940 களில்  கொழும்பு சட்ட நூலகத்தில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை சந்தித்தபோதே அரசியலில் வெளிப்படையான ஆர்வத்தை முதன் முதலாக செல்வநாயகம் வெளிக்காட்டினார். தமிழர் பிரச்சினை தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவிருந்த மகஜர் ஒன்றில் தானாக முன்வந்து அவர் கையெழுத்திட்டார் 

அதற்குப் பிறகு தமிழ் அரசியல் விவகாரங்களில் நெருக்கமாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த அவர் தமிழ் காங்கிரஸில் இணைந்து செயற்பட்டார். தீவிர அரசியலில் இறங்குவதற்கு அவரை இணங்கவைத்தவர் முன்னாள் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளையின் தந்தையார் சிவசுப்பிரமணியமே ஆவார். சோல்பரி ஆணைக்குழுவை சந்திப்பதற்கு ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையில் சென்ற தூதுக்குழுவில் செல்வநாயகமும் இருந்தார். விரைவாகவே தமிழ் காங்கிரஸின் செயற்பாடுகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட அவர் 1946 ஆம் ஆண்டளவில் பொன்னம்பலத்தின் " துணை காப்டனாக " கருதப்பட்டார்.

https://www.virakesari.lk/article/212948

அனுரா அரசின் ஏமாற்று நாடகம்.

2 months 1 week ago

நல்லாட்சி அரசில் தமிழர்களின் மீள்கட்டுமானத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ராணுவத்துக்கு பகிர்ந்தளித்த சம்பந்தரும் சுமந்திரனும்.

இன்னும் பல வெளிவராத செய்திகளுடன்.

Checked
Thu, 07/03/2025 - 12:01
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed