3 months 2 weeks ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
editorenglishMarch 19, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்பினை எதிர்மறையான ஒரு விடயமாக நாம் பார்க்கவில்லை.
அவரால் தெரிவிக்கப்படும் விடயங்கள் நியாயமானவையாகும். எந்தவொரு பிரச்சினையின் போதும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மனதளவில் பாரிய துயரத்தை எதிர்கொள்ள நேரிடும்.
அந்தச் சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு அது பாரிய கவலையை அளிக்கும். அந்த வகையிலேயே கத்தோலிக்க மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பேராயரின் அதிருப்தியும் கவலையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும். அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கும் அதற்கான பொறுப்பு காணப்படுகிறது.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கூறுவதை விட, அதன் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விரைவில் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும்.
கொலையாளிகளே இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சாட்சிகளை அழித்த சூழலிலேயே நாம் ஆட்சியமைத்திருக்கின்றோம்.
எனவே மீண்டும் அவற்றை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. எவ்வாறிருப்பினும் இந்தக் கொடூர சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
https://globaltamilnews.net/2025/213621/
3 months 2 weeks ago
எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் சமாதானம் ஆனாரா? பின்னணியில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 18 மார்ச் 2025 "தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டாம். நான் யாரையும் எதிர்பார்த்தது இல்லை. கூட்டத்தை ஏன் தவிர்த்தார் என அவரிமே கேளுங்கள்." செங்கோட்டையன் தொடர்பான கேள்விக்கு மார்ச் 15ஆம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி இது. அதுவே மார்ச் 17ஆம் தேதி அவர் அளித்த பேட்டியில் சற்று உற்சாகம் தென்பட்டது. அப்போது, "எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் முதலமைச்சர் ஆன காலத்தில் இருந்தே இதே திட்டத்தைப் போட்டு வருகிறார்கள். அ.தி.மு.க-வை யாராலும் உடைக்க முடியாது; முடக்க முடியாது," எனக் கூறினார். இரண்டு நாள் இடைவெளியில் என்ன நடந்தது? எடப்பாடி பழனிசாமியிடம் கே.ஏ.செங்கோட்டையன் சமாதானம் ஆனாரா? செங்கோட்டையன் தரப்பு சொல்வது என்ன? அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன் தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்கொள்வது தொடர்பான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தை கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார். மார்ச் 15ஆம் தேதியன்று வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அதேநேரம், சபாநாயகர் அப்பாவுவை தனது தொகுதிப் பிரச்னை தொடர்பாக செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இது விவாதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு அ.தி.மு.க தீர்மானித்தது. இதுகுறித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 15) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அதைப் பற்றி அவரிடமே கேளுங்கள். அவருக்கு வேறு வேலைகள் இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளைப் பற்றிப் பேச வேண்டாம். யாரையும் எதிர்பார்த்து நான் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி கோபத்தை வெளிப்படுத்தினார். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையில் மோதல் தொடங்கிவிட்டது. பிப்ரவரி 9ஆம் தேதியன்று அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாய சங்கங்கள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால் அதற்கான விழா அழைப்பிதழ்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை எனக் கூறி விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா, மகளிர் தின விழா ஆகியவற்றை செங்கோட்டையன் புறக்கணித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாகவே அவர் பங்கேற்றார். இந்த நிகழ்வுகள் உள்கட்சி மோதலை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினர். ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிப்பதுதான் பிரச்னைக்குக் காரணம் என்றொரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. செங்கோட்டையன் கலகக் குரலா? அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மாற்றம் நிகழுமா? ஜெயலலிதாவின் 27 கிலோ நகை, 1,526 ஏக்கர் சொத்துகளை தமிழ்நாடு அரசு ஏலம் விடுமா? எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?- செங்கோட்டையன் கொடுத்த விளக்கம் பட மூலாதாரம்,@KASENKOTTAIYAN முடிவுக்கு வந்த உட்கட்சி மோதல் ஆனால், கடந்த திங்கள் கிழமையன்று (மார்ச் 17) உள்கட்சி மோதல்கள் முடிவை எட்டின. சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க கொண்டு வந்தது. சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதையும் முன்வைத்து அ.தி.மு.க இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. தீர்மானத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ உள்பட 16 பேர் முன்மொழிந்தனர். இதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டுத் தனது இருக்கையில் இருந்து அப்பாவு எழுந்து சென்றுவிட்டார். பின்னர் துணை சபநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். அப்போது குரல் வாக்கெடுப்பு தொடர்பாக துணை சபாநாயகர் கூறிய அறிவிப்பு, அ.தி.மு.க சார்பில் தேர்வான புதிய உறுப்பினர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. "ஆனால் இதுதான் நடைமுறை" என எடப்பாடி பழனிசாமியிடம் சென்று செங்கோட்டையன் கூறினார். "மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் சொல்வதுதான் சரியானது. அதன்படியே செயல்படுங்கள்" என அ.தி.மு.க உறுப்பினர்களை நோக்கி எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதன்மூலம் இருவருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பார்க்கப்பட்டது. இதை செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை" எனக் கூறினார். ஷேக் ஹசீனா இந்தியாவில் மாதக்கணக்கில் தங்கியிருப்பது ஏன்? அடுத்து என்ன?18 மார்ச் 2025 கனடாவின் புதிய பிரதமர் இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவாரா? குடியேற்ற கெடுபிடிகள் தளருமா?18 மார்ச் 2025 சமாதானம் பேசிய சீனியர்கள் பட மூலாதாரம்,@BABUMURUGAVEL படக்குறிப்பு,அ.தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாபு முருகவேல் இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "இதற்கான பின்னணிக் காரணம் என்னவென்று தெரியவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். அ.தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், "இருவருக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. செய்தியாளர் சந்திப்பில் பொதுச்செயலாளர் பேசிய கருத்துதான் எங்களின் நிலைப்பாடு. ஒன்றும் இல்லாத பிரச்னையை ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார். "கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலர் செங்கோட்டையனிடம் தனிப்பட்ட முறையில் பேசியதால் இருவருக்கும் இடையே மோதல் முடிவுக்கு வந்ததாகப் பேசப்படுகிறதே?" எனக் கேட்டபோது, "கட்சியின் பொதுச் செயலாளரும் செங்கோட்டையனும் இயல்பாக இருந்தாலும் பொதுவெளியில் அது செய்தியாக மாறுகிறது. அதைத் தவிர்க்கும் வகையில் செங்கோட்டையனிடம் பேசியுள்ளனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்," எனக் கூறினார். டாஸ்மாக்: அமலாக்கத் துறை சோதனை ஏன்? மது விற்பனையில் உள்ள பிரச்னைகள் என்ன?18 மார்ச் 2025 சென்னையில் புதிதாக கார் வாங்க விரும்புவோர் அறிய வேண்டிய புதிய கொள்கை18 மார்ச் 2025 செங்கோட்டையனுக்கு நெருக்கடியா? பட மூலாதாரம்,@KASENKOTTAIYAN ஆனால், இந்த விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமின் கருத்து வேறாக இருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அ.தி.மு.க கொறடா முடிவுக்கு மாறாக எதிர்த்து வாக்களித்து இருந்தால் செங்கோட்டையனின் பதவி பறிபோக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தகுதி நீக்க முடிவை உடனே எடுத்துவிட முடியாது" எனக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோபிச்செட்டிபாளையம் தொகுதியைக் காலியானதாக அறிவித்து தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே இருக்கிறது," என்றார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். "இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. 2017ஆம் ஆண்டு தகுதி நீக்கம் என அறிவித்தாலும் 2019ஆம் ஆண்டுதான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது" எனக் கூறுகிறார் ஷ்யாம். அதேநேரம், தனியார் ஊடக நிறுவனம் நடத்திய விழாவில் செங்கோட்டையன் பேசியதைக் குறிப்பிடும் ஷ்யாம், "அவர் பிரதமர் மோதி, நிதி அமைச்சர் ஆகியோரைப் பாராட்டிப் பேசினார். தான் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால் அடுத்து வந்த நாள்களில் அவருக்கான சமிக்ஞை வராமல் போனதால் சமாதானம் ஏற்பட்டிருக்கலாம்," எனக் கூறுகிறார். தொடர்ந்து பேசிய ஷ்யாம், "எடப்பாடி பழனிசாமியை போல அதிரடி அரசியல் காட்டக்கூடிய நபர் செங்கோட்டையன் அல்ல. மேற்கு மண்டலத்தில் சமூகரீதியாக அவருக்கு நெருக்கடிகள் வந்திருக்கலாம்," எனவும் குறிப்பிட்டார். ஆனால் இதை மறுத்துப் பேசும் பாபு முருகவேல், "கட்சிதான் பெரிது. தனி நபர்கள் அல்ல. கட்சிக்கு விரோதமாகவோ பொதுச் செயலாளருக்கு எதிரான நிலைப்பாட்டையோ செங்கோட்டையன் எடுக்கவில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் பேசலாம்," என்கிறார். 'சமாதானம் ஏற்பட்டுவிட்டது' - செங்கோட்டையன் தரப்பு இதுதொடர்பாக, கே.ஏ.செங்கோட்டையனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவர் சார்பாகப் பேசிய அவரது உதவியாளர் கதிர் முருகன், "இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஆகிவிட்டது. இருவரும் நல்லபடியாகப் பேசி முடித்துவிட்டனர்" என்று மட்டும் பதில் அளித்தார். இதன் பின்னணி குறித்த மேலதிக கேள்விகளை எழுப்பியபோது, அவர் பதில் அளிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y0899ew0lo
3 months 2 weeks ago
பத்திரமாக பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் - கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு சுனிதாவுடன் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது 18 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது. விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார். இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது. ஸ்பிளாஷ்டவுன் (splashdown) என்ற முறையில் கடல் பகுதியில் விண்கலம் இறங்கியது. அதாவது, விண்கலம் இறங்கும்போது கடலில் உள்ள தண்ணீர் மிகப்பெரும் அளவில் தெறிக்கும் என்பதால், அந்த செயல்முறையை 'ஸ்பிளாஷ்டவுன்' என்கின்றனர். சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர். Play video, "சுனிதா வில்லியம்ஸ் வந்த விண்கலம் பத்திரமாக கடலில் விழுந்த காட்சி", கால அளவு 0,47 00:47 காணொளிக் குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் வந்த விண்கலம் பத்திரமாக கடலில் விழுந்த காட்சி தொடர்பு துண்டிக்கப்பட்ட சில நிமிடங்கள் டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது சற்று நேரத்துக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது வழக்கமான நடைமுறையாகும். அப்போது விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. டிராகன் விண்கலத்தின் வெப்பத்தடுப்பு ஓடுகள் உள்ளே இருந்த விண்வெளி வீரர்களைப் பாதுகாத்தன. சிறிது நேரத்துக்குப் பிறகு தகவல் தொடர்பு மீட்கப்பட்டு கடலில் இறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. தன்னிச்சையாக விண்கலம் பூமியை நோக்கி விரைந்தது. அப்போது விண்கலம் சுமார் 27,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. பின்னர் விண்கலத்தின் வேகத்தைக் குறைக்கும் பாரசூட்கள் விரிந்தன. நாசாவின் கேமராக்களில் இந்த நிகழ்வுகள் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு கடலில் வந்து விழுந்த விண்கலத்தை, நாசாவின் மீட்புப் படகுகள் பத்திரமாக கப்பலுக்கு எடுத்து வந்தன. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட வீரர்களுடன் டிராகன் விண்கலம் கடலில் விழுந்தது. துள்ளிக் குதித்த டால்பின்கள் விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது நாசாவின் கேமராக்கள் காட்டின. அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று நாசா விஞ்ஞானிகள் நகைச்சுவையாகக் கூறினர். கடலில் இருந்து விண்கலம் மீட்புப் படகில் ஏற்றப்பட்டபோது அதில் இருந்த கடல் நீர் கொப்பளித்து வெளியேறியது. சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் சாப்பிடுவது, குளிப்பது, கழிவுகளை அகற்றுவது எப்படி?18 மார்ச் 2025 மனிதர்கள் குவித்து வரும் விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து18 மார்ச் 2025 விண்வெளியில் 'சிக்கியவர்கள்' என்பது உண்மையா? சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் திட்டமிடப்பட்ட 8 நாட்களை விட அதிக நாட்கள், அதாவது சுமார் 286 நாட்கள் விண்வெளியில் தங்க நேரிட்டது. இருவரும் விண்வெளியில் சிக்கித் தவிப்பதாக விவரிக்கப்பட்ட போதிலும் அது ஒருபோதும் உண்மையில்லை. ஏனெனில், கப்பல்களில் உள்ள உயிர் காக்கும் படகுகள் போலவே, சர்வதேச விண்வெளி நிலையத்திலும் ஒரு விண்கலம் அவசர கால பயன்பாட்டிற்காக எப்போதும் இணைந்தே இருக்கும். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்ட நாசா, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு கருதி, அதே விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவதை தவிர்த்துவிட்டது. அதற்குப் பதிலாக, அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தொடர்ந்து தங்கியிருக்கவும், ஏற்கனவே திட்டமிட்டபடி, பூமியில் இருந்து செல்லும் அடுத்த விண்கலத்தில் இருவரும் பூமிக்கு அழைத்து வரவும் நாசா தீர்மானித்தது. நாசாவின் இந்த முடிவே, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதை மாதக்கணக்கில் தள்ளிப் போட்டது. ஆகவே, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளியில் அதிக காலம் தங்கி ஆய்வுகளைத் தொடர்ந்தனர். அவர்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் பல சோதனைகளை மேற்கொண்டதுடன், ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையிலும் அவர்கள் பலமுறை ஈடுபட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES விண்வெளியில் தங்கிய கூடுதல் நாட்களில் இருவரும் சாதித்தது என்ன? விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக மணிநேரம் செலவழித்த பெண் ஆகிய சாதனைகளை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம். மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தது, கிறிஸ்துமஸ் கொண்டாடியது, ஏற்கனவே வீட்டில் செலவிட திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸுக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பியது, செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியது என பலவற்றையும் அவர்கள் சாதித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்தக் கட்டம் என்ன? 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் விரைவில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அங்கு அவர்கள் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவார்கள். நீண்ட கால விண்வெளி பயணங்கள் உடலை பாதிக்கின்றன, விண்வெளி வீரர்கள் எலும்பு அடர்த்தியை இழந்து தசை இழப்பை சந்திக்கின்றனர். இரத்த ஓட்டமும் பாதிக்கப்படுகிறது. கண் பார்வையும் பாதிக்கப்படலாம். உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகலாம், எனவே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரின் உடலும் புவி ஈர்ப்பு விசையுடன் வாழ்வதற்கு மீண்டும் பழகுவதால் அவர்களுக்கு விரிவான உடற்பயிற்சி முறை வழங்கப்படும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது அளித்த பேட்டிகளில், இருவருமே தாங்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் தங்குவதற்கு நன்கு தயாராக இருந்ததாகக் கூறியுள்ளனர் . கடந்த மாதம் CBS இடம் பேசிய சுனிதா வில்லியம்ஸ், "என் குடும்பத்தினரையும், என் அன்புக்குரிய நாய்களையும் மீண்டும் பார்ப்பதுடன், கடலில் குதிப்பதையும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பூமிக்குத் திரும்பி பூமியை உணருவது மிகவும் நன்றாக இருக்கும் ." என்றார். பட மூலாதாரம்,NASA விண்வெளி எத்தகைய கடினமானது என்பதை உணர்த்திய பயணம் புட்ச் மற்றும் சுனிதாவின் வியத்தகு பணி, விண்வெளி கடினமானது என்பதை நமக்குக் காட்டுகிறது என்று பிபிசியின் அறிவியல் பிரிவு ஆசிரியர் ரெபேக்கா மொரெல்லி கூறுகிறார். நினைத்தது தவறாகப் போகலாம். தவறானது நடக்கலாம். அப்படி நிகழும்போது, சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்கிறார் அவர். "எட்டு நாட்களில் முடிய வேண்டிய பணியை ஒன்பது மாதங்களாக நீட்டிக்க வேண்டியிருப்பது நாசாவிற்கு சாதாரணமானது அல்ல. ஆனால் புட்ச் மற்றும் சுனிதா இந்த சூழலுக்கு ஒரு பதிலாக இருக்கின்றனர். புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு விண்வெளி நிலையத்தில் வாழ்வது - ஒரு விண்வெளி வீரர் என்பதற்கான ஒரு பகுதியாகும்." ஒரு திட்டத்தை வைத்திருப்பது - அதை மாற்றுவதற்கும் தயாராக இருக்க வேண்டியது ஆகியவற்றை இந்தப் பயணம் உணர்த்தியிருக்கிறது என்கிறார் ரெபேக்கா. பட மூலாதாரம்,NASA 900 மணி நேர ஆராய்ச்சி, 150 பரிசோதனைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் திட்டமிட்டதற்கு மாறாக பல மாதங்கள் தங்கியிருக்க நேரிட்ட சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்ஸ்மோரும் அங்கு பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இந்த விண்வெளிப் பயணத்தின் போது அவர்கள் 900 மணிநேர ஆராய்ச்சிகளைச் செய்திருக்கின்றனர். நாசாவின் விண்வெளி செயல்பாட்டு இயக்குநரகத்தின் ஜோயல் மொண்டல்பானோ இந்தத் தகவலைக் கூறியிருக்கிறார். சுனிதா, புட்ச் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய காலத்தில் 150 பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். நாசா விண்வெளி வீரர்கள் செய்திருக்கும் பணி "தேசத்திற்கு நன்மை பயக்கும்" என்றும், தசாப்தத்தின் இறுதிக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதரை தரையிறக்கும் இலக்கை நாசா அடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்றும் மொண்டல்பானோ கூறுகிறார். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தால் ஏற்பட்ட காலதாமதம் 61 வயதான வில்மோர், 58 வயதான சுனிதா இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலமாக கடந்தாண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டியது. இந்த ஸ்டார்லைனர் விண்கலம் மனிதர்களுடன் சென்ற போயிங்கின் முதல் விண்கலம் ஆகும். வழக்கமான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு விண்கலம் எவ்வாறு செயல்படும் என்பதை கவனிப்பதற்கான சோதனை ஓட்டமாக இது இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நெருங்கிய போது பல பிரச்னைகளை சந்தித்தது. விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதிலிருந்த ஹீலியமும் தீர்ந்து போனது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவது தாமதமானது. அதன்பிறகு அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் விண்கலத்தைக் கொண்டு அவர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது என 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் முதலில் அவர்களை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குக் கொண்டு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது. "சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களையும் விரைவில் பூமிக்கு அழைத்து வருமாறு அதிபர் கூறியுள்ளார். நாங்கள் அப்படியே செய்வோம். பைடன் நிர்வாகம் இத்தனை காலம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டது மிகவும் மோசமானது," என்று ஈலோன் மஸ்க் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பிய பிறகு உடலில் ஏற்படப் போகும் மாற்றங்கள் பூமிக்கு வரும் விண்கலத்தின் வேகம் 39,000 கிலோமீட்டரில் இருந்து சில நிமிடங்களில் 800 கி.மீ.யாக குறைவது எப்படி? பூமிக்கும் விண்கலத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் என்ன ஆகும்? விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா? சுனிதா வில்லியம்ஸின் பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2013-ஆம் ஆண்டு மும்பை புறநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட படம். கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி நடையில் அதிக அனுபவம் கொண்ட பெண்களில் இரண்டாவது இடத்தில் (9 முறை 62 மணி 6 நிமிடம்) உள்ளார். "விண்வெளியில் இருந்து நாம் வாழும் இந்த பூமியை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றதற்காக நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்" - இது தனது விண்வெளி பயணங்கள் குறித்து சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்த வார்த்தைகள். தற்போது வெற்றிகரமாக மற்றுமொரு நீண்ட விண்வெளி பயணத்தை நிறைவு செய்து, பூமிக்கு திரும்பியுள்ள இவருக்கு உலகெங்கிலும் வாழ்த்துகளும், வரவேற்புகளும் குவிந்து வருகிறது. சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது. 1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாக பணியாற்றியவர். தற்போது அவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். 1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராக தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி என்று குறிப்பிடுகிறார் உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி. சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாக தன்னுடைய பணியை துவங்கினார். ஆதவி: பொம்மைகளுடன் விளையாடும் வயதில் 'கார்பன் நியூட்ரல்' அங்கீகாரம் பெற்ற குழந்தை18 மார்ச் 2025 'இந்திய கிரிக்கெட் பிதாமகன்' என்று இவரை அழைப்பது ஏன்? பன்முக ஆளுமையின் ஆச்சர்யம் தரும் வாழ்க்கை18 மார்ச் 2025 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணங்கள் 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதன்முறையாக டிஸ்கவரி விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணப்பட்டார். Expedition 14 குழுவுடன் பணிகளைத் தொடர்ந்த அவர் Expedition 15 விண்கலத்தில் பணிகளை முடித்துக் கொண்டு 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பினார். 2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இரண்டாவது விண்வெளிப் பயணத்தை ரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-05 எம் விண்கலத்தின் மூலம் மேற்கொண்டார் சுனிதா வில்லியம்ஸ். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அதே ஆண்டில் நவம்பர் 19ம் தேதி பூமிக்கு திரும்பினார். 2015ம் ஆண்டில் வணிகரீதியான விண்வெளி பயணங்களுக்கான முதல் விண்வெளி வீரராக சுனிதா வில்லியம்ஸ் அறிவிக்கப்பட்டார். இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக 2024ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்தார். ஸ்டார்லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இக்குழு இன்றி விண்கலம் பூமிக்கு திரும்பியது. இதனால் வெறும் 8 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம், 9 மாதங்களைக் கடந்து நீண்டது. 2025, மார்ச் 15ஆம் தேதி இவர்கள் இருவரையும் அழைத்துவர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிகளை தொடர ஏதுவாக புதிய குழுவினர் அந்த விண்கலத்தில் சென்றனர். க்ரூ-10 திட்டத்தின் கீழ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நள்ளிரவு 12 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்ததாக நாசா கூறியது. பிறகு, மார்ச் 17 இந்திய நேரப்படி காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கிய தங்களது பயணத்தை, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் தொடங்கினார்கள். 59 வயதான சுனிதா வில்லியம்ஸ் தனது விண்வெளிப் பயணத்தில் அனுபவத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். எதிர்பாராத விதமாக கூடுதல் நாட்கள் தங்க நேர்ந்த போதிலும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நாசா தொடர்ந்து கூறிவந்தது. இறுதியாக அவர் இன்று (மார்ச் 19) பத்திரமாக பூமியை வந்தடைந்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8yp625kppo
3 months 2 weeks ago
தலைக்கு மேலே 16 போர் விமானங்கள் - பிள்ளைகளின் உடல்களை சுமந்தபடி மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்" - காசாவில் மீண்டும் பெரும் அவலம் Published By: RAJEEBAN 18 MAR, 2025 | 05:06 PM காசா மீது மீண்டும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை அந்த பயங்கரமான தருணங்களை காசா மக்கள் ஊடகங்களிற்கு விபரித்துள்ளனர் 16 விமானங்கள் தலைக்கு மேலே காணப்பட்டன, பலர் தங்கள் குழந்தைகளின் உடல்களை தூக்கியவாறு மருத்துவமனைக்கு வந்தனர் என ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாங்கள் காசாவின் அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் சத்தத்தை கேட்டு அச்சத்துடன் கண்விழித்தோம் என ஆசிரியர் அகமட் அல் ரிஸ்க் அல் ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். குண்டுவீச்சின் ஆரம்ப தருணங்களை பகிர்ந்துகொண்டுள்ள அவர் நாங்கள் அஞ்சிநடுங்கினோம் எங்கள் பிள்ளைகளும் அஞ்சி நடுங்கின பல உறவுகள் எங்களின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக எங்களை தொடர்புகொண்டார்கள், அம்புலன்ஸ்கள் ஒரு வீதியிலிருந்து மற்றைய வீதிக்கு ஒடத்தொடங்கின என அவர் குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகளின் உடல்களை கையில் சுமந்தபடி குடும்பங்கள் மருத்துவமனைக்கு வரத்தொடங்கின என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கள் தலைக்கு மேலே 16 போர்விமானங்களும் ஆளில்லா விமானங்களும் காணப்பட்டன நாங்கள் பெரும் அச்சத்தில் சிக்குண்டோம் என அவர் தெரிவித்துள்ளார். காசா மருத்துவமனைகள் முற்றாக செயல் இழந்து காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே காசாவின் சுகாதார கட்டமைப்பு முற்றாக சிதைவடைந்துள்ள நிலையிலேயே இந்த தொடர்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். ஐந்து செகன்டிற்கு ஒரு வெடிப்பு சத்தம் கேட்பதாக ஐநாவின் பணியாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். யுனிசெவ் அமைப்பின் பேச்சாளர் ரொசாலியா பொலொன் தென்காசாவின் அல்மவாசியில் உள்ளார். இது அனைவருக்கும் மிகவும் கடினமான இரவு என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். பாரிய வெடிப்பு சத்தங்கள் காரணமாக நான் கண்விழித்தேன், நான் தங்கயிருந்த வீடு குலுங்கியது, அடுத்த 15 நிமிடங்கள் நாங்கள் ஒவ்வொரு ஐந்து செகன்டிற்கும் ஒரு வெடிப்புச் சத்தங்கள் என்ற அடிப்படையில் வெடிப்பு சத்தங்களை கேட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். வெளியே அலறல்களையும் அம்புலன்ஸ் சைரன்ஸ்களையும் கேட்டதாக தெரிவித்துள்ள அவர் தலைக்கு மேலே விமானங்களின் இரைச்சல் கேட்டது என தெரிவித்துள்ளார். மனிதாபிமான பொருட்கள், எரிபொருட்கள் சமையல் எரிவாயு போன்றவற்றின் விநியோகத்தினை நிறுத்தி மின்சார விநியோகத்தினை நிறுத்திய பின்னரே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். 15 மாதங்களிற்கு முன்னரே சுகாதாரசேவையை முற்றாக அழித்துவிட்டனர் என தெரிவித்துள்ள அவர், நான் பேசிய சிறுவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர் அதிர்ச்சியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். காசாவில் பணிபுரியும் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் இஸ்ரேல் மீண்டும் வான் வழித்தாக்குதலை மேற்கொண்டவேளை தான் பார்த்த முழுமையான படுகொலை மற்றும் அழிவு குறித்து ஸ்கை நியுசிற்கு தெரிவித்துள்ளார். டெய்ர் அல் பலாவில் உள்ள நாசர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பெரோஸ் சித்வா இஸ்ரேலின் புதிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளார். நேற்று இரவு நான் ஆறு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டேன், இவர்களில் சிலர் ஆறுவயதிற்கு உட்பட்ட குழந்தைகள் துரதிஸ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிரிழக்கப்போகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். இது பேரழிவு, கூடாரங்கள் மீது குண்டுகளை வீசினால் இதுவே நடக்கும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தாலும் அமெரிக்காவின் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிடும், மரதன் குண்டுவெடிப்பின் போது நான் அங்கிருந்தேன் அங்கு பெரும் குழப்பம் நிலவியது என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அன்று பார்த்தது காசாவில் இன்று நான் பார்த்தன் சிறிய அளவே என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209578